Subscribe to continue reading
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
பல கேள்விகளை தாங்கியவளாய் விஷாலை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை எதேச்சையாக கவனித்த விஷால் வேகமாக கையசைத்து “டூ மினிட்ஸ்” என்று சைகை காட்ட, உடனே, ப்ளூ தன்னை காலையில் எழுப்பும் போது அவள் சொல்லும் அதே “டூ மினிட்ஸ்” இப்போது அவளுக்கே எதிரொலித்ததை கேட்டதும் ப்ளூ வின் நினைவுகள் சக்தியின் மனக்கண்ணில் நிழலாடியது. அவள் ஏதோ சிந்தனையில் மேலே பார்த்தபடி அமர்ந்திருந்ததை கண்ட விஷால் தனது கைபேசியில்,
“சரி. சரி. ஐ வில் டூ தட்.
ஷார்ப் ஏயிட்டோக்ளாக் அங்க இருப்போம்.
பை ஃபார் நவ்.”
என்று பேசிக்கொண்டிருந்த மொபைல் அழைப்பை துண்டித்து விட்டு வீட்டனுள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததை கூட கவனிக்காதவளாய் உட்கார்ந்திருந்த சக்தியை குரலுயர்த்தி அழைத்தான் விஷால். அவனின் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து வருவதை போல் மெலிதாக கேட்க, அதற்கு எவ்வித அசைவும் இன்றி இருந்தவளருகே சென்றமர்ந்து அவள் கன்னங்களை தனது இரு கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழைக்க…சட்டென சக்திக்கு அவனின் குரல் மிக அருகாமையில் கேட்க நெட்டி எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது விஷால் அவளிடம்,
“ஹேய் தி!
என்ன ஆச்சு?
ஏன் இப்படி பிரம்ம பிடிச்சா மாதிரி உட்கார்ந்திருக்க?”
“ம்…நீ…டூ மினிட்ஸ்ன்னு சொன்னதும்,
எனக்கு என் ப்ளூ ஞாபகம் வந்துடுத்து.
அவன் என்னை காலையில எழுப்பும் போது நான் டூ மினிட்ஸ்ன்னு சொல்லுவேன்…
அவனும் கரெக்ட்டா டூ மினிட்ஸ்ல மறுபடியும் எழுப்புவான்.
அந்த நெனவெல்லாம் வந்ததுல…
அப்படியே இருந்துட்டேன் போல.”
“சரியா போச்சு போ.”
“சரி…யாரு ஃபோன்ல.
ஏன் அவ்வளவு வேகமா வெளில போன?
நீ பேசும் போது உன் முகம் ஒரு மாதிரி டென்ஸ்டா இருந்துதே ஏன்?
என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லு.
இல்லாட்டி ஃபைன் நோ ப்ராப்ளம்.
நான் உன்னை அது விஷயமா தொந்தரவு செய்ய மாட்டேன்.”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.
நம்ம ஜேம்ஸ் தான்.”
“அவரா!
ஆமாம்… அவரு இப்ப தானே நம்ம வீட்டுலேந்து கிளம்பி போனார்.
அதுக்குள்ள எதுக்கு கால் செஞ்சார்!”
“அவன் நம்மளுக்கு டின்னர் குடுக்கணுமாம்.
இன்னைக்கு அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர முடியுமான்னு கேட்டான்.”
“அதுக்கெதுக்கு நீ அவ்வளவு பதற்றமா வெளில போய் பேசணும்.
இங்கேந்தே பேசிருக்கலாமே!”
“இல்ல தி.
அவன் ஃப்ர்ஸ்ட் தனியா பேசணும்ன்னு மெஸேஜ் அனுப்பினான்.
அதைப் பார்த்ததும்…
என்னடா இப்ப தானே போனான் அதுக்குள்ள என்ன இப்படி ஒரு மெஸேஜ்ன்னு குழம்பிட்டேன்.
அது தான் என் முகத்துல பிரதிபலிச்சிருக்கு.
அப்புறம் விஷயத்தை கேட்டதும்…
நானும் அவன்கிட்ட இதையே தான் சொன்னேன்.
உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொன்னான்.
உன்னை எப்பவும் போல லீ கார்னர் கூட்டிட்டு போறதா சொல்லி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னான்.
ஐ திங்க் அங்க உன்னோட ஃப்ரெண்ட் ருத்ராவும் வரப்போறா போல…
அதையும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்.”
“சரி…எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்ச உன் ஃப்ரெண்டோட ஃப்ளான் எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டியே!
இது நியாயமா?”
“உன்கிட்ட மறைக்க எனக்கு மனசு வரலை தி.
நான் அவ்வளவு சின்சியர் இன் மை ரிலேஷன்ஷிப்.”
“அட அட அட…
சூப்பர்.
உன் ஃப்ரெண்டோட விஷயத்தை சொல்லி…
என்கிட்ட ப்ரௌனி பாயிண்ட்ஸ் வாங்கிக்கற…
இரு…இரு…நான் ஜேம்ஸ்ட்ட சொல்லறேன்.”
“தி…
ப்ளீஸ் வேண்டாம் மா…
அப்புறம் அவன் இன்னைக்கு நைட்டு எனக்கு அவன் வீட்டுல இடம் கொடுக்காம போயிட போறான்.
அப்புறம் நான் ராத்திரி ஃபுல்லா உன் வீட்டு வாசல்ல தான் தூங்கணும்.”
“ஓகே ஓகே…
சொல்லமாட்டேன்.
கவலை வேண்டாம்.
எத்தனை மணிக்கு கிளம்பணும்?”
“ஒரு எட்டு மணிக்கு வரச் சொல்லிருக்கான்.”
“ஓ இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே…
சரி நான் இந்த காஃபி கப்ஸ் அன்ட் ஜூஸ் கிளாஸ் எல்லாத்தை டிஷ்வாஷர்ல வச்சுட்டு கிட்சனை சுத்தம் செய்துட்டு வரேன்.”
என்று சக்தி சொன்னதும் விஷாலும் அவளுக்கு உதவுவதாக சொல்லி எழுந்து சென்று இருவருமாக வேலைகளை செய்ததில் அங்குமிங்குமாக இடித்துக்கொண்டனர்…
மெல்ல காமன் தன் மலர்க்கணைகளை எய்திட எட்டிப்பார்த்தான்.
ஆனால் சக்தி சட்டென கடிகாரத்தை நிமிர்ந்து நேரம் பார்க்க திரும்பியதில் காமன் மலர்க்கணைகள் இருவர் மீதும் படாமல் ஓரமாக சென்று தரையில் விழுந்தது.
அடுத்து ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் காமன்.
கடிகாரத்தில் ஆறரை என்ற நேரம் காட்ட,
இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே என்றுக் கூறிக்கொண்டே இருவரும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தனர்.
விஷால் டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்ததைப் பார்த்த சக்தி,
அவன் கையிலிருந்த ரிமோட்டை தட்டிப்பரித்து அவளுக்கு விருப்பமான சேனலை போட முயன்றாள்.
அப்போது விஷால் அவளிடமிருந்து ரிமோட்டை வாங்க முயன்றான்…
அத்தகைய ரிமோட் விளையாட்டின் போது…
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த காமன் சற்று அவன் விளையாட்டை துவங்க நினைத்து இருவரையும் சற்று தூண்டிவிட,
இருவரும் ஒருவருக்கொருவர் மிக அருகில் நெருங்கியதும்…
இருவரின் இதயத்துடிப்பும் மடமடவென பங்கு சந்தையின் சென்செக்ஸ் கிடுகிடுவென ஏறுவது போல் ஏறிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த காமன்…
அவனுக்கான அன்றைய டார்கெட்டை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருக்கையிலே…
சட்டென மென்மையான கூடலினூடே கை தவறி…
சக்தி ரிமோட் பொத்தானை அழுத்த டிவியில் ஃப்ளபர் என்ற ஆங்கிலப்படம் பளிச்சிட, அதைப் பார்த்ததும் சக்தி விஷாலின் பிடியிலிருந்து விலகி…
“ஊப்பஸ்! சாரி வி.”
என்று எழுந்து நிற்க உடனே விஷால் அவள் கைகளைப் பிடித்து,
அவளை தன்னருகே அமர வைத்து அவளின் வலது கையை மெல்ல வருடிக்கொடுத்துக் கொண்டே.
“இட்ஸ் ஓகே தி.
ஐ ஆம் சாரி டூ”
என்று இருவரும் மாறி மாறி சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவர்களை கடிகாரம் ஏழு என்று மணியடியத்து தட்டி எழுப்பியதும் காமனின் மலர்க்கணைகள் மாய்ந்து போயின, காமனும் காணாமல் போனான்.
சக்தி அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு மெல்லிய சிரிப்போடு உதட்டை மெல்ல கடித்து…
“ஐய்யோ சக்தி!
ச்சே…
ஏன்!!”
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டே…
கண்ணாடி முன் நின்று தன்னையே தலைமுதல் கால் வரை பார்த்து…
“வேண்டாம் தி.
வேண்டாம்” என சொல்லிய பின் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.
சோஃபாவில் அமர்ந்திருந்த விஷால் தன் ‘தி’ சென்ற வழியையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் இருந்து விட்டு…
பின் டிவியை ஆஃப் செய்து,
இரு கைகளையும் மேலே உயர்த்தி,
“உஃப்”
என்று பெருமூச்சு விட்டான். எதையோ நினைத்துக் கொண்டே தனக்குத்தானே சரித்துக் கொண்டிருக்கையில்…அங்கு வந்த சக்தி தனது தொண்டை கரகரப்பை சரி செய்வது போல இருமினாள். அதைக் கேட்டதும் திரும்பி பார்த்த விஷால்,
“ஓ! வாவ்!
தி! யூ லுக் கார்ஜியஸ்.”
என்று கூறிக்கொண்டே அவளருகே சென்றவன் சடாரென அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவளின் வலது கையை பிடித்து முத்தமிட்டு,
“வில் யூ மேரி மீ”
என்று கேட்க…அதற்கு சக்தி…
“ஹலோ என்ன மறுபடியும் முதல்லேந்தா!”
என்று சொல்ல இருவரும் புன்னகையித்துக் கொண்டனர்.
“தி…
இன்னைக்கு நைட் நான் இங்கேயே தாங்கிக்கலாமா?”
என்று கேட்ட விஷாலிடம் ஹாலின் மூலையில் இருந்த ப்வுடர் ரூமை கைக்காட்டி…
“போய் ரெடியாகி வா வி.
டைம் ஆயிடுத்து.
கம் ஆன்.
கோ நௌ.”
எனக் கூறிக்கொண்டே விஷாலை தள்ளிக்கொண்டு போய் பவுடர் ரூமுக்குள் அவனை அனுப்பிவைத்து விட்டு ஹாலின் லைட்டை ஆன் செய்தாள்.
விஷால் ரெடியானதும் கதவைப் பூட்டிவிட்டு இருவருமாக விஷாலின் காரில் ஏறி ஜேம்ஸ் வீட்டுக்குச் சென்றனர்.
அவர்கள் சென்ற வழியில் ஓரிடத்தில் சக்தி காரை நிப்பாட்ட சொன்னாள். விஷாலும் எஜமானியின் உத்தரவிற்கு இணங்கி காரை பார்க் செய்தான். காரில் இருந்து இறங்கிய சக்தி “போல் பட்டீசரி” என்றொரு ஃபேமஸான ஃப்ரெஞ்ச் பேக்கரிக்குள் சென்று மேக்ரோன்கள் வாங்கிக்கொண்டு அப்படியே பக்கத்து கடையான இந்தியன் ஸ்டாருக்குள் சென்று நமது இந்திய பலகாரங்களான மிக்ஸ்சர், ஜாமுன், முறுக்கு போன்றவைகளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவளிடம் விஷால்,
“என்னது இது? தி!
அவன் வீட்டுல அவன் மட்டும் தான் இருக்கான்.
எதுக்கு நீ இப்போ இவ்வளவு எல்லாம் வாங்கிருக்க?”
என்று கேட்க அதற்கு வாங்கி வந்ததை காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு முன் இருக்கையில் சென்றமர்ந்த சக்தி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விஷாலைப் பார்த்து,
“ம்… இப்போ போகலாம்.”
“சரிங்க மேடம்.
ஆமாம் நான் கேட்டதுக்கு பதிலேதும் உண்டா?”
“வி…
நாம ஒருத்தர் வீட்டுக்கு மொதோ தடவையா போறோம்.
எப்படி கைவீசிண்டு போறது?
அதுதான் வாங்கினேன்.”
“ம்…ஓகே ஓகே.
இதுக்கு தான் வீட்டுக்கு பெண்கள் தேவைன்னு சொல்றாங்களா?”
“எதுக்கு ஸ்னாக்ஸ் வாங்கவா!”
“இல்லம்மா…
நானும் தான் அன்னைக்கு ஜேம்ஸ் வீட்டுக்கு மொதோ தடவையா போனேன்,
ஆனா எனக்கு இது தோணலையே!
அதுவுமில்லாம உன் வீட்டுக்கும் மூணு தடவை வந்துட்டேன்…
இதுவரை ஒண்ணுமே வாங்கிண்டு வந்ததில்லை…
அதுனால சொன்னேன்.”
“எல்லாத்துக்குமா சேர்த்து கல்யாணதுக்கு அப்புறம் வாங்கிக்கறேன். சரியா.”
“ம்…நான் குடுக்க தயார்.
நீயும் வாங்கிக்க தயாரா இரு.
இதோ ஜேம்ஸ் வீடு வந்துடுத்து.
அதோ அந்த வீடு தான்.
வா ‘தி’ போகலாம்”
என்று காரை ஜேம்ஸ் வீட்டருகே இருந்த கார் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு இருவருமாக ஜேம்ஸ் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தனர். ஜேம்ஸ் வந்து கதவை திறந்து இருவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றான்.
சக்தி வாங்கி வந்த ஸ்னாக்ஸை ஜேம்ஸிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்ட ஜேம்ஸ் விஷாலைப்பார்த்து,
“டேய் உன்னை சொல்லாம கூட்டிட்டு தானே வரச்சொன்னேன்.”
என்று சொன்னதும் சக்தி தன் தலையில் மெல்லமாக வலது கையால் தட்டிக்கொண்டே விஷாலைப்பார்த்து தன் இரு கைகளால் இரு காதுகளையும் பிடித்தவாரு “சாரி” என்று சொல்ல. அதை கவனித்த ஜேம்ஸ்,
“இட்ஸ் ஓகே சக்தி.
உங்க சாரியை வேஸ்ட் பண்ணாதீங்க.”
“என்ன ருத்ராவும் வருவான்னு விஷால் சொன்னானே!
அவளை காணமே!”
“வருவாங்க வருவாங்க.
வாங்க நாம அந்த ரூமுக்குள்ள போய் உட்காரலாம்.
அங்க இட் வில் பி கோசி அன்ட் கம்ஃபர்டபுள்.
அன்ட் அங்க தான் எல்லா ஸ்னாக்ஸ் அன்ட் ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாம் உங்களுக்காக அரேஞ்ச் செஞ்சி வச்சிருக்கேன்.
பட் நோ மொபைல்ஸ் அளௌடு.
சோ உங்க மொபைல்ல இங்க இந்த டிரேல வச்சுட்டு வாங்க.”
என்று ஜேம்ஸ் கூறியதும் விஷாலும் சக்தியும் அவரவர் மொபைல்களை டிரேவில் வைத்துவிட்டு அவன் கைக்காட்டிய ரூமுக்குள் சென்றனர். மூவரும் உள்ளே சென்றதும் ஜேம்ஸ் அந்த அறையை சாற்றி தாழ்ப்பாளிட்டான். அங்கு நடந்தவைகளை பார்த்து குழம்பிய சக்தி, கதவைப் பூட்டிய ஜேம்ஸை, தன் முகத்தில் “ஏன்” என்றொரு கேள்க்குறியோடு பார்த்துக் கொண்டே அறையை நோக்கி திரும்பினாள், சட்டென்று அவளுக்கு தலைவலிப்பது போல் இருக்க தன் இரு கைகளால் வெற்றியைப் பிடித்து அழுத்திக்கொண்டே பார்த்தாள்…
அந்த அறையில் இன்னுமொரு ஆள் அமர்ந்திருந்தது போல் அவளுக்கு தோன்ற, கண்களை கசக்கிக்கொண்டு நன்றாக பார்த்தாள். அப்போது அவளருகே இருந்த விஷாலின் மேல் சாய்ந்தவாரு அவனிடம்…
“இவர் எப்படி இங்கே? ஏன்?
எனக்கு என்னமோ தெரியலை வி…
சடன்னா தலைவலிக்கறது.”
என்று சொல்ல அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தான். ஜேம்ஸ் ஏதோ ஜூஸ் ஒன்றை எடுத்து வந்து சக்திக்கு கொடுக்கும் படி விஷாலிடம் சொல்ல, விஷாலும் அந்த ஜூலை எடுத்து சக்தியிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். அது என்ன ஜூஸ் என்றும் அது ஏன் தனக்கு மட்டும் தரப்படுகிறது என்றும் கேட்டாள் சக்தி.
தொடர்வாள்…
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
ஜேம்ஸ் உடனான உரையாடலில் ரொம்பவே குழம்பி போன சக்தி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று தவிப்புக்குள்ளானாள். அவள் குழம்பிப் போய் இருப்பதை அவளின் பதற்றத்தில் இருந்தே அறிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர அவர்கள் அமர்ந்திருந்த ஹாலின் இடது புறமாக இருந்த திறந்த சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஃபிரிஜை திறந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதன் அருகே இருந்த கண்ணாடி தம்பளர் ஒன்றை எடுத்து அதில் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதை சக்திக்கு குடுக்க அடுப்படியில் இருந்து ஒரு அடி முன் வைத்தனுக்கு அடுப்படிக்கு அருகே மூடி இருந்த கதவின் வழியே ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது. உடனே நடையை நிறுத்தி உன்னிப்பாக கேட்டான். ஆனால் இம்முறை சற்று முன் அவனுக்கு கேட்ட சத்தம் ஏதும் கேட்கவில்லை. முகத்தில் சந்தேகத்துடணும், கையில் தண்ணீர் தம்பளருடணும் சக்தி முன் நின்ற ஜேம்ஸ் அவளிடம் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறி நின்றான். சக்தியும் அவன் குடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனோ பின்னால் திரும்பி சமையலறையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
“என்ன ஜேம்ஸ்.
ஏன் கிட்சனையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”
“இல்ல…”
“என்னாச்சு?”
“உங்க கிட்சன் பக்கத்துல ஒரு டோர் இருக்கே அது…”
“அது பேஸ்மென்ட் போறதுக்கான டோர்.
ஏன் அந்த டோர்க்கு என்ன?”
“அந்த டோர்க்கு ஒண்ணுமில்ல ஆனா அதுக்குள்ளேந்து ஏதோ சத்தம் வந்தா மாதிரி இருந்தது.
அது தான்… யோசனையா இருக்கு.”
“ஏதாவது டப்பா ஆர் தட்டுமுட்டு சாமான்கள் விழுந்திருக்கும்.
வேறென்ன!”
“இல்ல அந்த சத்தம் அப்படி பொருள் கீழ விழும் சத்தம் இல்ல.
யாரோ நாலஞ்சு பேரு பேசிக்கறா மாதிரி கேட்டுச்சு.”
“என்னது என் வீட்டு பேஸ்மென்ட்ல நாலஞ்சு பேரு பேசறா மாதிரி கேட்டுச்சா!!
ஹா! ஹா! ஹா!
என்ன சொல்லுறீங்க ஜேம்ஸ்.”
“அட ஆமாங்க.
சத்தியமா கேட்டுச்சு.
எதுக்கும் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா?”
“இல்ல இல்ல.
அதெல்லாம் வேண்டாம்.”
“அதுக்கு எதுக்கு நீங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க?”
“டென்ஷன் எல்லாம் ஒண்ணுமில்ல…
அப்படியே நீங்க சொல்லுறது மாதிரி நாலஞ்சு பேரு பேஸ்மென்ட்ல இருக்காங்கன்னே வச்சுகிட்டாலும்…
அவங்க எப்படி அங்க போயிருப்பாங்க.
நாம் இரண்டு பேரும் இங்கயே தானே உட்கார்ந்திருக்கோம்.
நம்மள தாண்டி இதுவரை யாரும் போனதா எனக்கு தோனலை.
உங்களுக்கு?”
“விளையாடாதீங்க சக்தி.
மறுபடியும் உங்க கிட்ட நான் கேட்கிறேன்.
நீங்க எதையாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா?”
“இல்ல இல்ல இல்லன்னு எவ்வளவு தடவ சொல்லுறது ஜேம்ஸ்.”
“சரி அப்படின்னா உங்க வீட்டு பேஸ்மென்ட்ட பார்க்க அனுமதி குடுங்க சக்தி.”
“ஜேம்ஸ் ஆல்ரெடி இன்னைக்கு நீங்க சொன்ன விஷயங்களும் நான் சொன்னதும்ன்னு ரொம்பவே குழம்பி போய் இருக்கேன்.
ப்ளீஸ் இதுல நீங்க இன்னும் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க.”
“ஓகே ஓகே.
உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ ஒரு கால் செஞ்சு சொல்லுங்க.
சரியா.”
“நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே!
மறுபடியும் சொல்லுங்கன்னா…
நான் என்னத்த சொல்ல?”
“என்ன சொல்லணும்னு தோணுதோ அதை.
சரி நான் இந்த சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு விஷயங்களை நேருல சொல்லிட்டு போக தான் வந்தேன்.
சொல்லிட்டேன்.
மேலும் கூடுதல் தகவல்களை என்னை நம்பி என்னிடம் சொன்னதற்கு நன்றி.”
என்று கூறி சக்தியிடம் இருந்து விடைப்பெற்றுச் செல்ல இருந்த ஜேம்ஸுக்கு அவனின் கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்ததும் அந்த அழைப்பை ஏற்று.
“அப்படியா!
சூப்பர்.
இதோ நான் உடனே வரேன்.”
என்று கூறிக்கொண்டே சக்தி வீட்டின் வாசற்கதவை திறந்தான். பின் அழைப்பை துண்டித்து விட்டு சக்தியிடம்
“சக்தி தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிட்டாலிடி.
நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா போகணும்.
சோ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.
எங்க ஆளுங்க உங்க பக்கத்து வீட்டு சமாச்சாரத்தை பாரத்துப்பாங்க.
நீங்க இனி அதைப் பத்தி கவலை பட வேண்டாம்
டேக் கேர்.
பை.”
“பை ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் டே.”
என்று சக்தி கூறியதும் அங்கிருந்து கிளம்பி தனது காரில் ஏறி அந்த தெரு முனையில் சர்ரென்று ஒரு யூ டர்ன் செய்து பறந்து சென்றான். ஜேம்ஸ் சென்றதும் வீட்டினுள் வந்து கதவை தாழிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள். தலையை அந்த சோபாவின் மேல் நன்றாக அழுத்தி சாய்த்துக் கொண்டு அமர்ந்த சக்தி, ஜேம்ஸ், சார்ல்ஸ் மற்றும் பீட்டரை பத்தி சொன்னதையும் மிஸ்ஸர்ஸ் டேவிட் பத்தி சொன்னதையும் மேலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்த்தாள். சட்டென பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ ஒரு சப்தம் கேட்க உடனே சோஃபாவில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தாள். சப்தம் ஏதும் அதன் பின் கேட்கவில்லை. மீண்டும் சோஃபாவில் சாய்ந்தாள். அவள் சோஃபாவில் படுத்த சில நொடிகளில் மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து சப்தம் வந்தது. விருட்டென எழுந்த சக்திக்கு பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ சப்தம் வந்ததாக ஜேம்ஸ் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து
“ப்ளூ…இப்ப நீ வரலாம்.
ஏய் ப்ளூ அங்க என்னத்த உருட்டுற?
நீ அப்படி எல்லாம் சத்தம் குடுக்குறவன் இல்லையே!
சரி சரி வா வா.
உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லணும்.
ப்ளூ”
என்று ப்ளூவை அழைத்து விட்டு அதன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அழைத்து சற்று நேரம் ஆகியும் ப்ளூ ஹாலுக்கு வரவில்லை. ப்ளூ மேலே வராததால் சக்தி பேஸ்மென்ட் செல்ல முடிவெடுத்து சோஃபாவில் இருந்து எழுந்து பேஸ்மென்ட் கதவை நோக்கி ப்ளூவை அழைத்துக் கொண்டே நடக்கலானாள். அப்போது அவளுக்கு ஏதோ மனதில் ஒரு அச்சம் எழ
“ஏய் ப்ளூ.
வேண்டாம்.
விளையாடாத.
இப்போ நீ இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்.
ப்ளூ.”
என்று கூறிக்கொண்டே பேஸ்மென்ட் கதவருகில் சென்றவள் மனதில் ஏதோ ஒரு வகையான நடுக்கத்தை உணர்ந்தாள். மெல்ல வலது கையால் அந்த கதவின் கைப்பிடியை பிடித்தாள். அவள் வலது கை நடுங்கியது. அதை நிறுத்த இடது கையை வலது கை மேல் வைத்து அழுத்தினாள். அப்போதும் நடுக்கம் அடங்கவில்லை. பின் இரண்டு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை ப்ளூவை அழைத்துப் பார்த்தாள். பதிலேதும் வராததால் கீழே சென்று விடலாமென்று மனதில் இருந்த பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து, தைரியத்தை கேடயமாக கொண்டு கதவை திறந்தாள் சக்தி.
ஒரே கும்மிருட்டாக இருந்தது. முதற்படியின் வலது புறம் இருந்த லைட் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் பேஸ்மென்ட் லைட் எரியவில்லை. சுவிட்சை நன்றாக அழுத்தி பார்த்தாள். அப்போதும் லைட் ஆன் ஆகவில்லை. இருட்டில் செல்ல மனமில்லாது அந்த அறையிலிருந்து வெளியே வந்து எமர்ஜென்சி லைட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் பேஸ்மன்ட்டிற்குள் செல்ல ப்ளூவை அழைத்துக் கொண்டே முதற்படியில் கால் பதித்தாள். அப்போதும் ப்ளூவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சக்தி வீட்டு பேஸ்மென்ட்டுக்கு செல்ல இருந்த படிக்கட்டுகளோ பத்து
அவற்றில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து
கை விளக்கு ஏந்திய காரிகை போல் படிகளில் இறங்கி சென்றாள்.
பேஸ்மென்ட்டில் ப்ளூ எப்போதும் அமர்ந்திருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அருகே சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷனில் ப்ளூ இருக்கவில்லை. உடனே கையில் இருந்த அந்த சிறிய விளக்கு கொண்டு சுற்றிப் பார்த்தாள். அவளால் ப்ளூவை பார்க்க முடியவில்லை.
உடனே ப்ளூ…ப்ளூ…ப்ளூ என்று மெதுவாக அழைத்தாள்.
அதற்கும் பதில் வரவில்லை.
தள்ளி வைத்த பயம் மீண்டும் வேதாளம் விக்கிரமாதித்தனை தொற்றிக்கொண்டது போல் தொற்றிக் கொண்டது.
சட்டென பேஸ்மென்ட் லைட் ஆன் ஆனது. எதிர்பார்க்காத நேரத்தில் லைட் ஆன் ஆனதும் பயத்தில் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை கீழே தரையில் போட்டாள்.
அந்த அறையின் விளக்கு எரிவதை உணர்ந்ததும் நன்றாக பேஸ்மென்ட்டை சுற்றிப் பார்த்தாள். எல்லா பொருட்களையும் நகர்த்தியும் பார்த்தாள். ஆனால் ப்ளூ அங்கு இருக்கவில்லை. பின் மீண்டும் அந்த படிக்கட்டுகளில் ஏறி வெளியே அடுப்படிக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பேஸ்மென்ட் கதவு வழியாக வெளியே வந்து அந்த அறையின் கதவை சும்மா சாற்றி வைத்துவிட்டு அடுப்படிக்குள் சென்று அங்கிருந்த கிரானைட் மேடையில் சாய்ந்து கொண்டு ப்ளூ எங்க போயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு சட்டென யாரோ பேஸ்மன்ட் படிக்கட்டுகளில் கடகடவென இறங்குவது போல் சப்தம் கேட்டதும் அடுப்படியில் இருந்தே எட்டி பார்த்தாள். பேஸ்மென்ட்டுக்கு செல்லும் கதவு திறந்துக் கிடந்ததை பார்த்து தனக்குதானே
“நான் அந்த கதவ சாத்திட்டு தானே வந்தேன்!
அப்புறம் எப்படி அது தொறந்து இருக்கு?”
என்று கூறிக்கொண்டே அந்த அறையின் வாசலுக்கு சென்றவள் உள்ளே செல்ல தயங்கி சற்று நேரம் வாசலிலேயே நின்றாள். பின் சென்று பார்த்துவிடலாம் என்று மனம் உரைத்ததை ஏற்று அதன் படியே மீண்டும் பேஸ்மென்ட்டுக்குள் நுழைந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள். அப்போது மீண்டும் அந்த அறையின் லைட் ஆஃப் ஆனது. அதே நேரம் அவள் காலடியில் எமர்ஜென்சி லைட் சர்… சர்… சர்… சரென ஆடிக்கொண்டிருந்தது. உடனே அதன் ஆட்டத்தை தனது காலால் நிறுத்தினாள். எமர்ஜென்சி லைட் ஆடுவது நின்றது. அதன் வெளிச்சம் நேராக ஓரிடத்தில் வீசியது. அந்த வெளிச்சம் சென்ற திசையிலேயே தனது பார்வையையும் வீசினாள் சக்தி. எமர்ஜென்சி லைட்டின் ஒளி சென்று முட்டி மோதி நின்றிருந்த இடத்தை சக்தியின் பார்வை சென்றடைந்ததும். அவள் அதிர்ச்சிக்குள்ளானாள்.
அதிர்ச்சியில் லைட்டை அழுத்திக் கொண்டிருந்த அவளின் கால் படிக்கட்டுகளை தேடி ஓட தயாரானதும் மீண்டும் அந்த லைட் சர்…சர்…சரென சப்தம் எழுப்பியது.
வேக வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பேஸ்மென்ட்டை விட்டு வெளியேறிய சக்தி அந்த அறையின் கதவை தாழிட்டு, அதிலேயே சாய்ந்தபடி உடல் முழுவதும் பயத்தால் வியர்த்து விட, பதற்றத்தில் கை கால் நடுநடுங்க, தனக்கு தானே ஏதேதோ கேள்விகளை கேட்டுக்கொண்டு அந்த கதவில் மெல்ல வழுக்கிக்கொண்டே தரையில் அமர்ந்தாள்.
அப்படி பேஸ்மென்ட்டில் சக்தி பார்த்தது என்ன? அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது? பேஸ்மன்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய ப்ளூ எங்கே?
போன்ற கேள்விகளுக்கான பதில்?
தொடர்வாள்…
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
சக்தி மனதில் நடந்த பட்டி மன்றத்தின் முடிவு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தீர்ப்பானதும் அவள் அதை ஜேம்ஸிடம் இருந்து தப்பிக்க அவனிடம் குக்கீஸ் தட்டை நீட்டி மீண்டும் குக்கீஸ் எடுத்துக்க சொல்லி வலியுறுத்திக் கொண்டே,
“அது இருக்கட்டும் ஜேம்ஸ் அதை உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன். சொல்லுங்க. சரி நீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட முதல் கணவர் அவங்களை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்கார்னு சொன்னீங்களே அது எப்போ நடந்த சம்பவம்?”
சக்தி அந்த பொக்கிஷம் விஷயத்தை தன்னிடமிருந்து மறைக்க நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளை அவள் போக்கில் சென்று விஷயத்தை தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து,
“மொத்தத்துல அந்த பொக்கிஷம் என்னன்னு சொல்ல மாட்டீங்க.
ஆங்! சரி இப்போ அதை விட்டு விடுவோம்.
என்ன கேட்டீங்க சக்தி?
மிஸ்ஸர்ஸ் டேவிட் சம்பவம் எப்போ நடந்ததுன்னு தானே!
அது நடந்து ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏன்! நீங்க நியூஸ் பேப்பர்ல எல்லாம் பார்த்திருப்பீங்களே.”
“எங்கேந்து! நான் இந்த ஊருக்கு வந்தது எம்.எஸ் படிக்க.
அதுக்கப்புறம் வேலை.
அப்படி இப்படீன்னு பார்த்தா…
நான் இந்த ஊர்ல கடந்த அஞ்சாறு வருஷமா தானே இருக்கேன்”
“ம்…அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”
“ஏன் அப்படி அந்த மனுஷன் செஞ்சாறாம்?”
“சக்தி…அதுவும் அரசியல் தான்.”
“ஓ! சரி நேத்து அவங்க வீட்டு பின்வாசல் கதவு ஏன் தொறந்து இருந்துச்சு?
அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”
“ம்…அது அந்த வீட்டில் வேலை பாக்குற அந்த ஜான் பையனின் அஜாக்கிரதையால நடந்திருக்கு.”
“அப்படியா!
அவன் என்ன செஞ்சான்?”
“வேலையை முடிச்சிட்டு பின் வாசல் கதவை பூட்ட வந்தவனுக்கு அவன் கேர்ள் பிரெண்ட் கிட்டேந்து கால் வந்திருக்கு…
அய்யா அதுல முழுகி கதவை திறந்து போட்டுட்டு அப்படியே ஃபோன்ல பேசிகிட்டே அவன் கேர்ள் பிரெண்ட பார்க்க போயிருக்கான்.”
“அச்சச்சோ! அப்போ நான் கேட்ட அந்த சத்தம்?”
“வீட்டு கதவு திறந்து இருந்ததும், ஒரு பெரிய பூனை வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு…
அந்த நேரம் பார்த்து நீங்க வாசல் கதவை தட்ட…
அது பயந்து வந்த வழியே வெளியே ஓடிருக்கு.”
“சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்தது?”
“எல்லாம் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வீட்டு சிசிடிவி கேமரா மூலமா தான். அப்புறம் அந்த வேலைக்கார பையன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க.
உண்மை வெளிய வந்துது.”
“சூப்பர்.
நானும் எங்க ஓனர் கிட்ட சொல்லி சிசிடிவி பிக்ஸ் பண்ண சொல்லணும்.
எவ்வளவு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு பாருங்க.”
“அது என்னமோ உண்மை தாங்க.”
“சரி சரி பார்த்தீங்களா நான் கேட்ட கேள்விக்கு உங்களை பதில் சொல்ல விடாம அடுத்த கேள்வி கேட்க போய் மொதோ கேள்வி பதில் இல்லாம இருக்கு. அதையும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…”
“ஓ மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் சார்ல்ஸ் விஷயமா!! அது தான் சொன்னேனே அதுவும் அரசியல் தான். ஆனா அதுலேந்து எப்படியோ தப்பிச்ச மிஸ்ஸர்ஸ் சார்ல்ஸ் பின்னாளில் டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் தான் இப்போ அவங்களோட கணவரும் அவங்களோட கல்லூரி நண்பருமான மிஸ்டர் டேவிட்டை கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க.”
“அம்மாடியோ!
ஏதோ பெரிய இடம்ன்னு நாம நினைக்கிறோம் ஆனா அதுக்குள்ள இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு இல்ல!”
“ஆமாம் சக்தி எல்லார் வாழ்க்கையும் அப்படி தான்.
வெளியே தெரியுறது உண்மையான வாழ்க்கை இல்ல.
அவங்கவங்க பணக்காரன், ஆரோக்கியமானவன், ஆசிர்வதிக்கப்பட்டவன், அன்பானவன், உதவிபுரிபவன் அப்படின்னு அழகு அழகான முகமூடிகளை போட்டுட்டு வலம் வந்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்.
எனக்குள்ள எவ்வளவு புதைந்து கிடக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதே போல் உங்களுக்குள்ள எவ்வளவு புதைந்திருக்குன்னு எனக்கு தெரியாது. ஏன்னா நாம ரெண்டு பேருமே முகமூடி போட்டுட்டு தான் பழகறோம்.”
“ம்…ஒரு விதத்துல பார்த்தா நீங்க சொல்லறது சரிதான்.
ஆனா பொதாம் பொதுவா எல்லாரும்ன்னு நாம சொல்லிட முடியாது.
சொல்லவும் கூடாது.
நமக்குள்ளேயும் உண்மையான முகத்தோடு வாழறவங்க இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சரி நீங்க சொன்ன விபத்து வருடம் அப்பறம் மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த சார்ல்ஸ்க்கும் நடந்த கல்யாணம் எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா அவன் தான் இவனா இருப்பானோன்னு எனக்கு தோணுது.”
“எவனா! எவன்?”
“என்ன நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க?”
“இல்ல புரியலை சக்தி.
நீங்க கேட்டத வச்சு தான் நான் கேட்டேன்.
வேற யாரு உங்ககிட்ட கேட்டா?”
“அது…அது வந்து.
ஆங்!
நான் கேட்டதையே நீங்களும் கேட்டவை தான் நான் அப்படி சொன்னேன்.”
“சரி இருக்கட்டும்.
இப்போ தெளிவா யார பத்தி சொன்னீங்கன்னு சொல்லுங்க.”
“எங்க காலேஜ் கடைசி நாள்ல நடந்த விஷயத்தை பத்தி சொன்னேன் இல்லையா!”
“ஆமாம் சொன்னீங்க.
அதுக்கு?”
“அதுல ப்ரொபஸர் சேவியர் செய்த அந்த மனிதன் போலவே இருக்கும் ரோபோ விஷயம் எனக்கும் பிஎச்டி மாணவனான பீட்டருக்கும் மட்டும் தான் தெரியும்ன்னும்.
அதை அவனோடதுன்னு சொல்லி அவன் உரிமை கொண்டாட, அதை தடுக்க நினைத்த ப்ரொபஸரை அன்று அந்த இரவு அந்த கோலத்திற்கு உள்ளாக்கியதும் அந்த பீட்டரும் அவன் அப்பாவின் அரசியல் பின்னணியும் தான்னு சொன்னேன் இல்லையா!”
“ம்…ஆமாம் சொன்னீங்க.
ஆங்! இருங்க இருங்க…
இப்போ நீங்க என்ன சொல்ல வரேங்க ன்னா…
அந்த பிஎச்டி மாணவன் பீட்டர்,
இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த அரசியல்வாதி சார்ல்ஸுக்கும் பொறந்த மகனா இருப்பானோன்னு கேட்க வறீங்க சரியா!”
“ஆமாம்.
அதே தான்.
இதைத் தான் நேத்து ராத்திரிலேந்து எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன்.”
“நீங்க நினைக்கிற மாதிரியே தான்.
இந்த சார்ல்ஸோட மகன் பீட்டரும் நீங்க படிச்சதா சொன்ன அதே கலேஜ்ல தான் படிச்சிருக்கான்.
சோ உங்க யூகம் சரிதான்.
ஆனா அதுக்கு நீங்க ஏன் பதற்றமாகணும்?”
“இல்ல…
ப்ரொபஸரை ஒரு வாரம் வச்சு துன்புறுத்தி,
அவருக்கிட்டேந்து என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு…”
“தெரிஞ்சுகிட்டு? என்ன சக்தி?”
“என்னை அன்னைக்கு கடத்திருப்பானோ?”
“அப்படிங்கறீங்களா?
ஆனா அவன் தான் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட் ல பெராலிஸ் வந்து படுத்து படுக்கயாய் இருக்கான்.
அவனோட சிகிச்சைக்காக டாக்டர்ஸ் அன்ட் நர்ஸ் எல்லாரும் அவன் வீட்டோடு இருக்காங்க.
இந்த நிலையில் அவன் பண்ணிருக்க வாய்ப்பில்லன்னு சொல்ல முடியாது ஆனா வாய்ப்புகள் கம்மி.”
“ஓ! அதுனால தானா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட பையன் இந்த ரெண்டு வருஷமா அவங்கள பார்க்க வரலையா?”
“இருக்கலாம்.”
“ஆனா…இவங்களும் மகனை பார்க்க போனதில்லையே!”
“அது ஏன் அவங்க தான் சொல்லணும்.
இல்லாட்டி…அந்த அரசியல் வாதி அவங்களை பார்க்க விடாமல் செய்திருக்கலாம்.”
“இருக்கும் இருக்கும்.
அந்த பீட்டர் என்னைவிட நாலு வயசு தான் பெரியவன்.
அவனுக்கு இப்படி ஆனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்…
அவன் எங்க ப்ரொபஸருக்கு செஞ்சதை நெனச்சா…
அவனுக்கு இது தேவை தான்னு மனசு சொல்லுது.
நானும் மனுஷி தானே!”
“ம்…புரியுது சக்தி.”
“இப்போ மிஸ்ஸர்ஸ் டேவிட் எங்க தான் போயிருக்காங்க?
உங்களுக்கு தெரியுமா?”
“ஆமாம்.
ஏன் கேட்கறீங்க?”
“இல்ல…
அந்த சார்ல்ஸ் அன்ட் பீட்டர் சேர்ந்து அவங்கள ஏதாவது செய்துட்டாங்களோன்னு பயம் வருது. அதுதான் கேட்டேன்.”
“அவங்க இப்போ அவங்க மகனை பார்க்க தான் போயிருக்காங்க சக்தி.”
“ஆங்! அப்படியா!”
“ஆமாம்.”
“என்ன இத்தனை வருஷம் போகாதவங்க…
திடீர்ன்னு போயிருக்காங்க?
என்னவா இருக்கும்”
“அதை எல்லாம் நினைச்சு குழப்பமாகாதீங்க சக்தி.
நேத்து நியூஸ் பேப்பர் நீங்க படிக்கலையா?”
“எங்கேந்து.
இல்ல படிக்கலை.
ஏன்?”
“அதை படிச்சிருந்தா நீங்க இன்னும் குழம்பி போய் இருப்பீங்க.”
“அப்படியா? அப்படி என்ன நியூஸ் வந்தது.”
“அந்த சார்ல்ஸோட ஒரே மகன்…
அதாவது சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு பெண்மணி மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு பொறந்த மகனான பீட்டரின் உயிர் ரெண்டு நாள் முன்னாடி அவன் உடலை விட்டு பிரிந்தது.”
“அச்சச்சோ! பீட்டர் இறந்துட்டானா?”
“எஸ் சக்தி.
அதுக்கு தான் மிஸ்ஸர்ஸ் டேவிட் அவசர அவசரமா யார்கிட்டேயும் சொல்லிக்காம போயிருக்காங்க.”
“ச்சே!
நான் ரொம்ப மோசம்.”
“ஏன் அப்படி?”
“பின்ன! அவங்க, அவங்க மகன் இறப்புக்கு போயிருக்காங்க…
ஆனா நான், எனக்கு இப்படி நடந்ததுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருககுமோன்னு யோசிச்சேன்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
அவங்க வந்ததும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.”
“சரி யோசிச்சீங்க.
விடுங்க.
நாம யோசிக்கிறதுக்கெல்லாம் வருத்தப் படணும்னா…
நான் எவ்வளோ யோசிச்சிருப்பேன்…
எத்தனை பேரை சந்தேகப்பட்டிருப்பேன்.
அப்போ நான் எப்படி போய் அவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கறது! ம்…”
“அது உங்க தொழில்.
அதுல தப்பில்ல.
ஆனா நான் அப்படி இல்லையே!”
“அட போங்கங்க.”
“சரி அப்படிப்பார்த்தா…
உங்க சந்தேகம் தப்புன்னு ஆயிடுச்சு.
என் சந்தேகம் தப்புன்னு ஆகலை ஆனா சந்தேகப்பட்ட நபர் இப்போ உயிரோடு இல்ல.
அப்படின்னா என்னை கடத்தியது பீட்டர் தான்னும் அவன் இறந்துட்டான்னும் இந்த கேஸை முடிஞ்சிடுமா?”
“நான் சந்தேகப்பட்ட ருத்ரா இல்லன்னு ஊர்ஜிதம் ஆகிடுச்சு.
ஆனா இப்போ நீங்க சொன்ன சம்பவத்தை வச்சு இந்த கேஸை அப்படி எல்லாம் மூடிட முடியாது
ஏன்னா அந்த பையன் பெரிய அரசியல் புள்ளியின் மகன். அது பீட்டராக இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனா அவன் உயிரோடு இல்லைனாலும்…
அந்த டாக்டர் வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?
அந்த ரெண்டு நர்ஸுகளுக்கு ஏன் அப்படி நடந்தது?
இதுக்கெல்லாம் பதில் வேண்டாமா?
அதுக்கும் இறந்து போன பீட்டருக்கும் இல்ல அவன் அப்பனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இதெல்லாம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல என் நண்பன் கட்டிக்க போற
உங்களுக்காகவாவது அன்னைக்கு நடந்தது என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்.”
“ம்…அப்போ ருத்ராவும் இல்ல, மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் இல்ல, பீட்டரா இருக்க வாய்ப்பிருந்ததுன்னு சொல்லுறீங்க சரி.
ஆனா எங்க ஆஃபிஸ் கேன்டீன் ஸ்டாஃப் அந்த ஜானை விட்டுட்டேங்களே!”
“அவனை தேடிட்டு தான் இருக்கோம்.
நிச்சயம் எங்ககிட்ட மாட்டுவான்.”
“சரி…உங்க காலேஜ் கடைசி நாள் இரவு நடந்த சம்பவத்தை சொன்னீங்களே! உங்க ப்ரொபஸர் சேவியரை அந்த நிலைமைக்கு தள்ளியது அந்த பீட்டர் தான்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?
இல்ல அவனா இருந்திருக்க ஏதாவது க்ளூ ஆர் எவிடன்ஸ் உங்க கிட்ட இருக்கா?”
“ஆங்! அப்படி எதுவும் என்கிட்ட இல்லை.
எனக்கே அன்னைக்கு மிட் நைட்ல எங்க ப்ரொபஸர் சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் தெரிய வந்துது.”
“சரி…
அதுக்கு முன்னாடி எப்பவாவது உங்க ப்ரொபஸருக்கும் அந்த பீட்டருக்கும் இந்த பேட்டென்ட் விஷயமா பிரச்சினை வந்திருக்கா?
அப்படி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”
“இல்ல…
அப்படி எதுவும் அதுவரை நடந்ததா…
எந்த நியூஸும் வரலை.
எனக்கும் தெரியாது.
ஏன் அப்படி கேட்கறீங்க?”
“சோ…உங்க ப்ரொபஸருக்கு அப்படி ஆனது பீட்டரால தான்னு உங்களுக்கு உங்க ப்ரொபஸர் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது உங்கிட்ட சொன்னது தான்.
இல்லையா!”
“எஸ். யூ ஆர் ரைட்.”
“அதுவரைக்கும் அந்த சேவியருக்கும் பீட்டருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லைன்னும் நீங்க தான் சொன்னீங்க.
ஆனா எப்படி அன்னைக்கு திடீர்ன்னு உங்க ப்ரொபஸர் சொன்னதை மட்டும் அப்படியே நம்பினீங்க?”
“நீங்க சொல்லுற மாதிரி அன்னைக்கு என் ப்ரொபஸர் சேவியர் சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவுமில்லாம அந்த பீட்டர் பெரிய அரசியல்வாதி புள்ளை வேறயா அதுனால எல்லாத்தையும் மூடி மறச்சுட்டாங்களோன்னு நானே நெனச்சுக்கிட்டேன்.”
“ம்…இப்படி யோசிச்சு பாருங்க…”
“எப்படி?”
“பீட்டர் அரசியல்வாதி பையன் அப்படீங்கற விஷயத்தை ஏன் உங்க ப்ரொபஸர் யூஸ் பண்ணிருக்கக்கூடாது?”
“புரியலை ஜேம்ஸ்.
அவர் ஏன் அப்படி பீட்டர் பெயரை யூஸ் பண்ணணும்?
அதுவுமில்லாம அன்னைக்கு அவர உயிர் போற நிலைமைக்கு தள்ளியது யாரு?”
“அதோட உங்க கேள்விகளை நிப்பாட்டிடாதீங்க சக்தி.
அவர் ஏன் உங்களை கடைசியாக சந்திச்சதுக்கப்புறமா… விஷால் சொன்னதா நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட் படி ஒரு வாரம் உயிரோடு இருந்திருக்கார்?
எங்க இருந்திருக்கார்?
ஒரு வாரம் தான் இருந்தாரா?
இல்ல இன்னமும் இருக்காறா?”
“அய்யோ! இது என்ன புது குழப்பம்.”
“இல்ல நீங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க சக்தி.
அன்னைக்கு நைட் உங்களை மயானத்துக்கு வரவைத்து உங்களை பதற்றமாக்கி, பீட்டர் பின்னணியை உபயோகப்படுத்தி அவர் சொன்னதை எல்லாம் உங்களை நம்பி வைத்திருக்கக் கூடாது?”
“பட் வை?!
நீங்க சொன்னா மாதிரியே வச்சுக்கிட்டாலும்…
பின்ன ஏன் அவரோட அந்த பொக்கிஷத்தை என்கிட்ட எடுத்துக்க சொல்லணும்.
அவரே வச்சிருக்கலாமே!
அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவர் உயிரோடு இருந்திருந்தா இல்ல இன்னமும் உயிரோடு இருக்கார்ன்னா…
ஏன் அதை தேடி அவர் வரலை?”
“ம்…நவ் யூ ஆர் கம்மிங் டூ தி பாயிண்ட்.
இப்போவாவது சொல்லுங்க அந்த பொக்கிஷம் என்னது?
அதை அவர் சொன்ன இடத்துக்கு போய் எடுத்தீங்களா?
இப்போ அது உங்ககிட்ட தான் இருக்கா?”
“அது…அது வந்து…அது…”
“சக்தி நீங்க இந்த விஷயத்துல என்னை நம்பித்தான் ஆகணும்.
அப்போ தான் ஏதாவது நான் செய்ய முடியும்.
நீங்க அன்னைக்கு இரவு நடந்ததா சொன்ன கதைப்படி அல்லது உங்க ப்ரொஃபசர் உங்கிட்ட சொன்னது படி பீட்டர்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா…
அதுக்கு எவிடன்ஸ்?
ஏன்னா
நீங்க காணாம போனது போலவே!
அதைப் பத்தியும் எந்த நியூஸும் வெளிவரவே இல்லையே!
இதுலேந்தே தெரியலையா?
என்னை பொறுத்தவரை…
எனனோட யூகப் படி அன்னைக்கு உங்க காலேஜ் கடைசி நாள் முதல்
யாரோ…
எதுக்காகவோ…
உங்களை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த மர்ம நபர் யார்?
உங்களுக்கே தெரியாம நீங்க அந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ள மாட்டிட்டு இருக்கீங்க.”
“இல்ல…இல்ல…இல்ல…
அப்படி எந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ளேயும் நான் மாட்டிக்கவும் இல்ல.
அப்படி எல்லாம் மாட்டிக்கவும் மாட்டேன்.”
“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் சக்தி.
ரிலாக்ஸ்…
ஜேம்ஸ் சொன்னவற்றை எல்லாம் கேட்ட சக்தி நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிப்புக்குள்ளானாள்.
தொடர்வாள்…
ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் தனது படுக்கை அருகே இருந்த லைட் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு படுத்தாள் சக்தி. பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போல இருந்தாலும், அவற்றிற்கு பின் ஏதோ ஒரு வியூகம் பின்னப்பட்டு கொண்டே வருவதை போலவும் அவள் மனம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மனக்கண் முன் படம் போட்டு காட்டியதில், உறக்கம் வராமல் வலது புறம் இடது புறம் என புரண்டு புரண்டு படுத்தாள்.
அவ்வாறு தூக்கமின்றி புரளும் போது அவளுக்கு சட்டென மிஸ்ஸர்ஸ் டேவிட் மகன் பெயர் ஞாபகம் வந்தது. உடனே தனது மொபைலை எடுத்தாள். அதில் ஜேம்ஸிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தாள். மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். பின்பு
“அவன் தான் இவனா? அப்படின்னா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட்? ஐயய்யோ! யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகிட்டே போகுதே! ஆண்டவா அன்னைக்கு எனக்கு என்னதான் நடந்தது?”
என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள். அதே சிந்தனைகளில் மூழ்கியவள் முத்தேதுமின்றி குழப்பம் என்னும் முட்டு சந்தில் மோதி நின்றாள். யோசித்து யோசித்து அவளுக்கே தெரியாது உறக்கம் என்னும் யோக நிலையை அடைந்தாள்.
மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல ப்ளூ அவளருகே வந்து அவளை எழுப்பியது. ஆனால் இந்த முறை அவள் டூ மின்ட்ஸ் என்று டைம் கேட்கவில்லை. மாறாக விருட்டென எழுந்து கொண்டு ப்ளூவை பார்த்து
“அவனா இவன்?”
என்று கேட்டாள். அதை கேட்ட ப்ளூ அவளையே உற்றுப் பார்த்து
“எவனா! எவன்?”
என்று கேட்டது. ப்ளூவின் பதிலை கேட்டு சக்தி சலித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை பார்த்த ப்ளூ விடியற்காலையில் அவளின் சலிப்புக்கு காரணமறியாது விழித்தது. சக்தி வெளியே வந்து ஏதாவது சொல்வாள் என்றெண்ணி சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தது. ஆனால் அவள் வரவில்லை என்றதும் பாத்ரூம் அருகே சென்று, தான் கீழே செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.
சக்தியும் குளித்து ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். அதைப் பார்த்த ப்ளூ அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் ஒன்றுமில்லை என்ற பதிலை சொல்லிவிட்டு வழக்கமான ரெண்டு பிரட் டோஸ்ட் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
சக்தி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட ப்ளூ மெல்ல அவளருகே சென்று,
“தீ… தீ…
நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு எனக்கு தெரியுது.”
“சரி ஓகே! தெரிஞ்சுகிட்ட இல்ல. இப்போ என்ன அதுக்கு”
“இல்ல என் கிட்ட பகிர்ந்துக்குறதால உன் குழப்பத்துக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…ன்னா
என்கிட்ட சொல்லு நான் ஏதாவது சல்யூஷன் தர முடியுமா…ன்னு பார்க்கறேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ளூ.
ப்ளீஸ் லீவ் மி அலோன்.”
“ஓகே.
தென் இட்ஸ் அப் டூ யூ.
நான் வரேன்.”
“எங்க போற ப்ளூ.”
“இப்போ நீ தான் உன்னை தனியா விட சொன்ன…
அதுதான் நான் இங்கேந்து என்னோட சார்ஜிங் ஸ்டேஷனுக்கே போகலாம்னு கிளம்பிட்டேன்.”
“ம்…அதுவும் சரி தான்.
நானா கூப்பிடாத வரைக்கும் நீ இங்க வர வேண்டாம்.
அங்கேயே இரு ப்ளூ.
சரியா.”
“முன்னெல்லாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவ…
ஆனா இப்போ எல்லாம் என்னை போ போன்னு சொல்லுற!!”
“அது அப்படி இல்ல ப்ளூ.
எல்லாம் உன் நல்லதுக்கும்…
என்னோட நல்லதுக்கும் தான் அப்படி சொல்லறேன்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ப்ளூ.
நான் ஆல்ரெடி ஏதேதோ நினைச்சுக்கிட்டு ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன்.
ப்ளீஸ் டிரை டூ அன்டர்ஸ்டான்ட் மி.”
“அச்சோ! தீ.
உன்ன நல்லா அன்டர்ஸ்டான்ட் பண்ணிருக்கறதால தான் நான் உன்கிட்ட அப்படி கேட்டேன்.”
“புரியுது ப்ளூ.
ஆனா அதுக்கான எக்ஸ்பிளநேஷன் குடுக்குற நிலைமையில இப்போ நான் இல்ல.
உன்கிட்ட எப்போ சொல்லணும்னு எனக்கு தோணுதோ அப்போ நிச்சயம் உன்கிட்ட நானே வந்து சொல்லுவேன்.
ஓகே வா.”
“ம்…சரி தீ.
நான் பேஸ்மென்ட் போறேன்.
நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்.
பை.”
“குட் பாய் ப்ளூ.
ஐ லவ் யூ.
பை ஃபார் நவ்.”
என்று ப்ளூவை இறுக்க கட்டியணைத்துக் கொண்டு சக்தி கூறியதும். ப்ளூ அங்கிருந்து கிளம்பி சக்தி வீட்டு பேஸ்மென்ட்டில் இருக்கும் அதன் சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று செட்டில் ஆனது. இரவு சரியாக தூங்காத சக்தி, காலை உணவை அருந்தியதும் அப்படியே அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டே தனது மொபைலில் வந்த அவளது ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதிலளித்தாள். பின் அந்த சோஃபாவின் இருபுறமும் போடப்பட்டிருந்த சைட் டேபிளில், சக்தியின் தலைமாட்டில் இருந்த ஒரு ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தாள். அதில் அவள், நவீன் மற்றும் மிருதுளா இருந்தனர். அந்த புகைப்படம் போன வருடம் நவீனும் மிருதுளாவும் சக்தியை காண மெட்ஸ் வந்தபோது காத்தெட்ரெல் ஆஃப் செயின்ட் ஸ்டீஃபன் முன் நின்று எடுத்ததாகும். அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு
“அப்பா அம்மா எனக்கென்ன நடக்கறதுன்னே புரியலை.
நான் எந்த தப்பும் செய்யலை.
நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.
இருப்பேங்கள்.”
என்று கூறிக்கொண்டே மெல்ல கண் அசந்தளாள். சற்று நேரத்தில் அவள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் அவள் எழவில்லை. மீண்டும் ஒலித்தது. அது சக்தியின் உறக்கத்தை கலைத்தது. உடனே எழுந்து வேகமாக வீட்டின் கதவை திறந்தாள்.
“ஹாய் சக்தி.
என்ன காலையிலே தூங்கறீங்களா?
சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ!”
என்று கேட்டுக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை வீட்டிற்குள் வரச் சொல்லி, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமரச் சொன்ன சக்தி அங்கே அவள் உண்டும் குடித்தும் வைத்திருந்த தட்டு மற்றும் காபி கப்பை எடுத்து அடுப்படியில் வைத்துக் கொண்டே ஜேம்ஸிடம்
“ஜேம்ஸ் வாட் வுட் யூ லைக் டு ஹால்?
காபி, டீ ஆர் ஜூஸ்?”
“காபி வுட் டூ சக்தி.”
“ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”
என்று கூறியது போலவே இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு ட்ரேயில் ஒரு கப் காஃபி மற்றும் குக்கீஸுடன் வந்த சக்தி, அதை ஜேம்ஸ் முன் வைத்து,
” ம்…எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.”
என்றாள். ஜேம்ஸும் வலது கையில் ஒரு குக்கீஸையும் இடது கையில் காபி கப்பையும் எடுத்துக் கொண்டே
“உங்களுக்கு?”
“இப்போ தான் நான் குடிச்சேன்.
நீங்க வந்த போ தான் குடிச்ச காபி கப் அன்ட் டோஸ்ட் சாப்ட்ட ப்ளேட் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே போனேன்.
நீங்க சாப்பிடுங்க.”
“ஓகே.
ம்…காஃபி இஸ் குட்.
குக்கீஸ் டூ.”
“தாங்க்ஸ் ஜேம்ஸ்.
நேத்து நைட் உங்க மெஸேஜ் படிச்சதுலேந்து எனக்கு தூக்கமே வரலை.
சொல்லப் போனா நான் நேத்து சரியாவே தூங்கலை.
அதுதான் இன்னைக்கு காலையிலேயே சோஃப்வுல சும்மா படுத்தேன்.
அப்படியே தூங்கிட்டேன்.”
“இல்ல சக்தி.
சில விஷயங்களை மஸேஜஸ் ல விவரிக்க முடியாது.
நேருல தான் சொல்ல முடியும்.
அப்படி சொல்லறது தான் நல்லதும் கூட.
அதுனால தான் நான் இப்போ வந்தேன்.
அதுவுமில்லாம நானும் நேத்து நைட் புல்லா சரியாவே தூங்கலன்னு வச்சுக்கோங்க!!”
“ஏன் ? இந்த கேஸ் பத்தி ரொம்ப நேரம் ஏதாவது யோசனையில இருந்தேங்களா?
இருக்கலாம்! இருந்திருக்கலாம் தான்!
ஏன்னா என்னை சுத்தி நடக்கறது என்னனென்னே தெரியாத எனக்கே தூக்கம் வராதப்போ…
அதை டீல் பண்ணற உங்களுக்கு எப்படி இருக்கும்.
புரியறது.”
“அச்சச்சோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.
எல்லாம் நம்ம ருத்ராவால தாங்க.”
“என்னது ருத்ராவாலையா?”
“இல்ல இல்ல…
இந்த கேஸுக்கும் அவங்களுக்கும் எந்த கனக்ஷெனும் இல்லைங்கறது எனக்கு ஊர்ஜிதமாகிருச்சு.
ஏன்னா அவங்க வாங்கினதா சொன்ன அந்த ஜூஸ் ஷாப் அன்ட் அவங்கள விசாரிச்சு பார்த்ததுன்னு…
எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்ததுல தெரிஞ்சுது.”
“அப்புறம் ஏன் ருத்ராவாலன்னு சொன்னீங்க?”
“அது வந்து…
அவங்க நேத்து கால் பண்ணினாங்க.
அவங்க என்னங்க படு ஒப்பன் டைப் ஆ இருக்காங்க.
படபடபடன்னு அவங்க கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்ன்னு எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிட்டங்க.”
“அவ அப்படி தான்.
கொஞ்சம் வெகுளி வேற.
அவளோட இந்த குணத்த நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க.
அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.
ஆனாலும் அவ கொஞ்சம் கூட தன்ன மாத்திக்கவே இல்ல.
ஆனா அடிப்படைல அவ தங்கமான பொண்ணு.
அதுனால தான் நீங்க என்கிட்ட அன்னைக்கு அவளை விசாரிக்கணும்ன்னு சொன்னப்போ நான் அவ செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன்.
ஆனாலும் வசுவோட பேச்சு அன்ட் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்னையும் அவள சந்தேகப்பட வச்சுடுத்து.
என்ன செய்ய.
இப்போ நீங்க சொன்னதும் அவள்ட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்னு தோணறது.”
“உண்மை தான்.
அவங்க ரொம்பவே வெகுளியா இருக்காங்க.
ஆனா அவங்க கிட்ட பேசினது லேந்து அவங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது.”
“ப்ளீஸ் ஜேம்ஸ்.
அவளோட நல்ல ஃபிரெண்டா சொல்லறேன்.
உங்களுக்கு அவளை பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காட்டாலும் சரி…
எதுவானாலும் அவ கிட்ட சொல்லிடுங்க.
இல்லாட்டி அவ பாட்டுக்கு மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிடுவா.
இன்நேரம் ஆரம்பிச்சிருப்பா.”
“இல்ல இல்ல என்னோட விருப்பத்தை நேத்தே சொல்லிட்டேன்.”
“பரவாயில்லையே கண்டதும் காதல் ஆ.
பேஷ் பேஷ்.
அப்போ உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எங்க கல்யாணத்தோட சேர்த்து நடந்திடுவோம்.
என்ன சொல்லுறீங்க?”
“எனக்கு ஓகே.
ஆனா ஒரே ஒரு கன்டீஷன்.”
“கன்டீஷனா!
அது என்ன?”
“உங்களோட இந்த கேஸ் முடிச்சிட்டு தான் கல்யாணம்.”
“டன். டீல்.
சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயம் ஏதோ பெரிய லெவல்ன்னு எல்லாம் எழுதி இருந்தீங்களே…
அது என்ன?
அவங்க வீட்டுக்கு பின் வாசல் வழியா நேத்து வந்துட்டு போனது யாரு?
ஏன் வந்தாங்க?”
“பாருங்க…
அதை பத்தி பேச வந்துட்டு…
நான் பாட்டுக்கு என் கதையை பேசிட்டே இருக்கேன்.”
“உங்க கதை மட்டுமில்ல.
என் தோழியோட கதையும் தான்.
அதுனால மன்னிப்போம் மறப்போம்.”
“அப்பா எவ்வளோ பெரிய மனசுங்க உங்களுக்கு.”
“நன்றி.
சரி இப்போ சொல்லுங்க”
“உங்க பக்கத்து வீட்டு பெண் அந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் அவங்களோட புருஷன் மிஸ்டர் டேவிட் அன்ட் அவங்களோட முன்னாள் புருஷன்னு எல்லாரோட பேக்ரௌண்ட் செக் பண்ணினதுல…
அவங்க முன்னாள் புருஷன் வேற யாருமில்லை இந்த நாட்டோட பெரும் அரசியல் புள்ளி மிஸ்டர் சார்ல்ஸ் டிக்சன்னு தெரிய வந்திருக்கு.”
“ஓ! மை காட்!
நான் அவர பத்தி நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்.
ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட் ஒரு நாள் கூட அவர் பத்தி சொன்னதில்லை.”
“எப்படி சொல்லுவாங்க சக்தி.
அந்த ஆளு பண்ணிண செயல் அப்படி.”
“அப்படி என்ன பண்ணிருக்காரு?”
“மிஸ்ஸர்ஸ் டேவிட்டை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்காருன்னா பாருங்களேன்.”
“மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
அவங்க தங்கமான மனுஷியாச்சே!
அவங்கள ஏன்?
எதுக்கு அப்படி செய்ய முயற்சி செஞ்சிருக்காரு?”
“அதை நான் சொல்லறேன்.
அதுக்கு முன்னாடி நீங்க என் கிட்ட ஏதோ சொல்லணும்னு மெஸேஜ் ல குறிப்பிட்டிருந்தீங்களே!
அது என்னன்னு சொல்லுங்களேன்.”
“அது…அது வந்து…”
“ஏன் இழுக்குறீங்க சக்தி?
எதுவானாலும் சொல்லுங்க.”
“இல்ல அது இந்த கேஸுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியலை.
ஆனாலும் அதை உங்ககிட்ட சொல்லிட சொல்லி விஷால் சொன்னான்.”
“சரி அப்படி என்ன அந்த விஷயம்ன்னு சொல்லுங்க.
அது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்டதா இல்ல சம்பந்தபடுமான்னு எல்லாம் நான் தீர்மானிச்சுக்கிறேன்.”
என்று ஜேம்ஸ் கூறியதும் சக்தி படபடவென அவர்களின் காலேஜ் இறுதி நாளில் நடந்த சம்பவங்களை, விஷால் பிரப்போஸ் பண்ணியதில் இருந்து ப்ரொஃபசர் சேவியரை பார்த்து பின் அங்கிருந்து கிளம்பி வந்தது வரைக்கும் சொல்லி முடித்தாள். அவளை இடைமறித்து பேசாது பொறுமையாக அனைத்தையும் கேட்ட ஜேம்ஸ் அவளிடம்,
“அப்போ…
அந்த ப்ரொஃபசர் சேவியர் இறந்துட்டாறா?”
“அப்படி தான் நான் நினைச்சு அங்கேந்து வேகவேகமா வந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே இறந்துட்டாறா இல்லையான்னு எனக்கு தெரியாது.”
“சரி அவர் இறந்துட்டார்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?”
“பேசிட்டே இருந்தவரு சட்டுன்னு தலையை குனிந்துட்டார்.
நானும் அவரை எழுப்பிப் பார்த்தேன் ஆனா அவர் எழுந்துக்கல.
அதுனால இறந்துட்டார்ன்னு நினைச்சுட்டேன்.”
“அவர் மயக்கமடைந்திருக்கலாம் இல்லையா?
நீங்க அவர் ஹார்ட் பீட் ஆர் பல்ஸ் செக் பண்ணிருக்கலாமே!”
“செய்திருக்கலாம் தான்.
இப்போன்னா நிச்சயம் அதெல்லாம் செய்திருப்பேன்.
ஆனா அன்னைக்கு நான் இருந்த நிலைமை அப்படி.
அர்த்த ராத்திரி…
மயானம் வேற…
பயத்துல அங்கேந்து எப்படியாவது கிளம்பிடணும்ன்னு தான் தோணிச்சு.
நீங்க சொன்னா மாதிரி எல்லாம் செக் பண்ண தோணவே இல்ல.
என்ன பண்ண?”
“ம்…
உங்க சிட்டுவேஷன் அப்படி.
புரியுது…”
“அப்படின்னா அவர் உயிரோட தான் இருக்காறா?”
“இல்ல இல்ல…
இருக்கலாம்.
இல்லாமையும் இருக்கலாம்.”
“இல்லையே! இருங்க…இருங்க
இப்போ தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது…
வி கிட்ட… இதை எல்லாம் சொன்னப்போ…
அவன் கூட ப்ரொபஸர் சேவியர் ஏதோ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்னு சொன்னான்.
அதுவும் நாங்க காலேஜ் முடிச்சு வெளிய வந்த ஒரு வாரத்துலன்னு சொன்னதா ஞாபகம்…
அப்படிப் பார்த்தா அவரை நான் சந்திச்சதுக்கு அப்புறமா ஒரு வாரம் உயிரோட இருந்திருக்காறா?”
“ஓ! அப்படியா!
சரி அதை விஷால் கிட்ட விசாரிச்சுக்கறேன்.
அந்த ப்ரொபஸர் சொன்ன அந்த பொக்கிஷம் இருந்த இடத்துக்கு நீங்க போய் பார்த்தீங்களா?
அது என்னது?”
“அது வந்து…அது…வந்து…”
“ஏன் சக்தி தயங்குறீங்க?”
என்று ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கிய சக்தி மனதிற்குள் அதை ஜேம்ஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பட்டிமன்றம் நடந்தேறியது.
பொக்கிஷம் பற்றிய ரகசியத்தை சொல்லலாமா! வேண்டாமா! என்ற மனப் பட்டிமன்றத்தின் முடிவைத் தேடி…
தொடர்வாள்…
அத்தியாயம் 31: அழைப்பு-இணைப்பு
ஜேம்ஸின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் டேவிட் வீட்டு விசாரணையில் முழுமனதோடு அவனால் ஈடுபட முடியாது போனது. அவன் உடனே அங்கு இருந்த அவன் டிப்பார்ட்மென்ட் ஆட்களிடம் சில விவரங்களை சேகரித்து அவனது மொபைலுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சக்தியும் அவள் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் இட்டாள். வீட்டினுள் நுழைந்த சக்தி முன், சுட சுட ஒரு கப் காபியுடன் வந்து நின்ற ப்ளூ, அதை அவளிடம் கொடுத்தது. அவளும் காபியை எடுத்துக் கொண்டு ப்ளூவிடம் நன்றி கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது ப்ளூ அவளருகே சென்று
சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலுக்கு சென்றாள்?
அவளை பார்க்க வந்த நபர் யார்?
ஏன் டேவிட் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது?
என்று பல கேள்விகளை கேட்டு பதிலுக்காக சக்தியை பார்த்து நின்றிருந்தது.
ப்ளூ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டே வரிகளில் பதிலளித்தாள்.
“தோணிச்சு போனேன். கதவு தொறந்து இருந்துது…சோ… போலிஸை வர வச்சேன்.”
என்று கூறி குடித்த காபி கப்பை அங்கிருந்த காஃபி டேபிளில் வைத்து விட்டு தனது அறைக்கு செல்ல எழுந்தாள். அப்போது ப்ளூ மீண்டும் அவளிடம்,
“மிஸ்ஸர்ஸ் டேவிட் அவங்க வீட்டுல இல்லையே! அப்புறம் எப்படி கதவு தொறந்திருந்தது?”
“அதை கண்டு பிடிக்க தான் போலிஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவா கண்டுபிடிச்சுப்பா.”
“ஸோ… உன் கூட பேசிட்டு இருந்தது போலிஸா?”
“ஆமாம். சரி ப்ளூ நான் என் ரூமுக்கு போறேன். பை. ஐ வில் கம் ஃபார் டின்னர் அட் எய்ட். ஓகே.”
“ஓகே தீ. டேக் ரெஸ்ட்”
என்று ப்ளூ கூறியதும் சக்தி அவளது அறை கதவை மூடினாள். பின் உடைகளை மாற்றி ஃபிரெஷ் ஆனா பின் படுக்கையில் படுத்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து விஷாலுக்கு கால் செய்தாள். ஆனால் விஷால் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள். கால் வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. உடனே தான் தான் அழைப்பதாகவும் அன்று நடந்த சிலவற்றை பற்றி பேச வேண்டுமென்றும், டைம் கிடைக்கும் போது திருப்பி அழைக்க சொல்லிவிட்டு வாய்ஸ் மெயிலை துண்டித்தாள். பின்பு சில ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டு அப்படியே சற்று அசந்து தூங்கிப் போனாள்.
அவள் வலதுபுறமாக திரும்பி படுத்திருந்த மெத்தையில் அவளின் இடுப்புக்கு அடியில் புஸ்… புஸ்…. புஸென அவளின் மொபைல் அதிர்ந்ததில் விருட்டென எழுந்து மொபைலை துழாவி தேடியெடுத்துப் பார்த்தாள். அவள் எதிர் பார்த்த கால் விஷால் இடமிருந்து ஆனால் அழைப்பு வந்ததோ அவள் பெற்றோரிடமிருந்து. கண்களை நன்றாக கசக்கி தூக்கத்தை கலைத்து கொண்டே அவளின் பெற்றோரை மொபைலில் வீடியோ காலில் அழைத்தாள். அவளின் அழைப்புக்காக காத்திருந்த நவீனம் மிருதுளாவும் உடனே வீடியோ காலில் இணைந்தனர்.
வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும். கல்யாண தலைப்பை வாசிக்க ஆரம்பித்தனர் நவீன் மற்றும் மிருதுளா. அதை கேட்ட சக்தி அவர்களிடம்
“அப்பா அன்ட் அம்மா…கல்யாண விஷயத்துல ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களுக்கு சொல்லுவேன். சோ…நீங்க அதுக்காக கால் பண்ணி கேட்க வேண்டாம். ஓகே வா.”
“சரி மா. இனி நீயா சொல்லற வரைக்கும் நாங்க அதை பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம். போறுமா.”
“தாங்க்ஸ் மா.”
“அப்பறம் உங்க ஆஃபிஸ் ல, உன் பக்கத்து வீட்டு அம்மா மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுல எல்லாம் என்ன விஷேஷங்கள்.”
“ஆங்! ஏன் கேட்கற அப்பா? உனக்கு பேச வேறெதுவும் இல்லையா “
“பின்ன என்ன நீ! நாங்க உன் கிட்ட வேற எதைப் பத்தி தான் பேசறது? உன் கல்யாணத்த பத்தி பேசக்கூடாதூன்னுட்ட!”
“அப்பா! ஓகே ஓகே! ஆஃபிஸ் வேலை எல்லாம் நல்லா போறது. அப்புறம் நம்ம பக்கத்தாத்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் ரெண்டு பேருமே எங்கயோ ஊருக்கு போயிருக்கா.”
“இன்னைக்கு அவங்க வீட்டு கதவு கூட திறந்து கிடந்தது மிஸ்டர் நவீன். அப்போ நம்ம தீ தான் போலிஸுக்கு கால் செஞ்சு அவங்களை வர வச்சு இப்போ விசாரணை போயிட்டிருக்கு.”
உடனே காலை ம்யூட் செய்த சக்தி ப்ளூவைப் பார்த்து
“ஹே ப்ளூ இதை ஏன் இப்போ அவங்க கிட்ட சொன்ன?”
“ஏன் சொன்னா என்ன தீ?”
“அவங்க பயந்துட மாட்டாங்களா ப்ளூ!”
“ஹலோ! ஹலோ தீ! நீ இருக்கயா?”
“நவீ… ஒரு வேளை நம்ம இன்டர்நெட் கட் ஆகியிருக்கோ என்னவோ.”
ஃபோனை அன்மியூட் செய்த சக்தி
“ஆங்… அப்பா…அம்மா என் சைட்ல தான் ஏதோ ப்ராப்ளம். இப்போ சரி ஆயிடுத்து.”
“சரி கால் கட் ஆகறதுக்கு முன்னாடி ப்ளூ ஏதேதோ சொல்லித்தே! அங்க என்ன ஆச்சு? மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் அவ ஆத்துக்காரரும் நன்னா இருக்காளோனோ!”
“அதுதானே! அப்படி கேளுங்கோ நவீ. இவ என்னடான்னா அவா ஊருக்கு போயிருக்கான்னு சொன்னா… ஆனா ப்ளூ என்னடான்னா…”
“அம்மா! அம்மா! உடனே உன்னோட கற்பனா சக்தியை எல்லாம் இங்க கொண்டு வந்து உன்னையும் குழப்பி அப்பாவையும் குழப்பிடாதமா.”
“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்லு.”
என்று மிருதுளா கேட்டதும் சக்தி அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்ததில் இருந்து அப்போது அவர்களுடன் போனில் பேசக் கொண்டிருந்தது வரை கூறி முடித்தாள். அதை முழுவதுமாக கேட்ட நவீன் மிருதுளா தம்பதியினர் அதிர்ச்சிக்குள்ளாகி ஏதும் பேசாது இருந்தனர். அப்போது சக்தி அவர்களிடம்
“அப்பா…அம்மா… இருக்கேங்களா? இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு?”
” ம்…இருக்கோம் இருக்கோம். ஏன் மா தீ…”
“சொல்லுப்பா”
“அந்த ஊரு நல்ல சேஃபான ஊருன்னு இல்ல நெனச்சேன்!”
“இப்போ என்ன ஆச்சுப்பா?”
“இப்படி எல்லாம் நடக்கறதே!”
“அப்பா…அது ஏன் நடந்ததுன்னு போலிஸ் விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுவாப்பா. சோ கவலை படாதே.”
“அது சரி டி. ஆனா நீ எப்படி போலிஸுக்கெல்லாம் ஃபோன் பண்ணி வர சொன்ன?”
“ஏன் மா. நான் சொல்லக் கூடாதுன்னு மெட்ஸ் கவர்மென்ட் ஏதாவது ரூல்ஸ் போட்டிருக்கா என்ன?”
“அதுக்கில்லடி…நாளை பின்ன அந்த திருடனுக்கு நீ தான் போலிஸுக்கு போனன்னு தெரிஞ்சுதுன்னா?”
“அம்மா கவலையே வேண்டாம் அந்த போலிஸ்காரர் ஜேம்ஸ் எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான்.”
“என்னது! அது எப்படி போலிஸ்காரரை உனக்கு தெரிய வந்தது.”
பேச்சுவாக்கில் ஜேம்ஸ் பற்றி சக்தி கூறியதும் அதைப் பிடித்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். தான் தேவையில்லாமல் ஜேம்ஸ் பெயரை கூறிவிட்டோமே என்று எண்ணிய சக்தி சட்டென
“ஊப்ஸ்!…”
என்று தனக்குத் தானே சொல்லியதை கேட்ட நவீன் அவளிடம்
“ஹே தீ! நீ ஏதாவது எங்க கிட்டேந்து மறைக்கறீயா?”
“ஏன் பா அப்படி கேட்கற?”
“இல்ல இவ்வளவு வருஷமா நீ அங்க வேலைப் பாக்கற! ஆனா இப்போ நீ அந்த விஷாலை பார்க்க பாரிஸ் போனது லேந்து… அங்க என்ன நடக்கறதுன்னே எங்களுக்கு தெரிய மாட்டேங்கறது. ஏதேதோ நடக்கறதாகவும் நாங்க சங்கட படக்கூடாதூன்னுட்டு நீ எங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறதாகவும் சதா சர்வநேரமும் உன் அம்மாவோட புலம்பலை தான் கேட்டுண்டே இருக்கேன். இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா…அவ சொல்லறதுலேயும் ஏதோ இருக்கறா மாதிரின்னா இருக்கு!”
“அச்சோ! அப்பா. ஜேம்ஸ் என்னோடு புது ஃப்ரெண்டுப்பா.”
“அது எப்படி போலிஸ்காரர் உனக்கு ஃப்ரெண்ட் ஆனார்? நீ எதுக்காவது அவர் கிட்ட போயிருந்தா தானே உனக்கு அவரை தெரிய வாய்ப்பிருக்கு.”
“அது தானே! உன் அம்மா சொல்லறதும் சரிதானே!”
“சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் மா. ஆனா நான் அவர்கிட்ட எதுக்கும் போகலை.”
“பின்ன எப்படி டி உனக்கு அவர் ஃப்ரெண்ட் ஆனார்?!”
“அம்மா…என்னை பேச விடுமா. அப்போ தானே நான் சொல்ல முடியும்.”
“ம்…சரி சொல்லு.”
“நீ முந்தி மாதிரி இல்லமா. உன் பொறுமை எல்லாம் எங்க போச்சு?”
“ம்…அதை எல்லாம் தோச்சு காயப்போட்டிருக்கேன் போதுமா.”
“ஹீ ஹீ ஹீ! உன் ஜோக்குக்கு சிரிச்சுட்டேன் ஓகே வா. சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட். ஜேம்ஸ் விஷாலோட ஃப்ரெண்ட்… சோ… அவர் எனக்கும் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்”
“இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே தீ மா”
“அப்பா எங்க நீங்க ரெண்டு பேரும் என்னை சொல்ல விட்டேங்கள்.”
“அவர் நம்ம ஊர் காரறா? இல்ல அந்த ஊர் காரறா?”
“அப்பா…அவர் நம்ம ஊர் காரர் ஆனா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். சோ… 95% இந்த ஊர் காரர் தான்.”
“சரி சரி எதுவா இருந்தா என்ன…எதுக்கும் நீ கொஞ்சம் அந்த போலிஸ் காரர்ட்டேந்து தள்ளியே இரு.”
“ஓகே மா. சரி நான் வச்சுடட்டுமா. வி கால் பண்ணறான்.”
“ஓகே டா. டேக் கேர். பை”
“பை ப்பா.”
“நாங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோடி.”
“சரி மா. பை பை.”
“ம்…சரி பை.”
என்று பெற்றோரின் அழைப்பை துண்டித்து விட்டு விஷாலின் அழைப்பை ஏற்ற சக்தி அவனிடம் அன்று நடந்த விவரங்களை கூறி முடித்தாள். அவள் கூறியதனைத்தையும் கேட்டு முடித்த விஷால் சக்தியிடம்,
“தீ… ஜேம்ஸ் ஏன் அவன் கிட்டேந்து எதையாவது மறைக்கிறியான்னு கேட்கணும்?”
“இது எல்லா போலிஸ் காராலும் கேட்கற வழக்கமான கேள்வி தானே வி.”
“தீ…நீ ஒண்ணு கவனிச்சியா?”
“என்னது வி”
“ஜேம்ஸ் கிட்ட நாம காலேஜ் லாஸ்ட் டே நடந்த விவரங்களை சொல்லாம விட்டுட்டோம்.”
“என்னது நீ என்னை ப்ரப்போஸ் பண்ணிணதையா?”
“இல்ல தீ. அதுக்கப்புறம் நீ வெளிய போனது. அந்த ப்ரொபஸர் சேவியரை பார்த்தது. உன் மொபைலை காரில் தொலைத்தது. இதெல்லாம் நீ ஜேம்ஸ் கிட்ட சொல்லலையே!”
“ஆனா…அதெல்லாம் எப்பவோ நடந்தது வி. அதை ஏன் நான் ஜேம்ஸ் கிட்ட இப்போ சொல்லணும்? அதுவுமில்லாம ப்ரொபஸர் இன்னும் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாது.”
“அதுனால என்ன தீ. எனக்கென்னவோ நீ ஜேம்ஸ் கிட்ட அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லிருக்கணும்ன்னு தோணறது.”
“ஆனா எனக்கென்னவோ அன்னைக்கு நடந்ததுக்கும் இப்போ நடக்கறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு தான் தோணறது.”
“எதுக்கும் அதை அவன்ட்ட சொல்லிட்டா அவனும் ஏதாவது லிங்க் இருக்கான்னு விசாரிப்பான் இல்ல தீ.”
“ம்…அதை பத்தி விசாரிக்கணும்னா ஒண்ணு அவர் ப்ரொபஸர் சேவிரை மீட் பண்ணணும்… இல்லாட்டி… அந்த பீட்டரை மீட் பண்ணணும். இதுல ப்ரொபஸர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாது. அந்த பீட்டர் எங்க இருக்கான்னோ இல்ல இருக்கானா இல்லையான்னே தெரியாது. எப்படி? எதை? வச்சு ஜேம்ஸ் லிங்க் பண்ணுவார்?”
“ஏய் தீ! தட் இஸ் ஹிஸ் ஜாப். யார் கண்டா இதுவே கூட அவனுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல லீட் கிடைக்க வாய்ப்பா அமையலாம் இல்ல.”
“ம்…சரி நான் இப்போ என்ன பண்ணனும்?”
“நாளைக்கு மொதோ வேலையா நீ ஜேம்ஸுக்கு கால் செஞ்சு நடந்ததை அவன்கிட்ட சொல்லிடு.”
“ஓகே. டன்.”
“என்ன தீ இது! நாம கல்யாணம் பண்ணிக்க போறவா மாதிரியா பேசிக்கறோம். ஏதோ டிடெக்டிவ்ஸ் டிஸ்கஷன் மாதிரின்னா இருக்கு.”
“ஹா…ஹா…ஹா… அப்படின்னா நான் நான்சி அன்ட் நீ ஷெர்லாக் ஓகே வா.”
“விளையாடாதே தீ.”
“சரி சரி…நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசினியா? நான் எப்போ அவாள்ட்ட பேசறது?”
“ம்... நான் பேசினேன்.
நான் டே ஆஃப்டர் டுமாரோ மெட்ஸ் வரேன் இல்லையா…அப்போ நீயும் அவாள்ட்ட பேசலாம். ஓகே வா.”
“டபுள் ஓகே.
சரி சரி ரொம்ப நேரமாயிடுத்து வி.
நான் காலை கட் பண்ணட்டும்மா?”
“ம்… அதுக்குள்ளேயே வா.”
“அதுதான் நாளன்னைக்கு நீ இங்க வரப்போறயே பின்ன என்ன. அப்போ பேச மிச்சம் மீதி ஏதாவது வை. இப்போ பை.”
“சரி சரி உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்கறது.”
“எல்லாத்தையும்… கல்யாணத்துக்கு அப்புறமா நீ எதிர்பார்க்காததையும்…”
“ஆமாம் இப்படி எல்லாம் பேசிட்டு வை. அப்புறம் எங்கேந்து நான் தூங்க.
சரி சரி பை ஃபார் நவ்”
என்று விஷால் கூறியதும் அழைப்பை துண்டித்தாள் சக்தி. பின் சற்று நேரம் அவனையும் அவன் கடைசியாக கூறியதையும் மனதில் அசைப்போட்ட சக்தி புன்னகைத்துக் கொண்டே மொபைலை பார்த்தாள். அதில் ஜேம்ஸிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள். உடனே அதை திறந்து படித்தாள். அதில் மிஸ்ஸர்ஸ் டேவிட் பற்றி விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாகவும், அதைப் பற்றி டிஸ்கஸ் செய்யவும், அவர்கள் வீட்டிற்குள் வந்தது யார் என்ற விவரங்களை
கூறவும், மறுநாள் காலை அவள் வீட்டிற்கு வருவதாகவும், அவள் வீட்டில் இருப்பாளா என்றும் ஜேம்ஸ் கேட்டிருந்தான்.
அதைப் படித்ததும் சக்தி, தான் வீட்டில் இருப்பாள் என்றும் தனக்கும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாராளமாக வரலாம் என்றும் ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தியில் அழைப்பு விடுத்தாள்.
உண்மையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் யார்?,
ஜேம்ஸின் அந்த ஒரு கேள்வி…,
சக்தி ஜேம்ஸிடம் கூற தவறியதாக விஷால் சுட்டிக்காட்டிய விஷயம்,
காலேஜ் கடைசி நாள் நடந்த சம்பவங்கள்,
சக்தியின் அந்த மர்ம இரவு சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில்…
தொடர்வாள்….
காரை நிறுத்திவிட்டு அன்று ஆஃபிஸிற்கு வந்து ஜேம்ஸ் சொன்ன விஷயங்கள், சிசிடிவி விவரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் அந்த டிரக் மற்றும் ஜான் ஆகிய விஷயங்களை மனமெனும் சிந்தனை குட்டையில் போட்டு குழப்பி, மூழ்கி மெல்ல அதில் தெளிவை தேடிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து சென்றவளுக்கு சட்டென பக்கத்து வீட்டு திண்ணையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் அமர்ந்து அவளைப் பார்த்து கை அசைப்பது போல தோன்றியதும் குழப்பத்தில் இருந்த அவளின் முகம் பிரகாசமானது.
உடனே அவர் அருகே சென்றாள் சக்தி. ஆனால் அங்கு சென்றவள் வெறிச்சோடி கிடந்த திண்ணையைப் பார்த்ததும் கனவா! என்று தனக்குத்தானே கூறிக்கொண்டே அவள் வீட்டுக்கு செல்ல திரும்பினாள். அப்போது மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் அவளுக்கு கேட்டது. சட்டென திரும்பி அவர் வீட்டின் கதவுக்கு முன் சென்று கதவை தட்டினாள். பதிலேதும் இல்லாததால் அவர் வீட்டின் வலது புறம் தோட்டம் வழியாக சென்று அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க முயன்றால் ஆனால் அவளுக்கு ஒன்றும் சரிவர தெரியவில்லை. உடனே வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் மெல்ல நடந்துக் கொண்டே வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள். வீட்டின் பின் பக்க கதவு பாதியாக திறந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி கதவின் அருகே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை சொல்லி அழைத்தாள். அதற்கும் பதிலேதும் வரவில்லை.
சற்றே குழப்பமடைந்த சக்தி. மீண்டும் ஒருமுறை மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை உறக்க சொல்லி அழைத்தார். அப்போதும் பதில் வரவில்லை என்றதும் செய்வதறியாது சற்று நேரம் தோட்டத்திலேயே அங்குமிங்குமாக பரிதவித்து நடந்தாள். பின் ஜேம்ஸுக்கு கால் செய்து விவரங்களை கூறி அவனை அங்கு வரச் சொன்னாள்.
ஜேம்ஸும் வருவதாக கூறி ஃபோனை வைத்தான். சக்தி அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுத் தோட்டத்திலேயே நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது சக்தியின் அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ப்ளூ மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் சக்தி நிற்பது போல் தோன்ற, உடனே அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நன்றாக பார்த்தது. அது சக்தியே தான் என்று தெரிந்ததும் மெல்ல ஜன்னலின் கண்ணாடி கதவைத் திறந்து சக்தியை அழைத்தது. அப்போது சக்தியின் மொபைல் ஒலிக்க உடனே அவள் அதை எடுத்து பேசிக் கொண்டே அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்றாள்.
சக்திக்கு கால் வந்ததும் அவளை அழைக்க இருந்த ப்ளூ கப்சிப் ஆனது. ஆனால் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டே சக்தி வீட்டு ஹாலுக்கு வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு முன் வாசலை பார்த்தது.
அங்கே சக்தி யாரோ ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ப்ளூ, சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்திற்கு சென்றாள் என்ற சிந்தனையிலிருந்து வெளியே வந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது.
மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு வாசலில் நிற்பதாக ஜேம்ஸ் கால் செய்ததால் சக்தி அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்று ஜேம்ஸை வரவேற்று நடந்ததை மீண்டும் ஒரு முறை விளக்கினாள். இருவரும் பேசிக்கொண்டே டேவிட் வீட்டு பின் பக்கம் சென்றதும் சக்தி திறந்திருந்த கதவை ஜேம்ஸிடம் காட்டினாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் அவளிடம்,
“நீங்க உள்ள போகலை இல்ல!”
“இல்ல ஜேம்ஸ். எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது அதுனால தான் உடனே உங்களை கூப்பிட்டேன்.”
“இங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?
இல்ல அவங்க இங்க இருந்த போ அவங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க?
அவங்க இந்த வீட்டுல எவ்வளவு வருஷமா இருக்காங்க?”
“இதோ இது தான் என் வீடு ஜேம்ஸ்.”
“ஓ! ஓகே!”
“நான் ருத்ராவை பிரிஞ்சு வீடு தேடிட்டிருந்தப்போ எனக்கு பிடிச்ச,
என் பட்ஜெட்க்கு கிடைச்ச வீடு இதுதான்.
நான் இங்க குடி வந்ததுலேந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் ஃபேமிலி இங்க தான் இருக்காங்க.
அவங்க கிட்ட பேசின போது தான் தெரிய வந்தது அவங்க இங்க இந்த வீட்டை வாங்கி இங்க ஷிப்ட் செஞ்சு பத்து வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு. நான் இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷமாச்சு.
சோ எப்படி பார்த்தாலும் அவங்க இங்க ஒரு பன்னிரண்டு வருஷமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.”
“ஓ! ஓகே! அவங்க தனியா வா இருந்தாங்க?”
“இல்ல ஜேம்ஸ்.
அவங்க ஹஸ்பண்ட் மிஸ்டர் டேவிட்டும் அவங்க கூட இருந்தார்.
அதுமட்டும் இல்லாம அவங்க வீட்டுக்கு தினமும் ஜான்னு ஒரு பையன் வேலைக்கு வருவான்.
அவங்க ஊருக்கு போன விஷயத்தை கூட ஒரு நாள் இங்க இருந்த அந்த ஜான் தான் எனக்கு சொன்னான்.
இப்போ கூட நான் அவன் தான் இப்படி கதவ தொறந்து போட்டுட்டு உள்ள இருக்கான்னு நினைச்சேன்.
ஆனா அவனும் உள்ள இருக்கறா மாதிரி தெரியலை.”
“அவங்க இப்படி அடிக்கடி ஊருக்கு போவாங்களா?”
“நான் இங்க குடி வந்ததுலேந்து அவங்க வீட்டை விட்டு வேற எங்கேயுமே போனதில்லை.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் இந்த தெருவுல வாங்கிங் போவாங்க.
அதுவும் மிஸ்ஸர்ஸ் டேவிட் மட்டும் தான் போவாங்க.”
“என்ன சக்தி உங்களுக்கும் ஜான்ங்கற பேருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல?”
“ஏன் அப்படி சொல்லுறீங்க ஜேம்ஸ்?”
“இன்னைக்கு காலையிலேந்து இந்த பெயர் தானே ஆஃபிஸுலேந்து வீடு வரைக்கும் தொடர்ந்துட்டே வருது.
அது தான் அப்படி சொன்னேன்.”
“ம்…ஆமாம் இல்ல.!”
“ஆமாம் ஆ இல்லையா!”
“ஆமாம் ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.”
“சரி அவங்க பசங்க எல்லாம்!”
“அவங்களுக்கும் டேவிட்டுக்கும் குழந்தைகள் இல்லை ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு ஒரு பையன் இருக்கார்ன்னு சொல்லிருக்காங்க. அவரு பேரு கூட பீட்டர்ன்னு சொன்னாங்க.”
“நீங்க அவங்க பையன் பீட்டரை பாத்திருக்கீங்களா?
அவரு கூட பேசியிருக்கீங்களா?”
“இல்லவே இல்லை?”
“ஏன் சக்தி?
ரெண்டு வருஷமா பக்கத்து வீட்டுல இருக்கீங்க. அவங்க பையனோட பேசினது இல்லைன்னு சொல்லுறீங்க!”
“ஆமாம்.
ஏன்னா மிஸ்ஸர்ஸ் டேவிட் பையன் இந்த ரெண்டு வருஷத்துல அவங்கள பார்க்க வந்ததே இல்லை.
அப்புறம் எப்படி நான் பார்ப்பேன் இல்ல பேசுவேன்.
ஆக்சுவலி அவங்களுக்கு அந்த வேதனை இருந்துட்டே தான் இருந்துது. அப்பப்போ அவங்க பேச்சுல அவங்க மனவலியை வெளிப்படுத்திருக்காங்க. இன்ஃபாக்ட் அவங்க படற வேதனையை பார்த்து தான் நான் என் பேரன்ட்ஸ்க்கு அடிக்கடி கால் பண்ணி பேசுவேன்.”
“ம்…என்ன பண்ண! இப்படி சில பிள்ளைகள்.
சரி சக்தி.
நீங்க இங்கயே இருங்க.
நான் உள்ள போய் பார்த்துட்டு வரேன்.”
“ஓகே ஜேம்ஸ்.”
என்று கூறிய சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலிலேயே காத்திருந்தாள். அங்கு நடந்ததை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ப்ளூ, ஜேம்ஸ் டேவிட் வீட்டினுள் சென்றதும் மீண்டும் அவளை அழைத்து விசாரிக்க ஜன்னல் கண்ணாடிக் கதவை மெல்ல திறந்து
“தி…தி…”
என்று மெல்ல அழைத்தது. சக்திக்கும் ப்ளூவின் குரல் கேட்டது. உடனே அவளும் ப்ளூ பக்கமாக திரும்பினாள். அந்த நேரம் பார்த்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் ஜேம்ஸ். ஜேம்ஸை பார்த்ததும் சக்தி ப்ளூவிடம் ஏதோ கை அசைத்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் சட்டென சக்தி வீட்டை பார்த்தான். அப்போது ப்ளூ டக்கென்று மறைந்துக் கொண்டது. சக்தி பார்த்து கை அசைத்த திசையில் இருந்த அவள் வீட்டு ஜன்னல் பக்கம் பார்த்த ஜேம்ஸ், அங்கு யாரும் இல்லாததை கண்டு சக்தியிடம்,
“யாருக்கு கை அசைத்து காட்டுறீங்க சக்தி?”
“இல்லையே! யாருக்கும் நான் கை அசைத்து காட்டலயே!
நான் சும்மா என் கையை தலையில வச்சு யோசிச்சிட்டு இருந்தேன்.
நீங்க வந்தீங்க.”
“இல்லையே!
நான் வந்ததும் நீங்க உங்க வீட்டை பார்த்து யாருக்கோ கை அசைச்சீங்களே!
அசச்சா மாதிரி தான் இருந்துச்சு!
இருந்துச்சு என்ன இருந்துச்சு.
அசைச்சீங்க.”
“அச்சோ!
ஜேம்ஸ்!
என்னங்க?
என் வீட்டுல என்னைத் தவிர யாருமே இல்லை.
அப்படி இருக்கும் போது நான் யார்கிட்ட கை அசச்சுருப்பேன்?
சரி! சரி! அதுவா இப்போ முக்கியம்?
உள்ள யாராச்சும் இருக்காங்களா?”
“நீங்க ஏதாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா சக்தி?”
“நான் ஏன் இல்ல என்னத்த மறைக்க போறேன் ஜேம்ஸ்!”
“இல்ல…நீங்க சொல்லற விஷயங்களை வச்சு தான் நான் இந்த கேஸை ப்ரொசீட் பண்ணனும்.
அதுதான் இன்னொரு தடவ கன்பார்ம் பண்ணிக்க கேட்டேன்.
ஏதாவது மறைக்கறீங்கன்னா இப்பவே சொல்லிடுங்க.
நான் இந்த கேஸுலேந்து விலகிக்குறேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் ஒண்ணு விடாம உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இனியும் ஏதாவது இருந்தா சொல்லிடறேன்.
ஏன் இதோ இப்போ இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு விஷயத்தை நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும் சொல்லுங்க.
ஆனாலும் பார்த்ததும் மொதல்ல உங்களுக்கு தானே கால் பண்ணி சொன்னேன்.”
“அதெல்லாம் சரி தான் சக்தி.
ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நெருடல் என்னன்னா…
நீங்க முக்கியமான ஏதோ ஒண்ண அல்லது ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்ல விட்டுட்டேங்களோன்னு தோணிகிட்டே இருக்கு.
அதுனால கூட நாம நூடுல்ஸ் மாதிரி இதுல சிக்கிக்கிட்டு இருக்கோமோன்னு தோணுது.”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விவரங்களையும் நடந்த விஷயங்களையும் தெளிவா உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இப்போ நீங்க தான் சொல்லணும்.”
“நானா?
நான் என்ன சொல்லணும்?”
“மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுக்குள்ள நீங்க தானே போயிட்டு வந்திருக்கீங்க?
அப்போ உள்ள என்ன இருக்குன்னு நீங்க தான் சொல்லணும்.”
“ஓ! அதுவா.
உள்ள யாருமில்லை.
யாரும் வந்துட்டு போனதுக்கான தடயமும் இல்ல.”
“அப்போ நான் என் காரை பார்க் பண்ணிட்டு வரும்போது கேட்ட சத்தம்?”
“மே பி யாராவது திருட வந்திருக்கலாம்.
நீங்க வந்ததைப் பார்த்து பின் வாசலால தப்பி ஓடி இருக்கலாம்.
ஆனா வீட்டுக்குள்ள எல்லாமே வச்சது வச்ச இடத்துல இருக்கறா மாதிரி தான் தெரியுது.
எதுக்கும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்கள வர சொல்லிருக்கேன்.
அவங்க வந்து கை ரேகை ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து சொல்லுவாங்க.
அது மட்டுமில்லாம! ஆங் இதோ வந்துட்டாங்க.
வாங்க வாங்க.
இவங்க தான் மிஸ் சக்தி.”
“ஹாய். ஹலோ”
“ஹாய்.”
“இவங்க தான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணினாங்க.
யூ கேரி ஆன் வித் யுவர் டியூட்டி.
சக்தி இதோ இவங்க ரெண்டு பேரு தான் இந்த வீட்டுக்கு காவலா நிப்பாங்க.
நாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் மிஸ்டர் டேவிட்டை கான்ட்டாக்ட் செஞ்சு விவரங்களை சொல்லிக்கறோம்.
தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.”
“யூ ஆர் வெல்கம்.
இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
மிஸ்ஸர்ஸ் டேவிட் இஸ் லைக் மை மதர்.
அதுனால தான் நான் கொஞ்சம் பதற்றமாகி உங்களையும் இங்க வரவச்சுட்டேன்.
ஐ ஆம் சோ சாரி”
“இல்ல இல்ல உங்கள மாதிரி தான் எல்லாரும் போலிஸ் மேல நம்பிக்கை வச்சு இது போல அக்கம்பக்கத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்…
வாட் யூ டிட் இஸ் கரெக்ட்.
சோ நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
இனி எங்க ஆளுங்க பார்த்துப் பாங்க.
யூ கேன் காரி ஆன் வித் யுவர் வர்க்.”
“ம்…ஓகே.
என் வீட்டுக்கு வாங்களேன்.
காபி கூடிச்சிட்டு போகலாம்.”
“நோ! நோ! சக்தி.
இன்னொரு தடவ வரேன்.
நான் உடனே என் ஆஃபிஸுக்கு போகணும்.
கால் மேல கால் வந்துட்டே இருக்கு. இவங்க எல்லாரும் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அது தான் வந்துட்டாங்க இல்ல.
இனி அவங்க பாத்துப்பாங்க.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
பை.”
“பை ஜேம்ஸ்.
இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் டைம் கட்டாயம் வாங்க.
பை.”
என்று கூறி ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் சக்தி தனது வீட்டிற்குள் சென்றாள்.
பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் கதவு எப்படி/ஏன் திறந்துக் கிடந்தது?
யார் வந்திருப்பார்?
அவர்கள் வீட்டினுள் சக்தி கேட்ட சத்தம் எதனால் வந்தது?
போன்ற வினாக்களின் விடைகளை தேடி…
தொடர்வாள்…
சிசிடிவி அறைக்குள் சென்ற ஜேம்ஸ் அங்கிருந்த சூப்பர்வைசரிடம் கடந்த சனிக்கிழமை காலை முதல் மதியம் வரையிலான கேன்டீன் சம்மந்தப்பட்ட வீடியோக்களை போட்டுக் காட்ட சொன்னான். அவர்களும் அன்று பதிவான கேன்டீன் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளையும் போட்டுக் காட்டினார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் சட்டென ஓரிடத்தில் நிப்பாட்டி அதில் பதிவாகியிருந்த அந்த டிரக்குகள் இருப்பவரை ஜூம் செய்து காண்பிக்க சொன்னான். அந்த நபரை ஜூம் செய்ததும் சக்திப் பக்கம் திரும்பிய ஜேம்ஸ்
“என்ன சக்தி! இவர் தானே நீங்க வேலைக்கு சேர்த்துவிட்ட ஜான்?”
“ஆமாம்! இவரே தான். அது சரி இவர் தான் ஜானுன்னு நீங்க எப்படி
கரெக்ட்டா சொல்லுறீங்க?”
“அவரோட விவரங்களை கேன்டீன் ஊழியர்கள் ஃபைல பார்த்தேன்.”
“ஓ! ஓகே.”
“இந்த டிரக் எங்கேந்து வந்திருக்கு? அதுல என்ன இருந்தது ஆர் என்ன எடுத்துட்டு போறாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா?”
“இல்ல சார். எங்களுக்கு தெரியாது. நீங்க கேன்டீன் சூப்பர்வைசரை தான் கேட்கணும்.”
“சக்தி உங்களுக்கு ஏதாவது?”
“நோ ஜேம்ஸ். நோ”
“இந்த டிரக் உங்க கம்பெனியோடதா? இல்ல வெளியேந்து…வேற யாரோடதாவது வண்டியா?”
“அது…”
“இல்ல சார். இது ரெகுலரா உங்க கம்பெனிக்குள்ள வர வண்டியான்னு கேட்கறேன்.”
“எஸ் சார். இந்த டிரக் எவ்வரி சாட்டர்டே உள்ள வரும் மத்தியானம் வெளில போகும்.”
“ஒரே குறிப்பிட்ட நேரத்துல தான் வந்து போகுமா? இல்ல சனிக்கிழமை எப்ப வேணும்னாலும் வந்து போகுமா?”
“இல்ல இல்ல சார் ஒரே டைம் தான் ஃபாலோ பண்ணும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் சீக்கிரம் கிளம்பி வெளியே போயிருக்கு.”
“எவ்வளவு சீக்கிரம்?”
“எப்பவும் மத்தியானம் ஒரு மணிக்கு தான் வெளியே போகும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் பதினொன்னே காலுக்கு கிளம்பி வெளியே போய் இருக்கு சார்.”
“ம்…இன்டரெஸ்டிங். சரி சார். நீங்க ஒண்ணு பண்ணுங்க நான் சொன்ன ஃபுட்டேஜ் எல்லாத்தையும் எனக்கு இந்த நம்பர் ஆர் ஈமெயில் ஏதாவதுக்கு உடனே அனுப்பி வையுங்க.”
“நிச்சயமா சார். இதோ அனுப்பிடறேன்.”
“தாங்க்ஸ். சக்தி என் வேலை முடிஞ்சிடுச்சு நாம போகலாமா?”
“ஷுவர் ஜேம்ஸ்.”
“சக்தி நீங்க இனி அந்த ஜானை எங்க பார்த்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க. நானும் அவன் ஃபைல்ல இருக்கற அட்ரெஸ்ஸுக்கு போய் பார்க்கறேன். நிச்சயம் அது தப்பான அட்ரெஸ்ஸா தான் இருக்கும்.”
“நோ நோ! எங்க ஆஃபிஸ்ல பேக் ரௌண்ட் செக்கிங் எல்லாம் பண்ணாம யாரையுமே வேலைக்கு எடுக்க மாட்டாங்க ஜேம்ஸ்”
“ம்…அப்படியா! அதையும் பார்ப்போம். சரி நீங்க உங்க வேலையை பார்க்கலாம் சக்தி. நான் கிளம்பறேன்.”
“அப்படின்னா ருத்ரா எதுவும் செய்யலை இல்லையா? அவ குடுத்த ஜூஸ்னால இல்ல தானே!”
“ம்…அப்படி இருக்கலாம். அப்படி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.”
“ம்…ஷுவர்.”
“குட். ஆமாம் சக்தி… உங்க செகரெட்ரி மிஸ் ருத்ரா அவங்களோட நீங்க ரூம்மெட்டா இருந்தப்போ அங்க நடந்த ஒரு இன்சிடென்ட் பத்தி சொன்னாங்க. அது நடந்ததுக்கப்புறமா தான் நீங்க தனியா ரூம் எடுத்து தங்க ஆரம்பிச்சீங்கன்னும் சொன்னாங்க. அது உண்மையா?”
“என்ன! அவ பாய் ஃப்ரெண்ட் விஷயமா?”
“ஆமாம் சக்தி. இல்ல வேறெதுவும் காரணம் இருக்கா?”
“வேறெதுவும் இல்ல ஜேம்ஸ். ஆனா அது ஒரு காரணம் போதாதா என்ன?”
“அதுக்காக உயிர் தோழியை பிரியறதுங்கறது ரொம்ப இல்ல!”
“உயிர் தோழியா இருந்தா என்ன இல்ல யாரா இருந்தா என்ன ஜேம்ஸ். பல தடவை சொல்லியும் அவங்களால நமக்கு ஏதாவது ஆபத்து வந்தா நாம விலகறது தானே நல்லது. அதைத் தான் நான் செஞ்சேன். ஆனாலும் அவளோட நான் இன்னமும் பேசிட்டு தானே இருக்கேன்.”
“அதுவும் சரிதான் சக்தி. ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிசர் போல. பாவம் என் பிரெண்ட் விஷால். அவன் ஏதாவது ஒரு அழகான பொண்ண பார்த்தான் செத்தான் போலயே!”
“பார்க்கறது தப்பில்ல ஜேம்ஸ். வரம்பு மீற கூடாதுன்னு தான் நான் சொல்லறேன். ஏது உங்க நண்பனுக்கு ஏற்ற காவல்காரன் போல தெரியுது!”
“ஜஸ்ட் கிட்டிங். சரி சக்தி. நான் வரேன். பை டேக் கேர்.”
“பை ஜேம்ஸ்.”
என்று கூறி ஜேம்ஸ் சென்றதும் தனது கேபினுக்கு சென்றாள் சக்தி. அவள் சென்ற வழியில் குறுக்கே வந்த ருத்ரா சக்தியிடம்
“ஹாய் தி. மிஸ்டர் ஜேம்ஸ் மறுபடியும் வந்திருந்தார் போல!”
“ஆமாம். ஏன் உனக்கு தெரியும் தானே! அப்புறம் என்ன போல ன்னு இழுக்கற?”
“இல்ல கேட்டேன். அவர் எதுக்கு நம்ம கேன்டீனையே சுத்தி சுத்தி வரார்?”
“ம்…நம்ம கேன்டீன் காஃபி ரொம்ப நல்லாருக்காம் அதுதான்.”
“போ தி. விளையாடாதே!”
“ஹேய் ருத்ரா! இதுல விளையாட என்ன இருக்கு?”
“எனக்கென்னவோ அவர் என்னைப் பார்க்கத் தான் ரெண்டாவது தடவ வந்திருந்தார்ன்னு தோணுது”
“ஓ! அப்படியா? எத வச்சு நீ அப்படி சொல்லுற?”
“இப்போ கொஞ்சம் முன்னாடி… உன் கேபின் வாசல்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார் இல்ல…”
“ஆமாம். அதுனால உன்ன பார்க்க வந்தார்ன்னு நீ எடுத்துப்பியா?”
“இல்ல தி. அப்போ நான் நம்ம ரோமிகிட்ட ஒரு ஃபைல் குடுக்க வந்தேனா….”
“சரி வந்த…அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா வர. கொஞ்சம் ஸ்பீட் அப்.”
“அப்போ அவரு என்னையே உத்துப் பார்த்து ரசிச்சிட்டிருந்தார் தெரியுமா!”
“அது தெரிஞ்சும் மேடம் ஏன் அவர் கிட்ட போய் கேட்கலை?”
“அவர் என்னை ரசிச்சதை நானும் ரசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கேட்க தோணலை. ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கலை. அதுக்குள்ள நீ வந்து ஆட்டத்தை கலைச்சுட்ட”
“எதை உங்களுக்குள்ள நடந்த ரசிப்பு ஆட்டத்தையா?”
“உன்னை… நீ இருக்க பாரு. போய் வேலையை பாரு ருத்ரா. நானே பல டென்ஷன்ல இருக்கேன். இதுல நீ வேற! வா வா அந்த எம்.என்.எம் அனுபின ப்ரபோஸலை அனைலைஸ் செஞ்சு அவங்களுக்கு பதில் அனுப்புவோம்.”
“ஓகே மேடம் சக்தி.”
தன்னை சுற்றி ஏதேதோ நடந்தாலும், அவை எல்லாம் எதற்கு நடக்கிறது என்று அறிய முடியாவிட்டாலும் சக்தி அவளது வேலையில் மும்முரமாக இருந்தாள். அவள் கூறிய அந்த எம்.என்.எம் கம்பெனி அனுப்பின ஈமெயிலை படித்து அதை பற்றி தனது மேலதிகாரிக்கு ஒரு ஈமெயில் போட்டு. அதற்கான அனுமதி பெறுதல் போன்ற வேலைகளில் மூழ்கினாள். அன்று மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்ல கார் பார்க்கிங் சென்றவளை தடுத்து நிறுத்திய ருத்ரா
“ஹேய் தி. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?”
என்று கேட்க அதற்கு சக்தி அவளை நோக்கி
“முடியாது”
என்று கூறி தனது காரை நோக்கி நடந்த சக்தியை ருத்ரா மீண்டும் வழிமறித்து
“ப்ளீஸ் சக்தி. என்னனு கேட்காமலேயே இப்படி முடியாதுன்னு சொல்லுறே!”
“சரி சொல்லு.”
“எனக்கு அந்த ஜேம்ஸ் மொபைல் நம்பர் தர முடியுமா?”
“வாட்? அவர் நம்பர் உனக்கு எதுக்கு?”
“சும்மா…அவர் போலீஸா. ஏதாவது உதவி தேவைன்னா கேட்கலாம இல்ல. அதுக்கு தான்.”
“ம்…நம்பிட்டேன். நீ சொன்னதை அப்படியே நம்பிட்டேன். நீ மொதல்ல நகரு. நான் வீட்டுக்கு போகணும்.”
“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! சக்தி”
“நோ வே ருத்ரா. நான் அவர்கிட்ட கேட்காம அவர் நம்பரை உனக்கு ஷேர் பண்ண முடியாது. ஐ ஆம் வெரி சாரி அபௌட் தட்.”
“சரி நீ அவர்கிட்ட கேட்டுட்டே ஷேர் பண்ணு.”
“சரி கேட்கறேன்.”
“எனக்காக இப்பவே கேளேன். ப்ளீஸ்”
“ம்… சரி இரு. கால் பண்ணறேன். ரிங் போவுது.”
“ம்…ம்…தாங்க்ஸ் சக்தி”
“இன்னும் அவர் என் கால் பிக்கப் கூட பண்ணலை அதுக்குள்ள எதுக்கு தாங்க்ஸ்? ஆங்…ஹலோ மிஸ்டர் ஜேம்ஸ்.”
“ஹாய் சக்தி. என்னாச்சு? அந்த ஜானை எங்கயாவது பார்த்தீங்களா? இல்ல அவன் உங்க ஆஃபிஸுக்கே மறுபடியும் வந்திருக்கானா?”
“ஜேம்ஸ் ஜேம்ஸ். திஸ் இஸ் நாட் அபௌட் தட்.”
“பின்ன என்ன சக்தி? வேற எதாவது க்ளூ கிடைச்சிருக்கா? இல்ல உங்களுக்கு வேற யார் மேலாவது சந்தேகம் வந்திருக்கா?”
“அச்சச்சோ ஜேம்ஸ். கேஸ் பத்தியே இல்ல!”
“அப்படின்னா விஷால் பத்தியா?”
“இல்ல ருத்ரா பத்தி.”
“என்னது ருத்ரா பத்தியா? அவங்களுக்கு என்ன?”
“அவளுக்கு உங்க மொபைல் நம்பர் வேணுமாம். என்னை நச்சரிச்சுட்டு இருக்கா. உங்க கிட்ட கேட்காம குடுக்க மாட்டேன்னு சொன்னேன். அதுக்கு உடனே உங்ககிட்ட கேட்டு தரச்சொல்லி என்னை வீட்டுக்கு போக விடாம தடுத்து நிறுத்தி வச்சிருக்கா.”
“இதுல என்ன இருக்கு சக்தி. தாராளமா குடுங்க. அவங்களுக்கும் ஏதாவது அவசரம்ன்னா என்ன கூப்பிட வசதியா இருக்கும் இல்ல.”
“ஓ! ஹோ! அது சரி. அது சரி. இதோ இப்பவே குடுத்துடறேன். அவளுக்கும் உடனே அவசரம் வந்திடும் கூப்பிடுவா. சரியா. பை ஃபார் நவ்.”
“ஓகே. பை சக்தி.”
“ஏய் தி! என்ன சொன்னார்?”
“ம்… இந்தா இது தான் அவர் நம்பர்.”
“தாங்க்ஸ் தி. லவ் யூ”
“என்னை லவ் பண்ணவா ஜேம்ஸ் நம்பர் கேட்ட?”
“போ தி.”
“நான் போக தான் வந்தேன். நீ தான் என்ன போக விடாம வழிமறிச்சுட்டு நிக்கற. கொஞ்சம் நகர்ந்தேனா நான் கிளம்ப முடியும்.”
“ஊப்ஸ்! சாரி. ம்…இப்போ நீ தாராளமா போகலாம். பை பை தி. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தி.”
“ம்…ம்…சேம் டூ யூ டூ.”
சக்தி கேஸில் விசாரணை நடத்த வந்த ஜேம்ஸுக்கும் அவன் சஸ்பிஷன் லிஸ்ட்டில் இருக்கும் ருத்ராவுக்கும் இடையே காதல் மொட்டு ஒன்று மலராக விரிய துவங்கியுள்ளது. சஸ்பிஷன் சஸ்பென்ஷன் ஆகி சந்தோஷத்தில் முடிய போகிறதா இல்லை சஸ்பிஷன் சஸ்பென்ஸ் ஆகி சங்கடத்தில் முடிய போகிறதா!
ருத்ராவிடம் இருந்த ஒருவழியாக தப்பித்து ஆஃபிஸில் இருந்து புறப்பட்ட சக்தி நேராக வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது அவள் மனதில் கேள்விகள் பல உதித்தது. அதற்கான விடைகளை அவள் மனம் தேடியலைய ஆரம்பித்தபோது அவள் எப்போதும் செல்லும் லீ கார்னர் ரெஸ்டாரன்ட்டை கடந்து சென்றாள். உடனே மனதில் உதித்த கேள்விகள் அனைத்தும் மறைந்து அவள் அந்த ஜானை
முதன்முதலில் அங்கு பார்த்த நினைவுகள் நிழலாட துவங்கியது. அதை மனதில் ஆசைப் போட்டுக் கொண்டே சென்றவள் வீடை சென்றடைந்தாள். காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பார்க்கிங் கதவை மூடி நிமிர்ந்தவள் கண்கள் விரிந்து பிரகாசமானது.
தொடர்வாள்…
ருத்ரா சொன்னதை மனதில் ஆசைப் போட்டப்படியே அங்கிருந்து கிளம்பி ஸ்டேஷன் சென்ற ஜேம்ஸுக்கு ஏதோ தோன்ற
“ஓ! ஓ! இந்த ருத்ரா நினைப்புல எப்படி அதை செய்யாம விட்டுட்ட! எப்படிடா ஜேம்ஸ்! “
என்று தனக்குத்தானே கூறிக்கொண்டே உடனே வண்டியை திருப்பி மீண்டும் சக்தியின் ஆஃபிஸுக்கு சென்று பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சக்தியை மீண்டும் பார்க்க வேண்டுமென்று கூறினான். செக்யூரிட்டியும் சக்தியை ஃபோனில் தொடர்பு கொண்டு விவரம் கூறி அனுமதி கேட்டான். அவரை உள்ளே விடும்படி சக்தி கூறியதும் செக்யூரிட்டி ஜேம்ஸை உள்ளே போக அனுமதித்தார். அப்போது ஜேம்ஸ் அங்கிருந்த செக்யூரிட்டியிடம்
“நீங்க இங்க எவ்வளவு வருஷமா வேலை பார்க்கறீங்க?”
“நான் பத்து வருஷமா வேலை பார்க்கறேன் சார்”
“குட். வெரி குட். ஆமாம் ஜூன் 17 ஆம் தேதி உங்க ஆஃபிஸுக்கு யாராவது… ம்…வழக்கமா வரவங்களை தவிர்த்து…புது ஆட்கள் வந்திருந்தாங்களா?”
“இல்ல சார். அப்படி யாரும் வரலைங்களே! வழக்கமா வரவங்க தான் வந்தாங்க. இருங்க எதுக்கும் சிஸ்டத்துல செக் பண்ணி சொல்லறேன்.”
“சரி நீங்க செக் பண்ணி நோட் பண்ணி வையுங்க. நான் திரும்பி போகும் போது உங்ககிட்ட விவரம் கேட்டுக்கறேன். சரியா”
“சரி சார்.”
என்று செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற ஜேம்ஸ் சக்தியை சந்திக்க அவள் கேபினுக்கு சென்று அவனுக்கும் சக்திக்கும் இடையே தடையாக இருந்த கண்ணாடி கதவை தட்டினான். நிமிர்ந்து பார்த்த சக்தி புன்னகைத்து உள்ளே வரச் சொன்னாள். ஜேம்ஸும் உள்ளே சென்று
“ஹாய் சக்தி சாரி டூ இன்டரப்ட் யூ”
“இட்ஸ் ஓகே ஜேம்ஸ். சொல்லுங்க.”
“உங்க ஆஃபிஸ் கேன்டீனை நான் கொஞ்சம் பார்க்கணும். போகலாமா?கூட்டிட்டு போறீங்களா? இல்ல உங்களுக்கு முக்கியமான வேலை இருந்தா நீங்க அதைப் பாருங்க. எனக்கு பர்மிஷன் வாங்கித் தாங்க நானே போயிட்டு வரேன்.”
“நோ ப்ராப்ளம் ஜேம்ஸ். வாங்க நானே கூட்டிட்டு போறேன். ஜஸ்ட் கிவ் மி டூ மினிட்ஸ் இந்த ஈமெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன்.”
“ஓகே நான் வெளியே வெயிட் பண்ணறேன். நீங்க முடிச்சிட்டு வாங்க நாம போவோம்.”
“ஷுவர்.”
ஜேம்ஸ் சக்தி கேபினுக்கு வெளியே வந்து அந்த ஆஃபிஸையும் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே நடந்து சென்றாள் ருத்ரா. அழகான க்ளிப் கொண்டு கருமையும் பிரௌன் நிறமும் கலந்திருந்த கூந்தலை ஒன்றாக தூக்கி தலை உச்சியில் கிளிப் செய்திருந்தாள். ஜேம்ஸ் பார்க்கும் போது அதிலிருந்து ஒற்றை முடி அவளின் நெற்றிமுன் சரிந்தது. அதை அவளின் அழகான வெண்ணிற விரலால் நகர்த்தி விட்டதைப்
பார்த்ததும் ஜேம்ஸ் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பட்பட்டென பறக்க ருத்ராவின் அழகில் சொக்கிப் போய் நின்றிருந்தவனை சட்டென யாரோ பின்னால் இருந்து
“ஜேம்ஸ்! ஜேம்ஸ்! ஜேம்….ஸ்”
என்ற அழைப்பு கேட்டதும் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த வண்ணத்துப் பூச்சிகளை ஊதி கலைத்த குரல் யாருடையது என்று திரும்பிப் பார்த்தான். இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. உடனே தான் எதற்கு எங்கு வந்திருக்கிறோம் என்ற நினைவுக்கு திரும்பி வந்த ஜேம்ஸ் அவளிடம்,
“ஹாய் சக்தி. நீங்கதானா!”
“வேற யாரை எதிர்ப்பார்த்தீங்க ஜேம்ஸ்?”
“இல்ல இல்ல அப்படி எல்லாம் யாரையும் எதிர்ப்பார்க்கலை. சரி சரி உங்க வேலை ஆச்சா? நாம கேன்டீன் போகலாமா?”
“ம்….போகலாம் வாங்க.”
என்று சக்தி கூறியதும் இருவரும் கேன்டீனுக்கு சென்றனர். அங்கிருந்த காஃபி மெஷினில் இருந்து இரண்டு காஃபியை எடுத்துக் கொண்டு வந்த சக்தி ஒன்றை ஜேம்ஸிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவள் அருந்த ஆரம்பித்தாள். அப்போது ஜேம்ஸ் சக்தியிடம்
“சக்தி உங்களுக்கு இந்த கேன்டீன் ஸ்டாஃப் எல்லாரையும் தெரியுமா?”
“ஆங்! ஓரளவுக்கு எல்லாரையும் தெரியும் ஜேம்ஸ். ஏன் கேட்கறீங்க?”
“நீங்க பாரிஸ் போன அன்னைக்கு உங்களுக்கு சான்ட்விச் கொடுத்த நபர் யாருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“ஓ! ஜான் தான் எனக்கு அன்னைக்கு சான்ட்விச் செய்து தந்தார். அவர் ரொம்ப நல்ல ஜாலி டைப்”
“ம்…சரி நீங்க
பொறுமையா காபி குடிச்சிட்டு இருங்க.
நான் அங்க போய் ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்”
என்று சொல்லி விட்டு தனது காபி கப்புடன் நேராக அங்கிருந்த கிட்சன் பக்கமாக சென்றான். அப்போது அங்கிருந்த ஒரு ஊழியர் ஜேம்ஸை தடுத்து நிறுத்தி
“சார் இது ஸ்டாஃப் ஓன்லி ஏரியா. நீங்க இதுக்கு மேலே உள்ள போகக் கூடாது.”
“ம்…ம்….ஓகே ஓகே. சரி இங்க எத்தனை பேர் வேலை பார்க்கறீங்க?”
“இந்த கேன்டீன்ல…நாங்க ஒரு நூறு பேர் ஷிப்ட் போட்டு வேலை பார்க்கிறோம். ஏன் கேட்கறீங்க?”
“இல்ல போன சனிக்கிழமை காலையில ஒரு பதினோரு மணிக்கு என் தோழி சக்தி ஒரு சான்ட்விச் வாங்கித் தந்தா அது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அது யார் செய்ததுன்னு அவகிட்ட கேட்டபோது…அவ கூட யாரோ ஜா…ன்னு ஆரம்பிக்கிற பெயர் ஏதோ சொன்னா…”
“அது நம்ம ஜான் தான் சார்.”
“அது எப்படி அவ்வளவு தீர்க்கமா சொல்லுறீங்க?”
“போன சனிக்கிழமை அவன் தான் சார் சான்ட்விச் டியூட்டில இருந்தான். அதுனால தான் நான் சொன்னேன்.”
“சரி அவரு இப்ப இங்க இருக்காறா? நான் பார்க்கலாமா?”
“இன்னைக்கு அவனுக்கு எங்க டியூட்டின்னு தெரியலையே!”
“உங்க சூப்பர்வைசரை நான் பார்க்கலாமா?”
“ஓ! தாராளமா. வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்.”
“ம்…தாங்க்ஸ்”
“நீங்க யாரு சார். நியூ ரெக்ரூட்டா?”
“ம்…பார்த்தா அப்படி தெரியுதா! அப்படியே வச்சுக்கோங்க ஜார்ஜ்!”
“என் பெயர்… எப்படி சார்?”
“உங்க சட்டையில குட்டியா ப்ரின்ட் ஆகியிருக்கும் உங்க பெயரை படிக்க சீக்ரெட் ஏஜென்ட் எல்லாம் வேண்டாம் ஜார்ஜ்… கண்ணு நல்லா தெரிஞ்சாலே போதும்.”
“நீங்க நல்லா பேசுறீங்க சார். இதோ இது தான் எங்க சூப்பர்வைசர் மிஸ்டர் வால்ட்டன் கேபின். நீங்க இங்கேயே இருங்க இதோ வந்துடறேன். சார் மே ஐ கம் இன்.”
என்று அனுமதி கேட்டு உள்ளே சென்ற ஜார்ஜ் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஜேம்ஸை உள்ளே அழைத்துச் சென்று அவனது சூப்பர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். உள்ளே சென்றதும் ஜார்ஜுக்கு நன்றி தெரிவித்து இனி தானே பார்த்துக் கொள்வதாக கூறி வெளியே சென்று வேலையைப் பார்க்க சொன்னார் சூப்பர்வைஸர். ஜார்ஜும் ஜேம்ஸிடம் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். ஜேம்ஸை அமரச் சொன்ன சூப்பர்வைசர் வால்ட்டன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜேம்ஸ் வந்த விவரம் பற்றி விசாரித்தார். அப்போது ஜேம்ஸ் தான் யார் என்பதை விவரித்து அங்கு வேலை செய்யும் ஜான் பற்றி விசாரித்தான். சிறிது நேரம் கழித்து சூப்பர்வைசர் கேபினில் இருந்து வெளியே வந்த ஜேம்ஸ் நேராக சக்தி அம்ர்ந்திருந்த டேபிள் அருகே சென்று அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிந்ததை கண்ட சக்தி அவனிடம்
“என்ன ஜேம்ஸ் என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“ம்…அது ஒண்ணுமில்லை சக்தி. சரி நான் கிளம்பறேன்.”
“என்னாச்சு ஜேம்ஸ்? ஏதோ விசாரிக்கணும்னு போனீங்க. இப்போ நீங்க பாட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றீங்க! ஏதாவது க்ளூ கிடைச்சுதுதா?”
“ம்…கிடைச்சிருக்கு சக்தி.”
“என்னது அது?”
“இந்த கேன்டீன்ல அந்த ஜானை உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்?”
“அவரை கேன்டீன்ல வேலைக்கு சேர்த்து விட்டதே நான் தான் ஜேம்ஸ்.”
“ம்…சூப்பர்வைசர் சொன்னாரு. அது தான் கேட்கறேன் உங்களுக்கு அந்த ஜானை எவ்வளவு நாளா தெரியும்? எப்படி தெரியும்”
“எனக்கு ஜானை…ஒரு ஆறு மாசம் முன்னாடி…நான் எப்பவும் போற லீ கார்னர் ரெஸ்டாரன்ட் வாசல்ல இந்த ஜான் வேலை கேட்டுட்டு நின்னுட்டு இருந்தார். ரெண்டு மூணு தடவ அங்க பார்த்திருக்கேன். நான் பார்த்த போதெல்லாம் அவர் வேலை கேட்டு நிக்கறதும் அந்த ரெஸ்டாரன்ட் காரங்க வேலை ஏதும் இல்லன்னு சொல்லி ஜானை அங்கேந்து நகர்ந்து போக சொல்லறதும்ன்னு இருந்தது. அப்போ அவரை பார்க்கவே பாவமா இருந்ததால நான் எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட ஏதாவது வேலை இருக்கான்னு விசாரிச்சேன். அவரும் ஒரு ஓப்பனிங் இருக்குன்னு சொல்ல உடனே நான் லீ கார்னர் ரெஸ்டாரன்ட் போனேன். ஆனா அன்னைக்கு ஜான் அங்க வரவே இல்லைன்னு ரெஸ்டாரன்ட் ஆட்கள் சொன்னாங்க. அப்போ அவங்க கிட்ட என் கார்ட கொடுத்து ஜான் வந்தால் என்னை வந்து பார்க்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு இரண்டு நாள் கழிச்சு ஜான் என்னைத் தேடி எங்க ஆஃபிஸுக்கு வந்தார். நான் அவரை எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட கூட்டிட்டு போய் அறிமுகப் படுத்தினேன். அவர்கள் வைத்த ஏதேதோ டெஸ்ட்டில் பாஸ் ஆகி இங்கேயே வேலையில் சேர்ந்துட்டார். சோ கடந்த ஆறு மாசமா இங்க தான் வேலை செய்யறார். ஏன் இப்போ ஜானை பத்தி கேட்கறீங்க?”
“ம்…சொல்லறேன். அந்த ஜான் இப்போ இங்க வேலை செய்யலங்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா?”
“அப்படியா? எனக்கு தெரியாதே! ஏன் லீவுல இருக்காறா?”
“லீவ் எல்லாம் இல்ல சக்தி. உங்களுக்கு நடந்த அந்த மர்ம சம்பவத்தன்னைக்கு வேலைக்கு வந்தவன் ஹாஃப் டே லீவ் போட்டுட்டு போனவன் தானாம். இன்னை வரைக்கும் வேலைக்கு வரலையாம். அவன் மொபைலும் நாட் ரீச்சபுளாம்.”
“அய்யோ! அப்படியா? ஏன் அவர் எங்க போனாராம்? ஓ! மொபைல் ரீச் ஆகலன்னு சொன்னீங்க இல்ல. அப்படீன்னா! சோ! அவரு அன்னைக்கு எனக்கு தந்த அந்த சான்ட்விச் ல தான் ஏதாவது இருந்திருக்குமோ?”
“இருந்திருக்கலாம். இல்லாமையும் இருக்கலாம். அதுக்கு அந்த ஜானை பிடிச்சு கேட்டா தான் தெரியும். ஆனா இப்போதைக்கு என்னோட யூகம் என்னன்னா… அவன் உங்களை ஆறு மாசமா ஃபாலோ பண்ணிருக்கான். உங்க நடவடிக்கைகளை வாட்ச் பண்ணிருக்கான்.”
“அப்போ! ஜான் தான் என்னை கடந்திருக்கானா? ஏன் கடத்தனும்? கடத்திட்டு பின்ன ஏன் மறுபடியும் என்ன அப்படியே திருப்பி கொண்டு வந்து இருந்த இடத்திலேயே விடணும்? ஒண்ணுமே புரியலையே!”
“சக்தி! சக்தி! ரிலாக்ஸ் ப்ளீஸ். நான் சொன்னது எல்லாமே என்னோட யூகம் தான். சோ… அந்த ஜானை பிடிச்சு விசாரிச்சா தான் உண்மை என்னன்னும், நமக்கு ஒரு தெளிவும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.”
“பாவம்ன்னு நெனச்சு யாருக்குமே உதவி செய்யக்கூடாது போல! என்னத்த சொல்ல!”
“இப்படி எல்லாம் சட்டுன்னு ஒரு கன்க்ளூஷனுக்கு வந்துடாதீங்க. இதை இங்கேந்து எப்படி நகர்த்தணும்னு எனக்கு தெரியும் அதை நான் பார்த்துக்கறேன். மொதல்ல நாம மறுபடியும் அந்த சிசிடிவி கேமராஸை பார்க்கலாம் வாங்க.”
“ம்…ஓகே வாங்க போகலாம். இனி இந்த கேன்டீன்ல ஒரு டம்பளர் தண்ணீ குடிக்கக்கூட பயமா இருக்கும். சரி வாங்க உள்ளே போகலாம்.”
என்று ஜேம்ஸை மீண்டும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்து பளிச்சிட்டு காட்டும் அறைக்குள் அழைத்துச் சென்றாள் சக்தி.
மர்ம சம்பவத்தன்று சக்திக்கு சான்ட்விச் செய்து கொடுத்த ஜான் அதன் பின் வேலைக்கு வராதது ஏன்? சூழ்ச்சியாலா இல்லை சூழ்நிலையாலா! பதிலை தேடி…
தொடர்வாள்…
ஏர்போர்ட்டில் காத்திருந்த நவீன் மிருதுளாவின் கண்கள் வெளியே வருவோரை எல்லாம் வழியிலிருந்து நகர்த்தி தங்கள் மகளின் வருகையைப் பார்த்திருந்தன. சிறிது நேரமாகியும் சக்தி வராததால் இருவரும் பதற்றமானார்கள். உடனே நவீன் சக்தியை அவள் கைப்பேசியில் அழைத்தான். அப்போது மிருதுளா அவனைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பிய நவீன் சக்தியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான். சக்தியும் தன் அம்மாவையும் அப்பாவையும் இறுக்கி அணைத்துக் கொண்டு..
“ஐ மிஸ் யூ போத் வெரி மச்.”
“என்னடி சக்தி இப்படி இளைச்சுப் போயிருக்க?”
“ம்…அதுதான் பதினைந்து நாள் இருக்கப் போறேனே”
“அதுக்கு?”
“நீ அத சாப்புடு இத சாப்புடுனுட்டு ஏத்தி விட்டிடுவியேமா!!
அப்புறம் என்ன?”
“ம்…சரி சரி கார்ல ஏறு சக்தி.
உங்க அம்மாவை விட்டா இங்கேயே நின்னுண்டு பேசிண்டே இருப்பா.
மிருது வண்டில ஏறுமா”
என்று மூவரும் காரில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.
“சக்தி நீ போய் குளிச்சிட்டு வா.
அதுக்குள்ள நான் இட்டிலி வைச்சுடறேன்.”
“சரி மா. இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்.
பொங்கல், வடை அன்ட் சாம்பார் வாசம் தூக்கறது.”
“போமா போய் குளிச்சிட்டு வாடா”
“அப்பா அந்த குட்டி வடையை மட்டும் எடுத்து ஊட்டிவிடேன். நான் போய் குளிச்சிட்டு வந்து மிச்சத்தை சாப்பிட்டுக்கறேன்”
“ம்….இந்தா ஆ காட்டு. ஓடு ஓடு குளிச்சிட்டு வா. நாங்களும் உன் கூட சாப்பிடறதுக்காகக் காத்திருக்கோம்.”
“ஓ!! நீங்களும் இன்னும் சாப்பிடலையா. அச்சச்சோ. அப்போ இரு ஜஸ்ட் டூ மினிட்ஸ் ல குளிச்சிட்டு வந்துடறேன்”
சக்தி குளித்து வந்ததும் மூவருமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்து உண்டனர். சக்திக்கோ அம்மா கையால் சாப்பிட்டு நான்கு மாதங்களானது, நவீன் மிருதுளாவுக்கோ தங்கள் மகளின்றி சாப்பிட பிடிக்காது போய் நான்கு மாதங்களானது. ஆக மூவருமே நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று தான் நன்றாக உண்டனர். பின் சற்று நேரம் கல்லூரிக் கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். சக்தி வீட்டிலிருந்த பதினைந்து நாட்களையும் தன் அப்பா அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததில் பதினைந்து நாள் முடியப் போகிறது என்று வந்ததும் அவளை கவலை தொற்றிக் கொண்டது. மிருதுளா வழக்கம் போல அவளுக்கான பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, கொத்தமல்லிப் பொடி, ஊறுகாய், தக்காளி தொக்கு, முறுக்கு, பக்கோடா, ஸ்வீட்ஸ் என எல்லாம் சக்தி ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் செய்து பேக்கிங்கிற்கு தயாராக வைத்தாள். நவீனும் சக்தியுமாக அன்றிரவு அனைத்தையும் பேக் செய்தனர். மீண்டும் லண்டனுக்கு பயணிக்க ஆயத்தம் ஆனாள் சக்தி.
மறுநாள் விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சக்தி கையில் கட்டிக் கொண்டு போவதற்காக இட்டிலி, வெங்காயச் சட்டினி, சப்பாத்தி, புளியோதரை எல்லாம் செய்து அவற்றை ஆற வைத்தாள். நவீன் ஐந்து மணிக்கு எழுந்து வந்து மிருதுளா செய்து வைத்திருந்ததை பேக் செய்து வைத்தான். பின் சக்தியை ஐந்தே முக்கால் மணிக்கு எழுப்பி விட்டான். சக்தியும் எழுந்து கிடுகிடுவென குளித்து கிளப்பி ஹாலுக்கு வந்து சாப்பாட்டுப் பேக்கிங்கைப் பார்த்து
“அம்மா இதெல்லாம் என்ன? நான் எங்க வைச்சுப்பேன்?”
“இது இட்டிலி அன்ட் சட்னி, இதுல சப்பாத்தி இருக்கு தக்காளித் தொக்கு தொட்டுண்டு சாப்ட்டுக்கோ, இது புளியோதரை.”
“அம்மா…இதெல்லாம் நான் இன்னைக்கே எப்படி சாப்டுவேன். அப்போ ஃப்ளைட்ல தர சாப்பாட்டை என்ன பண்ணுவேன்”
“சரி அப்போ இதை எல்லாம் உன் ரூமுக்குப் போனதும் ஃப்ரிட்ஜில வச்சுடு. இரண்டு நாளைக்கு ஆச்சு.”
“அப்போ நேத்து என்னென்னவோ கட்டிக் குடுத்தியே அதெல்லாம் என்ன?”
“அதெல்லாம் தொக்கும், ஊறுகாயும், ஸ்னாக்ஸும். அது மூணு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. இது ஜஸ்ட் ஃபார் டூ டேஸ். நீ போய் செட்டில் ஆகற வரைக்கும்…சாப்பாட்டுக்காக வெளியில போக வேண்டாம் பாரு அதுக்காக”
“அதெல்லாம் சரி…இப்போ இதெல்லாம் எங்க வச்சுப்பேன்?”
“சக்தி உன் ஹான்ட் லக்கேஜ்ல இடம் விட்டு வச்சிருக்கேன் பாரு அதுல வச்சுக்கோ. சரி மிருது நானும் குளிச்சிட்டு வந்தாச்சு. நீ போய் குளிச்சிட்டு வந்துடு ஏர்போர்ட் போகணும் நாழியாகறது பாரு.”
என்று மிருதுளா குளிக்கப் போனதும் நவீனும் சக்தியுமாக அவளது ஹான்ட் லக்கேஜ்ஜை பேக் செய்து ஏர்போர்ட் செல்ல தயாரானார்கள். மிருதுளா குளித்து ரெடியாகி வந்து சுவாமிக்கு விளக்கேற்றி நன்றாக வேண்டிக்கொண்டு சக்திக்கு விபூதி இட்டு விட்டாள். சக்தியும் சாமி கும்பிட்டுக் கொண்டப்பின் மூவரும் ஆளுக்கொரு பெட்டி எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்று அங்கிருந்து தங்கள் காரில் ஏர்போர்ட் சென்றனர். அங்கே செக் இன் முடிந்ததும் சக்தி உள்ளே போகாமல் தயங்கி தயங்கி நவீனையும் மிருதுளாவையுமே பார்த்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்துச் சென்றதைப் பார்த்த நவீன் அவளை தங்களிடம் வரும் படிச் சொன்னான். உடனே ஓடி வந்தாள் சக்தி
“கண்ணா என்ன ஆச்சு? ஏன் செக்யூரிட்டி செக்கிங் போக உனக்கு இவ்வளவு தயக்கம்?”
“அப்பா அம்மா எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. ஐ திங்….”
“சரி அப்படீன்னா நீ போக வேண்டாம். எங்களோட ஆத்துக்கு வந்துடு”
“அம்மா என்னம்மா சொல்லற? எனக்கு படிக்க போகணும் ஆனா உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனேன்னு கஷ்டமா இருக்கு…அதுதான் யோசிக்கறேன்…நீ என்னடான்னா ஆத்துக்குப் போகலாம்னு சொல்லறயே!!”
“இங்க பாரு சக்தி அப்படித்தான் இருக்கும் ஆனா என்ன பண்ண படிப்பும் முக்கியம் தானே. போடா கண்ணா போய் நல்லபடியா படிப்ப முடிச்சிட்டு வா. இதோ பாரு ஒரு செமஸ்டர் முடிஞ்சாச்சு இன்னும் ஒரு அஞ்சு தானே…அதுவுமில்லாம ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்சிட்டும் நீ ஆத்துக்கு வரப்போற அப்புறம் என்ன? இன்னும் ஜஸ்ட் ஒரு நாலே மாசம் தானே. கண்ணைத் தொடச்சிண்டு போய் படிக்கற வேலையைப்பாரு”
“ஓகே அம்மா. நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி. நான் போயிட்டு வர்றேன் அப்பா அன்ட் அம்மா. பை. லவ் யூ போத். டேக் கேர்”
“வீ டூ லவ் யூ கண்ணா. யூ டூ டேக் கேர். பை பை”
என்று கூறி சக்தியை தேத்தி அனுப்பிய மிருதுளா …சக்தி தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை கவனித்த நவீன்
“ஏய் மிருது என்ன இது மறுபடியுமா? சக்திக்கு அவ்வளவு எடுத்துச் சொல்லிட்டு நீயே அழலாமா?”
“நான் அம்மாவாச்சே நவீன். அவளுக்கு தைரியம் சொல்வது என் கடமையாச்சே. ஆனா அவளைப் பிரியும்போது ஏதோ உள்ளப் பண்ணறதுப்பா.”
“இட்ஸ் ஓகே. அவ இன்னும் நாலே மாசத்துல திரும்பி வந்து நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறா அப்புறமென்ன. கண்ணைத் தொடச்சுக்கோ. வா நாம ஆத்துக்குப் போகலாம்.”
என்று சக்திக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்த மிருதுளாவுக்கு நவீன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்றதும் மிருதுளா நவீனிடம்
“சரி சக்தி அவ பாட்டுக்கு வந்தா இருந்தா இதா இப்போ ஊருக்கும் கிளம்பி போயிட்டா. இனி நான் என்னப் பண்ணுவேன்?”
“ம்…
உன் வேலையை விடும்போது இந்த யோசனை இருக்கலையா?
உனக்கு யாரு நாலு நாலு மாசம் மட்டும் வேலைத் தருவா?
பேசமா உன்னோட வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையிருக்கு இல்ல அதைப் பாரு.”
“நவீன் எனக்கொரு யோசனை சொல்லவா”
“ம்…சொல்லு மிருது”
“நாமளே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”
“என்னது?”
“அதுதான் இங்க பிஸினஸ் தொடங்கறது ரொம்ப ஈஸியாமே. டாக்யூமென்ட்ஸ் எல்லாம் ஒங்கா சப்மிட் பண்ணினா லைசென்ஸ் உடனே கிடைச்சிடுமாமே! நியூஸ் பேப்பர்ல படிச்சேன்.”
“அதெல்லாம் சரி தான் மிருது.
ஆனா நான் என் வேலையை விடவேண்டியிருக்கும்.
ஏன்னா நான் என் வேலையையும் பார்த்துண்டு பிஸினஸும் பண்ணக் கூடாது.
எத்திக்கலி இட்ஸ் ராங்.
அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சா ஸ்டார்ட்டிங்ல வீ வில் நாட் கெட் ரெகுலர் இன்கம்.
அப்புறம் எப்படி நம்ம சக்திப் படிப்புக்கு பணம் கட்டுவோம்?
அப்படியே ஆரம்பிச்சாலும் என்ன பிஸஸ் பண்ணறது?”
“கன்சல்டன்சி ஃபேர்ம் தான். நான் அக்கௌன்ட்டிங் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட லீகல் பார்த்துக்கோங்கோ. என்ன சொல்லறேங்கள்?”
“நல்லா தான் இருக்கு.
நம்ம சக்தி படிப்பு முடிஞ்சிட்டு ஆரம்பிக்கலாம்.
நானும் அதுக்குள்ள அதுக்கு வேண்டிய டீட்டேயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன்.
ஆனா இப்போதைக்கு வேண்டாம் மிருது.
ஒரு இரண்டரை வருஷம் கழிச்சு பார்ப்போம்”
“ம்…அதுவும் கரெக்ட் தான் நவீ.
நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்.
அவ படிப்பு முடிச்சதும் ஆரம்பிச்சுக்கலாம்.”
என்று அவளின் எண்ணத்தை மீண்டும் மூட்டைக் கட்டி பரணில் போட்டாள் மிருதுளா. பின் இரண்டரை வருடங்களும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை என சக்தியின் வரவு, மகிழ்ச்சியான தருணங்கள், மீண்டும் சக்தியின் புறப்பாடு, சாப்பாடு, ஸ்னாக்ஸ், ஊறுகாய், பொடிகள் கட்டுவது, மீண்டும் கண்ணீர், மீண்டும் வரவு …மீண்டும் பிரிவு என்று முடிந்து சக்தி குவைத்துக்கே திரும்பி வந்தாள். ஆனால் வந்தவள் அவளுக்கு யூரோப்பில் மேல் படிப்புப்புக்காக அட்மிஷன் கிடைத்துள்ளதாகவும் அதுவும் ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவள் கூறியதில் பெருமையடைந்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் மனதோரத்தில் மீண்டும் தங்கள் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் சக்தியின் இளங்கலைப் படிப்பு அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை அளித்தது. மன தைரியத்தை வளர்க்க ஏதுவாக இருந்தது. தங்கள் மகள் திருமணமாகிச் சென்றால் எப்படியும் தாங்கள் இருவரும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்பதை தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களை அவர்களே தேத்திக் கொண்டனர்.
சக்தி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக யூரோப்பிற்குச் சென்றாள். அவளுக்காக இனி நவீன் எந்த வித செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லாது போனது. ஏனெனில் அவளுக்கு படிப்பு செலவு, தங்குவதற்கான செலவு மற்றும் ஸ்டைஃபன்ட் எனப்படும் உதிவித் தொகை என எல்லாம் கிடைத்தது. அவள் யூரோப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும் மிருதுளா நவீனிடம் மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்
“மிருது நாம லைசென்ஸ் க்கு அப்ளைப் பண்ணலாம்.
ஆனா நான் இப்போதைக்கு வேலையை விட மாட்டேன்.
நீ தான் பிஸினஸைப் பார்த்துக்கணும். நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணறேன். லீட்ஸ் தர்றேன்.
என்னால முழுசா அதுல இப்போ இறங்க முடியாது.
என்ன சொல்லற?”
“ம்…
ஓகே நவீன்.
நான் பார்த்துக்கறேன்”
“மிருது இது நீ போன வேலைகள் மாதிரி இல்ல…
வேண்டாம்னா விட்டுட்டு வர்றதுக்கு…
ஒரு லைசென்ஸ் எடுக்கவே அஞ்சு ஆறு லட்சமாகும்…
நன்னா யோசிச்சு சொல்லு”
“நான் இந்த இரண்டரை வருஷமா நல்லா யோசிச்சாச்சுப் பா.
நிச்சயம் நான் நல்லா பண்ணுவேன்.
நீங்க லைசென்ஸ் க்கு அப்ளை பண்ணுங்கோ.”
“நீ தான் உன் பெயர்ல தான் பண்ணணும்.”
“ஓ!! ஓகே சரி நாளைக்கு புதன் கிழமை. நாளைக்கே பண்ணிடுவோம்”
“அது என்ன!
நாளை என்ன ஸ்பெஷாலிட்டி?”
“பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.
அதுதான் சொன்னேன்.”
“ம்…
ஓகே.
அப்போ நாளைக்கே அப்ளைப் பண்ணிடலாம்.
ஸோ மிருது பெரிய பிஸினஸ் மாக்னெட்டாகப் போறா!”
“பார்ப்போம்.
எல்லாம் அந்த கடவுளோட அனுகிரகம் இருந்தா நல்லப்படியா தான் நடக்கும்.”
“சரி உன் பிஸினஸுக்கு என்னப் பெயர் வைக்கப் போற மிருது?
ஏன்னா நாளைக்கு அப்ளை பண்ணும் போது மூணு பெயர்களைக் கொடுக்கணும்.
அதுல ஒன்னைத் தான் அவா அப்ரூவ் பண்ணுவா”
“ஆங்…
அதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.
உத்கிருஅஷ்ட் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்
தக்க்ஷக் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
எப்படி?”
“அட…
சூப்பர் மிருது.
இதெல்லாம் எப்ப யோசிச்சு வச்ச?”
“இரண்டரை வருஷமா யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.”
“பார்ப்போம்.
இதில் எதை அப்ரூவ் பண்ணறான்னு?”
என்று அவர்கள் பேசிக்கொண்டது போலவே மறுநாள் புதன்கிழமை பிஸ்னஸ் லைசென்ஸ் க்கு அப்ளை செய்தனர். மளமளவென வேலைகளும் நடந்தன. லைசென்ஸும் கிடைத்தது.
“ஹேய் நவீ.
இன்னைக்கு எனக்கு ஈமெயில் வந்தது. நம்ம கன்சல்டன்சி ஃபேர்முக்கு அப்ரூவான பெயர் “விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்”.”
“சூப்பர் மிருது.
கங்ராட்ஸ்.
எப்பேலேந்து வேலைகளைத் துவங்கப் போற?”
“முதல்ல இந்த லைசென்ஸ் வச்சு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும். அதுக்கப்புறம் மெல்ல வேலைகளை ஆரம்பிக்கணும் நவீ”
“சூப்பர்.
பேங்க் அக்கவுண்ட் ஓபனிங்குக்கு பிஸினஸ் ப்ளான் எல்லாம் ரெடியா வச்சிருக்கனு சொல்லு.”
“எஸ் எஸ்…
கொஞ்சம் இருங்கோ.
ம்…
இந்தாங்கோ.
படிச்சுப் பார்த்துட்டு ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்கோ.”
“ம்…ம்…
வாவ்.
பக்காவா எழுதியிருக்க மிருது.
இதை எல்லாம் பார்த்தா…
நீ பிஸினஸ் உமன் ஆகனும்ங்கறதுக்காக தான் கடவுள் உன்னை எந்த வேலையிலலேயும் இருக்க விடலைப் போல.”
“இருக்கலாம்.
இது தான் எனக்கானதுப் போல!”
“கலக்கு கலக்கு மிருது.
நானும் உனக்கு லீட்ஸ் தர்றேன்.”
“நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ரெண்டு மூணு அக்கவுண்ட்டிங் அன்ட் ஆடிட்டிங் ஃபேர்ம்ஸ் கூட அக்ரிமெண்ட் போட ஏற்பாடு செய்திருக்கேன் நவீ”
“சூப்பர். சூப்பர்.
மிருது இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் வேலையை விட்டுட்டு உன் ஃபேர்ம்லேயே ஜாயின் பண்ணிடறேன்.”
“என்னோட ஃபேர்ம் பிக்கப் ஆகற வரைக்கும் நீங்க உங்க வேலையை விட வேண்டாம் நவீ.
எப்போ நல்லா வளர்ந்து ரெகுலர் இன்கம் வர்றதோ…
அப்போ நீங்க உங்க வேலையை விட்டுட்டு வாங்கோ…
நான் உங்களுக்கு வேலை தர்றேன்.”
“ம்….
ஓகே மேடம்”
“ஏய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பா”
“நானும் தான் விளையாட்டுச் சொன்னேன்”
“ஏய்!!!
ஹா! ஹா! ஹா! ஹா!”
நவீனும் மிருதுளாவும் ஒரு சின்ன ஆபீஸ் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். நல்ல நாள் பார்த்து தன் பிஸினஸை துவங்கினாள் மிருதுளா. முதலில் ஒன்றிரண்டு வேலை ஆர்டர்களே வந்தன. அவற்றை நல்லப் படியாக முடித்துக் கொடுத்ததில் மீண்டும் ஒன்று வந்தது. இப்படியே இரண்டு மூன்றானது மூன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபது வேலைகளுக்கான ஆர்டர்களானது. இரண்டு வருடத்தில் சக்தி தன் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து யூரோப்பிலேயே பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாள். மிருதுளா தனது பிசினஸில் மும்முரமானாள். வேலைக்கான ஆர்டர்கள் பெருகி மாத வருமானம் வர ஆரம்பித்ததும் நவீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மிருதுளாவுடன் இணைந்து அவனது லீகல் வேலைகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ராப்பகலாக கடினமாக உழைத்தார்கள்.
அவர்கள் உதவிக்காக இரண்டு நபர்களை வேலைக்குச் சேர்த்தனர். பின்பு அதே ஆபீஸையும் அதன் பக்கத்து கடையையும் சேர்த்து லீசுக்கு எடுத்து…தங்கள் ஆபீஸை விரிவுப் படுத்தி இன்னும் ஐந்து நபர்களுக்கு வேலைக் கொடுத்தனர். இப்படியே அவர்களின் பிஸினஸ் விரிவடைந்தது. பேரும், புகழும், நன்மதிப்பும் சம்பாதித்தனர். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததில் மிருதுளாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் உமன் என்ற அவார்டும் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களுடனும் நிறைவாக வாழ்ந்தனர்.
மிருதுளாவும் நவீனும் அவர்கள் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தான் ஆரம்பித்தனர். நவீன் பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொண்டு தான் திருமணம் முடித்திருப்பார் என்ற எண்ணத்தில் தங்கள் மகளை தாரவாத்துக் கொடுத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். பிறந்த வீட்டில் ராணிப் போல் வாழ்ந்த மிருதுளா புகுந்த வீட்டில் படாத கஷ்டங்களுமில்லை, அவமானங்களுக்கும் அளவில்லை. ஆனால் அனைத்தையும் பொறுமையாக இருந்து தன் கனவனையே தானாக அனைத்தையும் புரிந்துக் கொள்ள வைத்தாள்.
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழிபோல மிருதுளா சொல்லிக் கொடுத்து நவீனைப் புரிந்துக் கொள்ள வைப்பதைவிட அவனையே தானாக புரிந்துக் கொள்ள வைத்தால் தான் அவனுள் நேரும் மாற்றம் உண்மையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும் என்றெண்ணி அவள் நடந்துக் கொண்டது அவளுக்கு சில காலம் வேதனைகளையும், வலிகளையும் தந்திருக்கலாம் ஆனால் அவை அணைத்தும் அவள் தாங்கிக்கொள்ளக் கூடிய வயதிலேயே வந்து கடந்து சென்று விட்டன. ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் மன நிம்மதியும், அமைதியும் தேவையோ அந்த வயதில் மிருதுளாவுக்கு அவை மிகுதியாகவே கிடைத்தது.
திருமணமான புதிதில் நவீன் தனக்காக தன் தாய் தந்தையிடம் பேசாது இருந்ததில் மனவருத்தமிருந்தாலும் நவீனின் நிலைமையையும் புரிந்துக் கொண்டு அதைப் பெரிதாக்காது நடந்துக் கொண்டதினால் நவீனும் அவளை நன்றாக புரிந்துக் கொண்டு பின்னாலில் அவளுக்கு நல்ல துணையாக மாறினான்.
மிருதுளா திருமணமானது முதல் தன் புகுந்த வீட்டினரை மதித்து நடந்துக்கொண்டது, அவர்களை அரவணைத்துச் சென்றது, அவர்கள் அவமானப்படுத்தினாலும் அவர்களை விடாது தங்களுடன் வைத்துக் கொள்ள முயன்றது, அதற்காக பலமுறை தோற்றுப் போனது என தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்த அவளின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதில் எந்த வித முன்னேற்றமுமின்றி ஆனதில் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். ஆனால் இனி அவர்களுக்காக வருந்தியோ வேதனைப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அன்று முதல் அவர்களை எல்லாம் தன்னுளிருந்தும் தன்னிடமிருந்தும் தள்ளி வைத்துவிட்டு அவள் அவளுக்காகவும் அவளின் கனவன் மகளுக்காகவும் மட்டுமே வாழத் துவங்கினாள். அப்படி அவள் வாழத் துவங்கியதிலிருந்து அவள் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருந்தது.
ஒரு பெண்ணிற்கு பொறுமை மிக மிக அவசியமான அணிகலனாகும். அதை மட்டும் அவள் அணிந்துக் கொண்டால் அவளை விட வலிமை வாய்ந்தவர்கள் இந்த பூமியில் எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்பவளும் அவளே! தனது பொறுமை என்று மற்றவர்களால் உபயோகித்துக் கொள்ளப் படுகிறதோ அன்று அதை உடைத்தெறியும் பெண்ணிற்கு இணையானவரும் இந்த பூமியில் இருக்க வாய்ப்பில்லை.
நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் பொறுமையின் எல்லை வரை பொறுத்திருப்பார்கள். எப்போது அப்படி சீண்டிப் பார்ப்பவர்கள் அதைத் தாண்டுகிறார்களோ அன்று அவள் அவர்களை பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ செய்யாது அவர்களிடமிருந்து… அவர்கள் கண்ணிற்குக் கூட தெரியாத உயரத்திற்கு பறந்துச் சென்றிடுவாள். இதுவே வலிமையான பெண்ணினத்தின் குணம்.
எப்போதும் நாம் நமக்காக எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் சண்டையிட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “சூஸ் யுவர் பேட்டில் வைஸ்லீ”. அதாவது உனக்கான போர், யுதம் அல்லது சண்டை எதுவானாலும் அதை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாக இரு என்பது அதன் அர்த்தமாகும். நாம் ஒரு பிச்சினையை சந்திக்கும் பொழுது அதற்காக நாம் பொங்கி எழ வேண்டுமா? திருப்பி சண்டையிட வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். சிலருடன் பேசி நியாயத்தை நிலை நாட்டலாம், சிலருடன் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டலாம் ஆனால் பல நேரங்களில் நமது நியாயத்தை நிலையாட்டிக் கொள்ளவும் நமது மன அமைதிக்காகவும் சிலரிடமிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. அதைத் தேர்ந்தெடுத்த மிருதுளா விட்டுக்கொடுத்து அனுசரித்து இளிச்சவாய் என்ற பெயரெடுத்தாலும் அவளின் பொறுமைக்கு கிடைத்தப் பரிசு தான் அவளின் கனவனும், மகளும், மனநிம்மதியும், அவளின் உயர்வும் ஆகும்.
விட்டுக்கொடுப்பவர் என்றுமே கெட்டுப்போவதில்லை. அதே போல விட்டு விலகுபவர்களும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு மிருதுளாவே சிறந்த உதாரணமாவாள். பெரியவர்கள் பெரியவர்களாக நடந்துக் கொண்டால் சிறியவர்களும் அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அவற்றை உருட்டி மிரட்டி எல்லாம் பெற முடியாது. அப்படியே பெற்றுக் கொண்டாலும் அது நிலைக்காது. உண்மை, நேர்மை, பொறுமை, ஒழுக்கம் இவை ஒருவரிடமிருந்தால் அவர்களின் வெற்றி மற்றவர்களை வாய்பிளக்கச் செய்யும். அதுவே மிருதுளாவின் வாழ்விலும் நடந்தது. அன்று அவளைத் தூற்றியவர்களிடமும் விமர்சித்தவர்களிடமும் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காது மேலே மேலே உயரப் பறந்துச் சென்றாள். அவளின் வளர்ச்சியைக் கண்டு அன்று அவளைத் தூற்றியவர்களையும், விமர்சித்தவர்களையும் இன்று அதற்காக வருத்தமடையச் செய்தாள் மிருதுளா.
பர்வதீஸ்வரன் படைப்பே அப்படி இருந்ததால் மிருதுளா அல்ல மற்ற எவராலும் புரிய வைக்கவோ மாற்றவோ முடியாது போனது. அவர்கள் அப்படித்தான் என்று அனைவரும் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர்.
அவர்களின் வாரிசுகளாவது திருந்த முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறதே!! திருந்துவார்களா? காலம் தான் அதற்கு பதிலளிக்கும்.
ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பதில் பல பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்ணே சிறந்தவள் என்பதை அறியாது போராடிவருகின்றனர். பெண் தன்மேம்பாடு பெறுதல் பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விடுத்து பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு பெண் தன்மேம்பாடு பெறுவதற்காக ஏன் போரட்டமோ அல்லது ஊடகங்களிலோ போட்டு விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு… எப்படி எந்த வித சத்தமுமின்றி ஒரு சிறிய செடி பெரிய விருட்சமாகி அனைவருக்கும் பலன் அளிக்கிறதோ அதே போல நமது வளர்ச்சி சத்தமின்றி இருக்கட்டும் அதன் வெற்றி உலகமெங்கும் பறைசாற்றட்டும்.
மிருதுளாவின் வாழ்விலும் இதுதான் நடந்துள்ளது.
கடவுள் ஒருவருக்கு நிறைய கஷ்டங்களும் வேதனைகளும் கொடுப்பது அவரை சோதித்துப் பார்க்கவே. அவரின் சோதனையில் ஒருவர் வெற்றியடைந்தால் அதற்கு கடவுள் கொடுக்கும் பரிசை எவராலும் அவரிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. அதுபோல தான் மிருதுளாவிற்கு கடவுள் கொடுத்த சோதனைகளில் எல்லாம் அவள் தேர்ச்சிப் பெற்றதால் அவளுக்கு பொன், பொருளோட நிறுத்திடாது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சேர்த்து அளிக்கொடுத்திருக்கிறார். மிருதுளா என்ன ஆனாள் என்று இன்றுவரை படித்துவந்த நமக்கு இப்போது புரிந்திருக்குமே!!
முற்றும்
🙏நன்றி🙏
இதுவரை மிருதுளா என்ன ஆனாள் என்ற இந்த தொடரைப் படித்து ஆதரவளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி சக்தியின் பயணம் தொடரும்.
மெல்ல சக்தியின் அறைக்குச் சென்றுப் பார்த்தான் நவீன். அங்கே சக்தியின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் வேகமாகச் சென்று மிருதுளாவிடம்…
“ஏய் மிருது என்ன ஆச்சு?
ஏன் இப்படி அழுதுண்டிருக்க?
இங்க பாரு மிருது.
ஏன்னு சொல்லு அப்போ தானே நான் என்ன செய்யணும்னு எனக்கும் தெரியும். ப்ளீஸ் அழுகையை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லு மிருது.”
என்று நவீன் கூறியும் விடாது அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவள் அருகிலேயே அவளின் அழுகை நிற்கும் வரை அமர்ந்திருந்தான் நவீன். வெகுநேரத்திற்குப் பின் மிருதுளா தன்னைத்தானே சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு நவீனைப் பார்த்து
“ஆம் சாரிப்பா.
என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை அதுதான் அழுது தீர்த்துட்டேன்”
என்று கூறிக்கொண்டே இருக்கும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டே நவீன் அவளிடம்
“நீ எதுக்கு இப்போ இப்படி விக்கி விக்கி அழுத?”
“ம்….”
“என்ன மிருது?
ஏன்? பதில் சொல்லு!
நம்ம சக்தி ரூமுல உட்கார்ந்துண்டு ஏன் அழுதுண்டிருக்க?
சக்தி ஞாபகம் வந்துடுத்தா?”
என்று நவீன் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் காட்டாறு போல பெருக்கெடுத்தோடியது. அதை அடக்க முயன்றும் முடியாது அழுது கொண்டே…
“ஆமாம் நவீ.
எனக்கு அவ அம்மான்னு கூப்பிடறா மாதிரியே இருக்கு.
அவ ரூமை அடிக்கடி எட்டிப் பார்த்துண்டே இருக்கேன்.
எனக்கு அவ ஞாபகமாவே இருக்குப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு”
“என்ன மிருது இது!!
அன்னைக்கு எனக்கு தைரியம் சொல்லிட்டு இப்ப என்னடான்னா நீ இப்படி அழுதுண்டிருக்க?
நம்ம சக்தி எங்க போயிருக்கா?
படிக்கத் தானே!!
அது தான் அவ வர்ற டிசம்பர் மாசம் வின்டர் லீவுக்கு வந்திடுவாளே!
அப்புறம் என்ன?
நீ அங்கிருந்து கிளம்பும் போது உனக்கு இருந்த மன திடத்தைப் பார்த்து நானே அசந்து நின்னேன்…
ஆனா நீ என்னடான்னா…
அசடு மாதிரி இப்படி அழுதுண்டிருக்கயே!”
“அழுதா அசடா?
அன்னைக்கு நீங்களே ரொம்ப டவுனா இருந்தேங்கள்.
அந்த நேரத்துல நானும் அப்படி இருந்திருந்தா அப்புறம் நம்மளை தேத்தறதுக்கு யாரு இருக்கா?
அதுனால தான் நான் ஸ்ட்ராங்கா இருந்தா மாதிரி காட்டிண்டு உங்களைத் தேத்தினேன்.
ஆனா இங்க வந்ததுக்கப்புறமா என்னால அவ இல்லாத இந்த வீட்டை நினைச்சுக் கூட பார்க்க முடியலை நவீ!
அது தான் அழுதுட்டேன்”
“இட்ஸ் ஓகே மிருது.
சரி முழுசா அழுது முடிச்சாச்சா?
இப்போ சொல்லறேன் நன்னா கேட்டுக்கோ மிருது.
நீ என்னோட முன்னேற்றத்துக்காகவும் நம்ம பொண்ணுக்காவும் உன்னோட வேலை, விருப்பங்கள், ஆசைகள், திறமைகள் எல்லாத்தையும் இத்தனை வருஷங்களா மூட்டைக் கட்டி பரண் மேல போட்டு வைத்திருந்ததை தூசி தட்டி எடுத்து அதுல உன் நேரத்தை செலவிட ஆரம்பி.
இனி நீ உனக்காக வாழ ஆரம்பி.
அதுக்கு என்னாலானதை நான் உனக்குச் செய்யறேன்.
நம்ம பொண்ணு அவ வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா.
இனியும் நீ அவளை நினைச்சுண்டு கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.
பதினெட்டு வயசுல தானே ஒரு டிஸிஷன் எடுத்து வெளிநாட்டுல போய் தனியா இருந்து படிக்கப் போயிருக்காங்கறது சாதாரண விஷயமில்லை!!
இதை நான் உனக்கு சொல்லணும்னும் இல்லை.
இத்தனை வருஷமா நம்மக்கூடவே இருந்த நம்ம பொண்ணு சடன்னா ஒரு நாள் நம்மைவிட்டு இவ்வளவு தூரம் போனா அவ என்ன செய்வா?
தனியா இருப்பாளா?
பசிச்சா என்ன சாப்பிடப் போறா? அவளுக்குப் பிடிச்சது அங்கே கிடைக்குமா?
அப்படியே கிடைச்சாலும் அதை வாங்கி சாப்பிடுவாளா இல்லை காசாகுமேனுட்டு சாப்பிடாம இருப்பாளா?
அப்படிங்கற கவலையெல்லாம் வர தான் செய்யும். என்ன பண்ண?
நாம பெத்தவாளாச்சே! ஆனா இது எல்லாமே அவ நல்லதுக்கு தான்னு நினைச்சுப்போம்.
இந்த எக்ஸ்பீரியன்ஸ் அவளை இன்னும் ஸ்ட்ராங்கான பெண்ணா மாத்தும்.
ஸோ நீ உன் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்க மிருது.
அதுக்காக நீ சந்தோஷப்படணும் பெருமைப்படணுமே தவிர இப்படி விக்கி விக்கி அழப்படாது.
புரியறதா!! சரி வா நாம இப்படியே நடந்துப் போய் நம்மளோட ஃபேவரைட் ஷாப்ல போய் ஆளுக்கொரு சமோசா சாப்டுட்டு அப்படியே ஈவினிங் டீயும் குடிச்சுட்டு வரலாம்.
கம் ஆன் கெட் அப் அன்ட் கெட் ரெடி மை டியர் வைஃப்.”
“நவீ வேண்டாம்…
நம்ம சக்திக்கு அந்த கடை சமோசான்னா ரொம்ப பிடிக்கும்.
அவளுக்கு அங்க அதெல்லாம் சாப்பிட கிடைக்காத போது நாம எப்படி இங்கே சாப்பிடறது?”
“அச்சச்சோ!!!
அப்படீன்னா சக்தி வந்ததுக்கப்புறம் தான் சமோசாவா?”
“எஸ்.
நான் உங்க கூட கடைக்கு வர்றேன் ஆனா சமோசா சாப்பிட மாட்டேன்.
நீங்க சாப்பிட்டுக்கோங்கோ.
நான் டீ மட்டும் குடிக்கறேன்.”
“நமக்கும் இந்த சமோசாவுக்கும் நம்ம லைஃப் ஆரம்பிச்சதுலேந்து டிஷ்யூம் டிஷ்யூமா தான் இருக்கு!!
அது ஏன்னே தெரியலை மிருது!! என்னோட போன ஜென்மத்துல யாருக்கோ சமோசா வாங்கித் தரமா இருந்ததில் அவா விட்ட சாபம் போல எனக்கு தோனறது!!!
டீ மட்டும் குடிக்க எதுக்கு அங்க போகணும்?
இரு நான் சூப்பர் மசாலா டீ வச்சுக் கொண்டு வர்றேன்.
அதுக்குள்ள நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணி ஃப்ரெஷ்ஷா வா பார்ப்போம். போ போ போ”
“ம்..ஓகே. தாங்ஸ்ப்பா”
“எதுக்கு? நான் இன்னும் டீ வைக்கவேயில்லையே…
அதுக்குள்ளேயே தாங்ஸ் சொல்லற”
“டீக்கு இல்லப்பா…
அதைவிட நீங்க ஸ்டாங்கா குடுக்கற சப்போர்ட்டுக்கு சொன்னேன்”
“அதுக்கா!! ஆமாம்.
நம்ம லைஃபோட ஆரம்பத்துல எனக்கு நீ செஞ்சதை நான் உனக்கு இதுவரை செய்யாததை இப்பவாவது செய்யணுமில்லையா அதுனால தான் இன்னேலேந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். எப்படி?”
“எனக்கான உங்க சப்போர்ட்டை என்னை தேவையில்லாம பேசறவாகிட்டேயும், அடுமாண்டு பழி போடறவாகிட்டேயும் திருப்பிப் பேசறதுல காமிங்கோ.
அது தான் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்.
இப்போ இந்த டீயை நானே போட்டுத்தறேன் நகருங்கோ.”
“என்ன மிருது அன்னைக்கு ஹோட்டல்ல என்னென்னமோ வீர வசனங்கள் எல்லாம் பேசின…
நானும் விசிலெல்லாம் அடிச்சேன்…
ஆனா இப்ப என்னடான்னா மறுபடியும் அந்த கூட்டத்தைப்பத்திப் பேசற!!”
“நவீ நான் அன்னைக்கு ஹோட்டல்ல சொன்னது சொன்னது தான் அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனாலும் நம்ம கூட்டம் சும்மா இருக்குமா.
அங்கேந்தும் இங்கேந்தும் அம்புகளை ஏவி விடுவாளே!!
அதைப் பத்தி சொன்னேன்”
“ம்…அதுவும் சரி தான்.
இனி எதைப் பத்தியும் நீ கவலைப்படாதே எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
ஓகே. டீ கொதிச்சிடுத்து…”
“ம்….இத்தனை வருஷமா நீங்க டீ போட்டுத் தந்தா மாதிரி சொல்லறேங்கள்…
எனக்கும் தெரியும் டீ கொதிக்கறதுனுட்டு. நகருங்கோ டம்பளர் எடுக்கணும்.”
என்று இருவருமாக பேசிக்கொண்டே டீ போட்டு இரண்டு டம்பளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்தனர்.
“நவீ நாளையிலேந்து நீங்க வேலைக்குப் போயிடுவேங்கள்.
நம்ம சக்தியும் இங்க இல்ல எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அதுனால நான் ஏதாவது வேலைக்கு டிரைப் பண்ணவா?”
“அதுதான் நீ வீட்டிலிருந்தே அந்த அட்மிஷன் சென்டருக்கு வேலைப் பார்க்கறயே மிருது.”
“அது என்னப்பா ஜஸ்ட் இரண்டு மணி நேர வேலை தான்.
ஆனா அதுக்கப்பறம்?
முன்னாடின்னா சக்தி ஸ்கூலேந்து வருவா அவளுக்கு டிபன் செய்யணும். அப்புறம் ஸ்னாக்ஸ் செய்யணும்னு இருந்தேன் இப்போ அதெல்லாம் இல்லையே! அதுதான் கேட்டேன்”
“உனக்கு விருப்பம்னா தாராளமா போ மிருது. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா”
“என்ன அது?”
“பேசாம நீ சின்னதா வீட்டிலிருந்தே அந்த சென்டருக்குப் பண்ணிக் கொடுத்திண்டிருக்கறதை அவா ஆஃபீஸ்லேயே போய் முழு நேர பணியாளரா ஆயிடேன்.
என்ன சொல்லற?”
“ம்…நல்ல ஐடியா.
நான் இப்பவே ஈமெயில் போட்டுக் கேட்கறேன்”
என்று உடனே வேலைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கழித்து அவளை நேர்காணலுக்கு வரும்படி மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. உடனே மிருதுளா சந்தோஷமானாள். அந்த நேர்காணலுக்கான நாள் வந்தது. என்ன தான் முன்பு ஐந்தாறு வருடங்கள் வேலைப்பார்த்திருந்தாலும் இடையே பத்து வருட காலம் இடைவெளி இருந்ததால் சற்று பதற்றமாகவே இருந்தாள் மிருதுளா. நவீன் அவளின் பதற்றத்தைப் போக்க வேண்டி
“இங்கே பாரு மிருது நமக்கு இப்போ இந்த வேலைக் கிடைச்சா தான் ஆச்சுன்னுட்டு இல்லை.
ஸோ ரிலாக்ஸா இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணு சரியா. அதுவுமில்லாம நீ குவாலிட்டி வொர்க் பண்ணுவனு அவாளுக்கு தெரிஞ்சதுனால தானே இந்த இன்டர்வியூவுக்கே கூப்பிட்டிருக்கா.
ஸோ எந்த வித டென்ஷனுமில்லாம அட்டென்ட் பண்ணு சரியா”
“என்ன தான் சொன்னாலும் ஒரு வித பதற்றம் இருக்கத்தான் செய்யறது நவீ”
“சரி நான் இங்கே ரிசப்ஷனில் உட்கார்ந்துண்டிருக்கேன் நீ போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வா. ஓகே.
ஆல் தி பெஸ்ட்”
என்று நவீன் அவளை அந்த அலுவலகத்தில் விட்டுவிட்டு அவள் இன்டர்வியூ முடித்து வரும் வரை காத்திருந்தான். ஒவ்வொரு முறை லிஃப்ட்டின் கதவு திறக்கும் போதெல்லாம் மிருதுளா வருவாள் என்று எண்ணி எட்டி எட்டிப் பார்த்தான் நவீன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிருதுளா கீழே ரிசப்ஷனுக்கு வந்தாள். நவீன் லிஃப்ட்டைப் பார்த்துப் பார்த்து அசந்துப் போய் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முன் போய் நின்றாள் மிருதுளா. அவளைப் பார்த்ததும் நவீன் தான் அமர்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்து
“ஹேய் மிருது.
இன்டர்வியூ முடிஞ்சுதா?
நீ வருவ வருவேன்னு லிஃப்ட் டோர் ஒவ்வொரு தடவை திறக்கும் போதும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இப்ப தான் இந்த புக்கைப் படிக்க ஆரம்பிச்சேன்…
நீ வந்து நிக்கற…
இப்படின்னு தெரிஞ்சிருந்தா …
நான் இந்த புக்கை அப்பவே படிச்சிருப்பேன்….
ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்…
இன்டர்வியூ எப்படிப் போச்சு?
உன் முகத்தைப் பார்த்தா சக்ஸ்ஸன்னு தான் தோனறது…
அதைப் பத்தி சொல்லு”
“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு வேலைக் கிடைச்சிடுத்து.
இந்தாங்கோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார் சம்பளம்.
ஆம் ஸோ ஹாப்பி நவீ.
இதை நான் உடனே நம்ம சக்தி கிட்ட சொல்லணும்”
“வாவ்!! தட்ஸ் க்ரேட் மிருது.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார்ன்னா நம்ம இந்தியா காசுக்கு கிட்டத்தட்ட மாதம் எட்டு லட்சம் மிருது.
கலக்கிட்டப் போ”
“என்னப்பா நீங்க வாங்கறதுல இது வெறும் அஞ்சோ ஆறோ பர்சன்ட் தானே”
“அதை விடு மிருது.
இத்தனை வருஷங்கள் க்யாப் விட்டுட்டும் நீ இன்டர்வியூ அட்டெனட் பண்ணி அதுல ஆஃபரும் வாங்கிருக்க…
இது பெரிய விஷயம் மா.
சக்திகிட்ட அவ இன்னைக்கு நைட் நமக்கு கால் பண்ணுவால அப்போ சொல்லுவோம்.
சரி சரி டிரீட் எங்க?”
“ம்….மொதோ மாசம் சம்பளம் வாங்கினதுக்கு அப்புறமா தர்றேன்”
“ஓகே மேடம்.
ஜாய்னிங் டேட் என்ன?”
“வர ஞாயிற்றுக்கிழமை ஜாயின் பண்ண சொல்லிருக்கா நவீ”
“சூப்பர்.
நாம இப்போ வீட்டுக்குப் போகலாமா?”
“ஓ எஸ் போகலாம்.
நவீ வீட்டுக்கு போற வழியில் ஸ்டார்பக்ஸ்ல ஒரு காப்பசீனோ காஃபி குடிச்சிட்டுப் போகலாமா ?”
“வித் எக்ஸ்ட்ரா ஷாட் அன்ட் எக்ஸ்ட்ரா ஹாட் ரைட்டா மேடம்”
“எஸ் சார்.”
“ஓகே டன்.”
என்று இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மிருதுளா. முதல் நாள் நவீன் அவளை அவளது ஆஃபீஸில் டிராப் செய்தான். அடுத்த நாள் முதல் அவள் மெட்ரோவில் செல்ல ஆரம்பித்தாள். இப்படியே நான்கு மாதங்களும் இருவரும் வேலை, வீடு, இரவில் சக்தியுடன் ஃபோனில் அரட்டை என ஓடிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் வந்தது சக்தி லீவுக்கு ஊருக்கு வருவதற்காக நவீன் டிக்கெட் புக் செய்தான். அப்போது மிருதுளா நவீனிடம்
“நவீ நம்ம சக்தி வரும்போது நான் ஆத்துல இருக்க வேண்டாமா.
நான் வேலைக்கு போயிட்டா அவ லோன்லியா ஃபீல் ஆகமாட்டாளா?”
“அதெல்லாம் ஆக மாட்டா மிருது. அதுவுமில்லாம அவ வந்து இருக்கப் போறது வெறும் பதினைந்து நாட்கள் தான்”
“அதுதான் சொல்லறேன் அவ நம்ம கூட இருக்கப் போற அந்த பதினைந்து நாட்களும் நான் அவகூடவே இருக்கணும், அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுக் குடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு”
“அதுக்கு!!”
“நான் வேலையை விட்டுடவா?”
“உனக்கென்ன ஆச்சு மிருது?
இதுக்காக யாராவது வேலையை விடுவாளா?
லீவு கேட்டுப் பாரு.”
“ஓ!! ஆமாம் இல்ல.
சப்போஸ் லீவு தரல்லைன்னா?”
“அதைப் பத்தி அப்புறம் பார்த்துப்போம். முதலில் லீவு கேளு”
“ம்…ஓகே.”
மறுநாள் ஆஃபீஸுக்கு சென்றதுமே தன் மேலாளரிடம் சென்று விவரத்தைக் கூறி லீவு கேட்டாள் மிருதுளா. அவர் அவளிடம்
“பதினைந்து நாளெல்லாம் லீவு குடுக்க முடியாதுமா.
நீங்க இன்னும் உங்க ப்ரொபேஷன் பீரியட்ல தான் இருக்கீங்க.
வேணும்னா ஒரு வீக்கென்ட்டை ஒட்டி மூனு நாள் தர்றேன் அவ்வளவு தான் என்னால தரமுடியும்.”
“ம்…சார் ப்ளீஸ் கொஞ்சம் டிரைப் பண்ணுங்க சார்.
நம்ம ஹெட்டுட்டப் பேசிப் பாருங்க சார்.”
“எனக்குத் தெரிந்து அவர் குடுக்க மாட்டார்.
இருந்தாலும் கேட்டுப் பார்க்கறேன். ஆனா நிச்சயம் கிடைக்கும்னு நம்ப வேண்டாம்”
என்று மேலாளர் கூறியதும் மிருதுளா சோர்ந்துப் போய் அவள் இருக்கையில் அமர்ந்து வேலையை செய்ய ஆரம்பித்தாள். சக்தி வருவதற்கு நான்கே நாள் இருந்தது. அதுவரை அவளின் லீவைப் பற்றி அவளது மேலாளர் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் அவரிடம் அதைப் பற்றிப் பேச அவரது கேபினுக்குச் சென்று…
“சார் என் லீவு பத்தி நம்ம ஹெட்டுகிட்டப் பேசறேன்னு சொன்னீங்களே.
அவர் என்ன சொன்னார்?”
“நான் தான் அன்னைக்கே சொன்னேனே. அவர் தரமாட்டார்னு.
அதே தான் இன்னைக்கும்.
அவர் ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியருக்கு…
அதாவது உங்களுக்கு அவ்வளவு நாளெல்லாம் லீவு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்மா. அதுவுமில்லாம நான் தர்றேன்னு சொன்ன அந்த மூணு நாள் லீவையும் குடுக்கக்கூடாதுன்னும் சொல்லிட்டார். அதுனால என்னாலயும் உங்களுக்கு அந்த மூணு நாள் லீவு தரமுடியாது”
“ஓ!!! அப்படியா. அப்போ நான் ஒரு முடிவு எடுக்கணும்.”
“என்ன சொன்னீங்க?”
“இல்ல நான் நம்ம ஹெட்டுட்டயே பேசிக்கறேன்”
“ஓகே! ஆல் தி பெஸ்ட்”
“தாங்ஸ்”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கினாள் மிருதுளா. ப்ராக்டிக்காலட்டிக்கும் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவித்தாள் …அவளுக்குள் இவை இரண்டுக்கும் இடையே பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்ததால் அவள் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது தவித்தாள். வேகமாக எழுந்துச் சென்று தன் குழுவின் ஹெட் என்றழைக்கப்படும் தலைவரிடம் சென்று அவர் அறையின் கதவைத் தட்டி…
“மே ஐ கம் இன் சார்”
“எஸ் கம் இன்”
என்றதும் உள்ளேச் சென்ற மிருதுளா முன் தன் ஹெட் உட்பட ஆறு பேர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் தான் பேச வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு செய்வதறியாது நின்றவளிடம்…
“எஸ் மிஸஸ் மிருதுளா.”
“ம்…ஐ நீட் டூ டாக் டு யூ சார்.”
“நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஷால் வீ டாக் ஆஃப்டர் ஒன் ஆர்…சே….ஒன்னோக்ளாக்”
“இட்ஸ் ஓகே சார். ஐ வில் வெயிட் அன்ட் கம் அட் ஒன் சார். தாங்யூ”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து மணி ஒன்றாவதற்காக காத்திருந்தாள். தன் கைக்கடிகாரத்தில் சரியாக ஒரு மணியானதும் எழுந்து அவர் அறைக்குச் சென்றாள். மீண்டும் கதவைத் தட்டி உள்ளே சென்றாள். அங்கே அவர் மட்டும் அமர்ந்திருந்தார். மிருதுளா உள்ளே வந்ததும் அவளிடம்
“உட்காருங்க மிஸஸ் மிருதுளா நவீன்.”
“தாங்ஸ் சார்”
“ம்…என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”
“அது வந்து …சார்…வந்து”
என்று பேச வந்ததைப் பேசாது தயங்கியவளிடம்
“என்ன உங்க லீவு விஷயமாவா?”
“ஆமாம் சார்.
எங்க பொண்ணு நாலு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு வர போறா சார்.
அதுவும் வெறும் பதினைந்து நாட்களுக்கு தான் சார்.
அதுனால தான் நான் லீவு கேட்டேன்”
“அதெல்லாம் சரி தான்.
ஆனா இந்த ஆஃபீஸ் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியர்களுக்கு லீவே குடுக்கக்கூடாதுன்னு தான் இருக்கே!! அதுக்கு நான் என்ன செய்வேன் சொல்லுங்க.”
“ஸோ இதுக்கு வேற வழியே இல்லையா சார்”
“ம்.ஹூம். எனக்குத் தெரிஞ்சு இல்ல. ஆம் சாரி.”
என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சைலென்ட் மோடில் வைத்திருந்த மிருதுளாவின் ஃபோன் வைப்ரேட் ஆனது. அவள் தன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தாள். பின் எழுந்து தன் ஹெட்டிடம்
“தென் சார்….ஐ வில் ஹாவ் டூ ரிசைன் மை ஜாப்.”
“வாட்?”
“எஸ் சார் எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியலை.”
“இங்க பாருங்க மிருதுளா.
நீங்க போய் உங்க சீட்டுல உட்கார்ந்து ஒரு தடவைக்கு பத்துத்தடவை நல்லா யோசிங்க.
அப்புறமா என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க சரியா”
“இல்ல சார் இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல சார்.
நான் மறுபடியும் வொர் ஃப்ரம் ஹோம் மாட்யூலுக்கே போயிடறேன் சார்.”
“ஆனா அதுல இப்ப நீங்க வாங்கற சம்பளத்துல பாதிக்கும் கம்மியா தான் கிடைக்கும்”
“இட்ஸ் ஓகே சார்.
எனக்கு அது போதும்.
நான் என் பொண்ணுக் கூட இருக்கணும் தட் இஸ் மோர் இம்பார்ட்டன்ட் ஃபார் மீ சார்.”
“யுவர் டாட்டர் இஸ் லக்கி டூ ஹாவ் யூ ஆஸ் ஹெர் மதர்.
அப்போ இது தான் உங்க முடிவா?”
“எஸ் சார்.
என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன் சார்.
ஆக்சுவலி அப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் குடுத்துவச்சிருக்கணும் சார்.”
“ஓகே தென்.
ஒரு ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் கொடுத்திடுங்க.
நீங்க இந்த மாசம் இன்னையோட சேர்த்து பதினோரு நாள் ஆஃபீஸ் வந்திருக்கீங்க ஸோ அதுக்கு உண்டான சம்பளத்தை நம்ம அக்கௌன்டன்ட்ட வாங்கிக்கோங்க நான் அவர்கிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
மீண்டும் ஆன்லைன்லயே உங்க வேலையைத் தெடருங்கள்.”
“தாங்யூ சோ மச் சார். ஷுவர் சார். பை”
“ம்….பை.”
என்று அவருடன் பேசி முடித்து அந்த அறையை விட்டு வந்ததும் மிருதுளாவுக்கு ஏதோ சாதிச்சதுப் போல உணர்ந்தாள். வேகமாக தன் க்யூபிக்கலுக்குச் சென்று தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்தப் பின் அக்கௌன்ட்டென்ட்டிடம் சென்று கணக்கை சரி பார்த்து அதற்கான காசோலையைப் பெற்றுக் கொண்டு அங்கு அவளுடன் வேலைப் பார்த்தவர்களிடம் சொல்லிக் கொண்டுவிட்டு சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மெட்ரோ ஸ்டேஷன் சென்று டிரெயினைப் பிடித்து வீட்டுக்குச் சென்றாள். மாலை ஐந்தரை மணியானதும் வழக்கம் போல நவீன் வீட்டுக்கு வந்து கதவில் சாவியைப் போட்டுத் திறக்க முயற்சிக்கும் முன் கதவைத் திறந்தாள் மிருதுளா. அவளை அந்நேரம் வீட்டில் பார்த்ததும் நவீன் ஆச்சர்யத்தில்
“மிருது என்ன இந்த நேரத்துல நீ இங்க இருக்க!!!.
எப்பவும் ஆறு மணிக்கு தானே வருவ?”
“உள்ள வாங்கோப்பா நான் சொல்லறேன்”
என்று கூறி நவீன் வீட்டினுள் வந்ததும் கதவை சாற்றிவிட்டு அடுப்படிக்குச் சென்று ஒரு டிரேவில் இரண்டு கப் காஃபி மற்றும் இரண்டு சமோசா வைத்து ஹாலுக்கு எடுத்து வந்து நவீன் ஃப்ரெஷ்ஷாகி வரும்வரைக் காத்திருந்தாள் மிருதுளா. நவீன் வந்தான் சமோசாவை வலது கையிலும் காஃபி கப்பை இடது கையிலும் எடுத்து எடுத்துக் கொண்டே
“என்ன மிருது நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே நீ!!”
என்று சமோசாவை முதலில் சாப்பிட்டான். அப்போது மிருதுளா மெல்ல தயங்கி தயங்கி அவனிடம்
“நவீ நான் ஒண்ணு செஞ்சுட்டு வந்திருக்கேன்…
அதைச் சொன்னா நீங்க கோபப்படக்கூடாது சரியா”
“நான் என்னைக்கு எதுக்கு உன் கிட்ட கோபப்பட்டிருக்கேன் மிருது. சும்மா சொல்லு”
“நான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்”
“என்னது ரிசைன் பண்ணிட்டேன்னு சொன்னயா!!
இல்ல பண்ணட்டுமானு சொன்னயா!!!”
என்று கேட்டுக் கொண்டே தன் கைகளிலிருந்த கப்பையும் சமோசாவையும் டிரேயில் வைத்துவிட்டு மிருதுளாவைப் பார்த்தான் அவளின் பதிலிளுக்காக…
“இல்ல நவீ…
ரிசைன் பண்ணிட்டேன்னு தான் சொன்னேன்.
சாரி. நான் எங்க ஹெட்டுட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் ஆனா அவர் லீவு தரவே முடியாதுன்னுட்டார்.
எனக்கு வேற வழித் தெரியலை அதுனால உடனே ரெஸிக்னேஷன் லெட்டரைக் குடுத்துட்டு இந்த மாசம் நான் வேலைக்குப் போன இந்த பதினோரு நாள் சம்பள செக்கையும் வாங்கிண்டு வந்துட்டேன்.”
“என்ன மிருது சொல்லற?
மாசம் எட்டு லட்சம் சம்பாதிச்சிண்டிருந்ததையா இவ்வளவு ஈஸியா விட்டுட்டு வந்திருக்க?”
“மாசம் மூவாயிரத்து ஐநூறை தான் விட்டுட்டு வந்திருக்கேன் நவீ.
எனக்குப் பணத்தை விட என் பொண்ணுக் கூட இருக்கறது, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணறது தான் முக்கியமாவும் ஆசையாவும் இருந்தது அதுனால தான் இப்படிச் செஞ்சேன்.
அவ கல்யாணம் பண்ணிண்டு போயிட்டான்னா அப்புறம் அவளைப் பார்க்கக் கூட நாம பல பேர்ட்ட பர்மிஷன்கேட்க வேண்டி வரலாம். இல்ல அவளே கூட அவ லைஃப்ல பிஸியாகிடலாம் இல்லையா.
அதுனால இப்போ கிடைக்கற இந்த நேரங்களை மிஸ் பண்ண நான் தயாரா இல்லை நவீ”
“ம்….ஓகே! உன் இஷ்டம்.”
“ஆனா நான் சக்திக்காக தான் வேலையை விட்டேன்னுட்டு அவ வந்தா சொல்லக் கூடாது சொல்லிட்டேன்.”
“உத்தரவு மேடம்.”
தன் மகளுடன் இருக்க வேண்டும் என்று தன் வேலையை வேண்டாம் என்று தள்ளி வைத்த மிருதுளா சக்தியின் வரவுக்காக அவளுக்கு மிகவும் பிடித்த முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சுவீட் எல்லாம் செய்து வைத்தாள். நான்கு மாதங்கள் காத்திருந்த மிருதுளாவும் நவீனும் ஏர்போர்ட்டில் தங்கள் மகளின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
தொடரும்….
ஈஸ்வரன் வீட்டிலிருந்து ஹோட்டல் ரூமிற்கு திரும்பி சென்றனர் நவீன், மிருதுளா மற்றும் சக்தி. மிருதுளா அவளின் அப்பா அம்மா தங்கியிருந்த அறைக்குச் சென்று
“அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் டின்னர் சாப்டேங்களா?”
“ஆங் நாங்க சாப்டாச்சு. இங்கேயே ரெஸ்டாரண்ட் ல ஆர்டர் செஞ்சு சாப்டுட்டோம். நீங்க மூணு பேரும் சாப்டாச்சா?”
“ஆங் நாங்க சாப்டாச்சு. சரி… அது கேட்டுட்டு போக தான் வந்தேன்.
சரி நீங்க தூங்குங்கோ. நானும் போய் தூங்கட்டும்.
நாளைக்கு காலையில ஒரு ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே சென்னை போயிடலாம் சரியா”
“ஓகே மிருது நாங்க ரெடியா இருக்கோம். குட் நைட் போய் தூங்கு”
மிருதுளா அவர்கள் அறைக்கு வந்துப் பார்த்தாள்
“என்னப்பா அதுக்குள்ள சக்தி தூங்கிட்டாளா?”
“ஆமாம்… காலையிலேந்து டிராவல் பண்ணிருக்கா இல்லையா…அதுதான் தூங்கிட்டா போல.
என்ன உன் மச்சினன் உன்னை மதிச்சு நாளைக்கு காதுக்குத்துக்கு கூப்பிட்டிருக்கான்…
நீ என்னடான்னா வரலைன்னு சொல்லிட்டப் போல!!!”
“ஏன் உங்களுக்கு போகணும்னா நாம போயிட்டு வரலாமே!!
எப்பவும் நான் மட்டுமே தான் குத்திக்கறேன்.
ஒரு தடவை நீங்களும் குத்திக்கோங்கோ …காத..!!”
“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் உறவு விட்டுப் போய் ரொம்ப வருஷங்களாயாச்சு…
உனக்கு தானே அவா எல்லாம் சொந்தம். அதுதான் உன் கிட்ட கேட்டேன்.
எனக்கு தெரியாம எவ்வளவோ காது குத்திருக்கா நான் இல்லன்னு சொல்லலை …
ஆனா என்னைக்கு எனக்கு தெரிஞ்சே காது குதத்தினாளோ அன்னேலேந்து நான் உஷாராகிட்டேன்.
நானா அங்க போகணும்னு சொன்னேன்!! நானா அவாளை டிரிப்புக்கு கூட்டிண்டு போகணும்னு சொன்னேன்?
இல்ல நானா வாட்ச், வைர மூக்குத்தி அப்புறம் என்ன அது ..
ஆங் ஜர்கான் தோடு அன்ட் டேப்லெட் வேற….
ம்… என்ன ஆச்சு காலையில நீ அவாளுக்கு கொடுத்தது மாலையில் கை மாறிடுத்து பார்த்தே இல்ல!!.”
“ஆமாம் நவீ. எனக்கு அதுல ரொம்ப கோவம் தான்.”
“இதுக்குத் தான் பெரியவா சொல்லி வச்சிருக்கா….
தானமானாலும், பரிசானாலும், உதவியானாலும் அதோட மதிப்பு தெரிஞ்சவாளுக்கு மட்டும் தான் இதெல்லாம் செய்யணும்னு.
அதை விட்டுட்டு கண்டவாளுக்கெல்லாம் செஞ்சா அது இப்படி தான் கை மாறும். கொடுத்தவாளையே வேதனையும் பட வைக்கு.”
“ம்…உண்மை தான்.
நான் ஒத்துக்கறேன்.
இனிமே இவாளுக்கு எல்லாம் எதுவுமே வாங்கிக் குடுக்க மாட்டேன்.
இதுவே கடைசி நவீ.”
“ம்…பார்ப்போம் பார்ப்போம்.”
“இல்ல நவீ…இவ்வளவு வருஷங்களா நானும் விட்டுக் கொடுத்து வந்ததில் அவா கொஞ்சமாவது மாறியிருப்பானு நினைச்சேன்.
இல்லை துளி கூட அவா மாறலை. இன்னமும் அவா மனசுல அதே வஞ்சத்தோட தான் இருக்கா.
நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி இவா எல்லாம் எப்போதும் திருந்த மாட்டானு நான் நல்லா புரிஞ்சுண்டுட்டேன்.
இனி நீங்க பார்க்கப் போறது வேற வேற வேற மாதிரியான மிருதுளாவ.”
“டைலாக் எல்லாம் சூப்பர் தான். கை தட்டி விசிலடிக்கணும் போல தான் இருக்கு…”
“ஏன் இழுக்கறேங்கள் நவீ… சொல்ல வந்ததை சொல்லிடுங்கோ”
“இல்ல உன் பேச்சு …
அவா உன் முன்னாடி நல்லவா மாதிரி நடந்துண்டாலே காணாம போயிடுமேன்னு சொல்ல வந்தேன்.”
“இனி அது மாதிரி எல்லாம் நடக்கவே நடக்காது நவீ.
மதியாதார் வாசல் மிதியாதேன்னு சொல்லுவா…
அது மூனாம் மனுஷாலுக்கு தான்னு இவ்வளவு நாளா நினைச்சுண்டிருந்தேன். ஆனால் அது பெத்தவாளானாலும், கூடப் பிறந்தவாளானாலும் பொருந்தும்னு இப்போ தான் உணர்ந்தேன்.
என்னை பாடாப்படுத்தினா, உங்களை மதிக்கறதே இல்லை, இன்னமும் என்னைப் படுத்திண்டு தான் இருக்கா. அவாளோட படுத்துற ஸ்டைல் அதாவது பாங்கு இருக்கே அதை இந்த பதினேழு வருஷமா அப்படியே ஒரே மாதிரி தான் ஃபாலோ பண்ணிண்டு வரா .
இதுல என்னன்னா அதெல்லாம் நான் புரிஞ்சுக்காததால தான் அவாளுக்கு திருப்பி பேச மாட்டேங்கறேன்…
இல்ல திருப்பி எதுவும் செய்ய மாட்டேங்கறேன்ங்கறது அவாளோட நெனப்பு…
ஆனா உண்மையில் சொல்லப் போனா நான் இத்தனை வருஷங்களா அவாளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துண்டே வந்திருக்கேன்…
ஏதாவது ஒரு வாய்புல அல்லது சந்தர்பத்துல எப்பயாவது…
மனசுக்குள்ளயாவது…
“ச்சே இந்த பொண்ணை நாம என்ன பாடுபடுத்தியிருக்கோம்!! ஆனாலும் அவ ஒரு வார்த்தைக்கூட மரியாதைக் குறைவாவோ இல்ல திருப்பி அவமானப்படுத்தவோ இல்ல பேசவோ கூட செய்ய மாட்டேங்கறாளே…
எங்களுக்கு எப்போதும் நல்லதே தானே செஞ்சிண்டிருக்கா…” ன்னு ஒரு மூலையில நினைச்சிருந்தான்னா ஒருவேளை திருந்தி இருக்கலாம்!!!
ஆனா இவா நீங்க சொல்லறா மாதிரி ஜென்மத்துக்கும் திருந்த மாட்டானு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுத்து. எனக்கு அவா கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் இருந்தது.
அதை அவா உடைச்சு சுக்கு நூறாக்கிட்டா ஸோ இனிமேல் எனக்கு எந்த வித எதிர் பார்ப்பும் இல்லை பந்தமும் இல்லை. நான் படிச்சது கான்வென்ட்டா அங்கே ஸ்கூல் சுவற்றில் எழுதியிருந்தது என் மனசுலப் பதிஞ்சிடுத்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” னுட்டு போட்டிருந்தது…
அதை செய்யப் போய் நல்லா ரெண்டு கன்னத்துலேயும் மாறி மாறி வாங்கிண்டதுக்கப்புறமா தான் புத்தி வந்திருக்கு அதெல்லாம் கடவுள் அவதாரங்களால தான் முடியும் நான் வெறும் சாதாரணமான மனுஷி தானே. என்ன பண்ண?
ஒரு நாள் ஃபேஸ்புக்ல ஒண்ணு படிச்சேன்…”நீ எவ்வளவு பொறுத்துக் கொள்கிறாய் என்பதில் தான் அடுத்தவர் உன்னிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். ஆகையால் உன் பொறுமையை எப்போது முறித்திறிய வேண்டுமென்பது உன்னிடம் தான் உள்ளது. கவனமாக இரு” னுட்டு எனக்காகவே போட்டா மாதிரி இருந்தது அந்த போஸ்ட்.
நான் நிறைய யோசிச்சாச்சு ….
இவாளுக்கு நான் என்ன தான் நல்லது நினைச்சாலும் சரி செஞ்சாலும் சரி என்னை கெட்டவள்ன்னு தான் முத்திரைக் குத்தப்போறா …
அப்புறமும் நான் ஏன் இவாளுக்கு நல்லவளா இருக்கணும்? சொல்லுங்கோ!!”
“மிருது!!! நீ ஒண்ணு அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போற இல்லாட்டி இந்த எக்ஸ்ட்ரீமுக்கு வர…
நீ சொல்லறதெல்லாமே வெரி வெரி கரெக்ட் தான்…
ஆனா நீ கடைசியா சொன்ன பாரு இவாளுக்கு ஏன் நீ நல்லவளா இருக்கணும்னு….
அது தான் எனக்கு பயத்தைக் குடுக்கறது”
“இதுல என்ன பயப்படறதுக்கு இருக்கு நவீ”
“இல்ல நீயும் அவாளை மாதிரியே மாறப்போறயோன்னு தான்….
நீ நல்லவள்.
நல்லவளாகவே இரு.
ஆனா அவாகிட்ட வேண்டாம் அவ்வளவு தான் நான் சொல்வேன்…
ஆனா நீ ஏன் அவாகிட்ட கெட்டவளாக
நடந்துக்கணும்?”
“ச்சே ச்சே!!! நவீ நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்.
நான் கெட்டவளா ஆவேன்னும் சொல்லலை…
இனி அவாளுக்கு கெட்டதை செய்யவேன்னும் சொல்லலை…
அது என்னால முடியாததும் கூட…
நான் என்ன சொல்ல வந்தேன்னா நல்லது செய்து கெட்டவளாகறதை விட எதுவும் செய்யாமலிருந்தே கெட்டவளா இருந்துடறேனேனு சொல்ல வந்தேன்….
அப்படி இருந்தா எனக்கும் மனசு வலிக்காதில்லையா!!
ஆமாம்…நாம இப்படி எப்போதும் நல்லதையே செஞ்சுட்டு கடைசியில அவா அவாளோட குணத்தைக் காட்டினா அப்புறம் நமக்கு வலி ரொம்ப இருக்குமில்லையா…
அதே நாம எதுவுமே பண்ணாம இருந்துட்டு அவா அப்படியெல்லாம் பண்ணியிருந்தா நமக்கு வலியே இருந்திருக்காதுன்னு சொல்ல வந்தேன்.”
“ஓ!! அப்படி!! ஓகே ஓகே!!
நான் நினைச்சேன் அடிப்பட்டு அடிப்பட்டு ஒரேயடியா நல்லவளேந்து அப்படியே கெட்டவளாகிடுவியோன்னு!!
அதுதானே!
நீ சொன்னா மாதிரி உன்னால அது முடியாது தான்.
ஆனாலும் அவா உன்னை அப்படி மாத்திட்டாளோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான்”
“அப்படி இல்லை நவீ…
ஆனாலும் அவா என்னை மாத்ததான் செய்திருக்கா.
வெறும் பச்ச மண்ணாட்டம் உங்காத்துக்குள்ள வந்தேன்…
அங்கேயே வேரூன்றிய மரமாட்டம் நீங்களும், உங்களை இறுக்க பிடித்திருக்கும் வளமையான மண் போலவும் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க சொன்னா மாதிரி இந்த மண்ணை எல்லாருமா போட்டு அடிச்சு, மிதிச்சு, சுட்டு, அதில் துப்பி எல்லாமே செஞ்சா, செஞ்சுண்டுமிருக்கா.
கணவன்ங்கற செடியை பிடிச்சுண்டு அவரையும் வளமாக்கி நாமளும் வளமாகலாம்னு தான் வந்தது மண்ணுங்கற மனைவி.
ஆனால் அந்த கணவன் அந்த மண் தன்னை வந்து பிடித்துக் கொண்ட புதிதில் எல்லாருமா தூற்றி பாடாய்ப் படுத்தும் போது அவர் கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, வாய் பேசவில்லை, மூலை செயலிழந்து போனதால் தான் மண் எவ்வளவு வளத்தை அள்ளிக் கொடுத்தாலும் இன்னமும் தூற்றப் பட்டுக்கொண்டே இருக்கு…
கணவன்ங்கற செடி எப்போது அந்த மனைவிங்கற மண்ணோடு சேர்ந்தானோ அப்போதே அவர்களைச் சுற்றி வளர்ந்த பழி, பொய், திமிர், படுத்தல்கள், இகழ்ச்சி, அவமரியாதை போன்று (அவன் வீட்டினுள்) முளைத்த புல்லுருவிகளை எல்லாம் வெட்டி எறிந்திருந்தால் அந்த மண்ணை எவரும் தூற்றியிருக்க மாட்டார்கள்.
தூற்றவும் யோசித்திருப்பார்கள். ஏனெனில் தாங்கள் புல்லுருவிகளானால் வெட்டி எறியப்படுவோம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் அந்த செடி அதை செய்யாது அது பாட்டுக்கு தானாக மண்ணின் வளங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பெரிய விருட்சமானது.
அப்போது அந்த விருட்சம் தங்களுக்கு இனி தீனி போடாது என்றுணர்ந்த புல்லுருவிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முன்பு மண்ணை தாக்கியது போலவே அந்த விருட்சத்தை தாக்கியது.
அப்போது தான் விருட்சம் அதன் வலியையும் வேதனையையும் உணர்ந்து இனி அங்கே இருந்தால் நாம் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
உடனே அந்த இடத்திலிருந்து தனது மண்ணோடு வேறு இடம் சென்றது. அன்று முதல் அந்த விருட்சம் தான் செடியாக இருந்த இடத்தையே மறந்துப் போனது.
ஆனால் மண் அன்றும் மண் தான் இன்றும் மண் தான்.
செடி விருட்சமானதும் மண்ணிடம் தன்னையும் மணலாக மாறச்சொல்லி வற்புறுத்தியது….
மண்ணும் மணலாகியிருந்தால் அப்படியே சர்ரென்று சருக்கி எங்காவது தப்பித்திருக்கலாம் …
ஆனால் விருட்சத்துக்கு தெரியாது இந்த மண் மணலானால்…
தான் அதில் அப்படி கம்பீரமாக நிற்க முடியாதென்பது.
ஆகையால் தான் மண் மணலாகாமல் இவ்வளவு நாட்கள் அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தது.
மண்ணில் விதையைத் தவிர வேறு எது வீழ்ந்தாலும் அவற்றை மட்க வைத்துவிடும்.
அது போல தான் திருமணம் என்ற விதையை இந்த மண்ணில் விதைத்ததால் அந்த விதை வளரும் பருவத்திலேயே அதனோடு சேர்ந்து அந்த மண்ணில் விளைந்த புல்லுருவிகளில் நல்லவைகளை விட்டுவிட்டு தேவையில்லாதவைகளை மட்கச் செய்தது அந்த மண்.
அப்படி மண் மட்கச் செய்துக் கொண்டிருந்ததிலே அதுவும் சோர்ந்துப் போய்விட்டது…
இனி அதனால் அதற்கு மேல் எந்த புல்லுருவிகளையும் மட்கச் செய்ய முடியாது என்றானதும் மணல்சாரி மண்ணாக மாற முடிவெடுத்துள்ளது. அதாவது விருட்சம் பாதிக்காதவாறு மண்ணாகவும் மற்றவை எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு மணல்சாரி மண்ணாக இருந்து நம்முள் தங்க விடாது சருக்கிக் கொண்டே போகப் போகிறாள் இந்த புது வகையான மணல்சாரி மண்ணான உங்கள் மனைவி மிருதுளா.”
“அப்பப்பா!!! மிருது கலக்கிட்ட போ…
நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் ஆரம்பத்துல கொஞ்சம் அவாளை லூசா விட்டுட்டேன்…
அப்பா அம்மா தானேனுட்டு கொஞ்சம் விட்டது தப்புதான்.
ஆரம்பத்துலேயே கடிவாளத்தைப் போட்டிருந்தா குதிரைகள் சரியா ஓடியிருக்கும் மண்ணுக்கும் பாதிப்பு வந்திருக்காது….
ஆனால் அந்த குதிரைகளுக்கு அவ்வப்போது கடிவாளத்தைப் போட்டுண்டு தான் இருந்தேன்….
ஒரு கட்டத்துல அதுகள் அதுக்கெல்லாம் அடங்காததுகள்னு தெரிஞ்சுடுத்து…
அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்…
அது உன்னை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.
சாரி மிருது.”
“இட்ஸ் ஓகே நவீ.
நீங்களும் அப்போ திருமணம்ங்கறதுல நான் எப்படி புது மண்ணாக இருந்தேனோ அதே போல நீங்களும் புது விதையாகத் தானே இருந்தேங்கள்.
நீங்களும் சுற்று சூழல்களை புரிஞ்சிண்டு வேரூன்றி வளர்றதுக்கு கொஞ்சம் வருஷம் எடுத்தது…
அதை அவா எல்லாருமா யூஸ் பண்ணிண்டுட்டா அவ்வளவு தான். ‘மண்ணுங்கிறது காலுக்குக் கீழே சும்மா கிடக்குற தூசி’ ன்னுதான் பெரும்பானவாளோட நினைப்பு. அப்படித்தான் உங்க ஆத்துலேயும் நினைச்சிருக்கா.
ஆனா அதுனால தான் அதில் விதைத்த திருமணம்ங்கற விதை
இன்று விருட்சமாக வளர்ந்து தனக்கும் தன்னை வளமாக வளரச்செய்த மண்ணுக்கும் அவர்களின் சின்ன செடிக்கும் பாதுகாப்பாக இருக்குங்கறதை அவாளால ஏத்துக்க முடியாதைக்கு தான் அவா இப்படி கிடைக்குற சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை படுத்திண்டிருக்கா.
ஆனா இனி அவாளுக்கெல்லாம் டாட்டா பை பை சொல்லிட்டு என்னோடிருக்கும் விருட்சத்தையும், செடியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டு நானும் வளமாக வாழப் போகிறேன்.
டாட்”
“வாவ்!!! வாவ்!!! வாவ்!!! மிருது ஆசம். சூப்பர் இப்போ அடிக்கறேன் பாரு விசில்.”
“அச்சச்சோ!! பேசாம இருங்கோப்பா குழந்தை எழுந்துக்கப் போறா.
அப்புறம் ஹோட்டல் ஸ்டாஃப் யாராவது என்ன ஏதுன்னு கேட்டுண்டு வந்திடப் போறா”
“ஓகே !! ஓகே!! ஓகே!! ஆனா ஒண்ணு உன்கிட்ட நான் சொல்லியே ஆகணும் மிருது.”
“என்னது நவீ?”
“நீ இவ்வளவு பொறுமையா இருந்ததால தான் என்னால அவாளை எல்லாம் நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சுது.”
“என் பொறுமை எப்படி உங்களுக்கு அவாளை புரிய வச்சுது? புரியலையே நவீ!”
“அதாவது அவா அப்படி உன்னைப் படுத்தின போதெல்லாம் நீ அமைதியா ஏதும் திருப்பி சண்டை போடாமலும், திருப்பி பேச்சுக்குப் பேச்சு பேசாமலும் இருந்ததால் தான் எனக்கு தப்பு யார் சைடுல இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.”
“ம்…ஹூம்…ப்ளீஸ் எக்ஸ்ப்ளேயின் நவீ”
“சப்போஸ் நீயும் அவாகிட்ட எகிறிண்டு போயிருந்தேனா அப்புறம் சண்டை பெருசாகியிருக்கும்.
அப்போ அந்த சண்டையை நிறுத்தறதுல தான் என் கவனம் போயிருக்குமே தவிர தப்பு யார் பண்ணிருப்பானு யோசிச்சிருக்கக் கூட மாட்டேன்.
ஆனா நீ அமைதியா பொறுமையா இருந்ததால ஐ காட் எ க்ளியர் பிக்சர் ஆஃப் எவ்ரிதிங்”
“ஓ!!! அப்படி சொல்லறேளா!!! ஓகே!! இப்போ புரியறது.
எல்லா நேரங்களிலேயும் நாம திருப்பி பேசணும்னு இல்ல நவீ.
அதே போல எல்லா சண்டைகளிலும், போராட்டங்களிலும் நாம கலந்துக்கணும்னும் இல்லை.
நமது சண்டைகளையும், பேச்சையும், போராட்டங்களையும் எப்போ நம்ம எதிராளி கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள்னு தோனறதோ அப்போ போதும்.
இல்லாட்டி அப்படியே நகர்ந்துப் போயிடறது தான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது.
எப்பவுமே கத்திண்டும் சண்டைப் போட்டுண்டும், எல்லாத்துக்கும் போராடிண்டும் இருந்தா குடும்பம் நல்லாவா இருக்கும்?
அதுவுமில்லாமல் பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்லுவா இல்லையா அது போல என்னோட இந்த பதினேழு வருடப் பொறுமை எனக்கு இனி நான் வாழப் போற இருபது, முப்பது அல்லது ஐம்பது வருஷங்களை நிம்மதியாக இருக்கச் செய்யப் போறது.
இது என்னோட ஸ்ட்ரேடர்ஜீன்னு சொன்னாலும் ஐ வில் நாட் கேர் அபௌட் இட்.
ஏன்னா நான் அவாகிட்டேந்து எல்லாம் ஒதுங்கினாலும் அவாளுக்கு என்கிட்ட வந்து ஏன் இப்படி பண்ணறனு கேட்க இனி எந்த வாயுமில்லை.
அப்படியே கேட்டுண்டு வந்தாலும் என் விருட்சம் அவாளை எல்லாம் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடாது?”
“ஓ!! ஷுவர்.
நோ டவுட் அபௌட் இட்.
நிச்சயமா.
இனி இந்த விருட்சம் இருக்கும் காலம் வரைக்கும் அதுக்கு சொந்தம், பந்தம் எல்லாமே இந்த பொறுமையான பூமா தேவியும் அவளின் அழகிய இளவரசியும் தான்.
வேறு எவருமில்லை.
வேறு எவரும் இனி நம்மை வீழ்த்தும் எண்ணத்திலோ இல்ல
நமக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்திலோ இல்ல
நம்மளை அவமானப்படுத்தும் விதத்திலோ ஏதாவது செஞ்சான்னா அவாளை எல்லாம் பிடித்து நொறுக்கிடுவேன்.
கவலையில்லாமல் நிம்மதியா படுத்துத் தூங்கு மிருது.
டைம் என்ன ஆயிடுத்து பாரு”
“ஓ மை காட்!!! இட்ஸ் டுவெல்வோ க்ளாக்!!! சரி சரி சரி படுங்கோ தூங்குவோம். நாளைக்கு காலையில என் அப்பா அம்மா ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி வந்து காலிங் பெல் அடிக்கப்போறா நாம தூங்கிண்டு இருக்கப் போறோம்…குட் நைட் நவீ.”
“குட் நைட் மிருது”
மறுநாள் விடிந்ததும் அனைவரும் எழுந்து கோவில்களுக்கெல்லாம் சென்று விட்டு சென்னையை சென்றடைந்தனர்.
அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு ஜூலைப் பத்தாம் தேதி குவைத்துக்கு திரும்பினர் நவீன் குடும்பத்தினர்.
சக்தி நன்றாக படித்து ப்ளஸ்டூ தேர்வில் அவளின் பள்ளியிலேயே இரண்டாவதாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று லண்டனில் சென்று படிக்க வேண்டும் என்ற அவளின் கனவும் நெனவானது.
அவளை நவீனும் மிருதுளாவும் லண்டனுக்கு கல்லூரியில் விட்டு வரச் சென்றனர்.
அவளை அங்கே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பும் நாளன்று நவீனால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தவித்தான்.
ஆனால் சக்தி முன் அழுதால் அவளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடுவோமோ என்றெண்ணி எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சக்திக்கும் அழுகை அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்த்தது உடனே மிருதுளா அவளைக் கட்டியணைத்துக் கொண்டு
“இது உன்னுடைய கனவு இல்லையா.”
“ஆமாம்”
“இதுக்காக நீ கஷ்டப்பட்டு படிச்சு இங்க வந்திருக்க?”
“ஆமாம்மா”
“நாற்பதாயிரம் பேர் அப்பளைப் பண்ணி அதுல மூவாயிரம் பேர் தான் தேர்வாகியிருக்கா அதுல நீயும் ஒருத்தி இல்லையா”
“ஆமாம்மா”
“நாங்க உன்னை நினைத்து மிகவும் சந்தோஷப்படறோம்.
உன் அப்பா அம்மான்னு சொல்லிக்கறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அதை நீ எங்களுக்குத் தந்திருக்க சக்திமா.
இனி உன் ஆசைகள், உன் கனவுகள் அதையெல்லாம் தேடிப் போ கண்டுபிடி வாழ்க்கையை சுவாரஸ்யமா வாழக்கத்துக்கோ…
அழதே கண்ணா.
உனகாக நாங்க ரெண்டு பேரு எப்பவுமே இருப்போம்.
சரியா.
ஆர் யூ ஓகே நவ்.
இல்லாட்டி வா எங்களோடவே திரும்பி குவைத்துக்கே வந்துடு”
“ம்…ம்….அப்புறம் எதுக்கு இவ்வளவு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் எழுதினேனாம்”
“ம்…தெரியறதுல்ல…
அப்போ ஒழுங்கா இங்கு இருந்து உன் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வா.
சரியா.
எப்படியும் நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரலாமே அப்புறமென்ன.
ஓகே சியர்அப் மை பேபி.”
“இப்போ பாருமா.
அம்மா அன்ட் அப்பா பத்திரமா குதைத் போயிட்டு வாங்கோ.
நான் நல்லா படிச்சுட்டு ஊருக்கு வர்றேன். இந்த டிசம்பரில் பார்ப்போம் பை.
எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு பை பை. பைப்பா”
என்று நவீனையும் மிருதுளாவையும் இறுக்கக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு அவளின் கனவுகளுக்குப் பின்னால். சென்றாள் சக்தி.
ஹுத்ரோ ஏர்போர்ட்டில் நவீன் பாத்ரூமுக்குள் அடிக்கடிச் சென்று அழுதுவிட்டு வந்தான். அவர்களின் ஃப்ளைட்டுக்காக அமர்ந்திருந்த போது
“நவீ என்னது இது இப்படி அழுதுண்டே இருக்கேங்கள்.
நம்ம சக்தி இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த காலேஜ்ல சேர்ந்திருக்கா.
அவளே தன்னம்பிக்கையோட எவ்வளவு தெளிவா முடிவெடுத்து வந்திருக்கா…
அவ்வளவு நல்லா அவளை வளர்த்திருக்கோம் நாம…
அதை எல்லாம் நினைச்சுப் பெருமைப் படுவேங்களா அதை விட்டுட்டு அழுதுண்டே இருக்கேங்களே!!”
“அழுதேனா இல்லையே”
“ம்…உங்க முகமே காட்டிக் கொடுக்கறதே”
“இல்ல மிருது …பதினெட்டு வருஷமா நம்ம கூடவே இருந்துட்டு இப்போ திடீன்னு அவ பாட்டுக்கு கிளம்பி லண்டன் வந்துட்டா…
நாம குவைத்துல என்ன பண்ணப்போறோம்?”
“இது நல்லா இருக்கே!!!
அதுக்காக அவளை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா சொல்லுங்கோ.
அவளைப் பெத்தோம் சந்தோஷமா நல்லபடியா வளர்த்தாச்சு.
இப்போ அவ அவளோட கனவுகளைத் தேடி போக ஆரம்பிச்சுட்டா…
இனி நாம நம்மளால ஆன ஹெல்ப்பை மட்டும் பண்ணிண்டு பேசாம நாம இருக்கற இடத்துல இருந்துக்க வேண்டியது தான்.
எனக்கும் வருத்தமா தான் இருக்கு ஆனாலும் ப்ராக்டிக்கலாவும் யோசிக்கணும் இல்லையா நவீ.
உங்க பொண்ணை படிக்க காலேஜ்லுல விடறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே…
அப்போ இருபத்தி இரண்டு வருஷமா என்னை பார்த்து பார்த்து வளர்த்த என் பேரன்ட்ஸை கல்யாணம்ங்கற பேர்ல ஒரே நாள்ல எல்லாத்தையும் விட்டுட்டு உங்காத்துக்கு வந்தேனே அப்போ எங்க அப்பா அம்மாக்கு எப்படி இருந்திருக்கும்!!”
“எஸ் எஸ்…எனக்கு புரியறது ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்கறது மிருது.”
“இட்ஸ் ஓகே நவீ.
உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்…
இனி அவ்வளவு தான்.
சக்தியை நாம் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவள் அவளின் கனவுகளை தேடி பிடித்து வரட்டும்.”
என்று நவீனின் தோளில் சாய்ந்துக் கொண்டே சொன்ன மிருதுளாவின் தோள்களில் தன் கையைப் போட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஃப்ளைட் ஏறினர். எப்போதும் மூவராக பயணித்தவர்களில் ஒருவருக்கு சிறகு முளைத்து தானாகவே பறக்க ஆரம்பித்து விட்டதால்
இன்று இருவரானார்கள்.
குவைத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒன்றரை நாள் பயணம் முடித்து வந்து சேர்ந்தனர். வந்ததும் சக்திக்கு கால் செய்து பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். தன் அப்பா அம்மாவிடமிருந்து கால் வந்ததும் மகிழ்ச்சியடைந்தாள் சக்தி.
மறுநாள் விடுமுறை என்பதால் நவீன் வீட்டிலேயே இருந்தான். காலை எழுந்ததும் வீட்டில் சக்தி இல்லாதது அவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தொலைத்ததுப் போலவே தோன்றியது.
மிருதுளா காலை டிபனை செய்யணுமே என்பது போல செய்தாள். அதை சாப்பிடனுமே என்பது போல இருவரும் ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழுந்தனர். இரண்டு மூன்ளு நாட்களாக தூங்காத நவீன் அன்று மத்தியம் சோஃபாவில் படுத்தப் படியே தூங்கிப் போனான்.
சற்று நேரத்தில் அது அவனுக்கு அசௌகரியமாக இருக்கவே பெட்டில் படுக்கலாமென்று எழுந்து தன் அறைக்குச் சென்றான். அப்போது சக்தி அறையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. சக்தி அறையிலிருந்து எப்படி அழுகைக் குரல் கேட்கிறது என்ற ஆச்சர்யத்தோடு அங்குச் சென்றுப் பார்த்தான்.
தொடரும்….
ஐவரும் சென்னையிலிருந்து கிளம்பி நான்கு மணிநேரம் காரில் பயணம் செய்து ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் தன்னிடம் சொன்னது போல வருவார்களா அல்லது நவீன் சொன்னது போல கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்களா!!! அங்கே கஜேஸ்வின் இருப்பார்களா? இருந்தால் என்ன செய்வது என்று மனதில் பல குழப்பங்களுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் மிருதுளா. கதவைத் திறந்தார் ஈஸ்வரன்
“ம்….வா வா. எங்கே உன் அம்மா, அப்பா, நவீன் எல்லாரும்”
“அவா கீழே கார்ல உட்கார்ந்திருக்காப்பா. உங்களை அழைச்சுண்டு போக தான் நான் வந்திருக்கேன். இப்போ கிளம்பினா தான் சாயந்தரத்துக்குள்ள முன்னார் போய் சேர முடியும்.”
“ஓ!! அப்படியா. சரி சரி சரி. நாங்களும் ரெடியா தான் இருக்கோம். கதவைப் பூட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான். வா போகலாம்”
“அம்மா அந்த பேக் தாங்கோ நான் தூக்கிண்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் கதவைப் பூட்டிட்டு வாங்கோ”
என்று அவர்களின் வருகையை நவீனிடம் கூற வேகவேகமாக இரண்டாவது தளத்திலிருந்து மாடிப்படிகளில் இறங்கிச் சென்றாள் மிருதுளா. கீழே சென்றதும் நவீன் அவள் கையிலிருந்த பையை கவனிக்காமல் அவள் மட்டும் வருவதைப் பார்த்து
“என்ன மிருது நான் சொன்னது தானே நடந்தது!! சரி சரி வா நீ வந்து கார்ல
ஏறு நாம போவோம்”
“இல்லை நவீ அவா ரெண்டு பேரும் நம்ம கூட வரா. இதோ அவா பை. ம்…இதோ வந்துட்டா. வாங்கோ வண்டியில் ஏறுங்கோ”
என்றதும் ஈஸ்வரன் நேராகச் சென்று டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம், அம்புஜம், ராமானுஜம் மூன்று பேர் அமரக்கூடிய நடு இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நவீன், மிருதுளா மற்றும் சக்தி பின்னால் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அனைவரும் காரில் ஏறியதும் அம்புஜம் பர்வதீஸ்வரனிடம்
“எப்படி இருக்கேங்கள் மாமா அன்ட் மாமி? கடைசியா நாம வேனு கல்யாணத்துல பார்த்தது இல்லையா”
“ஆமாம். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேங்கள். வேனு மாட்டுப்பொண்ணு எல்லாரும் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நன்னா இருக்கா மாமி.”
என்று கொஞ்ச நேரம் குசலம் விசாரித்து விட்டு பின் பொதுவான சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது வண்டி ஓர் ஹோட்டலின் வாசலில் நின்றது. அனைவரும் இறங்கி காலை உணவை உண்டபின் மீண்டும் கார் முன்னாரை நோக்கிச் சென்றது. அதிகாலை எழுந்ததாலும் காலை உணவாக வெண்பொங்கல் உண்டதாலும் ஈஸ்வரனைத் தவிர அனைவரும் நன்றாக உறங்கிப் போனார்கள். ஒரு ஐந்து மணிநேரம் ஆனதும் முழித்துக் கொண்ட நவீன் டிரைவரிடம்
“அண்ணா எங்க வந்திருக்கோம்? இன்னும் எவ்வளவு நேரமாகும் அந்த ரிசார்ட்டுக்கு போக?”
“சார் கிட்டக்க வந்துட்டோம் சார். இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரம் தான் சார் அங்க ரீச்சாகிடுவோம்”
“ஓகே! ஓகே!”
என்று நவீனும் டிரைவருமாக பேசிக் கொண்டதில் அனைவரும் விழித்துக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா நவீனிடம்
“அப்படிப் பார்த்தா நாம அங்க ரீச்சாக எப்படியும் இரண்டு இரண்டரை மணியாகிடுமே நவீ!!”
“ஆமாம்…ஆகலாம்”
“அப்போ வழியிலேயே எங்கயாவது லஞ்ச் முடிச்சுட்டு போகலாமா? எல்லாரும் வயசானவா ஸோ பசி தாங்க மாட்டா இல்லையா…இப்பவே மணி ஒன்னாச்சு”
“அப்படியா சரி டிரைவர் நல்ல வெஜ் ரெஸ்டாரண்ட்டா பார்த்து நிப்பாட்டுங்க சாப்டுட்டு போகலாம்”
என்றதும் வண்டி ஓர் ஹோட்டல் முன் நின்றது. அனைவரும் இறங்கி மத்திய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணித்தனர். அப்போது அரசியல் மற்றும் சினிமா பிரமூகர்கள் என பேப்பரிலிருந்த விஷயங்களைப் பற்றி மும்முரமாக நான்கு பெரியவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். சக்தி தன் மொபைலில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தாள். நவீனும் மிருதுளாவும் மாலை எல்லோருமாக எங்கு செல்லலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வண்டி மூன்று மணிக்கு அவர்கள் புக் செய்திருந்த ரிசார்ட் முன் சென்று நின்றது. அனைவரும் இறங்கினர். வயதானவர்கள் நால்வரும் பாத்ரூம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கே சென்றனர். மிருதுளாவும் நவீனும் செக் இன் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா மூன்று அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கூறினாள். அவர்களும் அதுபடியே தருவதாக கூறினர். டிரைவர் அவர்கள் பைகளையும் பெட்டிகளையும் இறக்கி வைத்ததும் ரிசார்ட் ஊழியர்கள் அவற்றை ஒரு தள்ளு வண்டியில் வைத்து ரிசப்ஷனில் கொண்டு வைத்தனர். மூத்தவர்கள் வந்து ரிசப்ஷனில் அமர்ந்ததும் அனைவருக்கும் வெல்கம் டிரிங்க் எனப்படும் வரவேற்பு பானம் வழங்கப் பட்டது.
அதன்பின் அனைவரையும் அவரவர் அறைகளைக்கு அழைத்துச் சென்றனர் ரிசார்ட் ஊழியர்கள். மூவரின் அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. மிருதுளா மூத்தவர்களிடம் ஐந்து மணிக்கு வெளியே செல்லவேண்டும் அதுவரை நன்றாக ஓய்வெடுங்கள் என்று கூறி அவர்களுக்கு அவர்களின் அறைகளை காண்பித்து எது எது எங்கெங்கு உள்ளது என்பதையும் சொல்லிக் கொடுத்து, ஏதாவது அவசரமென்றால் தன்னை எப்படி தொலைபேசியில் அழைப்பது என்பதையும் சொல்லி, சாப்பிட ஏதாவது தேவையென்றால் ரூம் சர்வீஸுக்கு எந்த எண்ணை அழுத்த வேண்டுமென்றும் விவரித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அங்கே நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சக்தி டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தியையும் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு மிருதுளாவும் சிறிது நேரம் கண் அசந்தாள்.
மாலை ஐந்தரை மணிக்கு அருகேயிருந்த ஒரு கோவிலுக்கு மட்டும் சென்று ரிசார்ட் திரும்பினர். ஏனெனில் அன்று மாலை ரிசார்ட்டில் ஏதோ விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாக தெரியவந்ததும் சீக்கிரம் ஒரு ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வந்தனர். ஏழு மணிக்கு விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது. ஈஸ்வரன் தன் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டும் பின் ஏதோ டைப் செய்துக் கொண்டுமிருந்ததை கவனித்தாள் மிருதுளா. எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்ததும் அனைவருக்கும் பஃபே முறையில் இரவு உணவு வழங்கப்பட்டது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப் பட்டிருந்தது. அனைத்தையும் என்னென்ன என்பதை மூத்தவர்களுக்கு விவரித்தாள் மிருதுளா. பின் அனைவரும் தட்டை எடுத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டியதை எடுத்து உண்டு மகிழ்ந்தனர். பின் எல்லோருமாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காலார நடந்து அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.
மிருதுளா, நவீன், சக்தி மூவரும் அவர்கள் அறைகளுக்குச் சென்றதும் சக்தி தன் பெற்றோரிடம்
“அப்பா அம்மா இன்னைக்கு என்ன டேட்?”
“ஜூன் ட்வென்டி செக்கண்ட் டி. அதுக்கென்ன?”
“அம்மா இன்னைக்கு என்னோட யூ.எஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கும்”
“அமாம் சக்தி …நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!! சரி சரி வா என் லேப்டாப்ல பார்ப்போம்”
“ம்…ஓகேப்பா.”
“சரி அதுக்கு உன் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்ற லாகின் டீட்டேய்ல்ஸ் எல்லாம் வேணுமே டா கண்ணா”
“எல்லாமே என் மொபைல்ல இருக்குப்பா. நீ அந்த பேஜ்ஜை ஓபன் பண்ணு நான் எல்லா டீட்டேய்ல்ஸும் தர்றேன்”
என்று மூவரும் ஆவலாக சக்தி எழுதிய ஒரு நுழைவுத் தேர்வின் முடிவுகளைப் பார்த்தனர். அதைப் பார்த்ததும் சக்தி ஐய்யா என்று சந்தோஷத்தில் குதித்தாள் நவீனும் மிருதுளாவும் அவளை கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார்கள். பின் மிருதுளா தன் அம்மா அப்பா அறையின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னாள். அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சக்தியிடம் பாராட்டுத் தெரிவிக்கும் படியும் காலையில் நேரில் தாங்கள் தெரிவிப்பதாகவும் சொல்லி ஃபோனை வைத்தனர். பின் தன் மாமனார் மாமியாருக்கு கால் செய்து அதே விஷயத்தை சொன்னாள்…அதற்கு ஃபோனை எடுத்த ஈஸ்வரன்
“ஓ!! அப்படியா. சரி சரி.”
என்று ஃபோனை வைத்தார். உடனே மிருதுளா முகம் மாறியதைக் கண்ட நவீன் அவளிடம்
“என்ன உன் மாமனார் வழக்கம் போல ஒண்ணுமே சொல்லாம ஃபோனை வச்சுட்டாரா?”
“ஒரு வேளை தூங்கிட்டாளோ என்னவோ? அதுனால கூட இருக்கலாம். அவா நாளைக்கு காலையில நம்ம சக்திக்கு விஷ் பண்ணுவா பாருங்கோ.”
“நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட…எனக்கு தூக்கம் வர்றது….சக்தியும் தூங்கிட்டா…வா வந்து நீயும் தூங்கற வழியப்பாரு.”
என்று நவீன் சொன்னதும் சென்று படுத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மிருதுளா. மறுநாள் காலை எழுந்து தயாராகி அனைவரும் அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் ஒன்று கூடினர். அப்போது அம்புஜம் சக்தியைக் கட்டிக் கொண்டு
“வாழ்த்துகள் சக்தி. உன் அம்மா நேத்து நைட்டு ஃபோன் பண்ணி சொன்னா. நீ அந்த பரீட்சையில் 2400 க்கு 2370 எடுத்திருக்கயாமே ரொம்ப சந்தோஷமா இருக்குக் கண்ணா.”
ராமானுஜம் சக்தியை தட்டிக்கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால் பர்வதீஸ்வரன் கண்டுக் கொள்ளாதது போல நடந்துக் கொண்டனர். அது மிருதுளாவை மனதளவில் பாதித்தது ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாது இருந்துக் கொண்டாள். காலை உணவு உண்ட பின் வெளியே சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது ஓரிடத்தில் மிருதுளாவை தனியாக அழைத்துச் சென்ற அம்புஜம் அவளிடம்
“ஏய் மிருது எங்க கிட்ட சக்தி பரீட்சை முடிவைப் பத்தி சொன்னதை நீ உன் மாமனார் மாமியார்ட்ட சொல்லலையா? நீ அவாகிட்டயும் சொல்லிருப்பனுட்டு தான் நாங்க பாட்டுக்கு குழந்தையை பாராட்டினோம்…அவா கோவிச்சுக்கப் போறாடி”
“அம்மா நான் உங்ககிட்ட என்ன சொன்னேனோ அதை அப்படியே அவாகிட்டயும் நேத்து நைட்டு சொன்னேன்.”
“ஓ!! அப்படீன்னா அவா நைட்டே பாராட்டிட்டாளோ? அதுதான் காலையில நாங்க குழந்தையைப் பாராட்டும் போது ஒண்ணும் சொல்லாமல் இருந்தாளா?”
“ம்..ம்…சரி சரி வா. அவா எல்லாரும் அங்க போயிட்டா பாரு.”
என்று தாயிடமும் அவர்களைப் பற்றி ஏதும் கூறாது தவிர்த்துவிட்டாள் மிருதுளா.
எல்லா சுற்றுலா தளங்களுக்கும் சென்று மத்திய உணவை ஒரு ஹோட்டலில் அனைவரும் அமர்ந்து அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்துக் கொண்டிருக்கையில் அம்புஜத்தின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப்பில் வந்தது. அதை எடுத்து என்னவென்று பார்த்தாள். அதில் வேனு தன் மனைவியுடன் எடுத்த படத்தை பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் அம்புஜத்துக்கு ஓரே சந்தோஷமானது. உடனே ராமானுஜத்திடமும் மிருதுளாவிடமும் காண்பித்தாள். அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம் காட்டிவிட்டு தன் அம்மாவிடம் கைபேசியைக் கொடுத்து
“அம்மா இந்த ஃபோட்டோவுல மகதி ரொம்ப அழகா இருக்காமா”
என்றதும் பர்வதத்திடம் கைபேசியிலிருந்த படத்தைக் காட்டினாள் அம்புஜம் அதற்கு பர்வதம் மெல்ல மிருதுளா காதில் மட்டும் விழும்படி
“ஆமாம் ஆமாம்…அவ அழகா இருக்கா அதுனால படத்துலயும் அழகா தெரியறா…நாம அழகா இருந்தா தானே படத்துலேயும் அழகா தெரிவோம்”
என்று குத்தலாக கூறினாள். மிருதுளாவுக்கு கோபம் வந்தது ஆனால் தான் அழைத்து வந்ததால் அவர்களிடம் பிரச்சினை ஏதும் செய்யாது நல்லபடியாக திருப்பிக் கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் அவளை அதற்கு பதில் பேசவிடாமல் தடுத்தது. இதே போல அங்கிருந்த நான்கு நாட்களும் கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் குத்தலாகவே பேசினாள் பர்வதம். அதை அனைத்தையும் வழக்கம் போல பொறுத்துக் கொண்டாள் மிருதுளா.
மூன்றாவது நாள் இரவு உணவு உண்டு முடித்தப்பின் அம்புஜமும் ராமானுஜமும் அவர்கள் அறைக்கு செல்ல வேண்டி மற்ற அனைவருக்கும் “பை பை” சொல்ல உடனே சக்தி மிருதுளாவிடம்
“அம்மா அம்மா நான் இன்னைக்கு அம்பு பாட்டிக்கூடப் படுத்துக்கறேன் மா”
“ம்…சரி சரி போ…அம்மா அவளை ரொம்ப நேரம் டிவி பார்க்க விடாதே.”
“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீ வாடி என் செல்லக் குட்டி நாம போகலாம். சரி மாமா அன்ட் மாமி நாங்க வர்றோம். குட் நைட்”
“அம்மா அன்ட் அப்பா நாளைக்கு காலையில எட்டு மணிக்கு உங்க பெட்டியெல்லாம் பேக் பண்ணிண்டு இதே ரெஸ்டாரண்ட்டுக்கு வந்திடுங்கோ. நாம ஒன்பது மணிக்கெல்லாம் இங்கேந்து கிளம்பணும் சரியா”
“ஓகே டன். வந்திடுவோம். குட் நைட்”
என்று கூறி அவர்கள் சென்றதும் தன் ரூமுக்கு செல்வதற்காக எழுந்த நவீனை சற்று நேரம் கூட அமர்ந்து விட்டு செல்வோம் என்று கூறி அமரவைத்து பர்வதம் ஈஸ்வரன் மிருதுளா மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர். நவீன் ஏதும் பேசாது அமர்ந்திருந்தான். அவன் அந்த மூன்று நாட்களிலுமே அவர்களுடன் ஏதும் பேசவில்லை. பர்வதீஸ்வரன் அங்கிருந்த மூன்று நாட்களிலும் கவினின் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி எதுவுமே நவீனிடமோ மிருதுளாவிடமோ மூச்சுவிடாதிருந்தனர் . நவீனும் மிருதுளாவும் அதைப் பற்றி ஏதும் கேட்டுக்கொள்ளாது இருந்தனர். ஈஸ்வரன் தன் கைபேசியையே நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்து
“மிருதுளா இந்த பிச்சுமணி ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்கான்…அது ஒண்ணுமே புரியலை…சரியா தெரியலை… என்னன்னு படிச்சு சொல்லு”
என்று கூற மிருதுளாவும் அதை வாங்கிப் படித்தாள். அவளருகிலிருந்த நவீனும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தான். அதில் “கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாது போனதுக்கு மன்னிக்கவும். அவனிடம் எங்களின் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் தெரிவிக்கவும்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தன் மாமானாருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமென்பது மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் அந்த விஷயத்தை இவர்களிடம் கன்வே செய்வதற்காக இப்படிச் செய்கிறார் என்பதை உணர்ந்த மிருதுளா அவரிடம்
“உங்க புள்ளைக்கு வாழ்த்தும் ஆசிர்வாதமும் தெரிவித்திருக்கார் பிச்சுமணி மாமா”
என்று பொதுவாக சொல்லி அவர் ஃபோனை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துத்தாள். அதற்கு மேல் அவரை அதைப் பற்றி பேச விடாமலிருக்கவும் அதைப் பற்றி கேட்க விரும்பாததாலும் சட்டென அவரிடம்
“ஆமாம்ப்பா நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்…நீங்க ஃபோட்டோ எடுக்கறேங்கள் உடனே உங்க ஃபோனில் ஏதோ மெஸேஜ் டைப் பண்ணறேங்கள். அப்படி என்னதான் செய்யறேங்கள் எடுத்த ஃபோட்டோஸை?”
“அதுவா…அதெல்லாம் என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும் எல்லா இன்பஃர்மேஷன்ஸையும் உடனே உடனே அனுப்பணுமில்லையா அதுதான் அனுப்பறேன். வேற ஒண்ணுமில்லை”
“ஓ!!! அப்படியா!!! ஆனா இதுவரைக்கும் நவீனுக்கோ இல்ல எனக்கோ இது மாதிரியெல்லாம் டக்டக்குனு எந்த மெஸேஜும் …சாரி… சாரி… இன்பஃர்மேஷன்ஸும் நீங்க அனுப்பினதில்லையா அது தான் கேட்டேன்….சரி… அது என்ன உடனுக்குடன் அனுப்பவேண்டிய இன்பஃர்மேஷன்?”
“ம்…அது நாம போற இடங்கள் அதோட பேரு அங்க என்னென்ன இருக்கு? அதோட ஃபோட்டோஸ் அப்புறம் நாம எல்லாருமா எடுத்துண்ட ஃபோட்டோஸ் இதெல்லாம் தான் வேறென்ன…சரி சரி …எனக்குத் தூக்கம் வர்றது. நாங்க போய் படுத்துக்கறோம். காலையில எட்டு மணிக்கு ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கலாம். பை”
என்று கூறி அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் மூத்த தம்பதியர். அவர்கள் போன பின்னாலும் நவீனும் மிருதுளாவும் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தயா உன் மாமனாரின் சாமர்த்தியத்தை…அவன்ட்ட ஏன்டா அழைக்கலைன்னு கேட்கத் துப்பில்லை, நம்ம கிட்ட சொல்ல திராணி இல்லை ஆனாலும் நாம தெரிஞ்சுக்கணுமாம் அவன் வீட்டு கிரகப்பிரவேசம் நல்லா நடந்ததுன்னு …எப்படி?”
“அதைவிட என்னை ஹிட் பண்ணினது வேற ஒரு டையலாக் தான் நவீ!!”
“இதைவிட வேற என்ன?”
“நீங்க அவர் அதை சொன்னதும் திருப்பி கேட்பேங்கள்னு நினைச்சேன். ஆனா நீங்க கேட்காததால நான் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.”
“அப்படி என்ன சொன்னா? எனக்குப் புரியலை மிருது”
“என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும்னு சொன்னாரே கவனிச்சேங்களா? அப்படீன்னா நாங்க யாராம்ன்னு எனக்கு கேட்கத் தோணித்து…ஆனா அதைக் கேட்க போய் அப்புறம் அதுக்கு அவா கத்த ஆரம்பிச்சான்னா அப்புறம் எல்லாருக்கும் வந்த இடத்துல தர்மசங்கடமாகிடுமேனுட்டு பேசாம லைட்டா அதுக்கு திருப்பிக் கொடுத்துட்டு விட்டுட்டேன்”
“ம்…ம்…கவனிச்சேன்…எல்லாம் கவனிச்சேன். நீ இந்த ஒரு இடத்துல மட்டும் விட்டுக் கொடுக்கலைங்கறதையும் நான் மூணு நாளா கவனிச்சிண்டு தான் இருக்கேன் மிருது.”
“ம்…சரி சரி…அதை விடுங்கோ நம்ம சக்திக் குட்டி இப்படி ஃபுல் ஃபுல்லா மார்க் எடுத்திருக்காளே அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்.”
“அவகிட்டயே அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக் குடுப்போம்”
“அதுவுமில்லாம நாம உங்க அப்பா அம்மாவை வீட்டுல விட்டுட்டு ஒரு ஹோட்டல் புக் பண்ணி அங்கே அன்னைக்கு நைட்டு இருந்துட்டு மறுநாள் காலையில நாம அங்க ரெகுலரா போற கோவில்களுக்கெல்லாம் போயிட்டு சென்னைக்கு போவோம் நவீ…ப்ளீஸ்”
“ம்…சரி ஓகே. அப்படியே செய்யலாம். இப்போ போய் தூங்கலாமா!!!”
“ம்…ஓகே வாங்கோ. காலையில சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் பேக் பண்ணணும் வேற…”
அவர்கள் முன்னாரிலிருந்து ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அன்று காலை எட்டு மணிக்கு அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் அனைவரும் அவரவர் பெட்டி மற்றும் பைகளுடன் கூடினர். காலை உணவை உண்டு முடித்ததும். மிருதுளா சக்தியிடம் ஏதோ சொன்னாள். உடனே சக்தி தன் ஈஸ்வரன் தாத்தாக்கும் பர்வதம் பாட்டிக்குமாக குவைத்திலிருந்து வாங்கி வந்த கிஃப்ட்ஸை அவரவரிடம் கொடுத்து
“தாத்தா அன்ட் பாட்டி எங்களோடு இந்த நான்கு நாட்கள் வந்திருந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தமைக்கு நன்றி”
என்றதும் ஈஸ்வரன் திருப்பி
“தாங்ஸ்” என்றார்
உடனே சக்தி
“தாத்தா அன்ட் பாட்டி பிரித்துப் பார்த்துப் பிடிச்சிருக்கானு சொல்லுங்கோ ப்ளீஸ்” என்றாள்
உடனே பரிசுப் பொருட்களை மூத்தவர்கள் பிரித்துப் பார்த்தனர். முதலில் ஈஸ்வரன் பிரித்துப் பார்த்தார் அதிலிருந்த வாட்ச்சையும் டேப்லெட்டையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமானுஜம் தன்னிடமிருந்த புது டேப்லெட்டை எடுத்துக் காட்டி
“மாமா இங்கே பாருங்கோ எனக்கும் உங்களுக்கு வாங்கினா மாதிரியே ஒரு டேப்லெட் வாங்கித் தந்திருக்கா”
என்று காட்டியதும் அதை வாங்கிப் பார்த்த ஈஸ்வரன்
“அட ஆமாம் அதே தான். அப்போ வாட்ச் எங்கே?”
“அது ஆத்துல வச்சிருக்கேன். அதுவும் நாம ரெண்டு பேருக்கும் ஒண்ணே தான்’
“ஏய் பர்வதம் நீயும் திறயேன்டீ”
என்று ஈஸ்வரன் சொன்னதும் திறந்துப் பார்த்த பர்வதம்
“என்கிட்ட மூக்குத்தியும் தோடும் நிறைய இருக்கு…ம்…இதுவும் நல்லாதான் இருக்கு”
என்று கூறியதும் மிருதுளா சட்டென
“அம்மா உங்க கிட்ட நிறைய மூக்குத்தி அன்ட் தோடு இருக்கலாம்…ஆனா வைர மூக்குத்தி இருக்கா?”
“இல்லை”
“ஆங்!! இல்லையில்லையா…இன்னேலேந்து அதுவும் உங்ககிட்ட இருக்கு.”
என்று மிருதுளா கூறி முடித்ததும் அம்புஜம்
“ஆமாம் மாமி எனக்கும் இதே தோடு அன்ட் வைர மூக்குத்தி தான் இவா வாங்கித் தந்திருக்கா. பாருங்கோ நான் அதைத் தான் போட்டுண்டும் இருக்கேன்.”
என்று காண்பிக்க அதற்கு மிருதுளா
“ஆமாம் மா. எங்களுக்கு நீங்க நாலு பேருமே அப்பா அம்மா தான். அதுனால குடுக்கற கிஃப்ட்டுல கூட பேதமிருக்கக் கூடாதுங்கறது எங்களோட பாலிசி. உங்க ரெண்டு பேருக்காக நாங்க வாங்கிண்டு வந்த வைர மூக்குத்தியும் ஜர்கான் தோடும் தான் அது ரெண்டும்”
“என்னது வைர மூக்குத்தியா???”
என்று வாயைப் பிளந்தாள் பர்வதம்.
பின் அனைத்தையும் அவரவர் கைப்பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர். மத்திய சாப்பாட்டையும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபியையும் ஹோட்டலில் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு ஐந்து மணி போல முதலில் ஈஸ்வரன் தம்பதியரை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வழக்கமான கோவில்களுக்கெல்லாம் சென்று வரவேண்டி அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக அன்று மாலை ஒரு ஏழு மணிக்கு புறப்பட்டு ப்ரவீன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே துளசி இருக்கவில்லை. ப்ரவீன் வந்தவர்களிடம்
“வாங்கோ வாங்கோ அண்ணா அன்ட் மன்னி. வெல்கம் சக்தி”
“எப்படி இருக்கேங்கள்? எங்க துளசி குழந்தைகளை எல்லாம் காணம்? நீ மட்டும் இருக்க?”
“அவா எல்லாருமா துளசியோட அண்ணா ஆத்துக்கு போயிருக்கா மன்னி. அவா போய் ஒரு மூணு நாளாச்சு. நாளைக்கு வந்திடுவா. அப்புறம் டிரிப் எல்லாம் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது. இந்தா ப்ரவீன் குழந்தைகளுக்கும் உனக்கும் துளசிக்கும் எங்களோட ஒரு சின்ன அன்பளிப்பு.”
“ஓ!! தாங்ஸ் மன்னி. இருங்கோ குடிக்க தண்ணிக் கொண்டு வர்றேன். இவ்வளவு நேரம் நான் அப்பா அம்மா ஆத்துல தான் இருந்தேன். இப்போ தான் இங்கே வந்தேன். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருந்தேங்கள்னா நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். இந்தாங்கோ தண்ணி எடுத்துக்கோங்கோ”
என்று அவன் தண்ணீர் டம்பளரைக் கொடுக்கும் போது அவன் கையை கவனித்த மிருதுளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் ஆசையாக ஈஸ்வரனுக்கு பரிசளித்த வாட்ச் ப்ரவீன் கையிலிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு டம்பளரை ப்ரவீனிடம் திருப்பிக் கொடுத்ததும் அதை அடுப்படிக்குள் வைக்கச் சென்றான் ப்ரவீன். அப்போது மிருதுளா மெல்ல நவீனிடம் ப்ரவீனின் கையை கவனிக்கச் சொன்னாள். அவனும் பேச்சு வாக்கில் கவனித்தான். பின் நவீன் எழுந்து
“சரி டா நாழி ஆயிடுத்து நாங்க கிளம்பறோம்.”
“எங்க ? அப்பா அம்மா ஆத்துக்கு தானே நானும் வர்றேன்”
“இல்ல இல்ல நாங்க ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடப் போறோம். எங்களோட வாயேன் நீயும் தனியா தானே இருக்க “
“சரி வரேன்.”
என்று நால்வரும் ஹோட்டலுக்குச் சென்று டின்னர் அருந்திக் கொண்டிருக்கும் போது ப்ரவீன் நவீனிடம்
“அண்ணா அப்போ நீங்க நாளைக்கு பவினோட புள்ளைக்கு முடியெறக்கி காதுக்குத்துற பங்ஷனுக்கும் வர்றேங்கள் தானே!!”
“என்னது அப்படி ஒரு பங்ஷன் நாளைக்கு நடக்கப் போறாதா என்ன?”
“ஆமாம். ஏன் அவன் உங்களுக்கு சொல்லலையா?”
“ம்…ம்….”
“அப்பா அம்மாவும் சொல்லலையா?”
“ம்..ம்..”
என்று இரண்டே சப்தத்தில் பதிலளித்தான் நவீன். பின் அங்கிருந்து ப்ரவீனை அவன் வீட்டில் விடச்சென்ற போது அவன்
“இல்ல அண்ணா என்னை அப்பா ஆத்துலேயே விட்டுவிடு. ஏன்னா காலையில சீக்கிரமா கிளம்பி போகணும். நான் எங்காத்துல இருந்தேன்னா அப்புறம் தூங்கிடுவேன்”
“சரி ப்ரவீன் அப்போ துளசி அந்த பங்ஷனுக்கு வரமாட்டாளா?”
“இல்ல மன்னி அவ வரலை. நான் மட்டும் தான் போகப் போறேன்”
என்று பேசிக்கொண்டே இருக்கும் போது ஈஸ்வரன் வீட்டு வாசலில் கார் நின்றது. ப்ரவீனை இறங்கச் சொன்னான் நவீன். அப்போது ப்ரவீன்
“வாங்கோ இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராமல் போனா எப்படி வாங்கோ மன்னி வாண்ணா”
“சாயந்தரம் தானே டா வந்தோம்”
“சாயந்தரமும் நீ வாசலோட போயிட்டயாமே…வாண்ணா”
என்று ப்ரவீன் வற்புறுத்தியதால் மூவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். அப்போது ஈஸ்வரன்
“நீங்க சென்னைக்கு போகலையா?”
“இல்லப்பா நாங்க நாளைக்கு கோவிலுக்கெல்லாம் போயிட்டு தான் சென்னைப் போவோம்”
என்று கூறிக்கொண்டே ப்ரவீன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அதை கவனித்த ஈஸ்வரன்
“ஓ!! அப்படியா…சரி சரி சரி…நீங்க குடுத்த வாட்ச் இவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு அவன் எடுத்துண்டுட்டான். டேப்லெட்டை நான் அவன் புள்ளைக்குக் கொடுத்துட்டேன்”
என்று சொன்னதும் மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்ல உடனே அவர் தன் கைபேசியில் யாரிடமோ பேசி பின் தன் கைப்பேசியை நவீனிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். அதற்கு நவீன்
“யார் ஃபோன்ல? என் கிட்ட எதுக்கு குடுக்கற?”
“இந்தா பேசு பவின் தான். அவன் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம்”
“ஹலோ!”
“அண்ணா எப்படி இருக்க? இந்தியா வந்திருக்கையாமே? சரி நாளைக்கு எங்க புள்ளைக்கு முடியெறக்கிக் காதுக் குத்தறோம் நீயும் மன்னியும் வந்திடுங்கோ. ஒரு நிமிஷம் மன்னிட்ட ஃபோனைக் குடு பவித்ரா பேசணுமாம்”
என்று சொல்ல வேண்டுமே என்பது போல பேசிய பவினிடம் வேறேதும் பேச விரும்பாத நவீன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்தான்.
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“ஹாய் மன்னி நான் பவித்ரா பேசறேன். நாளைக்கு எங்க புள்ளைக்கு கோவில்ல வச்சு முடியிறக்கி காதுக்குத்தப் போறோம் நீங்க அவசியம் வரணும்.”
“ரொம்ப சந்தோஷம் பவித்ரா. ஆனா சாரி எங்களால வரமுடியாதுமா.”
“ஏன் மன்னி காலையில வந்துட்டு போயிடுங்கோளேன். ஒரு எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்”
“இல்லமா இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தேங்கள்னா நிச்சயம் வந்திருப்போம். இப்படி வந்த இடத்துல சொன்னதால வரலைன்னு சொல்லறேன்னு நினைச்சுக்காத பவித்ரா…எங்களுக்கு இது சாயந்தரம் வரைக்கும் தெரியாதில்லையா அதுனால வேற ப்ளான் போட்டுட்டோம்… ஸோ நாங்க வரமுடியாதுமா. எங்களோட ஆசிர்வாதம் எப்போதும் குழந்தைகளுக்கு உண்டு.”
“அப்படியா சரி மன்னி. நீங்க ஃபோனை அப்பாட்டயே குடுங்கோ”
என்று வந்த இடத்தில் அழைக்கிறார்கள் என்பதை உணர்த்தும் படி பவினுக்கும் பவித்ராவுக்கும் நன்றாக பதிலடிக்கொடுத்தாள் மிருதுளா. ஈஸ்வரன் ஃபோனில் ஏதோ பேசிவிட்டு கட் செய்தபின் ஹாலுக்கு வந்து….
“அது ஒண்ணுமில்லை. நீங்கள் வரேங்கள்னு அவாளுக்கு தெரியாதோன்னோ அதுதான் முன்னாடியே சொல்லலையாம். நீங்க வர்றேங்கள்ன்னு சொல்லியிருந்தா நிச்சயம் கூப்பிட்டிருப்பாளாம்”
“ஏன் நாங்க சொல்லாம? உங்க கிட்ட தான் அப்பவே நான் ஸ்கைப்ல சொன்னேனே!!”
“என்கிட்ட இல்ல…அவாகிட்ட சொல்லலையோன்னோ!!! அதைச் சொல்லறேன்”
“ஓ!! அப்படீன்னா அவா யார் யார் விசேஷத்துக்கு வருவாளோ அவாளை மட்டும் தான் இன்வைட் பண்ணுவாளா? எல்லா சொந்த பந்தங்களையும் கூப்பிடமாட்டாளா? நல்லா இருக்கே இந்த சிஸ்டம் இல்ல நவீ.”
“அப்படி இல்ல”
“சரி நவீ நாழியாயிடுத்து நாம கிளம்பலாமா?”
“எங்கே கிளம்பறேங்கள் இங்கேயே இருக்கலாமே”
“இல்லப்பா என்னோட அப்பா அம்மா வேற இருக்கா”
“அதுனால என்ன? அவாளும் இங்கேயே வந்து தங்கட்டுமே”
“இல்லாட்டி …என் வீட்டில் யாருமே இல்லையே மன்னி அங்க வந்து தங்கிக்கோங்கோ. சரி… இப்போ உங்க அப்பா அம்மா எங்க?”
“நாங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கோம். அங்கே தான் ஆவா இருக்கா. நாங்களும் இப்போ அங்கே தான் போகப் போறோம்.”
“என்னத்துக்கு அனாவசியமா ரூமெல்லாம் போட்டுண்டு.”
“சரி மிருது நாம போகலாம். நாங்க வர்றோம்”
என்று அவர்கள் போட்டுக்கொண்டிருந்த நாடகம் பிடிக்காத நவீன் வெடுக்கென கூறிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக இறங்கிச் சென்றான். மிருதுளாவும் அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நவீன் பின்னாடியே சக்தியை அழைத்துக் கொண்டுச் சென்றாள்.
தொடரும்….
“நம்பினா நம்புங்கோ நம்பாட்டி போங்கோ!! எனக்கென்ன?”
“சரி நீ ஆரம்ப காலத்துலேயே எல்லாம் தெரிஞ்சுண்டுட்டன்னு வச்சுண்டா கூட ஏன் இத்தனை வருஷங்களா உன் எதிர்ப்பைக் காட்டலை? ஏன் மறுபடியும் மறுபடியும் அவாளை எல்லாம் தலையில தூக்கி வச்சுக்கற? இப்படி எல்லாம் செஞ்சா அவாளும் திருந்த மாட்டா …என்னாலையும் நம்ப முடியாது மிருது?”
“நவீ ….நமக்கு ஒருத்தா ஏதாவது தொல்லை, தொந்தரவு, அவமானம், இது மாதிரியெல்லாம் தொடர்ந்து செஞ்சுண்டே இருந்தானா அவாளுக்கு நம்மளைக் கண்டு பொறாமை அல்லது பயம் உள்ளவாளா தான் இருப்பா. இல்லைன்னா அடுத்தவர்களை துன்புறுத்தி அதில் மனமகிழ்வு காணறவாளா கூட இருக்கலாம். மொத்தத்தில் இந்த மூணு வகையில ஏதாவது ஒண்ணுல சேர்ந்தவாளா தான் இருப்பா. இந்த எண்ணங்கள் மனசுல வளர்ந்துண்டே போனா அவாளுக்கு காழ்ப்புணர்ச்சி தான் விருட்சமா வளரும். அப்படிப் பட்டவாளை நாம எதிர்த்து நிக்கவோ இல்ல பதிலுக்கு பதில் பேசவோ இல்லை அவாளைப் போலவே ஏதாவது பண்ணவோ செஞ்சோம்னா அப்புறம் அவாளோட அந்த குணத்தை நாமே விசிரியால வீசி கொழுந்து விட்டு எரிய வைக்கிறது போல ஆகிடாதோ!!! அது ஒரு பக்கம் இருக்கட்டும்….அப்படியே அவா செஞ்சதையே அவாளுக்கு நாம திருப்பி செஞ்சோம்னா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடாதா? எனக்கு பேச தெரியாமையோ இல்ல பழிவாங்கத் தெரியாமையோ இல்ல ஆனா எதுக்குன்னு தான் விலகறேன்”
“ஆங் அதைத் தான் நானும் சொல்லறேன் விலகிடுன்னு.”
“ம்…என்னோட பொறுமைக்கும் எல்லைன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா அதுவரை நான் இப்படியே இருந்துடறேனே நவீ!!! கடவுள் படைப்பில் என்னோட டிசைன் இதுதானோ என்னவோ!!!! அதுவரை யாரு வேணும்னாலும் என்னை இளிச்சவாயின்னு நினைச்சாலும் சரி, பொழைக்கத் தெரியாதவள்ன்னு சொன்னாலும் சரி, இல்ல எனக்கு சூடு சொரனையே இல்லையான்னு கேட்டாலும் சரி… நான் இப்படித் தான். ஆனால் எப்போதுமே இப்படிதானானான்னு கேட்டா அதுக்கு காலமும் நேரமும் தான் பதில் சொல்லணும். நான் சொல்லறது சரி தானே நவீ”
“ம்….பார்ப்போம் உன் பொறுமைக்கு எது எல்லைன்னு”
“அம்மா எவ்வளவு நேரமா மா பேசுவ… பசிக்கறது மா. டின்னர் பண்ணலையா?”
“ஊப்ஸ்…சாரி டா கண்ணா. சப்ஜீ ரெடி… இதோ ஒரு அஞ்சே நிமிஷத்துல சப்பாத்திப் போட்டு தந்துடறேன் சரியா. ஓகே நவீ நான் போய் டின்னர் பண்ணட்டும்”
என்று மிருதுளா அவள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றாள். நவீன் குடும்பத்தினர் குவைத்துக்கு சென்று ஒரு வருடமானது. சக்தி பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு பல நுழைவுத் தேர்வுகளுக்கான வகுப்புகளுக்கு சென்றதோடு அந்த தேர்வுகளை எல்லாம் எழுதியும் முடித்தாள். அதில் ஒன்றில் நூற்றியிருபதுக்கு நூற்றிபத்தொன்பது மதிப்பெண்கள் எடுத்து அவளின் புகைப்படம் வலைத்தளத்தில் வந்தது. மற்றொரு பரீட்சையின் முடிவுகள் வர மூன்று மாதங்கள் இருந்தன. கோடைக்கால விடுமுறை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டாள் மிருதுளா. அதை நவீனிடம் சொன்னதும்
“எதுக்கு மிருது இப்போ தானே நாம வேனுவோட கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருக்கோம்!!”
“இல்ல நவீ இந்த வருஷம் முடிஞ்சா அப்புறம் நம்ம சக்தி வெளிநாடுக்கு படிக்கப் போயிடுவா… அதுக்கப்புறம் எப்ப மறுபடியும் இந்தியாவுக்கு அவளால போக முடியுமோ? நமக்குத் தெரியாது. அதுனால இந்த லீவுல எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே உங்க பேரன்ட்ஸ் அன்ட் என் பேரன்ட்ஸ், நாம மூணு பேருன்னு ஒரு குட்டி ட்ரிப் எங்கேயாவது போயிட்டு வரலாமே… என்ன சொல்லறேங்கள்?”
“ம்….உன் பொறுமைக்கு இன்னுமா எல்லை எங்க இருக்குன்னு உனக்கு கண்ணு தெரியலை”
“ப்ளீஸ் நவீ நம்ம சக்தியும் அவ தாத்தாப் பாட்டிகளோட ஒரு மூணு நாள் ஜாலியா இருக்கட்டுமே. அவாளுக்கும் வயசாகிண்டே போறது ஸோ எப்ப வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா?”
“ம்…..சரி சரி என்னவோ பண்ணு. ஆனா ஒண்ணு நிச்சயம் இதுக்கு நீ வருத்தப்பட தான் போற”
“ம்…பார்ப்போம் பார்ப்போம். சரி நாம சிம்லா போகலாமா?”
“ம்….ஆனா அவா நாலு பேரு நாம மூணு பேரு…ஃப்ளைட் டிக்கெட்ஸ் அன்ட் ஹோட்டல்…சாப்பாடு செலவுகள் எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா ரொம்ப ஜாஸ்த்தி ஆகிடாதா?”
“அப்படியா அப்போ ஒரு பெரிய கார் வச்சுண்டு எல்லாருமா முன்னார் போயிட்டு வரலாமா?”
“ம்…அது ஓகே!”
“சரி அப்போ அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்யத் தொடங்கறேன். அதுக்கு முன்னாடி நம்ம பேரன்ட்ஸ் கிட்ட கால் பண்ணி சொல்லிடறேன்…சப்போஸ் உங்க அப்பா அம்மா வரலைன்னு சொல்லிட்டான்னா என்ன பண்ணறது? புக் பண்ணினது எல்லாம் வேஸ்ட் ஆகிடுமே?”
“அதெல்லாம் வருவா…அப்படியே வராட்டினா என்ன இப்போ அது தான் பெரியப்பா ஃபேமிலி, அத்தை ஃபேமிலி, சித்தப்பா ஃபேமிலினுட்டு பக்கத்துலேயே எல்லாரும் இருக்காளே அவா யாரையாவது கூட்டிண்டு போனா போறது.”
“ம்…அதுவும் நல்ல ஐடியா தான். அவாளும் எல்லாரும் வயசானவா தானே. சரி நான் வேலைகளில் இறங்கட்டும்”
என்று அன்று மாலையே மிருதுளா தன் பெற்றோருக்கு கால் செய்தாள்
“ஹலோ அம்மா நான் மிருது பேசறேன்”
“ஆங் சொல்லு மிருது. எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்கார்? சக்திக் குட்டி எப்படி இருக்கா?”
“அம்மா ஸ்கைப்ல வா”
“ம்…சொல்லு மிருது”
“அம்மா நான் உன்னை ஸ்கைப்ல இரண்டு தடவை கூப்பிட்டேன் நீ எடுக்கலை அது தான் ஃபோன்ல கூப்பிட்டேன்…நீ என்னடான்னா ஸ்கைப்ல பேசறா மாதிரி நலம் விசாரிக்கறயே!!!”
“நீ ஸ்கைப்ல தான் கூப்பிட்டிருக்கன்னு நினைச்சுண்டு நான் பேச ஆரம்பிச்சேன். சாரி மிருது”
“இட்ஸ் ஓகே மா. சரி நாங்க சக்தியோட இந்த லீவுக்கு ஊருக்கு வரலாம்னு இருக்கோம்.”
“சூப்பர் சூப்பர் பேஷா வாங்கோ. உனக்குப் பிடித்த அப்பம்…மாப்ளைக்குப் பிடித்த முள்ளு முறுக்கு நம்ம சக்திக் குட்டிக்குப் பிடித்த ரிப்பன் பக்கோடா எல்லாம் செய்து வைக்கிறேன். எப்போ வர்றேங்கள்”
“நாங்க வர்ற ஜூன் இருபதாம் தேதி வந்துட்டு ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம். இந்த தடவை உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் மாமனார் மாமியாரையும் கூட்டிண்டு ஒரு முன்னார் ட்ரிப் போகலாம்னு இருக்கோம். உங்களுக்கு வர சம்மதமா?”
“ஓ! இதெல்லாம் என்னத்துக்கு கேட்டுண்டு? நாங்க என்ன ஆஃபீஸுக்கா போகணும். சும்மா தானே உட்கார்ந்துண்டிருக்கோம். வான்னா வரப்போறோம்.”
“ஓகே மா. அப்படீன்னா நாங்க வந்துட்டு ஒரு இரண்டு நாள்ல அதாவது இருபத்திரெண்டாம் தேதி நாம முன்னாருக்குப் போயிட்டு நாலு நாள் அங்கே தங்கிட்டு வரலாம் சரியா. அதுக்கு வேண்டிய டிரெஸ்ஸை எடுத்து வச்சுக்கோங்கோ… அப்பா நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணணுமே!!”
“சொல்லு மிருது என்ன பண்ணணும்?”
“நாம நாலு …மூணு… ஏழு பேர் வசதியா உட்கார்ந்து முன்னார் போறா மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு பண்ணறையாப்பா?”
“ஓ பண்ணறேனே. டேட் எல்லாம் ஃபைனல் பண்ணிட்டயோனோ!! அதே டேட்டுக்கு சொல்லலாமில்லையா?”
“எஸ் அப்பா அதே டேட் தான் நோ சேஞ்ச் வண்டியை கன்ஃபார்ம் பண்ணிடூ. எவ்வளவு என்னங்கறதை சொல்லு நான் உனக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இப்போ குடுக்க வேண்டாம் மிருது. நாம ட்ரிப் போயிட்டு வந்து குடுத்தாப் போறும். கிளம்பற அன்னைக்கு அட்வான்ஸ் கேட்ப்பா அவ்வளவு தான். அப்போ தான் நீங்களே இங்க இருப்பேங்களே”
“ம்….அப்போ ஓகேப்பா. நீ வண்டியை புக் பண்ணிடு. சரி நான் வச்சுடவா. அடுத்து என் மாமனார் மாமியார்ட்ட கேட்கணும்”
“ஏன்டி மிருது அவா வருவாளாடி?”
“ஏன்ம்மா அப்படி கேட்குற?”
“இல்ல அவா வரணும்னு தான் ஆசைப்படுவா ஆனா அந்த குவைத் காரனும் காரியும் விடமாட்டேளே அதுதான் கேட்டேன்.”
“வந்தா சந்தோஷம். வரட்டும். இல்லாட்டி வேற யாராவது பெரியவாளை கூட்டிண்டு போக வேண்டியது தான்..சரி மா எனக்கு நிறைய வேலையிருக்கு வச்சுடவா”
அப்பாவிடம் சொல்லி காருக்கு ஏற்பாடு செய்தாள். பின் ஹாட்டல் புக்கிங் எல்லாம் நவீனும் மிருதுளாவுமாக செய்து முடித்தனர். பின் தன் மாமனாரை ஸ்கைப்பில் அழைக்க தயாரானவளிடம் நவீன்
“இங்கே பாரு மிருது …உங்க அப்பா அம்மா எந்த பந்தாவுமில்லாம உடனே ஓகே சொல்லிட்டா…ஆனா அங்கே அப்படி எல்லாம் சொல்லிட மாட்டாங்கறதை மனசுல நிறுத்திண்டு கால் பண்ணு சரியா!!”
“அவாளும் என் அப்பா அம்மா மாதிரி தானே நவீ…ரெண்டு பேருமா தனியா அங்கே இருக்கா. என்ன குழைந்தை ஸ்கூலுக்கு போகணும் இல்ல வேலைக்குப் போகணும்னு ஏதாவது இருக்கா என்ன?”
“பின்ன இல்லாமையா? அதுதான் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ப்ரவீன் ஃபேமிலி அங்கேயே தானே இருக்கா நைட்டைத் தவிர…அதுனால சொன்னேன்”
“ம்..ம்..நான் பார்த்துக்கறேன்”
“அப்படியா மேடம்?அதை நானும் பார்க்கறேன்!!”
என்று நவீன் சொன்னதும் ஈஸ்வரனை ஸ்கைப்பில் அழைத்த மிருதுளா…
“ஹாய் அப்பா எப்படி இருக்கேங்கள் எல்லாரும்?”
“ம்…நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ரொம்ப மாசம் கழிச்சு கால் பண்ணிருக்கயே என்ன விஷயம்”
“நாங்களும் நல்லா இருக்கோம். சரி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணினேன். “
“என்ன அது?”
“நாங்க இந்த சம்மர் லீவுக்கு ஊருக்கு வர்றதா இருக்கோம். அப்படியே உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் அப்பா அம்மாவையும் கூட்டிண்டு முன்னார் வரை ஒரு ட்ரிப் போகலாம்னு இருக்கோம். நாங்க இந்த மாதம் இருபதாம் தேதி சென்னை வந்திடுவோம். இருபத்திரெண்டாம் தேதி ஊருக்கு வருவோம். அங்கேந்து கார்ல முன்னார் போயி ஒரு நாலு நாள் உங்களோட எல்லாம் இருந்து டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம்னு இருக்கோம். என்ன சொல்லறேங்கள். ஜூன் இருப்பத்தி இரண்டாம் தேதிலேந்து இருபத்தி ஐந்தாம் தேதி வரை உங்களால் எங்க கூட வர முடியுமா?”
என்று மிருதுளா கேட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம்
“வேற யாரு வர்றான்னு சொன்னா?”
“அவ அப்பா அம்மாவையும் நம்மளையும் கூட்டிண்டு போகறாளாம்”
என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா சட்டென
“உங்களால வரமுடியாட்டிப் பரவாயில்ல விடுங்கோ. நோ கம்பல்ஷன். நாங்க எனி வே டிக்கெட், ஹோட்டல், கார் எல்லாம் புக் பண்ணியாச்சு. உங்களால வர முடியலைன்னா அப்புறம் வேற நம்மாத்தேந்து பெரியப்பாவையோ, சித்தப்பாவையோ இல்ல அத்தையை ஃபேமிலியையோ அழைச்சுண்டு போகலாம்னு நவீ சொன்னார்.”
“இல்ல அதுக்கில்ல…நாங்க கவின் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கணும் அதுதான்!!”
“ஓ!! எஸ்!! தாராளமா கேளுங்கோ. எங்களோட வர்றதுக்கு உங்க ரெண்டாவது புள்ளையோட பர்மிஷன் வேணும்ன்னா… வாங்கிக்கோங்கோ அதுனால எங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.”
“இல்ல அதுக்கில்ல கவின் ஒரு வீடு வாங்கினானே ஞாபகமிருக்கா? பிச்சுமணி பொண்ணு கல்யாணத்தப்போ நானும் கஜேஸ்வரியுமா ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போனோமே!!”
“ஆங் ஞாபகமிருக்கு. அதுக்கும் நீங்க ட்ரிப் வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?”
“அவன் அந்த வீட்டு கிரகப்பிரவேசத்தை ஜூன் இருபதாம் தேதி வச்சிருக்கான்.”
என்று ஈஸ்வரன் சொன்னதும் சற்று வருத்தமான மிருதுளாவிடம் நவீன் கண்களாலேயே பார்த்தயா? என்று கேட்டான். உடனே சுதாரித்துக் கொண்ட மிருதுளா ஈஸ்வரனிடம்
“ஓ!! அப்படியா. இருக்கட்டுமே. அது இருபதாம் தேதி தானே நாங்க உங்களை வரச்சொல்லுறது இருபத்தி இரண்டாம் தேதியாச்சே.”
“நாங்க வர்றோம் …ஆனா ஒரு நாள் டைம் குடு நான் நாளைக்கு சொல்லறேன். எதுக்கும் அவன்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்”
“ம்…சரி நான் வச்சுடறேன். பை”
என்று பட்டென காலை முடித்த மிருதுளாவிடம் நவீன்
“கேட்டேல்ல!! இதை நான் எதிர்ப்பார்த்தேன். இவாளாவது உடனே சம்மதிக்கறதாவது.”
மிருதுளா அமைதியாக உட்கார்ந்திருந்ததைப் பாரத்த நவீன் அவளிடம்
“என்ன மிருது உன் பொறுமை அதோட எல்லையை கண்டுப் பிடிச்சுடுத்தா?”
“இல்ல நவீ…அதை விடுங்கோ. எனக்கென்னனா அவா ரெண்டு பேரும் எங்கெங்கயோ கவினோட பவினோட ப்ரவீனோட எல்லாம் போறா வரா… நம்மகிட்ட பர்மிஷனெல்லாம் கேட்க வேண்டாம்ப்பா …அட்லீஸ்ட் இன்பார்மாவது பண்ணிருக்காளா? ஆனா நாம கூப்பிட்டா எல்லார் கிட்டயும் பர்மிஷன் வாங்கணும்னு சொல்லறதைக் கேட்டதும் எனக்கு மனசுக்கு வருத்தமாயிடுத்து.”
“அவா தான் இன்னைக்கு உனக்கு ஒரு இன்பஃர்மேஷன் சொன்னாளே!! உன் மச்சினன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணப் போறான்னு…அது உன் காதுல விழலையா?”
“ம்…விழுந்தது. அது கவின் கஜேஸ்வரியோட வழக்கம் தானே நவீ. அதுனால எனக்கு அது பெரிசா படலை.”
“ஓ! ஒரு தடவை பட்ட அவமானம் மறுபடியும் பட்டா அது உனக்கு பெரிசா தெரியாதா?”
“இது என்ன இரண்டாவது தடவையா நவீ? கிட்டத் தட்ட அவா நடத்தின எல்லா விசேஷத்துக்கும் அப்படி தான் செஞ்சிருக்கா. ஏன் ஒரு விசேஷத்துக்கு நமக்கு பத்திரிகை அனுப்பாம இருந்ததை நாம கேட்டதுக்கு… உன் மாமனார் மாமியாருக்கு அனுப்பினோமேன்னு உங்க கிட்டயே திமிரா பேசினவா தானே!! என்ன எப்பவும் பத்திரிகை அனுப்பாட்டாலும் ஒரு வார்த்தை சொல்லவாவது செய்வா இந்த தடவை அதுவுமில்லை.”
“நான் பார்த்து வளர்ந்ததுகள் எல்லாம் இவ்வளவு திமிருல இருக்கும் போது நாம மட்டும் இறங்கி போகணும்னு நீ சொல்லறது சரியில்லை மிருது.”
“நவீ…நாம இறங்கிப் போறதுனால எப்பவுமே குறைஞ்சுப் போயிடமாட்டோம்…குறைஞ்சுப் போனதுமில்லை. நாம நல்லா தான் இருக்கோம். விட்டுக் கொடுத்தவா என்னைக்குமே கெட்டுப் போனதில்லைன்னு சொல்லுவா அதுபோல நாம மேல மேல நல்லா தான் ஆகிண்டிருக்கோம். ஸோ கவலைப் படாதீங்கோ”
“விட்டுக் கொடுத்துப் போகறதுன்னா அது டூ வேவா இருந்தா எல்லாருக்கும் அதில் சந்தோஷம் தான் ஆனா அது எப்பவுமே ஒன் வேவாவே இருந்தா அது விட்டுக் கொடுத்துப் போறவாளுக்கு சுமைதான் அதைப் புரிஞ்சுக்கோ மிருது.”
“எதையும் யார்கிட்டேயும் எதிர்ப்பார்த்து விட்டுக் கொடுக்கக் கூடாது நவீ.”
“சரி மா…இப்படியே பேசிண்டிருந்தன்னா ஒரு நாள் நீ பெரிய சாமியாரினி ஆயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு மிருது”
“ஹா! ஹா! ஹா!! ஹா!! நல்ல ஜோக் நவீ”
“என்னது ஜோக்கா!! சொல்லுவ சொல்லுவ…சொல்ல மாட்ட …சரி நாளைக்கு உன் மாமனார் என்ன சொல்லுவார்னு நினைக்கற?”
“அவா நிச்சியம் நம்ம கூட வருவா.”
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லற மிருது?”
“ம்….அவாளும் அங்கே தனியாகத் தான் இருக்கா. உங்க தம்பி ப்ரவீன் மைசூருக்கு நம்மாத்துக்கு வந்திருந்த போது உங்க அம்மா ஃபோன்ல என்ன சொன்னா??”
“என்ன சொன்னா?”
“ப்ரவீனும் துளசியும் குழந்தைகளும் அங்கேயே ஒரு வாரம் இருக்கட்டும் நாங்களும் நிம்மதியா இங்கே இருக்கோம்னு சொன்னா இல்லையா அதை வைத்துத்தான் நான் சொல்லறேன். ஸோ அவாளுக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்படறது. அதுவுமில்லாம அவாளை வேற எந்த பசங்களும் எங்கேயும் அழைச்சுண்டு போனதில்லைங்கறதும் ஒரு முக்கியமான பாய்ண்ட்”
“ஆமாம் நீ இவ்வளவெல்லாம் யோசிச்சு எல்லாம் செய்…அவா அதையும் கெடுத்துக் குட்டிச்சுவறாக்கி…உன்னையே அவமானப்படுத்தவும் செய்வா”
“பார்ப்போம் நவீ.”
மறுநாள் மிருதுளாவை ஸ்கைப்பில் அழைத்தார் ஈஸ்வரன்
“ஹலோ”
“ஹலோ அப்பா. சொல்லுங்கோ. பர்மிஷன் வாங்க வேண்டிய இடத்திலெல்லாம் வாங்கியாச்சா? கிடைச்சுதா?”
“ஆங் கேட்டேன். கவின் சொல்லறான் நாங்க அவன் கூட கிரகப்பிரவேசத்துக்கு ட்ராவல் பண்ணிட்டு திரும்பி இருபத்தி ஒன்னாம் தேதிதான் வருவோமாம். ஸோ உடனே அடுத்த நாளே முன்னார் கிளம்பணும்னா கஷ்ட்டமில்லையான்னு கேட்கிறான்.”
“இட்ஸ் ஓகே அப்பா. அவன் கூட அவ்வளவு தூரம் கார்ல போய் கிரகப்பிரவேசம் அட்டெண்ட் பண்ணறது உங்களுக்கு களைப்பைக் குடுக்காது தான். புரியறது. சரி அப்போ நாங்க பெரியப்பா ஆர் அத்தைக் கிட்ட சொல்லி அவாளைக் கூட்டிண்டு போயிக்கறோம். இட்ஸ் ஓகே!!”
“அவா எல்லாம் என்னத்துக்கு?”
“இது நல்லாயிருக்கேப்பா…நாங்க ரூமுலேந்து எல்லாம் புக் பண்ணியாச்சே…அதை கேன்சல் பண்ணவும் முடியாது…அது சும்மா போறதுக்கு அட்லீஸ்ட் அவாளையாவது கூட்டிண்டு போவோம் இல்லையா. அவாளாவது சந்தோஷப்படுவா இல்ல”
“அவாளையும் கவின் அவனோட கிரகப்பிரவேசத்துக்கு அழைச்சிருக்கான். அவாளும் எங்களோட தான் வரப்போறா”
“ஸோ வாட்? அவாளுக்கும் எங்களோட வர்றதுக்கு உங்களை மாதிரி கஷ்டமாயிருந்தா வரமாட்டா இல்லைன்னா வருவா அவ்வளவு தானே. கேட்கறதுல எந்த தப்புமில்லையே!!! அதுவுமில்லாம என் அப்பா அம்மா சென்னையிலேந்து கார்ல டிராவல் பண்ணிண்டு நம்ம ஊருக்கு வந்து அங்கேந்து அதே கார்ல முன்னார் வரை உட்கார்ந்துண்டு தான் வரப்போறா…உங்களை விட அதிக நேரம் கார்ல அவா உட்காரணும் …அவாளும் வயசானவா தான்!”
என்று மிருதுளா சொன்னதும் பர்வதம் ஈஸ்வரன் பின்னாலிருந்து ஏதோ முனுமுனுத்தாள்…உடனே ஈஸ்வரன் மிருதுளாவிடம்
“பர்வதத்திற்கு வரணுமாம். அதுனால நாங்களே வர்றோம்”
“அப்படியா? உங்களுக்கு கஷ்டமாயிருக்காதே?”
“அதெல்லாம் ஒண்ணுமிருக்காது நாங்க பார்த்துக்கறோம். சரி நான் காலைக் கட் பண்ணவா?”
“ஓகே பா பை.”
என்று காலைத் துண்டித்ததும். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தியா மிருது. அடுத்தவா சந்தோஷமா இருப்பாளேனுட்டு இவா வரேன்னு சொன்னதை!!”
“எப்படியோ வரேன்னு சொல்லிட்டாயில்லையா. விடுங்கோ”
“எனக்கென்னவோ இப்போ நம்ம கிட்ட வரேன்னு சொன்னதுக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு ப்ளான் இருக்குமோன்னு டவுட் வர்றது”
“இதுல என்ன டவுட் நவீ?”
“ஆமாம் இப்போ வரலைன்னு சொன்னா நீ பாட்டுக்கு பெரியப்பா ஆர் சித்தப்பா ஆர் அத்தையை கூப்பிட்டுப்ப….அதே இப்போ வரோம்னு சொல்லிட்டு அங்கே போனதும் வரலைன்னு சொன்னா அப்போ எப்படி? யாரை? கூப்பிடுவ? என் யூகம் சரியா?”
“ம்…அப்படிப் பண்ணுவாளா என்ன?”
“எல்லாம் பண்ணுவா. தான் அனுபவிக்காத சந்தோஷம் வேற யாருமே அனுபவிக்கக் கூடாதுங்கற நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் அது”
“எனக்கென்னவோ அப்படி தோனலை.”
“அப்படீன்னா உனக்கு என்ன தோணறதுனு சொல்லேன் கேட்ப்போம்”
“மே பீ….அவா எல்லாம் யாரு என் புள்ளை மாட்டுப்பொண்ணோட ஊர் சுத்த…அதுக்கு நாமளே போயிட்டு வந்திடலாம்னும் இருக்கலாமில்லையா!!”
“ம்..குட் கெஸ். நீ என்னைக்கு நல்லதோட மறுபக்கத்தைப் பத்தி பேசிருக்க? பார்ப்போம் பார்ப்போம்”
மிருதுளா சுற்றுலாவுக்கு வருகிறீர்களா என்று கேட்ட ஒரு கேள்விக்கு உடனே பதிலளித்த அம்புஜம் ராமானுஜத்தைப் பற்றி அன்றே மறந்தனர் நவீனும் மிருதுளாவும் ஆனால் அந்த கேள்வி கேட்டதற்கு இரண்டு நாட்கள் அவர்களைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் வைத்தனர் பர்வதீஸ்வரன். இது போன்றவர்களைத் தான் ஆங்கிலத்தில் “manupulators” என்று கூறுவார்கள். அதாவது சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அல்லது சூழலாக இருந்தாலும் அவற்றை தங்களுக்கு ஏற்றார் போல, தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ள வல்லமைப் படைத்தவர்கள். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் எவரைப் பற்றியும் சிந்திக்காத சுயநலவாதிகளாகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் காரியம் தான் முக்கியம் என்று வாழ்வார்கள். இது போன்ற குணமுடையவர்கள் கல்லை மண்ணாகவும் மண்ணைக் கல்லாகவும், தண்ணீரைப் பாலாகவும் பாலை தண்ணீராகவும் அவர்களின் சூழ்ச்சித்திறனால் மாற்றி நம்பவைக்கும் ஆற்றல் மிகுந்தவர்கள்.
நவீன் குடும்பத்தினர் இந்தியாவிற்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மிருதுளா தன் அப்பாவுக்கும் மாமனாருக்கும் ஒரே மாதிரியான வாட்ச் மற்றும் கேம் விளையாடுவதற்காக ஒரே ப்ராண்ட் டேப்லெட்டும் ஆன்லைனில் வாங்கினாள். அம்மாக்கள் இருவருக்குமே ஒரே மாடல் வைர மூக்குத்தியும், ஜெர்கான் தோடும் வாங்கினாள். ஈஸ்வரன் வீட்டின் அருகேயே குடியிருப்பதால் ப்ரவீனுக்கும் துளசிக்குமாக கப்புள்ஸ் வாட்ச்சும் அவர்களின் பெண்ணிற்கு வைரத்தில் சிறிய தோடும், மகனுக்கு ஒரு ரிமோட்டில் பறக்கும் ஏரோப்ளேனும் வாங்கினாள். மற்ற அனைத்து சொந்தங்களுக்கும் ஒவ்வொன்றை வாங்கி பேக்கும் செய்து முடிதாள். சொந்த பந்தங்களுக்கான பரிசுப் பொருட்களே ஒரு பெரிய பெட்டி முழுவதும் இருந்தது.
இந்தியாவுக்கு புறப்படும் நாள் வந்தது. மூவருமாக இந்தியா செல்ல ஃப்ளைட் ஏறினர். விடியற்காலை நான்கு மணிக்கு சென்னை விமான நிலைத்திற்கு சென்று இறங்கினர். அங்கிருந்து ஒரு டாக்ஸிப் பிடித்து ராமானுஜம் அம்புஜம் வீட்டிற்குச் சென்றனர். அம்புஜமும் ராமானுஜமும் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தனர். டாக்ஸி வீட்டின் வாசலில் வந்து நின்றதும் ஓடிச்சென்று அம்புஜம் சக்தியைக் கட்டியணைத்துக் கொண்டு பேசலானாள். ராமானுஜம் நவீனுடன் சேர்ந்து பெட்டிகளை வீட்டினுள் எடுத்து வந்தார். அவர்கள் குளித்து வந்ததும் அவர்கள் மூவருக்கும் மிகவும் பிடித்த லெமன் சேவை, தேங்காய் சேவை, மெது வடை, தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாம் செய்து வைத்திருந்த அம்புஜமும் ராமானுஜமும் அவர்களுக்கு மாறி மாறி பரிமாறினார்கள். அப்போது நவீன்
“நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே சாப்பிடலாமே!”
“ஆமாம் மா. நாங்களே போட்டு சாப்ட்டுக்கறோம். நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ”
“நீங்க மொதல்ல சாப்பிடுங்கோ நாங்க ரெண்டு பேருமா அப்புறமா சாப்ட்டுக்கறோம்”
“இதெல்லாம் செய்ய நீங்க ரெண்டு பேரும் நிச்சயம் நாலு மணிக்கு எழுந்துண்டிருப்பேங்கள்…இப்போ மணி ஏழாகறது. உங்களுக்கும் பசிக்குமில்லையா!! எல்லாத்தையும் இங்கே கொண்டு வந்து வச்சுட்டு எங்களோட சேர்ந்து சாப்பிடுங்கோ…எப்பவும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தானே சாப்பிடறேங்கள்?”
“அதுக்கில்ல மிருது…”
“பாட்டி தாத்தா ரெண்டு பேரும் எங்க கூட சாப்பிடுங்கோ ப்ளீஸ்”
“சரிடி என் செல்லக் குட்டி….இதோ சாப்ட்டாப் போச்சு”
என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மிருதுளா தன் அம்மாவிடம்
“ஏன் மா நாங்க சொன்னப்போ கேட்கலை…அதையே உன் பேத்தி சொன்னதும் சாப்பிடறேங்கள்?”
“ம்…பின்ன …பேத்தின்னா சும்மாவா. எங்க செல்லக்குட்டிமா சொன்னா எப்படி தட்டுவோம் சொல்லு”
“அப்போ உங்க பொண்ணை விட பேத்திதான் உங்களுக்கு பெரிசு இல்லையா?”
“இதுல உனக்கு சந்தேகம் வேறையா? சக்திக் குட்டி தான் எங்களுக்கு பெரிசு. இந்தாடிக் கண்ணா பாட்டிக்கிட்டேந்து ஒரு வாய்…சாப்டு”
“அம்மா இதெல்லாம் டூ மச்….நான் பதினொன்னாவது படிக்கும் போது எப்பயாவது எனக்கு ஊட்டிவிட்டிருக்கேங்களா மா?”
“நீ எங்க பொண்ணு ஆனா சக்திக் குட்டி எங்க பேத்தியாச்சே”
என்றதும் நவீனும் சக்தியுமாக மிருதுளாவைப் பார்த்து கிண்டல் செய்தனர். அதற்கு மிருதுளாவும் சிரிக்க அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தனர்.
மிருதுளா தன் அப்பாவுக்கும் அம்மாவுக்குமாக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை சக்தியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னாள். அதைப் பார்த்ததும் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அப்போது ராமானுஜம் மிருதுளாவிடம்
“என்னத்துக்கு இப்போ இந்த செலவெல்லாம் பண்ணின மிருது?”
“ஏன்ப்பா உனக்கு அந்த வாட்ச்சும் டேப்லெட்டும் பிடிக்கலையா?”
“அதுக்கில்ல மிருது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போ இந்த சுற்றுலா செலவு வேற இருக்கேன்னுட்டு கேட்டேன்”
“அச்சச்சோ!!! குழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்து தந்திருக்கா…பேசாம வாங்கிண்டு அவாளை ஆசிர்வாதம் பண்ணறதை விட்டுட்டு தேவையில்லாம பேசறேங்களே!!”
“அதுக்கில்ல அம்பு”
“இதோ பாருங்கோ உங்க ரெண்டு பேருக்கும் நாங்க ஆசையா வாங்கிண்டு வந்திருக்கோம்…நீங்க செலவைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்கோ!!”
“ஓகே! மாப்ள இனி அதைப் பத்தி பேச மாட்டேன். சக்தி தாத்தாவுக்கு இந்த டேப்லெட்டில் பபுள்ஷூட் டவுன்லோடு பண்ணித் தாடி செல்லம்”
“பபுள்ஷூட் மட்டுமில்ல தாத்தா… உனக்கு நிறைய கேம்ஸ் டவுலோடு செய்துத் தரேன்…வா”
“சக்திக்குட்டி பாட்டிக்கும் அதே கேம்ஸ் எல்லாம் என் ஃபோன்ல டவுலோடு பண்ணித்தாடிக் கண்ணா”
“ஓகே! ரெண்டு பேரும் வாங்கோ நான் டவுனலோடு செஞ்சு அதை எப்படி விளையாடணும்னும் சொல்லித் தரேன்”
என்று மூவரும் ஒரு அறையில் மணிக்கணக்காக பிஸியானார்கள். மறுநாள் நவீன், மிருதுளா, சக்தி மூவரும் முன்னார் செல்வதற்கு அவரவர்களுக்கு தேவையான துணிமணிகளை பேக் செய்து முடித்ததும் மிருதுளா கீழே சென்று தன் அப்பா அம்மாவிடம்
“நீங்க எல்லாம் பேக் பண்ணியாச்சாமா?”
“ஓ! நாங்க நீங்க வர்றதுக்கு முன்னாடி நாள் தான் பேக் செஞ்சோம். சுவட்டர் எல்லாம் எடுத்துண்டிருக்கேளா?”
“என்னத்துக்கு அதெல்லாம்? வெய்யில் சுட்டெரிக்கறது…இதில் சுவட்டர் எல்லாமா…நீ வேற”
“அப்பா அங்கே குளிரா தான் இருக்கும். எதுக்கும் எடுத்து வச்சுக்கோங்கோளேன் நாமளா தூக்கிண்டு போகப் போறோம்? கார் தானே தூக்கிண்டு வரப்போறது?”
என்று பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளாவின் இந்தியா நம்பருக்கு நவீனின் ஒண்ணு விட்ட தங்கையிடமிருந்து கால் வந்தது. உடனே எடுத்துப் பேசினாள் மிருதுளா.
“மன்னி எப்படி இருக்கேங்கள்? நவீன் அண்ணா, சக்தி எல்லாரும் எப்படி இருக்கா?”
“ம்…நாங்க நல்லா இருக்கோம் மா நீ எப்படி இருக்க? உன் நியூலி மேரிட் லைஃப் எல்லாம் எப்படி இருக்கு? சாரிமா எங்களால தான வரமுடியாம போச்சு. சரி நான் இந்தியாவுக்கு வந்திருக்கேன்னு உனக்கு யார் சொன்னா? கரெக்ட்டா கால் பண்ணறயே!!”
“ஆங் நான் நல்லா இருக்கேன் மன்னி. எங்கள் லைஃபும் நல்லா போயிண்டிருக்கு. ஈஸ்வரன் பெரியப்பா தான் நீங்க இருபதாம் தேதி வர்றதா சொன்னா. அதுதான் இன்னைக்கு கால் பண்ணினேன்”
“அப்படியா…சொல்லு சொல்லு. என்ன விஷயம்?”
“மன்னி இந்த கவின் அண்ணாவும் அந்த கஜேஸ்வரியும் பண்ணியிருக்கறதைப் பார்த்தேளா?”
“ஏன் அவா உனக்கென்ன பண்ணினா?”
“எனக்குன்னு இல்ல மன்னி ஈஸ்வரன் பெரியப்பா சைடுலேந்து யாரையுமே விசேஷத்துக்கு அழைக்கலை …இத்தகைக்கு நாங்க எல்லாரும் கவினுக்கு மட்டுமில்ல அந்த கஜேஸ்வரிக்கும் சொந்தம் வேற…அவா வீட்டுக் கிரகப்பிரவேசத்தை நேத்து நடத்திருக்காளே அதைத் தான் சொன்னேன்”
“ஓ!! அதையா!! ஆமாம் சொந்த அண்ணா மன்னி கிட்டயே சொல்லலையாம் இதுல உங்களை எல்லாம் அழைக்கலைன்னு நீ என் கிட்ட சொல்லற!!”
“அப்படியா உங்களையுமா அழைக்கலை?”
“அது …அவா வழக்கம் தான் மா. அதுனால எங்களுக்கு புதுசா படலை…ஆனா உங்களுக்கெல்லாம் இது தான் மொதோ தடவை போல அதுதான் இப்படி ஷாக் ஆகறேங்கள்.”
“இனி நாங்கஅவாளோட எந்த விசேஷத்துக்கும் போக கூடாதுன்னுட்டு முடிவெடுத்திருக்கோம் மன்னி”
“அது உங்க விருப்பம் மா. அதை நீ என் கிட்ட சொல்லணும்னு அவசியமில்லையே”
“அதுக்கில்ல மன்னி எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வர்றது. அதுதான் உங்களோட ஷேர் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ணினேன்…ஆனா உங்களையே கூப்பிடலைன்னு தெரிஞ்சதுக்கப்புறமா அவா மேலே இன்னும் வெறுப்பு தான் வர்றது. சரி மன்னி அண்ணா கிட்டேயும் சக்திக் கிட்டேயும் நான் கேட்டதா சொல்லிடுங்கோ. நான் வைக்கறேன் பை. நீங்க ஊருக்கு எப்போ கிளம்பறேங்கள்?”
“நாங்க வர்ற ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம் மா”
“அப்படியா அதுக்கு இடையில முடிஞ்சா ஆத்துக்கு வாங்கோ மன்னி.”
“நிச்சயம் ட்ரைப் பண்ணறோம் மா”
“ஓகே மன்னி பை வச்சுடவா. அப்புறமா உங்களுக்கு கால் பண்ணறேன்”
என்று அழைப்பைத் துண்டித்தாள் நவீனின் ஒண்ணு விட்ட தங்கை ராதிகா. மாடிக்ஙுச் சென்று நவீனிடம் ராதிகா சொன்னதை கூறினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“பரவாயில்லையே மிருது நீயும் பேச கத்துண்டுட்டியே!! பலே!!! அந்த கூட்டம் ரொம்ப திமிருல ஆடுறா…பார்ப்போம்…எல்லாத்தையும் பொறுமையா தள்ளி நின்னுண்டு பார்ப்போம்”
இருபத்தி இரண்டாம் தேதியானது. நவீன், மிருதுளா, சக்தி, அம்புஜம், ராமானுஜம் ஐவரும் காலை நான்கு மணிக்கெல்லாம் தயாராகி காரில் ஏறி பர்வதீஸ்வரன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தொடரும்…..
கவின் கஜேஸ்வரியிடமிருந்து ஃபோன் கால் வருமென்று காத்திருந்த மிருதுளாவுக்கு எப்போதும் போல ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு நாட்கள் ஆனதும் நவீன்
“என்ன மிருதுளா மேடம் உங்க மச்சினன் இன்னுமா ஃப்ரீ ஆகலை? நாம ஃபோன் பண்ணி ரெண்டு நாளாச்சே!!!”
“ம்….நான் என்ன பண்ணுவேன் நவீ? நிச்சயம் பண்ணுவான்னு எதிர்ப்பார்த்தேன் பண்ணலை…அவ்வளவு தான் விட்டுட்டேன். இனி என்னென்னைக்கும் எதுக்காகவும் பேசவோ, போகவோ மாட்டேன்”
“ம்…அதை தான் நான் ஆரம்பத்துலேந்து சொல்லிண்டிருக்கேன். எங்க கேட்ட?”
“நீங்க ஆம்பளப்பா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுப்பேங்கள் ஆனா நான் அப்படி எடுக்க முடியுமா? அப்படியே நான் எடுக்கறதா இருந்தாலும் ஆரம்பத்துலேயே எடுத்திருக்கணும். அப்படி எடுத்திருந்தேன்னா குடும்பத்துல பிரிவு ஏற்பட்டிருக்கும்”
“இப்போ மட்டும் என்ன வாழறதாம்? நாம என்ன அவாளோட சந்தோஷமா அன்னியோன்யமா வா இருக்கோம் இல்ல அவா தான் எல்லாரும் அப்படி இருக்காளா? எனிவேஸ் இது நாள் வரை எல்லாருக்கும் நீ நல்லவளா இருந்தது எல்லாம் போதும் மிருது….அப்படி நீ நல்லவளா இருந்ததால… என்ன… உன்னை அவா யாராவது புரிஞ்சுண்டாளா? இல்லையே!!! உன்னோட இந்த நல்ல குணத்தை, உன்னோடு பொறுமையை, விட்டுக்கொடுக்கும் பண்பை எல்லாரும் இளிச்சவாயி, சூடு சுரனை இல்லாதவன்னு தான் நினைச்சிண்டிருப்பா!!! நினைக்கறது என்ன அதுனால தான் மேல மேல உன்னை ….ராதர்… நம்மை அவமானப்படுத்தி அதில் சந்தோஷம் அடையறா!!! எதுக்காக அப்படிப்பட்டவாளை நீ நினைக்கணும் சொல்லு!!!”
“ம்…பார்ப்போம் நவீ. என்னால சட்டுன்னு எல்லாம் மாற முடியாது ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திக்கறேன்.”
“தட்ஸ் குட். அது உனக்கும் நல்லது நம்மளுக்கும் நல்லது. நிச்சயமா ட்ரைப் பண்ணு”
“ஷுவர் நவீ. சரி நாம இன்னைக்கு சக்தியோட கிளாஸ் மடிஞ்சிட்டு…மூணு பேருமா எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோமா?”
“ஓ!! போகலாமே. அதுதான் நம்ம கார் வந்துடுத்தே!! அப்புறம் என்ன?”
என்று பேசிக்கொண்டது போலவே சக்தியின் கிளாஸ் முடிந்ததும் மூவருமாக வெளியே புது ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். மாலை நேரம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து படுத்துறங்கினர்.
சக்தி வெளிநாட்டில் புது பள்ளியில் செட்டாவாளா!! அவளுக்கு பிடிக்குமா? நன்றாக இந்தியாவில் படித்ததுப் போலவே குவைத்திலும் படிப்பாளா? போன்ற பல கேள்விகள் மிருதுளா நவீன் இருவருக்குள்ளும் இருந்ததை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக் கொண்டனர். அப்போது சக்தியை கூப்பிட்டாள் மிருதுளா….சக்தி தன் அப்பா அம்மாவின் அறைக்குள் வந்ததும்
“ம்… என்னம்மா கூப்பிட்ட?”
“சக்திமா..உனக்கு உன் புது ஸ்கூல் பிடிச்சிருக்கா? டீச்சர்ஸ் எல்லாரையும் பிடிச்சிருக்கா? எப்படி பாடமெல்லாம் எடுக்கறா? புரியறதா?”
“அம்மா எனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கு, டீச்சர்ஸையும் பிடிச்சிருக்கு, பாடமும் நல்லா டீச் பண்ணறா, எனக்கு ஃப்ரெண்ட்ஸும் கிடைச்சுட்டா….ஆர் யூ ஹாப்பி நவ்”
“ஏய் குட்டிமா….நான் ஹாப்பியா இருக்கறது இருக்கட்டும்…நீ ஹாப்பியா இருக்கியா? அது தான் எங்களுக்கு வேணும்”
“நான் ஹாப்பி தான்ம்மா”
“ஓகே டா கண்ணா நீ என்ன பண்ணிண்டிருந்தயோ அதை போய் கன்டின்யூ பண்ணிக்கோ போ”
“பாரேன்….ப்பா…கூப்பிட்டா…கேள்வி கேட்டா…போன்னுட்டா”
“நீ வாடி கண்ணா உனக்கு வேலை எதுவுமில்லாட்டி நாம ஒரு கேம் ஊனோ போடலாம்.”
“ஓகேப்பா. நான் ரெடி…அம்மா வாம்மா…அந்த துணியை அப்புறமா மடிச்சு வச்சுக்கோமா”
என்று சக்தி சொன்னதும் மகருதுளா அவள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அவளுடன் விளையாடச் சென்றாள் அதைப் பார்த்ததும் சக்தி….
“அம்மா ஐ ஆம் ஷாக்டு டூ சீ யூ கம்மிங் டூ ப்ளே வித் அஸ் இம்மீடியட்ளீ…!!!! வாவ்!!! அப்பா அம்மாவுக்கு ஏதோ ஆயிடுத்து”
“சரி சரி வாங்கோ வாங்கோ விளையாடலாம்…”
என்று மூவரும் ஊனோ விளையாட்டை விளையாடினர். பின் சக்தி அவளின் படிப்பைத் தொடர்ந்தாள். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது எப்பவுமே வேலையிருந்தா அதை எல்லாம் முடிச்சிட்டு தானே விளையாட வருவ!!! இன்னைக்கு என்ன சக்தி கூப்பிட்டதும் வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு வந்துட்ட? எனக்கே ஆச்சர்யமா தான் இருந்தது”
“ஆமாம் நவீ….இன்னும் ரெண்டு வருஷம் தான் சக்தி நம்ம கூட இருப்பா…அதுக்கப்புறம் எங்கயாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிடுவா….அப்புறம் அவ உலகமே வேறன்னு ஆகிடும்…..அதுக்கு பிறகு கல்யாணம் ….பின்ன அவ குடும்பம் குழந்தைன்னு இருப்பா….அதுதான் இப்பவே கிடைக்குற நேரத்தை எல்லாம் அவ கூடவே ஸ்பென்ட் பண்ணறேன்”
“ஓ!!! ஓகே ஓகே!!! அதுவும் கரெக்ட் தான் மிருது”
“நவீ நாம இன்னொரு குழந்தை பெத்துண்டிருக்கலாமோ!!”
“நோ !!நோ!! நோ!! மிருது என்னால அட் எ டைம் ரெண்டு குழந்தைகளை தான் சமாளிக்க முடியும்….மூணெல்லாம் நோ சான்ஸ் மா”
“என்னது ரெண்டு குழந்தைகளை சமாளிக்கறேங்களா!!!! அது எங்க அந்த ரெண்டாவது குழந்தை?”
“என்னோட மூத்த குழந்தை நீ அன்ட் ரெண்டாவது குழந்தை நம்ம சக்தி”
“ஆமாம்!! ஆமாம்!!!!”
“உண்மை தானே மிருது….”
என்று மூவரின் வாழ்க்கை மிகவும் அழகாகவும், அமைதியாகவும் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அம்புஜத்திடமிருந்து வாட்ஸ்அப்பில் கால் வந்தது.
“ஹலோ மிருது நான் அம்மா பேசறேன்”
“ஆங் அம்மா சொல்லு…ஏன் வாய்ஸ் கால் பண்ணற? வீடியோ கால் பண்ண வேண்டியது தானே?”
“இரு இதை ஆஃப் பண்ணிட்டு மறுபடியும் உனக்கு கால் பண்ணறேன்.”
“ஆங் ….இப்போ ஓகே வா?”
“ம்…இப்போ ஓகே. சொல்லு என்னமா?”
“எல்லாம் நல்ல விஷயம் தான் மிருது. நம்ம வேனுவுக்கு ஒரு வரன் வந்திருக்கு. அவனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.”
“யார் மூல்யமா வந்திருக்கா”
“எல்லாம் நம்ம தமிழ் மாட்ரிமோனி சைட் மூலமா தான் வந்திருக்கா.”
“அம்மா அப்போ நீ கட்டின காசு வீணாப் போகலை.”
“அது இருக்கட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிடறேனே….அப்புறமா நீ பேசு…இல்லாட்டி நான் மறந்துடுவேன்”
“சரி ….சொல்லு…”
“பொண்ணோட அப்பா அம்மா பம்பாய்ல செட்டிலானவா. அவாளுக்கு சொந்த ஊரு மதுரையாம். பொண்ணு அமெரிக்கால படிக்கறா. பொண்ணு நம்ம வேனுவோட லண்டன் மூவ் பண்ணவும் தயாராம். வேனுவும் அவளோட பேசிட்டானாம். அவனுக்கும் ஓகேவாம் அது தான் இந்த இடத்தையே முடிக்கலாம்னுட்டு இருக்கேன்”
“சூப்பர் மா….எனக்கும் மகதியை ரொம்ப பிடிச்சிருக்குமா”
“ஆங்….நீ எங்கே அவளைப் பார்த்த?உனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்ல? அதுவுமில்லாம அவ பேரை நான் இன்னும் சொல்லவேயில்லை ஆனா நீ கரெக்ட்டா சொல்லறையே எப்படி அது?”
“ஆங்….அது வந்து….அது…”
“மிருது என்ன சொல்ல வந்தயோ…அதை சொல்லு”
“அம்மா நான் அவளோட ஃபோன்ல பேசினேன் மா. நான், வேனு, மகதி மூணு பேருமா கான்ஃபரன்ஸ் கால் போட்டுப் போன வாரத்துக்கு முந்தின வாரம் பேசினோம் மா. போதுமா!!!”
“ஓ!!! அப்போ நீங்க மூணு பேருமா பேசி வச்சிண்டு தான் எங்ககிட்ட வந்தேங்களா?”
“இல்ல மா…நீங்க பேசிண்டதுக்கப்பறமா தான் நாங்க பேசிண்டோம். அதுக்கப்புறமா தான் உங்கிட்ட அவா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா புரிஞ்சுதா?”
“ஓ!!! சரி சரி சரி….என் மாட்டுப் பொண்ணு எப்படி பேசறா மிருது?”
“எல்லாரையும் போல வாயால தான் மா!!”
“ஜோக்காக்கும்????சொல்லுடி”
“நன்னா பேசறா”
“அது போதும் மிருது.”
“சரி எப்போ நிச்சயம் வச்சிருக்கேங்கள்? எப்போ கல்யாணம்? அந்த டேட்ஸ் எல்லாம் முன்னாடியே சொல்லிடுமா ஏன்னா நாங்க முன்னாடியே டிக்கெட் புக் பண்ணினா தான் எங்களுக்கு சீப்பா இருக்கும்”
“சரி டி. எங்களுக்கு அது தெரியாதா?”
“நிச்சயம் ஆன்லைன்ல தான்…ஏன்னா இப்போ ஒரு தடவை வந்துட்டு அப்புறமா மறுபடியும் எல்லாம் டிராவல் பண்ண ரெண்டு பேராலையும் முடியாதாம்….காசும் எக்கச்செக்கம் செலவாகுமாம்…அதுனால நிச்சயத்தை ஆன்லைன்ல வேனு லண்டன்லயும், மகதி அமெரிக்காவிலும் நாங்க சென்னையிலும், நீங்க குவைத்திலும், மகதியோட அப்பா அம்மா பம்பாயிலும் இருந்துண்டே ஸ்கைப்ல வர்ற வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இருபத்தி ஐந்தாம் தேதி நடக்கப் போறது. அவசியம் நீயும் மாப்பிள்ளையும் சக்தியும் அட்டென்ட் பண்ணணும்…மாப்பிள்ளை இருக்காறா?”
“ஆங்…இருக்கார்….இரு குடுக்கறேன்….நவீ நவீ…இந்தாங்கோ எஙக் அம்மா அப்பா பேசணுமாம். வேனுவுக்கு நிச்சயதார்த்தமாம் அதுக்கு உங்களையும் அழைக்கக் கூப்பிடறா”
“ஆங் சொல்லுங்கோ….நம்ம வேனுக்கு நிச்சியமாமே….கங்ராட்ஸ்….”
“ஆமாம் மாப்ள…வர்ற இருபத்தி அஞ்சாம் தேதி ஏதோ ஆன்லைன்லன்னு சொன்னான் வேனு…ஏதோ லிங்க் அனுப்புவானாம் நம்மளுக்கு. அதை க்ளிக் பண்ணினா எல்லாரும் எல்லாரையும் பார்க்கலாமாமே!!!”
“எது ? ஸ்கைப்லயா?”
“ஆங் அதே தான். அதெல்லாம் எனக்குத் தெரியாது…எல்லாம் அம்மாவும் புள்ளையுமா தான் அதை பத்தி பேசிப்பா. அவசியம் நீங்களும் அவன் அனுப்பற லிங்கைக் க்ளிக் பண்ணி அட்டென்ட பண்ணணும்னு கேட்டுக்கறோம்”
“நிச்சயமா நாங்க அட்டென்டன்ஸ் கொடுப்போம் கவலைப் படாதீங்கோ. சரி மிருது இந்தா நீ பேசிக்கோ எனக்கொரு கால் இருக்கு நான் வரட்டுமா”
“ஓகே மாப்ள வேலை தான் முக்கியம். நீங்க போயிட்டு வாங்கோ…இதை சொல்லத்தான் கூப்பிட்டோம்”
“ரொம்ப சந்தோஷம் நான் வேனுட்ட பேசறேன். சரி நீங்க மிருதுவோட பேசிண்டிருங்கோ நான் வரேன்…மிருது இந்தா”
“ம் ஓகே நவீ!! ம்…சொல்லுங்கோ மை டியர் பேரன்ட்ஸ்”
“அது சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன் மிருது. சக்தி குட்டி எப்படி இருக்கா? அவளுக்கு புது ஸ்கூல் எல்லாம் செட்டாச்சா?”
“ம்…அவ நல்லா செட்டில் ஆகிட்டாம்மா. சரி நிச்சியத்துக்கு உங்களுக்கு வேலை ஒண்ணுமில்லையா?”
“என்னத்த வேலையிருக்கு? கம்ப்யூட்டரை ஆன் செஞ்சுண்டு உட்காரணும் அது தான் வேலை”
“ஹா!ஹா!ஹா! ஆமாம் இல்ல…சரி வேற யாரை எல்லாம் இன்வைட் பண்ணப் போறேங்கள்?”
“எனக்கு என் சைடு ஆட்களை எல்லாம் கூப்பிடணும்னு ஆசையா தான் இருக்கு…அப்பாவுக்கும் அவா சைடு கூப்பிடணும்னு இருக்கு ஆனா வேனு இப்போ யார்கிட்டேயும் சொல்லிக்க வேண்டாம்னு சொல்லிட்டான். கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டுக்க சொல்லியிருக்கான்”
“சரி கல்யாண தேதி எப்போ?”
“பார்த்தையா ….பேச்சு சுவரஸ்யத்துல அதை சொல்ல மறந்தே போயிட்டேன்…அது வர்ற அக்டோபர் மாசம் பதினாறாம் தேதி முடிவு பண்ணிருக்கோம். நீ மாப்ள எல்லாரும் ஒரு மாசம் முன்னாடியே வந்திடணும்”
“அம்மா அம்மா….ஒரு மாசம் முன்னாடி எல்லாம் வர முடியாதுமா….சக்தி இந்த வருஷம் லெவென்த் மா….ஒரு வாரம் முன்னாடி நான் வரேன்…கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி நவீயும் சக்தியுமா வருவா சரியா”
“ம்…சரி உங்க வசதியைப் பார்த்துக் கோங்கோமா. வேற என்ன மிருது?”
“வேற ஒண்ணுமில்லைமா”
“சரி வச்சுடவா. சக்திக் குட்டி ஸ்கூலுக்கு போயிருப்பா….நாங்க வர்ற சனிக்கிழமை அவகிட்ட பேசறோம்ன்னு சொல்லு”
“ஓகே !! சொல்லறேன். பை”
“ம்…பை.. பை..மிருது…வச்சுடறேன்”
என்று ஃபோன் காலை துண்டித்தாள் அம்புஜம். நவீன் அவன் காலை முடித்து வரும் வரை மிருதுளா மீதமிருந்த வீட்டு வேலைகளை எல்லாம் முடித்தாள். நவீன் வந்ததும் அவனிடம் கல்யாண தேதியைச் சொல்லி டிக்கெட் புக் பண்ண வேண்டுமே என்று கூற அதற்கு நவீன்…
“ஒரு மாசம் முன்னாடி பண்ணினா போதும் மிருது. “
“அப்படியா!!! அப்போ விலை ஜாஸ்த்தியா இருக்காது?”
“அவ்வளவு வித்தியாசமிருக்காது”
“அப்போ ஓகே அப்புறமா பண்ணிக்கலாம்.”
ராமானுஜம் அம்புஜம் சொன்னது போலவே அனைவரும் ஸ்கைப்பில் ஒருவரையொருவர் பார்த்து அறிமுகப் படுத்திக் கொண்டனர். அதன் பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு சாஸ்த்திரிகளை வைத்து சும்மா சிம்பிளாக ஒரு நிச்சியத்தை நடத்தி முடித்தனர். கல்யாண தேதி நெருங்கியது. அப்போது அம்புஜமும் ராமானுஜமுமாக புடவை, வேஷ்டி அங்கவஸ்திரம், பூ பழங்கள் வைத்த தாம்பாளத்தில் தங்கள் மகனின் கல்யாண பத்திரிகையையும் வைத்து தங்களின் முதல் சம்மந்திகளான ஈஸ்வரன் பர்வதம் வீட்டிற்குச் சென்று கொடுத்தனர். அவர்களும் அதை வாங்கிக் கொண்டு விவரங்களை கேட்டறிந்துக் கொண்டனர். நவீனின் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்தனர். கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்தனர். பின் அனைத்து சொந்த பந்தங்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்தனர்.
மிருதுளாவும் நவீனும் அனைவரையும் ஃபோனில் அழைத்து வேனுவின் திருபணத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஈஸ்வரன் பர்வதம் குடும்பத்தினரை இவர்கள் இருவரும் அழைக்கவில்லை. நவீன் தன் சித்தியை அழைப்பதற்காக ஃபோன் செய்தான்
“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”
“நன்னா இருக்கோம் டா நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“வீ ஆல் ஆர் டூயிங் குட் சித்தி.”
“சரி என் மச்சினனுக்கு வர்ற அக்டோபர் பதினாறாம் தேதி கல்யாணம். அதுக்கு இன்வைட் பண்ண தான் கால் பண்ணினேன்”
“உன் மாமனாரும் மாமியாருமா எங்களுக்கு நேத்தே கால் பண்ணி இன்வைட் பண்ணிட்டா. பத்திரிகையும் இன்னைக்கு கிடைச்சாச்சு”
“ஓ!! சூப்பர்”
“சரி நான் ஒண்ணு உன்ட்ட கேட்கணுமே!!”
“என்னது சித்தி?”
“உன் அப்பா என்னமோ அந்த கல்யாணத்துக்கு போக மாட்டேன்னு சொன்னாறாம்….அதுக்கு கவின் தான் அவரை சமாதப்படுத்தி போகும்படி சொல்லியிருக்கானாமே!!!!”
“சித்தி அது தான் உங்களுக்கு எல்லா செய்தியும் டான்னு வந்துடறதே…அப்புறம் ஏன் என்கிட்டேயும் போட்டு வாங்கப் பார்க்கறேங்கள்?”
“அதுக்கில்லடா….உனக்கு தெரிஞ்சிருக்கும்….இல்லன்னு சொல்லலை ….இருந்தாலும் கேட்கலாமேனுட்டு தான் கேட்டேன்”
“அதெல்லாம் நீங்க சொன்னவா கிட்டேயே போய் கேளுங்கோ சித்தி….என்னை விட்டு….விடுங்கோ.”
“சரி டா அதுக்கு ஏன் இப்படி பேசற…விடு …மிருது இருக்காளா”
“ஆங் …சித்தி நான் எல்லாத்தையும் கேட்டுண்டு தான் இருக்கேன்….ஃபோன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு….”
“ஓ!!!அப்படியா….அப்போ எல்லமும் கேட்டிருப்ப!!! சரி சரி நாங்க உன் தம்பி கல்யாணத்துக்கு வர நிச்சயம் டிரைப் பண்ணறோம் மா. சரி வச்சுடவா”
“சரி சித்தி பை.”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்
“ஏன் மிருது என்னை அப்படி பார்க்கறே?”
“இல்ல நம்மாத்த நமக்கப்புறமா மூணு கல்யாணம் நடந்தது…அதுக்கு கவினோட கல்யாணத்தை தவிர மீதி ரெண்டு கல்யாணத்துக்கும் எங்க அப்பா அம்மாவை முறைப்படி அழைக்காட்டாலும் எங்க அப்பா அம்மா ப்ரவீன் கல்யாணத்துக்கும் வந்தா…பவின் கல்யாணத்துக்கும் வந்தா….அப்படி விட்டுக் கொடுக்காம வந்த எங்க அப்பா அம்மா ஆத்துல மொதோ தடவையா ஒரு விசேஷம்ன்னு கூப்பிட்டா உங்க அப்பா அம்மா அதையும் வச்சு கேம் விளையாடப் பக்கறது ரொம்ப கேவலமா இருக்கு”
“ஆமாம் எனக்கும் அது ரொம்பவே தப்பா பட்டுது….மறுபடியும் சொல்லறேன் மிருது….அவா கிடைக்கிற க்யாப் எல்லாத்தையும் இப்படி தான் யூஸ் பண்ணிப்பா….இப்பவாவது புரிஞ்சுக்கோ!!!”
“ஆனா பார்த்தேங்களா நம்ம கவின் உங்த அப்பாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கான்…”
“ஆமாம் ஆமாம் நீ தான் உன் மச்சினனை மெச்சிக்கணும்…”
“ஏன் நவீ அப்படி சொல்லறேங்கள்?”
“அவனும் அவன் ஆத்துக்காரியும் எங்கடா வம்பு கிடைக்கும்னே அலையறவா….அப்படிப்பட்டவா இப்படி ஒரு சான்ஸை விட்டுவிடுவாளா?…உன் மாமனார் போகலைன்னா ….பசங்க ரெண்டு பேரும் போகமாட்டா….இவனுக்கும் குவைத்திலிருந்து செலவழிச்சுண்டு போக இஷ்டமில்லை….ஆனா அங்க என்ன நடக்கறது ஏது நடக்கறதுனுட்டு தெரிஞ்சுக்காட்டி இவா தலை வெடிச்சிடுமே….அதுனால ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கறா மாதிரி….ஒரு பக்கம் அப்பாவை நான் தான் சமாதனப்படுத்தி நவீன் மச்சினன் கல்யாணத்துக்கு போக வச்சேன்னும் சொல்லிக்கலாம்….சொல்லிக்கலாம் என்ன….அப்படி தான் சொல்லி பரப்பிருப்பா…இன்னொரு பக்கம் அதே அப்பா அம்மாவை வைத்து உன் தம்பி கல்யாணத்துல என்னென்ன எப்படி நடக்கறதுன்னு எல்லா விவரங்களும் தெரிஞ்சுக்கலாம்….எப்படி…அவன் அப்பா அம்மாவுக்கே தெரியாம அவாளை மெஸெஞ்சரா யூஸ் பண்ணிக்கறான்..நீ வேற!!!”
அக்டோபர் மாதம் பிறந்தது. வேனுவின் கல்யாணம் வந்தது. மிருதுளா கூறியது போலவே ஒரு வாரம் முன்னாடியே சென்றாள். நவீனும் சக்தியும் திருமணத்திற்கு ஒரு நாள் முன் சென்றனர். அனைத்து சொந்தங்களும் கூடியிருந்தனர். ஈஸ்வரனும் பர்வதமும் வந்திருந்தனர். மிருதுளா சென்று அவர்களை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தாள். திருமணத்திற்கு நவீன் வீட்டு சைடிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் மட்டும் வந்திருந்தனர். கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பர்வதத்திற்கு தாம்பூலம், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து வாசல் வரைச் சென்று வழியனுப்பி வைத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். அப்போது பர்வதம் போகுற போக்கில் சும்மா போகாமல்
“என்ன அம்ஜம் மாமி? பையனும் மாட்டுப் பொண்ணும் அவா பாட்டுக்கு லண்டனோ அமெரிக்காவோ கிளம்பிப் போயிடுவா…அப்புறம் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் தனியாத் தான் இருக்கணும்…இல்லையா?”
“அதுனால என்ன பர்வதம் மாமி? இதுக்கு முன்னாடி எங்க புள்ள படிக்கப் போன போதும் நாங்க ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம்…எங்களுக்கு அதில ஒரு கஷ்டமுமில்லை. குழந்தைகள் நிம்மதியா சந்தோஷமா இருந்தாலே நமக்கு ஒரு தெம்பு தானே!!! என்ன சொல்லுறேங்கள்?”
என்று தான் ஏற்றி விட நினைத்தது பலிக்கவில்லை என்றுணர்ந்ததும்
“ம்….ம்…நாங்க வர்றோம்”
என்று கூறிவிட்டுச் சென்றனர்.
நவீன் அவர்களுடன் பேசவேயில்லை. எல்லாம் முடிந்து வேனுவும் மகதியுமாக லண்டன் சென்றனர். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக குவைத் சென்றனர். மீண்டும் சென்னையில் அம்புஜமும் ராமானுஜமும் தனியாக இருக்கலானார்கள்.
ஒரு நாள் நவீனின் சித்தி மீண்டும் கால் செய்தாள்….நம்பரைப் பார்த்ததும் நவீன் மிருதுளைவை அழைத்து….அடுத்த நியூஸ் வரப் போறது …பீ ரெடி மிருது…என்று கூறிக்கொண்டே ஃபோனை எடுத்து
“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? உன் மச்சினன் கல்யாணமெல்லாம் எப்படி நடந்தது? கல்யாணம் விசாரிக்க தான் கால் பண்ணினேன்”
“அப்படியா சித்தி? சரி சரி சரி….நாங்க நல்லா இருக்கோம். வேனுவோட கல்யாணம் நல்லபடியா நடந்தது. இருங்கோ இதோ மிருதுட்ட பேசுங்கோ’
“ஹலோ சித்தி சொல்லுங்கோ”
“ம்….மிருது நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே”
“கேளுங்கோ சித்தி”
“ஆமாம் உன் தம்பி கல்யாணம் பண்ணிண்டிருக்கறது மராட்டி பொண்ணாமே….அப்படியா? ஏன் மராட்டி பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான்? லவ் மேரேஜோ!!!”
“ஹா!! ஹா!!! ஹா!!!”
“ஏய் மிருது என்னத்துக்கு இப்போ சிரிக்கிற?”
“சித்தி அவ மராட்டி இல்ல …அவா பூர்வீகமெல்லாமே மதுரை சித்தி. ஆனா சின்ன வயசுலேயே மகதியோட தாத்தா பாட்டியெல்லாம் பம்பாயில செட்டிலாகிட்டா. சரி….அவ மராட்டின்னு உங்களுக்கு யார் சொன்னா?”
“ம்…அது வந்து …எல்லாரும் தான் சொன்னா!!”
“சித்தி நம்மாத்து சைடுலேந்து எங்க மாமனார் மாமியார் மட்டும் தான் வந்திருந்தா…ஸோ சொல்லணும்னா அவா தான் உங்க கிட்ட அப்படி சொல்லிருக்கணும்…”
“ம்…சரி மிருதுளா. நான் ஃபோனை வைக்கறேன். அடுப்புல ஏதோ வச்சுட்டு வந்துட்டேன் போல…நான் போய் பார்க்கட்டும்…பை”
“ஓகே சித்தி பை”
என்று ஃபோனை வைத்ததும். மிருதாள நவீனிடம்
“நவீ …இந்த மாநிரி ஒரு பொய்யை யாருப்பா பரப்பிருப்பா?”
“உங்காத்து சைடுலேந்து யாராவது கேட்டுருந்தா….நாம …யாரா இருக்கும்னு யோசிக்கணும்…ஏன்னா எல்லாருமே கல்யாணத்துல இருந்தா….ஆனா என் வீட்டு சைடான …நம்ம ஆல் இந்தியா ரேடியோ சித்தி கேட்குறான்னா….அது ஒருத்தா மட்டும் தான் காரணமா இருக்க முடியும். என்ன முழிக்கற? வேற யாரு? எல்லாம் உன் மாமனாரும் மாமியாருமே தான்.”
“இவ்வளவு நாளா நம்மளை பத்தி தான் இல்லாததும் பொல்லாததும் பரப்பிண்டிருந்தா….இடையில் கொஞ்ச நாள் என் அம்மாவையும் அப்பாவையும் வறுத்தெடுத்தா….இப்போ என் தம்பியையும் விட்டுவைக்கமாட்டா போல!!!”
“விடு விடு மிருது….இதுக்கு தான் சொல்லறேன்….. இவாளுக்கெல்லாம் மரியாதை மதிப்பு குடுத்தா எடைக்கு ரெண்டு ஆடு கேட்குற கூட்டம்ன்னு…எங்க நீயும் புரிஞ்சுக்கலை உன் பேரன்ட்ஸும் புரிஞ்சுக்கலை”
“ம்….ம்….நான் புரிஞ்சுண்டு ரொம்ப வருஷம் ஆகறது நவீ”
“அப்படியா மிருது? நம்பிட்டேன்!!!!”
தொடரும்……
மறுநாள் காலை நவீன் ஆஃபீஸிலிருந்து அனுப்பப்பட்ட வீடு பார்த்துத் தரும் ஏஜேன்ட்டிடமிருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்த நவீன் தனக்கு எந்த மாதிரி வீடு வேண்டும் என்பதையும் அவர்களின் பட்ஜெட்டையும் சொன்னான். ஏஜென்ட் அவர்களின் எதிர்ப்பார்ப்பு படியே வீடுகள் உள்ளதாக கூறி ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி அங்கு வரும் படி சொன்னான்.
காலையிலேயே எழுந்து தயாராகி இருந்தனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அவர்கள் எதிர்பார்த்த கால் வத்ததும் உடனே மூவரும் கிளம்பிச் சென்றனர். காலை உணவாக வெறும் ப்ரெட்டை சாப்பிட்டு விட்டு சென்றனர்.
வீட்டு ஏஜென்ட் இரண்டு மூன்று வீடுகளை கூட்டிச் சென்று காண்பித்தார். ஆனால் அவற்றில் எல்லாம் ஏதோ ஒரு குறையிருந்தது. அப்போது நவீன் அவரிடம் தனக்கு வீடு மெட்ரோ ஸ்டேஷன் அருகே இருக்கவேண்டும் என்று சொல்ல உடனே அவர்
“இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா….அப்பவே அது மாதிரி காண்பித்திருப்பேனே…சரி வாங்க …ஒரு அம்சமான வீடு நீங்க கேட்கிறா மாதிரி மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்துல இருக்கு. வந்து பாருங்க பிடிச்சிருந்தா ப்ரொசீட் பண்ணலாம்”
என்று கூறி அவர் சொன்னது போலவே மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்தில் இருந்த ஒரு அழகான அப்பார்ட்மெண்ட்ஸுக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு வீட்டைக் காண்பித்தார். அந்த வீட்டிற்குள் சென்றதுமே மிருதுளாவிற்கும் சக்திக்கும் மிகவும் பிடித்துப் போனது. நல்ல வெளிச்சம் ப்ளஸ் நல்ல வடிவமான வீடாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனதால் நவீன் மற்ற விவரங்களை எல்லாம் பேசி முடித்து பதினைந்தாம் தேதி முதல் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக அக்ரிமென்ட் எல்லாம் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் கொடுத்து முடிவு செய்து அந்த ஆஃபீஸிலிருந்து வெளியே வந்ததும் சக்தி
“அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா…அதைவிட ரொம்ப தாகமா இருக்குப்பா..”
“சக்திமா இங்க வெளியில எங்கயுமே சாப்பிடவோ, தண்ணி குடிக்கவோ கூடாதும்மா…கொஞ்சம் வெயிட் பண்ணு நாம ஒரு டாக்ஸிப் பிடித்து ரூமுக்கு போயிடுவோம். அங்கே போய் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். சரியா”
“நவீ எனக்கே ரொம்ப தாகமா இருக்கு அவ சின்னப் பொண்ணுப்பா….தொண்டை வரண்டு போயிடுத்து. காலையில ஏழு மணிக்கு ப்ரெட் சாப்பிட்டு கிளம்பியது ….இப்போ மணி ரெண்டாச்சு… இதுவரைக்கும் ஒரு பொட்டு தண்ணிக் கூட நாக்குல படலை. ம்…வெளியில பப்ளிக்ல தானே தண்ணிக் குடிக்கக் கூடாது …ம்…..அதோ நம்ம அண்ணாச்சி ஹோட்டல் இருக்கே அதுக்குள்ளப் போய் தண்ணிக் குடிச்சிட்டு அப்படியே சாப்பாடு பார்சல் வாங்கிட்டு போவோமா?”
“ம்….சரி அவாளும் அளௌ பண்ண மாட்டான்னு நினைக்கிறேன்…சரி வாங்கோ போய் கேட்டுப் பார்ப்போம்”
என்று மூவரும் ஹோட்டல் சரவணபவனுக்குள் சென்றனர். உள்ளே அனைத்து சேர்களும் டேபில்களின் மேல் கமுத்தி வைக்கப் பட்டிருந்தது. நவீன் குடும்பத்துடன் உள்ளே சென்றதும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் நவீனிடம்
“சார் நோ சர்வீஸ். ஓன்லி ஆஃப்டர் செவென் ஓ க்ளாக்”
“நாங்க தமிழ் தான்ப்பா…எங்களுக்குத் தெரியும்ப்பா….பார்சல் வாங்க வந்திருக்கோம்.”
“அப்படியா சார். சாரி தெரியாம வந்திருக்கீங்கன்னு நினைச்சுத் தான் அப்படி சொன்னேன்…”
“இட்ஸ் ஓகேப்பா…சரி மூணு மீல்ஸ் பேக் பண்ணிக் குடுங்க”
“ஓகே சார். மூணு மீல்ஸ் பார்சல்…..ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் இதோ தந்திடறேன்”
“சரிப்பா….ஆங்…ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா!!”
“என்ன சார்?”
“எங்க பொண்ணுக்கு ரொம்ப தாகமா இருக்குதாம். காலையிலிருந்து தண்ணியே குடிக்காம வெய்யில்ல சுத்திக்கிட்டிருக்கோம். எங்க கிட்ட தண்ணி பாட்டிலிருக்கு ….வெளியில குடிக்க முடியாது ….ஸோ இங்க கடைக்குள்ள கொஞ்சம் தண்ணி மட்டும் குடிச்சுக்கலாமா ப்ளீஸ்”
“ஐய்யோ சார்…அதெல்லாம் கூடாது சார் …அப்புறம் எங்க லைசென்ஸ் போயிடும். இல்ல சார் மன்னிச்சுக்கோங்க. அது மட்டும் முடியாது சார். இருங்க உங்க பார்சல் வேணும்ன்னா சீக்கிரமா தரச் சொல்லறேன். டேய் மூணு சாப்பாடு பார்ஸல் சீக்கிரம் ரெடி பண்ணு. ஆனா இந்த தண்ணிக் குடிக்கறதெல்லாம் பண்ணக் கூடாது சார். ரொம்ப சாரி சார்”
“இட்ஸ் ஓகே. சக்தி ஜஸ்ட் வெயிட் ஃபார் ஃப்யூ மினிட்ஸ்..நாம ஹோட்டலுக்குப் போயிடலாம்”
“இந்தாங்க சார் உங்க பார்சல்”
“ஓகே. தாங்ஸ்ங்க நாங்க வர்றோம்”
“ரொம்ப சாரி அன்ட் ரொம்ப நன்றி சார்”
“பரவாயில்லை.”
என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு வெளியே வந்து ஒரு டாக்ஸியில் ஏறி ரூமிற்குச் சென்றனர். ரூமிற்குள் சென்றதும் முகம் கை கால் கழுவி விட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். நன்றாக சாப்பிட்டனர். மிருதுளா மட்டும் சரியாக சாப்பிடவில்லை அதை கவனித்த நவீன் அவளிடம்
“ஏன் மிருது நீ சரியாவே சாப்பிடலை?”
“எனக்கு வெய்யில்ல நடந்ததால நல்லா தலை வலிக்கறது நவீ. அதுதான் சாப்பிட முடியலை. வாந்தி வர்றா மாதிரி இருக்கு.”
“சரி சரி எழுந்து போய் கை அலம்பிட்டு நீ போய் படுத்துக்கோ”
“ம்…ஓகே… “
என்று கூறி விட்டு பாத்ரூமிற்கு சென்றவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். உடனே நவீனும் சக்தியுமாக சென்று பாத்ரூம் கதவைத் தட்டினர். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்தாள் மிருதுளா. அவள் மிகவும் சோர்ந்துப் போயிருந்தாள். நேராக பெட்ரூமிற்குச் சென்று படுத்துக் கொண்டாள். நவீனும் சக்தியும் சாப்பிட்டு விட்டு அவர்களும் வெய்யிலில் அலைந்ததில் ட்ரெயின் அவுட்டாகியிருந்ததால் பேசாமல் படுத்துறங்கினர். மாலை ஒரு ஆறு மணிக்கு எழுந்தான் நவீன். எழுந்ததும் மிருதுளாவைப் பார்த்தான். அவள் மெல்ல முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்த நவீன் உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்து வந்து மிருதுளாவை எழுப்பி
“மிருது மிருது….எழுந்து இந்த மாத்திரையை போட்டுக்கோ…உன் உடம் அனலாக் கொதிக்கறது. ப்ளீஸ் எழுந்துருமா”
“ஆங்….நவீ….எனக்கு ரொம்ப முடியலை நவீ”
“சரி இந்தா இந்த மாத்திரையைப் போட்டுண்டு தூங்கிக்கோ”
என்று நவீன் மாத்திரையை கொடுத்ததும் மிருதுளா அதை விழுங்கியதும் மீண்டும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள். நவீன் காஃபி போட்டுக் குடிப்பதற்காக கிட்சனுக்கு செல்லும் வழியில் சக்தியிடமும் காஃபி வேண்டுமா என்று கேட்பதற்காக அவளின் ரூம் கதவைத் தட்டினான். பதில் வராததால் உள்ளே சென்றுப் பார்த்தான். சக்தியும் முனகிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் நன்றாக ஜூரம் இருந்தது. அவளையும் எழுப்பி மாத்திரைக் கொடுத்து உறங்க வைத்து விட்டு வெளியே வந்து ஒரு கப் காபி போட்டுக் கொண்டு ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டே தன் மனதிற்குள்
“என்ன இது ரெண்டு பேருக்குமே நல்லா ஜூரம் அடிக்குதே…பேசாம ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக வேண்டியது தான்….நைட்டு ஏதாவது ரொம்ப ஆச்சுன்னா அப்புறம் என்கிட்ட காருக் கூட கிடையாது எப்படி இவா ரெண்டு பேரையும் கூட்டிண்டுப் போறது!!! அதுனால இப்பவே ரிசெப்ஷனில் சொல்லி ஒரு கார் புக் பண்ணித் தரச் சொல்லுவோம்…..”
என்று எண்ணிக் கொண்டே ரிசெப்ஷனுக்கு கால் செய்தான்
“ஹலோ ஆம் காலிங்க ஃப்ரம் ரூம் 2023..ப்ளீஸ் அரேஞ்ச் எ டாக்ஸி ஃபார் அஸ் டூ கோ டூ ஹாஸ்பிடல்…அன்ட் பை தி வே….விச் ஈஸ் தி பெஸ்ட் ஹாஸ்பிடல் நியர் பை…”
“வாட் ஹாப்பென்ட் சார்?”
“மை வைஃப் அன்ட் டாட்டர் போத் ஆர் ஹாவிங் ஃபீவர்.”
“ஓ!! ஆம் சோ சாரி அபௌட் தட் சார். ஓகே சார் வில் அரேஞ்ச் அன்ட் கிவ் யூ எ கால் சார்”
“ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட். தாங்ஸ்”
என்று பேசி முடித்ததும் மிருதுளாவையும் சக்தியையும் எழுப்பி ஹாலில் அமரச் சொல்லிக் கொண்டேயிருக்கையில் கார் வந்து விட்டது என்று ரிசெப்ஷனிலிருந்து கால் வந்தது. உடனே இருவரையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு லிஃப்ட்டில் ஏறி கீழேச் சென்றான். அப்போது இருவரும் அவனின் இரு தோள்களில் சாய்ந்துக் கொண்டனர். அவர்களை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி ஆஸ்பிட்டல் சென்றான் நவீன். அங்கே சென்றபோது மணி ஆறரை. நவீன் இருவரையும் ஒரு சோஃபாவில் அமரச் செய்துவிட்டு ஹாஸ்பிடல் ரிசெப்ஷனுக்குச் சென்று முதலில் இருவர் பெயர்களையும் ரெஜிஸ்டர் செய்தான். அப்போது அங்கிருந்த ஆஸ்பிட்டல் ஊழியர் நவீனிடம்
“இப்போது அனைவரும் இஃப்தாருக்கு சென்றுள்ளனர். ஒரு அரைமணி நேரமாகும் வெயிட் பண்ணுங்கள்”
என்று சொல்லி நவீனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பேரிச்சம்பழம், காபி, பிஸ்கெட் எல்லாம் வழங்கப் பட்டது. அதில் நவீன் மட்டும் எடுத்து சாப்பிட்டான். மிருதுளாவும் பேருக்கு ஒரே ஒரு பேரிச்சம்பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள் ஆனால் சாப்பிடவில்லை. சக்தி தனக்கு எதுவும் வேண்டாமென சொல்லி நவீன் மீது சாய்ந்துக் கொண்டாள்.
சரியாக அந்த ஆஸ்பிட்டல் ஊழியர் சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில் டாக்டர் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே டாக்டர் இருவரையும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே நவீனிடம்
“நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்களா?”
“ஆமாம் டாக்டர். இப்போ தான் ரீலொக்கேட் ஆகியிருக்கோம்”
“எங்கேந்து வந்திருக்கீங்க? இந்தியாவா?”
“எஸ் டாக்டர் இந்தியா தான்”
“இந்தியாவுல எங்கே?”
“மைசூர் டாக்டர்”
“ஆம் ஃப்ரம் இரான். ஆனா நான் இந்தியா போயிருக்கேன். டில்லி, பெங்களூர் பார்த்திருக்கேன்”
“ஓ!! தட்ஸ் க்ரேட்…டாக்டர் ஹவ் இஸ் மை வைஃப் அன்ட் டாட்டர்?”
“இவர்கள் இருவருக்குமே லைட்டாக வைரல் ஃபீவர் வந்திருக்கு. இட் வில் டேக் ஃபைவ் டேஸ் டூ கெட் க்யூர். நான் சில மெடிசின்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணறேன் அதை மூன்று வேளையிலும் சாப்பிட்டதுக்கு அப்புறமா குடுங்க. தே வில் பி ஆல் ரைட் இன் ஃபைவ் டேஸ்”
“தாங்ஸ் டாக்டர்”
“டேக் கேர் ஆஃப் தெம். மே பீ திஸ் ஹீட் மே நாட் சூட்டெட் தெம். தே வில் கெட் யூஸ்டு இன் ஃப்யூ டேஸ். ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“தாங்ஸ் அன்ட் யூ டூ டாக்டர். பை.”
என்று இருவரையும் மீண்டும் அணைத்தப்படி டாக்ஸிப் பிடித்து ரூமிற்கு அழைத்துச் சென்று அவர்களை படுக்க வைத்தான். பின் டின்னர் ஆர்டர் செய்துவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்தான். சாப்பாடு வந்ததும் மிருதுளாவையும், சக்தியையும் எழுப்பி சாப்பிட வைத்து அவர்களுக்கு மாத்திரையைக் கொடுத்தான். இருவரும் கொஞ்சமாக சாப்பிட்டு பின் மாத்திரையைப் போட்டுக் கொண்டு போய் படுத்துறங்கினர். ஐந்து நாட்கள் இப்படியே இருந்தனர். நவீனும் அவனது ஆஃபீஸ் ஜாய்னிங் டேட்டை தள்ளிப் போட்டான்.
பதினைந்தாம் தேதி வந்தது. சக்திக்கு உடம்பு முழுவதுமாக சரியானது. அவர்கள் புது வீட்டிற்கு பால் காய்ச்சும் நாள் விடிந்ததும் கொஞ்சம் தேவலாமென்று இருந்த மிருதுளா ….தான் ஊரிலிருந்து தன்னுடனே எடுத்து வந்த ஒரு பாத்திரம், காமாட்சி விளக்கு, சிறிய எண்ணெய் பாட்டில், சாமி படங்கள் ஆகியவைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போற வழியிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பாட்டில் பாலும், ஒரு பாக்கெட் சர்க்கரை, இருபத்தைந்து பேப்பர் கப்புகள் கொண்ட ஒரு பேக்கும், ஒரு ஹல்தீராம்ஸ் சோன்பப்டி டப்பா, ஒரு இன்டெக்ஷன் அடுப்பு என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும் …. அதனருகே இருந்த தமிழ் கடையைப் பார்த்தாள்…உடனே அந்த கடையினுள் சென்றாள்….அங்கே பூவைப் பார்த்ததும் அதையும் வாங்கிக் கொண்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே அனைத்தையும் வைத்து, சாமி படங்களுக்கு பூ மாலையிட்டு, விளக்கில் எண்ணெய் ஊற்றி, இன்டெக்ஷன் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ரெடியாக வைத்துவிட்டு நல்ல நேரத்துக்காக காத்திருந்தனர். நல்ல நேரம் வந்ததும் விளக்கேற்றி, பால் காய்ச்சி மூவருமாக சாமியிடம் நன்றாக வேண்டிக்கொண்டு பின் காய்ச்சினப் பாலை மூன்று கப்பில் ஊற்றி குடித்தனர்.
பின் வீட்டை நன்றாக மீண்டும் சுற்றிப் பார்த்தனர். ஊரிலிருந்து பொருட்கள் வந்ததும் எது எது எங்கெங்கே வைக்கலாமென்று மிருதுளாவும் சக்தியுமாக டிஸ்கஸ் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே தரையில் அமர்ந்திருந்தான் நவீன். அதை கவனித்த மிருதுளா அவனிடம்
“என்ன நவீ எங்களையே அப்படிப் பார்த்துண்டிருக்கேங்கள்?”
“இல்ல போன நாலு நாளா நீங்க ரெண்டு பேரும் இருந்த இருப்பையும் இன்னைக்கு நீங்க பேசிண்டிருக்கறதையும் கம்பேர் பண்ணிப் பார்த்துண்டிருக்கேன்…..அப்பப்பா ரெண்டு பேரும் இப்படி பேசிண்டிருக்கலைன்னா என்னமோ மாதிரி இருக்கு…..ப்ளீஸ் இனிமேல் உடம்புக்கு முடியாம படுத்திடாதீங்கோ”
“என்னப்பா வேணும்னே நாங்க உடம்புக்கு வரவழைச்சுப் படுத்துண்டா மாதிரி சொல்லறேங்கள். நாங்க என்ன பண்ணுவோம்!!! வந்துடுத்து…சரி அதோட த்ருஷ்டி எல்லாம் கழிஞ்சுதுன்னு வச்சுக்க வேண்டியது தான்”
“ம்…அதுவும் சரி தான். சரி என்னைக்கு இந்த வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணலாம்.?”
“இன்னைக்கு நைட்டு மட்டும் இங்கே தங்கிட்டு…அப்புறம் நம்ம பொருளெல்லாம் வந்ததுக்கப்புறமா இரண்டு, மூன்று நாளா வந்து எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்…எனக்கு ஓகே! சக்தி மா உனக்கு?”
“எனக்கும் ஓகே தான்….சரிமா அது என்ன இன்னிக்கு நைட்டு மட்டும் இங்கே இருக்கணும்னு சொல்லற? ஏன் நாம நம்ம திங்ஸ் எல்லாம் வந்ததுக்கப்புறமா வந்தா போதாதா?”
“இல்ல சக்தி. நாளையோட வைகாசி முடியறது அதுனால இன்னைக்கு இங்கே தங்கிட்டா நாம வைகாசியில ஷிஃப்ட் ஆனா மாதிரி அர்த்தம். ஸோ இதுக்கப்புறமா எப்போ வேணும்னாலும் நாம ஷிஃப்ட் பண்ணிக்கலாம். புரியறதா?”
“ம்…புரியறதுமா! ஆனா இதெல்லாம் வெளிநாட்டுக் காரா பார்க்கறதில்லையே!!! ஆனாலும் அவா எல்லாரும் நல்லா தானே இருக்கா?”
“அவாளும் பார்ப்பாளா இருக்கும் நமக்கு எப்படித் தெரியும்? நாம ஒரு விஷயத்தை வச்சுப் பார்க்கறோம்…அவா எதை வச்சுப் பார்ப்பாளோ!!! யார்கிட்டேயாவது விசாரிச்சா தெரிஞ்சுடப் போறது…”
“சரி ரெண்டு பேருமா இந்த ஆராய்ச்சியை அப்புறமா நிதானமா பண்ணிக்கோங்கோ….இப்ப வரேங்களா போய் டின்னர் சாப்டுட்டு வருவோம்”
“ம்…ஓகேப்பா…பட் திஸ் டைம் லெட் அஸ் கோ டூ அ நார்த் இந்தியன் ரெஸ்டாரன்ட் பா…நாலு நாளா வெறும் இட்டிலி, ரசம் சாதம்ன்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுத்துப்பா”
“ம்….அதுதான் நம்மளை நாலு நாள்ல குணமாக்கித்து சக்தி …அதை மறந்திடாதே”
“அப்படின்னா டாக்டர் தந்த மாத்திரை நம்மளை குணமாக்கலைன்னு சொல்லறையாமா?”
“ரெண்டும் தான்”
“அப்போ ரெண்டு பேருக்கும் எல்லாம் கரெக்ட்டான ஃபுட் ஆர்டர் செஞ்சு, அதை கட்டிலிலேயே கொண்டு வந்துக் குடுத்து, உங்களை சாப்பிட வச்சு, உங்களுக்கு கரெக்ட்டா மாத்திரைக் குடுத்த என்னால இல்லன்னு சொல்லறேங்கள் இல்ல”
“அய்யோ நவீ….அப்படி எப்படி நாங்க சொல்லுவோம்!! நீங்க இல்லைன்னா நாங்க இல்லை நவீ.”
“ஆமாம்மா அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம்….நம்மளை இங்கே இந்த நேரத்துல கூட்டிண்டு வந்தது…வெய்யிலில் அலைய விட்டது….அதுனால நமக்கு உடம்பு சரியில்லாம போனது, டாக்டர்ட்ட கூட்டிண்டு போனது…நம்மளை நல்லபடியா கவனிச்சுண்டதுன்னு எல்லாமே அப்பா தான்….ஓகே வாப்பா!!”
“இதுக்கு நீ சும்மா இருந்திருக்கலாம் சக்தி”
“சாரிப்பா …இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்ப்பா”
“ம்..ம்…ஓகே ஓகே!!! சரி வாங்கோ வாங்கோ”
என்று வெளியே சென்று இரவு உணவு உண்டு வந்ததும் அவர்களின் புது வீட்டில் படுத்துறங்கினர். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு டாக்ஸியில் ஹோட்டலுக்குச் சென்று ஃப்ரெஷ் ஆனார்கள். மிருதுளாவுக்கும் சக்திக்கும் குணமானதால் நவீன் அன்று முதல் வேலையில் சேர்ந்தான். மிருதுளாவும் சக்தியுமாக பக்கத்திலிருந்த சுப்பர் மார்க்கெட்டுக்குள் சென்று காய்கறிகள், சில மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வந்து …மிருதுளா சமைத்தாள்….சக்தி அவளுக்கு காய்களை அறிந்துக் கொடுத்து உதவினாள். சமையல் வேலைகள் முடிந்ததும் ரூம் க்ளீனிங்கிற்கு ஆட்களை வரச்சொல்லி ஃபோனில் ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சொன்னாள் மிருதுளா. ஏனெனில் அவர்கள் இருவரும் உடம்பு சரியில்லாமல் இருந்த நான்கு நாட்களும் நவீன் க்ளீங்கிற்கு ஆட்களை வரச் சொல்லவில்லை. ஆட்கள் வந்தனர்…ரூமை முழுவதுமாக சுத்தம் செய்தனர், பெட்ஷீட், பில்லோ கவர் என அனைத்தையும் மாற்றினர், பாத்ரூம் டாய்லெட் க்ளீன் செய்தனர். எல்லாம் முடிந்து அவர்கள் செல்லும் முன் மிருதுளா அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள். பின் நவீனுக்கு கால் செய்து மத்திய சாப்பாட்டிற்கு ரூமுக்கு வருமாறு சொன்னாள். அதற்கு நவீன்
“எப்படியும் ஆர்டர் பண்ணணும் மிருது… ஸோ…நீங்க உங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கோ. நான் எனக்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சு சாப்ட்டுக்கறேன்”
“இல்ல நவீ நீங்க வாங்கோ. நான் சமைச்சிருக்கேன். நாம மூணு பேருமா உட்கார்ந்து சாப்பிடுவோம்”
“என்னது சமைச்சியா? எப்படி? பொருள் ஒண்ணுமே நாம வாங்கலையே அப்புறம் எப்படி?”
“நீங்க வந்து சாப்டுட்டு போயிடுங்கோ. என்ன ரோட க்ராஸ் பண்ணணும் அவ்வளவு தானே நவீ”
“ஓகே…நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்.”
என்று சொன்னதுப் போலவே ரூமுக்கு வந்தான் நவீன். உள்ளே நுழைந்ததும்
“ஆஹா ஆஹா!!! என்ன ஒரு ரசம் வாசம்….சூப்பர் மிருது….ஆமாம் என்ன இன்னைக்கு ரூமே பளிச்சுன்னு இருக்குறா மாதிரி தோணறதே!!!”
“ம்…ஆமாம் நவீ ..பளிச்சுன்னு தான் இருக்கு. ஏன்னா நான் ஹவுஸ் கீப்பிங்குக்கு கால் செஞ்சு வரச் சொல்லி க்ளீன் பண்ணிருக்கேன். சரி சரி வாங்கோ சாப்பிடலாம்”
என்று பத்து பதினைந்து நாட்களாக ஹோட்டல் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அன்று தான் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டே நவீன் மிருதுளாவிடம் சமைப்பதற்கான பொருட்கள் எங்கிருந்து வந்தது என விசாரிக்க சக்தி நடந்ததைக் கூறி முடிக்கவும் அவர்கள் சாப்பிட்டு எழுந்திரிக்கவும் சரியாக இருந்தது. கடைசியில் மிருதுளா
“இங்க நம்ம ஊர் ஐட்டம்ஸ் எல்லாமே கிடைக்கறது நவீ.”
“சூப்பர் சாப்பாடு மிருது. தாங்ஸ்.”
“என்னத்துக்கு இப்போ தாங்ஸ்….சரி நம்ம பொருட்கள் எல்லாம் நாளைக்கு வந்திடும் இல்லையா?”
“எஸ் எஸ்…வந்திடும் அதை அவா நேரா நம்ம புது வீட்டுல கொண்டு இறக்கித் தந்திடுவா. நான் நாளைக்கு லீவு போட்டிருக்கேன்… அவா பத்து மணிக்கு டெலிவர் பண்ணிடுவோம்னு சொல்லிருக்கா ….ஸோ…. நாம காலையிலேயே அங்கே போயிடணும். சரி நான் ஆஃபீஸுக்கு போயிட்டு சாயந்தரமா வரேன் பை மிருது பை சக்தி.”
“பை நவீ”
“பைப்பா”
மறுநாள் காலையில் எழுந்து புறப்பட்டு அவர்கள் பார்த்து பால் காய்ச்சின வீட்டுக்குச் சென்றனர். பத்து மணிக்கு பொருட்கள் வீட்டிற்கு வந்தது. அதை வீட்டிற்குள் வைத்து அனைத்தையும் அன்பேக் செய்து விட்டுச் சென்றனர் பேக்ர்ஸ் அன்ட் மூவர்ஸ். அவர்கள் சென்றதும் ஒவ்வொன்றாக எங்கெங்கு வைக்க வேண்டுமென ப்ளான் செய்திருந்தார்களோ அந்தந்த இடங்களில் அனைத்துப் பொருட்களையும் மூவருமாக அடுக்கி வைத்தனர். இரண்டு நாட்கள் எடுக்கும் என நினைத்திருந்தாள் மிருதுளா…ஆனால் ஒரே நாளில் எல்லா வேலைகளும் முடிந்தன. உடனே மிருதுளா நவீனிடம்…
“நவீ நாம இன்னைக்கே ஹோட்டல காலி செய்து பெட்டிகளை எல்லாம் எடுத்துண்டு இங்கேயே வந்திடலாமே”
“மிருது நாம நாளைக்கு போய் மளிகை சாமான்கள் அன்ட் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வந்து அதையும் அது அது இடத்துல வச்சுட்டு நாளை மறுநாள்லேந்து இங்க இருப்போமே….ஏன்னா நாளை மறு நாள் வீக்கெண்ட் ஸோ நான் லீவு போட வேண்டாம் அதுதான் சொன்னேன்”
“ஓகே நவீ அப்படியே செய்திடுவோம்”
என்று முடிவெடுத்து அதுபடியே மூவரும் அவர்கள் புது வீட்டில் செட்டில் ஆனார்கள். ஃபோன், டிவி கனெக்ஷன் வந்தது. நவீன் மெட்ரோவில் வேலைக்குச் சென்று…மத்தியம் ட்ரைவிங் லைசென்ஸுக்கா ட்ரைவிங் க்ளாஸ் இரண்டு மணிநேரம் போய்….பின் மீண்டும் ஆஃபீஸுக்கு வந்து வேலையைப் பார்த்துவிட்டு மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குச் சென்றான். அவர்கள் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டிலேயே இந்தியர்கள் மற்றும் மற்ற நாட்டுக் காரர்களும் நண்பர்களாகக் கிடைத்தனர். ஒரே மாதத்தில் நவீனுக்கு லைசென்ஸ் கிடைத்தது. அதை சொன்னதும் நண்பர்களும் ஆஃபீஸ் காரர்களும் ஆச்சயமானார்கள்…. ஏனெனில் அங்கு அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்திடாதாம். அதை நவீன் மிருதுளாவிடம் சொன்னதும் அவள்
“நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நவீ”
என்றாள். அதைக் கேட்டதும் நவீன்
“ஆமாம் மிருது. யூ ஆர் ரைட்”
“சரி அதெல்லாம் இருக்கட்டும் எப்போ கார் வாங்கப் போறேங்கள் நவீ?”
“வர்ற வீக்கென்ட் போய் புக் பண்ணிட வேண்டியது தான்”
அவர்கள் பேசிக்கொண்டது போலவே பெரிய செவன் சீட்டர் எஸ்.யூ.வி ஒன்றை புக் செய்துவிட்டு வந்தனர். அதுவரை வெய்யிலில் அலைந்தவர்கள் இனி வெய்யிலில் செல்ல வேண்டிய அவசியமின்றியானாது….கார் வந்தது…வசதியானது.
சக்திக்கு ஸ்கூல் திறந்தது. அவள் பள்ளியில் உலகிலுள்ள அனைத்து நாட்டைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர். சக்திக்கு ஆரம்பத்தில் அனைவரோடும் மிங்கிள் ஆவதற்கு சற்று தயக்கமிருந்தாலும் இரண்டே மாதங்களில் நண்பர் பட்டாளம் பெருகியது. அவளும் நன்றாக புதுப் பள்ளியில் செட்டில் ஆனாள். இப்படியே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அப்போது கவினின் மகன் உபநயனம் நடைப்பெறயிருந்த நாள் வந்தது. கஜேஸ்வின் இவர்கள் இந்தியாவில் இருந்தப் போது விவரம் தெறிந்துக் கொள்வதற்காக அழைத்தது தான் அதன் பின் எந்த வித அழைப்புமில்லை, ஃபோன் காலும் இல்லை, வழக்கம் போல பத்திரிகையும் இல்லை. ஆனால் அன்று மாலை மிருதுளா நவீனை கன்வின்ஸ் செய்து இருவருமாக இந்தியாவிலிருக்கும் கவினுக்கு அவன் குவைத் நம்பரில் கால் செய்தனர்….
“ஹலோ யார் பேசறது?”
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“நான் பிஸியா இருக்கேன் அப்புறமா கால் பண்ணறேன்”
என்று முகத்தில் அறைந்தார் போல ஃபோனை வைத்தான் கவின். அதை கேட்டதும் மிருதுளா நவீனிடம்…
“ஆம் சாரி நவீன்…..இந்த சினிமா சீரியல்ல எல்லாம் வர்றா மாதிரி நாம நல்லதே செஞ்சா நமக்கு கெட்டது செஞ்சவா கூட திருந்திடுவான்னு தான் நான் இவ்வளவு நாளா எல்லாத்தையும் பொறுத்துண்டு இருந்தேன்….அதுனால தான்…அவா நம்மளை மதிக்காட்டாலும்… பத்திரிகை அனுப்பாட்டாலும் ….எப்பவுமே விசேஷங்களை அட்டென்ட் பண்ண உங்களையும் கன்வின்ஸ் பண்ணி அழைச்சுண்டு போயிருக்கேன்…இப்பவும் நாமளா ஃபோன் பண்ணி விஷ் பண்ணினா அவா திருந்துவான்னு நினைச்சேன்….நம்மளைப் புரிஞ்சுப்பான்னு நினைச்சேன்….அதுவுமில்லாம உங்களுக்குத் தெரியாம…..கவினோட ஃபேஸ் புக்குல அந்த குழந்தையோட உபநயனம் பத்திரிகையை போட்டிருந்தான்….அதைப் பார்த்து அந்த அட்ரெஸுக்கு நான் ஆன்லைன்ல கிஃப்ட் அனுப்பியிருக்கேன்…..ஆனா இப்படி மூஞ்சில அடிச்சா மாதிரி பண்ணுவான்னு சத்தியமா நான் நினைக்கலை நவீ…”
“நான் எதிர்பார்த்தது தான் மிருது …ஸோ….எனக்கிது ஷாக்காவே இல்ல…அவாகிட்டேந்து வேற எதை எதிர்ப்பார்க்கறது? உனக்காக உன் திருப்திக்காக பண்ணினேன் அவ்வளவு தான்….நீ சொன்னதெல்லாம் சினிமா சீரியல்கள்லே வேணும்னா நடக்கலாம் ஆனா ரியல் லைஃப்ல அது மாதிரி எல்லாம் நடக்கறது ரொம்ப ரேர் மிருது. நீ கிஃப்ட் அனுப்பினது….உன் எண்ணம் எல்லாமே சரி தான்….மனுஷான்னா இப்படி தான் இருக்கணும்….இதுல எந்த வித தப்புமில்ல ஆனா யாருக்கு? யார்கிட்ட? அது முக்கியமில்லையா? என்னையே இரண்டு லட்சம் தரலைன்னதும் தூக்கிப் போட்ட கூட்டம் அது மிருது. அவாளைப் பொறுத்த வரை பணம் தான் எல்லாம். அது தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்….”
“அதை செஞ்சதும் சொன்னதும் உங்க அப்பா அம்மா தானே நவீ….அவா காலமும் கம்மி தான் ….அவாளுக்கு அப்புறம் வாழப்போறது நாம எல்லாரும் தானே….”
“நீ சொல்லறது எல்லாமே லாஜிக்கலி வெரி கரெக்ட் ஆனா அங்கே அதெல்லாம் எடுப்படாதுன்னு நமக்கு தெரிஞ்சதுமே நான் மனசாலையும் உறவாலையும் அவாளை விட்டு விலகி பல வருஷமாகிடுத்து….நீ தான் அந்த ரியாலிட்டிய ஏத்துக்க மறுக்குற மிருது….நல்லா யோசிச்சுப் பாரு மிருது…உன்னையோ …இல்ல…. நம்மை அங்க யாராவது மதிக்கறாளா? நாம எப்படி இருக்கோம்னோ…இல்ல நம்ம சக்தி எப்படியிருக்கா என்னப் பண்ணறானோ என்னைக்காவது யாராவது கேட்டிருக்காளா? இவாலெல்லாம் திருந்துவான்னு நீயும் நம்பற பாரு….”
“நம்பிக்கை தானே வாழ்க்கை நவீ…பார்ப்போம் அதுதான் அப்புறமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்கானே!!!!”
“ஆமாம் ….ஆமாம்…சொல்லிக்க வேண்டியது தான்….ஃபோன் பக்கத்திலேயே இரு….கால் வந்திட கிந்திட போறது”
தொடரும்…….
குவைத் மண்ணில் தரையிறங்கியது விமானம். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் மூவாயிரத்தி ஐநூற்றி நாற்பத்தி ஓரு கிலோமீட்டர் பிரயாணம் செய்து குவைத் மண்ணில் கால் வைத்தனர். இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து தங்களின் பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு குவைத் ஏர்ப்போர்ட்டு வெளியே வந்தனர். மிருதுளா எதிர்ப்பார்த்த விஷயமான தன் மச்சினன் அவன் மனைவியின் வரவு …நவீன் சொன்னதுப் போலவே வெறும் நப்பாசையானது. ஆனால் நவீனின் பெயர் பலகைக் கொண்டு ஒருவர் காத்திருந்ததைப் பார்த்த நவீன் நேராக அவரை நோக்கி நடக்கலானான். அப்போது மிருதுளா நவீனிடம்
“இவர் யார் நவீ உங்க பெயர் எழுதியப் பலகையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்?”
“ம்….உன் மச்சினனும் ஓர்பிடியும் தான் நம்மளை ரிசீவ் பண்ணி அவா ஆத்துக்கு அழைச்சுண்டு வர்றதுக்காக அனுப்பிருக்கா போல!!”
“ஹேய் நவீ….விளையாடாதீங்கோ நவீ…..உங்களை நான் கிண்டல் பண்ணணும் ஆனா நீங்க பண்ணறா மாதிரி நானே வச்சுட்டேன். சரி சரி சொல்லுங்கோப்பா யார் இவர்.”
“இவரை அனுப்பியிருக்கறது என்னோட இங்கத்த ஆஃபீஸ் காரா தான் மிருது.”
“அப்போ உங்களுக்கு இங்க ஆள் நமக்காக வெயிட் பண்ணுவானு முன்னாடியே தெரியுமா?”
“ஆங்…தெரியுமே”
“அப்படீன்னா ஏன் நீங்க நேத்து நான் அப்படி சொல்லும் போதே இதைப் பத்தி சொல்லலை”
“நேத்து நீ எதை சொல்லும் போது நான் எதைப் பத்தி சொல்லலைன்னு சொல்லுற மிருது”
“ம்…..உங்க…சாரி …சாரி என் மச்சினனும் ஓர்பிடியும் ஏர்போர்ட் வருவான்னு சொன்னபோது ஏன் உங்க ஆஃபீஸ்லேந்து நம்மை பிக்கப் பண்ண ஆள் வருவானு சொல்லைலைன்னு கேட்டேன். புரியறதா!!”
“ம்…நல்லாவே புரியறது மிருது. இப்போ நீ கார்ல ஏறு. சக்தி மா ஏறு கண்ணா.”
“வாவ் !! அப்பா சூப்பர்”
“என்னடி சூப்பர் சக்தி”
“அம்மா நம்மளை பிக்கப் பண்ண வந்திருக்கும் காரைப் பாரும்மா….இட்ஸ் மெர்க் மா மெர்க்”
“அதுனால என்ன எல்லா காரும் நாலு சக்கரத்துல தானே ஓடும்!! இது மட்டும் என்ன ரெண்டு சக்கரத்துலயா ஓடப்போறது இவ்வளவு ஆச்சர்யப்படற!!”
“அம்மா உள்ளே உட்கார்ந்துப் பாரு யூ வில் ஃபீல் தி டிஃப்ரெனஸ்”
என்று சக்தி சொன்னதும் உள்ளே ஏறினாள் மிருதுளா.
“ம்…நல்ல சொகுசா தான் இருக்கு”
“நான் தான் சொன்னேன் இல்லமா”
“மிருது இது ரோட்டுல ஓடறா மாதிரியே இருக்காது. சரி சரி ரெண்டு பேரும் சீட் பெல்ட் போட்டுக்கோங்கோ. ஆல் ஓகே! லெட்ஸ் கோ டூ தி சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நவ்”
“ஓகே சார்”
“ம்…நீ தான் ரொம்ப ஆசைப்பட்ட உன் சொந்தங்தள் எல்லாம் வருவானுட்டு அதை ஏன் அப்பவே நான் சொல்லி அதில் மண்ணைப் போடணும்னு தான் சொல்லலை போதுமா.”
“ம்….ம்….ஓகே !! ஓகே!!! நாம அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் போக எவ்வளவு நேரமாகும்?”
“இட் வில் டேக் பிஃப்டீன் மினிட்ஸ்”
“அவ்வளவு தானா?”
“ஆமாம் மிருது.”
மிருதுளாவும் சக்தியும் காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருந்தனர்.
இருவரும் அவரவர் முகநூல் பக்கத்தில் தாங்கள் நல்லபடியாக குவைத் வந்து சேர்ந்துவிட்டதாகவும்…இனி அதுவே அவர்கள் வசிக்கப் போகும் இடம் எனவும் ஏர்போர்ட்டில் எடுத்த ஃபோட்டோவைப் போட்டு பதிவிட்டனர். நவீன் வீட்டு அதிமேதாவிகளான எட்டுப் பேரைத் தவிர அனைத்து நண்பர்கள், சொந்தங்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கார் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாசலின் முன்னிருந்த பார்க்கிங்கில் நின்றது. மூவரும் இறங்கினர். டிரைவர் அவர்கள் பெட்டிகளை எடுத்து வெளியே வைப்பதற்கு முன்னதாகவே அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் டிராலியைக் கொண்டு வந்து பெட்டிகளை அதில் அடுக்கி வைத்து உள்ளே எடுத்துச் சென்றார். நவீன் மிருதுளாவையும் சக்தியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று தங்களது அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்ததும் மிருதுளா நவீனிடம்
“என்ன நவீ இது ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி மாதிரி இருக்கு!!”
“மாதிரி இல்ல மிருது. ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டியே தான். அப்படிப் பட்ட வேலையும் அதுக்கு ஏத்த சம்பளமும் இப்படிப்பட்ட சௌகர்யமும் இல்லாட்டி நான் ஒத்துண்டிருக்க மாட்டேனே!!”
“சூப்பரா இருக்கு நவீ. நான் இதெல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை. மெர்சிடீஸ் காரு…ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி…. இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமும் வர்றது அதே நேரம் கொஞ்சம் பயமும் வர்றது”
“சந்தோஷம் வர்றது ஓகே….ஆனா….ஏன் பயம் வர்றது மிருது.”
“எப்பவுமே நாம நம்ம வாழ்க்கையில ஒவ்வொரு படியா மேலே ஏறி வரும் போதெல்லாம் எனக்கு அப்படித் தான் தோனித்து, தோனறது….இனியும் தோனும் நவீ”
“அது தான ஏன்னு கேட்கிறேன் மிருது”
“நாம எஸ்கலேட்டர் ல ஏறும் போது எவ்வளவு ஜாக்கிரதையா நமது காலை எடுத்து வைத்து ஏறறோம் !!! ஏன் அப்படி?அது நம்மளை மேலே கூட்டிண்டு போகப் போறதுனு நம்பிக்கை இருந்தாலும் நாம அதுல காலை சர்வ ஜாக்கிரதையா தானே வைக்கறோம்!”
“ஏன்னா எங்கேயும் விழுந்துடக் கூடாதுங்கறதுனால அப்படி பண்ணறோம். ஆனா…அதுக்கும் நீ இப்ப சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்”
“இருக்கு நவீ. அதே போல வாழ்க்கைங்கற எஸ்கலேட்டர் நம்மை மேலே கூட்டிண்டு போகும்னு நம்பினாலும் நாம வைக்கற ஒவ்வொரு ஸ்டெப்புமே ஜாக்கிரதையா தான் வைக்கணும்….வைக்கறது மட்டுமில்ல பின்னாடி விழுந்துடாமலும் இருக்கணும். ஏறும்போது வலி இருக்காது… அப்படியே…இருந்தாலும் அது ஏறணும்ங்கற நினைப்புல நமக்குத் தெரியாது. ஆனால் விழுந்தாலோ அடி பலமா படும் இல்லையா. அதுனால ஏறும் போது நாம கீழே விழுந்திடாம இருக்கணுமே தாயினு எப்பவுமே ஒரு பயம்….பயம்னு சொல்ல முடியாது….ஒரு எச்சரிக்கை உணர்வு… எனக்கு…இருந்துண்டே தான் இருக்கும். அது குஜராத்லேந்து இப்போ இந்த குவைத் வரைக்கும் அதே எண்ணம் தான் எனகுள்ள இருக்கு. அந்த எண்ணமிருந்தால் நம்மளுக்கு அகங்காரமோ…பணம் வந்த திமிரோ என்னைக்கும் வராது. புரிஞ்சுதா!!”
“ஓ மை காட்!!! மிருது நீ இவ்வளவு எல்லாம் யோசிச்சா அப்புறம் கிடைச்ச லைஃபை உன்னால எஞ்சாய் பண்ண முடியாது”
“முடியும் நவீ. ஆனா எப்புவுமே என் மனசிலேந்து அந்த எண்ணம் மட்டும் அகலாது. அதுனால ஒவ்வொரு முறையும் நமக்கு நல்லது நடக்கும் போதும் அதை அனுபவிக்கறதுக்கு முன்னாடி அதை நமக்குக் கொடுத்த அந்த அம்பாளை வேண்டிண்டு தான் ப்ரொசீட் பண்ணுவேன்”
“எப்பலேந்து இப்படிப் பண்ணற மிருது?”
“அது நான் சொல்லுவேன் நீங்க வருத்தப் படக்கூடாது”
“அதெல்லாம் படமாட்டேன் சொல்லு.”
“நான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எங்காத்துல ராணி மாதிரி இருந்தேன். எது கேட்டாலும் எங்கப்பா வாங்கித் தந்திடுவா. இல்லைங்கற வார்த்தையை நான் கேட்டதே இல்லை. என்னை யாருமே திட்டினதில்லை. நான் திட்டு வாங்கறா மாதிரி நடந்துண்டதுமில்லை. சமையல் செய்ததில்லை. துணி துவைத்ததில்லை. அப்படி இருந்துட்டு….நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா என் வாழ்க்கை அப்படியே தடம் மாறித்து. எதெல்லாம் இருந்ததோ கிடைத்ததோ அதெல்லாமே இல்லைன்னு ஆச்சு….அதுவரை கஷ்டம்ன்னா என்னென்னே தெரியாதிருந்த நான் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை மட்டுமே தான் சந்தித்தேன்….அதுவே என் வாழ்க்கையாகிடுத்தோனு கூட பல நாள் நினைச்சிருக்கேன். கல்யாணமான மறுநாளே அடுப்படிக்குள் தள்ளப் பட்டேன். என் அம்மா அப்பா கூட திட்டாத என்னை கண்டபடி வாயிலிட்டு வறுத்தெடுத்தனர் என் மாமியாரும் மாமனாரும். தேவையே இல்லாமல் உங்கள் தம்பிகளிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டி வந்தது. அப்பவும் அந்த அம்பாள்ட்ட தான் என் மனக் கஷ்டங்களை சொல்லி அழுதேன். அதுக்கப்புறமா நம்ம வாழ்க்கை படிப்படியா உயர ஆரம்பித்ததும் தான் எனக்கு புரிந்தது என் அழுகை, வேண்டுதல் எல்லாம் அந்த அம்பாளுக்கு போய் சேர்ந்திருக்குணு. அதுக்கு அவள் குடுக்குற சன்மானம் தான் இந்த ஏற்றம் எல்லாமே. அதுனால அவளை எப்படி மறக்க முடியும். நம்ம வாழ்க்கையில எவ்வளவு ஏற்றங்கள் வந்தாலும் நான் இப்படி தான் இருப்பேன். என் மனசும் இப்படி தான் நினைக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷமா… ஜாலியா… எஸ்கலேட்டர் மேல மட்டும் தான் கூட்டிண்டு போகும்னு நினைச்சு எந்தவிதத்திலும் எச்சரிக்கையாக இருக்காமல் ஏறிண்டே இருந்த என்னை கல்யாணம் அப்படீங்கற ஒரு விஷயம் சட்டென கீழே தள்ளி விட்டதும் ரொம்பவே தடுமாறிப் போனேன். அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து நாம வாழ்க்கையில உயர உயர தான் நிறைய புரிஞ்சுண்டேன்….பக்குவப்பட்டேன். இதுதான் என் எண்ணத்திற்கான விளக்கம் நவீ.”
“அம்மாடி இவ்வளவு வருஷங்களா இதை எல்லாம் நீ என்கிட்ட சொன்னதே இல்லையே!!!”
“நீங்க கேட்டதுமில்லையே”
“ம்…அதுவும் சரிதான். ஆம் சோ சாரி மிருது. இதை எல்லாம் நான் ஆரம்பத்துலேயே கேட்டிருக்கணும்….என்னோட தப்புத் தான்.”
“இட்ஸ் ஓகே நவீ. வாழ்க்கைங்கற அலைகள் நம்ம மேல மாத்தி மாத்தி அடிச்சிண்டிருந்ததுல …அதுலேந்து கடலுக்குள் மூழ்கிடாமல் தப்பிப்பதிலேயே நம்மளோட இந்த பதினாறு வருஷங்கள் போயிடுத்து. அதுல கூட நாம இப்போ நல்லாவே நீந்தக் கத்துண்டுட்டோம். அந்த அம்பாள் துணையிருக்க நாம எது வேணும்னாலும் சம்மாளிச்சிடுவோம். ஆம் சாரி இஃப் இட் ஹாட் டிஸ்டர்ப்டு யூ”
“இல்ல மிருது!!! இப்போ நீ மறுபடியும் ராணி தான் கவலைப் படாதே மிருது. நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ தொலைத்தது அனைத்தையும் இனி உனக்கு நான் தருவேன் கவலை வேண்டாம் மகாராணி. சரி ….நம்ம யுவராணி என்ன பண்ணுறா?”
“ம்…..ஆமாம் நம்ம கதையில அவளை மறந்துட்டோமே…வாங்கோ என்ன பண்ணறான்னு பார்ப்போம்”
“ஏய் சக்தி என்ன படுத்துண்டு டிவி பார்க்கற? உன் ரூமெல்லாம் செட் பண்ணிருக்கலாமில்ல…”
“அம்மா இப்போ தானே வந்திருக்கோம் பண்ணறேன் மா”
“விடு மிருது. இப்போ செட் பண்ணி என்ன ஆகப் போறது? எப்படியும் ஒரு மாசத்துல வேற வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணணுமே”
“அதுக்காக ஒரு மாசமும் பெட்டியைத் தொறந்து தொறந்து டிரெஸ் எடுத்துப் போட்டுப்பாளா?”
“அம்மா நான் பண்ணறேன் மா. எனக்குப் பசிக்கறது இப்போ.”
“ஓ!!! அதை மறந்துட்டேனே”
“என்னத்தை மறந்தேங்கள் நவீ”
“இது ரமலான் மாசம்”
“ஸோ!!”
“எங்கேயும் போய் சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. இங்கே இவா நோன்பு இருப்பா இல்ல…..அதை நான் மறந்தே போயிட்டேன்.”
“அப்போ சாப்பாடு இல்லையாப்பா?”
“இரு இரு சக்தி நான் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்கறேன்”
நவீன் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டான்.
“அப்பா என்ன சொன்னா?”
“நாம வெளியில எங்கேயும் போய் சாப்பிடக் கூடாதாம். ஈவன் தண்ணீ கூட குடிக்கக் கூடாதாம். எல்லா ஹோட்டலும் சாயந்தரம் ஏழு மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவாளாம்.”
“அப்படியா!!! அப்படீன்னா ஏழு மணிக்கு இன்னும் சிக்ஸ் அவர்ஸ் இருக்கேப்பா….!!!!”
“இரு கண்ணா…நான் முழுசாவே சொல்லி முடிக்கலையே…நாம வெளில போய் சாப்பிடக் கூடாது ஆனா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி இங்கே வீட்டுக்குள்ள சாப்பிட்டுக்கலாமாம்.”
“அப்பாடி!!!! சாப்பிடறதுக்கு ஆறு மணி நேரம் வெயிட் பண்ணணுமோன்னு நான் பயந்தே போயிட்டேன்ப்பா”
“ஓகே என்ன வேணும்னு ரெண்டு பேரும் சொல்லுங்கோ நான் ஆர்டர் பண்ணிடறேன்.”
என்று நவீன் சொன்னதும் மிருதுளாவும் சக்தியுமாக தங்களுக்கு வேண்டியதை சொல்ல அதை ஆர்ட்ர் செய்து வரவழைத்து சாப்பிட்டனர். முன்தினம் இரவு நேர ஃப்ளைட் என்பதால் மூவரும் சரியாக தூங்காதிருந்தனர். மத்திய உணவு சாப்பிட்டதும் நன்றாக படுத்துறங்கினர்.
நவீன் மெல்ல எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான் அதில் மணி ஏழு என்றிருந்தது. திரும்பிப் பார்த்தான் மிருதுளா முழித்துக் கொண்டுப் படுத்திருந்தாள்
“என்ன மிருது நீ எப்போ எழுந்துண்ட? நான் நல்லா தூங்கிட்டேன்”
“நானும் தான் நவீ. நேத்து நைட்டு ஏர்ப்போட் அப்புறம் ஃப்ளைட்டுனு சரியாவே தூங்கலையா….அதுதான் படுத்ததும் தூங்கிட்டேன்….இப்பத்தான்.. நீங்க எழுந்துக்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் நானும் எழுந்துண்டேன். நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேள் ஸோ டிஸ்டர்ப் பண்ணலை. எழுந்து போய் சக்தியைப் பார்த்தேன்…அவளும் நல்லா தூங்கிண்டிருந்தா…அதுனால பேசாம நானும் வந்து படுத்துண்டுட்டேன்.”
“சரி நாம ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு கிளம்பி வெளியில போயி சுத்திப் பார்த்துட்டு அப்படியே டின்னர் சாப்டுட்டு வரலாமா?”
“இங்கே தானே இனி இருக்கப் போறோம்…இன்னைக்கே சுத்திப் பார்க்கணுமா என்ன?”
“என் ஆஃபிஸைக் காட்டறேன். எப்படியும் டின்னர் சாப்பிட வெளில போய் தானே ஆகணும் மிருது….சும்மா ஒரு வாக் போயிட்டு வருவோமே வாயேன்”
“ஓகே நவீ. நீங்க போய் உங்க பொண்ணை எழுப்புங்கோ நான் ரெடியாகி வந்துடறேன்.”
“சக்திக் கண்ணா எழுந்திரிமா…மணி ஏழாச்சு…”
“அப்பா இன்னும் கொஞ்ச நேரம்ப்பா ப்ளீஸ்”
“அடே….இது ஈவ்னிங் ஏழு மணி மா. எழுந்துரு நாம வெளில போய் டின்னர் சாப்டுட்டு வந்துட்டு தூங்கிக்கலாம். வா மா”
“சரிப்பா…அம்மா ரெடியாகிட்டாளா?”
“ரெடியாகிண்டேயிருக்கா.”
“சரிப்பா ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ஐ வில் பி ரெடி டூ”
என்று சக்தி சொன்னதும் நவீன் சென்று ரெடியாகினான். மிருதுளா நவீனிடம்
“என்ன உங்க பொண்ணு எழுந்துண்டுட்ட்ளா?”
“ஃபைவ் மினிட்ஸ் ல ரெடியாகிவேன்னு சொல்லிட்டுப் படுத்திருக்கா”
“அச்சோ நவீ….அவ அப்படியே தூங்கிடுவா….சரி சரி நீங்க ரெடி ஆகுங்கோ …நான் போய் அவளை எழுப்பி ரெடியாகச் சொல்லறேன்….ஃபைவ் மினிட்ஸ்னு சொன்னாளாம் இவரும் சரினுட்டு வந்தாராம்….நல்ல அப்பா நல்ல பொண்ணு”
என்று கூறிக்கொண்டே சென்று சக்தியை எழுப்பி ரெடியாகச் செய்தாள் மிருதுளா. பின் மூவருமாக கிளம்பி அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு வெளியே சென்றதும்
“அய்யோ!!! இது என்னப்பா சாயந்தரம் ஏட்டு மணியாச்சு ஆனாலும் நம்ம ஊரு மத்தியானம் மாதிரி சுடறது.”
“இங்கே அப்படி தான் மிருது. கார் வேணும் இல்லாட்டி இந்த சூட்டுல வெந்திடுவோம்”
“சரி கார் வாங்க வேண்டியது தானே நவீ”
“ம்…லைசன்ஸ் இல்லாம கார் தரமாட்டா மிருது”
“உங்க கிட்ட தான் லைசன்ஸ் இருக்கே நவீ. அது இல்லாமலா இந்தியால வண்டி ஓட்டினேங்கள்? என்னப்பா!!!”
“அந்த லைசன்ஸ் இங்கே செல்லாது மிருது. நான் மறுபடியும் இங்கே லைசன்ஸ் வாங்கினா தான் இங்கே வண்டி வாங்கவும் ஓட்டவும் முடியும்”
“ஓ!!! அப்படீன்னா இங்கே லைசன்ஸுக்கு அப்பளை பண்ணுங்கோ”
“ம்…பண்ணணும் மிருது. அது கிடைக்க லேட் ஆகும்னு எங்க ஆஃபிஸ்ல சொன்னா….பார்ப்போம் டிரைப் பண்ணுறேன்”
“அதெல்லாம் உங்களுக்கு கிடைச்சிடும் நவீ”
“எஸ் அப்பா உனக்கு ஈசியா கிடைச்சிடும்”
“என்னமோ ரொம்ப சுலபமா ரெண்டு பேரும் சொல்லிட்டேங்கள் பார்ப்போம். நாளைக்கு தான் அப்பளை பண்ணப் போறேன். சரி நாம நாளையிலேந்து வீடு வேற தேடத் தொடங்கணும்.”
“ஆமாம் நவீ….எனக்கு இந்த ஹோட்டல் ஸ்டே எல்லாம் சரி வராது. …..பிடிக்காது…ஏதோ ஒரு அஞ்சு நாள்னா சரி….ஒரு மாசமெல்லாம் டூ மச்ப்பா”
“ஏன் மா ஜாலியா இருப்பியா அதை விட்டுட்டு என்னமோ சொல்லுற”
“அப்படி சொல்லு சக்தி.”
“ஆமாம் உங்க ரெண்டு பேருக்கும் என்னப்பா….சரி நாம இங்கேயே இருந்துடலாம். ஒரு மாசம் கழிச்சே வேற வீட்டுக்கு போகலாம்…..ஆனா நம்ம இந்தியாலேந்து ஷிப் பண்ணிருக்கற பொருட்களெல்லாம் இன்னும் ஒரு பத்து நாள்ல வந்திடும் அதை எல்லாம் இங்கே இந்த அப்பார்ட்மெண்ட்லேயே டெலிவரி பண்ண சொல்லலாமா?”
“அதுக்கு தானே மிருது நாளையிலிருந்தே வீடு தேடலாம்னு சொன்னேன்”
“இல்லையே நீங்க உங்க பொண்ணு கூட சேர்ந்துண்டு ….ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!!!”
“இல்லவே இல்லை மிருது….நான் எப்போதும் உன் பக்கம் தான்”
“அப்பா…..”
என்று சக்தி சொன்னதும் அவளிடம் கண்ணைக் காட்டினான் நவீன். இவ்வாறாக பேசிக் கொண்டே நடந்துச் சென்றனர். பிறகு ஒரு டாக்ஸிப் பிடித்து ஹோட்டல் சரவணபவனுக்கு சென்று இரவு உணவை உண்டு மகிழ்ந்தனர். மீண்டும் டாக்ஸியில் அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தனர். சற்று நேரம் டிவிப் பார்க்க அமர்ந்ததில் சக்தி உறங்கிப் போனாள். அவளை எழுப்பி அவளது பெட்டில் சென்று படுக்க வைத்தாள் மிருதுளா. பின் நவீனும் மிருதுளாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…..
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் திட்டக்கூடாது”
“ம்…என்ன மிருது சொல்லு…”
“அவா தான் நம்மை கூப்பிடலை போகட்டும் ….நாமும் போகாம இருக்கறது தப்பில்லையா!!!”
“என்ன வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறுது!!!”
“அதுக்கில்ல நவீ….நாம அவாகிட்ட எந்த ஹெல்ப்பும் கேட்கப் போறதில்லையே…சும்மா போய் பார்த்துட்டு வந்துடலாமே..
எதுக்கு பகைச்சிண்டிருக்கணும்”
“அவா தான் அட்ரெஸே தரலையே எங்கன்னு போவ மிருது?”
“அதுதான் ஃபோன் நம்பர் இருக்கே நவீ. ஒரு ஃபோன் போட்டு நாம வந்த விவரத்தை சொல்லி …வீட்டுக்கு வந்து பார்க்கறோம்னு சொல்லுவோம்”
“நாம இங்கே வர்றோம்ங்கறது அவாளுக்கு நல்லாவே தெரியும் இல்லையா…..நல்ல வெயில் காலத்தில், ரமலான் சமையத்தில் குவைத்தில் வந்திறங்கியிருக்கோம். இங்கே இந்த பீரியட்ல எவ்வளவு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கும்ன்னு அவாளுக்கு நல்லாவே தெரியும் தானே!!! அப்படி இருந்தும் நம்மளை வீட்டுக்கு வான்னு அழைக்காதவா வீட்டை நாம ஃபோன் பண்ணிக் கேட்டு அப்படி தெரிஞ்சுண்டு எதுக்கு போகணும்? அதுவுமில்லாம என்கிட்ட லைசென்ஸ் இல்லைன்னும்….வண்டி இல்லைன்னும் தெரிந்தும் ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு ஒரு ஃபார்மாலிடிக்கு கூட கேட்காத ஜன்மங்களை எதுக்கு போய் பார்க்கணும்? இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்ன்னும் அதனால் நிச்சயம் கவினின் உதவி நமக்கு தேவைப்படும்னும் நினைச்சுத்தான் அவா நான் ஊர்ல இருக்கும்போது சொன்னேனே அதைப் போல எப்படியும் அவா கிட்ட உதவி கேட்டுப் போய் நிப்போம்ங்கற திமிரில் இருக்கா!!!! அவாகிட்ட நாம ஏன் போகணும் மிருது. அவா நம்மளை பகைச்சுக்கறோமேனு யோசிச்சாளா? அப்போ நாமளும் அதைப் பத்தி எல்லாம் சிந்திக்கக் கூட வேண்டாம் சரியா…அதுல எந்த வித தப்புமில்லை. இனி அந்த கூட்டத்தைப் பத்தின பேச்சே நமக்குள்ள வேண்டாம்…பேசாம நீ ஹாப்பியா இரு…நிம்மதியா இப்போ தூங்கு. என்னென்னைக்கும் நமக்கு நாம மூணு பேரு மட்டும் தான். அத்தோட ஃபுல் ஸ்டாப். ஓகே”
“என்னமோ சொல்லறேங்கள். இதெல்லாம் எங்கே போய் முடியப்போறதோ!!!”
“எல்லாம் சுபத்தில் தான் முடியும். நாளையிலிருந்து வீடு தேடும் படலம் அன்ட் லைசென்ஸ் ப்ராசஸ் எல்லாம் ஆரம்பிக்கப் போறது. நமக்கு நிறைய வேலைகள் காத்திண்டிருக்கு. ஸோ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு….குட் நைட் மிருது.”
“குட் நைட் நவீ!”
தொடரும்…..
வீட்டினுள் நுழைந்த ப்ரவீன்… நவீனையும் மிருதுளாவையும் பார்த்து
“வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்”
“நல்லா இருக்கோம் மன்னி.”
“என்ன துளசி உன் வேலையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?”
“ஆங் நல்லா போயிண்டிருக்கு மன்னி.”
இவர்கள் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் பர்வதம் தன் பேத்தியை….ப்ரவினின் மகளை வாரி அணைத்து மடியில் அமரவைத்துக் கொண்டு….
“இவா குவைத்துக்கு போகப்போறா. அதை சொல்லத்தான் வந்திருக்கா”
என்று பரவீனிடம் சொன்னாள்.
“ஆமாம் ப்ரவின் நாங்க வர்ற பத்தாம் தேதி குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணறோம். நீங்க அவசியம் ஒரு தடவை வாங்கோ”
“ஆங் ஷுவர் மன்னி….குழந்தைகள் கொஞ்சம் பெரிசானா தான் வரணும். அப்போ தானே அவாளுக்கும் பார்த்தது ஞாபகமிருக்கும்.”
“அதுவும் சரிதான். உங்களுக்கு எப்போ வரணும்னு தோணறதோ அப்போ வாங்கோ…அதுக்கு இப்பவே இன்வைட் பண்ணிட்டேன். ஓகே வா!!”
“அங்கே தான் ரெண்டு அண்ணன்கள் இருக்காளே !!! எங்கே வேணும்னாலும் போகலாமே…”
என்று நீங்கள் மட்டுமில்லை என்னோட புள்ளையும் அங்கே தான் இருக்கிறான் என்று குத்தலாக பேசிய பர்வதத்திடம் மிருதுளா
“ஆமாம் அம்மா நீங்க சொல்லறதும் கரெக்ட் தான்.”
என்று ஒத்துக் கொண்டதும் பர்வதத்தால் மேற்கொண்டு அந்த பேச்சைத் தொடர முடியாது சட்டென தன் பேத்தியிடம்
“இது யாரு குட்டி….இவா யாரு…சொல்லு சொல்லு…”
என்று மூன்று வயதே ஆன குழந்தையிடம் கேட்க அது வாயில் விரலை விட்டுக்கொண்டு நெளிந்து வளைந்தது…உடனே பர்வதம்
“இவளுக்கு மிருதுளா பெரியம்மான்னா பிடிக்கவே பிடிக்காது தெரியுமோ!!”
என்றதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். பர்வதம் சும்மா இருக்காது மீண்டும்
“இல்லடா ப்ரவீன்..”
“ஆமாம் மன்னி அது என்னவோ ஏதோ தெரியல்லை அவ அப்படி தான் சொல்லிண்டிருக்கா”
“அவ அடிக்கடி சொல்லுவா ….எனக்கு மிருதுளா பெரியம்மாவை பிடிக்கவே பிடிக்காதுன்னுட்டு”
என்று கூறிவிட்டு சிரித்தாள் பர்வதம். மூன்று வயது குழந்தை அப்படி சொல்ல வாய்ப்பில்லை என்றாலும் அப்படியே அந்த குழந்தை சொல்லியிருந்தாலும் அதனிடம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று நல்லதை சொல்லிக்கொடுக்காது பெரியவர்களே அதை தட்டிக்கொடுப்பது போல சொல்லி சிரித்ததும் மிருதுளா
“ஏன் குட்டிமா உனக்கு பெரியம்மாவை பிடிக்காது? நான் அப்படி என்ன பண்ணினேன் உனக்கு என்னை பிடிக்காம போறதுக்கு? நீ பெரியம்மாவோட செல்லக்குட்டியாச்சே!!! ஆமா நீ என்ன பண்ணுவ குட்டிமா….பெரியவா பேசிக்கறதை கேட்டுத்தானே நீ சொல்லுற……மொதல்ல பெரியவா நீங்க இந்த மாதிரி பேச்செல்லாம் குழந்தைகள் பேசும் போது என்க்கரேஜ் பண்ணாம நல்லதை மட்டும் சொல்லிக் குடுங்கோ. இல்லாட்டி இது உங்களுக்கே வினையாகிடும்….சரி ப்ரவீன், துளசி நீங்க ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம உட்கார்ந்திண்டிருக்கேங்கள்? எங்கயாவது வெளியில போகணுமா?”
“இல்ல மன்னி நாங்க இப்போ தான் எங்காத்துலேந்து கிளம்பி இங்க வந்திருக்கோம்”
“புரியலையே !!! அப்படின்னா நீங்க இங்க அப்பா அம்மாவோட இல்லையா? தனியாவா இருக்கேங்கள்?”
“ஆமாம் மன்னி. எதுக்கு வீணா பிரச்சினைன்னு நாங்க இங்க கவின் வீட்டுலேந்து எங்க பையன் பொறந்தப்பவே தனியா போயிட்டோம்”
“ஸோ அப்பா அம்மா நீங்க எல்லாரும் ஒரே ஊருக்குள்ள இருந்தாலும் தனி தனியா தான் இருக்கேங்களா!!”
“ஆமாம்!!”
“குழந்தைகளை காலையில கொண்டு வந்து இங்கே விட்டுட்டு….காலை டிபனை இங்க சாப்ட்டிடுவா… மத்திய சாப்பாடு நான் ரெடி பண்ணி வச்சுடுவேன்… அதை டிபன் பாக்ஸ்ல கட்டிண்டு ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயிடுவா. சாயந்தரமா வந்து இங்கே டின்னர் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளை கூட்டிண்டு போயிடுவா.”
“ஓ!! ஓகே ஓகே!! நான் நீயும் துளசியும் அப்பா அம்மா கூடதான் இருக்கேங்கள்னு நினைச்சேன்…”
“சரி… மிருதுளா… அப்போ நீ சுமங்கலிப் பிரார்த்தனைக்கு இருக்க மாட்டியோ!!”
“ம்….எப்படி நாங்க தான் பத்தாம் தேதியே கிளம்பறோமே!”
“அப்போ குழந்தையோட பூணலுக்கு வந்துடுவேங்கள் தானே!”
“எப்படி மா இப்போ தான் போவோம் அதுக்குள்ள மறுபடியும் டிக்கெட் போட்டுண்டு வரது எல்லாம் கஷ்டம் தான். பார்ப்போம்”
என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவீன்
“மிருது நாம கிளம்பலாமா? நேரமாச்சு”
“ஆங் !! ஓகே நவீ. சரி மா, அப்பா, ப்ரவீன், துளசி அன்ட் குட்டீஸ் நாங்க போயிட்டு வர்றோம் பை.”
என்றதும் பர்வதம் உள்ளே சென்று குங்குமம் எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தாள். மிருதுளாவும் அதை நெற்றியில் இட்டுக்கொண்டு அங்கிருந்து நவீன், சக்தியுடன் கிளம்பி அவர்களின் ஒண்ணுவிட்ட அத்தை புதிதாக அந்த ஊருக்கு ஈஸ்வரன் வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்திருப்பதாக ஈஸ்வரன் சொன்னதனால் அவர்களையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்றெண்ணி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீனையும் மிருதுளாவையும் அத்தைப் பார்த்ததும்
“ஹேய் நவீன், மிருதுளா வாங்கோ வாங்கோ. ஹேய்!! இது உன் பொண்ணு சக்தி தானே!!”
“ஆமாம் அத்தை”
“எவ்வளவு கடகடன்னு வளந்துட்டா? நான் பார்க்கும் போது என்ன ஒரு ஆறு வயசிருக்கும் அவ்வளவு தான். இப்போ பாரு பெரிய பொண்ணா வந்திருக்கா…வாடா கண்ணா!!!”
“எப்படி இருக்கேங்கள் அத்தை? என்ன திடீன்னு இந்த ஊருக்கு குடி வந்திருக்கேங்கள்?”
“ஆமாம் பா வயசாயிடுத்து. பொண்ணுகள் ரெண்டும் வெளிநாட்டு ல இருக்குகள். சரி நாம கடைசி காலத்துல நம்ம சொந்தங்களுக்கு பக்கத்துல இருக்கலாமேனுட்டு இங்கே வந்துட்டோம்….இங்கே உங்க அப்பா அம்மா இருக்கா….அப்புறம் எங்காத்துக் காரரோட சொந்தங்கள் எல்லாம் இருக்கா…இப்படியே கோவில் குளம்ன்னு ஓடிண்டிருக்கு. ஆமாம் நீயும் ஏதோ வெளிநாட்டுக்குப் போறயாமே!!”
“ஆமாம் அத்தை வர்ற பத்தாம் தேதி குவைத்துக்குப் போறோம்.”
“ஆமாம் நீ இப்பதானே மைசூர்ல ஒரு வீடு வாங்கி குடியும் போன?”
“ஆமாம் அத்தை அங்கே குடி போய் ஒரு எட்டு மாசமாயாச்சு”
“சரி சென்னை வீட்டை என்ன பண்ணின?”
“அதுல தான் மிருதுவோட பேரன்ட்ஸ் இருக்காளே”
“இங்கே ஒரு வீடு வச்சிருந்த இல்ல?”
“அதை வித்துத்தான் சென்னையில வாங்கினேன் அத்தை”
“வீடு மேல வீடு வாங்கறேங்கள் ஆனா அதுல இருக்கக் குடுத்து வைக்கலையேப்பா!!”
என்று பர்வதம் டைலாக்கையே அத்தை சொன்னதும் அது எங்கிருந்து யார் சொல்லிப் பரப்பியிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்த நவீன் தன் அத்தையிடம்
“ஏன் இருக்காம அத்தை அது தான் எட்டு மாசமிருந்தாச்சே…அதுவுமில்லாம அத்தை எங்களுக்கு நாங்க வாங்கற ஒவ்வொரு வீடும் ஏற்றத்தை தான் தர்றது. மொதோ இங்கே வாங்கின அப்பார்ட்மெண்ட் எனக்கு ஒரு புது வேலை வாய்ப்பைத் தந்து மும்பாயிக்கு அனுப்பி வசதி வாய்ப்பை பெருக்கித்து….அப்புறம் சென்னை வீடு எங்களுக்கு அதை விட பெரிய வாய்ப்பை மைசூர்ல தந்து அங்க போக வச்சு எங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தித்து. இப்போ இதோ நாங்க வாங்கின மைசூர் வீடு எங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பையே தந்திருக்கு. ஸோ எங்களைப் பொறுத்த வரை எங்களோட வீடு எங்களுக்கு மேன்மையை மட்டும் தான் தந்திருக்கு தந்துண்டும் இருக்கு. இதை எல்லாம் யாரும் உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டா ஏன்னா உங்ககிட்ட சொன்னவாளோட நோக்கமே வேறயா இருக்கும் போது எப்படி இந்த மாதிரி நல்லதை சொல்லுவா”
“ஆமாம் இல்லையா நீ சொல்லறதும் கரெக்ட் தான். உங்க ரெண்டு பேருக்கும் உங்க கிரகலட்சுமி நல்ல மேன்மையைத்தான் தர்றா. ரொம்ப சந்தோஷம் பா. நன்னா இருங்கோ. சாரிப்பா நானும் கொஞ்சம் யோசிச்சுப் பேசிருக்கணும்”
“அதெல்லாம் விடுங்கோ அத்தை சொல்லறவா அப்படி சொல்லிருப்பானு எங்களுக்கு நல்லாவே தெரியும். சரி அத்தை தாங்ஸ் ஃபார் தி காஃபி….நாங்க கிளம்பறோம்”
“ஏன்ப்பா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே”
“இல்ல அத்தை நாங்க இப்போ கிளம்பினா தான் நைட்டு ஒரு பதினோரு மணிக்காவது வீடு போய் சேர முடியும். அடுத்த தடவை வரும்போது வந்து சாப்டுட்டே போறோம் சரியா”
“ஓகேப்பா. பத்திரமா போயிட்டு வாங்கோ. ஹாவ் எ க்ரேட் லைஃப்.”
“தாங்ஸ் அத்தை பை”
என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய கோவில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு மைசூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நவீ எனக்கொரு டவுட். கேட்கவா”
“ம்….கேளு மிருது”
“உங்க அம்மா அப்படி வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்க குடுப்பினை வேணும்னு சொல்லும் போது ஒண்ணுமே சொல்லாத நீங்கள் ஏன் அத்தை அதையே சொல்லும்போது சூப்பர் பதில் குடுத்தேங்கள்? அதை உங்க அம்மாகிட்டேயும் சொல்லிருந்தா அவாளும் வாயடைச்சுப் போயிருப்பா இல்ல!!!”
“அப்படி இல்ல மிருது. உன் மாமியார் வேணும்னே நாம சந்தோஷப்பட்டுடக் கூடாதுன்னே சொன்னா ஸோ அவகிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமுமில்ல. ஏன்னா தான் சொல்லறது தப்புன்னு தெரிஞ்சே தான் சொன்னா….ஆனா அத்தை அப்படி இல்ல இவா ஏத்திவிட்டு சொன்னா அதுனால அத்தைகிட்ட எக்ஸ்ப்ளேயின் பண்ணிச் சொன்னேன்…இனி அத்தை வில் நாட் ஸ்பெரெட் இட் ராங்லீ…”
“ம்…நீங்க சொல்லறது கரெக்ட் நவீ. இவா ஆரம்பத்துலேந்தே இப்படி தான் தப்பு தப்பா பரப்பி விடறா. நானே நிறைய தடவை இவா சொன்ன அதே டைலாக்கை அப்படியே நம்ம மத்த சொந்தக்காராளும் சொல்லிக் கேட்டிருக்கேன்….ஆனாலும் இதுவும் ஒரு டேலென்ட் தான் இல்ல நவீ….அது எப்படி!! தான் சொன்னதும்… சொல்ல நினைக்கறதும் …அச்சு அசல் மாறாம அடுத்தவாளை சொல்ல வைக்கறா? அதுக்கும் ஒரு திறமை வேணும்….ஆனா இதுல எனக்கு என்ன புரியலைன்னா….அது எப்படி மத்தவா இவா சொல்லுறதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திருப்பி சொல்லுறா? அவா கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டா? அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு நவீ!”
“இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமேயில்லை மிருது. நீ சொன்னா மாதிரி சில பேர்ட்ட அவாளோட திறமையை வச்சுப் பேச வச்சிருப்பா ஆனா சில பேர் அவா சொல்ல வைக்கறா அது தப்புன்னு தெரிஞ்சாலும் வம்புக்குனு அதையே சொல்லுவா!!! அவ்வளவு தான்.”
“ம்….ஆமாம் ஆமாம்.”
“என்ன? நீ எதையோ யோசிச்சிண்டு வர்ற….என்னது?”
“அது ஒண்ணுமில்ல எல்லாம் இந்த ப்ரவீனையும் அவன் பேசினதையும் தான் யோசிச்சிண்டு வர்றேன்”
“என்னன்னு சொல்லு மிருது….சக்தியும் நல்லா தூங்கிட்டா…நீ பேசு”
“நாம குழந்தைக்கு முன்னாடி அடுத்தவாளை குற்றம் சொல்லி பேசக்கூடாதுன்னு நினைக்கறோம் ஆனா அவா சின்னக்குழந்தையை வச்சுக் கூட அவாளோட பாலிடிக்ஸை பண்ணறா….ம்….ஒரு பத்து வருஷம் முன்னாடி போயிப் பார்த்தேன்….அன்னைக்கு நான் எங்க அப்பா அம்மா ஆத்துக்கு அடிக்கடி போறதால உங்க அப்பா அம்மா கௌரவம் என்ன ஆகும்னும்….பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்டுன்னும் சொன்னவன்….இன்னைக்கு ஒரே ஊருக்குள்ள பெத்தவாளும் புள்ளையும் மாட்டுப்பொண்ணும் அடுத்தடுத்த தெருவுல குடியிருக்காளே ….இப்போ மட்டும் அவனோட அப்பா அம்மா கௌரவம் கொடிக் கட்டிப் பறக்கறதோன்னு யோசிச்சிண்டே வர்றேன்….அதை அவன்கிட்ட யாரு கேட்கறது?”
“அட ஆமாம் இல்ல….நீ சொல்லறதும் இஸ் எ வாலிட் பாயின்ட். இதை நீ அங்கேயே அவன்ட்ட கேட்டிருக்கணும் மிருது.”
“விடுங்கோப்பா….ஒரு சின்ன குழந்தையை வச்சு அவாளோட அத்திரத்தை தீர்த்துக்கறா…..அவாகிட்ட போய் என்னத்தை கேட்க…அதுக்கும் இதை விட அசிங்கமா ஏதாவது அந்த குழந்தையை வச்சே சொல்ல வச்சாலும் வைப்பா எதுக்கு நமக்கு…எப்பவும் நீங்க சொல்லறா மாதிரி…நாம நம்ம வேலையைப் பார்த்துட்டு போவோம்!”
என்று தெரிந்தே தவறிழைக்கும் ஈஸ்வரன், பர்வதம் மற்றும் அவர்கள் பிள்ளைகளிடம் பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்றெண்ணியே பல விஷயங்ககளை கேட்காமலேயே நவீனும் மிருதுளாவும் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். இரவு உணவை வழியிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பதினொன்றரை மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தனர். கதவை ராமானுஜம் திறந்து விட்டுவிட்டு சென்று அவரின் உறக்கத்தை தொடர்ந்தார். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் கொண்டு வந்த பையை ஹாலிலேயே வைத்து விட்டு அவரவர் அறைக்குச் சென்று தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டுப் படுத்துறங்கினர்.
குவைத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்துப் பொருட்களும் பேக்கிங் செய்யப்பட்டு நவீனின் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த இன்டர்நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்றதும் வீடு மறுபடியும் காலியாக இருந்தது. அம்புஜமும் மிருதுளாவுமாக முழுவீட்டையும் சுத்தமாக கூட்டித் துடைத்து பளிச்சென வைத்தனர். மறுநாள் காலை ஏழு மணிக்கு நவீன் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் வந்தார். அப்போது நவீனும் மிருதுளாவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னாள் இரவு ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் கொடுத்த டின்னருக்குப் போய்விட்டு லேட்டாக வந்ததால் நன்றாக தூங்கட்டும் என்று விட்டுவிட்டனர் அம்புஜமும் ராமானுஜமும். இப்போது டிரைவர் வந்துள்ளதால் அவர்களை எழுப்பியாக வேண்டுமே என்று எண்ணிக்கொண்டே மாடிப்படி ஏறினார் ராமானுஜம்….அவர் எதிரே நவீனும் மிருதுளாவும் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து
“நீங்க சொன்ன டிரைவர் வந்திருக்கார். அது தான் உங்களை எழுப்ப வந்துண்டிருந்தேன்…நீங்களே எழுந்து வந்துட்டேங்கள்”
“ஆமாம் காலிங் பெல் சத்தம் கேட்டு தான் நாங்க எழுந்துண்டோம். நீங்க எங்களை கொஞ்சம் முன்னாடியே எழுப்பியிருக்கலாமே”
“இல்ல நீங்க மூணு பேருமே நேத்து நைட்டு ரொம்ப லேட்டா தான் வந்தேங்கள்…அதுதான் எழுப்பலை”
“நீங்க ரெண்டு பேரும் ரெடியாகிட்டேங்கள் போல”
“ஆமாம் டிரைவர் வந்ததும் நாங்களும் கிடுகிடுனு கிளம்பிட்டோம்.”
“சரி அம்மா அன்ட் அப்பா நாங்களும் இன்னைக்கு ஈவ்னிங் பெங்களூர் போயி அங்கேந்து குவைத் போயிட்டு வர்றோம். நீங்களும் பத்திரமா சென்னைக்கு போயிட்டு வாங்கோ. சென்னையில நம்மாத்துல சேர்ந்ததும் ஒரு கால் பண்ணிச் சொல்லுங்கோ. சரியா பத்திரம்”
“சரிமா மிருது. நீங்களும் நல்லபடியா குவைத் போய் சேர்ந்ததும் ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லுங்கோ. சூப்பரா வருவேங்கள் பாருங்கோ. எங்க ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. வேனுக்கும் பொண்ணு பார்த்துண்டு இருக்கோம். ஏதாவது செட்டாச்சுன்னா உங்களுக்கு தான் மொதல்ல சொல்லுவோம் அவசியம் வரணும்”
“ஷுவரா வருவோம். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கோ…மிருது சக்தியை தாத்தா பாட்டி ஊருக்கு கிளம்பறான்னு எழுப்பு”
“இல்ல இல்ல வேண்டாம் மிருது. குழந்தை தூங்கட்டும். நாங்க போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடறோம்”
என்று கூறிக்கொண்டே மாடி ஏறி சக்தி ரூமிற்குள் சென்று தாத்தாவும் பாட்டியும் அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு முத்தமிட்டதும் சக்தி எழுந்துக் கொண்டாள்.
“தாத்தா பாட்டி என்ன காலையிலேயே ரெடியாகி இருக்கேங்கள் எங்கே போறேங்கள்?”
“ஆமாம் நீ பாட்டுக்கு இன்னைக்கு குவைத் போயிடுவ அப்புறம் நாங்க இங்க இருந்து என்ன பண்ணப் போறோம்!!! அதுதான் நாங்க சென்னைக்கு கிளம்பிட்டோம் கண்ணா.”
“ஓகே பாட்டி பை. இங்க வாங்கோ ரெண்டு பேரும் ….உம்ம்ம்ம்மா. நானும் ஊருக்குப் போயிட்டு வரேன் பாட்டி அன்ட் தாத்தா”
“சரிடி கண்ணு. நீ படுத்துத் தூங்கிக்கோ நாங்க போயிட்டு வர்றோம் டா செல்லம்.”
“இதோ நானும் ப்ரஷ் பண்ணிட்டு கீழே வர்றேன் பாட்டி.”
“சரி மா. நாங்க நீ கீழே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணறோம்”
என்று கூறிவிட்டு கீழே சென்று அனைவரும் சக்திக்காக காத்துக் கொண்டிருந்தனர். சக்தியும் ரொம்ப நேரமெடுக்காது சட்டென ப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். நவீன் தன் கார் சாவியை டிரைவரிடம் கொடுத்து பத்திரமாக ட்ரைவ் செய்து காரையும் தன் மாமனார் மாமியாரையும் சென்னையில் கொண்டு போய் சேர்த்திடுமாறு கூறி அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் காரில் அனுப்பி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். பின் வீட்டுக்குள் வந்து பார்த்த மிருதுளா..
“ஹேய் நவீ மை மாம் ஈஸ் க்ரேட்….”
“ஏன் என்ன செஞ்சிருக்கா?”
“இங்க பாருங்கோ இட்டிலி சுட்டு வச்சிருக்கா. மத்தியானத்துக்கு லெமன் ரைஸ் அன்ட் தயிர் சாதம் செய்து… எல்லாத்தையும் டிஸ்போஸபுள் டப்பாக்கள்ல வச்சுட்டு போயிருக்காப்பா!! என்கிட்ட இதெல்லாம் செய்யுறதா சொல்லவேயில்லை. எப்போ செஞ்சிருப்பா?”
“நாம மாடியில தூங்கிண்டிருந்தப்போ ….காலங்காத்தால ஒரு மூணு மணி இருக்கும் ஏதோ பாத்திரம் உருட்டுற சத்தம் கேட்டது…நான் எழுந்து டைம பார்த்தேன் …சரி யாராவது பக்கத்து வீட்டுக்காராளா இருக்கும்னு நினைச்சுண்டு மறுபடியும் படுத்து தூங்கிட்டேன். அப்போ அது நம்ம வீட்டுல தான் நடந்திருக்கு. அப்படீன்ன உன் அம்மா ராத்திரி ஃபுல்லா தூங்கலையா?”
“இருங்கோ அம்மாக்கு கால் பண்ணறேன்….ம்…ரிங் போறது….ஹலோ அம்மா தாங்யூ ஸோ மச் மா”
“என்னத்துக்கு தாங்ஸ் சொல்லற மிருது?”
“அம்மா டிபன் லஞ்ச் எல்லாம் பண்ணி வச்சிட்டு கிளம்பினதுக்கு. லவ் யூ மா.”
“ஆமாம் காரையும் எங்ககிட்ட கொடுத்தனுப்பிட்டேங்கள்….வெளியில போய் சாப்பிடறதாயிருந்தாலும் காரில்லாம எப்படி போவேங்கள்? அதுதான் எல்லாம் செஞ்சு நாங்களும் கையில கட்டிண்டு உங்களுக்கும் வச்சுட்டு கிளம்பினோம். எல்லா கிட்சன் சாமான்களையும் நேத்தே காலி பண்ணி வச்சுட்டேன். நீங்க மூணு பேரும் நல்லா சாப்டுட்டு ஊருக்கு கிளம்புங்கோ சரியா”
“சரிமா….நீங்களும் பத்திரமா போங்கோ. பை மா வச்சுடறேன்”
என்று ஃபோனை வைத்ததும் மூவருமாக காலை டிபனை சாப்பிட்டதும் மீதமிருந்த பேக்கிங்கையும் செய்து முடித்துவிட்டு குளித்து தயாராகி கீழே பெட்டிகளை எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டு …வீட்டின் எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் சாத்தி பூட்டிவிட்டு வந்து அமர்ந்து அம்புஜம் செய்து வைத்திருந்த மத்திய சாப்பாட்டை சாப்பிட்டதும் அந்த தட்டுகள், டப்பாக்கள் அனைத்தையும் குப்பைப் பையில் போட்டு நன்றாக இறுக்கக்கட்டி சக்தியிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வருமாறு கூறினாள் மிருதுளா. சக்தியும் அது படி செய்து விட்டு அவளின் ஃப்ரெண்ட்ஸ்களிடம் தான் ஊருக்கு செல்லுவதாக சொல்லிவிட்டு வந்தாள். சக்தி வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் அந்த சொசைட்டியிலிருந்த பதினைந்து ஃபேமியிலிருந்து அனைவரும் நவீன் மிருதுளா சக்தியை வழியனுப்ப வந்தனர். நவீனின் ஆஃபீஸிலிருந்து கார் வந்தது. அனைவருமாக பெட்டிகளை காரில் ஏற்றினர். மிருதுளா பூஜை அறைக்குச் சென்று அம்பாளை நன்றாக வேண்டிக்கொண்டிருந்தாள் அப்போது நவீன் வாசலில் இருந்து
“மிருது நேரமாச்சு மா”
என்றதும் அங்கிருந்து எழுந்து வீட்டுச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு ஒரு முறை வீட்டை நன்றாக சுத்திப் பார்த்தாள். பின் மீண்டும் நவீன் குரல் குடுத்ததும் வேகமாக வெளியே சென்று கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு …காரில் ஏறினாள். சக்தி முன்னதாகவே ஏறி அமர்ந்திருந்தாள். நவீனும் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு காரில் ஏறினான். அனைவரும் கையசைத்து
“ஹாவ் எ சேஃப் ஜெர்னி மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் நவீன். சக்தி ஹாவ் ஃபன். பை பை. எஞ்சாய்”
என்று ஒருசேர கத்திச் சொன்னார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக காரின் ஜன்னல் கன்னாடியை கீழே இறக்கி
“லவ் யூ ஆல். பை பை.”
என்று சொன்னதும் கார் மெல்ல நகர ஆரம்பித்தது. ஜன்னல் வழியே மிருதுளா தன் வீட்டையும் அங்கிருந்த தன் நண்பர்களையும் பார்த்துக் கொண்டே சென்றாள். அந்த சொசைட்டியின் கேட்டை தாண்டிய பின்னும் பின்னால் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிடம் நவீன்
“மிருது ஜன்னல் கன்னாடியை மேலே ஏத்து. ஏசி வீணாகுது இல்ல.”
என்றதும் கன்னாடியை மேலே ஏற்றிவிட்டு முன்னால் பார்த்து நன்றாக அமர்ந்தாள்.
கார் நேராக பெங்களூர் ஏர்போர்ட் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கி பெட்டிகளை எல்லாம் டிராலியில் வைத்துவிட்டு கார் டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு உள்ளே சென்று எல்லா செக்கிங்கும் முடிந்துதும். அவர்கள் ஏற வேண்டிய ஃப்ளைட்டின் கேட்டுக்குச் சென்று அமர்ந்ததும் மிருதுளாவுக்கு அம்புஜத்திடமிருந்து கால் வந்தது.
“ஹலோ அம்மா நாங்க எல்லா செக்கிங்கும் முடிஞ்சு கேட்டுல வந்து உட்கார்ந்தாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம்”
“ரொம்ப நல்லது மா. நாங்களும் சென்னை வந்து சேர்ந்தாச்சு. அந்த டிரைவர் பையன் நல்ல பையன் மிருது. எங்களை பொறுப்பா பார்த்துண்டு பத்திரமா கொண்டு வந்து சேர்த்து…காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை தந்துட்டு அவனும் மைசூருக்கு பஸ்ஸில் கிளம்பிட்டான். அதை சொல்லத் தான் நான் ஃபோன் பண்ணினேன். சரி மா நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்கோ. பை வச்சுடறேன்”
“பை மா. நவீ அம்மா தான். அவாளும் சென்னை போய் சேர்ந்தாச்சாம். டிரைவர் உங்க காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை அப்பாட்ட குடுத்துட்டு அங்கேந்து மைசூருக்கு கிளம்பிட்டாராம்.”
“ஓகே….சரி வா போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டா….சக்தி வா கிளம்பலாம்”
என்று மூவரும் லைனில் நின்று வரிசைப்படி தங்கள் ஃப்ளைட்டில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நாம இந்தியா மண்ணிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம் இல்ல நவீ…இதுக்கு முன்னாடி நாம யூரோப்புக்கு ட்ரிப் போனபோது கூட எனக்கு எதுவும் வித்யாசமா இருக்கலை ஆனா இந்த தடவை மனசுக்குள்ள என்னமோ பண்ணறது நவீ”
“அது ஏன்னா போன தடவை நாம திரும்பி இங்கே வந்திடுவோம்னு நமக்கு நல்லா தெரியும் ஆனா இந்த தடவை நாம நம்ம வாழ்கையையே அங்க தான் வாழப்போறோனு தெரிஞ்சதால உனக்கு ஏதோ மாதிரி இருக்கு அவ்வளவு தான். டோன்ட் வரி வீ வில் பி ஹாப்பி. நமக்கு அந்த புது நாடு என்னனென்ன தர்றதுக்கு காத்திருக்கோ !!!!”
“ம்…எல்லாம் நல்லதே தான் தரும் நவீ. சரி இந்த கவினும் கஜேஸ்வரியும் நம்மள அவா ஆத்துக்கு வான்னு கூட கூப்பிடாம இருக்காளே நவீ!! நாம பின்ன எப்படி அவா ஆத்துக்கு போறது?”
“போக வேண்டாம். அவ்வளவு தான்….அவா நினைப்பு என்னென்னா…நவீனுக்கும் மிருதுளாவுக்கும் தானே இது புது நாடு நமக்கு இது பழைய நாடு தானே…ஸோ அவாளுக்கு ஏதாவது வேணும்னா நம்மகிட்ட தான் ஹெல்ப் கேட்டு வந்தாகணும்னு நினைச்சுண்டு திமிரா இருக்கா…..இருக்கட்டும் இருக்கட்டும்…நமக்கு இதுவரை அந்த கடவுள் தான் துணையா இருந்திருக்கார் இனியும் அவரே பார்த்துப்பார்….ஏன்!!! இவ்வளவு ஊருகளுக்கு நாம மாத்தலாகிண்டிருந்தப்போ எல்லாம் என்ன இவாளெல்லாமா வந்து ஹெல்ப் பண்ணினா…இல்ல நாம தான் யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டுண்டு போனோமா? நாம பாட்டுக்கு நம்ம வேலையைப் பாரப்போம் மிருது”
“அதுவும் சரி தான் நவீ. ஆனாலும் எனக்கு ஒண்ணு தோனறது…சொல்லவா”
“என்னது சொல்லு”
“ஒரு வேளை நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக ஏர்போர்ட் வருவாளோ என்னவோ? அப்படி வந்தா நாம அவாகூட அவா ஆத்துக்கு போவோமா இல்ல நம்ம சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்கு போவோமா!!”
“ஹா!ஹா!ஹா!ஹா! இது வீண் நப்பாசையே தான். இன்னுமா அவாளை நம்புற. இதுல எங்க போறதுன்னு வேற கேட்குற….உன்னை நினைச்சா சிரிப்பு தான் வருது மிருது”
“பாருங்கோ வந்து நிக்கப் போறா….அந்த நேரத்துல எங்க போறதுன்னு நீங்க கன்ஃப்யூஸ் ஆக போறேங்கள்…”
“பாரக்கலாம் பார்க்கலாம்…..முதல்ல பெல்ட்டைப் போடு. சக்தி பெல்ட் போட்டுண்டுட்டியா மா”
“ஆங் போட்டுண்டுட்டேன் பா.”
“ஓகே !! அவர் ஃப்ளைட் இஸ் கோயிங் டூ டேக் ஆஃப் நவ்….அன்ட் அவர் லைஃப் டூ மை டியர் ஏஞ்சல்ஸ்”
என்று புது நாட்டில் புது அனுபவங்களையும், புது வாய்ப்புகளையும், புது நட்புகளையும் தேடி வானில் பறக்கத் துவங்கினர் மூவரும்.
மிருதுளா சொன்னதுப் போல் கவின் கஜேஸ்வரி அவர்களை அழைக்க ஏர்போர்ட் வருவார்களா? இல்லை அது நவீன் சொன்னது போல மிருதுளாவின் நப்பாசையா?
தொடரும்……
சஸ்பென்ஸ் தாங்க முடியாது மிருதுளாவும் சக்தியும் நவீனிடம் கேட்க அவனோ சற்று நேரம் அவர்களுக்கு விளையாட்டுக் காட்ட…இருவரும் எழுந்துச் செல்ல முற்பட்டப் போது அவர்களைப் பிடித்து அமரச்செய்து
“ஓகே !! ஓகே!! சாரி மை டியர் கேர்ள்ஸ்”
“பின்ன என்ன நவீ எவ்வளவு நேரமா நாங்களும் என்ன? என்னனு கேட்டுக்கிட்டிருக்கறதாம்? அதுதான் எழுந்துப் போகப் பார்த்தோம். இப்பவாவது சொல்லுவேங்களா?”
“ம்…ஓகே. இன்னைக்கு என் கம்பெனி சி.இ.ஓ என்னுடன் பேசினார். அவருக்கு குவைத்தில் இருக்கும் எங்களோட ப்ராஞ்ச் ல புதுசா ஒரு டிவிஷன் ஓபன் பண்ணி அதை விரிவாக்கணுமாம். அதுனால என்னை குவைத்துக்கு வர முடியுமான்னு கேட்டார். நான் யோசிச்சு சொல்லறேன்னு சொல்லிருக்கேன். என் ஏஞ்சல்ஸ் நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லறேங்கள்?”
“நல்ல நியூஸ் தான். ஆனா எப்படி உங்களை மட்டும் அங்கே வரச்சொல்லியிருக்காரா இல்லை ஃபேமிலியோடவா?”
“ஃபேமிலியோட ரீலொக்கேட் பண்ண விருப்பமான்னு தான் கேட்டார்.”
“ஓ! ஓகே!! ஆனா நம்ம சக்தி டென்த் முடிக்கணுமே!! எக்ஸாம்ஸ் வர்றதே”
“நான் மொதல்ல ஏப்ரல் மாசம் போயிட்டு ஒரு மாசத்துல மத்த எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு வந்து உங்களைக் கூட்டிண்டுப் போறதுக்கு எப்படியும் ஜூன் ஜூலை ஆர் ஆகஸ்ட் ஆகிடும். அதுக்குள்ள நம்ம சக்தி எக்ஸாம் எழுதி சூப்பர் மார்க்கும் எடுத்திருப்பா”
“என்ன சக்தி அப்பா சொல்லறதைக் கேட்டே ல!! உனக்கு படிப்பை அங்கே போய் கன்டிண்யூ பண்ண ஓகே வா? இல்லாட்டினாலும் சொல்லு அம்மா உன் கூட உன் படிப்பு முடியுற வரைக்கும் இங்கேயே இருக்கேன். உன் படிப்பு முடிஞ்சிட்டு நாம அங்க போகலாம். என்ன சொல்லுற?”
“எனக்கு நோ ப்ராப்ளம் அம்மா. இவ்வளவு வருஷமா இந்தியாக்குள்ளேயே ஸ்கூல் மாத்தி மாத்திப் படிச்சிட்டிருந்தேன்… இப்ப..வெளிநாட்டுல போய் படிக்கப்போறேன். ஸோ எனக்கு ஒரு டிஃப்ரன்ஸும் இல்ல. ஐ ஆம் ஓகே வித் இட்”
“அதுதான் சக்தியே சொல்லியாச்சே அப்புறமும் எதை யோசிச்சிக்கிட்டிருக்க மிருது?”
“இல்ல நவீ இப்பத்தான் நாம நம்ம புது வீட்டுல வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள மறுபடியும் ஷிஃப்டிங்கான்னு யோசிச்சிட்டிருக்கேன்”
“முதல்ல நான் போய் ஒரு மாசம் இருந்துட்டு ஊர் எப்படின்னு பார்த்துட்டு வர்றேன். அப்புறமா ஷிஃப்டிங் பத்தி டிசைட் பண்ணலாம் ஓகே வா”
“ஓகே!! நவீ”
“அப்பா அப்போ என் போர்டு எக்ஸாம்ஸ் நடக்கும் போது நீ இங்க இருக்க மாட்டியா?”
“இருப்பேன் சக்தி. மார்ச் போயிட்டு ஏப்ரல் மிடில்ல வந்துடேவேன். என்ன ஃபர்ஸ்ட் டூ எக்ஸாம்ஸ்க்கு மட்டும் இருக்க மாட்டேன்.”
“அப்போ ஓகேப்பா”
“சரி மிருது…இந்த ஏரியாவுல இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கறதுங்கறது அவ்வளவா சேஃப் இல்ல ஸோ…”
“ஸோ?”
“உன் அப்பா அம்மாவை இங்கே கூட்டிண்டு வந்துடலாமா?”
“வேற யாரு வருவாளாம்? என் அப்பா அம்மா தான் அன்னேலேந்து இன்னே வரைக்கும் இந்த மாதிரி நேரத்துல எல்லாம் நமக்கு கைக் கொடுக்கறவா! ஹெல்ப்பு பண்ணிட்டு உங்க கூட்டத்துக்கிட்டேந்து கெட்டப் பெயரும் வாங்கிக்கறா.”
“அவா நம்க்கு பண்ணின, பண்ணற உதவி …நம்ம ரெண்டு பேருக்கும்… அந்த கடவுளுக்கும் தெரியும் அது போதும். மத்தவாளுக்கென்ன வாய் சும்மா இருக்கேன்னு இவாளைப் போட்டு மென்னுண்டிருக்கா. அதையெல்லாம் விட்டுத் தள்ளு மா”
“ஆமாம் நீங்க ரொம்ப ஈஸியா சொல்லிட்டேங்கள். சரி சரி நாம அப்போ அடுத்த வீக்கென்ட் போய் அப்பா அம்மாவைக் கூட்டிண்டு வருவோம்”
“நாளைக்கு ஃபோன் போட்டு அவாகிட்ட சொல்லிடு. ஆனா நாம அங்கே ஷிஃப்ட் ஆகப் போறதை நான் ஊர்லேந்து திரும்பி வந்துட்டு நாம சேர்ந்து முடிவு பண்ணிட்டு சொல்லிக்கலாம் சரியா”
“ஓகே நவீ டன். ஆமாம் நவீ நம்ம கவின் சாரும் கஜேஸ்வரி மேடமும் அங்கேத் தானே இருக்காங்க அவங்க கிட்ட நீங்க அங்க வர்றதை சொல்ல வேண்டாமா? அப்புறம் அதுக்கும் ஏதாவது சொல்லப் போறா!!”
“ஆமாம் ஆமாம் அவா இங்கே இருந்தப்போ நாம அவா ஆத்துக்கு போனதையே சொல்லிக் காட்டினக்கூட்டம் அது அங்கே நான் ஏனீ போகப் போறேன். எவாகிட்டேயும் இப்போ எதைப்பத்தியும் நானும் சொல்லமாட்டேன் நீயும் சொல்லிக்க வேண்டாம் புரியறதா?”
“ம்…ஓகே…என்னமோ போங்கோப்பா”
“நான் சொல்லறதைக் கேளு மிருது. இப்போ நாம அவாகிட்ட சொல்லிட்டு அங்க நான் என் ஆஃபீஸ் விஷயமா போயிட்டு வந்தா அதை அப்படியே டிவிஸ்ட் செய்து அவன் தான் எனக்கு அங்க வேலையே வாங்கிக் கொடுத்தான்னு எல்லார்கிட்டேயும் ஃபோன் போட்டுச் சொல்லுவா தெரியுமா?”
“அது எப்படி சொல்லுவா? நீங்க இங்க வேலைப்பார்த்த அதே கம்பெனில தானே அங்கேயும் வேலைப் பார்க்கப் போறேங்கள் அப்புறம் எப்படி அவு வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லுவா?”
“மிருது நீ ப்ராக்ட்டிக்கல்லா பேசுற அதெல்லாம் அங்கே துளிக்கூட எடுப்படாது. அவா பொய்யை எப்படி அழகா உண்மை மாதிரியே பரப்புவான்னு மறந்துட்டயா?”
“ஆமாம் ஆமாம் நீங்க சொல்லறதும் உண்மை தான். இப்போதைக்கு நான் யார்கிட்டேயும் வாயைத் திறக்க மாட்டேன்ப்பா!!”
“அப்படியே இரு”
“நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ அப்புறமா சொல்லிப்போம். ஆனா எனக்கு ஒரு டவுட்டு”
“என்ன?”
“அங்கே வச்சு அவா உங்களை எங்கேயாவது பார்த்துட்டான்னா? இல்லாட்டி ஏன் எங்காத்துக்கு வரலைன்னு அப்புறமா விஷயம் தெரிஞ்சுக் கேட்டான்னா”
“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல மிருது. என் ஆஃபீஸ் எதிர்க்க இருக்குற ஹேட்டல் ல தான் நான் தங்கப் போறேன் ஸோ ஆஃபிஸ் விட்டா ரூம். ரூம் விட்டா ஆஃபீஸ்ன்னு இருப்பேன். இதுல எங்க அவாளைப் பார்க்கறது. வெளில எங்கேயாவது போனா தானே பார்ப்பேன். அதுவுமில்லாம அவா எந்த ஏரியாவுல இருக்கான்னு கூட நமக்குத் தெரியாது அப்புறம் எப்படி போறது? நீ அந்த கஜேஸ்வரி கிட்ட அவா குழந்தைக்கு பர்த்டே கிஃப்ட் அனுப்பறதுக்காக அவா வீட்டு அட்ரெஸ் கேட்டப்போ அவ குடுக்கலை இல்லையா விடு நமக்கு அவா அட்ரெஸ் தெரியாது ஸோ போகலை…ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்”
“ஓ ஆமாம் ஆமாம் யூ ஆர் ரைட்.”
அவர்கள் பேசிக்கொண்டதைப் போலவே அடுத்த வாரக் கடைசியில் சென்று அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் அழைத்து வந்தனர். மார்ச் இரண்டாவது வாரம் நவீன் கிளம்பி குவைத்துக்குச் சென்றான். ஏப்ரல் முதல் வாரத்தில் சக்தி இரண்டு பரீட்சையை எழுதினாள். இரண்டாவது வாரம் நவீன் சொன்னது போலவே மைசூருக்கு வந்து சேர்ந்தான். வந்த அடுத்த நாள் மிருதுளாவிடம்
“மிருது எனக்கென்னவோ நமக்கு அந்த ஊர் செட்டாகும்ன்னு தோணறது. நல்லா தான் இருந்தது அதுனால என் பாஸ் கிட்ட ஓகேன்னு சொல்லி விசா எல்லாம் பண்ணிட்டேன். சாரி உங்க ரெண்டு பேர் கிட்டேயும் கேட்காம பண்ணிட்டேன்”
உங்களுக்கு ஓகேன்னா எங்களுக்கும்உங்க வேலை வாய்ப்புகளுக்காக நானும் சக்தியும் எதையும் பொறுத்துப்போம். எப்படியும் அட்ஜஸ்ட் பண்ணிப்போம். அது தானே லைஃப். அப்போ நாம குவைத்துக்கு ஷிஃப்ட் ஆகப் போறோம். கன்ஃபார்ம் தானே? ஏன்னா என் அப்பா அம்மாகிட்ட சொல்லறதுக்காகக் கேட்கறேன்…நானும் இந்த ஒரு மாசமா சொல்லாம ரொம்ப சிரமப் பட்டுட்டேன். சொன்னா சந்தோஷப்படுவா.”
“ஓ! எஸ் மிருது. தாராளமா இப்போ சொல்லிக்கோ. அது தான் ஓகே பண்ணியாச்சே”
“நாளைக்கு காலையில சொல்லிடறேன். எனக்கு மனசுல ஒண்ணு தோணறது அது சரியா தப்பான்னு எனக்குத் தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு….ஒரு மனசு நான் அப்படி நினைக்கறது தப்புன்னு சொல்லறது இன்னொரு மனசு இல்லவே இல்லை நீயும் மனுஷி தானேன்னு சமாதானம் படுத்தறது நவீ”
“நீ அப்படி என்னத்தை நினைச்ச …உன் மனசு உன்னைப் படுத்தறதுக்கு?”
“உங்க தம்பி அந்த கவின் அன்னைக்கு எங்க அம்மா முன்னாடி உங்களுக்கு டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்ல அதுனால உங்களுக்கெல்லாம் அந்த ஊர்ல வேலைக் கிடைக்காதுன்னு சொன்னான் இல்லையா!”
“ஆமாம் சொன்னான் அதுக்கு ஏன் உன் மனசு உன்னைப் படுத்தணும்?”
“ஆனா அந்த ஆண்டவன் இப்போ நம்மளை அதே ஊருக்கு கூட்டிட்டுப்போறதை நினைச்சேனா…அதுதான் என்னோட ஒரு மனசு….பாருடா கவின் உங்க அண்ணன்…. எந்த வித டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்லன்னு நீ சொன்ன அதே நவீன் .…இப்போ உங்க ஊர்லயே வந்து வேலைப் பார்க்கப் போறார்ன்னு….சத்தமா சொல்லித்தா அதைக்கேட்ட என்னோட இன்னொரு மனசு வேண்டாம் மிருது அடக்கம் தான் இப்போ ரொம்ப முக்கியமானதுன்னு சொல்லி என்னை அடக்கிடுத்து”
“நீ நினைச்சது ஒண்ணும் தப்பிலை மிருது. நாமளும் மனுஷா தானே…இட்ஸ் ஓகே லீவ் இட். இதுக்கெல்லாம் இவ்வளவு யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காதே சரியா”
“ம்…ஓகே நவீ. சரி நாம எப்ப கிளம்பணும் நம்மளோட இந்த வீட்டுப் பொருட்களையெல்லாம் என்னப் பண்ணப் போறோம்?”
“எல்லாத்தையும் வித்துட வேண்டியது தான்.”
“அச்சச்சோ!! எல்லாமே புதுசா வாங்கினது நவீ. இதை எல்லாம் இப்போ வித்தா பாதி காசு தான் கிடைக்கும்….அது வாங்கி ஆறு மாசமானாலும் சரி ஆறு வருஷமானாலும் சரி”
‘ஓ!! ஓகே அப்போ நாம நம்ம கூடவே எடுத்துண்டு போயிடலாம்.”
“அப்பாடி அதுக்கு எவ்வளவு ஆகுமோ?”
“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படறாய்? எவ்வளவானாலும் அதை என் கம்பெனிப் பார்த்துக்கும். ஸோ டோன்ட் வரி மிருது. பீ கூல்”
“அப்படின்னா சரி. நாம உங்க ஃபேமிலி கிட்ட இந்த விஷயத்தை சொல்ல வேண்டாமா?”
“ம்…ம்…சொல்லிக்கலாம் சொல்லிக்கலாம். இப்போ வேண்டாம் ரெண்டு நாள் போகட்டும்”
மறுநாள் விடிந்ததும் நவீனும் சக்தியும் ஆஃபீஸ் ஸ்கூல் போனப் பின் தன் அப்பா அம்மாவிடம் விவரத்தைச் சொன்னாள். இருவரும் சந்தோஷமானார்கள். அப்போது அம்புஜம் அதுவரை மிருதுளாவிடம் சொல்லாததை சொன்னாள்….
“முதல்ல அந்த அம்பாளுக்குத் தான் நன்றி சொல்லணும் மிருது. இரு சுவாமி கிட்ட சொல்லிட்டு வர்றேன்.”
“சரிமா சொல்லிட்டு வா”
“மிருது இது நாள் வரைக்கும் என் மனசை அறுத்துண்டு இருந்த ஒரு விஷயத்தை இப்போ நான் உன்கிட்ட ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்”
“என்னமா அது?”
“பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் உன் மச்சினன் அந்த கவின் நம்ம நவீனை டெக்னிக்கல்…. என்னமோ இல்லை அதுனால அவருக்கெல்லாம் அங்க வேலைகிடைக்கச் சான்ஸே இல்லைன்னு என்னை வச்சுண்டே நக்கலா சொன்னான் இல்லையா…அது எனக்கு ரொம்ப சங்கடமா போயிடுத்து டி…அதை அவா அண்ணா தம்பிக்களுக்குள்ள சொல்லியிருக்கலாம் இல்லாட்டி நீங்க எல்லாருமா இருக்கும் போது கூட சொல்லியிருக்கலாம் ஆனா நான் அங்கே இருக்கும் போது அவரை அப்படி பேசினதும் ….நான் உடனே அந்த அம்பாள்ட்ட இப்படி ஏளனம் செய்யறவா முன்னாடி என் பொண்ணும் மாப்பிள்ளையும் அதே ஊர்ல போய் வேலைப் பார்க்கணும் தாயின்னு வேண்டின்டேன் தெரியுமா!! அதை உன்கிட்ட சொன்னா நீ சங்கடப்படுவியேன்னு தான் அப்போ அதை நான் உன் கிட்ட சொல்லலை. இப்போ அந்த அம்பாள் செய்திருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்ததும் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலைமா. நீ வந்து இப்போ இதைச் சொன்னதைக் கேட்டதும் அப்படியே புல்லரிச்சுப் போச்சு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் இன்னும் மேன்மேலும் நல்லா வருவேங்கள் பாரு. எங்க ஆசிர்வாதம் எப்பவுமே உங்க ரெண்டு பேருக்கும் உண்டு. சந்தோஷமா போயிட்டு வாங்கோ”
“ம்….உனக்குப் பட்டது போலவே தான் என் மனசிலேயும் அப்போ பட்டுது மா. கடவுள் இருக்கார் மா இருக்கார்.”
“சரி உங்க மாமனார் மாமியார் கிட்ட சொல்லியாச்சா? இதைக் கேட்டா அவாளும் சந்தோஷப்படுவாயில்லையா!!”
“ம்….ம்….சொல்லணும் சொல்லணும்”
“சரி அதுதான் மாப்பிள்ளை ஊர்லேந்து வந்துட்டாரே நாங்க சென்னைக்குப் போகலாமா?”
“ஏன்மா? என்ன அவசரம்? நாங்க இன்னும் இரண்டு மாசத்துல குவைத்துக்கு போயிடுவோம் அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவைத் தான் பார்த்துக்க முடியும் ஸோ….இங்கேயே எங்கக் கூட இருந்துட்டு நாங்க ஊருக்குப் போற அன்னைக்கு எங்க கார்லேயே நீங்க சென்னைப் போயிடுங்கோ. அந்த காரை நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோ”
“யாரு ஓட்டறதாம்?”
“இங்கேந்து சென்னை போக நாங்க டிரைவர் ஏற்பாடு பண்ணறோம். அங்க லோக்கல் ல நீங்க ஏற்பாடு பண்ணிக்கோங்கோ”
“இவ்வளவு நல்ல வண்டியை டிரைவரை நம்பி எல்லாம் குடுக்கலாமா மிருது”
“உங்களால ஓட்ட முடியாது இல்ல அப்போ குடுத்துத்தான் ஆகணும். ஒண்ணும் ஆகாது மா. வண்டியை யூஸ் பண்ணாம வச்சிருந்தாலும் வேஸ்ட்டாகிடும்.”
“ஓ!! அப்படி வேற இருக்கா? பேசாம வித்திடுங்கோளேன்”
“பாதி காசுக் கூட கிடைக்காது மா. அதுக்கு நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோளேன்”
“ம்….பார்ப்போம் பார்ப்போம்”
“அதுக்கு பெட்ரோல் போடுற காசுல நாங்க நாலு மாசம் எலக்ட்ரிக் ட்ரெயின் ல போயிட்டு வருவோம் மிருது.”
“அப்பா…. என்னமோ பண்ணுங்கோ.”
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அன்று அனைவருக்கும் கால் செய்து விஷயத்தை சொல்லலாமென்றிருந்தனர் நவீனும் மிருதுளாவும். அதுபடியே முதலில் ஈஸ்வரன் வீட்டுக்குக் கால் செய்தனர்.
“ஹலோ அப்பா நான் மிருது பேசறேன்”
“ஆங் நான் ஈஸ்வரன் பேசறேன் சொல்லு. எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம். ஒரு குட் நியூஸ் சொல்லத் தான் நாங்க கால் பண்ணினோம்ப்பா”
“அப்படியா என்னது?”
“நாங்க குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணப்போறோம். நவீன் அங்கே ஜாப் ல ஜாயின் பண்ணப்போறார்.”
“ஓ!! அப்படியா…அதுதான் நீங்க ரொம்ப வருஷமா ட்ரை பண்ணினது தானே!! ஓகே ஓகே”
என்றதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. உடனே நவீன் ஈஸ்வரனிடம்
“நான் அங்கே ட்ரைப் பண்ணி போகலை!! நான் இப்போ வேலைப் பார்க்குற கம்பெனியே என்னை அங்கே அனுப்பறா. நாங்க ரொம்ப வருஷமா ட்ரைப் பண்ணறோம்னு உனக்கு யார் சொன்னா?”
“இல்லடா கவின் கிட்டக் கூட நீ சொல்லியிருந்தயே!!! அவன் தான் சொன்னான்.”
“ஆமாம் ஆமாம் அவன் அதுவும் சொல்லுவான்…அதுக்கு மேலேயும் சொல்லுவான். இந்த வேலையே அவன் தான் வாங்கிக் குடுத்தான்னும் சொல்லுவான் உன் புள்ளை….சரி நான் ஃபோனை வைக்கறேன்”
“ம்…இருங்கோ நவீ. என்கிட்டக் குடுங்கோ..அப்பா… அம்மாகிட்டேயும் குடுங்கோ சொல்லறேன்.”
“ம்…அவ இங்க இல்ல வெளியப் போயிருக்கா. சரி வச்சுடறேன்”
என்று ஃபோனைக் கட் செய்தார் ஈஸ்வரன். அதைக் கேட்டதும் நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தையா மிருது…மனசார ஒரு கங்க்ராட்ஸ் டான்னு கூட சொல்ல வாய் வரலைப் பார்த்தையா!!! என்னத்துக்கு அந்த லேடி கிட்ட பேசணும்னு சொல்லி அசிங்கப் பட்ட ?? உனக்கு தேவையா? இதுக்குத் தான் நான் சொன்னேன் இவா கிட்ட எல்லாம் ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம்னு…”
“சரி சரி விடுங்கோ நவீ…நாம நம்ம கடமையை சரியா செஞ்சிடுவோமே. நாம என்ன அவா வாழ்த்தணும்னு எதிர்ப்பார்த்தா விஷயத்தை சொன்னோம்?”
“ஏன் மா ஒரு நல்ல விஷயத்தை சொல்லும் போது எல்லாருமே வாழ்த்த தானே செய்வா…”
“சரி நாம அடுத்து உங்க தம்பிகள்ட்ட பேசலாம்”
“ஏன் அன்னைக்கு கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிடப்போய் ஒருத்தி ஃபோனை ஆன் பண்ணினது கூட தெரியாத மாதிரி திமிரா பேசினா…இன்னொருத்தன் ஃபோனையே எடுக்கலை..தேவையா நமக்கு? அதுதான் அவா அப்பா கிட்ட சொல்லியாச்சு இல்ல அவர் சொல்லிப்பார். அது போதும் விடு நாம நம்ம ஃப்ரெண்ட்ஸ் அன்ட் அதர் ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்லுவோம்.”
என்று எல்லோரிடமும் தாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதாச் சொல்லி முடித்ததும் நவீன்
“இங்க பாரு மிருது இந்த விஷயத்தையும் ஏதாவது வேற விதமா பரப்பி உன்னை நிம்மதியா இருக்க விடமா பண்ணுவா. ஸோ நீ கூலா இரு சரியா”
“ம்…ம்…ஓகே. ஆனா இந்த விஷயத்தை என்னப் பண்ணுவா? சொல்ல முடியாது இதையும் நீங்க சொல்லறா மாதிரி ஏதாவது சொல்லிப் பரப்பியிருப்பா இன்னேரம்”
“ஆங் அப்படி எதிர்ப்பார்த்துண்டே இரு அப்போ ஏமாற்றமே இருக்காது.”
சக்தி எல்லாப் பரீட்சைகளையும் முடித்து, அதில் தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் மார்க் எடுத்து பத்தாவது வகுப்பில் தேர்ச்சியானாள். புது நாட்டில் தன் அப்பா பார்த்து வைத்திருந்த ஐந்து பள்ளிகளிலும் அப்ளை செய்து, நேர்காணலில் பங்கெடுத்துப் பேசி… அனைத்திலிருந்தும் அவளுக்கு அட்மிஷன் கிடைத்தது. அதிலிருந்து அவளுக்குப் பிடித்தப் பள்ளிக்கூடத்தை அவளே தேர்வும் செய்தாள். ஆக பள்ளிக்கூட அட்மிஷன் எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடந்தது. அடுத்து தங்குவதற்கு வீடு…அதைப் பற்றி மிருதுளா கேட்டதற்கு நவீன்
“அதெல்லாம் நோ இஷ்ஷூஸ் மிருது. என் கம்பெனி ஒன் மந்த் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திடுவா. அதுக்குள்ள நாம வீடுப் பார்த்துக்கலாம். அவாளும் ஹெல்ப் பண்ணுவா”
“ஓ!! அப்போ ஓகே”
ஒரு நாள் கஜேஸ்வரியிடமிருந்து வாட்ஸ்அப் கால் வந்தது. அதை அட்டென்ட் செய்தாள் மிருதுளா
“ஹலோ கஜேஸ்வரி எப்படி இருக்க? அட கவினும் இருக்கான்!! இன்னைக்கு லீவா?”
“இல்ல மன்னி இதோ கிளம்பிட்டேன். சரி உங்ககிட்ட பேசிட்டிப் போகலாமேனு வெயிட் பண்ணறேன்”
“அப்படியா என்ன விஷயம்?”
“எங்க பையனோட உபநயனம் வர்ற ஜூன் மாசம் 28 ஆம் தேதி வசாசிருக்கோம் அதுக்கு இன்வைட் பண்ணத் தான் கால் பண்ணினோம். பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. அதை எல்லாருக்கும் அனுப்பவும் ஆரம்பிச்சாச்சு.நவீன் கிட்ட அப்புறமா கால் பண்ணி சொல்லிக்கறேன்”
என்று கவின் சொல்லி முடிப்பதற்குள் கஜேஸ்வரி முந்திக்கொண்டு
“ஆமாம் மன்னி அப்புறமா கூப்பிடவே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா அதுதான் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிடலாம்ன்னு தான் கால் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.”
“கூப்பிடலைன்னா கூப்பிடலைன்னு தான் சொல்லுவா கஜேஸ்வரி. ஒருத்தரை நாம இன்வைட் பண்ணினா அவா ஏன் பண்ணலைன்னு சொல்லப்போறா? அப்படி எல்லாம் யாருமே சொல்ல மாட்டா….எஸ்பெஷலி நாங்க அப்படி சொன்னதில்லை சொல்லவும் மாட்டோம்”
“அய்யோ மன்னி நான் பொதுவா தான் சொன்னேன்”
“நான் பொதுவாவும் ப்ளஸ் எங்களையும் சேர்த்து தான் சொன்னேன்.”
“அந்த ஃபங்ஷன் முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை வைக்கலாம்னு இருக்கேன். நாங்க இந்தியாவுக்கு இரண்டு வாரம் முன்னாடி தான் வருவோம் …ஸோ..அது தான் ரெண்டு டேட் இருக்கு ஒண்ணு இருபத்தி இரண்டு இன்னொன்னு இருபத்தி ஆறு. உங்களுக்கு எது வசதியான தேதினு சொல்லுங்கோ அன்னைக்கே வச்சுக்கலாம்”
இதைக் கேட்டதும் மிருதுளா மனதிற்குள்
“என்னடா இது ….இது நாள் வரை ஏன் ஏதுனு கேட்கக்கூட ஆள்ளில்லாம இருந்தோம்...இப்போ என்னடான்னா என் வசதி எல்லாம் கேட்கிறாளே!!! இல்லை இதுல ஏதோ ஒண்ணு இருக்கு…உஷார் மிருது”
“மன்னி என்ன நான் பாட்டுக்கு கேட்டுண்டே இருக்கேன் நீங்க ஏதோ யோசனையில இருக்கீங்க?”
“ம்…ஆங்…ஆங்…எதுக்கு என் வசதி எல்லாம் பார்த்துண்டு!!! உங்களுக்கெல்லாம் எது வசதியோ அதை செய்ய வேண்டியது தானே….அது தானே உங்க வழக்கமும்.”
“இல்ல மன்னி இதுவரை நம்மாத்துல நடந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உங்களால வரமுடியலை இல்லையா அது தான் இந்த தடவை உங்க டேட் எல்லாம் முடிஞ்சு நீங்க ஃப்ரீயா இருக்குற நாளா சொல்லுவீங்களேன்னு தான் இரண்டு டேட் சொன்னேன்.”
“அப்படி மாத்தி சொல்லாதே கஜேஸ்வரி. என்னால வர முடியாததால நான் வரமா இல்லை. என்னை வரவிடாம சில பேர் பார்த்துண்டா அதுனால தான் நான் அட்டென்ட் பண்ணலை. ஓகே….அதுனால எனக்கு ஒண்ணும் இல்லை ஆனா ஒரு சுமங்கலியை வரக்கூடாது என்று நினைத்து பண்ணினவாளுக்கு தான் அந்த மகாபாவம் போய் சேரும்!”
“சரி மன்னி இப்போ சொல்லுங்கோ இருபத்தி இரண்டா இல்ல இருபத்தி ஆறா?”
“நீ என்னவோ ரொம்ப வற்புறுத்தி கேட்கிறதால சொல்லறேன் ….இருபத்தி அஞ்சு எனக்கு டேட்… ஸோ இருபத்தி இரண்டு எனக்கு ஓகே போதுமா”
“அச்சச்சோ அப்படியா?”
“ஏன் என்னாச்சு?”
“இல்ல எனக்கு இருபத்தி இரண்டு டேட்….அது தான் யோசிக்கறேன்….அதுவுமில்லாம இருபத்தி ஆறு வச்சுண்டா விசேஷத்தை ஒட்டி வர்றதால எல்லாரும் இதுக்கும் வந்துட்டு அப்படியே விசேஷத்தையும் அட்டென்ட் பண்ணிட்டு போயிடுவாளேன்னு யோசிச்சோம்”
“இதுக்கு தான்… நான் முன்னாடியே சொன்னேன் உன் இஷ்டத்துக்கு வச்சுக்கோன்னு. சரி ரெண்டு தேதியை முடிவு பண்ணும் போது உனக்கு தெரியாதா இருபத்தி இரண்டு உனக்கு ஒத்து வராதுன்னு!!”
“தெரியும் மன்னி அது தான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்”
“அப்போ எப்படி அன்ட் எதுக்கு என் கிட்ட ரெண்டு தேதியை எல்லாம் சொல்லி என்னமோ என் வசதிப்படி வைக்கறா மாதிரி எல்லாம் டிஸ்கஸ் பண்ணின? எப்படியும் எப்பவும் போல உன் வசதிப்படி நான் இல்லாத மாதிரி தான் வைக்கப் போற ….அதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணின?”
“அய்யோ!! மன்னி இன்னும் நாங்க டிசைட் பண்ணலை.”
“ம்….நீ கேட்ட நான் சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம். சரி அதை விடு. உன் மாமா உன்கிட்ட நாங்க குவைத் ஷிஃப்ட் ஆகப் போறதைப் பத்தி சொன்றாரா?”
“இல்லையே !!!”
“என்னது இல்லையா?! நம்பறா மாதிரி இல்லையே கஜேஸ்வரி. உன் மாமா உன் கிட்ட எதையுமே சொல்லாம இருக்க மாட்டாரே!!”
“ஆங் ..ஆங் ….சொன்னா….சொன்னா! நாங்க கொஞ்சம் இந்த ஃபங்ஷன் வேலைகள்ல பிசியா …அது தான் ஞாபகமில்லை”
என்று கஜேஸ்வரி சொல்லி முடிக்கவும் கவின் டக்கென்று
“நவீன் இங்கே எந்த கம்பெனியில் ஜாயின் பண்ணப்போறான்?”
“அவர் இப்போ வேலைப் பார்க்கற கம்பெனியோட ப்ராஞ்ச் அங்கேயும் இருக்கு அதுல தான்.”
“ஓ !!! அப்போ விசா எல்லாம்”
“அவருக்கு கிடைச்சாச்சு. எங்களுக்கு டூரிஸ்ட் விசால அங்கே வந்துட்டு தான் டிப்பென்டன்ட் விசாக்கு மாத்தணும்”
“ஓ!! நவீனுக்கு விசா ஆயிடுத்தா? அப்படின்னா அவன் இங்கே வந்திருக்கணுமே”
“ஆமாம் ஒரு மாசம் அங்கே தான் இருந்தார்”
“அப்படியா!!! சொல்லவேயில்லையே!!”
“அதை நீ அவர்கிட்ட தான் கேட்கணும்”
“சரி அப்போ வீடெல்லாம் பார்த்தாச்சா?”
“இல்லை இல்லை…அங்க நாங்களும் வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும்”
“ஓ! அப்போ இங்கே வந்ததும் தங்கறதுக்கு ஆஃபிஸே அக்காமடேஷன் தந்திடறாளோ”
“ஆமாம் ஒன் மந்த் ஒன் டவர்ஸ்ன்னு ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திருக்கா. அதுக்குள்ள வீடு தேடணும். சரி நீங்க இருக்குற ஏரியா எது?”
“நாங்க ஏர்போர்ட் கிட்ட இருக்கோம். எங்காத்துலேந்து பார்த்தா ப்ளைட்ஸ் டேக் ஆஃப் லேண்டிங் எல்லாமே தெரியும்”
“அப்படின்னா ரொம்ப நாய்ஸியா இருக்குமோ”
“இல்ல பால்கனி கதவை திறந்தா நான் சவுண்டு வரும்…இல்லாட்டி எதுவும் கேட்காது. சக்திக்கு ஸ்கூல் பார்த்தாச்சா?”
“ஆங்!! அதெல்லாம் பார்த்து அட்மிஷனும் கிடைச்சாச்சு. நாங்க ஜூலை பத்தாம் தேதி கிளம்பலாம்னு இருக்கோம். இன்னும் டிக்கெட் புக் பண்ணலை. பார்ப்போம்”
“ம்…சரி மன்னி நான் வேலைக்கு போகணும் டைம் ஆயிடுத்து நீங்க கஜேஸ்வரிட்ட பேசிண்டிருங்கோ”
என்று அண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லக்கூட மனமின்றி விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டதும் கிளம்பிவிட்டான் கவின். அவன் சென்றதும் கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“ஓ!! மன்னி நீங்க உங்க புது வீட்டுல இருக்கீங்க இல்ல…அதுதானே என்னடா பின்னாடி அந்த புத்தர் ஃபோட்டோவைப் பார்த்ததும் நினைச்சேன்…..சரி அப்படியே வீட்டை வீடியோவிலேயே சுத்திக் காட்டுங்கோ”
மிருதுளாவும் வீட்டை தன் கைபேசி மூலம் சுற்றிக் காண்பித்து வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது கஜேஸ்வரி
“ம்…மன்னி கடகடன்னு காமிச்சிட்டு வந்துட்டேங்கள். சரி மன்னி எனக்கு வேலையிருக்கு பை. அப்புறமா பேசறேன்”
என்று அவள் காரியம் முடிந்ததும் ஃபோனை வைத்தாள் கஜேஸ்வரி. கவின் கஜேஸ்வரி இருவருமே மிருதுளா அவர்கள் ஊருக்கு வருவதாக சொல்லியும் தங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்காதிருந்தனர். இப்படியும் சில மனிதர்கள்….கூடப்பிறந்தவர்கள்!!!!!
அன்று மாலை நவீன் வந்ததும் மிருதுளா கவின் கஜேஸ்வரியின் கால் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி….
“நவீ அவா ஒரு வாழ்த்துக் கூட சொல்லலை. நான் இன்ன தேதிக்கு வருவோம்னு சொல்லியும் எங்க தங்கப் போறேங்கள்னு உங்க தம்பி கேட்டானே ஒழிய ஆத்துக்கு வாங்கோனு சொல்லலைப்பா. இது நாள் வரைக்கும் அவா நம்மளை அவா நடத்தின எந்த விசேஷத்துக்கும் மதிச்சு கூப்பிட்டதே இல்லை ஆனா இப்போ என்னடான்னா என்னோட வசதி எல்லாம் கேட்கறாளேன்னு நானும் அவ சொன்ன இரண்டு தேதில ஒண்ண சொன்னா உடனே அந்த இன்னொரு தேதி தான் அவளுக்கு வசதினு டக்குனு ப்ளேட்டை மாத்திட்டா தெரியுமா!!! என்னமோ எனக்கு முக்கியத்துவம் குடுக்கறா மாதிரி பேசிட்டு கடைசியில அவ டிசைட் பண்ணிருக்கறதை தான் சொன்னா தெரியுமா….அப்பப்பா என்னமா பேசறாப்பா!!!”
“மிருது உனக்கு இன்னமும் ஒரு விஷயம் புரியலை”
“அவா ஏன் நான் இருக்கும் போது கால் பண்ணாம…நான் ஆஃபீஸ் போன நேரமா பாத்து பேசிருக்கா? எல்லாம் வம்பு. நான் இருக்கும் போது பேசியிருந்தா இவ்வளவு விஷயங்களை அவாளால கலெக்ட் பண்ணிருக்க முடியாதே!!! அதுவுமில்லாம இது வரை நம்மை எதுக்குமே கால் பண்ணி இன்வைட் பண்ணாதவா திடீர்னு இப்படி பண்ணறான்னா!!!! ….திருந்திட்டான்னு எல்லாம் தப்புக் கணக்குப் போட்டுடக் கூடாது!!! எல்லாமே விஷயம் தெரிஞ்சுக்கறதுக்காக மட்டுமே. அதுனால தான் அவாளுக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் தெரிஞ்சுண்டதும் கிளம்பிட்டா. இனி இந்த விவரங்களை எல்லாம் வச்சுண்டு என்ன டிராமா போடப்போறாளோ!!!”
“அச்சச்சோ அப்போ நானா அவாகிட்ட சொல்லிருக்கக்கூடாதோ? சாரிப் பா”
“நீயா சொல்லாட்டாலும் அவா உன் கிட்டேந்து எப்படி கேட்டு வாங்கணுமோ அப்படி பேசி விவரத்தை வாங்கியிருப்பா. இன்னைக்கு அவாளோட கால் பர்பஸ்ஸே அதுதான். ஸோ நீ வருத்தப் படாதே. ஆனா இனி நல்லா உன் மனசுல ஒண்ணு வச்சுக்கோ எப்பவுமே இந்த ஆளுகள்ட்ட எல்லாத்தையும் விலாவாரியா சொல்லாதே. விஷயத்தை சொன்னா மாதிரியும் இருக்கணும் ஆனா சொல்லாத மாதிரியும் இருக்கணும்”
“அது எப்படி நவீ சொன்னா மாதிரியும் இருக்கணும் சொல்லாத மாதிரியும் இருக்கணும்”
“ஃபார் எக்ஸாம்பிள்….இன்னிக்கு நீயா சொல்லாட்டினாலும் அவாளா கேட்டிருப்பா அப்போ நீ ஆமாம் வர்றப்போறோம்னு மட்டும் சொல்லிட்டு மத்ததுக் கெல்லாம் எனக்கு தெரியாது அதை நீங்க நவீன்ட்ட தான் கேட்கணும்னு சொல்லியிருந்தேன்னா அங்கேயே கால் கட் ஆகியிருக்கும். ஸோ நீ நாம ஷிஃப்ட் ஆகறதை சொன்ன ஆனா ஃபுல் டிட்டேய்ல்ஸும் சொல்லலை இது மாதிரி தான். இன்னும் க்ளியரா சொல்லணும்னா உன் மச்சினன் அந்த கவின் எப்படி அவா இருக்கற இடத்தைப் பத்தி சொன்னான் ஆனா இடத்தின் பெயரை சொல்லலை இல்லையா அது மாதிரி….உன் ஓர்பிடி அந்த கஜேஸ்வரி எப்படி தேதி எல்லாம் சொல்லறா மாதிரி சொன்னா ஆனா கரெக்ட்டான தேதி இன்னமும் உனக்குத் தெரியலை அது மாதிரி….புரிஞ்சுதா?”
“ஆங்!!! புரிஞ்சுது நவீ. இனி நீங்க சொன்னா மாதிரியே நடந்துக்கறேன். இப்போ இருபத்தி ஆறாம் தேதி சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிண்டான்னா நான் இந்த தடவையும் அட்டென்ட் பண்ண முடியாதே நவீ”
“விடு மிருது அவா எல்லாம் நல்ல மனசோட எதுவுமே பண்ணறதில்லை அதுனால அதுல கலந்துக்காட்டாலும் தப்பில்லை. நீ மனசார வருஷத்துக்கு பதினைந்து சுமங்கலிகளுக்கு நவராத்திரி சமயத்துல செஞ்சிண்டு வர இல்ல அது போதும். அந்த அம்பாளின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதுமிருக்கும்.”
“ஓகே நவீ டன்”
“சரி இன்னைக்கு என் ஆஃபீஸ் டிராவல்ஸ்லேந்து ஃபோன் பண்ணினா அவா ஜூன் பத்தாம் தேதிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். பேக்கிங்க்கு இன்ட்டர் நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸும் ஏற்பாடு பண்ணிட்டாளாம். அவா ஜூன் எட்டாம் தேதி வந்து எல்லாத்தையும் பேக் பண்ணி ஷிப் பண்ணிடுவா. நமக்கு குவைத்துல ஒரு மாசம் கழிச்சு தான் நம்ம பொருள் எல்லாம் வந்து சேரும்ன்னும் சொல்லிட்டா. ஸோ நமக்கு எக்ஸாக்ட்டா ஒரு மாசம் தான் இன்னும் இருக்கு”
“அச்சச்சோ ஜூலைப் பத்திலிருந்து ஜூன் பத்தாகிடுத்தா?”
“ஆமாம் மிருது”
“சரி அப்போ நம்ம பொருள் குவைத் வந்து சேரும் வரைக்கும் நாம எப்படி சமைக்கறது சாப்பிடறது?”
“அதுதான் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் இருக்கே மிருது”
“ஓ!! சாரி மறந்துட்டேன். அப்படின்னா நாம கவின் புள்ளையோட விசேஷத்துக்கு இருக்க மாட்டோமா?”
“ம்..ஹூம் மாட்டோம். ஆமாம் நமக்கு தான் மொதோ பத்திரிகை வர்றப் போறது பாரு!!! அதெல்லாம் சும்மா மிருது எப்பவும் போல அவாளோட பத்திரிகை டிராமாவைப் போடப் போறா”
“அப்படி சொல்லாதீங்கோ நவீ…மனுஷான்னா மாறாமையே வா இருப்பா? நீங்க வேணும்னா பாருங்கோ நாம குவைத் போணோம்னா… நாம இருக்குற இடத்துத்துக்கு வந்து நம்மளை கூப்பிடுவா. நாமும் குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுவோம் பாருங்கோ.”
“அதெல்லாம் நடக்கவே நடக்காது மிருது. வீணா கற்பனை எல்லாம் பண்ணாதே. நாம நம்ம வேலையைப் பார்ப்போம்…நாம தங்கப் போற இடம் அவாளுக்கு தெரியாதே அப்புறம் எப்படி வருவா?”
“நான் சொல்லி இருக்கேன் நவீ.”
“சூப்பர் மிருது. குட் ஜாப். சரி சரி இனிமே இப்படி எல்லாத்தையுமே டிட்டேய்லா சொல்லிண்டிருக்காதே. நீ சொன்னாலும் அவா வரமாட்டா”
“பார்ப்போமே!! சரி நவீ நமக்கு இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கப் போறது ஸோ நாம நம்ம பேரன்ட்ஸ் நாலு பேருக்கும் பட்டுப் புடவை அன்ட் வேஷ்டி சட்டை எடுத்துக் குடுத்து அவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு தான் இங்கேந்து புறப்படணும்”
“இங்க பாரு மிருது உன் பேரன்ட்ஸுக்கு வேணும்னா எடுத்துக் குடு அவா உண்மையிலேயே சந்தோஷப்படுவா ஆனா என் பேரன்ட்ஸ் பார்த்தே இல்ல நல்ல விஷயம் சொன்னதுக்கே ஒரு வாழ்த்து இல்ல சந்தோஷப்படலை…நாம எப்போ எது எடுத்துக் குடுத்தாலும் அதுல ஏதாவது குத்தம் தான் சொல்லிருக்கா…ஏன்??… உன் மாமியார்ட்ட இன்னுமா உன் மாமனார் விஷயத்தை சொல்லிருக்க மாட்டார்…அவ ஒரு ஃபோன் போட்டு வாழ்த்திருக்கலாமில்லையா…..நீ உன் அப்பாகிட்ட மட்டும் ஏதாவது சொல்லிட்டு வச்சிருந்தா அதை உன் அப்பா உன் அம்மா கிட்ட சொன்னதும் உன் அம்மா உடனே உனக்கு ஃபோன் போட்டு விஷ் பண்ணிருக்க மாட்டா? ஆனா இங்கே பாரு!!”
“விடுங்கோ நவீ. அவா குணம் அது. அதுக்காக நாம ஏன் நம்ம குணத்தை மாத்திக்கணும்? நான் எப்பவுமே சொல்லறது தான் நவீ…நாம நம்ம கடமையைச் செய்வோம்.”
“ரொம்ப செஞ்சாச்சு மிருது.”
“ப்ளீஸ்ப்பா.”
“சரி சரி என்னமோ பண்ணு”
“நாம இந்த வீக்கென்ட் போய் எல்லாம் வாங்கிண்டு வருவோம் சரியா”
“ம்…ம்…ஓகே!
என்று இருவரும் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.
அந்த வார இறுதியில் கடைக்குச் சென்று தங்கள் பெற்றவர்களுக்கு இரண்டுப் பட்டுப் புடவை மற்றும் இரண்டு வேஷ்டி சட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய உடைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கியதும் அம்புஜத்தின் சமையல் வாசம் வாசல்வரை வந்தது. உடனே வேகமாக வீட்டினுள் சென்று கை கால் அலம்பி விட்டு சாப்பிட அமர்ந்தனர்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமுமாக சப்பிட்ட இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தனர். அப்போது மிருதுளா ஒரு பையை இழுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதிலிருந்து இரண்டு கவர்களை எடுத்து நவீனை தன் பக்கத்தில் வரவழைத்து அப்பா அம்மாவிடம் இருவருமாக கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர். அதை வாங்கிக் கொண்ட அம்புஜமும் ராமானுஜமும்
“என்னது இது?”
“பிரிச்சுப் பாருங்கோ”
“அட பட்டுப் புடவையா? என்னத்துக்கு இப்போ?”
“சட்டை வேஷ்டி!! உங்களுக்கே இப்போ ஷிஃப்டிங் அது இதுனு எக்கச்செக்க செலவிருக்கு இதுல ஏன்ம்மா இதெல்லாம்?”
“அப்பா அதெல்லாம் என் கம்பெனி பார்த்துக்கும். எங்களுக்கு ஒரு செலவுமில்லை. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கா?”
“ஓ! ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க குழந்தைகள் நீங்க வாங்கித் தந்தது பிடிக்காம போயுடுமா!”
“அது!”
“சரி மா நாங்க குவைத்துக்கு போறதுக்கு நாலு நாள் முன்னாடி ஒரே ஒரு நாள் நவீ ஊருக்குப் போயிட்டு எங்க மாமனார் மாமியார்கிட்டேயும் வாங்கின புடவையையும் வேஷ்டி சட்டையையும் குடுத்துட்டு அன்னைக்கு நைட்டே திரும்பி வந்திடறோம். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துப்பேங்கள் இல்ல”
“ஓ!! தாராளமா போயிட்டு வாங்கோ நாங்க இருந்துப்போம். அதுதான் எங்களுக்கு இங்க ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாளே!! அதுவுமில்லாம காலையில போயிட்டு நைட்டு வந்திடப் போறேங்கள் அப்புறம் என்ன?”
“ஆங் !! நாங்க ஜூன் பத்தாம் தேதி காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பி பெங்களூர் ஏர்போர்ட் போயிட்டு அங்கேந்து ப்ளைட் பிடிச்சுப் போகணும். உங்களுக்கு ஒன்பதாம் தேதி டிரைவர் ஏற்பாடு செய்திருக்கேன். அவர் வந்து உங்களை நம்ம காரிலேயே சென்னை கூட்டிண்டு போய் விட்டுவிடுவார்.”
“சரி மாப்ள.”
குவைத்துக்கு கிளம்பும் முன் ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அங்கே ஈஸ்வரன் பர்வதத்திடம் வாங்கி வந்ததைக் கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர். அப்போது பர்வதம்
“சரி அப்போ அந்த மைசூர் வீட்டை என்னப் பண்ணப் போறேங்கள்?”
“அதைப் பூட்டிப் போட்டுட்டுப் போகப்போறோம்”
“வாடகைக்கு விட வேண்டியது தானே!”
“இல்லை இல்லை ஒரு தடவை வாடகைக்கு விட்டுட்டே படாத பாடு பட்டுட்டோம். போதும்ப்பா போதும்”
“வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்குற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கறதில்லை இல்லையா”
என்று பர்வதம் சொன்னதும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது ப்ரவீனும் துளசியும் குழந்தைகளுடன் ஈஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
தொடரும்…..
மைசூருக்கு வந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். மிருதுளா புது வீட்டின் மர வேலைகளை மேற்பார்வைப் பார்ப்பதில் மும்முரமானாள். வீட்டின் வேலைகள் எல்லாம் மளமளவென நடந்தேறியது. அவர்கள் திட்டமிட்டப்படியே செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளில் புது வீட்டிற்கு குடிப் போனார்கள். புது வீட்டில் அவர்கள் முதலில் வினாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடினார்கள். நவீனுக்கும், சக்திக்கும் வழக்கமான ஆஃபீஸ், ஸ்கூல் வேலைகள் தான் இருந்தன. ஆனால் புது வீட்டிற்குள் சென்றதும் மிருதுளாவுக்கு வழக்கமான வீட்டு வேலைகளுடன் புது வீட்டில் பொருட்களை அது ..அது இடத்தில் அடுக்கி வைக்கும் வேலை இருந்ததால் அமர நேரமின்றி பம்பரமாக சுழன்றாள். அப்படி சுறுசுறுப்பாக வேலையைப் பார்த்ததில் மூன்றே நாட்களில் புது வீட்டில் வசதியாக செட் ஆனார்கள் மூவரும். அதன் பின் மிருதுளாவிற்கு வழக்கமான வீட்டு வேலைகளே இருந்தன. அவள் வீட்டு வேலைகளுக்கென்று வேலை ஆட்கள் வைக்காது அனைத்து வேலைகளையும் அவளே செய்து வந்தாள்.
அந்த சொசைட்டியில் முதன்முதலில் குடிப் போனவர்கள் நவீன் குடும்பத்தினரே! அவர்கள் அங்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதை அவர்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டதன் விளைவாக சிட்டியை விட்டுத் தள்ளி இருக்கிறதே என்றெண்ணி வராமலிருந்தவர்கள் கூட அடுத்தடுத்து அவரவர் வீடுகளுக்கு குடி வந்தனர். மொத்தம் இருநூறு வீடுகள் இருந்தன. அதில் ஒரு பதினைந்து வீடுகளில் ஆட்கள் குடி வந்தனர்.
அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் நவீனும் மிருதுளாவும். பதினைந்து குடும்பங்களும் ஒருவரோடு ஒருவர் நல்ல நண்பர்களாயினர். ஜனவரி மாதம் வந்தது பொங்கலும் வந்தது மிருதுளாவுக்கு ஃபோனும் வந்தது ப்ரவீனிடமிருந்து
“ஹலோ மன்னி ஹாப்பி பொங்கல். எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் ஹாப்பி பொங்கல். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நல்லா இருக்கோம். மன்னி …துளசிக்கு வர்ற ரிப்பப்ளிக் டேயை ஒட்டி லீவு வர்றது அதுதான் கொஞ்சம் ரெஸ்ட்டா இருக்கட்டுமேன்னு உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம். அப்படியே உங்க புது வீட்டையும் பார்த்தா மாதிரி இருக்கும் இல்லையா!! நீங்க ஆத்துல தானே இருப்பேங்கள்?”
“ஆங்…நாங்க ஆத்துல தான் இருப்போம். வாங்கோ வாங்கோ”
“ம்…சரி மன்னி அதைச் சொல்லத் தான் கால் பண்ணினேன். அண்ணாகிட்டேயும் சக்திக்கிட்டேயும் விசாரிச்சதா சொல்லிடுங்கோ. வச்சுடறேன்”
“ஆங் சரி. நீயும் அங்கே எல்லார்கிட்டேயும் நானும் விசாரிச்சதா சொல்லிடு”
என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம்
“அவன் சொன்னதை கவனிச்சியா மிருது?”
“என்ன நவீ?”
“ரெஸ்ட்டுக்கு வர்றாளாம்…கேட்டியா அதை”
“ம்…ம்…கேட்டேன் கேட்டேன்….”
“ஏன் நீ அவ அம்மா? இல்ல இது அவ அம்மா வீடா? ரெஸ்ட் எடுக்க வர்றதுக்கு!”
“விடுங்கோப்பா.”
“நோ நோ …மிருது…நோ …டு நாட் என்கரேஜ் தீஸ் திங்க்ஸ். நீ அவன்கிட்ட உடனே நான் இப்போ கேட்டா மாதிரி கேட்டிருக்கணும்.”
“கேட்டிருக்கணும் தான்….அதுனால நமக்கு என்னப்பா கிடைக்கப் போறது….”
“அது என்ன அப்படி சொல்லறது? நீ என்ன அவளுக்கு வேலை செய்யணும்!! மகாராணி வந்து ரெஸ்ட் எடுப்பாளாமோ? ஏன் நீயும் தான் வேலைக்குப் போன….எங்க போய் ரெஸ்ட் எடுத்தயாம்”
“ம்….நானெல்லாம் முட்டாள்ப்பா…எனக்கு புருஷனை விட்டு ஒவ்வொண்ணுக்கும் பேச வைக்கத் தெரியலை. என்ன பண்ண சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இதெல்லாம் கூட பரவாயில்லை ஆனா….விசேஷத்துக்கு வேணும்னே வராம ஆட்டிட்டிங் அது இதுன்னு இருந்துட்டு ரெஸ்ட் எடுக்க வரேன்னு சொல்லறது தான் எனக்கு வருத்தமா இருக்கு. ம்….என்ன பண்ண..? மனிதர்கள் பல விதம்”
“எத்தனை நாள் இருக்கப் போறாளோ தெரியலையே!!”
“என்னப்பா மிஞ்சிப் போனா இரண்டு நாள் அவ்வளவு தானே. வந்துட்டுப் போட்டும்”
“இதே மாதிரி எப்பவாவது நீ அவா ஆத்து ரெஸ்ட்டுக்கு வர்றேன்னு சொல்லிப்பாரு உடனே ஆடிட்டிங் வந்திடும்”
“அச்சச்சோ லீவ் இட் பா”
ப்ரவீனும் துளசியும் அவர்கள் பிள்ளைகளும் நவீன் வீட்டிற்கு பர்வதீஸ்வரன் வீட்டிலிருந்து கிளம்பினர். அவர்கள் காரில் கிளம்பிச் சென்றதும் ஈஸ்வரன் மிருதுளாவுக்கு கால் செய்தார்.
“ஹலோ!”
“ஹலோ அப்பா சொல்லுங்கோ”
“ப்ரவீனும் துளசியும் அவா கார்லேயே உங்காத்துக்கு வர இங்கேந்து புறப்பட்டுட்டா.”
“அப்படியா !! அப்போ எப்படியும் மத்தியானம் வந்துடுவா”
“ஆங் ஆமாம். இரு பர்வதம் பேசறா”
“ஹலோ எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? புது வீடெல்லாம் செட் ஆயாச்சா?”
“ம்….நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். ஆங் புது வீடும் செட் ஆயாச்சு.”
“அப்பா சொன்னா இல்லையா ப்ரவீனும் துளசியும் அங்க வர்றதைப் பத்தி….”
“ஆங் ஆமாம்…ப்ரவீனும் அன்னைக்கே ஃபோன் போட்டுச் சொன்னானே”
“ஆமாம் ஆமாம்…அது ஒண்ணுமில்லை துளசிக்கு இந்த வருஷம் எடுக்காத லீவு ஒரு வாரம் பாக்கியிருக்கு அதுதான் குடியரசுத் தினத்தை ஒட்டி அந்த லீவையும் எடுத்துண்டு தான் அங்க வர்றா. எங்களுக்கும் ஒரு பத்து நாள் நிம்மதியா ஃப்ரீயா குழந்தைகளை கவனிச்சுக்கறதுலேந்து விடுப்பட்டிருக்கலாம்னு தான் நாங்களும் சரின்னு அவாளை போகச் சொன்னோம். அவா பத்து நாள் தங்கறதுக்கு தான் வர்றான்னு உன்கிட்ட சொல்லத்தான் ஃபோன் பண்ணினோம். சரி வச்சுடவா”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. நவீன் ஆஃபீஸிலிருந்து வருவதற்குள் ப்ரவீன் துளசி வீட்டிற்கு வந்து விடுவார்களே என்று வேறு வழியில்லாமல் உடனே நவீனுக்கு ஃபோன் போட்டு விவரத்தைச் சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்
“என்னமோ சொன்ன ரெண்டு நாளுக்கே தான் இருப்பானுட்டு!!”
“ரெண்டோ, பத்தோ இல்ல ஒரு மாசமோ அதைப் பத்தி எனக்கு கவலையில்லை ஆனா அது என்ன அதை ப்ரவீனோ துளசியோ நம்ம கிட்ட நேரடியா சொல்லாம உங்க அப்பா அம்மாவை சொல்ல வைக்கறது? வீட்டுக்கு வந்து தங்கறவா சொல்லணுமா இல்லையா? மாமியாரும் மாட்டுப்பொண்ணுமா ரெஸ்ட் எடுக்க நான் தான் கிடைச்சேனா? இந்த ஆட்டிட்யூடு தான் எனக்குப் பிடிக்கலை நவீ”
“நீ உன் மாமியார் மாமனார் ஃபோன் பண்ணினா மாதிரியே காட்டிக்காதே. எதுவும் சொல்லிக்காதே. அவாளா சொல்லட்டும் சரியா…நான் சொன்னதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ மிருது. சரி நான் ஒரு மீட்டிங்குக்கு போகணும் பை.”
“ஓகே பை நவீ. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்”
“இட்ஸ் ஓகே!! நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. மறுபடியும் ஏமாளியாகாதே மிருது”
“சரிப்பா பை. நீங்க மீட்டிங்குக்குப் போங்கோ”
என்று ஃபோனை வைத்ததும் கிடுகிடுவென பாக்கி சமையலை முடித்து, வீட்டை கூட்டித் துடைத்து குளித்து விட்டு வந்து குக்கரில் சாதம் வைத்தாள். குக்கர் ஆனதும் வீட்டின் காலிங் பெல் சப்தம் கேட்டது. சென்று கதவைத் திறந்தாள் மிருதுளா
“ஹலோ வாங்கோ வாங்கோ. ஏய் குட்டிஸ் எப்படி இருக்கேங்கள். உங்களுக்கும் ஸ்கூல் லீவா”
“இல்ல மன்னி அவாளுக்கு மூணு நாள் தான் லீவு…மேலே லீவு வேணும்னா போட்டாகணும்”
“ஓ!! அப்படியா. உட்காருங்கோ இதோ வர்றேன்……இந்தாங்கோ ஜூஸ் எடுத்துக்கோங்கோ”
“இந்த வீட்டுல செட்டில் ஆயாச்சுப் போல”
“ஆமாம் ப்ரவீன் ஒரு வழியா எல்லா வேலைகளையும் முடிச்சு செட்டில் ஆகிட்டோம்”
“சரி சரி சாப்பிட வாங்கோ. பசிக்கலையா?”
“இல்ல அண்ணாவும், சக்தியும் வந்திடட்டுமே”
“அவா எங்கேந்து வருவா? அவா ரெண்டு பேரும் சாயந்தரம் தான் வருவா. சக்தி ஸ்கூல் பஸ்ல ஐந்து மணிக்கும் நவீ ஒரு ஆறரை மணிக்கும் வருவார்.”
“அப்போ அவாளுக்கு லஞ்சு?”
“அதெல்லாம் காலையிலேயே கட்டிக் கொடுத்தனுப்பிடுவேன். லஞ்சு, ஸானாக்ஸ் எல்லாமே கொண்டு போயிடுவா. சரி சரி வாங்கோ நாம சாப்பிடலாம்”
என்று வந்தவர்களுக்குப் பரிமாறியப் பின் தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள் மிருதுளா. அனைவரும் சாப்பிட்டதும் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்தாள். துளசி ஏதோ ஹெல்ப் பண்ணுவது போல பாவனை மட்டும் செய்து விட்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதுப போல அடுப்படியிலிருந்து கிளம்பி ஹாலில் சோஃபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள். வேலைகளை முடித்துவிட்டு வந்த மிருதுளா ப்ரவீனிடம் விருந்தினர் அறையை காண்பித்து
“இது தான் கெஸ்ட்ரூம். நீங்க யூஸ் பண்ணிக்கலாம். அது ரெஸ்ட்ரூம். இந்த வார்ட்ரோப் எல்லாம் காலியா தான் இருக்கு நீங்கள் யூஸ் பண்ணிக்கலாம்”
என்று சொன்னதும் தங்கள் பைகளை எல்லாம் அங்குக் கொண்டு போய் வைத்து செட்டில் ஆனார்கள். மிருதுளா ஹாலில் அமர்ந்திருந்தாள். அந்த ரூமிற்குள் சென்றவர்கள் அறையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களாகவே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏதோ ரிசார்ட்டிற்கு வந்தவர்கள் போலவும் மிருதுளா வேலை ஆள் போலவும் நடந்துக் கொண்டது மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை. அவளும் ஹாலில் அமர்ந்துக் கொண்டு தாழிட்ட கதவைத் திறந்து வந்தவர்கள் ஹாலுக்கு வந்து தன்னுடன் பேசுவார்கள் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாலை நாலரை மணிக்கு கதவைத் திறந்து வெளியே வந்த துளசி…மிருதுளாவிடம்
“மன்னி காபி இப்போ வைப்பேங்களா இல்லை அண்ணா வந்துட்டுத் தானா?”
“ஏன் உங்களுக்கு வேணுமா?”
“ஆமாம் மணி நாலரை ஆயிடுத்தே”
“ம்….சரி சரி இதோ வர்றேன்.”
என்று எழுந்துப் போய் அனைவருக்கும் காபியும், குழந்தைகளுக்கு பூஸ்ட்டும் போட்டுக் குடுத்தாள். அதை அவர்கள் அறைக்குள் எடுத்துச் சென்று மீண்டும் கதவடைத்தாள் துளசி. அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதை அப்படியே அடக்கிக் கொண்டு தனது காபியை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அருந்தினாள். மணி ஐந்தடித்தது…மிருதுளா வாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். விருந்தினர் எங்கோ புறப்பட்டு வாசலுக்கு வந்து…
“என்ன மன்னி சக்தியை இன்னும் காணலை”
“வருவா ….இப்படி எப்பவாவது பத்து பதினைந்து நிமிஷம் லேட்டும் ஆகும். ஆமாம் நீங்க எல்லாரும் எங்கே கிளம்பியிருக்கேங்கள்?”
“சும்மா இந்த சொசைட்டியை சுத்திப் பார்த்துட்டு அப்படியே ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்னு கிளம்பியிருக்கோம். இதுக்குள்ள பார்க் இருக்கா மன்னி?”
“ஓ!! சரி சரி. போயிட்டு வாங்கோ. ஆங் பார்க் இருக்கு. இப்படியே நடந்துப் போங்கோ அந்த கார்னர்ல பார்க் இருக்கு”
“சரி நாங்க போயிட்டு வந்திடறோம்”
“ம்…பத்திரம் இங்கே இன்னமும் சில வீட்டு வேலைகள் நடந்துண்டிருக்கு. குழந்தைகளை பத்திரமா கூட்டிண்டு போங்கோ”
“ம் ஓகே மன்னி. நாங்க பார்த்துக்கறோம்”
என்று கூறிவிட்டு வெளியே சென்றனர். மிருதுளா தண்ணீர் ஊற்றி விட்டு வீட்டினுள் சென்றுப் பார்த்தாள் விருந்தனர் அறையை ஏதோ ஹேட்டல்களில் சாத்தி வைத்துவிட்டுச் செல்வதைப் போல இழுத்துச் சாதனற்றிவிட்டு சென்றிருந்தனர் ப்ரவீனும் துளசியும். அதை பார்த்ததும் மனதில் புலம்பிக்கொண்டே இருந்தாள் மிருதுளா. சக்தியின் ஸ்கூல் பஸ் வந்தது. அவளுக்கு டிபன் பூஸ்ட் எல்லாம் கொடுத்தாள் அப்போது சக்தி
“அம்மா சித்தப்பா சித்தி எல்லாரும் வருவானு சொன்னயே…எங்கே அவா எல்லாரும்?”
“எல்லாம் வந்தாச்சு. வெளியே சுத்திப் பார்க்க போயிருக்கா”
“ஏன்மா அந்த ரூம் மூடியிருக்கு?”
“அதை அவாளுக்குக் கொடுத்தேன் அவா அப்படி மூடிட்டுப் போயிருக்கா”
“நம்ம வீட்டு ரூம் கதவை அவா ஏன் சாத்திட்டுப் போயிருக்கா?”
“அது உனக்கு தெரியறது ஆனா அவாளுக்குத் தெரியலையே…இதோ அப்பாவும் வந்துட்டா”
என்று நவீன் வந்ததும் அவனுக்கு காபியும் டிஃபனும் கொடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள் அதற்குள் வெளியே சென்ற ப்ரவீன் குடும்பம் திரும்பி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நவீன்
“வாடா ப்ரவீன். வா வா.”
“ஆங் அண்ணா. எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன். உன் வேலை எல்லாம் எப்படி போறது?”
“எல்லாம் நல்லா போறதுண்ணா”
“ஏய் குட்டிப் பசங்களா எப்படிடா இருக்கேங்கள்?”
“ஏய் பெரியப்பா கேட்கறா இல்ல பதில் சொல்லுங்கோடா”
“ம் நல்லா இருக்கோம்”
என்று சற்று நேரம் பேசிவிட்டு அவர்கள் அறைக்குள் சென்ற கதவைத் தாழிட்டனர். அதைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்
“என்ன இது அவா பாட்டுக்கு கதவை சாத்திண்டுட்டா”
“இப்படி தான் வந்ததுலேந்து இருக்கா. நான் பாட்டுக்கு ஹால்ல உட்கார்ந்துண்டு இருந்தேன்”
“ம்…..சரி நாளைக்கு எங்கப் போகலாம்?”
“மைசுரைச் சுத்திக் காமிக்கலாம். வேற எங்கப் போறது?”
“ஓகே.”
“சரி நான் போய் டின்னர் பண்ணட்டும்”
என்று கூறிவிட்டு எழுந்துச் சென்று அனைவருக்கும் தோசைச் சுட்டு சட்னி அரைத்து வைத்து நவீனையும் சக்தியையும் சாப்பிடக் கூப்பிட்டதும் விருந்தினர் அறைத் திறக்கப்பட்டது. அதிலிருந்து வந்த ப்ரவீன் குடும்பத்தினர் டின்னரை சாப்பிட்டனர். பின் அதிசயமாக சற்று நேரம் ஹால் சோஃபாவில் அமர்ந்தனர். அனைவரும் சாப்பிட்டதும் ப்ரவீன் நவீனிடம்
“அண்ணா உனக்கு சாட்டர்டே லீவு தானே?”
“ஆமாம் ஏன் கேட்குற?”
“இல்ல நாளைக்கு சாட்டர்டே ஆச்சே….”
“சரி அதுக்கு”
“எங்கேயாவது போகலாமான்னு ….”
“ஆங் போகலாமே! நான் வண்டி ஏற்பாடு செய்திருக்கேன் அதுல நாம எல்லாருமா போய் மைசூரைச் சுற்றிப் பார்த்துட்டு வருவோம்”
“ஓகே. எத்தனை மணிக்கு ரெடியாகணும்?”
“ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பினா தான் எல்லா இடத்தையும் கவர் பண்ணிட்டு வர முடியும்”
“ஓ! ஓகே ஓகே. சரி அப்போ போய் இப்போ தூங்கினா தான் காலையில சீக்கிரமா எழுந்துக்க முடியும். ஓகே குட் நைட் நாங்க போய் தூங்கறோம்”
“குட் நைட்”
“மன்னி குழந்தைகளுக்கு பால் வேணும்”
“அப்படியா? இரு வச்சுத் தர்றேன்.”
என்று வேலைகளை முடித்து அக்கடான்னு உட்கார்ந்த பின் மீண்டும் அடுப்படிக்குச் சென்று பால் வைத்துக் கொடுத்தாள் மிருதுளா. அவர்கள் உறங்கச் சென்றதும் சக்தி அவள் அறைக்குச் சென்றாள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்….
“இங்க பாருங்கோ நவீன் இங்க தங்கப்போற நாட்களைப் பத்தி அவா எதுவுமே என்கிட்ட சொல்லலை. நானும் உங்க அப்பா அம்மா ஃபோன் பண்ணின விவரத்தை சொல்லலை. ஆனா என்னால இவாளுக்கு வேலை ஆள் மாதிரி இப்படி பத்து நாளைக்கெல்லாம் செஞ்சுக் குடுக்க முடியாது. அந்த துளசி ஒரு துரும்பக்கூட நகத்த மாட்டேங்கறா. நம்ம வீட்டுக்கே வந்துட்டு நம்ம ரூமுலயே இருந்துண்டு கும்மாளம் போடறா…வீட்டுக்கு சொந்தகாரியான நான் வேலைக்காரி மாதிரி ஹால்ல உட்கார்ந்திருந்தேன். ஏன்ப்பா ஒருத்தா வீட்டுக்குப் போனோம்னா அவாளோட உட்கார்ந்து பேசுவோமா? இல்ல நாம பாட்டுக்கு சாப்பிடற நேரத்துக்கு மட்டும் அட்டென்டன்ஸ் கொடுத்துட்டு ரூமுக்குள்ளப் போய் கதவை சாத்திப்போமா?”
“இங்க பாரு மிருது அவா எல்லாம் அப்படிதான். நீ அவளை வேலை வாங்கு. அவ என்ன அவ அம்மா வீட்டுக்கா வந்திருக்கா ஹாய்யா ரூமுக்குள்ள இருக்க!!”
“ஆமாம் அவ அம்மா வீட்டுக்குப் போனா கூட அவளால இப்படி இருக்க முடியாது நவீ. இதுல என்ன கூத்துன்னா…அவா சாயந்தரம் இந்த ஏரியாவை சுத்திப் பார்க்க வெளியில போனா… அப்போ அவா ரூம் கதவை சாத்திட்டுப்போயிருக்காப்பா”
“மிருது அவாளுக்கு செஞ்சுக்காட்டினனா உன்னை நல்லா யூஸ் பண்ணிக்குவா அதை ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்கும் அவா இங்கே தங்குறதைப் பத்தி ஏதும் பேசலைன்னா நானே கேட்கப் போறேன். சரி இப்போ படுத்து நல்லா தூங்கு”
அனைவரும் நன்றாக உறங்கினர். மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல மிருதுளா எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு வைத்துவிட்டு ஃப்ரெஷ் ஆகச் சென்று வந்து நவீனுக்கும் தனக்கும் காபிப் போட்டுக் கொண்டு வந்து அவர்கள் வாசல் தோட்டத்தின் திட்டில் அமர்ந்து அருந்தினர். பின் கிடுகிடுவென காலை டிஃபன் செய்து அவற்றை டைனிங் டேபிளில் வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்படும் போது மகாராணி துளசி அம்மையாரின் கணவர் ப்ரவீன் எழுந்து வந்து
“குட் மார்னிங் மன்னி. அண்ணா இன்னும் எழுந்துக்கலையா?”
“நாங்க எப்பவும் ஐந்தரை மணிக்கு எழுந்துப்போம். சரி துளசி எழுந்துக்கலையா?”
“அவ நல்லா தூங்கறா ….பாவம் அதுதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்”
இதைக் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த நவீன்
“வெளில போகணும் ஞாபகம் இருக்கு இல்ல…மணி இப்பவே ஏழரை ஆயாச்சு”
“ஆங் அதெல்லாம் அவ எட்டரைக்கு எழுந்தாலும் ஒன்பது மணிக்கெல்லாம் ரெடியாகிடுவா…மன்னி காபி “
“இரு போட்டுத் தரேன்.”
என்று குளிக்கக் கிளம்பிய மிருதுளா ப்ரவீனுக்கு காபிப் போட்டுக் குடுத்துவிட்டுக் கிளம்பும் போது துளசி எழுந்து வந்து காபி கேட்டாள் அதற்கு மிருதுளா அவளிடம்
“துளசி காபி டிக்காக்ஷன் மேடை மேல இருக்கு. பால் ஃப்ரிட்ஜில் இருக்கு. கொஞ்சம் நீயே போட்டுண்டுடேன். நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்”
என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வந்துப் பார்த்தாள் காபி போட்ட மாதிரியே இருக்கவில்லை. அனைவரும் குளித்து ரெடியாகி வந்ததும் அமர்ந்து டிஃபன் சாப்பிட்டனர். அப்போது ப்ரவீன் மிருதுளாவிடம்
“மன்னி….துளசிக்கு காலையில காபி குடிக்கலைன்னா தலை வலிக்கும்…அதுனால கொஞ்சம் காபி போட்டுக் குடுத்திடறேங்களா?”
“நான் தான் அவளைப் போட்டுக்கச் சொல்லிட்டுத் தானே குளிக்கப் போனேன்…ஏன் அவ போட்டுக்கலையா?”
“அவ போடலைப் போல அதுதான் டிபன் சாப்பிட்டதும் காபிக் குடிச்சிட்டா பரவாயில்லையா இருக்கும் இல்லாட்டி வண்டியில நாம போகும் போது தலைவலின்னு படுத்துவா”
என்றதும் மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டே சென்று காபி போட்டு வந்து ப்ரவீனிடம் குடுத்தாள். அவன் அதை அவன் தர்மப்பத்தினியிடம் கொண்டுப் போய் குடுத்தான். மிருதுளா சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, அடுப்படியை சுத்தம் செய்துவிட்டு கிளம்பினாள். அவள் வேலைகளை முடிக்கும் வரை தன் அறையிலிருந்து வெளியே வராத துளசி மிருதுளா வேலைகளை முடித்துக் கிளம்பிவிட்டால் என்றதும் வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டாள்.
நவீன் புக் செய்திருந்த வண்டி வந்தது. அனைவரும் அதில் ஏறி மைசூரைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர். அன்று முழுவதும் ஊர் சுற்றி இரவு டின்னரையும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கும் போது நவீன் ப்ரவீனிடம்
“உனக்கு எவ்வளவு நாள் லீவு? உங்க ப்ளான் என்ன? ஏன்னா நான் அதுக்குத் தகுந்தா மாதிரி ஏற்பாடு பண்ணணும் அதுதான் கேட்டேன். ஏன்னா எனக்கு மன்டேலேந்து ஆஃபீஸ் இருக்கு சக்திக்கு ஸ்கூலுமிருக்கு அதுனால தான்…”
“நாங்க ஒரு ரெண்டு நாள் ப்ளான் தான் போட்டிருக்கோம். மன்டே கிளம்பி ஊருக்கு போற வழியில இருக்குற நம்ம ஒண்ணு விட்ட சித்தப்பா ஆத்துல ரெண்டு நாள் தங்கிட்டு புதன் கிழமை ஊருக்குப் போகலாம்னு இருக்கோம். எனிவே எனக்கும் துளசிக்கும் பத்து நாள் லீவு இருக்கு. பசங்களுக்கு தான் ஸ்கூல்ல லீவு போடணும்.”
“அப்படியா!! அப்போ மன்டே கிளம்பறேங்களா? நான் லீவு போட வேண்டாம் ….அப்பாடா!!! எனக்கு ஒரு இம்பார்ட்டென்ட் மீட்டிங் இருக்கு. ஸோ நான் அதை அட்டென்ட் பண்ணலாம்.”
என்றதும் துளசி ப்ரவீனைப் பார்த்தாள். உடனே அவன்
“மன்னி அப்பா அம்மா உங்களுக்கு நேத்து கால் பண்ணினாளா?”
“ஆமாம் பண்ணினா. அதுக்கென்ன?”
“இல்லை சும்மா தான் கேட்டேன்”
என்று மிருதுளாவுக்கு தங்கள் ப்ளான் முன்னதாகவே மூத்த தம்பதியர் மூலம் தெரியும் என்பதை அவளுக்கும் நவீனுக்கும் இந்த ஒயு கேள்விக் கொண்டு ஞாபகம் படுத்துவதாக எண்ணிக் கேட்டான் ப்ரவீன். அதற்கு பிடிக் கொடுக்காமல் பேசினர் நவீனும் மிருதுளாவும். வீடு வந்து சேர்ந்தனர். அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கினர். மறுநாளும் இதே போல வெளியே சென்று சுற்றி சாப்பிட்டு இரவு வந்து உறங்கினர். திங்கட்கிழமை காலை ஏழரை மணிக்கெல்லாம் ரெடியாகி நவீனும் சக்தியும் ஆஃபீஸ் மற்றும் ஸ்கூலுக்கு கிளம்பிச் சென்றனர். மிருதுளா தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு குளித்து வந்தாள். அப்போது ஹாலில் அம்ர்ந்திருந்த துளசி ப்ரவீனிடம் மிருதுளா காதில் விழும்படி
“ஆமாம் இன்னைக்கு உங்க சித்தப்பா ஆத்துக்கு போகப் போறோம்னு சொன்னேங்களே அவாகிட்ட நாம வரோம்னு சொல்ல வேண்டாமா ? அவாளுக்கு ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ”
“அது தான் நான் பண்ணினேன் போக மாட்டேங்கறது”
என்று ஏதேதோ ஷோ போட்டுக்கொண்டிருந்தனர். அதை கண்டும் காணாததுப் போல அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளிடம் ப்ரவீன்
“மன்னி உங்ககிட்ட சித்தப்பா நம்பர் இருக்கா?”
“ம்…இருக்கே….ஏன் கேட்குற”
“இல்ல நான் வச்சிருக்கற நம்பர் போகமாட்டேங்கறது”
“அப்படியா என்ன நம்பர் வச்சிருக்க சொல்லு..நான் செக் பண்ணறேன்”
நம்பரை ப்ரவீன் சொன்னதும் மிருதுளா
“ஆங் இதே நம்பர் தான் நானும் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஏன் போக மாட்டேங்கறது?”
“தெரியலையே…”
“இரு நான் கால் செய்து பார்க்கறேன்…ஆங் ரிங் போறதே”
“அப்படியா குடுங்கோ பேசிடறேன்”
என சாமர்த்தியமாக மிருதுளாவையே கால் செய்ய வைத்து அவள் நம்பரிலிருந்தே அவன் சித்தப்பாவிடம் பேசினான்
“ஹலோ சித்தப்பா எப்படி இருக்கேங்கள்? நான் ப்ரவீன் பேசறேன்”
“ஹாய் நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? என்ன இது மிருதுளா நம்பர்லேந்து பேசுற?”
“ஆமாம் நாங்க இங்க அண்ணா ஆத்துக்கு வந்திருக்கோம். அப்படியே உங்காத்துலேயும் தங்கலாம்னு யோசிக்கறோம்”
“அப்படியா எப்போ வர்றேங்கள்?”
“அநேகமா இன்னைக்கு வந்தாலும் வருவோம். நான் இங்கேந்து கிளம்பினதும் உங்களுக்கு கால் பண்ணறேன். ஓகே சித்தப்பா சித்தியை எல்லாம் கேட்டதா சொல்லுங்கோ. வச்சுடறேன் பை”
“பை டா. டேக் கேர். பத்திரமா வாங்கோ”
என்று ஃபோன் பேசி முடித்ததும் மிருதுளாவிடம் கொடுத்தான் ப்ரவீன். அப்போது மிருதுளா
“நீங்க அவா ஆத்துலேயும் தங்கிட்டுப் போற ப்ளன்ல தானே வந்திருப்பதா நேத்து சொன்னேங்கள் அப்போ அப்பவே அவாகிட்ட நீங்க சொல்லலையா?”
“இல்ல இப்போ தான் தோனித்து”
“எது அவாகிட்ட சொல்லணும்னா இல்ல அங்க போறதே வா?”
“இரண்டும்னு வச்சுக்கோங்கோளேன்”
என்று ப்ரவீன் சொன்னதும் மிருதுளாவுக்கு நவீன் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. அதனால் அதற்கு மேல் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுந்து அடுப்படிக்குள் சென்றாள். அந்தப்புர வாயில் திறந்திருந்ததால் மிருதுளா அங்கு சென்று துளசியிடம்
“நீங்க மத்தியானம் சாப்டுட்டு தானே கிளம்புவேங்கள்? ஏன் கேட்கறேன்னா….அதுக்கு தகுந்தா மாதிரி குக்கர்ல சாதம் வைக்கணும்”
“எனக்கு தெரியலையே மன்னி…அவர்கிட்ட கேளுங்கோ”
என்று தனக்கு ஒன்றுமே தெரியாததுப் போல துளசி சொல்ல உடனே ஹாலுக்கு சென்று ப்ரவீனிடம் கேட்க வந்த மிருதுளா அங்கு ப்ரவீன் இல்லாததால் அவன் பேசும் குரல் வாசலில் இருந்து வர அங்கேச் சென்றாள். அவன் ஃபோனில் ஈஸ்வரனுடன் பேசிக்கொண்டிருந்தான் அதைக் கேட்டதும் ஷாக் ஆகி நின்றாள் மியுதுளா
“அப்பா என்ன நீ மன்னிகிட்ட நாங்க பத்து நாள் இருக்க வரோம்னு சொல்லலையா? அண்ணா என்னடான்னா நேத்து எப்போ கிளம்பறேங்கள்னு கேட்கறான்? நானும் இன்னைக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டேன். இப்போ நாங்க வேற வழியில்லாம சித்தப்பா ஆத்துக்கு போயி ஒருநாள் தங்கிட்டு ஊருக்கு வரணும். பாவம் துளசி பத்து நாள் நிம்மதியா இருக்கலாம்னா முடியலை. அவளுக்கும் கோபம் வராதா? என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ நீ மறுபடியும் மன்னிட்ட பேசு…நான் ஃபோனை வைக்கறேன்”
என்று ஃபோனை வைத்து திரும்பினான்…. மிருதுளா நின்றிருந்ததைப் பார்த்ததும்…
“மன்னி நீங்க எப்போ வந்தேங்கள்?”
“ஏன்ப்பா இது என் வீடு நான் எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வருவேன் போவேன்”
“அதுக்கில்ல மன்னி…”
“சரி அதெல்லாம் விடு. நீங்க மத்தியானம் சாப்பிட்டுட்டு தானே கிளம்புவேங்கள்? துளசிகிட்ட கேட்டேன் …அவ தான் பாவமாச்சே!!! அவளுக்குத் தெரியாதுன்னுட்டா…அதுதான் உன் கிட்ட கேட்க வந்தேன் நீ யார் கூடயோ பேசிண்டிருந்த”
“ஆங் மன்னி சாப்டுட்டு தான் கிளம்புவோம்”
என்று அப்போதும் சமாளித்தானே தவிர அவன் ஸ்தானத்திலிருந்து இறங்கி வந்து ஈஸ்வரனிடம் சொன்னதை மிருதுளாவிடம் சொல்ல துணிச்சலின்றி தன் ரூமிற்குள் சென்றான் ஏனெனில் அவன் மிருதுளாவிடமும் நவீனிடமும் அவ்வளவு திமிராக பேசியவனாயிற்றே!!!
அவன் ரூமிற்குள் சென்ற சில நொடியில் ஈஸ்வரனிடமிருந்து மிருதுளாவுக்கு கால் வந்தது. அந்த கால் எதற்காக யார் சொல்லி வருகிறது என்பதை நன்கறிந்த மிருதுளா அட்டென்ட் செய்தாள்
“ஹலோ அப்பா சொல்லுங்கோ”
“ஆங் மிருதுளா எல்லாரும் என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”
“நான் சமையல் வேலையில் இருக்கேன். நவீன் சக்தி ஆஃபீஸ் அன்ட் ஸ்கூல் போயிருகக்கா. ப்ரவீன் அன்ட் ஃபேமிலி கெஸ்ட் ரூமிலிருக்கா”
“எங்கேயும் வெளில எல்லாம் போலயோ?”
“ஓ!! வண்டி வச்சுண்டு மைசூர் ஃபுல்லா சுத்திப் பார்த்துட்டு வந்தாச்சு”
“அப்படியா. சரி அங்க நிறைய மால்ஸ் இருக்கே! சும்மா ஆத்துலேயே உட்கார்ந்திருக்காம ஏதாவது ஒரு மாலுக்கு போயிட்டு வாங்கோளேன்”
“நேத்து அதுக்கும் போயிட்டு வந்துட்டோம்ப்பா.”
“அதுனால என்ன இன்னைக்கு வேற மாலுக்கு போயிட்டு வரவேண்டியது தானே”
“நவீன் ஆஃபீஸ் போயிருக்காரே”
“நவீன இல்லாட்டி என்ன ப்ரவீன் தான் அவன் வண்டியில தானே வந்திருக்கான்! அவன்ட்ட சொன்னா உங்க எல்லாரையும் கூட்டிண்டு போகப் போறான்.”
“இல்லப்பா சக்திக்கு இன்னைக்கு ஹாஃப் டே தான் அதுனால அவ மூணு மணிக்கு வந்துடுவா. நாங்க இப்போ கிளம்பிப் போனா கூட வர்றதுக்கு எப்படியும் ஆறு மணி ஆகிடும். ஏன்னா ட்ராஃபிக் அப்படி. ஸோ சக்தி ஸ்கூலேந்து வரும்போது நான் வீட்டில் இருக்கணும்.”
“சரி சக்தி வந்துட்டு எல்லாருமா சாயந்தரமா போயிட்டு டின்னர் எல்லாம் வெளில சாப்டுட்டு வாங்கோ”
என்று விடாப்பிடியாக ப்ரவீன் துளசிக்கு பரிந்துப் பேசும் ஈஸ்வரனின் பேச்சு மிருதுளாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அதற்கு மேல் பேச்சைத் தொடராமலிருக்க சட்டென
“அது எப்படிப் பா முடியும். அவா தான் இன்னைக்கு லஞ்ச் சாப்டுட்டு சித்தப்பா ஆத்துக்கு வர்றதா ஃபோன் போட்டுச் சொல்லிடானே ப்ரவீன். அப்புறம் எப்படி சாயந்தரமா போறது?”
“அது அவன் மறுபடியும் ஃபோன் போட்டு இன்னொரு நாள் வரதா சொன்னா போச்சு. இது என்ன பெரிய விஷயமா?”
“ஆனா அப்பா அவா எல்லாம் பேக் பண்ணி கிளம்ப ரெடி ஆயாச்சு. அதுவுமில்லாம சக்திக்கு மிட்டேர்ம் ஆரம்பிக்கப் போறது ஸோ அவளால வெளில எல்லாம் வர முடியாது. இந்த வருஷம் டென்த் இல்லையா. பார்ப்போம் அடுத்தத் தடவை ப்ரவீனும் துளசியும் வந்தா நம்மாத்துல பத்து நாள் தங்கிட்டுப் போட்டுமே யார் வேண்டாம்னா. இந்த தடவை அவாளுக்கும் ஏதோ வேலைப் போலிருக்கு அதுதான் ஜஸ்ட் டூ டேஸ் ப்ளான் பண்ணி வந்திருக்கா. சரிப்பா குக்கர் விசில் அடிச்சாச்சு நான் போய் ஆஃப் பண்ணிட்டு என் வேலையைப் பார்க்கணும் அவா மத்தியானம் கிளம்பறா இல்லையா! வச்சிடட்டுமா?”
என்று ஈஸ்வரன் குடும்பத்தில் மருமகளாக பதினாறு ஆண்டுகள் இருந்ததில் மிருதுளா கற்றுக் கொண்ட வித்தையை அவர்களிடமே காட்ட அதற்கு மேல் பேச முடியாது போய் ஃபோனை வைத்தார் ஈஸ்வரன். இங்கே ஃபோனை வைத்ததும் ப்ரவீன் ஃபோன் அடித்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றுக் கொண்டிருக்கையில் மிருதுளா ப்ரவீனிடம்
“யாரு ப்ரவீன் அப்பாவா?”
“ஆங் …ஆமாம்.”
“பேசிட்டு வா எல்லாருமா சாப்பிடலாம் அப்பத் தான் நீங்க கிளம்ப சரியா இருக்கும்”
“ம்….ம்….”
என்று கூறிவிட்டு ஃபோனை அட்டென்ட் செய்தான் அங்கிருந்து ஈஸ்வரன்
“டேய் ப்ரவீன் நீ ஏன்டா இன்னைக்கே கிளம்பறதா சொன்ன? உன் மன்னி அதையே கெட்டியா பிடிச்சுண்டுட்டா…என்னால அதுக்கு மேல எதுவும் பேச முடியலை”
“சரி வை ஃபோனை”
என்று சலித்துக் கொண்டு ஃபோனை வைத்து விட்டு அவர்கள் ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். மிருதுளா ஏதும் அறியாததுப் போல சமைத்ததை டைனிங் டேபிளில் வைத்து விட்டுச் சென்று சோஃபாவில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மத்தியம் மணி ஒன்றரை ஆனது ஆனாலும் அவர்கள் அறை கதவு திறக்கவில்லை. மிருதுளாவுக்கோ நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. ஒன்னேமுக்காலுக்கு கதவைத் திறந்து வெளியே பையுடன் வந்தான் ப்ரவீன். அவன் பின்னாலேயே கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு இன்னொரு பையுடன் வந்தாள் துளசி. அவர்களைப் பார்த்ததும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்த மிருதுளா அதைப் பற்றி ஏதும் கேட்காமல்
“அப்பாடா வந்துட்டேங்களா. வாங்கோ சாப்பிடலாம். எனக்கு நல்ல பசி. எப்போடா நீங்க வருவேங்கள்னு காத்துண்டே இருந்தேன்”
என்று அவர்களை அமரவைத்து சாப்பாடு பரிமாறினாள். அவர்களும் உர்ரென்று இருந்தனர். அதை கண்டுக் கொள்ளாத மிருதுளா ஒரு தட்டில் சாதத்தையும் குழம்பையும், பொறியலையும் போட்டுக் கொண்டு அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் துளசிக்கு தாம்பூலம் கொடுத்து
“அடுத்தத் தடவை வரும் போது ஒரு பத்து நாள் இருந்துட்டுப் போறா மாதிரி வாங்கோ… இப்படி ரெண்டு நாளுக்கெல்லாம் வரப்டாது புரிஞ்சுதா”
என்ற மிருதுளா சொன்னதும் துளசி ப்ரவீனைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள். அவன் கிடுகிடுவென பெட்டிப் பைகளை எல்லாம் அவர்கள் காரில் ஏற்றினான்.
மிருதுளா அப்படி சொல்லியும் அவர்கள் உண்மையை சொல்லாது அவர்களின் ஈகோவால் கிளம்பினர். காரில் ஏறியதும் ப்ரவீன்
“அண்ணா, சக்திக் கிட்ட சொல்லிடுங்கோ”
“ஆங் சொல்லிடறேன் ப்ரவீன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ. சேஃபா டிரைவ் பண்ணு”
“ஓகே. பை நாங்க போயிட்டு வரோம்”
“பை ப்ரவீன், பை துளசி, பை பை குட்டிஸ்”
“ஓகே மன்னி பை”
என்று துளசி சொல்ல குழந்தைகள் கையசைத்து பை சொல்ல ப்ரவீன் கார் ஸ்டார்ட் செய்து அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா வீட்டிற்குள் வந்து எல்லாத்தையும் ஒதுக்கி வைத்தாள். அவர்கள் தங்கியிருந்த அறையின் மெத்தையில் விரிக்கப்பட்டிருந்த பெட்ஷீட், தலையணை உறைகள் என அனைத்தையும் மாற்றினாள். எல்லா வேலைகளையும் முடித்து அமர்வதற்குள் சக்தி வந்தாள். அவளுக்கு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள். மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் காலையில் நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்டதும் நவீன்
“ஏன் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாளோ அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம். அவா யார்கிட்டேயுமே ஸ்ட்ரைட்ஃபார்வேர்டட்னஸ் சுத்தமா இல்லை. எல்லாத்தையும் ஒரு சூழ்ச்சியா செஞ்சே பழக்கப்படுத்திண்டுட்டா”
“இதுல எனக்கென்ன ஆச்சர்யம்னா உங்க அப்பா ப்ரவீனுக்காகவும் துளசிக்காகவும் ….அவாளை இங்க தங்க வைக்கறதுக்கு என் கிட்ட எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? அதுவும் அவரோட கெத்தை விட்டுக் கொடுக்காம!!! அப்பப்பா!! ஏன் ப்ரவீனுக்கும் துளசிக்கும் வாயில்லையா? இல்ல ரெண்டு பேரும் சின்னப் பாப்பாக்களா? காலையில் அவன் உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசி ….பேசி என்ன…மிரட்டி வச்சதும் உடனே எனக்கு கால் வந்தது…..என்கிட்ட பேசி வச்சதும் உடனே அவனுக்கு கால்…என்னனு சொல்ல?”
“சரி அவாளை எல்லாம் விட்டுத்தள்ளு மிருது. நான் இன்னைக்கு ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன்.”
“அப்படியா! அது என்ன குட் நியூஸ் நவீ? அதைச் சொல்லுங்கோ.”
“கெஸ் வாட்?”
“என்ன ப்ரமோஷனா? இல்ல நியூ ஜாப் ஆஃபர் வந்திருக்கா? இல்ல இன்க்கிரிமென்ட் ஏதாவதா? இல்ல மறுபடியும் ஏதாவது ஃபாரின் ட்ரிப்பா? என்னனு சொல்லுங்கோளேன்…”
“ஆமாம் அப்பா என்ன அந்த குட் நியூஸ்? நோ மோர் சஸ்பென்ஸ்.. ப்ளீஸ் சொல்லுப்பா”
தொடரும்…….
தங்கள் காரிலேயே திருமண மண்டபம் சென்றடைந்தனர் நவீனும் மிருதுளாவும். மாலை டிபன் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளை அழைப்பில் கலந்துக் கொள்ள மண்டபத்தின் முதல் தளத்திற்கு சென்றனர். அங்கே அனைத்து சொந்த பந்தங்களும் அமர்ந்திருந்தனர். மிருதுளாவின் கண்கள் தன் குடும்பத்தைத் தேடியது. ஆனால் ப்ரவீன் துளசி ஒரு மூலையிலும், பவின் பவித்ரா ஒரு மூலையிலும், கஜேஸ்வரி வழக்கம் போல அங்குமிங்குமாக ஏதோ வேலை செய்வது போல பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தாள். மூத்த தம்பதியர் ஓர் இடத்திலுமாக அமர்ந்திருந்தனர். இதில் யார் அருகே சென்று அமர்வது என்ற குழப்பத்தில் மெல்ல நடந்துச் சென்றாள். நவீன் தன் பெரியப்பா அருகில் அமர்ந்து பேச்சில் மும்முரமானான். துளசி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து மிருதுளாவோடு வந்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்து
“என்ன சக்தி எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போறது?”
“ஆங் நல்லா இருக்கேன் சித்தி. நல்லா படிக்கறேன்”
“மன்னி எப்படி இருக்கேங்கள்?”
“நல்லா இருக்கேன் துளசி. நீ எப்படி இருக்க? குழந்தைகள் எங்கே?”
“அவா எங்கேயாவது விளையாடிண்டு இருப்பா.”
“ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருக்கேங்கள்?”
“அதெல்லாம் அப்படித்தான் மன்னி.”
என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா வந்தாள்
“ஹாய் மிருதுளா மன்னி எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நல்லா இருக்கேன். நீ பவின் குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்.”
“மன்னி நீங்க உங்க புது வீட்டுக்கு மாறிட்டேங்களா?”
“இல்ல துளசி. வேலை நடக்கறது. இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல ஷிஃப்ட் பண்ணிடுவோம்.”
“சரி மன்னி நீங்க பேசிண்டிருங்கோ. நான் வரேன். அப்புறமா பேசுவோம்”
“சரி பவித்ரா அப்புறம் பார்ப்போம். வா துளசி உட்காரு”
“இல்ல மன்னி நானும் போய் என் புள்ளகள தேடி டிபன் சாப்பிட வைக்கணும். நானும் வரேன்”
“ஓகே போயிட்டு வா”
என்று கூறிவிட்டு விசேஷத்துக்கு வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் நலம் வகசாரித்தப் பின் பெரியவர்களுக்காக சிறியவர் இறங்கி செல்வதில் தவறில்லை என்றெண்ணி ஈஸ்வரன் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று நலம் விசாரிக்கும் போது
“அப்பா எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நல்லா இருக்கேன் மா. வா வா உட்காரு. எப்போ வந்தேங்கள்? நவீன் எங்கே?”
“அதோ அங்க உட்கார்ந்துண்டு பெரியப்பாவோட பேசிண்டிருக்கார்.”
“ஓ!! சரி சரி சரி. என்ன நீங்க உங்க புது வீட்டுக்கு குடிப் போயாச்சா?”
“இல்லப்பா. இரண்டு வாரம் கழிச்சு போவோம்.”
“உனக்கு தெரிஞ்சிருக்குமே.!”
“என்னதுப்பா?”
“எல்லாம் கவின் கஜேஸ்வரி வீடு விஷயம் தான்”
“ஆங் கஜேஸ்வரி ஃபோன் போட்டு சொன்னாப்பா. நீங்களும் அவளுமா நாளைக்கு போறேங்களாமே?”
“ஆமாம் ஆமாம்!! உங்க மைசூர் வீட்டைப் பார்த்துட்டு வந்ததுலேந்து பேயாட்டம் ஆடிட்டாமா கஜேஸ்வரி.”
என்று ஈஸ்வரன் முதல் முறையாக மனம் விட்டு பேச ஆரம்பித்தது மிருதுளாவுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தாலும் அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது ஏனெனில் அவர்கள் கஜேஸ்வரி பிடியிலிருப்பவர்களாயிற்றே!! பவித்ராவிடம் வேண்டுமென்றே தன்னைப் பற்றி குற்றம் சொல்லச் சொல்லி மாமியாரிடமிருந்து போட்டு வாங்க செய்தவளாயிற்றே! அதே போல் இம்முறை மாமனாரை வைத்து ஏதோ செய்ய நினைக்கிறாளோ எதுவானாலும் தான் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே
“என்ன சொல்லறேங்கள்?”
“அட அமாம்மா…அவளால இப்போ என் மச்சினன் பிச்சுமணியோட எனக்கு மனஸ்தாபம் ஆகிடுத்து. மொதல்ல நானும் பர்வதமும் அவ கூட போறதாயிருந்தது. அப்புறமா சரி பர்வதமாவது அவ தம்பிப் பொண்ணுக் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணட்டும்னு இருக்கச் சொல்லிட்டேன்…. நான் கூட சொன்னேன் ஏன் இப்போ அகலக்கால் வைக்கணும்னு. மைசூர்ல வாங்கின வீடே இன்னும் கைக்கு வந்தபாடில்லை..இதுல நாங்க இப்போ இருக்குற வீடும் ஏதோ ரோட்டு மேல வர்றதுன்னும் அதை இடிக்கணும்னும், கோவில் நிலம்னும் ஏதேதோ சொல்லறா…ஸோ இதுவும் பிரச்சினையில இருக்கு…இந்த நேரத்துல எதுக்கு இன்னொரு வீடுன்னு!! ஆனா கேட்கலையே!! என் வேலையை மட்டும் பார்த்துண்டு இருக்கச் சொல்லிட்டா”
“கவின் ஒண்ணும் சொல்லலையா?”
“அவனும் வேண்டாம்னு தான் சொன்னான். இவ விடலையே. அவளோட ஃப்ரெண்ட்ஸ், அவனோட ஃப்ரெண்ட்ஸ் னு எல்லார்கிட்டயும் ஏதேதோ பேசி அவாளை எல்லாம் கவின் கிட்ட பேச வச்சு வாங்க வச்சுட்டாளே!!! அவனும் அவளோட தொல்லை தாங்காம வாங்கிட்டான். ஆனா ரிஜிஸ்ட்ரேஷன் வரை லீவு எடுக்க முடியாதுனுட்டு புறப்பட்டு குவைத் போயிட்டான்.”
“சரி…ஏன் கஜேஸ்வரி அந்த வீட்டை வாங்க அவ்வளவு பிடிவாதம் பிடிச்சா?”
“ம்…உங்களுக்கு முன்னாடி மைசூர்ல வீடு வாங்கினாளாம் ஆனா நீங்க அதுக்கு அப்புறமா வாங்கி கிரகப்பிரவேசமும் செஞ்சு குடியும் போக போறேளாம்”
“அதுக்கு!”
“அவளும் கிரகப்பிரவேசம் பண்ணணுமாம். அதுவும் இந்த வருஷமே பண்ணணுமாம். அதுனால எண்பது சதவிகிதம் முடிஞ்ச வீட்டை வாங்கிருக்கா”
“ஓ!!! அப்படியா.”
என்று மிருதுளா வெளியே கூறினாலும் மனதிற்குள்
“ஏன் இப்போ உங்க மாட்டுப்பொண்ணுட்ட சொல்ல வேண்டியது தான்…. இங்க வந்தா நான் வச்சது தான் சட்டம்னு..”
என்று நினைத்ததை கேட்க வாய் வரை வந்தது…ஆனால் மீண்டும் அவள் மனது அவளிடம்
“அவரே வேதனையில பொலம்பறாரு…இப்போப் போய் ச்சே…கேட்கக் கூடாது. அது தப்பு”
என சொன்னதும் அப்படியே சொல்ல திறந்த வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அப்போது ஈஸ்வரன்
“என்ன சொன்ன?”
“ஒண்ணும் சொல்லலையே!!”
“இல்லையே ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!”
“இல்லைப்பா …சரி அவ யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னாலே நீங்க பாட்டுக்கு இப்படி பொலம்பறேங்கள்?”
“ஆமாம்!! அவளுக்கு வேற வேலையில்லை…அவ கிடக்கா….அதுவுமில்லாம இங்க நாம மட்டும் தானே உட்கார்ந்துண்டிருக்கோம் ஸோ நோ ப்ராப்ளம்”
“அப்போ நீங்க யார்கிட்டேயும் உண்மையை சொல்லலை”
“இல்லை. எதுக்கு நமக்கு வம்புனுட்டு நான் பாட்டுக்கு இருக்கேன்”
இதைக் கேட்டதும் மிருதுளா மெல்ல தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். பின்னாலிருந்து நவீன் அழைத்தான். உடனே தன் மாமனாரிடம்
“சரிப்பா நவீன் கூப்பிடறார் நான் போயிட்டு வரேன். நாங்க டின்னர் ஆனதும் ஹேட்டலுக்கு போயிடுவோம். நாளைக்குப் பார்ப்போம்”
“நாளைக்கு நான் தான் கஜேஸ்வரிக்கூட போகணுமே!!!”
“சாயந்தரம் நலங்குக்கு வந்திடுவேங்கள் இல்லையா”
“ஆங் வந்திடுவோம்னு நினைக்கறேன்…தெரியாதுமா”
“சரிப்பா பார்ப்போம்”
என்று கூறிவிட்டு நவீனிடம் சென்றாள். அங்கே நவீன் சில தூரத்து சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தான். பின் அவன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் சக்தியும் மிருதுளாவும் அவன் அருகே அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த கஜேஸ்வரி நேராக மிருதுளாவிடம் வந்து
“ஹலோ மன்னி எப்படி இருக்கேங்கள்? எப்போ வந்தேங்கள்?”
“நீ எப்பவும் போல பிஸியா அங்கேயும் இங்கேயுமாக மும்முரமா வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாயே அப்போதே வந்துட்டோம்.”
“ஆமாம் மன்னி அம்பிகா மாமி என்னைப் பிடிச்சுண்டுட்டா …என்னப் பண்ண? சரி மன்னி நான் இப்போ சாப்டுட்டு ஆத்துக்கு கிளம்பிடுவேன்..ஏன்னா நாளைக்கு விடியற் காலையில கிளம்பணும். நாங்க வாங்கப் போற அப்பார்ட்மெண்ட்… உங்க வீடு மாதிரி சிட்டி ஒதுக்குப் பறமா எல்லாம் இல்லை மதுரை சிட்டி சென்டர்ல இருக்கு. என் ஃப்ரெண்டும் அதுல வாங்கியிருக்கா.”
“யாரு அந்த மைசூர் வீட்டை வாங்கிட்டு ஆறே மாசத்துல கைமாத்திவிட்டவளா?”
“ச்சே ச்சே!! அவ இல்ல மன்னி இவ வேற ஒரு ஃப்ரெண்டு. அநேகமா இந்த வருஷத்துலேயே நாங்க ரெண்டு கிரகப்பிரவேசம் வைப்போம்னு நினைக்கறேன்”
“ரெண்டா?”
“அட ஆமாம் மன்னி ஒண்ணு மைசுர்ல இன்னொன்னு மதுரையில. நாங்க எல்லாம் ரெண்டு வீட்டுக்கும் ஒரே நேரத்துல கிரகப்பிரவேசம் பண்ணுவோம் மன்னி”
“ஆமாம் ஆமாம் செஞ்சாலும் ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமில்லமா”
“சரி மன்னி வர்றேளா சாப்பிட?”
“இதோ நவீ பேசிட்டு வந்தா சாப்பிட கிளம்பணும். ஆமாம் ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருந்தேங்கள்? துளசிய கேட்டா அது அப்படித் தான்னு சொல்லறா…நீ சொல்லேன்”
“அவளைப் பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்கோ மன்னி. எனக்கு அவளைப் பார்த்தாளே பத்திண்டு வரும். அவளும் அவ பேச்சும். வேலைக்கு போறாளாம் வேலைக்கு!! மகாராணி….நீங்களும் தானே வேலைக்கு போனேங்கள் ….ஆனாலும் இவ ஆடுற ஆட்டம் ரொம்பத் தான்…அதெல்லாம் நீங்க வந்துப் பார்க்கணும் அப்போ தான் தெரியும்…சரி மன்னி நான் வரேன்”
என்று மிருதுளாவிடம் கூறிவிட்டு ஈஸ்வரனிடம்
“என்ன உட்கார்ந்துண்டே இருக்கேங்கள் மாமா? ம்…எழுந்து சாப்பிட்டுட்டு வாங்கோ ஆத்துக்கு போவோம். காலையில சீக்கிரம் கிளம்பணும் இல்லையா. ம்..ம்..வாங்கோ”
என்று கஜேஸ்வரி கூறியதும் பொட்டிப்பாம்பாக அவள் பின்னால் ஈஸ்வரன் சென்றதைப் பார்த்த மிருதுளாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அன்றிரவு உணவருந்தியதும் நவீனும் மிருதுளாவும் அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். மிருதுளா ஈஸ்வரன் சொன்னதையும் கஜேஸ்வரியுடனும் துளசியுடனும் மற்ற சொந்தங்களுடனுமான பேச்சு வார்த்தைகளை நவீனுடன் பகிர்ந்தாள். அனைத்தையும் கேட்ட நவீன்
“இருக்கட்டும் இருக்கட்டும். ஒரு இடத்துல ரொம்ப ஆடினா இன்னொரு இடத்துல அடங்கித் தான் போகணும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்…இப்போ கேட்டும் தெரிஞ்சுண்டுட்டேன். பேசாம வந்து படு மிருது.”
என்று சற்று நேரம் நடந்தவைகளைப் பற்றி பேசி விட்டு உறங்கினார்கள் மூவரும்.
மறுநாள் விடியற் காலையில் எழுந்து கல்யாணத்துக்கு ரெடியாகிச் சென்றனர். மண்டபம் சென்றதும் அனைவருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மணமக்களை வாழ்த்திப் பரிசளித்து சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் ப்ரவீன் துளசியும் சேர்ந்துச் சென்றனர். அப்போது நவீன்
“என்னடா ப்ரவீன் எப்படி இருக்க? எங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு ஏன் நீ வரலை?”
“ஆங் நல்லா இருக்கேன். அது துளசியோட ஆஃபீஸ் ல ஆடிட்டிங் இருந்தது அதுதான் லீவு கிடைக்கலை”
“ஜூன் மாசத்துல ஆடிட்டிங்கா சரி சரி நம்பிட்டேன் நம்பிட்டேன்”
“விடுங்கோளேன் நவீ….அவா வரலைன்னா அதுக்கு ஆயிரம் காரணமிருக்கும் அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லவா முடியும். நான் துளசி கிட்ட கேட்டேனா ஏன் வரலைன்னுட்டு….விடுவேங்களா…. நீ போப்பா ப்ரவீன் துளசி கிட்ட உட்கார்ந்து சாப்பிடு.”
என்று அவர்கள் வராததை தான் கேட்கக் கூட விரும்பவில்லை என்பதை நாசுக்காக உணர்த்தினாள் மிருதுளா. சாப்பிட்டதும் மண்டபத்தின் நடுவில் அமர்ந்து சித்தி சித்தப்பாக்கள், பெரியம்மா, பெரியப்பாக்களுடன் பேசிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். பர்வதம் துளசியின் மகளையும் மகனையும் பார்த்துக் கொள்வதிலேயே முழுநேரமும் ஓரிடத்தில் உட்கார்ந்து பேசக்கூட முடியாது இருந்தாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு நவீன் முன் தினம் இரவு சொன்னது ஞாபகம் வந்தது. பிச்சுமணி மாமாவும் அம்பிகா மாமியும் சற்று ஃப்ரீ ஆனார்கள் அப்போது நவீனும் மிருதுளாவும் மாமாவிடமும் மாமியிடமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் பர்வதம் ஏதோ சாப்பாட்டுப் பொருளை எடுத்து வந்து பிச்சுமணியிடம் நீட்டி சாப்பிடச்சொன்னாள் அதற்கு பிச்சுமணி பர்வதத்திடம் ஏதும் சொல்லாது வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதைப் பார்த்த மிருதுளா அதிர்ந்துப் போனாள். அவர்கள் பேசிவிட்டுச் சென்றதும் நவீனிடம்
“நீங்க உங்க மாமாவை கவனிச்சேங்களா நவீ!”
“ஏன் கேட்குற மிருது”
“மாமா உங்க அம்மாட்ட முகம் கொடுத்துப் பேசவேயில்லை”
“ஆங் ஆங் அதையா…கவனிச்சேன் கவனிச்சேன்”
“எப்படிப்பா ஆருயிர் தம்பி ஆச்சே அவர். அவா அக்காவை எப்படி இப்படின்னு எனக்கு ஷாக் ஆயிடுத்து”
“அவர் வீட்டுல ஆல்ரெடி அந்த லேடி பிரச்சினை பண்ணிருக்கா…இப்போ இந்ல கல்யாணத்துல என்னத்தைப் பண்ணிணாலோ என்னமோ…அதுதான் மாமா அப்படி பிஹேவ் பண்ணிருக்கார்”
“அது என்ன அந்த லேடின்னு!!!”
“சரிமா உன் மாமியார்…போதுமா”
என்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியாது அமர்ந்திருந்தனர். அடுத்து நலங்கு ஆரம்பிக்க பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக சொல்லி அனைவரையும் அதற்கு தயாராகச் சொன்னார் பிச்சுமணி மாமா. உடனே எல்லோரும் எழுந்துச் சென்று கிளம்பினார்கள். நவீனும் மிருதுளாவும் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். அதை கவனித்த அம்பிகா மாமி மிருதுளாவிடம் வந்து
“ஏய் நவீன் மிருது ஏன் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கேங்கள்? போய் ரெடியாகுங்கோ”
“அதுதான் ரெடியா இருக்கோமே மாமி”
“என்னடி விளையாடறையா? டிரெஸ் மாத்தலையா?”
“இல்ல மாமி இப்படியே நலங்கு அட்டெண்ட பண்ணிட்டு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்”
“நீங்க ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோஷம் பா…நல்ல வேளை உனக்கு நாத்தனார்கள் இல்லை மிருது.…தப்பிச்ச…எனக்கு ஆறு பேரு நினைச்சுப் பாரு. நேத்தேலேந்து ஒரே பிரச்சினை சண்டை தான் போ…எப்படியாவது என் பொண்ணுக் கல்யாணம் நல்லபடியா நடந்தா போறும்னு ஆயிடுத்துமா”
“விடுங்கோ விடுங்கோ மாமி…எல்லாம் நல்லதுக்கே.”
“இப்படியே விட்டுக் கொடுத்துண்டே இருந்ததால தான் இவ்வளவு ஆட்டம் போட்டா தெரியுமா….அதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஆத்துக்கு வரும்போது சொல்லறேன். சரி நான் வரேன் மிருது”
“சரி மாமி போயிட்டு ரெடியாகி நலங்குக்கு வாங்கோ. எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்கோ”
என்று பேசி தன் மனக்குமுறலை மிருதுளாவிடம் பகிர்ந்துக் கொண்டு சென்றாள் அம்பிகா. அதை கவனித்த நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது இது….நேத்து உன் மாமானார் உன் கிட்டப் புலம்பினார்…இன்னைக்கு மாமி புலம்பிட்டுப் போறா….இவாளுக்கெல்லாம் என்ன ஆச்சு?”
“எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுப்பா நவீ…என்னைக்காவது யார்கிட்டயாவது சொல்லத்தான் தோணும். அது யாரா இருந்தாலும்…”
“ஆனா ஒண்ணு கவனிச்சயா?”
“என்ன?”
“மாமி புலம்பிட்டுப் போறா ஆனா இந்த சித்திகளும் பெரியம்மாக்களும் ஒண்ணுமே நடக்காதது போலவே இருக்காளே அது எப்படி?”
“ம்…படுத்தறவா அப்படித் தான் நடந்துக்குவா!! சாமர்த்தியம் போதாம படறவா தான் புலம்புவா. ஏன் நம்ம கூட்டமும் அப்படி தானே! செய்றதை எல்லாம் செவ்வெனே செய்திட்டு அதுக்கும் அவாளுக்கும் சம்மந்தமே இல்லாததுப் போல நடந்துண்டதில்லையா? இல்ல நடக்கறதில்லையா?”
“ஆமாம் ஆமாம்!!! சரி சரி எல்லாரும் நலங்குக்கு வர ஆரம்பிச்சிட்டா.. வா நாமளும் அடெண்ட் பண்ணிட்டு ஒரு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். சரியா”
“ஓகே டன்.”
நலங்கு தொடங்கிய சற்று நேரத்தில் கஜேஸ்வரியும் ஈஸ்வரனும் மண்டபத்துக்கு வந்தனர். மிருதுளாவும் துளசியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கஜேஸ்வரி நேராக மிருதுளாவின் வலதுபுறம் அமரந்து
“என்ன மன்னி எல்லாரும் எங்களைக் கேட்டாளா? நீங்க நான் சொன்ன மாதிரி தானே சொன்னேங்கள்?”
“யாருமே கேட்கலை கஜேஸ்வரி.”
“என்னது யாருமே கேட்கலையா?”
“ஆமாம். கடவுள் எங்களை பொய் சொல்ல வைக்கக்கூடாது என்பதாலோ என்னவோ எங்க கிட்ட உங்களைப் பத்தி யாருமே விசாரிக்கலைமா”
என்று மிருதுளா சொன்னதும் ஏதோ ப்ளானிங்கில் சொதப்பலாகிவிட்டதோ என்ற முகபாவனையுடன்
“சரி மன்னி நான் போய் டிபன் சாப்படுட்டு வந்திடறேன். சரி பசி”
“ம்…ஓகே”
என்றதும் கஜேஸ்வரி எழுந்து டைனிங் ஹாலுக்குச் சென்றாள். அப்போது துளசி மிருதுளாவிடம்
“மன்னி நீங்க ரிஜிஸ்ட்ரேஷன் பத்தி கேப்பேங்கள்னு தான் தயங்கி நின்னா கஜேஸ்வரி”
“அப்படியா! எனக்கு தோணலையே!! அதுவுமில்லாம நான் கேட்கப் போய் ..என்னால தான் எல்லாருக்கும் தெரியவந்ததுனு பிரச்சினையாகறதுக்கா….வேண்டாமா வேண்டவே வேண்டாம். நிறையப் பட்டாச்சு”
கீழே சாப்பிடச் சென்ற கஜேஸ்வரி மீண்டும் மேலே வந்தாள்
“என்ன கஜேஸ்வரி அதுக்குள்ள சாப்டுட்டயா?”
“ஆங் ஆச்சு மன்னி. நான் தான் சொன்னேனே சரிப் பசி. டிபன் போன வேகம் தெரியலை.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா மருமகள் வந்து பேச்சில் கலந்துக் கொண்டாள். அப்போது சம்மந்தமே இல்லாமல் திடீரென கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“மன்னி நீங்க ஏன் டையட்டிங் பண்ணக்கூடாது”
“ஏன் பண்ணணும்?”
“இல்ல கொஞ்சம் உடம்பு குறையுமேனுட்டு சொன்னேன்”
என்று கஜேஸ்வரி கூறியதும் மிருதுளாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு சிரித்தப்படியே
“அதை நவீன் சொல்லட்டும். நான் செய்கிறேன். அவருக்கு நான் அழகாக தெரியும் பட்சத்தில் நான் ஏன் குறைக்கணும் ….அதுவுமில்லாம நான் உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி குச்சி மாதிரி இருந்துட்டு அதுக்கு அப்புறம் புஸ்ஸுனு ஆகலையே….எங்க கல்யாணத்துல எப்படி இருந்தேனோ அப்படியே தானே இருக்கேன்….என்ன கஜேஸ்வரி அப்படிதானே…துளசிக்குத் தெரியாது ஆனா நீ தான் எங்க கல்யாணத்துக்கும் வந்திருந்தயே…உனக்கு அது நல்லாவே தெரியுமே இல்லையா”
“ம்….ஆமாம் மன்னி… சரி இருங்கோ அந்த மாமிய விசாரிச்சுட்டு வந்துடறேன்”
என ஏதோ திட்டமிட்டு எதுவும் நடக்காமல் போனதில் குழம்பி ஏதாவது வம்பு வளர்க்க எண்ணி அதிலும் ஏமாற்றத்தையே சந்தித்து செய்வதறியாது அங்கிருந்து சென்றாள் கஜேஸ்வரி.
நலங்கு நல்லப்படியாக நடந்தேறியது. அன்றிரவு உணவை சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
இந்த விசேஷத்தில் மிருதுளாவுக்கு பர்வதப் பஞ்ச் ஏதும் இல்லாமல் போனதற்கு துளசியின் இரண்டு குழந்தைகளே காரணமெனலாம் …..அதே நேரம் தனது அந்த உத்தமமான வேலை தனது மருமகள் கஜேஸ்வரி எடுத்துக் கொண்டதால் விலகியிருக்கலாம்….என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கஜேஸ்வரியும் ஏதேதோ ப்ளான் செய்தும் எதுவும் மிருதுளாவிடம் பலிக்கவில்லை. கடவுள் இருக்காரு கஜேஸு என்பதே உங்கள் மைன்ட் வாயிஸாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடரும்…….
புது வீட்டில் நன்றாக உறங்கி விடியற் காலையில் எழுந்து மூவரும் காரில் ஏறி அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆகி காபி குடித்தனர். அன்று சனிக்கிழமை என்பதால் நவீனுக்கு ஆஃபீஸ் இல்லை. ஆனால் அனைவரும் வந்து தங்கியிருந்ததில் வீடு அலங்கோலமாக கிடந்தது. காலை டிபனை சாப்பிட்டதும் அனைத்தையும் சுத்தம் செய்தனர் நவீனும், மிருதுளாவும், சக்தியும். அதன் பின் சற்று நேரம் டிவி பார்த்தனர். மத்திய சாப்பாட்டிற்கு வெளியே சென்று வந்தனர். வந்ததும் நன்றாக உறங்கினர். இப்படியே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரு தினமும் நன்றாக ஓய்வெடுத்தனர். இரண்டு நாள் ஓய்வு திங்கட்கிழமை காலை முதல் அவரவர் வேலைகளில் மும்முரமாக டானிக்காக இருந்தது.
அப்போது ஒரு நாள் குஜராத்திலிருந்து நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா நவீனுக்கும் மிருதுளாவுக்கு வாழ்த்து தெரிவிக்க கால் செய்தார். அதை நவீன் அடெண்ட் செய்தான். அவர் வழக்கமான வாழ்த்து தெரிவித்து, வீட்டைப் பற்றிய விசாரிப்புகளை கேட்டு மெல்ல
“நான் ஃபோட்டோ எல்லாம் பார்த்தேன். பரவாயில்லையே நிறைய பேர் வந்திருந்தா போல”
“ஆமாம் வந்திருந்தா அதை ஏன் இப்படி கேட்கறேங்கள் சித்தப்பா?”
“இல்லடா நவீன்…நாங்க வரலாம்னு இருந்தோம். உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசினோம். அப்போ உங்க அப்பாவும் அம்மாவும் தேவையில்லாம அலையாதீங்கோ அந்த விசேஷத்துக்கு யாருமே வரப்போறதில்லை நாங்களும் மிருதுளாவோட அப்பா அம்மாவும் மட்டும் தான் இருக்கப்போறோம்னும், உன் தம்பிகள் கூட அடெண்ட் பண்ணப் போறதில்லைன்னும் சொன்னாளா…அதுதான் சரி நீ உங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சு பண்ணற ப்ளான்ல இருக்கயோன்னு தான் நாங்க வரலை”
“ஏன் சித்தப்பா அப்படி எங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சுப் பண்ணறதா இருந்தா எதுக்கு உங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி இன்வைட் பண்ணிருப்பேனாம்?”
“டேய் நிஜமாடா உன் அப்பா அம்மா தான் கடைசி நிமிஷத்துல அவாளை மட்டும் வச்சுதான் நீங்க பண்ணப் போறதா இருக்கேங்கள்னு சொன்னாப்பா. நாங்க என்ன பர்வதம் அவளோட ரிலேஷன்ஸ் எல்லார்கிட்டேயும் அப்படிதான் சொல்லிருக்கா அதுனால தான் நாங்களும் வரலை. சாரி நவீன் நாங்க உன் கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டிருக்கணும் போல!! இனி உன்கிட்டயே எதுவானாலும் கேட்டுக்கறோம். சரி வச்சுடவா”
“அதுதான் நல்லது சித்தப்பா. இனி எங்க சம்மந்தமான எல்லா விஷயத்துக்கும் தயவுசெய்து எங்கிட்டேயே கேளுங்கோ ப்ளீஸ். ஓகே பை”
என்று ஃபோனை வைத்ததும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது மிருதுளா
“ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு தினுசா ஏதாவது பண்ணறாளே!! என்னப் பண்ண?”
“ஒண்ணும் பண்ண முடியாது மிருது. தன்னாலும் திருந்தாது, சொன்னாலும் கேட்காது என்ன பண்ண? இப்ப இதைக் கேட்க போன பெரிய சண்டையாக்கிடுவா. விடு இதுவும் கடந்து போகும். இவாகிட்டேந்து விலகிடுவோம்னு சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கற. இது மாதிரி சொந்தங்களை வாரி அணைச்சுக்காம தூரத்துல தள்ளி வைக்கிறதுதான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது தெரிஞ்சுக்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உனக்கு இது புரியும்”
“வேண்டாம்னு வைக்க ஒரு நிமிஷம் போதும் நவீ. ஆனா அப்புறம் வேணும்னாலும் எப்படி ஒருவரையொருவர் முகத்தைப் பார்க்கறது?”
“ம்…அதெல்லாம் அவா பார்த்துப்பா. இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். ஏன் போன வருஷம் வந்து நம்மளை ஏமாத்திட்டும் இந்த வருஷம் வரலையா நம்ம வீட்டுல இருக்கலையா? திமிரா நடக்கலையா? அவா அவா பண்ணறதுக்கெல்லாம் கூலி கிடைக்கும். நம்மளை ஏமாத்தினதுக்கு கைமேல் கிடைச்சுது பார்த்த தானே!”
“அதைத் தான் நானும் சொல்லறேன் நவீ அவா அவா பண்ணறதுக்கு அந்த ஆண்டவன் கூலி குடுத்துப்பான். நாம ஏன் வீணா பேசாம இருந்தோ இல்ல விலகியிருந்தோ கெட்டபேரு வாங்கிக்கணும்.”
“ஆமாம் இப்போ மட்டும் என்ன வாழறதாம்?”
“சரி விடுங்கோ.”
மிருதுளா அவர்கள் வீட்டின் மரவேலைகளுக்காக இரண்டு மூன்று ஏஜென்சியை தேர்ந்தெடுத்து அவர்களிடம் வீட்டின் தரைதளத் திட்டம் எனப்படும் ஃப்ளோர் ப்ளானை மின்னஞ்சலில் அனுப்பி வைத்து அதற்கான வடிவமைப்பு படங்களை வரவழைத்து அதில் ஒன்றைத் தேர்வு செய்து அவர்களிடம் முன் பணம் செலுத்தி வேலையை ஆரம்பிக்கச் செய்தாள்.
அந்த வருடம் விடுமுறைக்கும் கவின் குடும்பத்தினர் நவீன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஒரு நாள் முன் தினம் ஃபோன் போட்டு அடுத்த நாள் வருவதாக சொன்னார்கள் அதற்கு ஏதும் சொல்லாமல் சரி என்று மட்டுமே சொல்லி ஃபோனை வைத்தாள் மிருதுளா. அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் விவரத்தை சொல்லி…
“எனக்கு அவாளைப் பார்த்தாளே நாம ஏமாந்தது தான் ஞாபகம் வரும் நவீ.”
“விடு விடு ஏமாத்தினது ஏமாத்தி அவா காரியத்தையும் சாதிச்சுட்டு போயிட்டா! இப்ப போய் அதை நாம கேட்கப் போனோம்னா …அப்படி எல்லாம் இல்லவே இல்லைன்னு அடிச்சு பேசுங்கள் என்னதுக்கு அதை அப்படியே மறந்திடுவோம். ஆனா இந்த தடவை அவா வீட்டை நாம பார்க்க போகக் கூடாது.”
“ஆனா அவா நம்மளை கூப்பிடுவாளே”
“அதை நான் பார்த்துக்கறேன். அதை நீ ஞாபகம் வச்சுக்கோ போறும்”
“ம்…ஓகே”
மறுநாள் சனிக்கிழமை என்பதால் சற்று தாமதமாக எழுந்து டிபன் செய்து சாப்பிட்டுவிட்டு அமர்ந்தனர் நவீன் மிருதுளா மற்றும் சக்தி. ஒரு பத்து நிமிடம் ஆனதும் மிருதுளா எழுந்து அடுப்படிக்குச் சென்று சமையல் வேலையில் மும்முரமானாள் ஏனெனில் மத்திய சாப்பாட்டிற்கு கவின் குடும்பம் வருவதாக சொல்லியிருந்தார்கள். அதே போல வந்தனர். அவர்களை வரவேற்று சாப்பாடு போட்டு அந்த பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா. அங்கே கவின் நவீனிடம் அவர்கள் வீட்டின் வேலைகள் எவ்வளவு தூரம் நடந்துள்ளது என்பதை அந்த பில்டர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தான். மிருதுளா வந்ததும் கஜேஸ்வரி அவளிடமும் காட்டினாள். அதைப் பார்த்ததும் மிருதுளா
“அட டே! பேஷா இருக்கே. ரொம்ப நல்லா பண்ணியிருக்கா. பரவாயில்லை நீங்க இங்கே இல்லாட்டினாலும் வேலை மளமளவென நடந்திருக்கறதைப் பாரத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு கஜேஸ்வரி”
“ஆமாம்! எங்களுக்கே ஆச்சர்யம்தான். சரி வந்தது வந்தாச்சு அப்படியே கிரகப்பிரவேசத்தையும் முடிச்சுடலாம்னு வந்திருக்கோம்”
“அப்படியா சூப்பர்.”
“இன்னைக்கு ஒரு நாலு மணிக்கு வீட்டைப் போய் பார்க்கலாம்னு இருக்கோம் நீங்களும் வர்றேங்களா?”
என்று கஜேஸ்வரி கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்
“இல்ல நாங்க வரலை. நாங்க எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் போய் பார்த்துட்டு வாங்கோ… குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும்..நீங்க வர்றதுக்குள்ள நாங்க ரெடியா இருக்கோம் நாம ஏதாவது மாலுக்கு போயிட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டுட்டு வருவோம். என்ன சொல்லற கவின்?”
“இல்ல நவீன் நீங்களும் வந்தா நல்லாயிருக்குமேனு தான் சொன்னா கஜேஸ். சரி இப்படி பண்ணுவோம் நாம எல்லாருமா ரெடி ஆகி இங்கேந்து எங்க புது வீட்டைப் பார்த்துட்டு அப்படியே மாலுக்கு போகலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்….சரி அப்படியே செய்யலாம். அப்போ எல்லாரும் கிளம்புங்கோ”
என்று நவீன் சொன்னதும் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா தன் அறையிலிருந்த நவீனிடம்
“என்னப்பா!! போகவேண்டாம்னு சொன்னேங்கள்! இப்போ நீங்களே கிளம்பவும் சொல்லறேங்கள்? எனக்கு ஒண்ணும் புரியலை”
“இப்போ உனக்குப் புரியாது. ஆனா அங்கே போனதும் புரிஞ்சுப்ப. நான் சொல்லறதை மட்டும் கேளு போதும்”
“ஓகே!”
அனைவரும் நவீன் காரில் ஏறிச் சென்றனர். அங்கே சென்றதும் கவின் குடும்பத்தினர் இறங்கினர். மிருதுளாவும் இறங்கப்போகும் போது நவீன் அவளிடம்
“மிருது இரு நாம வண்டியைப் பார்க் பண்ணிட்டு போவோம்”
“ஓ! ஓகே நவீ”
“கவின் நீங்க போயி பார்த்துட்டு வாங்கோ நாங்க வண்டியப் பார்க் பண்ணிட்டு வர்றோம். அநேகமா இங்க பார்க்கிங் கிடைக்காது. அப்படி கிடைக்கலைனா நாங்க இப்படியே ரௌண்ட் அடிச்சிண்டு இருக்கோம் நீங்க பார்த்து முடித்ததும் ஒரு கால் பண்ணு வந்திடறோம்”
“அப்படியா!! சரி ஓகே!”
என்று கூறி நவீன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சொன்னது போலவே பார்கிங் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது மிருதுளா
“பலே! நவீ! தேறிட்டேங்கள்”
“பின்ன நம்மளை முட்டாளாக்க தயங்காத கூட்டத்திடம் நாமளும் இப்படித்தான் நடந்துக்கணும். நாம அவாளைக் கூட்டிண்டு வராம இல்லையே!! ஆனா நாம உள்ளே போகணுமா வேண்டாமா அப்படிங்கறது நம்ம இஷ்டம். அந்த கட்டிடத்தைப் பார்த்தா அவன் ஃபோட்டோல காண்பித்தா மாதிரி இல்லையே!! இது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகுமே!”
“ஏன்ப்பா அப்படி சொல்லறேங்கள்? பாவம் அவாளும் உழைச்சக் காசைத் தானே போட்டு வாங்கியிருக்கா. அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும் பாருங்கோ”
என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கவினிடமிருந்து கால் வந்தது. அதைப் பார்த்த நவீன்
“என்ன இது இவ்வளவு சீக்கிரமா பார்த்து முடிச்சிட்டானா? ஹலோ சொல்லு கவின்”
“நவீன் வந்து எங்களைப் பிக்கப் பண்ணிக்கோ. நாங்க பார்த்தாச்சு”
“சரி கிவ் மி ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அன்ட் வீ வில் பி தேர்”
என்று சொன்னது போலவே வந்தனர் நவீனும் மிருதுளாவும். கவின் குடும்பத்தினர் வண்டியில் ஏறினார்கள். நவீன் கவினிடம்
“என்ன இவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டேங்கள்? நீ சொன்னதெல்லாம் செஞ்சிருக்கானா அந்த பில்டர்?”
“ம்..…ஒண்ணுமே பண்ணலை அவன். போன வருஷம் எப்படிப் பார்த்துட்டுப் போனோமோ அப்படியே தான் இருக்கு. கடுப்பாகிட்டோம். நல்லா சத்தம் போட்டுட்டு வந்தோம்”
“என்ன சொல்லுற கவின். நீ காண்பித்த ஃபோட்டோ ல முடிஞ்சா மாதிரி தானே இருந்தது”
“அது எங்க வீட்டு ஃபோட்டோவே இல்லை. அது வேற யாரோடோ வீட்டு ஃபோட்டோ. அந்த பில்டரோட வேற ஏதோ ப்ராஜெக்ட்டோட ஃபோட்டோவாம்”
“அதை ஏன் உங்க வீடுன்னு அனுப்பினாளாம்?”
“அது மாதிரி வேணும்னா எங்க வீட்டையும் பண்ணித் தருவான்னு சொல்லறதுக்காக அனுப்பினாளாம். அதுக்கு எக்ஸ்ட்ராவா பத்து லட்சம் ஆகுமாம். நான் அவன்ட்ட மொதல்ல வீட்டை முடிச்சுக் குடு அப்புறம் இதெல்லாம் பார்த்துப்போம்னு சொல்லிட்டேன். பாரப்போம் இன்னும் ஆறே மாசத்துல முடிச்சுத் தரதா சொல்லிருக்கான் பார்ப்போம். இதுல இந்த டிரிப்லேயே கிரகப்பிரவேசமெல்லாம் முடிச்சிடலாம்னு ப்ளான் போட்டுண்டு வந்தோம். எல்லாப் ப்ளானும் தொப்ளான் ஆயிடுத்து”
“சரி சரி விடு என்னப் பண்ண? சில சமயம் பில்டர்கள் இழுத்தடிப்பது சகஜம் தான். அதுதான் ஆறு மாசத்துல தர்றதா சொல்லியிருக்கான் இல்லையா அப்புறமென்ன? சரி உங்க ஃப்ரெண்டு யாரோ கூட இதுல வாங்கியிருக்கறதா சொன்னேங்களே அவா வீடு முடிஞ்சிடுத்தா?”
“அவ கெட்டிக்காரி நவீன். அவா வாங்கும்போது எங்ககிட்ட சொல்லி எங்களையும் வாங்க வச்சா ஆனா சத்தமே இல்லாமா ஆறு மாசம் முன்னாடியே அவா வீட்டை கை மாத்தி விட்டுட்டான்னா பாரேன். அவா பேச்சைக் கேட்டு இப்போ நாங்க தான் மாட்டிண்டு முழிக்கறோம்”
“சரி சரி டோன்ட் வரி. எல்லாம் நல்லதாவே நடக்கும். என்ன கொஞ்சம் கால தாமதமாகறது அவ்வளவு தானே”
“சரி நீங்க இங்கே மைசூர்ல வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணிணேங்களே… அது மைசூர்ல எங்க? அந்த வீடு முடிஞ்சாச்சா? நீங்க எப்போ குடி போகப் போறேங்கள்?”
“அது நம்ம ஊருக்கு போற வழில தான் இருக்கு சிட்டிய விட்டு தள்ளித்தான் இருக்கு. ஆங் பில்டிங் வேலை எல்லாம் முடிஞ்சாச்சு. இப்போ மர வேலைகள் நடந்துண்டு இருக்கு. அநேகமா நாங்க ஆகஸ்ட்டு கடைசியில புது வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணுவோம்”
“ஓ! க்ரேட் பரவாயில்லையே நாங்க வாங்கினதுக்கப்பறமா ஒரு இரண்டு மாசம் கழிச்சுத்தானே வாங்கியிருப்பேங்கள்?”
“இல்ல கவின். நாங்க இப்போ தான் வாங்கினோம். எங்களோட இப்போ இருக்குற வீட்டோட ரென்டல் டாக்யுமெண்ட்டை ரின்யூ பண்ணும்போது தான் தோணித்து ஒரு வீடு வாங்கிடலாம்னு…ஏன்னா வாடகையே எக்கச்செக்கமா ஏத்திட்டா. அதுதான் ரீசன். நாங்க வாங்கி என்ன ஒரு நாலு மாசம் தான் ஆச்சு. நீங்க ஊருக்கு போகும் போது அப்படியே கூட்டிண்டு போயி காண்பிக்கறோம்”
“ஓ! அப்படியா? நாங்க நினைச்சோம் நாங்க போன வருஷம் வந்து வாங்கினதும் தான் நீங்களும் உடனே வாங்கிருப்பேங்கள்னு”
“இதுல எல்லாம் யாராவது போட்டிப் போடுவாளா கவின். வீ ஹாவ் எ வாலிட் ரீசன்”
“அய்யோ மன்னி!! நான் அப்படி சொல்லலை”
“நீ எப்படி சொன்னாலும் எங்க பதில் அதேதான். சரி மால் வந்திடுத்து எல்லாரும் இங்கேயே இறங்கிக்கோங்கோ நான் வண்டியைப் பார்கிங்ல போட்டுட்டு வரேன்”
என்று அனைவரும் இறங்கி மாலில் ஒரு நான்கு மணிநேரம் செலவழித்து சில டிரெஸ்ஸஸ் மற்றும் சில பொருட்களெல்லாம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் அங்கேயே இருந்த ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை காபிக் குடித்துக் கொண்டிருக்கும் போது கவின் நவீனிடம்
“சரி நவீன் நாங்க இன்னைக்கே கிளம்பறோம்”
“அட ஏன் என்னாச்சு?”
“இல்ல வீடு முடிஞ்சிருக்கும்….கிரகப்பிரவேசம் நடத்திடலாம்னு தான் நாங்க வந்தோம் ஆனா இப்ப தான் வீடு முடியவே ஆறு மாசமாகும்னு சொல்லிட்டாளே அதுனால நான் குவைத்துக்கு சீக்கிரமே போயிட்டு மறுபடியும் லீவு போட்டு வரணும். ஆனா கஜேஸும் குழந்தைகளும் அவா அம்மா ஆத்துல தான் ஒரு மாசத்துக்கு இருப்பா”
“ஓ! அப்படியா சரி. மிருது கவின் இன்னைக்கே கிளம்பறானாம்”
“ஆங் இப்போ தான் கஜேஸ்வரி சொன்னா. இதோ டிபன், சாப்பாடு எல்லாமே ரெடி அவா டிபன் சாப்டுட்டு சாப்பாடைக் கட்டிண்டு கிளம்பட்டும்”
“எதுக்கு மன்னி உங்களுக்கு சிரமம். பரவாயில்லை போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம்”
“எல்லாம் ஆயாச்சு கவின். எனக்கு இதில் ஒரு சிரமமும் இல்லை”
“சரி நாங்க எங்க கார்ல கிளம்புவோமே…. எப்படி உங்க வீட்டைப் பார்ப்பது?”
“அதுனால என்ன கஜேஸ்வரி? நீங்க வந்த கார்ல நீங்க வாங்கோ நாங்க எங்க கார்ல வர்றோம். எங்கக் காரை நீங்க ஃபாலோ பண்ணிண்டே வாங்கோ”
“ம்….ஓகே ஓகே”
என்று காலை உணவை சாப்பிட்டு, மத்திய சாப்பாட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது மிருதுளா குழந்தைகளை எல்லாம் நவீன் காரில் உட்கார வைத்து விட்டு கவின் கஜேஸ்வரிக் காரில் அமர்ந்துக் கொண்டாள். வீடு வரைப் பேசிக்கொண்டிருக்கலாமே என்ற எண்ணத்தில் ஏறிய மிருதுளாவுக்கு அவமானம் தான் மிஞ்சியது. அவள் பேச முற்பட்டப்போதெல்லாம் கவினும் கஜேஸ்வரியும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவது போல பேசிக் கொண்டு மிருதுளாவை அவாயிட் செய்தனர். அதை உணர்ந்ததும் மிருதுளா தன் மனதில்
“ச்சீ ஏன் தான் இதுகளோட வந்தோமோ!! ஏதோ கொஞ்ச நேரம் பேசிண்டிருக்கலாமேனு வந்தா…ரொம்பத்தான் பண்ணறதுகள். நவீன் சாரி நீங்க சொன்னதையும் மீறி இதுகள் கூட வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். சீக்கிரம் நம்ம வீடு வந்திடணுமே கடவுளே”
என்று எண்ணிக்கொண்டே அதன் பின் அவர்களுடன் ஏதும் பேசாதிருந்தாள். வீடு வந்ததும் வண்டியிலிருந்து இறங்கியதும் அதுவரை பேசாதிருந்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“ஓ! இது தானா உங்கள் புது வீடு. நல்லா பெரிசா இருக்கே”
என்று சொல்ல அது காதில் விழாததைப் போல வீட்டின் கதவைத் திறக்கச் சென்றாள் மிருதுளா. அவளின் முக வாட்டத்தைக் கண்ட நவீன் ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டான் ஆனால் அப்போது ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. வீட்டை சாவிப் போட்டு திறந்ததும் சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறி நகைகளைப் பார்ப்பது போல மிருதுளாவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் கஜேஸ்வரி. நவீன் மிருதுளா வருவதற்குள் அங்கேயும் இங்கேயுமாக சென்று சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அப்போது கவினின் மகள் கஜேஸ்வயிடம்
“அம்மா இங்க பாரேன் உனக்கு பிடிச்சா மாதிரியே வீட்டுக்குள்ளேந்தே மாடிப்படியிருக்கு”
“அட ஆமாம்.”
என்று மேலேயும் சென்றுப் பார்த்தனர். அப்போது கவினின் எட்டு வயது மகன் ஓடி விளையாடிக்கொண்டே தன் அப்பாவிடம்
“அப்பா இந்த ஹவுஸ் பேலஸ் மாதிரி பெருசா இருக்கு இல்ல”
என்றுதும் கஜேஸ்வரி
“ஆமாம்! ஆமாம்! நல்லா சொல்லு உங்க அப்பாகிட்ட” என்றாள்.
முழு வீட்டையும் நன்றாக சுத்திப் பார்த்துவிட்டு கீழே வந்ததும் ஏதும் கூறாமல் நின்றனர். அப்போது கவின்
“கஜேஸ் கிளம்பலாமா? இப்போ கிளம்பினா தான் நைட்டு வீட்டுக்கு போய் சேர முடியும்”
“என்ன கவின் வீட்டைப் பார்த்து ஒண்ணுமே சொல்லலையே”
“ஆங் நல்லா இருக்கு நவீன். சரி நாங்க கிளம்பறோம்.”
என்று கூறிவிட்டு அவர்கள் காரில் ஏறி வயித்தெரிச்சலோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கிளம்பியதும் வீட்டைப் பூட்டி சாவியை பர்ஸில் போட்டுக் கொண்டு நவீனும் மிருதுளாவும் சக்தியும் கிளம்பினாராகள். வண்டியில் அப்பார்ட்மெண்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் போது நவீன்
“என்ன மிருது மூட் அவுட்டாவே இருக்க? அவாளோட வரும் போது ஏதாவது சொன்னாலோ? காருலேந்து இறங்கியனதுலேந்து உர்ன்னே இருக்கியே”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை நவீ”
“இல்லையே ஏதோ இருக்கு. சும்மா சொல்லு மிருது”
“நீங்க சொன்னதைக் கேட்காமல் அவாளோட கார்ல வந்தது தப்பு தான். சாரி”
“ஹலோ என்ன ஆச்சு? எதுக்கு இப்போ சாரி எல்லாம் கேட்குற”
“அவா கார்ல வரும் போது நான் அவாளோட பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் என்னை அவாய்டு பண்ணறா மாதிரியே ரெண்டு பேரும் பேசிண்டே வந்தா. எனக்கு அந்த டிரைவர் முன்னாடி ரொம்ப அசிங்கமா போச்சு. அவா போன வருஷம் நம்க்கு பண்ணிணதுக்கு நாம தான் அவாளை அவாய்டு பண்ணிருக்கணும். இதுல வண்டிலேந்து இறங்கினதும் என்கிட்ட பேசறாளாம்!!! எனக்கு கோபம் வந்தது அதுதான் அதுக்கப்புறம் நான் பேசவேயில்லை.”
“இது மாதிரி எல்லாம் அதுகள் பண்ணும்னு எனக்கு தெரிஞ்சதுனால தான் உன்னை அவா கார்ல போக வேண்டாம்னு சொன்னேன். அவாளோட டிரெண்டே அதுதானே! அவா தப்பு பண்ணுவா, துரோகம் பண்ணுவா… அவாளால பாதிக்கப்பட்டவாகிட்டேயே திமிராவும் நடந்துப்பா… அதுகளே பொறாமையில வெந்துண்டிருக்குகள்.”
“அது எனக்கு நல்லா புரிஞ்சுது நவீ. இனி வரட்டும் நானும் அதுகளை அவாயிடு பண்ணறேன் பாருங்கோ”
“மிருது நீயா பேசற!.”
“என்னையும் பேச வைக்கறா நவீ!! நான் என்ன பண்ணுவேன்?”
“சரி சரி பீ கூல். இனி அடுத்த வருஷம் தான் வருவா சோ அப்போ பார்த்துக்கலாம்.”
என்று பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் ஆஃபீஸ் விட்டு வரும்போது அப்பார்ட்மெண்ட் கீழே கார் பார்க்கிங்கில் இருக்கும் போஸ்ட் பாக்ஸிலிருந்து ஒரு பத்திரிகை வந்திருப்பதாக எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தான் நவீன். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்து
“நவீ நம்ம பிச்சுமணி மாமாவோட பெரிய பொண்ணுக்கு கல்யாணமாம்.”
“அப்படியா? எப்போ?”
“வர்ற ஆகஸ்டு மாசம் இருபதாம் தேதி தான்”
“அட அந்த குட்டிப் பொண்ணுக்கு கல்யாணமா? சூப்பர்”
“அவளுக்கும் இருபத்தோரு வயசாயாச்சு நவீ. அப்படிப் பார்த்தா நீங்களும் இந்த குட்டிப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிண்டிருக்கேங்கள்”
“ஓகே! மேடம் மன்னிக்கவும்”
“ச்சே! சும்மா கிண்டல் அடிச்சேன் நவீ. சரி நாம இந்த கல்யாணத்துக்கு போவோமில்லையா?”
“நிச்சயமா போகலாம் ஆனா அது நாம் வீடு ஷிஃப்ட் ஆகுற நாளோட க்ளாஷ் ஆகக் கூடாது”
“பார்ப்போம்!! அப்படின்னா நாம கார்லேயே போயிட்டு வந்திடுவோம்”
“ஓகே!”
நவீன் மிருதுளா வீட்டின் மர வேலைகள் கிடுகிடுவென நடந்தது. ஆனாலும் அவர் ஆகஸ்டு மாசம் குடி போக முடியாதவாறு சில வேலைகள் மீதமிருந்தன. ஆகையால் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளை குறித்து வைத்து அன்று ஷிஃப்ட் செய்ய முடிவெடுத்தனர். அதற்கு முன் மாமா வீட்டுக் கல்யாணத்துக்கும் சென்று வரத் திட்டமிட்டனர்.
பிச்சுமணி மகள் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் போது மிருதுளாவிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்துப் பேசினாள்
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“ஹலோ மன்னி நான் கஜேஸ்வரி பேசறேன்”
“ம்….ம்…சொல்லு.”
“மன்னி நாங்க இங்கே மதுரையில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கோம். உங்களுக்கு தான் முதல்ல ஃபோன் பண்ணி சொல்லறேன்”
“அப்படியா ரொம்ப சந்தோஷம்”
“கவின் நாளைக்கு ஊருக்குப் போயிடுவார்”
“ஓ! சரி பத்திரமா போயிட்டு வரச்சொல்லு. அப்போ மாமா பொண்ணு கல்யாணத்துக்கு கவின் இருக்கமாட்டானா”
“இல்ல மன்னி இருக்க மாட்டார். அதுதான் அந்த வீட்டோட ரிஜிஸாட்ரேஷன் மாமா பொண்ணு கல்யாணத்தன்னைக்கு வச்சிருக்கோம். அதுக்கு நம்ம மாமனாரை கூட்டிண்டு நான் மதுரைப் போகப் போறேன். நம்ம ஆத்துல எல்லார்ட்டேயும் ஃப்ரெண்டோட கல்யாணத்துக்காக போறோம்னு சொல்லச் சொல்லிருக்கோம். ஏன்னா பிச்சு மணி மாமா தப்பா எடுத்துக்கக் கூடாது பாருங்கோ. அதுனால நீங்க அவர் பொண்ணுக் கல்யாணத்துக்கு வந்தேங்கள்னா உங்க கிட்ட யாராவது நாங்க எங்கன்னு கேட்டா இதையே சொல்லுங்கோ. அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன். நீங்க பாட்டுக்கு வீடு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போயிருக்கறதா சொல்லடப் போறேள். அண்ணா கிட்டேயும் சொல்லிடுங்கோ”
“ஏன் இப்படி நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாரையும் பொய் சொல்ல வைக்குற? ஏன் உண்மையை சொன்னா என்னவாம்? இதுக்கு நம்ம மாமனாரும் மாமியாரும் ஒதுதுண்டுட்டாளா?”
“ஆங் ஆங் அதெல்லாம் கவின் சொல்லறா மாதிரி சொல்லி ஒத்துக்க வச்சுட்டார்.”
“பரவாயில்லையே கவின் கெட்டிக்காரன் தான். நவீன் டிரெயின் டிக்கெட் புக் பண்ணின டேட்டை மாத்தி சொன்னார்னு. அவர் பொய் சொல்லிட்டார்…அவர் கூட சேர்ந்து நானும் பொய் சொல்லிட்டேன்னு அரிச்சந்திரனும் சத்தியவதியும் மாதிரி ஒரு காலத்துல குதிச்சாளேன்னுட்டு தான் கேட்டேன்”
“அதெல்லாம் உங்க காலத்துலன்னு சொல்லுங்கோ! மாமா நீங்க தான் ஓட்ட வாயின்னும் உங்ககிட்ட மொதல்ல சொல்லிடுன்னும் சொன்னார். அதுதான் உங்ககிட்டேயும் சொல்லிட்டேன் அதுபடி நடந்துக்கோங்கோ. நாளைக்கு நானும் குழந்தைகளும் என் அம்மா ஆத்துக்குக் கிளம்பறோம். சரி மன்னி மாமா பொண்ணு மாப்பிள்ளை அழைப்பில் சந்திப்போம்”
“அதுதான் வரமாட்டேன்னு சொன்னியே”
“அய்யோ மன்னி மறுநாள் கல்யாணத்துக்கு தான் இருக்க மாட்டோம்”
“ஓ! ஓகே ஓகே!
அன்று மாலை நவீன் வந்ததும் விவரத்தை சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“நீ ஏன் பேசாம ஓகேன்னு சொன்ன மிருது. இவ யாரு நம்ம யார்கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லறது? அப்படி நாம சொல்லிடுவோமோன்னு நினைச்சா நம்ம கிட்ட வீடு வாங்கிறுக்கறதைப் பத்தி சொல்லாமலேயே இருந்திருக்கலாமே! இல்ல இதுல ஏதோ இருக்கு. ஆமாம் உன்னை அப்படி கிண்டலா சொல்லிருக்கா உனக்கு கோபம் வரலை”
“வந்தது. ஆனா அப்படி சொல்லிருக்கறது உங்க அப்பான்னு இல்ல சொன்னா! அவளா சொல்லலையே!”
“யாரு கண்டா அவளோட நக்கலை அப்பா மேலே போட்டு சொன்னாலோ என்னவோ! ஏன்னா நீ அப்பாகிட்ட போய் கேட்கவா போற? இதுகள் ரெண்டும் ரொம்ப தான் துள்ளறதுகள். நானெல்லாம் இவாளோட இந்த பொய்யிக்கு துணைப் போக மாட்டேன். நானா போய் யாராகிட்டேயும் சொல்லமாட்டேன் அதே சமயம் என்கிட்ட யாராவது வந்து கேட்டா உண்மையை சொல்லாமல் இருக்கவும் மாட்டேன். ஆனா ஒண்ணு ஐ லைக் தட் அரிச்சந்திரன் அன்ட் சத்தியவதி எக்ஸாம்புள் யு கேவ். குட். சில நேரங்கள்ல நாமும் பேசித்தான் ஆகனும்ங்கறத புரிஞ்சிண்டியே அதுவரைக்கும் சந்தோஷம். பரவாயில்லை மிருது தேறிண்டே வந்துண்டிருக்க.”
பிச்சுமணி மாமா மகள் திருமணத்திற்கு முன் தினம் தங்கள் காரிலேயே புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
அங்கே அவர்களுக்கு என்னனென்ன காத்திருக்கிறதோ? எதையெல்லாம் சந்திக்க நேரிடுமோ? சமாளிக்க வேண்டிவருமோ? எப்போதும் ஒரு விசேஷத்துக்கு சென்றால் தான் அவர்கள் மிருதுளாவுக்கும் நவீனுக்கும் வைத்துள்ள பாம் என்னவென்றே தெரியவரும். சில விசேஷங்களுக்கு பின்னால் தான் தாங்கள் தங்கள் குடும்பம் வைத்த பாம்மில் வெடித்து சிதறிய விவரமே தெரிய வரும் ஆனால் இந்த முறை பாம் என்னவென்று தெரிந்தே செல்கிறார்கள். அது ஒன்று தான் என்று நினைத்து அதற்கு தயாராக செல்லும் நவீன் மிருதுளாவைத் தாக்கப் போவது ஒன்று தானா இல்லை இரண்டு மூன்றுள்ளதா என்பதை பிச்சுமணி மகள் திருமணத்திற்கு வரும் செவ்வாய் கிழமை சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
தொடரும்…..
கிரகப்பிரவேச வேலைகளில் மும்முரமான நவீன் மிருதுளா அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து விருந்தினர்களின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். நவீனும் மிருதுளாவும் ஒரு பெரிய ஏழு சீட்டர் கார் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மிருதுளா பெற்றவர்கள் அவர் ஆர்டர் கொடுத்திருந்த சீர் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஊருக்குச் சென்று அங்கிருந்து ஈஸ்வரன், பர்வதத்ததை ஏற்றிக் கொண்டு நால்வருமாக மைசூருக்கு கிரகப்பிரவேசத்தின் முதன் நாள் மாலை வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்ததும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. பின் அவர்கள் குளித்து ஃப்ரெஷ் ஆனார்கள். அதற்குள் கடையில் ஆர்டர் செய்திருந்த டின்னர் வந்தது. அதைப் பார்த்ததும் ஈஸ்வரன்
“இது எதுக்கு இவ்வளவு வாங்கிருக்கேங்கள். நாம இருக்கறது ஏழே பேரு தானே”
“இல்லை பெரியப்பாவும் அவர் குடும்பமும் அன்ட் அக்கா அத்திம்பேர் குடும்பமும் வந்திண்டிருக்கா. அவாளுக்கும் சேர்த்துதான் இது.”
“ஒ!! அவா எல்லாரும் வர்றேன்னுட்டாளா என்ன?”
“வர்றேன்னும் சொன்னா. வந்துண்டுமிருக்கா.”
“ராசாமணியுமா வர்றான்?”
“ஏன்ப்பா துருவி துருவி கேட்கறேங்கள்? ஏன் யாரும் வர கூடாதுன்னா? இல்ல வரமாட்டான்னா?”
“இல்ல சும்மா தான் கேட்டேன்.”
“அப்பா அம்மா நீங்க எல்லாருமா இப்போ சாப்பிடறேங்களா? இல்ல அவா எல்லாரும் இன்னும் ஒரு ஹாஃப் அன் அவர்ல வந்துடுவா.. அவாளோட சாப்பிடறேங்களா?”
“அவா எல்லாரும் வரட்டும் மிருது எல்லாரோடயும் சேர்ந்தே சாப்பிடறோம்”
என்றனர் அம்புஜமும் ராமானுஜமும்
“இல்ல இல்ல வாங்கோ வாங்கோ நாம சாப்ட்டுடலாம்”
“இல்ல ஈஸ்வரன் மாமா நீங்க சாப்பிடுங்கோ நாங்க உங்காத்துக்காரா எல்லாரும் வந்துட்டே சாப்பிடறோம்”
“சரி அப்புறம் உங்க இஷ்டம். பர்வதம் வா சாப்பிடுவோம்”
என்று கூறி இருவரும் சாப்பிட்டு எழுந்ததும் ஈஸ்வரனின் சொந்தங்கள் அனைவரும் வந்தனர். அனைவரையும் வரவேற்று அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர் மிருதுளாவும், அம்புஜமும். வாங்கோ என்றழைத்து விட்டு வேறேதும் பேசாமல் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர் பர்வதீஸ்வரன் தம்பியர். இதை கவனித்த மிருதுளா நவீனிடம்
“பார்த்தேங்களா நம்ம ஆத்து விசேஷத்துக்கு வந்திருக்கா எல்லாரும் கொஞ்ச நேரம் கூட பேசாம படுத்துக்க போயிட்டாளே ரெண்டு பேரும்!! இதையே நாம செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்? நம்மளை அவமானப்படுத்திருக்க மாட்டா!”
“எனக்கென்னவோ விஷயம் வேறன்னு தோனறது! அவா வந்ததுலேந்து அவா பேச்சும் நடத்தையும் கேட்டதுலேயும் பார்த்துலேயும் …..நம்ம ஆத்து விசேஷத்துக்கு யாருமே வரமாட்டான்னு நினைச்சுண்டு வந்திருக்கா… ஆனா இவ்வளவு பேரு வந்ததில் ஸ்லைட்டா ஷாக் அடிச்சதுல என்ன பண்ணறதுனு தெரியாம போய் படுத்துண்டுட்டா”
“ஓ!! அப்படி கூட நினைப்பாளா என்ன?”
“எல்லாம் நினைக்குற கூட்டம் தான் மிருது. நாம இவ்வளவு பெரிய வீடெல்லாம் வாங்குவோம்னு நினைக்காததால… அந்த வயித்தெரிச்சல்ல இப்படி ஒரு புரளியை கிளப்பி விட திட்டம் போட்டு தான் அவாளோட எந்த புள்ளகளும் வராம இவா மட்டும் வந்திருப்பதற்கான காரணம். எங்கடா எல்லாரும் நம்ம கிட்ட வீட்டைப் பத்தி விசாரிச்சுட்டா?? அப்புறம் அவா மூத்தப் புள்ள கவினோட வீடு சின்னதுன்னு சொல்லிட்டா!!! அதுக்கு தான் எவரும் நம்ம கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்காம இருக்கணும்னு இவாளே எல்லார்ட்டேயும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பரப்பி அதனால தான் யாருமே கிரகப்பிரவேசம் அடென்ட் பண்ணலைன்னு கிளப்பி விடற திட்டத்தோட வந்திருக்கா!!! ஆனா இதுல டிவிஸ்ட் என்னென்னா இவா எல்லாரும் வருவான்னு அவா நினைச்சிருக்க மாட்டா அதுதோட ரியாக்ஷன் தான் இது. நீ ஒண்ணும் கண்டுக்காதே. வந்தவாளை கவனிப்போம் வா”
என்று அவர்களுக்குள் அடுப்படியில் பேசிக்கொண்டே சாப்பாட்டை பிரித்து வைத்தனர் நவீனும் மிருதுளாவும் அப்போது நவீனின் ஒண்ணு விட்ட அக்கா
“என்னடா நவீன் நீங்க பாட்டுக்கு அடுப்படியில இருக்கேங்கள்! என்ன நடக்கறது இங்கே”
“வாங்கோ அக்கா. இது தான் என் கிட்சன்.”
“ம்…நல்லா இருக்கு மிருதுளா. நீட்டா வச்சிருக்க”
“தாங்க்ஸ் அக்கா. இதோ நம்ம எல்லாருக்குமான டின்னரை பிரித்து அது அதுக்கான கரண்டிகளை போட்டு ரெடி பண்ணிண்டிருக்கோம் அவ்வளவு தான். இதோ ரெடி வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்”
அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். இலைப் போட்டு சாப்பாடு ரவா கிச்சடி, இட்டிலி, சப்பாத்தி, குர்மா, தேங்காய் சட்னி, சாம்பார், ஜாங்கிரி என்று மிருதுளாவும் அம்புஜமும் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததுக்குப் பிறகு அந்த இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு பின் மிருதுளாவும் அம்புஜமுமாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மற்ற அனைவரும் நவீன், ராமானுஜத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். மிருதுளா சாப்பிட்டதும் அனைவருக்குமான பாய், பெட்ஷுட், தலையணை என எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தாள் அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு வீட்டில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்துறங்கினர்.
“அம்மா நீயும் போய் தூங்குமா. காலையிலேந்து வண்டில உட்கார்ந்து வந்திருக்க…இதெல்லாம் நான் ஒதுக்கிட்டு போய் படுத்துக்கறேன்”
“இல்ல டி மிருது நானும் கூட செஞ்சா சீக்கிரம் ஆகுமோன்னோ”
“சொன்னா கேட்க மாட்டியே! சரி ஆயாச்சு இப்போ போய் படுத்துக்கோ”
என்று எல்லோரும் உறங்கினர். மறுநாள் விடியற் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயார் ஆகினர் நவீன், மிருதுளா, சக்தி, ராமானுஜம் மற்றும் அம்புஜம். மிருதுளா சக்திக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் குடுத்ததும், காபி டிக்காக்ஷன் போட்டு முதலில் எழுந்த நவீன், அம்புஜம், ராமானுஜத்துக்கும் தனக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அவர்களோடு குடித்தாள். அப்போது ஈஸ்வரனும் பர்வதமும் எழுந்து வந்தனர். அவர்களுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. மற்ற அனைவருக்கும் காபி போட்டு ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து விட்டு கிரகப்பிரவேசத்துக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் வைத்திருந்த பைகளை எல்லாம் எடுத்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். பர்வதீஸ்வரன் தம்பதியர் குளித்து ரெடியாகச் சென்றிருந்தனர் அப்போது அம்புஜத்திடம் மிருதுளா
“அம்மா இந்தா இந்த வீட்டுச் சாவி. கீழே நம்ம அப்பார்ட்மெண்ட் வாசல்ல வேன் காத்திண்டிருக்கு. இவா எல்லாரும் எழுந்து ரெடியானதும் காபிக் குடுத்துட்டு, கதவைப் பூட்டிட்டு வண்டில அழைச்சுண்டு வாங்கோ. நான் நவீன் நம்ம அப்பா சக்தி நாங்க நாலு பேருமா இப்போ எங்க கார்ல கிளம்பறோம் ஏன்னா அங்க போயி கோலம் போடணும் அன்ட் வாத்தியார்கள் வந்திடுவா சரியா!”
“ம்…சரி மிருது.”
“கிளம்பலாமா மிருது டைம் ஆகறது”
“இருங்கோ நவீ உங்க அப்பா அம்மாட்டேயும் சொல்லிட்டு வந்துடறேன்”
“அப்பா நீங்க குளிச்சிட்டு கிளம்பி எல்லார் கூடயும் வேன்ல வாங்கோ நாங்க இப்போ புது வீட்டுக்கு போகணும். அங்கே எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு.”
“ம்…ம்..சரி சரி”
“மிருது மிருது டைம் ஆயாச்சு”
“இதோ வந்துட்டேன் நவீ. சரி பா வந்திடுங்கோ பை”
என்று அனைவரிடமும் கூறிவிட்டு புறப்பட்டு புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே தன் அப்பா அம்மா கொண்டு வந்த சீர் சாமான்கள் மற்றும் பால் காய்ச்ச வேண்டிய இன்டக்ஷன் அடுப்பு பாத்திரம் டம்பளர்கள் என எல்லா வற்றையும் அடுப்படி மேடையில் தயாராக எடுத்து வைத்து, வாசலில் கோலமிட்டு, வீட்டினுள் கோலமிட்டு, சாமிப் படங்களை சாமி அறையில் வைத்து பூ மாலை போட்டு குத்து விளக்கேற்றி வைத்து எழும்போல் சாஸ்த்திரிகள் வந்தனர். பின் அவர்களுக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தாள் மிருதுளா. அதுவரை வீட்டிலிருந்து எவரும் வராததால் அம்புஜத்திற்கு கால் செய்தாள் மிருதுளா
“அம்மா இங்க எல்லாம் ரெடி நீங்க எல்லாரும் ஏன் இன்னும் வரலை?”
“இதோ வந்துண்டே இருக்கோம் மிருது. உங்க சொசைட்டி கேட்டுக்குள்ள நுழையறோம்”
“ஓ!! ஓகே ஓகே வாங்கோ”
என்று ஃபோனை வைக்கவும் வேன் வந்து வீட்டு வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. அனைவரும் வந்ததும் ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கியது கிரகப்பிரவேசம். இடையிடையே நவீன் மிருதுளாவின் நண்பர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். அப்போது பர்வதத்தின் ஒண்ணு விட்ட தங்கையின் நவீனின் சித்தப்பா சித்தியின் மகனான ராமும் அவன் மனைவியுமாக வந்திருந்தனர்.
எல்லோருமாக இருந்து, பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் இனிதே கிரகப்பிரவேசம் நடந்தேறியது. அனைவருக்கும் ஆர்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து காலை உணவு வந்ததும் பரிமாறப்பட்டது. சாப்பாடு ஆனதும் பர்வதம் ராமிடம்
“என்ன ராம் நீ கிரகப்பிரவேசத்துக்கு வந்திருப்பது ஆச்சர்யம் தான்”
“இதுல உங்களுக்கு என்ன ஆச்சயம் பெரியம்மா?”
“இல்ல கவீனோட, ப்ரவீனோட, பவினோட வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நடந்தது அதுக்கெல்லாம் வரலையே அதுதான் கேட்டேன்”
“எங்காத்துக் கிரகப்பிரவேசத்துக்கு நவீனும் மிருதுளாவும் வந்திருந்தா அதுவுமில்லாம எங்களை நவீனும் மிருதுளாவும் அழைச்சா அதுனால வந்தோம்”
“ம்…ம்…”
என்று கூறிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தாள் பர்வதம். ராம் தனக்கு வேலையிருப்பதாக கூறி மத்திய சாப்பாட்டிற்கு கூட நிற்காமல் கிளம்பினான். நவீனும் அவர்கள் வந்ததற்கு மகிழ்ச்சி என்று கூறி தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அவர்கள் சென்றதும் மற்ற உறவினர்கள் அனைவரையும் வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றாள் மிருதுளா அப்போது அதில் சிலர் விலையைப் பற்றியும் இடத்தின் அளவு பற்றியும் கேட்க அதற்கு மிருதுளா
“இடம் ஒரு க்ரௌண்ட் அதுல நாலாயிரம் சதுரடி கட்டிடம். மொத்தம் எங்களுக்கு வீடு மட்டும் ஒரு கோடி ஆகியிருக்கு.”
என்றதும் பர்வதம் சும்மா இல்லாமல்
“என் ஒண்ணு விட்ட தங்கச்சி பையன் ராம் …இதோ இந்த கிரகப்பிரவேசத்துக்குக் கூட வந்திருந்தானே அவனும் மைசூர்ல வீடு வாங்கிருக்கான் சிட்டி சென்டர்ல நாலு கோடிக்கு”
என சம்மந்தமே இல்லாமல் சொன்னாள். அனைவரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டனர் உடனே மிருதுளா…
“இதுக்கப்புரம் மர வேலைகள், லைட்டிங், ஃபால்ஸ் ஸீலிங் எல்லாமிருக்கு. ஸோ எப்படியும் ஒன்னேகால் கிட்ட வந்திடும்”
“ராமுக்கும் எல்லாம் சேர்த்து ஐந்து கோடியாச்சாம்”
இதைக் கேட்டதும் வந்திருந்ததில் ஒருவர் பர்வதத்திடம்
“என்ன பர்வதம் உனக்கு நவீன் ஒரு கோடிக்கு தான் வாங்கிருக்கான்னு வருத்தமா!!! இல்ல நவீன் வாங்கிருக்கறது ஒண்ணும் பெரிசில்ல உன் தங்கைப் புள்ள தான் ஒசத்தின்னு சொல்லவர்றயா!! புரியலையே!!!”
என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். வந்தவருக்கு புரியாமலிருக்கலாம் ஆனால் சொந்தகாரர்களுக்கும் மிருதுளாவுக்கும் நன்றாகவே புரிந்தது. நண்பர்கள் அனைவரும் காலை உணவருந்தி வீட்டைச்சுற்றிப் பார்த்துவிட்டு நவீனுக்கும் மிருதுளாவும் பாராட்டுத் தெரிவித்து பரிசளித்து விட்டுக் கிளம்பிச் சென்றனர்.
சொந்தக்காரர்களிடம் எவருக்கெல்லாம் மைசுரைச் சுற்றிப்பார்க்க விருப்பமுள்ளதோ அவர்களை வேனில் ஏறச்சொன்னான் நவீன். ஈஸ்வரனைத் தவிர அனைவரும் ஏறினார்கள். ஆர்டர் செய்யப்பட்டிருந்த மத்திய உணவு வருவதற்குள் முக்கியமாக பார்க்க வேண்டிய சில இடங்களை வேன் ட்ரைவரிடம் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான் நவீன். அப்போது அம்புஜம் மிருதுளாவிடம்
“எல்லாத்தையும் ஓரளவுக்கு ஒதுக்கி வச்சிருக்கேன். நான் இருக்கணுமா இல்ல இவா கூட ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வரட்டுமா மிருது “
“அம்மா அப்பா ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ. நான் பார்த்துக்கறேன்”
இடங்களைச் சுற்றிப்பார்க்க அனைவரும் வேனில் சென்றதும் நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக எல்லா இடத்தையும் ஒதுக்கி எல்லாப் பொருட்களையும் பைகளில் போட்டு கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதை தனியாக வைத்து மற்றவைகளை அடுக்கி வைத்து என்று செய்து முடித்ததும் ஹாலில் வந்து அமர்ந்தனர். இவர்கள் செய்வதனைத்தையும் ஹாலில் அமர்ந்தவாறே பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தார் ஈஸ்வரன். அவர்கள் வந்து அமர்ந்ததும் மெல்ல ஆரம்பித்தார் ஈஸ்வரன்
“ஆமாம் இவாளை எல்லாம் நீங்க இன்வைட் பண்ணிருந்தேங்களா?”
“ஆமாம்! இது என்ன கேள்வி? இன்வைட் பண்ணாமலேயே வர்றதுக்கு இவா எல்லாரும் என்ன நவீனும் மிருதுளாவுமா?”
“அதுக்கில்ல இப்ப எல்லாம் சில பேரு பத்திரிகை கிடைச்சாலும் …கிடைக்கலைன்னு சொல்லறா.”
“அப்படியா அது யாருன்னு சொல்லேன் தெரிஞ்சுக்குவோம்”
“எல்லாம் நம்ம பிச்சுமணி பொண்டாட்டி உன் அம்பிகா மாமி தான்.”
“மாமியா!!! ச்சே ச்சே! இருக்காதுப்பா”
“அவளைப் பத்தி எல்லாம் உனக்கு தெரியாது. அவளை மாதிரி இருக்கறவா எல்லாம் பத்திரிகையை வாங்கி கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுட்டு பத்திரிகையே வரலைன்னு சொல்லிடுவா தெரியுமா?”
“ச்சே ச்சே!! பத்திரிகையை யாராவது ஃபர்ஸ்ட்ஆஃப் ஆல் கிழிப்பாளா? இல்லப்பா நீங்க சொல்லறது ஒப்பலை”
“நானே என் கண்ணால பார்த்திருக்கேன்!”
“எதை? அம்பிகா மாமி பத்திரிகையை கிழிக்கறதையா?”
“இல்லடா அவா ஆத்து டஸ்ட்பின்ல பத்திரிகை கிடக்கறதை”
“நீ ஏன் அவா ஆத்து டஸ்ட்பின்னை போய் பார்த்த?”
“அடப் போடா இப்படி தான் எல்லாரும் பண்ணறாங்கறத புரிஞ்சுக்கத் தான் சொல்லறேன் நீ என்னடான்னா ஏட்டிக்குப் போட்டியா பேசற”
“சரி சரி மிருது ஃபோன் பேசப் போனயே யாரு ஃபோன்ல?”
“கேட்டரிங்காரா தான் நவீ. சாப்பாடு அனுப்பிட்டாளாம். இன்னும் ஒரு அரை மணிநேரத்துல இங்க வந்துடுமாம். அதை இன்ஃபார்ம் பண்ண தான் கால் பண்ணினா.”
“ஓ !! ஓகே ஓகே! டூர் போனவா வர்றதுக்கு இன்னும் மினிமம் ஒன் அவர் ஆகும்.”
“இப்ப என்ன அதுவரைக்கும் உட்காருவோம்”
“சரி நான் போய் கொஞ்சநேரம் அந்த ரூம்ல போய் படுத்துக்கறேன்”
“அப்பா நீங்க வீட்டை சுத்திப் பார்க்கலையே. வாங்கோ கூட்டிண்டு போய் காட்டறேன்”
“இல்ல பரவாயில்ல நான் போய் தூங்கறேன்”
“சரிப்பா அப்போ அங்க உங்களுக்கு விரிச்சு வைக்கறேன் வந்து படுத்துக்கோங்கோ”
என்று பாயை விரித்து படுத்துக்கச் சொன்னாள் மிருதுளா. அந்த அறையின் கதவை சாத்திவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தமர்ந்தாள்.
“நவீன் அது எப்படி பத்திரிகையை கிழிப்பா சொல்லுங்கோ. அப்பா சொல்லறது சரியில்லை”
“ம்…அவர் சொல்லறது எல்லாம் மிகச் சரியா தான் சொல்லறார் மிருது உனக்குத்தான் அதோட உள்ளர்த்தம் புரியலை”
“மாமி அப்படிப் பண்ணுவாளா? அவாளுக்கும் மூணு பொண்ணுகள் இருக்காளே!”
“மாமி எல்லாம் ஒண்ணும் பண்ணலை. நீ தான் அப்படி பண்ணியிருப்பன்னு உன் மாமனார் அம்பிகா மாமியை வைத்து எனக்குப் புரிய வைக்கறாராம். அது அவர் அந்த டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணினதுமே நான் தெரிஞ்சுண்டுட்டேன்”
“என்னது நானா!! மாமியே அப்படி பண்ணமாட்டானு சொல்லறேன் இதுல நான் எப்படி பண்ணுவேன்”
“அதுதான் அவாளோட சாமர்த்தியம். பத்திரிகை அனுப்பாதது அவா தப்பு ஆனா அதையே எப்படி ட்விஸ்ட் பண்ணி உன் மேல பழியை போடறா பார்த்தயா? இதை சொல்லத்தான் அவர் மத்தவாளோட வெளில போகாம இங்க இருந்ததற்கான காரணம். அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் போய் படுத்தாச்சு”
“ஓ!!! அப்படியா!!! ச்சே நான் கூட அவர் சொல்லறதை நம்பியிருபபேன்”
“நான் நம்பவே மாட்டேன் மிருது.”
“நவீ எனக்கு ஒரு டவுட்டு. இவர் பத்திரிகையில் பெயர் அட்ரெஸ் மட்டும் தான் எழுதுவார் அதைப் போஸ்ட் பண்ணறது இவா கூடவே இருக்கும் ப்ரவீனா தான் இருக்கும். ஏன்னா இவர் மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி போய் போஸ்ட் பாக்ஸில் எல்லாம் போட மாட்டார்ன்னு நமக்கு நல்லாவே தெரியும்.”
“ஸோ?”
“ஸோ ஒரு வேளை இவர் பத்திரிகையை ஒழுங்கா போஸ்ட் பண்ணச் சொல்லி அதில் ப்ரவீன் ஏதாவது விளையாடறானா? ஏன்னா நாம இவா தான் அனுப்பலைன்னு நினைப்போம் இல்லையா!!! இந்த பதினைந்து வருட கல்யாண வாழ்க்கை என்னை பெரிய டிடெக்டிவ் ஏஜென்ட்டாவே மாத்திடும்ன்னு நினைக்கறேன்.”
“ஹா!!ஹா!!ஹா!! அதுக்கும் வாய்ப்பிருக்கலாம் மிருது. கான்ட் சே!! எல்லாம் ஒரே குட்டையில ஊரின மட்டைகள் தானே!”
“ஹலோ நீங்களும் அதே குட்டையில் ஊரினவர் தான்… அதை மறந்திடாதீங்கோ”
“நான் மறக்கலை மிருது. ஆனா அந்த குட்டையிலேந்து பதினாறு வயசுலுயே நான் வெளியே போயிட்டேன் அதுனால அதோட இம்பாக்ட் அவ்வளவா இல்லை”
“ம்….ம்….இருங்கோ ஏதோ கால் வர்றது…….கஜேஸ்வரி தான்….உஷ்…ஹலோ கஜேஸ்வரி சொல்லு எப்படி இருக்க? கொழந்தகள் எப்படி இருக்கா?”
“நாங்க நல்லா இருக்கோம். உங்க வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நல்லப் படிம
யா முடிஞ்சுதா?”
“ம்…எல்லாம் நல்லபடியா நடந்தது. அப்பாவைத் தவிர எல்லாருமா ஊரைச் சுத்திப் பார்க்க போயிருக்கா”
“எல்லாரும்னா?”
“எல்லாரும்னா எல்லாரும் தான் நம்ம சொந்தக்காரா தான்”
“அப்படி!! நம்ம சொந்தக்காரா வந்திருக்காளா?”
“ஆமாம்!! ஏன் அதை இவ்வளவு சந்தேகத்தோடு கேட்கற?”
“ம்…இல்ல இல்ல ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன். சரி அண்ணா இருக்காளா கவின் பேசணுமாம்”
“ம்…இரு இதோ குடுக்கறேன்”
“ஹலோ கங்கிராட்ஸ் நவீன்”
“ஆங். தாங்க்ஸ்.”
“அப்பறம் விசேஷமெல்லாம் எப்படி நடந்தது?”
“எல்லாம் நல்லபடியா நடந்தது. ம்…சரி மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்திருக்கா நாங்க அங்க போகணும் வச்சுடட்டுமா? அப்புறமா பேசறேன்”
“ஏன் நவீ இப்படி பண்ணீனேங்கள்?”
“ம்….அவா பேசறதுலேந்து உனக்கு ஒண்ணுமே புரியலையா?”
“இதுல புரியாததுக்கு என்ன இருக்கு?”
“ம்…உனக்கு அப்புறமா விளக்கிச் சொல்லறேன்….சரி சரி நான் பொய் ஒண்ணும் சொல்லலை நிஜமாவே வண்டி வந்துடுத்து வா போய் சாப்பாட்டை வாங்கி உள்ளே வைப்போம்”
என்று சாப்பாட்டை அடுப்படிக்குள் வைக்கச் சொல்லிவிட்டு அனைவரும் வருவதற்காக காத்திருந்தனர். டூர் சென்ற அனைவரும் வந்தனர். எல்லோருமாக அமர்ந்து கேட்டரிங் ஆட்கள் பரிமாற வயிறார உண்டு மகிழ்ந்தனர். பின் அனைவருக்கும் தாம்பூலம், பட்சணங்கள், ரிட்டர்ன் கிஃப்ட் எல்லாம் கொடுத்து அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு அவரவர் செல்ல வேண்டிய பஸ் நிலையத்திற்கு கொண்டு போய் விடும்படி வேன் டிரைவரிடம் சொல்லி விடைப்பெற்றுக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும்.
பர்வதம், ஈஸ்வரன், அம்புஜம், ராமானுஜம், சக்தி அனைவரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த வேலையாட்களுக்கெல்லாம் மீதமிருந்த சாப்பாட்டை பரிமாறி அவர்கள் சாப்பிட்டப் பின் கேட்டரிங் காரர்களுக்கு பணம் செட்டில் செய்து… வீட்டைச் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர் நவீனும் மிருதாளாவும்.
அன்று இரவு ஈஸ்வரன் தம்பதியருக்கும் ராமானுஜம் தம்பதியருக்கும் டிரெயினில் செக்கண்ட் ஏசியில் டிக்கெட் புக் செய்திருந்தாள் மிருதுளா. அது படியே அவர்களுக்கு டின்னர் செய்து கொடுத்து. தாம்பூலம், பழங்கள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை ரெயிலில் ஏற்றி உட்கார வைத்து ரெயில் புறப்படும் வரை அங்கேயே இருந்து வழியனுப்பிவிட்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்று படுத்துறங்கினர்.
தொடரும்……