ஜேம்ஸின் வந்த வேலை முடிந்ததும் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்படுவதற்காக தன் இருக்கையிலிருந்து எழுந்து,
“ஓகே சக்தி. அப்போ நான் கிளம்பறேன்.”
“ஓகே ஜேம்ஸ். சீ யூ டுமாரோ”
“எதுக்கு சக்தி?”
“சும்மா தான். நாளைக்கு எப்படியும் உங்க நண்பன் விஷால் வந்திடுவான். எப்படியும் நீங்க மீட் பண்ணுவீங்க. நானும் அவனோடு வருவேன். அதுதான் சொன்னேன்.”
“அப்பப்பா!! ரொம்பவே முன்னோக்கி யோசிச்சுப் பேசறீங்க சக்தி. பார்ப்போம் எனக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லாட்டி நாம் சந்திப்போம். இப்போ நான் கொஞ்சம் உங்க செகரெட்டரி அம்மாவை விசாரிச்சிட்டு அப்படியே கிளம்பறேன். பை சக்தி.”
“ஆங்! ஓகே! பை ஜேம்ஸ்.”
என்று சக்தியிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு நேராக ருத்ரா அமர்ந்திருந்த அறையை பார்த்தான். உள்ளிருந்து ருத்ராவும் ஜேம்ஸை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைய அதன் கண்ணாடி கதவைத் தட்டினான் ஜேம்ஸ். அதை அப்போது தான் கவனித்தது போல பாவனை செய்த ருத்ரா தன் முன்னிருந்த கணினியின் மேல் வழியாக எட்டிப்பார்த்து, உடனே எழுந்து சென்று அவளின் அறை கதவை திறந்து
“ஹாய்! மிஸ்டர் ஜேம்ஸ். ப்ளீஸ் கம் இன்.”
“ஓ! தாங் யூ. மிஸ்டர் எல்லாம் வேண்டாமே! ஜேம்ஸ் என்றே கூப்பிடலாமே மிஸ் ருத்ரா”
“ஓ! ஓகே. அதே மாதிரி நீங்களும் என்னை ருத்ரா என்றே கூப்பிடலாம் ஜேம்ஸ்.”
“சரி ருத்ரா. இப்போ நான் நேரா விஷயத்துக்கே வரேன்.”
“சொல்லுங்க ஜேம்ஸ். நான் என்ன பண்ணணும்?”
“நீங்க நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்”
“சரி கேளுங்க”
“சக்தி விஷாலை பார்க்க போனது உங்களுக்கு தெரியும் தானே”
“ம்…தெரியும். அவ என்கிட்ட சொல்லிட்டு தான் போனா”
“உங்களுக்கு சக்தியை எவ்வளவு நாளா தெரியும்?”
“அவளும் நானும் ரூம் மேட்ஸா இருந்த நாள் முதல் எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் தெரியும். ஏன் கேட்கறீங்க?”
“ஓ! ஓகே. அப்புறம் ஏன் இப்போ நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்க?”
“அது வந்து…வந்து”
“ஏன் தயங்குறீங்க ருத்ரா? பதில் சொல்லுங்க. என்கிட்ட சொல்லுற விஷயம் எதுவும் இந்த ரூமைத் தாண்டாது.”
“ம்…அது வந்து…நான் ஒரு நாள் என்னோட பாய் பிரெண்டை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தேன். அதுனால சக்தி வேற வீடு பார்த்துட்டு போயிட்டா.”
“உங்க பாய் பிரெண்டை கூட்டிட்டு வந்ததுக்கு எதுக்கு சக்தி ரூமை காலி பண்ணணும்! புரியலையே! கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?”
“அவளுக்கு எந்த ஆம்பளையையும் ரூமுக்கு கூட்டிட்டு வர பிடிக்காது. அதை எங்க ரெண்டு பேரோட ரூம் ரூல்ஸ்லயே எழுதி வச்சிருந்தோம். மொதோ தடவை நான் அவனை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தப்போவே அவ என்னை எச்சரிச்சா… நானும் சாரி கேட்டு இனி இது போல நடக்காதுன்னு சொன்னேன். ஆனா ரெண்டாவது தடவை நானும் என் பாய் பிரெண்டும் அவனோட ஒரு பிரெண்டோட பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்க என்னத்த குடுத்தாங்களோ தெரியலை எனக்கு போதை தலைக்கு ஏறிடுச்சு. அதுனால அவன் என்னை என் ரூமில் டிராப் பண்ணிட்டு போக வந்தான். நானும் ஹால்ல இருந்த சோஃபாவிலேயே தூங்கியிருக்கேன். மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தா…. எதிர்த்த சோஃபாவுல சக்தி தலைவிரி கோலத்துல கோவமா உட்கார்ந்திட்டிருந்தா. என்ன ஆச்சு? ஏன் அப்படி உட்கார்ந்திருக்கான்னு அவகிட்ட கேட்டேன். அதுக்கு அவ என்னை டிராப் பண்ண வந்த என் பாய் பிரெண்ட் சக்தியிடம் மிஸ் பிஹேப் பண்ணப் பார்த்தான்னும், அவனை அடிச்சு ரூமை விட்டு துறத்தி விட அவ ரொம்ப போராடியிருக்கான்னும் அவ சொல்லி எனக்கு தெரிய வந்தது. அவகிட்ட அதுக்கு மன்னிப்பும் கேட்டேன். ஆனா அவ நடந்ததை என்கிட்ட சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே தனியா போயிட்டா. என்னாலையும் ஒண்ணும் சொல்ல முடியலை. அன்னைக்கு பிரிஞ்சோம். இன்னைக்கு வரை நாங்க தனித்தனியா தான் இருக்கோம்.”
“அந்த…உங்க பாய் பிரெண்ட் என்ன ஆனான்?”
“எனக்கு தெரியாது ஏன்னா…அவனை நான் கடைசியா பார்த்தது அன்னைக்கு நைட்டு தான்.”
“அவனை அப்புறமா அவன் வீட்டுக்கோ இல்ல நீங்க அவனை அடிக்கடி சந்திக்கும் இடங்களுக்கோ போய் நீங்க பார்க்க முயற்சிக்கலையா?”
“போனேன். ஏன்டா என் சந்தி கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தன்னு கேட்க அவனை எல்லா இடத்துலேயும் தேடினேன். ஆனா அதுக்கப்புறம் அவனை நான் எங்கேயுமே பார்க்கலை.”
“அவன் வீடு உங்களுக்கு தெரியாதா? அங்க போய் பார்த்திருக்கலாமே!”
“இல்ல அவன் வீடு எனக்கு தெரியாது. அவன் ஏதோ ஒரு பிரெண்டோட ரூமுல தங்கிட்டிருக்கறதா தான் சொன்னான்.”
“என்ன பாய் பிரெண்டு? என்ன ஒரு பிரெண்ட்ஷிப் இதெல்லாம். ஒருத்தர் ஒருத்தர் எங்க தங்கறாங்கன்னே தெரியாம என்ன ஒரு லவ்வோ! ஐ ஆம் சாரி ருத்ரா. ஏதோ சொல்லணும்னு தோனிச்சு சொன்னேன்.”
“இட்ஸ் ஓகே ஜேம்ஸ். நீங்க சொல்லறதும் சரிதான். அதை எல்லாம் எனக்கு புரிய வச்சது சக்தியின் பிரிவு தான். அன்னேலேந்து இன்னைக்கு வரை நானும் எந்த ஒரு ஆணையும் என் ரூமுக்குள்ள விடறதே இல்லை. சொல்லப் போனால் எனக்கு எந்த பாய் பிரெண்ட்ஸுமே இல்லை. நானும் தி போல தன்னந்தனியா தான் இருக்கேன்.”
“ம்…ம்…குட் குட். அதெல்லாம் இருக்கட்டும் ருத்ரா. சக்தி விஷாலை பார்க்க போன அன்னைக்கு காலையில் உங்க ஆஃபிஸ் கேண்டினில் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட போயிருந்தப்போ… நீங்க அவங்களுக்கு ஒரு ஜூஸ் குடுத்தேங்களே… அது என்ன ஜூஸ்? எங்கேந்து வாங்கிக் குடுத்தீங்க?”
“அது நான் ஆஃபிஸ் வரும் போது வழியில் என் காருக்கு பெட்ரோல் போட ஒரு கியாஸ் ஸ்டேஷன்ல நின்னேன். அப்போ அங்க இருந்த கடையில் நான் குடிக்க வாங்கினேன்.”
“அப்புறம் ஏன் நீங்க குடிக்காம அதை சக்திக்கு குடுத்தீங்க?”
“அதை வாங்கிட்டு வெளியில் வந்ததும் என் காருக்கு பெட்ரோல் போட்டாச்சுன்னு அங்க இருந்த பையன் சொன்னான். அதைக் கேட்டதும் நேரா வந்து என் காருக்குள்ள உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணி ஆஃபிஸுக்கு வந்துட்டேன். இங்கே ஆஃபிஸுக்கு கார் பார்க்கிங் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வாங்கின அந்த ஜூஸ் கேனை பாரத்தேன். சரி லிஃப்ட்டுல போகும் போது குடிக்கலாமேன்னு அதையும் எடுத்துகிட்டு லிஃப்ட்டுல ஏறினேன். அதுல எங்க டீமோட டி.எல் ஆன ராகேஷ் இருந்தார். அவர் கூட பேசிட்டே வந்ததுல மறுபடியும் அந்த ஜூஸை குடிக்கலை. அப்புறம் அவர் அவரோட கேபினுக்கு போயிட்டார். எனக்கு சரியான பசி வேற… ஆனா தி அதுக்குள்ள மீட்டிங்குக்கு எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லிட்டா… சோ அப்பவும் குடிக்க முடியலை. ஒண்ணும் சாப்பிடவும் முடியலை. அப்புறமா அவ மீட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வேகமா கேண்டினுக்கு போனா. நானும் சரியான பசியில் இருந்ததால் அவ பின்னாடியே போனேன். அவ சாண்ட்விச் வாங்கிட்டு போய் உட்கார்ந்தா. நானும் சாப்பிட்டுட்டு அவ எங்க உட்கார்ந்திருக்கான்னு பார்த்தேன்.”
“ஏன் அவங்க பின்னாடியே போன உங்களுக்கு அவங்க எங்க உட்கார்ந்தாங்கன்னு தெரியலையா?”
“நீங்க எங்க காண்டீனை பாருங்க அப்போ தான் நான் சொன்னது உங்களுக்கு புரியும். அது ஒரு கடல் மாதிரி. அதுக்குள்ள சக்தி போனதும் நானும் போனேன். ஆனா என்னோட பசி முதல்ல என் வயிற்றை நிரப்ப தான் சொல்லிச்சு. சோ அதை தான் முதல்ல செய்தேன். அப்புறமா அவளை தேடி கண்டு பிடிச்சு அவ பக்கத்துல போய் உட்கார்ந்தேன். அவ தண்ணியோ ஜூஸோ வாங்காம வெறும் சாண்ட்விச் மட்டும் வாங்கிட்டு வந்திருந்ததைப் பார்த்தேன். அப்போ என்கிட்ட இருந்த ஜூஸ் கேனை எடுத்து அவளுக்கு கொடுத்தேன். அவ்வளவு தான். அவளும் சாப்டுட்டு நேரா ரெஸ்ட் ரூம் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாரிஸுக்கு கிளம்பி போயிட்டா.”
“ஓ. ஓகே.”
“ஏன் நீங்க நான் குடுத்த ஜுஸைப் பற்றியே கேட்கறீங்க?”
“அது ஒண்ணுமில்ல ருத்ரா. என்குவைரின்னு வந்துட்டா எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் தானே விசாரிக்கணும்!”
“என்குவைரியா? எதுக்கு? அதுவும் என்னை எதுக்கு என்குவைரி பண்ணணும்.”
“இட்ஸ் ஓகே ருத்ரா. ஜஸ்ட் லீட். உங்களோட ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ம்… உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கு. எனக்கு சொல்லணும்னு தோனிச்சு சொல்லிட்டேன். சொன்னது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க. நான் கிளம்பறேன். பை.”
“ம்….இட்ஸ் ஓகே. தாங்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ஜேம்ஸ். பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“யூ டூ ருத்ரா.”
ருத்ராவுடன் விசாரணை என்ற பெயரில் பேசி விட்டு வெளியே வந்த ஜேம்ஸ் தனக்கு தானே
“இவ சொல்றதை பார்த்தா நம்புறா மாதிரி தான் இருக்கு… அதே நேரம் ரொம்ப பர்ஃபெக்ட்டா வரிசையா நடந்ததை எல்லாம் சொல்றதை பார்த்தா எங்கயோ இடிக்குற மாதிரியும் இருக்கே! பார்ப்போம்… கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இவ சொன்னது மட்டும் உண்மையா இருந்ததுன்னா… டேய் ஜேம்ஸ் கூடிய சீக்கிரமே உனக்கொரு கேர்ள் பிரெண்ட் கிடைச்சிடுவா டா…”
என்று கூறிக்கொண்டே சிறு புன்னகையுடன் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்பட்டு தனது ஸ்டேஷன் சென்றடைந்தான்.
கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை பார்த்து
“ஏய் வி! என்ன நீ ஓட்ட போறியா?”
“ம்…ஆமாம். ஏன்? நான் ஒட்ட கூடாதா?”
“இல்ல சாவி…எப்படி?”
“என்கிட்ட சாவி எப்படி வந்ததுன்னு கேட்க வர அது தானே!”
“ஆமாம்.”
“ஜேம்ஸ் பேசிட்டு போனதுலேந்து நீ பிரமை பிடித்தவ போல இருந்த. ஜேம்ஸ் வேற நம்மளை அங்கே இருக்க வேண்டாம்ன்னு உடனே கிளம்பி வீட்டுக்கு போக சொன்னான். நான் திரும்பி உன்னைப் பார்த்தா நீ இந்த உலகத்துலயே இல்ல. என்ன பண்ணுவேன்? உன் கையிலிருந்த சாவியை எடுத்தேன். உன்னை அப்படியே கை தாங்கலா கூட்டிண்டு வந்து காருக்குள்ள உட்கார வச்சேன். இதோ வண்டிய ஸாடார்ட் பண்ணினேன். எங்கயோ இருந்த நீ இதோ இப்ப இங்க இந்த உலகத்துக்கே வந்துட்ட. சரி இப்போ நாம உன் வீட்டுக்கு போகலாமா?”
“ஓ எஸ் போகலாம். ஆனா மணி இப்போ ஒன்றரை ஆகுது. பேசாம லீ கார்னர் ல போய் லஞ்ச் சாப்டுட்டு அப்படியே ஆஃபிஸ் ல தலையை காட்டிட்டு வரட்டுமா வி!”
“ஹலோ! இன்னைக்கு லீவ் சொல்லிருக்க ஞாபகமிருக்கா?”
“ஆமாம். நல்லாவே ஞாபகமிருக்கு. ஆனா ஜேம்ஸ் மத்தியானம் ஆஃபிஸ் வரேன்னு சொன்னதா கேட்டுது. ஆனா ஏதோ கிணத்துக் குள்ளேந்து கேட்டுது.”
“அவன் அப்படி தான் சொன்னான். தெளிவா தான் சொன்னான். ஆனா நீ ஏதோ சிந்தனையில் ஆழமா மூழ்கி இருந்ததால உனக்கு அப்படி கேட்டிருக்கு.”
“சரி சரி நான் சொன்னா மாதிரி பண்ணலாமா?”
“எல்லாம் சரி. எனக்கும் ஆஃபிஸ்னு ஒண்ணு இருக்கு அது தெரியுமா உனக்கு.”
“இருக்கு உனக்கு! ஆஹா ஹ ஆஹா! என்ன ஒரு வார்த்தை ஜாலம்.”
“தி விளையாடாதே.”
“சரி சரி நீ பாரிஸுக்கு கிளம்பு. உன்னை யாரு இங்க இருக்க சொன்னா?”
“இதுல என்ன தப்பு வி. உனக்கு ஆஃபிஸ் இருக்கு உண்மை தான். நீ போய் தான் ஆகனும் அதுவும் உண்மைதான். அப்போ போன்னு தானே சொல்ல முடியும். போகாத என்கூடவே இருன்னா சொல்ல முடியும்!”
“ஆங்…ஏன் அது மாதிரி சொன்னா என்ன கொறஞ்சிடுமாம் மகாராணிக்கு?”
“சரி அப்படி நான் சொன்னா உனக்கு ஆஃபிஸ் போக வேண்டியதில்லையா. அதுனால உனக்கு பிரச்சினை வராதா?”
“ம்….அது…”
“என்ன ம்…இழுவை! எனக்கு தெரியும் வி. டயலாக்குக்காக வேணும்னா அப்படியெல்லாம் சொல்லிக்கலாம். ஆனால் பிராக்டிகல்லா யோசிச்சுப் பார்த்தா வேலை முக்கியம் தானே! எனக்காக நீ இந்த இரண்டு நாள் என் கூடவே இருந்ததே எனக்கு பெரிய பலமா இருந்தது. அதை வைத்தே வரும் நாளெல்லாம் ஓட்டிடுவேன். யூ டோண்ட் வரி வி. நீ இப்பவே கூட லஞ்ச் முடிச்சிட்டு பாரிஸ் கிளம்பு.”
“ஆனா உன்னை எப்படி தனியா விட்டுட்டு…”
“ஹலோ சார்! நான் இத்தனை வருஷமா தனியா தானே இருந்தேன்.”
“ஆனா இத்தனை வருஷத்துல உனக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கா? இல்லையே! அது தான் யோசனையாவே இருக்கு.”
“இட்ஸ் ஓகே வி. இன்னைக்கு பாரிஸ் போ. இன்னும் இரண்டு நாள்ல வீக் என்ட் வந்திடும் அப்புறமென்ன இந்க வந்துடு. அப்போ உன் பேரன்ட்ஸ் கிட்டயும் டைம் வாங்கிண்டு வா. நாம எல்லாரும் பேசலாம். என்ன சொல்லுற?”
“ம்…ஓகே தான். ஆனா நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் தி.”
“அதெல்லாம் இருப்பேன் வி. நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாம சாப்டுட்டு கிளம்பு.”
“ம்…ஓகே.”
“இதோ லீ கார்னர் வந்துட்டோம்.”
சக்தியும் விஷாலும் சேர்ந்து மத்திய உணவை உண்டு முடித்ததும் விஷால் அவன் காரை எடுத்துக் கொண்டு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான். சக்தி அவளது அலுவலகம் சென்று அவளின் மேலதிகாரியிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறினாள். அவரும் அவளை புரிந்துக் கொண்டு அவள் கேட்டது போலவே அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவள் நேராக ருத்ராவை வரவழைத்து அன்றைக்கு பாதியில் விட்ட மீட்டிங்கை தொடர்வதாக கூறி அனைவரையும் மீட்டிங் அறையில் கூடச் சொன்னாள். அப்போது ருத்ரா அன்று சிலர் லீவில் இருப்பதாகவும் அதனால் அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க அதற்கு சக்தி
“இல்ல ருத்ரா! நான் நாளைக்கும் நாளான்னைக்கும் லீவு கேட்டிருக்கேன். சோ ஆஃபிஸ் வரமாட்டேன். அதுதான் இன்னைக்கு முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்… சரி சரி நம்மளோட அந்த புது ரோபோ எந்த ஸ்டேஜ்ல இருக்கு? அன்ட் அன்னைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியோட நடந்த மீட்டிங்க்கு அப்புறம் அவங்க கிட்டேந்து எந்த ரெஸ்பான்ஸும் எனக்கு வரலையே!! அது என்ன ஆச்சுன்னு அவங்ககிட்ட கேட்டுட்டு அப்படியே அவங்கள ஈமெயில் பண்ண சொல்லு ருத்ரா.”
“புது ரோபோ பாராஜெக்ட் வேகமா நடந்துட்டு இருக்கு தி. ஆனா அன்னைக்கு மீட்டிங்கில் நம்ம டீம் மேட்ஸ் ஏதோ டவுட் கேட்க வந்தாங்க இல்ல… அப்ப கூட நீ அந்த விஷாலை பார்க்க போகணும்னும் நீ பார்த்துக்கறேன்னும் சொல்லிட்டு போனியே! ஐ திங்க் அவங்களுக்கு நீ அதுக்கான விளக்கத்தை ஒரு ஈமெயிலா போட்டுட்டேன்னா அந்த ப்ராஸஸ் நிக்காம இருக்கும்.”
“ஆக்ச்சுவலி அன்னைக்கு அவங்க என்ன சொல்ல வறாங்கங்கறது எனக்கு புரிஞ்சிடிச்சு அதுனால தான் நான் அப்பறமா சொல்லறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன். அதுக்கான சல்யூஷனை அன்னைக்கே ஈமெயில் பண்ணிட்டேனே!”
“இல்ல தி. நீ பண்ணலை. அதுனால தான் அவங்க உன்கிட்டே ஈமெயில் வர வரைக்கும் அதுக்கு முன்னாடி ஸ்டெப் வரை ப்ராஸஸ் பண்ணிட்டிருக்காங்க. நீ அதற்கான சல்யூஷனை அனுப்பிருந்தேன்னா அவங்க அதை இன்னேரம் இம்ப்ளிமென்ட் பண்ணிருப்பாங்க தி.”
“இல்லையே! இரு நான் செக் பண்ணறேன். ஊப்ஸ்!! நான் ஈமெயில் டைப் பண்ணிருக்கேன் ஆனா சென்டு பண்ணலை. இதோ இப்பவே அனுப்பிடறேன். ஆங் டன். இந்த ஆராடர் டெலிவரி டேட் என்ன?”
“அடுத்த மாசம் இருப்பத்தி எட்டாம் தேதிக்குள்ள கவர்மென்ட்டுக்கு குடுக்கணும்.”
“அதுக்குள்ள முடிஞ்சிடுமில்ல ருத்ரா?”
“தி நீயா!!”
“வாட் டூ யூ மீன் பை நீயா?”
“இல்ல இத்தனை வருஷத்துல இது மாதிரி டவுட் ஃபுல்லா நீ எப்பவுமே இருந்ததில்லையே! அதுதான் கேட்டேன். உனக்கு உடம்பு சரியில்லையா தி. எனி ப்ராப்ளம்?”
“உடம்புக்கு ஒண்ணுமில்ல ருத்ரா. ம்…சரி நான் ஈமெயில் அனுப்பிட்டேன். நம்ம டீமை முழு மூச்சோடு வேலையில் இறங்க சொல்லு. வீ ஹாவ் டூ டெலிவர் இன் டைம். சோ இது சால்வுடு. அந்த எம்.என்.எம் என்ன ஆச்சு? அதைப் பத்தி ஒண்ணுமே நீ சொல்லலையே!”
“ஆங் அவங்கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல தி. நானும் நீ எதுவம் சொல்லாததால் ஃபாலோ அப் பண்ணலை.”
“என்ன ருத்ரா. நான் தான் சொல்லலை. அட்லீஸ்ட் நீயாவது என்னை கால் பண்ணி கேட்டிருக்கலாமில்ல!”
“சாரி தி.”
“சரி சரி இன்னைக்கே அவங்களுக்கு கால் பண்ணி பேசிட்டு அப்படியே ஈமெயிலும் போட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு எனக்கு கால் பண்ணி சொல்லு”
“ஓகே தி. டன்.”
“எக்ஸ்க்யூஸ்மி தி.”
“எஸ் பீட்டர். ஓகே ருத்ரா நீ போய் நான் சொன்னதை எல்லாம் இன்னைக்கே முடிச்சிடு. கம் இன் பீட்டர்”
“உங்களை பார்க்க ஜேம்ஸ்ன்னு ஒருத்தர் வந்திருக்கார்.”
“ஓ வந்துட்டாரா. ஓகே அவரை என் கேபினுக்கு அழைச்சிட்டு வாங்க.”
“ஓகே. இதோ அழைச்சிட்டு வரேன்”
சிறிது நேரம் கழித்து பீட்டர் ஜேம்ஸை அழைத்துக் கொண்டு சக்தியின் கேபினுக்குள் வந்தான்.
“வாங்க ஜேம்ஸ் வாங்க வாங்க. ஓகே பீட்டர் தாங்ஸ். யூ கேன் கேரி ஆன் வித் யுவர் வொர்க். ஏதாவது தேவைன்னா கூப்பிடுறேன்.”
என்று சக்தி சொன்னதும் இருவருமாக செக்யூரிட்டி அதிகாரியிடம் சென்றனர். அவரிடம் சக்தி ஒரு பேப்பரை காட்டியதும் அதை படித்த அந்த அதிகாரி அவர்களை சிசிடிவி ரிக்கார்டிங் அறைக்குள் அழைத்து சென்றார். அங்கே ஜேம்ஸ் அவரிடம் சக்தி பாரிஸ் கிளம்பி சென்ற நாளின் காலை முதல் மத்தியப் வரையிலான ரிக்கார்டிங் கை பார்க்க வேண்டுமென கூறினான். அதிகாரியும் அவரின் கீழ் வேலை பார்க்கும் மைக்கேலிடம் ஜேம்ஸ் கேட்டது போலவே அந்த ரிக்கார்டிங்கை காண்பிக்க சொன்னார். அதைப் பார்த்துவிட்டு அதன் ஒரு காபியை தனது மொபைலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் சக்தியின் கேபினுக்கு வந்தனர் சக்தியும் ஜேம்ஸும். சக்திக்கு அதில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.
“வாங்க ஜேம்ஸ். உட்காருங்க. காஃபி ஆர் டீ?”
“காஃபி”
“ருத்ரா டூ காஃபி ப்ளீஸ்”
ருத்ரா ஆஃபிஸ் பாய் இடம் சொல்ல அவனும் இரண்டு காஃபி எடுத்துக் கொண்டு சக்தியின் அறைக்கு சென்று கதவை தட்டினான் அப்போது உள்ளிருந்து
“எஸ் கம் இன்.”
“காஃபி எடுத்துக்கோங்க ஜேம்ஸ். தாங்க்ஸ் டக்லஸ். ம்…சொல்லுங்க ஜேம்ஸ்… இந்த சிசிடிவி ரிக்கார்டிங் பார்த்ததுல உங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”
“இதுவரை உங்க கேஸ்ல இந்த ஒண்ணு மட்டும் தான் உண்மையா இருக்கு…”
“ஆங்…”
“இருங்க சக்தி. அதே நேரம் நீங்க அன்னைக்கு ஆஃபிஸ் கேண்டீன்ல சாப்பிட்ட போது உங்க பிரெண்ட் ஜூல்ஸ் குடுத்தான்னு சொன்னீங்களே அது அவங்க கேண்டீன்ல வாங்கினது இல்ல.”
“அப்படியா? இல்லையே ருத்ரா அதை எனக்காக வாங்கிண்டு வந்ததா தானே சொன்னா!”
“உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க. அதுல எந்த வித மாற்றமும் இல்லை. ஆனா அதை எங்கேந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு அவங்க கிட்ட தான் கேட்கணும்.”
“இல்ல ஜேம்ஸ் அந்த சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எங்க கேண்டீன்ல கிடைக்கறது தான்”
“இதோ இப்போ பார்த்தோமே அந்த கேண்டீன் சிசிடிவி ல தான் தெரிஞ்சுது. நீங்க வேற பக்கமா திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களால அவங்க அங்கேந்து தான் வாங்கிட்டு வந்தாங்களான்னு தெரியாம போச்சு.”
“அப்படீன்னா அவ தான் எனக்கு அதுல ஏதாவது கலந்து குடுத்திருப்பாளா?ஆனா அவ ஏன் அப்படி செய்யணும்?”
“தீர்க்கமா சொல்ல முடியாது. ஆனால் அவங்கள என் சஸ்பிஷன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளேன். நான் அவங்க கிட்ட தனியா பேசி விசாரிச்சுக்கறேன். நீங்க எதுவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம்.”
“ம்…சரி. அவளை இப்போ இங்க வர சொல்லவா?”
“இல்ல இல்ல நான் வெளியே போகும் போது பார்த்து பேசிக்கறேன்.”
“சரி நளினி விஷயம் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”
“அடாப்ஸி ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்.”
“அப்படியா! அது வறதுக்கு எவ்வளவு நேரமாகும்?”
“இருபத்தி நான்கு மணி நேரமாகும்.”
“ஓ! ஓகே ஓகே. சரி நீங்க டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து எனக்கு கால் பண்ணி அந்த நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டீங்களே ஏன்?”
“ஆங்!! ஆங்!! அது ஏன்னா! அந்த பொண்ணு சொன்ன நேரத்துல, அவ சொன்ன அந்த இடத்துல எதுவுமே நடக்கலை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த வித அறிகுறியும் அந்த ஏரியாவில் இருக்கும் எந்த சிசிடிவிலேயும் பதிவாகலை. அதுவுமில்லாம நான் தனிப்பட்ட முறையில் அந்த ஏரியா காரங்களையும் விசாரிச்சுப் பார்த்தேன். அதுல…”
“எக்ஸ்க்யூஸ்மி தி. மே ஐ கம் இன்”
“ஆங்…ஒன் செகண்ட் ஜேம்ஸ். எஸ் கம் இன் ருத்ரா”
“தி….”
“யூ டோண்ட் வரி ருத்ரா. இவர் பேரு ஜேம்ஸ். என்னோட நண்பர். ஜேம்ஸ் இவங்க தான் ருத்ரா. மை செகரெட்டரி.”
“ஹலோ மிஸ் ருத்ரா”
“ஹாய்”
“சரி என்ன விஷயம் ருத்ரா?”
“அந்த எம்.என்.எம் கம்பெனி உனக்கு அன்னைக்கே அவங்க ப்ரபோசல உன் ஈமெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம். உன் கிட்டேந்து தான் ரிப்ளை எதிர்பார்த்திட்டிருக்கறதா சொன்னாங்க. அதை சொல்லி உனக்கு ஞாபக படுத்திட்டு போக தான் வந்தேன். நீயே அவங்களுக்கு ரிப்ளை பண்ணிடு சரியா. ஓகே நான் என் சீட்டுக்கு போறேன். நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் ஜேம்ஸ். ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”
“தாங்யூ மிஸ் ருத்ரா. விஷ் யூ தி சேம்.”
என்று சந்தேக கண்ணுடன் ருத்ராவைப் பார்த்த படி அமர்ந்திருந்த ஜேம்ஸை பார்த்து சக்தி தன் தொண்டையை சரி செய்துக் கொள்வது போல சப்தம் எழுப்பியதும் ஜேம்ஸ் அவளைப் பார்த்து
“ம்…என்ன சொன்னீங்க சக்தி?”
“நான் ஒண்ணுமே சொல்லலை ஜேம்ஸ். தொண்டை வரண்டு போன மாதிரி இருந்தது. அதுதான் தண்ணி குடிச்சேன். நீங்க தான் ருத்ராவை வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டே இருந்தீங்க”
“இல்ல அவங்க கிட்ட ஏதோ ஒரு ரகசியமிருக்குன்னு என் மனசுக்கு படுது. எதுக்கும் அவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கறேன். நீங்களும் அவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”
“எனக்கு தெரிஞ்சு அவ ரொம்ப நல்லவ தான். நான் ஜாக்கிரதையா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்… நீங்க அவளை பார்த்ததைப் பார்த்தா அவளை உங்க சந்தேக லிஸ்ட்டுல சேர்க்க பார்த்தா மாதிரி தெரியலையே!”
“ஹலோ ஜேம்ஸ் இது என்னோட ஆஃபிஸ். இங்க எப்படி அவனிருப்பான். அவன் கிளம்பி பாரிஸ் போயாச்சு. நாளைக்கு மத்தியானமா வருவான்.”
“ம்…ஓகே ஓகே!”
ஜேம்ஸ் நளினி சொன்ன சம்பவத்தைப் பற்றி சக்தியிடம் விளக்கிக் கொண்டிருக்கையில் ருத்ரா உள்ளே நுழைந்து அவர்கள் பேச்சை திசை திருப்பி விட அந்த விஷயம் மீண்டும் தட்டிப் போனது.
ஜேம்ஸ் வேறெந்த விவரமும் கூறாமல் நேரில் பார்க்கும் போது சொல்வதாக கூறி கைபேசி அழைப்பை துண்டித்ததும் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த சக்தியிடம் விஷால்
“ஏய் தி…தி…தி… என்ன ஆச்சு? என்ன யோசிக்கிற? என்னைப் பாரு தி”
என்று கூறிக்கொண்டே அவள் தோளை பிடித்து உலுக்கி அவனைப் பார்க்கச் செய்தான்.
“வி எனக்கு ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரி தோணுது.”
“என்ன தப்பு? எங்க? யாருக்கு?”
“அதெல்லாம் தெரியலை. ஆனா ஏதோ பெரிய தப்பு நடக்கப் போறதா என் மனசு சொல்லுது.”
“தி நீ அனாவசியமா போலிஸோட டென்ஷனை எல்லாம் மண்டைக்குள்ள எடுத்துண்டு உன்னை நீயே குழப்பிக்கற.”
“இல்ல வி நல்லா யோசிச்சுப் பாறேன். நான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வர கிளம்பினேன்… ஆனா நான் அந்த ஹைவேல டிராவலே பண்ணலன்னு போலீஸ் சொல்லறா! எனக்கு ஏதோ நடந்திருக்கு ஆனா என்னன்னு தெரியாது. பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் இத்தனை வருஷமா எங்கேயுமே போகாதவங்க திடீர்னு சொல்லிக்காம எங்கயோ போயிட்டாங்க. பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் ல செடெடிவ் ரத்தத்துல கலந்திருக்குனு டெஸ்ட் எடுத்து வசுந்தரா குடுத்த ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு அதை கொடுத்த வசுவையும் காணலை. அதை கேட்க போனா அந்த ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸை கொலை செய்ய முயற்சி நடந்தது. அவங்களும் இப்போ ஐசியூ ல இருக்காங்க. அடுத்து வசுவோட நர்ஸ் நளினி. அவங்களை பார்த்து பேசிட்டு வந்திருக்கேன். இப்போ என்னடான்னா ஜேம்ஸ் அதெல்லாம் சரியான இன்ஃபர்மேஷன் தானான்னு கேட்டு கால் பண்ணறார்! ஒரு வேளை அந்த நளினிக்கும் ஏதாவது ஆகிடுமா?”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தி. நீ போலீஸ் மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை தி. ஜஸ்ட் ரிலாக்ஸ்.”
“அப்படி என்னை சுத்தும் அந்த மர்ம நபர் யார்? ஏன் என்னையே சுத்தி வரணும்?”
“இப்ப தானே சொன்னேன் தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதேன்னு. மறுபடியும் ஆரம்பிச்சுட்டயே!”
“நாம ரெண்டு பேரும் போய் அந்த நர்ஸ் நளினி பத்திரமா இருக்காளான்னு பார்த்துட்டு வரலாமா வி!”
“இதுக்கு எதுக்கு அங்க போகணும்? உனக்கு அவங்க நம்பர் தெரிஞ்சா ஒரு கால் பண்ணி கேளு”
“ஆங்…நம்பர் குடுத்தா. ஆனாலும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமே”
“நீ மொதல்ல கால் பண்ணிப் பாரு. அப்படி அவங்க நல்லா இருக்காங்கன்னா அதுக்கப்புறம் வேணும்னா நாம கிளம்பி போய் பார்ப்போம். என்ன சொல்ற தி?”
“ம்..சரி இதோ உடனே பண்ணறேன்”
“ஏய் தி…இரு இரு… அந்த நளினி தான் அவங்களோட மொபைல்ல வசுந்தரா வோட கார்லேயே விட்டுட்டாங்கன்னு அவங்க சொன்னதா நீ சொன்னையே அப்புறம் எப்படி எந்த நம்பருக்கு கால் பண்ணற?”
“அவங்களோட ரூம்ல இருக்குற ஃபிக்ஸ்டு லைன் நம்பரை தான் நளினி குடுத்தா. அதுக்கு தான் கால் பண்ணப் போறேன்.”
“அது தானே மொபைல்ல கார்ல விட்டுட்டேன் சொன்னவ எப்படி நம்பர் குடுத்திருக்க முடியும்னு ஒரு செகண்ட் யோசனை வந்தது.”
“ஆமாம் ஆமாம் மொபைல விட்டா பேசறதுக்கு ஃபிக்ஸ்டு லைன் இருக்குங்கறதையே நிறைய பேரு மறந்திட்டா என்ன பண்ண? மொபைல் நம்மள அப்படி அதுக்குள்ளயே கட்டிப் போட்டிருக்கு.”
“சரி சரி நீ இப்போ ஃபோன் பண்ணி கேளு.”
“ஆங் ரிங் போறது. ஹலோ நளினி. நான் தான் சக்தி பேசறேன். உங்களை இன்னைக்கு காலையில வந்து பார்த்தேனே! வசுவோட பிரெண்ட்.”
“சக்தி… சக்தி… சக்தி…”
“நளினி! நளினி! என்ன ஆச்சு? ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?”
“சக்தி…காப்பா…த்…து…ங்க…ஆ!”
என்ற அலறல் சத்தம் கேட்டதும் தன் காதோடு வைத்திருந்த ஃபோனை சற்று தூரமாக பிடித்துக் கொண்ட சக்தி உறைந்து நின்றிருந்தாள்
“தி…தி…தி… என்ன ஆச்சு? ஏதாவது பேசு தி… அந்த ஃபோனை குடு… ஹலோ மிஸ் நளினி… என்ன இது ஃபோன் கட்டாகியிருக்கு? தி…தி… கம் ஆன் தி… பேசு. என்ன ஆச்சு? இரு இரு…இதோ வரேன். ஆங் இந்தா மொதல்ல இந்த தண்ணிய குடி.”
என்று சக்திக்கு தண்ணீர் குடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் விஷால். ஆனாலும் அவள் பதற்றமாகவே இருந்தாள்.
“தி…ஜஸ்ட் ரிலாக்ஸ்… டேக் எ டீப் பிரெத்… இப்போ சொல்லு என்ன ஆச்சு?”
“வி…வி…நாம நளினி ரூமுக்கு போகலாம்னு சொன்னேனில்லையா! நாம போயிருந்தா அந்த பொண்ண காப்பாத்திருக்கலாம்.”
“சரி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சாம்?”
“ஐ திங்க்…ஐ திங்க்… அவளை யாரோ கொன்னுட்டா!”
“வாட்? என்ன உளர்ர தி!”
“இல்ல வி… அவங்க என் கூட பேசு போது அங்க வேற யாரோ இருந்திருக்கா. ஏன்னா நளினி குரல்ல நடுக்கமும் பயமும் இருந்தது. அவ திக்கி திக்கி தான் பேசினா. கடைசியில் ஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டது அவ்வளவு தான் ஃபோன் கால் கட்டாகிடுத்து.”
“இரு இதை உடனே நான் ஜேம்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன். அதுக்கப்புறம் நாமும் நளினி ரூமுக்கு போவோம். ஆங்…இட்ஸ் ரிங்கிங்… ஹாய் ஜேம்ஸ்…”
என்று நடந்தவற்றை ஜேம்ஸிடம் விளக்கிக் கூறினான் விஷால். அதை கேட்ட ஜேம்ஸ்…
“அப்படியா! ஓ மை காட்! சரி சரி நான் அந்த நளினி ரூம் இருக்குற அந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுக்கு இப்பவே போறேன்.”
என்று விஷாலிடம் கூறிவிட்டு தனது மேலதிகாரியான எட்வார்ட் கிள்பர்ட்டிடம் விரைந்து சென்று விளக்க முயன்ற போது அவர்
“என்ன ஜேம்ஸ்! நீங்க இவ்வளவு நேரம் இங்க நம்ம பக்கத்துல இருக்குற டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுல இருந்தீங்க. அது எப்படி அந்த ஹாஸ்பிடல் ஸாடாஃப் தங்குற அப்பார்ட்மெண்ட்ல கொலை நடந்திருக்குன்னு சொல்லறீங்க? இன்னும் எந்த போலிஸ் ஸ்டேஷனுக்கும் எந்த தகவலும் வந்தா மாதிரி தெரியலையே!!”
என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவரின் தொலைபேசி மணி ஒலித்தது. அதை எடுத்து மறுபக்கத்திலிருந்து வந்த செய்தியை கேட்டதும் அமைதியாக
என்று கூறிவிட்டு நேராக நளினியின் ரூமிருக்கும் இடத்திற்கு சென்றான் ஜேம்ஸ். அதே நேரம் சக்தியும் விஷாலும் சக்தி வீட்டிலிருந்து அதே இடம் செல்ல புறப்பட்டனர்.
ஜேம்ஸ் முதலில் சென்றான். அவன் பின்னாலேயே சக்தியும் விஷாலும் அங்கு சென்றார்கள். சக்தி வேகமாக நளினியின் ரூமிற்கு சென்றாள். அங்கே போலிஸ் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேம்ஸ் அவளிடம்
“சக்தி அன்ட் விஷால் நீங்க ரெண்டு பேரும் கீழே வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு என்ன ஏதுங்கற விவரத்தை சொல்லறேன்.”
“ஜேம்ஸ் அந்த பொண்ணோட முகத்த ஒரே ஒரு தடவ பார்த்துட்டுப் போனேனே ப்ளீஸ்.”
“இல்ல சக்தி அது முடியாது. சில ப்ரோட்டோகால்ஸ் இருக்கு. உங்களை இப்போ உள்ளே விட மாட்டாங்க. விடவும் கூடாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. எல்லாம் முடிஞ்சு பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி ஒப்படைக்கும் போது தான் நீங்க பார்க்க முடியும். டேய் விஷால் இவங்கள கூட்டிட்டு கீழே போ. நான் கொஞ்ச நேரத்துல கீழ வரேன்.”
“ப்ளீஸ் தி... வா நாம் ஜேம்ஸ் சொல்லற படி கீழ போய் நிற்போம். வா தி…ம்…வா”
என்று கண்களில் கண்ணீருடன் நளினி ரூமின் வாசலிலேயே நின்றிருந்த சக்தியை அழைத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சென்று ஒரு மரத்தடியில் இருவருமாக நின்றுக் கொண்டனர். அப்போது விஷால் சக்தியிடம்
“ஏய் சக்தி! இன்னும் அரைமணி நேரத்துல நீ ஆஃபிஸ் போகணும்.”
“ஓ! ஆமாம். நான் லீவுனு மெஸேஜ் அனுப்பிடறேன்.”
“சரி அதை செய்.”
“ம்…அனுப்பிட்டேன் வி. என்னை நினைச்சா எனக்கே கோபம் வருது வி.”
“நீ என்ன செஞ்ச?”
“பின்ன என்னால் தானே இத்தனை பேருக்கு பிரச்சினை. நான் அந்த ஹாஸ்பிடலுக்கு போனதால் தானே அந்த நர்ஸ் இப்போ ஐசியூ ல இருக்கா. நான் இந்த நளினியை பார்க்க வந்ததால் தானே அவளும் இதோ இப்படி இறந்து போயிட்டா! நான் வசுந்தராகிட்ட பிளட் டெஸ்ட் எடுத்ததால தானே அவளும் காணாமல் போயிருக்கா! ஸோ எல்லாமே என்னால் தானே! இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்கு என் மேல் கோபமும் ஆத்திரமும் தான் வருது வி.”
“இதுக்கும் உனக்கும் நீ நினைக்கிற மாதிரியான சம்மந்தம் இல்ல… ஆமாம் உன்ன சுத்தி ஏதோ ஒரு வலை பின்னப்படுதுங்கறது என்னவோ உண்மைதான். ஆனா அதுக்கு நீயே நீதான் காரணம்னு சொல்லிக்கறதை முதல்ல நிப்பாட்டு சரியா.”
“என்ன தான் சொன்னாலும் என்னால் ஒரு உயிர் போயிருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வி.”
“இட்ஸ் ஓகே! என்ன நீயா கொலை பண்ணின?”
“நான் நேரடியா பண்ணலைனாலும் இதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேனேன்னு நினைக்கும் போது தான் எனக்கு…”
“இதோ ஜேம்ஸ் வந்துட்டான். வா ஜேம்ஸ் என்ன ஆச்சு?”
“அந்த பொண்ணு டெலிபோன் கேபிளால கழுத்தை நெரிச்சு கொலை செய்யப்பட்டிருக்கா.”
“அய்யோ! அப்ப அவ என் கிட்ட பேசும் போது தான் அது நடந்திருக்கு. கடவுளே.”
“ஆமாம் அதுனால தான் உங்களுக்கு அவங்களோட அலறல் சத்தம் பாதியா கேட்டிருக்கு”
“ஐயோ! பாவமே! கடைசியா என்கிட்ட சக்தி காப்பாத்துங்கன்னு அந்த பொண்ணு சொன்னாளே!!!”
“சக்தி உங்களோட அவங்க பேசிய போது உங்களுக்கு வேற ஏதாவது குரல் அல்லது சத்தம் கேட்டுதா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க சக்தி ப்ளீஸ்”
“ம்…இல்ல ஜேம்ஸ். இன்னமும் அந்த பொண்ணோட ஆ ன்னு அலறல் சத்தம் தான் கேட்குது. அதை தவிர வேறெதுவும் எனக்கு கேட்கலை.”
“ம்…”
“இதை செஞ்சது யாரா இருக்கும் ஜேம்ஸ்?”
“நம்ம சக்தியை ஃபாலோ பண்ணுறவங்களா இருக்கலாம். இல்ல வேற யாராவதா இருக்கலாம். பார்ப்போம் இன்வெஸ்ட்டிகேஷன் முடிஞ்சா தான் ஒரு க்ளியர் பிக்சர் தெரிய வரும். லெட் அஸ் வெயிட் அன்ட் வாட்ச்”
“ம்…அதுவும் சரிதான் ஜேம்ஸ். சரி நீ ஏதோ டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மெண்ட்டுலேந்து சக்திக்கு கால் பண்ணி நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டியே அது ஏன்?”
“அது வந்து விஷால்…”
“மிஸ்டர் ஜேம்ஸ் உங்க மொபைலுக்கு மிஸ்டர் கிள்பர்ட் கால் பண்ணினாறாம். நீங்க எடுக்கலைமாம். உடனே உங்கள அவருக்கு கால் பண்ண சொன்னார்.”
“ம்…ஓ! ஆமாம். என் ஃபோன் சைலென்ட் ல இருந்ததால் கவனிக்கல. இதோ உடனே பண்ணறேன். சரி விஷால் அன்ட் சக்தி நீங்க இங்க நிற்க வேண்டாம் வீட்டுக்கு போங்க. நான் இங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு… சக்தி… உங்க ஆஃபிஸுக்கு வரேன். பை டேக் கேர்.”
“ஓகே டா பை. சக்தி நாம இங்கேந்து கிளம்புவோமா?”
என்று விஷால் கூறிக்கொண்டே சிலை போல் நின்றிருந்த சக்தியை காரில் அமரவைத்து. அவள் கையிலிருந்த கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்தான்.
தன்னை பின்தொடர்பவர்கள் நளினியை கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜேம்ஸ் கூறியதைக் கேட்ட சக்தி அப்படியே சிலை போல் நின்றவள் விஷால் காரை ஸ்டார்ட் செய்த சப்தம் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தாள்.
“போனதுல என்ன ஆச்சு. ஏன் தயங்கறீங்க சக்தி சொல்லுங்க. என்ன ஆச்சு?”
“நான் சொல்லுவேன். ஆனா நீங்க அதுக்கப்புறம் அந்த பொண்ணு நளினியை தொந்தரவு செய்யக் கூடாது. ஏன்னா நான் அவளுக்கு வாக்கு குடுத்திருக்கேன்.”
“ஐயோ! சரி தொந்தரவு பண்ண மாட்டேன். தயவுசெய்து சொல்லுங்க சக்தி.”
“அவங்க கார் ஏதோ ஒரு ஜீப்பில மோதியிருக்கு”
“அப்புறம்?”
“உடனே வசுந்தரா அதிர்ச்சியில மயக்கமாகியிருக்கா. ஆனா சுயநினைவுல இருந்த நளினி வசுந்தரா உயிரோடு இருக்காளான்னு செக் பண்ணி அதை ஊர்ஜிதப் படுத்திண்டதுக்கப்புறமா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ண தன்னோடு மொபைலை தேடியிருக்கா. அது எங்கயோ தெரிச்சுப் போய் இருக்கு. அவளால கண்டுபிடிக்க முடியலை. உடனே காரிலிருந்து இறங்கியிருக்கா. நேரா அந்த ஜீப்பு கிட்ட போயி டிரைவர் சீட்டை பார்த்திருக்கா. அப்போ காரோட பின்னாடி சீட்டுலேந்து யாரோ ஒருத்தர் நளினியை கட்டையால் அடிக்க முயற்சி செய்திருக்கான். ஆனா அவன் கிட்டேந்து தப்பிச்ச நளினி வேகமா ஓடி நேரா அவ ரூமுக்கு போய் கதவை அடைச்சிட்டு உட்கார்ந்தவ நான் போய் தட்டியதும் தான் கதவைத் தொறந்திருக்கா.”
“நளினிக்கு டிரைவர் சீட்டுல யாரிருந்தான்னு தெரிஞ்சுதா? அவங்களை கட்டையால் அடிக்க வந்தவனை அடையாளம் பார்த்தாங்களா? எந்த இடத்தில் இது நடந்ததாம்? எத்தனை மணிக்கு நடந்துதாம்?”
“அச்சச்சோ எவ்வளவு கேள்விகள்?”
“ஆமாம் சக்தி. உங்க கேஸ் எனக்கு பெரிய சவாலா இருக்குமோன்னு தோணுது. அதுனால உங்க விஷயத்துல ஏதாவது ஒரு க்ளூ கிடைத்திடாதான்னு தேடுற எனக்கு இந்த நர்ஸ் நளினி இருட்டுல தெரியும் ஒரு சிறு வெளிச்சம் போல இருக்க மாட்டாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு தான். அதுதான் கேட்கிறேன். கொஞ்சம் யோசிச்சு கரெக்ட்டா சொல்லுங்க சக்தி”
“எனக்கும் புரியுது ஜேம்ஸ். ஆனா நீங்க கேட்ட கேள்விகள்ல நான் அவகிட்ட கேட்டது எந்த இடத்தில் அன்ட் எத்தனை மணிக்கு? இந்த ரெண்டு கேள்விகள் தான்.”
“சரி அதுக்கு என்ன பதில் சொன்னாங்க?”
“ஒரு பத்து மணியளவுல அவங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுலேந்து ஒரு ஐநூறு அடி முன்னாடி நடந்ததுன்னு நளினி சொன்னா.”
“ம்…மொதல்ல அந்த நேரத்துல அங்கிருந்த சிசிடிவிகளை எல்லாம் செக் பண்ண சொல்லறேன். ஏதாவது ஆக்ஸிடென்ட் கேஸ் ரிஜிஸ்டர் ஆகிருக்கான்னும் விசாரிக்கணும்.”
“என்னடா ஜேம்ஸ் கிணறு தோண்ட பூதம் கிளம்பின கதையா என்னென்னவோ நடக்குது!”
“ம்…இதுல அவங்க டார்கெட் சக்தி தான்னு அவங்கள ஃபாலோ பண்ணற விதத்தில் இருந்து புரியுது. ஆனா ஏன்? எதுக்கு? யாரு? சரி சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஏதாவது பண்ணுங்க. நான் டிராஃபிக் டிப்பார்ட்மெண்ட் வரை போயிட்டு அப்படியே சக்தி ஆஃபிஸ் வந்திடறேன். சக்தி நீங்களும் அங்க வந்திடுங்க.”
“ம்…ஓகே ஜேம்ஸ். நான் கரெக்ட்டா ஒரு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் ல இருப்பேன். நீங்க வரலாம்.”
“ம்…நானும் வறதுக்கு அந்த டைம் ஆயிடும். சீ யூ இன் யுவர் ஆஃபிஸ். பை பை டா ரோல்ஸ் ராய்ஸ்”
“பை ஜேம்ஸ்”
“ம்….ம்….பை டா போலீஸ்”
“சரி. சிவ பூஜையில் கரடி மாதிரி இவ்வளவு நேரம் இருந்த இம்சை போயாச்சு. இப்ப சொல்லு தி.”
“எக்ஸ்க்யூஸ் மீ.”
“என்னடா நீ இன்னும் கிளம்பலையா?”
“ம்…என் கூலர்ஸ் விட்டுட்டு போயிட்டேன். அதை எடுக்க வந்தேன்.”
“சரி எடுத்துக்கோ”
“இம்சை!!! ம்…. கரடி ம்…. இன்னைக்கு நைட்டு என் வீட்டுப் பக்கம் வந்திடாதே! சொல்லிட்டேன்.”
“டேய் டேய் டேய்!! ஜேம்ஸ் சும்மா சொல்லிட்டிருந்தேன் டா.”
“வா வா வி. உட்காரு. இது உனக்கு தேவையா? ஒழுங்கா பேச வேண்டியது தானே”
“போலிஸ்காரன்ங்கறது சரியா தான் இருக்கு இல்ல. எப்ப, எப்படி, எங்க வருவாங்கன்னே தெரியாது ஆனா வர வண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்து நிப்பாங்க.”
“ம்…ம்…”
“ஏய் தி. ஏன் ஏதோ மாதிரி இருக்க?”
“இந்த ஜேம்ஸ் வந்ததால நிறைய முடிச்சுகள் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு வி. என்னை சுத்தி எனக்கே தெரியாம நிறைய முடிச்சுகள் போடப்பட்டிருக்கு. போடறவங்க யாரு? ஏன் போடுறாங்க? என்ட்ட என்ன இருக்கு? என்கிட்டேந்து என்ன எதிர்பார்க்கறாங்க?”
“அதைப் பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற? கவலைப்படற? அதெல்லாம் ஜேம்ஸ் பார்த்துப்பான்.”
“எல்லாம் உன்னைப் பார்க்க பாரிஸ் வந்ததுலேந்து தான் இப்படி எல்லாம் நடக்குது. இதுக்கு நான் அங்க வராமலே இருந்திருக்கலாம். இல்ல இப்போ மாதிரி நீயே அப்போவும் வந்திருக்கலாம்.”
“என்ன நீ இப்படி பேசுற தி?”
“பின்ன என்ன வி? யோசிச்சுப் பாரு என்னைக்கு உன்னைப் பார்க்க பாரிஸுக்கு கிளம்பினேனோ அன்னேலேந்து தானே என் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்க ஆரம்பிச்சிருக்கு! உன்னால இல்லைன்னு சொல்ல முடியுமா சொல்லு!”
“அது என்னவோ உண்மை தான். ஆனா நீ இப்படியே யோசிச்சேன்னா அப்புறம் இப்போ என்னைப் பார்க்க வந்ததாலன்னு சொல்லற நீ நாளைக்கே உன்னால தான் என்னை சொல்லாம இருந்தா சரி.”
“அது எப்படி வி சொல்லுவேன்!”
“அப்பாடா. அது போதும். நன்றிமா உனக்கு நன்றி”
“அதுக்கில்ல இப்படி எல்லாம் பண்ணறதுக்கு மூளை வேணுமே! அதுனால தான் அப்படி சொன்னேன்.”
“என்னது? சொல்லுமா சொல்லு. என்ன வேணும்னாலும் சொல்லு. சரி இந்த கேஸு கீஸூ எல்லாம் சரி கிஸ்ஸுன்னு ஒண்ணு இருக்குங்கறது உனக்கு தெரியுமா?”
“அட அட அட!! கேஸூ கீஸூ கிஸ்ஸு!! என்ன வார்த்தை ஜாலம். நீ எப்படி? எப்போலேந்து இப்படியெல்லாம்?”
“கிண்டலா?”
“இல்ல சுண்டல்.”
“சரி சரி… என்ன? நீ ஆஃபிஸ் போற வரைக்கும் இங்கேயே உட்கார போறோமா?”
“இல்ல இல்ல! அதுக்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கே!”
“அதுவரைக்கும் என்ன பண்ணலாம்?”
“வா என் வீட்டுக்கு போகலாம்.”
“ஐயோ! உன் வீட்டுக்கா? அப்புறம் உன் பாலிஸி, பிரின்ஸிப்பிளுக்கு எல்லாம் பங்கம் வந்திடுமே!”
“ஹலோ! அது நைட் ஸ்டேக்கு தான் சொன்னேன். நான் போகப் போறேன். நீ வறயா இல்லையா?”
“ம்…ம்…காலையில் ஒரு பாலிஸி… மாலையில் ஒரு பாலிஸி… விளங்க முடியா மங்கை நீ தி”
“ஆமாம் ஆமாம். இப்படி எல்லாம் பேசினா கமல்ஹாசனா ஆயிட முடியுமா?”
“அச்சச்சோ! சும்மா ஏதோ தோனினத சொன்னேன் அவ்வளவு தான். ஏய் தி…தி…தி…இரு வந்துட்டேன். தாங்க்ஸ் மிஸ்டர் வில்யம்ஸ் பை. ஹாவ் எ நைஸ் டே”
“யூ டூ சார். பை”
“ஏய் தி நில்லு நில்லுன்னு சொல்லிண்டே வரேன்… கண்டுக்காம போற! சரி இப்போ நான் என் கார்ல வரணுமா இல்ல உன் கார்லயே போகலாமா?”
“என் காரிலேயே போகலாம் வி. என் ஆஃபிஸுக்கு போகும் போது அப்படியே இங்க வந்து உங்க காரை எடுத்துண்டு நீங்க பாரிஸ் போகலாம். இந்த லீ கார்னர் என் வீட்டிலேந்து என் ஆஃபிஸ் போற வழியில் தான் இருக்கு.”
“எனக்கு யாரு எதிரி? ஜேம்ஸ் சொன்னா மாதிரி என்னை யாரு டார்கெட் பண்ணறது? ஒரே கொழப்பமா இருக்கு வி.”
“ஏய் தி. நீ ஏன் அனாவசியமா உன்னை நீயே கொழப்பிக்கற?”
“எப்படி கொழம்பாம இருக்க முடியும் வி?”
“அதை எல்லாம் பார்த்துக்க தான் ஜேம்ஸ் இருக்கான். அவன் பாத்துப்பான். இதை எல்லாம் நினைச்சு நீ இப்படி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை தி. ஜஸ்ட் ச்சில் அன்ட் ரிலாக்ஸ். பட் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. தட்ஸ் ஆல்.”
“ம்…ம்…ஓகே ஓகே! அப்பா அம்மாக்கு வேற கால் பண்ணணும். அவா காலேலேந்து இரண்டு தடவை கால் பண்ணட்டா.”
“எதுக்கு கால பண்ணிருக்கா?”
“வேற எதுக்கு? என்னாச்சு ஏதாச்சு? நேத்து வேற உன் கசினுக்கு ஆக்ஸிடென்ட் ன்னு சொல்லிருக்கோமா! அதைப் பத்தி கேட்க… அவாளுக்கு என் கிட்ட கேட்க ஏதாவது கேள்வி இருந்துண்டே தான் இருக்கும். ஆத்துக்கு போனதும் கால் பண்ணணும். சரி வி. எப்ப மறுபடியும் உன் பேரன்ட்ஸ் கிட்ட நான் பேசறது?”
“நானும் அவாகிட்ட பேசி குரு எப்படி இருக்கான்னு கேட்கணும். அப்படியே இன்னைக்கு பேசலாமான்னும் கேட்கிறேன்.”
“ம்…ஓகே. வீடு வந்தாச்சு. இறங்கலாமா?”
“இப்ப ஏன் யாருமே இல்லாத தெருவுல, உன் வீட்டு வாசல் ல ஹாரன் அடிச்ச?”
“தெரியாம கை பட்டு டுத்து.”
“ஓ சரி சரி!!”
“ம் வா வி வா வா. வீட்டை திறக்கிறேன் வா.”
“சரி தொற…அதுக்கு ஏன் அனௌன்ஸ் பண்ணற? உனக்கு என்ன ஆச்சு தி? ஏன் திடீர்னு ஒரு மாதிரி நடந்துக்கற?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லையே வி. நீ உள்ள வாயேன். நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.”
“சர்ப்ரைஸா! என்னடா இது? உலகமகா அதிசயமா இருக்கு! உன்னை அந்த லீ கார்னர் ப்ரேக் ஃபாஸ்ட் என்னமோ செய்துடுத்து!!”
“உட்காரு வி. லெட் மீ கெட் யூ சம் ஆரஞ்சு ஜூஸ்”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தி. அது தான் ஹோட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு தானே வந்திருக்கோம் அப்புறம் என்ன? வா வந்து நீயும் உட்காரு.”
“அப்ப சரி. ம்…சொல்லு. இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு என்ன பண்ணலாம்?”
“என்ன பண்ணலாமா? அட போ தி!”
“ஏய்!!”
“சரி சரி என்னமோ சர்ப்ரைஸ் வச்சிருக்கன்னு சொன்னியே! என்ன அது?”
“அதுவா! அது வந்து! அது வந்து!”
“என்ன அது வந்து அது வந்துன்னு சொல்லிண்டே நீ எங்கயோ எழுந்து போற?”
“ம்…அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!”
“ம்..என்ன கேளு!”
“ஆங்…ஓகே…அது வந்து…. ஊப்ஸ் என் மொபைல் வைப்ரேட் ஆகறது… ஓ ஜேம்ஸ் தான் கூப்பிடறார். இரு வி அட்டென்ட் பண்ணிட்டு சொல்லறேன்.”
“கரடி கரடி”
“ஆங் என்ன சொன்ன வி?”
“ஒண்ணுமில்லையே! நீ பேசு”
“ஆங்! சொல்லுங்க ஜேம்ஸ்.”
“சக்தி நான் டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து தான் பேசறேன்”
“ஆங் ஆமாம் அங்க போறதா தானே செல்லிட்டுப் போனீங்க. சொல்லுங்க என்ன ஆச்சு? ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”
“என்ன தி? என்ன ஆச்சாம்?”
ஃபோனை கைகளால் மறைத்துக் கொண்ட சக்தி விஷாலிடம்
“தெரியலையே! அவர் அங்கே யார் கூடவோ பேசிட்டே என்கிட்ட பேசறார். இரு அவர் இன்னும் சொல்லலை. ஆங் ஜேம்ஸ் இருக்கேன் சொல்லுங்க”
“நீங்க நர்ஸ் நளினி சொன்னதா சொன்ன நேரம் இடம் கரெகட்டான இன்ஃபர்மேஷன் தானே?”
“ஏன் கேட்கறீங்க? எல்லாமே அவ சொன்னதை தான் அப்படியே நானும் உங்க கிட்ட சொன்னேன்.”
“ம்…ஓகே ஆஃபிஸ் ல சந்திப்போம்”
“ஏன் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”
“நாம மீட் பண்ணும் போது சொல்லறேன் சக்தி. இப்போ நான் இன்னொரு முக்கியமான இடத்துக்கு போக வேண்டியிருக்கு. பை.”
“ஓகே பை ஜேம்ஸ்.”
“என்னவாம் அவனுக்கு? என்ன சொல்றான்?”
“அவரு நளினி என்கிட்ட சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டார்.”
“சரி”
“நானும் சரியான இன்ஃபர்மேஷன் தான்னு சொன்னேன். சரி ஆஃபிஸ் ல சந்திக்கும் போது விவரங்களை சொல்லறேன்னு சொல்லி ஃபோனை வச்சுட்டார்.”
“இதையே எத்தனைத் தடவை சொல்லுவீங்க? வாங்க ரெண்டு பேருமா என்னை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணிட்டு ஊர் சுத்த கிளம்பிக்கோங்க”
“ம்….ஓகே கண்ணா. நாம போய் அம்மாவ ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டு வருவோமா?”
“எஸ் அப்பா. போகலாம்.”
என்று மூவரும் காரில் ஏறினர். மகேஷ் காரை ஓட்டிச்சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றான். கீதாவை இறக்கி விட்டுவிட்டு அவளுக்கு கையசைத்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷும் அவன் மகன் கண்ணனும்.
கீதா ஏர்போர்ட் சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு அங்கிருந்த ஒரு காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி அதை கையில் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக அதற்குண்டான வாயிலின் அருகேயிருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்து மெல்ல ரசித்துக் குடித்தாள். காஃபி தீரவும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும் சரியாக இருந்தது. விமானத்திற்குள் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள். தரையிலிருந்து வானில் விமானம் பறந்து அமெரிக்க மண்ணை மெல்ல கடந்து அட்லாண்டிக் பெருங்கடல் மீது சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது கீதா அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் தன்னை எதற்கும் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் தனக்கு ஏதாவது தேவை என்றால் தானே வந்து கேட்டு வாங்கிக்கொள்வதாகவும் கூறிவிட்டு விமானத்தில் கொடுத்த கம்பளியை நன்கு சுற்றிக்கொண்டு மெல்ல ஜன்னலில் சாய்ந்தாள். விடியற் காலையில் எழுந்ததால் அவளின் கண்கள் அவள் பேச்சைக் கேட்க மறுத்தன. மெல்ல அவளது கண்கள் அவளின் அனுமதியின்றி மூடிக்கொண்டன. அவளை அவளின் நினைவலைகள் இழுத்துச் சென்றன.
சிறு வயது முதல் ஒரு பெரிய பதவியில் பணிப்புரிய வேண்டுமென்ற எண்ணம்/ஆசை கீதா மனதிற்குள் இருந்து வந்தது. அதற்காக நன்றாக படித்தாள். பல திறமைகளை வளர்த்துக் கொண்டாள். ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்திருந்தாள். வெட்கத்தினாலா? இல்லை அடுத்தவர்கள் ஏதாவது கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலா? என்று அவளுக்கே தெரியாதிருந்த பள்ளி மற்றும் கல்லூரி காலம் அது. வணிகவியல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்…ஒரு நாள் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் கீதாவை அழைத்ததாக அவள் தோழி லதா சொன்னதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் பயம் அப்பிக்கொண்டது.
“நான் எந்த தவறும் செய்யவில்லையே பின்பு ஏன் என்னை வர சொல்லியிருப்பார்?”
என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். கல்லூரி மாணவ மாணவிகளை துறைத் தலைவர் அவர் அறைக்கு அழைக்கிறார் என்றால் ஏதோ நன்றாக திட்டு வாங்கப் போகிறோம் என்று தான் முதலில் அவர்கள் மனதில் தோன்றும். (அந்த காலத்தில்) அதே போல கீதாவுக்கும் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது உடனே ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்று கதவை தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டு நின்றாள். உள்ளே வாருங்கள் என்ற கம்பீரக் குரல் ஒன்று ஒலித்தது. அது தான் அவளின் வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியையின் குரல். உள்ளே சென்றாள். அவளைக் கண்டதும் ஆசிரியைகள்
“வாழ்த்துக்கள் கீதா.”
என்றனர். திட்டுவதற்காக தன்னை அழைக்கவில்லை என்று மகிழ்வதா இல்லை வாழ்த்தியதற்காக மகிழ்வதா என்ற குழப்பத்திலேயே
“நன்றி மிஸ். எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“நிச்சயமா. அதுக்கு தானே உன்னை வர சொல்லியிருக்கோம். நமது வணிகவியல் கலாச்சார நிகழ்வுகள் செயலாளராக உன்னை நியமித்துள்ளோம்”
என்று அவர் கூறியதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடினாலும் கூடவே பயமும் தொற்றிக் கொண்டதில் கண்கள் குளமாகின. அதைக் கண்ட ஆசிரியை
“ஏய் என்ன ஆச்சு? ஏன் அழற?”
“மிஸ் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்னால் இதை செய்ய முடியாது. என்னை மன்னியுங்கள்”
“உன்னால் முடியுமா முடியாதா என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் சும்மா உன்னிடம் இந்த பதவியைக் கொடுக்க வில்லை. இரண்டு வருடங்களாக உன்னை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா ஆக்டிவிட்டிஸ்லேயும் நல்லா பர்ஃபார்ம் பண்ணிருக்க. உன்னால் முடியும்ன்னு நாங்க நம்பறோம். மேலும் உன்கிட்ட இருக்கிறயான்னு ஆலோசனைக் கேட்கலை… இருன்னு சொல்லறோம். புரிந்ததா. அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பதவி ஏற்பு விழாவில் நமது வணிகவியல் துறை சார்பாக நீ பேச வேண்டும். ம்…இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”
“மிஸ்…”
“உன்னை நீ நம்பு. ம்…அடுத்த வார நிகழ்வுக்கு தயாராக இரு. இப்போது நீ போகலாம்.”
“நன்றி மிஸ்”
என்று கூறி கண்களில் நீர் வழிய ஆசிரியைகள் அறையிலிருந்து வெளியே வந்த கீதாவைப் பார்த்த அவள் தோழி லதா
” ஏய் கீதா. ஏன் அழுதுகிட்டே வர? என்ன ஆச்சு?”
“என்னை நம்ம டிப்பார்ட்மென்ட் கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரியா நியமிச்சிருக்காங்களாம். அடுத்த வாரம் பதவி ஏற்பு விழாவுல நான் நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்கா பேசணுமாம்”
“சரி அதை சொல்லவா உன்னை அழைச்சாங்க?”
“ஆமாம்”
“நீ தான் சூப்பரா பேசுவியே! அதுக்கு ஏன் அழுதுகிட்டே வெளியே வர?”
“பேசறதைப் பத்தி இல்ல லதா. என்னால எல்லாம் இந்த பதவி ல எல்லாம் இருந்துகிட்டு… முடியாதுப்பா! அதுதான் பயத்துல கண்ணு கலங்கிடுச்சு. இது வரைக்கும் நான் அப்படி எல்லாம் எந்த பதவிலேயும் இருந்ததில்லைப்பா.”
“எல்லாரும் எல்லா பதவியிலேயும் இருந்துட்டு தான் பதவி ஏத்துக்கணும்னா அப்புறம் எந்த பதவியும் இருந்திருக்காது. யாரும் எந்த பதவியும் ஏத்துக்கிட்டிருக்கவும் மாட்டாங்க. எல்லாத்துக்கும் எல்லாருக்கும் முதல் படின்னு ஒண்ணு இருக்கும். அதுபோல உன்னோட ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் இதுன்னு எடுத்துக்கிட்டு மேலே போவியா… அத விட்டுட்டு பயப்படறாளாமே! இந்த பதவிக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல எத்தனை பேர் ஆசைப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா. உன்ன கூப்பிட்டுக் குடுத்திருக்காங்கன்னா உன்கிட்ட ஏதோ ஒரு தனித்திறமை இருக்கறத அவங்க தெரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. கண்ணைத் துடைச்சிகிட்டு வேலையைப் பாருப்பா”
என்று அன்று கீதாவின் தோழி லதா அவளிடம் கூறியது அவள் மனதில் பச்சைக் குத்தியது போல் பதிந்து விட்டது. மனம் அதை ஏற்றுக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் தன்னால் முடியும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்தது. சரி என்று ஒப்புக்கொண்டு அந்த ஆண்டில் நடந்த அனைத்து கலாச்சார நிகழ்வுகளையும் தனது கல்லூரி தோழிகளின் உதவியுடன் சிறப்பாக நடத்தி வந்தாள் கீதா.
அந்த ஆண்டில் இந்திய சுதந்திர தின விழாவிற்காக உப்பு சத்தியாகிரகம் பற்றிய ஒரு டாப்ளோ எனப்படும் குறிப்பிடத்தக்க காட்சி படம் ஒன்றை தயார் செய்தாள் கீதா. அதில் நடிப்பதற்கான தோழிகளை அனைவருமாக அமர்ந்து அனைவரோடும் கலந்து பேசி தேர்ந்தெடுத்தாள். அதற்கான நகரும் ஆளுயுர பேனர்களை கீதாவே வடிவமைத்துக் கொடுத்தாள். அதை அனைவருமாக இணைந்து செய்து முடித்தனர். மற்றும் அதற்கான எழுத்து வடிவத்தையும் தயார் செய்தாள். அதை கீதாவும் அவளது உயிர் தோழியுமான லதாவும் திரைக்கு பின்னாலிருந்து காட்சிக்கு தகுந்தாற் போல பேசினர். அது போல ஒரு நிகழ்வை எவருமே அக்கல்லூரியில் செய்து காட்டியதில்லை என்ற விவரம் அன்று தான் கீதாவுக்கும் அவளின் தோழிகளுக்கும் தெரிய வந்தது. அவர்களின் வணிகவியல் துறைக்கு பல ஆண்டுகளுக்கு பின் பரிசு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியை அவரது அறைக்கு வரும்மாறு அழைத்தார். கீதாவும் சென்றாள். ஆனால் இம்முறை மனதில் எந்த பயமுமின்றி குழப்பமுமின்றி தெள்ளத் தெளிவான மனதுடன் சென்று அறை கதவை தட்டினாள். மீண்டும் கம்பீர குரலில் உள்ளே வர சொன்னார் துறை தலைமை ஆசிரியை. உள்ளே சென்றவளிடம்
“என்ன உன்னால முடியாதுன்னு சொன்ன! இப்போ எப்படி முடிஞ்சுது? உன்கிட்ட இருக்கும் திறமை எங்களுக்கு தெரிந்ததால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம். நீ உன் வாழ்வில் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும். உன்னால் முடியும் என்று நீ நம்பினால் போதும் எல்லாம் இனிதே நடந்தேறும். நீ கதவை தட்டிய விதத்தில் இருந்தே தெரிகிறது உனக்குள் தெளிவு பிறந்திருக்கிறது என்று. அதை கெட்டியாக பிடித்துக் கொள் வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்து. வாழ்த்துக்கள். இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”
“நன்றி மிஸ்.”
என்று மட்டும் கூறினாள் கீதா. வேறெதுவும் கூற வாய் வரவில்லை ஏனெனில் அவள் மனம் முழுவதும் அவரின் வார்த்தைகள் நிறைந்திருந்தது.
மேலும் அந்த ஆண்டின் கல்லூரி இதழில் கீதா மற்றும் அவள் தோழிகள் அறங்கேற்றிய டாப்ளோவான உப்பு சத்தியாக்கிரகம் இதழின் அட்டைப் படமானதைக் கண்டு அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
“ஹேய் கீதா உன்னால முடியாது முடியாதுன்னு வருஷ ஆரம்பத்துல அழுத! இப்ப என்னடான்னா அந்த இங்லீஷ் டிப்பார்ட்மென்ட்டை வீழ்த்தி நம்ம டிப்பார்ட்மென்ட் ப்ரோகிராம நம்ம கல்லூரி இதழோட அட்டைப் படமா மாத்திட்டயே! யூ ஆர் ரியலீ க்ரேட் டி.”
“நம்ம கீதாவுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா”
“ஓ !!!! ஓ!!!”
அந்த சப்தம் கேட்டதும் விருட்டென எழுந்து சுற்றி முற்றிப் பார்த்த கீதா மெல்ல தன் நெற்றியில் வலது கையால் செல்லமாக தட்டிக்கொண்டே புன்னகைத்தாள். பின் மனதிற்குள்…
“ம்…எல்லாம் இப்போ நடந்தா மாதிரி இருக்கு.”
என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று வாஷ்ரூம் போய்விட்டு பேன்ட்ரியிலிருந்து சூடா ஒரு கப் காபி மட்டும் வாங்கி அங்கேயே நின்று குடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கலானாள்.
கீதாவுக்கே தெரியாதிருந்த அவளது திறமையைத் தெரிந்துக் கொண்டதோடு நின்றிராமல் அதை வெளிக்கொணர்ந்து அவளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி அவளுக்குள் அதுவரை இருந்து வந்த பயம், அச்சம், தயக்கம் ஆகியவைகளை உடைத்தெறிய செய்த அவளது கல்லூரி வணிகவியல் தலைமை ஆசிரியைக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாள்.
நமக்குள் இருக்கும் திறமைகளை நாம் தான் வெளி கொண்டு வரவேண்டும். மற்றவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு
அதற்கான வழியில் செல்ல தயக்கம் கொண்டு
இடையில் அச்சம் ஆட்கொண்டு
ஊருக்குள் இருக்கும் அந்த நாலு பேர் பற்றி எண்ணி கவலை கொண்டு
மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு
திறமைகளை அப்படியே மனமெனும் பாதாள சுரங்கத்திற்குள் வீசி தாழிட்டுக் கொண்டு
ஆட்டு மந்தைக் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொண்டு
தலையை ஆட்டிக்கொண்டு இருந்த நேரத்தில்
கீதாவுக்கு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டி, அவள் வாழ்வில் ஒளி வீச செய்த அந்த தலைமை ஆசிரியையை சந்திக்க பத்து வருடங்களுக்கு பிறகு ஒன்றரை நாள் பயணம் மேற்கொண்டு சென்னை விமானநிலையம் சென்றிறங்கினாள்.
நேராக தன் தாய் வீட்டுக்குச் சென்று குளித்து அம்மா கையால் சாப்பிட்டு, நன்றாக உறங்கி மத்தியம் ஒரு இரண்டு மணியளவில் எழுந்து மீண்டும் அம்மா கையால் மத்திய உணவு உண்ட பின் கிளம்பி உறவினர்கள் வீடுகளுக் கெல்லாம் சென்று அங்கு அனைவரோடும் பேசிவிட்டு அவர்களுக்காக வாங்கி வந்ததை எல்லாம் அவரவர்களுக்குக் கொடுத்து மகளாகவும் மருமகளாகவும் தனது கடமைகளை இரண்டே நாட்களில் முடித்து எதற்காக சென்னை சென்றிருந்தாளோ அதற்கான வேலையில் இறங்கினாள் கீதா. மூன்றாவது நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றாள்.
திருச்சியிலிருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் வாசலில் கார் சென்று நின்றது. கீதா மெல்ல காரிலிருந்து இறங்கினாள். உடனே எங்கிருந்தோ ஒரு பெண் ஓடி அவளருகே வந்து
“ஹாய் மேம். ஐ ஆம் லதா. தேர்டு இயர் காமர்ஸ் டிப்பார்ட்மென்ட் மேம். வெல்கம் டூ அவர் காலேஜ்”
என்று அன்று பூத்த மலர் போல மலர்ந்த முகத்துடன் லதா கீதாவின் கையில் பூச்செண்டை கொடுத்து வரவேற்றாள். லதா என்ற பெயரைக்கேட்டதுமே கீதாவுக்கு ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது. பூச்செண்டை வாங்கிக்கொண்டு
“தாங்ஸ் லதா. என்னுடைய உயிர் தோழி பெயரும் லதா தான்.”
“வாவ் ஈஸ் இட்!”
“எஸ். நான் இங்க இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினரா வந்ததற்கு அவளும் ஒரு காரணம்.”
என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் வணிகவியல் துறையை சென்றடைந்தனர். அங்கே கீதா சென்றதும் அவளுக்கு அவளின் கல்லூரி நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது. அப்போது ஆசிரியை அறைக்குள் இருந்து வெளியே வந்த துறை தலைமை ஆசிரியை கீதாவைப் பார்த்ததும்
“ஓ மை சைல்டு! வெல்கம். எப்படி இருக்க மா? ஐ ஆம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ மை கேர்ள்”
என்று கீதாவை அணைத்துக் கொண்டார்.
“மேம் நைஸ் மீட்டிங் யூ. இட்ஸ் மை ப்ளஷர் மேம். என்ன மேம் உங்க கம்பீர குரல் கொஞ்சம் குறைஞ்சிருக்கு!”
“வயசாயிடுச்சு இல்ல மா. சரி சரி உள்ளே வா. இந்த இடம் ஞாபகமிருக்கா?”
“ம்…நல்லாவே இருக்கு மேம். நான் நின்னு அழுத இடம். என் வாழ்க்கையையே மாற்றிய இடம். இந்த ரூம் அப்படியே இருக்கு மேம். “
“ம்…எஸ் மை சைல்டு. ஹாவ் தி காஃபி கீதா”
“தாங்ஸ் மேம்.”
“தென் ஹவ் இஸ் லைஃப்”
“உங்களால ரொம்ப நல்லாவே இருக்கு மேம்.”
“ஏய் எல்லாம் உன்னோடு உழைப்பு உன்னோட திறமை மா. இதுல நான் என்ன செஞ்சேன்?”
“மேம் என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க மட்டும் எனக்கு அந்த பதவியை தந்திருக்கலேனா நான் இன்னமும் அச்சத் தோடவே இருந்திருப்பேன்.”
“அப்படி எல்லாம் இல்லமா நான் இல்லாட்டி வேற யாராவது அதை செஞ்சிருப்பாங்க. அவ்வளவு தான். இல்லாட்டி நீயே அதை எல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்திருப்ப… சரி சரி நாம நிகழ்ச்சி நடக்குற அரங்குக்கு போகலாமா? எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க”
“எஸ் மேம்.”
என்று கல்லூரி காலங்களில் தலைமை ஆசிரியையிடமிருந்து பத்தடி தள்ளி நின்று பேசிய கீதா இன்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவருடன் அரங்கிற்கு நடந்து சென்றாள்.
அரங்கில் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் அமர்ந்திருந்தனர். மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது அதில் கீதாவுக்கென்று தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் அவளின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து அவள் மனம் பூரித்து போனது. அவளை அங்கே அமர செய்து விட்டு தலைமை ஆசிரியை மெல்ல நடந்து சென்று அங்கிருந்த ஒலிபெருக்கியில் அனைவரையும் வரவேற்கும் வண்ணம் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் அவர்
“நமது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புற செய்வதற்காக நமது கல்லூரியின் முன்னாள் மாணவியும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான ஏஞ்சல்ஸ் இன்ஃபோடெக்கின் ஃபௌண்டர் அன்ட் சி.ஈ.ஓவுமான திருமதி கீதா கிருஷ்ணகுமார் அவர்களை சிறப்புரையாற்ற அன்போடு அழைக்கிறேன்”
என்று கூறி மெல்ல நடந்து சென்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். கீதா எழுந்து சென்று ஒலிபெருக்கியை சற்று மேலே தன் உயரத்துக்கு ஏற்றார் போல் தூக்கி சரி செய்து தனது உரையை துவங்கினாள்
“அனைவருக்கும் வணக்கம். இன்று நான் இங்கு உங்கள் முன் நின்று இப்படி பேசுவதற்கு முழு காரணமும் என் தலைமை ஆசிரியையான திருமதி ஏஞ்சல் டிசோசா அவர்களையே சேரும். ஆம் எனது நிறுவனத்திற்கு அவர் பெயர் தான் வைத்துள்ளேன். நம்ம திறமைகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் மற்றவர்கள் நம்மிடமிருக்கும் திறமைகளை கண்டு அதை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்தால் அதை நாம் தவற விடக்கூடாது. ஆம் நான் என் வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டேன் ஆனால் அனைத்தையும் என்னுள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் தலைமை ஆசிரியை அதை கண்டுப்பிடித்து எனக்கான ஒரு வாய்ப்பை தந்தார். அப்போதும் எனது பயம், கூச்சம் என்னை மறுக்க செய்தது. ஆனால் அவர் கண்டிப்பாக இருந்து என்னுள் இருந்த திறமை என்னும் விதையை விருட்சமாக்கினார்.
அவர் இல்லையெனில் அது விதையாகவே இருந்திருக்குமா, இல்லை மெல்ல ஒரு சாதாரணமான குட்டி செடியாகியிருக்குமா என்று எனக்கே தெரியாது. என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள் உங்களுள் இருந்துக்கொண்டும் இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை தெளிவிக்க விரும்பவது என்னவென்றால் நமக்கு கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என நிறைய இருக்கலாம் ஆனால் அதை எந்த வித தங்கு தடைகள் இன்றி வாய்ப்பு கிடைக்கும் போது வெளி கொண்டு வர வேண்டும். அப்படி ஒரு முறை… ஒரே ஒரு முறை நமது திறமை வெளி வந்து… அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலே எழ ஆரம்பித்தால் நீங்கள் ஒவ்வொரு வரும் இந்த கீதா கிருஷ்ணகுமார் என்ன! அவளை விட பெரிய இடத்திற்கு போகலாம். பல சாதனைகளை படைக்கலாம்.
இன்று நான் சிறந்த பிஸ்னஸ் உமன் என்று பல பட்டங்களும் பதவிகளும் பெரும்போது என் தலைமை ஆசிரியையை தான் மனதில் நினைத்துக் கொள்வேன்.
ஒரு பருக்கு அரிசியை தனது இருப்பிடத்திற்கு ஒரு எறும்பு எடுத்து செல்லும் போது வழியில் ஏதேனும் தடையிருந்தால் அதாவது ஒரு கல் அல்லது ஒரு காகிதம் என ஏதாவது கிடந்தால் அது சும்மா இருக்காது அதை தாண்டி செல்லவே முயற்சிக்கும். அதுவும் அந்த அரிசி பருக்கையோடு. அப்படி பல திறமைகளை சுமந்துக் கொண்டு வழியிலிருந்த தடைகளான அச்சம், கூச்சம், சமுதாயம் ஆகியவைகளில் இருந்து தவித்துக் கொண்டிருந்த அந்த எறும்பை ஒரே ஒரு குச்சி அதாவது கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரி என்ற குச்சியை பாலமாக வைத்து தாண்ட உதவி புரிந்ததில் உங்கள் முன் நான் ஒரு நிறுவனத்தின் ஃபௌண்டர் அன்ட் சி.இ.ஓ வாக நிற்கிறேன்.
நம்ம அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி நிறைய கனவு காணுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அச்சம் தவிருங்கள், நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள் அல்லது கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் முன்னேருங்கள். நீங்கள் கண்ட கனவை நிஜமாக்கும் வரை ஓயாதீர்கள். முயற்சி என்றுமே நம்மை கைவிடாது என்றாவது அதற்கான மெய்வருத்த கூலி தரும் என்று கூறி என்னை மீண்டும் எனது கல்லூரிக்குள் வலம் வர வாய்ப்பளித்த நமது கல்லூரி தலைவர் அவர்களுக்கும், எனது வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியைக்கும் மற்றும் இங்குள்ள அனைத்து நல்லூள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”
என்று கீதா தன் நீண்ட உரையை முடித்ததும். சற்று நேரம் அமைதி நிலவியது. அதன் பின் பலத்த கரகோஷம் எழுந்ததில் அரங்கமே அதிர்ந்தது. ஒரு கல்லூரியில் நன்றாக படித்து நல்ல பெயருடன் வெளியே வருவதென்பதே மிக பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில்…தான் படித்த போதும், படித்து முடித்து இவ்வளவு வருடங்களாகியும் கீதாவை மறக்காது மீண்டும் கல்லூரிக்கு அழைத்து கௌரவப்படுத்தி அடுத்த சந்ததி மாணவிகளுக்கு நல்வழி காட்டி ஊக்கமளித்துள்ளனர் கீதாவின் கல்லூரி ஆசிரியைகள். கல்லூரியில் கீதாவுக்கு அன்று இரவு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளும் தனது ஆசிரியைகளுடன் இரவு உணவு உண்டு பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். அனைவரும் உண்டு முடித்ததும் கீதாவிடம் ஒரு பரிசை கொடுத்தார் அவளுக்கு மிகவும் பிடித்த அவளது துறை தலைமை ஆசிரியை. அதை கீதாவின் கைகளில் கொடுத்து
“மை டியர் சைல்டு. இதை நீ உன் வீட்டுக்கு சென்ற பின் உன் குடும்பத்தினருடன் சேர்ந்து திறந்துப் பார். சரியா”
“ஷுவர் மிஸ். நீங்க சொன்னா தட்டாம செய்வேன் மிஸ். நான் அமெரிக்கா சென்று என் கனவர் மற்றும் மகன் முன் வைத்து தான் இதை திறந்து பார்ப்பேன் மிஸ்.”
“இந்த மரியாதையான குணமும், நன்னடத்தையும் தான் மா உன்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு. இனியும் நீ வளரணும். உன்னோட ஸ்பீச் மிக அருமையா இருந்தது மா.”
“தாங்க்ஸ் மேம். சரி மேம் எனக்கு நேரமாயிடுச்சி நான் இப்போ கிளம்பினா தான் நைட் ஒரு பன்னிரெண்டு மணிக்காவது என் வீட்டுக்கு போய் சேர முடியும். நான் கிளம்பட்டுமா? நாளைக்கு நள்ளிரவு நான் அமெரிக்காவுக்கு கிளம்பணும்.”
“ஓ! ஷுவர் மை சைல்டு. எங்களை மதித்து எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து இந்த நாளை இவ்வளவு பிரகாசமாக்கியதற்கு நன்றிமா.”
“ஓ! ஓ! மிஸ் நீங்களெல்லாம் நன்றி சொல்ல கூடாது. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த உங்களுக்கெல்லாம் தான் நான் நன்றி சொல்லணும்.”
என்று பேசிக் கொண்டே கீதாவின் கார் நின்று கொண்டிருந்த இடம் வரைக்கும் வந்தனர். கார் அருகே வந்ததும் கீதா காரின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து
“சரி மேம் நான் போயிட்டு வரேன். டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்”
“நிச்சயமா மா. தாங்ஸ் டியர். பத்திரமா போயிட்டு வா. இன்னும் பல சாதனைகளை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா. பை பை. ஹாவ் எ சேஃப் ட்ரிப்”
“பை மேம்.”
என்று கீதா அங்கிருந்து விடைப் பெற்று திருச்சியிலிருந்து சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியோடு அமெரிக்காவிலிருக்கும் தனது கனவருக்கு கால் செய்தாள்.
“ஹலோ கீதா மேடம். எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மகேஷ். நீங்க எப்படி இருக்கீங்க? நம்ம சுட்டிப் பையன் எப்படி இருக்கான்? ரெண்டு பேரும் நான் இல்லாம என்ன பண்ணறீங்க?”
“அம்மா!”
“கண்ணா. உம்ம்மா.”
“அம்மா நீ உன் காலேஜுக்கு போனயே. உன் மேம் என்ன சொன்னாங்க மா?”
“ம்….நான் ரொம்ப குட் கேர்ள்னு சொல்லி இதோ இந்த கிஃப்ட் கொடுத்தாங்க. இதை உன் முன்னாடி தான் ஓபன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. சோ நான் நம்ம வீட்டுக்கு வந்ததும் நாம மூணு பேரும் சேர்ந்து ஓபன் பண்ணி பார்க்கலாம். சரியா”
“அது எனக்கு குடுத்திருக்காங்களா மா?”
“நமக்கு குடுத்திருக்காங்க கண்ணா. சரி உனக்கு நான் என்ன இங்கேந்து வாங்கிட்டு வரணும்?”
என்று கனவர் மகனுடன் பேசிக்கொண்டே பயணித்ததில் நேரம் போனது தெரியாது போக தனது தாய் வீட்டுக்கு சட்டென வந்து சேந்தது போல இருந்தது கீதாவுக்கு.
மறுநாள் ஷாப்பிங் சென்று வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு அன்று முழுவதும் தனது அப்பா அம்மாவுடன் இருந்துவிட்டு அன்றிரவு உணவு உண்ட பின் தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள் கீதா.
அதே ஒன்றரை நாள் பிரயாணம். மீண்டும் அமெரிக்க மண்ணில் கால் வைத்தாள். மகேஷும் கண்ணனும் அவளுக்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் தூரத்திலிருந்தே “ஹாய்” என்று கூறினாள். கண்ணன் அவளை கட்டியணைக்க ஓடி வந்ததும் அவனை தடுத்தாள் கீதா. இப்போதிருக்கும் இந்த காலம் நம் குழந்தைகள் ஆசையாக ஓடி நம்மிடம் வரும்போது அவர்களை உடனே தூக்கி கொஞ்ச அனுமதிப்பதில்லையே!! கலி காலம் என்று நொந்துக் கொள்ள வேண்டியது தான். அதை போலவே கீதாவும் தன் குழந்தையை தடுத்து நிறுத்தி
என்று வீட்டுக்கு சென்றதும் குளித்துவிட்டு தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள். அப்போது கண்ணன்
“அம்மா உன் மேம் குடுத்த கிஃப்ட் எது மா? நாம அதை ஓபன் செஞ்சுப் பார்ப்போமா?”
“ஷுவர் கண்ணா. இதோ இது தான் அது. நாம ஓபன் பண்ணுவோமா”
“ம்…அப்பா நீயும் வாப்பா”
“நானும் வந்துட்டேன்.”
என்று தலைமை ஆசிரியை சொன்னது போலவே மூவருமாக அதிலிருந்த ரிப்பனை அவிழ்த்தனர். பின் மகேஷ் அதன் மேலிருந்த கிஃப்ட் ராப்பரை அவிழ்த்தான். அதனுள் ஒரு மரப் பேழை இருந்தது. அதை கீதாவிடம் கொடுத்தான். கீதா அதை கண்ணனிடம் கொடுத்து திறக்கச் சொன்னாள். கண்ணனும் மெல்ல திறந்தான். அதனுள்ளே இருந்து ஒரு பெண் சிலை வெளிவந்தது. அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. அப்போது பின்னணியில் ஒரு மெல்லிய இசையோடு தலைமை ஆசிரியையின் குரலும் ஒலித்தது.
“ஒரு பெண் என்பவள் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் வல்லமைப் பெற்றவள் ஆவாள். ஆனால் அவளை அவளே செதுக்க கல் வேண்டுமல்லவா. அது தான் அவளை பெற்றவர்கள். உளியின்றி அவள் எப்படி அவளை செதுக்க முடியும்? அந்த உளியாக அவளின் கனவனும் அவளின் குடும்பமும் இருந்தால் போதும் அவள் அழகிய சிற்பமாக மட்டுமல்லாது சிறந்த சிற்பியாகவும் திகழ்வாள். உங்களையும் செதுக்கி அழகுறச் செய்வாள். வாழ்க வளமுடன்”
என்று கூறி நின்றது ஆனால் அந்த மரப்பேழையை மூடும் வரை அந்த பெண் சிலை தன்னை செதுக்குவதை நிறுத்தவில்லை. அதைப் பார்த்ததும் மகேஷ் கீதாவை கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு
“ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ மை டியர் கீதா”
என்றான். அவள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. அதைத் துடைத்த கண்ணனின் பிஞ்சுக் கைகளை பற்றிக்கொண்டு முத்தமிட்டாள் கீதா. வானத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள்
“ஐ ஆம் ப்ளெஸ்டு. தாங்யூ காட். இதற்கு மேல் எனக் கெதுவுமே தேவையில்லை. என்னை போலவே எல்லா பெண்களுக்கும் இது போன்ற வாழ்வையும் உணர்வையும் கொடு ஆண்டவா.”
இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், சக்தி மற்றும் விஷால் ஆகியோர் கூரை தளம் சென்று அவர்கள் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்ததும் வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை பார்த்தனர். அப்போது சக்தி
“ஜேம்ஸ் என்ன ஆச்சு? இதோ டாக்டர்ஸ்!”
“ஓ மை காட்!! ஏய் நம்ம கீர்த்தனா!”
“வா வா வா! கீர்த்தனா! கீர்த்தனா!”
“நகருங்க சிஸ்டர். என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.”
“ஏன் சார் எங்க ஹாஸ்பிடல் நர்ஸ்க்கு எப்படி இப்படி நடந்தது? நீங்க யாரு?”
“டாக்டர்…”
என்று கூறிக்கொண்டே டாக்டரின் கோர்ட்டில் அவரது பெயரை தேடியது ஜேம்ஸின் கண்கள். அது அகப்பட்டதும்
“டாக்டர் ராமசந்திரன் என் பெயர் ஜேம்ஸ் இமானுவேல். நான் பிரான்ஸ் போலீஸ். இது தான் என் ஐடி”
“நான் இன்னைக்கு ஹாஃப் டே பர்மிஷன் கேட்டிருக்கேன். பார்ப்போம்… கிடைச்சா நீங்க சொன்னபடியே செய்யலாம். இல்லாட்டி…நான் போக வேண்டி இருக்கும்.”
“ஓகே.”
“எப்போ தெரியும் தி? ஈமெயிலுக்காக காத்திருக்காம… நீயே கால் பண்ணிக் கேட்டுடேன்.”
“ம்…அதுவும் சரி தான் வி. இதோ கால் பண்ணிட்டு வந்துடறேன்”
என்று சக்தி அங்கிருந்து நகர்ந்து சென்றதும் விஷால் ஜேம்ஸிடம்
“என்ன தான் நடக்குது ஜேம்ஸ்? ஒண்ணும் புரியல. அந்த நர்ஸை அப்படி ரத்தவெள்ளத்துல பார்த்ததும் அப்படியே தல சுத்தித்து தெரியுமா! அவங்களை யார் என்ன பண்ணிட்டாங்க?”
“நாம இங்க வசுந்தராவைத் தேடி வந்தப்ப அந்த வரவேற்பாளர் பொண்ணு அவங்க ஷிப்ட் முடிச்சுட்டு நைட்டே ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொன்னப்போ… இப்போ அடிப்பட்டுக் ஐசியூல இருக்காங்களே இந்த நர்ஸ் அவசர அவசரமா ஒரு பதட்டத்தோடு புறப்பட்டுட்டிருந்தாங்க. அவங்க கண்ணு என்கிட்ட ஏதோ சொல்ல தவிச்சது எனக்கு புரிஞ்சுது. சரி தனியா போனா ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைச்சு அவங்க பின்னாடியே போனேன். அப்போ தான் லிஃப்ட்டுக்குள்ள போனாங்க நான் படிகள்ல ஏறி போனேன். அவங்க போன லிஃப்ட் கூரை தளத்தில் நின்னுது. நானும் அங்க போய் பார்த்தேன் ஆனா அவங்கள அதுக்குள்ள யாரோ அப்படி பண்ணிட்டுப் போயிருக்காங்க. அதுக்கப்புறம் நான் சக்திக்கு கால் பண்ணி டாக்டர்ஸோட வரச்சொன்னேன். அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே”
“அப்போ அந்த நர்ஸ்க்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லறயா ஜேம்ஸ்.”
“வாய்ப்பிருக்கலாம்…. இல்லாமலும் இருக்கலாம்.”
“என்னடா குழப்பற?”
“ஆமாம் அவங்க வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானே தெரியும். சரி நீ இங்கேயே இரு இதோ நான் வந்துடறேன்.”
“எங்கடா போற?”
“நீ அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு டாக்டர்ஸ் வந்து சொல்லுற வரைக்கும் அங்கேந்து நகராத சரியா. அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்”
“ஹேய் வி. ஜேம்ஸ் எங்கே? நீ மட்டும் நிக்கற!”
“அவன் ஏதோ ஒரு விஷயத்துக்காக அந்த பக்கம் போயிருக்கான். வந்தா தான் என்ன விஷயம்ன்னே தெரியும். சரி உனக்கு பர்மிஷன் என்ன ஆச்சு?”
“ஆங்! ஆங்! அதெல்லாம் கிடைச்சாச்சு. நான் இனி மத்தியானம் ஒரு ஒன்றரை மணிக்கு ஆஃபிஸ் போனா போதும்.”
“குட் குட்….”
“ஏய் வி அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?”
“தெரியலையே! இப்போ தான் என்ன நடந்ததுனு ஜேம்ஸ் சொல்லி முடிச்சிட்டு போனான் நீ வந்துட்ட”
“அப்படியா என்ன நடந்தது?”
என்று சக்தி கேட்டதும் ஜேம்ஸ் சொன்ன அனைத்து விவரங்களையும் விஷால் சக்தியிடம் விளக்கிக் கூறினான். அதைக் கேட்ட சக்தி
“என்னது இது சினிமா கதை மாதிரி இல்ல இருக்கு!”
“அது இருக்கட்டும் தி. எங்க உன் பிரெண்டு வசுந்தரா?”
“அது தான் எனக்கும் தெரியலை வி.”
“அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு கேட்க வேண்டியது தானே”
“பண்ணாம இருப்பேனா வி! எத்தனைத் தடவை கால் பண்ணறது. நாட் ரீச்சபள் ன்னு தான் வருது. குடும்பத்தோட எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாளோ?”
“என்கிட்ட கேட்டா! எனக்கென்ன தெரியும் தி? நீதான் சொல்லணும்.”
“ம்…என்ன பண்ணலாம்… எப்படி அவளை கண்டு பிடிக்கறது? ம்….ஆங்! ஒரு வழியிருக்கு…”
“என்ன அந்த வழி தி?”
“இரு வி இதோ நான் வந்துடறேன்.”
“ஏய் தி அது என்ன வழின்னு சொல்லிட்டுப் போயேன்.”
“இரு இரு வி. அது சரியானதான்னு மொதல்ல செக் பண்ணிட்டு… அப்புறமா வந்து சொல்லறேன். நீ அங்கேயே இரு வி. இதோ வந்துடறேன்.”
“அட போங்கப்பா. நான் என்ன காவலாளியா என்ன? என்னை இங்க நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில போறீங்க. ஆங் டாக்டர்! டாக்டர் அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்காங்க?”
“மிஸ்டர் ஜேம்ஸ் இமானுவேல் எங்க?”
“அவர் ஏதோ அவசரமா வெளியே போயிருக்கார். எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம்.”
“நீங்களும் போலீஸா?”
“இல்ல இல்ல. நான் ஜேம்ஸோட பெஸ்ட் பிரெண்ட். அதுவுமில்லாம அவன் தான் என்கிட்ட நீங்க வெளிய வந்ததும் என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்டு வைக்க சொன்னான்.”
“அப்படியா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்! ஆங்! இதோ ஜேம்ஸே வந்துட்டான்.”
“டாக்டர் அந்த நர்ஸ் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? அவங்க கண் முழிச்சிட்டாங்களா?”
“இல்ல மிஸ்டர் ஜேம்ஸ்”
“நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் டாக்டர். மிஸ்டர் எல்லாம் தேவையில்லை”
“ஓகே ஜேம்ஸ். அந்த பொண்ண கத்தியால் பயங்கரமா தாக்கியிருக்காங்க. உடம்புல எல்லா இடங்களிலும் கத்திக் காயமிருக்கு. மோரோவர் அவளை கொல்ல விடாம அவ ரொம்ப போரடிருக்கா. ஏன்னா அவ கை எல்லாம் கத்தி கீறல்களா இருக்கு. கடைசியில் தான் அவ வயிற்றுல குத்திருக்காங்க. நல்ல வேளை அந்த கத்தி அவ்வளவா உடலுக்குள் போகலை. அதுனால அவ பொழச்சுக்கிட்டா!”
“அந்த பொண்ணு எப்படி டாக்டர்?”
“எப்படின்னா?”
“இல்ல காரெக்டர் எப்படி?”
“ரொம்ப நல்ல பொண்ணு அவ. அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா. வேலையில் ரொம்ப சின்சியிர். அந்த பொண்ணுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை?”
“இதுக்கு முன்னாடி உங்க ஹாஸ்பிடல் ல இது மாதிரி நடந்திருக்கா டாக்டர்?”
“இல்லவே இல்லை ஜேம்ஸ். இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்.”
“நீங்க எத்தனை வருஷமா இந்த க்ளினிக் ல டாக்டரா இருக்கீங்க ராம்? ஐ திங்க் யூ டோண்ட் மைன்ட் மி காலிங் யூ ராம்!”
“நோ நோ நாட் அட் ஆல். இங்க எல்லாரும் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க. நான் கடந்த பதினோரு வருஷமா இதே ஹாஸ்பிடல் ல தான் டாக்டரா இருக்கேன்.”
“சரி இங்க வசுந்தரான்னு ஒரு டாக்டர் இருக்காங்களா?”
“வசுந்தரா வா!! ஆமா ஆமாம். அவங்களுக்கு இந்த வாரம் ஆஃப்டர்னூன் ஷிப்ட். மத்தியானம் இரண்டு மணிக்கு தான் வருவாங்க.”
“ஓ! அப்படியா?”
“ஏன் அவங்கள தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“அது வேறொரு விஷயம் ராம். சரி இந்த நர்ஸ் எப்போ கான்சியஸ்க்கு வருவாங்க?”
“அவ இன்னும் ஒரு ஆறு லேந்து ஏழு மணி நேரம் கழிச்சு தான் கான்சியஸ்க்கு வருவா.”
“சரி டாக்டர் ராம். ரொம்ப தாங்க்ஸ். அனாவசியமான கேள்விகள் கேட்காம உடனே மாடிக்கு வந்து உதவினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இந்த நர்ஸ் கீர்த்தனா எழுந்து சொல்லப் போறதுல தான் என்னோட ஒரு கேஸுக்கான முதல் க்ளூ இருக்கப் போகுது. நான் அவங்க காவலுக்கு ரெண்டு சென்ட்ரி போடறேன். தயவுசெய்து அவங்கள உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பும் பத்திரமா பார்த்துக்கோங்க. கீர்த்தனா வீட்டுல சொல்லியாச்சா?”
“இல்ல. இன்னும் சொல்ல ல. அவ இங்க இருக்கற எங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுல தான் மற்ற நர்ஸ்களுடன் தங்கியிருக்கா. அவ சொந்தங்கள் எல்லாம் இந்தியாவுல இருப்பாங்க.”
“அப்படீன்னா இப்போதைக்கு அவங்க வீட்டுல எதுவும் சொல்லிக்க வேண்டாம். அவங்க நல்ல படியா குணமானதும் சொல்லிக்கலாம். இல்லாட்டி அவங்க எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க.”
“ஆனா அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா?”
“ஆச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான் டாக்டர் ராம். அதுனால அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க. சரி அது என்ன இந்த ஹாஸ்பிடல் ல இருக்கற ஸ்டாஃப் முக்கா வாசி பேரும் இந்தியர்களா இருக்கீங்க!”
“ம்…சரி சரி டாக்டர் ராம். இதோ நான் சொன்ன ரெண்டு சென்ட்ரி வந்துட்டாங்க. இவங்க பகல் முழுவதும் இங்கேயே இருப்பாங்க. நைட் ஷிப்ட்டுக்கு ஆள் மாறுவாங்க. சரியா. சென்ட்ரீஸ் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா எங்கேயும் இந்த இடத்தை விட்டு போகக்கூடுது. யாராவது ஒருத்தர் இங்கே இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். நைட் ஷிப்ட் வர்றவங்க கிட்டேயும் இந்த அப்டேட் குடுத்துட்டு வீட்டுக்கு போங்க.”
“எஸ் சார்.”
“நான் மீண்டும் ஈவ்னிங் வரேன். ஓகே டாக்டர் ராம் சீ யூ பை. நான் வேறொரு இடத்துக்கும் போக வேண்டியிருக்கு.”
“ஓகே ஜேம்ஸ். பை. டேக் கேர்.”
“இந்தாங்க இது என் கார்ட். அந்த நர்ஸ் கண் முழிச்சதும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.”
“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.”
“டேய் ஜேம்ஸ் என்னாட இவ்வளவு நேரம் அந்த டாக்டர்ட்ட பேசிட்டிருந்த? அவர் என்ன தான் சொல்றார்? அந்த நர்ஸ் பொழப்பாளா மாட்டாளா?”
“ஏன்டா!!! பொழைக்கணும்னு வேண்டிக்கோயேன் டா. அப்ப தான் நம்ம சக்தியோட விஷயத்துல ஏதாவது ஒரு ஹின்ட்டாவது கிடைக்கும்.”
“ஹேய் சக்தி நீங்க எங்க போயிருந்தீங்க? உங்களுக்கு ஹாஃப் டே பர்மிஷன் கிடைச்சுதா?”
“ஆங் அதெல்லாம் கிடைச்சாச்சு.”
“இப்போ எங்கேந்து வர்றீங்க?”
“அப்பா துப்பறிவாளரே! உனக்கு பசிக்குதோ இல்லையோ! எனக்கு பசிக்குது டா. மணி என்ன பாரு. பத்தாக போவுது. என்ன தி நீ நல்லா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு தான் வந்திருக்க போல!”
“இல்ல வி. வசுந்தரா வீட்டுல சாப்பிடலாம்ன்னு தான் வந்தேன். ஆனா இப்போ அவளையே காணல! வேணும்னா மறுபடியும் அவங்க வீட்டுக்கு போய் பார்ப்போமா?”
“ம்…இதுவும் நல்ல யோசனை தான். சரி வாங்க வசுந்தரா வீட்டுக்கு போய் பார்த்துட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டுட்டு அங்கேந்து சக்தி நாம உங்க ஆஃபிஸுக்கு போகலாம். என்ன சொல்லுறீங்க?”
“ம்…ஓகே.”
“என்னவோ எதுவோ! வாங்கப்பா சீக்கிரம் போய் ஏதாவது சாப்பிடுவோம்.”
மூவருமாக வசுந்தரா வீட்டுக்கு மீண்டும் சென்று பார்த்தனர். ஆனால் அவள் வீடு பூட்டியபடியே இருந்தது. உடனே ஜேம்ஸ் வசுந்தரா வீட்டுப் பக்கத்து வீட்டிலிருப்பவரிடம் விசாரித்தான். பின் அங்கிருந்து கிளம்பி ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றனர். அங்கே சக்தி ஜேம்ஸிடம்
“வசுந்தரா பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சேங்களே… அவங்க என்ன சொன்னாங்க?”
விஷாலின் கார் திறக்காததால் சக்தி அவனிடமிருந்த சாவியை வாங்கி திறக்க முயற்சித்தாள். பின் தன் கையிலிருந்த சாவியை நன்றாக பார்த்த சக்தி…
“ஹலோ வி! உன் கார் எப்படி திறக்கும்?”
“ஏன் தி?”
“இது என் காரோட சாவி!”
“ம்…அப்படியா?”
“இதோ இங்கே பாரு! என் கார் திறந்திருக்கு!”
“அட ஆமா!”
“என்ன ஆமா? சரி எப்படி என் கார் சாவி உன்கிட்ட வந்தது?”
“அது தானே எப்படி வந்தது?”
“டேய் விஷால் என்ன சக்தி கேட்கிற கேள்வியை அப்படியே திருப்பிக் கேட்குற? எப்படி உன்கிட்ட அவங்க கார் சாவி வந்ததுன்னு மொதல்ல சொல்லுடா”
“அதுவா! நாம எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம் இல்லையா அப்போ அவ டேபிள் மேல வச்சிருந்தா, சாப்பாடு கொண்டு வந்த வில்லியம்ஸ் தட்டுகளை வைக்க நான் தான் சாவியை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுண்டேன்”
“சரி சரி இரு என் கார் சாவியை எடுக்கிறேன். ம்…இதோ என் கார் கீ. இப்போ பாருடா ஜேம்ஸ்”
“வாவ்! சூப்பர்ப் கார் விஷால். சரி நீ தான் கார் வச்சிருக்கியே அப்புறமும் ஏன் சக்தி கார்ல போற?”
“ஒண்ணா போயிட்டு ஒண்ணா வரலாமேன்னு…”
“ஓ! ஓ! ஓகே ஓகே! நடத்து நடத்து. சரி ரெண்டு பேரும் பத்திரமா வீடு போய் சேருங்க. எனக்கென்னவோ உங்களை எப்பவும் யாரோ ஃபாலோ பண்ணிகிட்டே இருக்காங்களோன்னு தோணுது.”
“அப்படியா சொல்லுற?”
“ஆமாம்…ஸோ எப்பவுமே ஜாக்கிரதையா இருங்க. நாளைக்கு டாக்டர் வசுந்தரா வீட்டுல சந்திப்போம்.”
“அப்போ நாளைக்கு என் ஆஃபிஸுக்கு நீங்க வரலையா? என் ஆஃபிஸ் வரேன்னு சொன்னீங்களே! அதுவுமில்லாம நீங்க பாரிஸ் போகணும்னும் சொன்னீங்களே! அப்புறம் எப்படி வசுந்தரா வீட்டுல மீட் பண்ணலாம்ன்னு சொல்லறீங்க?
“அச்சச்சோ எத்தனை கேள்விகள்? சக்தி நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வசுந்தரா வீட்டுக்கு போவோம். அதுக்கப்புறமா நான் பாரிஸ் போறேன். நீங்க ஆஃபிஸ் போங்க. பாரிஸுலேந்து நான் திரும்பி இங்க வரும்போது உங்க ஆஃபிஸுக்கு வந்து சிசிடிவியை செக் பண்ணிக்கறேன். இப்போ எல்லாம் கரெக்ட்டா இருக்கா?”
“எஸ் எஸ் இப்போ எல்லாம் ஓகே. அப்படீன்னா நானும் நாளைக்கு வசு வீட்டுக்கு ஏழரைக்கு வரணும் இல்ல!”
“அஃப்கோர்ஸ் சக்தி. இதுல என்ன கேள்வி?”
“இல்ல வி… இப்பவே மணி என்னாச்சுப் பாரு… இதுல காலையில ஏழரை மணிக்கெல்லாம் வசுந்தரா வீட்டுல இருக்கணும்னா! நான் ஆறு மணிக்கெல்லாம் எழுத்துக்கணுமேன்னு யோசிச்சேன்.”
“அடிப் பாவி நாங்களும் தானே அவ்வளவு சீக்கிரம் எழுந்து வரணும்!”
“சரி சரி இங்கேயே நின்னுட்டு இப்படியே மாறி மாறி பேசிட்டிருந்தா காலை ஆறு மணி ஆயிடும். பேசாம கிளம்பி போய் ஒரு நாலஞ்சு மணி நேரமாவது தூங்கிட்டு வாங்க. போங்க போங்க.. நானும் கிளம்பறேன். பை.”
“ஓகே டா ஜேம்ஸ். பை. குட் நைட்”
“ஓகே ஓகே. குட் நைட்”
“சக்தி என்னோட நம்பருக்கு அந்த டாக்டர் அட்ரெஸை ஷேர் பண்ணிடுங்க.”
“ஷுவர். இதோ இப்பவே பண்ணிடறேன்.”
என்று உடனே ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சக்தி. அது கிடைத்ததை சக்தியிடம் சொன்ன ஜேம்ஸ் அவன் காரில் புறப்பட்டுச் சென்றதும் சக்தி விஷாலை பார்த்து
“சார் என்ன என் வண்டில ஏறப் பாக்குறீங்க?”
“அப்புறம் என்ன பண்ணுவேன் தி?”
“அதோ உங்க கார் இருக்கே! அதை எடுத்துட்டு பாரிஸ் கிளம்ப வேண்டியது தானே!”
“என்ன தி! என்னை துரத்தி விடற?”
“பின்ன என்னவாம்?”
“இப்பவே டைம் பதினொன்னு ஆயிடுத்து! இதுக்கு மேல நான் டிரைவ் பண்ணி பாரிஸ் ரீச்சாகறதுக்கு இரண்டு ஆர் மூணு மணி ஆயிடும். அப்புறம் மறுபடியும் காலையில உன் வீட்டுக்கு வரணும்! நான் பாவம் தானே!”
“அதுக்கு நான் என்ன பண்ணறது?”
“என்ன இப்படி சொல்லற? ஏன் உன் வீட்டுக்குள்ள என்னை அலௌ பண்ண மாட்டியா என்ன?”
“நோ வே வி. நமக்கு கல்யாணம் ஆகுற வரை ராத்திரியில் ஒண்ணா தங்குறதெல்லாம் சரி கிடையாது.”
“எந்த காலத்துல இருக்க நீ?”
“ஒண்ணா தங்கினா என்னவாம்? அவா அவா ஒண்ணா அஞ்சாறு வருஷம் லிவ்ங் டுகெதர்ன்னு சொல்லி இருந்துட்டு தான் கல்யாணமே பண்ணிக்கறா… நீ என்னடான்னா?”
“நான் இப்படி தான் வி. எனக்குன்னு சில பாலிஸிஸ் இருக்கு. நான் அது படிதான் நடந்துப்பேன். யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன். நம்மளோட கல்யாணம் வரை நோ நைட் ஸ்டே”
“ஏன் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா?”
“வாட்? மொதல்ல நீ கிளம்பு வி. நான் கிளம்பறேன். பை. பை. குட் நைட்”
“தி…தி…தி… அடி போடி. இவளும் இவளோட பாலிஸியும். பொல்லாத பொடலங்கா பாலிஸி! முன்னாடியே சொல்லியிருந்தான்னா நான் ஜேம்ஸோட அவன் வீட்டுக்காவாவது போயிருப்பேன். இப்படி நடு ராத்திரி தனியா பொலம்ப விட்டுட்டுப் அவ பாட்டுக்கு போயிட்டாளே! என்ன பண்ணலாம். சரி பேசாம ஜேம்ஸ் வீட்டுக்கே போக வேண்டியது தான். வேற வழி?”
என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே காரை ஜேம்ஸ் வீட்டிற்கு விட்டான். அங்கே அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான். அப்போது கதவைத் திறந்த ஜேம்ஸ்
“டேய் விஷால் என்ன? என்னாச்சு? சக்தி எங்க? ஏன் நீ மட்டும் வந்திருக்க?”
“ஹலோ வீட்டுக்கு யாராவது வந்தா முதல்ல உள்ள வாங்கன்னு கூப்பிடணும் தெரியுமா? அதை விட்டுட்டு ஏதேதோ கேள்வி மேல கேள்வியா அடுக்கிக்கிட்டே போற?”
“சரி சரி வா வா உள்ள வா”
“ம்…வீட்டை நல்லா தான் வச்சிருக்க! ஆங் இப்போ கேளு”
“அது தான் அப்பவே கேட்டுட்டேனே! பதில் சொல்லு”
“அவ அவளோட வீட்டுக்கு போயிட்டா! நான் நடு ரோட்டுல நின்னுட்டிருந்தேன். அது தான் நம்ம நண்பன் நீ இருக்கயேன்னு நேரா இங்க வந்துட்டேன்”
“ஏன் நீ அவங்களோட அவங்க வீட்டுக்கு போகலை? சம் பியர்”
“நோ தாங்க்ஸ்! எங்க கல்யாணம் முடியற வரைக்கும் நாங்க ஒரே வீட்டுல ஒண்ணா நைட்டு தங்கக் கூடாதாம். அது அந்த அம்மணியோட பாலிஸியாம்”
“அதுவும் சரி தான். ஆனா நீ அவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது டா!”
“வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் நான் எப்படி அவ கூட போவேன் ஜேம்ஸ்”
“நீ அவங்க கூட போயிருக்க வேண்டாம். ஆனா அவங்க வீடு வரைக்கும் பின்னாடியே போயி விட்டுட்டு வந்திருக்கலாம். ஏன்னா அவங்களை சுத்தி ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்குது இல்ல!”
“அட ஆமா இல்ல. எனக்கு இது தோணலப் பாரேன்!”
“எப்படி தோணும்? உன் மனசுல கோபம் நிறைஞ்சிருந்தா இப்படியெல்லாம் எப்படி தோணும்?”
“ச்சே! ஆமாம் ஜேம்ஸ். நான் தப்பு பண்ணிட்டேன்”
“சரி சரி அவங்களுக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்களான்னாவது கேளுடா”
“ம்…இரு இரு… இப்பவே கேட்கிறேன்.. ஆங்…ரிங் போறது!”
“ஹலோ வி”
“ஹாய் தி. வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?”
“இல்ல இதோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்.”
“ஓகே நீ ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு”
“வேண்டாம் வேண்டாம் வி. நீ டிரைவ் பண்ணிண்டிருப்ப…நான் டிஸ்டர்ப் பண்ணலை.”
“ஹலோ மெட்ஸ் ல உன் வீட்டைவிட்டா எனக்கு தங்குறதுக்கு இடமா இல்லை.”
“எங்க தங்கியிருக்க?”
“என் நண்பன் ஜேம்ஸ் வீட்டுல தான்”
“ஓகே ஓகே. காலையில் மீட் பண்ணுவோம். பை”
என்று பேசி முடித்ததும் வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்திவிட்டு, காரை பூட்டி, வீட்டை திறந்து உள்ளே சென்று
“ஹேய் ப்ளூ. நீ வெளிய வரலாம். ப்ளூ கேட்குதா?”
“ம்…ம்… கேட்குது நல்லாவே கேட்குது. இதோ வரேன்”
“வா வா வா மை டியர் ப்ளூ கண்ணா. உம்மா…”
“ஆமா ஆமா! காலையிலேந்து அந்த பேஸ்மென்ட்டுலேயே கிடக்கேனாம்… இப்ப வந்து கண்ணாவாம்… உம்மாவாம்…. அட போ மா”
“அடடே என் ப்ளூ செல்லத்துக்கு கோவமாக்கும்?”
“பின்ன இருக்காதா? அந்த வி வந்ததிலேந்து நீ ஆளே சரியில்ல பார்த்துக்கோ… அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“ஹலோ! சும்மா அலுத்துக்காதப்பா! நாங்க தான் இவ்வளவு நேரம் வீட்டுலேயே இருக்கலையே! அப்புறம் என்ன? ப்ளூ ஐய்யா சுதந்திரமா சுத்தியிருப்பாரே!”
“ஆங்…ஆங்!! சுத்தினேன்! சுத்தினேன்! எப்படா உன் கார் சத்தம் வரும் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு தவிச்சுக்கிட்டே சுத்திட்டிருந்தேன் தெரியுமா! நிம்மதியாவா சுத்தினேன்?”
“ஓ !! அது தான் மேட்டரா?”
“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் தி. நீ போன காரியம் என்ன ஆச்சு?”
“அது ஒரு பெரிய கதை ப்ளூ. நிறைய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் இருக்கு. என்னன்னு சொல்லறது?”
“ஹலோ! டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தியா? உனக்கு தூக்கம் எல்லாம் தேவையே இல்லப்பா… ஆனா எனக்கு அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மணி நேரமாவது தூங்கி ஆகணும். அப்போ தான் நாளைக்கு என்னால ஆஃபிஸ் போக முடியும். அதுனால கதையை நாளைக்கோ இல்ல எனக்கு எப்போ ஃப்ரீ டைம் கிடைக்குதோ அப்ப சொல்லறேன். சரியா. இப்போ நான் போய் தூங்கறேன். குட் நைட் ப்ளூ.”
“இதுக்கு எதுக்கு என்ன கூப்பிட்ட?”
“உன்னை காலையிலேந்து நான் பார்க்கலையா அதுதான் கூப்பிட்டு பார்த்தேன்.”
“சரி சரி பார்த்து படியேறி போ தி.”
“ஆங்! ஏய் ப்ளூ! இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே!”
“என்னது? பார்த்து! பார்த்து! படியில மெதுவா இறங்கி வா தி… விழுந்துட போற”
“நம்ம பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் இருக்காங்க இல்ல… அவங்க இன்னைக்கு அங்க வீட்டுல இல்ல. அவசரமா கிளம்பி எங்கயோ போயிருக்காங்களாம். அவங்க வீட்டுல வேலை செய்வானே ஒரு பையன் அவன் தான் சொன்னான்.”
“நீ அவங்கள கடைசியாக எப்ப பார்த்த தி?”
“இன்னைக்கு! ஓ மணி ஒண்ணா ஆயிடுச்சோ! அப்படீன்னா நேத்து காலையில் ஆஃபிஸ் போகும் போது பார்த்தது தான் ப்ளூ. அதுக்கப்புறம் மத்தியானம் நானும் வி யுமா வீட்டுக்கு திரும்பி வந்தோம் இல்லையா அப்போ அவங்க அங்க இருக்கலை. காலையில அவங்க எதுவுமே சொல்லவுமில்லை!”
“ஆனா அந்த பாட்டி எதுவானாலும் உன்கிட்ட சொல்லுவாங்களே! இப்படி திடுதிப்புன்னு ஊருக்கு கிளம்பி போயிருக்காங்கன்னா உன்னை ஃபோன் ல பிடிக்க முடியலைன்னாலும் மெஸேஜாவது அனுப்பி இருப்பாங்களே தி!”
“ஆமாம் ப்ளூ… அதுதான் எனக்கும் காலையிலேந்து ஒரே வருத்தமா இருக்கு.”
“சரி இப்போ… உனக்கு அஞ்சு மணி நேரம் தூக்கம் வேண்டாமா தி?”
“ஊப்ஸ்… சரி சரி மீதியை அப்பறமா யோசிச்சுப்போம். குட் நைட் ப்ளூ”
“குட் நைட் குட் நைட் போ போ போய் தூங்கு தி”
என்று ப்ளூ சொல்லி முடிப்பதற்குள் சக்தி அவள் அறையினுள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். பின் உடையை மாற்றிவிட்டு படுத்துறங்கலானாள்.
மறுநாள் காலை சரியாக ஆறு மணியளவில் வழக்கம் போல ப்ளூ சக்தியை எழுப்பி விட அவள் அறைக்குள் வந்தது. ஆனால் சக்தி படுக்கையில் இருக்கவில்லை. அவளின் படுக்கையும் அழகாக விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ப்ளூ தனக்குத் தானே
“என்ன இது உலகமகா அதிசயமா இருக்கே! இந்த தி நான் எழுப்புறதுக்கு முன்னாடியே இப்ப எல்லாம் எழுந்துக்கறாளே! தி…தி…தி… குளிச்சிட்டிருக்கியா?”
“ஆமாம் ப்ளூ. நீ போ நான் ரெடியானதும் கீழே வரேன்.”
“ஓகே. வா வா.”
ஆஃபீஸுக்கு கிளம்பி கீழே வந்த சக்தியை மேலிருந்து கால் வரைப் பார்த்த ப்ளூ
“தி என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே கிளம்பிட்ட?”
“நான் தான் நேத்து நைட்டே சொன்னேனே ப்ளூ. இன்னைக்கு நிறைய வேலையிருக்குன்னு… அதுதான் கிளம்பிட்டேன்.”
“சரி…உன் காபி இந்தா.”
“இல்ல ப்ளூ. எனக்கு நேரமாயிடுச்சு. நான் இப்ப வசுந்தரா வீட்டுக்கு தான் போறேன். அங்கேயே காபி டிபன் எல்லாம் சாப்பிட்டுக்கறேன். நீ உன் வேலைகளை முடிச்சுட்டு பேஸ்மென்ட்டுக்கு போயிடு. ஏன்னா நான் வியோட இங்க வந்தாலும் வருவேன்.”
“அப்படீன்னா இன்னைக்கும் எனக்கு பேஸ்மென்ட் தானா!! இப்பவே எல்லாம் போக மாட்டேன். உன் கார் சத்தம் கேட்டதுக்கப்புறமா வேணும்னா போறேன்.”
“என்னமோ பண்ணு. நான் போயிட்டு வரேன் ப்ளூ. பை”
“பை தி.”
என்று ப்ளூவிடமிருந்து விடைப் பெற்று வெளியே வந்து வீட்டின் கதவை பூட்டிய சக்தியின் கண்கள் பக்கத்து வீட்டுப் பாட்டியை தேடியது. அப்போது அவளது கைப்பேசி அதிர்வுற்றதில் கிடுகிடுவென கதவைப் பூட்டிவிட்டு கைப் பேசியை அழுத்தி
“குட் மார்னிங் வி.”
“ம்…குட் மார்னிங். குட் மார்னிங்”
“நாங்க உன் தோழி வசுந்தரா வீட்டுக்கு கிளம்பிட்டோம். நீ உன் வீட்டிலிருந்து புறப்பட்டாச்சா?”
“ஆங்! ஆங்! புறப்பட்டாச்சு புறப்பட்டாச்சு! சரி அது என்ன நாங்க?”
“ம்…நானும் என் நண்பனும் தான். எனக்கு நேத்து நைட்டு ரூம் தந்த புண்ணியவான்”
“ம்…ஓகே ஓகே. நான் கால் ஐ கட் பண்ணிட்டு காரை ஸ்டார்ட் பண்ணட்டுமா? இல்ல இப்படியே உன் கூட பேசிட்டே இருக்கட்டுமா?”
“சரி சரி சீக்கிரமா வந்து சேருமா. நான் வச்சுடறேன்”
என்று கூறி விஷால் ஃபோனை வச்சதும் வீட்டிலிருந்து புறப்பட்ட சக்தி நேராக வசுந்தரா வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டினாள். அவள் காரிலிருந்து இறங்கிய போது அவளருகில் சர்ரென இரு கார்கள் வந்து நின்றது. சக்தி திரும்பிப் பார்த்தாள். அதிலிருந்து இறங்கினர் விஷாலும் ஜேம்ஸும். அவர்களைப் பார்த்ததும் சக்தி
“குட் மார்னிங் ஜேம்ஸ்.”
“குட் மார்னிங் சக்தி.”
“ஓ நீங்க தான் வி க்கு ரூம் குடுத்த வள்ளலோ”
“ஆமாம் என்ன பண்ண? ராத்திரி வந்து பாவமா வீட்டு வாசல்ல நின்னவனை வேற என்ன பண்ணுவேன் சொல்லுங்க”
“ரோல்ஸ் ராய்ஸ் வச்சிருக்கறவனுக்கு ஒரு ஹோட்டல்ல ரூம் போட முடியலையாக்கும்!”
“அதுதானே! அதை சொல்லுங்க சக்தி”
“அடேய் ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஹோட்டலா ரூம் கேட்டு ஏறி இறங்க முடியுமா? அதைவிட பெஸ்ட் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறது தானே! இதை எல்லாம் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்க எல்லாம் பேச வேண்டாம்ன்னு சொல்லு ஜேம்ஸ்”
“அச்சச்சோ! உங்க சண்டைக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு இப்போ நாம வசுந்தரா வீட்டுக்குள்ள போகலாமா? இதை முடிச்சுட்டு நான் பாரிஸ் வேற போகணும்”
என்று மூவருமாக அவரவர் காரில் வசுந்தராவின் க்ளினிக் சென்றனர். அங்கே சென்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வசுந்தரா முன்தினம் மாலை டியூட்டி முடிந்து ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி தான் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த ஒரு நர்ஸ் நைட் ட்யூட்டி முடித்து விட்டு பரபரப்பாக வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டே ஜேம்ஸைப் பார்த்தாள். அவள் கண்கள் ஜேம்ஸிடம் ஏதோ சொல்ல துடித்ததை உணர்ந்த ஜேம்ஸ் மெல்ல சக்தி விஷாலை அங்கேயே இருக்க சொல்லி விட்டு அந்த நர்ஸை பின் தொடர்ந்து சென்றான். அவள் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள். ஜேம்ஸும் அதே லிஃப்ட்டிற்குள் நுழைய ஓடிச் சென்றான் ஆனால் லிஃப்ட்டின் கதவுகள் மூடியதால் அவன் அந்த நர்ஸ் ஏறிய லிஃப்ட் எங்கே செல்கிறதென்று நின்று பார்த்தான். அது அந்த கட்டிடத்தின் கூரை தளத்திற்கு சென்றது.
பக்கத்து லிஃப்ட்டை எடுத்தால் ஜேம்ஸ் அந்த நர்ஸை தவரவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் …ஏனெனில் ஒரு வேளை அவள் அவனை ஏமாற்ற அங்கு சென்று விட்டு மீண்டும் கீழே ஏதாவது தளத்தில் இறங்கினால்! என்று யோசிக்க சில வினாடிகளே எடுத்த ஜேம்ஸ் படிகளில் ஏறிச் சென்றான். அப்படி ஏறுவதால் அவள் இடையில் எந்த தளத்தில் இறங்கினாலும் அவனிடம் அகப்படுவாள்.
ஜேம்ஸ் வேக வேகமாக படிகளில் ஏறிச் சென்றான். ஆனால் மேலே கூரை தளத்திற்கு சென்ற லிஃப்ட் கீழே வரவேயில்லை. அவனும் கூரை தளத்தை சென்றடைந்தான். அங்கே பீப் பீப் பீப் என்ற ஒலியுடன் லிஃப்ட் மூடாமல் திறந்திருந்தது. யாரோ ஒருவரின் கால்கள் லிஃப்ட்டின் கதவுகளை மூடவிடாது குறுக்கே தடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜேம்ஸ் வேகமாக லிஃப்ட் அருகே சென்று பார்த்தான். அவன் யாரைத் தேடி வந்தானோ அந்த நர்ஸ் தான் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்திருந்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் உடனே சக்தியை கைபேசியில் அழைத்து டாக்டர்களுடன் வேகமாக கூரை தளத்திற்கு வருமாறு கூறினான்.
ஜேம்ஸின் பேச்சில் இருந்த படபடப்பு ஏதோ ஆபத்தான விஷயம் நடந்துள்ளது என்பதை சக்திக்கு உணர்த்தியது. உடனே அவள் அங்கிருந்த வரப்வேற்பாளரிடம் சென்று அவசரம் என்று கூறி இரண்டு டாக்டர்கள் மற்றும் இரண்டு நர்ஸுகளுடன் லிஃப்ட்டை நோக்கிச் சென்றாள். அப்போது விஷால் அவளிடம்
“ஏய் தி…தி…தி…எங்க போற? ஜேம்ஸ் எங்க”
என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் செல்ல அவனும் அவர்களுடன் லிஃப்ட்டிற்குள் சென்றான். லிஃப்ட்டின் கதவுகள் மூடியது. சக்தி கூரை தளம் செல்வதற்கான பொத்தானை அழுத்தினாள்.
நன்மை பயக்கும் பொய்களின் விதைகள் அன்பு, பாசம், ஒற்றுமை, பிறரை வாழ வைப்பது, சக மனிதர்களின் மகிழ்ச்சி, குடும்ப நலன்…
தீமை இழைக்கும் பொய் முடிவில்லாதது நன்மை பயக்கும் பொய் சுபத்தில் முடிவது
தீமை இழைக்க சொன்ன பொய் நன்மையிலும் நன்மை பயக்க சொன்ன பொய் தீமையிலும் சிலநேரங்களில் நிலையெதிர் மாறாக மாறுவதும் உண்டு மனம் துவண்டு போக வேண்டாம் அதை கண்டு
பொதுவான பொய் சொல்வதும் தவறு பொதுவாக பொய் சொல்வதும் தவறு
ஆயிரம் ஆயிரம் பொய்களப்பா அதை சற்று ஆராய்ந்து நல்லவைகளுக்காக சொன்னால் நல்லதப்பா
சக்தி மற்றும் விஷாலை சந்திக்க வந்த ஜேம்ஸ் அவர்களிடம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று சக்தி அந்த ஹைவேயில் போனதுக்கான எந்த ஒரு தடயமும் சிசிடிவியில் இல்லை என்று கூறியதைக் கேட்டதும் இருவரும் பிம்மித்துப் போயினர். உடனே விஷால் ஜேம்ஸிடம்…
“ஏய் ஜேம்ஸ்! என்ன சொல்லுறடா?”
“அட ஆமாம் வி”
“நல்லா பார்த்தாயா?”
“நான் நல்லா எல்லா கேமராக்களையும் செக் பண்ணிட்டேன் டா.”
“அது எப்படி தி அந்த ரோட்டுல போனது மட்டும் இல்லாம போகும்?”
“அதுனால தான் அவங்க கிட்ட போனீங்களான்னு கேட்டேன்.”
“அஃப்கோர்ஸ் நான் அந்த ஹைவேல தான் டிராவல் பண்ணினேன். அது எப்படி கேமராவில் பதிவாகம இருக்கும்?”
“பதிவாகலையே சக்தி. நீங்க போனது பதிவாகியிருந்தா ஏதாவது ஒரு க்ளூவாவது கிடைச்சிருக்கும். ஆனா உங்க கார் அந்த ரோட்டுல போனதாவே எங்கேயும் பதிவாகலையே! அந்த விஷுவல்ஸை எல்லாம் பார்த்தது வேந்து… நான் எதை வச்சு இந்த இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணறதுன்னு யோசிச்சிக்கிட்டே தான் இருக்கேன்.”
“இதுக்கு வேற வழியே இல்லையா ஜேம்ஸ்?”
“வழியெல்லாம் இல்லாம இருக்காது விஷால். உண்மையாவே சக்தி அன்னைக்கு அந்த ரோட்டுல டிராவல் பண்ணியிருந்து… அது சிசிடிவி எதுலேயுமே பதிவாகலைன்னா இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிசா இருக்குன்னு எனக்கு தோனுது.”
“என்ன ஜேம்ஸ்? பண்ணியிருந்துன்னு இழுக்கறீங்க? நான் டிராவல் பண்ணினேன்.”
“எக்ஸ்க்யூஸ்மி சார் அன்ட் மேடம். யுவர் டின்னர். மே ஐ சர்வ்?”
“எங்க விட்டேன்? ஆங் அந்த சம்பவத்துக்குப் பின்னாடி ஏதோ பெரிய கைகள் இருக்குன்னும் எடுத்துக்கலாம். இதை ஊர்ஜிதம் படுத்திக்க சக்தி நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.”
“ஓ ஷுவர் ஜேம்ஸ்! என்னால் ஆன எல்லா ஹெல்ப்பும் பண்ணறேன். எனக்கும் அன்னைக்கு எனக்கு என்ன நடந்துதுன்னு தெரிஞ்சே ஆகணும்.”
“என்ன தி? இன்னைக்கு காலேல நாம் டாக்டர்ட்ட போகும் போதும் சரி… போலீஸ் ஸ்டேஷன் போகும் போதும் சரி… இதெல்லாம் தேவையான்னு கேட்ட? இப்ப என்னடான்னா தெரிஞ்சே ஆகணும்ன்னு சொல்லற?”
“பின்ன நான் போகவேயில்லைன்னு சொன்னா? அது எப்படி காரை டிரைவ் பண்ணிட்டு போன நான் கேமராவுல பதிவாகலை? ஒரே மர்மமா வேற இருக்கு? வசுவோட ரிப்போர்ட்டுலயும்… ஓ! வி… நல்ல வேளை ஞாபகம் வந்தது… எக்ஸ்க்யூஸ்மி கைஸ். நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டிருங்க.”
“எங்க போறீங்க சக்தி?”
“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஜேம்ஸ்… வந்து சொல்லறேன்”
“என்னடா இது வந்ததும் நீ பத்து நிமிஷம் போன! இப்போ இவங்க என்னமோ அவசர அவசரமா எங்கயோ போறாங்க? என்னடா நடக்குது விஷால்? இந்த ரெஸ்டாரன்ட் நல்லா தானே இருக்கும்!”
“ஹேய் ஜேம்ஸ்! அதெல்லாம் நல்லா தான் இருக்கு. தி க்கு எதோ ஞாபகம் வந்திருக்கு போல்!”
“அப்படின்னா அதை சொல்லாம ஏன் எழுந்து வெளில போகணும்?”
“ஆக்ச்சுலா… இந்த விஷயத்தை தி சொன்னதும் நாங்க அவளுக்கு யாராவது ஏதாவது குடுத்திருப்பாங்களோன்னு சந்தேகப்பட்டு… அவளோட டாக்டர் பிரெண்ட் கிட்ட போயி ஒரு டெஸ்ட் எடுத்தா. அதைத் தான் எடுத்துண்டு வரப் போயிருக்கான்னு நினைக்கறேன்”
“அதை ஏன் நீங்க மத்தியானம் என்னைப் பார்க்க வந்த போது காமிக்கலை?”
“அப்போ நாங்க மறந்துட்டோம் டா. வீட்டுக்குப் போனதுக்கப்பறமா தான் ஞாபகம் வந்தது. இப்பவும் மறந்துட்டோம். ஆனா அவளுக்கு ஞாபகம் வந்ததும் எடுக்கப் போயிருக்கா!”
“ஆனா அதை இப்ப எடுத்துண்டு வரலாம்னு போய் பார்த்தேன்…”
“சரி அது எங்க? ரிப்போர்ட் எடுக்க போயிட்டு வெறும் கையோடு வந்திருக்கீங்க?”
“அந்த ரிப்போர்ட் என் கார்ல இல்ல. நான் என் கார்ல வச்சிருந்த ரிப்போர்ட்டை காணல!”
“என்ன சொல்லுற தி? அது எப்படி காணாம போகும்?”
“இரு இரு வி. சக்தி அதை நீங்க உங்க கார்ல தானே வச்சீங்க?”
“ஆமாம் என் காரோட டாஷ்போர்டுல தான் வச்சிருந்தேன். ஆனா அதை இப்போ காணுமே!”
“அதை உங்க காரோட டாஷ்போர்டுல எப்போ வச்சீங்க?”
“ஆக்ச்சுவலி நான் என்னோட ஒரு பையில் தான் வச்சிருந்தேன். அதை உங்க கிட்ட கொடுக்க மறந்துட்டு நாங்க வீட்டுக்கு போனதுக்கப்புறமா அதை என் காரோட டாஷ்போர்டுல வச்சேன். அட்லீஸ்ட் இந்த மீட்டிலாவது உங்ககிட்ட காட்டணும்னு நினைச்சு வச்சேன். ஆனா மறுபடியும் மறந்துப் போயிட்டேன்.”
“உங்க கார்ல வச்சிருந்த ரிப்போர்ட் எப்படி காணாம போகும் சக்தி?”
“அது தானே தி! அது எப்படி காணாம போயிருக்கும்? அதுவுமில்லாம நானும் உன் கூடவே தானே மத்தியானத்துலேந்து இருக்கேன்! நீ எப்ப அந்த ரிப்போர்ட்டை உன் டாஷ்போர்டுல வச்ச? நான் பார்க்கலையே!”
“நீ கார்லேந்து இறங்கினதும்… நான் என் பையை பின் சீட்டிலிருந்து எடுத்தேனே!”
“ஆமாம் எடுத்த. அதைத் தான் எடுத்துண்டு கதவைத் திறக்க வந்துட்டியே!”
“இல்ல பின்னாலிருந்து பேக்கை எடுக்கும் போதே ரிப்போர்ட்டை எடுத்து என்னோடு சைடுல இருக்குற டாஷ்போர்டுல வச்சுட்டு தான் கதவை திறக்க வந்தேன்.”
“ஏன் அதை மாத்தி வச்ச தி?”
“இல்ல வி… நான் ஈவ்னிங் பேக் மாத்திப்பேன். அதுனால எடுக்க மறந்துட்டா என்ன பண்ணறதுன்னு தான் கார்லேயே வச்சேன்.”
“நான் தான் சொன்னேனே டா… தி யோட டாக்டர் பிரெண்ட். அவங்கள தான் சொல்லுறா”
“ஆமாம் ஜேம்ஸ். அவங்க பேரு டாக்டர் வசுந்தரா. எனக்கு அவங்களை ஒரு இரண்டு வருஷமா தான் தெரியும். ஒரு பார்ட்டி ல சந்திச்சோம் அப்படியே பிரெண்ட் ஆகிட்டோம்.”
“ஓ ஓகே. சக்தி நீங்க என்னோட இன்னொரு கேள்விக்கு பதிலே சொல்லலையே!”
“ஆங்!! ஆங்!! அந்த ரிப்போர்ட் ல என்னோட பிளட்ல செடடிவ் இருந்ததா வசு சொன்னா. அதுவுமில்லாம அது ஏதோ ஸ்லோ செடடிவ்வாம். அதை ஒரு தடவைக்கு மேல் குடுத்திருக்காங்கலாம். ஆனா அது எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல ஜேம்ஸ். அதுனால எல்லார்கிட்டேயும் என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னா வசு.”
“ரிப்போர்ட் காணாம போனதுக்கு நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் சக்தி. நாளைக்கு அந்த டாக்டர் வசு வை சந்திச்சு அவங்க குடுத்த ரிப்போர்ட்டோட காபி ஒண்ணை வாங்கிக்கலாம். அது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனா…”
“என்ன ஆனான்னு… இழுக்கறீங்க?”
“இல்ல சிசிடிவி ல நீங்க டிராவல் பண்ணிணதுக்கான எவிடன்ஸ் எதுவுமே இல்ல! இப்போ என்னடான்னா உங்க காருக்குள்ள நீங்க வச்சிருந்த ரிப்போர்ட் காணாம போயிருக்கு! ரிப்போர்ட் ல உங்களுக்கு செடடிவ் குடுத்திருக்கறதா டாக்டர் சொல்லியிருக்காங்க! இதெல்லாம் சேர்த்து யோசிச்சுப் பார்த்தா ஏதோ பெரிய தப்பா இருக்கும் போல தெரியுதே!”
“என்ன தப்பா இருக்கும் ஜேம்ஸ்?”
“என்னன்னு என்னால் இப்போ யூகிக்க முடியாது விஷால். ம்…சக்தி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? உங்க வேலை சம்பந்தமா, இல்ல நட்பு ரீதியா… இப்படி ஏதாவது இல்ல யாராவது மேல சந்தேகம் இருக்கா?”
“ம்…ஹும். எனக்கு அப்படி யாரையுமே சந்தேகப் படத் தோணலை ஜேம்ஸ். நானும் அதை யோசிச்சு யோசிச்சுப் பார்க்கறேன் ஆனா யாருமே என்க்கு எந்தவித கெடுதலும் நெனைக்கறவங்க இல்ல… எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
“ம்…நாளைக்கு அந்த டாக்டர் வசுந்தராவ பார்த்து சக்தியோட ரிப்போர்ட்டோட காபியை வாங்கணும். ஆங்…சக்தி உங்க ஆஃபிஸுக்கு நாளை நான் வரலாமா?”
“ஓ! தாராளமா வரலாமே! டைம் மட்டும் சொல்லிடுங்கோ. நான் எந்த மீட்டிங்கும் இல்லாம ஃப்ரீயா வச்சுக்கறேன்.”
“ஆனா டைம் சொல்ல முடியாதே சக்தி! ஏன்னா எனக்கு இன்னொரு கேஸ் விஷயமா பாரிஸ் போக வேண்டியிருக்கு… ஸோ எப்ப வருவேன்னு எல்லாம் சொல்ல முடியாதே! சரி ஒண்ணு பண்ணுங்க… நான் வந்தா என்னை உங்க ஆஃபிஸ் உள்ளே விடவும் உங்க சிசிடிவி டிப்பார்ட்மென்டுக்குள்ள விடவும் பர்மிஷன் வாங்கி வச்சுக்கோங்க. அது போதும். நான் எப்ப வந்தாலும் என் வேலையைப் பார்த்துக்க அது உபயோகமா இருக்கும். மத்தப்படி நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கலாம். நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.”
“அதெல்லாம் இன்னைக்கு நைட்டே ஈமெயில் போட்டு வாங்கிடுவேன். நீங்க தாராளமா எங்க ஆஃபிஸுக்குள்ள வரலாம். ஆனா நான் நாளைக்கு ஃபுல்லா இருக்குற மீட்டிங்ஸ் எல்லாத்தையும் நாளன்னைக்கு போஸ்ட்போன் பண்ணிக்கறேன். போ பிராப்ளம்”
“ஓகே தென் நேரமாயிடுச்சு. நான் கிளம்பறேன். தாங்க்ஸ் ஃபார் தி டின்னர். டேக் கேர். ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.”
“ஹேய் இரு டா. நாங்களும் கிளம்ப வேண்டியது தான். இதோ பில் பே பண்ணிட்டா ஆச்சு.”
“ம்…என்ன டா ஹெவி டிப்ஸ் வைக்கிற?”
“பாவம் தானே டா! அதுவுமில்லாம நான் மாஸ்டர்ஸ் படிக்கும் போது படிப்புக்கு இடையில பாக்கெட்மணிக்காக இந்த மாதிரி எல்லாம் வேலைப் பார்த்திருக்கேன். அது தான்.”
“சரி சரி. வா போகலாம்”
என்று மூவருமாக கார் பார்க்கிங் வரை ஒன்றாக நடந்து பேசிக்கொண்டே வந்தனர். அப்போது விஷால் சக்தி காரில் ஏறப்போனதைப் பார்த்த ஜேம்ஸ்
“ஏன்டா விஷால் நீ இன்னுமா கார் வாங்கலை?”
“அடேய்! இதோ நிக்குது பாரு என் கார்.”
“அடேங்கப்பா ரோல்ஸ் ராய்ஸ் காரா! ஏய் நிஜமாவே இது உன்னோடது தானா?”
“இங்க பாரு என் கார் கீ. இரு ஓபன் பண்ணிக் காட்டுறேன் அப்புறமா நீ நம்பு.”
என்று தனது காரைத் திறக்க முயன்ற போது அவனால் காரை திறக்க முடியாது போனது. அதைப் பார்த்த ஜேம்ஸ்
“ஹலோ! ஓகே ஓகே! யாரோடாவது காரை உன்கிட்ட இருக்குற சாவியை வைத்துத் திறக்க முயற்சித்தால் தண்டனை என்ன தெரியுமா? அதுவும் என்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த வேலைப் பார்க்குற…ம்….”
“இல்ல இல்ல ஜேம்ஸ் அது வி யோட கார் தான். எனக்கு நல்லா தெரியுமே!”
“அப்பாடி! தாயே என்னை காப்பாற்றிவிட்டாய்.”
“அதெல்லாம் இருக்கட்டும் வி. உங்க கார் ஏன் ஓபன் ஆகமாட்டேங்கறது?”
“நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்களும் நல்லா இருக்கோம் பா.”
“தி எப்பவுமே உங்க ரெண்டு பேரைப் பத்தி தான் சொல்லிண்டே இருப்பா. யூ போத் ஆர் ரியலி க்ரேட்”
விஷால் சக்தியை தி என்று குறிப்பிட்டதும் மிருதுளாவும் நவீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் அழைப்பது போலவே விஷாலும் அழைக்கிறானே என்று சந்தோஷப்பட்டனர்.
“பாரிஸில் என்ன பண்ணறேங்கள்?”
“என்னை முதல்ல “ங்கள்” போட்டு கூப்பிடறதை விட்டுடுங்கோ. என்னை விஷால் ஆர் வி ன்னே கூப்பிடலாம்.”
“ஓ! தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ வி. ஓகே வா?”
“ம்…இது ஓகே அப்பா.”
“என்னது இவ்வளவு நேரமா பெயர் டிஸ்கஷனும் எப்படி கூப்பிட்டுக்கறதுங்கறது தான் போயிண்டிருக்கா?”
“இவளுக்கு எப்பவும் எல்லாத்துலேயுமே விளையாட்டு தான் பா.”
“ஆமாம் மா. ஆமா!”
“சரி சரி. விஷால் உங்க சொந்த ஊரப் பத்தியும் வேலையைப் பத்தி எல்லாம் தி எங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டா. எங்க பொண்ணு செலக்சன் எதுலயும் என்னிக்குமே தப்பான தில்லை. அவ எதுக்குமே அவ்வளோ சீக்கிரம் ஒரு டிசிஷன் எடுக்க மாட்டா. பல முறை யோசிச்சு ஆராய்ஞ்சு அப்புறம் தான் ஒரு முடிவுக்கே வருவா. சின்ன வயசுலேந்தே அவ அப்படி தான். பத்து வயசு குழந்தைக்கு சைக்கிள் வாங்கித் தரேன்னு அப்பா சொன்னா அது உடனே வாங்கி தர தானே சொல்லும் ஆனா ஒரு சைக்கிள் வாங்கறதுக்கு நாங்க அவ கூட எத்தனைக் கடைக்கு ஏறி இறங்கி இருப்போம் தெரியுமா? எங்க பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னா அவ அந்த முடிவை எடுக்க எவ்வளவு காலம் எடுத்திருப்பா எவ்வளவு யோசிச்சிருப்பான்னு அவ அப்பாவான என்னால் யூகிக்க முடியும். அதனால தான் நாங்க அவளோட விருப்பத்துக்கு எந்த விதமான தடையும் போடலை.”
“ஆமாம் ஆமாம் பா. அது எனக்கும் நல்லாவே தெரியும். எனக்கு ஓகே சொல்லவே அவ மூணு வருஷம் எடுத்தா. அதுனால நானும் அனுபவிச்சிருக்கேன்.”
“பரவாயில்லையே தியை நல்லாவே புரிஞ்சிண்டிருக்கேங்கள். ரொம்ப சந்தோஷம் பா விஷால். நாங்க உங்கள்ட்ட எதிர்பார்க்கிறது ஒண்ணே ஒண்ணு தான். எக்காரணம் கொண்டும் உங்களால் எங்க பொண்ணு கண்கலங்கி வருத்தப் படக்கூடாது. அது மாதிரியான சூழல் வந்தாலும் அதை நீங்க தவித்து அவளுக்கு எல்லா நேரத்துலயும் பக்கபலமா இருக்கணும். எந்த இடத்துலேயுமே அவளை விட்டுக் கொடுத்துடக் கூடாது. ஏன்னா….”
“அம்மா ப்ளீஸ் நீ உடனே உன்னோட ஃப்ளாஷ் பேக்குக்கு போயிடாதே மா.”
“போடி! நான் எங்கேயும் போகலை. என்னை சொல்ல விட மாட்டேங்கற பாரு”
“சரி சொல்லு சொல்லு”
“போ மறந்துட்டேன். மொத்தத்துல எங்க தியை நல்லா பார்த்துக்கணும் பா. அவ்வளவு தான்”
“இதை அப்பவே சொல்லிருக்க வேண்டியது தானே மா”
“ஹேய் தி. இட்ஸ் ஓகே. அம்மா அவாளோட எதிர்பார்ப்ப தானே சொன்னா. அம்மா நீங்க கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை. நீங்க எப்படி அவளைப் பார்த்துண்டேங்களோ அதே மாதிரி இல்ல அதைவிட ஒரு மடங்கு நல்லாவே பார்த்துப்பேன்.”
“ரொம்ப தாங்ஸ் பா”
“சரி சரி அப்பா அன்ட் அம்மா. நாங்க இப்போ வியோட பேரன்ட்ஸ்கிட்ட பேசணும். அவா கிட்டயும் பேசிட்டு மறுபடியும் வீடியோ கால் பண்ணி உங்களை அவாளுக்கும் அவாளை உங்களுக்கும் இன்ட்ரோ பண்ணி வைக்கறோம் சரியா. அவா வெயிட் பண்ணிண்டிருப்பா. நாங்க இந்த கால் கட் பண்ணறோம். பை.”
“ஓ சரி மா. பை தி அன்ட் வி”
“பை அம்மா அன்ட் அப்பா”
“வி எப்படி என் பேரன்ட்ஸ்? ஜெல்லாயிட்ட போல!”
“லவ்லி பேரன்ட்ஸ் தி. அவா ரெண்டு பேரும் பேசினதுலேந்து எனக்கு ஒண்ணு நன்னா தெரிஞ்சுண்டேன். ரெண்டு பேரும் உன் மேல உயிரையே வச்சிருக்கா.”
“எஸ் வி. ஐ ஆம் ப்ளெஸ்டு டூ ஹாவ் தெம் ஆஸ் மை பேரன்ட்ஸ். சரி சரி உன் பேரன்ட்ஸுக்கு கால் பண்ணு.”
“ம்…இதோ பண்ணிட்டேன்.”
“ஏன் எடுக்க மாட்டேங்கறா?”
“அதுதான் தெரியலை. இரு இரு இன்னொரு தடவை ட்ரை பண்ணறேன்”
“அவா பிஸியா இருக்காளோ என்னவோ? கொஞ்சம் நேரம் கழிச்சு பண்ணிப் பாரு வி.”
“இல்ல இல்ல நான் டைம் சொல்லிருக்கேன். ஸோ அவா ரெடியா தான் இருப்பா. ஆனா ஏதாவது இன்டர்நெட் பிராப்ளமா? என்னன்னு தெரியலையே!”
“சரி மொபைல்ல டேட்டா இருக்கும் இல்லையா! மொபைல்ல கால் பண்ணிப் பாரு”
“ம்…இதோ பண்ணறேன். ஆங் ரிங் போறது.”
“ஹலோ விஷால் எப்படி இருக்க?”
“அம்மா என்ன மா வீடியோ கால்ல வரச்சொன்னேனே. ஏன் வரலை?”
“அதுவா…உன் ரவி சித்தப்பா பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுத்து அது தான் நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரி வந்திருக்கோம். அதனால தான் வீடியோ கால்ல வர மறந்துட்டோம்.”
“ஓ!! ஓ! அப்படியா? எப்படி குருவுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு?”
“அவன் பைக்கை ஒரு கார் காரன் பின்னாடிலேந்து வந்து இடிச்சிருக்கான். குருவுக்கு பேலன்ஸ் போயிருக்கு பைக்கோட சறுக்கிண்டே போயிருக்கான்.”
“வி யாருக்கு என்ன ஆச்சு?”
“ஒரு நிமிஷம் தி”
“அம்மா குரு இப்போ எப்படி இருக்கான்? காயம் ஒண்ணும் ஜாஸ்தி இல்லையே”
“மயக்கமா தான் இருக்கான் டா. உடம்புல ஆறேழு தையல் போட்டுருக்கான்னு ரவி சொன்னான். நாங்க இன்னும் குரு வ பாக்கலை. அவனை வார்டுக்கு கொண்டு வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும். ஆனா அடி பலமா பட்டுருக்கு போல. பாவம் ரவிக்கும் மங்களத்துக்கும் ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ளி இப்படி ஆஸ்பத்திரில படுத்துண்டிருக்கு. அந்த பகவான் தான் இந்த புள்ளைய சீக்கிரம் குணப்படுத்தணும்னு வேண்டிண்டே இருக்கேன். நாம வேற என்ன பண்ண முடியும் சொல்லு… சரி இடையில பேசினது நம்ம சக்தியா?”
“ம்..ஆமாம் மா. சரி சரி நீங்க அங்க சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்துக்கோங்கோ. குரு வ டாக்டர்ஸ் பார்த்துப்பா ஆனா இப்போ அவா ரெண்டு பேருக்கு தான் சப்போர்ட் வேணும். புரியறதா?”
“ம்…அதுனால தானே டா முக்கியமான கால் இருந்தும் இப்படி இங்க ஓடி வந்திருக்கோம்.”
“சரி சரி நீ சக்தி கிட்ட பேசறயா? ஃபோனை அவகிட்ட குடுக்கவா?”
“இல்ல இல்ல வேண்டாம் விஷால். இப்போ நிலைமை சரியில்லை. மொதோ மொதோ பேசப்போறோம் அப்ப போயி ஆக்ஸிடென்ட் விஷயத்தோடவா பேசணும். அவ இனி எப்ப ஃபிரியா இருப்பான்னு கேட்டு வை. இன்னொரு நாளைக்கு பேசிக்கறோம்.”
“அவன் இன்னும் மயக்கத்துல தான் இருக்கானாம். பயப்படும் படி ஒண்ணுமில்லன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காளாம்.”
“ஓ! கடவுளே அந்த பையன காப்பாத்துப்பா. சரி என்கிட்ட ஃபோன குடுத்திருக்கலாம் இல்லையா! நானும் அம்மாட்ட ஒரு வார்த்தை விசாரிச்சிருப்பேனே.”
“நான் உன் கிட்ட குடுக்கட்டுமான்னு அம்மாட்ட கேட்டேன். ஆனா அம்மா தான் மொதோ மொதோ பேசப் போற விஷயம் ஆக்ஸிடென்ட் பத்தி இருக்க வேண்டாம்னு சொல்லி இன்னொரு நாள் பேசறோம்னு சொல்லிட்டா.”
“ஓ! ஓகே ஓகே.”
“ஹேய் தி உன் பேரன்ட்ஸ் நம்மலோட கான்ஃபரென்ஸ் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. நீ அவாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு சொல்லிடு.”
“ம்…சரி சரி நான் அப்பவே மெஸேஜ் அனுப்பிட்டேன். அவாளும் ஓகேன்னு சொல்லிட்டா.”
“சரி இந்த வீட்டுல நீ மட்டும் தனியாக வா இருக்க?”
“ஆமாம். ஏன் கேட்கற?”
“இல்ல உனக்கெல்லாம் இந்த பயம் எல்லாம் இல்லையா?”
“ஹா ஹா ஹா! நான் லாஸ்ட் அஞ்சு வருஷமா தனியா தான் இருக்கேன். ஆரம்பத்துல பயமெல்லாம் இருந்தது. ஆனா வருஷங்கள் போக போக எல்லாம் பழகிடுத்து. தைரியம் தானா பொறந்துடுத்து.”
“ஹே டைம் எட்டாச்சு தி”
“ஸோ வாட்?”
“நாம ஜேம்ஸை ஒன்பது மணிக்கு லீ கார்னர்ல மீட் பண்ணறோம்னு சொல்லிருக்கோமே!”
“அட ஆமாம். சரி அப்படீன்னா நாம கிளம்புவோமா?”
“ஓ ஷவர். ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு தி?”
“அதோ அந்த லெஃப்ட் சைட்ல தான் இருக்கு வி. நானும் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.”
“ம்…ஓகே.”
“என்ன தி இவ்வளவு சீக்கிரமா ரெடி ஆகி வந்துட்ட?”
“நானென்லாம் அப்படி தான். எனக்கு வெறும் அஞ்சு நிமிஷம் போதும்.”
“அப்பாடா அப்படீன்னா நான் குடுத்து வச்ச கணவனாக போறேன்.”
“என்னை போல ஒருத்தி உனக்கு மனைவியா கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் வி.”
“அதைத் தானே மா நானும் சொன்னேன். நான் இல்லைன்னா சொன்னேன்”
“சரி சரி வா போகலாம்.”
என்று வீட்டினுளிருந்து வெளியே சென்றதும் கதவை தாழிட்டுக் கொண்டே பக்கத்து வீட்டைப் பார்த்தாள் சக்தி. எப்போதுமே அலங்கார விளக்குகள் பளிச்சிட்டவாறு ஜொலிக்கும் பக்கத்து வீடு அன்று இருள் சூழ்ந்திருந்ததைப் பார்த்ததும் நேராக அவர்கள் வீட்டுக்கு சென்றாள். அதைப் பார்த்த விஷால்
“ஹேய் தி. அங்க எங்க போற?”
“ஒரு நிமிஷம் வி. நீ கார்ல உட்காரு. இதோ வந்துடறேன்.”
என்று கூறிக்கொண்டே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணை விளக்கை போட்டு விட்டு காரருகே வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் எப்போதும் அமர்ந்திருக்கும் திண்ணையையே பார்த்துக்கொண்டு காரின் கதவைத் திறந்தாள்
“தி வாம்மா. நேரமாகுது. ஜேம்ஸ் நமக்காக காத்துண்டிருப்பான்”
“ஓகே இதோ இதோ வந்துட்டேன்.”
“என்ன உன் பக்கத்து வீட்டுக்கு நீ தான் ஒளி கொடுக்கும் தேவதையா?”
“ம்….அப்படி இல்ல வி. அவங்க வீடு எப்பவுமே விளக்குகளால் ஜொலிச்சிண்டே இருக்கும். இப்போ இருட்டடைஞ்சு பார்க்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. அதுதான் போய் வாசல் லைட்டை போட்டுட்டு வந்தேன்.”
ஜேம்ஸை சந்தித்து புகார் கொடுத்து விட்டு வெளியே வந்து சக்தியின் காரில் இருவரும் ஏறி சக்தி வீட்டை நோக்கி பயணித்தனர். அப்போது சக்தி விஷாலிடம்
“நல்ல வேளை உங்க பிரெண்டு ஜேம்ஸ் இருந்ததால நமக்கு வேலை சுலபம் ஆயிடுச்சு, இல்லாட்டி எவ்வளவு அலைக்கழித்து இருப்பாங்களோ!! என்ன வி ஒண்ணுமே பேசாம வரீங்க”
“ஆமாம் தி அவன் மட்டும் அங்க இல்லன்னா நம்ம வெளிலே வரதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ!! அதுவுமில்லாம அவன் நமக்காக கொஞ்சம் தீவிரமாக இந்த கேஸை விசாரிச்சு சீக்கிரமே உனக்கு என்ன ஆச்சுங்கறத கண்டுபிடிச்சு தருவான்னு நினைக்கிறேன். லெட் அஸ் வெயிட் அன்ட் சீ”
“இல்லையே நீ ரொம்ப டல்லா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுதே!! ஏன் வி? என்ன ஆச்சு?”
“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பேரன்ட்ஸோட பேசப் போற வீடியோ கால் பத்தி யோசிச்சிட்டு வரேன்.”
“ஓ! மாமனார் மாமியார்ட்ட பேச போறத நினைச்சு பயப்படறயா வி? கவலைய விடு. என் பேரன்ட்ஸ் ரொம்ப டீசன்ட் அன்ட் உன் கிட்ட நல்லாவே பேசுவா. பேசறதுன்னா அவாளுக்கு ரொம்ப பிடிக்கும். அவா கூட பேசினா நீயே தெரிஞ்சுப்ப பாரு. ஐ ஹோப் உங்க பேரன்ட்ஸும் அப்படி தான்னு நினைக்கிறேன்”
“ம்…ம்…ஆமாம் ஆமாம்”
“வி கம் ஆன். எதற்கு டென்ஷன்? கொஞ்சம் ச்சில் பண்ணு மாப்பி!”
“பாட்டு…. ம்….? டென்ஷன் எல்லாம் இல்ல தி. ஆனா ஏதோ ஒரு மாதிரி இருக்கு. உனக்குள்ள அப்படி ஒரு ஃபீல் இல்ல?”
“இருக்கு… ஓ! ஓ!”
“என்ன ஆச்சு தி?”
“பார்த்தியா நாம என்னோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை உன் பிரெண்டு ஜேம்ஸ் கிட்ட குடுக்க மறந்துட்டோம்.”
“அட ஆமாம்.”
“என்ன அதை ஏதோ சந்தோஷமா சொல்லறா மாதிரி இருக்கே!”
“இதுல என்ன சந்தோஷம் இருக்கு தி? ஆமாம் மறந்துட்டோமேன்னு தான் சொன்னேன்.”
“ம்…சரி அதுனால என்ன நாம தான் இன்னைக்கு நைட் அவரோட டின்னர் சாப்பிட போறோமே அப்போ குடுத்துக்கலாம். என்ன வி? சரிதானே?”
“ம்…ம்…வெரி கரெக்ட். அப்பவே குடுத்துடலாம்.”
“ம்…வீடு வந்துடுச்சு. காரிலிருந்து இறங்கலாமா.”
“ஓ எஸ் தி”
என்று காரை நிப்பாட்டி விட்டு இருவரும் காரிலிருந்து இறங்கியதும் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணையைப் பார்த்தாள். ஆனால் அன்று அவளை பாரத்துப் புன்னகைக்க திருமதி டேவிட் அங்கிருக்கவில்லை. சக்தி பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த விஷால் அவளிடம்
“ஹேய் தி. அங்க என்ன பார்க்கிற? இது தானே உன் வீடு?”
“ஆங். ஆமாம் வி. நான் எப்ப வீட்டை விட்டு கிளம்பினாலும் சரி, வெளியே இருந்து வீட்டுக்கு வந்தாலும் சரி அங்க தெரியுது பாரு அந்த திண்ணையில் உட்கார்ந்துட்டே அழகான புன்னகையோடு எனக்கு விஷ் பண்ணுவாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட். ஆனா அவங்களை இப்போ காணுமே!”
“அவங்க ஏதாவது வேலையா வீட்டுக்குள்ள இருப்பாங்க தி”
“இல்ல இல்ல வி.”
“என்ன தி இது? அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் இல்லையா?”
“இல்ல வி. எனக்கு மார்னிங் அன்ட் ஈவினிங் விஷ் பண்ண அவங்க தவறினதே இல்லை. இது தான் முதல் தடவையா அவங்க அங்க இல்லை.”
“ஒரு வேளை வெளிய எங்கயாவது போயிருக்கலாம் இல்லையா?”
“இல்ல வி. அவங்க அப்படியெல்லாம் எங்கேயுமே போக மாட்டாங்க. எல்லாமே அவங்க வேலைக்காரன் தான் வாங்கிட்டு வருவான்.”
“சரி தி. இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்லற?”
“ஒரு வேளை அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்குமோ?”
“அப்படி அவங்களுக்கு என்ன வயசாகுது தி?”
“அவங்களுக்கு எழுபத்தைந்து வயதாகுது வி. ஆனா துரு துரு இருப்பாங்க. இரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு ஒரு நொடியில் வந்துடறேன்”
“சரி அதுவரைக்கும் நான் இங்கேயே வாசல்லயே நிக்கட்டுமா?”
என்று விஷாலின் கையைப் பிடித்துக் கொண்டு பக்கத்து வீடான மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் வாசலில் நின்று அவர்கள் வீட்டின் அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினாள் சக்தி. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரனாக அந்த வீட்டோடு இருக்கும் ஜான் கதவைத் திறந்தான். அவனிடம் சக்தி
“ஹாய் ஜான். ஹோப் ஆல் இஸ் வெல்!”
“ம்…ஆமாம் ஆல் இஸ் வெல் மிஸ் சக்தி.”
“சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் எங்க? அவங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கோம்.”
“ஓ! ஓ! அவங்க வீட்டுல இல்லையே!”
“என்னது வீட்டுல இல்லையா?”
“ஆமாம் சக்தி மேடம்.”
“எங்க போயிருக்காங்க?”
“அதைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலை மேடம்.”
“எப்போ திரும்பி வருவாங்க?”
“அதுவும் எனக்குத் தெரியாது மேடம்”
“சரி மிஸ்டர் டேவிட் எங்கே?”
“அவரும் மேடமும் தான் வெளிய போயிருக்காங்க. பெட்டி எல்லாம் எடுத்துகிட்டு போயிருக்காங்க.”
“ஆனா உங்க கிட்ட ஒண்ணுமே சொல்லலையா?”
“இல்ல இல்ல என்னை இன்னைக்கு வீட்டை ஃபுல்லா சுத்தம் பண்ணிட்டு என்னோட வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அவங்க திரும்பி வந்ததும் கால் பண்ணறதாகவும் அப்போ வந்தா போதும்ன்னும் சொல்லிட்டு தான் போனாங்க. அதுவுமில்லாம எனக்கு இரண்டு மாச சம்பளத்தையும் குடுத்துட்டுப் போயிருக்காங்க.”
“அப்படியா? ம்…சரி நான் வரேன்.”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தார்கள் சக்தியும் விஷாலும்.
“ஏன் சக்தி? உன்கிட்ட அந்த லேடியோட மொபைல் நம்பர் இல்லையா?”
“இல்ல வி. எனக்கு அவங்க வீட்டு ஃபோன் நம்பர் தான் தெரியும். நான் அவங்க மொபைல் நம்பரைக் கேட்டதுமில்லை அவங்க தந்ததுமில்லை.”
“ஓ! ஓ! சரி ஏதாவது எமர்ஜென்சியா இருந்திருக்கலாம். அதனால அவசரமா கிளம்பியிருக்கலாம் இல்லையா!”
“இருக்கலாம்…”
“என்ன இழுக்கற தி?”
“இல்ல எனக்கென்னவோ அந்த வேலைக்காரன் ஜான் மேல தான் டவுட்டா இருக்கு வி”
“சரி சரி நான்சி ட்ரூ. என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தன்னு நினைச்சேன்!”
“உஸ் சாரி சாரி வி. அவங்க ரொம்ப நல்லவங்க. எனக்கு பல தருணங்கள்ல ரொம்பவே ஹெல்ப் புல்லா இருந்திருக்காங்க. அன்னைக்கு நான் வரதுக்கு லேட் ஆனப்போக் கூட என்ன ஏதுன்னு வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க தெரியுமா”
“சரி மா இதை எல்லாம் உன் வீட்டுக்குள்ள போய் பேசலாமே! இப்படியே இவங்க வீட்டு வாசல்லயே நிக்கணுமா?”
என்று சக்தியின் வீட்டை சுற்றிப் பார்த்த வி அவளிடம்
“ஹேய் வீடு சூப்பரா இருக்கு. ரொம்ப சுத்தமா வச்சிருக்கயே! எப்படி வேலைக்கும் போயிட்டு வீட்டையும் இவ்வளவு சுத்தமா வச்சிருக்க நீ? வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கயா என்ன?”
“இல்ல இல்லப்பா… இங்க வேலைக்கு ஆள் வச்சா எவ்வளவு குடுக்கணும்ன்னு உனக்கு தெரியாதா? அதுக்கெல்லாம் பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் போல ரொம்பவே பணக்காரர்களாக இருக்கணும்”
“சுத்தி சுத்தி அவங்க கிட்டயே வரியே தி”
“ஓ! ஓ! நான் பக்கத்து வீட்டைப் பத்தி பேசினதுல… நாம என் பேரன்ட்ஸ் கூட பேச வேண்டியதை மறந்துட்டேனே! இதோ என் அப்பா அம்மா மெஸேஜ் அனுப்பிருக்கா. பேசிடலாமா வி?”
“ஓ எஸ் பேசலாம்.”
“இரு இரு நான் நமக்கு காபி போட்டுட்டு வர்றேன். அதுக்கப்பறமா கால் பண்ணலாம். ஏன்னா அதுக்கப்புறம் உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசணும் இல்லையா”
“உனக்கு காபி போட தெரியுமா?”
“ம்…இந்தா காபி. குடிச்சிட்டு சொல்லு நல்லா இருக்கான்னு! இரு கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்துண்டு வந்து கால் கனெக்ட் பண்ணறேன்.”
“ஏய் பாவம் உன் பேரன்ட்ஸ் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க”
“இதோ இதோ வந்துட்டேன். ம்…கால் போறது. என் காபி எப்படி?”
“ம்…சூப்பர்.”
“இந்தா வி…இந்த முறுக்கை அப்பப்போ கடிச்சுக்கோ”
“ஓகே. ஹேய் கால் கனெக்ட் ஆகிடுச்சு பாரு”
“ஹலோ மா. ஹலோ பா. எப்படி இருக்கேங்கள்? இதோ வி. சாரி சாரி விஷால். விஷால் இவங்க தான் என் அம்மா மிருதுளா அன்ட் அப்பா நவீன். இனி நீங்க பேசிக்கோங்கோ நான் போய் இந்த காபி கப்ஸ்ஸை சிங்க்ல போட்டுட்டு வர்றேன்.”
இன்று நம் மத்தியில் சிறு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உபயோகிக்கும் பெரிய வார்த்தை, அதற்காக ஒரு தனி படிப்பு, தனி பிரிவு என்று பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள் என்று பூதாகரமாக நம் முன் படமெடுத்து ஆடும் அந்த வார்த்தை… வேறொன்றுமில்லை “மன அழுத்தம்” என்பதே ஆகும். இந்த பதிவில் தற்போது குழந்தைகளுக்குள் நிலவும் இந்த சொல்லின் தொல்லைப் பற்றியும், அதன் சில காரணங்கள் பற்றியும், விளைவுகள் பற்றியும் காண்போம்.
என்னடா நம் நாடே இதை பெரிய அளவில் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர் வேறொன்றுமில்லை மன அழுத்தம் தான்னு சாதாரணமாக சொல்லுகிறாரே என்ற எண்ணம் முதல் பத்தியைப் படித்ததும் நிச்சயம் அனைவருக்கும் தோன்றியிருக்கும். அது தாங்க மன அழுத்தத்திற்கான முதல் படி.
அடுத்தவர்களை வைத்து நம்மை நாம் மதிப்பிடுவது நம்மை மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடியதாகும். அந்த காலத்தில் நமது பெற்றோர்களுக்கு இல்லாத மன அழுத்தமா? இல்லை நம் பாட்டி தாத்தாக்களுக்கு இல்லாத மன அழுத்தமா? ஆனால் அதை அப்போது பெரிதாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை “குடும்பம்னா நாலும் இருக்கும் பா” “இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பா” என்ற மூன்றே வார்த்தைகளில் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கிடுவர். அதே போல அன்றைய காலக்கட்டத்தில் பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்ததோடு மகிழ்ச்சியையும் அளித்து வந்துள்ளது. மேலும் பெற்றவர்கள் அவ்வளவாக படிக்காததாலோ என்னவோ அவர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து மகிழ்ந்தனரே இன்றி அடுத்த வீட்டு பையன் எவ்வளவு எடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கூட பார்க்காதிருந்தனர்.
ஆரம்ப பள்ளிகளில் மதிப்பெண்கள் வழங்கக் கூடாதென்றும், அது சிறுவயது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அளிக்கும் என்றும் எடுத்துரைத்ததில் ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த கல்வி முறையை மாற்றி அதை எல்லா பள்ளிகளிலும் செயல்படுத்தியும் ஆகிவிட்டது. ஆனால் அதே வயது குழந்தைகள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மதிப்பிடப் படுகிறார்கள், மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அவர்களுக்கிடையே குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ள குழந்தைகள் யார் யார் என்றும் அவர்களை முன்னால் நிறுத்தி அதை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் மட்டுமின்றி உலகத்திற்கே பகிர்கிறார்களே! இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களோ என்னவோ!
மன அழுத்தம் என்பது நமது உடல் ரீதியாக அதாவது உடல் பருமன் காரணமாக அல்லது குடும்ப வம்சாவழி காரணமாக உதித்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவே மன ரீதியாக உதித்தால் அதை சரி செய்வதென்பது சற்று கடினமானது தான். ஆனால் முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை. எனவே மன ரீதியாக மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்களுக்கு அவர்களே அதற்கான மருந்தும் ஆவர். ஆம் அவர்களே நினைத்தால் தான் அதிலிருந்து வெளிவர முடியும். மன ரீதியாக மன அழுத்தம் ஏன் வருகிறது? என்று சற்றே ஆராய்ந்து பார்த்தோமே என்றால் அது ஒவ்வொருவரின் ஆசைகள், ஏக்கங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அதனால் எழக்கூடிய பொறாமை, கோபம், சமுதாய நெருக்கடி, சமூக ஊடகங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளின் பிரதிபலிப்பே மன அழுத்தம் ஆகும்.
இப்படி நமக்கு வெளியிலிருந்து நம்மைத் தாக்கி நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அனைத்தையும் நாம் பெரிதாக பொருட்படுத்தாமல் நம்மை விட்டு தள்ளி வைக்கக் கற்றுக்கொண்டு விட்டோமே என்றால் அது அப்படியே அடுத்த நிகழ்வு ஏதாவது நடந்ததும் மறைந்து, மீண்டும் எழுவதற்கு தெம்பில்லாமல் அப்படியே புதைந்து போய்விடும். பின் இதற்காகவா நாம் மன வேதனைக்கு உள்ளானோம் ச்சே! என்று நினைக்க வைக்கும். உதாரணத்திற்கு ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விவரிக்க விரும்புகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இதுவும் ஒன்று. நாம் நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் அல்லது கலைகளில் சிறந்து விளங்க வேண்டுமென்றெல்லாம் எண்ணுவதில் தவறேதுமில்லை ஆனால் அவர்களை அவர்களின் நண்பர்களோடு அல்லது பெற்றவர்களின் நண்பர்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ஏன் அவர் மகன்/மகள் போல என் மகன்/மகள் மதிபெண் எடுக்க மாட்டிங்கிறாள்/ன் அல்லது ஏன் அவர்களைப் போல இந்த துறையில் மிளிர மாட்டிங்கிறான்/ள்? ஆமாம் எப்ப பார்த்தாலும் விளையாடிக் கொண்டேயிருந்தால் எங்கிருந்து முன்னேறுவது என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் உதிக்க ஆரம்பித்து விட்டால் நாமே மன அழுத்தமென்னும் புதைக் குழிக்குள் விழ ஆரம்பித்துவிட்டோமென்று அர்த்தமாகும். இவ்வாறு எண்ணும் பெற்றவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே போல பிள்ளைகள் அவர்கள் நண்பர்களின் பெற்றவர்களோடு தங்களின் பெற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெற்றவர்களுக்கு வேதனையளிக்கும் அல்லவா! பின்பு ஏன் அதே வேதனையை பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் அளிக்க வேண்டும்? இதை செய்வதால் பெற்றவர்கள் பிள்ளைகள் இருவரும் பாதிக்கப் படுகிறார்கள்.
குழந்தைகள் எது செய்தாலும் அவர்களை தட்டிக்குடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களை ஒழுங்குப் படுத்த தவறுகிறார்கள் நவீன உலகப் பெற்றோர்கள். சுவற்றில் கிறிக்கினால் கிறுக்கட்டுமே அவள்/அவன் பெரிய ஓவியராக வரட்டுமே! அதிகப்பிரசங்கித்தனமாக பேசினால்… பேசட்டுமே பெரிய பேச்சாளராக போகிறார்கள்! என்பதெல்லாம் சரிதான் ஆனால் அதே குழந்தைகளுக்கு ஒரு காகிதம் அல்லது புத்தகத்தைக் கொடுத்து அதில் படம் வரையும் படி பொறுமையாக கற்றுக் கொடுத்தால் எந்த குழந்தையும் முதல் இரண்டு முறை கேட்காவிட்டாலும் மூன்று அல்லது நான்காவது முறை நிச்சயம் கேட்கவும் செய்யும், அது படி நடக்கவும் பழகிக்கொள்ளும். பெரிய ஓவியர்களாகவும் ஆவார்கள். அதிகப்பிரசங்கித்தனமாக பேசாதே என்று ஓரிரு முறை பொறுமையாக எடுத்துச் சொல்லிக்கொடுத்தால் அக்குழந்தை அதன் குழந்தைத் தனம் மாறாது வளர ஏதுவாக இருக்கும். குழந்தைகளைக் குற்றம் சொல்வானேன்! அவர்கள் அனைத்தும் அறிந்து கொண்டு பிறப்பதில்லையே! அவர்களை சுற்றியிருக்கும் பெரியவர்களிடமிருந்து தானே அனைத்தும் கற்றுக் கொள்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பிள்ளைகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களைப் பெற்றவர்கள் அடிக்கக் கூடாது திட்டக்கூடாது என்றெல்லாம் கூட சட்டங்கள் வர ஆரம்பித்தாகிவிட்டது. அப்படி இருந்தால் அது பிள்ளைகளுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் தெரியுமா என்றெல்லாம் முழக்கமிட்டு அமல் படுத்தியவர்கள், அது எந்தவிதத்தில் நன்மை அளித்துள்ளது என்பதைப் பற்றிய விவரங்கள் எங்கே என்று தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். பார்க்கப் போனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதற்கான முக்கிய காரணமாக கூட இந்த மாற்றம் அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் அவர்களை நெறிப் படுத்த சில நேரங்களில் கண்டிப்பு மிக அவசியமான ஒன்றாக அமைகிறது என்பதை நவீன உலகம் மறக்கடிக்கச் செய்து விட்டது எனலாம்.
அப்படி இருக்கும் மேற்கத்திய நாட்டு குழந்தைகளின் நிலை என்ன என்று சற்று அலசிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகும். சொல்லப் போனால் அவர்கள் நமது நாட்டின் பாரம்பரிய முறைகள் பிடித்துப் போய் அதைப் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். ஆனால் நாம்? இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது இதுதானோ! கண்டிப்புடன் வளர்க்கப் பட்ட நமது நாட்டின் எழுபது, என்பது, தொண்ணூறுகளின் குழந்தைகள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அன்றைய பெற்றவர்கள் கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் எவரும் அவர்களை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை. ஆனால் இன்றோ பத்து வயது குழந்தை பெற்றவர்களைப் பார்த்தே “ஐ ஹேட் யூ” என்கிறதென்றால்!! எதிர்காலத்தை எண்ணி அஞ்ச வேண்டிய சூழல் உருவாக ஆரம்பித்து விட்டது என்று தான் தோன்றுகிறது.
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு பாசத்தை வாரி வழங்க வேண்டும். ஆனால் ஆறு வயது முதல் பதினைந்து வயது வரை கண்டிப்புடன் இருந்து அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஆசாரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று சாணக்கியர் ஏன் கூறியுள்ளார்? என்று நாம் சற்று சிந்திக்க வேண்டிய நேரமும் காலமும் இதுதான் என்று தோன்றுகிறது.
இதைப் போலவே நமது எதிர்பார்ப்புகளை நமது பிள்ளைகள் மீது நாம் திணிக்க நினைத்தால் அதுவும் இருவருக்குள்ளும் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். உன்னிப்பாக கவனித்தோமே என்றால் குழந்தைகளை சுதந்திரமாக சுவற்றில் கிறுக்க விடும் அதே பெற்றவர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது தங்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை திணிக்கின்றனர். சுதந்திரம் கொடுக்க வேண்டும் ஆனால் அது பதினைந்து வயது வரை அவர்களை நெறிப் படுத்திய பிறகு பதினாறு வயது முதல் கொடுக்க வேண்டும். அதைத் தான் சாணக்கியரும் கூறியுள்ளார். பதினாறு வயதுக்கு பின் பெற்றோர் குழந்தைகளை நண்பர்களாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். சாணக்கியர் கூறியுள்ள மேலாண்மை போதனைகளை பல இடங்களில் கோடிட்டுக் காட்டும் பலர் அவரின் இந்த போதனைகளையும் பெரிதாக கருதி அவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்த முயற்சித்தால் நமது எதிர் கால சந்ததிகளும் அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாக அமைய வாய்ப்புள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்குள் நிலவி வரும் மன அழுத்தமென்னும் சொல்லை அவர்களே எரேசர் எனப்படும் அழிப்பான் கொண்டு முற்றிலுமாக அழித்தும்விடுவர்.
போதாக்குறைக்கு இரண்டு வருடங்களாக நிலவிக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றுக் காலம் பிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது எனலாம். அவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை, நண்பர்களுடன் ஓடியாடி விளையாட முடியவில்லை. பாடங்கள் அனைத்தும் கணினி வழியாக நடத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொற்றுக்காலத்துக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றிய விவாதம் ஒன்று காட்சியாக்கப்பட்டிருந்தது. அதில் பிள்ளைகள் ஒரு புறமும், அவர்களின் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறுபுறமும் என்று விறுவிறுப்பாக விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. அதில் பிள்ளைகள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டனர். பெற்றவர்களும் ஆசிரியர்களும் மென்னு முழுங்கி பதிலளித்தனர். இதில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்த ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது என்னவென்றால் அவர்கள் நிகழ்ச்சியில் முன்னாளில் பங்கெடுத்த ஒரு பெண்ணை வரவழைத்து அவரை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த பெண் முன்பு அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட போது படிக்க வசதியின்றி பள்ளிக்கூடம் போக வழியின்றி இருந்ததை கூறியதாகவும் அதைப் பார்த்து பலர் அந்த பெண்ணுக்கு உதவிப் புரிந்ததையும் எடுத்துக்கூறினர். இறுதியில் அந்த பெண்ணிடம், இப்போது குழந்தைகள் இவ்வளவு பிரச்சினைகளை முன் வைக்கின்றனரே இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அந்த பெண் அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து ஒன்றைக் கூறினார். அனைத்து வசதிகளைப் பெற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் ஆதரவும் கிடைத்தும் இவ்வளவு குறைக் கூறுகிறீர்களே! எந்த வசதியுமின்றி குடும்ப பாரமும் சுமந்து சில நல்லுள்ளங்களின் உதவியால் படித்து இப்போது டாக்டராக இருக்கிறேன். ஆக படிப்பதற்கு எதுவுமே தடையில்லை. படிக்க வேண்டும் என்ற திடமான மனமிருந்தால் போதும் எந்த சூழ்நிலையும் நம்மை பாதிக்காது என்று கூறியதும் என்னை அறியாமல் என்னை கை தட்ட வைத்து சபாஷ் போட வைத்தது. ஆம் பெறியவர்கள் இந்த தொற்றுக் காலத்தை பெரிதாக பேச பேச அதைக் கேட்கும் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுகின்றனர். பெருந்தொற்றுக்காலம் பல இன்னல்களை அனைவருக்கும் அளித்துள்ளது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை தான் ஆனால் அதை ஏன் நாம் குழந்தைகள் முன் பேசி பேசி பெரிதாக்கி அவர்களை பாதிப்படைய செய்ய வேண்டும்? இதுவும் ஒரு வகையான மன அழுத்ததை பிள்ளைகளுக்கு பெரியவர்கள் கொடுப்பதாகும்.
மன அழுத்தம் என்பது இருந்துள்ளது, இருக்கின்றது, இருக்கப் போகிறது. இதில் எந்த வித மாற்றமும் இல்லை. அதை நாம் கையாண்டோம், கையாள்கிறோம், இனி கையாளவும் போகிறோம் என்பதிலும் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் எவ்வாறு கையாளப் போகிறோம் கடந்த காலத்தைப் போலவா அல்லது நிகழ்காலத்தில் அதாவது தற்போது கையாள்கிறோம் என்று கூறி ஏதேதோ செய்து வருகிறோமே அதைப் போலவா இல்லை வேறு ஏதாவது வழியிலா? கடந்த காலத்தை பின்பற்றலாமென்றால் பழையப் பஞ்சாங்கம், பின் தங்கிய சிந்தனை என்றெல்லாம் முத்திரை குத்தப்படும். ஆனால் “ஓல்டு இஸ் கோல்டு” என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
“அவங்களே வைப்பாங்களாம் அவங்களே எடுப்பாங்களாம்” என்ற நகைச்சுவை வசனத்துக்கு ஏற்றார் போல அனாவசியமாக பெரியவர்களே மன அழுத்தம் என்ற வார்த்தையை பிள்ளைகளுக்கு முன் கூறுவார்களாம் பிறகு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் அதிகமாகி வருகிறது என்று கூறி கூறி அதை பிஞ்சுப் பிள்ளைகள் மனதில் விதைப்பார்களாம். அதன் பின் அதை சரி செய்ய மருத்துவர்களிடம் செல்வார்களாம்!! குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களை சிறு வயதிலேயே பெரியவர்கள் போல் நடத்தி அவர்களின் குழந்தைத்தனத்தை தொலைக்கச் செய்திடாதீர்கள். அவர்களே நினைத்தாலும் மீண்டும் அந்த பருவம் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. குழந்தைகளை குழந்தைகளாகவும், நண்பர்களாகவும், பெரியவர்களாகவும் நடத்த அதற்கான காலமும் நேரமும் இருக்கிறது. அது படி பெரியவர்கள் நடந்துக் கொண்டு குழந்தைகளையும் சரிவர நடக்கச்செய்து நமது எதிர்கால சந்ததியினரை நல்வாழ்வு வாழச் செய்திடுவோம். அவர்களின் உலகை சுபீட்சமாக்கிட பெரியவர்கள் ஏன் அதற்கான சரியான புள்ளிகளை சரியான விதத்தில் இணைக்க ஆரம்பிக்கக் கூடாது!
பின் குறிப்பு:- இங்கு கண்டிப்பு என்றால் அடி உதை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை ஏதுமின்றியும் கண்டிப்பை வெளிப்படுத்தலாம். பிள்ளைகளை நெறிப்படுத்தலாம்.
சக்தியும் விஷாலும் வெகுநேரம் கைபேசியில் பேசிவிட்டு உறங்குவதற்கு பன்னிரெண்டு மணி ஆனதால் மறுநாள் காலை விடிந்தும் சக்தி எழாமல் உறங்கிக்கொண்டே இருந்தாள். ப்ளூ வழக்கம் போல சக்தியின் அருகே வந்து அவளை எழுப்பியது. சக்தியும் வழக்கம் போல டூ மினிட்ஸ் டைம் கேட்டாள். சரியாக இரண்டு நிமிடங்களானதும் ப்ளூ அவளை எழுப்பியது அதற்கு சக்தி
“என்ன ப்ளூ! இப்படி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க! நிம்மதியா தூங்க விட மாட்டேங்கறயே!”
“தீ டைம் என்ன ஆச்சு தெரியுமா?”
“என்ன ஆச்சு?”
“மணி இப்போ ஏழாச்சு”
“என்னது ஏழாச்சா! அய்யயோ ப்ளூ! ஏன் முன்னாடியே என்ன எழுப்பல?”
“ம்…ஹும்…சொல்ல மாட்ட! உன்ன ஆறு மணிலேந்து எழுப்பிவிட்டுட்டே இருக்கேன். ஆமாம் அது எப்படி உனக்கு தெரியும்! நீ தான் டூ மினிட்ஸ் டூ மினிட்ஸ்ன்னு ஒரு மணி நேரமா தூங்கறயே!”
“ம்…சரி சரி நகரு நகரு. நான் போய் சீக்கிரம் ரெடி ஆகணும்.”
“ம்…ம்…போ போ. இதோ நான் நகர்ந்துக்கிட்டேன். இல்லாட்டி அன்னைக்கு மாதிரியே என்னை தள்ளிவிட்டுட்டு போயிடவ. நான் போய் என் வேலையைப் பார்க்கட்டும்”
என்று சக்தி குளித்து தயாராகிக்கொண்டிருந்த வேலையில் ப்ளூ வீட்டை சுத்தம் செய்து. அடுப்படியில் சக்தி காபி போடுவதற்கும், ப்ரெட் டோஸ்ட் பண்ணுவதற்கும் எல்லாத்தையும் மேடையில் எடுத்து வைத்தது. சக்தி வந்தாள் காபி போட்டுக்கொண்டு இரண்டு பிரட் துண்டுகளை அப்படியோ எடுத்து உண்ணலானாள். அதைப் பார்த்த ப்ளூ அவளிடம்
“ஏய் தீ. ஏன் பிரட்ட டோஸ்ட் பண்ணாம அப்படியே சாப்பிடற?”
ஆஃபீஸுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது காரிலிருந்தே சக்தி தன் பெற்றோரிடம் மாலை விஷாலுடன் பேச முடியுமா இல்லை அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்பதை வீடியோ கால் போட்டு கேட்டு அதற்கு அவர்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டாள். பின் தன் காரை ஆஃபீஸ் பார்க்கிங்கில் நிப்பாட்டிவிட்டு நேராக மீட்டிங் ரூமிற்குள் சென்றாள்.
பாரிஸிலிருந்து புறப்படுவதற்கு முன் விஷால் தன் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறி மாலை சக்தியுடன் பேச விருப்பமா என்று கேட்டு அதற்கான சம்மதத்தையும் பெற்று அங்கிருந்தே சக்தி இருக்கும் ஊரான மெட்ஸ் சென்றிட காரில் புறப்பட்டான்.
சக்திக்கு அன்று என்னவோ மீட்டிங் ரொம்ப நேரம் நடப்பதைப் போலவும், நேரம் போகாததுப் போலவும் இருந்ததில் அடிக்கடி தன் கைகடிகாரத்தைப் பார்த்தபடியே மீட்டிங் அட்டென்ட் செய்துக் கொண்டிருந்தவளை கவனித்த அந்த எம்.என்.எம் கம்பெனி காரர் ஒருவர் சக்தியிடம்,
“என்ன தீ? உங்களுக்கு வேற ஏதாவது முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கா?”
“நோ நோ நாட் அட் ஆல். இன்னைக்கு ஸ்லாட் உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கேன். ஏன் அப்படி கேட்கறீங்க?”
“இல்ல நீங்க அடிக்கடி டைம் பார்க்கறதால உங்களுக்கு வேற ஏதாவது மீட்டிங்குக்கு நேரமாச்சோன்னு நான் நினைச்சுக்கிட்டேன். ஐ ஆம் சாரி. அப்படியே இருந்தாலும் நோ பிராப்ளம் நீங்க அதை முடிச்சுட்டே வாங்க. நாங்க வெயிட் பண்ணறோம்.”
என்று கூறி அன்று நடந்த அந்த இரண்டரை மணி நேர மீட்டிங் முடிந்ததும் மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை என்று காட்டியது இதயவடிவிலான கைகடிகாரம். நேரகா பேன்ட்ரீ சென்று ஒரு டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று இரண்டு பிஸ்கட்டுடன் அந்த டீயைக் குடித்து முடித்ததும் அவளின் அசிஸ்டன்ட்டாக பணி புரியும் ருத்ரா அவளிடம் வந்து
“ஹாய் தீ. அடுத்தது நம்ம ரெகுலர் டீம் மீட் பதினோரு மணிக்கு இருக்கு. உனக்கு ஞாபகப் படுத்த தான் வந்தேன்.”
“ஓகே ருத்ரா. மெயினா எதைப்பத்தி இந்த மீட்?”
“அது தான் உனக்கு நான் ஈமெயில் அனுப்பிருக்கேனே தீ. இட்ஸ் பேஸிக்கலி நம்ம புது ரோபோ ஒண்ணை உருவாக்கிக்கிட்டிருக்கோமே அதைப் பத்தின மீட்டிங் தான் தீ. டீட்டேயில்ஸ் எல்லாம் உன் ஈமெயில்ல இருக்கு.”
“ம்…ஆங்.. எஸ் எஸ்…இருக்கு இருக்கு. சாரி நான் தான் கவனிக்கலை. ஓகே இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு. நான் வந்துடறேன். நீ எல்லாரையும் கொஞ்சம் சீக்கிரம் அங்க அஸம்பிள் பண்ண சொல்லு ருத்ரா.”
“ஷுவர் தீ. நான் எல்லாரையும் இப்பவே போய் இருக்கச் சொல்லிடறேன். தீ கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்”
“என்ன ருத்ரா?”
“முந்தாநாள் நீ உன் பிரெண்ட் யாரோ விஷாலைப் பார்க்க போறேன்னு சொல்லிட்டுப் போன! ஆனா உன் அம்மா எனக்கு ஃபோன் பண்ணி நீ எங்கன்னு கேட்டாங்க. அப்படி எங்க போயிருந்த தீ?”
“அதெல்லாம் என் பேரன்ட்ஸ் கூட பேசி சார்ட் அவுட் பண்ணியாச்சு ருத்ரா. மறுபடியும் ஆரம்பத்துலேந்து சொல்ல எனக்கு இப்போ டைம் இல்ல. ஸோ அப்புறமா ஒரு நாள் உனக்கு நான் விவரமா சொல்லறேன். சரியா. இப்போ நீ போய் எல்லாரையும் நம்ம டீம்மீட்டுக்கு வரச்சொல்லு. நான் ஒரு பன்னிரண்டரை மணிக்கு வெளில போகணும். இன்னைக்கு நான் ஹாஃப் டே லீவ். ஸோ எதுவா இருந்தாலும் நாளைக்கு மார்னிங் தான் இனி. ஓகே.”
“ம்…ஓகே தீ. நீ சரியா பதினோரு மணிக்கு மீட்டிங் ரூமுக்கு வந்துடு. நான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கறேன்”
“ம்…ம்…சீக்கிரம் ருத்ரா. இட்ஸ் ஆல் ரெடி டென் பிஃப்டி ஆச்சு. கோ கோ. நானும் உன் பின்னாடியே வரேன் நீ போயிட்டே இரு.”
என்று கூறிக்கொண்டே எழுந்து மீட்டிங் ரூமை நோக்கிச் சென்றாள் சக்தி. ருத்ரா அவளிடம் கூறியது போலவே அனைவரையும் அங்கு வரவைத்திருந்தாள். அனைவருமாக அவரகளின் புதிய ப்ராஜெக்ட் ஒரு ரோபோவைப் பற்றிய தீவிரமான கலந்துரையாடலில் இறங்கினர். சக்தியின் மனம் முழுவதும் விஷாலை இந்த முறை ஏமாற்றமடையச் செய்திடக் கூடாது என்ற ஒரே எண்ணம் தான் ஓடியது. நேரம் கிடுகிடுவென பறந்ததை கவனித்துக் கொண்டேயிருந்த சக்தி மணி பன்னிரெண்டரை ஆனதும் சட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.
“ஓகே! எல்லாருக்கும் நன்றி. இந்த மீட்டிங் நாளையும் தொடரும். இப்போது எல்லாரும் அவங்க அவங்க ஸீட்டுக்கு போகலாம்.”
“மிஸ்டர் டானி இட்ஸ் ஓகே. நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன் இல்லையா. அப்படின்னா நான் பார்த்துப்பேன். நீங்க கவலைப் பட வேண்டாம். நாளை இதுக்கு ஒரு சல்யூஷனை நான் யோசிச்சு சொல்லறேன். நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதாவது வழியை யோசிச்சு வையுங்க. இட்ஸ் டைம் ஃபார் மீ டூ லீவ்.”
என்று பிரச்சினை என்னவென்று சரியாக அறிந்துக் கொள்ளாததைப் போல தனது டீமை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி ரெஸ்டாரன்ட்டுக்கு தன் காரில் சென்றாள் சக்தி. ஆனால் கார் ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது அவள் மனதிற்குள் அன்று நடந்த கலந்துரையாடலும் அதில் அவர்கள் கூறிய பிரச்சினைகளுமாக இரு அணிகளாக பிரிந்து ஒன்றோடொன்று வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தது. அதன் முடிவு தெரிய வேண்டிய நேரம் வந்ததும் சக்தியின் கார் ரெஸ்டாரன்ட் கார் பார்க்கிங்கில் நின்றது. அதிலிருந்து இறங்கி காரை லாக் செய்தபின் ரெஸ்டாரன்ட்டை நோக்கி நடந்துக் கொண்டே தனது ப்ராஜெக்ட் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துக் கொண்டே ரெஸ்டாரன்ட் கதவைத் திறந்தவளிடம்
“வெல்கம் மிஸ் சக்தி”
என்று புன்னைத்துக் கொண்டே சக்தியை வரவேற்றார் மிஸ்டர் வில்லியம். அவரின் குரல் கேட்டதும் அவளுள் நடந்துக்கொண்டிருந்த வாக்குவாதம் அதற்கான தீர்வைத் தேடும் மனம் என்று எல்லாம் அப்படியே உறைந்துப் போனது. அவளும் முகமலர்ச்சியுடன்
“ஹாய் மிஸ்டர் வில்லியம்.”
என்று கூறினாள். அவளின் கண்கள் விஷாலைத் தேடியது. அதை கவனித்த மிஸ்டர் வில்லியம்
“என்ன மிஸ் சக்தி நீங்க யாரையோ தேடுவது போல தெரியுதே!”
“எஸ் எஸ் மிஸ்டர் வில்லியம். அன்னைக்கு வந்தார் இல்லையா விஷால். அவரைத் தான் தேடுறேன்.”
“அவர் வந்து பத்து நிமிஷமாச்சு மேடம். அதோ அந்த கடைசி டேபிள்ல உட்கார்ந்திருக்கார் பாருங்க. எக்ஸ்க்யூஸ்மி மேடம். அங்க என்னை கூப்பிடறாங்க நான் போயிட்டு வரேன்.”
“ஓ ! ஷுவர் யூ கேரி ஆன்.”
என்று சக்தி கூறியதும் வில்லியம் அங்கிருந்து அவரை அழைத்த டேபிளுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அன்று மத்திய சாப்பாட்டு நேரமென்பதால் அவர் ரெஸ்டாரன்ட்டில் கூட்டமிருந்தது. சக்தி நேராக விஷால் அமர்ந்திருந்த டேபிளை நோக்கிச் சென்றாள். விஷால் மற்ற பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்ததில் சக்தி வருவதை பார்க்கவில்லை. அவன் அவனின் கைபேசியில் ஏதோ டைப் செய்துக் கொண்டிருந்தான். சக்தி அவனருகே சென்றதும்.
“பூம்….ஹாய் வி. சாரி ஆம் ஐ லேட்”
“நோ நோ. நீ கரெக்ட்டா ஒன்றரை மணிக்கு தான் வந்திருக்க. நான் தான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன். இன்னைக்கு அவ்வளவா டிராஃப்பிக் இருக்கலையா அதுதான் வந்துட்டேன். வா வா உட்காரு தீ. என்ன சாப்பிடற?”
“ம்…இன்னைக்கு உன்னோட விருப்பம் வி.”
“ஓகே தென் நானே ஆர்டர் பண்ணறேன்”
என்று இருவரும் மத்திய உணவை உண்டுக் கொண்டே
“தீ அந்த ப்ளட் ரிப்போர்ட் எடுத்துட்டு வந்திருக்க இல்ல…”
“ஆங் கொண்டு வந்திருக்கேன் வி என் பையில இருக்கு… ஓ ஓ !”
“என்ன ஆச்சு தீ?”
“ஏதோ ஒரு ஞாபகத்துல என் பையை கார்லயே விட்டுட்டு வந்துட்டேன் வி.”
“எல்லாம் சரி தான். ஆனா போலீஸ் எல்லாம் தேனவையா வி?”
“என்ன பேசுற தீ? உனக்கு ஒண்ணும் ஆகலை சரி. சப்போஸ் உன் பேரன்ட்ஸ் சொன்னா மாதிரி ஏதாவது ஆகிருந்தா? ஸோ போலீஸ் கிட்ட ஒரு கம்பிளையின்ட் கொடுத்து வைக்கறது நல்லதுன்னு எனக்கு தோனுது. மத்தது உன் விருப்பம்.”
“சரி…போகலாம்.”
“ம்.. சரி உனக்கு வேற ஏதாவது இன்னும் வேணுமா?”
“இல்ல வி”
“ஏதாவது டிஸர்ட் வேண்டாமா?”
“இல்லப்பா. எனக்கு டம்மி ஃபுல். நீ வேணும்னா வாங்கி சாப்பிடு வி”
என்று சாப்பிட்டதற்கான பில்லை செட்டில் செய்து விட்டு இருவரும் கார் பார்க்கிங் வந்ததும் விஷாலும் சக்திக் காரிலேயே வருவதாக கூறினான். அதற்கு சக்தி
“வி நாம போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அப்படியே என் வீட்டுக்கு போகப்போறோம். உன் கார் இங்கேயே அது வரைக்கும் நிக்கலாமா?”
“பரவாயில்ல தீ. இங்கேயே இருக்கட்டும். நாம உங்க வீட்டுக்கு போயிட்டு அதுக்கப்புறமா நான் பாரிஸுக்கு புறப்படும்போது நீ வந்து என்னை இங்கேயே டிராப் பண்ணு. அதுவுமில்லாம உன் காரை பார்க்கணும்னு போலீஸ் சொல்லுவா. ஸோ நாம உன் காருலேயே போகலாம்.”
“ஓகே வி”
என்று இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காரை நிப்பாட்டிவிட்டு ஸ்டேஷனுள் சென்றனர். உள்ளே சென்றதும் அங்கிருக்கும் மேலதிகாரியைப் பார்க்க வேண்டுமென்று விஷால் சொன்னதும் அங்கிருந்த இருவர் அவர்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டினர். விஷால் முன்னே சென்று அந்த மேலதிகாரியின் அறைக் கதவைத் தட்டினான். அவன் பின்னாலேயே சென்றாள் சக்தி. உள்ளேயிருந்து ஒரு கனத்தக் குரல்
“ம்..கம் இன்.”
என்றது. உடனே இருவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த அந்த மேலதிகாரி தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக அவர்களிடம் வந்து…
“ஹாய் விஷால். எங்க இவ்வளவு தூரம்? நீ பாரிஸ் ல இல்ல இருக்க!”
“ஹல்லோ ஜேம்ஸ்! நீ எங்க இங்க?”
“நான் தான்ப்பா இங்க எல்லாமே.”
“ஓ ! நீ காலேஜ் ல சொன்னா மாதிரியே போலீஸ் அதிகாரியாகிட்ட. க்ரேட் டா. ஓ சாரி க்ரேட் சார்”
“ஏய் பார்த்தயா. நீ என்னை டான்னு சொன்னாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன். ஓகே…அதெல்லாம் இருக்கட்டும்… யாரு இந்த பொண்ணு?”
“ஓ! பார்த்தயா உன்ன பார்த்ததுல இன்ட்ரொடியூஸ் பண்ண மறந்துட்டேன். ஐ ஆம் சாரி”
“எனக்கெதுக்கு சாரி எல்லாம்.”
“அடேய் இது உனக்கு சொல்லலை என் சக்திக்கு சொன்னது டா”
“ஓ அவங்க பேரு சக்தி யா?”
“ஆமாம் ஜேம்ஸ். சக்தி இவன் தான் ஜேம்ஸ். என்னோட அன்டர்கிராட் காலேஜ்ல கிரிமினாலஜி படிச்சான். அப்பவே போலீஸா தான் ஆவேன்னு சொல்லிட்டிருப்பான். அதே மாதிரி போலீஸாகிட்டான்.”
“ஹாய் மிஸ்டர் ஜேம்ஸ்”
” மிஸ்டர் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ். நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் சக்தி.”
“ஓ! ஷுவர் ஜேம்ஸ். ஆமாம் வி நீ படிச்சது…ஆனா இவர் கிரிமினாலஜி… எப்படி உங்களுக்குள்ள…”
“பிரெண்ட்ஷிப் ஆச்சுன்னு தானே கேட்க வர. அது நாங்க ரெண்டு பேருமே காலேஜ்ல டென்னிஸ் ப்ளேயர்ஸ். அப்படி தான் எங்களுக்குள்ள பிரெண்ட்ஷிப் டெவலப் ஆச்சு. இப்போ புரிஞ்சுதா தீ?”
“ஆங். புரிஞ்சுது வி”
“தீ…வி…ஆஹா ஆஹா என்னப்பா ஒரு எழுத்துல பெயரை சுருக்கி கூப்பிட்டுக்கிறீங்க? என்ன லவ் பண்ணறேங்களா?”
“அச்சோ ஜேம்ஸ் அந்த கதையை உனக்கு அப்புறமா சொல்லறேன். அது ஒரு பெரிய கதை.”
“ம்…சரி சரி. காபி எடுத்துக்கோங்க. இப்போ என்ன இங்க வந்திருக்கீங்க? எனி பிராப்ளம்?”
“ஆமாம் ஜேம்ஸ். நாங்க ஒரு கம்பிளேண்ட் குடுக்க தான் வந்திருக்கோம்.”
“அப்படியா என்ன ஆச்சு? யார் மேல கம்பிளேண்ட்?”
“என்ன ஆச்சுன்னு தீ சொல்லுவா. ஆனா யாருன்னு எங்களுக்கே தெரியலை”
“என்ன சொல்லுற விஷால்?”
“ஆமாம் ஜேம்ஸ். தீ க்கு நடந்தது எதுக்கு? ஏன்? யாரால? எப்படி? அப்படின்னு எந்த கேள்விகளுக்கும் எங்ககிட்ட பதிலில்லடா.”
“ஓகே சக்தி நீங்க சொல்லுங்க. என்ன நடந்தது?”
சக்தி ஜேம்ஸிடம் நடந்ததை அப்படியே கூறி முடித்ததும் அதை கேட்ட ஜேம்ஸ்
“ம்…இன்ட்ரஸ்டிங். அது எப்படி நீங்க பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல அதே எடுத்துல இருந்தும் போலீஸ் கண்ணுல படல? அதுக்கு சான்ஸே இல்லையே. அப்படின்னா நீங்க… ஐ மீன் உங்க காரும் நீங்களும் அங்க இருக்கலன்னு தான் அர்த்தம்.”
“இல்லையே நான் கண் முழிச்சுப் பார்த்தப்போ அதே இடத்துல…நான் எப்படி டிரைவர் சீட்டுல உட்கார்ந்திருந்தேனோ அப்படியே தானே இருந்தேன்.”
“இருங்க சக்தி. நான் இன்னும் என்னோட யூகத்தை முழுசா சொல்லலையே!”
“ஓ சாரி. யூ கன்டின்யூ.”
“அப்படி போயிட்டு காலையில உங்களுக்கு மயக்கம் தெளியப் போற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி மறுபடியும் அங்கேயே கொண்டு வந்து வச்சிருக்கக் கூடாது?”
“எப்படிடா ஜேம்ஸ் இப்படி எல்லாம் உன்னால யோசிக்க முடியுது? அப்படியே செஞ்சிருந்தாலும் எதுக்காக செஞ்சாங்க? யாரு செஞ்சாங்க?”
“அப்படி தான் நடந்திருக்கணும்னு நான் சொல்ல வரல. ஆனா அப்படி நடந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஏன்னா எங்க போலீஸ் பெட்ரோலிங் அன்ட் டிராஃபிக் போலீஸ் பெட்ரோலிங் இதுலேந்தெல்லாம் ரோட்டோரமா காருக்குள்ள நீங்க மயங்கிக் கிடந்தது தப்பிருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா அவ்வளவு நேரமெல்லாம் ஒரு கார் அப்படி நிக்குதுன்னா உடனே அது எங்க பார்வைக்கு வந்திருக்கும். இதுல வேற ஏதோ இருக்கு.”
“ஜேம்ஸ் நானும் தீ யும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”
“ஓ சுப்பர். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி தான். எப்போ கல்யாணம்?”
“அதெல்லாம் இன்னும் டிசைட் பண்ணல. அதுனால நீ கொஞ்சம் இந்த மேட்டரை அன்அஃபிஷியலா டீல் பண்ணி என்ன ஏதுன்னு கண்டுபிடிச்சு சொல்லறயா?”
“இங்க வந்ததுக்கப்புறமா தானே நான் உன் பிரெண்டுன்னு உனக்கு தெரிய வந்துது. சப்போஸ் இந்த இடத்துல என்ன தவிர வேற யாராவது இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப விஷால்?”
“அவர்கிட்டேயும் இதே போல ரிக்குவஸ்ட் பண்ணிருப்பேன் ஜேம்ஸ்.”
“சரி சரி நான் சும்மா தான கேட்டேன். டோன்ட் வரி. நான் பார்த்துக்கறேன். மொதல்ல அந்த ஏரியா சிசிடிவி எல்லாத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லி பார்க்கறேன். அதுக்கு எப்படியும் நாளைக்கு காலையில ஆயிடும். அதைப் பார்த்தா விஷயம் தெரிஞ்சுடும்ன்னு நினைக்கறேன். பார்ப்போம். எதுக்கு நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஒரு பதினொரு மணி போல வாங்க. என்ன நடந்திருக்கும்னு சொல்லறேன். பை தி பை சக்தி உங்க காரோட டீட்டெயில்ஸ் அன்ட் நீங்க எப்போ ஆஃபீஸ்லேந்து கிளம்பினீங்க எங்க வண்டியை நிறுத்தினீங்க அப்படீங்கற எல்லா டீட்டெயில்ஸையும் இந்த பேப்பர்ல எழுதித் தாங்க.”
“ஓகே. ஷுவர் ஜேம்ஸ்.”
என்று ஜேம்ஸ் கேட்ட அனைத்து விவரங்களையும் அவன் கொடுத்த பேப்பரில் எழுதிக்கொடுத்தாள் சக்தி. அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜேம்ஸ்
“ஓகே ஜேம்ஸ். அப்போ நாங்க கிளம்பறோம் டா. நாளைக்கு சந்திப்போம். ஏற்கனவே உன்னோட அஃபிஷியல் நேரத்துல வந்து ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டோம். ஈவ்னிங் மீட் பண்ணலாமா?”
“ஓ ஷுவர் விஷால். ஈவ்னிங் ஒரு ஏழு மணிக்கு?”
“இல்ல இல்ல எங்களுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. ஹவ் அபௌட் ஒன்பது மணி? அட் லீ கார்னர் காஃபி ஷாப்?”
“ஓகே டன். அப்போ ஒன்பது மணிக்கு லீ கார்னர் ல மீட் பண்ணுவோம்.”
உலகின் அனைத்து வளர்ச்சிகளிலுமே முதன்மையாக இருக்க முயன்று அதை சாத்தியமாக்கிக் கொண்டு உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்து வரும் அமீரகத்தின் அடுத்த பிரம்மாண்டம் தான் எக்ஸ்போ 2020. அப்படி என்றால் என்ன? எதற்காக இந்த ஏற்பாடு? இதில் என்ன இருக்கிறது? போன்ற கேள்விகளின் பதிலாக எனது பார்வை வழியாக உங்களை அழைத்து சென்று நீங்களும் அறிந்துக் கொள்ளவே இந்த பதிவு.
கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் பல நாடுகளில் உள்ள மனிதர்களின் பல கண்டுபிடிப்புகள், சாதனைகள், திறமைகள் ஆகியவற்றின் வரலாற்று பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பல அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதுமைகளின் மாதிரியாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்கள் ஓரிடத்தில் அவரவர் நாடுகளின் கலை, கலாச்சாரம், புவியியல் ஆகியவற்றை பறைசாற்றும் வகையிலும், அதை அனைவரும் கண்டு களிக்கவும், அறிந்து கொள்ளவுமே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
உலக நாடுகளின் வரலாற்றை புரட்டி எதிர்காலத்திற்கு வண்ணம் தீட்டி நிகழ்காலத்தில் நமது கண்களுக்கு காட்சியாக்கி தந்துள்ளனர்!
என்று கூறுவது மிகையாகாது. இந்த நிகழ்வை பல நாடுகள் நன்றாக உபயோகித்துக் கொண்டு தங்கள் நாட்டின் அருமை பெருமைகளையும், எப்படி இருந்த நாங்க இப்போ எப்படி இருக்கோம் என்றும், இனி எப்படி இருக்கப் போகிறோம் பாருங்க என்றும் பல வகையான தொழில்நுட்பங்களால் நம்மை சபாஷ் போட வைத்துள்ளனர்.
எக்ஸ்போ 2020 என்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வு துபாயின் தெற்கு மாவட்டத்தில் 4.38 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. எதிர்கால சந்ததியினரும் அனைத்து இயற்கை வளங்களையும் அனுபவிக்க வேண்டி நிகழ்காலத்து மக்கள் எவ்வாறு அவற்றை உபயோகிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பேண்தகுநிலை (sustainability), அறிவு, சிந்தனை,எண்ணங்கள் ஆகியவற்றின் நகர் திறன் (mobility) மற்றும் நமது ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலும் ஏதாவது ஒரு வகையான சிற்றலை விளைவை உருவாக்கக் கூடியது தான். அது போல கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறப்பு உண்டாக்கும் வகையில் வாய்ப்பு (opportunity) என மூன்று காட்சிக் கூடங்களின்(pavillions) கீழ் 192 நாடுகள் பங்கெடுத்துக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்வு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கியது. இது மார்ச் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை நடக்கவுள்ளது. வார நாட்களில் காலை பத்து மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் காலை பத்து மணி முதல் விடியற்காலை இரண்டு மணி வரை மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் நுழைவு சீட்டு ஜூலை மாதம் 2021 முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. single entry tickets எனப்படும் ஒரு முறை நுழைவு சீட்டு, six months pass எனப்படும் ஆறு மாதத்திற்கான பாஸ், monthly pass ஒரு மாதத்திற்கான பாஸ் என பலவகையான நுழைவு சீட்டுகள் உள்ளன. இங்கு சீனியர் சிடிசன்ஸ், மாணவர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம். உள்ளே நுழைய அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
வேலை நிமித்தம் வார நாட்களில் எங்களால் சென்று பார்க்க முடியாது. ஆகையால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே நாங்கள் சென்று வர முடியும் என்பதாலும் ஓரிரு நாட்களில் அல்லது ஒரிரு மாத காலத்தில் 192 பெவிலியன்களையும் கண்டிட முடியாது என்பதாலும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்து வரும்படியான ஆறு மாத கால பாஸ் வாங்கி வைத்துக் கொண்டோம். ஒரு நாள் கட்டணம் திர்ஹாம் 45, ஒரு மாத பாஸ் திர்ஹாம் 95, ஆறு மாத பாஸ் திர்ஹாம் 495 ஆக இருந்தது. தற்போது எக்ஸ்போ முடியும் தருவாயில் உள்ளதால் திர்ஹாம் 50 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சென்றடைய பல்வேறு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. டாக்ஸிகள், மெட்ரோ, துபாயின் அனைத்து இடங்களில் இருந்தும் இலவச ஏசி பஸ் வசதி ஆகியவை மக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவரவர் வாகனங்களில் சென்றாலும் அதற்கான பார்க்கிங் வசதியும் மிக அருமையாக நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் பார்க்கிங்கிலிருந்து எக்ஸ்போ நுழைவாயில் சென்றிடவும் இலவச ஏசி பஸ் வசதி உள்ளது. ஆகையால் நாம் நமது காரில் சென்று அதை பார்க்கிங்கில் எங்கு நிப்பாட்டினாலும் நாம் நுழைவாயில் வரை நடக்க வேண்டுமே என்ற கவலை வேண்டாம் ஏனெனில் பார்க்கிங்கில் ஆங்காங்கே பஸ் ஸ்டாப் எனப்படும் பஸ் நிற்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நொடிக்கு ஒரு பஸ் என வந்துக் கொண்டேயிருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் ஏறி அமர்ந்தால் ஐந்தே நிமிடத்தில் எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஒரு ஐம்பதடி முன் நம்மை கொண்டு இறக்கிவிடும்.
நேரடியாக நிகழ்விற்கு சென்று நான் கண்ட காட்சிகளையும், அறிந்து கொண்ட விவரங்களையும் எனது புரிதல் மூலம் உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ளும் ஆவலில் இந்த தொகுப்பை பதிவிட்டுள்ளேன். துபாயில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 க்குள் நுழைவோம் வாருங்கள்.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் எளிதாக ஏறி இறங்கி பார்ப்பதற்கான வசதி அனைத்து பஸ்களிலும், அரங்குகளிலும் (Pavillions)அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், பஸ் நிலையம் முதல் நுழைவாயில் வரை அனைத்து இடங்களிலும் பல சானிட்டைசர் ஸ்டான்டுகள் பொருத்தப் பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் பி.சி.ஆர் நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே உள் நுழைய அனுமதி கிடைக்கும். முக கவசம் இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
நாங்கள் முதலில் சஸ்டைநபிலிடி பெவிலியன் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான கார் பார்க்கிங்கிற்குள் நுழைந்தால் அங்கு குறந்தது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் கார்கள் நிற்கூடிய அளவு கடல் போல் விரிந்திருந்தது கார் பார்க்கிங். அதில் காரைப் பார்க் செய்வது கடினமல்ல ஆனால் மீண்டும் நமது காரை எப்படி அடையாளம் கண்டுக் கொள்வது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே காரை பார்க் செய்துவிட்டு ஒரு ஐந்தடி நடந்து பஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கே ஒரு உயரமான அந்த பஸ் ஸ்டாப்பின் எண் எழுதப்பட்ட பலகை இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சென்ற எங்களிடம் அங்கு நின்றுக் கொண்டிருந்த உதவியாளர் அந்த பலகையில் இருக்கும் பார்கோடை எங்கள் மொபைலில் ஸ்கேன் செய்துக் கொள்ளும் படி கூறினார். ஏன்? எதற்காக? என்று கேட்டோம் அதற்கு அவர் “உங்க காரை எங்க பார்க் பண்ணிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? நீங்களே கண்டு பிடிச்சுப்பீங்களா?” னு கேட்டார். உடனே நான் “அதைப் பற்றி தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பார்கோடை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால் எங்கள் கார் நிற்கும் இடத்தை காட்டுமா?” என்று கேட்க அதற்கு அந்த உதவியாளர் “உங்கள் கார் நிற்கும் இடத்தை இது காட்டாது ஆனால் நீங்கள் இந்த பஸ் நிலையத்திலிருந்து ஏறியுள்ளீர்கள் என்பதைக் காட்டும். ஆகையால் நீங்கள் திரும்பி வரும் போது இங்கு தான் இறங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இதை வைத்து உங்கள் கார் இந்த சோனில் தான் வைத்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியப்படுத்தவே இது. உங்கள் கார் எந்த வரிசையில் நிப்பாட்டியுள்ளீர்கள் என்பதை உங்கள் கார் வைத்துள்ள வரிசையின் முடிவில் இதே போல் ஒன்று நிறுவப்பட்டிருக்கும் அதையும் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டால் இந்த கடல் போன்ற கார் பார்க்கிங்கில் உங்கள் காரை கண்டுப்பிடிப்பது எளிதாகிவிடும். ஆகையால் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் கூறியது போலவே இரண்டு பார்கோடுகளையும் ஸ்கேன் செய்துக் கொண்டோம். இந்த சம்பாஷணைகள் நடந்துக்கொண்டிருக்கையில் இரண்டு பஸ்கள் எங்களை கடந்து சென்றன. மூன்றாவதாக வந்த பஸ்ஸில் ஏறியதும் பஸ் ஓட்டுனருக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அமர்ந்தோம். கார் பார்க்கிங் நடுவே வானூர்தி போல சென்று எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஐம்பதடி முன்னிருந்த பஸ் நிலையத்தில் நின்றது. தானியங்கி கதவுகள் திறந்தன பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இறங்கினோம்.
நுழைவாயிலின் இருபுறமும் எக்ஸ்போவில் பங்கெடுத்துக் கொண்டுள்ள நாடுகளின் தேசிய கொடிகள் வானுயர்ந்து பறந்துக்கொண்டிருந்ததைப் பார்த்தால் நம்மை அந்த நாடுகள் வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்பதுப் போலவே எங்களுக்குத் தோன்றியது.
நுழைவாயிலுக்கு வெளியே அதற்கு நேராக பச்சை நிறத்தில் எக்ஸ்போ 2020 என்று பெரிதாக அழகாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் வரிசையாக காத்திருந்தனர். வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நாங்களும் ஐந்தாவதாக வரிசையில் நின்றுக் கொண்டோம். எங்கள் முறை வந்ததும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
எக்ஸ்போவின் நுழைவாயிலை கீழிருந்து மேல் வரைப் பார்த்தால் “ஆ” என்று வாய்பிளக்க செய்யும் விதம் நிறுவப்பட்டிருந்தது. ஆம். பிரம்மாண்டம் நுழைவாயிலில் இருந்தே தொடங்கியது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒன்றல்ல மூன்று பிரம்மாண்டமான நுழைவாயில் மூன்று பெவிலியன்களுக்கும் தனிதனியாக அமைக்கப்பட்டிருந்தது. இதைப் போன்ற நுழைவாயில் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.
21 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நுழைவாயில் சுமார் பதினெட்டு டன் எடையுள்ளதாகும். இது பிரிட்டிஷ் கட்டிட கலைஞர் ஆசிஃப் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை நினைவூட்டும் வகையில் இஸ்லாமியர்களின் மஷ்ரபியா கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு கார்பன் இழைகளால் வடிவியல் துள்ளியத்துடன் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மஷ்ரபியா கட்டிடக்கலையானது வெப்பத்திலிருந்து பாதுக்காப்பதோடு குளிரூட்டும் தன்மை உடையதாகவும் விளங்குகிறது. வெறும் கம்பிகளால் இணைக்கப்பட்ட கூடு போல் இருந்தாலும் இது இங்கு வரும் மக்களுக்கு இந்த அரபு நாட்டு வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான நிழலைத் தருகிறது. நாம் இந்த வாயிலை நடந்து கடந்து செல்லும் போது உற்றுக் கவனித்தோமே என்றால் இரண்டு மற்றும் முப்பரிமான புதிரான வடிவமைப்பின் காரணமாக இதில் எக்ஸ்போ வின் லோகோ வடிவத்தைக் காணமுடிகிறது.
எக்ஸ்போ 2020 லோகோ 4000 வருட பழமையான ஒரு மோதிரத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது 2002 ஆம் ஆண்டு அரபு நாட்டின் அல் மர்மூமில் சாருக் அல் ஹதீத் என்ற தொல்லியல் தளத்திலிருந்து கண்டறியப்பட்டது. இந்த மோதிரம் சாருக் அல் ஹதீத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான வரலாற்றுச் சின்னம் இனி வரப்போகும் வளமையான எதிர்காலத்துக்கான உத்வேகச் சின்னமாக இருக்கிறது. மனங்களை இணைப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பதே இதன் தாரக மந்திரமாகும்.
இந்த லோகோவின் அர்த்தத்தையும் அது உருவான விதத்தையும் மற்றும் பிரம்மாண்டமான இந்த நுழைவாயில் பற்றிய விவரங்களையும் அறிந்துக் கொண்டோம் இனி எக்ஸ்போவினுள் நாம் காண காத்திருக்கும் பல நாடுகளின் பெவிலியன்கள் பற்றி அடுத்து வரவிருக்கும் பதிவில் காண்போம்.
சக்தி கைபேசியில் விஷாலை அழைத்துப் பேசியபோது அவன் பட்டும் படாதது போல பதிலளிக்க அதற்கான காரணத்தை அவளே யூகித்துக்கொண்டு அவனிடம்,
“ஹேய் ‘வி’ ஐ ஆம் சாரி பா. நடந்தது என்னன்னு உனக்கு தெரிஞ்சா நீ இப்படி டல்லா பேச மாட்ட தெரியுமா! உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னா? நான் வராததை பத்தி நீ அவா கிட்ட என்ன சொன்ன? உன்ன அப்படி ஒரு ஸிட்டுவேஷன்ல நிறுத்தினதுக்கு ஐ ஆம் எக்ஸ்ட்ரீமிலி சாரி. எனக்கு புரியுது உன்னோட சங்கடம் ஆனா…”
என்று அவள் சொல்ல முயன்றபோது அவளைத் தொடர விடாது சட்டென்று விஷால் அவளிடம்
“போதும் தீ போதும். இது ஒண்ணும் எனக்கு புதுசில்லையே! ஒரு தடவ இல்ல இது ரெண்டாவது தடவ சொல்லாம கொள்ளாம இருக்கறது. அப்புறம் வந்து சாரி கேட்கறது. இந்த தடவ என்ன ஸ்டோரி சொல்ல போற?”
“பார்த்தயா!! அப்போ நான் வேணுனே அப்படி செய்தேன்னு நீ நெனச்சிருக்க இல்ல? அப்படி நீ நெனச்சாலும் உன்னை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி. ஏன் தெரியுமா? ஏன்னா அந்த ரெண்டு தருணத்திலேயும் தப்பு என் பக்கம் தான். அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா அந்த ரெண்டு சந்தர்ப்பங்கள்லேயும் என்னால எதுவும் பண்ணமுடியாம போச்சு வி. மொதோ தடவ நீ என்ன ப்ரபோஸ் பண்ணின போது என்னோட மறைவுக்கு பின்னால் என்ன நடந்ததுன்னு உன்கிட்ட சொல்லிட்டேன். அதே மாதிரி இந்த தடவ…”
“ம்…சொல்லு அவ கால் பண்ணினா இல்ல இவ கால் பண்ணினா. அதக் காப்பாத்த போனேன்… இதக் காப்பாத்த போனேன்னு எதையாது சொல்லப் போற அதுதானே!”
“இல்ல வி நான் சொல்லறதைக் கேட்கற மனநிலையில நீ இல்ல. ஸோ குட் நைட். நீ இப்போ தூங்கப் போ. நாளைக்கு ஈவ்னிங் பேசலாம். பை.”
“ஏய் தீ என்ன விளையாடறயா? நான் கோபப்படறது தப்பு ஆனா நீ செஞ்சது தப்பில்லையா?”
“அச்சோ! உன் கோபம் நியாயமானது தான்னு தானே நானும் சொல்லறேன். அதே நேரம் அந்த ரெண்டு தடவையும் என் மேல எந்த தப்பும் இல்லன்னும் சொல்லறேன் அவ்வளவு தான். நீ கேட்க ரெடின்னா நான் எக்ஸ்பிளேயின் பண்ணறேன்”
“ம்…சொல்லு கேட்கறேன்.”
“நான் ஆஃபீஸ் மீட்டிங் முடிஞ்சிட்டு அங்கேந்து கிளம்பினேன். உன் வீட்டுக்கு என் காரை டிரைவ் பண்ணிட்டு வந்துட்டிருந்தேன். அப்போ பாதி தூரம் கிராஸ் பண்ணினதும் எனக்கு மயக்கம் வரா மாதிரி இருந்தது…”
“அய்யயோ! அப்புறம் என்ன ஆச்சு தீ?”
“இரு இரு வி. நான் உடனே என் காரை ஹைவே சைட் லேன்ல நிப்பாட்டினேன்.”
“நிப்பாட்டி! டிட் யூ கால் ஃபார் ஹெல்ப்?”
“எங்கேந்து கூப்பிடுவேன்? நான் அப்போ ஆல்ரெடி பாதி மயக்கத்துல இருந்தேன்.”
“சரி கார விட்டு வெளியில வந்திருக்கலாம் இல்ல!”
“வர தோணலை! ஆக்சுவலா வர முடியல.”
“அட்லீஸ்ட் எனக்காவது கால் பண்ணிருக்கலாம் இல்ல! ஒரு ரிங் குடுத்துட்டு விட்டிருந்தா கூட நான் உன்னை ட்ராக் பண்ணி நீ இருந்த இடத்துக்கு வந்திருப்பேனே தீ!”
“எங்க நான் ஆஃபீஸ் மீட்டிங் போது என்னோட மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தேன். அதை சுவிட்ச் ஆன் பண்ண மறந்துட்டேன். அதுவும் எமர்ஜன்சிக்கு கால் பண்ணலாம்னு என் பேக்லேந்து மொபைல எடுக்கும் போது தான் சுவிட்ச் ஆஃப் பண்ணினதே தெரிய வந்துது. அந்த அரை மயக்கத்துலேயும் என் மொபைல சுவிட்ச் ஆன் பண்ணினது நல்லா ஞாபகமிருக்கு… ஆனா எமர்ஜன்சிக்கு கால் பண்ணினேனா இல்லையான்னு எனக்கு சுத்தமா ஞாபகமில்ல. ஏதோ ஒரு பெரிய கண்டேயினர் ல மோதி நின்னா மாதிரி ஒரு ஃபீலிங் இன்னமும் இருக்கு. பட் என் வண்டிக்கு ஒரு சேதமுமில்லை. அதுனால நான் மோதிருக்க மாட்டேன்னு நானா நெனச்சுண்டேன். அப்போ அது ஒரு இல்யூஷனோ என்னவோ தெரியலை வி.”
“ஓ இவ்வளவு நடந்திருக்கா? ஏன் உனக்கு பிசிக்கலி ஏதாவது பிராப்ளம் இருக்கா? ஏன்னா திடீர்னு மயக்கம் வந்திருக்கேன்னு கேட்கறேன். இல்ல இது மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவாவது மயக்கம் வந்திருக்கா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல வி. இதுக்கு முன்னாடி எனக்கு மயக்கமெல்லாம் வந்ததில்லை. இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இது மாதிரி ஆயிருக்கு.”
“அதைக் கேட்டதிலிருந்து தான் எனக்குள்ள பல கேள்விகளும் சந்தேங்கங்களும் அப்படியே கிடு கிடுன்னு வளர ஆரம்பிச்சிருக்கு வி.”
“அப்படி என்ன அந்த டாக்டர் சொன்னா?”
“எனக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்தா. அதுல என்னோட ப்ளட்ல மயக்கமருந்து இருந்தது தெரிய வந்துது.”
“அச்சச்சோ! நீ என்ன சொல்லற தீ?”
“பாரு இதைக் கேட்டதும் உனக்கே இவ்வளவு ஷாக் ஆ இருக்கே வி… அப்போ எனக்கு எப்படி இருக்கும் சொல்லு.”
“இட்ஸ் ஷாக்கிங் டு ஹியர் தீ. அப்படீன்னா… உனக்கு விரோதிங்கன்னு யாராவது? நீ வேலை செய்யற இடத்துல… இல்லாட்டி உன் கம்பெனி காம்படீட்டர்ஸ் யாராவது?”
“எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் யாருமே இல்ல வி. இல்ல அப்படி யாராவது எனக்கே தெரியாமா இருக்காளான்னும் தெரியலை!”
ம்…சரி மயக்கமான! அப்போ எப்ப எப்படி அங்கேந்து வீட்டுக்குப் போன? போலீஸ் வந்திருப்பாளே?
“அது தான் இப்போ எனக்கு இன்னொரு பெரிய குழப்பமா இருக்கு வி”
“எதைச் சொல்லற தீ? எது உனக்கு குழப்பமா இருக்கு?”
“ஆமாம் நான் அந்த ரோட்டோரமா மயக்கமாகி நின்னது மத்தியானம்… ஆனா எனக்கு நெனவு வந்து நான் கண் முழிச்சுப் பார்த்தது இன்னைக்கு விடியற்காலையில தான்… அதுவும் அதே இடத்துல எப்படி என் காரை நிப்பாட்டியிருந்தேனோ அதே மாதிரி என் காரும், அதே மாதிரி நானும் என்னோட ஸீட்ல உட்கார்ந்துண்டிருந்தேன். ஸோ நியர்லீ மோர் தன் டுவல் அவர்ஸ்! அது எப்படி போலீஸுக்கு தெரியாம போச்சுன்னு தான் குழம்பிண்டிருக்கேன்.”
“ம்…தட்ஸ் எ வாலிட் பாயிண்ட் தீ. சரி போலீஸ் கம்பிளைன்ட் குடுத்தியா?”
“என்னன்னு குடுப்பேன் வி?”
“இப்போ என் கிட்ட என்ன சொன்னயோ அதை அப்படியே போலீஸ்கிட்ட சொல்ல வேண்டியது தானே! அவா அந்த ஏரியா சிசிடிவில பார்த்து ஏதாவது சொல்லுவா இல்ல? அத வச்சு நாம ஒரு டிசிஷன் எடுக்கலாம் இல்லையா? இல்ல அட்லீஸ்ட் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கவாவது செய்யலாமே!”
“ம்…அதுவும் சரி தான். ஆனா நான் போய் சொன்னா நம்புவாளா? ஏன்னா அதுக்கப்புறம் ப்ராஸஸ் ரொம்ப இருக்குமேன்னு யோசனையா இருக்கு”
“அதப்பத்தி எல்லாம் கவலைப் படாதே தீ. அதுக்கப்புறம் என்ன ப்ராஸஸாக இருந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன். ஸோ கவலைப் படாம நாளைக்கே போலிஸுல கம்பிளைன்ட் குடு புரிஞ்சுதா?
“சரி உன்கிட்ட அந்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் இருக்குமே!”
“ஆமாம் இருக்கு வி”
“அதை வச்சுகூட நீ போலீஸ் கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாமே தீ!”
“அப்படீங்கற!”
“அட ஆமாம் தீ. நான் வோணும்னா நாளைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா? நாம சேர்ந்து போய் போலீஸ் கம்பிளைன்ட் குடுக்கலாம்.”
“ஷுவர். நிச்சயமா வரேன். நாளைக்கு காலையில ஒரு பதினோரு மணிக்கு உன் வீட்டு வாசல்ல இருப்பேன்.”
“ஓ…ஓ…இல்ல வி. எனக்கு நாளைக்கு ஆஃபீஸ்ல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு. அது இன்னைக்கு இருந்திருக்கணும்… இன்னைக்கு நான் ஆஃபீஸ் போகாததால அதை நாளைக்கு ஷிஃப்ட் பண்ணிருக்கா. ஸோ அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வரதுக்கே பதினொன்னு ஆர் பன்னிரண்டு மணி ஆகிடும்.”
“சரி அப்போ லெட் அஸ் மீட் இன் தி ஆஃப்டர்னூன்.”
“ம்…ஓகே. அப்படீன்னா நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினோமே அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வரயா வி? லெட் அஸ் மீட் தேர் ஃபார் லஞ்ச் அட் 1:30!”
“அப்போ உன் வீட்டுக்கு வரக்கூடாதுங்கற!”
“ச்சே ச்சே! அப்படி இல்ல வி. எப்படியும் லஞ்சுக்கு வெளில தான் போகணும் அதுனால சொன்னேன். இப்போ என்ன லஞ்ச் சாப்டுட்டு நாம போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன்ட் குடுத்துட்டு வீட்டுக்கு போகலாமே. நான் என் ஆஃபீஸ் ல ஹாஃப் டே லீவ் போட்டுடறேன்.”
“ம்…மேடம் நான் ஒரு நாள் லீவ் போட்டுட்டு வரேன்!”
“அதுக்கு தான் நீ வரணுமான்னு கேட்டேன்.”
“சும்மா சொன்னேன் தீ.”
“சரி என் உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னான்னு நீ சொல்லவே இல்லையே வி! ப்ளீஸ்… நான் சாரி சொன்னேன்னு அவாகிட்ட சொல்லிடு.”
“என்னத்த சொல்லுவேன்! நீ வர்க்ல பிசியா இருக்க. அதுனால உன்னால வரமுடியலைன்னு நீ சொன்னதாக அவாகிட்ட சொல்லி… நீ சாரி கேட்டதாகவும் சொன்னேன்”
“ஸோ சுவீட் ஆஃப் யூ வி. அதுக்கு அவா என்ன சொன்னா?”
“அவாளா…! அதுக்கு அவா….”
“ஏன் இழுக்கற வி? என்ன என்னைத் திட்டினாளா! திட்டியிருந்தாலும் தப்பில்ல தான்.”
“உன்ன ஒண்ணும் சொல்லல தீ.”
“அப்புறம்?”
“அவா… கல்யாணத்துக்காவது வந்திடுவாளா இல்ல அன்னைக்கும் உன்ன மேடையில உட்கார வச்சுட்டு வராம இருந்திடுவாளான்னு சொன்னா. நீ கேட்டயேன்னு சொன்னேன். எதுவும் தப்பா எடுத்துக்காத தீ.”
“அவாள நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி. அதே நேரம் என் மேலயும் எந்தவித தப்பும் இல்லங்கறத நீ தான் அவா கிட்ட எடுத்து சொல்லணும். செய்வியா வி?”
“ம்…முதல்ல நானும் உன் மேல சரி கோபத்துல இருந்தேன். இப்போ விவரம் தெரிஞ்சதும் காம் ஆகிட்டேன். அவாளும் இதெல்லாம் தெரிஞ்சா உன்னைப் புரிஞ்சுப்பா”
“அப்படீன்னா நான் உன்கிட்ட சொன்னது அத்தனையும் அவாகிட்ட சொல்லப் போறயா வி”
“ஆமாம் ஏன் அதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணற தீ?”
“இல்ல நான் என் பேரன்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி எதுவுமே சொல்லலை. அதுதான் யோசிக்கறேன்”
“அப்படீன்னா உன் அப்பா அம்மாவுக்கு இங்க உனக்கு நடந்தது எதுவுமே தெரியாதா தீ?”
“இல்ல இல்ல வி… நான் மயக்கமானது வீட்டுக்கு லேட்டா வந்தது எல்லாம் தெரியும். ஆனா எனக்கு யாரோ மயக்கமருந்து குடுத்திருக்கானோ… அதுனால குழப்பத்துல இருக்கேன்னோ சொல்லலை. அதுனால நீ இந்த டாப்பிக்கையே அவாயிட் பண்ணிட்டு பேசாம என் கார் ப்ரேக் டவுன் ஆயிடுத்துன்னு சொல்லிடேன். ஏன்னா அவாளும் இதை எல்லாம் கேட்டுட்டு அப்புறம் பயந்துக்கப் போறா… அதுதான் சொன்னேன்”
“ம்…அதுவும் சரிதான். ஓகே நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன். யூ டோன்ட் வரி தீ”
“என்னத்த சொல்லி சமாளிக்கப் போறேன்னு எனக்கும் சொல்லு வி. அப்பதானே அவா இதப்பத்தி எனக்கிட்ட எப்பவாவது கேட்டுக்கும் போது நானும் அதையே சொல்லமுடியும்.”
“ம்..ம்..நிச்சயமா சொல்லறேன் தீ.”
“ஒண்ணு பண்ணினா என்ன?”
“என்ன தீ?”
“பேசாம நாளைக்கு ஈவ்னிங் என் வீட்டுலேந்து அவாளைக் கால் பண்ணி பேசிட்டா என்ன? அப்படியே என் பேரன்ட்ஸோடயையும் பேசிடலாம். என்ன சொல்லற வி?”
“ம்…நல்ல ஐடியாவா தான் இருக்கு. ஆனா அவா ரெண்டு பேரும் ஃப்ரீயா இருக்கணுமே?”
“நாளைக்கு காலையில ஐ வில் கன்பார்ம் வித் மை பேரன்ட்ஸ். நீ பாரிஸிலிருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே அவாளைக் கால் செஞ்சு கன்பார்ம் பண்ணிக்கோ. சப்போஸ் ரெண்டு பேரு வீட்டுலயும் ஓகே சொல்லிட்டா நாளைக்கே பேசி முடிச்சிடலாம். என்ன சொல்லுற வி”
“ம்…ஓகே டன். நான் அவாகிட்ட கேட்டுட்டு அங்க வந்து என்ன ஏதுங்கறதை நாம மீட் பண்ணும் போது சொல்லறேன். நீயும் அப்போ சொல்லு. சரி சரி மணி பன்னிரண்டு ஆயிடுத்து. இப்போ நீ போய் நிம்மதியா படுத்துத் தூங்கு. நாளைக்கு மத்தியானம் ரெஸ்டாரன்ட்ல சந்திப்போம்.”
வசுந்தரா வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பி குழப்பத்திலேயே சென்ற சக்தி எட்டரை மணிக்கு அவள் வீட்டை சென்றடைந்தாள். காரை தன் வீட்டு பார்க்கிங்கில் நிப்பாட்டி விட்டு மெல்ல யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி நடக்கலானாள். அப்போது பக்கத்து வீட்டு பாட்டி வழக்கம் போல சக்தியிடம்
“ஹாய் தீ. குட் ஈவ்னிங்.”
என்று சொன்னதை கவனிக்காது தன் சிந்தனையில் மூழ்கியப்படி நடந்து வீட்டினுள் சென்றாள் சக்தி. அதைப் பார்த்த பாட்டி தனக்கு தானே
“ஏதாவது பிரச்சினையா இருக்குமோ! இதுவரை தீ இப்படி விஷ் பண்ணாம போனதே இல்லையே! சரி அப்புறமா போய் விசாரிச்சுக்கலாம்.”
என்று தனது சுவடர் பின்னும் வேலையைத் தொடர்ந்தார்.
வீட்டினுள் நுழைந்த சக்தியைப் பார்த்த ப்ளூ அவள் அருகே வந்து
“ஹாய் தீ. வெல்கம் ஹோம். என்ன ஆச்சு இவளுக்கு? நான் விஷ் பண்ணிட்டே இருக்கேன்… கண்டுக்காம அவ பாட்டுக்கு அவ ரூமுக்கு போறா!! தீ…தீ…தீ”
என்று அழைத்துக்கொண்டே ப்ளூ அவள் பின்னால் சென்றது. ஆனால் அவள் அதை கவனிக்காது படார் என்று அவள் அறையின் கதவை சாற்றினாள். அதைப் பார்த்த ப்ளூ மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்து ஒரு மூலையில் நின்றது. அங்கிருந்தே அது அவ்வப்போது சக்தியின் அறைக் கதவு திறக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சக்திக்காக காத்திருந்தது. நேரம் பறந்தது. இரவு பத்து மணியானது. சக்தி அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. ப்ளூவால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் மேலே சென்று அவள் அறைக்கதவை தட்டியது. ஆனால் பயனில்லாது மீண்டும் கீழேயே வந்து நின்றது.
சக்தி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அதனால் கதவு தட்டும் சப்தம் அவளை தொந்தரவு செய்ய முடியவில்லை. ஆனால் அவள் அருகே இருந்த கைபேசி சட்டென்று அலறியதும் விருட்டென்று எழுந்துக்கொண்ட சக்தி தனது கைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவள் பெற்றோரிடமிருந்து ஒரு நாலைந்து மெஸேஜுகள் வந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி
“இப்போ நான் வசு சொன்ன விஷயத்தை அப்பா அம்மாட்ட சொன்னா அவா ரெண்டு பேரும் டென்ஷன் ஆகிடுவா. ஸோ இப்போதைக்கு சொல்ல வேண்டாம். ஐ ஹோப் இட் டஸன்ட் ஹாப்பன் அகேயின். ஓ! ஓ! மணி பத்தாச்சா? என்ன இந்த ப்ளூ டின்னர் சாப்பிட கூப்பிடவேயில்லை? ஓ! நான் தான் வசு வீட்டுலேயே டின்னர் சாப்டுட்டு தானே வந்தேன்! நேத்து காலையில அது செய்த டிஃபனை தானே சாப்டுட்டுப் போனேன்! ஒரு வேளை ப்ளூ எதையாவது…. ச்சே! ச்சே! ச்சே! அது எப்படி செய்யும். அய்யோ சக்தி நீ இத வச்சு உன்னையே நல்லா குழப்பிக்கற! இத மறந்துட்டு பேசாம உன் வேலையைப் பாரு… போ. அச்சோ இது என்ன ‘வி’ கிட்டேந்து இவ்வளவு கால்ஸ் வந்திருக்கே! மறுபடியும் நான் மிஸ் பண்ணிருக்கேன். என்னடி சக்தி நீ? சரி மொதல்ல அப்பா அம்மாக்கு மெஸேஜ் அனுப்பிட்டு அப்புறம் ‘வி’ யை கால் பண்ணி பேசலாம். என்னதிது லைட்டா பசிக்குறா மாதிரி இருக்கே! ஃபர்ஸ்ட் போய் ஏதாவது சாப்பிடலாம்.”
என்று தன் அறைக் கதவைத் திறந்து கையிலிருந்த கைபேசியில் தன் அப்பா அம்மாவுக்கு ப்ளட் டெஸ்ட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தான் நன்றாக இருப்பதாகவும், ப்ளட் ப்ரெஷர் சற்றே குறைந்திருந்ததால் மயக்கம் வந்ததாகும் பயப்பட தேவையில்லை என்றும் ஒரு மெஸேஜை தட்டிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த சக்தியைப் பார்த்ததும் ப்ளூ ஓடி அவளருகே வந்து
“ஹேய் தீ. என்ன ஆச்சு உனக்கு? ஏன் சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் என்ன கண்டுக்காம நீ பாட்டுக்கு உன் ரூமுக்குள்ள போய் கதவை தாப்பா போட்டுகிட்ட? ஏதாவது பிரச்சினையா?”
“உஷ்…அபா… ப்ளூ எவ்வளவு கேள்வி கேட்குற நீ? ஒரு பிரச்சினையும் இல்ல ப்ளூ. நான் நல்லா தான் இருக்கேன். இன்னைக்கு நான் டாக்டர்ட்ட போனேன் இல்ல…”
“ஆமாம் தீ. யாரா இருக்கும்? அதுவும் இந்த நேரத்துல!”
“சரி சரி நீ பேஸ்மென்ட்டுக்கு போ ப்ளூ. நான் யாருன்னு பார்த்துட்டு உன்னை கூப்பிடறேன்.”
“ஓகே தீ.”
என்று ப்ளூவை பேஸ்மென்ட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கதவைத் திறந்தாள் சக்தி.
“ஹாய் தீ. குட் ஈவ்னிங்.”
“ஹாய் மிஸ்ஸர்ஸ் டேவிட். வெரி குட் ஈவ்னிங். வாங்க உள்ள வாங்க.”
“ம்…ம்… எங்க உன் பெஸ்ட்டீ ப்ளூ?”
“ஆங்! அதுக்கு சார்ஜ் இல்லாததால சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கு. நீங்க சொல்லுங்க. உங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு போன கிறிஸ்மஸ்க்கு அப்புறம் இப்ப தான் வறீங்க!”
“ஆமாம் தீ. என்ன பண்ண? இந்த மூட்டு வலி என்னை எங்கேயுமே அசைய விட மாட்டீங்குதே! சரி சரி நான் வந்த விஷயத்தை விட்டுட்டு என் பிரச்சினைப் பத்தி பேசறேன் பாரேன். இன்னைக்கு நான் ராட்டட்டூயிவும், ஸ்பினாச் ஷாஃபுலும் செஞ்சேன். அதுதான் உன் கூடயும் ஷேர் பண்ணிக்கலாமேனு எடுத்துட்டு வந்தேன். இந்தா நீயும் சாப்பிடு.”
“ஓ! ஸோ நைஸ் ஆஃப் யூ. நீங்க சாப்ட்டாச்சா?”
“ம்…ம்… ஒரு போர்ஷன் செஞ்சு நானும் டேவிட்டும் சாப்பிட்டாச்சு. பேட்டர் மீதி இருந்தது ஸோ உனக்கும் ஒரு போர்ஷன் செஞ்சு எடுத்துட்டு வந்தேன். ம்…சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லு தீ”
“ம்…இட்ஸ் டிலீஷியஸ். லவ் யூ மிஸ்ஸர்ஸ் டேவிட். எனக்கு நீங்க என் அம்மா மாதிரி”
“ஓ! தீ. தாங்க்யூ மா. அதெல்லாம் இருக்கட்டும் தீ. உனக்கு ஏதாவது பிரச்சினையா?”
“ம்…ம்… என்ன கேட்டீங்க?”
“உனக்கு ஏதாவது பிரச்சினையா?”
“அப்படி எதுவும் இல்லையே! ஏன் கேட்கறீங்க?”
“இல்ல நீ இதுவரைக்கும் எனக்கு விஷ் பண்ணாம இருந்ததே இல்லை.”
“ஆமாம். மார்னிங் அன்ட் ஈவ்னிங் உங்களைப் பார்த்து விஷ் பண்ணாம நான் இருந்ததில்லை இருக்கவும் மாட்டேன்.”
“இல்ல தீ இன்னைக்கு ஈவினிங் நீ எனக்கு விஷ் பண்ணலை மா. அதுவுமில்லாம நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருந்தா மாதிரி இருந்தது. அது தான் நானே நேர்ல வந்து விசாரிக்கலாம்னு வந்தேன். எனி பிராப்ளம் தீ?”
“ஓ!! ஓ!! நாட் அட் ஆல். நான் நல்லா இருக்கேன். ஈவினிங் கொஞ்சம் தலைவலி அன்ட் தூக்கக் கலக்கமா இருந்தது. அதுதான் உங்களை கவனிச்சிருக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. சாரி”
“ஹேய்! எதுக்கு சாரி எல்லாம் கேட்குற தீ? என்னடா இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு? ஐ வாஸ் வரீடு வெரி மச்.”
“கவலைப் படாதீங்க. நான் நல்லா தான் இருக்கேன். எனக்குன்னு கவலைப்பட என் அப்பா அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான்.”
“சரி தீ. இட்ஸ் ஆல் ரெடி டென் தர்ட்டி ஆயிடுச்சு. டேவிட் வெயிட் பண்ணிட்டிருப்பார். நான் கிளம்பறேன். டேக் கேர். எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். சரியா. வரட்டுமா”
“ம்…வந்துட்டேன் மா. பை தீ. குட் நைட். ஸ்லீப் டைட்”
“குட் நைட் டு யூ டூ மிஸ்ஸர்ஸ் டேவிட்.”
என்று பக்கத்து வீட்டுப் பாட்டிக் கொடுத்த ராட்டட்டூயிவையும் ஸ்பீனாச் ஷாஃபுலயும் முழுவதுமாக ருசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சக்திக்கு அவள் மனதில் திடீரென ஒன்று தோன்றியது
“இதே போல தானே அன்னைக்கு மிஸ்ஸர்ஸ் டேவிட் குக்கீஸ் குடுத்தாங்க! ஒரு வேள அதுவா இருக்குமோ? அது அவங்க அதுக்கு முன்னாடிக்கும் முன்னாடி நாள் தந்தது. ச்சே ச்சே அவங்க ஏன் எனக்கு மயக்கமருந்து குடுக்கணும்? அதுல அவங்களுக்கு என்ன இருக்கு? அய்யோ! இந்த அப்பா அம்மா சொன்னதைக் கேட்டு ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்கப் போயி இப்போ நான் எல்லாரையும் சந்தேகப் பட ஆம்பிச்சுட்டேனே!”
சக்தி இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொள்வதாக எண்ணி சத்தமாக கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டே வந்த ப்ளூ
“என்ன தீ? என்ன சந்தேகம்? எதுக்கு சந்தேகப்படற?”
“ம்…நான் என் மனசுக்குள்ள நெனச்சதை எப்படி நீ சொல்லுற ப்ளூ? இது எப்போலேந்து?”
“ஆமாம் ஆமாம். நீ மனசுக்குள்ள பேசறதா நினைச்சுகிட்டு சத்தமா தான் பேசிட்டிருந்த. அதைக் கேட்டுட்டு தான் சொல்லறேன்.”
“ஓ! ஓ! அது ஒண்ணுமில்ல ப்ளூ நான் இன்னைக்கு வசு கிட்ட போய் ப்ளட் டெஸ்ட் எடுத்தேன் இல்லையா அதுனால வந்த குழப்பம் தான்”
“அதுனால என்ன குழப்பம் தீ?”
“என்னோட ப்ளட்டுல செடட்டிவ் இருந்திருக்கு. அது எனக்கு யார் குடுத்திருப்பா? எப்படி குடுத்திருப்பா? எப்போ? எங்கே? ஏன்? குடுத்திருப்பான்னு எனக்குள்ள ஒரே குழப்பமா இருக்கு.”
“சரி குழப்பத்துல ஏதாவது தெரிய வந்துதா?”
“என்னத்த? நானும் சாயந்தரத்துலேந்து யோசிச்சுப் பார்த்துண்டே தான் இருக்கேன். யாரன்னு நான் சந்தேகப்படறது சொல்லு. குக்கீஸ் குடுத்த பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா? மீட்டிங்ல காஃபி குடுத்த ஆஃபிஸ் பாய் ஆ? கேன்டீன் ல சான்ட்விச் செய்து குடுத்த அந்த ஜானையா? அப்போ அங்க வந்து எனக்கு ஜூஸ் வாங்கித் தந்த ருத்ராவையா? இல்ல என்னைக்குமே இல்லாத அதிசயமா நேத்து எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செய்து தந்த உன்னையா? சொல்லு.”
“அய்யோ தீ! என்னது இது என்னை ஏன் நீ சந்தேகப்படணும்?”
“ஏன் படக்கூடாது ப்ளூ?”
“தீ நீ ஈண்மையாவா கேட்கற? நான் உருவானது உன்னால தீ. நான் எப்படி உன்னை… போ தீ. நான் இதை எதிர்பார்க்கவேயில்லை தீ”
“எதை எதிர்பார்க்கலை நீ? நான் உன்னை கண்டுப் பிடிச்சுடுவேன்னா!”
“அய்யோ! தீ! நீ என்ன கன்பார்ம் ஆனா மாதிரியே பேசுற?”
“ம்…ம்…இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுற ப்ளூ. சும்மா உன்னோட விளையாண்டேன். அவ்வளவு தான். உன்னைப் பத்தி உன்னவிட எனக்குத் தானே நல்லா தெரியும்.”
“அப்பாடா! ஒரு நிமிஷத்துல எனக்கு பெரிய அதிர்ச்சிய குடுத்துட்ட தீ.”
“அதிர்ச்சிய உனக்குக் குடுக்கல ப்ளூ. நான் தான் அதிர்ச்சில இருக்கேன்.”
“என்ன சொல்லற தீ. எனக்கு ஒண்ணுமே புரியலை.”
“பின்ன இருக்காதா சொல்லு! நான் உண்டு என் வேலையுண்டு இருக்கறவ நான். எனக்கு தெரிஞ்சு விரோதிகள்னு எனக்கு யாருமே இல்ல! பிரெண்ட்ஸும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் இருக்காங்க. எனக்கு செடட்டிவ் குடுத்து என்ன பண்ண நினைச்சிருப்பாங்க? ஏன் பண்ணல? இல்ல ஏதாவது பண்ணிட்டாங்க ஆனா அது எனக்கு தெரியலையா? அய்யோ இந்த ப்ளட் டெஸ்ட் எடுத்தாலும் எடுத்தேன்…இப்போ அதோட ரிசல்ட் என்னை பைத்தியம் பிடிக்க வச்சுடும் போல தோணுது.”
“எல்லாரையும் சந்தேகப்பட்ட நீ ஒருத்தர விட்டுட்டியே தீ!”
“யார் அது ப்ளூ. சொல்லு யாரை விட்டுட்டேன்?”
“அந்த நபர் தான் புதுசா நமக்குள்ள வந்திருக்கார். அந்த நபர் வந்ததுக்கப்புறமா தான் உனக்கு இது நடந்திருக்கு இல்லையா. அப்புறம் எப்படி நீ அவரை உன் சந்தேக லிஸ்ட்டில் சேர்க்கலை?”
“ப்ளூ நீ யார சொல்ல வர? ‘வி’ யவா சொல்லற?”
“ம்…ஆமாம் தீ”
“ப்ளூ அது எப்படி வி ய சந்தேகப் படறது?”
“ஏன் படக்கூடாது?”
“ப்ளூ அப்படியே நான் சந்தேகப்பட்டாலும்… அதுல ஒரு லாஜிக் வேண்டாமா? அவர் இருக்கறது பாரிஸ் ல. நான் இருக்கறது மெட்ஸ் ல. அவர் நேத்து இங்க வரவேயில்லை. நான் தான் அவர் வீட்டுக்கு போயிட்டிருந்தேன். வழியில தான் எனக்கு இப்படி ஆச்சு. ஸோ இந்த பஸில் பீஸஸ் ல அவர் எங்கயுமே ஃபிட் ஆகலையே!”
“மே பி ஏதாவது பீஸஸ் எங்கயாவது மிஸ்ஸாகுதோ என்னவோ?”
“ப்ளூ நானே ரொம்ப குழம்பி போயிருக்கேன். இதுல நீ வேற என் சந்தேக லிஸ்ட்டுல இன்னும் ஆட்களை சேர்க்காம இரு ப்ளீஸ்”
“ஓகே. எனக்குத் பட்டதை உன்கூட ஷேர் பண்ணினேன் அவ்வளவு தான். உன்னை குழப்பி எனக்கென்ன ஆகப்போவுது. பேசாம போய் நிம்மதியா படுத்து தூங்கு தீ. காலையில எழுந்ததும் ஃபிரெஷா யோசி. ஏதாவது க்ளூ கிடைக்கலாம். குட் நைட் தீ.”
“ம்…அதுவும் சரி தான் ப்ளூ. சரி ப்ளீஸ் க்ளீன் தி ப்ளேஸ். இன்னைக்கே ஆஃபீஸுக்கு லீவ் போட்டாச்சு. நாளைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியிலிருந்து ஒரு டிஸ்கஷனுக்கு வரப் போறாங்க. ஸோ நான் அங்க இருந்தாகணும். நான் போய் படுத்துக்கறேன். குட் நைட் ப்ளூ.”
என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்த சக்தி அவள் கைபேசியைப் பார்த்துக் கொண்டே
“சரி சரி இந்த வி வேற நிறைய தடவ கால் பண்ணிருக்கானே! சாப்டுட்டு அவன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள மிஸ்ஸர்ஸ் டேவிட் வந்துட்டாங்க. அப்படியே மறந்துட்டேன். ஒரு வேளை ப்ளூ சொன்னா மாதிரி வி ஏதாவது? ச்சே ச்சே அதுனால அவனுக்கு என்ன லாபம்? நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவா வேற! இப்போ கால் பண்ணினா முழிச்சுண்டிருப்பானா? இல்ல தூங்கியிருப்பானா? சரி எதுக்கும் கால் பண்ணிப் பார்ப்போம். எடுத்தா பேசலாம். ம்…கால் போறது… கம் ஆன் வி கால் ஐ எடு.”
“ஹலோ”
“ஹாய் வி. நான் தான் தீ”
“ம்…ம்… தெரியறது தெரியறது. சொல்லு.”
சந்தேகமென்பது கொடிய வியாதி. அது மெல்ல மெல்ல நம் மனதை அரித்து பின் முழுவதுமாக நம்மை ஆட்கொண்டுவிடும். அதைத் தான் சக்தி அனுபவிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்களோ!!
ஹாஸ்பிடல் சென்ற சக்தி தனக்கு மிகவும் நெருக்கமான தோழியான டாக்டர் வசுந்தராவின் நர்ஸிடம் ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டு அவளின் கேபின் கதவைத் தட்டினாள். உடனே உள்ளிருந்து
“எஸ் கம் இன்”
“ஹாய் வசு. எப்படி இருக்க?”
“ஹாய்! ஹாய்! ஹாய்! தீ. நான் ரொம்ப நல்லா இருக்கேன். தாங்க்யூ. நீ எப்படி இருக்க?”
“அப்பா அன்ட் அம்மா ஆல் டூயிங் க்ரேட். உன்ன விசாரிச்சதா சொல்ல சொன்னா. ஆமாம் ஆமாம் நாம மீட் பண்ணி எப்படியும் ஒரு நாலு மாசம் இருக்கும்னு நினைக்கறேன்.”
“ம்…இருக்கும். நீ லாவன்யா பொறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்தது இல்ல… கரெக்ட் நாலு மாசமாச்சு நாம பார்த்து. சொல்லு தீ”
“உங்க ஃபேமிலில எல்லாரும் எப்படி இருக்காங்க? குட்டி புயல் லாவன்யா எப்படி இருக்கா? என்ன பண்ணறா?”
“எல்லாவரும் நலமாக இருக்கிறார்கள். அவளுக்கென்ன தாத்தா பாட்டி கூட ரொம்பவே சந்தோஷமா நேரத்தை கழிச்சுக்கிட்டிருக்கா. நீ அவளோட பொறந்த நாளுக்கு செய்து கொடுத்த அந்த ரோபோ டாலோட எப்பப்பாரு எதையாவது பேசிகிட்டு அதை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுன்னு அந்த பொம்மைய விட்டு நகர்றதில்லை. அவளுக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதுக்கு அவ லக்கின்னு பேரு கூட வச்சிருக்கா.”
“ஸோ ஸ்வீட். அவ உன்னோட அழகான ஏன்ஜல் வசு.”
“ம்…ஆமாம் சக்தி. என்னோட வலிகளை மறக்கச் செய்ய அந்த ஆண்டவன் எனக்குக் குடுத்த குட்டி தேவதை தான் என் லாவ்.”
“ஆம் சாரி வசு. லாவ்வ அப்படி சொல்லி உங்களோட பழசை ஞாபகப்படுத்திட்டேனா?”
“ம்…ம்…ம்…இட்ஸ் ஓகே. அப்புறம் என்ன? நீ க்ளினிக் வந்திருக்க? வீட்டுக்கே வந்திருக்கலாமே!”
“இல்ல இல்ல இப்போ நான் என் ப்ரெண்ட் வசுவ பார்க்க வரலை. ஒரு பேஷ்ண்ட்டா டாக்டர் வசுந்தராவ பார்க்க வந்திருக்கேன்.”
“ம்…சரி சரி. என்ன ஆச்சு தீ?”
என்று வசுந்தரா கேட்டதும் சக்தி அவளுக்கு நடத்ததை வசுந்தராவிடம் விவரித்தாள். அதை கேட்ட வசுந்தரா
“தீ அது எப்படி நீ மோர் தன் டுவல்வ் அவர்ஸா ஹைவே சைட் லேன்ல யாருக்கும் தெரியாம இருந்திருக்க முடியும்? போஸீஸ் கூடவா பார்க்கல? இல்லையே எனக்கு இது சரியா படலையே தீ!”
“இதே டவுட் எனக்கும் என் பேரண்ட்ஸுக்கும் இருக்கு வசு. அவங்க ரெண்டு பேரும் ஒரு படி மேலயே போய் எனக்கு யாரோ எதையோ கலந்துக் கொடுத்து ஆக்ஸிடன்ட் ஆக வைக்க பார்த்திருப்பாங்கன்னு சொன்னாங்க தெரியுமா! அதைக் கேட்டதும் முதல்ல எனக்கு ஒரே காமெடியா இருந்தது. ஆனா அப்புறமா யோசிச்சுப் பார்த்தேன்… அதுதான் உன்கிட்ட வந்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடலாமேன்னு வந்திருக்கேன்.”
“ம்…உன் பேரன்ட்ஸ் சொன்னதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு தீ. ஓகே ஒரு நிமிஷம். நர்ஸ் ப்ளீஸ் கம்மின்”
“எஸ் டாக்டர்.”
“நர்ஸ் தீ க்கு இதுல நான் எழுதியிருக்குற ப்ளட் டெஸ்ட் எடுங்க.”
“ஓகே டாக்டர். மேம் ப்ளீஸ் வாங்க.”
“ஓகே வசு நான் போய் ப்ளட் டெஸ்ட் குடுத்துட்டு வரேன்.”
“ஷுவர் தீ. நீ போய் டெஸ்ட்டுக்கு குடுத்துட்டு வா.”
சக்தி நர்ஸுடன் சென்று தனது ரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வந்தாள்.
“மே ஐ கம் இன்”
“ஆங் உள்ள வா தீ”
“என்ன வசு எப்பவும் பிஸியா இருக்கற நீ இன்னைக்கு ரொம்ப ஃப்ரீயா இருக்க?”
“நல்லது தானே தீ. மக்கள் எல்லாரும் ஆரோகியமா இருக்காங்கன்னு தானே அர்த்தம். அது நல்லது தானே.”
“அது என்னவோ உண்மை தான். ஆனா இப்ப இருக்குற இந்த பான்டமிக் காலத்துல அது எப்படி சாத்தியம்?”
“தீ என்ன பேசற நீ. ஆக்ட்சுவலி இந்த பான்டமிக் நம்ம மக்களுக்கு ஒரு நல்லத செஞ்சிருக்கு தெரியுமா?”
“அப்படியா?”
“ஆமாம். முன்பெல்லாம் ஏதாவது ஒரு சின்ன வலின்னா கூட உடனே ஹாஸ்பிடல் வந்திடுவாங்க. ஆனா இப்போ எதுவந்தாலும் ஹாஸ்பிடல் பக்கம் போயிடக்கூடாதுன்னு இல்ல நெனைக்கறாங்க! பழையபடி வீட்டு வைத்தியத்துலேயே சரி செஞ்சுக்க பார்க்கறாங்க. இதுவும் நல்லது தானே.”
“ம்…ஆமாம் ஆமாம். அது சரி தான். சரி வசு ரிசல்ட் எப்ப வரும்?”
“அது ஒரு த்ரீ ஆர் ஃபோர் அவர்ஸ்க்குள்ள வந்திடும். நான் உனக்கு வாட்ஸ்அப் பண்ணறேன். ஆர் எல்ஸ் சாயந்தரம் டின்னருக்கு வீட்டுக்கு வாயேன்.”
“ஓ! டின்னர் தந்து ப்ளட் ரிசல்ட் தர்ற நீங்க ரெடின்னா! நானும் வந்து டின்னர் சாப்டுட்டு ரிசல்ட்டை வாங்கிக்க ரெடி தான்.”
“ஓகே தென். வீ வில் மீட் அட் செவன் தர்ட்டி அட் மை ரெஸிடன்ஸ். மறந்திடாத சக்தி”
“டோன்ட் வரி வசு. நிச்சயமா வரேன். போன தடவ மாதிரி மறக்க மாட்டேன். லாவ் கிட்ட சொல்லு அவளோட அந்த லக்கி டாலுக்கு எக்ஸ்ட்ராவா ஒண்ணு கொண்டு வரேன்னு.”
“ம்...ஹும்…நான் மாட்டேன். அப்புறம் நீ வீட்டுக்கு வரவரைக்கும் அதைப் பத்தியே கேட்டு கேட்டு என்ன நச்சரிப்பா. நீ கொண்டு வந்து குடுக்கும்போதே தெரிஞ்சுக்கட்டும்.”
“ஓகே தென். பை ஃபார் நவ்.”
“பை தீ.”
ஹாஸ்பிடலில் இருந்து சக்தி வெளியே செல்லும் போதே மணி நான்காகி இருந்தது. நேராக அவள் வீட்டுக்குச் சென்றாள். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மிஸர்ஸ் டேவிட் சக்தியின் கார் வந்து அவள் வீட்டு வாசலில் நின்றதும்
“ஹாய் தீ. நேத்து ஆஃபீஸ் போகும்போது பார்த்தது. எப்படி இருக்க மா?”
“நான் நல்லா இருக்கேன் மிஸ்ஸர்ஸ் டேவிட் நீங்க எப்படி இருக்கீங்க?”
“எனக்கென்னமா அதே ரொட்டீன். போரடிக்குது. ஆமாம் நீ ரொம்ப டல்லா இருக்கயே!! ஏன்?”
“அப்படியா! எனக்கு ரொம்ப தூக்கம் வருது அதுதான்.”
“அப்படீன்னா ஏன் என்கூட பேசி நேரத்த வேஸட் பண்ணற? போய் தூங்கு தீ. இப்போ தூங்கினா தான் உண்டு”
“ஏன் அப்படி அலுத்துக்கிட்டே சொல்லறீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்?”
“ஆமாம் மா. இதோ எங்க வயசுல மாத்திரைப் போட்டுக்கிட்டாலும் தூக்கம் வரமாட்டேன்னு வம்பு பண்ணுதே! அதுனால தான் அப்படி சொன்னேன். போ போ போய் தூங்கு”
“ஓகே. பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”
“யூ டூ பேபி. ஃபர்ஸ்ட் கோ அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் மை ச்சைல்டு”
மிஸ்ஸர்ஸ் டேவிட்டுடன் பேசி விட்டு சக்தி உள்ளே நுழைந்ததும் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் பொத்தென்று படுத்துக் கொண்டதும் உறங்கிப்போனாள். யாரோ கதவைத் திறந்து உள்ளே வந்த சப்தம் கேட்டு ப்ளூ மெல்ல சோபாவிற்கு பின்னாலிருந்த அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்தது. யாருமில்லை என்றெண்ணிக் கொண்டே திரும்பும் போது சோபாவின் மேல் ஒரு கை இருந்ததைப் பார்த்தது. உடனே சோபா அருகே வந்து சக்தி நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் உள்ளே சென்று க்வில்ட் எனப்படும் மெல்லிய மெத்தையைக் கொண்டு வந்து அவளுக்கு போர்த்திவிட்டது. பின்பு ப்ளூ மீண்டும் அடுப்படியில் அதன் வேலையை செய்யத் துவங்கியது. வீடே அமைதியாக இருள் சூழ்ந்து ஹாலில் ஒரே ஒரு சின்ன விளக்கை மட்டும் போட்டிருந்தது ப்ளூ. சட்டென்று எழுந்துக் கொண்ட சக்தி தனது கைகடிகாரத்தைப் பார்த்தாள்.
“அச்சச்சோ டைம் ஏழேகால் ஆ!!”
“ம்…என்ன ஆச்சு தீ? ஏன் கத்தின?”
“மணி ஏழேகால் ஆயிடுச்சு ப்ளூ. என்ன ஒரு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருக்கலாம் இல்ல ப்ளூ”
“நல்லா இருக்கே நீ சொல்லறது! உன்ன ஆறு மணிக்கு எழுப்பி விடணும்னு என்கிட்ட சொல்லிட்டா படுத்த? சரி சரி அதுக்கென்ன இப்போ. நல்லா தூங்கின தானே. விடு தீ. வா வா டின்னர் சாப்பிடு. எல்லாம் ரெடியா இருக்கு.”
“ஓ நோ ப்ளூ. சாரி நான் இன்னைக்கு டின்னருக்கு வசு வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கேன். நான் அங்க போகணும். ஸோ சாரி ப்ளூ. நீ செஞ்சதை ஃப்ரிட்ஜில வச்சுடு. நாளைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு சாப்ட்டுக்கறேன்.”
“ம்…ம்…சரி சரி. ஆமாம் வசுங்கறது உன் பெஸ்ட் பிரெண்டு அந்த டாக்டர் தானே?”
“ஆமாம் ஆமாம். அவங்களே தான். இன்னைக்கு ப்ளட் டெஸ்ட்டுக்கு போயிருந்தேன் இல்ல அப்ப அவங்க டின்னருக்கு என்ன இன்வைட் பண்ணினாங்க. அதுக்கு தான் கிளம்பிட்டிருக்கேன்”
“அவங்க பொண்ணுக்கு தானே எனக்கு ரொம்ப பிடிச்ச எலிஸைக் கொண்டு போய் குடுத்துட்ட.”
“அந்த பொண்ணுக்கு உன் எலிஸை ரொம்ப பிடிச்சுப் போயிடுத்தாம். தெரியுமா!”
“என் எலிஸ யாருக்கு தான் பிடிக்காது! ம்…”
“அட அட அட!! ப்ளூ டூ மச். உன் எலிஸுக்கு பேசக்கூடிய தன்மையை கொடுக்குற வாய்ஸ் டூல் ஐ இன்னைக்கு பிக்ஸ் பண்ணிக் குடுக்கப் போறேன்.”
“அப்போ என் எலிஸ் இனி பேசுவாளா? ஆனா நான் கேட்க முடியாதே!”
“என்னமோ காதல் ஜோடிய நான் பிரிச்சா மாதிரி இருக்கு உன் பேச்சு.”
“பின்ன இல்லையா?”
“ஓ!!! ஓகே ஓகே. இப்போ இந்த எலிஸ் போனா என்ன நான் உனக்கு புதுசா ஒரு ஏன்ஜல் செஞ்சு தரேன். என்ன சொல்லற?”
“ம்…அப்படீன்னா உனக்கு உன் விஷாலுக்கு பதில் ஒரு திஷால தரேன்னா நீ ஒத்துப்பியா?”
“ப்ளூ நீ வர வர ரொம்ப பேசற.”
“பதில் சொல்லு தீ”
“போ ப்ளூ விளையாடாதே. நான் இப்போ வசு வீட்டுக்கு போறேன். வர்றதுக்கு எப்படியும் நைட் பத்து மணி ஆகிடும். அப்பா அம்மா கால் பண்ண மாட்டாங்க சப்போஸ் பண்ணினாங்கன்னா நான் வசு வீட்டுக்கு போயிருக்கறதா சொல்லிடு. ஓகே பை ப்ளூ.”
“ம்…ம்…பை தீ.”
என்று தன் வீட்டிலிருந்து வசுந்தரா வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது சக்தி தனக்குத்தானே
“வர வர இந்த ப்ளூவோட பேச்சு நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுது. அது ஏன்? எப்படி? எதுக்குன்னு நான் சீக்கிரம் கண்டுபிடிக்கணும். இந்த விஷாலுக்கு எத்தனைத் தடவ கால் பண்ணறது. அவன் ஏன் ஃபோன் அட்டென்ட் பண்ணகூட மாட்டேங்கறான்? ஆமாம் அவனுக்கும் கோபமிருக்காதா? ரெண்டாவது தடவையா சொல்லாம கொள்ளாம இருந்திருக்கேன். சரி வசு வீடு வந்திடுச்சு. இங்க டின்னர முடிச்சுட்டு வீட்டுக்கு போனதும் மறுபடியும் விஷாலுக்கு கால் பண்ணுவோம்.”
“ஹாய் தீ ஆன்டி”
“ஹாய் லாவ் குட்டி. வாசல்ல என்ன பண்ணிட்டிருக்க?”
“உங்களுக்காக தான் வெயிட்டிங் ஆன்டி.”
“ம்….அப்படியா. இந்தா சாக்லேட்ஸ்.”
“வாங்க உள்ள போகலாம் ஆன்டி. அம்மா பாட்டி தாத்தா எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட்டிங்”
“அவளோ தான். இனி அடுத்த ஒரு வாரத்துக்கு அவளுக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமிருக்காது. ஆங் வந்திடுச்சு தீ. மொதல்ல டின்னர் சாப்டுட்டு பிறகு அதைப் பத்தி பேசலாம். எல்லாரும் வாங்க டின்னர் சாப்பிடலாம். லாவ் வாடா கண்ணா. சாப்டுட்டு போய் விளையாடு”
“அம்மா நான் அப்பறமா சாப்டுறேன். இப்போ எனக்கு வேண்டாம்.”
“விடு மா வசு. நாம சாப்டுட்டு அவளுக்கு நான் போய் ஊட்டி விடுறேன். சாயந்தரம் தான் வடை எல்லாம் சாப்பிட்டிருக்கா”
“சரி வா தீ நாம சாப்பிடலாம்.”
“டின்னர் ரொம்ப சூப்பரா இருந்தது வசு. ரொம்ப தாங்க்ஸ் ஃபார் திஸ் லவ்லி டிலீஷியஸ் புஃட்”
“எல்லாம் அம்மா பண்ணினது தான் தீ. நான் இன்னைக்கு வீட்டுக்கு வந்ததே ஏழு மணிக்கு தான். நான் வந்து ஜூஸ் மட்டும் தான் போட்டேன்”
“ஓ அப்படியா. அம்மா சூப்பர் சாப்பாடு. ரொம்ப தாங்க்ஸ் மா.”
“அதெல்லாம் எதுக்குமா. நீயும் எங்க பொண்ணு மாதிரி தானே மா.”
“ஆங் சரி மா வசு. இதோ எல்லாம் எடுத்துக்கிட்டேன். அவ கிட்ட போய் உட்கார்ந்து ஊட்டிவிட வேண்டியது தான். நீ போய் சக்திக் கூட பேசிட்டு இருமா. லாவ்வ நாங்க பார்த்துக்கறோம்.”
“ஓகே மா. தீ வாங்க நாம மேல போகலாம்.”
“என்ன ஆச்சு வசு? என் ரிப்போர்ட் என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க வசு?”
“அது வந்து தீ. உன் பேரன்ட்ஸ் யூகிச்சது சரி தான்.”
“அப்படீன்னா?”
“ஆமாம் தீ உனக்கு யாரோ எந்த விதத்திலயோ செடெடிவ் குடுத்திருக்காங்க. உன் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ல இருந்துது. அது ஒரு வகையான கான்ஷியஸ் செடடிவ். அது ஐவி வழியா குடுத்தா தான் சட்டுன்னு வேலை செய்யும் இல்லாட்டி அது மெதுவா தான் வேலை செய்யும். நீ சொன்னத வச்சுப் பார்த்தா. உனக்கு அது மெதுவா தான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. ஆக்ச்சுவலி இது ஷார்ட் டெர்ம் செடடிவ் தான். ஆனா உனக்கு அது மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கலாம் அது ஐவி த்ரூவா குடுத்திருக்கலாம் அப்படீங்கறது என்னோட யூகம் தான். ஏன்னா நீ விடியற்காலை வரைக்கும் மயக்கத்துல இருந்திருக்க.”
“ஆனா மறுபடியும் குடுக்கணும்னா!! அப்போ என் காருக்குள்ள வச்சே எனக்கு குடுத்திருக்காங்களா? இல்லையே என் கார் பூட்டினது பூட்டினபடியே தானே இருந்தது”
“என்ன தீ !! இந்த காலத்துல காரை சாவியே இல்லாம தொறக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல பா. அதை விடுங்க உனக்கு யார் முதல்ல குடுத்திருப்பா? ஏன்?”
“ஆமாம் இல்ல. யாரா இருப்பாங்க? எனக்கு எதிரிங்கன்னு யாருமே இல்லையே வசு. அப்புறம் நான் யாரன்னு யோசிக்கறது. எல்லாரும் என்னோட நல்லா தான் பழகுறாங்க. நான் யாரன்னு சந்தேகப்படுவேன்?”
“நல்லா யோசி தீ. உனக்கே தெரியாமா உனக்குத் தரப்பட்டிருக்கு. அது ரொம்ப தப்பு. யாரோ உனக்கு ரொம்ப பக்கத்துல இருக்கறவங்க, ரொம்ப பழக்கமானவங்க, நெருக்கமானவங்க, உன்னோட ஆக்டிவிடிஸ் நல்லா தெரிஞ்சவங்க தான் இதை முதல்ல உனக்கு தந்திருக்கணும். ஸோ பொறுமையா யோசிச்சு கண்டு பிடி. இல்லாட்டி அது மறுபடியும் நடக்க வாய்ப்பிருக்கலாமில்லையா. யூ ஹாவ் டு பீ எக்ஸ்ட்ரீமிலி கேர்ஃபுல்”
“அய்யோ எனக்கு தலையே சுத்துது வசு. என்னால யாரையுமே சந்தேகப் பட முடியலையே. யாரன்னு நான் சொல்லுவேன்?”
“நிச்சயம் உனக்கே தெரியாம உனக்கு ஒரு துரோகி இருக்காங்க. அதுவும் உங்க கூடவே பயணிக்கறாங்க. அது யாரு என்னன்னு சீக்கிரம் கண்டு பிடி தீ. இல்லாட்டி வர்றீங்களா நாம போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு வரலாம்.”
“என்னன்னு கம்ப்ளெயின்ட் பண்ணுவேன் வசு? யாரன்னு கை காட்டுவேன்? எப்போ எப்படி இப்படி நடந்துதுன்னு சொல்லுவேன்? ஏன்னா எனக்கே எதுவும் தெளிவா இல்லன்னா… நான் போலீஸ்க்கு எப்படி என்னத்த சொல்லுவேன்? அதுவுமில்லாம அங்க எல்லாம் போனோம்னா அது எவ்வளவு பெரிய ப்ரொஸீஜர்ஸ் எல்லாம் ஃபாளோ பண்ண வேண்டியிருக்கும்.”
“அதுக்காக அப்படியே விட்டுவிடறதா தீ?”
“இல்ல இல்ல! அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்.”
“ஆங்…பேசாம என்னோட பிரெண்டோட பிரதர் இந்த நாட்டுக்காரர் தான். அவரு இந்த டிராஃபிக் போலீஸா தான் இருக்காருன்னு நெனைக்கறேன். நான் அவங்ககிட்ட கேட்டு நீங்க அந்த ஹைவேல இருந்த அந்த பதிமூணு மணிநேரம் என்ன நடந்ததுன்னு அவங்களோட சிசிடிவி ல பார்த்து சொல்ல சொல்லறேன்.”
“அது முடியுமா வசு?”
“லெட் அஸ் ட்ரை. ஆனா நீயும் இனி ஜாக்கிரதையா இரு தீ.”
“ம்…தாங்க்ஸ் வசு. சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்.”
“யூ ஆர் கன்ஃப்யூஸ்டு நவ். பேசாம இங்கேயே இருந்துட்டு காலையில போயேன் தீ”
“ஓ…நோ நோ வசு. நான் போயே ஆகணும். ஆஃபீஸுக்கு நேத்து ஹாஃப் எ டே லீவ் போட்டேன் இன்னைக்கு போகவேயில்ல. நாளைக்கு காலையில சீக்கிரம் போகணும். இல்லாட்டி இருந்திருப்பேன். ஆம் சாரி வசு.”
“இட்ஸ் ஓகே தீ”
“வசு நீ கொஞ்சம் உன் பிரெண்டுட்ட சொல்லி அந்த சிசிடிவி ல என்ன இருந்ததுன்னு சொல்ல சொல்லு பா.”
“நிச்சயமா நான் அவங்க கிட்ட இப்பவே கூப்பிட்டு சொல்லறேன். கவலைப் படாம பத்திரமா வீட்டுக்கு போயிட்டு வா தீ. பை பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தீ.”
“யூ டூ வசு. அப்பா அம்மா நான் போயிட்டு வரேன். லாவ் பை.”
“பை மா.”
“பை அன்டி.”
வசுந்தரா வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு செல்லும் வரையிலும் சக்தி தனக்கு மயக்கமருந்து கொடுத்தவர் யாராக இருக்கக்கூடும் என்ற குழப்பத்திலேயே சென்றாள்.
சக்தி பாரிஸ் போகவில்லை என்று அவளே சொன்னதைக் கேட்டு மீண்டும் குழப்பமடைந்த நவீன் மிருதுளா இருவரும் தெளிவு பெறவேண்டி சக்தியிடம் கேட்ட கேள்விகளுக்கு சக்தி
“அப்பா… அப்பா…அப்பப்பா… எத்தனை கேள்விகள்? இருங்கோ இருங்கோ… கூல் கூல்…”
“சக்தி விளையாடாத. அப்பா கேட்டதுக்கு பதில் சொல்லுடி”
“அம்மா… சொல்லத்தானே கால் பண்ணிருக்கேன்.”
“அப்போ சொல்லு.”
“நீங்க ரெண்டு பேரும் என்னை எங்க சொல்ல விட்டேங்கள்? மாறி மாறி பேசிண்டும். கேள்வி மேல கேள்வி கேட்டுண்டும் இருந்தா! என்னையும் பேச விடணும் இல்ல.”
“சரி விட்டுட்டோம் சொல்லு மா.”
“நான் மீட்டிங் முடிச்சுட்டு ஆஃபிஸ் கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டுட்டு என்னோட கார்ல பாரீஸ் போலாம்னு கிளம்பினேன். ஒரு ஒன்றர மணிநேர டிராவல் பண்ணினதும் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது.”
“என்ன மாதிரி இருந்தது சக்தி மா?”
“இருங்கோ நவீ அவ முழுசா சொல்லட்டும். நீ சொல்லுமா சக்தி”
“ஒரு மாதிரின்னா… ஏதோ தல சுத்தற மாதிரி இருந்துது. நானும் வண்டிய ஸ்லோ பண்ணி ஓட்டினேன். ஆனா அடுத்த ஒரு பத்து நிமிஷத்துல எல்லாம் அப்படியே ப்ளாக் அவுட் ஆகறா மாதிரி இருந்தது. உடனே வண்டியை ஹைவேலேந்து சைட் லேனுக்கு கொண்டு போய் அங்க நிப்பாட்ட நெனெச்சேன். ஆனா அந்த லேன்ல எனக்கு முன்னாடி ஏதோ ஒரு பெரிய கண்டெய்னர் வண்டி நின்னுண்டிருந்தா மாதிரி இருந்தது அவ்வளவு தான் எனக்கு தெரியும். அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை. காலங்காத்தால சட்டுன்னு முழிப்பு வந்துப் பார்த்தா அதே லேன்ல என் காருக்குள்ள இருந்தேன். ஆனா என் காருக்கு முன்னாடி அப்போ அங்க அந்த கண்டெயினர் வண்டி இருக்கல. அப்போ தான் நான் மயக்கமாயிருப்பேன்னு நெனச்சு என் ஃபோன தேடி எடுத்தேன். பார்த்தா சுவிட்ச்டு ஆஃபா இருந்தது. அங்க தான் எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.”
“என்ன கன்ஃப்யூஷன் சக்தி?”
“நான் மயக்கமாகறதுக்கு முன்னாடியே என்னோட ஃபோன ஆன் பண்ணி எமர்ஜன்சிக்கு கால் பண்ண ட்ரை பண்ணினதா எனக்கு ஞாபகம். ஆனா நான் மயக்கம் தெளிஞ்சதும் ஃபோன் மறுபடியும் சுவிட் ஆஃப்லயே தான் இருந்தது. அப்படின்னா நான் சுவிட்ச் ஆன் பண்ணவேயில்லையா? ஆன் பண்ணறதுக்குள்ள மயங்கிட்டேனா?”
“அப்படியே இருந்தாலும் சக்தி! நீ மயக்கமானது எப்படியும் உங்க ஊரு மத்தியானம் ஒரு பன்னெண்டு பன்னெண்டர மணி இருக்குமா?”
“ஆங் இருக்கும் பா”
“அப்போ நீ மத்தியானம் பன்னெண்டர மணிலேந்து இன்னைக்கு விடியக்காலை வரைக்கும் உன் காருக்குள்ளேயே மயங்கிக் கிடந்தன்னு சொல்லறயா சக்தி?”
“அப்படித் தான்னு நெனைக்கறேன். ஏன்னா நான் மயக்கமாகும் போது என்னோட கார நிப்பாட்டின இடத்துலேயே தான் முழிச்சுப்பார்க்கும் போதும் நின்னுண்டிருந்தேன்.”
“நீ சொல்லற படிப்பார்த்தா எப்படியும் ஒரு பதிமூணு டூ பதிநாலு மணிநேரமா ஹவே சைடு லேன்ல உன் காருக்குள்ளயே மயங்கி கிடந்திருக்க. இல்லையா?”
“ஆமாம் பா.”
“நீ மயக்கத்துல கார நிப்பாட்டிருக்க அப்படீன்னா நிச்சயம் ஒழுங்க நிப்பாட்டிருக்க வாய்ப்பில்ல. நீ முழிச்சதும் உன் கார் சரியா பார்க் பண்ணிருந்ததா?”
“நான் கவனிக்கலப் பா. நான் முழிச்சதும் டைம பார்த்தேன். அய்யோ நடு ஹைவேல இருக்கோமேன்னு நெனச்சேன். உடனே கார திருப்பிண்டு நேரா ஆத்துக்கு வந்துட்டேன்.”
“அதுவுமில்லாம அவ்வளவு நேரமா எப்படி அப்படி ஒரு கார் ஹைவேல நிக்கறத உங்க ஊரு ஹைவே பெட்ரோலிங் போலீஸ்கார கவனிக்காம இருந்திருப்பா?”
“எனக்குள்ள இருக்கற பெரிய டவுட்டும் அதுதான் பா. ஒரு வேளை அவா அன்னைக்கு ஹைவே பெட்ரோலிங்குக்கு வரலயோ என்னவோ! ஏன்னா அவா வந்திருந்தான்னா…நிச்சயம் என்ன அப்படி அங்க மயக்கமாவே விட்டுருக்க மாட்டா. உடனே என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருப்பா. அன்ட் என் காரையும் அங்கேந்து அகற்றிருப்பா. ஏன்னா பதிமூணுமணிநேரம் ஈஸ் டூ மச் டைம்.”
“அதுதான் நானும் சொல்லறேன் சக்தி. அப்படி பதிமூணு மணிநேரமெல்லாம் பெட்ரோலிங்க பண்ணாம இருக்க மாட்டா!”
“அதெல்லாம் இருக்கட்டும் நீ நல்லா தானே இருக்க சக்தி?”
“அம்மா ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட். எனக்கு எந்த வித சேதமுமில்ல. நான் எப்படி டிரைவ் பண்ணிண்டே மயங்கினேனோ அதே மாதிரி தான் உட்கார்ந்துண்டிருந்தேன். என் உடம்புலேயும் எந்த விதமான காயங்களும் இல்ல. போதுமா!”
“அதுக்கில்ல சக்தி!”
“அம்மா எனக்கு உன்னோட கவலைப் புரியறது மா. ஆனா இது எப்படி? எதுக்கு? அப்படீங்கற கேள்விகள் தான் இப்போ என் மனசுல ஓடறது.”
“நீ எதுக்கும் ஹாஸ்பிடல் போய் ஒரு டெஸ்ட் எடுத்துண்டு வந்துடேன் சக்தி! ஏன் மயக்கம் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமே. இது மாதிரி உனக்கு முன்னாடி எப்பவாவது வந்திருக்கா?”
“இல்லப்பா இது தான் ஃபர்ஸ்ட் டைம்.”
“நீ நேத்து என்னென்ன சாப்ட்ட? எங்க சாப்ட்ட?”
“காலையில ப்ளூ தான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தான். அதை சாப்டேன்”
“ப்ளூவா அது ஏன் உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தது? எப்பவும் நீ தானே பண்ணிப்ப? அது டின்னர் மட்டும் தானே பண்ணும்.”
“ம்…அப்புறமா ஆஃபீஸ்ல மீட்டிங் போது ஒரு காஃபி குடிச்சேன். அதுக்கப்புறமா கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டேன்…”
“ம்…அதுக்கப்புறமா நீ ஒண்ணுமே எங்கயுமே எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லையா?”
“ம்…ம்…ஆங்!! சான்ட்விச் சாப்பிட உட்கார்ந்தேனா அப்போ ரூத்ரா ஒரு டெட்ரா பேக் ஜூஸ் வாங்கித்தந்தா. அதைக் குடிச்சேன். அவ்வளவு தான். அதுக்கப்பறமா நான் வேற எதுவுமே சாப்பிடல குடிக்கல. ஏன்ப்பா உன் பொண்ணுக்கு யாராவது எதையாவது கலந்துக் குடுத்துட்டாளான்னு நெனக்கறையா?”
“காலம் கெட்டுக்கடக்குமா”
“எனக்கு யாருப்பா எதிரி இருக்கா? அதுமாதிரி எல்லாம் பண்ண? அப்படியே குடுத்திருந்தாலும் அதுல எந்த மோட்டிவும் இருக்கறா மாதிரி தெரியலையே!”
“என்ன மிருது மோட்டிவ் இல்லங்கற!”
“என்னவா இருக்கும்?”
“ஒரு வேள டிரைவிங் பண்ணும்போது நீ மயக்கமடஞ்சு ஆக்ஸிடென்ட் ஆகணுனு கூட இருக்கலாம் இல்லையா!”
“அச்சச்சோ! சக்தி யாருமா இதை செஞ்சிருப்பா?”
“அய்யோ அப்பா அன்ட் அம்மா. ரெண்டு பேரும் ஷெர்லாக் ஹாம்ஸா மாறவேண்டாம். எனக்கு தெரிஞ்சு சம் விட்டமின் டெஃபிஷியன்சியா இருக்கும். அவ்வளவு தான். அதுக்குள்ள ரெண்டு பேருமா ஏதோ பெரிய த்ரில்லர் பட ரேஞ்சுக்கெல்லாம் பில்ட்அப் பண்ணாதீங்கோ”
“அதுக்கில்ல சக்தி. எதுக்கும் நீ குளிச்சுட்டு போய் டாக்டர பார்த்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துண்டு வா”
“ஓகே பா. நான் பண்ணறேன். டோன்ட் வரி. எனக்கு ஒண்ணுமே இல்ல. நான் நன்னா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருங்கோ. நான் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணறேன். ஏன்னா நீங்க அப்போ நல்லா தூங்கிண்டிருப்பேங்கள். சரியா”
“ம்…ஆமாம் மா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பரிதவிச்சுப் போயிட்டோம். சரி அவள்ட்ட என்ன சொல்லப் போற?”
“நடந்தத சொல்லுவேன். மொதல்ல விஷால்ட்ட சொல்லுவேன். அவன் அவனோட அப்பா அம்மாட்ட சொல்லிப்பான். உங்களோட பேசி முடிச்சதும் அடுத்தது விஷாலுக்கு தான் பண்ணனும்.”
“சரி சரி நீ விஷால்ட்ட பேசி எக்ஸ்ப்ளேயின் பண்ணிக்கோ. மொதல்ல டாக்டர்ட்ட போ. சரியா”
“ஓகே டன். விஷால்ட்ட பேசி முடிச்சதும் டாக்டர்ட்ட போறேன். ஓகே பை. டேக் கேர். லவ் யூ அப்பா அன்ட் அம்மா”
“வீ டூ லவ் யூ டா கண்ணா. பத்திரமா இருமா. பை”
என்று தன் பெற்றோருடன் பேசி முடித்ததும் சக்தி தனக்குள்
“ம்…அப்பா சொல்லறதுலேயும் ஏதாவது இருக்கலாம். டாக்டர் டெஸ்ட் பண்ணி சொன்னா தெரிஞ்சுடும். ஆனா அதுக்கப்புறம் அது யாரா இருக்கும்ன்னு ஒரு கன்ஃப்யூஷன் வருமே!! அதை டெஸ்ட் ரிசல்ட்டுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ வி க்கு கால் பண்ணி சொல்லுவோம். பாவம் அவனும் டென்ஷன்ல இருப்பான்.”
என்று விஷாலுக்கு கால் செய்தாள் சக்தி. ரொம்ப நேரம் அவன் கைபேசி ஒலித்தும் அவன் எடுத்துப் பேசவில்லை. மீண்டும் முயற்சித்தாள். ஆனால் அவனிடமிருந்து பதிலில்லை. உடனே மொபைலை மெத்தை மீது வைத்துவிட்டு
“இந்த ப்ளூ எங்க காணவே காணம். ப்ளூ ப்ளூ. எங்க போயிருப்பான்? வீட்டைவிட்டு வெளியே போக மாட்டானே. ஆங் பேஸ்மென்ட்ல சார்ஜிங் ஸ்டேஷன்ல இருப்பான். போய் பார்கறேன்”
என தனக்குத் தானே பேசிக்கொண்டே அவள் வீட்டின் பேஸ்மென்ட்டுக்குச் சென்று பார்த்தாள். அவள் நினைத்ததுப் போலவே ப்ளூ சார்ஜிங் ஸ்டேஷனில் இருந்தது. அதனருகே சென்று
“ப்ளூ இப்ப எல்லாம் நீ அடிக்கடி இங்க வந்து செட்டில் ஆகிடற!! என்ன விஷயம்? உனக்கு என்ன ஆச்சு?”
என்று சார்ஜிங் ஸ்டேஷன் சுவிட்ச்சை பிடுங்கிவிட்டாள் சக்தி. அதிலிருந்து வெளிவந்ததும் ப்ளூ சக்தியைப் பார்த்து…
“ஹாய் சக்தி”
“ஹாய் ப்ளூ”
“என்ன? நீ எங்க போன? விஷால பார்க்கபோன சரி. உங்களுக்குள்ள நீங்க பேசிட்டிருக்கும் போது நான் டிஸ்டர்ப் பண்ணிடுவேனோன்னு தானே உன் மொபைல சுட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்த?”
“ம்…ஆமாம் ஆமாம். நீ தான் எங்க லவ்வுக்கு வில்லன். போதுமா. வா வா. உள்ள போகலாம்.”
“நான் வில்லனா ஆனா என்ன ஆகும் தீ?”
“நீயா? வில்லனா? ஹா! ஹா! ஹா! காமெடி பண்ணாத ப்ளூ.”
“ம்…ம்…சரி விஷாலோட உன் மீட்டிங் எப்படி இருந்தது?”
“எங்க நான் தான் பாரிஸ் போகவேயில்லையே!”
“அப்புறம் இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?”
“அது ஒரு பெரிய கதை. வா சொல்லறேன்.”
என்று தன் அப்பா அம்மாவிடம் கூறியதை ப்ளூவிடமும் பகிர்ந்துக் கொண்டாள் சக்தி. அதைக் கேட்டதும் ப்ளூ சக்தியிடம்
“இவ்வளவு நடந்திருக்கா தீ?”
“சரி அதெல்லாம இருக்கட்டும். காலைல நீ ஏன் எனக்கு ரெண்டு தடவ கால் பண்ணின? நான் அந்த நேரத்துல மீட்டிங் ல இருப்பேன்னு உனக்கு தெரியுமில்ல. அப்புறம் எதுக்கு தொடர்ந்து கால் பண்ணின?”
“உனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமேன்னு தான் பண்ணினேன். நீ தான் என் கால ஐ அட்டென்ட் கூட பண்ணலையே!”
“ஆமாம் ஆமாம். உன்னால தான் நான் ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன். அதுக்கப்புறம் அந்த விஷாலோட நெனப்புல ஆன் பண்ண மறந்துட்டேன். இதெல்லாம் என்னோட அப்பா அம்மாவ எவ்வளவு கஷ்டப்படுத்திருக்கு தெரியுமா? எல்லாம் உன்னாலையும் அந்த விஷாலாலையும் தான்.”
“ம்…”
“என்ன ம்? ப்ளூ”
“ஒண்ணுமில்ல தீ”
“சரி சரி நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன் ப்ளூ.”
“ஹாஸ்பிடலா!! எதுக்கு தீ? யாருக்கு என்ன ஆச்சு?”
“யாருக்கும் எதுவும் ஆகல ப்ளூ. சும்மா ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துக்கப் போறேன்.”
“ப்ளட் டெஸ்ட்டா!! எதுக்கு? உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா தீ?”
“இல்ல ப்ளூ. அப்பாக்கு நான் சாப்பிட்டதுல யாராவது எதையாவது கலந்திருப்பாளோன்னு ஒரு டவுட். அதுதான் ஒரு டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடுமேன்னு போறேன். நான் வரேன் ப்ளூ. டேக் கேர். பை”
“பை தீ. என்ன இவ ப்ளட் டெஸ்ட் எடுக்க போறேன்னு கிளம்பி அவ பாட்டுக்குப் போயிட்டா?”
ஆடிட் மீட்டிங்கை முடித்துவிட்டு மத்திய சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான் நவீன். பின் காலிங் பெல்லையும் இரண்டு முறை அழுத்தினான். மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததில் அவளுக்கு கதவு தட்டும் சத்தமோ, காலிங் பெல்லின் சத்தமோ கேட்கவில்லை. நவீன் அவளின் மொபைலுக்கு கால் செய்தான். கொஞ்ச நேரம் ரிங் ஆகி கட்டானது. வீட்டினுள் மொபைல் ஒலிக்கும் சத்தம் வெளியே நவீனுக்குக் கேட்டது ஆனால் மொபைல் பக்கத்திலேயே உறங்கிக் கொண்டிருக்கும் மிருதுளாவுக்கு கேட்கவில்லை. நவீன் அவர்கள் வீட்டு நம்பருக்கு கால் செய்தான். அந்த லாண்ட்லைன் ஃபோனின் சத்தம் மிருதுளாவின் காதைத் துளைத்தது. அவள் விருட்டென எழுந்துக்கொண்டு,
“யாரு அது இந்த நேரத்துல?”
என்று கூறிக்கொண்டே அலுத்துக் கொண்டே ரிசீவரை எடுத்து
“ஹலோ! நான் மிருதுளா பேசறேன்”
“ஹலோ மிருது. நான் தான் நவீன் பேசறேன்.”
“ம்…சொல்லுங்கோப்பா. எங்கேந்து பேசறேங்கள்? மணி ஒன்றரை ஆச்சு எப்போ ஆத்துக்கு வருவேங்கள்?”
“ம்….நான் நம்ம ஆத்து வாசல்லேந்து தான் கால் பண்ணறேன். வந்து கொஞ்சம் கதவைத் தொறக்கறையா?”
“ம்…அப்படியா!!
என்று ஜன்னலின் திரைசீலையை அகற்றிப் பார்த்து ரிசீவரை வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறந்து
“ஏன் ஆத்து வாசல்ல நின்னுண்டு கால் பண்ணினேங்கள்? காலிங் பெல் அடிச்சிருக்கலாம்! இல்ல கதவ தட்டிருக்கலாமில்லையா?”
“ரெண்டுமே பண்ணினேன். மூணாவதா உன் மொபைலுக்கும் கால் பண்ணினேன். நீ எடுக்கலை. அதுதான் லாண்ட்லைனுக்கு கால் பண்ணினேன். உனக்கு என்னமோ ஏதோன்னு பதறிப்போயிட்டேன். உனக்கு உடம்பு சரியில்லையா? டாக்டர் கிட்ட போலாமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல நவீ. நல்லா தூங்கிட்டேன். அதுதான். சரி நீங்க போய் முகம் கைக்கால் எல்லாம் அலம்பிண்டு வாங்கோ. நான் தட்டு கரண்டி எல்லாம் எடுத்து வெக்கறேன்”
“ம்…சரி சரி இதோ வந்துயறேன்”
என்று பாத்ரூமுக்குள் சென்ற நவீன் ஃப்ரெஷாகி வெளியே வந்து மிருதுளாவுடன் சேர்ந்து மத்திய உணவருந்தினான். மிருதுளா சாப்பிட்டதும் நவீனிடம்
“நீங்க மறுபடியும் நம்ம ஆஃபீஸுக்கு போக போறேங்களா நவீ?”
“இல்ல நவீ. நானும் நேத்து நைட்டு சரியாவே தூங்காததால ஒரு மாதிரி இருக்கு அதுனால நல்லா படுத்து தூங்கப் போறேன்.”
“ம்..அதுதான் சரி. வேற என்ன சொன்னா உங்க பொண்ணு?”
“நான் தான் அவ சொன்னத அப்படியே உன்கிட்ட சொல்லிட்டேனே. அதுதான். வேறெதுவும் அவ சொல்லல. அதுதான் சாயந்தரமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்காளே! அப்போ உன் சந்தேகங்கள் எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கோ. என்ன பொறுத்த வரைக்கும் அவ ஸேஃபா இருக்கான்னு நான் நம்பறேன். அவ்வளவு தான்.”
“ம்…சாயந்தரம் அவகிட்ட பேசிப்போம். இப்போ போய் நீங்க படுத்து தூங்குங்கோ.”
நவீன் உறங்கச் சென்று படுத்ததும் மிருதுளா அடுப்படியில் போட்டது போட்டபடி இருந்ததை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தவள் அப்படியே ஒரு பக்கமாக படுத்தாள். மீண்டும் உறங்கிப்போனாள்.
மாலை ஐந்து மணிக்கு எழுந்து முகம் கை கால் கழுவி காபி போட்டு நவீனை எழுப்பி இருவருமாக காபி குடித்துவிட்டு சுவாமிக்கு விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி முடித்தாள் மிருதுளா. மணி ஆறானது.
“என்ன நவீ சக்தி கால் பண்ணுவான்னு சொன்னேங்கள். எங்க இன்னும் கால் வரலையே! அவளுக்கு இப்போ டைம் மத்தியானம் ஒன்றரை ஆகறது.”
என்று நவீன் பேசி முடிக்கவும் மிருதுளாவின் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. உடனே மிருதுள் எடுத்துப் பார்த்து
“ம்…ம்…அவளே தான்.”
என்று சக்தியிடமிருந்து வந்த வீடியோ கால் ஐ ஆன் செய்தாள் மிருதுளா
“ஹாய் மா. எப்படி இருக்க? காலேல உனக்கு நான கால் பண்ணினேன் நீ எடுக்கவேயில்ல அதுனால அப்பாட்ட பேசினேன். ஆமாம் நீ ஏன் கால் ஐ எடுக்கல மா?”
“ஏன்டி நான் உனக்கு நேத்தேலேந்து எத்தனை தடவ கால் பண்ணிருப்பேன் தெரியுமா? நீ எடுத்தயா?”
“ஓ! பழிக்குப் பழியா மா! சூப்பர் சூப்பர்”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் சுவாமிகிட்ட எங்க பொண்ண காப்பாத்துப்பான்னு வேண்டிண்டு இருந்ததுல எடுக்கலை.”
“என்னை எதுக்கு காப்பாத்தணும்? நான் எதுல இல்ல யார்கிட்ட மாட்டிண்டிருக்கேன் என்னை அந்த சுவாமி காப்பாத்த!!”
“சக்தி விளையாடினது போதும். சொல்லு நேத்து நீ எங்க போயிருந்த? உனக்கு என்ன ஆச்சு? ஏன் உன் ஃபோன் சிவிட்ச்டு ஆஃப்ன்னே வந்தது?”
“அம்மா அம்மா. நான் நேத்து ஆஃபீஸ் போயிட்டு ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணினேன். அப்போ இந்த ப்ளூ தொணதொணன்னு எனக்கு கால் பண்ணினான். அது மீட்டிங்கை அட்டென்ட் பண்ண விடாம டிஸ்டர்ப் பண்ணித்தா. அதுனால என்னோட ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன். அதை அப்படியே மறந்துட்டேன். அதுக்கப்புறமா ஆஃபீஸ்லேந்து கிளம்பி பாரிஸ்ல விஷாலோட வீட்டுக்கு போறதுக்காக என் கார்ல போயிண்டிருந்தேன்.”
“சரி அதை ஏன் நீ எங்ககிட்ட சொல்லலை?”
“எதை?”
“நீ விஷாலோட ஆத்துக்கு போறதை”
“அது நான் போய் பேசிட்டு வந்துட்டு சொல்லாம்னு நினைச்சேன்!”
“சரி அந்த பையனோட அப்பா அம்மா எல்லாரும் பாரிஸ்ல தான் இருக்காளா?”
“இல்ல அவா எல்லாரும் இந்தியால சென்னைல இருக்கா.”
“அப்புறம் எதுக்காக அவா பேரன்ட்ஸோட பேச நீ பாரிஸ் போகணும்? உன் வீட்டிலிருந்த படியே வீடியோ கால்ல பேசிருக்கலாமே!”
என்று மிருதுளா கேட்டதும் நவீன்
“அய்யோ மிருது”
என்று தலையில் தன் கையால் தட்டிக்கொண்டான். அதைப் பார்த்த மிருதுளா
“இஸ்”
என புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்துக் கொண்டாள்.
“அப்படி வா வழிக்கு என் மிருது அம்மா. அப்படீன்னா நான் பாரிஸுக்கு போறதும், விஷால சந்திக்க இருந்ததும், அவன் பேரன்ட்ஸோட பேச போறதும் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனாலும் தெரியாத மாதிரியே கேட்கறதா நெனச்சுண்டு பேசற பெரிய புத்திசாலி அம்மாவே… ப்ளூகிட்டேந்து கறந்த விஷயங்களா?”
“ஆமாம். நேத்து நீ மொபைல கால் எடுக்கலன்னதும் வீட்டுக்கு கால் பண்ணினோம். ப்ளூ தான் இந்த விவரங்கள் எல்லாம் சொல்லித்து. அதெல்லாம் விடு. சரி அங்க போன வந்த. உன்னப் பத்தின விவரம் ஏதும் தெரியாம, உன்ன உன் மொபைல்ல கான்டாக்ட்டும் பண்ண முடியாம நாங்க ரெண்டு பேரும் எப்படி தவிச்சுப் போனோம் தெரியுமா!”
“தெரியும்மா. அதுதான் ஃபோனை ஆன் பண்ணினதும் உனக்கு தானே முதல்ல கால் பண்ணினேன். அப்புறம் என்னவாம். சரி சரி ஆம் வெரி வெரி சாரி ஃபார் தட்.”
“ம்…ஆமாம் ஆமாம். இந்த ரெண்டெழுத்தை சொல்லிட்டா நாங்க பட்ட மனக்கஷ்டம் மறஞ்சுடுமா என்ன?”
“அம்மா அது அஞ்சு எழுத்து வார்த்தை”
“ம்…தமிழ்ல ரெண்டு எழுத்து தான்.”
“இப்போ அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இதுதான் ரொம்ப முக்கியமான டாப்பிக் டு பீ டிஸ்கஸ்டு பாருங்கோ. இங்க குடு மிருது. நான் அவகூட பேசட்டும். சரி சக்தி கண்ணா பாரீஸ் போனயே விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசினியே அவா எல்லாரும் எப்படிப்பட்டவாளா உன் மனசுக்குப் படறா? நல்ல மனுஷா தானே!”
“ஆங் நானும் அதைப்பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு நெனச்சேன் சக்தி”
“அப்புறம் என்னத்துக்கு ரெண்டு வார்த்தை அஞ்சு வார்த்தைனுட்டு வார்த்தை விளையாட்டு விளையாடிண்டிருந்தயாம்?”
“நான் அவகிட்ட நல்லா நறுக்கு நறுக்குனு கேட்கணும்னு இருந்தேன். ஆனா எல்லாத்தையும் அவளப் பார்த்ததும் மறந்துட்டேன். ஆமாம் நீ கால் பண்ண ஏன்டி இவ்வளவு நேரமாச்சு? நான் உன்கிட்டேந்து எங்க டைம் மூணு மணிக்கெல்லாம் கால் ஐ எதிர்ப்பார்த்தேன். தெரியுமா?”
“அம்மா நான் வீட்டுக்கு வந்ததே லேட்டு. அப்பாட்ட பேசிட்டு நல்லா தூங்கிட்டேன். ஒரு மணிக்கு தான் எழுந்துண்டேன். நல்ல பசி வேற. ஸோ ப்ரஷ் பண்ணிட்டு ரெண்டு பிரெட்ட டோஸ்ட் பண்ணிண்டு ஒரு கப் காஃபி போட்டுண்டு வந்து உட்கார்ந்து அதை சாப்டுண்டே உனக்கு கால் பண்ணினேன்.”
“மறுபடியும் டாப்பிக் மாறிடுத்து. மிருது நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கயா? சக்தி அப்பா கேட்டதுக்கு நீ ஒண்ணுமே பதில் சொல்லலையே மா!”
“நான் தான் பாரீஸ் போகவேயில்லையேப்பா. அப்பறம் எங்கேந்து விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசறது?”
“என்னது நீ பாரீஸ் போகவே இல்லையா?
என்று நவீனும் மிருதுளாவும் ஒருமித்துக் கேட்டனர்.
“ம்…ஆமாம் நான் பாரீஸ் போகலை. போகலைங்கறத விட போக முடியலைன்னு தான் சொல்லணும்”
“நாங்க நீ அங்க போனதால தான் வீட்டுக்கு லேட்டா வந்திருக்கன்னு… இல்ல நெச்சிண்டிருந்தோம். நீ என்னடான்னா பாரீஸ் போகவேயில்லங்கற!!! ஒரே குழப்பமா இருக்கு சக்தி. அப்போ விடியக்காலேல வர எங்கபோயிருந்த நீ? என்னதான் நடந்தது?”
காலை விடிந்து மணி ஏழானது நவீனும் மிருதுளாவும் இரவு முழுவதும் அவர்களின் மகள் சக்தியை எண்ணிக்கொண்டே வெகுநேரம் தூங்காமல் இருந்ததில் மணி ஏழானது கூட தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தனர். சட்டென்று மிருதுளா எழுந்தாள். மணியைப் பார்த்தாள். கடிகாரம் ஏழரை என்றுக் காட்டியது. சக்திக்கு ஃபோன் செய்து பார்ப்போமா என்று நினைத்து மொபைலை எடுத்தவள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நவீனைப் பார்த்தாள். பின் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்து மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மனம் ஒன்று நினைத்தது ஆனால் கைகள் சக்தியின் நம்பரை அழுத்திட துடித்தது. அவள் சற்று நிதானித்துக் கொண்டு மனம் சொல்வதைக் கேட்கலானாள்.
“இப்போ சக்திக்கு விடியற்காலை ரெண்டரைலேந்து மூணு மணிக்குள்ள இருக்கும். ஒரு வேளை அவ நைட்டு லேட்டா வந்துட்டு இப்ப தான் தூங்க போயிருந்தான்னா!!! அப்பறம்… நான் தேவையில்லாம குழந்தைய எழுப்பி விட்டுருவேன். வேண்டாம் வேண்டாம்! அவ எழுந்துரிக்கட்டும். சரி வீட்டு நம்பருக்கு கால் பண்ணினா என்ன? இல்ல இல்ல அந்த ப்ளூவும் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கும் அப்புறம் சக்தி தான் எழுந்து வரவேண்டியிருக்கும். அப்படி அவ வீட்டுக்கு வந்திருந்தான்னா நிச்சயம் எங்க கால்ஸை பாத்திருப்பா… அப்படி பார்த்திருந்தான்னா உடனே எங்களுக்கு மெஸேஜாவது பண்ணிருப்பாளே! ஏன் பண்ணல? அப்படீன்னா அவ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தானே அர்த்தம்! கால் பண்ணிடலாமா? ம்…சரி பண்ணித்தான் பார்ப்போம். இதுக்கு மேல என்னால இந்த டென்ஷன தாங்க முடியாது. ஆனா நான் கால் பண்ணி அவ மொபைல் மறுபடியும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்துதுன்னா?”
என்று தனக்குள் ஒரு வினாவிடை அமர்வு நடத்திக்கொண்டிருக்கும் போது அவளின் தோளைப் பிடித்து உலுக்கி
“ஏய் மிருது! காலையில மொபைலை கையில வச்சுண்டு என்ன யோசனை? மிருது கால் பண்ணினாளா?”
“ம்…ஆமாம் நவீன். அவள்ட்ட பேசிட்டு இப்ப தான் வச்சேன்”
“அப்படியா! என்னை ஏன் எழுப்பலை? அப்போ நான் உடனே அவளைக் கூப்பிட்டு பேசட்டும்.”
“ம்..இல்ல இல்ல. இப்ப வேண்டாமே நவீன்.”
“ஏன் வேண்டாம்ங்கற? அப்படீன்னா நான் டென்ஷனாகக் கூடாதுன்னுட்டு நீ சும்மா சொல்லறயா?”
“அய்யோ! இல்ல நவீன். அவ இப்ப தான் என்கூட பேசிட்டு தூங்க போயிருக்கா. இப்போ நீங்க அவளுக்கு கால் பண்ணி அவள எழுப்பிவிட போறேங்களா?”
“ஓ!! சரி சரி சரி அதைச் சொல்ல வேண்டியது தானே! ஏன் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் பண்ணிருந்தாளாம்?”
“அது…அது…அது வந்து… ஆங் நாம சொல்லிண்டா மாதிரியே தான். அவ ஃபிரென்ட்ஸோட அவுட்டிங் போயிருக்கா அதுக்கு முன்னாடியே ஏதோ மீடிங்குன்னு… ப்ளூ சொல்லித்தே அப்பவே ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினாலாம். அப்புறம் மறுபடியும் சுட்விச் ஆன் பண்ண மறந்துட்டாளாம். ரொம்ப சாரின்னு சொன்னா”
“அப்பாடா! இப்போ தான் உயிரே திரும்பி வந்தா மாதிரி இருக்கு மிருது.”
“ம்..ஆமாம் ஆமாம் நவீ. உங்களுக்கு திரும்பி வந்துடுத்து…”
“ம்…என்ன சொன்ன?”
“ஆங் அது ஒண்ணுமில்ல நவீ. நீங்க ப்ரெஷ் பண்ணிட்டு வாங்கே நான் காபி போட்டு தர்றேன். போங்கோ”
“ஓகே டன். இதோ வந்துடறேன்”
என்று நவீன் பாத்ரூமுக்குள் சென்றதும் மிருதுளாவின் கண்கள் கலங்கின அவள் அடுப்படியிலிருந்தே அவர்கள் வீட்டு பூஜை அறையைப் பார்த்து
“ம்…இதோ. நீங்க உங்க பேப்பரை படிச்சிண்டிருங்கோ இதோ கொண்டு வர்றேன்.”
என்று நவீன் கண்டுப்பிடித்து விட கூடாதே என்று கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு காபியை எடுத்துச் சென்று நவீனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட நவீன் அவளிடம்
“என்ன மிருது? எனக்கு மட்டும் கொண்டு வந்திருக்க! எங்க உன் காபி?”
என்று மனதிற்குள் படக் படகென்று அவளின் இதயம் துடித்தது அவளுக்கு கேட்டது.
“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க மிருது?”
“ஒண்ணுமில்ல நவீ. நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ. நான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைக்கறேன்.”
“ஆங்…அப்போ வாக்கிங்?”
“இன்னைக்கு நாம லேட்டா எழுந்துண்டோம் ஸோ நோ வாக்கிங்.”
“சரி இன்னைக்கு நம்ம ஆடிட்டர் பதினோரு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தார இல்ல…”
“ஆங் ஆமாம். அதுக்கென்ன இப்போ?”
“இல்ல நாம சக்திக்கு அப்போ காலையில ஆறரை மணி ஆகிருக்குமே! அவ எழுந்துக்கற டைம் தானே. அவகிட்டே ஃபோன்ல பேசிட்டா கொஞ்சம் மனசு லேசாகிடும். அதுதான் ஆடிட்டர் மீட்டிங்க ஒரு ஹாஃப் அன் அவர் தள்ளிப்போடட்டுமா?”
“ஏன் நவீ இப்படி இருக்கேங்கள். நம்ம ஆடிட்டர் எவ்வளவு பிஸியானவர்ன்னு உங்களுக்கே நன்னா தெரியும். அவரோட இந்த மீட்டிங்கை போன மாசம் டிசைட் பண்ணி கன்பர்மேஷனும் வாங்கிண்டோம். இப்போ போயி மாத்திக்க சொன்னா! அப்பறம் மறுபடியும் அவருக்காக நாம வெயிட் பண்ண வேண்டி வரும். பேசாம மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்கோப்பா”
“என்னது பண்ணுங்கோ வா? நீயும் தானே வரனும். உனக்கு தான் அக்கௌன்ட்ஸ் டீட்டேயில்ஸ் எல்லாம் தெரியும்.”
“ஆங்…ஆங். நான் எல்லாத்தையும் நம்ம அஃபீஸ் ல என்னோட செக்கரெட்ரி ரேணுகிட்ட ஃபோன்ல சொல்லிடறேன். அவ மீட்டிங்க்கு வேண்டிய ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணி வெப்பா.”
“மிருது நீ ஏன் வர மாட்டேங்கற? நம்ம சக்தி நல்லா இருக்கா இல்லையா?”
“நவீ நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமே ஆகல. அதுக்காக நான் அப்படி சொல்லலை. நைட்டு ஃபுல்லா தூங்காததால தல வலிக்கறது அதுதான். வேற ஒண்ணுமில்ல. அதுவுமில்லாம சக்தி லேட்டா தான் எழுந்துப்பேன்னு என்கிட்ட ஃபோன்ல சொன்னா. நீங்க அவள நம்ம டைம் பதினோரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ.”
“ம்…ம்…சரி. நான் போய் குளிச்சுட்டு நம்ம ஆஃபீஸுக்கு புறப்படறேன்.”
நவீன் குளித்து வந்ததும் மிருதுளா அவனுக்கு டிபன் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு நவீன் ஆஃபீஸுக்கு சென்று வர காருக்குள் ஏறி காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் தெரு முனையைத் தாண்டியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வாசல் கதைவைத் தாழிட்டு வீட்டினுள் வந்ததும் ஹாலில் உட்கார்ந்த மிருதுளா ஓவென்று அழுதுக்கொண்டே சக்தி மொபைலுக்கு கால் செய்தாள் மீண்டும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வாய்விட்டு
“அடியே சக்தி எங்கடி போயிருக்க? கால் ல ஏன்டி எடுக்க மாட்டேங்கற?”
என்று கூறிக்கொண்டே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். ரொம்ப நேரம் கால் சென்றுக் கொண்டே இருந்தது. ஆனால் ப்ளூவும் கால் ஐ எடுக்கவில்லை. பரிதவித்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை. நேராக பூஜை அறையில் அமர்ந்துக்கொண்டு வேண்டலானாள்.
ஒரு இரண்டு மணி நேரமானதும் மிருதுளாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்த ஃபோனின் சப்தம் நின்றது. அவள் சக்தியையே எண்ணிக்கொண்டு அப்படியே உறைந்து அமர்ந்திருந்ததால் ஃபோனின் வந்த சப்தமும் அது நின்று போனதும் தெரியாதிருந்தாள்.
இன்னுமொரு பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மீண்டும் மிருதுளாவின் மொபைல் ஒலித்தது. அந்த சப்தம் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல உணர்ந்த மிருதுளா சுயநினைவுக்கு வந்ததும் ஓடிப்போய் தனது மொபைலை எடுத்து யார் என்ன என்று கூட பார்க்காமல்
“ஹலோ! ஹலோ!”
“ஹலோ மிருது! ஏன் இவ்வளவு பதட்டமா பேசற? என்ன ஆச்சு?”
“இல்லையே இப்ப தான் பண்ணினேன். சரி ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லத்தான் கால் பண்ணினேன். நம்ம சக்தி எனக்கு கால் பண்ணினா.”
“என்னது நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினாளா? என்ன சொல்லறேங்கள் நவீ?”
“ஆமாம் மிருது. நான் மீட்டிங்குக்கு போயிண்டிருந்தப்போ அவகிட்டேந்து எனக்கு கால் வந்துது. அவ உனக்கு தான் ஃபர்ஸ்ட் கால் பண்ணினாளாம். ஆனா நீ எடுக்காததால எனக்கு பண்ணினா. அவ ரொம்ப டையர்டா இருக்காளாம். ரெஸ்ட் எடுத்துட்டு அவளோட ஈவினிங் டைம்ல நமக்கு மறுபடியும் கால் பண்ணறதா சொன்னா. நானும் சரின்னுட்டேன்.”
“அச்சோ நவீ. அவ எங்க போயிருந்தாளாம்? எப்ப ஆத்துக்கு வந்தாளாம்? மொபைல் ஏன் சுவிட்ச் ஆஃபா இருந்துதாம்?”
“ம்…நீ தான் காலையிலேயே அவகிட்ட பேசினேன்னு சொன்னயே! அப்பவே இதெல்லாம் நீ அவகிட்ட கேட்கலையா மிருது?”
“ஷ்…நவீ!! அது வந்து…”
“ஏன் மிருது? ஏன்? இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்ல முயற்சிக்கற? அப்படீன்னா நீ அவளோட காலையில பேசல தானே! எங்கடா நான் மறுபடியும் ஹார்ட்ட பிடிச்சுண்டு ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பேனோன்னு தானே நீ என்கிட்டேந்து மறச்ச?”
“அய்யோ நவீ. ஐ ஆம் எக்ட்ரீமிலி சாரி. மொதல்ல நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினது உண்மையா? இல்ல நீங்களும் எனக்காக பொய் சொல்லறேங்களா? ப்ளீஸ் சொல்லுங்கோ நவீ. காலையிலேந்து தவிச்சுண்டிருக்கேன்.”
“ம்…ம்…எனக்கு அப்பவே நீ பொய் சொல்லறன்னு தோனித்து மிருது. இல்லாட்டி ஆடிட் மீட்டிங்குக்கெல்லாம் நீ வராம இருந்ததே இல்லையே!”
“அச்சோ அச்சோ நவீ… ப்ளீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோளேன்.”
“ஆமாம் சக்தி தான் ஃபோன் பண்ணினா. நான் பொய் சொல்லலை. அவ ஏதோ தூக்க கலக்கத்துல பேசினா. அவளோட ஆஃபீஸ் மீட்டிங் போது மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணினாளாம். அதுக்கப்புறம் அதை மறந்துட்டாளாம். இப்போ தான் ஞாபகம் வந்துதாம். ஃபோனை எடுத்துப் பார்த்தாளாம் நம்மகிட்டேந்து நிறைய தடவ கால்ஸ் வந்ததால என்னமோ ஏதோன்னு கால் செய்தாளாம். இதை எல்லாம் உன்கிட்டயும் சொல்ல சொல்லி சொன்னா. இல்லாட்டி நீ டென்ஷனாகிடுவேன்னும் சொன்னா. அவ்வளவு தான் அதுக்கப்புறம் தூக்கம் வர்றதுன்னும், தூங்க போறதாவும், சாயந்தரமா பேசறேன்னும் சொல்லி ஃபோன வச்சுட்டா. இது தான் நானும் சக்தியுமா பேசிண்டது. ஸோ ஷு ஈஸ் ஆல்ரைட். அவகூட பேசினதுக்கப்பறமா தான் நிம்மதியானேன். இனி மீட்டிங்கை நல்லபடியா முடிச்சுட்டு ஆத்துக்கு வரேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மிருது. நான் நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிண்டு வரேன். சரியா?”
“ம்…சரி சரி. தாங்க்ஸ் பா எனக்கு உடனே தகவல் சொன்னதுக்கு. இல்ல நான் சமச்சுடறேன்”
“ம்..ஹூம்.. நீ ரொம்ப டென்ஷனா இருக்க. அதுனால இன்னைக்கு நாம ஹோட்டலேந்து வாங்கியே சாப்பிடுவோம். பை பை ஆடிட்டர் இஸ் வெயிட்டிங்.”
“ம்…பை நவீ”
என்று மிருதுளா ஃபோனை வைத்ததும் சக்திக்குக் கால் செய்தாள். ரிங் போனது ஆனால் சக்தி ஃபோனை அட்டென்ட் செய்யவில்லை. உடனே மிருதுளா தன் மனதிற்குள்
“மனுஷால இப்படி பரிதவிக்க விட்டுட்டு இவ அப்படி எங்கதான் போனான்னு கேட்கணும்னு ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாளே!! ம்…சாயந்தரம் ஃபோன் பண்ணட்டும் அப்போ வச்சுக்கறேன் அவளுக்கு. ஆமாம் அந்த ப்ளூ ஏன் கால் ஐ எடுக்கல? அது எங்க போச்சு? இந்த பசங்கள வெளிநாட்டுல படிக்கவும் வேலைக்கும் அனுப்பிட்டு பெத்தவா படற பாடு இருக்கே ஆண்டவா!!! அப்பா காலையிலேந்து பட்ட பதட்டத்துக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சிருக்கு. ஆனாலும் அவ கிட்ட பேசறவரைக்கும் என்னால ஃப்ரீ ஆக முடியாது. எனிவேஸ் கடவுளே எங்க மகள் பத்திரமாகத்தான் இருக்கான்னு எங்களுக்கு அவ மூலமாவே தகவல் தெரிவித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். நான் வேண்டிண்ட படியே எல்லா நிறைவேத்திடறேன். அப்பாடா”
என்று அமைதியாக கொஞ்ச நேரம் படுத்துக்கொண்ட மிருதுளா. ஆழ்ந்து தூங்கலானாள்.
கடத்தப்பட்ட சக்தியிடமிருந்து ஃபோன் வந்ததாக நவீன் சொல்வது உண்மையா? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அவள் எங்கிருந்து கால் செய்திருப்பாள்? அவள் எப்படி கடத்தப்பட்டவர்களிடமிருந்து தப்பித்திருப்பாள்? அதைப் பற்றி எல்லாம் நவீனிடம் ஏன் அவள் ஒன்றுமே கூறவில்லை? இல்லை அவள் கூறி நவீன் மிருதுளாவிடம் சொல்லாமல் மறைத்தானா? என பல கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாமும் வரும் நாட்களில் தேடுவோம்.
ஃபோன் கால் பேசி முடித்ததும் நவீனின் வாடிய முகம் கண்டு
“ஏன் ரொம்ப சோகமா இருக்கேங்கள்? என்ன ஆச்சு?”
“ம்… ஒண்ணுமில்லை!”
“உங்க வாய் தான் ஒண்ணுமில்லைனு சொல்லறது. ஆனா உங்க முகம் ஏதோ இருக்குன்னு பளிச்சுன்னு சொல்லறதே!”
“ம்…அப்படியா? அப்போ என் முகத்துக்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ.”
“சரி சரி எதுவாயிருந்தாலும் கவலைப் படாதீங்கோ. நாம ரெண்டு பேருமா எவ்வளவு பார்த்தாச்சு லைஃப்ல. ஜஸ்ட் டேக் இட் ஈஸி மை டியர் ஹஸுபண்டு. நான் டின்னர் பண்ணபோறேன்”
“ம்…ம்ம்…என்ன நீ ஏன் என்னனு கேட்காமயே சமாதனம் பண்ணற… டின்னர் பண்ண போறேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு அடுப்படிக்குள்ள போயிண்டேயிருக்க?”
“ஹலோ மிஸ்டர் நவீன் என்ன விளையாடறேளா? நீங்க ஃபோன வச்சதுமே என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்? நீங்க சரியா பதில் சொல்லலை நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்க தொடங்கிட்டேன். இப்போ நான் டின்னர் பண்ணனுமா வேண்டாமா?”
“ஓகே சார் ஜி. உங்களோட இந்த டென்ஷனோட காரணம் என்னனு நானே சொல்லட்டுமா!”
“தெரியுமா? எப்படி? எப்போலேந்து மைன்ட் ரீடிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்ச?”
“ஆமாம்! இதுக்கு அதெல்லாம் வேற கத்துக்கணமாக்கும். என்னத்த? எப்பவும் போல உங்க பொண்ணு கால் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டா. உடனே டென்ஷன் ஆகிருப்பேங்கள். இதுதானே! விடுங்கோப்பா. அவ என்ன சின்ன குழந்தையா? அவளுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும். அவளே எப்பவும் போல அப்பறமா கால் பண்ணுவா. ஸோ வெயிட் பண்ணுங்கோ.”
“அதுக்கில்ல மிருது. நான் மொபைலுக்கு கால் பண்ணினதும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்தது. அவ ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்? இது வரை அவ அப்படி பண்ணினதே இல்லையே! அதுவுமில்லாம நான் அவ வீட்டு நம்பருக்கும் கால் பண்ணினேன் தெரியுமா!! அங்கேயும் அவ இல்லன்னு ப்ளூ சொல்லித்து.”
“அச்சச்சோ நீங்க என்ன அபியும் நானும் பிகாஷ்ராஜ் மாதிரி ஆகிண்டிருக்கேங்கள்? அவ எங்கயாவது ஃபிரண்ட்ஸோட போயிருப்பா!!”
“ம்…ஆமாம் ஆமாம்… ப்ளூ சொல்லித்து அவ ஆஃபிஸுலேந்து நேரா பாரிஸ் போயிருக்காளாம்!”
“சரி போகட்டும். அங்க ஏதாவது வேல இருந்திருக்கும்.”
“ஆஃபிஸ் வேலை இல்ல மிருது. அவ விஷாலோட பேரன்ட்ஸ் கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக போயிருக்காளாம்.”
“சரி பேசட்டுமே. நமக்கு எப்படி விஷாலோட பேசணும்னு தோனறதோ அதே போல தானே அவாளுக்கும் நம்ம சக்தியோட பேச தோனிருக்கும். அதுதான் போயிருப்பா.”
“நாமளும் தான் அந்த பையன்ட்ட பேசணும்னு சொன்னோம். ஏன் நம்மளோட அவன இவ ஆத்துக்கு வரவச்சு பேசவச்சுட்டு… அப்புறமா இவ அவாளோட பேச போயிருக்கலாமில்லையா? அந்த பையன் எப்படி என்னனு நாம தெரிஞ்சுண்டதுக்கு அப்பறமா அவள் அங்க போயகருக்கலாம்ன்னு எனக்கு படறது.”
“ம்…ஹும்… நீங்க பிரகாஷ் ராஜ்ஜே தான் போங்கோ. அவ நம்ம பொண்ணு எப்போதும் தப்பான முடிவு எடுக்க மாட்டா. கவலைப் படாதீங்கோ நவீ”
“அது சரிதான். போகட்டும் நான் வேண்டாங்கல. நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்லையா. அதுதான் எனக்கு வருத்தத்த தர்றது”
“நீங்க ஒரு வருத்தமும் படவேண்டிய அவசியமே இல்ல. இருங்கோ நான் சூடா நாலு இட்லி எடுத்துண்டு வரேன். உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி தொக்கு பண்ணிருக்கேன். சாப்டுட்டு மாத்திரைய போட்டுக்கோங்கோ. சக்தி பத்தின கவலை உங்களுக்கு நேவையே இல்ல. சரியா”
என்று நவீன் பதற்றமடையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மிருதுளா அவனை தேத்திவிட்டு அடுப்படிக்குள் டின்னர் செய்துக்கொண்டே மனதிற்குள்
“என்ன ஆச்சு? ஏன் இந்த பொண்ணு மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா? ஒரு வேள முன்ன நடந்தா மாதிரியே மொபைல தொலச்சிருப்பாளோ? அப்படின்னா எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாளே!! நவீன் சாப்டுட்டு தூங்கட்டும். அப்புறமா மறுபடியும் நான் அவளுக்கு கால் பண்ணிப் பாக்கறேன்.”
யோசித்துக் கொண்டே வேலையை செய்துக் கொண்டிருக்கையில் நவீன் ஹாலில் இருந்து
“என்னமோ டின்னர் பண்ணித்தரேன்னும். தக்காளி தொக்குன்னும் எல்லாம் சொன்ன? ஆனா இன்னும் ஒண்ணும் வரலையே! மிருது! மிருது!”
நவீனின் குரல் கேட்டதும் சட்டென்று தனது மகளைப் பற்றிய யோசனைகளிலிருந்து சுயநினைவுக்கு வந்த மிருதுளா கடகடவென தட்டில் இட்லியும் தயிரும் வைத்து எடுத்துச் சென்று நவீன் முன் வைத்தாள். அதைப் பார்த்த நவீன்
“உனக்கு என்ன ஆச்சு மிருது?”
“ம்..ஏன் கேட்கறேங்கள்?”
“இல்ல தக்காளி தொக்குன்னு சொல்லிட்டு இப்போ வெறும் தயிர் வச்சு கொண்டு வந்திருக்கயேன்னு கேட்டேன்.”
“ஓ! சாரி நவீ. இருங்கோ தொக்கு கொண்டுண்டு வரேன்.”
என்று கூறி கொண்டு வந்து கொடுத்து, அவன் சாப்பிட்டதும் மாத்திரையையும் கொடுத்தாள். எப்போதும் மாத்திரையை போட்டுக்கொண்ட அரைமணிநேரத்தில் தூங்கும் நவீன் அன்று அவனது மனக்குழப்பதால் தூங்காமல் இருந்தான். அவன் தூங்கினப் பிறகு தான் சக்தியோட பேசி விஷயத்தை தெரிஞ்சுக்க முடியுமேன்னு காத்திருந்த மிருதுளா நவீனிடம்
“தூக்கம் வர்றது. ஆனா தூங்க என் மனசு விட மாட்டேங்கறது மிருது. என்னமோ தெரியல மத்தியானத்துலேந்து எனக்கு சக்தி ஞாபகமாவே இருக்கு.”
“கவலைப் படாதீங்கோ நவீ. அவ நேத்து நம்ம கூட நல்லா தானே பேசினா! அப்புறமென்ன? இன்னைக்கு அவ அவளோட வருங்கால மாமனார் மாமியாரோட பேச பேயிருக்கா. அவ அந்த டென்ஷன்ல கூட ஃபோன எடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா”
“எடுக்காம இருந்தா ஓகே தான். ஆனா ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்னு தான் யோசனையா இருக்கு!”
“இருக்கலாமோ என்ன அப்படித்தான் இருக்கும். அவ அவாளோட பேசிண்டிருக்கும் போது நீங்க கால் பண்ணினா அது அவ்வளவு சரியா இருக்காது நவீ. புரிஞ்சுக்கோங்கோ. அவ தான் அந்த பைனை நம்ம கூட வீடகயோ கால்ல பேச வைக்கறேன்னு சொல்லிருக்காளோனோ அப்புறம் ஏன் உங்களுக்கு அவசரம். எழுந்திரிங்கோ வாங்கோ போய் படுக்கலாம். இல்லாட்டி நாளைக்கு உங்களுக்கு முடியாம போயிடும். ம்…கிளம்புங்கோ நவீ”
“ஒரே ஒரு தடவ சக்திக்கு கால் பண்ணிப் பார்த்துடவா?”
“நவீ திஸ் ஈஸ் டூ மச். அவ சின்ன குழந்தைக் கிடையாது. தயவுசெய்து வாங்கோ வந்து படுத்து தூங்குங்கோ. காலையில அவளே கால் பண்ணி உங்க கூட பேசுவா.”
“ம்..சரி சரி… வரேன்.”
“ம்…படுங்கோ இதோ நான் வந்துடறேன்”
“நீ எங்க போற?”
“எனக்கு கிட்சன்ல கொஞ்சம் வேலையிருக்குப்பா. அதை முடிச்சுட்டு வந்துடறேன். நீங்க தூங்குங்கோ. லைட்ட ஆஃப் பண்ணறேன். சரியா. குட் நைட் நவீ. ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”
“குட் நைட் மிருது.”
என்று நவீனை தூங்குவதற்காக படுக்க வைத்துவிட்டு அவன அடுப்படியிலிருந்த வேலைகளை வேகவேகமாக முடித்து மெல்ல நவீன் உறங்கிக்கொண்டிருந்த அறையினுள் எட்டிப்பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும் வேகமாக தனது மொபைலை எடுத்து சக்திக்கு கால் செய்தாள். அப்போதும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வீட்டு நம்பருக்கு கால் செய்துப் பார்த்தாள். மீண்டும் ப்ளூவிடமிருந்து அதே பதில் தான் வந்தது. மிருதுளாவும் நவீனைப் போலவே பதற்றமானாள். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த மிருதுளா உடனே சக்தியுடன் வேலை பார்க்கும் அவளின் சினேகிதி ருத்ராவுக்கு கால் செய்தாள்.
“ஹலோ ருத்ரா. நான் சக்தியோட அம்மா பேசறேன் மா. எப்படி இருக்கமா?”
“ஹாய் ஆன்டி. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? அங்கிள் எப்படி இருக்கார்?”
“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் மா. தாங்க்ஸ். நான் வந்து உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா!!”
“எதுக்கு ஆன்டி. ஏன் தயங்குறீங்க. எதுவானாலும் செல்லுங்க ஆன்டி. அங்கிளுக்கு மறுபடியும்…”
“ச்சே ச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்லமா. சாயந்தரத்துலேந்து சக்தி மொபைலுக்கு கால் பண்ணி பார்த்துண்டே இருக்கோம் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னே வர்றது மா. அதுதான் உனக்கு அவ ஏதாவது ஃபோன் பண்ணினாளான்னு கேட்க தான் உன்னை நான் கால் பண்ணினேன் மா.”
“இல்ல ஆன்டி. அவ எனக்கு எந்த காலும் பண்ணல. மோரோவர் அவ அவளோட புது ஃபிரண்ட் யாரோ விஷாலாம் அவன் வீட்டுக்கு பாரிஸுக்கு போறதா சொல்லி காலையில பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பி ஆஃபீஸுக்கு ஹாஃப் டே லீவு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாளே!”
“ஆங் அத எங்ககிட்ட சொன்னாமா. ஆனா அதுக்கப்பறமா தான் அவள கான்டாக்ட் பண்ண முடியலை. அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு”
“ஆனா அவ இன்னேரத்துக்கு பாரிஸ் போய் சேர்ந்திருக்கணுமே மா! ஆனா அவ ஏன் இன்னும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கா?”
“ஆன்டி அதுவும் நல்ல பாயின்ட் தான்… ம்…”
“சரி மா. உன்கிட்ட அவளோட அந்த பாரிஸ் ஃபிரண்ட் நம்பர் இருக்காமா?”
“சாரி ஆன்டி என்கிட்ட இல்லையே. தீ என்கிட்ட அந்த பையனைப் பத்தி இன்னைக்கு காலையில தான் சொன்னா. நானும் அவனை பார்த்ததில்ல. நம்பர் எதுவும் இல்ல ஆன்டி.”
“ம்….அப்படியா!”
“ஆன்டி இப்போ உங்களுக்கு டைம் பதினொன்னு ஆகிருக்குமே! டு நாட் வரி ஆன்டி. அவளே கால் பண்ணுவா. நானும் அவள கான்டாக்ட் பண்ண முயற்சிக்கறேன். கான்டாக்ட் பண்ணினா உடனே உங்களுக்கு ஃபோன் பண்ண சொல்லறேன். நீங்க போய் தூங்குங்க ஆன்டி. ஒண்ணுமிருக்காது.”
“அய்யோ ஆன்டி. எதுக்கு சாரி எல்லாம் சொல்லறேங்கள். என்னோட அப்பா அம்மாவும் என்னோட பேசமுடியலைன்னா சக்தியை தான் கால் பண்ணி கேட்பாங்க. டோன்ட் வரி டூ மச் ஆன்டி. அவளே உங்களுக்கு கால் பண்ணுவா பாருங்க. ஏதாவது வேலையில ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பா… அத மறுபடியும் சுவிட்ச் ஆன் பண்ண மறந்திருப்பா. அவ்வளவு தான். இது மாதிரி நானே நிறைய தடவ பண்ணிருக்கேன் ஆன்டி. ஸோ கவலைப் படாம போய் நிம்மதியா தூங்குங்க ஆன்டி.”
“சரி மா. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் ருத்ரா. நான் வச்சுடறேன். பை”
“ம்…பல ஆன்டி. குட் நைட் அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் ஆன்டி. பை பை.”
என்று மொபைலை ஆஃப் செய்தும் மொபைலயே வெறித்துப் பார்த்துக்கொண்டே கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மிருதுளா. சட்டென மேலே முகத்தை தூக்கியவள் அதிர்ந்துப் போனாள். ஏனெனில் அவள் அமர்ந்து ருத்ராவுடன் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அறையின் கதவில் சாயந்தபடி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தான் நவீன். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவளின் கண்களைத் துடைத்துக் கொண்டு
“நீங்க எப்போ வந்தேங்கள்? தூங்கலையா?”
“நம்ம சக்திக்கு என்ன ஆச்சு மிருது? உண்மைய சொல்லு மிருது!”
“அய்யோ! அவளுக்கு என்ன ஆகிடப் போறது நவீ. அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. வாங்கோ நாம போய் படுத்துண்டு தூங்கலாம்.”
“இல்ல இல்ல… சம்திங் ராங். நீ இப்போ அவளோட ஃபிரண்ட் ருத்ரா கிட்ட தானே பேசிண்டிருந்த? அப்படின்னா அவளோட மொபைல் இன்னமும் சாவிட்ச் ஆஃப்ல தானே இருக்கு! எங்க நம்ம பொண்ணு சக்தி மிருது?”
“நவீ…நவீ…நவீ!! நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாலை ஆகவும் ஆகாது. வாங்கோ தூங்குங்கோ ப்ளீஸ்”
“அப்புறம் ஏன் உன் கண்ணுலேந்து கண்ணீர் வந்துது?”
“பின்ன எனக்கும் கவலையிருக்காதா என்ன? ஆனா உங்கள மாதிரி எல்லாம் நான் கற்பனை பண்ண மாட்டேன். அவ காலையில கட்டாயமா ஃபோன் பண்ணுவா. இப்போ வாங்கோ”
என்று குழந்தையை சமாதானம் செய்வதுப் போல செய்து நவீனை மீண்டு அவர்கள் அறைக்கு அழைத்துப் போய் படுக்கவைத்தாள் மிருதுளா.
“ஹேய் மிருது! இப்போ மறுபடியும் எங்க எழுந்துப் போற?”
“தண்ணி காலி ஆயிடுத்து இல்லையா. அது தான் வேற பாட்டில் தண்ணி எடுத்துண்டு வரலாமேன்னு எழுந்துண்டேன். கவலைப் படாம தூங்குங்கோ. இதோ நானும் தண்ணி எடுத்துண்டு வந்திடுவேன்.”
என்று கூறிக்கொண்டே அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைபக்க மேஜையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டே
நால்வரால் கடத்தப்பட்ட சக்தி மயக்கத்திலேயே இருந்தாள். அவளை கொண்டுச் சென்ற அந்த கண்டேய்னர் வண்டி வெகு தூரம் பயணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அவளைக் கடத்த சொன்ன மர்ம நபர் சக்தியின் மொபைலுக்கு கால் பண்ண முயற்சித்தான்.
“ம்…கம் ஆன் தீ…ஷிட்.”
என்று விஷால் அவள் மொபைலுக்கு கால் பண்ண முயற்சித்து அவள் எடுக்கவில்லை என்றதும் கேபப்பட்டான்.
ப்ளூ சக்தியின் மொபைல் நம்பரை அழைத்தது.
“ம்…என்ன இது யூஸர் பிஸின்னு வருது! அப்படின்னா?”
என்று எதையோ யோசித்தது.
மர்ம நபர் கால் சக்தி மொபைலுக்கு சென்றதும் அவன் உடனே காலை கட் செய்து விட்டு உடனே ராபர்ட்டுக்கு கால் செய்தான்
“ம்…ராபர்ட் அவளோட மொபைல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணீட்டிங்களா?”
“ம்..ம்…நான் கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவள் நம்பருக்கு கால் பண்ணினேன். ரிங் போச்சு அதுனால தான் உனக்கு கால் பண்ணிக் கேட்டேன். ம்…சீக்கிரமா பண்ணு”
என்று சொல்லி கால் ஐ கட் செய்தான். உடனே ராபரட் ஜானை அழைத்து
“ஜான்”
“எஸ் ராபர்ட் ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஃபைன். எத்தன தடவ சொல்லறது?”
“ஏய் அது இல்ல ஜான். நாம அவளோட மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யலை. மறந்துட்டோம். நம்ம பாஸ் அவளுக்கு கால் பண்ணிருக்கார் ரிங் போயிருக்கு”
“ராபர்ட் அப்படி அவ மொபைல் ரிங் ஆகிருந்தா எங்களுக்கு கேட்டிருக்குமே!”
“டேய் டேய் டேய்!!! உன்ன எல்லாம் வச்சுட்டு இந்த மாதிரி வேலையில இறங்கியிருக்கேன் பாரு. என்ன சொல்லணும்.”
“ஓ ஒரு வேளை அவ ஃபோன் சைலென்ட் மோடுல இருக்குமோ… அதுனால தான் நமக்கு கேட்கலையோ!”
“அப்பாடா இப்பவாவது கண்டுபிடிச்சியே! சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம முதல்ல அவளோட மொபைல்ல சுவிட்ச் ஆஃப் பண்ணு. போ”
“ஓகே டன்.”
என்று ஜான் கூறி ஃபோனை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு சக்தியின் ஃபோனை அவள் காரிலிருந்த பைகளில் தேட ஆரம்பித்தான். அவள் வைத்திருந்த இரண்டு பைகளிலுமே மொபைல் இருக்கவில்லை. அவன் கார் டேஷ்போர்டு, சீட் கவர் என காரை முழுவதுமாக சோதனை செய்து பார்த்தான். அப்போதும் அவனுக்கு கிடைக்கவில்லை. உடனே அவன் ராபர்ட்டை தொடர்பு கொண்டான்.
“ம்…ஃபுல்லா தரோவா பார்த்தாச்சு ஆனா அவ மொபைல் இல்ல”
“அவ நம்பர் இருந்திருந்தா உடனே கால் பண்ணி பார்த்திருக்கலாம்…. ம்…..”
“ராபர்ட் நீ யாரு நம்மள கடத்த சொன்னாங்களோ அவங்க கிட்ட இவ நம்பரை வாங்கி கால் பண்ணு. அப்போ அவ மொபைல் வைப்ரேட் ஆகுமில்ல அதை வச்சு காருக்குள் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.”
“ம்…சரி சரி! நீ ஃபோனை வை. நான் அவங்க கிட்ட கேட்டுப் பார்க்கறேன். அதுக்கு என்ன சொல்லப் போறாங்களோ!!”
என்று கூறிக்கொண்டே ஜானின் கால் ஐ துண்டித்ததும் மர்மநபருக்கு கால் செய்தான் ராபர்ட்.
“ம்…என்ன மொபைல இன்னும் சுவிட்ச் ஆஃப் பண்ணல போல!”
“ஆமாம். அவ மொபைல் அவளோட ஹேன்ட்பேக்ல இல்ல. காருக்குள்ளேயும் என் ஆள் தேடிப்பார்த்திருக்கான் அங்கேயும் இல்ல. அதுனால…”
“அதுனால என்ன?”
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா… அந்த பொண்ணோட நம்பரை எனக்கு ஷேர் பண்ணுங்க.”
“அப்படி அனுப்பினா?”
“நாங்க அந்த நம்பரை கால் பண்ணிப் பார்ப்போம். அது சப்போஸ் கார் இடிச்சதுல காருக்குள்ளயே எங்கயாவது போய் மாட்டிட்டு இருக்கலாம். நீங்க நம்பர் கொடுத்தீங்கன்னா…”
“ம்…ம்…புரியுது புரியுது! அவ நம்பரை வாட்ஸ்அப் பண்ணறேன். சீக்கிரமா !!? அவளை சொன்ன இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கறதுக்கு முன்னாடியே செஞ்சு முடி… இல்லாட்டி சிசிடிவிலேந்து தப்பிச்சுக்கிட்டாலும்… மொபைல் டிரேஸில் மாட்டிக்க வேண்டி வந்துட போவுது. புரிஞ்சுதா?”
“ம்…நல்லா புரிஞ்சுது. நீங்க நம்பரை அனுப்பினதும் உடனே அதை நானே தேடி சுவிட்ச் ஆஃப் பண்ணிடறேன். கவலைப் படாதீங்க”
“நான் அனுப்பிட்டேன். உன் ஃபோனை செக் பண்ணு. எனக்கொரு ப்ராப்ளமும் இல்ல. மாட்டினா நீங்க நாலுபேரு தான் மாட்டிக்குவீங்க.”
மர்மநபர் ஃபோனை வைத்ததும் ராபர்ட் வண்டி ஓட்டுனர் மைக்கேலிடம்
“மைக்கேல் புல் ஓவர்”
“ஏன். என்ன ஆச்சு? எதுக்காக வண்டிய நிறுத்த சொல்லற ராபர்ட்?”
“முதல்ல நிறுத்து. இந்த ஜான் கிட்ட சொல்லி அவன் அதை செஞ்சானன்னு க்ராஸ் வெரிஃபை பண்ணறதுக்கு… நானே செஞ்சிட்டு வந்திடுவேன். நீ வண்டியை ஒரமா நிப்பாட்டு.”
“ம்…சரி சரி. அதோ அங்க நிப்பாட்டறேன். ஆனா சீக்கிரமா இங்கேந்து கிளம்பிடணும். ஏன்னா நாம போக வேண்டிய இடம் ரொம்ப தூரம். இந்த ரேட்ல போனாலும் அங்க போய் சேர நைட் ஆகிடும். இதுல இப்படி நின்னு நின்னு போனா… சுத்தம் அப்புறம் நாளைக்கு காலைல தான் போய் சேர முடியும். இந்த பொண்ண ஒப்படைக்க வேண்டிய அந்த இடத்துல எவ்வளவு சீக்கரம் ஒப்படைக்கறோமோ அவ்வளோ நமக்கு நல்லது. ம்…இந்த நிப்பாட்டிட்டேன்.”
என்று மைக்கேல் கூறிக்கொண்டே கண்டேய்னர் வண்டியை நிப்பாட்டியதும் ராபர்ட் தனது சீட் பெல்ட்டை அவிழ்த்துக் கொண்டு இறங்கும் போது
“எல்லாம் புரியுது மைக்கேல். இதோ ஜஸ்ட் ஃப்யூ செகன்ட்ஸ். ஒண்ணு பண்ணு நான் பின்னாடி ஏறியதும் நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சிடு. அடுத்த முறை நிப்பாட்டுற இடத்துல நான் மறுபடியும் முன்னாடி வந்துக்கறேன்.”
“ம்…ஓகே. அதுவும் சரிதான்.”
என்று ராபர்ட் கண்டேய்னருக்குள் சென்றதும் மைக்கேல் வண்டியை தொடர்ந்து ஓட்டலானான்.
கண்டேய்னருக்குள் நுழைந்த ராபர்ட்டைப் பார்த்த ஜான்
“என்ன ராபர்ட் நீ ஏன் இங்க வந்த?”
“ஏன் ஜான் நான் இங்க வரக்கூடாதா?”
என்று சக்தியின் காருக்கு அருகே சென்று அவளின் மொபைல் நம்பருக்கு கால் செய்து கொண்டே பேசினான். அப்போது ஜான்
“அதுக்கில்ல ராபர்ட்…”
“ஜான்….உஷ்…. அவ மொபைல் வைப்ரேட்டிங் சப்தம் காருக்குள்ள கேட்குது. ம்….இதோ இந்த டிரைவர் சீட்டுக்கும் இந்த நடுவுல இருக்குற பாக்ஸுக்கும் இடையிலேந்து தான் கேட்குது. எப்படியாவது அந்த கியாப்லேந்து மொபைல சீக்கிரமா எடுக்க பாரு ஜான்”
“ம்..நீ நகரு ராபர்ட். நான் ட்ரை பண்ணறேன். ஆஹா நல்லாவே உள்ள போய் கிடக்கு. என்னோட கை ரொம்ப பெரிசு உள்ள போகலை.”
“சரி ஏதாவது அந்த கியாப்புக்குள்ள போகறா மாதிரி எடுத்துட்டு வந்து ட்ரை பண்ணு ஜான். நீ ஏதாவது கொண்டு வரவரைக்கும் நான் ட்ரை பண்ணிட்டிருக்கேன்”
“ம்…இந்தா இந்த கம்பிய கொக்கி மாதிரி வளைச்சு உள்ள விட்டு மொபைல எடுக்க பார்ப்போம்.”
“ம்….ஜான் இது வேலைக்காகலை. வேற எதாவது இருக்கா?”
“வேற எதுவும் இல்லையே ராபர்ட்”
“அப்படின்னா சீட்டை எடுத்துட வேண்டியது தான். ம்…வா ஜான் இந்த சீட்டைக் கழட்டுவோம்.”
“ம்…இதோ வந்துட்டேன். கொஞ்சம் நகந்துக்கோ”
என்று ஜானும் ராபர்ட்டுமாக சக்தி காரின் ட்ரைவர் சீட்டை கழற்றி எடுத்தனர். அதைக் கழற்றியதும் அவளின் ஃபோன் சறுக்கி கீழே காரின் ட்ரைவர் சீட் இருந்த இடத்தில் வந்து விழுந்தது. அதைப் பார்த்த ராபர்ட் அதை உடனே எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்தான்.
அதன் பின் அவன் அந்த மர்ப நபருக்கு “டன்” ன்னு ஒரு மெஸேஜ் டைப் செய்து அனுப்பினான். அப்போ ஜான் அவனிடம்
“யாரு இவ? இவள நாம ஏன் கடத்தறோம்? யூஷ்வலா நீ யாரு? என்ன? எதுக்குன்னு விவரம் தெரிஞ்சுக்காம கடத்த ஒத்துக்க மாட்டியே ராபர்ட் !”
“நீ சொல்லறது சரி தான் ஜான். ஆனா இவள கடத்த சொன்னது ரொம்ப பெரிய இடம். இதுல பல பேர் சம்மந்தப்பட்டிருக்காங்க. அவங்களோட கண்டீஷனே நான் எதப் பத்தியும் தெரிஞ்சுக்காம சொல்லறதை மட்டும் செய்யணும்ங்கறது தான்.”
“அது தான் கேட்கறேன் ராபர்ட். நீ எப்படி இதுக்கு ஒத்துகிட்ட?”
“பணம் டா பணம். அள்ளிக் கொடுத்தாங்க. இன்னும் தரோம்ன்னு சொன்னாங்க. இவளை கொண்டு போய் அவங்க கிட்ட ஒப்படைச்சுட்டா… நாம கோடீஸ்வரங்களாயிடுவோம் ஜான். அதுக்கப்புறமா இந்த தொழில விட்டுட்டு உருப்படற வழியைப் பார்க்கணும். என் லவ்வரும் ரொம்ப நாளா என்ன மாறச் சொல்லி நச்சரிச்சுக்கிட்டே இருக்கா. அதுதான் இந்த ஜாக்பாட் அடிக்க ஒத்துக்கிட்டேன்.”
“அதுவும் சரிதான். ஆனா அவங்க சொன்னா மாதிரி பணத்தை செட்டில் பண்ணிடுவாங்க இல்ல!! ஏன்னா பெரிய இடம்ன்னு வேற சொல்லற! அவங்க பாட்டுக்கு பொண்ணு கிடைச்சதும் நம்மள டீல்ல விட்டுட போறாங்க ராபர்ட்.”
“அது எப்படி. கையில் பணம் செட்டிலாகம இவளை அவங்ககிட்ட ஒப்படைக்கக் கூடாது. அதுமாதிரி ஏமாத்த மாட்டாங்கன்னு நினைக்கறேன். ஆனா இவ யாரு? இவளுக்கு ஏன் இவ்வளவு பணம் தர்றாங்க? அதே நினைப்பு தான் இவள கடத்தினதுலேந்து எனக்குள்ள ஓடிட்டே இருக்கு!”
“ஒரு வேளை இப்படி இருக்குமோ?”
“எப்படி?”
“இவ தான் பெரிய சைன்டிஸ்ட் ஆச்சே! ஒரு வேளை இவளோட மூளைக்காக இருக்குமோ!”
“இவ மூளைய வச்சு என்ன பண்ணுவாங்களாம்? ம்…ம்…ம்…ஹும்…. இதுல வேற ஏதோ இருக்குன்னு என் உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு! பார்ப்போம்…. பார்க்கதானே போறோம்.”
இதற்கிடையில் சக்தியின் பெற்றோரான நவீனும் மிருதுளாவும் அவளின் மொபைலுக்கு கால் செய்துப் பார்த்ததில் சுவிட்ச்டு ஆஃப் என்று தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்ததில் பதற்றமாகி அவளின் வீட்டு எண்ணிற்கு அழைத்தனர்.
ப்ளூ அந்த கால் நவீனின் எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்துக் கொண்டு கால் ஐ அட்டென்ட் செய்தது.
“ஹலோ! மிஸ்டர் நவீன்.”
“ஹலோ ப்ளூ. எப்படி இருக்க?”
“எனக்கென்ன எனக்குன்னு தான் என் தீ இருக்காளே! அப்புறம் எனக்கென்ன கொறச்சல்? நீங்க சொல்லுங்கோ”
“ம்… ம்… அது என்னவோ சரிதான். அவ எங்களோட இருக்கறத விட உன் கூட தானே அதிகமா இருக்கா!! அதுனால நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி உன் தீ யை கூப்பிடு”
“தீ இஸ் நாட் அட் ஹோம் மிஸ்டர் நவீன்”
“என்னது! நான் அவளோட மொபைலுக்கு கால் பண்ணிப் பார்த்தேன் சுவிட்ச்டு ஆஃப்ன்னே வர்றது. அதுதான் வீட்டுல இருப்பாளோன்னு கால் பண்ணினேன்.”
“அவ விஷாலோட பேரன்ட்ஸ்கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக அவனோட வீட்டுக்கு போயிருக்கா.”
“வீடியோ கால்ல அவ வீட்டுலேந்து பண்ணிருக்கலாமே! வீடியோ கால் ல பேசறதுக்கு எதுக்கு பாரீஸ் வரைக்கும் போயிருக்கா! அப்படீன்னா ஒரு வேளை அவ மொபைல்ல சார்ஜ் கீர்ஜ் ஏதாவது போயிருக்குமோ? அதுனால தான் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வர்றதோ!”
“மிஸ்டர் நவீன்! நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? அவ கிட்ட பவர் பேங்க் இருக்கு. அதுவுமில்லாம அவ கார்லயே சார்ஜிங் ஃபெசிலிடி இருக்கு.”
“அப்போ ஏன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா? அதுவும் நாலு மணி நேரம் டிராவல் வேற பண்ணிண்டிருப்பா… இப்போ போய் ஏன் அப்படி செய்யறா அந்த பொண்ணு!!!”
“தெரியலையே மிஸ்டர் நவீன். நானும் அவ நம்பருக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். எனக்கும் அதே தான் வர்றது.”
“சரி ப்ளூ அவ உன்னை கான்டாக்ட் பண்ணினானா உடனே எனக்கு கால் பண்ண சொல்லு. சரியா!”
“ஓகே வில் டூ. பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் மிஸ்டர் நவீன்”
“ம்…எங்கேந்து இனி எனக்கு நைஸ் ஈவ்னிங்? சக்தி கிட்டேந்து கால் வந்தா தான் நைஸ் ஈவ்னிங். சரி சரி பை ப்ளூ. நான் வச்சுடறேன்”
என்று நவீன் கால் செய்து விவரமேதும் சரிவர அறியாததால் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
ப்ளூ காலையில் சக்திக்கு கால் பண்ணிய போது அவள் சுவிட்ச் ஆஃப் செய்ததைப் பற்றியோ இல்லை அது இடையில் கால் செய்து போது பிஸி என்று வந்ததைப் பற்றியோ எதுவுமே அது நவீனிடம் சொல்லவில்லை.
மறுநாள் காலை ப்ளூ சக்தியை எழுப்புவதற்காக அவள் ரூமுக்கு சென்றது. அங்கே சக்தி அவள் படுக்கையில் இல்லாததைப் பார்த்த ப்ளூ அப்படியே திரும்பி அடுப்படிக்குச் சென்று சக்திக்கு காலை உணவான பேன்கேக்ஸ் செய்யத் துவங்கியது. தயார் செய்த பேன்கேக்ஸையும் மேப்பிள் சிரப்பையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு மீண்டும் சக்தியின் அறைக்கு சென்றது. அங்கே சக்தி கண்ணாடி முன் அமர்ந்து அலங்காரம் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ப்ளூ
“ம்…. என்ன இன்னைக்கு எல்லாமே புதுசா இருக்கே!”
“ப்ளூ உனக்கு இந்த டிரஸ் தெரியல இது என் அப்பா அம்மா எனக்காக போன பர்த்டேக்கு வாங்கி அனுப்பினது. நீ மறந்துட்டயா?”
“ம்…என்ன ஜோக்கா? நான் மறந்துட்டேன் ம்….!!! இன்னிக்கு உன்னை நான் எழுப்பாம நீயே எழுந்துண்ட்ட? அதுவுமில்லாம நீ இவ்வளவு நேரமெல்லாம் கண்ணாடி முன்னாடி செலவிட மாட்டியே!! நான் உன்கிட்ட கொஞ்சம் கண்ணாடியப் பார்த்து தலைமுடியை சரி செஞ்சுட்டு போயேன்னு சொன்னாகூட கேட்காம அதெல்லாம் டைம் வேஸ்ட்ன்னு சொல்லுவ!! இப்போ என்ன? போதும் கண்ணாடியோட ரசம் போயிடப்போகுது! என்ன விஷயம்? இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? எப்பவும் போல ஆஃபிஸ்க்கு தானே போகபோற?”
“ஆமாம் ப்ளூ இப்போ ஆஃபிஸுக்கு தானே போறேன். ஆனா பதினொன்றரை மணிக்கு நான் பாரீஸ் போறேனே. அதுவும் “வி”ய பார்க்க! அதுக்கு தான் லைட்டா மேக்கப் போடறேன்”
“எவ்வளவு அறிவாளியான சைன்டிஸ்ட் நீ!! இப்படி முட்டாளாகிட்டியே தீ!”
“ஏய் ப்ளூ என்ன சொல்லற?”
“ஆமாம் பின்ன என்னவாம்! நீ பாரிஸுக்கு வி கிட்ட போறதுக்கு இன்னும் பத்து மணிநேரமிருக்கு! இப்போவே மேக்கப் போட்டு என்ன பிரயோஜனம்? அதுனால தான் அப்படி சொன்னேன்”
“அது எனக்கும் தெரியும் ப்ளூ. ஆனா என்ன பண்ண ஆஃபிஸூக்கு இதெல்லாம் எடுத்துண்டு எப்படி போறதாம்?”
“இன்னைக்கு ஒரு நாள் தானே தீ. கொஞ்சம் பெரிய பேக் எடுத்துக்கோ. அதுல இன்னொரு செட் டிரஸ் அன்ட் காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் வச்சுக்கோ. ப்ராப்ளம் சால்வுடு. உன்ன மாதிரி சைன்டிஸ்ட்க்கெல்லாம் நான் யோசனை சொல்ல வேண்டிருக்கு பாரு!”
“சைன்டிஸ்ட்க்கு ஐடியா கொடுக்கும் புத்திசாலியே… நான் அந்த பெரிய பேக் தூக்கிண்டு வி ஆத்துக்கு போகணுமா என்ன?”
“அச்சச்சோ காதல் கல்யாணம்னு வந்ததுமே என் அறிவாளி சைன்டிஸ்ட் மூளை சரியா வேலை செய்ய மாட்டிங்குதே!”
“தீ வி வீட்டுக்கு போகும் போது ஒரு சின்ன ஹேன்ட்பேக் மட்டும் எடுத்துண்டு போ. அதாவது ரெண்டு பேக் எடுத்துக்கோன்னு சொல்லறேன் புரியுதா?”
“ம்…அது நல்ல யோசனை தான். தாங்க்ஸ் ப்ளூ.”
“சரி சரி சீக்கிரமா வா. ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி. ஆறிட போறது. சாப்பிட வா.”
“என்னது நீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணிருக்கையா? இது என்ன புது பழக்கம்? நம்ம அக்ரிமெண்டே நான் ப்ரேக்ஃபாஸ்ட் நீ டின்னர்னு தானே!! இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு ப்ளூ? ஆர் யூ ஓகே?”
“ம…எனக்கு ஒண்ணும் ஆகலை தீ. இன்னைக்கு டின்னருக்கு நீ வரமாட்டே இல்லையா! அதுனால தான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைச்சுட்டேன்.”
“ஓ!!! ஓ!! அப்படி… ஓகே ஓகே! இதோ ஒரு டூ மினிட்ஸ் ல டைனிங் டேபிள் ல இருப்பேன். நீ போ ப்ளூ”
“பார்த்தயா உனக்கு வி கிடைச்சதும் என்ன போன்னு சொல்லற!”
“அச்சச்சோ!! என்னது இது ப்ளூ பாப்பாவுக்கு ஜெலசி ஜெலசியா?”
“ம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ வா சாப்பிட.”
ப்ளூ சொன்னது போலவே சக்தி இரண்டு பைகள் எடுத்துக்கொண்டு ப்ளூ செய்து வைத்திருந்த காலை உணவை உண்டபின் ஆஃபிஸுக்கு புறப்பட்டு, காரில் ஏறுவதற்கு முன் வழக்கம் போல பக்கத்து வீட்டு பாட்டிக்கு காலை வணக்கும் தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றாள்.
ஆஃபிஸுக்கு போன சக்தி அவள் அட்டென்ட் பண்ண வேண்டிய மீட்டிங்கை அட்டென்ட் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் கைபேசி சப்தமேதுமின்றி அதிர்வுற்றது. சக்தி மெல்ல எடுத்துப் பார்த்தாள். அழைப்பு ப்ளூவிடமிருந்து வந்ததை கண்டாள். உடனே அதை துண்டித்து விட்டு அங்கு வைத்திருந்த காஃபியை ஒரு சிப் எடுத்துக் கொண்டே மீட்டிங்கில் கவனம் செலுத்தினாள். மீண்டும் அவள் கைபேசி அதிர்வுற்றது. மீண்டும் ப்ளூவின் அழைப்பு வர சக்தி தனது கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தாள்.
மீட்டிங் பத்தே முக்காலுக்கு முடிந்தது. உடனே சக்தி தன் கேபினுக்கு சென்று பையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூமிற்குள் சென்று மீண்டும் மேக்கப் போட்டுக் கொண்டு வேகமாக கார் பார்க்கிங்குக்கு வந்தாள். காரை ஸ்டார்ட் செய்தாள். நேராக பாரிஸை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். தனது காதல் கைக்கூடயிருப்பதை எண்ணி மனதிற்குள் மகிழ்ச்சிப்பொங்க காரில் காதல் பாட்டுகளைப் போட்டு அதைக் கேட்டுக் கொண்டே சென்றாள். அவள் தனது கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்திருந்ததை மறந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
” ஓ! ஓ! ப்ளூ கால் பண்ணிருந்தானே!! உஷ்…நான் மறந்தே போயிட்டேன் சரி இப்போ பேசலாம்.”
என்று எண்ணிக்கொண்டே தனது காரிலிருந்தே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். அப்போது தான் அவளுக்கு ஃபோனை ஆன் செய்யாதது தெரிய வந்தது. உடனே தனது இடது கையால் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வலது கையை பையிக்குள் விட்டு துழாவினாள். அவள் கையில் ஃபோன் அகப்படவில்லை. வண்டியை எங்காவது ஓரமாக நிப்பாட்டி எடுக்கலாம் என்று எண்ணி மீண்டும் இருகைகளாலும் காரை ஓட்ட ஆரம்பித்தாள்.
பாதி தூரம் கடந்தததும் அவளுக்கு ஏதோ செய்வது போல இருந்தது. கண்கள் இரண்டும் மங்கலாக தெரிய ஆரம்பித்தது. இடையிடையே காருக்கு முன் இருளானது போல தோன்றியது. அவள் கண்களை நன்றாக இறுக்க மூடித் திறந்தாள். அப்போதும் சரியாகவில்லை. ஒரு கையால் கண்களை நன்றாக கசக்கிப் பாரத்தாள் அப்போதும் தெளிவாக தெரியவில்லை.
மயக்கமாகிறாள் என்பதை உணர்ந்த சக்தி தனது காரை அவள் சென்றுக்கொண்டிருந்த ஹைவேயின் ஓரத்தில் நிறுத்த முயற்சித்தாள். அப்போது அவள் முன் திடிரென ஒரு பெரிய கண்டேய்னர் வண்டி நின்றிருப்பது போல தெரிந்ததும் சட்டென ஸ்டியரிங்கை வலதுபுறம் ஒடித்தாள். ஆனால் வண்டி எதிலோ மோதி நின்றதை உணர்ந்தாள். தனது கைபேசியை எடுத்து எமர்ஜென்சியை அழைக்க நினைத்தாள். பேக்கினுளிருந்து கைபேசியை எடுத்தாள். அப்போதுதான் அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது அவளுக்கு தெரிய வந்தது. உடனே அதை ஆன் செய்ய அரை மயக்கத்தில் முயற்சித்தாள். அது ஆன் ஆனதும் அவள் முழுவதுமாக மூர்ச்சையானாள்.
அவளின் கைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் காரின் இரண்டு புறமும் வானுயர்ந்த மரங்கள் கொண்ட காடு போல இருந்தது. அவள் மூச்சையாகி சில மணி நேரம் கடந்ததும். அவளின் கார் ஒரு க்ரேனால் அப்படியே தூக்கப் பட்டது. பின் ஒரு பெரிய கண்டேய்னர் வண்டியில் அப்படியே இறக்கி வைக்கப்பட்டது. சக்தியின் காரை கண்டேயினருக்குள் வைத்ததும் அதன் மேல் கூரை தானாக மூடியது. சக்தியின் கார் அதனுள் வைத்து முழுவதுமாக மூடியதும் அந்த வண்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
அங்கு சக்தியின் கார் நின்றிருந்த சுவடின்றி மறைந்து போனது.
அந்த வண்டியினுள் நாலுபேர் இருந்தனர். அவர்கள் கரும்பச்சை நிறத்தில் உடையணிந்திருந்தனர். அதில் ஒருவர் ஓட்டுனர். அவர் அருகே ஒருவர் அமர்ந்திருந்தார். கண்டேய்னருக்குள் இருவர் சக்தியின் காருடன் இருந்தனர். முன்னால் ஓட்டுனர் மைக்கேல் அருகே அமர்ந்திருந்த ராபர்ட் தனது கைபேசி மூலமாக கண்டேய்னருக்குள் இருந்த இருவரில் ஒருவரான ஜான் என்பவரை தொடர்பு கொண்டு பிரஞ்சில்
“அவள் எப்படி இருக்கிறாள்?”
“இன்னமும் மயக்கத்தில் தான் இருக்கிறாள்.”
“அவளை காருக்குள்ளேந்து வெளிய இருக்கும் பெட்டில் படுக்க வைத்து நம்ம டாக்டர் சைமனை செக் பண்ண சொல்லு.”
“ஓகே சார். பண்ண சொல்லறேன்.”
என்று ராபர்ட் கூறியதை ஜான் அவனுடனிருந்த டாக்டர் சைமனிடம் தெரிவித்தார். அதற்கு சைமன்
“அவளை முதலில் வெளியே எடுக்க வேண்டும். ம்…காரை முதலில் திற ஜான்”
“இதோ திறக்கறேன். எதுக்கும் மயக்க ஊசியை தயாரா வச்சுக்க சைமன். ஏன்னா இவ பெரிய சைன்டிஸ்ட் உண்மையிலேயே மயக்கத்திலிருக்காளா இல்லை நடிக்கறாளான்னு நமக்கு தெரியாது.”
“நான் கொடுத்த அளவு தானே அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கு?”
“அப்படி தான்னு மெஸேஜ் வந்தது”
“அப்பறம் என்ன! பயப்படவே வேண்டாம். அவ நிச்சயமா மயக்கத்துல தான் இருக்கா. நீ தைரியமா கார் கதவை திற ஜான்”
என்று சைமன் சொன்னதும் ஜான் ஏதோ ஒரு சாவியைப் போட்டு காரைத் திறந்தான். இருவருமாக சக்தியை காருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து அந்த காருக்குப் பின்னால் போடப்பட்டிருந்த மெத்தையில் படுக்க வைத்தனர். அதன் பின் அவளுக்கு ஏதோ ஒரு ஊசிப் போட்டான் சைமன். ஜான் உடனே ராபர்ட்டுக்கு கால் செய்து
“எல்லாம் நாம் நினைத்தப்படியே நடக்கிறது. ஆல் டன். எவ்ரிதிங் அன்டர் அவர் கன்ட்ரோல்ன்னு நீ அங்கே சொல்லிக்கலாம்”
என்று கூறி வைத்தான். ராபர்ட்டும் அதுபடியே ஒரு ப்ரைவேட் நம்பருக்கு கால் செய்தான். ரிங் போனது. அங்கிருந்து ஒரு குரல்
“ம்…”
“ஹாய்! எவ்ரிதிங் அன்டர் அவர் கன்ட்ரோல். நத்திங் டூ வரி”
“ம்…குட்”
“அப்பறம் அந்த சிசிடிவி இஷ்ஷூஸ் வராம இருக்கணும்.”
“ம்…அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை”
“ஓகே தென். சீ யூ சூன். பை ஃபார் நவ்”
“ம்…பை”
என்று அந்த மர்ம நபர் கூறி முடித்ததும் ராபர்ட் ஓட்டுனர் மைகேலிடம்
சக்தி தன் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியதும் விஷாலை அலைப்பேசியில் அழைத்தாள்.
“கம் ஆன் வி. பிக் அப். எவ்வளோ நல்ல நியூஸ் சொல்ல கூப்பிடறேன். எங்க போயிருக்க. கம் ஆன்…ஹாய் வி…”
“ப்ளீஸ் லீவ் எ வாய்ஸ் மெஸேஜ்…”
“ம்…வி ஐ ஹாவ் எ குட் நியூஸ் ஃபார் யூ கால் மி”
“வாய்ஸ் மெஸேஜ் குடுத்திருக்கேன் எப்போ கால் பண்ணறான்னு பார்ப்போம்.”
என்று சக்தி காத்திருந்தாள். அடுபடியிலிருந்து ஹாலுக்கு சக்தியிடம் வந்த ப்ளூ
“டின்னர் ஈஸ் ரெடி. என்ன தீ உன்னவர் என்ன சொல்லறார்? ஒரே ஹாப்பியா?”
“எங்க ப்ளூ?”
“என்ன தீ சலிச்சுக்கற?”
“ஆமாம்! பின்ன என்ன ப்ளூ? நான் எவ்வளவு ஆசையா அப்பா அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச விஷயத்தை சொல்ல விஷாலுக்கு கால் பண்ணினேன்… ஆனா அவன் கால் அட்டென்ட் பண்ணலை.”
“ஏன் பண்ணலை? சரி நீ ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்ப வேண்டியது தானே!”
“எல்லாம் அனுப்பி பத்து நிமிஷமாச்சு”
“என்ன சொல்லற தீ? பத்து நிமிஷமாச்சா?”
“அதுக்கு நீ ஏன் இவ்வளவு ஷாக் ஆகற?”
“அதுக்கில்ல எனக்கு ஒண்ணு தோனுது… அதை சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு தான் யோசிக்கறேன்…”
“அன்னைக்கு நீ மூணு வருஷம் கழிச்சு கால் பண்ணினப்போ உடனே எடுத்த விஷால்… இன்னைக்கு நீ கால் பண்ணி, வாய்ஸ் மெஸேஜ் குடுத்துட்டும் இன்னும் உன்னைக் கூப்பிடலையே ஏன்?”
“ஏதாவது வேலையா இருப்பான் ப்ளூ. இதுல என்ன இருக்கு?”
“சைலென்ட் மோட்ல போட்டிருக்கேன் அது தான் நான் கவனிக்கலை. ஓ வி தான் ப்ளூ. இரு நான் அவன்கிட்ட பேசிட்டு வரேன்.”
“ஓகே தீ.”
“ஹாய் வி”
“ஹாய் தீ. ரொம்ப ரொம்ப சாரி. நீ கால் பண்ணும்போது நான் என் பேரன்ட்ஸோட வீடியோ கால்ல இருந்தேன். நம்ம விஷயமா தான் பேசிட்டிருந்தேன். இப்போ தான் பேசி முடிச்சிட்டு உன் வாய்ஸ் மெஸேஜ் பார்த்தேன். உடனே கால் பண்ணிட்டேன். உன் பேரன்ட்ஸ்கிட்ட பேசினியா? அவா என்ன சொல்லறா?”
“ம்..இட்ஸ் ஓகே வி. என் பேரன்ட்ஸ் சைடுலேந்து க்ரீன் சிக்னல் கிடைச்சிடுத்து. உங்க அப்பா அம்மா அன்ட் தம்பி என்ன சொல்லறா?”
“அவா சொன்னதை சொன்னா நீ இன்னைக்கு ஃபுல்லா சிரிச்சுண்டே இருப்ப!”
“அப்படி என்ன சொன்னா?”
“நான் நம்ம விஷயத்தைப் பத்தி சொன்னதும், மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துண்டு சிரிச்சா. அப்புறம் என் அப்பா என்கிட்ட… இதை அப்பவே சொல்லிருக்கலாமே! நாங்க என்ன வேண்டான்னா சொல்ல போறோம்! என்ன சீதா நான் சொல்லறதுன்னு என் அம்மாட்ட கேட்க… என் அம்மா உடனே அதுதானே!! டேய் இவளை விட்டுடாதேடா விஷால்! சீக்கிரமா கல்யாணம் பண்ணிண்டு டூன்னு சொல்ல…. அடுத்ததா என் தம்பி டேய் அண்ணா என் ரூட் க்ளியர் பண்ணிக்குடுடா உனக்கு புண்ணியமா போகும் ன்னு சொன்னான்.”
“ஹா! ஹா! ஹா! ஸோ க்யூட் ஃபேமிலி”
“பார்த்தயா நீ சிரிப்பன்னு சொன்னேன் ல. இதுல உன்கிட்டேந்து கால் அன்ட் வாய்ஸ் மெஸேஜ் வந்திருக்குன்னு சொன்னேன்… அவ்வளவு தான் என் அம்மா என்னை உன்கிட்ட உடனே பேச சொல்லிட்டு அவா கால் ஐ கட் பண்ணிட்டா.”
“ஓ ஸோ நைஸ்”
“ஆக நம்ம ரெண்டு பேர் வீட்டுலேந்தும் க்ரீன் சிக்னல் கிடைச்சாச்சு. அடுத்து என்ன?”
“அடுத்து என்ன? தனிதனியா அவா அவா ஆத்துக்கு கால் பேசின நாம ரெண்டு பேரும்… ஒண்ணா இரண்டு பேர் வீட்டுக்கும் கால் பண்ணி பேசணும். அப்புறம் என் பேரன்ட்ஸையும் உன் பேரன்ட்ஸையும் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைச்சிட்டோம்னா… மீதிய அவா பேசி டிசைட் பண்ணிப்பா. தட்ஸ் ஆல்.”
“சூப்பர் அப்படின்னா இப்பவே ஈதர் உன் ஃபேமிலி ஆர் என் ஃபேமிலிட்ட பேசிடுவோமா?”
“அச்சச்சோ வி எதுக்கு இவ்வளவு அவசரம். வெயிட் நாளைக்கு ஈவ்னிங் நம்ம டைம் ஒரு நாலு மணிக்கு நாம உன் ஆத்துக்கு கால் பண்ணி பேசுவோம். டைம் அ நீ அவாட்ட சொல்லிடு. தி நெக்ஸ்ட் டே எங்க பேரன்ட்ஸ்கிட்ட பேசலாம். சேம் டைம் அன்ட் ஐ வில் கன்வே தெம் தட். அதுக்கு அடுத்த நாள் அவா எல்லாரையும் சூம் கால்ல வரவச்சு இன்ட்ரோ பண்ணி வச்சிடுவோம்… அதுக்கப்புறம் அவா பேசி டிசைட் பண்ணட்டும். என்ன சொல்லற வி?”
“சூப்பர். நானும் என் ஆத்துல சொல்லிடறேன். ஆனா தீ கல்யாண டேட்டை அவா டிசைட் பண்ணறதுக்கு முன்னாடி, நாம நமக்கு கம்ஃபர்டபுளான டேட்டை டிசைட் பண்ணி வச்சுக்கணும். ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில லீவ் கிடைக்கணுமில்லையா?”
“ஹலோ வி யூ ஆர் டூ ஃபாஸ்ட். கொஞ்சம் நிதானமா போவோமே. அவா ஏதாவது டேட் டிசைட் பண்ணிட்டு நிச்சயம் நம்ம கிட்ட கேட்பா. அப்போ அது நமக்கு ஓகேன்னா சரி இல்லாட்டி அப்போ நமக்கு வேண்டிய தேதியை சொல்லிப்போமே! அதைப் பத்தி ஏன் இப்பவே பேசணும்?”
“ம்…அதுவும் சரி தான். சரி நாளைக்கு நீ இங்க வரயா இல்ல நான் உன் இடத்துக்கு வரட்டுமா?”
“நாளைக்கு உன் பேரன்ட்ஸ் கிட்ட தானே பேசப் போறோம். ஸோ நானே உன் இடத்துக்கு வர்றேன்.”
“சூப்பர் டூப்பர். நான் ஆவலோடு வெயிட் பண்ணின்டிருப்பேன் தீ. நீ பேசாம லஞ்சுக்கே வந்துடேன். இரண்டு பேருமா லஞ்ச் சாப்டுட்டு அப்படியே கொஞ்சநேரம் பேசிண்டிருந்துட்டு… அப்பறம் அப்பா அம்மாவோட கால் பேசலாம். என்ன சொல்லற?”
“சாரி வி. எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அது முடியவே மணி பதினோரு மணி ஆகிடும். அது முடிஞ்சிட்டு தான் நான் இங்கேந்து கிளம்ப முடியும். ஸோ ஏதாவது சாப்டுட்டு தான் கிளம்புவேன். நாலு மணி நேர டிராவல் இல்லையா. அப்படிப்பாத்தா நான் உன் இடத்துக்கு மூனே முக்கால் போல தான் ரீச்சே ஆவேன். அதுனால நான் அங்கு வந்துட்டு கால் அட்டென்ட் பண்ணிட்டு நாம வேணும்னா ஏர்ளி டின்னர் சாப்பிடலாம். என்ன சொல்லற வி”
“அப்படியே ஆகட்டும் மகாராணி தீ அவர்களே!”
“மிக்க நன்றி மகாராஜா வி அவர்களே. சரி ப்ளூ ஈஸ் வெயிட்டிங் வித் மை டின்னர். நான் போய் சாப்பிட்டு சீக்கிரமா தூங்கணும். ஏன்னா நாளைக்கு ஆஃபீஸுக்கு செவனோக்ளாக் போகணும். நாளைக்கு சந்திப்போம். அதுவரை பை வி.”
“ம்…வெறும் பை தானா தீ. அதுதான் நாம இவ்வளவு தூரம் வந்துட்டமே!”
“ஹலோ இன்னும் நீ அங்க நான் இங்கே தான் இருக்கோம். பாதி கிணறு கூட. தாண்டலை. நாம எங்கேயும் போகலை. ஸோ இப்போ போய் நிம்மதியா தூங்கு.”
“ம்…உத்தரவு ராணி. பை தீ. ஹாவ் எ நைஸ் ஸ்லீப்.”
“ம். ஓகே வி. பை. குட் நைட் அன்ட் ஸ்வீட் டிரீம்ஸ்”
“ம்ஹும்…இது வேறயா. இனி தூக்கம் வந்தா மாதிரிதான். நீ போய் நல்லா தூங்கு. பை”
என்று ஃபோனை விஷால் வைத்தபின் சக்தி வெட்கத்தில் புன்னகைத்துக் கொண்டே தனது அலைபேசியை முத்தமிட்டாள். அதைப் பார்த்த ப்ளூ…
“ஹலோ மிஸ் தீ. இதை அவர் கேட்கும் போது குடுக்காம. இப்போ இந்த மொபைலுக்கு இது ரொம்ப அவசியம் தான்.”
“ச்சீ போ ப்ளூ”
“சரி சரி வா டின்னர் சாப்பிடு. நீ சாப்பிட்டதுக்கப்பறமா நான் என் வேலைகளை முடிச்சிட்டு. என்னை நான் சார்ஜ் பணணிக்கணும். ஏன்னா அது தானே என் சாப்பாடு.”
“என்னது மறுபடியும் சார்ஜ் பண்ணனுமா? ஈவினிங் நான் வரும்போது தானே சார்ஜிங் ஸ்டேஷன்லேந்து வந்தேன்னு சொன்ன!! அதுக்குள்ள என்ன மறுபடியும் சார்ஜ் பண்ணனும்னு சொல்லற? உனக்கு என்ன ஆச்சு? திரும்பு நான் பார்க்கட்டும்.”
“அது அது வந்து… நீ ஈவினிங் வருமபோது தான் நான் சார்ஜிங் ஸ்டேஷன்ல போய் செட்டில் ஆனேன். நீ வந்துட்டயா உடனே நானும் அங்கேந்து வந்துட்டேன். ஸோ சார்ஜே ஆகலை. அது தான் இன்னைக்கு நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணிகிட்டேனா… ஐ வில் பி ஃபைன் ஃப்ரம் டுமாரோ. சரி சரி நீ சாப்டுட்டு போய் படு. நாளைக்கு சீக்கிரம் கிளம்பணுமில்ல.”
“ப்ளூ…என்னமோ சொல்லற. ம்…ஓகே ஓகே. டின்னர் சூப்பர். தாங்கஸ் ப்ளூ. சரி நான் போய் படுத்துக்கறேன். குட் நைட் ப்ளூ”
“குட் நைட் தீ. சுவீட் டிரீம்ஸ். ஹாவ் எ நைஸ் ஸ்லீப்.”
காணல் போல் விஷால் கார் தெரிந்த வரை நின்று பார்த்துக்கொண்டிருந்து விட்டு பின் தன் காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள் சக்தி. வீட்டு வாசலில் காரை பார்க் செய்து காரிலிருந்து வெளியே வந்து காரை பார்க் செய்தாள்.
பக்கத்து வீட்டு பாட்டி அவர் வீட்டுத் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுவெட்டர் பிண்ணிக் கொண்டே சக்தி வந்ததைப் பார்த்து அவளிடம்
“ஹாய் தீ குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டே?.”
“ஹாய் மிஸ்ஸரஸ் டேவிட். குட் ஈவ்னிங். எஸ். இட் வாஸ் ஃபன்டாஸ்டிக். ஹவ் வாஸ் யுவர்ஸ்?”
“எனக்கென்ன…சமைத்தேன். பக்கத்தில் இருக்கும் பார்க்கு போயிட்டு வந்தேன். சாப்பிட்டேன். இதோ உட்கார்ந்து சுவெட்டர் பிண்ணறேன். என்ன உன் முகத்துல ஏதோ ஒரு ஒளி தெரியுதே! என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லையே!! நான் எப்பவும் போல தானே இருக்கேன்.”
“நோ நோ நோ!! தேர் இஸ் சம்திங்… சரி சரி உனக்கா எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்ப சொல்லு. அதுவரை நான் காத்திருக்கேன். வா வந்து ஒரு கப் காஃபி குடியேன். நான் ஸ்ட்ராபெரி குக்கீஸ் பண்ணிருக்கேன்.”
“ஓ! ஸோ நைஸ் ஆஃப் யூ. தாங்க் யூ ஸோ மச். இட்ஸ் ஃபைன் மிஸ்ஸர்ஸ் டேவிட். நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்.”
“இரு இரு அட்லீஸ்ட் குக்கீஸையாவது சாப்பிடு. ஏதோ உனக்கு நல்லது நடந்திருக்குனு உன் முகத்தப் பார்த்துலே தெரியுது. அதுக்கு இந்த ஓல்ட் லேடியால முடிஞ்ச சுவீட்ன்னு வச்சுக்கோயேன். எடுத்துட்டு வரேன். ஜஸ்ட் டூ மினிட்ஸ்”
“ஓகே. நான் இங்கேயே இருக்கேன். நீங்க மெதுவா எடுத்துட்டு வாங்க.”
மிஸ்ஸர்ஸ் டேவிட் உள்ளே போய் ஒரு டப்பாவில் குக்கீஸைப் போட்டு எடுத்து வந்து சக்தியிடம் கொடுத்தார். சக்தியும் அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.
“டட்ட..டைங்…. ப்ளூ நான் வந்துட்டேன். ப்ளூ…ப்ளூ எங்க நீ இருக்க? நான் ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன். ப்ளூ…”
“ஹாய் தீ… குட் ஈவினிங். நான் என் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருந்தேன். என்ன எல்லாம் சுபம் தானே”
“அப்பாடா… உன்னை காணமேன்னு ஒரு செகண்ட் டென்ஷனாகிட்டேன் தெரியுமா?”
“உன்னை விட்டா எனக்கு யாரிருக்கா தீ? நான் எங்க போயிடுவேன் சொல்லு?”
“ஆமாம்!! உன்னை நேத்து தானே சார்ஜ் பண்ணினேன். அதுக்குள்ள சார்ஜ் போயிடுச்சா என்ன? இருக்காதே!! என்ன ப்ளூ ஏதாவது பிரச்சினையா?”
“ம்…தீ… எனக்கும் வயசாகுதில்ல. சரி சரி அதெல்லாம் விட்டுத்தள்ளு… உன் விஷயத்துக்கு வா. அவனை சந்திச்சயா? என்ன சொன்னான்? எல்லாம ஓகே வா?”
“ம்…அவனை சந்திச்சேன். ரொம்ப நேரம் பேசினோம். அவன் என்னை ப்ராங்க் பண்ணினான் தெரியுமா.”
என்று சக்தி அங்கு நடந்த அனைத்தையும் ப்ளூவிடம் கூறி மகிழ்ந்தாள். அனைத்தையும் கேட்ட ப்ளூ அவளிடம்…
“எல்லாம் சரி தீ… கல்யாணம் எப்போ?”
“அதை எங்களோட பேரன்ட்ஸ் தான் முடிவு பண்ணனும்.”
*அப்புறமும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு. உடனே மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் நவீனுக்கு கால் பண்ண வேண்டியது. விஷயத்தை சொல்ல வேண்டியது. கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியது. டூம் டூம் டூம்ன்னு கல்யாணம் நடக்க வேண்டியது தானே!”
“கேட்க எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா இதை அப்பா அம்மாட்ட எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியலை.”
“ஏன் இன்னைக்கு இவ்வளவு தயக்கம் உனக்கு? இதுவரை நீ அவங்ககிட்ட எதைப் பத்தி பேசறதுக்கும் இப்படி தயங்கினதே இல்லையே!! இந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம்ன்னு வந்தா மட்டும் எங்கேந்து தான் இப்படி ஒரு தயக்கம் வருதோ யாம் அறியேன் பராபரமே!”
“மத்த விஷயமெல்லாம் ஓகே. அவாகிட்ட டிஸ்கஸ் பண்ணறதுல எனக்கு எந்த தயக்கமுமில்லை. இதை சொல்லறதுக்கும் எனக்கு தயக்கமில்லை… ஒரு மாதிரி இருக்கு அவ்வளவு தான். முன்னமே சொன்னா மாதிரி கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபுள்.”
“அதை என் கிட்ட விடு. நான் பேச்சை ஆரம்பிக்கறேன். நீ கண்டினியூ பணணிக்கோ. இட்ஸ் ஸோ சிம்பிள் ரைட்”
“ம்…அதுவும் சரி தான். ஓகே டன். ஆனா நீ சொதப்ப மாட்டியே ப்ளூ? கால் பண்ணவா?”
“ஓ!! டபுள் எஸ். கால் பண்ணு தீ. நான் பார்த்துக்கறேன்.”
சக்தி தன் அப்பா அம்மாவான நவீன் மிருதுளாவை அலைபேசியில் அழைத்தாள். முதல் முறை அவர்கள் எடுக்கவில்லை. இரண்டாவது முறை முயற்சி செய்தாள் சக்தி. அப்போதும் எடுக்கவில்லை. சக்தி பதற்றமானாள்.
“ப்ளூ என்ன இது? மொதோ ரிங்குலேயே எடுப்பாளே!! ஏன் இன்னைக்கு மூணு தடவை பண்ணிட்டும் எடுக்கலை? ஏதாவது தப்பா நடந்திருக்குமோ?”
“ம். ஓகே. உன்கிட்ட ப்ளூ ஏதோ பேசணும்னு சொன்னான் குடுக்கறேன்.”
“தீ…தீ…தீ…இரு இரு…”
“என்னம்மா?”
“இன்னைக்கு அவா நம்மாத்துக்கு வந்ததே ஒரு நல்ல விஷயம் பேச தான். நானே அதைப் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண ஃபோன் பண்ணனும்னு நெனச்சுண்டிருந்தேன். நல்ல வேளையா நீயே கால பண்ணிட்ட.”
“என்ன விஷயம் மா?”
“அந்த ராணி ஆன்டியோட ஒண்ணுவிட்ட அக்கா புள்ள ஒருத்தன் இருக்கானாம். நல்லா படிச்சிருக்கான். பெரிய உத்யோகத்துல இருக்கான். நல்ல ஃபேமிலியாம். அந்த புள்ள கூட பிரான்ஸ் ல தான் இருக்கானாம்.”
“அம்மா… அம்மா… ஸ்டாப். என்ன கல்யாணப் பேச்சு பேச தானே வந்திருந்தா?”
“ஆமாம் தீ. உனக்கும் வயசு ஏறிண்டே போறதில்லையா?”
“ஹாய் ஆன்டி எப்படி இருக்கேங்கள்?”
“ஹாய் ப்ளூ நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? ஃபுல் சார்ஜ் ல இருக்கயா?”
மிருதுளா ப்ளூவிடம் பேசிக்கொண்டிருக்கையில் சக்தி ப்ளூவிடம் தனது காதல் விஷயத்தை ஆரம்பிக்குமாறு சைகைக் காட்டினாள். ஆனால் ப்ளூ ஏதேதோ பேசிவிட்டு சட்டென
“ம்…ஆன்டி… தீ உங்ககிட்ட அவளோட லவ் பத்தி சொல்லணும்னு நினைக்கறா. ஆனா அவளுக்கு ஸ்டார்டிங் டிரபுளா இருக்காம். ஸோ நான் ஸ்டார்ட் பண்ணி குடுத்துட்டேன். இனி அவளே பேசுவான்னு நினைக்கறேன். தீ என்ன ஓகே வா!”
என்று ப்ளூ கூறியதும் சக்தி தன் தலையில் கையை வைத்து ஃபோனை மியூட்டில் போட்டுவிட்டு
“என்ன ப்ளூ இதுதான் நீ ஆரம்பிச்சு வைக்கற லட்சணமா?”
“என்ன தீ? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ஐ வாஸ் ரைட். இனி நீ ஆச்சு உன் பேரன்ட்ஸ் ஆச்சுமா. நான் போய் டின்னர் ரெடி செய்யறேன். இந்தா உன் மொபைல்”
“ஏய் ப்ளூ… தீ… என்ன பண்ணறீங்க ரெண்டு பேரும்? யாராவது பேசுங்கோ. எனக்கு ஒண்ணும் கேட்கலை. நவீ நவீ கொஞ்சம் இங்க வாங்கோளேன். இந்த ப்ளூ என்னமோ சக்தி லவ் அதுஇதுன்னு சொல்லிட்டுப் போயிடுத்து. அதுக்கப்புறமா அவா வீடியோ இருக்கு ஆடியோ வரலை. வந்து என்னன்னு பாருங்கோ.”
“இது என்ன புதுசா இருக்கே. அப்படீன்னா ப்ளூ சொன்னா மாதிரி ஏதோ லவ் தான் போல! சொல்லு தீ. யார் அந்தப் பையன்? என்ன பண்ணறார்? உனக்குப் பிடிச்சிருந்தா! அப்புறம் நாங்க என்ன சொல்ல போறோம்மா? கம் ஆன் தீ அப்பா அம்மாட்ட சொல்லு”
“ஓகே பா. நான் ஒருத்தரை விருமபறேன். அவர் பேரு விஷால். என் கூட இங்க பிரான்ஸ் ல தான் அவனும் எம் எஸ் பண்ணினான். நான் எம்எஸ்சி இன் ரோபோடிஸ் அன்ட் அட்டானமஸ் சிஸ்டம்ஸ் பண்ணினேன். அவன் எம்ஈ இன் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் பண்ணினான். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்குப்பா அவனுக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டு பேருமே லாஸ்ட் மூணு வருஷமா பார்த்துக்கவோ பேசிக்கவோ இல்ல. ஆனா ஒருவர் இன்னொருவருக்காகவே காத்திருந்தோம். இன்னைக்கு சந்திக்க வாய்ப்பு கிடைச்சுது. ரெண்டு பேரும் அவா அவா மனசுல இருந்ததை எல்லாம் டிஸ்கஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படீங்கற முடிவுக்கு வந்திருக்கோம். ஆனா எங்க கல்யாணம் எங்க ரெண்டு பேரோட பேரன்ட்ஸ் சம்மதத்தோட தான் நடக்கணும்னு நாங்க டிசைட் பண்ணிருக்கோம். அவன் அவனோட பேரன்ட்ஸ்ட்ட இன்னைக்கு பேசுவான். அது தான் நானும் உங்க ரெண்டு பேருகிட்டேயும் பேசி உங்க சம்மதத்தை கேட்கலாமேனுட்டு கால் பண்ணினேன். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லறேங்கள்.”
“ம்…ஒரே மூச்சுல உன் லவ் பத்தியும் உன் வருங்கால கணவர் பத்தியும் சொல்லி முடிச்சுட்ட. எங்களோட வேலையை குறைச்சுட்ட. எங்க பொண்ணு சாய்ஸ் என்னைக்குமே தப்பானதில்லை. தப்பாகாதுங்கற நம்பிக்கை எங்களுக்கு சென்ட்பர்சன்ட் இருக்கு. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்ங்கற ஆசை எங்களுக்குள்ள நிறைய இருக்கு.”
“இருங்கோப்பா...தீ… அந்த புள்ளாண்டானோட ஃபோட்டோ அனுப்பேன். எங்க வருங்கால மாப்பிள்ளையைப் பார்க்கணும் போல இருக்கு.”
“ம்…உன் அம்மாவே வருங்கால மாப்பிள்ளைன்னு சொல்லி எங்க முடிவ டிக்ளேர் பண்யுட்டா. ஹாப்பியா தீ?”
“ம்…டபுள் ஹாப்பிப்பா. தாங்க்யூ ஸோ மச்… உம்மா உம்மா உம்மா டூ போத் ஆஃப் யூ.”
“அடியே உன் உம்மா எல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட ஃபோட்டோ இன்னும் வரலையே! பையனைப் பார்க்காம எப்படி ஏத்துக்கறதாம்? உங்க அப்பாவோட சம்தத்த நான் சொன்னா மாதிரி சொல்லிக்கறார் கவனிச்சயா?”
“அம்மா…நீ இருக்கயே!! இதோ இந்தா. நீ கேட்ட பையனோட ஃபோட்டோ. நல்லா பார்த்துட்டு உன் டிசிஷனை சொல்லு.”
“ம்…என் பொண்ணு அழகுக்கு முன்னாடி பையன் சுமார் தான். ஆமாம் என்ன பேரு சொன்ன?”
“ம்….விஷால். அம்மா “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” ன்னு ஒரு பழமொழியிருக்கே அது இப்போ நீ சொன்னதுக்கு கரெக்ட்டா பொருந்தும். இதையே விஷாலோட அம்மாவும் சொன்னா எப்படி இருக்கும்!! அதை யோசிச்சுப் பாருமா”
“அவா அவா அம்மாக்களுக்கு அவா அவா குழந்தைகள் தான் அழகு. ம்…குட் சாய்ஸ் தீ. எனக்கும் ஓகே தான்.”
“எல்லாம் ஓகே தீ மா. நாங்க எப்போ அந்த பையனோட பேசறது? அதே மாதிரி நீ எப்போ அவா பேரன்ட்ஸோட பேசுவ?”
“அதெல்லாம் அவா பேசுவா. அது இருக்கட்டும் சக்தி. அவா எந்த ஊரு? பையனோட கூடப் பொறந்தவா எத்தனைப் பேர்? அவா எல்லாரும் எங்க இருக்கா?”
“ஓ!! ஓ!! ஓ!! மா அன்ட் பா உங்க எல்லா கேள்விகளுக்குமான பதில் எல்லாத்தையும் வாட்ஸ்அப் பண்ணறேன். விஷால் எப்போ ஃப்ரீன்னு கேட்டுட்டு அவனை உங்ககூட பேச சொல்லறேன். நீங்க ஓகே சொன்னதுக்கப்புறம் தான் அவனை இங்கே என் ரூமுக்கே வரவிடணும்னு அவனை அப்படியே காஃபி ஷாப்லேந்து திருப்பி அனுப்பிட்டேன்.”
“ம்…அப்படியா தீ.”
“என்ன அப்படியா தீ ன்னு வாயை பிளக்கறேங்கள். அவ தான் ஏதோ கதை விட்டுண்டிருக்கான்னா நீங்களும் அவ கூட சேர்ந்துண்டு… போங்கோப்பா”
“ம்…அப்படியா மா. சரி சரி உங்களுக்கு நைட் தூங்கற டைம் ஆயிடுத்து போய் ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குங்கோ. இப்போ எங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னதுக்கு தாங்க் யூ ஸோ மச். குட் நைட் ப்பா. குட் நைட் மா.”
“ஓகே டா கண்ணா ஹாவ் எ நைஸ் ஈவ்னிங். கன்வே அவர் ரிகாட்ஸ் டூ விஷால் டூ. பை”
மனதிலிருந்த தயக்கம் நீங்கி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி ப்ளூவோடு நடனமாடி மகிழ்ந்தாள் சக்தி.
திருமணம் என்னும் பந்தத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதில் ஒரு கை ஓசை ஒலித்தது.
விஷால் அவளை உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்த சக்தி அவனை கட்டியணைத்துக் கொண்டு ஓவென்று அழுதாள். அவளைத் தட்டிக் கொடுத்து அவளின் இரு தோள்களை பிடித்து நேருக்கு நேராக அவளைப் பார்த்து
“ஹே தீ!! ஏன் என் மனைவியைப் பார்த்ததும் இப்படி தேம்பி அழற? அவ என்ன நீ அழறா மாதிரியா இருக்கா? மொதல்ல கண்ண தொடச்சுக்கோ. நல்ல வேளை இந்த காஃபி ஷாப்ல இப்போ நம்மளைத் தவிர வேற யாருமில்ல. இருந்திருந்தா நீ அழறதப் பார்த்து ஏதோ நான் தான் உன்னை ஏதோ சொல்லிட்டேன்னு ஒரு பெரிய ரகளை ஆகியிருக்கும். என்ன சொல்லற தீ?”
“போடா!!”
“என்னது போடா வா? என்னப்பா என் மனைவியைப் பார்த்ததும் மரியாதைக் குறையுது!!”
“ஏன் வி இப்படி பண்ணின?”
“நான் என்ன பண்ணினேன் தீ?”
“உனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு நீ சொன்னதும் மனசளவுல நான் ரொம்ப நொறுங்கிப் போயிட்டேன் தெரியுமா? உன் முன்னாடி உட்கார்ந்து பேசினேனே தவிர என் மனசெல்லாம் அச்சோ இவனுக்கு கல்யாணம் ஆயிடுத்தேன்னு அழுதுது. கொஞ்ச நேரத்துல நான் செத்துப் பொழச்சா மாதிரி இருக்கு!! ஏன் இப்படி செஞ்ச வி?”
“பின்ன நான் மட்டும் மூணு வருஷமா செத்து செத்துப் பொழச்சிண்டிருந்தேனே அதைக் கம்பேர் பண்ணும் போது நீ அனுபவிச்ச இந்த சில மணி நேர டென்ஷன் ஒண்ணுமே இல்ல தெரியுமா!! சரி அதெல்லாம் விடு தீ. என் மனைவி எப்படி இருக்கா?”
“ம்….அது தான் உன் முன்னாடியே உட்கார்ந்திருக்காளே நீயே பார்த்து சொல்லு!”
“எனக்கு பிடிச்சுப் போனதுனால தானே நான் அவளை மனசார மனைவி ஆக்கிண்டேன். அவ எப்படின்னு நீ சொன்னா…..நீ சொல்லி அதை நான் கேட்டா எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் இல்ல. சொல்லு தீ”
“அவளுக்கென்ன வி!! அவ தான் இப்ப ரொம்ப குடுத்து வச்சவ. அவளுக்காகவே மூணு வருஷமா காத்திருக்குற கணவன்!! பாசகாரன், அவ மேல உயிரா இருக்கறவன்னு இன்னும் சொல்லிண்டே போகலாம்… அப்படி ஒருத்தனை இந்த மூணு வருஷத்துல… அவளோ இல்ல அவ அப்பா அம்மாவோ தேடிருந்தாலும் கிடைச்சிருக்க மாட்டான். போதுமா!”
“தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ தீ. உன்கிட்ட எப்போ நான் ப்ரபோஸ் பண்ணினேனோ அன்னேலேந்து நான் உன்னை என் மனைவியா தான் மனசுல நெனச்சுண்டு வாழ்ந்துண்டிருக்கேன். சரி இப்போ கேட்கிறேன் தீ…ம்… வெயிட் வெயிட்…உன் மொபைலை முதல்ல என்கிட்ட குடு…ம்…இப்ப சொல்லு…என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”
“தீ அக்ரீட் டூ மேரி மீ. தீ என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துண்டுட்டா. அதுதான் ரீசன் ஃபார் மை ஹாப்பினஸ். ஓகே. இட்ஸ் டைம் நாம கிளம்பலாமா தீ?”
“ஓ எஸ். ஓகே மிஸ்டர் வில்யம். ஹாவ் எ நைஸ் டே. பை”
“மேடம் அன்ட் சார் ஹாவ் அ லவ்லீ வெட்டெட் லைஃப்.”
“தாங்க்யூ மிஸ்டர் வில்யம். வீ வில். பை”
என்று மிகுந்த சந்தோஷத்தில் அந்த ரெஸ்டாரன்ட்டிலிருந்து இருவரும் வெளியே வந்தனர். அப்போது விஷால் சக்தியை அவன் காருக்கு அழைத்துச் சென்று காரின் முன் கதவை அவளுக்காக திறந்து
“உனக்கு ரொம்ப பிடித்த ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ். நிறைய சம்பாதிச்சு இந்த காரைத் தான் முதல்ல வாங்கணும்னு வெயிட் பண்ணி வாங்கினது. உன்னை எப்போ சந்திச்சாலும் இதுல வந்து தான் சந்திக்கணும்னு வெயிட் பண்ணிண்டிருந்தேன் தீ. ஏறி உட்காரு ப்ளீஸ்”
என்று இருவரும் விஷாலின் காரில் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்குக்குள் சென்றனர். அங்கே பார்க்கிங்கில் காரை வைத்துவிட்டு உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்து பேசலானார்கள்.
“ஹலோ சார். என் மொபைலை இப்போவாவது தர்றேங்களா?”
“ஓ ஷுவர். இந்தாமா உன் மொபைல்”
“ஆமாம் ஏன் என்னோட மொபைலை எடுத்து வச்சுண்டுட்டு என்கிட்ட அந்த கேள்வியைக் கேட்ட?”
“ம்…முன்ன மாதிரி மறுபடியும் யாராவது உனக்கு கால் பண்ணி, நீ எழுந்து போய், அப்புறம் அப்படியே என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டன்னா? அதுக்கு தான். எல்லாம் ஒரு செல்ஃப்டிக்கு தான்.”
“ம்…ஏதோ ஒரு தடவ அப்படி நடந்துதுன்னா எப்பவுமே அப்படியேவா நடக்கும்!! என்ன வி.”
“சொல்ல முடியாது தீ. ஒரு தடவ நடந்துடுத்துன்னா நாம சேஃப்பா இருக்கறது தான் புத்திசாலிதனம். புரிஞ்சுதோ?”
“ம்..நன்னா புரிஞ்சுது. சரி உன் பேரன்ட்ஸ் எப்படி இருக்கா? என் அப்பாவ மாதிரி அவா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லலையா?”
“சொல்லாம இருப்பாளா? முதல்ல என்கிட்ட சொல்லி சொல்லிப் பார்த்தா…நான் பிடிக் குடுக்காததால என் தம்பிக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொணதொணத்தா. நான் என் தம்பிட்ட எனக்காக எல்லாம் நீ வெயிட் பண்ண வேண்டாம் நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன். ஆனா அவன் கேட்கலை. இந்த வருஷத்துக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாகணும்னு பிடிவாதமா இருக்கா…நானும் சரி இத்தனை வருஷமா கிடைக்காத தீ… இனி எங்க கிடைக்கப் போறா!! அவளுக்காக ஏன் என்ன பெத்தவாளையும் கூடப் பிறந்தவனையும் கஷ்டப்படுத்தணும்னு…அவா பார்க்கற ஏதாவது ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லி லைஃப்ல செட்டில் ஆகிடணும்னு நினைச்சிண்டிருந்தேன் அப்போ தான் உன் மெஸேஜ் வந்தது.”
“அப்பாடா கரெக்ட்டான நேரத்துல தான் மெஸேஜ் பண்ணிருக்கேன். எனக்கு தெரியும் நீ இப்படி ஏதாவது செய்வன்னு அதுனால தான் மெஸேஜ் பண்ணினேன்.”
“ஆமாம் ஆமாம்…அது தான் எனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு சொன்னதுமே உன் முகம் பிரகாசிச்சுதா?”
“ம்…உன்கிட்ட கேட்காம நான் எப்படி அவாகிட்ட பேசுவேன் வி. நீ விளையாட்டுக்கு சொன்னது போலவே நிஜத்துல உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா!!! அப்புறம் என்னோட சேர்ந்து அவாளும் சங்கடப்படுவா. அதுனால முதல்ல உன்கிட்ட பேசிட்டு அப்புறம் அவாகிட்ட பேசலாம்னு இருந்தேன்.”
“வில் தே அக்செப்ட்?”
“அவா ரெண்டு பேரும் என்னைக்குமே என்னோட விருப்பங்களுக்குத் தடை சொன்னதில்லை. அதுனாலையோ என்னவோ நானும் என் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கறதுல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். அதுனால இந்த விஷயத்தை சொன்னா என் பேரன்ட்ஸ் நிச்சயம் சந்தோஷப்படுவா அன்ட் அக்செப்ட்டும் பண்ணுவா. ஸோ டோன்ட் வரி வி.”
“என் ஆத்துலேயும் நிச்சயம் சந்தோஷப்படுவான்னு தான் நினைக்கறேன். அப்போ நம்ம ரெண்டு பேர் ஆத்துலேயும் நம்ம கல்யாணத்துக்கு பச்சக்கொடி காட்டுவான்னு சொல்லு.”
“ஐ திங்க் ஸோ. நான் கிளம்பும் போது கூட அப்பா அம்மாட்ட சொல்லலையான்னு ப்ளூ கேட்டான்… நான் திரும்பி வந்துட்டு பேசறேன்னு சொன்னேன். ஸோ இன்னைக்கே என் பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன் வி.”
“வெயிட்…நீ இப்போ என்ன சொன்ன?”
“நான் இன்னைக்கே என் பேரன்ட்ஸ்கிட்ட…”
“அது இல்ல அதுக்கு முன்னாடி ஏதோ சொன்னயே!! ஏதோ ப்ளூன்னு…அது என்ன?”
“ஓ!! அவனைப் பத்தி நீ என் ஆத்துக்கு வரும்போது தெரிஞ்சுக்கோ.”
“நான் தான் சொன்னேன் ல வி… நீ என் ஆத்துக்கு வந்து தெரிஞ்சுக்கோ. அவனை உனக்கு இன்டர்டியூஸ் பண்ணி வைக்கறேன்.”
“ஓகே. அப்படின்னா இப்பவே உன் ஆத்துக்குப் போகலாமா?”
“இப்பவா… நோ நோ. மொதல்ல நான் என் பேரன்ட்ஸ்கிட்ட பேசறேன். அவா ஓகே தான் சொல்லுவா…இருந்தாலும் அதை அவா சொல்லிக் கேட்டதுக்கப்புறமா உன்கிட்ட சொல்லறேன் நீ அப்போ வா. சரியா?”
“ம்…நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா அம்மா ஓகே சொன்னா தான் நான் உன் வீட்டுக்கே வரணுமோ!!! ஓகே. ஓகே. உன்னை உன் ஆத்துல ட்ராப்பாவது பண்ணலாமா?”
“எதுக்கு? என் கார் இருக்கே!! நீ என்னை என் கார் நிக்கற பார்க்கிங்ல இறக்கி விடு போதும். நீயும் இன்னைக்கே உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசி அவாளோட சம்மதத்தையும் வாங்கு வி.”
“நிச்சயமா. ஆத்துக்கு போனதுமே இந்தியாவுக்கு கால் போட்டு பேசிடுவேன். மூணு வருஷமா இதுக்கு தானே காத்திருந்தேன். ம்…இதோ உன் கார் நிற்கும் இடம் வந்தாச்சு. நீ அவசியம் உன் கார்ல தான் போகணுமா தீ. என் கார்ல என் கூடவே வாயேன்.”
“வி… என்னது இது சின்ன பசங்க மாதிரி பேசற? வீ போத் ஆர் மெச்சூர்டு அடல்ட்ஸ். இட்ஸ் ஓகே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அப்புறம் நீயும் நானும் எப்பவுமே ஒண்ணா தானே இருக்கப்போறோம். இப்போ பத்திரமா உன் ஆத்துக்கு கிளம்பு.”
“ம்…சரி சரி…கல்யாணத்துக்கு ஒத்துண்டதுமே மேடம் ஆர்டர் போட தொடங்கிட்டாங்க…அதைக் கேட்காம இருப்பேனா? ஓகே டேக் கேர் பை. நான் ரீச் ஆயிட்டு கால் பண்ணறேன். நீயும் பத்திரமா உன் ஆத்துக்குப் போ. பை தீ”
“ஹா! ஹா! ஹா! சரி சரி பை. ட்ரைவ் சேஃப் வி”
“யூ டூ தீ”
என்று கூறி விஷால் அவன் வீட்டிற்கும் சக்தி அவள் வீட்டிற்கும் அவரவர் கார்களில் சென்றனர்.
பல வருடங்களாக மனதில் காதல் கொண்டு இதுவரை ஒன்று சேரா தண்டவாளம் போல் இருந்த மனங்கள் இரண்டு இப்போது ஒன்று சேர்ந்திட மனம் விட்டுப் பேசிக் கொண்டு மீண்டும் காணும் தவிப்போடு கண்கள் இரண்டு பிரிந்து அவரவர் வழி சென்றன மனதில் கல்யாண கனவுகளை சுமந்துக் கொண்டு
“சரி அதை விடு…உன் அவசரம், பதற்றம் உன்னை யோசிக்க விட்டிருக்காது. ஹாஸ்டலுக்கு வந்த ஃபோன் கால் யாருடையது? அதைக் கேட்டு ஏன் ஷாக் ஆன?”
“அது என் அம்மாகிட்டேந்து வந்த கால் வி.”
“அம்மாகிட்டேந்து தானே வந்தது அதுக்கு ஏன் ஷாக் ஆகனும்?”
“அவங்க சொன்ன விஷயம் அப்படி”
“உன் அம்மா அப்படி என்ன சொன்னாங்க தீ?”
“எனக்கு எல்லாமே என் அப்பா அம்மா தான் வி. அது உனக்கும் நல்லாவே தெரியும் ல”
“ஆங் தெரியுமே தீ”
“எனக்கு கிடைச்சிருக்குற பேரண்ட்ஸ் மாதிரி மத்தவங்களுக்கு இருக்காளானு எனக்கு தெரியாது ஆனா எனக்கு அந்த கடவுள் சூப்பரான அப்பா அன்ட் அம்மாவை கொடுத்திருக்கார். அந்த கால் ல அம்மா என்கிட்ட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னா. ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிருக்கறதா சொன்னா. எனக்கு என் அப்பாவின் முகமும் அம்மாவின் முகமும் என் முன்னாடி வந்தது. உடனே கிடைச்ச ஃப்ளைட் அது டைரெக்ட் ஃப்ளைட்டா இல்ல சிங்கள் ஹாப் ஃப்ளைட்டான்னு எல்லாம் பார்க்காம புக் பண்ணி கிளம்பினேன். எதுல சீட் இருந்ததோ அதில் புக் செஞ்சேன். நான் புக் பண்ணின ஃபளைட் லண்டன் வழியா இந்தியா போற ஃப்ளைட். ஸோ ஃபிரான்ஸ் டூ லண்டன் டிக்கெட்டை மட்டும் கையில் வச்சிண்டிருந்தேன். ரூம் சாவியை ஒப்படைக்கும் போது பதற்றத்தில் என் ஃப்ளைட் டிக்கெட்டை செக்யூரிட்டி டேபிள்லேயே வச்சுட்டு டாக்ஸிக்காக காத்திருந்தேன்.”
“அச்சச்சோ… அப்புறம்? அப்படியே டிக்கெட் இல்லாமயே ஏர்போர்ட் போயிட்டியா?”
“இல்ல வி. அந்த செக்யூரிட்டி அதைப் பார்த்துட்டு என்னோடதா தான் இருக்கும்னு என்கிட்ட வந்து டிக்கெட்டைக் காட்டிக் கேட்டார். நானும் ஆமாம்னு சொல்லி வாங்கிண்டு அவருக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு டாக்ஸி வந்ததும் அங்கேந்து கிளம்பிட்டேன்.”
“ஓ !!! ஓகே ! இப்போதான் எனக்கு புரியுது.”
“என்னது புரியறது வி?”
“அதுவா என் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகறதுக்கு முன்னாடி உன் மொபைலுக்கு கால் பண்ணினேன் அது ஸ்சுவிச்சிடு ஆஃப்ன்னு வந்தது. அதுக்கப்புறம் உன் ஹாஸ்டல் நம்பருக்கு கால் பண்ணினேன். அப்போ அந்த கால் அட்டென்ட் பண்ணினவர் நீ லண்டனுக்கு கிளம்பி போயிட்டனு சொன்னார். அவர் உன் டிக்கெட்டைப் பார்த்துட்டு நீ லண்டன் வரைக்கும் தான் போறேன்னு நினைச்சுண்டு என்கிட்ட சொல்லிருக்கார். நானும் நீ ஏன் லண்டன் போகனும் உனக்கு தான் பிரான்ஸிலேயே வேலை கிடைச்சிருக்கேனு நினைச்சுண்டேன். அப்புறம் நானா அஸ்யூம் பண்ணிடேன் உனக்கு அதைவிட பெட்டர் ஆஃபர் லண்டன்ல கிடைச்சிருக்கும் அது தான் அவசரமா போயிருப்பனு…ஐ ஆம் ஸோ சாரி ஃபார் தட் தீ! ம் சொல்லு உன் அப்பா எப்படி இருக்கார்? நீ கரெக்ட்டா ஊருக்குப் போய் சேர்ந்துட்டயா?”
“இட்ஸ் ஓகே வி. உனக்கு தெரியாததால நீ அப்படி நினைச்சி கிட்ட. அதுக்கு எதுக்கு சாரி எல்லாம். ம் நான் கரெக்ட்டா இந்தியா ரீச் ஆனேன். அங்க அம்மா ஒரே அழுகை. அப்பாவுக்கு சர்ஜரி செய்யற அளவுக்கு போயிடுத்து. மொதல்ல அம்மாவை சமாதானப்படுத்திட்டு மெதுவா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்புறம் அம்மாவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டு நடந்ததைச் சொன்னா. டாக்டர் கிட்ட பேசினேன். அவர் சர்ஜரிக்கு அப்புறம் அப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னார். அதுக்குள்ள என் மாமா, பாட்டி தாத்தா எல்லாரும் வந்துட்டா. அவா எல்லார்கிட்டயும் விவரத்தைச் சொல்லி சமாதானப் படுத்தி அவாளோடவே அம்மாவையும் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு நிமிர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. ரண்டு மூணு நாளா தூங்காதது டையர்டா இருந்தது. அதுவுமில்லாம என் அப்பாவை கிட்டப் போய் பார்க்க முடியாம அவர் கையைப் பிடித்து உனக்கு நான் இருக்கேன்ப்பானு சொல்ல முடியாம ஐசியு வாசல்ல தவிச்சிண்டிருந்தேன். அப்போ வந்தா என் அப்பாவோட அப்பாவும் அம்மாவும்.”
“அவாளும் உனக்கு பாட்டி தாத்தா தானே? அப்புறம் ஏன் உன் அப்பாவோட அம்மா அப்பான்னு சொல்லற?”
“ஆமாம் ஆமாம் என் அப்பாவை பதினாறு வயசுலேயே வேலைக்கு அனுப்பி அவரோட உழைப்பை உறிஞ்சினவா. ஒரு ஃபார்மாலிடிக்காக வந்து எட்டிப் பார்த்துட்டு…என் அம்மாவையும் என்னையுமே குற்றம் சொன்னா…எனக்கு அவா பேசின விதம் அன்ட் விஷயம் பிடிக்கலை ஸோ தலையில கைய வச்சுண்டு எதுவும் பேசாம உட்கார்ந்துட்டேன்.”
“உன்ன என்ன சொன்னா? பேத்தியப் பத்தி குற்றம் சொல்ல என்ன இருக்கு அவாளுக்கு?”
“ம்…நான் யாரையோ கல்யாணம் பண்ணிண்டுட்டேனாம் அதுனால தான் என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்…அப்படி இப்படின்னு என்னனவோ சொன்னா. நான் எதையுமே காதுல வாங்காம என் அப்பா நல்லபடியா குணமாகி வரணுமேன்னு மட்டும் வேண்டிண்டே இருந்தேன்.”
“உனக்கு இருந்த டென்ஷன்ல நீ எப்படி என்னைப் பத்தி… இல்ல வேற எதைப்பத்தியும் யோசிச்சிருப்ப…ம்…யோசிக்கனும்னு தோனிருக்காது. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.”
“அப்பாக்கு சர்ஜரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சு …ஆஃபட்டர் சர்ஜரி ரிவியூ எல்லாம் முடிஞ்சு நல்லாகி வீட்டுக்கு வரதுக்கு ஒரு மாசமாச்சு. என் மாமா, பாட்டி, தாத்தா அன்ட் அப்பாவோட பேரண்ட்ஸ் எல்லாரும் ஒரு வாரம் இருந்துட்டு ஊருக்கு கிளம்பி போயிட்டா. நான் இன்னுமொரு மாசம் அப்பா அம்மாவோடவே இருந்தேன். அப்போ அப்பா மெல்ல என் கல்யாணப் பேச்சை எடுத்தார். உண்மையை சொல்லணும்னா அப்போ தான் எனக்கு உன் ஞாபகமே வந்தது. நான் தயங்கினேன். என் தயக்கத்தைப் புரிஞ்சுண்ட அம்மா அப்பாவிடம் “விடுங்கோ பார்க்கலாம் இப்போ என்ன அவசரம்னு” சொல்லி அப்பாவை சமாதானம் செய்து எனக்கு சப்போர்ட் பண்ணினா. அப்புறமா அம்மா மெதுவா என்கிட்ட வந்து “தீ உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோனறதோ அப்போ பண்ணிக்கோ சரியா.” னு சொன்னது எனக்கு க்ரேட் ரிலீஃபா இருந்தது. ஸோ இரண்டு மாசம் ஓடிப்போச்சு. அப்பா உடம்பும் தேறியாச்சு. அடுத்து நான் என் வேலையைப் பார்க்க வேணுமேனுட்டு அங்கேந்து புறப்பட்டு மறுபடியும் பிரான்ஸ் வந்தேன். அவா என்னை ஒரு ப்ராஜெக்ட்டுக்காக யூ.கே.வுக்கு அனுப்பினா. அங்க ஒரு ஆறு மாசம் இருந்தேன் …தென் பேக் டூ பிரான்ஸ். இதுதான் நடந்தது. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போனதுல நான்… என் அப்பா அம்மா வேலையைத் தவிர வேறெதையுமே நினைச்சுப் பார்க்கக் கூட நேரமில்லாம போயிடுத்து. அதுனால தான் எந்த சோஷியல் ப்ளாட்ஃபார்ம் லயும் நான் வரவேயில்லை. அதுக்கெல்லாம் நேரமும் இருக்கலை. உண்மையை சொல்லணும்னா வரத்தோனலை. தட்ஸ் இட் இதுதான் நடந்தது. போன வாரம் தான் உன்னை எப்படியாவது கான்ட்டாக்ட் பண்ணமுடியுமானு யோசிச்சேன். அப்போ கைக் குடுத்தது தான் ஃபேஸ்புக்.”
“அப்பப்பா எவ்வளவு நடந்திருக்கு? உங்க அம்மாவும் நானும் உன் மொபைலுக்கு அன்னைக்கு நைட்லேந்து காலையில வரைக்கும் எவ்வளவு கால் பண்ணிருப்போம்…உங்க அம்மாவுக்காவது அடுத்த நாளே உன் மொபைல் தொலைந்த விஷயம் நீ சொல்லி தெரிஞ்சிருக்கும்….ஆனா நான் கிட்டத்தட்ட ஒரு வருஷமா ட்ரைப் பண்ணினேன் தெரியுமா? மூணு வருஷம் கழிச்சு வந்து நீ சொல்லறதை எல்லாம் கேட்டா ஏதோ ஒரு த்ரில்லர் கம் ஃபேமிலி ஃபில்ம் பார்த்தா மாதிரி இருக்கு தீ!!”
“ம்…இருக்கும் இருக்கும்…சொல்ல மாட்ட!!! உனக்கென்ன ஜாலியா கல்யாணமெல்லாம் ஆயிடுச்சு. குழந்தைகள் இருக்காளா? ம்…அதுதான் நடந்ததை எல்லாம் சொல்லிட்டேனே இப்போ உன் மனைவியை எனக்கு காட்டுவியா? இன்ட்ரோ பண்ணி வெப்பயா?”
“ம்….ஓகே ஓகே தீ!! சாரி சாரி! அதுக்கப்புறம் அந்த பீட்டரை சந்திச்சயா? உனக்கு அந்த ப்ரொபசராலயும் அந்த ரோபோவாலையும் அதுக்கப்புறம் பிராப்ளம் ஏதும் வரலையே!!”
“ம்…ஹூம்…அதுக்கப்புறம் அவங்களால எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. அன்னைக்கு நடந்தது அத்தனையும் இப்போ நினைச்சாக் கூட பயமா தான் இருக்கு. அது போல எல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன் பா…”
“ம்..சரி அந்த ப்ரொபசர் சொன்ன அந்த ரோபோவை கண்டு பிடிச்சியா? அதை என்ன பண்ணின?”
“நானும் பார்த்துண்டே இருக்கேன்… வந்ததுலேந்து என்னைப் பத்தி மட்டுமே கேட்டுண்டிருக்க!!”
“ப்ளீஸ் சொல்லேன் தீ. ப்ரொபசர் கதையை பாதியிலேயே விட்டா எப்படி? அவரோட ரோபோவை கண்டு பிடிச்சியா?”
“நோ வே!! அதை தெரிஞ்சுக்கணும்னா முதல்ல ஐ ஹாவ் டூ மீட் யுவர் வைஃப். போலாமா?”
“அவ இப்போ வீட்ல இல்ல தீ.”
“சரி அவங்க ஃபோட்டோவாவது காட்டுப்பா. எனக்கு தெரிஞ்சவங்கன்னு வேற சொல்லற. அது யாருன்னு நானும் தெரிஞ்சுக்கறேனே! என்னை மீட் பண்ண வர்றதை அவங்ககிட்ட சொன்னயா?”
“ம்..ம்…எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவளோட ஃபோட்டோ…ம்… அச்சச்சோ என் வாலட்டை மாத்தி எடுத்துண்டு வந்துட்டேனே!! சரி இரு என் மொபைல்ல அவ ஃபோட்டோஸ் இருக்கு காட்டறேன்.”
“மொபைல்ல இருக்குற ஃபோட்டோவை எடுக்க இவ்வளவு நேரம் என்ன பண்ணுற வி”
“இரு தீ. அவளோட நல்ல பிக்ச்சரை காட்டணும் ல…அது தான்…ம்…இதோ பார்.”
என்று தன் மனைவியின் படத்தை மொபைலில் காட்டிய விஷால் சக்தியிடம்
“என்ன தீ!! என் மனைவி எப்படி இருக்கா? உனக்கு அவ யாருன்னு அடையாளம் தெரியுதா?”
சக்தி விஷாலின் மொபைலை அவனிடமிர்ந்து வாங்கிப் பார்த்ததும் ஷாக் ஆனாள். விஷால் அவளை மூன்று முறை அழைத்தும் அசையாதிருந்த சக்தியின் தோள் மீது கை வைத்து உலுக்கினான். அப்போதும் எந்த வித அசைவுமின்றி அமர்ந்திருந்த சக்தியின் கண்கள் மட்டும் கலங்கின.
அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த சக்தியை அழைத்தான் விஷால் ஆனால் அவள் அசையவில்லை. அவளின் வலது தோள் மீது கை வைத்து
“தீ…தீ…தீ…. என்ன ஆச்சு?”
என்று உலுக்கினான். சட்டென சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை நோக்கி
“ஓ தட்ஸ் க்ரேட் வி. கங்க்ராட்ஸ்.”
என்று கூறிக்கொண்டே அவள் கண்களிலிருந்து அருவி போல் வழிய இருந்த கண்ணீரை மெல்ல கண்களுக்குள்ளேயே அனுப்ப வேண்டி டேபிளில் இருந்த டிஷு ஒன்றை எடுத்து விஷாலுக்கு தெரிந்துவிடக் கூடாது என்றெண்ணி முகத்தில் புன்னகையுடன் கண்களை மெல்ல மேல் நோக்கி டிஷுவால் தூசித்தட்டுவது போல கண்களைத் தட்டினாள். அதைப் பார்த்த விஷால்
“ஹேய் தீ…நீ அழறயா?”
“ச்ச …ச்ச நோ நோ வி. ஐ ஃபீல் ஹாப்பி ஃபார் யூ”
“ம்…நம்பிட்டேன் நம்பிட்டேன். அசடு வழியற தீ. என் மேல இவ்வளவு அசையை வச்சிருக்க தானே அப்புறம் ஏன் அன்னைக்கு நான் ப்ரப்போஸ் பண்ணும் போது சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்ட? சரி போனியே..அதுக்கப்புறம் என்னை கான்ட்டாக்ட் பண்ணனும்னு ஏன் உனக்கு தோனலை?”
“விடு வி. இனி அதைப் பத்தி எல்லாம் பேசி என்ன ஆக போறது. ஜஸ்ட் ஃபர்கெட் இட்.”
“ஏன் சம்பந்தப் பட்ட நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அதெல்லாம் விடு வி. உன் மனைவி யாரு? எப்படி இருக்கா? ஃபோட்டோ எதாவது வச்சிருந்தா காமியேன் ப்ளீஸ்.”
“எனக்கு… நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காம என் மனைவியை உனக்கு இன்ட்ரோ பண்ணி வைக்க மாட்டேன். அதனால ஒழுங்கா பதில் சொல்லு. அவளை உனக்குக் காட்டறேன். உனக்கும் அவ ரொம்ப பரிட்சயமானவ தான்.”
“அப்படியா யாருப்பா அது? நம்ம கூட காலேஜ்ல படிச்சவளா? இல்லை….”
“ஹலோ மேடம் மொதல்ல என்னோட கேள்விகளுக்கான பதில்…”
“ஓகே ஓகே…அன்னைக்கு நீ உன் காதலை என்கிட்ட சொன்னதும் என் மொபைலுக்கு ஒரு கால் வந்தது.”
“ஆமாம் ஆமாம் அதை அட்டெண்ட் பண்ணிட்டு வரதா சொல்லிட்டு போனவ தானே நீ!”
“ஆமாம் வி அட்டெண்ட் பண்ணிட்டு வந்திடலாம்னு தான் வெளியே போனேன் ஆனா அந்த கால் நம்மளை இப்படி பிரிச்சு வைக்கும்னு நான் எதிர்பார்க்கலை.”
“அப்படி நம்மளை பிரிக்கும் அளவுக்கு அந்த கால் யார்கிட்டேந்து வந்தது?”
“ப்ரொபசர் சேவியர் கிட்டேந்து தான் அந்த கால் வந்தது”
“ப்ரொபசர் சேவியரா!! அவர் நாம காலேஜ் முடிச்ச ஒரு வாரத்துல சூசைட் பண்ணி இறந்துட்டதா கேள்விப்பட்டேனே. நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்துட்டு அவர் இறந்துட்டாரேன்னு நான் நினைச்சேன். அவர் எதுக்கு உன்னை கால் பண்ணினார்? ஆமாம் ஆமாம் நீ அவரோட பெட் அன்ட் பெஸ்ட் ஸ்டூடண்ட் ஆச்சே!!! அவருக்காகவா அப்படி ஓடின?”
“அவர் அன்னைக்கு எனக்கு கால் பண்ணும் போது ரொம்ப பதட்டமா பேசினார். உடனே என்னைப் பார்த்து முக்கியமானது ஒன்னு என்கிட்ட தரணும்னு சொல்லி நான் எங்கிருந்தாலும் உடனே கிளம்பி அவர் இருக்குற இடத்துக்கு வரச்சொன்னார்.”
“சரி அதை நீ எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே! நாங்களும் வந்திருப்போமே!”
“இல்ல வி அவர் என்னை மட்டும் தனியா வரச்சொன்னார். அதுவும் உடனே…அவர் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தோனித்து. அதுவுமில்லாம நானும் கொஞ்சம் பதற்றமானேன். உன்கிட்ட சொல்ல முடியலையேன்னு கண்ணு கலங்கித்து….சரி போயிட்டு வந்து சொல்லிக்கலாம்னு அங்க வந்த டாக்ஸியை பிடித்து ப்ரொபசரைப் பார்க்க புறப்பட்டுப் போயிட்டேன். “
“சரி அவர் உன்னை எங்க வரச்சொன்னார்? ஏன் வரச்சொன்னார்?”
“அவர் கால் பண்ணின கொஞ்ச நேரத்துல எல்லாம் வேறொரு நம்பர்லேந்து நான் எங்க வரணும்னு லொக்கேஷன் ஷேர் செய்தார்.”
“ஏன் அவர் நம்பருக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் வேறொரு நம்பர்லேந்து லொக்கேஷனை ஷேர் பண்ணனும்?”
“அந்த மெஸேஜைப் பார்த்ததும் தான் அவர் ஏதோ பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தெரிய வந்தது.”
“அப்படி என்ன மெஸேஜ் அது?”
“அதுல அவர் மிகவும் ஆபத்தில் சிக்கியிருக்கிறார்னும் அதிலிருந்து தப்பி ஓடும் போது அவருடைய மொபைலை எங்கயோ தவறவிட்டுட்டார்னும் எழுதியிருந்தது.”
“அய்யயோ!! சரி அவர் ஷேர் பண்ணின லொக்கேஷனுக்கு போனயா?”
“ம் போனேன். அங்க எந்த பில்டிங் எதுவுமே இருக்கலை. ஒரே இருட்டா இருந்தது. சுத்திப் பார்த்தேன். அப்போ அந்த டாக்ஸி டிரைவர் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே நானும் வேகமா பணத்தை எடுத்து அவன் கையில கொடுத்தேன்… அவன் அதை வாங்கிண்டு என்னைப் பார்த்து …”இங்க எதுக்கு வந்திருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமானு” கேட்டான். அதுக்கு நான் அவனைப் பார்த்து… உன் வேலையைப் பார்னு சொன்னேன். அவன் என்னை முறைத்து விட்டு ஏதேதோ திட்டிட்டு அங்கிருந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி எனக்கு முன்னாடிலேந்து நகந்தான் அவ்வளவு தான் நான் அதிர்ச்சியில் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்.”
“ஏன் தீ? என்ன ஆச்சு?”
“எனக்கு முன்னாடி இருந்தது ஒரு மயானம்.”
“என்னது? அப்பவாவது எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம் இல்ல.”
“உனக்கு கால் பண்ணி விவரத்தை சொல்லி உன்னை அங்கே வரச்சொல்லலாம்னு மொபைலைத் தேடினேன். அப்போ நான் இருந்த பதற்றத்துல என் மொபைலை அந்த கார்லயே விட்டது எனக்கு தெரிய வந்தது.. அவனும் அதைக் கொண்டு போயிட்டான்”
“அச்சச்சோ!!! சரி அப்புறம் நீ என்ன பண்ணின?”
“மெதுவா அங்கேயே சுத்தி சுத்தி ஏதாவது பப்ளிக் டெலிபோன் இருக்கானு பார்த்தேன். அப்போ ஒரு பெரிய மரத்துக்குப் பின்னாடிலேந்து தீ …தீ…தீ…னு என்னை யாரோ கூப்பிடறா மாதிரி இருந்தது. நானும் மெதுவா அந்த குரல் வந்த டைரெக்ஷனில் போனேன். அந்த குரல் வந்த மரத்துக்குப் பின்னாடி சாய்ந்தபடி ப்ரொபசர் சேவியர் குத்துயிரும் கொலையுயிருமா கிடந்தார். அவரை அப்படி பார்த்ததும் என்னோட பதற்றம் இன்னும் ஜாஸ்தியாச்சு…ஹெல்ப் ஹெல்ப்னு கத்த ஆரம்பித்தேன். அவர் என்னை அமைதியா இருக்கும் படி சொன்னார். நானும் சற்று நிதானமாகி ஹாஸ்பிடல் போகலாம்னு அவரை தூக்க முயற்சித்தேன்…ஆனா என்னால முடியலை. அவருக்கு என்ன நடந்ததுனு கேட்டேன்?”
“ம்…என்ன ஆச்சாம்? ம்…ம்…அவர் எப்பவும் போல சும்மா இருக்காம எங்கயாவது போராட்டம் பண்ணிருப்பார் இல்லாட்டி யாரையாவது எதிர்த்துக் கேட்டிருப்பார்…அதுதானே!!”
“இல்ல வி. அவர் ஒரு ரோபோ தயாரிச்சுட்டு இருந்தார் அது உனக்கு தெரியுமா?”
“ம்…ரோபோ வா? இல்லை எனக்குத் தெரியாதே? உனக்குத் தெரியுமா?”
“ம்…எனக்கு தெரியும் ஆனா அதை அவர் என்கிட்டேயும் பிஎச்டி ஸ்டூடண்ட் பீட்டர் கிட்டேயும் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த ரோபோவைப் பத்தி தெரியும்ங்கற விஷயம் பீட்டருக்குத் தெரியாது. ஆனா பீட்டருக்கு தெரியும்ங்கறது எனக்குத் தெரியும். ஏன்னா ப்ரொபசர் என்கிட்ட சொல்லிருக்கார். நாங்க ரெண்டே பேரு தான் அதைப் பார்த்தவர்கள். அதை அப்படியே மனிதன் போலவே மாற்றுவது தான் அவரோட கோல் ஆ இருந்தது. அதுக்காக ரொம்ப பாடுப்பட்டார். அதற்கான பேடெண்ட் வாங்க இருக்கும் நேரத்தில் அந்த பீட்டர் ஏதேதோ செய்து யார்யாரையோ வைத்து அது அவனுடையது என்றும் அதை ப்ரொபசர் திருடிவிட்டார் என்றும் எப்படியோ கதையை மாற்றிவிட்டது ப்ரொபசருக்கு அன்னைக்கு ஈவினிங் தெரிய வர உடனே அவர் தனது ரோபோவை ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு தலைமறைவாக திட்டமிட்டிருக்கார்.”
“ஏன் ப்ரொபசர் சேவியர் ஒரு ஸ்டூடண்டுக்கு பயந்து தலைமறைவாக வேண்டும்?”
“ஏன்னா அந்த ஸ்டூடண்ட் இந்த நாட்டின் பெரிய அரசியல்வாதியோட புள்ளையாம்.”
“போச்சுடா எந்த நாட்டுக்கு போனாலும் இவங்க தொல்லை விடாது போல. சரி அதுதான் அவர் அந்த ரோபோவை ஒளிச்சு வச்சுட்டாரே அப்புறம் எதுக்கு உன்னை இந்த வம்புக்குள்ள மாட்டி விடப் பார்த்திருக்கார்?”
“மாட்டி விடப் பார்க்கலை அவரோட பொக்கிஷத்தை என்னிடம் ஒப்படைக்க தான் வரச்சொல்லியிருக்கார். ஏன்னா அந்த அரசியல்வாதிகள் அவரை கொலை பண்ணற அளவுக்கு போவாங்கனு அவர் நினைக்கலையாம். அதுனால அவர்கள் கைக்கு அது கிடைத்துவிடக் கூடாதுன்னு நினைச்சு அதை வைத்திருந்த இடத்தை என்னிடம் சொல்லி என்னை எடுத்துக்கச் சொன்னார். அதுல ஏதோ இருக்குன்னும் சொல்ல வந்தார் ஆனா அதுக்குள்ள இறந்துட்டார்.”
“உனக்கு லொக்கேஷனை ஷேர் பண்ணறதுக்கு…அந்த மயானத்துல அவருக்கு ஃபோன் குடுத்தது யாராம்?”
“அந்த வழியில் போன யாராவதா இருக்கலாம். அதை நான் கேட்கவும் இல்லை அதை பத்தி அவர் எனக்கு எதுவும் சொல்லவுமில்லை.”
“சரி அதுக்கப்புறம் நீ அங்கிருந்து எப்படி சிட்டிக்கு திரும்பி வந்த?”
“ஏதாவது வண்டிக் கிடைக்குதானு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துப் பார்த்தேன் ஒன்னுமே அந்த வழியா வரலை. சுத்திலும் இருட்டா இருந்ததா அதுனால பயத்துல வேகவேகமா நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்திருப்பேன் அதுக்குள்ள தூரத்துல ஒரு டாக்ஸி தெரிஞ்சுது. அதை நிப்பாட்டி அதில் ஏறி ரூமுக்கு வந்தேன்.”
“சரி அப்பவாவது எனக்கு கால் பண்ணிருக்கலாமில்ல?”
“எப்படி எனக்கு எந்த நம்பரும் ஞாபகத்தில் இல்லையே!! சரி பக்கத்துல தானே ரோஸ் இருக்கா…அவகிட்ட போய் கேட்கலாம்னு நினைச்சு அவ ரூம் வாசல்வரைக்கும் போனேன். அப்புறம் அவளை ஏன் தொந்தரவு செய்யணும்! காலையில கேட்டுக்கலாம்னு நினைச்சு என் ரூமுக்குப் போய் நல்லா தூங்கிட்டேன். மறுநாள் காலை ஒரு பத்து மணிக்கு தான் எழுந்தேன். எழுந்ததும் நேரா ரோஸ் ரூமுக்கு தான் போனேன். ஆனா அவங்க எல்லாருமே விடியற் காலையில் கிளம்பி ஏர்போர்ட் போயிட்டாங்கனு தெரிய வந்தது. இனி அவங்களை தொடர்பு கொள்ளனும்னா இருபது மணி நேரம் காத்திருக்கணும்னு நினைச்சு உன்னைத் தேடி உன் ரூமுக்கு வரதுக்கு புறப்பட்டுட்டு இருந்தேன். அப்போ தான் என் ரூமுக்கு ஒரு கால் வந்தது. அதை அட்டெண்ட் செய்ததும் மறுபடியும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போய் உட்காந்துட்டேன்.”
சக்தி நடந்து காஃபி ஷாப்புக்கு அருகில் செல்ல செல்ல அவளின் இதயம் படக் படக் படக் என துடித்தது அவளுக்கு கேட்கத் துவங்கியது. அது வெளியே இருப்பவர்களுக்கும் கேட்குமோ என்ற எண்ணமோ என்னவோ அவள் காஃபி ஷாப் கதவைத் திறந்து உள்ளே செல்வதற்கு முன் தனது இடது மற்றும் வலது புறம் நடந்துச் சென்றவர்களை பார்த்தாள். சட்டென ஒரு பெண் தங்களைப் பார்த்ததும் அவ்வழியாக அவளைக் கடந்து சென்றவர்களும் ஓர் நொடி அவளைப் பார்த்து “ஹாய் குட் மார்னிங்” என்றும், சிலர் தலையசைத்து “ஹாய்” என்று செய்கையில் சொன்னதும் அவள் தனக்குள்
“என்ன!! அப்போ நான் நினைத்தது சரி தானா!!! எல்லாருக்கும் கேட்குதோ!!! ம்…ம்..”
என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டே வலது கையால் தன் வலது புற நெற்றியில் மெலிதாக தட்டிக் கொண்டு கதவைத் திறந்தாள். சுற்றிலும் பார்த்தாள். அவள் கண்களுக்கு விஷால் தென்படவில்லை. அவள் யாரையோ தேடுவதை அறிந்துக் கொண்ட அந்த கடையின் மேனேஜர் நேராக அவளருகில் வந்து
“ஹாய் மேடம் குட் மார்னிங். உங்களுடைய ரெகுலர் காஃபி அன்ட் குக்கீஸ் எடுத்து வரச் சொல்லட்டுமா? நீங்கள் யாரையோ தேடுவது போல தோன்றுகிறதே! ஸோ டூ யூ வான்ட் டூ வெயிட் ஃபார் சம் ஒன்?”
“ம்…ஆங்…ஹாய் மிஸ்டர் வில்லியம். ஹோப் யூ ஆர் டூயிங் கிரேட் டுடே. ஆமாம் நான் என் நண்பருக்காக காத்திருக்க வேண்டும். நோ பிராப்ளம் நீங்க என்னோட ரெகுலர் ஆர்டரை செய்ய சொல்லுங்க. நான் அங்கே உட்கார்ந்துக்கறேன். மை ஃபேவரைட் ஸ்பாட்.”
“ஓகே. மேடம். கொண்டு வரச்சொல்கிறேன்”
“நோ ஹரி அட் ஆல் மிஸ்டர் வில்லியம். டேக் யுவர் டைம்.”
“ஓ ஷுவர்.”
என்று வில்லியம் சக்தியின் ஆர்டரை தயார் செய்ய சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அப்போது சக்தி தனக்குத்தானே
“நான் ஒரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் பார்க்கிங் ல பார்த்தேனே!!! அப்போ அது வி யோடது இல்லையோ!! நான் பெரிய இவ மாதிரி அவன் நம்பர் சொல்ல வந்தப்போ வேண்டாம் நேர்ல பார்த்துக்கறேன்னு வேற சொல்லிட்டேனே!! இட்ஸ் ஓகே வெயிட் பண்ணிப் பார்ப்போம்.”
என்று முனுகிக் கொண்டிருக்கையில் வில்லியம் அவளருகே வந்து அவள் முன் ஒரு மூடிப்போட்ட ப்ளேட்டை வைத்தார். அதைப் பார்த்ததும் சக்தி அவரிடம்
“மிஸ்டர் வில்லியம்ஸ் என்ன இது? என்னோட ஆர்டரை மறந்துட்டீங்களா?”
“நோ மேடம் இது உங்களுக்கு தான். என்ஜாய் பண்ணிட்டிருங்க உங்க ஆர்டரும் ரெடி ஆகிடுச்சு கொண்டு வரேன்.”
என்று கூறி மறைந்தார். மனதில் குழப்பத்துடன் மெல்ல தட்டை மூடியிருந்த அந்த பீங்கான் மூடியை தூக்கினாள் சக்தி. அதில் அழகிய சிறிய ரெட் வெல்வெட் கேக் இருந்தது. அதில் உன்னை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் சக்தி உடனே சுற்றும் முற்றும் பார்த்தாள். கடையின் சமயலறைக்குள் இருந்து வெளியே வந்த வில்லியம் அங்கே பாருங்கள் என்று கைக் காட்ட அவர் பின்னாலேயே வந்த விஷாலைப் பார்த்ததும் சக்திக்கு மீண்டும் ஆனந்தத்தில் கண்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது. செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றாள். அவளருகே நடந்து வந்த விஷாலை ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொள் சக்தி என்ற மந்திரத்தை அவள் மனம் உச்சரித்துக்கொண்டே இருந்தாலும் அவள் அதை சட்டை செய்யாமல்
“ஹாய் வி. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன்னை பார்த்ததில் எனக்கு என்ன பண்ணணும் பேசணும்னு தெரியலை. அதுதான் அப்படியே நின்னுட்டேன். ஆம் சாரி. “
“இட்ஸ் ஓகே தீ. நீ இருக்கியே அதுவே போதும். எங்கடா அன்னைக்கு போலவே மறைஞ்சுடுவியோன்னு நினைச்சேன்”
“ஹேய்!!! அன்னைக்கு சிட்டுவேஷன் அப்படி போக வேண்டி வந்தது போயிட்டேன். ஆனா இன்னைக்கு அப்படி இல்லையே”
“ம்….அப்புறம் சொல்லு எப்படி இருக்க? நீ சொன்னா மாதிரியே உன்கிட்ட ஜாஸ்தி மாற்றங்கள் எதுவுமில்ல தீ. மூணு வருஷம் முன்னாடி எப்படி இருந்தயோ அப்படியே தான் இருக்க.”
“யூ டூ லுக் தி சேம் பட் கொஞ்சம் மெச்சுவர்டா தெரியற வி. ஆமாம் நீ எனக்கு முன்னாடியே வந்துட்டியா? ஏன் இங்க உட்காராம உள்ள ஒளிஞ்சிகிட்டிருந்த?”
“மேடம் அன்ட் சார் உங்கள் ஆர்டர்.”
“ஓ தாங்க் யூ வில்லியம். ஸோ நைஸ் ஆஃப் யூ… நீங்களும் இவர் இங்க வந்ததைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே மிஸ்டர் வில்லியம். ஏன்?”
“அது அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட டீல் தீ…அதை ஏன் பாவம் அவர்கிட்ட கேட்குற? இட்ஸ் ஓகே வில்லியம். தாங்க் யூ ஸோ மச் ஃபார் யுவர் ஹெல்ப்”
“யூ ஆர் வெல்கம் சார் அன்ட் யூ டூ மேடம். என்ஜாய் தி மீல்”
“ம்…இப்ப சொல்லு ஏன் ஒளிஞ்சிட்டிருந்த?”
“அதுவா!!! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான்.”
“ஆனா நான் தான் பார்க்கிங்ல ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ் பார்த்தேனே அப்புறம் எப்படி சர்ப்ரைஸ் ஆவேன்?”
“ஆனா அது என் காரு தானான்னு உனக்குள்ள ஒரு டவுட் வந்ததே!!! உன் முகமே காட்டிக் கொடுத்துதே”
“ம்…ம்….சரி சரி விளையாட்டெல்லாம் போதும் வி. நீ எப்படி இருக்க? உனக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு நான் நினைச்சேன்.”
“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தீ.
என்று விஷால் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனாள் சக்தி.
சக்தி வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தான் அணிந்திருந்த நீல நிறத்தில் பிங் பூக்கள் வரையப்பட்டிருந்த கவுனை… தன் கார் ஜன்னல் கண்ணாடியில் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். அப்போது அவள் வீட்டு வாசல் வழியாக வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பாட்டி அவளிடம் பிரஞ்சில்
“ஹேய் தீ! நீ ரொம்ப அழகா இருக்க. காட் ப்ளஸ் யூ மை சைல்ட்”
அதற்கு சக்தியும் பிரஞ்சில்
“நன்றி மிஸ்ஸர்ஸ் டேவிட்”
“என்ன தீ இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?”
“வேலை இருக்கு அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். பை…ஹாவ் எ நைஸ் டே மிஸ்ஸர்ஸ் டேவிட். மாலையில் சந்திப்போம்”
என்று கூறிக் கொண்டே கார் கதவைத் திறந்து காருக்குள் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள்.
கார் நேராக ஒரு காபி ஷாப் முன் சென்று நின்றது. இஞ்சினை ஆஃப் செய்ததும் கார் பார்க் முழுவதையும் தன் மான் விழிகளால் ஒரு ஸ்கேன் செய்தாள். அவள் காரிலிருந்து இரண்டு கார் தள்ளி ஒரு ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்ததைப் பார்த்ததும் அவள் கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். பின் தன் கைப்பையிலிருந்து உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் தேய்த்துக்கொண்டே மூன்று வருடங்களுக்கு முன் தனது நினைவலைகளில் மெல்ல மூழ்களானாள்
அன்று அவள் எம் எஸ் படிப்பு முடித்து பட்டமளிப்பு விழா நடந்த நாள் ஜூன் 12. அன்றிரவு அனைத்து நண்பர்களுமாக ஓர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது ஆண்டில் விஷால் சக்தியின் நெருங்கிய நண்பனானான். நட்பு காதலாக மலர்ந்தது. ஆனால் அதை இருவரும் அவரவர் மனம் என்னும் மண்ணிலிட்டு புதைத்து வைத்துக் கொண்டனர். அது விஷாலின் மனதில் விருட்சமாக வளர்ந்ததும் அதை சக்தியிடம் அந்த பார்டியில் வைத்து தெரிவிக்க வேண்டி அவளின் வருகைக்காக காத்திருந்தான்.
சக்தியும் வந்தாள். அனைவரும் மிகவும் சந்தோஷமாக அவர்கள் அந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், அனுபவங்கள் மற்றும் கிண்டல் கேலி என அனைத்தையும் பேசிக் கொண்டதில் பார்ட்டி மகிழ்ச்சியாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இடையிடையே ஸ்னாக்ஸ், ட்ரிங்க்ஸ் மற்றும் மெயின் கோர்ஸ் என உண்டு கொண்டும் இருந்தனர். அன்று வரை கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த விஷால் அன்ட் சக்தி இருவரும் கையில் ஆளுக்கொரு கிளாஸில் கோக் வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்ததைப் பார்த்த நண்பர்கள் அவர்களிடம்
“ஹேய் சக்தி அன்ட் விஷால் என்ன ஆச்சு? ஏன் இரண்டு பேரும் பேசாம உட்கார்ந்திட்டு இருக்கீங்க?”
“நாளைக்கு காலையிலே அவரவர் அவரவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பறந்து போயிடுவோம்ங்கற கவலையா?”
“அதுனால என்ன நாம வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி எங்கயாவது ஒண்ணா ஒரு ரீயூனியன் வச்சுட்டா போச்சு. இதுக்காகவா இவளோ ஃபீலிங்ஸ்?”
“ஹேய் என்னடா பேசற ஜான். நம்ம சக்திக்கு தான் கேம்பஸ் இன்டர்வியூவில் இங்கேயே பெரிய கம்பெனியில் ஜாப் கிடைச்சிடுச்சே! அவளைத் தவிர நம்ம எல்லாருக்கும் வேற நாடுகளில் கிடைச்சிருக்கு.”
“எனக்கு இன்னும் எங்கயுமே கிடைக்கலையே ரோஸ். என்னை ஏன் உன் லிஸ்ட்டில் சேர்த்துக்கற?”
“டேய் ரிஷி அதுக்கு நல்லா படிச்சிருக்கணும் இல்ல!!! உனக்கென்னப்பா இந்தியாவுல உங்க அப்பா பிஸினஸ் இருக்கே அதைப் போய் பார்த்துக்கோ”
“ஆங்!! ஆங்!! எங்கப்பா அப்படியே தூக்கி குடுத்துட்டு தான் அடுத்த வேலையே பாப்பாரு….எனக்கென்னவோ நம்ம விஷால் அன்ட் சக்தியோட சைலென்ஸை பார்த்தா…ரெண்டு பேரும் காதல் எனும் வலையில் சிக்கி…விக்கிக்கிட்டு இருக்காங்களோன்னு தோணுது”
“எனக்கும் அப்படி தான் தோணுது ரிஷி. ஈஸ் இட் ட்ரூ விஷால்?”
என்று ரோஸ் விஷாலைப் பார்த்துக் கேட்டதும் உடனே விஷால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து தனக்கு எதிரே அமர்ந்திருந்த சக்தி அருகே சென்று அவளின் கரம் பற்றி தரையில் முழங்காலிட்டு
“சக்தி நீ எனக்கு கிடைத்த சிறந்த தோழி. உன்னுடய வெளிப்படையான பேச்சு, தைரியம், எளிமை, அறிவு, அழகு, இதுல எது என்னை கவர்ந்ததுன்னு எனக்கு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என்னவள்ன்னு ஏதோ ஒண்ணு எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கு. இந்த நாளையும் நான் தவரவிட்டுட்டேன்னா அப்புறம் எப்போ இதை நான் உன்கிட்ட சொல்ல முடியும்னு தெரியலை அதுனால இப்பவே சொல்லிடறேன்…தீ… ஐ லவ் யூ”
என்று விஷால் கூறி முடித்ததும் அனைவரும் ஹே!! என்று கத்திக் கொண்டே கரகோஷம் எழுப்பினர். அப்போது ரோஸ் அனைவரையும் அமைதியாக இருக்கச் செய்தாள். பின் அனைவரின் பார்வையும் சக்தி மீது பாய்ந்தது. அவள் கூறப் போகும் பதிலுக்காக விஷால் உற்பட அனைவரும் காத்திருந்தனர்.
தான் விஷாலை நேசிப்பது போலவே விஷாலும் தன்னை நேசிக்கிறான் என்று அறிந்துக் கொண்டதில் சக்தியின் கண்கள் ஆனந்தத்தில் வெள்ளப்பெருக்கெடுத்தது. அதைப் பார்த்த நண்பர்கள் அனைவரும் சக்தியிடம்
“கம் ஆன் சக்தி அக்சப்ட்…தீ….தீ…தீ…”
என்று சபதம் எழுப்பத் துவங்கினர். அப்போது சக்தியின் கைபேசி ஒலித்தது. அனைவரும் அமைதியாயினர். சக்தி தன் கைபேசியில் யார் அழைப்பது என்று பார்த்தாள். உடனே தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கால் ஐ அட்டென்ட் செய்ய எழுந்து வெளியே சென்றாள்.
சென்றவள் வருவாள் தனக்கு நல்ல பதில் தருவாள் என்று காத்திருந்தான் விஷால். ஆனால் சக்தி அந்த கால் ஐ அட்டென்ட் செய்ததும் டாக்ஸி பிடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டாள்.
காரணமறியாது விஷாலும் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றுவிட மகிழ்ச்சியாக நடந்துக் கொண்டிருந்த பார்ட்டியும் முடிவுற்றது.
அதன் பின் சக்தி தனது ரிசர்ச் வேலையில் மூழ்கியதில் முகநூல் போன்ற எந்த சோசியல் நெட்வொர்க் தளத்திலும் இரண்டு ஆண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காதிருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் அவள் தனது முகநூல் பக்கத்தைத் திருந்துப் பார்த்தாள் அதில் அவள் நண்பர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் அழைப்புகள் மற்றும் மெஸேஜ்ஜுகள் கொட்டிக்கிடந்தன. அதிலிருந்த ஒரு பெயர் அவள் கவனத்தைத் திருப்பியது. அது தான் விஷாலின் மெஸேஜஸ். அவன் சக்திக்காக தினமும் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்த சக்தி தன்னைத் தானே நொந்துக் கொண்டாள். பின் விஷாலின் முகநூல் பக்கத்துக்குச் சென்று அவனின் புகைப்படத்தைப் பார்த்த அவள் தனக்குள்
“டேய் இந்த மூணு வருஷத்துல எப்படி மாறிட்ட…ம்…ம்..எப்போதும் போல யூ லுக் ஸ்மார்ட்”
என்று கூறிக்கொண்டே அவனுக்கு மெஸேஜ் செய்தாள். உடனே அவனிடமிருந்து பதில் வந்தது
“ஹேய் தீ…அப்பாடா…இப்பவாவது ரிப்ளை பண்ணணும்னு தோணிச்சே….உன்கிட்ட இருந்து மெஸேஜ் வந்ததில் நான் ரொம்ப சந்தோஷமாகிட்டேன். எப்படி இருக்க? ஏன் இவ்வளவு வருஷமா பதில் போடலை? ஜூன் 12த் நைட் எங்க போன? எப்ப மறுபடியும் மெட்ஸுக்கு வந்த? ஏன் இத்தனை வருஷமா கான்ட்டாக்ட்டே இல்ல? நான் என்ன அப்படி கேட்கக்கூடாததைக் கேட்டுட்டேன். உனக்கு இஷ்ட்டமில்லைன்னா அதை நீ அப்பவே சொல்லியிருக்கலாம் இல்ல. இதுக்கெல்லாம் ஆன்சர்ஸ் தேடி தேடி சோர்ந்துப் போயிட்டேன். உன்னைப் பத்தி விசாரிக்காத பிரண்ட்ஸ் இல்ல தெரியுமா! ஆனா யாருக்குமே எதுவுமே தெரியலை. அப்படி ஏன் எங்க எல்லாரையும் ஒதிக்கிட்ட?”
“அப்பப்பா எவ்வளவு கேள்விகள் வி? எல்லாத்துக்கும் இப்படி மெஸேஜ் லேயே பதில் சொல்லணுமா இல்லை நேரில் மீட் பண்ணி சொல்லணுமா?”
“ஹேய் தீ…ஆம் ரெடி டூ மீட் யூ ரைட் அவே!! எங்க எப்போ சொல்லு.”
“ஹலோ வி நீ இருக்கற இடத்துக்கும் நான் இருக்குற இடத்துக்கும் முன்னூற்றி முப்பது கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கு தெரியுமா?”
“இவ்வளவு வருஷமா இந்த முன்னூற்றி முப்பது கிலோமீட்டர்கள் தான் நம்மள பிரித்து வைச்சிருந்ததுன்னு நினைக்கும் போது அதை உடனே கடந்தாக வேண்டும்னு தோணுது தீ. ஆனா கடைசியா நான் கேள்வி பட்டதை வைத்துப் பார்த்தா நீ யூகேவுக்கு இல்ல ஜாப் கிடைச்சுப் போனதா கேள்விப்பட்டேன்! அப்புறம் எப்படி அன்ட் எப்போ மறுபடியும் பிரான்ஸ் வந்த? சரி சரி முதல்ல எப்போ அன்ட் எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு”
“நான் பிரான்ஸ்லேயே தான் இருக்கேன். யூகே ல ஜாப் கிடைச்சது என்னமோ உண்மை தான். அங்க போணேன் ஆனா ஆறு மாசத்துல இங்கேயே வந்துட்டேன். உனக்கு இந்த விஷயம் யார் சொன்னா? எப்படி தெரிஞ்சுகிட்ட?”
“நம்ம மனசுக்கு பிடிச்சவங்கள பத்தி நமக்கு நிச்சயம் விவரங்கள் தானா தேடி வரும் தெரியுமா…உன் மனசுக்கு தான் என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.”
“நோ நோ நோ….இட்ஸ் நாட் லைக் தட் வி. நான் உன்கிட்ட நிறைய சொல்ல வேண்டியிருக்கு ஸோ நேர்ல பார்ப்போம். கம்மிங் சாட்டர்டே மார்னிங் ஒன்பது மணிக்கு லீ கார்னர் காஃபி ஷாப் மெட்ஸுக்கு வர முடியுமா? இட்ஸ் மை ஃபேவரைட் அன்ட் லக்கி ஸ்பாட். என்ன ஓகே வா.”
“அய்யோ அதுக்கு இன்னும் மூன்று நாள் இருக்கே தீ”
“மூணு வருஷமே பறந்து போயிடுச்சு மூணு நாள் போயிடாதா வி. எனக்கு வேலையிருக்கு இல்லாட்டி இன்னைக்கே கூட நான் பாரிஸ் வந்துடுவேன்.”
“ம்…என் லக் அவ்வளவு தான். ஓகே தென் நாம நீ சொன்ன டே, டைம் அன்ட் ப்ளேஸில் மீட் பண்ணலாம்.”
“சரி நீ எதுல வருவ வி”
“நான் உனக்கு ரொம்ப பிடிச்ச ரோல்ஸ் ராய்ஸ் ப்ளாக் கார் தான் வாங்கியிருக்கேன் அதுல தான் வருவேன். என் கார் நம்பர்”
“ஹே வி…இரு இரு கார் நம்பர் எல்லாம் எனக்கெதுக்கு? உன்னை எனக்கு நல்லாவே தெரியும். கடைக்குள்ள வந்தே பார்க்கறேன்.”
“தீ நீ உன் ஃபேஸ்புக் பேஜ்ஜை அப்டேட் பண்ணவேயில்லையே…உன்னோட ரீசன்ட் பிக்சர் எதாவது அனுப்பேன்…ப்ளீஸ்”
“என்ட்ட பெரிய சேஞ்ச் ஏதும் இல்ல வி…ஸோ நேர்ல பார்த்து சொல்லு ஓகே…டில் தென் பை…யுவர் தீ”
நிழலாடிய நினைவலைகளை எண்ணிக் கொண்டே இட்ட உதட்டு சாயம் சற்று உதட்டைவிட்டு வெளியே வர அதை உடனே சரி செய்துக் கொண்டு காரிலிருந்து இறங்கி காரை லாக் செய்து நேராக காஃபி ஷாப்பை நோக்கி நடக்கலானாள் சக்தி.
சிறிய முள் ஐந்தில் வெகுநேரமாக கால் கடுக்க நின்றிருந்ததில் எப்படாப்பா ஆறு நீ வருவ என்பது போலவே சோர்ந்திருக்க சோம்பல் முறித்துக் கொண்டு யாருப்பா அங்கே என்று கேட்டு சிறிய முள் ஆறில் ஒரு அடி வைக்க முன் வந்தது. அப்போது பெரிய முள் சட்டென்று பன்னிரெண்டில் போய் செட்டில் ஆனதும் ஹாய் சக்தி குட் மார்னிங் வேக் அப் இட்ஸ் சிக்ஸ் ஓ க்ளாக் என்ற குரல் முழங்கியது. அதைக் கேட்டு விருட்டென்று எழுந்து வேகமாக தனது படுக்கையின் வலது புறம் ஒரு சிறிய பொம்மைப் போல் ஸ்மார்டாக உடையணிந்து இதய வடிவிலான முகத்தில், நீல நிற கண்களுடனும், அகன்று விரிந்த மெல்லிய சிரிப்புக் கோட்டுடனும் இருந்த ரோபோவின் உலோகத் தலையில் அணிந்திருந்த விக் எனப்படும் ஒட்டவைக்கப்பட்ட பொய் தலைமுடியின் உச்சியில் தனது உள்ளங்கையை வைத்து
“தாங்க்யூ ப்ளூ. குட் மார்னிங். ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ் டா.”
“நோ தீ நோ நோ. எழுந்துக்கோ. தீ…தீ… ஓ ஹோ!! மறுபடியும் தூங்கிட்டியா?”
என்று நேரத்தை கணக்கிடத் துவங்கியது சக்தியின் இயந்திர தோழனான ப்ளூ. சரியாக இரண்டு நிமிடமானதும் மீண்டும்
“தீ ….தீ…நீ சொன்ன டூ மினிட்ஸ் முடிஞ்சிடுச்சு…கம் ஆன் எழுந்துக்கோ. இன்னைக்கு உன்னோட மிக மிக முக்கியமான நாள். மறந்துட்டியா?”
“என்ன நாள்? என் பிறந்த நாளா ப்ளூ?”
“அப்படின்னா நான் உன்னை எழுப்பறதுக்கு முன்னாடியே மிஸ்ஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் உன்னை எழுப்பியிருப்பாங்களே…எனக்கும் வேலை மிச்சமாகியிருக்கும்…ஸோ இன்று உன் பிறந்த நாள் இல்லை.”
“அப்போ என்ன நாள்ன்னு சொல்லேன் ப்ளூ”
“இப்படியா மறப்ப? படிப்பு வேலை ஆராய்ச்சின்னுட்டு இப்படி எல்லாத்தையும் மறந்தா எப்படி தீ!!! உன் வாழ்க்கையில் அடுத்த புதிய பிறப்பெடுக்க அடி எடுத்து வைக்கணும்னு நீ முடிவெடுத்த நாள். ஞாபகம் வந்ததா?”
“ஓ மை காட்…ஆமாம் இல்ல…நகரு நகரு…லெட் மீ கெட் ரெடி”
“அய்யோ! அம்மா! தீ…ஏன் இப்படி என்னை தள்ளிவிட்டுட்டு போற? நான் எழுந்திரிக்க எவ்வளவு நேரமாகும் தெரியுமா…எழுப்பி விட்டுட்டுப் போ தீ…தீ…தீ… போச்சுடா இனி அவ திரும்பி வரவரைக்கும் நான் இப்படியே பப்பரப்பேன்னு கிடக்க வேண்டியது தான்…ஷ் …ஷபா..”
என்று ப்ளூவை கையால் தள்ளிவிட்டு வேகமாக ஓடிச்சென்ற சக்தி நேராக பாத்ரூமிற்குள் சென்று முகத்தில் தண்ணீரை தெளித்து வேக வேகமாக பல் துலக்கி வெளியே வந்து காபி மேக்கரில் காபி பொடியைப் போட்டு அதில் தண்ணீரையும் ஊற்றி வைத்து விட்டு…இரண்டு பிரெட் துண்டுகளை டோஸ்ட்டரில் போட்டு விட்டு, மர அலமாரியிலிருந்து டவல் ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் வேகமாக பாத்ரூம் சென்று மடமடவென குளித்து ஃப்ரெஷ் ஆகி குளியல் அங்கி என்றழைக்கப்படும் பாத்ரோப்புடன் வெளியே வந்து காபிப் போட்டுக்கொண்டு அந்த இரண்டு பிரெட் துண்டுகளை காபியுடன் உண்டு முடித்ததும் மீண்டும் அலமாரி முன் நின்று உடைகளை தடவிக்கொண்டே
“ப்ளூ வாட் டூ வேர் டுடே?”
“முதல்ல என்னை எழுப்பி விடு தீ…இப்படியே எவ்வளவு நேரம் தரையில் மல்லாந்து படுத்திருப்பேன்”
வாயிலிருந்த பிரட் துண்டை மடக்கென்று விழுங்கிக் கொண்டே ப்ளூவை தூக்கி நிறுத்திய சக்தி தன் தோழனிடம்
“ம்…ம்…எவ்வளவு நாளா இந்த நாளுக்காக நீ காத்திருந்த? நான் ஞாபகப் படுத்தலைன்னா அதையும் மறந்திருப்ப...ஞாபகப்படுத்தினதுக்கு எனக்கு இந்த பதினைந்து நிமிட தண்டனையா?”
“அது தான் சாரி கேட்டுட்டேன் இல்ல…சும்மா விடு ப்ளூ. சரி சரி இப்ப நான் எதை போட்டுக்கட்டும்ன்னு சொல்லேன்”
“ஹேய் தீ! ரெண்டு நாள் முன்னாடி இன்னைக்கு போட்டுட்டு போறதுக்காக ஒரு டிரெஸ் வாங்கினியே!!! அதோ அங்க அந்த கவர்ல வச்சிருக்க பாரு…அதைப் போட்டுக்கோ. அந்த டிரெஸில் நீ பிரின்ஸஸ் மாதிரி இருப்ப தீ”
“அந்த டிரெஸ் போட்டா தான் நான் பிரின்ஸஸ் ஆ!!! ம்…ம்…”
“அம்மாடி மன்னிச்சுக்கோமா…நீ என்னைக்கும் உங்க அப்பா நவீனோட பிரின்ஸஸ் தான். நான் ஒத்துக்கறேன். இப்போ போய் ரெடி ஆகிட்டு வா. இல்லாட்டி யூ வில் மிஸ் திஸ் டே”
“ஓகே ப்ளூ. ஐ வில் பீ பேக் இன் த்ரீ மினிட்ஸ்”
“எப்பவுமே டூ மினிட்ஸ் தானே சொல்லுவ…இன்னைக்கு என்ன த்ரீ மினிட்ஸ்? சரி சரி சீக்கிரம் தயாராகி வா”
“டட்ட டைங்…ஹே ப்ளூ...கிட்சனை நான் வெளியே போனதுக்கப்புறமா சுத்தம் செய்துக்கோ…இப்போ இந்த பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கேன்னு சொல்லேன்”
சக்தி பிரட் உண்டு வைத்த தட்டு மற்றும் காபி அருந்திய கப் ஆகியவற்றை அடுப்படி சிங்க்கில் போட சென்றுக் கொண்டிருந்த ப்ளூ தன் தோழியின் அழைப்பைக் கேட்டு கையிலிருந்த பாத்திரங்களுடன் திரும்பி அவளைப் பார்த்ததும் தட்டையும் கப்பையும் கீழே போட்டது…பின் அவளருகே சென்று
“வாவ்!! நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க தீ. எனக்கே உன்னைப் பார்த்ததும் பிரபோஸ் பண்ணணும் போல தோணுது தீ…யூ லுக் கார்சியஸ்”
“ம்….ப்ளூ டோன்ட் மேக் மீ ஃபீல் ஷை.”
“அச்சச்சோ நீ இப்படியே வெட்கப்பட்டுட்டு போனேனா காரியம் கெட்டு விடும் தீ. சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?”
“இல்ல ப்ளூ…அவங்க எப்பவுமே எதுக்குமே என்னை தப்பா நினைச்சதுமில்லை நினைக்கவுமாட்டாங்க…என்னோட விருப்பம் தான் அவங்க விருப்பமும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”
“பின்ன ஏன் சொல்லலை தீ? ஆங்கிலத்துல ஒண்ணு சொல்லுவாங்க இல்ல…பேரன்ட்ஸ் ஆர் பை சான்ஸ் அன்ட் பிரெண்ட்ஸ் ஆர் பை சாய்ஸ் ன்னு…அது படி பார்த்தா உனக்கு அந்த காட் அற்புதமான சான்ஸ் அன்ட் சாய்ஸ் ரெண்டுமே குடுத்திருக்காரே!!”
“நீ சொல்லறது எல்லாமே சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் ப்ளூ. ஆனா நான் முதல்ல கன்பார்ம் பண்ணிட்டு அப்புறமா அவங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருக்கேன்.”
“அதுதான் ஏன்னு கேட்கிறேன்? நீ எல்லாத்தையுமே எந்த தயக்கமுமில்லாம உன் பேரன்ட்ஸ்கிட்ட சொல்லுவ ஆனா இதுல ஏன் தயக்கம் அன்ட் அவநம்பிக்கை?”
“இட்ஸ் ஓகே ப்ளூ. ஜஸ்ட் லீவ் இட் தேர். நான் இன்னைக்கு அவாகிட்ட சொல்லுவேனா இல்லையான்னு இப்போ நான் வெளியே போயிட்டு வந்தா தான் எனக்கே தெரியும்.”
“ம்…என்னமோ குழப்பத்துல இருக்கன்னு மட்டும் தெரியுது. ஆனா உன் பேரன்ட்ஸைப் பார்த்ததிலேந்து அன்ட் அவங்களோட பழகியதை வைத்து சொல்லறேன் உனக்கு இந்த தயக்கமே தேவையில்லை. இட்ஸ் ஓகே ஐ வில் லீவ் இட் டூ யூ. சரி கிளம்பி போயிட்டு நல்ல செய்தியோட வா.”
“ஓகே ப்ளூ. நான் போயிட்டு வர்றேன். அம்மா அப்பா காப்பாத்துங்க”
என்று ப்ளூவை இறுக்கி அணைத்து முத்தமிட்டு வெளியே சென்றாள் சக்தி.
நவீன் மிருதுளாவின் ஒரே செல்லப் பெண்ணான சக்தி நன்குப் படித்து யூரோப்பில் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறாள். அவளின் அப்பா அம்மாவின் அனைத்து சங்கடங்களிலும், கஷ்டங்களிலும், சந்தோஷங்களிலும் அவர்கள் கூடவே பயணித்தவள். அவளுக்காகவே வாழ்ந்து, ஒரே பெண் என்ற காரணத்தைக் காட்டி அவளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடாமல் தங்கள் பெண்ணிற்கு அவள் விருப்பப்படியே அனைத்தையும் நடத்திக் கொடுத்த நவீன் மிருதுளாவின் மனசுப் போலவே நல்ல சிறந்தப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருப்பவள். பொறுமையே பொறுமை இழந்துப் போனாலும் துளிக்கூட பொறுமையை இழந்திடாது அதையே தனது ஆயுதமாகவும் கேடையமாகவும் உபயோகித்த தன் அம்மா மிருதுளாவைப் போல் பொறுத்தாளப் போகிறாளா? இல்லை அவள் வழி தனி வழி என்றிருக்கப் போகிறாளா? இருபத்தி ஆறு வயதான சக்தியின் வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க நேரம் வந்தது! அலசி ஆராய காலம் வந்தது!
உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிப்பதும் சக்தி தான்! உணர்வுகள் அனைத்திலும் பிரதிபலிப்பதும் சக்தி தான்!
இந்த ரதியாம்பிகாவுக்காகவே பிறந்து வளர்ந்து வந்து என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எனக்கு முன்னுரிமை கொடுத்த கேசவனை திருமணம் புரிந்து என் புகுந்த வீட்டிற்கு சென்றேன். அங்கே அனைவருடனும் நன்றாக பழகினேன். அவர்கள் அனைவருடனும் உடனே ஒரு இணைப்பு ஏற்பட்டது. மகிழச்சியாக என் திருமண வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள் என நான்கு குழந்தைகள் இரண்டு வருட வித்தியாசத்தில் பிறந்தனர். அவர்களுக்கு ராகேஷ், ராஜேஷ், ரம்யா, ராதா என்று பெயரிட்டோம். வருடங்கள் உருண்டோடின. வசதிகள் பெருகியது. குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஆளுக்கொரு கார், பெரிய பங்களா, வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா என்று மிகவும் அற்புதமாக சென்றுக் கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை. மூத்த இரட்டையர்கள் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியான கூகுளில் பணியாற்றுகிறார்கள். இரண்டாவது பெண் இரட்டையர்கள் லண்டனில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரம்யா ஆடிட்டராகவும், ராதா இன்டிப்பென்டென்ட் ம்யூசிஷியனாகவும் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நின்று பேசக்கூட நேரமின்றி வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.
நானும் ஆரம்பத்தில் நிற்க நேரமின்றி எனது பிள்ளைகள், அவர்களின் வகுப்பு பாடங்கள், பாட்டுக் க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று பிள்ளைகளை கொண்டு விடுதல் கூட்டிக் கொண்டு வருதல் என தினம் தினம் ஓட்டத்திலேயே எனது பாதி வாழ்க்கையும் ஓடியது. இப்போது அனைவரும் நன்றாக அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் செட்டிலாகி விட்டனர். நால்வருக்கும் திருமணமாகி நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இரண்டு மகன்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் லண்டனில் இரண்டு மகள்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் இந்தியாவில் தனிக்குடித்தனம் என்று எங்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்தது.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் எங்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகுப் பார்க்க வேண்டி எங்களது பிள்ளைகள் அனைவரும் இந்தியா வந்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எங்களின் சதாபிஷேகம். அன்று முழுவதும் நானும் கேசவனும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு ஏற்றார் போல அன்றிரவு உறக்கத்திலேயே என்னைத் தனியாக விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார் கேசவன். ஒரு நாள் முன் மகிழ்ச்சி வெள்ளத்திலிருந்த வீடு அடுத்த நாளே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாழ்க்கை என்றால் நம்மோடு எப்போதும் இருப்பவர்கள் நம்முடனே கடைசி வரை வருவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு கேசவனின் மரணம் உண்மையை புரியவைத்தது. எனது வாழ்க்கையே வெருச்சோடிப் போனது போல உணர்ந்தேன். பிள்ளைகள் அவர்களின் கடமைகளை செய்து முடித்ததும் அவரவர் நாட்டிற்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்பு என்னையும் அவர்களுடன் வரும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது இளைய மகன் ராஜேஷ் என்னைப் பார்த்து
“அம்மா நீ தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போற? பேசாம கிளம்புமா. உனக்கு யார் கூட இருக்கணுமோ அவங்க கூடவே போய் இருந்துக்கோமா. நீ எங்க இருந்தாலும் நாங்க எல்லாரும் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்கறோம் மா. ப்ளீஸ் எங்க கூட கிளம்புமா”
“இல்ல கண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிக்கோங்கப்பா உங்களுக்கெல்லாம் வேலையிருக்கு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு. என்னை மட்டும் இங்கேயே விட்டுடங்கப்பா. நானும் கேசவனுமா சென்று வந்த இடங்களின் இந்த ஃபோட்டோஸ், அவரும் நானுமா சேகரித்து வைத்திருக்கும் இந்த க்ராக்கரிஸ், இதோ இதைப் பாரேன் இது கேசவன் ரொம்ப ஆசைப்பட்டு சுவிட்சர்லாந்தில் வாங்கின பெல், அந்த சேர் இந்தோனேசியா ல ஆர்டர் பண்ணி வாங்கினார். இப்படி இந்த வீட்டுல என் கேசவனோட நினைவுகளோட நான் இருந்துக்கறேன்ப்பா. நீங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க சரியா. சாரி கண்ணா. அம்மாவால இந்த தடவை உங்களுக்கெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சுவீட்ஸ் அன்ட் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணித்தர முடியாம போயிடிச்சி.”
என்று நான் சொன்னதும் ராகேஷ் என்னைப் இறுக்கி அணைத்துக் கொண்டு
“அம்மா என்ன பேசற நீ? இப்பவும் நீ எங்களைப் பத்தி தான் நினைக்குற… பேசுற…நாங்க உன்னை நினைச்சுத் தான் கவலைப்படறோம் மா. நீ எப்படி தனியா இங்கே…அதெல்லாம் சரி வராதுமா. எங்களால நிம்மதியா அங்க எங்க வேலையைப் பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்.”
“அதெல்லாம் எந்த கவலையும் உங்க யாருக்குமே வேண்டாம்ப்பா. நானும் கேசவனுமா இங்கே பக்கத்துல இருக்குற ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் ல எங்க பெயர்களைப் பதிவு செய்து வச்சிருந்தோம். அது அவருக்கு தேவைப்படலை ஆனா எனக்குத் தேவைப்படும் போது உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு அங்க போறேன். நீங்க எனக்கு அடிக்கடி ஃபோன் போட்டுப் பேசுங்கப்பா அது போதும். அதுவுமில்லாம அதே கேம்பஸ்லயே ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு அங்கே நானும் உங்க அப்பாவும் அடிக்கடிப் போய் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட்ஸ் மற்றும் சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ஒரு வாரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துக்கிட்டிருந்தோம். அதை நான் தொடர்ந்து செய்யணும்னு நினைக்கிறேன். வயசாயிடுச்சு இல்லப்பா…நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இனி தனியா பயணம் பண்ணறதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சுக்கோங்க.”
அப்போது குறுக்கிட்டு பேசிய என் இளைய மருமகள் விசித்ரா
“அத்தை நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“என்ன விசித்ரா? நான் என்னைக்கு நீ சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிருக்கேன்! நீயும் என் மகள் தானே அதனால் நீ எதையுமே தப்பா கேட்டதுமில்லை இனி கேட்க போவதுமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் மா. அதனால தயங்காம கேளுமா.”
“இவ்வளவு பெரிய வீடு முழுக்க பல வகையான கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், அப்படி இப்படினு இவ்வளவு சாமான்களை சேர்த்து வச்சிருக்கீங்களே இதை எல்லாம் எப்படி துடைச்சு பார்த்துக்கப் போறீங்க?”
“அதுக்கு தான் வேலையாட்கள் இருக்காங்களேமா. அவங்க பார்த்துப்பாங்க. ம்…இருங்க உங்களுக்கு சேரவேண்டியதை தந்திடறேன்”
என்று எனது அறைக்குச் சென்று எங்கள் லாக்ரைத் திறந்தேன். அதிலிருந்த எனது நகைகளை எல்லாம் எடுத்து வந்து என் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என பகிர்ந்துக் கொடுத்தேன். அப்போது என் மகள் ரம்யா என்னைப் பார்த்து
“அம்மா இவ்வளவு நாள் நீ லாக்ர்ல பூட்டி வைத்திருந்ததை எல்லாம் எங்க தலையில கட்டிட்ட இல்ல…இப்போ நாங்க எங்க பாங்க் லாக்ர்ல இதை எல்லாம் வைச்சுட்டு ஊருக்குப் போகப் போறோம். இதுக்காகவா விழுந்து விழுந்து இவ்வளவு நகைகளை சேர்த்த?”
“என்ன பண்ண ரம்யா நானும் பெண் தானே!”
“அம்மா இதெல்லாம் நீ ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கினது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இந்தா நீயே வச்சுக்கோ. உனக்கு இதை வச்சு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணிக்கோ. எங்களுக்கு தரவேண்டியதனைத்தையும் நீயும் அப்பாவும் நிறையவே தந்திருக்கீங்க எங்களுக்கு அது போதும் மா. இந்தா புடி…இல்ல…குடு… நானே உன் லாக்ர்ல வச்சுட்டு வரேன். நீ மறுபடியும் மாடிப்படி ஏறி போக வேண்டாம். என்னப்பா சொல்லுறீங்க நீங்க எல்லாரும்?”
“எஸ் ரம்யா நீ சொல்லறது தான் சரி. அம்மா நீயும் அப்பாவும் எங்களுக்கு கல்வி, அன்பு, பாசம், குடும்பம்ங்கற நிரந்தரமான சொத்துக்களைக் கொடுத்திருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும்.”
என்று ராகேஷும்
“ஆமாம் மா அண்ணணும் ரம்யாவும் சொல்லறது தான் சரி. எங்களுக்கு எதுவும் வேண்டாம் மா.”
என்று ராஜேஷும்
“எஸ் மா தே போத் ஆர் வெரி கரெக்ட். எனக்கும் வேண்டாம் மா. எங்களுக்கு நீ ஆரோக்கியமா, சந்தோஷமா, நிம்மதியா இருந்தாலே போதும் மா.”
என்று ராதாவும் கூறியதைக் கேட்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைத் துடைக்க எட்டுக் கரங்கள் ஓடி வந்தன. அன்று என் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்துள்ளோம் என்று பல தருணங்களில் உணர்ந்திருந்தாலும் அன்று சற்று பெருமிதமாகவும் இருந்ததால் மனம் பூரித்தது. ஆனால் அதைப் பகிர்ந்துக் கொள்ள கேசவனில்லையே என்ற வருத்தம் என் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். நான் ஒரு ஆறு மாதங்கள் அங்கேயே என் கேசவனின் நினைவுகளுடனும், பேரன் பேத்திகளுடன் வீடியோ கால்களும் என்று சுற்றி சுற்றி வந்தேன். ஊருக்கு செல்வதற்கு முன் ரம்யா என்னிடம் சொன்னது என் மனதின் ஓரத்தில் இருந்திருக்கிறது போலும். ஓர் நாள் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு குழந்தை என்னிடம் வந்து
“பாட்டி நீங்க உங்க வீட்டுல நிறைய தோடு வச்சிருக்கீங்களா?”
“ஏம்மா கேக்கற?”
“இல்ல பாட்டி நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் ஒவ்வொரு கலர்ல தோடு போட்டுட்டு வர்றீங்களே அது தான் கேட்டேன்”
அப்போது என் மனதின் ஓரத்திலிருந்த என் ரம்யாவின் பேச்சு அன்று என் மனதில் மீண்டும் உதிக்கச் செய்தது. எதற்காக நான் இவ்வளவு பொருட்களை சேர்த்து வைத்தேன்? யாருக்காக இவைகளை வாங்கி இப்படி அழகாக அடுக்கி வைத்தேன்? இவைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளேன்? இதற்கு பதிலாக இன்னும் அந்த ஆசிரமத்திலிருக்கும் ஒரு இருபது குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமே! என்ற எண்ணங்கள் என்னை அன்று முழுவதும் தூங்க விடாது படுத்தி எடுத்ததில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
மறுநாள் எழுந்ததும் என் பிள்ளைகளை கான்பரன்ஸ் காலில் வரச்சொல்லி அதைச் சொன்னேன். அதைக் கேட்டதும் நால்வரும்
“அம்மா ஏன்மா? இங்க வாயேன் மா.”
“அம்மா நீ ஏன் அந்த ஓல்டேஜ் ஹோம்ல போய் இருக்கணும்? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோமே மா”
“அம்மா திஸ் இஸ் டூ மச். எதுக்காக இப்போ நீ இப்படி ஒரு டிஸிஷன் எடுத்திருக்க?”
“அம்மா உன்னைத் தாங்கறதுக்கு நாங்க நாலு பேர் காத்திருக்கும் போது ஏன் மா நீ முதியோர் இல்லம் போறேன்னு சொல்லற?”
என்று நாலவரும் என்னிடம் மாறி மாறி கேள்விக் கேட்டனர். அவர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்த பின்
“எல்லாரும் பேசி முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா? உங்க எல்லாரோட தவிப்பும் அக்கறையும் எனக்கு நல்லா புரியுது. ஆனால் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாருமே வேலைக்குப் போறீங்க. உங்க பசங்க ஸ்கூல், கிளாஸ்ன்னு போறாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க… இதுல நான் வந்து அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்? அதுவுமில்லாம நீங்களும் சற்று நின்னு நிதானமா யோசிங்க…எதுக்காக? எதை சாதிக்க இப்படி குடும்பம் பிள்ளைகள் எல்லாரையும் விட்டுட்டு இப்படி ஓடிக்கிட்டிருக்கீங்கன்னு…பசங்க வளர்ந்துட்டா அப்புறம் அவங்க …அவங்க வாழ்க்கை, அவங்க ஃப்ரெண்ட்ஸ் ன்னு அவங்க உலகமே வேற ஒண்ணா மாறிடும். நீங்க அவங்களோட இருக்க வேண்டிய தருணங்களில் இப்படி ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் உங்களுக்குன்னு நேரம் கிடைக்கும் போது அவங்க உங்ககிட்ட இருக்க மாட்டாங்க. அதுனால முடிஞ்ச வரை உங்களோட இந்த ஓட்டத்துக்கு இடையில உங்க பசங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அது தான் உங்க வயசான காலத்துல உங்க கூடவே வரப்போற பசுமையான நினைவுகளாயிருக்கும். அது தான் உங்களுக்கு அந்த வயதில் நீங்கள் நகர்ந்துச் செல்ல டானிக்காக இருக்கும். வாழ்க்கையை ஓடிப்பார்க்க நினைக்காதீங்க கொஞ்சம் நிதானித்துக் கொண்டு நடந்து தான் பாருங்களேன் அப்போ அதிலிருக்கும் அமைதி, அழகு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் புரிஞ்சுக்கலாம். நானும் உங்க அப்பாவும் அப்படித் தான் வாழ்ந்திருக்கிறோம் அதுனால தான் இப்போ அந்த பழைய நினைவுகள் என்னை நகர்த்திக்கிட்டிருக்கு. அதுவே எனக்குப் போதும் கண்ணுகளா. அதுவுமில்லாம அங்க இருக்குற பெத்தவங்க இல்லாத அந்த குழந்தைகளுக்கு படிப்பு, கைவேலை, எல்லாம் கத்துக் கொடுத்து அவங்களையும் உங்களைப் போல சிறந்த பிள்ளைகளா உருவாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டோ இல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டோ எது புக் பண்ணினாலும் இனி என்னால அவ்வளவு தூரம் பிரயாணம், இந்த நேரம் மாற்றம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியாதுப்பா...என் உடலும் அதுக்கு ஒத்துழைக்காது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டுமா என்னுடன் இருக்க வேண்டுமா வாங்க சந்தோஷமா இருக்கலாம். என்ன சொல்லுறீங்க?”
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ராகேஷ் பேசி அந்த நிசப்தத்தை உடைத்தெறிந்தான்
“அம்மா நீ சொல்லறது எல்லாமே கரெக்ட் தான் மா. சரி நீ அங்கேயே போய் இருந்துக்கோ. நாங்க மாறி மாறி வந்து உன்னைப் பார்த்துக்கறோம். அப்படி நீ அங்கப் போனேன்னா இப்ப இருக்குற வீடு அதிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் என்ன பண்ணப்போற?”
“ம்…இது நல்ல கேள்வி. அதை அப்படியே வைக்கறேன். நீங்க வந்து ஏதாவது பண்ணிக்கோங்க.”
“இல்லமா…எனக்கு அதுக்கெல்லாம் டைமில்ல…”
“எங்களுக்கும் நேரமில்லை மா.”
“அப்படின்னா நான் இதை எல்லாம் வித்துடவா?”
“அம்மா அதெல்லாம் நீயும் அப்பாவுமா வாங்கின சொத்துக்கள் அதனால் அதை என்னவேண்டுமானாலும் பண்ண உன்னைத் தவிர வேறு யாருக்குமா ரைட்ஸ் இருக்கு! சொல்லு.”
“அப்போ சரி சொல்லிட்டீங்க இல்ல இனி நான் பார்த்துக்கறேன்.”
“பத்திரமா இருமா. நான் ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து உன்னைப் பார்க்கறேன்.”
“அம்மா நாங்க தீபாவளிக்கு வர்றோம்”
“சரி கண்ணுகளா. உங்களால எப்ப முடியுதோ அப்போ வாங்க நோ ப்ராப்ளம். சரி நான் அப்போ இந்த மாசமே அங்கே ஷிப்ட் பண்ணிடறேன் சரியா.”
“ம்….சரி மா. உன் விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். கோ அஹெட் ரதியா மா”
“நன்றி குழந்தைகளா. சரி சரி இப்போ என் பேரப்பிள்ளைகளைப் பேச சொல்லுங்க”
என்றதும் அவர்கள் வந்தனர். அவர்களுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும் அந்த ஹோமுக்குக் கால் செய்து விவரங்களைச் சொன்னேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். அடுத்த நாளே ரியல் எஸ்டேட் காரர் ஒரு வரை வரவழைத்து பேசினேன். அவரும் எங்கள் வீட்டை விற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். எங்களுக்கு இன்னுமொரு சிறிய வீடு இருந்தது. அதில் நானும் கேசவனுமாக சேகரித்து வைத்திருந்த பொருட்களில் முக்கியமான சில வற்றை கொண்டுச் சென்று ஆட்களை வைத்து அடுக்கி ஒரு ம்யூசியம் போல வைத்தேன். வீடு விற்கப்பட்டது. எனக்குப் பிடித்த ஓரிரண்டு நகைகளைத் தவிர மீதமிருந்த அனைத்து நகைகளையும் விற்றேன்.
பணம் என் வங்கியில் போடப்பட்டது. அவ்வளவு பொருட்களின் சொந்தக்காரி, மூன்று பீரோ முழுக்க அடுக்கப்பட்டிருந்த உடைகளுக்கு உரிமைக்காரி, நகைகள் நிரம்பிய லாக்கருக்கு எஜமானி… அன்று… கையில் வெரும் இரண்டு சிறியப் பெட்டிகளுடன் அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.
அங்கேயிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னைப் பாரத்ததும் ஓடி வந்தன நானும் அவர்களை என் இரு கரங்களில் வாரிக் கட்டி அணைத்துக் கொண்டேன். அந்த ஆசிரமத்தில் நானும் ஒருத்தியானேன். என்னிடம் இருந்த பணம் நகை பொருட்கள் எதுவுமே என் பிள்ளைகளுக்கு தேவையில்லை ஏனெனில் அவர்களுக்கு அவை அனைத்தையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஆளாக்கியுள்ளோம். ஆகையால் என்னிடமிருந்த பணத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒன்றை மட்டும் வங்கியில் போட்டேன். இரண்டாவது பங்கை என் பேரப்பிள்ளைகள் பெயரில் எஃப் டியில் போட்டேன். மூன்றாவது பங்கை எங்களுக்காக அத்துனை வருடங்கள் வேலைப்பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நான்காவது பங்கை வைத்து ஆசிரமத்தை விரிவுப்படுத்தினேன். வசதிகளைப் பெருக்கிக் கொடுத்தேன். அங்கிருந்த பிள்ளைகள் படிப்பதற்காக பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தைக் கட்டினேன். அங்கேயிருந்த சிறிய முதலுதவி கூடத்தை அனைவருக்கும் பயன்படும்படியான க்ளினிக்காக மாற்றியமைத்தேன். வங்கியில் போட்டிருந்த எனது பங்கிலிருந்து வந்த வட்டியே எனது மாத செலவுக்கு போதுமானதாக இருந்தது. அதை வைத்து அங்கிருந்த முதியவர்கள், பிள்ளைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களை விமர்சையாக இல்லாவிட்டாலும் நல்ல உணவு, புதிய உடை அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம். என் பிள்ளைகளும் அவ்வப்போது வந்து என்னுடன் இருந்து அவர்களால் ஆன உதவிகளை அந்த இடத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் செய்து வந்தனர். அவர்கள் எங்கள் பெயரிலே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு அதன் மூலம் அந்த இடத்தையும், மருத்துவமனையையும், பள்ளிக்கூடத்தையும் பராமரித்து வந்தனர். பேரப்பிள்ளைகளும் வந்து அங்கிருந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிச் சென்றனர்.
சம்பாத்தியம் என்பது நாம் வாழ்வதற்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கும் எல்லையை வகுத்துக் கொண்டோமேயானால் நமது வாழ்க்கை அழகானதாக அமைதியானதாக நிம்மதியானதாக இருக்கும். ஓட வேண்டிய வயதில் தான் ஓட முடியுமென்றெண்ணி ஓட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணதவாறு நமது வாழ்க்கைக்கு நாமே திரையிட்டுக்கொள்ளாது நின்று நிதானமாக ஓடியும், நடந்தும், ஓய்வெடுத்தும் நமது வாழ்க்கையைக் கடந்துச் சென்றால்…வாழ்க்கை நமக்கு பல அற்புதமான அனுபவங்களை, பாடங்களை, பரிசுகளை, நட்புக்களை நமக்களிப்பதில் தவறுவதில்லை. அவற்றை நாமும் வேகமாக கடந்திடாது ரசித்து வாழ முடியும்.
அந்த ஆசிரமத்தின் பள்ளியில் படித்த பிள்ளைகள் பெரிய பெரிய கம்பெனிகளில் பணிப்புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேச் சென்றாலும் அந்த ட்ரஸ்ட்டுக்கு பணம் அனுப்புவதையும், மாதம் ஒரு முறையாவது வந்து அங்கிருந்த அனைவருடனும் நேரம் செலவிடுவதையும் தவறாது செய்து வந்தனர். அந்த கடவுள் என் மூலம் விதைத்த ஒரு சிறிய விதையானது இன்று பெரிய வானுயர விருட்சமாக ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் எனது டைரியில் குறிப்பெழுதி வைத்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் செல்வேன். அன்றிரவும் குறிப்பெழுதி வைத்துவிட்டு கடவுளுக்கு நன்றிச் சொல்லிவிட்டு மனநிறைவோடு படுத்துறங்கினேன்.
பல வருடங்களாக என்னைப் பிரிந்திருந்த கேசவன் வந்தார் தன் கரங்களை நீட்டி என் கரம் பிடிக்க காத்திருப்பதாக சொன்னார். நானும் என் கரம் நீட்டி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டேன். இருவரும் வானில் புதிய பறவைகளைப் போல வட்டமடித்துப் பறந்துக் கொண்டே வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தோம். அந்தப் பயணத்தின் போது கேசவன் என்னிடம்
“ரதியா நீ நல்ல காரியம் செய்துள்ளாய். நீ இதுவரை செய்துள்ள நல்ல விஷயங்கள் தான்… எந்த பாவப் பொதிளையும் சுமக்காது, எந்த வித வலி வேதனையுமின்றி உனக்கு இவ்வாறான ஒரு இனிய பயணத்தை அளித்துள்ளது.”
என்றார். அதைக்கேட்டதும் நான் இன்னும் மகிழ்ச்சியானேன். என் மறைவினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள் மட்டுமின்றி நான் வளர்த்தப் பிள்ளைகளும் என் ஆசிரமத்து நண்பர்களும் என அனைத்து நல்லுள்ளங்களும் எங்களுக்காக வடித்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நாங்கள் இருவரும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
எங்கள் பெற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்… எதைக் கொண்டு வந்தோம் நாம் எடுத்துச் செல்வதற்கு. வெறும் ஆறடி இடமிருந்தாலே போதுமென்று. அது அந்தக் காலம். இப்போது அந்த ஆறடியும் சொந்தமில்லை நமக்கு. மின்சார தகனம் செய்து சில மணிநேரத்தில் எல்லாம் ஒரு பிடி சாம்லுடன் திரும்பிச் சென்று விடுகிறார்கள் நம் சொந்தங்கள்.
நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து வேறுலகம் செல்லும் போது நாம் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நாம் வாழும் காலத்தில் ஓடோடி சேர்த்துவைக்கும் பொருட்களையும், பொன்னையும், சொந்தங்களையும், நட்புக்களையும் தான் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாமும் நம்முடன் எடுத்துச் செல்ல சிலவற்றை அதாவது கண்ணுக்கு தெரியாத, உருவமில்லாத சிலவற்றை சேர்த்து வைத்தோமே என்றால் அவை நாம் இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் போது நம் கரம் பிடித்து கேசவன் என்னிடம் சொன்னது போல எந்த வித வலி வேதனையுமின்றி ஒரு இனிமையான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அது தான் நாம் வாழும் காலத்தில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சொத்தாகும். அது வேறெதுவுமில்லை புண்ணியம் தான் அது.
நாங்கள் சேர்த்து வைத்த பொன், பொருள், வீடு, வாசல் எங்களுடைய இந்த இனிய பயணத்திற்கு சிறிய வகையில் உதவியிருந்தாலும் பெரியதாக உதவியவை எவை தெரியுமா?… நாங்கள் எங்கள் கடமைகளை சரிவரச் செய்தது, எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதனைத்தையும் செய்து முடித்தது, இந்த சமுகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கிக் கொடுத்தது, அனைவருக்கும் நல்லதையே நினைத்தது, எங்களால் முடிந்த வரை அனைத்து நல்ல காரியங்களையும் செய்தது ஆகியவையாகும். அவைகளை செய்யும் போது அவைகள் அனைத்தும் விண்ணுலகில் எங்களைக் காக்கப் போகும் துவார பாலகர்கள் என்றறிந்திடாது செய்தோம். கேசவன் எனக்கு முன்னே அறிந்துக் கொண்டுவிட்டார் ஆனால் நான் அன்று தான் அதை அறிந்துக் கொண்டேன்.
பணம், பொன், பொருள், பதவி அகியவை மண்ணுலகத்தில் நாம் மேற்கொள்ளும் பயணங்களுக்குத் தான் உதவியாக இருக்கும்.
நாம் அவைகளை வைத்து செய்யும் புண்ணியக் காரியங்கள் தான் நமது விண்ணுலகப் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எங்களால் அந்த புண்ணிய பணியை விட மனமில்லாததால் நானும் கேசவனும் இணைந்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு பாதுக்காப்பாகவும், அவ்வப்போது எங்களாலான… ஆனால் அவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு சில சிறிய உதவிகளையும் செய்து வந்ததில் மரணமில்லா மகிழ்ச்சியைப் பெற்று வந்தோம்.
உயிருடன் இருந்தாலும், உயிரற்றுப் போனாலும், நம்முடனே வருவதும், நம்மால் செய்ய முடிந்ததும் புண்ணியக் காரியங்களே! பணம், பொன், பொருள்களுக்கு எல்லை நம் மரணம் புண்ணியக் காரியங்களுக்கு எல்லை என்பது இன்னும் வகுக்கப்படவில்லை! முடிந்த வரை புண்ணியக் காரியங்களில் ஈடுபடுங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
மண்ணுலகின் பிரதி பிம்பமே விண்ணுலகம். மண்ணுலகில் எதை விதைக்கிறீர்களோ அது தான் விண்ணுலகில் உங்களுக்கு நன்மைத் தரக்கூடிய விருட்சமாகும். ஆகையால் நல்லதே எண்ணுங்கள், நல்லவைகளையே செய்திடுங்கள், இரு உலகிலும் நன்மையையே பெற்றிடுங்கள்.
எங்களுக்குக் கிடைத்த இந்த இரு உலகப் பயணத்திலும் நாங்கள் நன்றாகவே பயணித்தோம், பயணித்துக் கொண்டும் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன்.
சுதந்திரம் வேண்டும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு
சுதந்திரம் வேண்டும் சுத்தமான குடிநீர் அருந்துவதற்கு
சுதந்திரம் வேண்டும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு
சுதந்திரம் வேண்டும் பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்கு
சுதந்திரம் வேண்டும் கலப்படமில்லாத உணவை உண்பதற்கு
சுதந்திரம் வேண்டும் கட்டணமில்லாது கடவுளை தரிசனம் செய்வதற்கு
சுதந்திரம் வேண்டும் அனைத்து இடங்களுக்கும் ஈபாஸ் இன்றி சென்று வருவதற்கு
சுதந்திரம் வேண்டும் முக கவசமின்றி பவனிவருவதற்கு
சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்று வெள்ளையரிடமிருந்து பெற்று தந்த சுதந்திரத்தை நம்மவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்து பெற்ற சுதந்திரத்தை நாமே தொலைத்துவிட்டு இன்றும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்!
நாம் தோன்றிய நாள் முதலே அனைத்தையும் நாம் கேட்காமலே அள்ளி தந்தாள் இயற்கை அன்னை
கேட்காது கிடைத்தால் மதிப்பிருக்காது என்பதை உணர்த்தவே கிடைத்ததை தொலைத்துவிட்டு இப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றோமோ?
சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு அவை அனைத்தும் நம் கையிலே என்பது புரியாது போனது ஏனோ!
கேட்பதை நிறுத்துவோம் பெற்றதை போற்றுவோம் சுத்தம், சுகாதாரம், தனி மனித ஒழுக்கத்தை ஓங்கச் செய்வோம் நல்வாழ்வு வாழ்வோம் நாடு நலம்பெற செய்வோம்
ஜெய்ஹிந்த்
அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ஏர்போர்ட்டில் காத்திருந்த நவீன் மிருதுளாவின் கண்கள் வெளியே வருவோரை எல்லாம் வழியிலிருந்து நகர்த்தி தங்கள் மகளின் வருகையைப் பார்த்திருந்தன. சிறிது நேரமாகியும் சக்தி வராததால் இருவரும் பதற்றமானார்கள். உடனே நவீன் சக்தியை அவள் கைப்பேசியில் அழைத்தான். அப்போது மிருதுளா அவனைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பிய நவீன் சக்தியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான். சக்தியும் தன் அம்மாவையும் அப்பாவையும் இறுக்கி அணைத்துக் கொண்டு..
“அப்பா அந்த குட்டி வடையை மட்டும் எடுத்து ஊட்டிவிடேன். நான் போய் குளிச்சிட்டு வந்து மிச்சத்தை சாப்பிட்டுக்கறேன்”
“ம்….இந்தா ஆ காட்டு. ஓடு ஓடு குளிச்சிட்டு வா. நாங்களும் உன் கூட சாப்பிடறதுக்காகக் காத்திருக்கோம்.”
“ஓ!! நீங்களும் இன்னும் சாப்பிடலையா. அச்சச்சோ. அப்போ இரு ஜஸ்ட் டூ மினிட்ஸ் ல குளிச்சிட்டு வந்துடறேன்”
சக்தி குளித்து வந்ததும் மூவருமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்து உண்டனர். சக்திக்கோ அம்மா கையால் சாப்பிட்டு நான்கு மாதங்களானது, நவீன் மிருதுளாவுக்கோ தங்கள் மகளின்றி சாப்பிட பிடிக்காது போய் நான்கு மாதங்களானது. ஆக மூவருமே நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று தான் நன்றாக உண்டனர். பின் சற்று நேரம் கல்லூரிக் கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். சக்தி வீட்டிலிருந்த பதினைந்து நாட்களையும் தன் அப்பா அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததில் பதினைந்து நாள் முடியப் போகிறது என்று வந்ததும் அவளை கவலை தொற்றிக் கொண்டது. மிருதுளா வழக்கம் போல அவளுக்கான பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, கொத்தமல்லிப் பொடி, ஊறுகாய், தக்காளி தொக்கு, முறுக்கு, பக்கோடா, ஸ்வீட்ஸ் என எல்லாம் சக்தி ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் செய்து பேக்கிங்கிற்கு தயாராக வைத்தாள். நவீனும் சக்தியுமாக அன்றிரவு அனைத்தையும் பேக் செய்தனர். மீண்டும் லண்டனுக்கு பயணிக்க ஆயத்தம் ஆனாள் சக்தி.
மறுநாள் விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சக்தி கையில் கட்டிக் கொண்டு போவதற்காக இட்டிலி, வெங்காயச் சட்டினி, சப்பாத்தி, புளியோதரை எல்லாம் செய்து அவற்றை ஆற வைத்தாள். நவீன் ஐந்து மணிக்கு எழுந்து வந்து மிருதுளா செய்து வைத்திருந்ததை பேக் செய்து வைத்தான். பின் சக்தியை ஐந்தே முக்கால் மணிக்கு எழுப்பி விட்டான். சக்தியும் எழுந்து கிடுகிடுவென குளித்து கிளப்பி ஹாலுக்கு வந்து சாப்பாட்டுப் பேக்கிங்கைப் பார்த்து
“அதெல்லாம் தொக்கும், ஊறுகாயும், ஸ்னாக்ஸும். அது மூணு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. இது ஜஸ்ட் ஃபார் டூ டேஸ். நீ போய் செட்டில் ஆகற வரைக்கும்…சாப்பாட்டுக்காக வெளியில போக வேண்டாம் பாரு அதுக்காக”
“அதெல்லாம் சரி…இப்போ இதெல்லாம் எங்க வச்சுப்பேன்?”
“சக்தி உன் ஹான்ட் லக்கேஜ்ல இடம் விட்டு வச்சிருக்கேன் பாரு அதுல வச்சுக்கோ. சரி மிருது நானும் குளிச்சிட்டு வந்தாச்சு. நீ போய் குளிச்சிட்டு வந்துடு ஏர்போர்ட் போகணும் நாழியாகறது பாரு.”
என்று மிருதுளா குளிக்கப் போனதும் நவீனும் சக்தியுமாக அவளது ஹான்ட் லக்கேஜ்ஜை பேக் செய்து ஏர்போர்ட் செல்ல தயாரானார்கள். மிருதுளா குளித்து ரெடியாகி வந்து சுவாமிக்கு விளக்கேற்றி நன்றாக வேண்டிக்கொண்டு சக்திக்கு விபூதி இட்டு விட்டாள். சக்தியும் சாமி கும்பிட்டுக் கொண்டப்பின் மூவரும் ஆளுக்கொரு பெட்டி எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்று அங்கிருந்து தங்கள் காரில் ஏர்போர்ட் சென்றனர். அங்கே செக் இன் முடிந்ததும் சக்தி உள்ளே போகாமல் தயங்கி தயங்கி நவீனையும் மிருதுளாவையுமே பார்த்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்துச் சென்றதைப் பார்த்த நவீன் அவளை தங்களிடம் வரும் படிச் சொன்னான். உடனே ஓடி வந்தாள் சக்தி
“கண்ணா என்ன ஆச்சு? ஏன் செக்யூரிட்டி செக்கிங் போக உனக்கு இவ்வளவு தயக்கம்?”
“அப்பா அம்மா எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. ஐ திங்….”
“சரி அப்படீன்னா நீ போக வேண்டாம். எங்களோட ஆத்துக்கு வந்துடு”
“அம்மா என்னம்மா சொல்லற? எனக்கு படிக்க போகணும் ஆனா உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனேன்னு கஷ்டமா இருக்கு…அதுதான் யோசிக்கறேன்…நீ என்னடான்னா ஆத்துக்குப் போகலாம்னு சொல்லறயே!!”
“இங்க பாரு சக்தி அப்படித்தான் இருக்கும் ஆனா என்ன பண்ண படிப்பும் முக்கியம் தானே. போடா கண்ணா போய் நல்லபடியா படிப்ப முடிச்சிட்டு வா. இதோ பாரு ஒரு செமஸ்டர் முடிஞ்சாச்சு இன்னும் ஒரு அஞ்சு தானே…அதுவுமில்லாம ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்சிட்டும் நீ ஆத்துக்கு வரப்போற அப்புறம் என்ன? இன்னும் ஜஸ்ட் ஒரு நாலே மாசம் தானே. கண்ணைத் தொடச்சிண்டு போய் படிக்கற வேலையைப்பாரு”
“ஓகே அம்மா. நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி. நான் போயிட்டு வர்றேன் அப்பா அன்ட் அம்மா. பை. லவ் யூ போத். டேக் கேர்”
“வீ டூ லவ் யூ கண்ணா. யூ டூ டேக் கேர். பை பை”
என்று கூறி சக்தியை தேத்தி அனுப்பிய மிருதுளா …சக்தி தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை கவனித்த நவீன்
“ஏய் மிருது என்ன இது மறுபடியுமா? சக்திக்கு அவ்வளவு எடுத்துச் சொல்லிட்டு நீயே அழலாமா?”
“நான் அம்மாவாச்சே நவீன். அவளுக்கு தைரியம் சொல்வது என் கடமையாச்சே. ஆனா அவளைப் பிரியும்போது ஏதோ உள்ளப் பண்ணறதுப்பா.”
“இட்ஸ் ஓகே. அவ இன்னும் நாலே மாசத்துல திரும்பி வந்து நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறா அப்புறமென்ன. கண்ணைத் தொடச்சுக்கோ. வா நாம ஆத்துக்குப் போகலாம்.”
என்று சக்திக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்த மிருதுளாவுக்கு நவீன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்றதும் மிருதுளா நவீனிடம்
“சரி சக்தி அவ பாட்டுக்கு வந்தா இருந்தா இதா இப்போ ஊருக்கும் கிளம்பி போயிட்டா. இனி நான் என்னப் பண்ணுவேன்?”
“ம்… உன் வேலையை விடும்போது இந்த யோசனை இருக்கலையா? உனக்கு யாரு நாலு நாலு மாசம் மட்டும் வேலைத் தருவா? பேசமா உன்னோட வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையிருக்கு இல்ல அதைப் பாரு.”
“நவீன் எனக்கொரு யோசனை சொல்லவா”
“ம்…சொல்லு மிருது”
“நாமளே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”
“என்னது?”
“அதுதான் இங்க பிஸினஸ் தொடங்கறது ரொம்ப ஈஸியாமே. டாக்யூமென்ட்ஸ் எல்லாம் ஒங்கா சப்மிட் பண்ணினா லைசென்ஸ் உடனே கிடைச்சிடுமாமே! நியூஸ் பேப்பர்ல படிச்சேன்.”
“அதெல்லாம் சரி தான் மிருது. ஆனா நான் என் வேலையை விடவேண்டியிருக்கும். ஏன்னா நான் என் வேலையையும் பார்த்துண்டு பிஸினஸும் பண்ணக் கூடாது. எத்திக்கலி இட்ஸ் ராங். அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சா ஸ்டார்ட்டிங்ல வீ வில் நாட் கெட் ரெகுலர் இன்கம். அப்புறம் எப்படி நம்ம சக்திப் படிப்புக்கு பணம் கட்டுவோம்? அப்படியே ஆரம்பிச்சாலும் என்ன பிஸஸ் பண்ணறது?”
“கன்சல்டன்சி ஃபேர்ம் தான். நான் அக்கௌன்ட்டிங் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட லீகல் பார்த்துக்கோங்கோ. என்ன சொல்லறேங்கள்?”
“நல்லா தான் இருக்கு. நம்ம சக்தி படிப்பு முடிஞ்சிட்டு ஆரம்பிக்கலாம். நானும் அதுக்குள்ள அதுக்கு வேண்டிய டீட்டேயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன். ஆனா இப்போதைக்கு வேண்டாம் மிருது. ஒரு இரண்டரை வருஷம் கழிச்சு பார்ப்போம்”
“ம்…அதுவும் கரெக்ட் தான் நவீ. நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம். அவ படிப்பு முடிச்சதும் ஆரம்பிச்சுக்கலாம்.”
என்று அவளின் எண்ணத்தை மீண்டும் மூட்டைக் கட்டி பரணில் போட்டாள் மிருதுளா. பின் இரண்டரை வருடங்களும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை என சக்தியின் வரவு, மகிழ்ச்சியான தருணங்கள், மீண்டும் சக்தியின் புறப்பாடு, சாப்பாடு, ஸ்னாக்ஸ், ஊறுகாய், பொடிகள் கட்டுவது, மீண்டும் கண்ணீர், மீண்டும் வரவு …மீண்டும் பிரிவு என்று முடிந்து சக்தி குவைத்துக்கே திரும்பி வந்தாள். ஆனால் வந்தவள் அவளுக்கு யூரோப்பில் மேல் படிப்புப்புக்காக அட்மிஷன் கிடைத்துள்ளதாகவும் அதுவும் ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவள் கூறியதில் பெருமையடைந்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் மனதோரத்தில் மீண்டும் தங்கள் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் சக்தியின் இளங்கலைப் படிப்பு அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை அளித்தது. மன தைரியத்தை வளர்க்க ஏதுவாக இருந்தது. தங்கள் மகள் திருமணமாகிச் சென்றால் எப்படியும் தாங்கள் இருவரும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்பதை தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களை அவர்களே தேத்திக் கொண்டனர்.
சக்தி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக யூரோப்பிற்குச் சென்றாள். அவளுக்காக இனி நவீன் எந்த வித செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லாது போனது. ஏனெனில் அவளுக்கு படிப்பு செலவு, தங்குவதற்கான செலவு மற்றும் ஸ்டைஃபன்ட் எனப்படும் உதிவித் தொகை என எல்லாம் கிடைத்தது. அவள் யூரோப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும் மிருதுளா நவீனிடம் மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்
“மிருது நாம லைசென்ஸ் க்கு அப்ளைப் பண்ணலாம். ஆனா நான் இப்போதைக்கு வேலையை விட மாட்டேன். நீ தான் பிஸினஸைப் பார்த்துக்கணும். நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணறேன். லீட்ஸ் தர்றேன். என்னால முழுசா அதுல இப்போ இறங்க முடியாது. என்ன சொல்லற?”
“ம்… ஓகே நவீன். நான் பார்த்துக்கறேன்”
“மிருது இது நீ போன வேலைகள் மாதிரி இல்ல… வேண்டாம்னா விட்டுட்டு வர்றதுக்கு… ஒரு லைசென்ஸ் எடுக்கவே அஞ்சு ஆறு லட்சமாகும்… நன்னா யோசிச்சு சொல்லு”
“நான் இந்த இரண்டரை வருஷமா நல்லா யோசிச்சாச்சுப் பா. நிச்சயம் நான் நல்லா பண்ணுவேன். நீங்க லைசென்ஸ் க்கு அப்ளை பண்ணுங்கோ.”
“நீ தான் உன் பெயர்ல தான் பண்ணணும்.”
“ஓ!! ஓகே சரி நாளைக்கு புதன் கிழமை. நாளைக்கே பண்ணிடுவோம்”
“பார்ப்போம். எல்லாம் அந்த கடவுளோட அனுகிரகம் இருந்தா நல்லப்படியா தான் நடக்கும்.”
“சரி உன் பிஸினஸுக்கு என்னப் பெயர் வைக்கப் போற மிருது? ஏன்னா நாளைக்கு அப்ளை பண்ணும் போது மூணு பெயர்களைக் கொடுக்கணும். அதுல ஒன்னைத் தான் அவா அப்ரூவ் பண்ணுவா”
“முதல்ல இந்த லைசென்ஸ் வச்சு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும். அதுக்கப்புறம் மெல்ல வேலைகளை ஆரம்பிக்கணும் நவீ”
“சூப்பர். பேங்க் அக்கவுண்ட் ஓபனிங்குக்கு பிஸினஸ் ப்ளான் எல்லாம் ரெடியா வச்சிருக்கனு சொல்லு.”
“எஸ் எஸ்… கொஞ்சம் இருங்கோ. ம்… இந்தாங்கோ. படிச்சுப் பார்த்துட்டு ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்கோ.”
“ம்…ம்… வாவ். பக்காவா எழுதியிருக்க மிருது. இதை எல்லாம் பார்த்தா… நீ பிஸினஸ் உமன் ஆகனும்ங்கறதுக்காக தான் கடவுள் உன்னை எந்த வேலையிலலேயும் இருக்க விடலைப் போல.”
“நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ரெண்டு மூணு அக்கவுண்ட்டிங் அன்ட் ஆடிட்டிங் ஃபேர்ம்ஸ் கூட அக்ரிமெண்ட் போட ஏற்பாடு செய்திருக்கேன் நவீ”
“சூப்பர். சூப்பர். மிருது இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் வேலையை விட்டுட்டு உன் ஃபேர்ம்லேயே ஜாயின் பண்ணிடறேன்.”
“என்னோட ஃபேர்ம் பிக்கப் ஆகற வரைக்கும் நீங்க உங்க வேலையை விட வேண்டாம் நவீ. எப்போ நல்லா வளர்ந்து ரெகுலர் இன்கம் வர்றதோ… அப்போ நீங்க உங்க வேலையை விட்டுட்டு வாங்கோ… நான் உங்களுக்கு வேலை தர்றேன்.”
“ம்…. ஓகே மேடம்”
“ஏய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பா”
“நானும் தான் விளையாட்டுச் சொன்னேன்”
“ஏய்!!! ஹா! ஹா! ஹா! ஹா!”
நவீனும் மிருதுளாவும் ஒரு சின்ன ஆபீஸ் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். நல்ல நாள் பார்த்து தன் பிஸினஸை துவங்கினாள் மிருதுளா. முதலில் ஒன்றிரண்டு வேலை ஆர்டர்களே வந்தன. அவற்றை நல்லப் படியாக முடித்துக் கொடுத்ததில் மீண்டும் ஒன்று வந்தது. இப்படியே இரண்டு மூன்றானது மூன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபது வேலைகளுக்கான ஆர்டர்களானது. இரண்டு வருடத்தில் சக்தி தன் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து யூரோப்பிலேயே பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாள். மிருதுளா தனது பிசினஸில் மும்முரமானாள். வேலைக்கான ஆர்டர்கள் பெருகி மாத வருமானம் வர ஆரம்பித்ததும் நவீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மிருதுளாவுடன் இணைந்து அவனது லீகல் வேலைகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ராப்பகலாக கடினமாக உழைத்தார்கள்.
அவர்கள் உதவிக்காக இரண்டு நபர்களை வேலைக்குச் சேர்த்தனர். பின்பு அதே ஆபீஸையும் அதன் பக்கத்து கடையையும் சேர்த்து லீசுக்கு எடுத்து…தங்கள் ஆபீஸை விரிவுப் படுத்தி இன்னும் ஐந்து நபர்களுக்கு வேலைக் கொடுத்தனர். இப்படியே அவர்களின் பிஸினஸ் விரிவடைந்தது. பேரும், புகழும், நன்மதிப்பும் சம்பாதித்தனர். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததில் மிருதுளாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் உமன் என்ற அவார்டும் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களுடனும் நிறைவாக வாழ்ந்தனர்.
மிருதுளாவும் நவீனும் அவர்கள் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தான் ஆரம்பித்தனர். நவீன் பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொண்டு தான் திருமணம் முடித்திருப்பார் என்ற எண்ணத்தில் தங்கள் மகளை தாரவாத்துக் கொடுத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். பிறந்த வீட்டில் ராணிப் போல் வாழ்ந்த மிருதுளா புகுந்த வீட்டில் படாத கஷ்டங்களுமில்லை, அவமானங்களுக்கும் அளவில்லை. ஆனால் அனைத்தையும் பொறுமையாக இருந்து தன் கனவனையே தானாக அனைத்தையும் புரிந்துக் கொள்ள வைத்தாள்.
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழிபோல மிருதுளா சொல்லிக் கொடுத்து நவீனைப் புரிந்துக் கொள்ள வைப்பதைவிட அவனையே தானாக புரிந்துக் கொள்ள வைத்தால் தான் அவனுள் நேரும் மாற்றம் உண்மையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும் என்றெண்ணி அவள் நடந்துக் கொண்டது அவளுக்கு சில காலம் வேதனைகளையும், வலிகளையும் தந்திருக்கலாம் ஆனால் அவை அணைத்தும் அவள் தாங்கிக்கொள்ளக் கூடிய வயதிலேயே வந்து கடந்து சென்று விட்டன. ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் மன நிம்மதியும், அமைதியும் தேவையோ அந்த வயதில் மிருதுளாவுக்கு அவை மிகுதியாகவே கிடைத்தது.
திருமணமான புதிதில் நவீன் தனக்காக தன் தாய் தந்தையிடம் பேசாது இருந்ததில் மனவருத்தமிருந்தாலும் நவீனின் நிலைமையையும் புரிந்துக் கொண்டு அதைப் பெரிதாக்காது நடந்துக் கொண்டதினால் நவீனும் அவளை நன்றாக புரிந்துக் கொண்டு பின்னாலில் அவளுக்கு நல்ல துணையாக மாறினான்.
மிருதுளா திருமணமானது முதல் தன் புகுந்த வீட்டினரை மதித்து நடந்துக்கொண்டது, அவர்களை அரவணைத்துச் சென்றது, அவர்கள் அவமானப்படுத்தினாலும் அவர்களை விடாது தங்களுடன் வைத்துக் கொள்ள முயன்றது, அதற்காக பலமுறை தோற்றுப் போனது என தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்த அவளின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதில் எந்த வித முன்னேற்றமுமின்றி ஆனதில் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். ஆனால் இனி அவர்களுக்காக வருந்தியோ வேதனைப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அன்று முதல் அவர்களை எல்லாம் தன்னுளிருந்தும் தன்னிடமிருந்தும் தள்ளி வைத்துவிட்டு அவள் அவளுக்காகவும் அவளின் கனவன் மகளுக்காகவும் மட்டுமே வாழத் துவங்கினாள். அப்படி அவள் வாழத் துவங்கியதிலிருந்து அவள் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருந்தது.
ஒரு பெண்ணிற்கு பொறுமை மிக மிக அவசியமான அணிகலனாகும். அதை மட்டும் அவள் அணிந்துக் கொண்டால் அவளை விட வலிமை வாய்ந்தவர்கள் இந்த பூமியில் எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்பவளும் அவளே! தனது பொறுமை என்று மற்றவர்களால் உபயோகித்துக் கொள்ளப் படுகிறதோ அன்று அதை உடைத்தெறியும் பெண்ணிற்கு இணையானவரும் இந்த பூமியில் இருக்க வாய்ப்பில்லை. நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் பொறுமையின் எல்லை வரை பொறுத்திருப்பார்கள். எப்போது அப்படி சீண்டிப் பார்ப்பவர்கள் அதைத் தாண்டுகிறார்களோ அன்று அவள் அவர்களை பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ செய்யாது அவர்களிடமிருந்து… அவர்கள் கண்ணிற்குக் கூட தெரியாத உயரத்திற்கு பறந்துச் சென்றிடுவாள். இதுவே வலிமையான பெண்ணினத்தின் குணம்.
எப்போதும் நாம் நமக்காக எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் சண்டையிட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “சூஸ் யுவர் பேட்டில் வைஸ்லீ”. அதாவது உனக்கான போர், யுதம் அல்லது சண்டை எதுவானாலும் அதை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாக இரு என்பது அதன் அர்த்தமாகும். நாம் ஒரு பிச்சினையை சந்திக்கும் பொழுது அதற்காக நாம் பொங்கி எழ வேண்டுமா? திருப்பி சண்டையிட வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். சிலருடன் பேசி நியாயத்தை நிலை நாட்டலாம், சிலருடன் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டலாம் ஆனால் பல நேரங்களில் நமது நியாயத்தை நிலையாட்டிக் கொள்ளவும் நமது மன அமைதிக்காகவும் சிலரிடமிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. அதைத் தேர்ந்தெடுத்த மிருதுளா விட்டுக்கொடுத்து அனுசரித்து இளிச்சவாய் என்ற பெயரெடுத்தாலும் அவளின் பொறுமைக்கு கிடைத்தப் பரிசு தான் அவளின் கனவனும், மகளும், மனநிம்மதியும், அவளின் உயர்வும் ஆகும்.
விட்டுக்கொடுப்பவர் என்றுமே கெட்டுப்போவதில்லை. அதே போல விட்டு விலகுபவர்களும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு மிருதுளாவே சிறந்த உதாரணமாவாள். பெரியவர்கள் பெரியவர்களாக நடந்துக் கொண்டால் சிறியவர்களும் அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அவற்றை உருட்டி மிரட்டி எல்லாம் பெற முடியாது. அப்படியே பெற்றுக் கொண்டாலும் அது நிலைக்காது. உண்மை, நேர்மை, பொறுமை, ஒழுக்கம் இவை ஒருவரிடமிருந்தால் அவர்களின் வெற்றி மற்றவர்களை வாய்பிளக்கச் செய்யும். அதுவே மிருதுளாவின் வாழ்விலும் நடந்தது. அன்று அவளைத் தூற்றியவர்களிடமும் விமர்சித்தவர்களிடமும் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காது மேலே மேலே உயரப் பறந்துச் சென்றாள். அவளின் வளர்ச்சியைக் கண்டு அன்று அவளைத் தூற்றியவர்களையும், விமர்சித்தவர்களையும் இன்று அதற்காக வருத்தமடையச் செய்தாள் மிருதுளா.
பர்வதீஸ்வரன் படைப்பே அப்படி இருந்ததால் மிருதுளா அல்ல மற்ற எவராலும் புரிய வைக்கவோ மாற்றவோ முடியாது போனது. அவர்கள் அப்படித்தான் என்று அனைவரும் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர். அவர்களின் வாரிசுகளாவது திருந்த முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறதே!! திருந்துவார்களா? காலம் தான் அதற்கு பதிலளிக்கும்.
ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பதில் பல பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்ணே சிறந்தவள் என்பதை அறியாது போராடிவருகின்றனர். பெண் தன்மேம்பாடு பெறுதல் பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விடுத்து பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு பெண் தன்மேம்பாடு பெறுவதற்காக ஏன் போரட்டமோ அல்லது ஊடகங்களிலோ போட்டு விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு… எப்படி எந்த வித சத்தமுமின்றி ஒரு சிறிய செடி பெரிய விருட்சமாகி அனைவருக்கும் பலன் அளிக்கிறதோ அதே போல நமது வளர்ச்சி சத்தமின்றி இருக்கட்டும் அதன் வெற்றி உலகமெங்கும் பறைசாற்றட்டும். மிருதுளாவின் வாழ்விலும் இதுதான் நடந்துள்ளது.
கடவுள் ஒருவருக்கு நிறைய கஷ்டங்களும் வேதனைகளும் கொடுப்பது அவரை சோதித்துப் பார்க்கவே. அவரின் சோதனையில் ஒருவர் வெற்றியடைந்தால் அதற்கு கடவுள் கொடுக்கும் பரிசை எவராலும் அவரிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. அதுபோல தான் மிருதுளாவிற்கு கடவுள் கொடுத்த சோதனைகளில் எல்லாம் அவள் தேர்ச்சிப் பெற்றதால் அவளுக்கு பொன், பொருளோட நிறுத்திடாது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சேர்த்து அளிக்கொடுத்திருக்கிறார். மிருதுளா என்ன ஆனாள் என்று இன்றுவரை படித்துவந்த நமக்கு இப்போது புரிந்திருக்குமே!!
முற்றும் 🙏நன்றி🙏
இதுவரை மிருதுளா என்ன ஆனாள் என்ற இந்த தொடரைப் படித்து ஆதரவளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி சக்தியின்