அத்தியாயம் 100: ப்ரவீன் பிரவேசம்!

மைசூருக்கு வந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். மிருதுளா புது வீட்டின் மர வேலைகளை மேற்பார்வைப் பார்ப்பதில் மும்முரமானாள். வீட்டின் வேலைகள் எல்லாம் மளமளவென நடந்தேறியது. அவர்கள் திட்டமிட்டப்படியே செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளில் புது வீட்டிற்கு குடிப் போனார்கள். புது வீட்டில் அவர்கள் முதலில் வினாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடினார்கள். நவீனுக்கும், சக்திக்கும் வழக்கமான ஆஃபீஸ், ஸ்கூல் வேலைகள் தான் இருந்தன. ஆனால் புது வீட்டிற்குள் சென்றதும் மிருதுளாவுக்கு வழக்கமான வீட்டு வேலைகளுடன் புது வீட்டில் பொருட்களை அது ..அது இடத்தில் அடுக்கி வைக்கும் வேலை இருந்ததால் அமர நேரமின்றி பம்பரமாக சுழன்றாள். அப்படி சுறுசுறுப்பாக வேலையைப் பார்த்ததில் மூன்றே நாட்களில் புது வீட்டில் வசதியாக செட் ஆனார்கள் மூவரும். அதன் பின் மிருதுளாவிற்கு வழக்கமான வீட்டு வேலைகளே இருந்தன. அவள் வீட்டு வேலைகளுக்கென்று வேலை ஆட்கள் வைக்காது அனைத்து வேலைகளையும் அவளே செய்து வந்தாள்.

அந்த சொசைட்டியில் முதன்முதலில் குடிப் போனவர்கள் நவீன் குடும்பத்தினரே! அவர்கள் அங்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதை அவர்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டதன் விளைவாக சிட்டியை விட்டுத் தள்ளி இருக்கிறதே என்றெண்ணி வராமலிருந்தவர்கள் கூட அடுத்தடுத்து அவரவர் வீடுகளுக்கு குடி வந்தனர். மொத்தம் இருநூறு வீடுகள் இருந்தன. அதில் ஒரு பதினைந்து வீடுகளில் ஆட்கள் குடி வந்தனர்.

அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் நவீனும் மிருதுளாவும். பதினைந்து குடும்பங்களும் ஒருவரோடு ஒருவர் நல்ல நண்பர்களாயினர். ஜனவரி மாதம் வந்தது பொங்கலும் வந்தது மிருதுளாவுக்கு ஃபோனும் வந்தது ப்ரவீனிடமிருந்து

“ஹலோ மன்னி ஹாப்பி பொங்கல். எப்படி இருக்கேங்கள்?”

“ஆங் ஹாப்பி பொங்கல். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“நல்லா இருக்கோம். மன்னி …துளசிக்கு வர்ற ரிப்பப்ளிக் டேயை ஒட்டி லீவு வர்றது அதுதான் கொஞ்சம் ரெஸ்ட்டா இருக்கட்டுமேன்னு உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம். அப்படியே உங்க புது வீட்டையும் பார்த்தா மாதிரி இருக்கும் இல்லையா!! நீங்க ஆத்துல தானே இருப்பேங்கள்?”

“ஆங்…நாங்க ஆத்துல தான் இருப்போம். வாங்கோ வாங்கோ”

“ம்…சரி மன்னி அதைச் சொல்லத் தான் கால் பண்ணினேன். அண்ணாகிட்டேயும் சக்திக்கிட்டேயும் விசாரிச்சதா சொல்லிடுங்கோ. வச்சுடறேன்”

“ஆங் சரி. நீயும் அங்கே எல்லார்கிட்டேயும் நானும் விசாரிச்சதா சொல்லிடு”

என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம்

“அவன் சொன்னதை கவனிச்சியா மிருது?”

“என்ன நவீ?”

“ரெஸ்ட்டுக்கு வர்றாளாம்…கேட்டியா அதை”

“ம்…ம்…கேட்டேன் கேட்டேன்….”

“ஏன் நீ அவ அம்மா? இல்ல இது அவ அம்மா வீடா? ரெஸ்ட் எடுக்க வர்றதுக்கு!”

“விடுங்கோப்பா.”

“நோ நோ …மிருது…நோ …டு நாட் என்கரேஜ் தீஸ் திங்க்ஸ். நீ அவன்கிட்ட உடனே நான் இப்போ கேட்டா மாதிரி கேட்டிருக்கணும்.”

“கேட்டிருக்கணும் தான்….அதுனால நமக்கு என்னப்பா கிடைக்கப் போறது….”

“அது என்ன அப்படி சொல்லறது? நீ என்ன அவளுக்கு வேலை செய்யணும்!! மகாராணி வந்து ரெஸ்ட் எடுப்பாளாமோ? ஏன் நீயும் தான் வேலைக்குப் போன….எங்க போய் ரெஸ்ட் எடுத்தயாம்”

“ம்….நானெல்லாம் முட்டாள்ப்பா…எனக்கு புருஷனை விட்டு ஒவ்வொண்ணுக்கும் பேச வைக்கத் தெரியலை. என்ன பண்ண சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இதெல்லாம் கூட பரவாயில்லை ஆனா….விசேஷத்துக்கு வேணும்னே வராம ஆட்டிட்டிங் அது இதுன்னு இருந்துட்டு ரெஸ்ட் எடுக்க வரேன்னு சொல்லறது தான் எனக்கு வருத்தமா இருக்கு. ம்….என்ன பண்ண..? மனிதர்கள் பல விதம்”

“எத்தனை நாள் இருக்கப் போறாளோ தெரியலையே!!”

“என்னப்பா மிஞ்சிப் போனா இரண்டு நாள் அவ்வளவு தானே. வந்துட்டுப் போட்டும்”

“இதே மாதிரி எப்பவாவது நீ அவா ஆத்து ரெஸ்ட்டுக்கு வர்றேன்னு சொல்லிப்பாரு உடனே ஆடிட்டிங் வந்திடும்”

“அச்சச்சோ லீவ் இட் பா”

ப்ரவீனும் துளசியும் அவர்கள் பிள்ளைகளும் நவீன் வீட்டிற்கு பர்வதீஸ்வரன் வீட்டிலிருந்து கிளம்பினர். அவர்கள் காரில் கிளம்பிச் சென்றதும் ஈஸ்வரன் மிருதுளாவுக்கு கால் செய்தார்.

“ஹலோ!”

“ஹலோ அப்பா சொல்லுங்கோ”

“ப்ரவீனும் துளசியும் அவா கார்லேயே உங்காத்துக்கு வர இங்கேந்து புறப்பட்டுட்டா.”

“அப்படியா !! அப்போ எப்படியும் மத்தியானம் வந்துடுவா”

“ஆங் ஆமாம். இரு பர்வதம் பேசறா”

“ஹலோ எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? புது வீடெல்லாம் செட் ஆயாச்சா?”

“ம்….நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். ஆங் புது வீடும் செட் ஆயாச்சு.”

“அப்பா சொன்னா இல்லையா ப்ரவீனும் துளசியும் அங்க வர்றதைப் பத்தி….”

“ஆங் ஆமாம்…ப்ரவீனும் அன்னைக்கே ஃபோன் போட்டுச் சொன்னானே”

“ஆமாம் ஆமாம்…அது ஒண்ணுமில்லை துளசிக்கு இந்த வருஷம் எடுக்காத லீவு ஒரு வாரம் பாக்கியிருக்கு அதுதான் குடியரசுத் தினத்தை ஒட்டி அந்த லீவையும் எடுத்துண்டு தான் அங்க வர்றா. எங்களுக்கும் ஒரு பத்து நாள் நிம்மதியா ஃப்ரீயா குழந்தைகளை கவனிச்சுக்கறதுலேந்து விடுப்பட்டிருக்கலாம்னு தான் நாங்களும் சரின்னு அவாளை போகச் சொன்னோம். அவா பத்து நாள் தங்கறதுக்கு தான் வர்றான்னு உன்கிட்ட சொல்லத்தான் ஃபோன் பண்ணினோம். சரி வச்சுடவா”

என்று ஃபோனை வைத்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. நவீன் ஆஃபீஸிலிருந்து வருவதற்குள் ப்ரவீன் துளசி வீட்டிற்கு வந்து விடுவார்களே என்று வேறு வழியில்லாமல் உடனே நவீனுக்கு ஃபோன் போட்டு விவரத்தைச் சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்

“என்னமோ சொன்ன ரெண்டு நாளுக்கே தான் இருப்பானுட்டு!!”

“ரெண்டோ, பத்தோ இல்ல ஒரு மாசமோ அதைப் பத்தி எனக்கு கவலையில்லை ஆனா அது என்ன அதை ப்ரவீனோ துளசியோ நம்ம கிட்ட நேரடியா சொல்லாம உங்க அப்பா அம்மாவை சொல்ல வைக்கறது? வீட்டுக்கு வந்து தங்கறவா சொல்லணுமா இல்லையா? மாமியாரும் மாட்டுப்பொண்ணுமா ரெஸ்ட் எடுக்க நான் தான் கிடைச்சேனா? இந்த ஆட்டிட்யூடு தான் எனக்குப் பிடிக்கலை நவீ”

“நீ உன் மாமியார் மாமனார் ஃபோன் பண்ணினா மாதிரியே காட்டிக்காதே. எதுவும் சொல்லிக்காதே. அவாளா சொல்லட்டும் சரியா…நான் சொன்னதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ மிருது. சரி நான் ஒரு மீட்டிங்குக்கு போகணும் பை.”

“ஓகே பை நவீ. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்”

“இட்ஸ் ஓகே!! நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. மறுபடியும் ஏமாளியாகாதே மிருது”

“சரிப்பா பை. நீங்க மீட்டிங்குக்குப் போங்கோ”

என்று ஃபோனை வைத்ததும் கிடுகிடுவென பாக்கி சமையலை முடித்து, வீட்டை கூட்டித் துடைத்து குளித்து விட்டு வந்து குக்கரில் சாதம் வைத்தாள். குக்கர் ஆனதும் வீட்டின் காலிங் பெல் சப்தம் கேட்டது. சென்று கதவைத் திறந்தாள் மிருதுளா

“ஹலோ வாங்கோ வாங்கோ. ஏய் குட்டிஸ் எப்படி இருக்கேங்கள். உங்களுக்கும் ஸ்கூல் லீவா”

“இல்ல மன்னி அவாளுக்கு மூணு நாள் தான் லீவு…மேலே லீவு வேணும்னா போட்டாகணும்”

“ஓ!! அப்படியா. உட்காருங்கோ இதோ வர்றேன்……இந்தாங்கோ ஜூஸ் எடுத்துக்கோங்கோ”

“இந்த வீட்டுல செட்டில் ஆயாச்சுப் போல”

“ஆமாம் ப்ரவீன் ஒரு வழியா எல்லா வேலைகளையும் முடிச்சு செட்டில் ஆகிட்டோம்”

“சரி சரி சாப்பிட வாங்கோ. பசிக்கலையா?”

“இல்ல அண்ணாவும், சக்தியும் வந்திடட்டுமே”

“அவா எங்கேந்து வருவா? அவா ரெண்டு பேரும் சாயந்தரம் தான் வருவா. சக்தி ஸ்கூல் பஸ்ல ஐந்து மணிக்கும் நவீ ஒரு ஆறரை மணிக்கும் வருவார்.”

“அப்போ அவாளுக்கு லஞ்சு?”

“அதெல்லாம் காலையிலேயே கட்டிக் கொடுத்தனுப்பிடுவேன். லஞ்சு, ஸானாக்ஸ் எல்லாமே கொண்டு போயிடுவா. சரி சரி வாங்கோ நாம சாப்பிடலாம்”

என்று வந்தவர்களுக்குப் பரிமாறியப் பின் தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள் மிருதுளா. அனைவரும் சாப்பிட்டதும் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்தாள். துளசி ஏதோ ஹெல்ப் பண்ணுவது போல பாவனை மட்டும் செய்து விட்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதுப போல அடுப்படியிலிருந்து கிளம்பி ஹாலில் சோஃபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள். வேலைகளை முடித்துவிட்டு வந்த மிருதுளா ப்ரவீனிடம் விருந்தினர் அறையை காண்பித்து

“இது தான் கெஸ்ட்ரூம். நீங்க யூஸ் பண்ணிக்கலாம். அது ரெஸ்ட்ரூம். இந்த வார்ட்ரோப் எல்லாம் காலியா தான் இருக்கு நீங்கள் யூஸ் பண்ணிக்கலாம்”

என்று சொன்னதும் தங்கள் பைகளை எல்லாம் அங்குக் கொண்டு போய் வைத்து செட்டில் ஆனார்கள். மிருதுளா ஹாலில் அமர்ந்திருந்தாள். அந்த ரூமிற்குள் சென்றவர்கள் அறையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களாகவே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏதோ ரிசார்ட்டிற்கு வந்தவர்கள் போலவும் மிருதுளா வேலை ஆள் போலவும் நடந்துக் கொண்டது மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை. அவளும் ஹாலில் அமர்ந்துக் கொண்டு தாழிட்ட கதவைத் திறந்து வந்தவர்கள் ஹாலுக்கு வந்து தன்னுடன் பேசுவார்கள் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாலை நாலரை மணிக்கு கதவைத் திறந்து வெளியே வந்த துளசி…மிருதுளாவிடம்

“மன்னி காபி இப்போ வைப்பேங்களா இல்லை அண்ணா வந்துட்டுத் தானா?”

“ஏன் உங்களுக்கு வேணுமா?”

“ஆமாம் மணி நாலரை ஆயிடுத்தே”

“ம்….சரி சரி இதோ வர்றேன்.”

என்று எழுந்துப் போய் அனைவருக்கும் காபியும், குழந்தைகளுக்கு பூஸ்ட்டும் போட்டுக் குடுத்தாள். அதை அவர்கள் அறைக்குள் எடுத்துச் சென்று மீண்டும் கதவடைத்தாள் துளசி. அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதை அப்படியே அடக்கிக் கொண்டு தனது காபியை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அருந்தினாள். மணி ஐந்தடித்தது…மிருதுளா வாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். விருந்தினர் எங்கோ புறப்பட்டு வாசலுக்கு வந்து…

“என்ன மன்னி சக்தியை இன்னும் காணலை”

“வருவா ….இப்படி எப்பவாவது பத்து பதினைந்து நிமிஷம் லேட்டும் ஆகும். ஆமாம் நீங்க எல்லாரும் எங்கே கிளம்பியிருக்கேங்கள்?”

“சும்மா இந்த சொசைட்டியை சுத்திப் பார்த்துட்டு அப்படியே ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்னு கிளம்பியிருக்கோம். இதுக்குள்ள பார்க் இருக்கா மன்னி?”

“ஓ!! சரி சரி. போயிட்டு வாங்கோ. ஆங் பார்க் இருக்கு. இப்படியே நடந்துப் போங்கோ அந்த கார்னர்ல பார்க் இருக்கு”

“சரி நாங்க போயிட்டு வந்திடறோம்”

“ம்…பத்திரம் இங்கே இன்னமும் சில வீட்டு வேலைகள் நடந்துண்டிருக்கு. குழந்தைகளை பத்திரமா கூட்டிண்டு போங்கோ”

“ம் ஓகே மன்னி. நாங்க பார்த்துக்கறோம்”

என்று கூறிவிட்டு வெளியே சென்றனர்‌. மிருதுளா தண்ணீர் ஊற்றி விட்டு வீட்டினுள் சென்றுப் பார்த்தாள் விருந்தனர் அறையை ஏதோ ஹேட்டல்களில் சாத்தி வைத்துவிட்டுச் செல்வதைப் போல இழுத்துச் சாதனற்றிவிட்டு சென்றிருந்தனர் ப்ரவீனும் துளசியும். அதை பார்த்ததும் மனதில் புலம்பிக்கொண்டே இருந்தாள் மிருதுளா. சக்தியின் ஸ்கூல் பஸ் வந்தது. அவளுக்கு டிபன் பூஸ்ட் எல்லாம் கொடுத்தாள் அப்போது சக்தி

“அம்மா சித்தப்பா சித்தி எல்லாரும் வருவானு சொன்னயே…எங்கே அவா எல்லாரும்?”

“எல்லாம் வந்தாச்சு. வெளியே சுத்திப் பார்க்க போயிருக்கா”

“ஏன்மா அந்த ரூம் மூடியிருக்கு?”

“அதை அவாளுக்குக் கொடுத்தேன் அவா அப்படி மூடிட்டுப் போயிருக்கா”

“நம்ம வீட்டு ரூம் கதவை அவா ஏன் சாத்திட்டுப் போயிருக்கா?”

“அது உனக்கு தெரியறது ஆனா அவாளுக்குத் தெரியலையே…இதோ அப்பாவும் வந்துட்டா”

என்று நவீன் வந்ததும் அவனுக்கு காபியும் டிஃபனும் கொடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள் அதற்குள் வெளியே சென்ற ப்ரவீன் குடும்பம் திரும்பி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நவீன்

“வாடா ப்ரவீன். வா வா.”

“ஆங் அண்ணா. எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன். உன் வேலை எல்லாம் எப்படி போறது?”

“எல்லாம் நல்லா போறதுண்ணா”

“ஏய் குட்டிப் பசங்களா எப்படிடா இருக்கேங்கள்?”

“ஏய் பெரியப்பா கேட்கறா இல்ல பதில் சொல்லுங்கோடா”

“ம் நல்லா இருக்கோம்”

என்று சற்று நேரம் பேசிவிட்டு அவர்கள் அறைக்குள் சென்ற கதவைத் தாழிட்டனர். அதைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்

“என்ன இது அவா பாட்டுக்கு கதவை சாத்திண்டுட்டா”

“இப்படி தான் வந்ததுலேந்து இருக்கா. நான் பாட்டுக்கு ஹால்ல உட்கார்ந்துண்டு இருந்தேன்”

“ம்…..சரி நாளைக்கு எங்கப் போகலாம்?”

“மைசுரைச் சுத்திக் காமிக்கலாம். வேற எங்கப் போறது?”

“ஓகே.”

“சரி நான் போய் டின்னர் பண்ணட்டும்”

என்று கூறிவிட்டு எழுந்துச் சென்று அனைவருக்கும் தோசைச் சுட்டு சட்னி அரைத்து வைத்து நவீனையும் சக்தியையும் சாப்பிடக் கூப்பிட்டதும் விருந்தினர் அறைத் திறக்கப்பட்டது. அதிலிருந்து வந்த ப்ரவீன் குடும்பத்தினர் டின்னரை சாப்பிட்டனர். பின் அதிசயமாக சற்று நேரம் ஹால் சோஃபாவில் அமர்ந்தனர். அனைவரும் சாப்பிட்டதும் ப்ரவீன் நவீனிடம்

“அண்ணா உனக்கு சாட்டர்டே லீவு தானே?”

“ஆமாம் ஏன் கேட்குற?”

“இல்ல நாளைக்கு சாட்டர்டே ஆச்சே….”

“சரி அதுக்கு”

“எங்கேயாவது போகலாமான்னு ….”

“ஆங் போகலாமே! நான் வண்டி ஏற்பாடு செய்திருக்கேன் அதுல நாம எல்லாருமா போய் மைசூரைச் சுற்றிப் பார்த்துட்டு வருவோம்”

“ஓகே. எத்தனை மணிக்கு ரெடியாகணும்?”

“ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பினா தான் எல்லா இடத்தையும் கவர் பண்ணிட்டு வர முடியும்”

“ஓ! ஓகே ஓகே. சரி அப்போ போய் இப்போ தூங்கினா தான் காலையில சீக்கிரமா எழுந்துக்க முடியும். ஓகே குட் நைட் நாங்க போய் தூங்கறோம்”

“குட் நைட்”

“மன்னி குழந்தைகளுக்கு பால் வேணும்”

“அப்படியா? இரு வச்சுத் தர்றேன்.”

என்று வேலைகளை முடித்து அக்கடான்னு உட்கார்ந்த பின் மீண்டும் அடுப்படிக்குச் சென்று பால் வைத்துக் கொடுத்தாள் மிருதுளா. அவர்கள் உறங்கச் சென்றதும் சக்தி அவள் அறைக்குச் சென்றாள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்….

“இங்க பாருங்கோ நவீன் இங்க தங்கப்போற நாட்களைப் பத்தி அவா எதுவுமே என்கிட்ட சொல்லலை. நானும் உங்க அப்பா அம்மா ஃபோன் பண்ணின விவரத்தை சொல்லலை. ஆனா என்னால இவாளுக்கு வேலை ஆள் மாதிரி இப்படி பத்து நாளைக்கெல்லாம் செஞ்சுக் குடுக்க முடியாது. அந்த துளசி ஒரு துரும்பக்கூட நகத்த மாட்டேங்கறா. நம்ம வீட்டுக்கே வந்துட்டு நம்ம ரூமுலயே இருந்துண்டு கும்மாளம் போடறா…வீட்டுக்கு சொந்தகாரியான நான் வேலைக்காரி மாதிரி ஹால்ல உட்கார்ந்திருந்தேன். ஏன்ப்பா ஒருத்தா வீட்டுக்குப் போனோம்னா அவாளோட உட்கார்ந்து பேசுவோமா? இல்ல நாம பாட்டுக்கு சாப்பிடற நேரத்துக்கு மட்டும் அட்டென்டன்ஸ் கொடுத்துட்டு ரூமுக்குள்ளப் போய் கதவை சாத்திப்போமா?”

“இங்க பாரு மிருது அவா எல்லாம் அப்படிதான். நீ அவளை வேலை வாங்கு. அவ என்ன அவ அம்மா வீட்டுக்கா வந்திருக்கா ஹாய்யா ரூமுக்குள்ள இருக்க!!”

“ஆமாம் அவ அம்மா வீட்டுக்குப் போனா கூட அவளால இப்படி இருக்க முடியாது நவீ. இதுல என்ன கூத்துன்னா…அவா சாயந்தரம் இந்த ஏரியாவை சுத்திப் பார்க்க வெளியில போனா… அப்போ அவா ரூம் கதவை சாத்திட்டுப்போயிருக்காப்பா”

“மிருது அவாளுக்கு செஞ்சுக்காட்டினனா உன்னை நல்லா யூஸ் பண்ணிக்குவா அதை ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்கும் அவா இங்கே தங்குறதைப் பத்தி ஏதும் பேசலைன்னா நானே கேட்கப் போறேன். சரி இப்போ படுத்து நல்லா தூங்கு”

அனைவரும் நன்றாக உறங்கினர். மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல மிருதுளா எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு வைத்துவிட்டு ஃப்ரெஷ் ஆகச் சென்று வந்து நவீனுக்கும் தனக்கும் காபிப் போட்டுக் கொண்டு வந்து அவர்கள் வாசல் தோட்டத்தின் திட்டில் அமர்ந்து அருந்தினர். பின் கிடுகிடுவென காலை டிஃபன் செய்து அவற்றை டைனிங் டேபிளில் வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்படும் போது மகாராணி துளசி அம்மையாரின் கணவர் ப்ரவீன் எழுந்து வந்து

“குட் மார்னிங் மன்னி. அண்ணா இன்னும் எழுந்துக்கலையா?”

“நாங்க எப்பவும் ஐந்தரை மணிக்கு எழுந்துப்போம். சரி துளசி எழுந்துக்கலையா?”

“அவ நல்லா தூங்கறா ….பாவம் அதுதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்”

இதைக் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த நவீன்

“வெளில போகணும் ஞாபகம் இருக்கு இல்ல…மணி இப்பவே ஏழரை ஆயாச்சு”

“ஆங் அதெல்லாம் அவ எட்டரைக்கு எழுந்தாலும் ஒன்பது மணிக்கெல்லாம் ரெடியாகிடுவா…மன்னி காபி “

“இரு போட்டுத் தரேன்.”

என்று குளிக்கக் கிளம்பிய மிருதுளா ப்ரவீனுக்கு காபிப் போட்டுக் குடுத்துவிட்டுக் கிளம்பும் போது துளசி எழுந்து வந்து காபி கேட்டாள் அதற்கு மிருதுளா அவளிடம்

“துளசி காபி டிக்காக்ஷன் மேடை மேல இருக்கு. பால் ஃப்ரிட்ஜில் இருக்கு. கொஞ்சம் நீயே போட்டுண்டுடேன். நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்”

என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வந்துப் பார்த்தாள் காபி போட்ட மாதிரியே இருக்கவில்லை. அனைவரும் குளித்து ரெடியாகி வந்ததும் அமர்ந்து டிஃபன் சாப்பிட்டனர். அப்போது ப்ரவீன் மிருதுளாவிடம்

“மன்னி….துளசிக்கு காலையில காபி குடிக்கலைன்னா தலை வலிக்கும்…அதுனால கொஞ்சம் காபி போட்டுக் குடுத்திடறேங்களா?”

“நான் தான் அவளைப் போட்டுக்கச் சொல்லிட்டுத் தானே குளிக்கப் போனேன்…ஏன் அவ போட்டுக்கலையா?”

“அவ போடலைப் போல அதுதான் டிபன் சாப்பிட்டதும் காபிக் குடிச்சிட்டா பரவாயில்லையா இருக்கும் இல்லாட்டி வண்டியில நாம போகும் போது தலைவலின்னு படுத்துவா”

என்றதும் மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டே சென்று காபி போட்டு வந்து ப்ரவீனிடம் குடுத்தாள். அவன் அதை அவன் தர்மப்பத்தினியிடம் கொண்டுப் போய் குடுத்தான். மிருதுளா சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, அடுப்படியை சுத்தம் செய்துவிட்டு கிளம்பினாள். அவள் வேலைகளை முடிக்கும் வரை தன் அறையிலிருந்து வெளியே வராத துளசி மிருதுளா வேலைகளை முடித்துக் கிளம்பிவிட்டால் என்றதும் வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டாள்.

நவீன் புக் செய்திருந்த வண்டி வந்தது. அனைவரும் அதில் ஏறி மைசூரைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர். அன்று முழுவதும் ஊர் சுற்றி இரவு டின்னரையும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கும் போது நவீன் ப்ரவீனிடம்

“உனக்கு எவ்வளவு நாள் லீவு? உங்க ப்ளான் என்ன? ஏன்னா நான் அதுக்குத் தகுந்தா மாதிரி ஏற்பாடு பண்ணணும் அதுதான் கேட்டேன். ஏன்னா எனக்கு மன்டேலேந்து ஆஃபீஸ் இருக்கு சக்திக்கு ஸ்கூலுமிருக்கு அதுனால தான்…”

“நாங்க ஒரு ரெண்டு நாள் ப்ளான் தான் போட்டிருக்கோம். மன்டே கிளம்பி ஊருக்கு போற வழியில இருக்குற நம்ம ஒண்ணு விட்ட சித்தப்பா ஆத்துல ரெண்டு நாள் தங்கிட்டு புதன் கிழமை ஊருக்குப் போகலாம்னு இருக்கோம். எனிவே எனக்கும் துளசிக்கும் பத்து நாள் லீவு இருக்கு. பசங்களுக்கு தான் ஸ்கூல்ல லீவு போடணும்.”

“அப்படியா!! அப்போ மன்டே கிளம்பறேங்களா? நான் லீவு போட வேண்டாம் ….அப்பாடா!!! எனக்கு ஒரு இம்பார்ட்டென்ட் மீட்டிங் இருக்கு. ஸோ நான் அதை அட்டென்ட் பண்ணலாம்.”

என்றதும் துளசி ப்ரவீனைப் பார்த்தாள். உடனே அவன்

“மன்னி அப்பா அம்மா உங்களுக்கு நேத்து கால் பண்ணினாளா?”

“ஆமாம் பண்ணினா. அதுக்கென்ன?”

“இல்லை சும்மா தான் கேட்டேன்”

என்று மிருதுளாவுக்கு தங்கள் ப்ளான் முன்னதாகவே மூத்த தம்பதியர் மூலம் தெரியும் என்பதை அவளுக்கும் நவீனுக்கும் இந்த ஒயு கேள்விக் கொண்டு ஞாபகம் படுத்துவதாக எண்ணிக் கேட்டான் ப்ரவீன். அதற்கு பிடிக் கொடுக்காமல் பேசினர் நவீனும் மிருதுளாவும். வீடு வந்து சேர்ந்தனர். அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கினர். மறுநாளும் இதே போல வெளியே சென்று சுற்றி சாப்பிட்டு இரவு வந்து உறங்கினர். திங்கட்கிழமை காலை ஏழரை மணிக்கெல்லாம் ரெடியாகி நவீனும் சக்தியும் ஆஃபீஸ் மற்றும் ஸ்கூலுக்கு கிளம்பிச் சென்றனர். மிருதுளா தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு குளித்து வந்தாள். அப்போது ஹாலில் அம்ர்ந்திருந்த துளசி ப்ரவீனிடம் மிருதுளா காதில் விழும்படி

“ஆமாம் இன்னைக்கு உங்க சித்தப்பா ஆத்துக்கு போகப் போறோம்னு சொன்னேங்களே அவாகிட்ட நாம வரோம்னு சொல்ல வேண்டாமா ? அவாளுக்கு ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ”

“அது தான் நான் பண்ணினேன் போக மாட்டேங்கறது”

என்று ஏதேதோ ஷோ போட்டுக்கொண்டிருந்தனர். அதை கண்டும் காணாததுப் போல அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளிடம் ப்ரவீன்

“மன்னி உங்ககிட்ட சித்தப்பா நம்பர் இருக்கா?”

“ம்…இருக்கே….ஏன் கேட்குற”

“இல்ல நான் வச்சிருக்கற நம்பர் போகமாட்டேங்கறது”

“அப்படியா என்ன நம்பர் வச்சிருக்க சொல்லு..நான் செக் பண்ணறேன்”

நம்பரை ப்ரவீன் சொன்னதும் மிருதுளா

“ஆங் இதே நம்பர் தான் நானும் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஏன் போக மாட்டேங்கறது?”

“தெரியலையே…”

“இரு நான் கால் செய்து பார்க்கறேன்…ஆங் ரிங் போறதே”

“அப்படியா குடுங்கோ பேசிடறேன்”

என சாமர்த்தியமாக மிருதுளாவையே கால் செய்ய வைத்து அவள் நம்பரிலிருந்தே அவன் சித்தப்பாவிடம் பேசினான்

“ஹலோ சித்தப்பா எப்படி இருக்கேங்கள்? நான் ப்ரவீன் பேசறேன்”

“ஹாய் நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? என்ன இது மிருதுளா நம்பர்லேந்து பேசுற?”

“ஆமாம் நாங்க இங்க அண்ணா ஆத்துக்கு வந்திருக்கோம். அப்படியே உங்காத்துலேயும் தங்கலாம்னு யோசிக்கறோம்”

“அப்படியா எப்போ வர்றேங்கள்?”

“அநேகமா இன்னைக்கு வந்தாலும் வருவோம். நான் இங்கேந்து கிளம்பினதும் உங்களுக்கு கால் பண்ணறேன். ஓகே சித்தப்பா சித்தியை எல்லாம் கேட்டதா சொல்லுங்கோ. வச்சுடறேன் பை”

“பை டா. டேக் கேர். பத்திரமா வாங்கோ”

என்று ஃபோன் பேசி முடித்ததும் மிருதுளாவிடம் கொடுத்தான் ப்ரவீன். அப்போது மிருதுளா

“நீங்க அவா ஆத்துலேயும் தங்கிட்டுப் போற ப்ளன்ல தானே வந்திருப்பதா நேத்து சொன்னேங்கள் அப்போ அப்பவே அவாகிட்ட நீங்க சொல்லலையா?”

“இல்ல இப்போ தான் தோனித்து”

“எது அவாகிட்ட சொல்லணும்னா இல்ல அங்க போறதே வா?”

“இரண்டும்னு வச்சுக்கோங்கோளேன்”

என்று ப்ரவீன் சொன்னதும் மிருதுளாவுக்கு நவீன் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. அதனால் அதற்கு மேல் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுந்து அடுப்படிக்குள் சென்றாள். அந்தப்புர வாயில் திறந்திருந்ததால் மிருதுளா அங்கு சென்று துளசியிடம்

“நீங்க மத்தியானம் சாப்டுட்டு தானே கிளம்புவேங்கள்? ஏன் கேட்கறேன்னா….அதுக்கு தகுந்தா மாதிரி குக்கர்ல சாதம் வைக்கணும்”

“எனக்கு தெரியலையே மன்னி…அவர்கிட்ட கேளுங்கோ”

என்று தனக்கு ஒன்றுமே தெரியாததுப் போல துளசி சொல்ல உடனே ஹாலுக்கு சென்று ப்ரவீனிடம் கேட்க வந்த மிருதுளா அங்கு ப்ரவீன் இல்லாததால் அவன் பேசும் குரல் வாசலில் இருந்து வர அங்கேச் சென்றாள். அவன் ஃபோனில் ஈஸ்வரனுடன் பேசிக்கொண்டிருந்தான் அதைக் கேட்டதும் ஷாக் ஆகி நின்றாள் மியுதுளா

“அப்பா என்ன நீ மன்னிகிட்ட நாங்க பத்து நாள் இருக்க வரோம்னு சொல்லலையா? அண்ணா என்னடான்னா நேத்து எப்போ கிளம்பறேங்கள்னு கேட்கறான்? நானும் இன்னைக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டேன். இப்போ நாங்க வேற வழியில்லாம சித்தப்பா ஆத்துக்கு போயி ஒருநாள் தங்கிட்டு ஊருக்கு வரணும். பாவம் துளசி பத்து நாள் நிம்மதியா இருக்கலாம்னா முடியலை. அவளுக்கும் கோபம் வராதா? என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ நீ மறுபடியும் மன்னிட்ட பேசு…நான் ஃபோனை வைக்கறேன்”

என்று ஃபோனை வைத்து திரும்பினான்…. மிருதுளா நின்றிருந்ததைப் பார்த்ததும்…

“மன்னி நீங்க எப்போ வந்தேங்கள்?”

“ஏன்ப்பா இது என் வீடு நான் எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வருவேன் போவேன்”

“அதுக்கில்ல மன்னி…”

“சரி அதெல்லாம் விடு. நீங்க மத்தியானம் சாப்பிட்டுட்டு தானே கிளம்புவேங்கள்? துளசிகிட்ட கேட்டேன் …அவ தான் பாவமாச்சே!!! அவளுக்குத் தெரியாதுன்னுட்டா…அதுதான் உன் கிட்ட கேட்க வந்தேன் நீ யார் கூடயோ பேசிண்டிருந்த”

“ஆங் மன்னி சாப்டுட்டு தான் கிளம்புவோம்”

என்று அப்போதும் சமாளித்தானே தவிர அவன் ஸ்தானத்திலிருந்து இறங்கி வந்து ஈஸ்வரனிடம் சொன்னதை மிருதுளாவிடம் சொல்ல துணிச்சலின்றி தன் ரூமிற்குள் சென்றான் ஏனெனில் அவன் மிருதுளாவிடமும் நவீனிடமும் அவ்வளவு திமிராக பேசியவனாயிற்றே!!!

அவன் ரூமிற்குள் சென்ற சில நொடியில் ஈஸ்வரனிடமிருந்து மிருதுளாவுக்கு கால் வந்தது. அந்த கால் எதற்காக யார் சொல்லி வருகிறது என்பதை நன்கறிந்த மிருதுளா அட்டென்ட் செய்தாள்

“ஹலோ அப்பா சொல்லுங்கோ”

“ஆங் மிருதுளா எல்லாரும் என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”

“நான் சமையல் வேலையில் இருக்கேன். நவீன் சக்தி ஆஃபீஸ் அன்ட் ஸ்கூல் போயிருகக்கா. ப்ரவீன் அன்ட் ஃபேமிலி கெஸ்ட் ரூமிலிருக்கா”

“எங்கேயும் வெளில எல்லாம் போலயோ?”

“ஓ!! வண்டி வச்சுண்டு மைசூர் ஃபுல்லா சுத்திப் பார்த்துட்டு வந்தாச்சு”

“அப்படியா. சரி அங்க நிறைய மால்ஸ் இருக்கே! சும்மா ஆத்துலேயே உட்கார்ந்திருக்காம ஏதாவது ஒரு மாலுக்கு போயிட்டு வாங்கோளேன்”

“நேத்து அதுக்கும் போயிட்டு வந்துட்டோம்ப்பா.”

“அதுனால என்ன இன்னைக்கு வேற மாலுக்கு போயிட்டு வரவேண்டியது தானே”

“நவீன் ஆஃபீஸ் போயிருக்காரே”

“நவீன இல்லாட்டி என்ன ப்ரவீன் தான் அவன் வண்டியில தானே வந்திருக்கான்! அவன்ட்ட சொன்னா உங்க எல்லாரையும் கூட்டிண்டு போகப் போறான்.”

“இல்லப்பா சக்திக்கு இன்னைக்கு ஹாஃப் டே தான் அதுனால அவ மூணு மணிக்கு வந்துடுவா. நாங்க இப்போ கிளம்பிப் போனா கூட வர்றதுக்கு எப்படியும் ஆறு மணி ஆகிடும். ஏன்னா ட்ராஃபிக் அப்படி. ஸோ சக்தி ஸ்கூலேந்து வரும்போது நான் வீட்டில் இருக்கணும்.”

“சரி சக்தி வந்துட்டு எல்லாருமா சாயந்தரமா போயிட்டு டின்னர் எல்லாம் வெளில சாப்டுட்டு வாங்கோ”

என்று விடாப்பிடியாக ப்ரவீன் துளசிக்கு பரிந்துப் பேசும் ஈஸ்வரனின் பேச்சு மிருதுளாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அதற்கு மேல் பேச்சைத் தொடராமலிருக்க சட்டென

“அது எப்படிப் பா முடியும். அவா தான் இன்னைக்கு லஞ்ச் சாப்டுட்டு சித்தப்பா ஆத்துக்கு வர்றதா ஃபோன் போட்டுச் சொல்லிடானே ப்ரவீன். அப்புறம் எப்படி சாயந்தரமா போறது?”

“அது அவன் மறுபடியும் ஃபோன் போட்டு இன்னொரு நாள் வரதா சொன்னா போச்சு. இது என்ன பெரிய விஷயமா?”

“ஆனா அப்பா அவா எல்லாம் பேக் பண்ணி கிளம்ப ரெடி ஆயாச்சு. அதுவுமில்லாம சக்திக்கு மிட்டேர்ம் ஆரம்பிக்கப் போறது ஸோ அவளால வெளில எல்லாம் வர முடியாது. இந்த வருஷம் டென்த் இல்லையா. பார்ப்போம் அடுத்தத் தடவை ப்ரவீனும் துளசியும் வந்தா நம்மாத்துல பத்து நாள் தங்கிட்டுப் போட்டுமே யார் வேண்டாம்னா. இந்த தடவை அவாளுக்கும் ஏதோ வேலைப் போலிருக்கு அதுதான் ஜஸ்ட் டூ டேஸ் ப்ளான் பண்ணி வந்திருக்கா. சரிப்பா குக்கர் விசில் அடிச்சாச்சு நான் போய் ஆஃப் பண்ணிட்டு என் வேலையைப் பார்க்கணும் அவா மத்தியானம் கிளம்பறா இல்லையா! வச்சிடட்டுமா?”

என்று ஈஸ்வரன் குடும்பத்தில் மருமகளாக பதினாறு ஆண்டுகள் இருந்ததில் மிருதுளா கற்றுக் கொண்ட வித்தையை அவர்களிடமே காட்ட அதற்கு மேல் பேச முடியாது போய் ஃபோனை வைத்தார் ஈஸ்வரன். இங்கே ஃபோனை வைத்ததும் ப்ரவீன் ஃபோன் அடித்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றுக் கொண்டிருக்கையில் மிருதுளா ப்ரவீனிடம்

“யாரு ப்ரவீன் அப்பாவா?”

“ஆங் …ஆமாம்.”

“பேசிட்டு வா எல்லாருமா சாப்பிடலாம் அப்பத் தான் நீங்க கிளம்ப சரியா இருக்கும்”

“ம்….ம்….”

என்று கூறிவிட்டு ஃபோனை அட்டென்ட் செய்தான் அங்கிருந்து ஈஸ்வரன்

“டேய் ப்ரவீன் நீ ஏன்டா இன்னைக்கே கிளம்பறதா சொன்ன? உன் மன்னி அதையே கெட்டியா பிடிச்சுண்டுட்டா…என்னால அதுக்கு மேல எதுவும் பேச முடியலை”

“சரி வை ஃபோனை”

என்று சலித்துக் கொண்டு ஃபோனை வைத்து விட்டு அவர்கள் ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். மிருதுளா ஏதும் அறியாததுப் போல சமைத்ததை டைனிங் டேபிளில் வைத்து விட்டுச் சென்று சோஃபாவில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மத்தியம் மணி ஒன்றரை ஆனது ஆனாலும் அவர்கள் அறை கதவு திறக்கவில்லை. மிருதுளாவுக்கோ நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. ஒன்னேமுக்காலுக்கு கதவைத் திறந்து வெளியே பையுடன் வந்தான் ப்ரவீன். அவன் பின்னாலேயே கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு இன்னொரு பையுடன் வந்தாள் துளசி. அவர்களைப் பார்த்ததும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்த மிருதுளா அதைப் பற்றி ஏதும் கேட்காமல்

“அப்பாடா வந்துட்டேங்களா. வாங்கோ சாப்பிடலாம். எனக்கு நல்ல பசி. எப்போடா நீங்க வருவேங்கள்னு காத்துண்டே இருந்தேன்”

என்று அவர்களை அமரவைத்து சாப்பாடு பரிமாறினாள். அவர்களும் உர்ரென்று இருந்தனர். அதை கண்டுக் கொள்ளாத மிருதுளா ஒரு தட்டில் சாதத்தையும் குழம்பையும், பொறியலையும் போட்டுக் கொண்டு அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் துளசிக்கு தாம்பூலம் கொடுத்து

“அடுத்தத் தடவை வரும் போது ஒரு பத்து நாள் இருந்துட்டுப் போறா மாதிரி வாங்கோ… இப்படி ரெண்டு நாளுக்கெல்லாம் வரப்டாது புரிஞ்சுதா”

என்ற மிருதுளா சொன்னதும் துளசி ப்ரவீனைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள். அவன் கிடுகிடுவென பெட்டிப் பைகளை எல்லாம் அவர்கள் காரில் ஏற்றினான்.

மிருதுளா அப்படி சொல்லியும் அவர்கள் உண்மையை சொல்லாது அவர்களின் ஈகோவால் கிளம்பினர். காரில் ஏறியதும் ப்ரவீன்

“அண்ணா, சக்திக் கிட்ட சொல்லிடுங்கோ”

“ஆங் சொல்லிடறேன் ப்ரவீன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ. சேஃபா டிரைவ் பண்ணு”

“ஓகே. பை நாங்க போயிட்டு வரோம்”

“பை ப்ரவீன், பை துளசி, பை பை குட்டிஸ்”

“ஓகே மன்னி பை”

என்று துளசி சொல்ல குழந்தைகள் கையசைத்து பை சொல்ல ப்ரவீன் கார் ஸ்டார்ட் செய்து அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா வீட்டிற்குள் வந்து எல்லாத்தையும் ஒதுக்கி வைத்தாள். அவர்கள் தங்கியிருந்த அறையின் மெத்தையில் விரிக்கப்பட்டிருந்த பெட்ஷீட், தலையணை உறைகள் என அனைத்தையும் மாற்றினாள். எல்லா வேலைகளையும் முடித்து அமர்வதற்குள் சக்தி வந்தாள். அவளுக்கு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள். மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் காலையில் நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்டதும் நவீன்

“ஏன் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாளோ அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம். அவா யார்கிட்டேயுமே ஸ்ட்ரைட்ஃபார்வேர்டட்னஸ் சுத்தமா இல்லை. எல்லாத்தையும் ஒரு சூழ்ச்சியா செஞ்சே பழக்கப்படுத்திண்டுட்டா”

“இதுல எனக்கென்ன ஆச்சர்யம்னா உங்க அப்பா ப்ரவீனுக்காகவும் துளசிக்காகவும் ….அவாளை இங்க தங்க வைக்கறதுக்கு என் கிட்ட எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? அதுவும் அவரோட கெத்தை விட்டுக் கொடுக்காம!!! அப்பப்பா!! ஏன் ப்ரவீனுக்கும் துளசிக்கும் வாயில்லையா? இல்ல ரெண்டு பேரும் சின்னப் பாப்பாக்களா? காலையில் அவன் உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசி ….பேசி என்ன…மிரட்டி வச்சதும் உடனே எனக்கு கால் வந்தது…..என்கிட்ட பேசி வச்சதும் உடனே அவனுக்கு கால்…என்னனு சொல்ல?”

“சரி அவாளை எல்லாம் விட்டுத்தள்ளு மிருது. நான் இன்னைக்கு ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன்.”

“அப்படியா! அது என்ன குட் நியூஸ் நவீ? அதைச் சொல்லுங்கோ.”

“கெஸ் வாட்?”

“என்ன ப்ரமோஷனா? இல்ல நியூ ஜாப் ஆஃபர் வந்திருக்கா? இல்ல இன்க்கிரிமென்ட் ஏதாவதா? இல்ல மறுபடியும் ஏதாவது ஃபாரின் ட்ரிப்பா? என்னனு சொல்லுங்கோளேன்…”

“ஆமாம் அப்பா என்ன அந்த குட் நியூஸ்? நோ மோர் சஸ்பென்ஸ்.. ப்ளீஸ் சொல்லுப்பா”

தொடரும்…….





































Leave a comment