அத்தியாயம் 102: புறப்பாடு!

வீட்டினுள் நுழைந்த ப்ரவீன்… நவீனையும் மிருதுளாவையும் பார்த்து

“வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்”

“நல்லா இருக்கோம் மன்னி.”

“என்ன துளசி உன் வேலையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?”

“ஆங் நல்லா போயிண்டிருக்கு மன்னி.”

இவர்கள் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் பர்வதம் தன் பேத்தியை….ப்ரவினின் மகளை வாரி அணைத்து மடியில் அமரவைத்துக் கொண்டு….

“இவா குவைத்துக்கு போகப்போறா. அதை சொல்லத்தான் வந்திருக்கா”

என்று பரவீனிடம் சொன்னாள்.

“ஆமாம் ப்ரவின் நாங்க வர்ற பத்தாம் தேதி குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணறோம். நீங்க அவசியம் ஒரு தடவை வாங்கோ”

“ஆங் ஷுவர் மன்னி….குழந்தைகள் கொஞ்சம் பெரிசானா தான் வரணும். அப்போ தானே அவாளுக்கும் பார்த்தது ஞாபகமிருக்கும்.”

“அதுவும் சரிதான். உங்களுக்கு எப்போ வரணும்னு தோணறதோ அப்போ வாங்கோ…அதுக்கு இப்பவே இன்வைட் பண்ணிட்டேன். ஓகே வா!!”

“அங்கே தான் ரெண்டு அண்ணன்கள் இருக்காளே !!! எங்கே வேணும்னாலும் போகலாமே…”

என்று நீங்கள் மட்டுமில்லை என்னோட புள்ளையும் அங்கே தான் இருக்கிறான் என்று குத்தலாக பேசிய பர்வதத்திடம் மிருதுளா

“ஆமாம் அம்மா நீங்க சொல்லறதும் கரெக்ட் தான்.”

என்று ஒத்துக் கொண்டதும் பர்வதத்தால் மேற்கொண்டு அந்த பேச்சைத் தொடர முடியாது சட்டென தன் பேத்தியிடம்

“இது யாரு குட்டி….இவா யாரு…சொல்லு சொல்லு…”

என்று மூன்று வயதே ஆன குழந்தையிடம் கேட்க அது வாயில் விரலை விட்டுக்கொண்டு நெளிந்து வளைந்தது…உடனே பர்வதம்

“இவளுக்கு மிருதுளா பெரியம்மான்னா பிடிக்கவே பிடிக்காது தெரியுமோ!!”

என்றதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். பர்வதம் சும்மா இருக்காது மீண்டும்

“இல்லடா ப்ரவீன்..”

“ஆமாம் மன்னி அது என்னவோ ஏதோ தெரியல்லை அவ அப்படி தான் சொல்லிண்டிருக்கா”

“அவ அடிக்கடி சொல்லுவா ….எனக்கு மிருதுளா பெரியம்மாவை பிடிக்கவே பிடிக்காதுன்னுட்டு”

என்று கூறிவிட்டு சிரித்தாள் பர்வதம். மூன்று வயது குழந்தை அப்படி சொல்ல வாய்ப்பில்லை என்றாலும் அப்படியே அந்த குழந்தை சொல்லியிருந்தாலும் அதனிடம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று நல்லதை சொல்லிக்கொடுக்காது பெரியவர்களே அதை தட்டிக்கொடுப்பது போல சொல்லி சிரித்ததும் மிருதுளா

“ஏன் குட்டிமா உனக்கு பெரியம்மாவை பிடிக்காது? நான் அப்படி என்ன பண்ணினேன் உனக்கு என்னை பிடிக்காம போறதுக்கு? நீ பெரியம்மாவோட செல்லக்குட்டியாச்சே!!! ஆமா நீ என்ன பண்ணுவ குட்டிமா….பெரியவா பேசிக்கறதை கேட்டுத்தானே நீ சொல்லுற……மொதல்ல பெரியவா நீங்க இந்த மாதிரி பேச்செல்லாம் குழந்தைகள் பேசும் போது என்க்கரேஜ் பண்ணாம நல்லதை மட்டும் சொல்லிக் குடுங்கோ. இல்லாட்டி இது உங்களுக்கே வினையாகிடும்….சரி ப்ரவீன், துளசி நீங்க ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம உட்கார்ந்திண்டிருக்கேங்கள்? எங்கயாவது வெளியில போகணுமா?”

“இல்ல மன்னி நாங்க இப்போ தான் எங்காத்துலேந்து கிளம்பி இங்க வந்திருக்கோம்”

“புரியலையே !!! அப்படின்னா நீங்க இங்க அப்பா அம்மாவோட இல்லையா? தனியாவா இருக்கேங்கள்?”

“ஆமாம் மன்னி. எதுக்கு வீணா பிரச்சினைன்னு நாங்க இங்க கவின் வீட்டுலேந்து எங்க பையன் பொறந்தப்பவே தனியா போயிட்டோம்”

“ஸோ அப்பா அம்மா நீங்க எல்லாரும் ஒரே ஊருக்குள்ள இருந்தாலும் தனி தனியா தான் இருக்கேங்களா!!”

“ஆமாம்!!”

“குழந்தைகளை காலையில கொண்டு வந்து இங்கே விட்டுட்டு….காலை டிபனை இங்க சாப்ட்டிடுவா… மத்திய சாப்பாடு நான் ரெடி பண்ணி வச்சுடுவேன்… அதை டிபன் பாக்ஸ்ல கட்டிண்டு ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயிடுவா. சாயந்தரமா வந்து இங்கே டின்னர் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளை கூட்டிண்டு போயிடுவா.”

“ஓ!! ஓகே ஓகே!! நான் நீயும் துளசியும் அப்பா அம்மா கூடதான் இருக்கேங்கள்னு நினைச்சேன்…”

“சரி… மிருதுளா… அப்போ நீ சுமங்கலிப் பிரார்த்தனைக்கு இருக்க மாட்டியோ!!”

“ம்….எப்படி நாங்க தான் பத்தாம் தேதியே கிளம்பறோமே!”

“அப்போ குழந்தையோட பூணலுக்கு வந்துடுவேங்கள் தானே!”

“எப்படி மா இப்போ தான் போவோம் அதுக்குள்ள மறுபடியும் டிக்கெட் போட்டுண்டு வரது எல்லாம் கஷ்டம் தான். பார்ப்போம்”

என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவீன்

“மிருது நாம கிளம்பலாமா? நேரமாச்சு”

“ஆங் !! ஓகே நவீ. சரி மா, அப்பா, ப்ரவீன், துளசி அன்ட் குட்டீஸ் நாங்க போயிட்டு வர்றோம் பை.”

என்றதும் பர்வதம் உள்ளே சென்று குங்குமம் எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தாள். மிருதுளாவும் அதை நெற்றியில் இட்டுக்கொண்டு அங்கிருந்து நவீன், சக்தியுடன் கிளம்பி அவர்களின் ஒண்ணுவிட்ட அத்தை புதிதாக அந்த ஊருக்கு ஈஸ்வரன் வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்திருப்பதாக ஈஸ்வரன் சொன்னதனால் அவர்களையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்றெண்ணி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீனையும் மிருதுளாவையும் அத்தைப் பார்த்ததும்

“ஹேய் நவீன், மிருதுளா வாங்கோ வாங்கோ. ஹேய்!! இது உன் பொண்ணு சக்தி தானே!!”

“ஆமாம் அத்தை”

“எவ்வளவு கடகடன்னு வளந்துட்டா? நான் பார்க்கும் போது என்ன ஒரு ஆறு வயசிருக்கும் அவ்வளவு தான். இப்போ பாரு பெரிய பொண்ணா வந்திருக்கா…வாடா கண்ணா!!!”

“எப்படி இருக்கேங்கள் அத்தை? என்ன திடீன்னு இந்த ஊருக்கு குடி வந்திருக்கேங்கள்?”

“ஆமாம் பா வயசாயிடுத்து. பொண்ணுகள் ரெண்டும் வெளிநாட்டு ல இருக்குகள். சரி நாம கடைசி காலத்துல நம்ம சொந்தங்களுக்கு பக்கத்துல இருக்கலாமேனுட்டு இங்கே வந்துட்டோம்….இங்கே உங்க அப்பா அம்மா இருக்கா….அப்புறம் எங்காத்துக் காரரோட சொந்தங்கள் எல்லாம் இருக்கா…இப்படியே கோவில் குளம்ன்னு ஓடிண்டிருக்கு. ஆமாம் நீயும் ஏதோ வெளிநாட்டுக்குப் போறயாமே!!”

“ஆமாம் அத்தை வர்ற பத்தாம் தேதி குவைத்துக்குப் போறோம்.”

“ஆமாம் நீ இப்பதானே மைசூர்ல ஒரு வீடு வாங்கி குடியும் போன?”

“ஆமாம் அத்தை அங்கே குடி போய் ஒரு எட்டு மாசமாயாச்சு”

“சரி சென்னை வீட்டை என்ன பண்ணின?”

“அதுல தான் மிருதுவோட பேரன்ட்ஸ் இருக்காளே”

“இங்கே ஒரு வீடு வச்சிருந்த இல்ல?”

“அதை வித்துத்தான் சென்னையில வாங்கினேன் அத்தை”

“வீடு மேல வீடு வாங்கறேங்கள் ஆனா அதுல இருக்கக் குடுத்து வைக்கலையேப்பா!!”

என்று பர்வதம் டைலாக்கையே அத்தை சொன்னதும் அது எங்கிருந்து யார் சொல்லிப் பரப்பியிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்த நவீன் தன் அத்தையிடம்

“ஏன் இருக்காம அத்தை அது தான் எட்டு மாசமிருந்தாச்சே…அதுவுமில்லாம அத்தை எங்களுக்கு நாங்க வாங்கற ஒவ்வொரு வீடும் ஏற்றத்தை தான் தர்றது. மொதோ இங்கே வாங்கின அப்பார்ட்மெண்ட் எனக்கு ஒரு புது வேலை வாய்ப்பைத் தந்து மும்பாயிக்கு அனுப்பி வசதி வாய்ப்பை பெருக்கித்து….அப்புறம் சென்னை வீடு எங்களுக்கு அதை விட பெரிய வாய்ப்பை மைசூர்ல தந்து அங்க போக வச்சு எங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தித்து. இப்போ இதோ நாங்க வாங்கின மைசூர் வீடு எங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பையே தந்திருக்கு. ஸோ எங்களைப் பொறுத்த வரை எங்களோட வீடு எங்களுக்கு மேன்மையை மட்டும் தான் தந்திருக்கு தந்துண்டும் இருக்கு. இதை எல்லாம் யாரும் உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டா ஏன்னா உங்ககிட்ட சொன்னவாளோட நோக்கமே வேறயா இருக்கும் போது எப்படி இந்த மாதிரி நல்லதை சொல்லுவா”

“ஆமாம் இல்லையா நீ சொல்லறதும் கரெக்ட் தான். உங்க ரெண்டு பேருக்கும் உங்க கிரகலட்சுமி நல்ல மேன்மையைத்தான் தர்றா. ரொம்ப சந்தோஷம் பா. நன்னா இருங்கோ. சாரிப்பா நானும் கொஞ்சம் யோசிச்சுப் பேசிருக்கணும்”

“அதெல்லாம் விடுங்கோ அத்தை சொல்லறவா அப்படி சொல்லிருப்பானு எங்களுக்கு நல்லாவே தெரியும். சரி அத்தை தாங்ஸ் ஃபார் தி காஃபி….நாங்க கிளம்பறோம்”

“ஏன்ப்பா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே”

“இல்ல அத்தை நாங்க இப்போ கிளம்பினா தான் நைட்டு ஒரு பதினோரு மணிக்காவது வீடு போய் சேர முடியும். அடுத்த தடவை வரும்போது வந்து சாப்டுட்டே போறோம் சரியா”

“ஓகேப்பா. பத்திரமா போயிட்டு வாங்கோ. ஹாவ் எ க்ரேட் லைஃப்.”

“தாங்ஸ் அத்தை பை”

என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய கோவில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு மைசூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்

“நவீ எனக்கொரு டவுட். கேட்கவா”

“ம்….கேளு மிருது”

“உங்க அம்மா அப்படி வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்க குடுப்பினை வேணும்னு சொல்லும் போது ஒண்ணுமே சொல்லாத நீங்கள் ஏன் அத்தை அதையே சொல்லும்போது சூப்பர் பதில் குடுத்தேங்கள்? அதை உங்க அம்மாகிட்டேயும் சொல்லிருந்தா அவாளும் வாயடைச்சுப் போயிருப்பா இல்ல!!!”

“அப்படி இல்ல மிருது. உன் மாமியார் வேணும்னே நாம சந்தோஷப்பட்டுடக் கூடாதுன்னே சொன்னா ஸோ அவகிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமுமில்ல. ஏன்னா தான் சொல்லறது தப்புன்னு தெரிஞ்சே தான் சொன்னா….ஆனா அத்தை அப்படி இல்ல இவா ஏத்திவிட்டு சொன்னா அதுனால அத்தைகிட்ட எக்ஸ்ப்ளேயின் பண்ணிச் சொன்னேன்…இனி அத்தை வில் நாட் ஸ்பெரெட் இட் ராங்லீ…”

“ம்…நீங்க சொல்லறது கரெக்ட் நவீ. இவா ஆரம்பத்துலேந்தே இப்படி தான் தப்பு தப்பா பரப்பி விடறா. நானே நிறைய தடவை இவா சொன்ன அதே டைலாக்கை அப்படியே நம்ம மத்த சொந்தக்காராளும் சொல்லிக் கேட்டிருக்கேன்….ஆனாலும் இதுவும் ஒரு டேலென்ட் தான் இல்ல நவீ….அது எப்படி!! தான் சொன்னதும்… சொல்ல நினைக்கறதும் …அச்சு அசல் மாறாம அடுத்தவாளை சொல்ல வைக்கறா? அதுக்கும் ஒரு திறமை வேணும்….ஆனா இதுல எனக்கு என்ன புரியலைன்னா….அது எப்படி மத்தவா இவா சொல்லுறதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திருப்பி சொல்லுறா? அவா கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டா? அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு நவீ!”

“இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமேயில்லை மிருது. நீ சொன்னா மாதிரி சில பேர்ட்ட அவாளோட திறமையை வச்சுப் பேச வச்சிருப்பா ஆனா சில பேர் அவா சொல்ல வைக்கறா அது தப்புன்னு தெரிஞ்சாலும் வம்புக்குனு அதையே சொல்லுவா!!! அவ்வளவு தான்.”

“ம்….ஆமாம் ஆமாம்.”

“என்ன? நீ எதையோ யோசிச்சிண்டு வர்ற….என்னது?”

“அது ஒண்ணுமில்ல எல்லாம் இந்த ப்ரவீனையும் அவன் பேசினதையும் தான் யோசிச்சிண்டு வர்றேன்”

“என்னன்னு சொல்லு மிருது….சக்தியும் நல்லா தூங்கிட்டா…நீ பேசு”

“நாம குழந்தைக்கு முன்னாடி அடுத்தவாளை குற்றம் சொல்லி பேசக்கூடாதுன்னு நினைக்கறோம் ஆனா அவா சின்னக்குழந்தையை வச்சுக் கூட அவாளோட பாலிடிக்ஸை பண்ணறா….ம்….ஒரு பத்து வருஷம் முன்னாடி போயிப் பார்த்தேன்….அன்னைக்கு நான் எங்க அப்பா அம்மா ஆத்துக்கு அடிக்கடி போறதால உங்க அப்பா அம்மா கௌரவம் என்ன ஆகும்னும்….பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்டுன்னும் சொன்னவன்….இன்னைக்கு ஒரே ஊருக்குள்ள பெத்தவாளும் புள்ளையும் மாட்டுப்பொண்ணும் அடுத்தடுத்த தெருவுல குடியிருக்காளே ….இப்போ மட்டும் அவனோட அப்பா அம்மா கௌரவம் கொடிக் கட்டிப் பறக்கறதோன்னு யோசிச்சிண்டே வர்றேன்….அதை அவன்கிட்ட யாரு கேட்கறது?”

“அட ஆமாம் இல்ல….நீ சொல்லறதும் இஸ் எ வாலிட் பாயின்ட். இதை நீ அங்கேயே அவன்ட்ட கேட்டிருக்கணும் மிருது.”

“விடுங்கோப்பா….ஒரு சின்ன குழந்தையை வச்சு அவாளோட அத்திரத்தை தீர்த்துக்கறா…..அவாகிட்ட போய் என்னத்தை கேட்க…அதுக்கும் இதை விட அசிங்கமா ஏதாவது அந்த குழந்தையை வச்சே சொல்ல வச்சாலும் வைப்பா எதுக்கு நமக்கு…எப்பவும் நீங்க சொல்லறா மாதிரி…நாம நம்ம வேலையைப் பார்த்துட்டு போவோம்!”

என்று தெரிந்தே தவறிழைக்கும் ஈஸ்வரன், பர்வதம் மற்றும் அவர்கள் பிள்ளைகளிடம் பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்றெண்ணியே பல விஷயங்ககளை கேட்காமலேயே நவீனும் மிருதுளாவும் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். இரவு உணவை வழியிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பதினொன்றரை மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தனர். கதவை ராமானுஜம் திறந்து விட்டுவிட்டு சென்று அவரின் உறக்கத்தை தொடர்ந்தார். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் கொண்டு வந்த பையை ஹாலிலேயே வைத்து விட்டு அவரவர் அறைக்குச் சென்று தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டுப் படுத்துறங்கினர்.

குவைத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்துப் பொருட்களும் பேக்கிங் செய்யப்பட்டு நவீனின் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த இன்டர்நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்றதும் வீடு மறுபடியும் காலியாக இருந்தது. அம்புஜமும் மிருதுளாவுமாக முழுவீட்டையும் சுத்தமாக கூட்டித் துடைத்து பளிச்சென வைத்தனர். மறுநாள் காலை ஏழு மணிக்கு நவீன் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் வந்தார். அப்போது நவீனும் மிருதுளாவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னாள் இரவு ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் கொடுத்த டின்னருக்குப் போய்விட்டு லேட்டாக வந்ததால் நன்றாக தூங்கட்டும் என்று விட்டுவிட்டனர் அம்புஜமும் ராமானுஜமும். இப்போது டிரைவர் வந்துள்ளதால் அவர்களை எழுப்பியாக வேண்டுமே என்று எண்ணிக்கொண்டே மாடிப்படி ஏறினார் ராமானுஜம்….அவர் எதிரே நவீனும் மிருதுளாவும் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து

“நீங்க சொன்ன டிரைவர் வந்திருக்கார். அது தான் உங்களை எழுப்ப வந்துண்டிருந்தேன்…நீங்களே எழுந்து வந்துட்டேங்கள்”

“ஆமாம் காலிங் பெல் சத்தம் கேட்டு தான் நாங்க எழுந்துண்டோம். நீங்க எங்களை கொஞ்சம் முன்னாடியே எழுப்பியிருக்கலாமே”

“இல்ல நீங்க மூணு பேருமே நேத்து நைட்டு ரொம்ப லேட்டா தான் வந்தேங்கள்…அதுதான் எழுப்பலை”

“நீங்க ரெண்டு பேரும் ரெடியாகிட்டேங்கள் போல”

“ஆமாம் டிரைவர் வந்ததும் நாங்களும் கிடுகிடுனு கிளம்பிட்டோம்.”

“சரி அம்மா அன்ட் அப்பா நாங்களும் இன்னைக்கு ஈவ்னிங் பெங்களூர் போயி அங்கேந்து குவைத் போயிட்டு வர்றோம். நீங்களும் பத்திரமா சென்னைக்கு போயிட்டு வாங்கோ. சென்னையில நம்மாத்துல சேர்ந்ததும் ஒரு கால் பண்ணிச் சொல்லுங்கோ. சரியா பத்திரம்”

“சரிமா மிருது. நீங்களும் நல்லபடியா குவைத் போய் சேர்ந்ததும் ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லுங்கோ. சூப்பரா வருவேங்கள் பாருங்கோ. எங்க ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. வேனுக்கும் பொண்ணு பார்த்துண்டு இருக்கோம். ஏதாவது செட்டாச்சுன்னா உங்களுக்கு தான் மொதல்ல சொல்லுவோம் அவசியம் வரணும்”

“ஷுவரா வருவோம். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கோ…மிருது சக்தியை தாத்தா பாட்டி ஊருக்கு கிளம்பறான்னு எழுப்பு”

“இல்ல இல்ல வேண்டாம் மிருது. குழந்தை தூங்கட்டும். நாங்க போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடறோம்”

என்று கூறிக்கொண்டே மாடி ஏறி சக்தி ரூமிற்குள் சென்று தாத்தாவும் பாட்டியும் அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு முத்தமிட்டதும் சக்தி எழுந்துக் கொண்டாள்.

“தாத்தா பாட்டி என்ன காலையிலேயே ரெடியாகி இருக்கேங்கள் எங்கே போறேங்கள்?”

“ஆமாம் நீ பாட்டுக்கு இன்னைக்கு குவைத் போயிடுவ அப்புறம் நாங்க இங்க இருந்து என்ன பண்ணப் போறோம்!!! அதுதான் நாங்க சென்னைக்கு கிளம்பிட்டோம் கண்ணா.”

“ஓகே பாட்டி பை. இங்க வாங்கோ ரெண்டு பேரும் ….உம்ம்ம்ம்மா. நானும் ஊருக்குப் போயிட்டு வரேன் பாட்டி அன்ட் தாத்தா”

“சரிடி கண்ணு. நீ படுத்துத் தூங்கிக்கோ நாங்க போயிட்டு வர்றோம் டா செல்லம்.”

“இதோ நானும் ப்ரஷ் பண்ணிட்டு கீழே வர்றேன் பாட்டி.”

“சரி மா. நாங்க நீ கீழே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணறோம்”

என்று கூறிவிட்டு கீழே சென்று அனைவரும் சக்திக்காக காத்துக் கொண்டிருந்தனர். சக்தியும் ரொம்ப நேரமெடுக்காது சட்டென ப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். நவீன் தன் கார் சாவியை டிரைவரிடம் கொடுத்து பத்திரமாக ட்ரைவ் செய்து காரையும் தன் மாமனார் மாமியாரையும் சென்னையில் கொண்டு போய் சேர்த்திடுமாறு கூறி அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் காரில் அனுப்பி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். பின் வீட்டுக்குள் வந்து பார்த்த மிருதுளா..

“ஹேய் நவீ மை மாம் ஈஸ் க்ரேட்….”

“ஏன் என்ன செஞ்சிருக்கா?”

“இங்க பாருங்கோ இட்டிலி சுட்டு வச்சிருக்கா. மத்தியானத்துக்கு லெமன் ரைஸ் அன்ட் தயிர் சாதம் செய்து… எல்லாத்தையும் டிஸ்போஸபுள் டப்பாக்கள்ல வச்சுட்டு போயிருக்காப்பா!! என்கிட்ட இதெல்லாம் செய்யுறதா சொல்லவேயில்லை. எப்போ செஞ்சிருப்பா?”

“நாம மாடியில தூங்கிண்டிருந்தப்போ ….காலங்காத்தால ஒரு மூணு மணி இருக்கும் ஏதோ பாத்திரம் உருட்டுற சத்தம் கேட்டது…நான் எழுந்து டைம பார்த்தேன் …சரி யாராவது பக்கத்து வீட்டுக்காராளா இருக்கும்னு நினைச்சுண்டு மறுபடியும் படுத்து தூங்கிட்டேன். அப்போ அது நம்ம வீட்டுல தான் நடந்திருக்கு. அப்படீன்ன உன் அம்மா ராத்திரி ஃபுல்லா தூங்கலையா?”

“இருங்கோ அம்மாக்கு கால் பண்ணறேன்….ம்…ரிங் போறது….ஹலோ அம்மா தாங்யூ ஸோ மச் மா”

“என்னத்துக்கு தாங்ஸ் சொல்லற மிருது?”

“அம்மா டிபன் லஞ்ச் எல்லாம் பண்ணி வச்சிட்டு கிளம்பினதுக்கு. லவ் யூ மா.”

“ஆமாம் காரையும் எங்ககிட்ட கொடுத்தனுப்பிட்டேங்கள்….வெளியில போய் சாப்பிடறதாயிருந்தாலும் காரில்லாம எப்படி போவேங்கள்? அதுதான் எல்லாம் செஞ்சு நாங்களும் கையில கட்டிண்டு உங்களுக்கும் வச்சுட்டு கிளம்பினோம். எல்லா கிட்சன் சாமான்களையும் நேத்தே காலி பண்ணி வச்சுட்டேன். நீங்க மூணு பேரும் நல்லா சாப்டுட்டு ஊருக்கு கிளம்புங்கோ சரியா”

“சரிமா….நீங்களும் பத்திரமா போங்கோ. பை மா வச்சுடறேன்”

என்று ஃபோனை வைத்ததும் மூவருமாக காலை டிபனை சாப்பிட்டதும் மீதமிருந்த பேக்கிங்கையும் செய்து முடித்துவிட்டு குளித்து தயாராகி கீழே பெட்டிகளை எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டு …வீட்டின் எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் சாத்தி பூட்டிவிட்டு வந்து அமர்ந்து அம்புஜம் செய்து வைத்திருந்த மத்திய சாப்பாட்டை சாப்பிட்டதும் அந்த தட்டுகள், டப்பாக்கள் அனைத்தையும் குப்பைப் பையில் போட்டு நன்றாக இறுக்கக்கட்டி சக்தியிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வருமாறு கூறினாள் மிருதுளா. சக்தியும் அது படி செய்து விட்டு அவளின் ஃப்ரெண்ட்ஸ்களிடம் தான் ஊருக்கு செல்லுவதாக சொல்லிவிட்டு வந்தாள். சக்தி வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் அந்த சொசைட்டியிலிருந்த பதினைந்து ஃபேமியிலிருந்து அனைவரும் நவீன் மிருதுளா சக்தியை வழியனுப்ப வந்தனர். நவீனின் ஆஃபீஸிலிருந்து கார் வந்தது. அனைவருமாக பெட்டிகளை காரில் ஏற்றினர். மிருதுளா பூஜை அறைக்குச் சென்று அம்பாளை நன்றாக வேண்டிக்கொண்டிருந்தாள் அப்போது நவீன் வாசலில் இருந்து

“மிருது நேரமாச்சு மா”

என்றதும் அங்கிருந்து எழுந்து வீட்டுச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு ஒரு முறை வீட்டை நன்றாக சுத்திப் பார்த்தாள். பின் மீண்டும் நவீன் குரல் குடுத்ததும் வேகமாக வெளியே சென்று கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு …காரில் ஏறினாள். சக்தி முன்னதாகவே ஏறி அமர்ந்திருந்தாள். நவீனும் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு காரில் ஏறினான். அனைவரும் கையசைத்து

“ஹாவ் எ சேஃப் ஜெர்னி மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் நவீன். சக்தி ஹாவ் ஃபன். பை பை. எஞ்சாய்”

என்று ஒருசேர கத்திச் சொன்னார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக காரின் ஜன்னல் கன்னாடியை கீழே இறக்கி

“லவ் யூ ஆல். பை பை.”

என்று சொன்னதும் கார் மெல்ல நகர ஆரம்பித்தது. ஜன்னல் வழியே மிருதுளா தன் வீட்டையும் அங்கிருந்த தன் நண்பர்களையும் பார்த்துக் கொண்டே சென்றாள். அந்த சொசைட்டியின் கேட்டை தாண்டிய பின்னும் பின்னால் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிடம் நவீன்

“மிருது ஜன்னல் கன்னாடியை மேலே ஏத்து. ஏசி வீணாகுது இல்ல.”

என்றதும் கன்னாடியை மேலே ஏற்றிவிட்டு முன்னால் பார்த்து நன்றாக அமர்ந்தாள்.

கார் நேராக பெங்களூர் ஏர்போர்ட் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கி பெட்டிகளை எல்லாம் டிராலியில் வைத்துவிட்டு கார் டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு உள்ளே சென்று எல்லா செக்கிங்கும் முடிந்துதும். அவர்கள் ஏற வேண்டிய ஃப்ளைட்டின் கேட்டுக்குச் சென்று அமர்ந்ததும் மிருதுளாவுக்கு அம்புஜத்திடமிருந்து கால் வந்தது.

“ஹலோ அம்மா நாங்க எல்லா செக்கிங்கும் முடிஞ்சு கேட்டுல வந்து உட்கார்ந்தாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம்”

“ரொம்ப நல்லது மா. நாங்களும் சென்னை வந்து சேர்ந்தாச்சு. அந்த டிரைவர் பையன் நல்ல பையன் மிருது. எங்களை பொறுப்பா பார்த்துண்டு பத்திரமா கொண்டு வந்து சேர்த்து…காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை தந்துட்டு அவனும் மைசூருக்கு பஸ்ஸில் கிளம்பிட்டான். அதை சொல்லத் தான் நான் ஃபோன் பண்ணினேன். சரி மா நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்கோ. பை வச்சுடறேன்”

“பை மா. நவீ அம்மா தான். அவாளும் சென்னை போய் சேர்ந்தாச்சாம். டிரைவர் உங்க காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை அப்பாட்ட குடுத்துட்டு அங்கேந்து மைசூருக்கு கிளம்பிட்டாராம்.”

“ஓகே….சரி வா போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டா….சக்தி வா கிளம்பலாம்”

என்று மூவரும் லைனில் நின்று வரிசைப்படி தங்கள் ஃப்ளைட்டில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அப்போது மிருதுளா நவீனிடம்

“நாம இந்தியா மண்ணிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம் இல்ல நவீ…இதுக்கு முன்னாடி நாம யூரோப்புக்கு ட்ரிப் போனபோது கூட எனக்கு எதுவும் வித்யாசமா இருக்கலை ஆனா இந்த தடவை மனசுக்குள்ள என்னமோ பண்ணறது நவீ”

“அது ஏன்னா போன தடவை நாம திரும்பி இங்கே வந்திடுவோம்னு நமக்கு நல்லா தெரியும் ஆனா இந்த தடவை நாம நம்ம வாழ்கையையே அங்க தான் வாழப்போறோனு தெரிஞ்சதால உனக்கு ஏதோ மாதிரி இருக்கு அவ்வளவு தான். டோன்ட் வரி வீ வில் பி ஹாப்பி. நமக்கு அந்த புது நாடு என்னனென்ன தர்றதுக்கு காத்திருக்கோ !!!!”

“ம்…எல்லாம் நல்லதே தான் தரும் நவீ. சரி இந்த கவினும் கஜேஸ்வரியும் நம்மள அவா ஆத்துக்கு வான்னு கூட கூப்பிடாம இருக்காளே நவீ!! நாம பின்ன எப்படி அவா ஆத்துக்கு போறது?”

“போக வேண்டாம். அவ்வளவு தான்….அவா நினைப்பு என்னென்னா…நவீனுக்கும் மிருதுளாவுக்கும் தானே இது புது நாடு நமக்கு இது பழைய நாடு தானே…ஸோ அவாளுக்கு ஏதாவது வேணும்னா நம்மகிட்ட தான் ஹெல்ப் கேட்டு வந்தாகணும்னு நினைச்சுண்டு திமிரா இருக்கா…..இருக்கட்டும் இருக்கட்டும்…நமக்கு இதுவரை அந்த கடவுள் தான் துணையா இருந்திருக்கார் இனியும் அவரே பார்த்துப்பார்….ஏன்!!! இவ்வளவு ஊருகளுக்கு நாம மாத்தலாகிண்டிருந்தப்போ எல்லாம் என்ன இவாளெல்லாமா வந்து ஹெல்ப் பண்ணினா…இல்ல நாம தான் யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டுண்டு போனோமா? நாம பாட்டுக்கு நம்ம வேலையைப் பாரப்போம் மிருது”

“அதுவும் சரி தான் நவீ. ஆனாலும் எனக்கு ஒண்ணு தோனறது…சொல்லவா”

“என்னது சொல்லு”

“ஒரு வேளை நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக ஏர்போர்ட் வருவாளோ என்னவோ? அப்படி வந்தா நாம அவாகூட அவா ஆத்துக்கு போவோமா இல்ல நம்ம சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்கு போவோமா!!”

“ஹா!ஹா!ஹா!ஹா! இது வீண் நப்பாசையே தான். இன்னுமா அவாளை நம்புற. இதுல எங்க போறதுன்னு வேற கேட்குற….உன்னை நினைச்சா சிரிப்பு தான் வருது மிருது”

“பாருங்கோ வந்து நிக்கப் போறா….அந்த நேரத்துல எங்க போறதுன்னு நீங்க கன்ஃப்யூஸ் ஆக போறேங்கள்…”

“பாரக்கலாம் பார்க்கலாம்…..முதல்ல பெல்ட்டைப் போடு. சக்தி பெல்ட் போட்டுண்டுட்டியா மா”

“ஆங் போட்டுண்டுட்டேன் பா.”

“ஓகே !! அவர் ஃப்ளைட் இஸ் கோயிங் டூ டேக் ஆஃப் நவ்….அன்ட் அவர் லைஃப் டூ மை டியர் ஏஞ்சல்ஸ்”

என்று புது நாட்டில் புது அனுபவங்களையும், புது வாய்ப்புகளையும், புது நட்புகளையும் தேடி வானில் பறக்கத் துவங்கினர் மூவரும்.

மிருதுளா சொன்னதுப் போல் கவின் கஜேஸ்வரி அவர்களை அழைக்க ஏர்போர்ட் வருவார்களா? இல்லை அது நவீன் சொன்னது போல மிருதுளாவின் நப்பாசையா?

தொடரும்……
























Leave a comment