அத்தியாயம் 109: நூறு நாள் வேலை

மெல்ல சக்தியின் அறைக்குச் சென்றுப் பார்த்தான் நவீன். அங்கே சக்தியின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் வேகமாகச் சென்று மிருதுளாவிடம்…

“ஏய் மிருது என்ன ஆச்சு?
ஏன் இப்படி அழுதுண்டிருக்க?
இங்க பாரு மிருது.
ஏன்னு சொல்லு அப்போ தானே நான் என்ன செய்யணும்னு எனக்கும் தெரியும். ப்ளீஸ் அழுகையை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லு மிருது.”

என்று நவீன் கூறியும் விடாது அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவள் அருகிலேயே அவளின் அழுகை நிற்கும் வரை அமர்ந்திருந்தான் நவீன். வெகுநேரத்திற்குப் பின் மிருதுளா தன்னைத்தானே சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு நவீனைப் பார்த்து

“ஆம் சாரிப்பா.
என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை அதுதான் அழுது தீர்த்துட்டேன்”

என்று கூறிக்கொண்டே இருக்கும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டே நவீன் அவளிடம்

“நீ எதுக்கு இப்போ இப்படி விக்கி விக்கி அழுத?”

“ம்….”

“என்ன மிருது?
ஏன்? பதில் சொல்லு!
நம்ம சக்தி ரூமுல உட்கார்ந்துண்டு ஏன் அழுதுண்டிருக்க?
சக்தி ஞாபகம் வந்துடுத்தா?”

என்று நவீன் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் காட்டாறு போல பெருக்கெடுத்தோடியது. அதை அடக்க முயன்றும் முடியாது அழுது கொண்டே…

“ஆமாம் நவீ.
எனக்கு அவ அம்மான்னு கூப்பிடறா மாதிரியே இருக்கு.
அவ ரூமை அடிக்கடி எட்டிப் பார்த்துண்டே இருக்கேன்.
எனக்கு அவ ஞாபகமாவே இருக்குப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு”

“என்ன மிருது இது!!
அன்னைக்கு எனக்கு தைரியம் சொல்லிட்டு இப்ப என்னடான்னா நீ இப்படி அழுதுண்டிருக்க?
நம்ம சக்தி எங்க போயிருக்கா?
படிக்கத் தானே!!
அது தான் அவ வர்ற டிசம்பர் மாசம் வின்டர் லீவுக்கு வந்திடுவாளே!
அப்புறம் என்ன?
நீ அங்கிருந்து கிளம்பும் போது உனக்கு இருந்த மன திடத்தைப் பார்த்து நானே அசந்து நின்னேன்…
ஆனா நீ என்னடான்னா…
அசடு மாதிரி இப்படி அழுதுண்டிருக்கயே!”

“அழுதா அசடா?
அன்னைக்கு நீங்களே ரொம்ப டவுனா இருந்தேங்கள்.
அந்த நேரத்துல நானும் அப்படி இருந்திருந்தா அப்புறம் நம்மளை தேத்தறதுக்கு யாரு இருக்கா?
அதுனால தான் நான் ஸ்ட்ராங்கா இருந்தா மாதிரி காட்டிண்டு உங்களைத் தேத்தினேன்.
ஆனா இங்க வந்ததுக்கப்புறமா என்னால அவ இல்லாத இந்த வீட்டை நினைச்சுக் கூட பார்க்க முடியலை நவீ!
அது தான் அழுதுட்டேன்”

“இட்ஸ் ஓகே மிருது.
சரி முழுசா அழுது முடிச்சாச்சா?
இப்போ சொல்லறேன் நன்னா கேட்டுக்கோ மிருது.
நீ என்னோட முன்னேற்றத்துக்காகவும் நம்ம பொண்ணுக்காவும் உன்னோட வேலை, விருப்பங்கள், ஆசைகள், திறமைகள் எல்லாத்தையும் இத்தனை வருஷங்களா மூட்டைக் கட்டி பரண் மேல போட்டு வைத்திருந்ததை தூசி தட்டி எடுத்து அதுல உன் நேரத்தை செலவிட ஆரம்பி.
இனி நீ உனக்காக வாழ ஆரம்பி.
அதுக்கு என்னாலானதை நான் உனக்குச் செய்யறேன்.
நம்ம பொண்ணு அவ வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா.
இனியும் நீ அவளை நினைச்சுண்டு கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.
பதினெட்டு வயசுல தானே ஒரு டிஸிஷன் எடுத்து வெளிநாட்டுல போய் தனியா இருந்து படிக்கப் போயிருக்காங்கறது சாதாரண விஷயமில்லை!!
இதை நான் உனக்கு சொல்லணும்னும் இல்லை.
இத்தனை வருஷமா நம்மக்கூடவே இருந்த நம்ம பொண்ணு சடன்னா ஒரு நாள் நம்மைவிட்டு இவ்வளவு தூரம் போனா அவ என்ன செய்வா?
தனியா இருப்பாளா?
பசிச்சா என்ன சாப்பிடப் போறா? அவளுக்குப் பிடிச்சது அங்கே கிடைக்குமா?
அப்படியே கிடைச்சாலும் அதை வாங்கி சாப்பிடுவாளா இல்லை காசாகுமேனுட்டு சாப்பிடாம இருப்பாளா?
அப்படிங்கற கவலையெல்லாம் வர தான் செய்யும். என்ன பண்ண?
நாம பெத்தவாளாச்சே! ஆனா இது எல்லாமே அவ நல்லதுக்கு தான்னு நினைச்சுப்போம்.
இந்த எக்ஸ்பீரியன்ஸ் அவளை இன்னும் ஸ்ட்ராங்கான பெண்ணா மாத்தும்.
ஸோ நீ உன் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்க மிருது.
அதுக்காக நீ சந்தோஷப்படணும் பெருமைப்படணுமே தவிர இப்படி விக்கி விக்கி அழப்படாது.
புரியறதா!! சரி வா நாம இப்படியே நடந்துப் போய் நம்மளோட ஃபேவரைட் ஷாப்ல போய் ஆளுக்கொரு சமோசா சாப்டுட்டு அப்படியே ஈவினிங் டீயும் குடிச்சுட்டு வரலாம்.
கம் ஆன் கெட் அப் அன்ட் கெட் ரெடி மை டியர் வைஃப்.”

“நவீ வேண்டாம்…
நம்ம சக்திக்கு அந்த கடை சமோசான்னா ரொம்ப பிடிக்கும்.
அவளுக்கு அங்க அதெல்லாம் சாப்பிட கிடைக்காத போது நாம எப்படி இங்கே சாப்பிடறது?”

“அச்சச்சோ!!!
அப்படீன்னா சக்தி வந்ததுக்கப்புறம் தான் சமோசாவா?”

“எஸ்.
நான் உங்க கூட கடைக்கு வர்றேன் ஆனா சமோசா சாப்பிட மாட்டேன்.
நீங்க சாப்பிட்டுக்கோங்கோ.
நான் டீ மட்டும் குடிக்கறேன்.”

“நமக்கும் இந்த சமோசாவுக்கும் நம்ம லைஃப் ஆரம்பிச்சதுலேந்து டிஷ்யூம் டிஷ்யூமா தான் இருக்கு!!
அது ஏன்னே தெரியலை மிருது!! என்னோட போன ஜென்மத்துல யாருக்கோ சமோசா வாங்கித் தரமா இருந்ததில் அவா விட்ட சாபம் போல எனக்கு தோனறது!!!
டீ மட்டும் குடிக்க எதுக்கு அங்க போகணும்?
இரு நான் சூப்பர் மசாலா டீ வச்சுக் கொண்டு வர்றேன்.
அதுக்குள்ள நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணி ஃப்ரெஷ்ஷா வா பார்ப்போம். போ போ போ”

“ம்..ஓகே. தாங்ஸ்ப்பா”

“எதுக்கு? நான் இன்னும் டீ வைக்கவேயில்லையே…
அதுக்குள்ளேயே தாங்ஸ் சொல்லற”

“டீக்கு இல்லப்பா…
அதைவிட நீங்க ஸ்டாங்கா குடுக்கற சப்போர்ட்டுக்கு சொன்னேன்”

“அதுக்கா!! ஆமாம்.
நம்ம லைஃபோட ஆரம்பத்துல எனக்கு நீ செஞ்சதை நான் உனக்கு இதுவரை செய்யாததை இப்பவாவது செய்யணுமில்லையா அதுனால தான் இன்னேலேந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். எப்படி?”

“எனக்கான உங்க சப்போர்ட்டை என்னை தேவையில்லாம பேசறவாகிட்டேயும், அடுமாண்டு பழி போடறவாகிட்டேயும் திருப்பிப் பேசறதுல காமிங்கோ.
அது தான் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்.
இப்போ இந்த டீயை நானே போட்டுத்தறேன் நகருங்கோ.”

“என்ன மிருது அன்னைக்கு ஹோட்டல்ல என்னென்னமோ வீர வசனங்கள் எல்லாம் பேசின…
நானும் விசிலெல்லாம் அடிச்சேன்…
ஆனா இப்ப என்னடான்னா மறுபடியும் அந்த கூட்டத்தைப்பத்திப் பேசற!!”

“நவீ நான் அன்னைக்கு ஹோட்டல்ல சொன்னது சொன்னது தான் அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனாலும் நம்ம கூட்டம் சும்மா இருக்குமா.
அங்கேந்தும் இங்கேந்தும் அம்புகளை ஏவி விடுவாளே!!
அதைப் பத்தி சொன்னேன்”

“ம்…அதுவும் சரி தான்.
இனி எதைப் பத்தியும் நீ கவலைப்படாதே எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
ஓகே. டீ கொதிச்சிடுத்து…”

“ம்….இத்தனை வருஷமா நீங்க டீ போட்டுத் தந்தா மாதிரி சொல்லறேங்கள்…
எனக்கும் தெரியும் டீ கொதிக்கறதுனுட்டு. நகருங்கோ டம்பளர் எடுக்கணும்.”

என்று இருவருமாக பேசிக்கொண்டே டீ போட்டு இரண்டு டம்பளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்தனர்.

“நவீ நாளையிலேந்து நீங்க வேலைக்குப் போயிடுவேங்கள்.
நம்ம சக்தியும் இங்க இல்ல எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அதுனால நான் ஏதாவது வேலைக்கு டிரைப் பண்ணவா?”

“அதுதான் நீ வீட்டிலிருந்தே அந்த அட்மிஷன் சென்டருக்கு வேலைப் பார்க்கறயே மிருது.”

“அது என்னப்பா ஜஸ்ட் இரண்டு மணி நேர வேலை தான்.
ஆனா அதுக்கப்பறம்?
முன்னாடின்னா சக்தி ஸ்கூலேந்து வருவா அவளுக்கு டிபன் செய்யணும். அப்புறம் ஸ்னாக்ஸ் செய்யணும்னு இருந்தேன் இப்போ அதெல்லாம் இல்லையே! அதுதான் கேட்டேன்”

“உனக்கு விருப்பம்னா தாராளமா போ மிருது. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா”

“என்ன அது?”

“பேசாம நீ சின்னதா வீட்டிலிருந்தே அந்த சென்டருக்குப் பண்ணிக் கொடுத்திண்டிருக்கறதை அவா ஆஃபீஸ்லேயே போய் முழு நேர பணியாளரா ஆயிடேன்.
என்ன சொல்லற?”

“ம்…நல்ல ஐடியா.
நான் இப்பவே ஈமெயில் போட்டுக் கேட்கறேன்”

என்று உடனே வேலைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கழித்து அவளை நேர்காணலுக்கு வரும்படி மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. உடனே மிருதுளா சந்தோஷமானாள். அந்த நேர்காணலுக்கான நாள் வந்தது. என்ன தான் முன்பு ஐந்தாறு வருடங்கள் வேலைப்பார்த்திருந்தாலும் இடையே பத்து வருட காலம் இடைவெளி இருந்ததால் சற்று பதற்றமாகவே இருந்தாள் மிருதுளா. நவீன் அவளின் பதற்றத்தைப் போக்க வேண்டி

“இங்கே பாரு மிருது நமக்கு இப்போ இந்த வேலைக் கிடைச்சா தான் ஆச்சுன்னுட்டு இல்லை.
ஸோ ரிலாக்ஸா இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணு சரியா. அதுவுமில்லாம நீ குவாலிட்டி வொர்க் பண்ணுவனு அவாளுக்கு தெரிஞ்சதுனால தானே இந்த இன்டர்வியூவுக்கே கூப்பிட்டிருக்கா.
ஸோ எந்த வித டென்ஷனுமில்லாம அட்டென்ட் பண்ணு சரியா”

“என்ன தான் சொன்னாலும் ஒரு வித பதற்றம் இருக்கத்தான் செய்யறது நவீ”

“சரி நான் இங்கே ரிசப்ஷனில் உட்கார்ந்துண்டிருக்கேன் நீ போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வா. ஓகே.
ஆல் தி பெஸ்ட்”

என்று நவீன் அவளை அந்த அலுவலகத்தில் விட்டுவிட்டு அவள் இன்டர்வியூ முடித்து வரும் வரை காத்திருந்தான். ஒவ்வொரு முறை லிஃப்ட்டின் கதவு திறக்கும் போதெல்லாம் மிருதுளா வருவாள் என்று எண்ணி எட்டி எட்டிப் பார்த்தான் நவீன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிருதுளா கீழே ரிசப்ஷனுக்கு வந்தாள். நவீன் லிஃப்ட்டைப் பார்த்துப் பார்த்து அசந்துப் போய் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முன் போய் நின்றாள் மிருதுளா. அவளைப் பார்த்ததும் நவீன் தான் அமர்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்து

“ஹேய் மிருது.
இன்டர்வியூ முடிஞ்சுதா?
நீ வருவ வருவேன்னு லிஃப்ட் டோர் ஒவ்வொரு தடவை திறக்கும் போதும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இப்ப தான் இந்த புக்கைப் படிக்க ஆரம்பிச்சேன்…
நீ வந்து நிக்கற…
இப்படின்னு தெரிஞ்சிருந்தா …
நான் இந்த புக்கை அப்பவே படிச்சிருப்பேன்….
ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்…
இன்டர்வியூ எப்படிப் போச்சு?
உன் முகத்தைப் பார்த்தா சக்ஸ்ஸன்னு தான் தோனறது…
அதைப் பத்தி சொல்லு”

“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு வேலைக் கிடைச்சிடுத்து.
இந்தாங்கோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார் சம்பளம்.
ஆம் ஸோ ஹாப்பி நவீ.
இதை நான் உடனே நம்ம சக்தி கிட்ட சொல்லணும்”

“வாவ்!! தட்ஸ் க்ரேட் மிருது.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார்ன்னா நம்ம இந்தியா காசுக்கு கிட்டத்தட்ட மாதம் எட்டு லட்சம் மிருது.
கலக்கிட்டப் போ”

“என்னப்பா நீங்க வாங்கறதுல இது வெறும் அஞ்சோ ஆறோ பர்சன்ட் தானே”

“அதை விடு மிருது.
இத்தனை வருஷங்கள் க்யாப் விட்டுட்டும் நீ இன்டர்வியூ அட்டெனட் பண்ணி அதுல ஆஃபரும் வாங்கிருக்க…
இது பெரிய விஷயம் மா.
சக்திகிட்ட அவ இன்னைக்கு நைட் நமக்கு கால் பண்ணுவால அப்போ சொல்லுவோம்.
சரி சரி டிரீட் எங்க?”

“ம்….மொதோ மாசம் சம்பளம் வாங்கினதுக்கு அப்புறமா தர்றேன்”

“ஓகே மேடம்.
ஜாய்னிங் டேட் என்ன?”

“வர ஞாயிற்றுக்கிழமை ஜாயின் பண்ண சொல்லிருக்கா நவீ”

“சூப்பர்.
நாம இப்போ வீட்டுக்குப் போகலாமா?”

“ஓ எஸ் போகலாம்.
நவீ வீட்டுக்கு போற வழியில் ஸ்டார்பக்ஸ்ல ஒரு காப்பசீனோ காஃபி குடிச்சிட்டுப் போகலாமா ?”

“வித் எக்ஸ்ட்ரா ஷாட் அன்ட் எக்ஸ்ட்ரா ஹாட் ரைட்டா மேடம்”

“எஸ் சார்.”

“ஓகே டன்.”

என்று இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மிருதுளா. முதல் நாள் நவீன் அவளை அவளது ஆஃபீஸில் டிராப் செய்தான். அடுத்த நாள் முதல் அவள் மெட்ரோவில் செல்ல ஆரம்பித்தாள். இப்படியே நான்கு மாதங்களும் இருவரும் வேலை, வீடு, இரவில் சக்தியுடன் ஃபோனில் அரட்டை என ஓடிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் வந்தது சக்தி லீவுக்கு ஊருக்கு வருவதற்காக நவீன் டிக்கெட் புக் செய்தான். அப்போது மிருதுளா நவீனிடம்

“நவீ நம்ம சக்தி வரும்போது நான் ஆத்துல இருக்க வேண்டாமா.
நான் வேலைக்கு போயிட்டா அவ லோன்லியா ஃபீல் ஆகமாட்டாளா?”

“அதெல்லாம் ஆக மாட்டா மிருது. அதுவுமில்லாம அவ வந்து இருக்கப் போறது வெறும் பதினைந்து நாட்கள் தான்”

“அதுதான் சொல்லறேன் அவ நம்ம கூட இருக்கப் போற அந்த பதினைந்து நாட்களும் நான் அவகூடவே இருக்கணும், அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுக் குடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு”

“அதுக்கு!!”

“நான் வேலையை விட்டுடவா?”

“உனக்கென்ன ஆச்சு மிருது?
இதுக்காக யாராவது வேலையை விடுவாளா?
லீவு கேட்டுப் பாரு.”

“ஓ!! ஆமாம் இல்ல.
சப்போஸ் லீவு தரல்லைன்னா?”

“அதைப் பத்தி அப்புறம் பார்த்துப்போம். முதலில் லீவு கேளு”

“ம்…ஓகே.”

மறுநாள் ஆஃபீஸுக்கு சென்றதுமே தன் மேலாளரிடம் சென்று விவரத்தைக் கூறி லீவு கேட்டாள் மிருதுளா. அவர் அவளிடம்

“பதினைந்து நாளெல்லாம் லீவு குடுக்க முடியாதுமா.
நீங்க இன்னும் உங்க ப்ரொபேஷன் பீரியட்ல தான் இருக்கீங்க.
வேணும்னா ஒரு வீக்கென்ட்டை ஒட்டி மூனு நாள் தர்றேன் அவ்வளவு தான் என்னால தரமுடியும்.”

“ம்…சார் ப்ளீஸ் கொஞ்சம் டிரைப் பண்ணுங்க சார்.
நம்ம ஹெட்டுட்டப் பேசிப் பாருங்க சார்.”

“எனக்குத் தெரிந்து அவர் குடுக்க மாட்டார்.
இருந்தாலும் கேட்டுப் பார்க்கறேன். ஆனா நிச்சயம் கிடைக்கும்னு நம்ப வேண்டாம்”

என்று மேலாளர் கூறியதும் மிருதுளா சோர்ந்துப் போய் அவள் இருக்கையில் அமர்ந்து வேலையை செய்ய ஆரம்பித்தாள். சக்தி வருவதற்கு நான்கே நாள் இருந்தது. அதுவரை அவளின் லீவைப் பற்றி அவளது மேலாளர் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் அவரிடம் அதைப் பற்றிப் பேச அவரது கேபினுக்குச் சென்று…

“சார் என் லீவு பத்தி நம்ம ஹெட்டுகிட்டப் பேசறேன்னு சொன்னீங்களே.
அவர் என்ன சொன்னார்?”

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே. அவர் தரமாட்டார்னு.
அதே தான் இன்னைக்கும்.
அவர் ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியருக்கு…
அதாவது உங்களுக்கு அவ்வளவு நாளெல்லாம் லீவு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்மா. அதுவுமில்லாம நான் தர்றேன்னு சொன்ன அந்த மூணு நாள் லீவையும் குடுக்கக்கூடாதுன்னும் சொல்லிட்டார். அதுனால என்னாலயும் உங்களுக்கு அந்த மூணு நாள் லீவு தரமுடியாது”

“ஓ!!! அப்படியா. அப்போ நான் ஒரு முடிவு எடுக்கணும்.”

“என்ன சொன்னீங்க?”

“இல்ல நான் நம்ம ஹெட்டுட்டயே பேசிக்கறேன்”

“ஓகே! ஆல் தி பெஸ்ட்”

“தாங்ஸ்”

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கினாள் மிருதுளா. ப்ராக்டிக்காலட்டிக்கும் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவித்தாள் …அவளுக்குள் இவை இரண்டுக்கும் இடையே பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்ததால் அவள் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது தவித்தாள். வேகமாக எழுந்துச் சென்று தன் குழுவின் ஹெட் என்றழைக்கப்படும் தலைவரிடம் சென்று அவர் அறையின் கதவைத் தட்டி…

“மே ஐ கம் இன் சார்”

“எஸ் கம் இன்”

என்றதும் உள்ளேச் சென்ற மிருதுளா முன் தன் ஹெட் உட்பட ஆறு பேர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் தான் பேச வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு செய்வதறியாது நின்றவளிடம்…

“எஸ் மிஸஸ் மிருதுளா.”

“ம்…ஐ நீட் டூ டாக் டு யூ சார்.”

“நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஷால் வீ டாக் ஆஃப்டர் ஒன் ஆர்…சே….ஒன்னோக்ளாக்”

“இட்ஸ் ஓகே சார். ஐ வில் வெயிட் அன்ட் கம் அட் ஒன் சார். தாங்யூ”

என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து மணி ஒன்றாவதற்காக காத்திருந்தாள். தன் கைக்கடிகாரத்தில் சரியாக ஒரு மணியானதும் எழுந்து அவர் அறைக்குச் சென்றாள். மீண்டும் கதவைத் தட்டி உள்ளே சென்றாள். அங்கே அவர் மட்டும் அமர்ந்திருந்தார். மிருதுளா உள்ளே வந்ததும் அவளிடம்

“உட்காருங்க மிஸஸ் மிருதுளா நவீன்.”

“தாங்ஸ் சார்”

“ம்…என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”

“அது வந்து …சார்…வந்து”

என்று பேச வந்ததைப் பேசாது தயங்கியவளிடம்

“என்ன உங்க லீவு விஷயமாவா?”

“ஆமாம் சார்.
எங்க பொண்ணு நாலு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு வர போறா சார்.
அதுவும் வெறும் பதினைந்து நாட்களுக்கு தான் சார்.
அதுனால தான் நான் லீவு கேட்டேன்”

“அதெல்லாம் சரி தான்.
ஆனா இந்த ஆஃபீஸ் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியர்களுக்கு லீவே குடுக்கக்கூடாதுன்னு தான் இருக்கே!! அதுக்கு நான் என்ன செய்வேன் சொல்லுங்க.”

“ஸோ இதுக்கு வேற வழியே இல்லையா சார்”

“ம்.ஹூம். எனக்குத் தெரிஞ்சு இல்ல. ஆம் சாரி.”

என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சைலென்ட் மோடில் வைத்திருந்த மிருதுளாவின் ஃபோன் வைப்ரேட் ஆனது. அவள் தன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தாள். பின் எழுந்து தன் ஹெட்டிடம்

“தென் சார்….ஐ வில் ஹாவ் டூ ரிசைன் மை ஜாப்.”

“வாட்?”

“எஸ் சார் எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியலை.”

“இங்க பாருங்க மிருதுளா.
நீங்க போய் உங்க சீட்டுல உட்கார்ந்து ஒரு தடவைக்கு பத்துத்தடவை நல்லா யோசிங்க.
அப்புறமா என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க சரியா”

“இல்ல சார் இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல சார்.
நான் மறுபடியும் வொர் ஃப்ரம் ஹோம் மாட்யூலுக்கே போயிடறேன் சார்.”

“ஆனா அதுல இப்ப நீங்க வாங்கற சம்பளத்துல பாதிக்கும் கம்மியா தான் கிடைக்கும்”

“இட்ஸ் ஓகே சார்.
எனக்கு அது போதும்.
நான் என் பொண்ணுக் கூட இருக்கணும் தட் இஸ் மோர் இம்பார்ட்டன்ட் ஃபார் மீ சார்.”

“யுவர் டாட்டர் இஸ் லக்கி டூ ஹாவ் யூ ஆஸ் ஹெர் மதர்.
அப்போ இது தான் உங்க முடிவா?”

“எஸ் சார்.
என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன் சார்.
ஆக்சுவலி அப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் குடுத்துவச்சிருக்கணும் சார்.”

“ஓகே தென்.
ஒரு ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் கொடுத்திடுங்க.
நீங்க இந்த மாசம் இன்னையோட சேர்த்து பதினோரு நாள் ஆஃபீஸ் வந்திருக்கீங்க ஸோ அதுக்கு உண்டான சம்பளத்தை நம்ம அக்கௌன்டன்ட்ட வாங்கிக்கோங்க நான் அவர்கிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
மீண்டும் ஆன்லைன்லயே உங்க வேலையைத் தெடருங்கள்.”

“தாங்யூ சோ மச் சார்.‌ ஷுவர் சார். பை”

“ம்….பை.”

என்று அவருடன் பேசி முடித்து அந்த அறையை விட்டு வந்ததும் மிருதுளாவுக்கு ஏதோ சாதிச்சதுப் போல உணர்ந்தாள். வேகமாக தன் க்யூபிக்கலுக்குச் சென்று தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்தப் பின் அக்கௌன்ட்டென்ட்டிடம் சென்று கணக்கை சரி பார்த்து அதற்கான காசோலையைப் பெற்றுக் கொண்டு அங்கு அவளுடன் வேலைப் பார்த்தவர்களிடம் சொல்லிக் கொண்டுவிட்டு சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மெட்ரோ ஸ்டேஷன் சென்று டிரெயினைப் பிடித்து வீட்டுக்குச் சென்றாள். மாலை ஐந்தரை மணியானதும் வழக்கம் போல நவீன் வீட்டுக்கு வந்து கதவில் சாவியைப் போட்டுத் திறக்க முயற்சிக்கும் முன் கதவைத் திறந்தாள் மிருதுளா. அவளை அந்நேரம் வீட்டில் பார்த்ததும் நவீன் ஆச்சர்யத்தில்

“மிருது என்ன இந்த நேரத்துல நீ இங்க இருக்க!!!.
எப்பவும் ஆறு மணிக்கு தானே வருவ?”

“உள்ள வாங்கோப்பா நான் சொல்லறேன்”

என்று கூறி நவீன் வீட்டினுள் வந்ததும் கதவை சாற்றிவிட்டு அடுப்படிக்குச் சென்று ஒரு டிரேவில் இரண்டு கப் காஃபி மற்றும் இரண்டு சமோசா வைத்து ஹாலுக்கு எடுத்து வந்து நவீன் ஃப்ரெஷ்ஷாகி வரும்வரைக் காத்திருந்தாள் மிருதுளா. நவீன் வந்தான் சமோசாவை வலது கையிலும் காஃபி கப்பை இடது கையிலும் எடுத்து எடுத்துக் கொண்டே

“என்ன மிருது நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே நீ!!”

என்று சமோசாவை முதலில் சாப்பிட்டான். அப்போது மிருதுளா மெல்ல தயங்கி தயங்கி அவனிடம்

“நவீ நான் ஒண்ணு செஞ்சுட்டு வந்திருக்கேன்…
அதைச் சொன்னா நீங்க கோபப்படக்கூடாது சரியா”

“நான் என்னைக்கு எதுக்கு உன் கிட்ட கோபப்பட்டிருக்கேன் மிருது. சும்மா சொல்லு”

“நான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்”

“என்னது ரிசைன் பண்ணிட்டேன்னு சொன்னயா!!
இல்ல பண்ணட்டுமானு சொன்னயா!!!”

என்று கேட்டுக் கொண்டே தன் கைகளிலிருந்த கப்பையும் சமோசாவையும் டிரேயில் வைத்துவிட்டு மிருதுளாவைப் பார்த்தான் அவளின் பதிலிளுக்காக…

“இல்ல நவீ…
ரிசைன் பண்ணிட்டேன்னு தான் சொன்னேன்.
சாரி. நான் எங்க ஹெட்டுட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் ஆனா அவர் லீவு தரவே முடியாதுன்னுட்டார்.
எனக்கு வேற வழித் தெரியலை அதுனால உடனே ரெஸிக்னேஷன் லெட்டரைக் குடுத்துட்டு இந்த மாசம் நான் வேலைக்குப் போன இந்த பதினோரு நாள் சம்பள செக்கையும் வாங்கிண்டு வந்துட்டேன்.”

“என்ன மிருது சொல்லற?
மாசம் எட்டு லட்சம் சம்பாதிச்சிண்டிருந்ததையா இவ்வளவு ஈஸியா விட்டுட்டு வந்திருக்க?”

“மாசம் மூவாயிரத்து ஐநூறை தான் விட்டுட்டு வந்திருக்கேன் நவீ.
எனக்குப் பணத்தை விட என் பொண்ணுக் கூட இருக்கறது, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணறது தான் முக்கியமாவும் ஆசையாவும் இருந்தது அதுனால தான் இப்படிச் செஞ்சேன்.
அவ கல்யாணம் பண்ணிண்டு போயிட்டான்னா அப்புறம் அவளைப் பார்க்கக் கூட நாம பல பேர்ட்ட பர்மிஷன்‌கேட்க வேண்டி வரலாம். இல்ல அவளே கூட அவ லைஃப்ல பிஸியாகிடலாம் இல்லையா.
அதுனால இப்போ கிடைக்கற இந்த நேரங்களை மிஸ் பண்ண நான் தயாரா இல்லை நவீ”

“ம்….ஓகே! உன் இஷ்டம்.”

“ஆனா நான் சக்திக்காக தான் வேலையை விட்டேன்னுட்டு அவ வந்தா சொல்லக் கூடாது சொல்லிட்டேன்.”

“உத்தரவு மேடம்.”

தன் மகளுடன் இருக்க வேண்டும் என்று தன் வேலையை வேண்டாம் என்று தள்ளி வைத்த மிருதுளா சக்தியின் வரவுக்காக அவளுக்கு மிகவும் பிடித்த முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சுவீட் எல்லாம் செய்து வைத்தாள். நான்கு மாதங்கள் காத்திருந்த மிருதுளாவும் நவீனும் ஏர்போர்ட்டில் தங்கள் மகளின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

தொடரும்….

Leave a comment