அத்தியாயம் 105: சுபநிகழ்வு

கவின் கஜேஸ்வரியிடமிருந்து ஃபோன் கால் வருமென்று காத்திருந்த மிருதுளாவுக்கு எப்போதும் போல ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு நாட்கள் ஆனதும் நவீன்

“என்ன மிருதுளா மேடம் உங்க மச்சினன் இன்னுமா ஃப்ரீ ஆகலை? நாம ஃபோன் பண்ணி ரெண்டு நாளாச்சே!!!”

“ம்….நான் என்ன பண்ணுவேன் நவீ? நிச்சயம் பண்ணுவான்னு எதிர்ப்பார்த்தேன் பண்ணலை…அவ்வளவு தான் விட்டுட்டேன். இனி என்னென்னைக்கும் எதுக்காகவும் பேசவோ, போகவோ மாட்டேன்”

“ம்…அதை தான் நான் ஆரம்பத்துலேந்து சொல்லிண்டிருக்கேன். எங்க கேட்ட?”

“நீங்க ஆம்பளப்பா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுப்பேங்கள் ஆனா நான் அப்படி எடுக்க முடியுமா? அப்படியே நான் எடுக்கறதா இருந்தாலும் ஆரம்பத்துலேயே எடுத்திருக்கணும். அப்படி எடுத்திருந்தேன்னா குடும்பத்துல பிரிவு ஏற்பட்டிருக்கும்”

“இப்போ மட்டும் என்ன வாழறதாம்? நாம என்ன அவாளோட சந்தோஷமா அன்னியோன்யமா வா இருக்கோம் இல்ல அவா தான் எல்லாரும் அப்படி இருக்காளா? எனிவேஸ் இது நாள் வரை எல்லாருக்கும் நீ நல்லவளா இருந்தது எல்லாம் போதும் மிருது….அப்படி நீ நல்லவளா இருந்ததால… என்ன… உன்னை அவா யாராவது புரிஞ்சுண்டாளா? இல்லையே!!! உன்னோட இந்த நல்ல குணத்தை, உன்னோடு பொறுமையை, விட்டுக்கொடுக்கும் பண்பை எல்லாரும் இளிச்சவாயி, சூடு சுரனை இல்லாதவன்னு தான் நினைச்சிண்டிருப்பா!!! நினைக்கறது என்ன அதுனால தான் மேல மேல உன்னை ….ராதர்… நம்மை அவமானப்படுத்தி அதில் சந்தோஷம் அடையறா!!! எதுக்காக அப்படிப்பட்டவாளை நீ நினைக்கணும் சொல்லு!!!”

“ம்…பார்ப்போம் நவீ. என்னால சட்டுன்னு எல்லாம் மாற முடியாது ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திக்கறேன்.”

“தட்ஸ் குட். அது உனக்கும் நல்லது நம்மளுக்கும் நல்லது. நிச்சயமா ட்ரைப் பண்ணு”

“ஷுவர் நவீ. சரி நாம இன்னைக்கு சக்தியோட கிளாஸ் மடிஞ்சிட்டு…மூணு பேருமா எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோமா?”

“ஓ!! போகலாமே. அதுதான் நம்ம கார் வந்துடுத்தே!! அப்புறம் என்ன?”

என்று பேசிக்கொண்டது போலவே சக்தியின் கிளாஸ் முடிந்ததும் மூவருமாக வெளியே புது ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். மாலை நேரம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து படுத்துறங்கினர்.

சக்தி வெளிநாட்டில் புது பள்ளியில் செட்டாவாளா!! அவளுக்கு பிடிக்குமா? நன்றாக இந்தியாவில் படித்ததுப் போலவே குவைத்திலும் படிப்பாளா? போன்ற பல கேள்விகள் மிருதுளா நவீன் இருவருக்குள்ளும் இருந்ததை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக் கொண்டனர். அப்போது சக்தியை கூப்பிட்டாள் மிருதுளா….சக்தி தன் அப்பா அம்மாவின் அறைக்குள் வந்ததும்

“ம்… என்னம்மா கூப்பிட்ட?”

“சக்திமா..உனக்கு உன் புது ஸ்கூல் பிடிச்சிருக்கா? டீச்சர்ஸ் எல்லாரையும் பிடிச்சிருக்கா? எப்படி பாடமெல்லாம் எடுக்கறா? புரியறதா?”

“அம்மா எனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கு, டீச்சர்ஸையும் பிடிச்சிருக்கு, பாடமும் நல்லா டீச் பண்ணறா, எனக்கு ஃப்ரெண்ட்ஸும் கிடைச்சுட்டா….ஆர் யூ ஹாப்பி நவ்”

“ஏய் குட்டிமா….நான் ஹாப்பியா இருக்கறது இருக்கட்டும்…நீ ஹாப்பியா இருக்கியா? அது தான் எங்களுக்கு வேணும்”

“நான் ஹாப்பி தான்ம்மா”

“ஓகே டா கண்ணா நீ என்ன பண்ணிண்டிருந்தயோ அதை போய் கன்டின்யூ பண்ணிக்கோ போ”

“பாரேன்….ப்பா…கூப்பிட்டா…கேள்வி கேட்டா…போன்னுட்டா”

“நீ வாடி கண்ணா உனக்கு வேலை எதுவுமில்லாட்டி நாம ஒரு கேம் ஊனோ போடலாம்.”

“ஓகேப்பா. நான் ரெடி…அம்மா வாம்மா…அந்த துணியை அப்புறமா மடிச்சு வச்சுக்கோமா”

என்று சக்தி சொன்னதும் மகருதுளா அவள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அவளுடன் விளையாடச் சென்றாள் அதைப் பார்த்ததும் சக்தி….

“அம்மா ஐ ஆம் ஷாக்டு டூ சீ யூ கம்மிங் டூ ப்ளே வித் அஸ் இம்மீடியட்ளீ…!!!! வாவ்!!! அப்பா அம்மாவுக்கு ஏதோ ஆயிடுத்து”

“சரி சரி வாங்கோ வாங்கோ விளையாடலாம்…”

என்று மூவரும் ஊனோ விளையாட்டை விளையாடினர். பின் சக்தி அவளின் படிப்பைத் தொடர்ந்தாள். அப்போது நவீன் மிருதுளாவிடம்

“என்ன மிருது எப்பவுமே வேலையிருந்தா அதை எல்லாம் முடிச்சிட்டு தானே விளையாட வருவ!!! இன்னைக்கு என்ன சக்தி கூப்பிட்டதும் வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு வந்துட்ட? எனக்கே ஆச்சர்யமா தான் இருந்தது”

“ஆமாம் நவீ….இன்னும் ரெண்டு வருஷம் தான் சக்தி நம்ம கூட இருப்பா…அதுக்கப்புறம் எங்கயாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிடுவா….அப்புறம் அவ உலகமே வேறன்னு ஆகிடும்…..அதுக்கு பிறகு கல்யாணம் ….பின்ன அவ குடும்பம் குழந்தைன்னு இருப்பா….அதுதான் இப்பவே கிடைக்குற நேரத்தை எல்லாம் அவ கூடவே ஸ்பென்ட் பண்ணறேன்”

“ஓ!!! ஓகே ஓகே!!! அதுவும் கரெக்ட் தான் மிருது”

“நவீ நாம இன்னொரு குழந்தை பெத்துண்டிருக்கலாமோ!!”

“நோ !!நோ!! நோ!! மிருது என்னால அட் எ டைம் ரெண்டு குழந்தைகளை தான் சமாளிக்க முடியும்….மூணெல்லாம் நோ சான்ஸ் மா”

“என்னது ரெண்டு குழந்தைகளை சமாளிக்கறேங்களா!!!! அது எங்க அந்த ரெண்டாவது குழந்தை?”

“என்னோட மூத்த குழந்தை நீ அன்ட் ரெண்டாவது குழந்தை நம்ம சக்தி”

“ஆமாம்!! ஆமாம்!!!!”

“உண்மை தானே மிருது….”

என்று மூவரின் வாழ்க்கை மிகவும் அழகாகவும், அமைதியாகவும் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அம்புஜத்திடமிருந்து வாட்ஸ்அப்பில் கால் வந்தது.

“ஹலோ மிருது நான் அம்மா பேசறேன்”

“ஆங் அம்மா சொல்லு…ஏன் வாய்ஸ் கால் பண்ணற? வீடியோ கால் பண்ண வேண்டியது தானே?”

“இரு இதை ஆஃப் பண்ணிட்டு மறுபடியும் உனக்கு கால் பண்ணறேன்.”

“ஆங் ….இப்போ ஓகே வா?”

“ம்…இப்போ ஓகே. சொல்லு என்னமா?”

“எல்லாம் நல்ல விஷயம் தான் மிருது. நம்ம வேனுவுக்கு ஒரு வரன் வந்திருக்கு. அவனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.”

“யார் மூல்யமா வந்திருக்கா”

“எல்லாம் நம்ம தமிழ் மாட்ரிமோனி சைட் மூலமா தான் வந்திருக்கா.”

“அம்மா அப்போ நீ கட்டின காசு வீணாப் போகலை.”

“அது இருக்கட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிடறேனே….அப்புறமா நீ பேசு…இல்லாட்டி நான் மறந்துடுவேன்”

“சரி ….சொல்லு…”

“பொண்ணோட அப்பா அம்மா பம்பாய்ல செட்டிலானவா. அவாளுக்கு சொந்த ஊரு மதுரையாம். பொண்ணு அமெரிக்கால படிக்கறா. பொண்ணு நம்ம வேனுவோட லண்டன் மூவ் பண்ணவும் தயாராம். வேனுவும் அவளோட பேசிட்டானாம். அவனுக்கும் ஓகேவாம் அது தான் இந்த இடத்தையே முடிக்கலாம்னுட்டு இருக்கேன்”

“சூப்பர் மா….எனக்கும் மகதியை ரொம்ப பிடிச்சிருக்குமா”

“ஆங்….நீ எங்கே அவளைப் பார்த்த?உனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்ல? அதுவுமில்லாம அவ பேரை நான் இன்னும் சொல்லவேயில்லை ஆனா நீ கரெக்ட்டா சொல்லறையே எப்படி அது?”

“ஆங்….அது வந்து….அது…”

“மிருது என்ன சொல்ல வந்தயோ…அதை சொல்லு”

“அம்மா நான் அவளோட ஃபோன்ல பேசினேன் மா. நான், வேனு, மகதி மூணு பேருமா கான்ஃபரன்ஸ் கால் போட்டுப் போன வாரத்துக்கு முந்தின வாரம் பேசினோம் மா. போதுமா!!!”

“ஓ!!! அப்போ நீங்க மூணு பேருமா பேசி வச்சிண்டு தான் எங்ககிட்ட வந்தேங்களா?”

“இல்ல மா…நீங்க பேசிண்டதுக்கப்பறமா தான் நாங்க பேசிண்டோம். அதுக்கப்புறமா தான் உங்கிட்ட அவா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா புரிஞ்சுதா?”

“ஓ!!! சரி சரி சரி….என் மாட்டுப் பொண்ணு எப்படி பேசறா மிருது?”

“எல்லாரையும் போல வாயால தான் மா!!”

“ஜோக்காக்கும்????சொல்லுடி”

“நன்னா பேசறா”

“அது போதும் மிருது.”

“சரி எப்போ நிச்சயம் வச்சிருக்கேங்கள்? எப்போ கல்யாணம்? அந்த டேட்ஸ் எல்லாம் முன்னாடியே சொல்லிடுமா ஏன்னா நாங்க முன்னாடியே டிக்கெட் புக் பண்ணினா தான் எங்களுக்கு சீப்பா இருக்கும்”

“சரி டி. எங்களுக்கு அது தெரியாதா?”

“நிச்சயம் ஆன்லைன்ல தான்…ஏன்னா இப்போ ஒரு தடவை வந்துட்டு அப்புறமா மறுபடியும் எல்லாம் டிராவல் பண்ண ரெண்டு பேராலையும் முடியாதாம்….காசும் எக்கச்செக்கம் செலவாகுமாம்…அதுனால நிச்சயத்தை ஆன்லைன்ல வேனு லண்டன்லயும், மகதி அமெரிக்காவிலும் நாங்க சென்னையிலும், நீங்க குவைத்திலும், மகதியோட அப்பா அம்மா பம்பாயிலும் இருந்துண்டே ஸ்கைப்ல வர்ற வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இருபத்தி ஐந்தாம் தேதி நடக்கப் போறது. அவசியம் நீயும் மாப்பிள்ளையும் சக்தியும் அட்டென்ட் பண்ணணும்…மாப்பிள்ளை இருக்காறா?”

“ஆங்…இருக்கார்….இரு குடுக்கறேன்….நவீ நவீ…இந்தாங்கோ எஙக் அம்மா அப்பா பேசணுமாம். வேனுவுக்கு நிச்சயதார்த்தமாம் அதுக்கு உங்களையும் அழைக்கக் கூப்பிடறா”

“ஆங் சொல்லுங்கோ….நம்ம வேனுக்கு நிச்சியமாமே….கங்ராட்ஸ்….”

“ஆமாம் மாப்ள…வர்ற இருபத்தி அஞ்சாம் தேதி ஏதோ ஆன்லைன்லன்னு சொன்னான் வேனு…ஏதோ லிங்க் அனுப்புவானாம் நம்மளுக்கு. அதை க்ளிக் பண்ணினா எல்லாரும் எல்லாரையும் பார்க்கலாமாமே!!!”

“எது ? ஸ்கைப்லயா?”

“ஆங் அதே தான். அதெல்லாம் எனக்குத் தெரியாது…எல்லாம் அம்மாவும் புள்ளையுமா தான் அதை பத்தி பேசிப்பா. அவசியம் நீங்களும் அவன் அனுப்பற லிங்கைக் க்ளிக் பண்ணி அட்டென்ட பண்ணணும்னு கேட்டுக்கறோம்”

“நிச்சயமா நாங்க அட்டென்டன்ஸ் கொடுப்போம் கவலைப் படாதீங்கோ. சரி மிருது இந்தா நீ பேசிக்கோ எனக்கொரு கால் இருக்கு நான் வரட்டுமா”

“ஓகே மாப்ள வேலை தான் முக்கியம். நீங்க போயிட்டு வாங்கோ…இதை சொல்லத்தான் கூப்பிட்டோம்”

“ரொம்ப சந்தோஷம் நான் வேனுட்ட பேசறேன். சரி நீங்க மிருதுவோட பேசிண்டிருங்கோ நான் வரேன்…மிருது இந்தா”

“ம் ஓகே நவீ!! ம்…சொல்லுங்கோ மை டியர் பேரன்ட்ஸ்”

“அது சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன் மிருது. சக்தி குட்டி எப்படி இருக்கா? அவளுக்கு புது ஸ்கூல் எல்லாம் செட்டாச்சா?”

“ம்…அவ நல்லா செட்டில் ஆகிட்டாம்மா. சரி நிச்சியத்துக்கு உங்களுக்கு வேலை ஒண்ணுமில்லையா?”

“என்னத்த வேலையிருக்கு? கம்ப்யூட்டரை ஆன் செஞ்சுண்டு உட்காரணும் அது தான் வேலை”

“ஹா!ஹா!ஹா! ஆமாம் இல்ல…சரி வேற யாரை எல்லாம் இன்வைட் பண்ணப் போறேங்கள்?”

“எனக்கு என் சைடு ஆட்களை எல்லாம் கூப்பிடணும்னு ஆசையா தான் இருக்கு…அப்பாவுக்கும் அவா சைடு கூப்பிடணும்னு இருக்கு ஆனா வேனு இப்போ யார்கிட்டேயும் சொல்லிக்க வேண்டாம்னு சொல்லிட்டான். கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டுக்க சொல்லியிருக்கான்”

“சரி கல்யாண தேதி எப்போ?”

“பார்த்தையா ….பேச்சு சுவரஸ்யத்துல அதை சொல்ல மறந்தே போயிட்டேன்…அது வர்ற அக்டோபர் மாசம் பதினாறாம் தேதி முடிவு பண்ணிருக்கோம். நீ மாப்ள எல்லாரும் ஒரு மாசம் முன்னாடியே வந்திடணும்”

“அம்மா அம்மா….ஒரு மாசம் முன்னாடி எல்லாம் வர முடியாதுமா….சக்தி இந்த வருஷம் லெவென்த் மா….ஒரு வாரம் முன்னாடி நான் வரேன்…கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி நவீயும் சக்தியுமா வருவா சரியா”

“ம்…சரி உங்க வசதியைப் பார்த்துக் கோங்கோமா. வேற என்ன மிருது?”

“வேற ஒண்ணுமில்லைமா”

“சரி வச்சுடவா. சக்திக் குட்டி ஸ்கூலுக்கு போயிருப்பா….நாங்க வர்ற சனிக்கிழமை அவகிட்ட பேசறோம்ன்னு சொல்லு”

“ஓகே !! சொல்லறேன். பை”

“ம்…பை.. பை..மிருது…வச்சுடறேன்”

என்று ஃபோன் காலை துண்டித்தாள் அம்புஜம். நவீன் அவன் காலை முடித்து வரும் வரை மிருதுளா மீதமிருந்த வீட்டு வேலைகளை எல்லாம் முடித்தாள். நவீன் வந்ததும் அவனிடம் கல்யாண தேதியைச் சொல்லி டிக்கெட் புக் பண்ண வேண்டுமே என்று கூற அதற்கு நவீன்…

“ஒரு மாசம் முன்னாடி பண்ணினா போதும் மிருது. “

“அப்படியா!!! அப்போ விலை ஜாஸ்த்தியா இருக்காது?”

“அவ்வளவு வித்தியாசமிருக்காது”

“அப்போ ஓகே அப்புறமா பண்ணிக்கலாம்.”

ராமானுஜம் அம்புஜம் சொன்னது போலவே அனைவரும் ஸ்கைப்பில் ஒருவரையொருவர் பார்த்து அறிமுகப் படுத்திக் கொண்டனர். அதன் பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு சாஸ்த்திரிகளை வைத்து சும்மா சிம்பிளாக ஒரு நிச்சியத்தை நடத்தி முடித்தனர். கல்யாண தேதி நெருங்கியது. அப்போது அம்புஜமும் ராமானுஜமுமாக புடவை, வேஷ்டி அங்கவஸ்திரம், பூ பழங்கள் வைத்த தாம்பாளத்தில் தங்கள் மகனின் கல்யாண பத்திரிகையையும் வைத்து தங்களின் முதல் சம்மந்திகளான ஈஸ்வரன் பர்வதம் வீட்டிற்குச் சென்று கொடுத்தனர். அவர்களும் அதை வாங்கிக் கொண்டு விவரங்களை கேட்டறிந்துக் கொண்டனர். நவீனின் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்தனர். கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்தனர். பின் அனைத்து சொந்த பந்தங்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்தனர்.

மிருதுளாவும் நவீனும் அனைவரையும் ஃபோனில் அழைத்து வேனுவின் திருபணத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஈஸ்வரன் பர்வதம் குடும்பத்தினரை இவர்கள் இருவரும் அழைக்கவில்லை. நவீன் தன் சித்தியை அழைப்பதற்காக ஃபோன் செய்தான்

“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”

“நன்னா இருக்கோம் டா நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“வீ ஆல் ஆர் டூயிங் குட் சித்தி.”

“சரி என் மச்சினனுக்கு வர்ற அக்டோபர் பதினாறாம் தேதி கல்யாணம். அதுக்கு இன்வைட் பண்ண தான் கால் பண்ணினேன்”

“உன் மாமனாரும் மாமியாருமா எங்களுக்கு நேத்தே கால் பண்ணி இன்வைட் பண்ணிட்டா. பத்திரிகையும் இன்னைக்கு கிடைச்சாச்சு”

“ஓ!! சூப்பர்”

“சரி நான் ஒண்ணு உன்ட்ட கேட்கணுமே!!”

“என்னது சித்தி?”

“உன் அப்பா என்னமோ அந்த கல்யாணத்துக்கு போக மாட்டேன்னு சொன்னாறாம்….அதுக்கு கவின் தான் அவரை சமாதப்படுத்தி போகும்படி சொல்லியிருக்கானாமே!!!!”

“சித்தி அது தான் உங்களுக்கு எல்லா செய்தியும் டான்னு வந்துடறதே…அப்புறம் ஏன் என்கிட்டேயும் போட்டு வாங்கப் பார்க்கறேங்கள்?”

“அதுக்கில்லடா….உனக்கு தெரிஞ்சிருக்கும்….இல்லன்னு சொல்லலை ….இருந்தாலும் கேட்கலாமேனுட்டு தான் கேட்டேன்”

“அதெல்லாம் நீங்க சொன்னவா கிட்டேயே போய் கேளுங்கோ சித்தி….என்னை விட்டு….விடுங்கோ.”

“சரி டா அதுக்கு ஏன் இப்படி பேசற…விடு …மிருது இருக்காளா”

“ஆங் …சித்தி நான் எல்லாத்தையும் கேட்டுண்டு தான் இருக்கேன்….ஃபோன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு….”

“ஓ!!!அப்படியா….அப்போ எல்லமும் கேட்டிருப்ப!!! சரி சரி நாங்க உன் தம்பி கல்யாணத்துக்கு வர நிச்சயம் டிரைப் பண்ணறோம் மா. சரி வச்சுடவா”

“சரி சித்தி பை.”

என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்

“ஏன் மிருது என்னை அப்படி பார்க்கறே?”

“இல்ல நம்மாத்த நமக்கப்புறமா மூணு கல்யாணம் நடந்தது…அதுக்கு கவினோட கல்யாணத்தை தவிர மீதி ரெண்டு கல்யாணத்துக்கும் எங்க அப்பா அம்மாவை முறைப்படி அழைக்காட்டாலும் எங்க அப்பா அம்மா ப்ரவீன் கல்யாணத்துக்கும் வந்தா…பவின் கல்யாணத்துக்கும் வந்தா….அப்படி விட்டுக் கொடுக்காம வந்த எங்க அப்பா அம்மா ஆத்துல மொதோ தடவையா ஒரு விசேஷம்ன்னு கூப்பிட்டா உங்க அப்பா அம்மா அதையும் வச்சு கேம் விளையாடப் பக்கறது ரொம்ப கேவலமா இருக்கு”

“ஆமாம் எனக்கும் அது ரொம்பவே தப்பா பட்டுது….மறுபடியும் சொல்லறேன் மிருது….அவா கிடைக்கிற க்யாப் எல்லாத்தையும் இப்படி தான் யூஸ் பண்ணிப்பா….இப்பவாவது புரிஞ்சுக்கோ!!!”

“ஆனா பார்த்தேங்களா நம்ம கவின் உங்த அப்பாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கான்…”

“ஆமாம் ஆமாம் நீ தான் உன் மச்சினனை மெச்சிக்கணும்…”

“ஏன் நவீ அப்படி சொல்லறேங்கள்?”

“அவனும் அவன் ஆத்துக்காரியும் எங்கடா வம்பு கிடைக்கும்னே அலையறவா….அப்படிப்பட்டவா இப்படி ஒரு சான்ஸை விட்டுவிடுவாளா?…உன் மாமனார் போகலைன்னா ….பசங்க ரெண்டு பேரும் போகமாட்டா….இவனுக்கும் குவைத்திலிருந்து செலவழிச்சுண்டு போக இஷ்டமில்லை….ஆனா அங்க என்ன நடக்கறது ஏது நடக்கறதுனுட்டு தெரிஞ்சுக்காட்டி இவா தலை வெடிச்சிடுமே….அதுனால ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கறா மாதிரி….ஒரு பக்கம் அப்பாவை நான் தான் சமாதனப்படுத்தி நவீன் மச்சினன் கல்யாணத்துக்கு போக வச்சேன்னும் சொல்லிக்கலாம்….சொல்லிக்கலாம் என்ன….அப்படி தான் சொல்லி பரப்பிருப்பா…இன்னொரு பக்கம் அதே அப்பா அம்மாவை வைத்து உன் தம்பி கல்யாணத்துல என்னென்ன எப்படி நடக்கறதுன்னு எல்லா விவரங்களும் தெரிஞ்சுக்கலாம்….எப்படி…அவன் அப்பா அம்மாவுக்கே தெரியாம அவாளை மெஸெஞ்சரா யூஸ் பண்ணிக்கறான்..நீ வேற!!!”

அக்டோபர் மாதம் பிறந்தது. வேனுவின் கல்யாணம் வந்தது. மிருதுளா கூறியது போலவே ஒரு வாரம் முன்னாடியே சென்றாள். நவீனும் சக்தியும் திருமணத்திற்கு ஒரு நாள் முன் சென்றனர். அனைத்து சொந்தங்களும் கூடியிருந்தனர். ஈஸ்வரனும் பர்வதமும் வந்திருந்தனர். மிருதுளா சென்று அவர்களை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தாள். திருமணத்திற்கு நவீன் வீட்டு சைடிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் மட்டும் வந்திருந்தனர். கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பர்வதத்திற்கு தாம்பூலம், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து வாசல் வரைச் சென்று வழியனுப்பி வைத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். அப்போது பர்வதம் போகுற போக்கில் சும்மா போகாமல்

“என்ன அம்ஜம் மாமி? பையனும் மாட்டுப் பொண்ணும் அவா பாட்டுக்கு லண்டனோ அமெரிக்காவோ கிளம்பிப் போயிடுவா…அப்புறம் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் தனியாத் தான் இருக்கணும்…இல்லையா?”

“அதுனால என்ன பர்வதம் மாமி? இதுக்கு முன்னாடி எங்க புள்ள படிக்கப் போன போதும் நாங்க ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம்…எங்களுக்கு அதில ஒரு கஷ்டமுமில்லை. குழந்தைகள் நிம்மதியா சந்தோஷமா இருந்தாலே நமக்கு ஒரு தெம்பு தானே!!! என்ன சொல்லுறேங்கள்?”

என்று தான் ஏற்றி விட நினைத்தது பலிக்கவில்லை என்றுணர்ந்ததும்

“ம்….ம்…நாங்க வர்றோம்”

என்று கூறிவிட்டுச் சென்றனர்.

நவீன் அவர்களுடன் பேசவேயில்லை. எல்லாம் முடிந்து வேனுவும் மகதியுமாக லண்டன் சென்றனர். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக குவைத் சென்றனர். மீண்டும் சென்னையில் அம்புஜமும் ராமானுஜமும் தனியாக இருக்கலானார்கள்.

ஒரு நாள் நவீனின் சித்தி மீண்டும் கால் செய்தாள்….நம்பரைப் பார்த்ததும் நவீன் மிருதுளைவை அழைத்து….அடுத்த நியூஸ் வரப் போறது …பீ ரெடி மிருது…என்று கூறிக்கொண்டே ஃபோனை எடுத்து

“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம் நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? உன் மச்சினன் கல்யாணமெல்லாம் எப்படி நடந்தது? கல்யாணம் விசாரிக்க தான் கால் பண்ணினேன்”

“அப்படியா சித்தி? சரி சரி சரி….நாங்க நல்லா இருக்கோம். வேனுவோட கல்யாணம் நல்லபடியா நடந்தது. இருங்கோ இதோ மிருதுட்ட பேசுங்கோ’

“ஹலோ சித்தி சொல்லுங்கோ”

“ம்….மிருது நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே”

“கேளுங்கோ சித்தி”

“ஆமாம் உன் தம்பி கல்யாணம் பண்ணிண்டிருக்கறது மராட்டி பொண்ணாமே….அப்படியா? ஏன் மராட்டி பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான்? லவ் மேரேஜோ!!!”

“ஹா!! ஹா!!! ஹா!!!”

“ஏய் மிருது என்னத்துக்கு இப்போ சிரிக்கிற?”

“சித்தி அவ மராட்டி இல்ல …அவா பூர்வீகமெல்லாமே மதுரை சித்தி. ஆனா சின்ன வயசுலேயே மகதியோட தாத்தா பாட்டியெல்லாம் பம்பாயில செட்டிலாகிட்டா. சரி….அவ மராட்டின்னு உங்களுக்கு யார் சொன்னா?”

“ம்…அது வந்து …எல்லாரும் தான் சொன்னா!!”

“சித்தி நம்மாத்து சைடுலேந்து எங்க மாமனார் மாமியார் மட்டும் தான் வந்திருந்தா…ஸோ சொல்லணும்னா அவா தான் உங்க கிட்ட அப்படி சொல்லிருக்கணும்…”

“ம்…சரி மிருதுளா. நான் ஃபோனை வைக்கறேன். அடுப்புல ஏதோ வச்சுட்டு வந்துட்டேன் போல…நான் போய் பார்க்கட்டும்…பை”

“ஓகே சித்தி பை”

என்று ஃபோனை வைத்ததும். மிருதாள நவீனிடம்

“நவீ …இந்த மாநிரி ஒரு பொய்யை யாருப்பா பரப்பிருப்பா?”

“உங்காத்து சைடுலேந்து யாராவது கேட்டுருந்தா….நாம …யாரா இருக்கும்னு யோசிக்கணும்…ஏன்னா எல்லாருமே கல்யாணத்துல இருந்தா….ஆனா என் வீட்டு சைடான …நம்ம ஆல் இந்தியா ரேடியோ சித்தி கேட்குறான்னா….அது ஒருத்தா மட்டும் தான் காரணமா இருக்க முடியும். என்ன முழிக்கற? வேற யாரு? எல்லாம் உன் மாமனாரும் மாமியாருமே தான்.”

“இவ்வளவு நாளா நம்மளை பத்தி தான் இல்லாததும் பொல்லாததும் பரப்பிண்டிருந்தா….இடையில் கொஞ்ச நாள் என் அம்மாவையும் அப்பாவையும் வறுத்தெடுத்தா….இப்போ என் தம்பியையும் விட்டுவைக்கமாட்டா போல!!!”

“விடு விடு மிருது….இதுக்கு தான் சொல்லறேன்….. இவாளுக்கெல்லாம் மரியாதை மதிப்பு குடுத்தா எடைக்கு ரெண்டு ஆடு கேட்குற கூட்டம்ன்னு…எங்க நீயும் புரிஞ்சுக்கலை உன் பேரன்ட்ஸும் புரிஞ்சுக்கலை”

“ம்….ம்….நான் புரிஞ்சுண்டு ரொம்ப வருஷம் ஆகறது நவீ”

“அப்படியா மிருது? நம்பிட்டேன்!!!!”

தொடரும்……























1 Comment

Leave a comment