அத்தியாயம் 98: தன் வினை தன்னை சுடும்!

புது வீட்டில் நன்றாக உறங்கி விடியற் காலையில் எழுந்து மூவரும் காரில் ஏறி அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆகி காபி குடித்தனர். அன்று சனிக்கிழமை என்பதால் நவீனுக்கு ஆஃபீஸ் இல்லை. ஆனால் அனைவரும் வந்து தங்கியிருந்ததில் வீடு அலங்கோலமாக கிடந்தது. காலை டிபனை சாப்பிட்டதும் அனைத்தையும் சுத்தம் செய்தனர் நவீனும், மிருதுளாவும், சக்தியும். அதன் பின் சற்று நேரம் டிவி பார்த்தனர். மத்திய சாப்பாட்டிற்கு வெளியே சென்று வந்தனர். வந்ததும் நன்றாக உறங்கினர். இப்படியே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரு தினமும் நன்றாக ஓய்வெடுத்தனர். இரண்டு நாள் ஓய்வு திங்கட்கிழமை காலை முதல் அவரவர் வேலைகளில் மும்முரமாக டானிக்காக இருந்தது.

அப்போது ஒரு நாள் குஜராத்திலிருந்து நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா நவீனுக்கும் மிருதுளாவுக்கு வாழ்த்து தெரிவிக்க கால் செய்தார். அதை நவீன் அடெண்ட் செய்தான். அவர் வழக்கமான வாழ்த்து தெரிவித்து, வீட்டைப் பற்றிய விசாரிப்புகளை கேட்டு மெல்ல

“நான் ஃபோட்டோ எல்லாம் பார்த்தேன். பரவாயில்லையே நிறைய பேர் வந்திருந்தா போல”

“ஆமாம் வந்திருந்தா அதை ஏன் இப்படி கேட்கறேங்கள் சித்தப்பா?”

“இல்லடா நவீன்…நாங்க வரலாம்னு இருந்தோம். உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசினோம். அப்போ உங்க அப்பாவும் அம்மாவும் தேவையில்லாம அலையாதீங்கோ அந்த விசேஷத்துக்கு யாருமே வரப்போறதில்லை நாங்களும் மிருதுளாவோட அப்பா அம்மாவும் மட்டும் தான் இருக்கப்போறோம்னும், உன் தம்பிகள் கூட அடெண்ட் பண்ணப் போறதில்லைன்னும் சொன்னாளா…அதுதான் சரி நீ உங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சு பண்ணற ப்ளான்ல இருக்கயோன்னு தான் நாங்க வரலை”

“ஏன் சித்தப்பா அப்படி எங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சுப் பண்ணறதா இருந்தா எதுக்கு உங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி இன்வைட் பண்ணிருப்பேனாம்?”

“டேய் நிஜமாடா உன் அப்பா அம்மா தான் கடைசி நிமிஷத்துல அவாளை மட்டும் வச்சுதான் நீங்க பண்ணப் போறதா இருக்கேங்கள்னு சொன்னாப்பா. நாங்க என்ன பர்வதம் அவளோட ரிலேஷன்ஸ் எல்லார்கிட்டேயும் அப்படிதான் சொல்லிருக்கா அதுனால தான் நாங்களும் வரலை. சாரி நவீன் நாங்க உன் கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டிருக்கணும் போல!! இனி உன்கிட்டயே எதுவானாலும் கேட்டுக்கறோம். சரி வச்சுடவா”

“அதுதான் நல்லது சித்தப்பா. இனி எங்க சம்மந்தமான எல்லா விஷயத்துக்கும் தயவுசெய்து எங்கிட்டேயே கேளுங்கோ ப்ளீஸ். ஓகே பை”

என்று ஃபோனை வைத்ததும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது மிருதுளா

“ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு தினுசா ஏதாவது பண்ணறாளே!! என்னப் பண்ண?”

“ஒண்ணும் பண்ண முடியாது மிருது. தன்னாலும் திருந்தாது, சொன்னாலும் கேட்காது என்ன பண்ண? இப்ப இதைக் கேட்க போன பெரிய சண்டையாக்கிடுவா. விடு இதுவும் கடந்து போகும். இவாகிட்டேந்து விலகிடுவோம்னு சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கற. இது மாதிரி சொந்தங்களை வாரி அணைச்சுக்காம தூரத்துல தள்ளி வைக்கிறதுதான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது தெரிஞ்சுக்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உனக்கு இது புரியும்”

“வேண்டாம்னு வைக்க ஒரு நிமிஷம் போதும் நவீ. ஆனா அப்புறம் வேணும்னாலும் எப்படி ஒருவரையொருவர் முகத்தைப் பார்க்கறது?”

“ம்…அதெல்லாம் அவா பார்த்துப்பா. இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். ஏன் போன வருஷம் வந்து நம்மளை ஏமாத்திட்டும் இந்த வருஷம் வரலையா நம்ம வீட்டுல இருக்கலையா? திமிரா நடக்கலையா? அவா அவா பண்ணறதுக்கெல்லாம் கூலி கிடைக்கும். நம்மளை ஏமாத்தினதுக்கு கைமேல் கிடைச்சுது பார்த்த தானே!”

“அதைத் தான் நானும் சொல்லறேன் நவீ அவா அவா பண்ணறதுக்கு அந்த ஆண்டவன் கூலி குடுத்துப்பான். நாம ஏன் வீணா பேசாம இருந்தோ இல்ல விலகியிருந்தோ கெட்டபேரு வாங்கிக்கணும்.”

“ஆமாம் இப்போ மட்டும் என்ன வாழறதாம்?”

“சரி விடுங்கோ.”

மிருதுளா அவர்கள் வீட்டின் மரவேலைகளுக்காக இரண்டு மூன்று ஏஜென்சியை தேர்ந்தெடுத்து அவர்களிடம் வீட்டின் தரைதளத் திட்டம் எனப்படும் ஃப்ளோர் ப்ளானை மின்னஞ்சலில் அனுப்பி வைத்து அதற்கான வடிவமைப்பு படங்களை வரவழைத்து அதில் ஒன்றைத் தேர்வு செய்து அவர்களிடம் முன் பணம் செலுத்தி வேலையை ஆரம்பிக்கச் செய்தாள்.

அந்த வருடம் விடுமுறைக்கும் கவின் குடும்பத்தினர் நவீன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஒரு நாள் முன் தினம் ஃபோன் போட்டு அடுத்த நாள் வருவதாக சொன்னார்கள் அதற்கு ஏதும் சொல்லாமல் சரி என்று மட்டுமே சொல்லி ஃபோனை வைத்தாள் மிருதுளா. அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் விவரத்தை சொல்லி…

“எனக்கு அவாளைப் பார்த்தாளே நாம ஏமாந்தது தான் ஞாபகம் வரும் நவீ.”

“விடு விடு ஏமாத்தினது ஏமாத்தி அவா காரியத்தையும் சாதிச்சுட்டு போயிட்டா! இப்ப போய் அதை நாம கேட்கப் போனோம்னா …அப்படி எல்லாம் இல்லவே இல்லைன்னு அடிச்சு பேசுங்கள் என்னதுக்கு அதை அப்படியே மறந்திடுவோம். ஆனா இந்த தடவை அவா வீட்டை நாம பார்க்க போகக் கூடாது.”

“ஆனா அவா நம்மளை கூப்பிடுவாளே”

“அதை நான் பார்த்துக்கறேன். அதை நீ ஞாபகம் வச்சுக்கோ போறும்”

“ம்…ஓகே”

மறுநாள் சனிக்கிழமை என்பதால் சற்று தாமதமாக எழுந்து டிபன் செய்து சாப்பிட்டுவிட்டு அமர்ந்தனர் நவீன் மிருதுளா மற்றும் சக்தி. ஒரு பத்து நிமிடம் ஆனதும் மிருதுளா எழுந்து அடுப்படிக்குச் சென்று சமையல் வேலையில் மும்முரமானாள் ஏனெனில் மத்திய சாப்பாட்டிற்கு கவின் குடும்பம் வருவதாக சொல்லியிருந்தார்கள். அதே போல வந்தனர். அவர்களை வரவேற்று சாப்பாடு போட்டு அந்த பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா. அங்கே கவின் நவீனிடம் அவர்கள் வீட்டின் வேலைகள் எவ்வளவு தூரம் நடந்துள்ளது என்பதை அந்த பில்டர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தான். மிருதுளா வந்ததும் கஜேஸ்வரி அவளிடமும் காட்டினாள். அதைப் பார்த்ததும் மிருதுளா

“அட டே! பேஷா இருக்கே. ரொம்ப நல்லா பண்ணியிருக்கா. பரவாயில்லை நீங்க இங்கே இல்லாட்டினாலும் வேலை மளமளவென நடந்திருக்கறதைப் பாரத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு கஜேஸ்வரி”

“ஆமாம்! எங்களுக்கே ஆச்சர்யம்தான். சரி வந்தது வந்தாச்சு அப்படியே கிரகப்பிரவேசத்தையும் முடிச்சுடலாம்னு வந்திருக்கோம்”

“அப்படியா சூப்பர்.”

“இன்னைக்கு ஒரு நாலு மணிக்கு வீட்டைப் போய் பார்க்கலாம்னு இருக்கோம் நீங்களும் வர்றேங்களா?”

என்று கஜேஸ்வரி கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்

“இல்ல நாங்க வரலை. நாங்க எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் போய் பார்த்துட்டு வாங்கோ… குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும்..நீங்க வர்றதுக்குள்ள நாங்க ரெடியா இருக்கோம் நாம ஏதாவது மாலுக்கு போயிட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டுட்டு வருவோம். என்ன சொல்லற கவின்?”

“இல்ல நவீன் நீங்களும் வந்தா நல்லாயிருக்குமேனு தான் சொன்னா கஜேஸ். சரி இப்படி பண்ணுவோம் நாம எல்லாருமா ரெடி ஆகி இங்கேந்து எங்க புது வீட்டைப் பார்த்துட்டு அப்படியே மாலுக்கு போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

“ம்‌….சரி அப்படியே செய்யலாம். அப்போ எல்லாரும் கிளம்புங்கோ”

என்று நவீன் சொன்னதும் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா தன் அறையிலிருந்த நவீனிடம்

“என்னப்பா!! போகவேண்டாம்னு சொன்னேங்கள்! இப்போ நீங்களே கிளம்பவும் சொல்லறேங்கள்? எனக்கு ஒண்ணும் புரியலை”

“இப்போ உனக்குப் புரியாது. ஆனா அங்கே போனதும் புரிஞ்சுப்ப. நான் சொல்லறதை மட்டும் கேளு போதும்”

“ஓகே!”

அனைவரும் நவீன் காரில் ஏறிச் சென்றனர். அங்கே சென்றதும் கவின் குடும்பத்தினர் இறங்கினர். மிருதுளாவும் இறங்கப்போகும் போது நவீன் அவளிடம்

“மிருது இரு நாம வண்டியைப் பார்க் பண்ணிட்டு போவோம்”

“ஓ! ஓகே நவீ”

“கவின் நீங்க போயி பார்த்துட்டு வாங்கோ நாங்க வண்டியப் பார்க் பண்ணிட்டு வர்றோம். அநேகமா இங்க பார்க்கிங் கிடைக்காது. அப்படி கிடைக்கலைனா நாங்க இப்படியே ரௌண்ட் அடிச்சிண்டு இருக்கோம் நீங்க பார்த்து முடித்ததும் ஒரு கால் பண்ணு வந்திடறோம்”

“அப்படியா!! சரி ஓகே!”

என்று கூறி நவீன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சொன்னது போலவே பார்கிங் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது மிருதுளா

“பலே! நவீ! தேறிட்டேங்கள்”

“பின்ன நம்மளை முட்டாளாக்க தயங்காத கூட்டத்திடம் நாமளும் இப்படித்தான் நடந்துக்கணும். நாம அவாளைக் கூட்டிண்டு வராம இல்லையே!! ஆனா நாம உள்ளே போகணுமா வேண்டாமா அப்படிங்கறது நம்ம இஷ்டம். அந்த கட்டிடத்தைப் பார்த்தா அவன் ஃபோட்டோல காண்பித்தா மாதிரி இல்லையே!! இது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகுமே!”

“ஏன்ப்பா அப்படி சொல்லறேங்கள்? பாவம் அவாளும் உழைச்சக் காசைத் தானே போட்டு வாங்கியிருக்கா. அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும் பாருங்கோ”

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கவினிடமிருந்து கால் வந்தது. அதைப் பார்த்த நவீன்

“என்ன இது இவ்வளவு சீக்கிரமா பார்த்து முடிச்சிட்டானா? ஹலோ சொல்லு கவின்”

“நவீன் வந்து எங்களைப் பிக்கப் பண்ணிக்கோ. நாங்க பார்த்தாச்சு”

“சரி கிவ் மி ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அன்ட் வீ வில் பி தேர்”

என்று சொன்னது போலவே வந்தனர் நவீனும் மிருதுளாவும். கவின் குடும்பத்தினர் வண்டியில் ஏறினார்கள். நவீன் கவினிடம்

“என்ன இவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டேங்கள்? நீ சொன்னதெல்லாம் செஞ்சிருக்கானா அந்த பில்டர்?”

“ம்..‌‌…ஒண்ணுமே பண்ணலை அவன். போன வருஷம் எப்படிப் பார்த்துட்டுப் போனோமோ அப்படியே தான் இருக்கு. கடுப்பாகிட்டோம். நல்லா சத்தம் போட்டுட்டு வந்தோம்”

“என்ன சொல்லுற கவின். நீ காண்பித்த ஃபோட்டோ ல முடிஞ்சா மாதிரி தானே இருந்தது”

“அது எங்க வீட்டு ஃபோட்டோவே இல்லை. அது வேற யாரோடோ வீட்டு ஃபோட்டோ. அந்த பில்டரோட வேற ஏதோ ப்ராஜெக்ட்டோட ஃபோட்டோவாம்”

“அதை ஏன் உங்க வீடுன்னு அனுப்பினாளாம்?”

“அது மாதிரி வேணும்னா எங்க வீட்டையும் பண்ணித் தருவான்னு சொல்லறதுக்காக அனுப்பினாளாம். அதுக்கு எக்ஸ்ட்ராவா பத்து லட்சம் ஆகுமாம். நான் அவன்ட்ட மொதல்ல வீட்டை முடிச்சுக் குடு அப்புறம் இதெல்லாம் பார்த்துப்போம்னு சொல்லிட்டேன். பாரப்போம் இன்னும் ஆறே மாசத்துல முடிச்சுத் தரதா சொல்லிருக்கான் பார்ப்போம். இதுல இந்த டிரிப்லேயே கிரகப்பிரவேசமெல்லாம் முடிச்சிடலாம்னு ப்ளான் போட்டுண்டு வந்தோம். எல்லாப் ப்ளானும் தொப்ளான் ஆயிடுத்து”

“சரி சரி விடு என்னப் பண்ண? சில சமயம் பில்டர்கள் இழுத்தடிப்பது சகஜம் தான். அதுதான் ஆறு மாசத்துல தர்றதா சொல்லியிருக்கான் இல்லையா அப்புறமென்ன? சரி உங்க ஃப்ரெண்டு யாரோ கூட இதுல வாங்கியிருக்கறதா சொன்னேங்களே அவா வீடு முடிஞ்சிடுத்தா?”

“அவ கெட்டிக்காரி நவீன். அவா வாங்கும்போது எங்ககிட்ட சொல்லி எங்களையும் வாங்க வச்சா ஆனா சத்தமே இல்லாமா ஆறு மாசம் முன்னாடியே அவா வீட்டை கை மாத்தி விட்டுட்டான்னா பாரேன். அவா பேச்சைக் கேட்டு இப்போ நாங்க தான் மாட்டிண்டு முழிக்கறோம்”

“சரி சரி டோன்ட் வரி. எல்லாம் நல்லதாவே நடக்கும். என்ன கொஞ்சம் கால தாமதமாகறது அவ்வளவு தானே”

“சரி நீங்க இங்கே மைசூர்ல வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணிணேங்களே… அது மைசூர்ல எங்க? அந்த வீடு முடிஞ்சாச்சா? நீங்க எப்போ குடி போகப் போறேங்கள்?”

“அது நம்ம ஊருக்கு போற வழில தான் இருக்கு சிட்டிய விட்டு தள்ளித்தான் இருக்கு. ஆங் பில்டிங் வேலை எல்லாம் முடிஞ்சாச்சு. இப்போ மர வேலைகள் நடந்துண்டு இருக்கு. அநேகமா நாங்க ஆகஸ்ட்டு கடைசியில புது வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணுவோம்”

“ஓ! க்ரேட் பரவாயில்லையே நாங்க வாங்கினதுக்கப்பறமா ஒரு இரண்டு மாசம் கழிச்சுத்தானே வாங்கியிருப்பேங்கள்?”

“இல்ல கவின். நாங்க இப்போ தான் வாங்கினோம். எங்களோட இப்போ இருக்குற வீட்டோட ரென்டல் டாக்யுமெண்ட்டை ரின்யூ பண்ணும்போது தான் தோணித்து ஒரு வீடு வாங்கிடலாம்னு…ஏன்னா வாடகையே எக்கச்செக்கமா ஏத்திட்டா. அதுதான் ரீசன். நாங்க வாங்கி என்ன ஒரு நாலு மாசம் தான் ஆச்சு. நீங்க ஊருக்கு போகும் போது அப்படியே கூட்டிண்டு போயி காண்பிக்கறோம்”

“ஓ! அப்படியா? நாங்க நினைச்சோம் நாங்க போன வருஷம் வந்து வாங்கினதும் தான் நீங்களும் உடனே வாங்கிருப்பேங்கள்னு”

“இதுல எல்லாம் யாராவது போட்டிப் போடுவாளா கவின். வீ ஹாவ் எ வாலிட் ரீசன்”

“அய்யோ மன்னி!! நான் அப்படி சொல்லலை”

“நீ எப்படி சொன்னாலும் எங்க பதில் அதேதான். சரி மால் வந்திடுத்து எல்லாரும் இங்கேயே இறங்கிக்கோங்கோ நான் வண்டியைப் பார்கிங்ல போட்டுட்டு வரேன்”

என்று அனைவரும் இறங்கி மாலில் ஒரு நான்கு மணிநேரம் செலவழித்து சில டிரெஸ்ஸஸ் மற்றும் சில பொருட்களெல்லாம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் அங்கேயே இருந்த ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை காபிக் குடித்துக் கொண்டிருக்கும் போது கவின் நவீனிடம்

“சரி நவீன் நாங்க இன்னைக்கே கிளம்பறோம்”

“அட ஏன் என்னாச்சு?”

“இல்ல வீடு முடிஞ்சிருக்கும்….கிரகப்பிரவேசம் நடத்திடலாம்னு தான் நாங்க வந்தோம் ஆனா இப்ப தான் வீடு முடியவே ஆறு மாசமாகும்னு சொல்லிட்டாளே அதுனால நான் குவைத்துக்கு சீக்கிரமே போயிட்டு மறுபடியும் லீவு போட்டு வரணும். ஆனா கஜேஸும் குழந்தைகளும் அவா அம்மா ஆத்துல தான் ஒரு மாசத்துக்கு இருப்பா”

“ஓ! அப்படியா சரி. மிருது கவின் இன்னைக்கே கிளம்பறானாம்”

“ஆங் இப்போ தான் கஜேஸ்வரி சொன்னா. இதோ டிபன், சாப்பாடு எல்லாமே ரெடி அவா டிபன் சாப்டுட்டு சாப்பாடைக் கட்டிண்டு கிளம்பட்டும்”

“எதுக்கு மன்னி உங்களுக்கு சிரமம். பரவாயில்லை போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம்”

“எல்லாம் ஆயாச்சு கவின். எனக்கு இதில் ஒரு சிரமமும் இல்லை”

“சரி நாங்க எங்க கார்ல கிளம்புவோமே…. எப்படி உங்க வீட்டைப் பார்ப்பது?”

“அதுனால என்ன கஜேஸ்வரி? நீங்க வந்த கார்ல நீங்க வாங்கோ நாங்க எங்க கார்ல வர்றோம். எங்கக் காரை நீங்க ஃபாலோ பண்ணிண்டே வாங்கோ”

“ம்….ஓகே ஓகே”

என்று காலை உணவை சாப்பிட்டு, மத்திய சாப்பாட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது மிருதுளா குழந்தைகளை எல்லாம் நவீன் காரில் உட்கார வைத்து விட்டு கவின் கஜேஸ்வரிக் காரில் அமர்ந்துக் கொண்டாள். வீடு வரைப் பேசிக்கொண்டிருக்கலாமே என்ற எண்ணத்தில் ஏறிய மிருதுளாவுக்கு அவமானம் தான் மிஞ்சியது. அவள் பேச முற்பட்டப்போதெல்லாம் கவினும் கஜேஸ்வரியும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவது போல பேசிக் கொண்டு மிருதுளாவை அவாயிட் செய்தனர். அதை உணர்ந்ததும் மிருதுளா தன் மனதில்

“ச்சீ ஏன் தான் இதுகளோட வந்தோமோ!! ஏதோ கொஞ்ச நேரம் பேசிண்டிருக்கலாமேனு வந்தா…ரொம்பத்தான் பண்ணறதுகள். நவீன் சாரி நீங்க சொன்னதையும் மீறி இதுகள் கூட வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். சீக்கிரம் நம்ம வீடு வந்திடணுமே கடவுளே”

என்று எண்ணிக்கொண்டே அதன் பின் அவர்களுடன் ஏதும் பேசாதிருந்தாள். வீடு வந்ததும் வண்டியிலிருந்து இறங்கியதும் அதுவரை பேசாதிருந்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்

“ஓ! இது தானா உங்கள் புது வீடு. நல்லா பெரிசா இருக்கே”

என்று சொல்ல அது காதில் விழாததைப் போல வீட்டின் கதவைத் திறக்கச் சென்றாள் மிருதுளா. அவளின் முக வாட்டத்தைக் கண்ட நவீன் ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டான் ஆனால் அப்போது ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. வீட்டை சாவிப் போட்டு திறந்ததும் சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறி நகைகளைப் பார்ப்பது போல மிருதுளாவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் கஜேஸ்வரி. நவீன் மிருதுளா வருவதற்குள் அங்கேயும் இங்கேயுமாக சென்று சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அப்போது கவினின் மகள் கஜேஸ்வயிடம்

“அம்மா இங்க பாரேன் உனக்கு பிடிச்சா மாதிரியே வீட்டுக்குள்ளேந்தே மாடிப்படியிருக்கு”

“அட ஆமாம்.”

என்று மேலேயும் சென்றுப் பார்த்தனர். அப்போது கவினின் எட்டு வயது மகன் ஓடி விளையாடிக்கொண்டே தன் அப்பாவிடம்

“அப்பா இந்த ஹவுஸ் பேலஸ் மாதிரி பெருசா இருக்கு இல்ல”

என்றுதும் கஜேஸ்வரி

“ஆமாம்! ஆமாம்! நல்லா சொல்லு உங்க அப்பாகிட்ட” என்றாள்.

முழு வீட்டையும் நன்றாக சுத்திப் பார்த்துவிட்டு கீழே வந்ததும் ஏதும் கூறாமல் நின்றனர். அப்போது கவின்

“கஜேஸ் கிளம்பலாமா? இப்போ கிளம்பினா தான் நைட்டு வீட்டுக்கு போய் சேர முடியும்”

“என்ன கவின் வீட்டைப் பார்த்து ஒண்ணுமே சொல்லலையே”

“ஆங் நல்லா இருக்கு நவீன். சரி நாங்க கிளம்பறோம்.”

என்று கூறிவிட்டு அவர்கள் காரில் ஏறி வயித்தெரிச்சலோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கிளம்பியதும் வீட்டைப் பூட்டி சாவியை பர்ஸில் போட்டுக் கொண்டு நவீனும் மிருதுளாவும் சக்தியும் கிளம்பினாராகள். வண்டியில் அப்பார்ட்மெண்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் போது நவீன்

“என்ன மிருது மூட் அவுட்டாவே இருக்க? அவாளோட வரும் போது ஏதாவது சொன்னாலோ? காருலேந்து இறங்கியனதுலேந்து உர்ன்னே இருக்கியே”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை நவீ”

“இல்லையே ஏதோ இருக்கு. சும்மா சொல்லு மிருது”

“நீங்க சொன்னதைக் கேட்காமல் அவாளோட கார்ல வந்தது தப்பு தான். சாரி”

“ஹலோ என்ன ஆச்சு? எதுக்கு இப்போ சாரி எல்லாம் கேட்குற”

“அவா கார்ல வரும் போது நான் அவாளோட பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் என்னை அவாய்டு பண்ணறா மாதிரியே ரெண்டு பேரும் பேசிண்டே வந்தா. எனக்கு அந்த டிரைவர் முன்னாடி ரொம்ப அசிங்கமா போச்சு. அவா போன வருஷம் நம்க்கு பண்ணிணதுக்கு நாம தான் அவாளை அவாய்டு பண்ணிருக்கணும். இதுல வண்டிலேந்து இறங்கினதும் என்கிட்ட பேசறாளாம்!!! எனக்கு கோபம் வந்தது அதுதான் அதுக்கப்புறம் நான் பேசவேயில்லை.”

“இது மாதிரி எல்லாம் அதுகள் பண்ணும்னு எனக்கு தெரிஞ்சதுனால தான் உன்னை அவா கார்ல போக வேண்டாம்னு சொன்னேன். அவாளோட டிரெண்டே அதுதானே! அவா தப்பு பண்ணுவா, துரோகம் பண்ணுவா… அவாளால பாதிக்கப்பட்டவாகிட்டேயே திமிராவும் நடந்துப்பா… அதுகளே பொறாமையில வெந்துண்டிருக்குகள்.”

“அது எனக்கு நல்லா புரிஞ்சுது நவீ. இனி வரட்டும் நானும் அதுகளை அவாயிடு பண்ணறேன் பாருங்கோ”

“மிருது நீயா பேசற!.”

“என்னையும் பேச வைக்கறா நவீ!! நான் என்ன பண்ணுவேன்?”

“சரி சரி பீ கூல். இனி அடுத்த வருஷம் தான் வருவா சோ அப்போ பார்த்துக்கலாம்.”

என்று பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் ஆஃபீஸ் விட்டு வரும்போது அப்பார்ட்மெண்ட் கீழே கார் பார்க்கிங்கில் இருக்கும் போஸ்ட் பாக்ஸிலிருந்து ஒரு பத்திரிகை வந்திருப்பதாக எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தான் நவீன். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்து

“நவீ நம்ம பிச்சுமணி மாமாவோட பெரிய பொண்ணுக்கு கல்யாணமாம்.”

“அப்படியா? எப்போ?”

“வர்ற ஆகஸ்டு மாசம் இருபதாம் தேதி தான்”

“அட அந்த குட்டிப் பொண்ணுக்கு கல்யாணமா? சூப்பர்”

“அவளுக்கும் இருபத்தோரு வயசாயாச்சு நவீ. அப்படிப் பார்த்தா நீங்களும் இந்த குட்டிப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிண்டிருக்கேங்கள்”

“ஓகே! மேடம் மன்னிக்கவும்”

“ச்சே! சும்மா கிண்டல் அடிச்சேன் நவீ. சரி நாம இந்த கல்யாணத்துக்கு போவோமில்லையா?”

“நிச்சயமா போகலாம் ஆனா அது நாம் வீடு ஷிஃப்ட் ஆகுற நாளோட க்ளாஷ் ஆகக் கூடாது”

“பார்ப்போம்!! அப்படின்னா நாம கார்லேயே போயிட்டு வந்திடுவோம்”

“ஓகே!”

நவீன் மிருதுளா வீட்டின் மர வேலைகள் கிடுகிடுவென நடந்தது. ஆனாலும் அவர் ஆகஸ்டு மாசம் குடி போக முடியாதவாறு சில வேலைகள் மீதமிருந்தன. ஆகையால் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளை குறித்து வைத்து அன்று ஷிஃப்ட் செய்ய முடிவெடுத்தனர். அதற்கு முன் மாமா வீட்டுக் கல்யாணத்துக்கும் சென்று வரத் திட்டமிட்டனர்.

பிச்சுமணி மகள் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் போது மிருதுளாவிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்துப் பேசினாள்

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“ஹலோ மன்னி நான் கஜேஸ்வரி பேசறேன்”

“ம்….ம்…சொல்லு.”

“மன்னி நாங்க இங்கே மதுரையில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கோம். உங்களுக்கு தான் முதல்ல ஃபோன் பண்ணி சொல்லறேன்”

“அப்படியா ரொம்ப சந்தோஷம்”

“கவின் நாளைக்கு ஊருக்குப் போயிடுவார்”

“ஓ! சரி பத்திரமா போயிட்டு வரச்சொல்லு. அப்போ மாமா பொண்ணு கல்யாணத்துக்கு கவின் இருக்கமாட்டானா”

“இல்ல மன்னி இருக்க மாட்டார். அதுதான் அந்த வீட்டோட ரிஜிஸாட்ரேஷன் மாமா பொண்ணு கல்யாணத்தன்னைக்கு வச்சிருக்கோம். அதுக்கு நம்ம மாமனாரை கூட்டிண்டு நான் மதுரைப் போகப் போறேன். நம்ம ஆத்துல எல்லார்ட்டேயும் ஃப்ரெண்டோட கல்யாணத்துக்காக போறோம்னு சொல்லச் சொல்லிருக்கோம். ஏன்னா பிச்சு மணி மாமா தப்பா எடுத்துக்கக் கூடாது பாருங்கோ. அதுனால நீங்க அவர் பொண்ணுக் கல்யாணத்துக்கு வந்தேங்கள்னா உங்க கிட்ட யாராவது நாங்க எங்கன்னு கேட்டா இதையே சொல்லுங்கோ. அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன். நீங்க பாட்டுக்கு வீடு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போயிருக்கறதா சொல்லடப் போறேள். அண்ணா கிட்டேயும் சொல்லிடுங்கோ”

“ஏன் இப்படி நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாரையும் பொய் சொல்ல வைக்குற? ஏன் உண்மையை சொன்னா என்னவாம்? இதுக்கு நம்ம மாமனாரும் மாமியாரும் ஒதுதுண்டுட்டாளா?”

“ஆங் ஆங் அதெல்லாம் கவின் சொல்லறா மாதிரி சொல்லி ஒத்துக்க வச்சுட்டார்.”

“பரவாயில்லையே கவின் கெட்டிக்காரன் தான். நவீன் டிரெயின் டிக்கெட் புக் பண்ணின டேட்டை மாத்தி சொன்னார்னு. அவர் பொய் சொல்லிட்டார்…அவர் கூட சேர்ந்து நானும் பொய் சொல்லிட்டேன்னு அரிச்சந்திரனும் சத்தியவதியும் மாதிரி ஒரு காலத்துல குதிச்சாளேன்னுட்டு தான் கேட்டேன்”

“அதெல்லாம் உங்க காலத்துலன்னு சொல்லுங்கோ! மாமா நீங்க தான் ஓட்ட வாயின்னும் உங்ககிட்ட மொதல்ல சொல்லிடுன்னும் சொன்னார். அதுதான் உங்ககிட்டேயும் சொல்லிட்டேன் அதுபடி நடந்துக்கோங்கோ. நாளைக்கு நானும் குழந்தைகளும் என் அம்மா ஆத்துக்குக் கிளம்பறோம். சரி மன்னி மாமா பொண்ணு மாப்பிள்ளை அழைப்பில் சந்திப்போம்”

“அதுதான் வரமாட்டேன்னு சொன்னியே”

“அய்யோ மன்னி மறுநாள் கல்யாணத்துக்கு தான் இருக்க மாட்டோம்”

“ஓ! ஓகே ஓகே!

அன்று மாலை நவீன் வந்ததும் விவரத்தை சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்

“நீ ஏன் பேசாம ஓகேன்னு சொன்ன மிருது. இவ யாரு நம்ம யார்கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லறது? அப்படி நாம சொல்லிடுவோமோன்னு நினைச்சா நம்ம கிட்ட வீடு வாங்கிறுக்கறதைப் பத்தி சொல்லாமலேயே இருந்திருக்கலாமே! இல்ல இதுல ஏதோ இருக்கு. ஆமாம் உன்னை அப்படி கிண்டலா சொல்லிருக்கா உனக்கு கோபம் வரலை”

“வந்தது. ஆனா அப்படி சொல்லிருக்கறது உங்க அப்பான்னு இல்ல சொன்னா! அவளா சொல்லலையே!”

“யாரு கண்டா அவளோட நக்கலை அப்பா மேலே போட்டு சொன்னாலோ என்னவோ! ஏன்னா நீ அப்பாகிட்ட போய் கேட்கவா போற? இதுகள் ரெண்டும் ரொம்ப தான் துள்ளறதுகள். நானெல்லாம் இவாளோட இந்த பொய்யிக்கு துணைப் போக மாட்டேன். நானா போய் யாராகிட்டேயும் சொல்லமாட்டேன் அதே சமயம் என்கிட்ட யாராவது வந்து கேட்டா உண்மையை சொல்லாமல் இருக்கவும் மாட்டேன். ஆனா ஒண்ணு ஐ லைக் தட் அரிச்சந்திரன் அன்ட் சத்தியவதி எக்ஸாம்புள் யு கேவ். குட். சில நேரங்கள்ல நாமும் பேசித்தான் ஆகனும்ங்கறத புரிஞ்சிண்டியே அதுவரைக்கும் சந்தோஷம். பரவாயில்லை மிருது தேறிண்டே வந்துண்டிருக்க.”

பிச்சுமணி மாமா மகள் திருமணத்திற்கு முன் தினம் தங்கள் காரிலேயே புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.

அங்கே அவர்களுக்கு என்னனென்ன காத்திருக்கிறதோ? எதையெல்லாம் சந்திக்க நேரிடுமோ? சமாளிக்க வேண்டிவருமோ? எப்போதும் ஒரு விசேஷத்துக்கு சென்றால் தான் அவர்கள் மிருதுளாவுக்கும் நவீனுக்கும் வைத்துள்ள பாம் என்னவென்றே தெரியவரும். சில விசேஷங்களுக்கு பின்னால் தான் தாங்கள் தங்கள் குடும்பம் வைத்த பாம்மில் வெடித்து சிதறிய விவரமே தெரிய வரும் ஆனால் இந்த முறை பாம் என்னவென்று தெரிந்தே செல்கிறார்கள். அது ஒன்று தான் என்று நினைத்து அதற்கு தயாராக செல்லும் நவீன் மிருதுளாவைத் தாக்கப் போவது ஒன்று தானா இல்லை இரண்டு மூன்றுள்ளதா என்பதை பிச்சுமணி மகள் திருமணத்திற்கு வரும் செவ்வாய் கிழமை சென்று தெரிந்துக் கொள்ளலாம்.

தொடரும்…..



















Leave a comment