2024 ஆம் ஆண்டு வெளி வந்த 1000 பேபிஸ் (ஆயிரம் குழந்தைகள்) என்ற மலையாள வெப் சீரிஸின் சீசன் ஒன்று பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். பிடித்திருந்தால் இந்த வெப் சீரிசை பார்க்கவும்.

முதல் மூன்று எபிசோட்களில் கதை எதை நோக்கி நகர்கிறது? அவற்றில் வரும் மனநிலை சரியில்லாத  மூதாட்டி சுவற்றில் என்ன எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அந்த மூதாட்டியிடம் தான் கதை உள்ளது என்பது நமக்கு புரிந்தாலும்… அது என்ன கதை? அவருக்கு ஏன் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது? அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? இல்லை அவ்வாறு நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழ வைத்துள்ள கதாசிரியர்  நான்காவது எபிசோட் முதல் அதற்கான விடைகளை அந்த மூதாட்டி  தன் மகனுக்கு கறி விருந்து அளித்து அவன் உண்பதை பார்த்து ரசித்து விட்டு விளக்குகிறார்.

அதை கேட்ட அவர் மகன் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடி அந்த மூதாட்டி அறைக்குள் சென்று சுவற்றில் அவள் வரிசையாக ஏதோ எழுதி வைத்திருந்ததில் வேக வேகமாக எதையோ தேடுகிறான். அப்போது டைனிங் அறையில் அமர்ந்திருந்த மூதாட்டி பலமாக சிரிக்கிறாள். அவளின் சிரிப்பொலி அவள் மகனை அவளிடம் அழைத்து வருகிறது. அங்கு வந்த மகன் அவளை ஓங்கி அடிக்கிறான். அவள் நாற்காலியில் அமர்ந்தபடியே தரையில் மல்லாந்து விழுகிறாள். அப்போதும் சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை. அவளின் தலைக்கு பின்னால் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

அவள் மருத்துவமனையில் மருத்துவர் முன் தலையில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் தனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரையும் ஜூடிசியரியையும் காண வேண்டும் என்று கூறுகிறாள். பின் அங்கிருந்த ஒரு நர்சிடம் அவளின் பக்கத்து வீட்டு காரர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவழைக்கிறாள்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மருத்துவமனை வந்து மூதாட்டியை சந்திக்கிறார். அப்போது அவள் ஒரு கவரை அவர் கையில் கொடுக்கிறாள். மற்றொன்றை ஜூடிசியரியின் ஆளிடம் கொடுக்கிறாள். அந்த கவரை முதலில் பிரித்து படிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போகிறார். உடனே அந்த ஏரியா எஸ்.பியிடம் விவரங்களை தெரிவித்து அந்த லெட்டரை கொடுக்கிறார். அதிர்ச்சியான எஸ்.பி அந்த லெட்டர் ஜூடிசியரியிடம் போகாது தடுக்க வேண்டுமென்று வேகமாக நீதிபதி அலுவலகத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த லெட்டர் அந்த நீதிபதியின் கையில் சென்றடைகிறது. வேறு வழியின்றி சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரும் எஸ்.பியும் நீதிபதியிடம் கடிதத்தில் இருந்த விவரங்களை கூறுகின்றனர். நீதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலும் அதே விவரங்கள் இருக்க, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த க்ரைமின் விவரங்களை இப்போது வெளியிட்டால் அது சமூகத்தில் பெரியளவில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் யோசித்து மூவர் மட்டுமே அறிந்த அந்த உண்மையை அப்படியே மறைத்து விடுகின்றனர்.

அப்படி என்ன அந்த கடிதத்தில் அந்த மூதாட்டி எழுதியிருக்கிறார்? என்ற யோசனையில் அடுத்த எபிசோடை பார்த்தால் அதில் ஒரு நடிகையின் கொலை விசாரணை பற்றி நகர்கிறது கதை. இதற்கும் முதல் நான்கு எபிசோடுகளுக்குமான சம்மந்தம் என்ன? என்ற கேள்விக்கான விடை, அந்த நடிகையின் கொலையை விசாரணை செய்து அதில் வெற்றி காணும் ஆஜி குரியன் என்ற போலீஸ் அதிகாரி… நடிகையின் கணவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தில் முளைக்கிறது.

அதிலிருந்து அன்று வரை அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக மூவரால் மூடி மறைக்கப்பட்ட அந்த மூதாட்டி கடிதத்தின் விவரங்கள் நான்காவதாக ஆஜி குரியனுக்கும் தெரிய வருகிறது.

நடிகையின் கொலைக்கும் மூதாட்டியின் கடிதத்திற்கும் லிங்க் உள்ளதா? அப்படி அந்த கடிதத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு நடிகையின் கொலை விசாரணை ஆஜியை மூதாட்டி கடிதத்தின் விவரங்களுக்கு அழைத்து செல்கிறது! போன்று பல திருப்பங்களை கொண்டு மிகவும் கவனமாக பின்னப்பட்டிருக்கும் கதைக்களம் நம்மை இருந்த இடத்தில் இருந்து எழவிடாது நம்மையும் விசாரணையில் இணைந்திருக்க செய்த அரௌஸ் இர்ஃபான் மற்றும் நஜீம் கோயா ஆகிய இரு திரைக் கதையாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

இந்த வெப் சீரிசில் வரும் பல காட்சிகள் மறைமுகமாக பல விவரங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. அதை புரிந்து கொள்பவர்கள் குறை கூறமாட்டார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எல்லாம் குறையே.

இதன் கிளைமாக்ஸ் கொஞ்சம் அவசர அவசரமாக எடுத்தது போல் இருந்தாலும் அது அடுத்த சீசனுக்கான லீட் என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சரியே என்று பார்வையாளர்களுக்கு புரியும்.

இதில் வரும் சில காட்சிகளுக்கான பதில் சீசன் இரண்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூதாட்டி சாராவாக நீனா குப்தா, அவரின் சிறுவயது சாராவாக ராதா கோமதி, அவரின் மகனாக சஞ்ஜு  சிவராம் மற்றும் ஆஜி குரியனாக ரகுமான் என்று களை கட்டியுள்ளது இந்த 1000 பேபிஸ்.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, சிறப்பான நடிப்பு, காட்சி அமைப்புகள், லொகேஷன்ஸ் என்று அனைத்துமே இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

நிஜத்தில் இது சாத்தியமா? இது போல் நடக்கக் கூடுமா? என்றெல்லாம் ஆராயாமல் கதையை கதையாக கண்டு மகிழ ஆயிரம் பேபிஸ் ஓர் சிறந்த படைப்பாகும்.

1000 Babies – புனரபி ஜனனம், புனரபி மாற்றம்.

சற்று தாமதமான விமர்சனம் தான். என்ன செய்ய? எனக்கு இந்த படத்தை பார்க்கும் நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது.  எனது பார்வையில் லப்பர் பந்து, உங்களை நோக்கி வீசி இருக்கிறேன், அது பவுண்ட்ரியா இல்லை அவுட்டா என்பது வாசகர்களான உங்கள் கையில்.

லப்பர் பந்து பலரை பள்ளி /கல்லூரி பருவத்திற்கு அழைத்துச் செல்வது நிச்சயம். பொதுவாக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே முளைக்கும் வழக்கமான பிரச்சினைகளை தவிர்த்து ஒரு லப்பர் பந்து அவர்கள் திருமணத்திற்கு இடையூறாக புனையப்பட்டிருக்கும் கதை சற்றே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.  கதையில் எவ்வித தொய்வின்றி நகர்த்திய விதம் இதம். இரு ஆண்களின் ஈகோ, விளையாட்டில் மட்டுமின்றி இருவர் வாழ்க்கையிலும் வினையை கொண்டு வந்து சேர்க்க இருக்கும்  தருணத்தில், சம்பந்தப்பட்ட இருவரையும் அதே விளையாட்டு ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கையையும் அழகாக்குகிறது. இது தான் கதை சுருக்கம். ஆனால் இந்த இரு சம்பவத்திற்கிடையே உலா வரும் வண்ணமயமான காதல், நட்பு, கிராமத்து சூழலில் கிரிக்கெட், விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு, மாமியார் மருமகள் உறவு, கணவன் மனைவி உறவு,  சமத்துவம், அரசியல் என்று  அட்டவணை நீண்டுக் கொண்டே போனாலும் அவை அனைத்தையும் விளையாட்டு என்ற ஒரு புள்ளியில் இணைக்கும் கதை அருமை. அத்தகைய கதையை எழுதி இயக்கியுள்ள  திரு. தமிழரசன் பச்சைமுத்து அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நடிப்பு பொறுத்தவரை அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அன்பு, யசோதை, துர்கா, கருப்பையா, காத்தாடி, பூமாலையின் தாய், கொழந்த ஆகிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் நடிகைகளுக்கு பாராட்டுகள். அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ் இன்னும் கொஞ்சம் ஹோம் வர்க் செய்திருக்க வேண்டும் போல் படம் பார்க்கும்போது தோன்றுகிறது.  கெத்துக்கு கெத்து போதவில்லை. எனது பார்வையில் அன்பு தான் கெத்து.

சமீபத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் இசை பெரும் இரைச்சலாக இருந்து வரும் வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதைக்கான இசையமைப்பு படம் முழுவதும் இதமாக ஒலிக்கிறது. இசையமைப்பாளர் திரு. ஷான் ரோல்டன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கதையில் வரும் திருப்பம் மற்றும் முடிவு பார்வையாளர்களால் யூகிக்க கூடியதாக இருந்தாலும் நம்மை எழுந்து செல்ல விடாது முழு படத்தையும் பார்க்க வைத்திருப்பது சிறப்பு. கிராமத்து குசும்பு என்பதை கமெண்ட்டேடர்களின் கமெண்ட்ரி நிரூபித்திருக்கிறது. வேர்ல்டு கப் கமெண்ட்டேடர்களை விட மிகவும் கலகலப்பாக கமெண்ட்ரி செய்த கமெண்டேட்டர்களுக்கு பாராட்டுகள்.

பாரதியார் அன்றே சாதிகள் இல்லையடி பாப்பா என்றொரு பாட்டை பாடி எழுதியிருக்கிறார். ஆனாலும் ஏன் இப்போது வரும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த சாதியை கோர்க்கிறார்கள்?  இயக்குனர் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். மேலும் ஒவ்வொருவர் பலவற்றை கற்றுத் தேர்ந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வர  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்றிருப்போருக்கு அந்த வெற்றி கிடைத்தும் பலனிருக்காது என்பது ஏன் புரியவில்லை.  விட்டுக்கொடுப்போர் கெட்டுப் போவதில்லை ஆனால் எல்லாவற்றிலும் எல்லாரும் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேறுவோம் என்ற தவறான கருத்தை பரப்புவதை தவிர்த்து, இனி வரும் படங்களில் நன்றாக படித்து தன் உழைப்பில் முன்னேறுவது எப்படி என்றும் அவ்வாறான முன்னேற்றமே தனக்கான அடையாளத்தை தரக்கூடியதாக இருக்கும் என்றும் காட்சிகளும் வசனங்களும் அமைத்தல் நன்று. இட ஒதுக்கீடு வேண்டுமென்று உரிமை குரல் கொடுப்போர், இனி எங்களுக்கு அது  வேண்டாம் நாங்களே அவ்விடத்தை எட்டிப் பிடிப்போம்  என்ற குரலையும் ஒலிக்கச் செய்தால் கூடுதல் சிறப்பு.

லப்பர் பந்து – வீசப்பட்ட விதம், ஏற்படுத்தும்
கார்க் பந்தின் தாக்கம்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகலன்னு நீலாம்பரி ’99 ல சொன்னது 2024 ல கூட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பொருந்துகிறது. அதுனால தான் அவர் இன்னமும் சூப்பர் ஸ்டார். இத் திரைப்படத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார். அவரின் வயதுக்குரிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு. நடிப்பில் நிதானம், முதிர்ச்சி இரண்டையுமே மிக அழகாகவும் அளவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.

மஞ்சு வாரியர் ரஜினி காம்போ நன்று. பகத் பாசில் மிக அழகாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ரஜினி பகத் காம்போவின் ஒரு காட்சியில் நம்மை இருவருமே கண்கலங்க வைக்கிறார்கள்.

ரோகிணி, ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா, துஷாரா விஜயன், ரமேஷ் திலக் ஆகியோர் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனோ அமிதாப் அவர்களின் கதாப்பாத்திரம் ஏற்புக்குரியதாக அமையவில்லை. அதற்கு டப்பிங் ஒரு முக்கிய/ பெரும் காரணம் என்றே படம் பார்த்த அனைவருக்கும் கூற தோன்றும் முதல் மற்றும் அப்பட்டமாக தெரியும் பெரிய குறை. அவர் திரைப்படத்தோடும் கதாப்பாத்திரத்தோடும்  ஒட்டவில்லை. தனித்தே இருக்கிறார்.

அனிருத் இசையில் மாற்றம் ஏதுமின்றி அதே ஒரே இசை தான் ஒலிக்கிறது. மனதில் நிற்கும் படி பாடல்கள் ஏதும் சரியாக அமைக்கவில்லை.  காட்சிக்கு தகுந்தாற் போல் இசையமைக்காது சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே இசையமைத்திருப்பதால் திரைப்படத்தின் பின்னணி இசை வெறும் இரைச்சல்! பார்வையாளர்களுக்கு தரும் எரிச்சல்!. அனிருத் அவர்களின் அடுத்த படத்திலாவது இசையில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களில் நானும் ஒருத்தி. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் இசை – இம்சை.

என்கவுண்டர் நல்லதா கெட்டதா! இருக்கலாமா! இருக்கக்கூடாதா! இது தான் கதைச் சுருக்கம். இதை விளக்கும் விதமாக  மனிதாபிமானம், கார்ப்பரேட் மோசடி , தனி மனித உரிமை என பல விஷயங்களால் பின்னப்பட்டிருக்கும் கதை தான் “வேட்டையன்”.  முதல் பாதியில் கதை நகர்ந்த விதம் நம்முள்… அட என்னடா மறுபடியும் கற்பழிப்பு தான் கதைக்கான மோட்டிவா என்ற  அலுப்பு மனதில் எழும் தருணத்தில் சட்டென கதை களம் நம் நினைப்பை அப்படியே புரட்டிப்போடுகிறது.

போலீசுக்கு கொலைக்கான மோட்டிவ் வேணும் என்பதால் கற்பழிப்பு தான் சரியானதாக இருக்கும்  என்று  வில்லன் கூறும் போது, அட போலீசுக்கு மட்டுமில்லப்பா இப்போ வெளிவர பல படங்களின் கதைக்கான மோட்டிவே அதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்ய என்று நம்மை சொல்ல வைக்கும் விதம் அந்த வசனம் அமைந்திருக்கிறது. அது அமைந்ததா இல்லை அமைக்கப்பட்டதா! யாம் அறியோம் பராபரமே.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (சூப்பர் ஸ்டார்) பல குற்றவாளிகளை குறிவைத்து  குழியில் விழவைக்கிறார். அதற்காக அவரின் தேடல்கள் மற்றும் அவர் அமைக்கும் வியூகம் ஆகியவைகளை சுருக்கமாக சில காட்சிகளில் புரிய வைத்து சட்டென கதைக்குள் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார் இயக்குனர். மேலும் கதை ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சட்டென கதையில் பெரும் திருப்பம் ஒன்றை கொடுத்து கதையை அப்படியே வேறு கோணத்தில் கொண்டு சென்று விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நடிப்பு பாதி ஹீரோயிசம் மீதி என்று கலந்து செய்த கலவை தான் அதியன் கதாப்பாத்திரம். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்றார் போல் நேர்மைக்கு பெயர் போன எஸ்.பி. அதியன் ஓரிடத்தில் தவறிழைத்து விடுகிறார். அது என்ன தவறு? ஏன் தவறானது? அதை எப்போது! எப்படி! யாரால் உணர்கிறார்? தவற்றை திருத்திக் கொள்ள அவர் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளின் பதில்களை தேடும் வேட்டையில் இறங்கி திரையரங்கம் சென்று திரையில் “வேட்டையன்” வேட்டையை கண்டு களியுங்கள்.

“வேட்டையன்” – துப்பாக்கியால் குற்றவாளிகளையும் நடிப்பால் ரசிகர்களின் மனதையும் வேட்டையாடும் வேட்டையன் நம் டிக்கெட் பணத்திற்கு பங்கம் விளைவிக்காதவன்.

Long ago, a Chola prince was riding his chariot through a temple town when he accidentally ran over a calf, causing its death. The grieving mother cow went to the royal court seeking justice and rang a bell meant for citizens to present their grievances to the king. Hearing the bell, the king came out and learned of the incident. While his courtiers offered various solutions to absolve the prince of his sin, the king sought true justice for the cow, who had lost her calf.

The only just solution, he concluded, was to have the prince suffer the same fate as the calf. The prince would be laid on the ground and run over by the chariot wheel, leading to his death. However, the courtiers couldn’t bring themselves to carry out the order. Overcome with grief but committed to justice, the king himself took control of the chariot and ran the wheel over his only son, killing him.

As the story goes, the gods, disguised as the cow and calf, appeared before the king, revealing their true forms and blessing him for his unwavering sense of dharma—not only for his human subjects but also for animals. The king’s profound commitment to justice earned him the title “Manuneethi Chola.”

This Chola ruler, believed to have lived around 250 B.C. in southern India, upheld the principle that no one is above the law and all are equal before it. His legacy has inspired Indian judges in delivering fair and final verdicts in complex cases—a far cry from the modern judicial system’s current direction.

The story of the most popular Chozha Ruler

The plot is based on the five volume  Historical Novel Ponniyin Selvan originally written by “Kalki Krishnamurthi” (between 1950 -1954) as one of the most popular and perhaps one of the largest Historical Work in Tamil Literature which later has been reproduced in several formats and media.

Ponniyin Selvan traces the story of the early days of the great Chozha King, Raja Raja Chozhan 1 (947 – 1014 CE) as the young Prince “Arulmozhi Varman”.

Kalki in his own unique way has portrayed the events of history during the Chozha Dynasty, considered as major, salient or main events, into a sensational and interesting literary novel in simple yet most enchanting way.

The 10 main characters that are displayed in our Golu as clay dolls with a backdrop depicting the Tanjore Big Temple Tower, Fort and the Palace Throne; definitely not the actual but with the intention to provide a resemblance of the original with the view to weave together the main theme of the story through these idols.

The dolls are from Giri traders, Chennai.

The National Reserve is situated in Rift Valley Province, Narok and Transmara Districts. The site adjoins the Serengeti National Park along the Kenya-Tanzania border, and is considered part of the same ecosystem.

The word “Masai” comes from the ‘Masai tribe’, nomadic inhabitants of the area and the word “Mara” is their word for ‘spotted’, referring to the ubiquitous flat topped acacia trees, shrubs and bushes that dot the landscape across most of the reserve.

The Masai speak the Maa language (ɔl Maa), a member of the Nilotic language family that is related to the Dinka, Kalenjin and Nuer languages. Except for some elders living in rural areas, most Maasai people speak the official languages of Kenya and Tanzania, Swahili and English.

The Masai Mara features a stunning kaleidoscope of wild and rugged landscapes, warm and welcoming people and an exciting array of creatures – big and small. World famous for hosting the epic Great Migration, the Masai Mara welcomes 1.5 million wildebeests onto its sprawling savannahs each July through October.

Mara has the largest number of savannah species in the world it has over, 650,000 gazelle, 62,000 buffalo, 64,100 impala, 61,200 Topi, 7,500 hartebeest, 7,100 giraffe, 3,000 eland and 4,000 elephant (Mara Research Station Report). There are particularly large numbers of Lion (Panthera leo) and Spotted Hyaena (Crocuta crocuta), cheetah (Acinonyx jubatus) and populations of the threatened black rhinoceros (Diceros bicornis) and African hunting dog (Lycaon pictus) As well as uncounted antelope, hippo, warthog, bush pig and giant forest hog (Lamphey and Reid 2004).

More than 500 bird species are known to occur, including 12 species of Cisticola and 53 birds of prey. Grassland birds are especially well represented.

The Masai Mara National Reserve and conservancies are brimming with life and offer safari travellers a wide variety of activities to choose from. Whether you take to the skies for a high-flying hot-air balloon adventure at sunrise or hit the road for a 4×4 safari, you’re sure to leave the Masai Mara with unforgettable experiences and lifelong memories.

Vastu Ganapathi is a specific form of lord Ganesha associated with Vastu Shastra, an ancient Indian system of architecture and design. In this form, Lord Ganesha is revered as the deity who brings blessings and ensures harmony and positive energy in the built environment. Lord Ganapathi is depicted with four hands, each holding a symbolic object representing his various powers and blessings. The presence of Lord Ganapathi in your home is believed to bring positivity, success, and harmony.

எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும், சமூக ஊடக சிபாரிசுகளும், காசுக்கு கூவும் கூட்டங்களும் இன்றி அமைதியாக வெளிவந்துள்ள அற்புதமான திரைப்படம். ரொம்ப நாள் கழித்து தமிழில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படம். இது எங்கள் சொந்த கதை, எங்கள் சோகக்கதை உண்மைக் கதை, முடக்கப்பட்டவர்கள் கதை, அந்த கதை, இந்த கதை என்ற சில பொய்களின் கூச்சல் மற்றும் அற்ப பரபரப்புகளுக்கிடையே ஜமா ஜொலிக்கிறது.

இதிலும் ஏற்றத்தாழ்வுகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அதற்கு பதிலடியாக திறமையை முன்னிறுத்தி, அதற்கு முதலுரிமை கொடுத்து மிக அழகாக கதை நம் மனதை தொடும் விதம்  ஜமாவை படைத்துள்ளார் இயக்குனர் திரு பாரி இளவழகன்.

இக்கதையும் துரோகத்தை சார்ந்தது என்றாலும் அதற்காக அருவாள் அல்லது கத்தி கொண்டு சதக் சதக் என்று இரத்தம் தெறிக்கும் விதம் பழிவாங்கும் காட்சிகள் இன்றி, கலையை நன்கு பயின்று தன் திறமையால் ரத்தமின்றி, வீண் சத்தமின்றி தன் உரிமையை நிலைநிறுத்த கதாநாயகன் தேர்ந்தெடுக்கும் திறமை என்னும் ஆயுதம் அபாரம். அவ்வாறு நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டு அதில் விஸ்வரூபம் எடுத்தால் அது நம்மை ஒடுக்குபவரை ஒதுங்கிக் கொள்ள வைக்கும் என்பதற்கு இப்படம் ஓர் சிறந்த உதாரணம்.

கல்யாணம் கதாப்பாத்திரத்தின் மூலம் நல்ல நடிப்பை மட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு பண்பை விதைத்து இருக்கிறார் இயக்குனர்.

நமக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சாணக்கியர் நீதியை படமாக்கி உள்ளார் இயக்குனர்.  நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி,  வஞ்சகத்தை விடுத்து நேர்மையைத் தேர்ந்தெடுத்து, மற்றவர்களை குறைத்து மதிப்பிடாது, துரோகத்தின் சவால்களை முறியடித்து வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும்,  அதிலிருந்து வெளிவரலாம் (அது யாராக இருந்தாலும்) என்பதை ஜமா கதை நமக்கு உணர்த்துகிறது.

தாண்டவம் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரு சேத்தன் அவர்கள்  அமைதியாய் காய்களை நகற்றி ஆராவாரம் மற்றும் தேவையற்ற அலப்பறை இல்லா வில்லத்தனத்தை முகபாவத்திலும் பார்வையிலும் வசனம் பேசும் விதத்திலும்  தாண்டவம் ஆடியிருக்கிறார். கல்யாணத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகையின் நடிப்பு பிரமாதம். ஜகாவாக திரையில் வலம் வந்த அம்மு அபிராமி நடிப்பும் நன்று.

வித்தை கற்றுக்கொடுத்தவரிடமே உன் வித்தையை காட்ட நினைத்தால் விடையின்றி இவ்வுலகிலிருந்து விடை பெறுவாய்  என்பதையும் எடுத்துரைக்கிறது இந்த ஜமா.

இந்த படத்தின் இசை அதற்கு பலம் சேர்த்துள்ளது என்று எவராலும் சொல்லாமல் இருக்க முடியாது. இப்படத்திற்கு நம் இசைஞானியை தவிற வேறு யார் இசை அமைத்து இருந்தாலும் அது எடுபடாது போய் இருக்கும்.

மிதமான இசை, காட்சிக்கு ஏற்றார் போல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை. அதிலும் இப்படத்தில் சோக காட்சிகளின் பின்னணியில் நம் இசைஞானியின் இசையிலும் இழைந்தோடிய சோகம் நம் மனதை உருக்கும். அது போல் இசைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் படம் முழுவதும் அவர் இசையை நிறைத்திருக்கலாம். ஆனால் அவர் கதைக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இசை கதையோடு கைக்கோர்த்து கதையை குலைக்காமல் கதைக்கும் வாசனத்திற்கும் வழிவிட்டு பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் அடிதடி, சண்டை, வெட்டு, குத்து, ஆசிட், இரத்தம், கற்பழிப்பு  போன்ற வழக்கமான காட்சிகளையும், காரணங்களையும் புறம் தள்ளிவிட்டு முன்னே தலை நிமிர்ந்து நடை போடும் ஜமா திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போலவே திரைக்கதையிலும் அமைத்திருப்பது சிறப்பு.

கதை, திரைக்கதை, இசை, நடிக்கர்கள், நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்திலும் ஜமாய்த்திருக்கிறார்கள்.

ஜமா – ஜாலம்.

ஒரு காலத்தில் புது திரைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களிடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர்களின் கருத்துகளையும் விமர்சன குழுவினரின் விமர்சனங்களையும் வைத்து எந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்றும், எது சிறந்தது என்றும் பத்திரிகைகள் அச்சிட்டு வந்தன. ஆனால் இப்போதோ ரிலீஸான  மூன்றே நாட்களில் இப்படத்தின் வசூல், ரிலீஸான இரண்டாவது நாள்  அப்படத்தின் வசூல் என்று நாட்கணக்கில் அப்போதும் வசூலை வைத்து திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் மூன்று நாட்களுக்கு மேல் யாரும் எதுவும் கேட்க போவதில்லையே!

இதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமேயானால், இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்குள்ளேயே படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று அப்படக் குழுவினரே சிலாகித்து பேசிய நேர்காணல்கள் அல்லது பரபரப்புக்காக படத்தைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் உலாவரச் செய்து முதல் மூன்று நாட்களில் வசூல் பார்க்க எண்ணுவது நமக்கு புலப்படும். இல்லையெனில் மக்கள் யாரும் அவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பாகவும் இருக்கக்கூடும் .

ஏமாறுபவர்கள் உள்ள வரை இது போல் ஏமாற்றுபவர்கள் சிம்மாசனம் ஏறத் தான் செய்வார்கள்.

நூறு நாட்கள் ஓடிய திரைப்படங்களும், வருடக்கணக்கில் திரையிடப்பட்ட திரைப்படங்களும் தந்த தமிழ் திரையுலகம் இன்று பத்து நாட்கள் தாண்டுவதற்கே தத்தளிக்கிறது.

சமீப காலமாக தமிழகம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏன் இவ்வளவு மோட்டிவேஷனல் மெஸேஜஸ்களும், பேச்சாளர்களும் தேவைப்படுகிறார்கள்! சிந்தியுங்கள். ஏன்? தமிழக மக்கள் மோட்டிவேடட்டாக இல்லை என்பதாலா இல்லை அந்த சாக்கில் மக்கள் மூளையை சலவை செய்வதற்காகவா? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதிலும் கருத்து, எங்கும் கருத்து, எதற்கும் கருத்து! கருத்தோ கருத்து! என்று கருத்தை கூறு போட்டு விற்காத குறையாக பள்ளி மாறுவேட போட்டி தொடங்கி திரையுலகம் வரை ஏன் இப்படி கருத்து கந்தசாமிகள் நிரம்பி இருக்கின்றனர்! சிந்தியுங்கள்.

திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக இருந்த வரை மேற்கூறியவாறு வருடக்கணக்கில் திரையிடப்பட்டு வந்தன. எப்போது திரைப்படத்தில் கருத்து திணிப்பு ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அதன் முடிவை அதுவே தேட துவங்கிவிட்டது.  கருத்து கதையோடு ஒன்றி பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்த வேண்டும் அல்லாமல் தனித்து /எடுத்து சொல்லப்படுமேயெனில் அது கதைக்கும் அத்திரைப்படத்திற்கும் பெரிய சறுக்கலாகும்.

கருத்து மிகுதியாக உட்புகுந்ததால்
கதை குலைந்து போனது
கதை குலைந்ததால்
திரைப்படம் குலைந்து போனது
திரைபடங்கள் அடுத்தடுத்து குலைந்து போவதால்
தமிழ் திரையுலகமே குலைந்து போய் கொண்டிருக்கிறது.

ஜாதி, மதம், இனம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற திரைப்படங்கள் 80 /90 களிலும் நிறைய வந்துள்ளன ஆனால் அவை அனைத்தும் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் திரைப்படமாக்கவில்லை. அலுத்து போகவும் வைக்கவில்லை.  ஆனால் இப்போதோ!

மாற்றம் ஒன்றே மாறாதது.
இதுவும் மாறும்.
திரையுலகம் மீட்டெடுக்கப்படும்.
நல்ல ஜனரஞ்சக திரைப்படங்கள் திரையிடப்படும்
என்ற நம்பிக்கையுடன் அக்காலத்திற்காக காத்திருப்போம்.

எதார்த்த சினிமாவை படைக்கிறோம் என்று
கற்பனை வளத்தை கொன்று நாள்தோறும் நடப்பதை சித்தரித்து காட்டுவதை விடுத்து,
எதிர்பாராத ஒர் கதை கொண்ட நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களில் ஒருத்தியாக நான்.
-நா. பார்வதி

வளைந்திருப்பதால் வளையல் என்றானதா!
இல்லை வளையாதிருப்பதால் வளையல் என்றானதா!
கையில் மாட்டும் வளையம் போல் இருப்பதால் வளையல் என்றானதோ!
எதுவாக இருந்தால் என்ன!
வளையல் கையில் வளைய வருவதே ஓர் அழகு
குந்தன் கற்கள் பதித்த வளையல் என்றால் பளபள
பட்டு நூல் வளையல் என்றால் வழவழ
தங்க வளையல் என்றால் தகதக
வைர வளையல் என்றால் ஜொலிஜொலிப்பு
கண்ணாடி வளையல் என்றால் கலகல
மொத்தத்தில்
வண்ணமையமான வகைவகையான வளையல்கள் அணிவதால்
பெண்களுக்கு ஓர் தனியழகு
அதுவே வளையல்களுக்கான தனி சிறப்பு.

இத்திரைப்படத்தை என்னமோ தெரியவில்லை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும்… கஷ்டப்பட்டு உழைத்த காசை  தியேட்டர் சென்று இப்படத்தை கண்டு வீணடிக்க என் மனம் ஏற்கவில்லை. ஓ.டி.டியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.  போன ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படத்தை பார்க்கலாமென்று அமர்ந்தேன். படம் ஆரம்பம் முதலே கதை & திரைக்கதை இயக்கம் எல்லாம் திரையில் சரிவர ஒட்டாதது போலவே இருந்தது. 

மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக படத்தை பார்த்து விட்டேன். ஆனால் இப்படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்ற யோசனையில் மூழ்கினேன்.

எப்போதும் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்ப்பதும் அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து காட்டி, குறைகளை மேலோட்டமாக விமர்சித்து எழுதுவதும் என்று இருந்த எனக்கு இப்படம் ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் இப்படத்தை பற்றி எழுதுவதற்கு நல்லதா ஒரு விஷயம்…

எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன் 

அது எங்கேயும் இல்ல! 

என்று நொந்து கொண்டது தான் மிச்சம். ஒரு திரைப்படம் எடுப்பது என்பது இமாலய சாதனை போன்றது என்று நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடுமின்றி ஏனோ தானோ என்று எடுத்தது போல் இருப்பது வருத்தம் தருகிறது. 

சில படங்களை நன்றாக எடுத்து பெயர் வாங்கி விட்டால்… எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் அதை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்ற மிதப்பில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்  இப்படம் பெரும் ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் தராது என்பது உறுதி. இனி வரும் கலைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் பட்டாளம், ஆடம்பரம், விளம்பரம் என்று ஆர்ப்பாட்டம் செய்த படக்குழுவினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்,

 “தயவுசெய்து ரசிகர்களை முட்டாள்கள் என எண்ணி விட வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்ல தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படத்தில் அப்பேர்ப்பட்ட இளைஞர்கள் ஒரு முதியவரை தேடி செல்வது நெருடல். வயதானால் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற உலகறிந்த உண்மையை படம் போட்டு காண்பித்திருக்கிறார்கள். 

ஒரு படத்தில் கருடபுராணம் இதில் வர்மம். 

கருடபுராணம் கலக்கல் 

வர்மம் வழுக்கல்

ஒரு படத்தில் “மே” இதில் “மியாவ்”

“மே” மாஸ்

“மியாவ்” மிஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒலி மற்றும் ஒளிப்பதிவு, நடிப்பு, நடிகர்கள், ஒப்பனை, எடிட்டிங், பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால்…

இசை வெறும் இரைச்சல்

தரும் பெரும் எரிச்சல்!

இயக்கத்தில் இல்லை இறுக்கம்

ஆதலால் பாதியில் எழுந்து போக வைக்கும்!

கதையும் திரைக்கதையும் பெரும் சொதப்பல்

மூழ்கியது இந்தியன் 2 கப்பல்!

நடிப்பிலும் நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகை குழப்பம் 

புது முக நடிகர்கள் போல் இருக்கும்! (உலக நாயகன் உட்பட)

இந்தியன் தாத்தா ஒப்பனை

ஒப்பவில்லை 

எதுவுமே சரியாக ஒட்டவில்லை!

கருத்து பெருத்துப்போச்சு

படம் சருகாச்சு 

இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தா சென்ட்ரலை மட்டும் தான் தாக்குவாரோ! ஏன் ஸ்டேட்டை விட்டுவிட்டார்? 

அவசரத்தில் சொல்லப்பட்ட கதை. 

அரைகுறையான திரைக்கதை.

பாதி படம் எடுத்து முடித்து பார்த்ததும்… இந்தியன் கம் பேக் என்று வரவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை அவர்களே இந்தியன் கோ பேக் என்றும் கூறி தங்களின் திரைப்படத்தின் விமர்சனத்தை படத்திலேயே காட்டிவிடும் நேர்மை மற்றும் தைரியத்திற்கு சல்யூட். 

சண்டை காட்சி மற்றும் மோனோ சைக்கிளிங் சீக்குவன்ஸ் எல்லாமே நம்மை பத்து வருடம் பின்நோக்கி  அழைத்து செல்வது உறுதி.  இவ்வளவையும் பார்த்து முடித்ததும் கடைசியில் இந்தியன் தாத்தா “ஐ வில் பி பேக்” என்று சொல்லி முடித்த விதம், 

“என்னது மறுபடியும் மொதல்லேந்தா! ஐயா சாமி போதும்டா சாமி. உங்க படத்துல சொன்னா மாதிரியே… ப்ளீஸ் கோ பேக்… அன்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நெவர் எவர் கம் பேக்” 

என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைக்கும். 

இந்தியன் 2 – இம்மியளவும் ஏற்க முடியாத இம்சை அரசன். 

-நா. பார்வதி

ஆயிரம் கண்ணுடையாள் சமயபுரத்தாள். அத்தகைய அம்மன் கோவிலில் அராஜகம். அவள் கண்களுக்கு இவை தென்படவில்லையா? தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்று இரு வழிகள் எல்லா கோவில்களிலும் இருக்கும் முறை. தர்ம தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டண தரிசனத்தை தேர்ந்தெடுப்பது  வழக்கம். அவ்வாறு கட்டணம் செலுத்தி முறையாக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது…அம்பாள் நடைக்கு முன் ஒரு கதவு இருக்கும் (இது சமயபுரம் சென்று வருபவர்களுக்கு நன்றாக தெரியும்) அதற்கு சற்று முன்னே வலது புறம் வழியாக தடதடவென ஒரு ஐம்பது நபர்கள்  திடீரென எங்கள் வரிசையில் இடித்து பிடித்துக் கொண்டு நுழைந்தனர். அவர்களை அழைத்து வந்து ஒழுங்காக சென்று கொண்டிருந்த  வரிசையினூடே நுழைத்து விட்ட நபரிடம்,

“ஏன் இப்படி செய்யறீங்க நாங்க இத்தன மணி நேரமா நுழைவாசல்லேந்து வரிசையில நின்னுட்டு வரோம். இது என்ன புது வழி?”

என்று அனைவரும் கேள்வி எழுப்ப…  அழைத்து வந்த ஆசாமி அப்ஸ்காண்ட் ஆனார்‌. இடையில் வந்து நுழைந்த அந்த ஐம்பது நபர்களில் இரண்டு மூன்று பேர்

“நாங்களும் காசு கொடுத்து தான் வந்திருக்கோம்”

என்று குரல் உயர்த்தி கூற. அதற்கு எங்கள் பின்னால் இருந்தவர்

“அப்ப நாங்க என்ன சும்மாவா நின்னுட்டு வர்றோம். ஒரு கட்டண வரிசை தானே இருக்கு. இது என்ன சைடு கட்டண வரிசையா! கடவுள பாக்கறதுலேயும் குறுக்கு வழியா! அம்மா இதெல்லாம் நீயும் பாத்துட்டு தானே இருக்க” 

என்று கூற… அந்த லோக நாயகி முன் பெரிய வாக்குவாதம் நடைப்பெற்றது. இறுதியில் வரிசைனூடே நுழைந்தவர்களை  போகட்டும் என்று அனைவரும் விட்டுவிட அவர்களும் முன்னே சென்றனர். அம்பாள் கர்ப்பக் கிரக முன் வாசலின் வலது புறத்தில் இருந்து இன்னும் ஒரு பத்து நபர்களை அதே ஆசாமி எங்கள் வரிசையில் இணைத்து விட…முதலில் இணைந்த அந்த ஐம்பதில் பத்து பேர் அதை கடிந்து பேசி சப்தம் எழுப்ப. அதை பார்த்த எங்கள் வரிசையில் முதலில் கடிந்து பேசிய நபர் இப்போது சத்தமாக

“அம்மா தாயி நீ இருக்க மா. நீ இருக்க.” 

என்று கூற…இன்னொரு இளைஞர் அவருடன் சேர்ந்துக் கொண்டு 

“நம்மளுக்கு வந்தா தக்காளி சட்னி அவுங்களுக்கு வந்தா ரத்தம் போல!”

என்று கூறியதும் முதலில் எங்கள் வரிசையில் இணைந்த அந்த ஐம்பது நபர்களும் பேசாமல் அமைதியாக அவர்கள் முன் இணைந்து கொண்டவர்களுக்கு வழி விட்டனர்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றொரு பழமொழி அந்த இடத்தில் பொய்யானது.

அங்கு நடந்தவைகளை கண்ட நாங்கள் அங்கிருந்த குருக்களிடம் புகார் அளிக்க. அவர்களோ யாமறியோம் பராபரமே என்று கைவிரிக்க. காவலாளிகளே இச்செயலை செய்வதால் அவர்களிடம் கூறி பயனில்லை என்றெண்ணி நாங்கள் கோவில் அலுவலகம் சென்று புகார் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் அடுத்த முறை சென்ற போதும் எவ்வித மாற்றமின்றி அதே கூற்று நடந்தேறியது!  இனி யாரிடம் புகார் கூறுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லவும்.

சமயபுரம் கோவில் அதிகாரிகளே! நிர்வாகிகளே! தயவுசெய்து இது போன்றோர்களை கண்டித்து இனியும் இது போல் நடக்காது பார்த்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமென்றால் தனவான்களுக்கென இன்னுமொரு கட்டண வரிசையை அமல் படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களே! கடவுளை காண்பதில் எதற்கு அவசரம். நின்று நிதானமாக சென்று தரிசனம் பெற்று வந்தால் தான் என்ன? உங்களுக்கு காசு கொடுத்த கடவுளை காசு கொடுத்து பாருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் அதிலும் ஏன் ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்குறீர்கள்? அக்கோவிலில் பலர் அங்குமிங்குமாக ஐநூறு கொடுங்கள் ஆயிரம் கொடுங்கள் நாங்கள் உங்களை நேராக கற்ப்பகிரகத்துக்குள்ளேயே அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் மக்களுக்காக இரு வரிசைகளை தான் ஏற்படுத்தி வைத்துள்ளது. அதை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்ற முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுத்து அது படியே நடந்து வந்தால் இது போன்ற ஆசாமிகள் காணாமல் போய் விடுவர்.

அம்பாளை தரிசிக்க இடைத்தரகர்கள் எதற்கு? சிந்தியுங்கள் மக்களே!

-நா. பார்வதி

இத்திரைப்படத்தின் போஸ்டரில் ப்ரித்விராஜின் கெட்அப் பார்த்ததும் இப்படத்தை பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அடுத்து வெளிவந்த டீசர் அதை மேலும் உறுதி செய்யும் விதம் அமைந்திருந்தது. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா‌! அதனால் தான் என்னவோ இப்படத்தை பார்க்க நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது. பார்த்து விட்டேன், ஆனால் இன்னும் அந்த திரைப்படத்தில் இருந்து என் மனம் வெளிவரவில்லை.  அத்தகைய ஓர் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் இந்த உணர்வு உதிப்பது நிச்சயம்.

மலையாள எழுத்தாளர் திரு பென்யாமின் அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
நஜீப் கதாப்பாத்திரத்திற்கு ப்ரித்விராஜை தேர்வு செய்த இயக்குனர் திரு. ப்ளெஸி அவர்களுக்கு எனது முதல் பாராட்டு. ஏனெனில் மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் திரைப்படம் பார்ப்போருக்கு சொல்ல தோன்றும். 

திருமணமாகி இன்னும் சில மாதங்களில் அப்பாவாக இருக்கும் நஜீப் தனது மனைவி மற்றும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று அங்கும் இங்கும் பணத்தை புரட்டி தங்கள் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து மனதில் பல கனவுகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  நஜீப்பின் பக்கத்து ஊர் பையன்  ஹக்கீமும் இவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.

மலையாள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாத நஜீப், அறைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஹக்கீம் ஆகிய இருவரும் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்ததும் திரைப்படம் நம்மை பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கேயே நம்மை இரண்டரை மணிநேரம் கட்டிப்போட்டு விடும் கதைக்கு எனது இரண்டாவது பாராட்டு.

அந்நாடு நஜீப்பையும் ஹக்கீமையும் பிரித்து விட தவித்துப் போகிறார் நஜீப். ஓரே வேலைக்காக சவுதி சென்று இறங்கும் இவர்களை ஏன் பிரிக்கின்றனர்? யார் பிரிக்கிறார்கள்? எதற்காக? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்வதே நன்று. மொழியும் தெரியாது தனித்து விடப்பட்ட நஜீப்பை சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் ஓர் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நஜீப், தான் யாரென்றும் எதற்காக சவுதி வந்திருப்பதாகவும் மலையாளத்தில் விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம் போல் ஒலிக்க…விதி இது தான் என்று மதி சொன்னாலும் மனம் அதை கேட்காது அங்கிருந்து தப்பித்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. கடைசியில் அனைத்து முயற்சிகளும் மணலோடு மணலாக…விதி வென்றது.  அந்த வாழ்க்கையை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி மெல்ல ஏற்க துவங்கும் நேரத்தில் ஹக்கீமை காண நேர்கிறது.  அதிலிருந்து திரைப்படம் நம்மை ஒரு வகையான பதற்றத்திலேயே பயணிக்க வைக்கிறது.

பாலைவனத்தில் ஓர் சோலை வனம் போல் அவ்வப்போது சரியான தருணத்தில் வந்து மறையும் ஃப்ளாஷ்பேக் நஜீப்புக்கும் பார்வையாளர்களுக்கும் அழகான ஓர் காட்சி விருந்து எனலாம்.

தண்ணீரிலேயே வாழ்ந்த ஒருவர் தண்ணீரின்றி தவிக்கும் காட்சியமைப்புகளும் கதையின் ஓட்டமும் அருமை. 

இறுதியில் நஜீப்பும் ஹக்கீமும் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்களா? பாலைவனத்தில் இருந்து வெளியேறுகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆடுஜீவிதம் எந்த ஒரு மனிதனும் கடந்து வரக்கூடாத ஓர் ஜீவிதம். ஆனால் கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஓர் மனிதரின் மறக்க முடியாத ஜீவிதம்.

ஆடுகளும், ஒட்டகங்களும் காட்டும் அன்பிலும் பாசத்திலும் பாதியாவது மனிதர்களுக்கு இருக்குமேயானால் மனிதம் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதை உணர்த்தும் திரைப்படம்.  நல்லுள்ளம் கொண்டர்களும், சுயநலவாதிகளும், தீயகுணமுடையவர்களும்  கலந்திருப்பது தான் நாடும் வீடும் என்பதை காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளனர்.

பணம், பொருள், வசதி வாய்ப்பு இவைகளை வெளிநாடு சென்று ஏற்படுத்திக்கொண்டு ஓரிரு ஆண்டுகளில் ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணி பயணிக்கும் விட்டில் பூச்சிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இந்த படம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நஜீப் என்ற மனிதர் கடந்து வந்த கடினமான பாதையை காட்சிகளாக்கி நம்மையும் அவருடன் பயணிக்க செய்துள்ளனர் படக்குழுவினர்.

ப்ரித்விராஜ் சுகுமாரன் அவர்களின் நடிப்பு திறமை இத்திரைப்படம் முழுவதும் ஜொலிக்கிறது.

இக்கதையில் அமலா பால் அவ்வப்போது வந்து மறையும் அழகிய மின்மினி பூச்சி. 

நஜீப்பின் அம்மா, ஹக்கீம், ஹக்கீமின் நண்பனாக வரும் இப்ராஹிம் கத்ரி மற்றும் சவுதி அரேபியர்கள் கஃபீல், ஜசர் ஆக நடித்துள்ளவர்கள், சிறிது நேரம் வலம் வந்தாலும் பெரிய தாக்கத்தை உருவாக்கும் ஹிந்தி காரர் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்தில் நம்மோடு பயணிக்கின்றனர்.

ஜாதி, மதம், அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பழிக்குப்பழி என்று ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்சிக்கும் விதம் சில காலங்களாக ஒரே பாதையில் பயணித்து வரும் இத்திரையுலகில்… நிறைய நிறை மற்றும் சில குறை என்று இரண்டையும் ஏந்தி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வலம் வரும் ஓர் திருப்புமுனை “ஆடு ஜீவிதம்”. இது போலும் படம் எடுக்கலாம், இதையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் /ஆதரிப்பார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.

“ஆடுஜீவிதம் – பார்வையாளர்கள் மனதை ஆட்டி வைக்கும் ஓர் மனிதனின் ஜீவிதம்.”

-நா. பார்வதி

ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அப்போது அவருடன் அதே அறையில் தங்கியிருந்த நபர் தானாகவே முன் வந்து டீ போட்டு கொடுக்கிறார். உடம்பு சரியில்லாத நபரும் அந்த டீயை வாங்கி குடித்து விட்டு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறார். அத்துடன் மனதார வாழ்த்தவும் செய்கிறார். இவை அனைத்தும் இவர்கள் இருவருக்குள் நடந்த விஷயம் மற்றும் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விஷயம்.

அந்த டீ போட்டு கொடுத்த நபர் அத்துடன் விட்டிருந்தால் அது உதவி செய்தவருக்கும் உதவி பெற்றவருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கும்.

ஆனால் உதவி செய்த நபரின் மன நிறைவு… அதை ஒரு நாலாயிரம் நபர்களிடம், இன்னாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தினால்… அடுப்பு பத்த வைத்து ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதித்ததும் அதில் இஞ்சி, ஏலக்காய், டீத்தூள் சேர்த்து அவையனைத்தும் நன்றாக கொதித்ததும் அதில் பால் மற்றும் சக்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி ஒரு டம்பளரில் ஊற்றி அவருக்கு சூடான டீ போட்டுக் கொடுத்தேன் என்று சொல்லி கொள்வதில் தான் இருக்கிறது. இது தான் இந்த நவநாகரீக யுகத்தின் பெருந்தன்மை  மிகுந்த செயல்!

இவ்வாறான செயல் உதவி பெற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மேலும் உதவி புரிந்தவரின் உண்மையான மனநிலையை சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டும். 

நாம் செய்யும் உதவி மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டுமே அன்றி உறுத்தலாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது.

வேறு சிலர் தண்டோரா ஏதும் போடாது பல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் உதவிய நபர் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். உதவி பெற்றவர் நன்றியுடன் இருக்கா விட்டால் அவ்வளவு தான் உதவி புரிந்தவரின் உண்மையான சுயரூபம் வெளிவரும். நான் அவ்வளவு செய்தேன் ஆனால் அவன் நன்றிக் கெட்டவன் என்றெல்லாம் தூற்றுவார்கள். புலம்புவார்கள். இதுவும் தவறே.

உன்னால் மட்டுமே இந்த நிலையை சரி செய்ய முடியும் அல்லது உன்னால் மட்டுமே இன்னாருக்கு உதவ முடியும் என்று நம்மை இயக்குபவர் நம்மை படைத்த அந்த பகவான். நம்மை உதவும் நிலையில்/உதவி பெறும் நிலையில் வைத்திருப்பதும் அவர் தான். அவர் தான் நம்மில் சிலரை உதவி செய்ய வைக்கிறார். அவ்வளவே! என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமேயானால் நம்முள் இது போன்ற குணங்கள் ஒரு போதும் தலைதூக்காது.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நம் முன்னோர் சொன்னதில் இருக்கும் தத்துவம் இந்த சமூக ஊடக காலத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு புரியுமா? இல்லை புரிந்தும் புரியாதது போல் இதெல்லாம் “சகஜமப்பான்னு” இருக்கிறார்களா!

“உதவி” ஓர் உன்னதமான சொல் மற்றும் செயல்.
ஊடகங்களால் “உதவி”கே உதவி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது என்று தான் சொல்ல தோன்றுகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
உண்மை, நீதி, நெறி, அறம் மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
“கடவுள்” இருக்கிறான் மறந்திடாதே.

படத்தின் தலைப்பை படித்ததும் ஏதோ ஒரு பக்திப் படமா இருக்குமோ என்று நினைத்துவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையில் நம்மை மூழ்க செய்து வாய் விட்டு சிரிக்க வைக்கும் நல்ல திரைப்படம்.

பல த்ரில்லர், சஸ்பென்ஸ், சீரியஸ் மற்றும் ஆக்ஷன் படங்களில் பார்த்த ப்ரித்விராஜை இந்த படத்தில் அப்படியே ஒளித்து வைத்து அவரின் நகைச்சுவை நடிப்பு பக்கத்தை  வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

முன் கோபியான கதாநாயகன் அனந்தன் (ப்ரித்விராஜ்) தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார் . அவர் பெற்றோர் அவரின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர்.  துபாயில் பணிபுரியும் மாப்பிள்ளை விணுவுக்கும் (பாசில் ஜோசப்) மைத்துனர் அனந்தனுக்கும் இருக்கும் நட்பு மிக நெருக்கமானது! ஏனெனில் விணுவை அவனின் காதல் தோல்வியில் இருந்து  வெளி கொண்டு வந்தவர் ஆனந்தன் ஆவார். அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பாசப் பிணைப்பு படிக்கட்டு போல் அவர்களை அந்த பந்தத்தில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதை அடுக்கடுக்கான நகைச்சுவை காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை சிரிக்க வைத்தே புரிந்துக் கொள்ள வைத்துள்ளனர்.

மேலும் தனக்கு உதவிய அனந்தனுக்கு தானும் ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று எண்ணிய விணு துபாயில் இருந்து கொண்டே அனந்தனிடம் பேசி பேசியே பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறான். அதிலும் காமெடியை தெரிக்க விட்டிருக்கின்றனர்.  அதை தொடர்ந்து வரும் காட்சியில் ப்ரித்விராஜ் ஒரு நொடி  மோகன்லாலை போல் பேசி நடித்திருப்பது அபாரம். இறுதி காட்சியில் குருவாயூரப்பன் டச் அற்புதம்.

திருமணத்திற்காக துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து இறங்கும் விணு தன் முன்னாள் காதலியை தான் துளியும் நினைத்துப் பார்க்காத ஓர் இடத்தில், தருணத்தில் சந்திக்கிறான். எங்கே? ஏன்? எப்படி? அவன் திருமணம் நிச்சயித்த படி குருவாயூர் அம்பலநடையில் நடைபெறுகிறதா? அவர்கள் காதல் ஏன் முறிந்தது?  முதல் பாதியில் ஹீரோவாக வலம் வரும் ப்ரித்விராஜ் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறுவது ஏன்? எதற்காக? போன்ற கேள்விகளுக்கான விடையை பல முன்னணி நடிகர் பட்டாளத்தை கொண்டு மிக அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை கதையை, அற்புதமான காட்சி அமைப்பில், மிக நேர்த்தியான மாலையாக்கி…குருவாயூர் அம்பலநடையில்  மாலை சாற்றினான் விணு மாலை மாற்றினான் என்று பாட வைத்து இருக்கிறார்களா இல்லையா? என்பதை
திரைப்படம் பார்த்து,
வயிறு குலுங்க சிரித்து,
மகிழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

“குருவாயூர் அம்பலநடையில்” – குதூகலம், கும்மாளம், கொண்டாட்டம்.

-நா. பார்வதி

அமேசான் பிரைமில் ஏதாவது நல்ல படம் இருந்தால் பார்க்கலாமே என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்ததில் “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்” என்ற ஆவணப்படம் ஒன்றின் போஸ்டரை பார்த்தேன். அட நம்ம ரோஜர் படத்தில் நடித்து இருக்கிறாரா! என்ற எண்ணம் தோன்றவே அந்த போஸ்டரை க்ளிக் செய்து அந்த ஆவணப்படம் எதைப்பற்றியது என்ற synopsis என்று சொல்லக்கூடிய ஆய்வு சுருக்கத்தை படித்துப் பார்த்தேன். பிடித்துப் போகவே அதை பார்க்கத் தொடங்கினேன். நான் பார்த்தது எனது பார்வையில்…இதோ உங்களுக்காக…

டென்னிஸ் கோர்ட்டில் ball boy என்றழைக்கப்படும் சிறுவனாக பந்துகளை எடுத்துக் போட்டுக் கொண்டிருந்த ரோஜர் பெடரர் ஜூனியர் சேம்பியன்ஷிப்பில் ஆரம்பித்து பின்னாளில் பெரிய டென்னிஸ் வீரராக உலகையே கலக்கி பல உள்ளங்களை வென்றவர், டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் லேவர் கோப்பைக்கான போட்டியின் போது உலகிற்கு அறிவித்தார். அத்தகைய ஓர் அறிவிப்புக்கு பன்னிரண்டு நாட்கள் முன் அவரின், அவர் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் உணர்ச்சி பிரவாகம் தான் இந்த 127 நிமிட ஆவணப்படம், “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்”

ஒரு விளையாட்டு, தொழில், பயிற்சி இப்படி எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு கவனம், ஆற்றல், மூச்சுப் பேச்சு, ஊண்உறக்கம் என்றனைத்தையும் அதற்காகவே தியாகம் செய்து அதையே தனதாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் ஓர் நாள் அதிலிருந்து விலக வேண்டி வரும்போது… அந்த நபருக்குள் ஏற்படும் உணர்வலைகளின் தொகுப்பு இந்த ஆவணப்படம் எனலாம்.

இந்த படத்தை பார்த்தால் ரோஜர் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல நல்ல சிறந்த மனிதர் என்பதும் அறியாத பலரும் அறிவர்‌.

பிஜார்ன் போர்க், மெக்கன்ரோ, ரஃபேல் நடால், முரே, ஜோவிக், என்று பல டென்னிஸ் ஜாம்பவான்கள் இப்படத்தில் அவரவர்களின் நினைவலைகளை மிக அழகாக பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

டாக்ஷிடோவுடன் போட வேண்டிய சட்டையை ரோஜர் சூட்டுடன் அணிந்து வருவதை பிஜார்ன் சுட்டிக்காட்ட, ரோஜர் உடனே சென்று சட்டையை மாற்றுவது போன்ற காட்சிகள் மிக எதார்த்தமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.

நடால் மற்றும் ரோஜர் என்ற இரு வீரர்கள், நட்பு வேறு விளையாட்டு வேறு என்ற வேறுபாட்டை உலகிற்கு எடுத்துரைத்த தோடு… விளையாட்டில் எதிராளியாக இருந்தாலும் சிறந்த நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்து, அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.

பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கையிலும், அவர்கள் இருவருமாக இணைந்து ஆடிய இறுதி ஆட்டமான லேவர் கோப்பை விளையாட்டு முடிந்தவுடனும் நடால் அழுகிறார். இருவரும் நட்புக்கு சிறந்த இலக்கணம் ஆவர்.

அவர் ஏன் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறினார் என்பது நாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்துக் கொண்டவை தான் ஆனால் அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கும், அதை கடந்து வருவதற்கும். மீண்டும் விளையாட அவர் எடுத்த முயற்சிகளையும். அதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினரையும், நண்பர்களையும் பற்றிய விரிவான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு தான் இந்த படம்.

ஆவணப்படம் என்று புறக்கணிகாது அனைவரும் காண வேண்டிய படம். ஏனெனில் அவ்வளவு அழகாக ரோஜரின் எண்ண ஓட்டங்களையும், அவரின் ஆரம்ப காலம் முதல் 2022 வரையிலான பல மேட்சுகளின் காட்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கிய விதம் பாராட்டுக்குரியதாகும்.

டென்னிஸ் என்றால் ரோஜர் பெடரர் என்றிருந்த உலகிற்கு இனி நான் இல்லை என்று கூறுவதற்கு அவர் எத்தனை நாட்கள் யோசித்து இருப்பார் என்பதை இந்த படம் பார்க்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் தோன்றும். அப்படி தோன்றிய சில மணித்துளிகளில் அவரின் அந்த செய்தியை அவர் வாசிக்க நாம் கேட்கும் போது நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் உருண்டோடுவதை நம்மால் தவிர்க்க முடியாது.

இந்த படத்தில் ஒரு வரி வரும் “sportsman dies twice” அதாவது விளையாட்டு வீரர்களுக்கு இறப்பு என்பது இருமுறை வரக்கூடிய ஒன்று என்று. என்னைப் பொறுத்தவரை தான் விரும்பி ஏற்றுக்கொண்டு பயணிக்கும் எந்த துறையினருக்கும் இந்த வாசகம் பொருந்தும்.

ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ் – விளையாட்டில் இருந்து
விடை பெறுதல் விளையாடும்
விஷயமல்ல.
-நா. பார்வதி

நடிகனாக வேண்டுமென்ற ஓர் தந்தையின் நிறைவேறாத ஆசையை, அவர் தன் மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைத்து சிறு வயது முதல் மகனின் மனதில் நடிப்பை விதைக்கிறார். அந்த பிஞ்சு மனதில் விதைத்த விதை மெல்ல வளர்ந்து விருட்சமாக, பல ஆசை, கனவு, லட்சியம் கொண்ட ஓர் இளைஞனை உருவாக்குகிறது. மகன் வெற்றியடைந்தால் அப்பாவும் வெற்றி பெற்றதற்கு சமம் என்றிருக்கும் சூழலில் மகன் வெற்றி பெறுகிறாரா? என்பது தான் “ஸ்டார்” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் மிக அருமையாகவும் எதார்த்தமாகவும் நடித்துள்ளார்கள். கதாநாயகனின் தாய், அக்கா, மாமா, அப்பா, நண்பன் என அனைவரும் நாயகனுக்கு தோள் கொடுத்துள்ளனர். நாயகன் கலையின் (கவின்) நடிப்பு சிறப்பு. கதாநாயகிகள் இருவருமே படத்துடன்/கதையுடன் ஏனோ ஒட்டவில்லை.

கனவு கண்டால் மட்டும் வாய்ப்பு என்னும் கதவுகள் திறந்து விடாது
அதற்கான  கடும் உழைப்பு, முயற்சி, தேடல் இருந்தால் தான் நினைத்தது நடக்கக் கூடும் என்பதையும்,

அடுக்கடுக்கான தோல்விகளை எதிர் கொள்பவனால் தான் வெற்றியின் நுழைவாயிலை எட்டியாவது பார்க்க முடியும். ஏனெனில் தோல்விகள் அனைத்தும் முயற்சியின் விளைவுகள் என்பதையும்

வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் நேர்ந்தாலும் குறிக்கோள் மாறாது இருத்தலும் வெற்றிக்கான முயற்சிகளில் ஒன்று என்பதையும்

உணர்த்த முயன்ற “ஸ்டார்” வெற்றியின் வாசல் வரை சென்று யூ டர்ன் போட்டுள்ளார்.

ஏற்கனவே “முகவரி” ஸ்டார் ஆனதால் “ஸ்டார்” முகவரி இழக்கிறார்.

கதையை பல இடங்களில் கரைந்து போகவிடாமல்
தேவையற்ற காட்சிகளை கத்தரித்து
கதை கரு கலைந்து விடாது பார்த்து கொண்டிருந்தால்
பார்வையாளர்களுக்கு “எப்படாப்பா படம் முடியும்!” என்ற எண்ணம் தோன்றாது இருந்திருக்கக் கூடும்.

“ஸ்டார்” – வானில் மினுமினுக்க வேண்டிய நட்சத்திரம் சில மேகங்களால் மறைந்து விடுகிறது.
-நா. பார்வதி





சிறு வயது நந்தினி அழகில் மனதை மயக்கும் மோகினி

குந்தவை – அக நக அக நக முக நகையே!!

ஐஸ் – இந்த தடவை நடிப்பில் கொஞ்சம் நைஸ்!!

மதுராந்தகன் – மந்தம். மனிதர் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.

செம்பியன் மாதேவி – இந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அனாயாசமாக நிற்கும் இறுதி காட்சி எடுபடவில்லை.

பூங்குழலி – அழகும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவள் ஆனால் படத்தில் ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியது ஏனோ! அவள் சேந்தன் அமுதனிடம் ராணியாக வேண்டுமென்று சொல்வதை கல்கியின் கதையை படிக்காதவர்கள் மனதில் “ஓடக்கார பெண்ணிற்கு பேராசையை பாரு” என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. அவளுக்கென்றொரு கதை இருக்கிறது அதற்கு திரையிடப்பட்டிருக்கிறது!

வந்தியதேவன் – வருத்தெடுத்தாலும் வந்து நிற்கும் வல்லவரையன்.

பார்த்திபேந்திர பல்லவன் – வந்தியதேவனும் ஆதித்த கரிகாலனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று நன்கறிந்தும் திடிரென வல்லவரையன் மீது ஏன் பழிபோடுகிறார்! என்பதை கதை படித்தவர்கள் நன்கறிவார்கள். படம் பார்ப்பவர்கள் மனதில் கேள்வி எழ வாய்ப்புகள் அதிகம்.

ஆதித்த கரிகாலன் – விக்ரம் நடிப்பு அபாரம். ஆதித்த கரிகாலனாக அவரது கோபம், நக்கல், காதல், சங்கடம், தவிப்பு அனைத்தையுமே மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் இவரின் இறப்பு பெரிய சொதப்பல் அப்பு!

அருள்மொழிவர்மன் – வாம்மா மின்னல் என்ற நகைச்சுவை காட்சியை போல் அவர் வரும் காட்சிகள் வேகமாக வந்து மறைந்தது. மனதில் நிற்க வில்லை. 

வானதி – அடிக்கடி மயங்கி விழும் கோழை பெண்ணான வானதியும் வீரம் மிகுந்தவள் ஆவாள் என்பதை திரைப்படம் காட்ட தவறியது ஏனோ! முதல் பாகத்தில் குந்தவையுடனே சுற்றிக் கொண்டிருந்த வானதி இரண்டாவது பாகத்தில் ஏன்? எப்படி? தனியாக இருக்கிறாள்?? என்ற கேள்வி திரைப்படம் பார்ப்போருக்கு எழலாம் ஆனால் கதை படித்தவருக்கு தான் விவரம் தெரியும்.

பழுவேட்டரையர்கள்  – வந்ததே சில காட்சிகள் தான். அதிலும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்று பார்ப்போருக்கு குழப்பம் எழச் செய்கிறது திரைப்படம்.

கதையில் மாற்றம் ஏமாற்றம்!
காட்சிகள் பின்னப்பட்டதில் தடுமாற்றம்!
சில விவரங்கள் காட்சி ஆக்காததால் கதைப் படிக்காதவர்களுக்கு எழும் சந்தேகம்
அதனால் முடிவு குழப்பம்
கதை படிக்காதவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதில் இன்றி முடிந்த திரைப்படம்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை ஏந்தி நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தியதால் கடைசியில் பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, அநிருத்தர், நம்பி ஆகிய கதாபாத்திரங்கள் வலுவிழந்து போயின.

இதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று பாராது இயக்குனர் திரு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று வேண்டுமானால் பார்க்கலாம்.
ஆனால் மனதில் பல கேள்விகள் எழலாம்.
மீண்டும் கதையை தேடி செல்ல வேண்டி வரலாம்.
அமரர் கல்கியா இயக்குனர் மணியா என்ற குழப்பம் எழலாம்!

-நா. பார்வதி

நான் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் நான் நேற்றுப் பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி என் மனதில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே.

இப்போ நாம திரு. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்குள் செல்வோம்.
நான் முப்பதாம் தேதியிலிருந்து இந்த திரைபடத்தின் விமர்சனங்கள் எல்லாவற்றையும் படித்து வந்தேன். புத்தகம் வாசிக்காதவர்களுக்கு படம் புரியாது, குழப்பமாக இருக்கும் அப்படி இப்படி என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. படம் நன்றாக தெளிவாக தான் எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனும், ஆழ்வார்கடியானும் மறைந்திருந்து சூழ்ச்சியை பார்க்கும் காட்சி புத்தகத்தில் வந்ததைப் போலவே காட்சியாக்கப்பட்டிருந்ததாக தான் நான் கருதுகிறேன். இது போல சில காட்சிகளை சொல்லலாம். ஆனால் என்றுமே புத்தகத்தில் வந்த ஒரு கதை திரைப்படமாக்கப்பட்டால் அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அவர்களே அதை பொறுப்பு துறப்பில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம் என்று எழுதிக் காட்டுகிறார்களே! அதற்கு பின்பும் நாம் கல்கியின் கதையை அப்படியே திரையில் எதிர்பார்ப்பது முறையல்ல.

இப்படி நமது சோழ வரலாற்றையே மறந்துப்போக கூடிய ஒரு சந்ததி உருவாகும் என்று அந்த பகவான் எண்ணியதாலோ என்னவோ அதை மறந்திடாது வாழ்ந்த மக்கள் இருந்த காலங்களில் எல்லாம் அதை பல முறை முயற்சித்தும் படமாக்க முடியாது போயிற்று போல!! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. ஒரு திரைப்படம் நமது சோழ வரலாற்றின் மீது ஓர் ஈர்ப்பை இப்போதிருக்கும் சந்ததியினருக்குள் புகுத்தியுள்ளதை நான் வரவேற்கிறேன். அதுவும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகளவில் நமது சோழர்கள் பற்றி பறைசாற்றும் விதமாக இப்படம் அமைந்துள்ளது அம்மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை சேர்க்கத்தான் செய்கிறது.

இசை எடுபடவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர காட்சிகளுடன் சேர்ந்து பயணிக்காது அது பாட்டுக்கு தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருந்தது வருத்தத்தை அளிக்கிறது. இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்ற யோசனையை வரவழைக்கிறது.

வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தாது சற்று வருத்தத்தை அளிக்கிறது. உதாரணத்திற்கு “சோழ நாடு” என்பதை சோள நாடு என்று உச்சரிப்பது கேட்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

திரைப்படத்தில் நடித்த ஆண் நடிகர்கள் தொன்னூற்று ஒன்பது சதவீதம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக இருந்தனர் ஆனால் வானதி, நந்தினி கதாபாத்திரத்திற்கு ஒட்டவே இல்லை.

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருக்கலாம் ஆனால் நந்தினியாக அவர்களை மனம் ஏற்கவில்லை. ஏன்னெனில் அவர் ஒரு அழகு பதுமை போல வலம் வந்தாரே அன்றி திரு. மணிரத்னம் அவர்கள் வடிவமைத்த வில்லிக்கேத்த முகபாவங்கள் ஒன்றுமே திரையில் பிரதிபலிக்கவில்லை. அரியணையை பார்க்கும் காட்சியை தவிர வேறெந்த காட்சியிலும் அவர் நடிக்க முயற்சிக்கக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.

துளியும் பாவம் இல்லா முகம் அது
அதில் வில்லத் தனத்தை நாம் எங்கு தேடுவது? (வாசமில்லா மலரிது பாடல் போல பாடித்தான் பாருங்களேன்😜)

பாண்டியனுடன் நந்தினியை பார்த்ததும் கரிகாலரின் நடிப்பு சபாஷ் போட வைக்கும் ஆனால் எந்த உணர்ச்சியும் இல்லாத நந்தினியின் நடிப்பு அந்த முழுக் காட்சியையும் நூலறுந்த காற்றாடி போல சுவாரஸ்யத்தை குன்றச் செய்துள்ளது.

நந்தினி வந்த காட்சிகள் எதுவுமே திரைப்படத்தின் மற்ற காட்சிகளோடு துளியும் ஒட்டவில்லை. அவர் வந்த காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

பழுவேட்டரையர்கள் இருவருமே பக்காவாக பொருந்தி இருந்தனர். ஆனால் பெரிய பழுவேட்டரையர் நந்தினியை கட்டியணைக்கும் போது ஏதோ கடனே என்று செய்ததைப் போல் இருந்தது. அதில் உணர்ச்சி துளியும் இருக்கவில்லை.

ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்த ஜெயராம், சொல்லிக்கொடுத்தை அப்படியே செய்திருக்கிறார். அவர் நடை உடை பாவனை எல்லாமே நன்றாக இருந்தது. மேலும் அவர் நந்தினியிடம் ஒரு செய்தியை தனக்காக கூறும் படி வந்தியத்தேவனிடம் கூறுவதாக தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் இருவரும் மீண்டும் சந்திக்கும் போது வந்தியத்தேவன் நம்பியிடம் ஓலைச்சுவடி பற்றி கேட்பான். அந்த இடம், காட்சி மற்றும் வசனத்தில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. இதை மறுபடியும் பார்த்து தெளிவுபெற வேண்டுமென என் மனதின் எதிரொலி எனக்கு கேட்டது . பார்ப்போம் அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். திரு. ஜெயராம் போன்ற சிறந்த நடிகரை இன்னும் நன்றாக உபயோகித்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

குந்தவையையும் அழகு பதுமையாகவே காட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே நடிப்பும் எட்டிப்பார்க்க முயற்சித்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே. நந்தினி – குந்தவை சந்திப்பில் குந்தவைக்கே என் மதிப்பெண்கள். மேலும் குந்தவையாக நடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ கதாபாத்திரத்தோடு ஒத்துப் போகிறார். அந்த ஒற்றுதல் நந்தினியிடம் மிஸ்ஸிங்.

பூங்குழலியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்ப நன்றாக நடித்துள்ளார். ஆகவே குறை ஒன்றுமில்லை வந்தியத்தேவா. உன் புன்முறுவலும், கேலி, கிண்டலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.

ஆதித்த கரிகாலனாக நடித்த திரு விக்ரம் நடிப்பில் நம்மை சபாஷ் போட வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. நம்பி, அன்னியன், ரெமோ, கிருஷ்ணாவுக்கு இந்த கதாபாத்திரமும் மிகப் பொருத்தமாக இருந்தது. அவரும் அதற்கான நியாயத்தை நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் முன்னாள் கதையை சொல்லும் போது தேவையில்லாமல் கேமிராவை ஆட்டோ ஆட்டென்று அட்டியதாக நான் உணர்ந்தேன். அதை தவிர்த்திருக்கலாமோ!!

இப்போது நமது ஹீரோகிட்ட வருவோம். பொன்னியின் செல்வரும் கைத்தட்டும் விதம் அவரது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். சும்மா அவரைப் பார்த்ததால் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே அவர் வந்த காட்சிகளில் எல்லாம் அவரைச்சுற்றி பலர் இருந்தும் நம் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளார்.

இதெல்லாம் சரிங்க இதுல ஹைலைட்டே எனக்கு வந்த சந்தேகம் தான். திரு. கல்கி அவர்கள் எழுதி நான் படித்த பொன்னியின் செல்வன் கதையில் வந்த நம்ம பொன்னியின் செல்வன் பெயர் அருள்மொழி வர்மன் என்று படித்ததாக தான் ஞாபகம். ஆனால் படத்திலும் சரி அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆங்கில வசன வரிகளிலும் சரி அருள்மொழி என்று திரு. கல்கி அவர்கள் வைத்த பெயரை அருண்மொழி என்று தான் கூறுகிறார்கள் எழுதியும் காட்டுகிறார்கள்! அது ஏன்? என்று நான் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வரிடமே இடைவேளை நேரத்தில் கேட்டேன். எனது அந்த கேள்வி சில மணித்துளிகள் அவருடன் உரையாட ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்குள் திரையரங்கிற்கு அவர் வந்திருப்பதை அறிந்த பலர் புகைப்படம் எடுக்க கூடினர். உடனே நான் அவரைப் பார்த்து அத்துனை நேரம் என்னோடு உரையாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு

“வேயிட்டிங் ஃபார் யூவர் என்ட்ரி” என்று நான் கூறியதும் உடனே அவர்

“இடைவேளை முடிந்ததும் நான் வருவேன் மிஸ் பண்ணாம பாருங்க” என்றார்.

அதற்கு நானும் “ஷுவர் ஷுவர்” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். ஆனால் அதன்பின் என் மனம் திரையில் இல்லை. என்னடா நாம படிச்சப்போ அருள்மொழி வர்மனா இருந்தவரு திரைபடத்துல நடிச்சதும் அருண்மொழி என்று மற்ற நடிகை நடிகர்களுக்கு இயக்குனர்கள் திரைப் பெயர் வைப்பதைப் போல செய்து விட்டாரோ இயக்குனர்!! என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. உடனே கூகுளில் தேடினேன். எல்லா இடங்களிலும் அருள்மொழி வர்மன் என்று தான் பதிவிடப்பட்டிருந்தது. அப்போது நான் படித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்து திரையை நிமிர்ந்துப் பார்த்தால் அருள்மொழி மன்னிக்கவும் திரு மணிரத்னத்தின் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் மும்முரமாக வாள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

அதன் பின் முழு படத்தையும் பார்த்துவிட்டு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு தம்ஸ்அப் காட்டிவிட்டு திரையரங்கில் இருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை என் கணவரிடம் அந்த பெயர் மாற்றத்தைப் பற்றியே புலம்பிக்கொண்டு வந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து பெயரை சரி பார்த்தேன். அப்பாடா நாம சரியாதான் கேட்டு இருக்கோம். ஆனால் இயக்குனர் ஏன் அப்படி அருண்மொழி என்று திரையில் கூறியிருக்கிறார் என்ற குழப்பம் எழ உடனே மீண்டும் கூகுள் பாட்டியிடம் கேள்வியை மாற்றிக் கேட்டேன் அவளோ “அருண்மொழி /அருள்மொழி பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் மணிரத்னம்” என்ற தலைப்பை பளிச்சிட்டாள். ஓ!!! இது ஏற்கனவே கேட்கப்பட்டுவிட்டதா!!! நாம் தான் கவனிக்காம படிக்கத் தவறிட்டோமென்று எண்ணிக்கொண்டே… அப்படி அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று படித்துப் பார்த்தேன். அவர் எதோ சோழர் செப்புத்தகடில் அருண்மொழி வர்மன் என்று தான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளார் என்றும் மேலும் அவர் அளித்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை சரி பார்க்க என்னால் ரூபாய் நாற்பதாயிரம் செலவழித்துக்கொண்டு இந்தியா வந்து ஆராய்ச்சி செய்ய இப்போது தோதுபடாது🙂 அப்படியே வைத்துக்கொண்டோமே/ ஏற்றுக்கொண்டோமே என்றால் திரு. கல்கி அவர்கள் அருள்மொழி என்று எழுதியிருப்பது தவறா!!!! இல்லை அவர் கதையை அச்சடித்து புத்தகமாக தந்தவர்கள் மீது தவறா? இதை யாரிடம் கேட்பது? யாம் அறியோம் பராபரமே!!

இயக்குனரான அவர் அதற்கான என்ன விளக்கம் அளித்திருந்தாலும் சரி, திரு. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினக் கதா நாயகன், நான் படித்த அருள்மொழி வர்மன் என்ற பெயர் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுவே மனதிலும் நிலைத்திருக்கிறது. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் வாழ்க வாழ்க!!

ஒரு திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் இது போன்ற கதைகளை திரைக்கு கொண்டு வருவதென்பது இமாலய முயற்சி. அதை நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அப்படிப்பட்ட முயற்சிக்கு பலே என்று தான் சொல்ல வைத்திருக்கிறது திரைப்படம்.

– நா. பார்வதி

தண்டட்டி அணிந்திருந்தவளுக்கு உரிமையானவன்
இறுதியில் அந்த தண்டட்டிக்காவது உரிமையாவான் என்று எண்ணினேன்!

ஆனால்,

அவன் ஆசைப் பட்ட அவள்
அவனிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்லப்படுகிறாள்!
அவள் ஆசைப்பட்டு கேட்டு,
முதலும் கடைசியுமாக அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த தண்டட்டியையும்
அவன் அவளுடனேயே அனுப்பி வைத்தான்.

தங்கத்தால் ஆனது தண்டட்டி
அதைக் கைப்பற்றிட அலைகிறது பிள்ளைகள் என்னும் கொள்ளைக் கூட்டமடி!
அதைப் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்துதடி!

வழக்கமான காதல் கதையை உருக்கி, சற்று மெருகேற்றி
அதை தண்டட்டிக்குள் வைத்து வழங்கியிருக்கும் விதம் அழகோ அழகடி.

தண்டட்டி அதன் உலோக தன்மையில் மட்டுமன்றி
கதையிலும்
காட்சியமைப்புகளிலும்
சொக்க தங்கமடி❤️
– நா. பார்வதி

தீவிர ரஜினி ரசிகையான நான் எப்போதும் போலவே அவருக்காகவே/அவரை திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க சென்றேன். அவரும் எப்போதும் போலவே என்னைப் போன்ற ரசிகர்/ரசிகைகளை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் இந்த வயசுலையும் அவரு திரையில் வந்தா அங்க வேற யாரையும் நம்ம கண் பார்க்காது. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை விசில் சத்தமும், கைத்தட்டல்களும், தலைவா என்ற கோஷமும் தான் திரையரங்கம் முழுவதும் ஒலித்தது. என்னைப்  பொறுத்தவரை எழுபத்து ரெண்டு வயதிலும் இப்படி ஒரு வரவேற்பு, இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலன்னு நீலாம்பரி இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டான இன்றும் இந்த படத்தில் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

சரி, இப்போ நம்ம இயக்குனர் திரு. நெல்சன் அவர்களின் ஜெயிலர் தியைப்படத்திற்கு வருவோம்.

இந்தப் படத்தில் ரஜினியின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வரும் பாண்டியன், ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம், தம்பிக்கு எந்த ஊரு பாலு, அண்ணாமலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தாத்தாவும் பேரனுமாக அடிக்கும் லூட்டி காண்போரை ரசிக்க வைக்கிறது. பேரனாக நடிக்கும் சிறுவன் ரித்விக் மிக அருமையாக நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.

தனது மகன் இனி இல்லை என்று அறிந்த அந்த தருணம் தலைவர் நடிப்பு தனித்துவம். மேலும் அதனால் உறக்கமின்றி பழிவாங்க புறப்படும் அப்பா அபாரம். யோகிபாபுவுடனான  காம்பினேஷன் கலக்கல். இறுதியில் தப்பு யார் செஞ்சாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சியில் அவரின் நடிப்பில், தான் செய்தது சரி என்றும் அதே நேரம் பாசத்தின் வெளிபாடும் கலந்து வெளிப்பட்டதும் அரங்கத்தில் கரகோஷம் அடங்கவே சற்று நேரம் எடுத்தது. 

அனிருத் இசை அரங்கை அதிர வைக்கிறது.

இடைவேளை வரை விருவிருவென நகர்ந்த படம் அதன் பின் சற்று இழுபறியாக இருக்கிறது என்பது எனது கருத்து. படத்தில் தலைவரின் ஃபிளாஷ் பேக் மிக அழகாகவும் சுருக்கமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.  ஃபிளாஷ் பேக்கில் ரஜினியின் மேக் கப் பிரமாதம்.

கதை என்னவோ மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையின் கதை போல் தான் நகரும். ஆனால் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அந்த ட்விஸ்ட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிய வைத்திருக்கலாம் ஆனால் அதை மேலோட்டமாக காண்பித்து முடித்து விட்டுவிட்டது ஏதோ கதையில் பெரும் தவறு போல் தோன்றுகிறது. மொத்தத்தில் கதையில் ஆங்காங்கே சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.

அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்கணும்…
ஆனா தனித்தனியா இல்ல ஒரே கதையில் எல்லாரும் வரணும் அப்படீங்கறத்துக்காகவே கதை பின்னப்பட்டிருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. மார்வெல் படங்களில் வருவது போல…

திரு. ஜாக்கி ஸ்ராப், திரு. ஷிவ ராஜ்குமார் மற்றும் திரு. மோகன்லால் ஆகியோர் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அவர்களுள் திரு. லால் தான் மனசில் நிற்கிறார்.

திரு. யோகிபாபு அவர்களின் நடிப்பு எதார்த்தம் மற்றும் எகத்தாளம்  நிறைந்ததாக இருக்கிறது. அவர் பாரதியார் சொன்னதாக சொல்வது காமெடியாக இருந்தாலும் அவரை எப்படி அப்படி சொல்ல விட்டார் இயக்குனர் என்று எண்ணி முடிக்கும் போது அதற்கு தக்க பதில் கொடுக்கிறார் தலைவர். அப்போது வாயை மூடும் யோகிபாபு அதன் பின் பாரதியை தொந்தரவு செய்யவில்லை.

வில்லனாக வரும் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் திரு. வினாயகன் நடிப்பு சிறப்பு. தரமான வில்லன் தர்மம் கேட்டு பத்து ரூபாய் வாங்கி நிமிர்ந்து பார்க்கும் பார்வையில் வெளிப்படுத்தும் வஞ்சம் அபாரம்.

ஒரே ஒரு பாடலுக்காகவும், மூன்று சீன்களுக்காகவும் மட்டுமே வரும் தமன்னா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை குறையேதுமின்றி சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் பாவம் படத்தோடு ஒட்டவில்லை.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா…
இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் தமன்னா வரும் அந்த பாடல் “காவாலயா” பெரும் ஹிட் ஆச்சு இல்லையா. அப்போ ஒரு தோழர் அந்த பாடலையும் அதில் திரு ரஜினி அவர்களின் டான்ஸையும் கேலி செய்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ஆக்சுவலி ஏன் ரஜினி அப்படி ஒரு ஸ்டெப் போடுகிறார் என்றும் அந்த பாட்டில் ஏன் அவர் அப்படி ஒட்டாது இருக்கிறார் என்றும் படத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படின்னு படம் பார்த்தவர்கள் பதிவிடுங்கள். வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல.

ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் என்னைப் பொருத்தவரை அந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.

திரு சரவணன் மிக அனாயாசமாக அவர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆனால் அவர் அந்த சிலை கடத்தல் கூட்டத்திற்கு கொடுக்கும் பில்ட் அப் கொஞ்சம் கதையிலும் இருந்திருக்கலாம். கதையை மேலோட்டமாக சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை… சரி என்ன செய்ய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமெனில் சற்று கதையை மேலோட்டமாக தான் காட்ட முடியும் போல!

விடிவி கணேஷ் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார். ஆனால் அவர் வரும் இடத்தில் கதை தான் நம்பும் படி இல்லை. மேலும் ரஜினியின் குடும்பத்தினர் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. நடந்தே பெங்களூர் சென்றுவிட்டதாக கூறுவதையும், வில்லன் வந்து கதவை தட்டி பத்து ரூபாய் பிட்சை கேட்டதையும்  எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்! இப்படியுமா இருப்பார்கள்!

படம் என்ன சொல்ல வருகிறது
மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையை பற்றியா
சிலை கடத்தல் கும்பல் பற்றியா
ஆந்திரா கோவிலில் இருக்கும் அந்த கிரீடத்தின் வரலாறு பற்றியா
பக்கத்து மாநிலங்களின் ஹீரோக்கள் பற்றியா
இல்லை ஜெயிலர் ஆக இருந்தால் அனைத்து பெரும் ரவுடிகளுடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்பது பற்றியா?

மொத்தத்தில் திரு நெல்சன் எழுதி இயக்கிய ஜெயிலரிடம்
லாஜிக் இருக்கு ஆனா இல்ல!
கட்டாயம் மேஜிக் இருக்கு
அந்த மெஜிஷியன் நம்ம தலைவர் தான்.
ஏன்னா மூன்று மணிநேரம் போனதே தெரியலையே!

இது போல் இனி வரும் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து அதில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து திரு அமிதாப் போல் நடித்து வந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயம் இனி இயக்குனர்களுக்கு துளியும்  வேண்டாம். நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தாத்தாவாக காண்பித்தும் ஏற்றுக் கொண்டு விட்டோமே பின்பு எதற்கு ஐயம்.
தாத்தா ஆனாலும் சரி கொள்ளு தாத்தா ஆனாலும் சரி தலைவர் எப்பவுமே தலைவர் தான். அவருக்கு நாங்க எப்பவுமே ரசிகர்கள் தான்.

ஜெயிலர் ஜெயிப்பார்.

-நா. பார்வதி

கணவன் இறந்த பிறகு நிலங்களை விற்று, ஊறுகாய் வியாபாரம் செய்து எப்படியாவது தனது ஒரே மகனை வளர்த்து ஆளாக்க அரும்பாடு படுகிறார் கண்ணம்மா.

அவளின் கஷ்டங்களை சிறிதும் புரிந்துக் கொள்ளாத / புரிந்துக் கொள்ள விரும்பாத மகனாக தனது மகன் இருந்தாலும்,
தாய்மை அவளை பாசம் என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது.
பெற்றவளை தன் வீட்டு வேலைக்காரி என்று பள்ளி நண்பர்களிடம் கூறிய மகனையும் மன்னிக்க வைக்கிறது.
தன்னையும் தன் ஊறுகாய் வியாபாரத்தையும் மகன் வெறுத்தாலும் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்காத தாயாக கண்ணம்மா.

வேதனைகளை மனம் என்னும் கூண்டுக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு வெளியே அப்பத்தாவாக கிராமத்தில் அனைவருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

மகன் நன்றாக படித்து சென்னையில் பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து தன் தாயிடம் கூட சொல்லாமல் தன்னுடன் பணிபுரியும் ஒரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எதிர்த்து ஏதும் பேசாது அதையும் ஏற்றுக் கொண்டு, பேரப்பிள்ளை பிறந்ததும் ஓடிச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியவள் அதன் பின் மகன் வீட்டிற்கு போகவில்லை. அவனும் தன் அம்மாவை வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.

ஊரில் யார் கேட்டாலும் மகன் ரொம்ப பிசி என்றும் தினமும் இரவில் ஃபோனில் தன்னுடன் பேசுவதாகவும் கூறி ஊர் வாயை அடைக்க அவள் பேசும்போது அவளின் மனம் அழுவதை நம்மால் உணரமுடிகிறது.

பின்ன ஊர்வசின்னா சும்மாவா. அவங்க நடிப்பு அப்படி.

இப்படியாக ஊருக்கு வேஷம் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறும் அப்பத்தாவை திடீரென சென்னைக்கு வரும்படி அழைக்கிறான் மகன்.

தனது ஊறுகாய் வியாபாரத்தை தனது தோழியிடம் விட்டுவிட்டு பத்து வருடங்கள் கழித்து
மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் காண போகும் ஆசையை, ஆவலை பலகாரங்களாகவும் ஊறுகாய்களாகவும் கட்டி சுமந்துக் கொண்டு செல்கிறாள் அப்பத்தா.

அங்கே சென்றதும் தான் அவளுக்கு தெரிய வருகிறது அவளை சென்னைக்கு மகன் அழைத்ததற்கான காரணம். அதிர்ந்து போகிறாள். ஆனாலும் அசரவில்லை.

மகனின் வீட்டிற்கும் அவன் வீட்டின் நாய்க்கும் காவலாளி ஆகிறாள் அப்பத்தா. அவளின் சிறு வயதில் அவளை நாய் கடித்ததால் நாய்கள் என்றாலே ஓட்டம் எடுக்கும் அப்பத்தா என்கிற கண்ணம்மா தன் மகன் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் தனியாக எப்படி இருக்கப் போகிறாள் என்பது தான் கதை.

அதை மிக சிறப்பாக கையாண்டு நகைச்சுவையோடு புதைந்து கிடந்த மனச் சுமையை கலந்து மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். எந்த நாயை கண்டு அப்பத்தா பயந்து ஓடினாளோ கடைசியில் அதுதான் அவளுடன் செல்கிறது.

சில அப்பார்ட்மெண்ட் நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஏற்கனவே ஒரு படத்தில் பரிட்சயமான காட்சிகள் தான்.
அதில் முதியவர் இதில் மூதாட்டி! பழைய வீட்டுக்கு அடிக்கப்பட்ட புதிய நிற சாயம் அவ்வளவே.

திரைப்படத்தில் நடித்த அனைவருமே கச்சிதமாக அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து காட்சிகள் அனைத்தும் மலையாளப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் பிரியதர்ஷன். இயற்கை நம்மை கண்ணில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஓவியமாக காட்சியளிக்கிறது.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மகன் என்னத்தான் வெறுப்பு இருந்தாலும் பொதுவில் அப்படி நடந்துக் கொள்வாரா? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது இந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தும். அது படிப்பு, பதவி, இடம், காலம் என எதுவும் பார்க்காது போல! என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.

பாசம் வைத்தால் மோசம் போவோம் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் தன்னலமற்ற உண்மையான பாசம்
என்றுமே மோசம் போகாது என்பதற்கு இந்த படம்
ஒரு சிறந்த உதாரணம்.

மகனுக்காக மெழுகு போல் உருகும்
அப்பத்தா அன்பின் அடையாளம்.

-நா. பார்வதி. பார்வதி



ஒரு கதை கதாநாயகனாக இருந்தால் அந்த திரைப்படம் மணிமகுடம் சூடும் என்பதை எடுத்துரைத்துள்ளார் “மகாராஜா”.

கதையை நகர்த்திய விதம், காட்சிகள் பின்னப்பட்ட விதம், அதை நூடுல்ஸ் போல் சிக்கல்கள் ஏதுமின்றி கோர்வையாக வழங்கிய விதம் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் “மகாராஜா”.

“மகாராஜாவிடம்” நான் கொடுக்க நினைக்கும் மனு ஒன்று தான். அது என்னவென்றால் கதை நன்றாக நகர்ந்தாலும் காரணம் அதே பழைய பல்லவியாக இருப்பது சற்று வருத்தத்தை தருகிறது என்பதாகும். காரணத்தையும் மாற்றியமைத்து இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

ஒருவருக்கு குப்பையாக/தேவையற்றதாக தோன்றும் ஒரு பொருள் அல்லது விஷயம் வேறொருவருக்கு மிகவும் முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதையும் “மகாராஜா” உணர்த்தியுள்ளார்.

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம். அவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
பீட்சாவில் தொடங்கிய பயணம் அவரை மகாராஜாவாக மகுடம் சூட்டிக் கொள்ள வைத்ததிருப்பது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.

நடிகனை கொண்டாடுவதை விடுத்து
கதையை கொண்டாடினால் இன்னும் பல நல்ல திரைப்படங்களை திரையில் காணலாம்.

“மகாராஜா” மனம் என்னும் வனத்தின் அரிமா.
-நா‌. பார்வதி

மார்கழியில்
மலர் விழிகள் அயர்ந்தாலும்
மாதவனின் முக மலர்ச்சியில்
மயங்கிய கோபியர்கள்
மாதவனின் துயில் கலைக்க மனமின்றி
மயங்கி நின்றனர்.

எப்படி…

படித்தவர்களை விட படிக்காதவர்/ படிப்பை பாதியில் நிறுத்தியவர் தான் பெரிய தனவான்களாகியிருக்கிறார்கள் எனவே படிப்பு முக்கியமில்லை என்ற ஒன்றை பரப்பி வந்தனரோ!

அதே போல்…

காசு பணம் பதவி வீடு வாசல் இருந்து என்ன? ஒரு இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதையும் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

படிப்பின்றி உயர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காமல் இருக்கிறார்களா?

இல்லை இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதற்காக பொன் பொருள் வீடு வாசல் என்று வாழாமல் இருக்கிறார்களா?

பின்பு எதற்கு இப்படி ஒரு கூற்று உலா வருகிறது?

தவறு என்பது தெரியாமல் செய்வது
தப்பு என்பது  தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த வேண்டும்
தப்பு செய்தவன் வருந்த வேண்டும்
அவ்வாறு திருந்தவோ /வருந்தவோ செய்யாது
செய்த தவற்றை/ தப்பை எவரேனும் எடுத்துரைக்கும் போது
அதை நியாயப் படுத்த பல யுக்திகளை கையாள்வது
தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமமாகும்
மீண்டும் அதே தவறு/தப்பு தொடர்ந்திடும்.

மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் /வருந்தாவிட்டால் தப்பும்/தவறும் தாண்டவம் ஆடும்🛑

இசைஞானி இளையராஜா அவர்களின் வயதோ எழுபத்து ஆறு
அவரின் இசையோ என்றும் பதினாறு

அன்பு, பாசம், காதல், அக்கறை, பொறுப்பு, ஒற்றுமை என்ற வகையிலும்

குரோதம், கோபம், துக்கம், பொறாமை, அதிர்ச்சி என்ற வகையிலும்

கிண்டல், கேலி, வம்பு, சண்டை, போட்டா போட்டி என்ற வகையிலும்

கும்மி, கதக், பரதம், குச்சிப்புடி, கதகளி, கரகம் என்ற வகையிலும்

அவர் இசையமைத்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம்
அவையனைத்தும் நம் மனதில் பிடித்தது நீங்கா இடம்

இசையே
இசைஞானி இசைத்ததால் தான்
இன்னிசை என்றானதோ!

இசைஞானி பாடியதால்
பாட்டும்
தென்மேற்கு பருவ காற்றாக வீசியதோ!

பூ மாலையே தோள் சேர வா
போன்ற பல பாடல்கள் நம் தோள்களை வருடி சென்ற இளம் தென்றல்

ஒரு பூங்காவனம் புதுமணம் போன்ற பல பாடல்கள் நம்மை அமர்த்தியது இசை என்னும் பூங்காவனத்தில்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல,
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது,‌
தென்றல் வந்து என்னை தொடும்,
சுந்தரி கண்ணால் ஒரு சேதி,
தூங்காத விழிகள் ரெண்டு,
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே,
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு,
வானிலே தேன்னிலா,
இது ஒரு பொன் மாலை பொழுது,
பூங்கதவே தாழ்திறவாய்,
கண்மணியே காதல் என்பது கற்பனையோ,
இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது,
வழிநெடுக காட்டு மல்லி
போன்ற பல ஆயிரம் பாடல்களின்
இசையால்
நம்மோடு என்றும் உறவாடும்
ஓர் ஞானி
நம் இசைஞானி அவர்கள்.

இசை, மொழி, குரல் ஒன்றென கலந்தால் அது பாட்டு
அத்தகைய பாட்டுக்கு ஓர் தலைவர் அவர்
மொழியின்றி, குரலின்றி
மௌன ராகம், புன்னகை மன்னன், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி போன்ற படங்களின்
பின்னணி இசையால் நம்மை கட்டிப்போட்டவர்.
இன்றும் நம்முள் பலரின் கைபேசியின் அழைப்பு ஒலியாக ஒலித்துக் கொண்டிருக்கச் செய்தவர்.

நம் மனதுக்கு மருந்தாக
நம் துக்கத்துக்கு துணையாக
நம் தூக்கத்துக்கு தூணாக
நம் மகிழ்ச்சிக்கு மத்தாப்பாக
நம் வீட்டு விஷேங்களுக்கு விருந்தாக
நம் நட்புக்கு நந்தவனமாக
நம் அன்புக்கு அரவணைப்பாக
அவர் இசை ஒலித்து கொண்டிருந்தது
ஒலித்து கொண்டிருக்கிறது
இந்த பிரபஞ்சம் உள்ள வரையில் இசைஞானியின் இசை எங்கும் என்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.

வகை வகையாக ஆயிரம் இசை வந்தாலும்
இசைஞானியின் இசையை மறைக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது🛑

“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்”

பழைய மொழி என்றாலும் இப்போது நம்மூர் உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையில்  முளைத்திருக்கும் இதன் வகைகளை பார்க்கும் போது “அட ஆமாம்” என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன் தேங்காய் சட்டினி என்றால் அதில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் மற்றும் உப்பு தான் இருந்தது. மெல்ல அதில் பூண்டு சேர்க்கப்பட்டது. இப்போது நம்மூரில் இருக்கும் பெரும்பாலான   உணவகங்களில் இந்த பூண்டு தேங்காய் சட்டினி தான் எல்லா பதார்த்தங்களுக்கும் பரிமாறப்படுகிறது. அதை நம்மவர்கள் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு விட்டார்களா? இல்லை வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா!

பின்பு மெல்ல வட இந்திய உணவான சென்னா மசாலா உள் நுழைந்தது. அதனை தொடர்ந்து சாட் ஐட்டம்ஸ், சப்ஜி, ரொட்டி, நான் வகைகள் என பின்னாளில் அதுவே நமது உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையை ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது உணவகங்கள் மட்டுமின்றி பல திருமண நிகழ்வுகளில் கூட இவைகளே வழங்கப்படுகிறது.

ஆனால் நாம் வட இந்தியாவிற்கு சென்றோமேயெனில் ஒரு சில நகரங்களை தவிர மற்ற எங்குமே நமது தென்னிந்திய உணவு கிடைப்பது மிக மிக அரிதான ஒன்றாகும். எங்கு சென்றாலும் அவர்கள் ஊர் பதார்த்தங்கள் தான் கிடைக்கும். அதே போல் அவர்கள் திருமண விழாக்களில் நமது தென்னிந்திய உணவு வகைகளை புகுத்தாது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளையே இன்றளவும் வழங்கி வருகிறார்கள். அவ்வாறு அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதில் அவர்கள் யாரும் கௌரவ குறைச்சல் என்று எண்ணாததால் தான் இன்றளவும் மாறாமல் இருக்கிறார்களோ? சிந்திக்க வேண்டிய விஷயம்…

வட இந்திய உணவை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற ஆரம்பித்த இந்த “காளான்”, தனது முதல் அடியை சூப்பில் இருந்து துவங்கியது. பின் அதற்கான தனி இடத்தை உணவகங்களின் உணவு பட்டியலில் பெற்றது. இப்போது எங்கும் “காளான்” எதிலும் “காளான்” என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. சென்ற மாதம் நமது சென்னையில் பல கிளைகள் வைத்து இயங்கி வரும் பிரசித்தமான உணவகம் ஒன்றில் மத்திய உணவு உண்ண சென்றிருந்தோம். அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்து காத்திருந்தோம். மீல்ஸ் வந்தது. அதில் ஒன்றில் இந்த மஷ்ரூம் எனப்படும் காளான் இருந்தது. உடனே அந்த ஹோட்டல் மேலாளரை அழைத்து “முதலில் தேங்காய் சட்டினியில் பூண்டு சேர்த்தீர்கள் , பின் வட இந்திய உணவுகளை திணித்தீர்கள் அவைகளை தட்டிக் கேட்காததால்  இந்த காளானை இணைக்க துவங்கியுள்ளீர்களா?” என்று  கேட்டதற்கு, “காளான் ஒரு வெஜிடபிள் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது அதனால் தான் நாங்கள் உணவில் சேர்த்தோம்” என்றார்.

இது என்ன அந்நியாயம்? இதை யாரும் கேட்கவில்லையா? பூண்டு, வட இந்திய உணவு, காளான் ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்றோ அல்லது அவை உணவகங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றோ நான் கூறவில்லை. ஆனால் அவற்றை சேர்ப்பதற்கு முன் உணவருந்த வருபவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பறிமாறலாமே என்று தான் சொல்ல விழைகிறேன்.

இன்னமும் நமது தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகளை மதிப்பவர்களும், உண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த மேலாளரிடம் சொல்லிவிட்டு உண்ணாமல் எழுந்து வந்தோம். இதை, பூண்டு உள் நுழைந்ததும் செய்திருக்க வேண்டுமோ? 

கண்ட இடத்தில் கண்டபடி வளர்ந்து வந்த காளானுக்கு கை கால் முளைக்கச் செய்து சமையலில் ஒரு அந்தஸ்த்தை கொடுத்து கௌவுரவப்படுத்தி வருகின்றனர் நம்ம ஊர் உணவகங்கள். காளான் வளரும் இடத்தை வைத்து அதற்கு வட இந்தியர்கள் வைத்திருக்கும் பெயர் “குக்குர்முத்தா” (இதன் அர்த்தம் தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க).

நமது நாட்டில் நல்ல‌ காய்கறிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? இல்லை நம்மூர் காய்கறிகள் உண்டு அலுத்து விட்டதா? நாம் ஏன் நமது பாரம்பரிய உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்? இல்லை நமது பாரம்பரிய உணவு உட்கொள்வதை கௌரவ குறைச்சலாக நினைக்க வேண்டும்? 

பாரம்பரிய உணவுகளையும், முறைகளையும், கலாச்சாரத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முயன்றால் அங்குமில்லை இங்குமில்லை என்ற திரிசங்கு நிலைமை தான் உருவாகும்.(அது உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உங்கள் உள்ளக் குமுறல் கேட்கிறது) அதற்காக இவைகளை உண்ணக்கூடாது என்றோ இல்லை சுவைக்க கூடாதென்றோ நான் கூறவில்லை. அதை எல்லாருக்கும் திணிக்காதீர்கள் என்று தான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அந்தந்த ஊர் அதன் சீதோஷ்ண நிலை எல்லாம் வைத்துதான் அந்தந்த ஊருக்கான உணவு பழக்கவழக்கங்களை நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.  நாகரீகம் என்ற பெயரில் முன்னோர் வாக்கு, முன்னோர் பழக்கவழக்கங்களை புறக்கணித்து விட்டு இப்போது குதிரைவாலி அரிசி, ராகி என்று கட்டிப்புறல்வதும் ஏனோ! அவற்றை விளம்பரபடுத்தி அதிலும் கலப்படம் செய்ய முயல்வதும் ஏனோ!

தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்ட இந்த “காளான்” நமது உணவகங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது நல்லதா?

வீட்டு உணவே மருந்து. அதை வீட்டில் சமைத்து உண்பதே அருமருந்து.

__________________________________________________________________

புதுமைப்பித்தன் கதைகள்
“செல்லம்மாள்”

கதையின் நாயகியான செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனதும்
உற்றார் உறவினருக்கு ஐநூறு மைல் தூரத்தில் தன்னந்தனியாக அவளின் உயிரற்ற உடலுடன் இருந்த
பிரமநாயகத்துக்கு வியர்வை மழை போல் மேனி முழுவதும் பொழிந்தது
அது பெருக்கெடுத்து ஏரியை உடைத்து பாய்ந்து வரும் ஆறாகவும் மாறியது
இருந்தாலும் அதை துடைத்துக் கொண்டு
சகதர்மிணியின் மரணப் பிரிவினால் நிலைகுலையாது
தன்னவளுக்கு அவளின் துன்பச் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததை எண்ணி அவர் மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.

அப்படி என்ன அவளின் துன்பச் சுமை? எதனால் அவர் அவ்வாறு எண்ணுகிறார்? என்பதை விளக்கும் கதை தான் செல்லம்மாள்.

அவ்வாறு எண்ணி நிம்மதியடைய பிரமநாயகம்  யோகியோ அல்லது போதி மரத்தடியின் ஞானியோ அல்ல
வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்ததில் அவருக்கு ஏற்பட்ட மன பக்குவம்
அவரை அந்நிலையிலும் நிலை குலையாமல் இருக்கச் செய்துள்ளது.

கதை மெல்ல பிரமநாயகத்தின் குடும்ப விவரங்களை விவரிக்கிறது.
குடும்பத்தில் நான்காவது பிள்ளையான பிரமநாயகம் படிப்பில் சுட்டி என துவங்கி அவரது பால்ய பருவத்தை சற்றே மேற்கோளிட்டு காட்டி அப்படியே செல்லம்மாளை கரம் பிடித்த நாளுக்கு நகர்கிறது.

திருமணமான சில நாட்களில் பிரமநாயகத்தின் தகப்பனார் இறைவனடி சேர்கிறார். சொத்தை  பங்குப்பிரித்தல் என எக்காலத்திலும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரே பத்தியில் மிக அழகாக விளக்கி, அவர் செல்லம்மாளுடன் சென்னை வந்து சேர்ந்ததும் பிரமநாயகத்தின் பிறந்த வீட்டின் கதை அத்துடன் நிறைவுறுகிறது.

அதன் பின் பிரமநாயகம் செல்லம்மாள் தம்பதியரின் சென்னை வாழ்க்கை,  அதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள்,  துன்பங்கள், ஏற்ற தாழ்வுகள் மற்றும் செல்லம்மாளின் வியாதி என அனைத்தும் ஒரு சேர அவர்களை அக்னி பரீட்சை செய்ததாக எழுத்தாளர் ஒவ்வொரு விஷயங்களையும் சம்பவங்களையும்  குறிப்பிட்டு இருப்பதை  வாசிக்க வாசிக்க  வாசகர்களும் அவ்விருவரின் உணர்வுகளை உணரும் விதமாக கதை இருக்கிறது.

அதனை தொடர்ந்து, நோய்வாய் பட்டிருக்கும் தன் மனைவியின் எண்ண ஓட்டங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகள், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உபசரனைகள், கணவனுக்கு எதுவும் செய்ய முடியாது இப்படி நோய்வாய்ப்பட்டு கிடக்கிறோமே என்கிற செல்லம்மாளின் மனத்தவிப்பு, அதெல்லாம் ஒன்றுமே இல்லை உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணவனின் கவனிப்பு வாசிப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

பிரமநாயகத்தின் முதலாளி மற்றும் அவர் பிரமநாயகத்துக்கு செய்யும் உதவிகள் பற்றிய விவரங்களையும், மருத்துவர் வருகை, அந்த காலத்தில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி ஊசி போடுவார்கள் போன்ற தகவல்களையும் இக்கதை நமக்கு உரைக்கிறது.

செல்லம்மாள் என்ற பெண்ணை அக்னியை வலம் வந்து மண முடித்த நாளில் இருந்து அவள் தலைக்கு மேல் அக்னி விளகொன்று ஏற்றி வைத்து,
அவள் உயிருடன் இருந்த போதும் அவளுக்கான பணிவிடைகளை செய்த பிரமநாயகம் அவள் உயிரற்ற உடலுக்கும் செய்யவேண்டிய உன்னதமான பணிவிடைகளை செவ்வனே செய்து
அன்று வரை அனைத்தும் அவளென அவளுக்காக வாழ்ந்து
கதையின் தலைப்பையும்  செல்லம்மாளுக்கு தாரைவார்த்து கொடுத்தாலும்
வாசகர்கள் மனதில் பிரமநாயகம் தான் பிரம்மிப்பூட்டும் வகையில் இடம்பெற செய்துள்ளார் எழுத்தாளர்.

மேலும், ஒரு பெண்ணை  திருமணம் செய்து அவள் வாழ்வு நறுமணமாவதற்கு ஒவ்வொரு ஆணும் வெளியே அவர்கள் படும் பாட்டையும் அதை மனைவியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாது அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அவர்களின் மனதையும்
அந்த பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஏற்ற தாழ்வுகளையும்
அவற்றை எதிர்கொள்வதனால் அவர்கள் மனம் அடையும் பக்குவத்தையும்
அதனால் அவளுக்கு அவன் செய்யும் பணிவிடைகளையும்
அது அவளின் இறுதி காலம் வரை நிலைத்திருப்பதையும் மிக மிக அழகாக எழுதி சிறப்பான சிறுகதையாக நமக்கு வழங்கி நமது வாசிப்பை ஓர் உணர்வு பிரவாகமாக மாற்றும் நம் புதுமைப்பித்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்‌.

இந்த கதையை படிப்பவர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும். இந்த காலத்து பிள்ளைகள் இதை படித்தல் நல்லது. ஏனெனில் இந்த கதை அவர் எழுதியது 1933 டூ 1948க்குள் இருக்கும். அந்த காலத்திலேயே ஒரு பெண்ணை/ மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. இது நிச்சயம் அவர் அறிவுரையாக சொல்வது போல் கதைப் படித்த எனக்கு தெரியவில்லை. அந்த காலத்தில் இப்படித்தான் நடத்தியிருப்பார்கள் அதை பார்த்ததால் தான் அவர் இவ்வாறு எழுதி இருப்பார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த காலத்திலும் அதாவது  2024 ல் கூட மனைவியை எப்படி நடத்த வேண்டும் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த கதை எழுதி சுமார் 75 அல்லது 90 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே தன்னை நம்பி கரம் பிடித்தவளை
இயற்கை பிரிக்கும் வரையும்
அவளை
இயற்கையோடு இணைக்கும் வரையும்
அவளை மணமுடித்தவன் நடந்துக்கொள்ளும் பாங்கை மிக எளிய உரைநடையில் சில வர்ணனைகளுடன் ஓடைநீர் போல் அமைதியாக  அவ்வப்போது சில சலசலப்புடன் நகரும் கதை இது.

வாசித்தால் நேசிக்க வைக்கும்.
பாசத்தால் யோசிக்க வைக்கும்.
யோசித்தால் தற்கால நடப்புகளை எண்ணி வருந்த வைக்கும்.
வருந்தினால் மனம் திருந்த வைக்கும்.
திருந்தினால் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.

என்று புதுமைப்பித்தன்  கதைகள் என்ற நூலில் இருந்து  நான் படித்த செல்லம்மாள் என்ற கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.  படித்து பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்வது
உங்கள் சகோதரி நா. பார்வதி.
     

🙏நன்றி🙏

பலர் பலவிதமாக முகநூல் பற்றி தொடர்ந்து எழுதி /விவாதித்து / கருத்து தெரிவித்து வருகிறார்கள். முகநூல் பழக்கத்தால் பலர் வாழ்க்கையே மாறியுள்ளது என்றும், பலருக்கு தொழில் அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்றும், இதனால் சிலர் வாழ்க்கை வீணாகிறது என்றும் பல வகையான பதிவுகளை நாம் வாசிக்க நேர்கிறோம். அவை அனைத்தும் அவரவர் கோணத்தில் இருந்து பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி நூறு சதவீதம் உண்மையாக தோன்றலாம். நியாயமாகவும் தோன்றலாம். நன்மையும் தீமையும் கலந்தது வாழ்க்கை மட்டுமல்ல முகநூலும் / சமூக ஊடகங்கள் அனைத்தும் தான். பிரித்தறிய தெரிந்தால் வாழ்க்கையும் முகநூலும் /சமூக ஊடகங்களும் சிறப்பானதாகவே அமையும். ஏன் நான் வாழ்க்கையையும் முகநூலையும் இணைத்து எழுதியுள்ளேன் என்பது உலகறிந்த விஷயம்!

அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இருக்கும் பல முகநூல் குழுமத்தில் ஏதாவது ஒரு தலைப்புக் கொடுத்து அதை ஒட்டி எழுதச் சொல்வது அல்லது ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடையளிக்க சொல்வது மற்றும்  சினிமா/ சினிமா பாடல்கள் பற்றிய பல போட்டிகள் என களைகட்டி வருகிறது.

அதில் பலர் கலந்துக் கொண்டு பல பதில்களை அளித்து உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். ஆனால் ஒரு குழுவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வெகு சிலரே பதிலளித்துள்ளனர். ஏன் இதற்கு சிலர் மட்டும் பதிலளித்துள்ளனர்? என்ற கேள்வியை என் மனம் என்னிடம் கேட்டது.

மேலும் ஒருவர் அவரை நினைத்து அவரே பெருமை பட்டுக்கொண்ட தருணங்கள் /விஷயங்கள் என்று பலருக்கு பல இருக்கலாம். அவ்வாறு ஒருவர் அவரைப் பற்றியே பெருமை பட்டுக்கொள்வது சரியா? இல்லை தவறா? என்ற கேள்வி ஒரு குழுவில் “உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒரு விஷயம் என்ன?” என்று கேட்டபோது என் மனதில் எழுந்தது. இதில் என்ன தவறு. நம் பெருமை நமக்கு அறியா விடில் பின் எவர் அறிவார் என்ற பதிலும் பட்டென உதித்தது.

நாம் செய்யும் ஒரு நற்செயல் அல்லது நாம் உரைக்கும் நற்சொல் நமக்கு ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கும். ஏதோ ஒரு உத்வேகம் தரும். இன்னும் இதே போல் நிறைய செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டுமென்று தோன்ற வைக்கும். தீயது மட்டும் போதை அல்ல நல்லதை செய்வதும்/நல்லவர்களாக இருப்பதும் ஒரு வகையான போதை தான். அதை நம் வாழ்வில் ஒரு முறை கடைப்பிடித்து விட்டால் அதன் பின் அது நம்மை தொடர்ந்து செய்ய தூண்டும் என்பது எனது கருத்து. இவ்வகையான போதை நம்மை மேம்படுத்துவதோடு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதுவே நல்லவற்றின் நற்பண்பு. மற்றவர்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களை உயர்த்திப் பேசவும் தயக்கம் காட்டாத நாம்! (அதனைச் செய்யாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை விட்டுவிடுவோம்) ஏன் நமக்காக நாமே ஒரு விஷயத்தை செய்து கொள்வதற்கோ அல்லது நம்மை பற்றி நாமே உயர்வாக நினைப்பதற்கோ அல்லது  பேசுவதற்கோ மட்டும் அடுத்தவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கின்றோம்! ஏனென்றால் அப்படி செய்தாலோ / பேசினாலோ நாலு பேர் நம்மை பற்றி என்ன சொல்லி விடுவார்களோ! நம்மைப் பற்றி அந்த நாலு பேர் தவறாக நினைத்து விடுவார்களோ போன்ற எண்ணங்கள் தான் நம்மை பற்றி நாமே சொல்லிக் கொள்ள விடாமல் தடுத்து விடுகிறது.

அப்படியே பேசி விட்டாலோ அல்லது எழுதி பதிவிட்டாலோ உடனே தற்பெருமை என்று சிலர் கூற வாய்ப்புகள் நிறைய இருக்கிறது (பல முகநூல் பக்கங்களில் எழுதப்படும்  பின்னூட்டங்களை படித்த அனுபவம்). அவர்களை சொல்லி தவறில்லை.
ஆனால் ஒருவரின் அருமை பெருமைகளை அவரவரே தெரிந்து வைத்து கொள்வதால் நம்மை நாமே அறிந்துக் கொள்வதற்கும், அதை எண்ணி மனமகிழ்வதற்குமான ஓர் நல்வாய்ப்பாகும் என்பதை மறுக்கலாகாது.  நம்மை பற்றி நாம் பெருமை படக்கூடிய விஷயங்களை நாமே அறிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்தால் எப்படி மற்றவர்கள் நம்மை பெருமை படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியும்!

ஒரு வேலைக்கான நேர்காணலில் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் சொல்வார்… இல்லை இவர் சொல்வார்… அல்லது எனது அருமை பெருமைகளை என் நண்பனை வைத்து கூற வைக்கிறேன் என்ற பதில் உரைத்தால் வேலை கிடைக்குமா? அப்போது அந்த நாலு பேரை பற்றிய சிந்தனை ஏதுமின்றி கடகடவென நம்மைப் பற்றி நாமே பேசுவதில்லையா என்ன?

பெண்ணாக பிறந்ததற்கு எனக்குள் எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஏதோ முன்பொரு ஜென்மத்தில் மாதவம் செய்ததால் கிடைத்த இந்த பிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் எப்படி இருப்பது! பொறந்தாலும் பொம்பிளையா பொறக்கக்கூடாது…அப்படின்னு எல்லாம் நான் பாடியதும் இல்லை இனி பாட போவதும்  இல்லை.

நல்லதை தட்டிக்கொடுத்து வளர்த்து, தீயதை தட்டி வைத்து ரூல்ஸ் ராமானுஜி /ஸ்ட்ரிக்ட் சிந்தாமணி (சிலர் கடுப்பில்/ சிலர் எரிச்சலில் / வெகு சிலரே ஆத்மார்த்தமாக கூறுவர்) என்ற பெயர் பெற்றதில்/பெறுவதில் எனக்கு பெருமை தான். வழவழ கொழ கொழ என்றெல்லாம் பேசியதில்லை அவ்வாறு பேசவும் வராது. முகஸ்துதி பாடி பழக்கமில்லை.  புறம் பேசுதல் அறவே பிடிக்காது. அதனாலேயே என்னிடம் பேச ஒன்றுமிருக்காது என்று பல பேர் நெருங்கி பழக மாட்டார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மாறாக நான் வித்யாசமானவள் என்ற எண்ணம் தான் எனக்குள் தோன்றும். அதில் தவறென்ன இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னுடன் பொது விஷயங்கள் பேசுபவர்களோடு மட்டும் பேசி மகிழ்வேன்.

உள்ளதை உள்ளபடி சொல்வதில் சங்கடம் ஆயிரம் இருப்பினும் அப்படி சொல்லிவிட்டால் பிற்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை பொய்யுரைக்கும் பலர் அறிந்திராத ரகசியம் என்றே சொல்ல வேண்டும்.

நம்மால் முடிந்த உதவியை செய்து வருவதையும், நல்லதை நாம் செய்தால் நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதையும், தவறிழைத்தால் (நாம் மனிதப்பிறவி தானே) எவ்வித கூச்சம் /கர்வம்/ தயக்கம் இன்றி அது யாராக இருந்தாலும் (வயதில் சிறியவராக இருந்தாலும்) மன்னிப்பு கேட்பதையும், நாம் நாமாக இருப்பதையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்து நடந்துக் கொள்வதையும், நமது பொறுமையையும் (இதெல்லாம் மனிதர்களிடமிருந்து மெல்ல மாய்ந்துக் கொண்டிருக்கும் நற்குணங்கள்) எண்ணி நம்மை நாமே ஏன் பெருமையாக எண்ணிக் கொள்ளக்கூடாது!

ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் பல தோல்விகள், வெற்றிகள், துரோகங்கள் என கடந்து வந்து இருப்போம் இல்லையா! அப்படி கடந்து வந்த சிலவற்றை/ சிலரை பல முறை பொறுத்து கடந்து சென்றும் இருப்போம். நாட்டுக்கே எல்லை கோடு வகுத்து வைத்திருக்கும் போது நமது பொறுமைக்கும் எல்லை வகுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதை ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது யாராவது ஒருவர் தாண்ட நேர்ந்தால் அதன் பின் அந்த நிகழ்வு அல்லது அந்த மனிதரிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அவ்வளவு மெல்ல விலகி சென்று விடுவதே நல்லது என்பது தான் எனது பாலிசி.

என்னைப் பொறுத்தவரை முதல் முறை செய்தால் அறியாமை, இரண்டாம் முறை செய்தால் தவறு, மூன்றாவது முறையும் அதையே செய்தால்/சொன்னால் அது தவறுக்கும் மேலே (வேண்டுமென்றே செய்வது). இது உண்மையா இல்லையா?

அவ்வாறு  பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவர்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாவார்கள்.  அப்படி இருந்தால் நமக்கென நாலு பேர் இருக்க மாட்டார்கள் என்றும், நாம் தனித்து விடப்படுவோம் என்றெல்லாம் கூற பலர் இருப்பார்கள். 

அவ்வாறு சொல்பவர்களில் பலர் தனக்கென தனித் திறமையும், சிந்தனையும், கருத்தும் இருந்தாலும் ஒரு கொடி போல் அடுத்தவரை சார்ந்தே (அந்த நாலு பேருக்காக) அனைத்தையும் செய்வதால் தனி மரமாக வளர முடியாது கொடி போல் தனக்கு தேவையானவர்கள் மீது தொத்திக் கொண்டு படர்வதோடு, தனித்திருக்கும் மரத்தின் மீதும் படர்ந்து அதை வேரோடு சாய்க்க முயல்வர்.  அத்தகையோர் சொல்லை நாம் என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மேலும், யார் அந்த நாலு பேர்? நல்லது செய்தால் /பிரச்சினையை தவிர்க்க ஒதுங்கி செல்வதால் தனித்து விடப்படுவோமெனில் நான் தனித்து பயணிக்கவே விரும்புவேன். நீங்கள் எப்படி என்று பின்னூட்டம் இடுங்கள்?

“துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று நம் முன்னோர் கூறிய காலத்தில் துஷ்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்துள்ளனர். ஆனால் இப்போது!!!

நமது நல்ல குணங்கள் என நாம் பெருமைப்பட்டுக் கொள்வது நம்மை நாமே ஓரளவு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதற்கான சான்றாக தான் நான் கருதுகிறேன். இதில் தவறேதும் இருப்பின் நம்மைப் படைத்த அந்த கடவுள்/ நம்மைப் பெற்றெடுத்த நம் தாய் தந்தை/ நாம் பெற்ற நம் பிள்ளைகள்/ காலநேரம் / நம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் உணர்த்தினால் அல்லது எடுத்துரைத்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து இன்னும் நம்மை பற்றி நாம் அறிந்துக் கொண்டு, நம்மை நாம் நல்வழியில் செதுக்கிக் கொள்வோம்! நம்மை நினைத்து நாமே பெருமை பட வேண்டிய பட்டியலில் இணைத்தும் கொள்வோம்.😊

இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் அவரவரிடம் இருக்கக்கூடிய நல்லதை எண்ணி மார்தட்டிக் கொண்டும், தீயதை மாற்றி கொண்டும், நம்மை நாமே நல்வழி படுத்திக்கொண்டால் நம் வீடும் நாடும் சிறந்து விளங்கும். நம் வாழ்க்கை நம் கையில்.🙏

– நா. பார்வதி

மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். எனது இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போதும், அதன் பின் குறுஞ்செய்தி மற்றும் கைப்பேசியில் என்னை அழைத்தும்,  “இழுக்கும் மாயோள்” அப்படின்னா என்ன? என்றும் அதை ஏன் கதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறீர்கள்? என்றும் சிலர் என்னிடம் கேட்ட கேள்வியை எனது முகநூல் நண்பர் ஒருவர் எனது முகநூல் பக்கத்தில் இன்று கேட்டுள்ளார். அது மட்டுமல்ல கதைக்கு ஏன் எழுத்தாளர் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்? என்றும் எதனால் அப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கக் கூடும் என்றும் முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலும் சொல்லி, அதுவாக தான் இருக்கும் என்று நினைப்பதாக விழாவில் கூறினார். அவரது கணிப்பு சரி தான்.(பிழையாக வாய்ப்பு உண்டா என்ன?)  என்றாலும் அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டிய கடமை கதையை எழுதிய எனக்கு இருக்கிறதல்லவா. இதோ அதற்கான எனது விளக்கம்…

“இழுக்கும் மாயோள்” – மாயன், மாயோன் என்ற பெயர்கள் எல்லாம் கிருஷ்ணர், கண்ணன் அல்லது திருமாலை குறிக்கும் பெயர்கள் இல்லையா. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எனது கதையில் மாயோன் செய்த மாயைகளை மாயோள் செய்கிறாள்‌. எனது நண்பரை போலவே மாயோள் ன்னா? அப்படின்னு  கேட்டவர்களும் உண்டு. மாயோள் என்றால் பெண், கருநிறமுடையவள் என்று பொருள்படும்.

அதாவது கருங்கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பத்தை வெளிக்கொண்டு வரும் வித்தகன் போல் வெளிவர முடியாதவாறு மறைந்திருக்கும்  உண்மையை/ ஓர் அழகிய சிற்பத்தை ஒரு புத்தகம் மூலம் வெளிக்கொண்டு வருவதே எனது மாயோள் செய்யும் மாயம்.
அவளின் மாயையில் வாசகர்கள் இழுத்துச் செல்லப்படுவது  நிச்சயம்.

கதைக்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கான விளக்கத்தை விளக்கி அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறேன்
என்ற நம்பிக்கையில்
உங்கள் சகோதரி…
நா. பார்வதி
🙏நன்றி🙏

கடவுளின் அருள், பெரியவர்களின் ஆசி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்து என அனைத்தும் ஒன்று சேர்ந்து “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீட்டு விழாவை சிறப்புற செய்தது என்பதை எனது வலைத்தள வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்தமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என முத்தமிழும் ஒன்றாக இணைந்திருந்த மேடையில் நான் நின்று பேசுவதற்கே என்றோ எங்கோ மாதவம் செய்திருக்க வேண்டும். இதில் முத்தமிழின் முத்துக் கரங்களால் எனது புத்தகம் வெளியிடப்பட்டது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடந்தேறியது என்றால் அதற்கான அனைத்து சிறப்புகளும் விழாவுக்கு வருகை தந்து புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினர்களையே சேரும்.

கலைமாமணி திருமதி. பாரதி திருமகன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. திருமகன், முனைவர் திரு. கலைமகன் மற்றும் அவர் குழுவினர் என அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, “இழுக்கும் மாயோள்” கதைக்கு ஓர் கதை இயற்றி, கதையில் வரும் கதாபாத்திரங்களில் திருமதி பாரதி திருமகன் அவர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தை விவரித்து, அதில் அவர் மனதை தொட்ட விஷயங்களையும், ரசித்த பக்கங்களையும், கதை சொல்லாமல் சொன்ன கருத்துக்களில் அவர் விரும்பிய கருத்துக்களையும் மிக அழகாக வில்லுப்பாட்டில் இசைத்து, பாடி, வாழ்த்தி பார்வையாளர்களை நெகிழ வைத்ததோடு, மகிழ்ச்சியில் என் கண்களையும் நனைய செய்தார்.

கலைமாமணி முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கதையின் உரைநடை வடிவம் பற்றியும், கதையில் அவருக்கு மிகவும் பிடித்த வரிகளையும், கதையை முடித்திருந்த விதத்தையும், தலைப்பை பற்றியும் சில பிரபலமான சிறுகதைகளை அதற்கு எடுத்துக்காட்டாக கூறி, அத்துடன் சில விமர்சனங்களையும் எடுத்துரைத்து அனைவரும் ரசிக்கும் படியாக சிறப்புரையாற்றினார். இத்தகைய மேதையின் சொற்பொழிவுகளை நேரில் கேட்க வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் சில மணி துளிகள் என்றாலும் அவரின் சிறப்புரையை அரங்கில் இருந்து கேட்கும் நல் வாய்ப்பு கிடைத்ததற்கும், எனது “இழுக்கும் மாயோள்” புத்தகத்திற்கு ஓர் சிறந்த மனிதரிடம் இருந்து சிறப்புரை கிடைத்ததற்கும், நானும் என் புத்தகமும் பாக்கியம் செய்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நாடக எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர், கோமல் தியேட்டர் நிறுவனர் திருமதி. தாரிணி கோமல் அவர்கள், “இழுக்கும் மாயோள்” புத்தக வாசிப்பு அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் கீழே வைக்க விடாது முழுவதும் வாசிக்கச் செய்த கதையின் விறுவிறுப்பு தன்மையையும், கதையின் இறுதி ட்விஸ்ட் பற்றியும், அதில் வந்த கருப்பு நிற பட்டாம்பூச்சிகள் அன்று இரவு முழுதும் அவர் கனவில் வந்ததையும், இழுக்கும் மாயோள் கதை நல்ல வெப் சீரிஸ் எடுக்கத் தக்கதாக இருப்பதாகவும் கூறி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நெறியாளுநர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்து தந்தார் டாக்டர் திருமதி பிரபா குருமூர்த்தி. பல விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தகாரரும், நமது கலைமாமணி திரு. டி. ஆர். மகாலிங்கம் ஐயா அவர்களின் பேத்தியுமான திருமதி பிரபா குருமூர்த்தி அவர்கள் நடத்தி வரும் சூரியா ஸ்கூல் ஆஃப் மியூசிக் (ஃபார் ஸ்பெஷலி ஏபுள்டு சில்ரன்) மாணவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியோடு இந்த புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.

முத்தமிழின் மூன்று முத்துக்கள்
மூன்று முத்துக்களின் முத்தான சிறப்புரைகள்
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்
அவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணங்கள்
என அனைத்தும் சேர்ந்த அழகிய பூங்கொத்து
எனது “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீடு.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

மண்ணின் தாகம்! வருணனின் தானம்.

இந்த மண்ணுக்கு ஏன் இவ்வளவு தாகம்?
அந்த வருணனுக்கு ஏன் இவ்வளவு பாசம்?

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்.

வருணன் மண்ணின் மீது கொண்ட அதீத அன்பை மழையாய் பொழிகிறார்.
அவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பரிமாற்றத்திற்கு பெரும் தடையாய் மனிதர்களை நினைக்கிறார்!

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
இடையில் இந்த ஜனம்!

ஏரி, குளம், குட்டை, மண் சாலை என அனைத்தும் ஆனது கான்கிரீட் நந்தவனம்!
மண்ணை தேடி அவர் செல்ல வேண்டி இருக்கிறது தொலைதூரம்!
அதனால் வருணன் மனதில் எழுந்தது கோபம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
தடைகளால் எழுந்த கோபம்!

செல்லும் வழியெல்லாம் குப்பைக் கூடம்
மக்காத குப்பைகளும் அதில் அடக்கம்!
மண்ணின் தாகத்தை தணிக்க வருணன் செய்த பாச தானம்
தடையாக இருந்த கான்கிரீட் நந்தவனம்
குவியலாக இருந்த மக்காத குப்பைக் கூடம்
அடித்து சென்றார் அனைத்தையும்
அனைத்தும் குடியேறியது ஒவ்வொரு வீட்டின் நடுக்கூடம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
பெருக்கெடுத்து ஓடும்!

நடு வீட்டிற்குள் நுழைந்தது மழைநீர் மற்றும் குப்பைக்கூடம்
மக்களின் ஐயோ அம்மா அலறல் சப்தம்
ஒலித்தது எட்டுத்திக்கும்
அதை கேட்டு கலங்கியது வருணனின் மனம்
உடனே அங்கிருந்து வெளியேற துடித்தது அவர் உள்ளம்
வேறு வழி ஏதும் இல்லாததால் கடல் மற்றும் கூவத்தில் ஆனார் ஐக்கியம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
வீணாகிறது வருடாவருடம்!

இப்போது சேமித்து வைக்காத ஒவ்வொரு கனம்
அடுத்து வரும் கோடை காலம் தண்ணீருக்காக அண்டை நாட்டவரிடம்
கையேந்தும் நிலை உருவாகும்
திருந்தாத ஜனம்!
மண்ணும் மழையும் என்ன செய்ய முடியும்! பாவம்!

இயற்கையின் தானத்தை ஏற்று, மதித்து, பாதுக்காக்க தெரியாத மனிதம்!
நிலைமையை புரிந்துக்கொண்டு விழிப்பது எக்காலம்!

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்
வீணாய் போனது இப்போதும்.

சக்தி மனதில் நடந்த பட்டி மன்றத்தின் முடிவு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தீர்ப்பானதும் அவள் அதை ஜேம்ஸிடம் இருந்து தப்பிக்க அவனிடம் குக்கீஸ் தட்டை நீட்டி மீண்டும் குக்கீஸ் எடுத்துக்க சொல்லி வலியுறுத்திக் கொண்டே,

“அது இருக்கட்டும் ஜேம்ஸ் அதை உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன். சொல்லுங்க. சரி நீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட முதல் கணவர் அவங்களை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்கார்னு சொன்னீங்களே அது எப்போ நடந்த சம்பவம்?”

சக்தி அந்த பொக்கிஷம் விஷயத்தை தன்னிடமிருந்து மறைக்க நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளை அவள் போக்கில் சென்று விஷயத்தை தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து,

“மொத்தத்துல அந்த பொக்கிஷம் என்னன்னு சொல்ல மாட்டீங்க.
ஆங்! சரி இப்போ அதை விட்டு விடுவோம். 
என்ன கேட்டீங்க சக்தி?
மிஸ்ஸர்ஸ் டேவிட் சம்பவம் எப்போ நடந்ததுன்னு தானே!
அது நடந்து ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏன்! நீங்க நியூஸ் பேப்பர்ல எல்லாம் பார்த்திருப்பீங்களே.”

“எங்கேந்து! நான் இந்த ஊருக்கு வந்தது எம்.எஸ் படிக்க.
அதுக்கப்புறம் வேலை.
அப்படி இப்படீன்னு பார்த்தா…
நான் இந்த ஊர்ல கடந்த அஞ்சாறு வருஷமா தானே இருக்கேன்”

“ம்…அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”

“ஏன் அப்படி அந்த மனுஷன் செஞ்சாறாம்?”

“சக்தி…அதுவும் அரசியல் தான்.”

“ஓ! சரி நேத்து அவங்க வீட்டு பின்வாசல் கதவு ஏன் தொறந்து இருந்துச்சு?
அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“ம்‌…அது அந்த வீட்டில் வேலை பாக்குற அந்த ஜான் பையனின் அஜாக்கிரதையால நடந்திருக்கு.”

“அப்படியா!
அவன் என்ன செஞ்சான்?”

“வேலையை முடிச்சிட்டு பின் வாசல் கதவை பூட்ட வந்தவனுக்கு அவன் கேர்ள் பிரெண்ட் கிட்டேந்து கால் வந்திருக்கு…
அய்யா அதுல முழுகி கதவை திறந்து போட்டுட்டு அப்படியே ஃபோன்ல பேசிகிட்டே அவன் கேர்ள் பிரெண்ட பார்க்க போயிருக்கான்.”

“அச்சச்சோ! அப்போ நான் கேட்ட அந்த சத்தம்?”

“வீட்டு கதவு திறந்து இருந்ததும், ஒரு பெரிய பூனை வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு…
அந்த நேரம் பார்த்து நீங்க வாசல் கதவை தட்ட…
அது பயந்து வந்த வழியே வெளியே ஓடிருக்கு.”

“சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்தது?”

“எல்லாம் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வீட்டு சிசிடிவி கேமரா மூலமா தான். அப்புறம் அந்த வேலைக்கார பையன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க.
உண்மை வெளிய வந்துது.”

“சூப்பர்.
நானும் எங்க ஓனர் கிட்ட சொல்லி சிசிடிவி பிக்ஸ் பண்ண சொல்லணும்.
எவ்வளவு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு பாருங்க.”

“அது என்னமோ உண்மை தாங்க.”

“சரி சரி பார்த்தீங்களா நான் கேட்ட கேள்விக்கு உங்களை பதில் சொல்ல விடாம அடுத்த கேள்வி கேட்க போய் மொதோ கேள்வி பதில் இல்லாம இருக்கு. அதையும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…”

“ஓ மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் சார்ல்ஸ் விஷயமா!! அது தான் சொன்னேனே அதுவும் அரசியல் தான். ஆனா அதுலேந்து எப்படியோ தப்பிச்ச மிஸ்ஸர்ஸ் சார்ல்ஸ் பின்னாளில் டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் தான் இப்போ அவங்களோட கணவரும் அவங்களோட கல்லூரி நண்பருமான மிஸ்டர் டேவிட்டை கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க.”

“அம்மாடியோ!
ஏதோ பெரிய இடம்ன்னு நாம நினைக்கிறோம் ஆனா அதுக்குள்ள இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு இல்ல!”

“ஆமாம் சக்தி எல்லார் வாழ்க்கையும் அப்படி தான்.
வெளியே தெரியுறது உண்மையான வாழ்க்கை இல்ல.
அவங்கவங்க பணக்காரன், ஆரோக்கியமானவன், ஆசிர்வதிக்கப்பட்டவன்,  அன்பானவன், உதவிபுரிபவன் அப்படின்னு அழகு அழகான முகமூடிகளை போட்டுட்டு வலம் வந்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்.
எனக்குள்ள எவ்வளவு புதைந்து கிடக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதே போல் உங்களுக்குள்ள எவ்வளவு புதைந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  ஏன்னா நாம ரெண்டு பேருமே முகமூடி போட்டுட்டு தான் பழகறோம்.”

“ம்…ஒரு விதத்துல பார்த்தா நீங்க சொல்லறது சரிதான்.
ஆனா பொதாம் பொதுவா எல்லாரும்ன்னு நாம சொல்லிட முடியாது.
சொல்லவும் கூடாது.
நமக்குள்ளேயும் உண்மையான முகத்தோடு வாழறவங்க இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சரி நீங்க சொன்ன விபத்து வருடம் அப்பறம் மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த சார்ல்ஸ்க்கும் நடந்த கல்யாணம் எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா அவன் தான் இவனா இருப்பானோன்னு எனக்கு தோணுது.”

“எவனா! எவன்?”

“என்ன நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க?”

“இல்ல புரியலை சக்தி.
நீங்க கேட்டத வச்சு தான் நான் கேட்டேன்.
வேற யாரு உங்ககிட்ட கேட்டா?”

“அது…அது வந்து.
ஆங்!
நான் கேட்டதையே நீங்களும் கேட்டவை தான் நான் அப்படி சொன்னேன்.”

“சரி இருக்கட்டும்.
இப்போ தெளிவா யார பத்தி சொன்னீங்கன்னு சொல்லுங்க.”

“எங்க காலேஜ் கடைசி நாள்ல நடந்த விஷயத்தை பத்தி சொன்னேன் இல்லையா!”

“ஆமாம் சொன்னீங்க.
அதுக்கு?”

“அதுல ப்ரொபஸர் சேவியர் செய்த அந்த மனிதன் போலவே இருக்கும் ரோபோ விஷயம் எனக்கும் பிஎச்டி மாணவனான பீட்டருக்கும் மட்டும் தான் தெரியும்ன்னும்.
அதை அவனோடதுன்னு சொல்லி அவன் உரிமை கொண்டாட, அதை தடுக்க நினைத்த ப்ரொபஸரை அன்று அந்த இரவு அந்த கோலத்திற்கு உள்ளாக்கியதும் அந்த பீட்டரும் அவன் அப்பாவின் அரசியல் பின்னணியும் தான்னு சொன்னேன் இல்லையா!”

“ம்…ஆமாம் சொன்னீங்க.
ஆங்! இருங்க இருங்க…
இப்போ நீங்க என்ன சொல்ல வரேங்க ன்னா…
அந்த பிஎச்டி மாணவன் பீட்டர்,
இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த அரசியல்வாதி சார்ல்ஸுக்கும் பொறந்த  மகனா இருப்பானோன்னு கேட்க வறீங்க சரியா!”

“ஆமாம்.
அதே தான்.
இதைத் தான் நேத்து ராத்திரிலேந்து எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன்.”

“நீங்க நினைக்கிற மாதிரியே தான்.
இந்த சார்ல்ஸோட மகன் பீட்டரும் நீங்க படிச்சதா சொன்ன அதே கலேஜ்ல தான் படிச்சிருக்கான்.
சோ உங்க யூகம் சரிதான்.
ஆனா அதுக்கு நீங்க ஏன் பதற்றமாகணும்?”

“இல்ல…
ப்ரொபஸரை ஒரு வாரம் வச்சு துன்புறுத்தி,
அவருக்கிட்டேந்து என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு…”

“தெரிஞ்சுகிட்டு? என்ன சக்தி?”

“என்னை அன்னைக்கு கடத்திருப்பானோ?”

“அப்படிங்கறீங்களா?
ஆனா அவன் தான் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட் ல பெராலிஸ் வந்து படுத்து படுக்கயாய் இருக்கான்.
அவனோட சிகிச்சைக்காக டாக்டர்ஸ் அன்ட் நர்ஸ் எல்லாரும் அவன் வீட்டோடு இருக்காங்க.
இந்த நிலையில் அவன் பண்ணிருக்க வாய்ப்பில்லன்னு சொல்ல முடியாது ஆனா வாய்ப்புகள் கம்மி.”

“ஓ! அதுனால தானா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட பையன் இந்த ரெண்டு வருஷமா அவங்கள பார்க்க வரலையா?”

“இருக்கலாம்.”

“ஆனா…இவங்களும் மகனை பார்க்க போனதில்லையே!”

“அது ஏன் அவங்க தான் சொல்லணும்.
இல்லாட்டி…அந்த அரசியல் வாதி அவங்களை பார்க்க விடாமல் செய்திருக்கலாம்.”

“இருக்கும் இருக்கும்.
அந்த பீட்டர் என்னைவிட நாலு வயசு தான் பெரியவன்.
அவனுக்கு இப்படி ஆனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்…
அவன் எங்க ப்ரொபஸருக்கு செஞ்சதை நெனச்சா…
அவனுக்கு இது தேவை தான்னு மனசு சொல்லுது.
நானும் மனுஷி தானே!”

“ம்…புரியுது சக்தி.”

“இப்போ மிஸ்ஸர்ஸ் டேவிட்  எங்க தான் போயிருக்காங்க?
உங்களுக்கு தெரியுமா?”

“ஆமாம்.
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல…
அந்த சார்ல்ஸ் அன்ட் பீட்டர் சேர்ந்து அவங்கள ஏதாவது செய்துட்டாங்களோன்னு பயம் வருது. அதுதான் கேட்டேன்.”

“அவங்க இப்போ அவங்க மகனை பார்க்க தான் போயிருக்காங்க சக்தி.”

“ஆங்! அப்படியா!”

“ஆமாம்.”

“என்ன இத்தனை வருஷம் போகாதவங்க…
திடீர்ன்னு போயிருக்காங்க?
என்னவா இருக்கும்”

“அதை எல்லாம் நினைச்சு குழப்பமாகாதீங்க சக்தி.
நேத்து நியூஸ் பேப்பர் நீங்க படிக்கலையா?”

“எங்கேந்து.
இல்ல படிக்கலை.
ஏன்?”

“அதை படிச்சிருந்தா நீங்க இன்னும் குழம்பி போய் இருப்பீங்க.”

“அப்படியா? அப்படி என்ன நியூஸ் வந்தது.”

“அந்த சார்ல்ஸோட ஒரே  மகன்…
அதாவது சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு பெண்மணி மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு பொறந்த மகனான பீட்டரின் உயிர் ரெண்டு நாள் முன்னாடி அவன் உடலை விட்டு பிரிந்தது.”

“அச்சச்சோ! பீட்டர் இறந்துட்டானா?”

“எஸ் சக்தி.
அதுக்கு தான் மிஸ்ஸர்ஸ் டேவிட் அவசர அவசரமா யார்கிட்டேயும் சொல்லிக்காம போயிருக்காங்க.”

“ச்சே!
நான் ரொம்ப மோசம்.”

“ஏன் அப்படி?”

“பின்ன! அவங்க, அவங்க மகன் இறப்புக்கு போயிருக்காங்க…
ஆனா நான், எனக்கு இப்படி நடந்ததுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருககுமோன்னு யோசிச்சேன்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
அவங்க வந்ததும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.”

“சரி யோசிச்சீங்க.
விடுங்க.
நாம யோசிக்கிறதுக்கெல்லாம் வருத்தப் படணும்னா…
நான் எவ்வளோ யோசிச்சிருப்பேன்…
எத்தனை பேரை சந்தேகப்பட்டிருப்பேன்.
அப்போ நான் எப்படி போய் அவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கறது! ம்…”

“அது உங்க தொழில்.
அதுல தப்பில்ல.
ஆனா நான் அப்படி இல்லையே!”

“அட போங்கங்க.”

“சரி அப்படிப்பார்த்தா…
உங்க சந்தேகம் தப்புன்னு ஆயிடுச்சு.
என் சந்தேகம் தப்புன்னு ஆகலை ஆனா சந்தேகப்பட்ட நபர் இப்போ உயிரோடு இல்ல.
அப்படின்னா என்னை கடத்தியது பீட்டர் தான்னும் அவன் இறந்துட்டான்னும் இந்த கேஸை முடிஞ்சிடுமா?”

“நான் சந்தேகப்பட்ட ருத்ரா இல்லன்னு ஊர்ஜிதம் ஆகிடுச்சு.
ஆனா இப்போ நீங்க சொன்ன சம்பவத்தை வச்சு இந்த கேஸை அப்படி எல்லாம் மூடிட முடியாது
ஏன்னா அந்த பையன் பெரிய அரசியல் புள்ளியின் மகன்.  அது பீட்டராக இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனா அவன் உயிரோடு இல்லைனாலும்…
அந்த டாக்டர் வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?
அந்த ரெண்டு நர்ஸுகளுக்கு ஏன் அப்படி நடந்தது?
இதுக்கெல்லாம் பதில் வேண்டாமா?
அதுக்கும் இறந்து போன பீட்டருக்கும் இல்ல அவன் அப்பனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இதெல்லாம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல என் நண்பன் கட்டிக்க போற 
உங்களுக்காகவாவது அன்னைக்கு நடந்தது என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்.”

“ம்…அப்போ ருத்ராவும் இல்ல, மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் இல்ல, பீட்டரா இருக்க வாய்ப்பிருந்ததுன்னு சொல்லுறீங்க சரி.
ஆனா எங்க ஆஃபிஸ் கேன்டீன் ஸ்டாஃப் அந்த ஜானை விட்டுட்டேங்களே!”

“அவனை தேடிட்டு தான் இருக்கோம்.
நிச்சயம் எங்ககிட்ட மாட்டுவான்.”

“சரி…உங்க காலேஜ் கடைசி நாள் இரவு நடந்த சம்பவத்தை சொன்னீங்களே!  உங்க ப்ரொபஸர் சேவியரை அந்த நிலைமைக்கு தள்ளியது அந்த பீட்டர் தான்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?
இல்ல அவனா இருந்திருக்க ஏதாவது க்ளூ ஆர் எவிடன்ஸ் உங்க கிட்ட இருக்கா?”

“ஆங்! அப்படி எதுவும் என்கிட்ட இல்லை.
எனக்கே அன்னைக்கு மிட் நைட்ல எங்க ப்ரொபஸர் சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் தெரிய வந்துது.”

“சரி…
அதுக்கு முன்னாடி எப்பவாவது உங்க ப்ரொபஸருக்கும் அந்த பீட்டருக்கும் இந்த பேட்டென்ட் விஷயமா பிரச்சினை வந்திருக்கா?
அப்படி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”

“இல்ல…
அப்படி எதுவும் அதுவரை நடந்ததா…
எந்த நியூஸும் வரலை.
எனக்கும் தெரியாது.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“சோ…உங்க ப்ரொபஸருக்கு அப்படி ஆனது பீட்டரால தான்னு உங்களுக்கு உங்க ப்ரொபஸர் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது உங்கிட்ட சொன்னது தான்.
இல்லையா!”

“எஸ். யூ ஆர் ரைட்.”

“அதுவரைக்கும் அந்த சேவியருக்கும் பீட்டருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லைன்னும் நீங்க தான் சொன்னீங்க.
ஆனா எப்படி அன்னைக்கு திடீர்ன்னு உங்க ப்ரொபஸர் சொன்னதை மட்டும்  அப்படியே நம்பினீங்க?”

“நீங்க சொல்லுற மாதிரி அன்னைக்கு என் ப்ரொபஸர் சேவியர் சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவுமில்லாம அந்த பீட்டர் பெரிய அரசியல்வாதி புள்ளை வேறயா அதுனால எல்லாத்தையும் மூடி மறச்சுட்டாங்களோன்னு நானே நெனச்சுக்கிட்டேன்.”

“ம்…இப்படி யோசிச்சு பாருங்க…”

“எப்படி?”

“பீட்டர் அரசியல்வாதி பையன் அப்படீங்கற விஷயத்தை ஏன் உங்க ப்ரொபஸர் யூஸ் பண்ணிருக்கக்கூடாது?”

“புரியலை ஜேம்ஸ்.
அவர் ஏன் அப்படி பீட்டர் பெயரை யூஸ் பண்ணணும்?
அதுவுமில்லாம அன்னைக்கு அவர உயிர் போற நிலைமைக்கு தள்ளியது யாரு?”

“அதோட உங்க கேள்விகளை நிப்பாட்டிடாதீங்க சக்தி.
அவர் ஏன் உங்களை கடைசியாக சந்திச்சதுக்கப்புறமா… விஷால் சொன்னதா நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட் படி ஒரு வாரம் உயிரோடு இருந்திருக்கார்?
எங்க இருந்திருக்கார்?
ஒரு வாரம் தான் இருந்தாரா?
இல்ல இன்னமும் இருக்காறா?”

“அய்யோ! இது என்ன புது குழப்பம்.”

“இல்ல நீங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க சக்தி.
அன்னைக்கு நைட் உங்களை மயானத்துக்கு வரவைத்து உங்களை பதற்றமாக்கி, பீட்டர் பின்னணியை உபயோகப்படுத்தி அவர் சொன்னதை எல்லாம் உங்களை நம்பி வைத்திருக்கக் கூடாது?”

“பட் வை?!
நீங்க சொன்னா மாதிரியே வச்சுக்கிட்டாலும்…
பின்ன ஏன் அவரோட அந்த பொக்கிஷத்தை என்கிட்ட எடுத்துக்க சொல்லணும்.
அவரே வச்சிருக்கலாமே!
அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவர் உயிரோடு இருந்திருந்தா இல்ல இன்னமும் உயிரோடு இருக்கார்ன்னா…
ஏன் அதை தேடி அவர் வரலை?”

“ம்…நவ் யூ ஆர் கம்மிங் டூ தி பாயிண்ட்.
இப்போவாவது சொல்லுங்க அந்த பொக்கிஷம் என்னது?
அதை அவர் சொன்ன இடத்துக்கு போய் எடுத்தீங்களா?
இப்போ அது உங்ககிட்ட தான் இருக்கா?”

“அது…அது வந்து…அது…”

“சக்தி நீங்க இந்த விஷயத்துல என்னை நம்பித்தான் ஆகணும்.
அப்போ தான் ஏதாவது நான் செய்ய முடியும்.
நீங்க அன்னைக்கு இரவு நடந்ததா சொன்ன கதைப்படி அல்லது உங்க ப்ரொஃபசர் உங்கிட்ட சொன்னது படி பீட்டர்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா…
அதுக்கு எவிடன்ஸ்?
ஏன்னா
நீங்க காணாம போனது போலவே!
அதைப் பத்தியும் எந்த நியூஸும் வெளிவரவே இல்லையே!
இதுலேந்தே தெரியலையா?
என்னை பொறுத்தவரை…
எனனோட யூகப் படி அன்னைக்கு உங்க காலேஜ் கடைசி நாள் முதல் 
யாரோ…
எதுக்காகவோ…
உங்களை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த மர்ம நபர் யார்?
உங்களுக்கே தெரியாம நீங்க அந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ள மாட்டிட்டு இருக்கீங்க.”

“இல்ல…இல்ல…இல்ல…
அப்படி எந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ளேயும் நான் மாட்டிக்கவும் இல்ல.
அப்படி எல்லாம் மாட்டிக்கவும் மாட்டேன்.”

“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் சக்தி.
ரிலாக்ஸ்…

ஜேம்ஸ் சொன்னவற்றை எல்லாம் கேட்ட சக்தி நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிப்புக்குள்ளானாள்.

தொடர்வாள்…

ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் தனது படுக்கை அருகே இருந்த லைட் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு படுத்தாள் சக்தி.  பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போல இருந்தாலும், அவற்றிற்கு பின் ஏதோ ஒரு வியூகம் பின்னப்பட்டு  கொண்டே வருவதை போலவும் அவள் மனம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மனக்கண் முன் படம் போட்டு காட்டியதில், உறக்கம் வராமல் வலது புறம் இடது புறம் என புரண்டு புரண்டு படுத்தாள்.

அவ்வாறு தூக்கமின்றி புரளும் போது அவளுக்கு சட்டென மிஸ்ஸர்ஸ் டேவிட் மகன் பெயர் ஞாபகம் வந்தது. உடனே தனது மொபைலை எடுத்தாள். அதில் ஜேம்ஸிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தாள். மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். பின்பு

“அவன் தான் இவனா? அப்படின்னா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட்? ஐயய்யோ! யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகிட்டே போகுதே! ஆண்டவா அன்னைக்கு எனக்கு என்னதான் நடந்தது?”

என்று தனக்கு தானே  பேசிக்கொண்டாள். அதே சிந்தனைகளில் மூழ்கியவள் முத்தேதுமின்றி குழப்பம் என்னும் முட்டு சந்தில் மோதி நின்றாள். யோசித்து யோசித்து அவளுக்கே தெரியாது உறக்கம் என்னும் யோக நிலையை அடைந்தாள்.

மறுநாள் காலை விடிந்ததும்‌ வழக்கம் போல ப்ளூ அவளருகே வந்து அவளை எழுப்பியது. ஆனால் இந்த முறை அவள் டூ மின்ட்ஸ் என்று டைம் கேட்கவில்லை. மாறாக விருட்டென எழுந்து கொண்டு ப்ளூவை பார்த்து

“அவனா இவன்?”

என்று கேட்டாள். அதை கேட்ட ப்ளூ அவளையே உற்றுப் பார்த்து

“எவனா! எவன்?”

என்று கேட்டது. ப்ளூவின் பதிலை கேட்டு சக்தி சலித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை பார்த்த ப்ளூ விடியற்காலையில் அவளின் சலிப்புக்கு காரணமறியாது விழித்தது. சக்தி வெளியே வந்து  ஏதாவது சொல்வாள் என்றெண்ணி சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தது. ஆனால் அவள் வரவில்லை என்றதும் பாத்ரூம் அருகே சென்று,  தான் கீழே செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

சக்தியும் குளித்து ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். அதைப் பார்த்த ப்ளூ அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் ஒன்றுமில்லை என்ற பதிலை சொல்லிவிட்டு வழக்கமான ரெண்டு பிரட் டோஸ்ட் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

சக்தி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட ப்ளூ மெல்ல அவளருகே சென்று,

“தீ… தீ…
நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு எனக்கு தெரியுது.”

“சரி ஓகே! தெரிஞ்சுகிட்ட இல்ல. இப்போ என்ன அதுக்கு”

“இல்ல என் கிட்ட பகிர்ந்துக்குறதால   உன் குழப்பத்துக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…ன்னா 
என்கிட்ட சொல்லு நான் ஏதாவது சல்யூஷன் தர முடியுமா…ன்னு பார்க்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ளூ.
ப்ளீஸ் லீவ் மி அலோன்.”

“ஓகே.
தென் இட்ஸ் அப் டூ யூ.
நான் வரேன்.”

“எங்க போற ப்ளூ.”

“இப்போ நீ தான் உன்னை தனியா விட சொன்ன…
அதுதான் நான் இங்கேந்து என்னோட சார்ஜிங் ஸ்டேஷனுக்கே போகலாம்னு கிளம்பிட்டேன்.”

“ம்‌…அதுவும் சரி தான்‌.
நானா கூப்பிடாத வரைக்கும் நீ இங்க வர வேண்டாம்.
அங்கேயே இரு ப்ளூ.
சரியா.”

“முன்னெல்லாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவ…
ஆனா இப்போ எல்லாம் என்னை போ போன்னு சொல்லுற!!”

“அது அப்படி இல்ல ப்ளூ.
எல்லாம் உன் நல்லதுக்கும்…
என்னோட நல்லதுக்கும் தான் அப்படி சொல்லறேன்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ப்ளூ.
நான் ஆல்ரெடி ஏதேதோ நினைச்சுக்கிட்டு ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன்.
ப்ளீஸ் டிரை டூ அன்டர்ஸ்டான்ட் மி.”

“அச்சோ! தீ.
உன்ன நல்லா அன்டர்ஸ்டான்ட் பண்ணிருக்கறதால தான் நான் உன்கிட்ட அப்படி கேட்டேன்.”

“புரியுது ப்ளூ.
ஆனா அதுக்கான எக்ஸ்பிளநேஷன் குடுக்குற நிலைமையில இப்போ நான் இல்ல.
உன்கிட்ட எப்போ சொல்லணும்னு எனக்கு தோணுதோ அப்போ நிச்சயம் உன்கிட்ட நானே வந்து சொல்லுவேன்.
ஓகே வா.”

“ம்…சரி தீ.
நான் பேஸ்மென்ட் போறேன்.
நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்.
பை.”

“குட் பாய் ப்ளூ.
ஐ லவ் யூ.
பை ஃபார் நவ்‌.”

என்று ப்ளூவை இறுக்க கட்டியணைத்துக் கொண்டு சக்தி கூறியதும். ப்ளூ அங்கிருந்து கிளம்பி சக்தி வீட்டு பேஸ்மென்ட்டில் இருக்கும் அதன் சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று செட்டில் ஆனது. இரவு சரியாக தூங்காத சக்தி, காலை உணவை அருந்தியதும் அப்படியே அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டே தனது மொபைலில் வந்த அவளது ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதிலளித்தாள். பின் அந்த சோஃபாவின் இருபுறமும் போடப்பட்டிருந்த சைட் டேபிளில்,  சக்தியின் தலைமாட்டில் இருந்த ஒரு ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தாள். அதில் அவள், நவீன் மற்றும் மிருதுளா இருந்தனர். அந்த புகைப்படம் போன வருடம் நவீனும் மிருதுளாவும் சக்தியை காண மெட்ஸ் வந்தபோது காத்தெட்ரெல் ஆஃப் செயின்ட் ஸ்டீஃபன் முன் நின்று எடுத்ததாகும். அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

“அப்பா அம்மா எனக்கென்ன நடக்கறதுன்னே புரியலை.
நான் எந்த தப்பும் செய்யலை.
நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.
இருப்பேங்கள்.”

என்று கூறிக்கொண்டே மெல்ல கண் அசந்தளாள். சற்று நேரத்தில் அவள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் அவள் எழவில்லை. மீண்டும் ஒலித்தது. அது சக்தியின் உறக்கத்தை கலைத்தது. உடனே எழுந்து வேகமாக வீட்டின் கதவை திறந்தாள்.

“ஹாய் சக்தி.
என்ன காலையிலே தூங்கறீங்களா?
சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ!”

என்று கேட்டுக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை வீட்டிற்குள் வரச் சொல்லி, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமரச் சொன்ன சக்தி அங்கே அவள் உண்டும் குடித்தும் வைத்திருந்த தட்டு மற்றும் காபி கப்பை எடுத்து அடுப்படியில் வைத்துக் கொண்டே ஜேம்ஸிடம்

“ஜேம்ஸ் வாட் வுட் யூ லைக் டு ஹால்?
காபி, டீ ஆர் ஜூஸ்?”

“காபி வுட் டூ சக்தி.”

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”

என்று கூறியது போலவே இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு ட்ரேயில் ஒரு கப் காஃபி மற்றும் குக்கீஸுடன் வந்த சக்தி, அதை ஜேம்ஸ் முன் வைத்து,

” ம்…எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.”

என்றாள். ஜேம்ஸும் வலது கையில் ஒரு குக்கீஸையும் இடது கையில் காபி கப்பையும் எடுத்துக் கொண்டே

“உங்களுக்கு?”

“இப்போ தான் நான் குடிச்சேன்.
நீங்க வந்த போ தான் குடிச்ச காபி கப் அன்ட் டோஸ்ட் சாப்ட்ட ப்ளேட் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே போனேன்.
நீங்க சாப்பிடுங்க.”

“ஓகே.
ம்…காஃபி இஸ் குட்.
குக்கீஸ் டூ.”

“தாங்க்ஸ் ஜேம்ஸ்.
நேத்து நைட் உங்க மெஸேஜ் படிச்சதுலேந்து எனக்கு தூக்கமே வரலை.
சொல்லப் போனா நான் நேத்து சரியாவே தூங்கலை.
அதுதான் இன்னைக்கு காலையிலேயே சோஃப்வுல சும்மா படுத்தேன்.
அப்படியே தூங்கிட்டேன்.”

“இல்ல சக்தி.
சில விஷயங்களை மஸேஜஸ் ல விவரிக்க முடியாது.
நேருல தான் சொல்ல முடியும்.
அப்படி சொல்லறது தான் நல்லதும் கூட.
அதுனால தான் நான் இப்போ வந்தேன்.
அதுவுமில்லாம நானும் நேத்து நைட் புல்லா சரியாவே தூங்கலன்னு வச்சுக்கோங்க!!”

“ஏன் ? இந்த கேஸ் பத்தி ரொம்ப நேரம் ஏதாவது யோசனையில இருந்தேங்களா?
இருக்கலாம்! இருந்திருக்கலாம் தான்!
ஏன்னா என்னை சுத்தி நடக்கறது என்னனென்னே தெரியாத எனக்கே தூக்கம் வராதப்போ…
அதை டீல் பண்ணற உங்களுக்கு எப்படி இருக்கும்.
புரியறது.”

“அச்சச்சோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.
எல்லாம் நம்ம ருத்ராவால தாங்க.”

“என்னது ருத்ராவாலையா?”

“இல்ல இல்ல…
இந்த கேஸுக்கும் அவங்களுக்கும் எந்த கனக்ஷெனும் இல்லைங்கறது எனக்கு ஊர்ஜிதமாகிருச்சு.
ஏன்னா அவங்க வாங்கினதா சொன்ன அந்த ஜூஸ் ஷாப் அன்ட் அவங்கள விசாரிச்சு பார்த்ததுன்னு…
எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்ததுல தெரிஞ்சுது.”

“அப்புறம் ஏன் ருத்ராவாலன்னு சொன்னீங்க?”

“அது வந்து…
அவங்க நேத்து கால் பண்ணினாங்க.
அவங்க என்னங்க படு ஒப்பன் டைப் ஆ இருக்காங்க.
படபடபடன்னு அவங்க கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்ன்னு எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிட்டங்க.”

“அவ அப்படி தான்.
கொஞ்சம் வெகுளி வேற.
அவளோட இந்த குணத்த நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க.
அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.
ஆனாலும் அவ கொஞ்சம் கூட தன்ன மாத்திக்கவே இல்ல.
ஆனா அடிப்படைல அவ தங்கமான பொண்ணு.
அதுனால தான் நீங்க என்கிட்ட அன்னைக்கு அவளை விசாரிக்கணும்ன்னு சொன்னப்போ நான் அவ செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன்.
ஆனாலும் வசுவோட பேச்சு அன்ட் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்னையும் அவள சந்தேகப்பட வச்சுடுத்து.
என்ன செய்ய.
இப்போ நீங்க சொன்னதும் அவள்ட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்னு தோணறது.”

“உண்மை தான்.
அவங்க ரொம்பவே வெகுளியா இருக்காங்க.
ஆனா அவங்க கிட்ட பேசினது லேந்து அவங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ப்ளீஸ் ஜேம்ஸ்.
அவளோட நல்ல ஃபிரெண்டா சொல்லறேன்.
உங்களுக்கு அவளை பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காட்டாலும்  சரி…
எதுவானாலும் அவ கிட்ட சொல்லிடுங்க.
இல்லாட்டி அவ பாட்டுக்கு மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிடுவா.
இன்நேரம் ஆரம்பிச்சிருப்பா.”

“இல்ல இல்ல என்னோட விருப்பத்தை நேத்தே சொல்லிட்டேன்.”

“பரவாயில்லையே கண்டதும் காதல் ஆ.
பேஷ் பேஷ்.
அப்போ உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எங்க கல்யாணத்தோட சேர்த்து நடந்திடுவோம்.
என்ன சொல்லுறீங்க?”

“எனக்கு ஓகே.
ஆனா ஒரே ஒரு கன்டீஷன்.”

“கன்டீஷனா!
அது என்ன?”

“உங்களோட இந்த கேஸ் முடிச்சிட்டு தான் கல்யாணம்.”

“டன். டீல்.
சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயம் ஏதோ பெரிய லெவல்ன்னு எல்லாம் எழுதி இருந்தீங்களே…
அது என்ன?
அவங்க வீட்டுக்கு பின் வாசல் வழியா நேத்து வந்துட்டு போனது யாரு?
ஏன் வந்தாங்க?”

“பாருங்க…
அதை பத்தி பேச வந்துட்டு…
நான் பாட்டுக்கு என் கதையை பேசிட்டே இருக்கேன்.”

“உங்க கதை மட்டுமில்ல.
என் தோழியோட கதையும் தான்.
அதுனால மன்னிப்போம் மறப்போம்.”

“அப்பா எவ்வளோ பெரிய மனசுங்க உங்களுக்கு.”

“நன்றி.
சரி இப்போ சொல்லுங்க”

“உங்க பக்கத்து வீட்டு பெண் அந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் அவங்களோட புருஷன் மிஸ்டர் டேவிட் அன்ட் அவங்களோட முன்னாள் புருஷன்னு எல்லாரோட  பேக்ரௌண்ட் செக் பண்ணினதுல…
அவங்க முன்னாள் புருஷன் வேற யாருமில்லை இந்த நாட்டோட பெரும் அரசியல் புள்ளி மிஸ்டர் சார்ல்ஸ் டிக்சன்னு தெரிய வந்திருக்கு.”

“ஓ! மை காட்!
நான் அவர பத்தி நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்.
ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட் ஒரு நாள் கூட அவர் பத்தி சொன்னதில்லை.”

“எப்படி சொல்லுவாங்க சக்தி.
அந்த ஆளு பண்ணிண செயல் அப்படி.”

“அப்படி என்ன பண்ணிருக்காரு?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்காருன்னா பாருங்களேன்.”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
அவங்க தங்கமான மனுஷியாச்சே!
அவங்கள ஏன்?
எதுக்கு அப்படி செய்ய முயற்சி செஞ்சிருக்காரு?”

“அதை நான் சொல்லறேன்.
அதுக்கு முன்னாடி நீங்க என் கிட்ட ஏதோ சொல்லணும்னு மெஸேஜ் ல குறிப்பிட்டிருந்தீங்களே!
அது என்னன்னு சொல்லுங்களேன்.”

“அது…அது வந்து…”

“ஏன் இழுக்குறீங்க சக்தி?
எதுவானாலும் சொல்லுங்க.”

“இல்ல அது இந்த கேஸுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியலை.
ஆனாலும் அதை உங்ககிட்ட சொல்லிட சொல்லி விஷால் சொன்னான்.”

“சரி அப்படி என்ன அந்த விஷயம்ன்னு சொல்லுங்க.
அது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்டதா இல்ல சம்பந்தபடுமான்னு எல்லாம் நான் தீர்மானிச்சுக்கிறேன்.”

என்று ஜேம்ஸ் கூறியதும் சக்தி படபடவென அவர்களின் காலேஜ் இறுதி நாளில் நடந்த சம்பவங்களை, விஷால்  பிரப்போஸ் பண்ணியதில் இருந்து ப்ரொஃபசர் சேவியரை பார்த்து பின் அங்கிருந்து கிளம்பி வந்தது வரைக்கும் சொல்லி முடித்தாள். அவளை இடைமறித்து பேசாது பொறுமையாக அனைத்தையும் கேட்ட ஜேம்ஸ் அவளிடம்,

“அப்போ…
அந்த ப்ரொஃபசர் சேவியர் இறந்துட்டாறா?”

“அப்படி தான் நான் நினைச்சு அங்கேந்து வேகவேகமா வந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே இறந்துட்டாறா இல்லையான்னு எனக்கு தெரியாது.”

“சரி அவர் இறந்துட்டார்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?”

“பேசிட்டே இருந்தவரு சட்டுன்னு தலையை குனிந்துட்டார்.
நானும் அவரை எழுப்பிப் பார்த்தேன் ஆனா அவர் எழுந்துக்கல.
அதுனால இறந்துட்டார்ன்னு நினைச்சுட்டேன்.”

“அவர் மயக்கமடைந்திருக்கலாம் இல்லையா?
நீங்க அவர் ஹார்ட் பீட் ஆர் பல்ஸ் செக் பண்ணிருக்கலாமே!”

“செய்திருக்கலாம் தான்.
இப்போன்னா நிச்சயம் அதெல்லாம் செய்திருப்பேன்.
ஆனா அன்னைக்கு நான் இருந்த நிலைமை அப்படி.
அர்த்த ராத்திரி…
மயானம் வேற…
பயத்துல அங்கேந்து எப்படியாவது கிளம்பிடணும்ன்னு தான் தோணிச்சு.
நீங்க சொன்னா மாதிரி எல்லாம் செக் பண்ண தோணவே இல்ல.
என்ன பண்ண?”

“ம்…
உங்க சிட்டுவேஷன் அப்படி.
புரியுது‌…”

“அப்படின்னா அவர் உயிரோட தான் இருக்காறா?”

“இல்ல இல்ல…
இருக்கலாம்.
இல்லாமையும் இருக்கலாம்.”

“இல்லையே! இருங்க…இருங்க
இப்போ தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது…
வி கிட்ட… இதை எல்லாம் சொன்னப்போ…
அவன் கூட ப்ரொபஸர் சேவியர் ஏதோ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்னு சொன்னான்.
அதுவும் நாங்க காலேஜ் முடிச்சு வெளிய வந்த ஒரு வாரத்துலன்னு சொன்னதா ஞாபகம்…
அப்படிப் பார்த்தா அவரை நான் சந்திச்சதுக்கு அப்புறமா ஒரு வாரம் உயிரோட இருந்திருக்காறா?”

“ஓ! அப்படியா!
சரி அதை விஷால் கிட்ட விசாரிச்சுக்கறேன்.
அந்த ப்ரொபஸர் சொன்ன அந்த பொக்கிஷம் இருந்த இடத்துக்கு நீங்க போய் பார்த்தீங்களா?
அது என்னது?”

“அது வந்து…அது…வந்து…”

“ஏன் சக்தி தயங்குறீங்க?”

என்று ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கிய சக்தி மனதிற்குள் அதை ஜேம்ஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பட்டிமன்றம் நடந்தேறியது.

பொக்கிஷம் பற்றிய ரகசியத்தை சொல்லலாமா! வேண்டாமா! என்ற மனப் பட்டிமன்றத்தின் முடிவைத் தேடி…

தொடர்வாள்…

அத்தியாயம் 31: அழைப்பு-இணைப்பு

ஜேம்ஸின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் டேவிட் வீட்டு விசாரணையில் முழுமனதோடு அவனால் ஈடுபட முடியாது போனது. அவன் உடனே அங்கு இருந்த அவன் டிப்பார்ட்மென்ட் ஆட்களிடம் சில விவரங்களை சேகரித்து அவனது மொபைலுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சக்தியும் அவள் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் இட்டாள். வீட்டினுள் நுழைந்த சக்தி முன், சுட சுட ஒரு கப் காபியுடன் வந்து நின்ற ப்ளூ, அதை அவளிடம் கொடுத்தது. அவளும் காபியை எடுத்துக் கொண்டு ப்ளூவிடம் நன்றி கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்‌. அப்போது ப்ளூ அவளருகே சென்று
சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலுக்கு சென்றாள்?
அவளை பார்க்க வந்த நபர் யார்?
ஏன் டேவிட் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது?
என்று பல கேள்விகளை கேட்டு பதிலுக்காக சக்தியை பார்த்து நின்றிருந்தது.

ப்ளூ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டே வரிகளில் பதிலளித்தாள்.

“தோணிச்சு போனேன். கதவு தொறந்து இருந்துது…சோ… போலிஸை வர வச்சேன்.”

என்று கூறி குடித்த காபி கப்பை அங்கிருந்த காஃபி டேபிளில் வைத்து விட்டு தனது அறைக்கு செல்ல எழுந்தாள். அப்போது ப்ளூ மீண்டும் அவளிடம்,

“மிஸ்ஸர்ஸ் டேவிட் அவங்க வீட்டுல இல்லையே! அப்புறம் எப்படி கதவு தொறந்திருந்தது?”

“அதை கண்டு பிடிக்க தான் போலிஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவா கண்டுபிடிச்சுப்பா.”

“ஸோ… உன் கூட பேசிட்டு இருந்தது போலிஸா?”

“ஆமாம். சரி ப்ளூ நான் என் ரூமுக்கு போறேன். பை. ஐ வில் கம் ஃபார் டின்னர் அட் எய்ட். ஓகே.”

“ஓகே தீ. டேக் ரெஸ்ட்”

என்று ப்ளூ கூறியதும் சக்தி அவளது அறை கதவை மூடினாள். பின் உடைகளை மாற்றி ஃபிரெஷ் ஆனா பின் படுக்கையில் படுத்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து விஷாலுக்கு கால் செய்தாள். ஆனால் விஷால் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள். கால் வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. உடனே தான் தான் அழைப்பதாகவும் அன்று நடந்த சிலவற்றை பற்றி பேச வேண்டுமென்றும், டைம் கிடைக்கும் போது திருப்பி அழைக்க சொல்லிவிட்டு வாய்ஸ் மெயிலை துண்டித்தாள்.  பின்பு சில ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டு அப்படியே சற்று அசந்து தூங்கிப் போனாள்.

அவள் வலதுபுறமாக திரும்பி படுத்திருந்த மெத்தையில் அவளின் இடுப்புக்கு அடியில் புஸ்… புஸ்…. புஸென அவளின் மொபைல் அதிர்ந்ததில் விருட்டென எழுந்து மொபைலை துழாவி தேடியெடுத்துப் பார்த்தாள். அவள் எதிர் பார்த்த கால் விஷால் இடமிருந்து ஆனால் அழைப்பு வந்ததோ அவள் பெற்றோரிடமிருந்து. கண்களை நன்றாக கசக்கி தூக்கத்தை கலைத்து கொண்டே அவளின் பெற்றோரை மொபைலில் வீடியோ காலில் அழைத்தாள். அவளின் அழைப்புக்காக காத்திருந்த நவீனம் மிருதுளாவும் உடனே வீடியோ காலில் இணைந்தனர்‌.

வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும். கல்யாண தலைப்பை வாசிக்க ஆரம்பித்தனர் நவீன் மற்றும் மிருதுளா. அதை கேட்ட சக்தி அவர்களிடம்

“அப்பா அன்ட் அம்மா…கல்யாண விஷயத்துல ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களுக்கு சொல்லுவேன். சோ…நீங்க அதுக்காக கால் பண்ணி கேட்க வேண்டாம். ஓகே வா.”

“சரி மா. இனி நீயா சொல்லற வரைக்கும் நாங்க அதை பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம். போறுமா.”

“தாங்க்ஸ் மா.”

“அப்பறம் உங்க ஆஃபிஸ் ல, உன் பக்கத்து வீட்டு அம்மா மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுல எல்லாம் என்ன விஷேஷங்கள்.”

“ஆங்! ஏன் கேட்கற அப்பா? உனக்கு பேச வேறெதுவும் இல்லையா “

“பின்ன என்ன நீ! நாங்க உன் கிட்ட வேற எதைப் பத்தி தான் பேசறது? உன் கல்யாணத்த பத்தி பேசக்கூடாதூன்னுட்ட!”

“அப்பா! ஓகே ஓகே! ஆஃபிஸ் வேலை எல்லாம் நல்லா போறது. அப்புறம் நம்ம  பக்கத்தாத்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் ரெண்டு பேருமே எங்கயோ ஊருக்கு போயிருக்கா.”

“இன்னைக்கு அவங்க வீட்டு கதவு கூட திறந்து கிடந்தது மிஸ்டர் நவீன். அப்போ நம்ம தீ தான் போலிஸுக்கு கால் செஞ்சு அவங்களை வர வச்சு இப்போ விசாரணை போயிட்டிருக்கு.”

உடனே காலை ம்யூட் செய்த சக்தி ப்ளூவைப் பார்த்து

“ஹே ப்ளூ இதை ஏன் இப்போ அவங்க கிட்ட சொன்ன?”

“ஏன் சொன்னா என்ன தீ?”

“அவங்க பயந்துட மாட்டாங்களா ப்ளூ!”

“ஹலோ! ஹலோ தீ! நீ இருக்கயா?”

“நவீ… ஒரு வேளை நம்ம இன்டர்நெட் கட் ஆகியிருக்கோ என்னவோ.”

ஃபோனை அன்மியூட் செய்த சக்தி

“ஆங்… அப்பா…அம்மா என் சைட்ல தான் ஏதோ ப்ராப்ளம். இப்போ சரி ஆயிடுத்து.”

“சரி கால் கட் ஆகறதுக்கு முன்னாடி ப்ளூ ஏதேதோ சொல்லித்தே! அங்க என்ன ஆச்சு? மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் அவ ஆத்துக்காரரும் நன்னா இருக்காளோனோ!”

“அதுதானே! அப்படி கேளுங்கோ நவீ. இவ என்னடான்னா அவா ஊருக்கு போயிருக்கான்னு சொன்னா… ஆனா ப்ளூ என்னடான்னா…”

“அம்மா! அம்மா! உடனே உன்னோட கற்பனா சக்தியை எல்லாம் இங்க கொண்டு வந்து உன்னையும் குழப்பி அப்பாவையும் குழப்பிடாதமா.”

“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்லு.”

என்று மிருதுளா கேட்டதும் சக்தி அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்ததில் இருந்து அப்போது அவர்களுடன் போனில் பேசக் கொண்டிருந்தது வரை கூறி முடித்தாள். அதை முழுவதுமாக கேட்ட நவீன் மிருதுளா தம்பதியினர் அதிர்ச்சிக்குள்ளாகி ஏதும் பேசாது இருந்தனர். அப்போது சக்தி அவர்களிடம்

“அப்பா…அம்மா… இருக்கேங்களா? இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு?”

” ம்…இருக்கோம் இருக்கோம். ஏன் மா தீ…”

“சொல்லுப்பா”

“அந்த ஊரு நல்ல சேஃபான ஊருன்னு இல்ல நெனச்சேன்!”

“இப்போ என்ன ஆச்சுப்பா?”

“இப்படி எல்லாம் நடக்கறதே!”

“அப்பா…அது ஏன் நடந்ததுன்னு போலிஸ் விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுவாப்பா. சோ கவலை படாதே.”

“அது சரி டி. ஆனா நீ எப்படி போலிஸுக்கெல்லாம் ஃபோன் பண்ணி வர சொன்ன?”

“ஏன் மா. நான் சொல்லக் கூடாதுன்னு மெட்ஸ் கவர்மென்ட் ஏதாவது ரூல்ஸ் போட்டிருக்கா என்ன?”

“அதுக்கில்லடி…நாளை பின்ன அந்த திருடனுக்கு நீ தான் போலிஸுக்கு போனன்னு தெரிஞ்சுதுன்னா?”

“அம்மா கவலையே வேண்டாம் அந்த போலிஸ்காரர் ஜேம்ஸ் எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான்.”

“என்னது! அது எப்படி போலிஸ்காரரை உனக்கு தெரிய வந்தது.”

பேச்சுவாக்கில் ஜேம்ஸ் பற்றி சக்தி கூறியதும் அதைப் பிடித்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். தான் தேவையில்லாமல் ஜேம்ஸ் பெயரை கூறிவிட்டோமே என்று  எண்ணிய சக்தி சட்டென

“ஊப்ஸ்!…”

என்று தனக்குத் தானே சொல்லியதை கேட்ட நவீன் அவளிடம்

“ஹே தீ! நீ ஏதாவது எங்க கிட்டேந்து மறைக்கறீயா?”

“ஏன் பா அப்படி கேட்கற?”

“இல்ல இவ்வளவு வருஷமா நீ அங்க வேலைப் பாக்கற! ஆனா இப்போ நீ அந்த விஷாலை பார்க்க பாரிஸ் போனது லேந்து… அங்க என்ன நடக்கறதுன்னே எங்களுக்கு தெரிய மாட்டேங்கறது. ஏதேதோ நடக்கறதாகவும் நாங்க சங்கட படக்கூடாதூன்னுட்டு நீ எங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறதாகவும் சதா சர்வநேரமும் உன் அம்மாவோட புலம்பலை தான் கேட்டுண்டே இருக்கேன். இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா…அவ சொல்லறதுலேயும் ஏதோ இருக்கறா மாதிரின்னா இருக்கு!”

“அச்சோ! அப்பா. ஜேம்ஸ் என்னோடு புது ஃப்ரெண்டுப்பா.”

“அது எப்படி போலிஸ்காரர் உனக்கு ஃப்ரெண்ட் ஆனார்? நீ எதுக்காவது அவர் கிட்ட போயிருந்தா தானே உனக்கு அவரை தெரிய வாய்ப்பிருக்கு.”

“அது தானே! உன் அம்மா சொல்லறதும் சரிதானே!”

“சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் மா. ஆனா நான் அவர்கிட்ட எதுக்கும் போகலை.”

“பின்ன எப்படி டி உனக்கு அவர் ஃப்ரெண்ட் ஆனார்?!”

“அம்மா…என்னை பேச விடுமா. அப்போ தானே நான் சொல்ல முடியும்.”

“ம்…சரி சொல்லு.”

“நீ முந்தி மாதிரி இல்லமா. உன் பொறுமை எல்லாம் எங்க போச்சு?”

“ம்…அதை எல்லாம் தோச்சு காயப்போட்டிருக்கேன் போதுமா.”

“ஹீ ஹீ ஹீ! உன் ஜோக்குக்கு சிரிச்சுட்டேன் ஓகே வா. சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட். ஜேம்ஸ் விஷாலோட ஃப்ரெண்ட்… சோ… அவர் எனக்கும் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்”

“இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே தீ மா”

“அப்பா எங்க நீங்க ரெண்டு பேரும் என்னை சொல்ல விட்டேங்கள்.”

“அவர் நம்ம ஊர் காரறா? இல்ல அந்த ஊர் காரறா?”

“அப்பா…அவர் நம்ம ஊர் காரர் ஆனா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். சோ… 95% இந்த ஊர் காரர் தான்.”

“சரி சரி எதுவா இருந்தா என்ன…எதுக்கும் நீ கொஞ்சம் அந்த போலிஸ் காரர்ட்டேந்து தள்ளியே இரு.”

“ஓகே மா. சரி நான் வச்சுடட்டுமா. வி கால் பண்ணறான்.”

“ஓகே டா. டேக் கேர். பை”

“பை ப்பா.”

“நாங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோடி.”

“சரி மா. பை பை.”

“ம்…சரி பை.”

என்று பெற்றோரின் அழைப்பை துண்டித்து விட்டு விஷாலின் அழைப்பை ஏற்ற சக்தி அவனிடம் அன்று நடந்த விவரங்களை கூறி முடித்தாள். அவள் கூறியதனைத்தையும் கேட்டு முடித்த விஷால் சக்தியிடம்,

“தீ… ஜேம்ஸ் ஏன் அவன் கிட்டேந்து  எதையாவது மறைக்கிறியான்னு கேட்கணும்?”

“இது எல்லா போலிஸ் காராலும் கேட்கற வழக்கமான கேள்வி தானே வி.”

“தீ…நீ ஒண்ணு கவனிச்சியா?”

“என்னது வி”

“ஜேம்ஸ் கிட்ட நாம காலேஜ் லாஸ்ட் டே நடந்த விவரங்களை சொல்லாம விட்டுட்டோம்.”

“என்னது நீ என்னை ப்ரப்போஸ் பண்ணிணதையா?”

“இல்ல தீ. அதுக்கப்புறம் நீ வெளிய போனது. அந்த ப்ரொபஸர் சேவியரை பார்த்தது. உன் மொபைலை காரில் தொலைத்தது. இதெல்லாம் நீ ஜேம்ஸ் கிட்ட சொல்லலையே!”

“ஆனா…அதெல்லாம் எப்பவோ நடந்தது வி. அதை ஏன் நான் ஜேம்ஸ் கிட்ட இப்போ சொல்லணும்? அதுவுமில்லாம ப்ரொபஸர் இன்னும் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாது.”

“அதுனால என்ன தீ. எனக்கென்னவோ நீ ஜேம்ஸ் கிட்ட அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லிருக்கணும்ன்னு தோணறது.”

“ஆனா எனக்கென்னவோ அன்னைக்கு நடந்ததுக்கும் இப்போ நடக்கறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு தான் தோணறது.”

“எதுக்கும் அதை அவன்ட்ட சொல்லிட்டா அவனும் ஏதாவது லிங்க் இருக்கான்னு விசாரிப்பான் இல்ல தீ.”

“ம்…அதை பத்தி விசாரிக்கணும்னா ஒண்ணு அவர் ப்ரொபஸர் சேவிரை மீட் பண்ணணும்… இல்லாட்டி… அந்த பீட்டரை மீட் பண்ணணும். இதுல ப்ரொபஸர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாது. அந்த பீட்டர் எங்க இருக்கான்னோ இல்ல இருக்கானா இல்லையான்னே தெரியாது. எப்படி? எதை? வச்சு ஜேம்ஸ் லிங்க் பண்ணுவார்?”

“ஏய் தீ! தட் இஸ் ஹிஸ் ஜாப். யார் கண்டா இதுவே கூட அவனுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல லீட் கிடைக்க வாய்ப்பா அமையலாம் இல்ல.”

“ம்…சரி நான் இப்போ என்ன பண்ணனும்?”

“நாளைக்கு மொதோ வேலையா நீ ஜேம்ஸுக்கு கால் செஞ்சு நடந்ததை அவன்கிட்ட சொல்லிடு.”

“ஓகே. டன்.”

“என்ன தீ இது! நாம கல்யாணம் பண்ணிக்க போறவா மாதிரியா பேசிக்கறோம். ஏதோ டிடெக்டிவ்ஸ் டிஸ்கஷன் மாதிரின்னா இருக்கு.”

“ஹா…ஹா…ஹா… அப்படின்னா நான் நான்சி அன்ட் நீ ஷெர்லாக் ஓகே வா.”

“விளையாடாதே தீ.”

“சரி சரி…நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசினியா? நான் எப்போ அவாள்ட்ட பேசறது?”

“ம்.‌.. நான் பேசினேன்.
நான் டே ஆஃப்டர் டுமாரோ மெட்ஸ் வரேன் இல்லையா…அப்போ நீயும் அவாள்ட்ட பேசலாம். ஓகே வா.”

“டபுள் ஓகே.
சரி சரி ரொம்ப நேரமாயிடுத்து வி.
நான் காலை கட் பண்ணட்டும்மா?”

“ம்… அதுக்குள்ளேயே வா.”

“அதுதான் நாளன்னைக்கு நீ இங்க வரப்போறயே பின்ன என்ன. அப்போ பேச மிச்சம் மீதி ஏதாவது வை. இப்போ பை.”

“சரி சரி உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்கறது.”

“எல்லாத்தையும்… கல்யாணத்துக்கு அப்புறமா நீ எதிர்பார்க்காததையும்…”

“ஆமாம் இப்படி எல்லாம் பேசிட்டு வை. அப்புறம் எங்கேந்து நான் தூங்க.
சரி சரி பை ஃபார் நவ்”

என்று விஷால் கூறியதும் அழைப்பை துண்டித்தாள் சக்தி. பின் சற்று நேரம் அவனையும் அவன் கடைசியாக கூறியதையும் மனதில் அசைப்போட்ட சக்தி புன்னகைத்துக் கொண்டே மொபைலை பார்த்தாள். அதில் ஜேம்ஸிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள். உடனே அதை திறந்து படித்தாள். அதில் மிஸ்ஸர்ஸ் டேவிட் பற்றி விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாகவும், அதைப் பற்றி டிஸ்கஸ் செய்யவும், அவர்கள் வீட்டிற்குள் வந்தது யார் என்ற விவரங்களை
கூறவும், மறுநாள் காலை அவள் வீட்டிற்கு வருவதாகவும்,  அவள் வீட்டில் இருப்பாளா என்றும் ஜேம்ஸ் கேட்டிருந்தான்.

அதைப் படித்ததும் சக்தி, தான் வீட்டில் இருப்பாள் என்றும் தனக்கும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாராளமாக வரலாம் என்றும் ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தியில் அழைப்பு விடுத்தாள். 

உண்மையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் யார்?,
ஜேம்ஸின் அந்த ஒரு கேள்வி…,
சக்தி ஜேம்ஸிடம் கூற தவறியதாக விஷால் சுட்டிக்காட்டிய விஷயம்,
காலேஜ் கடைசி நாள் நடந்த சம்பவங்கள்,
சக்தியின் அந்த மர்ம இரவு சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில்…

தொடர்வாள்….

காரை நிறுத்திவிட்டு அன்று ஆஃபிஸிற்கு வந்து ஜேம்ஸ் சொன்ன விஷயங்கள், சிசிடிவி விவரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் அந்த டிரக் மற்றும் ஜான் ஆகிய விஷயங்களை மனமெனும் சிந்தனை குட்டையில் போட்டு குழப்பி, மூழ்கி மெல்ல அதில் தெளிவை தேடிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து சென்றவளுக்கு சட்டென பக்கத்து வீட்டு திண்ணையில்  மிஸ்ஸர்ஸ் டேவிட் அமர்ந்து அவளைப் பார்த்து கை அசைப்பது போல தோன்றியதும் குழப்பத்தில் இருந்த அவளின் முகம் பிரகாசமானது.

உடனே அவர் அருகே சென்றாள் சக்தி. ஆனால் அங்கு சென்றவள் வெறிச்சோடி கிடந்த திண்ணையைப் பார்த்ததும் கனவா! என்று  தனக்குத்தானே கூறிக்கொண்டே அவள் வீட்டுக்கு செல்ல திரும்பினாள். அப்போது மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் அவளுக்கு கேட்டது. சட்டென திரும்பி அவர் வீட்டின் கதவுக்கு முன் சென்று  கதவை தட்டினாள். பதிலேதும் இல்லாததால் அவர் வீட்டின் வலது புறம் தோட்டம் வழியாக சென்று அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க முயன்றால் ஆனால் அவளுக்கு ஒன்றும் சரிவர தெரியவில்லை. உடனே  வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் மெல்ல நடந்துக் கொண்டே வீட்டின்  பின்புறம் சென்று பார்த்தாள். வீட்டின் பின் பக்க கதவு பாதியாக திறந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி கதவின் அருகே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை சொல்லி அழைத்தாள். அதற்கும் பதிலேதும் வரவில்லை.

சற்றே குழப்பமடைந்த சக்தி. மீண்டும் ஒருமுறை மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை உறக்க சொல்லி அழைத்தார். அப்போதும் பதில் வரவில்லை என்றதும்‌ செய்வதறியாது சற்று நேரம் தோட்டத்திலேயே அங்குமிங்குமாக பரிதவித்து நடந்தாள். பின் ஜேம்ஸுக்கு கால் செய்து விவரங்களை கூறி அவனை அங்கு வரச் சொன்னாள்.

ஜேம்ஸும் வருவதாக கூறி ஃபோனை வைத்தான். சக்தி அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுத் தோட்டத்திலேயே நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது சக்தியின் அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ப்ளூ மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் சக்தி நிற்பது போல் தோன்ற, உடனே அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நன்றாக பார்த்தது. அது சக்தியே தான் என்று தெரிந்ததும் மெல்ல ஜன்னலின் கண்ணாடி கதவைத் திறந்து சக்தியை அழைத்தது. அப்போது சக்தியின் மொபைல் ஒலிக்க உடனே அவள் அதை எடுத்து பேசிக் கொண்டே அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்றாள்.

சக்திக்கு கால் வந்ததும் அவளை அழைக்க இருந்த ப்ளூ கப்சிப் ஆனது. ஆனால் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டே சக்தி வீட்டு ஹாலுக்கு வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு முன் வாசலை பார்த்தது.

அங்கே சக்தி யாரோ ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ப்ளூ, சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்திற்கு சென்றாள் என்ற சிந்தனையிலிருந்து வெளியே வந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது.

மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு வாசலில் நிற்பதாக ஜேம்ஸ் கால் செய்ததால் சக்தி அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்று ஜேம்ஸை வரவேற்று நடந்ததை மீண்டும் ஒரு முறை விளக்கினாள். இருவரும் பேசிக்கொண்டே டேவிட் வீட்டு பின் பக்கம் சென்றதும் சக்தி திறந்திருந்த கதவை ஜேம்ஸிடம் காட்டினாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் அவளிடம்,

“நீங்க உள்ள போகலை இல்ல!”

“இல்ல ஜேம்ஸ். எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது அதுனால தான் உடனே உங்களை கூப்பிட்டேன்.”

“இங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?
இல்ல அவங்க இங்க இருந்த போ அவங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க?
அவங்க இந்த வீட்டுல எவ்வளவு வருஷமா இருக்காங்க?”

“இதோ இது தான் என் வீடு ஜேம்ஸ்.”

“ஓ! ஓகே!”

“நான் ருத்ராவை பிரிஞ்சு வீடு தேடிட்டிருந்தப்போ எனக்கு பிடிச்ச,
என் பட்ஜெட்க்கு கிடைச்ச வீடு இதுதான்.
நான் இங்க குடி வந்ததுலேந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் ஃபேமிலி இங்க தான் இருக்காங்க.
அவங்க கிட்ட பேசின போது தான் தெரிய வந்தது அவங்க இங்க இந்த வீட்டை வாங்கி இங்க ஷிப்ட் செஞ்சு பத்து வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு. நான் இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷமாச்சு.
சோ எப்படி பார்த்தாலும் அவங்க இங்க ஒரு பன்னிரண்டு வருஷமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.”

“ஓ! ஓகே! அவங்க தனியா வா இருந்தாங்க?”

“இல்ல ஜேம்ஸ்.
அவங்க ஹஸ்பண்ட் மிஸ்டர் டேவிட்டும் அவங்க கூட இருந்தார்.
அதுமட்டும் இல்லாம அவங்க வீட்டுக்கு தினமும் ஜான்னு ஒரு பையன் வேலைக்கு வருவான்.
அவங்க ஊருக்கு போன விஷயத்தை கூட ஒரு நாள் இங்க இருந்த அந்த ஜான் தான் எனக்கு சொன்னான்.
இப்போ கூட நான் அவன் தான் இப்படி கதவ தொறந்து போட்டுட்டு உள்ள இருக்கான்னு நினைச்சேன்.
ஆனா அவனும் உள்ள இருக்கறா மாதிரி தெரியலை.”

“அவங்க இப்படி அடிக்கடி ஊருக்கு போவாங்களா?”

“நான் இங்க குடி வந்ததுலேந்து அவங்க வீட்டை விட்டு வேற எங்கேயுமே போனதில்லை.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் இந்த தெருவுல வாங்கிங் போவாங்க.
அதுவும் மிஸ்ஸர்ஸ் டேவிட் மட்டும் தான் போவாங்க.”

“என்ன சக்தி உங்களுக்கும் ஜான்ங்கற பேருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல?”

“ஏன் அப்படி சொல்லுறீங்க ஜேம்ஸ்?”

“இன்னைக்கு காலையிலேந்து இந்த பெயர் தானே ஆஃபிஸுலேந்து வீடு வரைக்கும் தொடர்ந்துட்டே வருது.
அது தான் அப்படி சொன்னேன்.”

“ம்…ஆமாம் இல்ல.!”

“ஆமாம் ஆ இல்லையா!”

“ஆமாம் ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.”

“சரி அவங்க பசங்க எல்லாம்!”

“அவங்களுக்கும் டேவிட்டுக்கும் குழந்தைகள் இல்லை ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு ஒரு பையன் இருக்கார்ன்னு சொல்லிருக்காங்க. அவரு பேரு கூட பீட்டர்ன்னு சொன்னாங்க.”

“நீங்க அவங்க பையன் பீட்டரை பாத்திருக்கீங்களா?
அவரு கூட பேசியிருக்கீங்களா?”

“இல்லவே இல்லை?”

“ஏன் சக்தி?
ரெண்டு வருஷமா பக்கத்து வீட்டுல இருக்கீங்க. அவங்க பையனோட பேசினது இல்லைன்னு சொல்லுறீங்க!”

“ஆமாம்.
ஏன்னா மிஸ்ஸர்ஸ் டேவிட் பையன் இந்த ரெண்டு வருஷத்துல அவங்கள பார்க்க வந்ததே இல்லை.
அப்புறம் எப்படி நான் பார்ப்பேன் இல்ல பேசுவேன்.
ஆக்சுவலி அவங்களுக்கு அந்த வேதனை இருந்துட்டே தான் இருந்துது. அப்பப்போ அவங்க பேச்சுல அவங்க மனவலியை வெளிப்படுத்திருக்காங்க. இன்ஃபாக்ட் அவங்க படற வேதனையை பார்த்து தான் நான் என் பேரன்ட்ஸ்க்கு அடிக்கடி கால் பண்ணி பேசுவேன்.”

“ம்…என்ன பண்ண! இப்படி சில பிள்ளைகள்.
சரி சக்தி.
நீங்க இங்கயே இருங்க.
நான் உள்ள போய் பார்த்துட்டு வரேன்.”

“ஓகே ஜேம்ஸ்.”

என்று கூறிய சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலிலேயே காத்திருந்தாள். அங்கு நடந்ததை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ப்ளூ, ஜேம்ஸ் டேவிட் வீட்டினுள் சென்றதும் மீண்டும் அவளை அழைத்து விசாரிக்க ஜன்னல் கண்ணாடிக் கதவை மெல்ல திறந்து

“தி…தி…”

என்று மெல்ல அழைத்தது. சக்திக்கும் ப்ளூவின் குரல் கேட்டது. உடனே அவளும் ப்ளூ பக்கமாக திரும்பினாள். அந்த நேரம் பார்த்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் ஜேம்ஸ். ஜேம்ஸை பார்த்ததும் சக்தி ப்ளூவிடம் ஏதோ கை அசைத்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் சட்டென சக்தி வீட்டை பார்த்தான். அப்போது ப்ளூ டக்கென்று மறைந்துக் கொண்டது. சக்தி பார்த்து கை அசைத்த திசையில் இருந்த அவள் வீட்டு ஜன்னல் பக்கம் பார்த்த ஜேம்ஸ், அங்கு யாரும் இல்லாததை கண்டு சக்தியிடம்,

“யாருக்கு கை அசைத்து காட்டுறீங்க சக்தி?”

“இல்லையே! யாருக்கும் நான் கை அசைத்து காட்டலயே!
நான் சும்மா என் கையை தலையில வச்சு யோசிச்சிட்டு இருந்தேன்.
நீங்க வந்தீங்க.”

“இல்லையே!
நான் வந்ததும் நீங்க உங்க வீட்டை பார்த்து யாருக்கோ கை அசைச்சீங்களே!
அசச்சா மாதிரி தான் இருந்துச்சு!
இருந்துச்சு என்ன இருந்துச்சு.
அசைச்சீங்க.”

“அச்சோ!
ஜேம்ஸ்!
என்னங்க?
என் வீட்டுல என்னைத் தவிர யாருமே இல்லை.
அப்படி இருக்கும் போது நான் யார்கிட்ட கை அசச்சுருப்பேன்?
சரி! சரி! அதுவா இப்போ முக்கியம்?
உள்ள யாராச்சும் இருக்காங்களா?”

“நீங்க ஏதாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா சக்தி?”

“நான் ஏன் இல்ல என்னத்த மறைக்க போறேன் ஜேம்ஸ்!”

“இல்ல…நீங்க சொல்லற விஷயங்களை வச்சு தான் நான் இந்த கேஸை ப்ரொசீட் பண்ணனும்.
அதுதான் இன்னொரு தடவ கன்பார்ம் பண்ணிக்க கேட்டேன்.
ஏதாவது மறைக்கறீங்கன்னா இப்பவே சொல்லிடுங்க.
நான் இந்த கேஸுலேந்து விலகிக்குறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் ஒண்ணு விடாம உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இனியும் ஏதாவது இருந்தா சொல்லிடறேன்.
ஏன் இதோ இப்போ இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு விஷயத்தை நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும் சொல்லுங்க.
ஆனாலும் பார்த்ததும் மொதல்ல உங்களுக்கு தானே கால் பண்ணி சொன்னேன்.”

“அதெல்லாம் சரி தான் சக்தி.
ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நெருடல் என்னன்னா…
நீங்க முக்கியமான ஏதோ ஒண்ண அல்லது ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்ல விட்டுட்டேங்களோன்னு தோணிகிட்டே இருக்கு.
அதுனால கூட நாம நூடுல்ஸ் மாதிரி இதுல சிக்கிக்கிட்டு இருக்கோமோன்னு தோணுது.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விவரங்களையும் நடந்த விஷயங்களையும் தெளிவா உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இப்போ நீங்க தான் சொல்லணும்.”

“நானா?
நான் என்ன சொல்லணும்?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுக்குள்ள நீங்க தானே போயிட்டு வந்திருக்கீங்க?
அப்போ உள்ள என்ன இருக்குன்னு நீங்க தான் சொல்லணும்.”

“ஓ! அதுவா.
உள்ள யாருமில்லை.
யாரும் வந்துட்டு போனதுக்கான தடயமும் இல்ல.”

“அப்போ நான் என் காரை பார்க் பண்ணிட்டு வரும்போது கேட்ட சத்தம்?”

“மே பி யாராவது திருட வந்திருக்கலாம்.
நீங்க வந்ததைப் பார்த்து பின் வாசலால தப்பி ஓடி இருக்கலாம்.
ஆனா வீட்டுக்குள்ள எல்லாமே வச்சது வச்ச இடத்துல இருக்கறா மாதிரி தான் தெரியுது.
எதுக்கும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்கள வர சொல்லிருக்கேன்‌.
அவங்க வந்து கை ரேகை ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து சொல்லுவாங்க.
அது மட்டுமில்லாம! ஆங் இதோ வந்துட்டாங்க.
வாங்க வாங்க.
இவங்க தான் மிஸ் சக்தி.”

“ஹாய். ஹலோ”

“ஹாய்.”

“இவங்க தான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணினாங்க.
யூ கேரி ஆன் வித் யுவர் டியூட்டி.
சக்தி இதோ இவங்க ரெண்டு பேரு தான் இந்த வீட்டுக்கு காவலா நிப்பாங்க‌.
நாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் மிஸ்டர் டேவிட்டை கான்ட்டாக்ட் செஞ்சு விவரங்களை சொல்லிக்கறோம்.
தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.”

“யூ ஆர் வெல்கம்.
இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
மிஸ்ஸர்ஸ் டேவிட் இஸ் லைக் மை மதர்.
அதுனால தான் நான் கொஞ்சம் பதற்றமாகி உங்களையும் இங்க வரவச்சுட்டேன்.
ஐ ஆம் சோ சாரி”

“இல்ல இல்ல உங்கள மாதிரி தான் எல்லாரும் போலிஸ் மேல நம்பிக்கை வச்சு இது போல அக்கம்பக்கத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்…
வாட் யூ டிட் இஸ் கரெக்ட்.
சோ நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
இனி எங்க ஆளுங்க பார்த்துப் பாங்க.
யூ கேன் காரி ஆன் வித் யுவர் வர்க்.”

“ம்…ஓகே.
என் வீட்டுக்கு வாங்களேன்.
காபி கூடிச்சிட்டு போகலாம்.”

“நோ! நோ! சக்தி.
இன்னொரு தடவ வரேன்.
நான் உடனே என் ஆஃபிஸுக்கு போகணும்‌.
கால் மேல கால் வந்துட்டே இருக்கு. இவங்க எல்லாரும் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அது தான் வந்துட்டாங்க இல்ல.
இனி அவங்க பாத்துப்பாங்க.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
பை.”

“பை ஜேம்ஸ்.
இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் டைம் கட்டாயம் வாங்க.
பை.”

என்று கூறி ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் சக்தி தனது வீட்டிற்குள் சென்றாள்.

பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் கதவு எப்படி/ஏன் திறந்துக் கிடந்தது?
யார் வந்திருப்பார்?
அவர்கள் வீட்டினுள் சக்தி கேட்ட சத்தம் எதனால் வந்தது?
போன்ற வினாக்களின் விடைகளை தேடி…

தொடர்வாள்…

சிசிடிவி அறைக்குள் சென்ற ஜேம்ஸ் அங்கிருந்த சூப்பர்வைசரிடம் கடந்த சனிக்கிழமை காலை முதல் மதியம் வரையிலான கேன்டீன் சம்மந்தப்பட்ட வீடியோக்களை போட்டுக் காட்ட சொன்னான். அவர்களும் அன்று பதிவான கேன்டீன் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளையும் போட்டுக் காட்டினார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் சட்டென ஓரிடத்தில் நிப்பாட்டி அதில் பதிவாகியிருந்த அந்த டிரக்குகள் இருப்பவரை ஜூம் செய்து காண்பிக்க சொன்னான். அந்த நபரை ஜூம் செய்ததும் சக்திப் பக்கம் திரும்பிய ஜேம்ஸ்

“என்ன சக்தி! இவர் தானே நீங்க வேலைக்கு சேர்த்துவிட்ட ஜான்?”

“ஆமாம்! இவரே தான். அது சரி இவர் தான் ஜானுன்னு நீங்க எப்படி

கரெக்ட்டா சொல்லுறீங்க?”

“அவரோட விவரங்களை கேன்டீன் ஊழியர்கள் ஃபைல பார்த்தேன்.”

“ஓ! ஓகே.”

“இந்த டிரக் எங்கேந்து வந்திருக்கு? அதுல என்ன இருந்தது ஆர் என்ன எடுத்துட்டு போறாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா?”

“இல்ல சார். எங்களுக்கு தெரியாது. நீங்க கேன்டீன் சூப்பர்வைசரை தான் கேட்கணும்.”

“சக்தி உங்களுக்கு ஏதாவது?”

“நோ ஜேம்ஸ். நோ”

“இந்த டிரக் உங்க கம்பெனியோடதா? இல்ல வெளியேந்து…வேற யாரோடதாவது வண்டியா?”

“அது…”

“இல்ல சார். இது ரெகுலரா உங்க கம்பெனிக்குள்ள வர வண்டியான்னு கேட்கறேன்.”

“எஸ் சார். இந்த டிரக் எவ்வரி சாட்டர்டே உள்ள வரும் மத்தியானம் வெளில போகும்.”

“ஒரே குறிப்பிட்ட நேரத்துல தான் வந்து போகுமா? இல்ல சனிக்கிழமை எப்ப வேணும்னாலும் வந்து போகுமா?”

“இல்ல இல்ல சார் ஒரே டைம் தான் ஃபாலோ பண்ணும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் சீக்கிரம் கிளம்பி வெளியே போயிருக்கு.”

“எவ்வளவு சீக்கிரம்?”

“எப்பவும் மத்தியானம் ஒரு மணிக்கு தான் வெளியே போகும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் பதினொன்னே காலுக்கு கிளம்பி வெளியே போய் இருக்கு சார்.”

“ம்…இன்டரெஸ்டிங். சரி சார். நீங்க ஒண்ணு பண்ணுங்க நான் சொன்ன ஃபுட்டேஜ் எல்லாத்தையும் எனக்கு இந்த நம்பர் ஆர் ஈமெயில் ஏதாவதுக்கு உடனே அனுப்பி வையுங்க.”

“நிச்சயமா சார். இதோ அனுப்பிடறேன்.”

“தாங்க்ஸ். சக்தி என் வேலை முடிஞ்சிடுச்சு  நாம போகலாமா?” 

“ஷுவர் ஜேம்ஸ்.”

“சக்தி நீங்க இனி அந்த ஜானை எங்க பார்த்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க. நானும் அவன் ஃபைல்ல இருக்கற அட்ரெஸ்ஸுக்கு போய் பார்க்கறேன். நிச்சயம் அது தப்பான அட்ரெஸ்ஸா தான் இருக்கும்.”

“நோ நோ! எங்க ஆஃபிஸ்ல பேக் ரௌண்ட் செக்கிங் எல்லாம் பண்ணாம யாரையுமே வேலைக்கு எடுக்க மாட்டாங்க ஜேம்ஸ்”

“ம்…அப்படியா! அதையும் பார்ப்போம். சரி நீங்க உங்க வேலையை பார்க்கலாம் சக்தி. நான் கிளம்பறேன்.”

“அப்படின்னா ருத்ரா எதுவும் செய்யலை இல்லையா? அவ குடுத்த ஜூஸ்னால இல்ல தானே!”

“ம்…அப்படி இருக்கலாம். அப்படி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.”

“ம்…ஷுவர்.”

“குட். ஆமாம் சக்தி… உங்க செகரெட்ரி மிஸ் ருத்ரா அவங்களோட நீங்க ரூம்மெட்டா இருந்தப்போ அங்க நடந்த ஒரு இன்சிடென்ட் பத்தி சொன்னாங்க. அது நடந்ததுக்கப்புறமா தான் நீங்க தனியா ரூம் எடுத்து தங்க ஆரம்பிச்சீங்கன்னும் சொன்னாங்க. அது உண்மையா?”

“என்ன! அவ பாய் ஃப்ரெண்ட் விஷயமா?”

“ஆமாம் சக்தி. இல்ல வேறெதுவும் காரணம் இருக்கா?”

“வேறெதுவும் இல்ல ஜேம்ஸ். ஆனா அது ஒரு காரணம் போதாதா என்ன?”

“அதுக்காக உயிர் தோழியை பிரியறதுங்கறது ரொம்ப இல்ல!”

“உயிர் தோழியா இருந்தா என்ன இல்ல யாரா இருந்தா என்ன ஜேம்ஸ். பல தடவை சொல்லியும் அவங்களால நமக்கு ஏதாவது ஆபத்து வந்தா நாம விலகறது தானே நல்லது. அதைத் தான் நான் செஞ்சேன். ஆனாலும் அவளோட நான் இன்னமும் பேசிட்டு தானே இருக்கேன்.”

“அதுவும் சரிதான் சக்தி. ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிசர் போல. பாவம் என் பிரெண்ட் விஷால்‌. அவன் ஏதாவது ஒரு அழகான பொண்ண பார்த்தான் செத்தான் போலயே!”

“பார்க்கறது தப்பில்ல ஜேம்ஸ். வரம்பு மீற கூடாதுன்னு தான் நான் சொல்லறேன். ஏது உங்க நண்பனுக்கு ஏற்ற காவல்காரன் போல தெரியுது!”

“ஜஸ்ட் கிட்டிங். சரி சக்தி. நான் வரேன். பை டேக் கேர்.”

“பை ஜேம்ஸ்.”

என்று கூறி ஜேம்ஸ் சென்றதும் தனது கேபினுக்கு சென்றாள் சக்தி. அவள் சென்ற வழியில் குறுக்கே வந்த ருத்ரா சக்தியிடம்

“ஹாய் தி. மிஸ்டர் ஜேம்ஸ் மறுபடியும் வந்திருந்தார் போல!”

“ஆமாம். ஏன் உனக்கு தெரியும் தானே! அப்புறம் என்ன போல ன்னு இழுக்கற?”

“இல்ல கேட்டேன். அவர் எதுக்கு நம்ம கேன்டீனையே சுத்தி சுத்தி வரார்?”

“ம்…நம்ம கேன்டீன் காஃபி ரொம்ப நல்லாருக்காம் அதுதான்.”

“போ தி. விளையாடாதே!”

“ஹேய் ருத்ரா! இதுல விளையாட என்ன இருக்கு?”

“எனக்கென்னவோ அவர் என்னைப் பார்க்கத் தான் ரெண்டாவது தடவ வந்திருந்தார்ன்னு தோணுது”

“ஓ! அப்படியா? எத வச்சு நீ அப்படி சொல்லுற?”

“இப்போ கொஞ்சம் முன்னாடி… உன் கேபின் வாசல்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார் இல்ல…”

“ஆமாம். அதுனால உன்ன பார்க்க வந்தார்ன்னு நீ எடுத்துப்பியா?”

“இல்ல தி. அப்போ நான் நம்ம ரோமிகிட்ட ஒரு ஃபைல் குடுக்க வந்தேனா….”

“சரி வந்த…அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா வர. கொஞ்சம் ஸ்பீட் அப்.”

“அப்போ அவரு என்னையே உத்துப் பார்த்து ரசிச்சிட்டிருந்தார் தெரியுமா!”

“அது தெரிஞ்சும் மேடம் ஏன் அவர் கிட்ட போய் கேட்கலை?”

“அவர் என்னை ரசிச்சதை நானும் ரசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கேட்க தோணலை. ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கலை. அதுக்குள்ள நீ வந்து ஆட்டத்தை கலைச்சுட்ட”

“எதை உங்களுக்குள்ள நடந்த ரசிப்பு ஆட்டத்தையா?”

“உன்னை… நீ இருக்க பாரு. போய் வேலையை பாரு ருத்ரா. நானே பல டென்ஷன்ல இருக்கேன். இதுல நீ வேற! வா வா அந்த எம்.என்.எம் அனுபின ப்ரபோஸலை அனைலைஸ் செஞ்சு அவங்களுக்கு பதில் அனுப்புவோம்.”

“ஓகே மேடம் சக்தி.”

தன்னை சுற்றி ஏதேதோ நடந்தாலும், அவை எல்லாம் எதற்கு நடக்கிறது என்று அறிய முடியாவிட்டாலும் சக்தி அவளது வேலையில் மும்முரமாக இருந்தாள். அவள் கூறிய அந்த எம்.என்.எம் கம்பெனி அனுப்பின ஈமெயிலை படித்து அதை பற்றி தனது மேலதிகாரிக்கு ஒரு ஈமெயில் போட்டு. அதற்கான அனுமதி பெறுதல் போன்ற வேலைகளில் மூழ்கினாள். அன்று மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்ல கார் பார்க்கிங் சென்றவளை தடுத்து நிறுத்திய ருத்ரா 

“ஹேய் தி. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” 

என்று கேட்க அதற்கு சக்தி அவளை நோக்கி 

“முடியாது”

என்று கூறி தனது காரை நோக்கி நடந்த சக்தியை ருத்ரா மீண்டும் வழிமறித்து

“ப்ளீஸ் சக்தி. என்னனு கேட்காமலேயே இப்படி முடியாதுன்னு சொல்லுறே!”

“சரி சொல்லு.”

“எனக்கு அந்த ஜேம்ஸ் மொபைல் நம்பர் தர முடியுமா?”

“வாட்? அவர் நம்பர் உனக்கு எதுக்கு?”

“சும்மா…அவர் போலீஸா. ஏதாவது உதவி தேவைன்னா கேட்கலாம இல்ல. அதுக்கு தான்.”

“ம்…நம்பிட்டேன். நீ சொன்னதை அப்படியே நம்பிட்டேன். நீ மொதல்ல நகரு. நான் வீட்டுக்கு போகணும்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! சக்தி”

“நோ வே ருத்ரா. நான் அவர்கிட்ட கேட்காம அவர் நம்பரை உனக்கு ஷேர் பண்ண முடியாது. ஐ ஆம் வெரி சாரி அபௌட் தட்.”

“சரி நீ அவர்கிட்ட கேட்டுட்டே ஷேர் பண்ணு.”

“சரி கேட்கறேன்.”

“எனக்காக இப்பவே கேளேன். ப்ளீஸ்”

“ம்… சரி இரு. கால் பண்ணறேன். ரிங் போவுது.”

“ம்…ம்…தாங்க்ஸ் சக்தி”

“இன்னும் அவர் என் கால் பிக்கப் கூட பண்ணலை அதுக்குள்ள எதுக்கு தாங்க்ஸ்? ஆங்…ஹலோ மிஸ்டர் ஜேம்ஸ்.”

“ஹாய் சக்தி. என்னாச்சு? அந்த ஜானை எங்கயாவது பார்த்தீங்களா? இல்ல அவன் உங்க ஆஃபிஸுக்கே மறுபடியும் வந்திருக்கானா?”

“ஜேம்ஸ் ஜேம்ஸ். திஸ் இஸ் நாட் அபௌட் தட்.”

“பின்ன என்ன சக்தி? வேற எதாவது க்ளூ கிடைச்சிருக்கா? இல்ல உங்களுக்கு வேற யார் மேலாவது சந்தேகம் வந்திருக்கா?”

“அச்சச்சோ ஜேம்ஸ். கேஸ் பத்தியே இல்ல!”

“அப்படின்னா விஷால் பத்தியா?”

“இல்ல ருத்ரா பத்தி.”

“என்னது ருத்ரா பத்தியா? அவங்களுக்கு என்ன?”

“அவளுக்கு உங்க மொபைல் நம்பர் வேணுமாம். என்னை நச்சரிச்சுட்டு இருக்கா. உங்க கிட்ட கேட்காம குடுக்க மாட்டேன்னு சொன்னேன். அதுக்கு உடனே உங்ககிட்ட கேட்டு தரச்சொல்லி என்னை வீட்டுக்கு போக விடாம தடுத்து நிறுத்தி வச்சிருக்கா.” 

“இதுல என்ன இருக்கு சக்தி. தாராளமா குடுங்க. அவங்களுக்கும் ஏதாவது அவசரம்ன்னா என்ன கூப்பிட வசதியா இருக்கும் இல்ல.”

“ஓ! ஹோ! அது சரி. அது சரி. இதோ இப்பவே குடுத்துடறேன். அவளுக்கும் உடனே அவசரம் வந்திடும் கூப்பிடுவா. சரியா. பை ஃபார் நவ்.”

“ஓகே. பை சக்தி.”

“ஏய் தி! என்ன சொன்னார்?”

“ம்… இந்தா இது தான் அவர் நம்பர்.”

“தாங்க்ஸ் தி. லவ் யூ”

“என்னை லவ் பண்ணவா ஜேம்ஸ் நம்பர் கேட்ட?”

“போ தி.”

“நான் போக தான் வந்தேன். நீ தான் என்ன போக விடாம வழிமறிச்சுட்டு நிக்கற. கொஞ்சம் நகர்ந்தேனா நான் கிளம்ப முடியும்.”

“ஊப்ஸ்! சாரி. ம்…இப்போ நீ தாராளமா போகலாம். பை பை தி. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தி.”

“ம்…ம்…சேம் டூ யூ டூ.” 

சக்தி கேஸில் விசாரணை நடத்த வந்த ஜேம்ஸுக்கும் அவன் சஸ்பிஷன் லிஸ்ட்டில் இருக்கும் ருத்ராவுக்கும் இடையே காதல் மொட்டு ஒன்று மலராக விரிய துவங்கியுள்ளது. சஸ்பிஷன் சஸ்பென்ஷன் ஆகி சந்தோஷத்தில் முடிய போகிறதா  இல்லை சஸ்பிஷன் சஸ்பென்ஸ் ஆகி சங்கடத்தில் முடிய போகிறதா! 

ருத்ராவிடம் இருந்த ஒருவழியாக தப்பித்து ஆஃபிஸில் இருந்து புறப்பட்ட சக்தி நேராக வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது அவள் மனதில் கேள்விகள் பல உதித்தது. அதற்கான விடைகளை அவள் மனம் தேடியலைய ஆரம்பித்தபோது அவள் எப்போதும் செல்லும் லீ கார்னர் ரெஸ்டாரன்ட்டை கடந்து சென்றாள். உடனே மனதில் உதித்த கேள்விகள் அனைத்தும் மறைந்து அவள் அந்த ஜானை  

முதன்முதலில் அங்கு பார்த்த நினைவுகள் நிழலாட துவங்கியது. அதை மனதில் ஆசைப் போட்டுக் கொண்டே சென்றவள் வீடை சென்றடைந்தாள்.  காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பார்க்கிங் கதவை மூடி நிமிர்ந்தவள் கண்கள் விரிந்து பிரகாசமானது.  

தொடர்வாள்…

ருத்ரா சொன்னதை மனதில் ஆசைப் போட்டப்படியே அங்கிருந்து கிளம்பி ஸ்டேஷன் சென்ற ஜேம்ஸுக்கு ஏதோ தோன்ற

“ஓ! ஓ! இந்த ருத்ரா நினைப்புல எப்படி அதை செய்யாம விட்டுட்ட! எப்படிடா ஜேம்ஸ்! “

என்று  தனக்குத்தானே கூறிக்கொண்டே உடனே வண்டியை திருப்பி மீண்டும் சக்தியின் ஆஃபிஸுக்கு சென்று பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சக்தியை மீண்டும் பார்க்க வேண்டுமென்று கூறினான். செக்யூரிட்டியும் சக்தியை ஃபோனில் தொடர்பு கொண்டு விவரம் கூறி அனுமதி கேட்டான். அவரை உள்ளே விடும்படி சக்தி கூறியதும் செக்யூரிட்டி ஜேம்ஸை உள்ளே போக அனுமதித்தார். அப்போது ஜேம்ஸ் அங்கிருந்த செக்யூரிட்டியிடம்

“நீங்க இங்க எவ்வளவு வருஷமா வேலை பார்க்கறீங்க?”

“நான் பத்து வருஷமா வேலை பார்க்கறேன் சார்”

“குட். வெரி குட். ஆமாம் ஜூன் 17 ஆம் தேதி உங்க ஆஃபிஸுக்கு யாராவது… ம்…வழக்கமா வரவங்களை தவிர்த்து…புது ஆட்கள் வந்திருந்தாங்களா?”

“இல்ல சார். அப்படி யாரும் வரலைங்களே! வழக்கமா வரவங்க தான் வந்தாங்க. இருங்க எதுக்கும் சிஸ்டத்துல செக் பண்ணி சொல்லறேன்.”

“சரி நீங்க செக் பண்ணி நோட் பண்ணி வையுங்க. நான் திரும்பி போகும் போது உங்ககிட்ட விவரம் கேட்டுக்கறேன். சரியா”

“சரி சார்.”

என்று செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற ஜேம்ஸ் சக்தியை சந்திக்க அவள் கேபினுக்கு சென்று அவனுக்கும் சக்திக்கும் இடையே தடையாக இருந்த கண்ணாடி கதவை தட்டினான். நிமிர்ந்து பார்த்த சக்தி புன்னகைத்து உள்ளே வரச் சொன்னாள். ஜேம்ஸும் உள்ளே சென்று

“ஹாய் சக்தி சாரி டூ இன்டரப்ட் யூ”

“இட்ஸ் ஓகே ஜேம்ஸ். சொல்லுங்க.”

“உங்க ஆஃபிஸ் கேன்டீனை நான் கொஞ்சம் பார்க்கணும். போகலாமா?கூட்டிட்டு போறீங்களா? இல்ல உங்களுக்கு முக்கியமான வேலை இருந்தா நீங்க அதைப் பாருங்க. எனக்கு பர்மிஷன் வாங்கித் தாங்க நானே போயிட்டு வரேன்.”

“நோ ப்ராப்ளம் ஜேம்ஸ். வாங்க நானே கூட்டிட்டு போறேன். ஜஸ்ட் கிவ் மி டூ மினிட்ஸ் இந்த ஈமெயில் மட்டும் அனுப்பிட்டு வரேன்.”

“ஓகே நான் வெளியே வெயிட் பண்ணறேன். நீங்க முடிச்சிட்டு வாங்க நாம போவோம்.”

“ஷுவர்.”

ஜேம்ஸ் சக்தி கேபினுக்கு வெளியே வந்து அந்த ஆஃபிஸையும் அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே நடந்து சென்றாள் ருத்ரா. அழகான க்ளிப் கொண்டு  கருமையும் பிரௌன் நிறமும் கலந்திருந்த கூந்தலை ஒன்றாக தூக்கி  தலை உச்சியில் கிளிப் செய்திருந்தாள். ஜேம்ஸ் பார்க்கும் போது அதிலிருந்து ஒற்றை முடி அவளின் நெற்றிமுன் சரிந்தது. அதை அவளின் அழகான வெண்ணிற விரலால் நகர்த்தி விட்டதைப்
பார்த்ததும் ஜேம்ஸ் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பட்பட்டென பறக்க ருத்ராவின் அழகில் சொக்கிப் போய் நின்றிருந்தவனை சட்டென யாரோ பின்னால் இருந்து

“ஜேம்ஸ்! ஜேம்ஸ்! ஜேம்….ஸ்”

என்ற அழைப்பு கேட்டதும் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த வண்ணத்துப் பூச்சிகளை ஊதி கலைத்த குரல் யாருடையது என்று திரும்பிப் பார்த்தான். இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி. உடனே தான் எதற்கு எங்கு வந்திருக்கிறோம் என்ற நினைவுக்கு திரும்பி வந்த ஜேம்ஸ் அவளிடம்,

“ஹாய் சக்தி. நீங்கதானா!”

“வேற யாரை எதிர்ப்பார்த்தீங்க ஜேம்ஸ்?”

“இல்ல இல்ல அப்படி எல்லாம் யாரையும் எதிர்ப்பார்க்கலை. சரி சரி உங்க வேலை ஆச்சா? நாம கேன்டீன் போகலாமா?”

“ம்….போகலாம் வாங்க.”

என்று சக்தி கூறியதும் இருவரும் கேன்டீனுக்கு சென்றனர். அங்கிருந்த காஃபி மெஷினில் இருந்து இரண்டு காஃபியை எடுத்துக் கொண்டு வந்த சக்தி ஒன்றை ஜேம்ஸிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அவள் அருந்த ஆரம்பித்தாள். அப்போது ஜேம்ஸ் சக்தியிடம்

“சக்தி உங்களுக்கு இந்த கேன்டீன் ஸ்டாஃப் எல்லாரையும் தெரியுமா?”

“ஆங்! ஓரளவுக்கு எல்லாரையும் தெரியும் ஜேம்ஸ். ஏன் கேட்கறீங்க?”

“நீங்க பாரிஸ் போன அன்னைக்கு உங்களுக்கு சான்ட்விச் கொடுத்த நபர் யாருன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“ஓ! ஜான் தான் எனக்கு அன்னைக்கு சான்ட்விச் செய்து தந்தார். அவர் ரொம்ப நல்ல ஜாலி டைப்”

“ம்…சரி நீங்க
பொறுமையா காபி குடிச்சிட்டு இருங்க.
நான் அங்க போய் ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்‌”

என்று சொல்லி விட்டு தனது காபி கப்புடன் நேராக அங்கிருந்த கிட்சன் பக்கமாக சென்றான். அப்போது அங்கிருந்த ஒரு ஊழியர் ஜேம்ஸை தடுத்து நிறுத்தி

“சார் இது ஸ்டாஃப் ஓன்லி ஏரியா. நீங்க இதுக்கு மேலே உள்ள போகக் கூடாது.”

“ம்…ம்….ஓகே ஓகே. சரி இங்க எத்தனை பேர் வேலை பார்க்கறீங்க?”

“இந்த கேன்டீன்ல…நாங்க ஒரு நூறு பேர் ஷிப்ட் போட்டு வேலை பார்க்கிறோம். ஏன் கேட்கறீங்க?”

“இல்ல போன சனிக்கிழமை காலையில ஒரு பதினோரு மணிக்கு என் தோழி சக்தி ஒரு சான்ட்விச் வாங்கித் தந்தா அது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அது யார் செய்ததுன்னு அவகிட்ட கேட்டபோது…அவ கூட யாரோ ஜா…ன்னு ஆரம்பிக்கிற பெயர் ஏதோ சொன்னா…”

“அது நம்ம ஜான் தான் சார்.”

“அது எப்படி அவ்வளவு தீர்க்கமா சொல்லுறீங்க?”

“போன சனிக்கிழமை அவன் தான் சார் சான்ட்விச் டியூட்டில இருந்தான். அதுனால தான் நான் சொன்னேன்.”

“சரி அவரு இப்ப இங்க இருக்காறா? நான் பார்க்கலாமா?”

“இன்னைக்கு அவனுக்கு எங்க டியூட்டின்னு தெரியலையே!”

“உங்க சூப்பர்வைசரை நான் பார்க்கலாமா?”

“ஓ! தாராளமா. வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்.”

“ம்…தாங்க்ஸ்”

“நீங்க யாரு சார். நியூ ரெக்ரூட்டா?”

“ம்…பார்த்தா அப்படி தெரியுதா!  அப்படியே வச்சுக்கோங்க ஜார்ஜ்!”

“என் பெயர்… எப்படி சார்?”

“உங்க சட்டையில குட்டியா ப்ரின்ட் ஆகியிருக்கும் உங்க பெயரை படிக்க சீக்ரெட் ஏஜென்ட் எல்லாம் வேண்டாம் ஜார்ஜ்… கண்ணு நல்லா தெரிஞ்சாலே போதும்.”

“நீங்க நல்லா பேசுறீங்க சார். இதோ இது தான் எங்க சூப்பர்வைசர் மிஸ்டர் வால்ட்டன் கேபின். நீங்க இங்கேயே இருங்க இதோ வந்துடறேன். சார் மே ஐ கம் இன்.”

என்று அனுமதி கேட்டு உள்ளே சென்ற ஜார்ஜ் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஜேம்ஸை உள்ளே அழைத்துச் சென்று அவனது சூப்பர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். உள்ளே சென்றதும் ஜார்ஜுக்கு நன்றி தெரிவித்து இனி தானே பார்த்துக் கொள்வதாக கூறி வெளியே சென்று வேலையைப் பார்க்க சொன்னார் சூப்பர்வைஸர். ஜார்ஜும் ஜேம்ஸிடம் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். ஜேம்ஸை அமரச் சொன்ன சூப்பர்வைசர் வால்ட்டன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜேம்ஸ் வந்த விவரம் பற்றி விசாரித்தார். அப்போது ஜேம்ஸ் தான் யார் என்பதை விவரித்து அங்கு வேலை செய்யும் ஜான் பற்றி விசாரித்தான். சிறிது நேரம் கழித்து சூப்பர்வைசர் கேபினில் இருந்து வெளியே வந்த ஜேம்ஸ் நேராக சக்தி அம்ர்ந்திருந்த டேபிள் அருகே சென்று அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் முகத்தில் ஏதோ குழப்பம் தெரிந்ததை கண்ட சக்தி அவனிடம்

“என்ன ஜேம்ஸ் என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“ம்…அது ஒண்ணுமில்லை சக்தி. சரி நான் கிளம்பறேன்.”

“என்னாச்சு ஜேம்ஸ்? ஏதோ விசாரிக்கணும்னு போனீங்க. இப்போ நீங்க பாட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றீங்க! ஏதாவது க்ளூ கிடைச்சுதுதா?”

“ம்…கிடைச்சிருக்கு சக்தி.”

“என்னது அது?”

“இந்த கேன்டீன்ல அந்த ஜானை உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்?”

“அவரை கேன்டீன்ல வேலைக்கு சேர்த்து விட்டதே நான் தான் ஜேம்ஸ்.”

“ம்…சூப்பர்வைசர் சொன்னாரு. அது தான் கேட்கறேன் உங்களுக்கு அந்த ஜானை எவ்வளவு நாளா தெரியும்? எப்படி தெரியும்”

“எனக்கு ஜானை…ஒரு ஆறு மாசம் முன்னாடி…நான் எப்பவும் போற லீ கார்னர் ரெஸ்டாரன்ட் வாசல்ல இந்த ஜான் வேலை கேட்டுட்டு நின்னுட்டு இருந்தார். ரெண்டு மூணு தடவ அங்க பார்த்திருக்கேன். நான் பார்த்த போதெல்லாம் அவர் வேலை கேட்டு நிக்கறதும் அந்த ரெஸ்டாரன்ட் காரங்க வேலை ஏதும் இல்லன்னு சொல்லி ஜானை அங்கேந்து நகர்ந்து போக சொல்லறதும்ன்னு இருந்தது. அப்போ அவரை பார்க்கவே பாவமா இருந்ததால நான் எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட ஏதாவது வேலை இருக்கான்னு விசாரிச்சேன். அவரும் ஒரு ஓப்பனிங் இருக்குன்னு சொல்ல உடனே நான் லீ கார்னர் ரெஸ்டாரன்ட் போனேன். ஆனா அன்னைக்கு ஜான் அங்க வரவே இல்லைன்னு ரெஸ்டாரன்ட் ஆட்கள் சொன்னாங்க. அப்போ அவங்க கிட்ட என் கார்ட கொடுத்து ஜான் வந்தால் என்னை வந்து பார்க்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு இரண்டு நாள் கழிச்சு ஜான் என்னைத் தேடி எங்க ஆஃபிஸுக்கு வந்தார். நான் அவரை எங்க கேன்டீன் சூப்பர்வைசர் கிட்ட கூட்டிட்டு போய் அறிமுகப் படுத்தினேன். அவர்கள் வைத்த ஏதேதோ டெஸ்ட்டில் பாஸ் ஆகி இங்கேயே வேலையில் சேர்ந்துட்டார். சோ கடந்த ஆறு மாசமா இங்க தான் வேலை செய்யறார். ஏன் இப்போ ஜானை பத்தி கேட்கறீங்க?”

“ம்…சொல்லறேன். அந்த ஜான் இப்போ இங்க வேலை செய்யலங்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா?”

“அப்படியா? எனக்கு தெரியாதே! ஏன் லீவுல இருக்காறா?”

“லீவ் எல்லாம் இல்ல சக்தி. உங்களுக்கு நடந்த அந்த மர்ம சம்பவத்தன்னைக்கு வேலைக்கு வந்தவன்  ஹாஃப் டே லீவ் போட்டுட்டு போனவன் தானாம். இன்னை வரைக்கும் வேலைக்கு வரலையாம்‌. அவன் மொபைலும் நாட் ரீச்சபுளாம்.”

“அய்யோ! அப்படியா? ஏன் அவர் எங்க போனாராம்? ஓ! மொபைல் ரீச் ஆகலன்னு சொன்னீங்க இல்ல. அப்படீன்னா! சோ! அவரு அன்னைக்கு எனக்கு தந்த அந்த சான்ட்விச் ல தான் ஏதாவது இருந்திருக்குமோ?”

“இருந்திருக்கலாம். இல்லாமையும் இருக்கலாம். அதுக்கு அந்த ஜானை பிடிச்சு கேட்டா தான் தெரியும். ஆனா இப்போதைக்கு என்னோட யூகம் என்னன்னா… அவன் உங்களை ஆறு மாசமா ஃபாலோ பண்ணிருக்கான். உங்க நடவடிக்கைகளை வாட்ச் பண்ணிருக்கான்.”

“அப்போ! ஜான் தான் என்னை கடந்திருக்கானா? ஏன் கடத்தனும்? கடத்திட்டு பின்ன ஏன் மறுபடியும் என்ன அப்படியே திருப்பி கொண்டு வந்து இருந்த இடத்திலேயே விடணும்? ஒண்ணுமே புரியலையே!”

“சக்தி! சக்தி! ரிலாக்ஸ் ப்ளீஸ். நான் சொன்னது எல்லாமே என்னோட யூகம்  தான். சோ… அந்த ஜானை பிடிச்சு விசாரிச்சா தான் உண்மை என்னன்னும், நமக்கு ஒரு தெளிவும் கிடைக்க வாய்ப்பு இருக்கு.”

“பாவம்ன்னு நெனச்சு யாருக்குமே உதவி செய்யக்கூடாது போல! என்னத்த சொல்ல!”

“இப்படி எல்லாம் சட்டுன்னு ஒரு கன்க்ளூஷனுக்கு வந்துடாதீங்க. இதை இங்கேந்து எப்படி நகர்த்தணும்னு எனக்கு தெரியும் அதை நான் பார்த்துக்கறேன். மொதல்ல நாம மறுபடியும் அந்த சிசிடிவி கேமராஸை பார்க்கலாம் வாங்க.”

“ம்…ஓகே வாங்க போகலாம். இனி இந்த கேன்டீன்ல ஒரு டம்பளர் தண்ணீ குடிக்கக்கூட பயமா இருக்கும். சரி வாங்க உள்ளே போகலாம்.”

என்று ஜேம்ஸை மீண்டும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்து பளிச்சிட்டு காட்டும் அறைக்குள் அழைத்துச் சென்றாள் சக்தி.

மர்ம சம்பவத்தன்று சக்திக்கு சான்ட்விச் செய்து கொடுத்த ஜான் அதன் பின் வேலைக்கு வராதது ஏன்? சூழ்ச்சியாலா இல்லை சூழ்நிலையாலா! பதிலை தேடி…

தொடர்வாள்…

தாம்பரம் நால்ரோடு சிக்னல் ரெட்டுக்கு மாறு…

பச்சை நிறம்: ஏய் ரெட் ரெமோ உன்ன தான் சொல்லுறாங்க

மஞ்சள் நிறம்: அடேய் சிவப்பு! சீக்கிரமா எழுந்திரிடா இல்லாட்டி இந்த மக்கா போயிட்டே இருப்பாங்க…அப்புறம் ஏதாவது ஏடா கூடமா ஆயிடும்.

பச்சை நிறம்: அப்புறம் உன்னால நம்மள அப்படியே கழட்டிட்டு போய் வேற எங்கேயாவது போட்டுட்டு… வேற ஒரு கும்பல கொண்டு வந்து ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க!! ம்…சீக்கிரம்.

மெல்ல வெளிச்சமிட்டு காட்டியது சிவப்பு நிற விளக்கு. ஆனால் அதில் அவ்வளவாக பிரகாசம் இருக்கவில்லை.

பச்சை நிறம்: டேய் ஏன்டா இப்படி? கொஞ்சம் பிரைட்டா எரிஞ்சாதானே மக்களுக்கு தெரியும். நீ ஏன் வரவர ரொம்ப சோர்வாவே இருக்க?

சிவப்பு நிறம்: ஆமா!! நான் பிரைட்டா எரிஞ்சா மட்டும் நின்னுடவா போறாங்க?!!! அட போ பச்ச பரிமளம்!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

பச்சை நிறம்: ஆங்!! ஆங்!! இதோ.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: அப்பாடா கரெக்ட்டா எரிஞ்சுட்டேன் இல்ல!!! சரி உன் கதைக்கு வருவோம். சொல்லுடா ரெட் ரெமோ.

சிவப்பு நிறம்: நம்மளோட பேட்ச்ல இருந்த அந்த அடையாறு சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் அட்ரா சிட்டி தாங்க முடியல!!

பச்சை நிறம்: அவன் என்ன பண்ணினான். சிவப்பு சிக்கல்நாதன் எங்கயாவது தப்பாகிப்பா கண்ணடிச்சு சிக்கிக்கிட்டானா?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அங்க அவன் அவனோட அந்த பச்சை பாரிஜாதத்தோடையும் மஞ்சள் மங்களத்தோடையும் ஜாலியா ரோட்டுல, அழகான வண்டிகளுக்கு சிவப்பு நிறக் கண்ணடிக்கறானோ இல்லையோ அவனோட கேர்ள் பிரண்ட்ஸுக்காக ஒழுங்கா கண்ணடிச்சுக்கிட்டிருப்பானே!! சந்தோஷமா இருப்பாங்க! ம்….

பச்சை நிறம்: என்ன மஞ்ச மருது! ரொம்ப வருத்தப்படறா மாதிரி தெரியுதே!!! ஏன் என்னைய பாத்தா கேர்ள் மாதிரி தெரியலையோ. நீ ஒரு மஞ்ச காமாலக்காரன்.. நான் என்னத்த பண்ண!!!

மஞ்சள் நிறம்: அச்சச்சோ!! நீங்க அக்கா கா!!

பச்சை நிறம்: ஏன் அக்கா எல்லாம் கேர்ள்ஸ் இல்லையா என்ன?

மஞ்சள் நிறம்: அது வேற! இது வேறக்கா!!

பச்சை நிறம்: என்னடா வேற வேற?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

மஞ்சள் நிறம்: சரி சரி அதை விடுக்கா. நீ நல்லாவே எரியிறக்கோய்! சிவப்பண்ணே நீ கண்டின்யூ பண்ணு.

சிவப்பு நிறம்: அதை ஏன் கேட்குறீங்க! நான் சோர்வா இருக்கேன்னு என்னை சரி செய்ய நேத்து கழட்டிட்டு போனாங்க இல்ல!!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: அட ஆமா! அந்த செந்தில்நாதன் தான் உன்னைய எடுத்துட்டு போய்…சரி செஞ்சாருன்னு சொன்னாரு…ஆனா எனக்கு… நீ சரி ஆனா மாதிரி ஒண்ணும் தெரியலை!

சிவப்பு நிறம்: இந்த காலத்துல முக்கால் வாசி பேரும் அப்படி தான் பண்ணறாங்க. ஒருத்தரும் அவங்க வேலைய சரியாவே பண்ணறதில்ல. என்ன பண்ண. நான் சொல்ல வந்தது செந்தில பத்தி இல்ல.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அட பாவிங்களா!! தம் புடிச்சு எவ்வளவு நேரம் பளிச்சுன்னு எரிஞ்சேனே!! கொஞ்சமாவது பாத்து போனாங்களான்னு பாரு! பச்சை அக்கா உன்னைய பார்த்தா மாதிரி இல்ல பறக்குறாங்க.

பச்சை நிறம்: அட ஆமா மஞ்ச மருது! என்னத்த சொல்ல போ! இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு நம்ம மூணு பேருன்னே தெரியல!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

சிவப்பு நிறம்: அதைச் சொல்லு பச்சைக்கா.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: டேய் ரெட் ரெமோ, நீ சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டியே! மேல சொல்லு.

சிவப்பு நிறம்: ஆங்!! எங்க விட்டேன். ஆங்… அங்க என்னைய சரி செஞ்சுகிட்டே… அங்க இருந்தவங்க எல்லாருமா பேசிகிட்டு இருந்தாங்க.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு

பச்சை நிறம்: ரெட் நீ அப்படியே எரிஞ்சுகிட்டே உன் கதையை சொல்லு.

சிவப்பு நிறம்: ஆங்! இதோ.

பச்சை நிறம்: ம்…ஹும்…உன்னைய அந்த செந்தில்நாதன் மறுபடியும் கழட்டிட்டு போவாருன்னு நெனைக்கிறேன். சுத்தம். உசுரு போறா மாதிரியே ஏரியிற. ம்…சரி சரி மேல சொல்லு.

சிவப்பு நிறம்: அவங்க சொன்னாங்க நம்ம அடையார் சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் கொஞ்சம் கூட ஓய்வு இல்லாம இத்தனை வருஷம் உழைச்சும் எந்த விதத்திலும் பழுதாகாம இன்னமும் ப்ரைட்டா இருக்கானாம். ஆனா நான் அடிக்கடி வர்க்ஷாப்புக்கு விசிட் அடிக்கிறேனாம்!! அது எப்படி அவனால மட்டும் அப்படி ஃபிட் அன்ட் ஃபைனா இருக்க முடியுது. ஒவ்வொரு வருஷம் கூட கூட ஒவ்வொரு வயசும் ஏறிக்கிட்டே தானே போகும். அவனுக்கு மட்டும் கொறஞ்சுக்கிட்டே வருதா என்ன?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…

மஞ்சள் நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு பச்ச பரிமளம் அக்கா வாயத் திறக்க மாட்டாங்களே!!!

சிவப்பு நிறம்: ஆங்! எப்பவும் என்னைய மட்டும் எரிஞ்சுக்கிட்டே சொல்லும்பாங்க ஆனா அவங்க வேலைன்னு வந்துட்டா பேச மாட்டாங்களே!!

மஞ்சள் நிறம்: என்ன ரெட் ரெமோண்ணே! என்னமோ புதுசா நடக்கறா மாதிரி சொல்லுறீங்க? பச்சை பரிமளம் அக்கா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி ஆக்கும்! சரி நீங்க அக்கா கிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களோ!! எங்க கிட்ட சொன்னா என்ன ஆயிடுமா!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

மஞ்சள் நிறம்: இதோ அழைப்பு வந்துடுச்சு. என்னைய நீங்களும் மதிக்கறது இல்ல!! மக்களும் மதிக்கறதில்ல!! என்னத்த சொல்ல.

பச்சை நிறம்: ம்…என்ன சொன்ன ரெட்டு!! ஆங்!! நம்ம சிக்கல்நாதனுக்கு வயசு கொறஞ்சுகிட்டே வருதான்னு கேட்ட இல்ல!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

சிவப்பு நிறம்: இதோ வந்திடுறேன்க்கா!

பச்சை நிறம்: சரி ரெட் ரெமோ. நீ போய் உன் வேலையை பாத்துக் கிட்டே என் பதில கேளு. அந்த அடையாறு சிக்னல சர்வீஸ் செய்யறவரு நம்ம கந்தசாமி ஐயா. அவருக்கு வயசு ஐம்பத்தி எட்டு. இன்னும் ஒரு வருஷமோ இல்ல ரெண்டு வருஷமோ அப்புறம் ரிட்டையர் ஆயிடுவார். ஆனா அவரோட இந்த முப்பத்தெட்டு வருஷ சர்வீஸ்ல அவரு சரி பார்த்த டிராஃபிக் லைட்ஸ் எதுவுமே சீக்கரத்துல பழுதானதா சரித்திரமே இல்ல. அப்படி ஒரு பொறுப்பான வேலை ஆள்.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் பச்சைக்கு மாறு…

சிவப்பு நிறம்: அப்படியாக்கா? அப்போ ஏன் நம்மள மட்டும் இந்த செந்திலுக்கிட்ட விடுறாங்களாம்!! நல்ல வேலை தெரிஞ்ச, நல்லா வேலை செய்யுற கந்தசாமி ஐயா கிட்டயே கொடுத்து சரி செய்ய சொல்லலாம் இல்ல…நானும் அந்த சிவப்பு சிக்கல்நாதன் மாதிரியே எப்பவும் யூத்தா இருப்பேன்ல்ல.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் மஞ்சள் நிறத்துக்கு மாறு…

பச்சை நிறம்: என்ன பண்ண ரெட் ரெமோ! அவரு அந்த ஏரியா சர்விஸ் மேன். நமக்கு வாச்சிருக்கறது இந்த செந்தில் தான். ஆனா ரொம்ப மக்கர் பண்ணற விளக்கு எல்லாம் கடைசியில் அவரு கிட்ட தான் கொண்டு போவாங்க. உன்னைய பாத்தா எனக்கென்னவோ அடுத்த தடவை உன்னைய கந்தசாமி ஐயா கிட்ட தான் கூட்டிட்டு போவாங்கன்னு நெனைக்கிறேன்.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு….ம்…சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அய்யய்யோ!! பச்ச பரிமளம் அக்கா!! இவன் என்ன முழுசா அணஞ்சுட்டான். சுத்தம்…அதோ அங்க பாருங்க அந்த டிராஃபிக் போலிஸ் அண்ணே ஓடி வராரு.

பச்சை நிறம்: கொஞ்சம் கீழே பாரு மஞ்ச மருது. நம்ம ரெட் ரெமோவ கழட்டிட்டு போக ஆளு வந்தாச்சு.

மஞ்சள் நிறம்: அட ஆமா! இந்த தடவையாவது அவனை அந்த கந்தசாமி ஐயா கிட்ட கொண்டு போகட்டும்.

பச்சை நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு நமக்கு வேலையில்லை.

மஞ்சள் நிறம்: ஏன்க்கா எல்லா மக்களும் இந்த கந்தசாமி ஐயா மாதிரி அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செஞ்சா எந்த வித பிரச்சினையுமே வராது இல்ல. அப்புறமும் ஏன் சிலர் தனக்கான வேலையை சரியாவே செய்ய மாட்டேங்கறாங்க? இந்த செந்தில் நாதன போல!!

பச்சை நிறம்: நாம மூணு பேருமே டிராஃபிக் சிக்னல் தான் ஆனா நம்ம மூணு பேருக்கும் வித்தியாசம் இருக்கு தானே!

மஞ்சள் நிறம்: என்ன பெரிய வித்தியாசம் நீங்க பச்சை நிறம், நான் மஞ்சள் நிறம் அப்புறம் நம்ம ரெமோ சிவப்பு நிறம்…மத்தபடி நாம ஒரே மாதிரி தானே இருக்கோம். ஒரே வேலையை தானே செய்யறோம்!

பச்சை நிறம்: ஏதோ ஒரு வித்தியாசமாவது இருக்கு தானே!

மஞ்சள் நிறம்: ஆமாம் இருக்கு.

பச்சை நிறம்: பொதுவா பார்த்தா நாம டிராஃபிக் சிக்னல் ஆனா நமக்குள்ளேயே வித்தியாசம் இருக்கும்போது, மனுஷங்களுக்குள்ள இருக்காதா என்ன? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. சிலர் அவங்க வேலையில் சின்சியறா இருப்பாங்க, சிலர் அப்படி இருக்கறதில்ல. என்ன பண்ண மஞ்ச மருது?

மஞ்சள் நிறம்: அக்கா அக்கா! பச்சை பரிமளம் அக்கா! அங்க பாரு. நம்ம ரெட் ரெமோவை எடுத்துட்டு வராங்க.

பச்சை நிறம்: ஏய் இந்த தடவ வேற யாரோ வர்றாங்க போல! அடேய் இது நம்ம செந்தில் இல்லையே டா!

மஞ்சள் நிறம்: அட ஆமாக்கா!! இவரு புதுசு போல. அவரு சட்டையில பேரு ஏதோ ராமசாமின்னு போட்டுருக்குக்கா. அப்பாடா அந்த சொதப்பல் செந்தில் நாதன்ட்டேந்து நமக்கு விடுதலை. அக்கா சிவப்பு அண்ணனை பொறுத்தராருக்கா. இறங்கிட்டாருக்கா.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: பச்சை பரிமளம் அக்கா முன்ன விட இப்போ எவ்வளவு பளிச்சுனு எரியுறான் பாருங்க அக்கா!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…

சிவப்பு நிறம்: ஹாய்! ஐ ஆம் ரெட் ரகு. அன்ட் யூ!

மஞ்சள் நிறம்: பச்ச பரிமளம் அக்கா சாச்சுப்புட்டாங்கக்கா!!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: என்னடா மஞ்ச மருது! நான் தான் அப்பவே சொன்னேன் ல நமக்குள்ளேயும் வித்தியாசம் இருக்குன்னு!! நம்ம ரெட் ரெமோ அவன் வேலையை பாக்காம அந்த அடையாறு சிவப்பு சிக்கல பத்தியே நெனைச்சுட்டு கோட்டை விட்டுட்டான். அடுத்தவனை பத்தி நினைக்காம ஒழுங்கா அவன் வேலையில மட்டும் கவனம் செலுத்தி இருந்தா இங்கேயே நம்ம கூடவே இருந்திருப்பான்! ஆனா அவன் அப்படி செய்யல அதுதான் ரெமோ இடத்துல இப்போ ரகு! அதே மாதிரி தான் அந்த செந்தில் நாதனும் அதுனால தான் செந்திலுக்கு பதில் ராமசாமி. தட்ஸ் ஆல். வெஹிக்கிள் மே கம் வெஹிக்கிள் மே கோ பட் சிக்னல் ஹாஸ் டூ கோ ஆன் ஃபார் எவர்! ஹாய் ரெட் ரகு! ஐ ஆம் பச்சை பரிமளம். வெல்கம் டூ தாம்பரம் நால்ரோடு சிக்னல்.



❤️முற்றும்❤️
நா. பார்வதி

“women empowerment” என்ற இந்த இரு சொற்கள் சமீப காலமாக எல்லா மேடைகளிலும், நிகழ்வுகளிலும் சந்திப்புகளிலும் பலரால் பேசப்படும் ஒன்று. அப்படியென்றால் என்ன? அதாவது மகளீரை சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்துதல் என்று கூறி வருகிறார்கள். மகளீரை மேம்படுத்தவோ இல்லை அவர்களுக்கான மதிப்பு மரியாதையை அளிக்கவோ மற்றவர்கள் யார்? இல்லை அவற்றை ஏன் மகளீர் கேட்டு பெறவேண்டும்? மேடைகளில் பேசி பெற வேண்டும்? ஒரு பெண் தான் நடந்துக்கொள்ளும் விதத்திலும் பேசி பழகும் விதத்திலும் அவளுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவ்விடமிருந்து விலகி நிற்கும் தைரியமும் துணிச்சலும் வேண்டும்.

ஐந்து பெண்கள் கொண்ட குழு ஒன்றில் இந்த தலைப்பு பேசப்பட்டது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் ஒரு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டுமென்றும் அது இருந்தால் அவள் எதையும் சாதிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள். அதே போல வேறொரு நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி ஒருவர் இதை போலவே எந்த பெண்ணும் நாலு காசு சம்பாதித்தால் அவளுக்கு அவள் வீட்டிலும் வெளியேவும் கிடைக்கும் மரியாதையே தனி என்றார். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. (அப்படியெனில் அவர்கள் யாரும் அவரவர் குடும்பத்தில் படிக்காத அம்மாக்களையோ அல்லது பெரியம்மாக்களையோ மதித்ததில்லையா!!) என்னது!! என்று எழுந்து கேட்க தோன்றியது. சபை நாகரீகம் கருதி ஏதும் பேசாது எழுந்து அவ்விடத்திலிருந்து வெளியேறினேன். எத்தனை எத்தனை பெண்கள் சுயதொழில் செய்தும், அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் எல்லாம் பணிபுரிகிறார்கள். அவர்கள் அத்துனை பேரும் empowered women என்று கூறிவிட முடியுமா? மேலும் ஒரு பெண்மணி கூறுகிறார் “ஒரு பெண் சம்பாதிக்க ஆரம்பித்தால் அவள் எதற்கும் கணவனிடமோ தந்தையிடமோ நிற்க தேவையில்லை”. நல்லது. ஆனால் அவர்கள் யார்? நம் குடும்பத்தினர் தானே. நாம் வேறு எவரோ மூன்றாம் மனிதர்களிடமா கேட்கிறோம்?

இன்னொரு பெண்மணி கூறுகிறார், உலகத்திலேயே பிள்ளையைப் பெற்று வளர்ப்பது என்பது மிக சுலபமான வேலையாம் அதை விட கடினமானது பணம் சம்பாதிப்பதும் அதை சேமிப்பதுமாம். ஒரு பெண்ணுக்கு சம்பாதியம் இருந்தால் போதுமாம். அவளால் எதையும் சாதிக்க முடியுமாம்‌. அடுத்து வளர்ந்து வரும் பெண் குழந்தைகளிடம், தானே சம்பாதித்து எதற்கும் யாரிடமும் நிற்க கூடாதென்று கற்றுக்கொடுக்க வேண்டுமாம். நல்லது தான். அதை ஏன் பணத்துடன் ஒப்பிட்டு சொல்லிக் குடுக்க வேண்டும்? பெற்றோர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்க்கையில் எதற்கும் எவரிடமும் சென்று உதவி கேட்டு நிற்காது வாழ்க்கையை வாழ்ந்து வந்தோமே என்றால் அதை நம் பிள்ளைகள் பார்த்து அவர்களாகவே கற்றுக்கொள்ள போகிறார்கள். இதற்கு, நீ சம்பாதித்து யாரிடமும் நிற்காதே என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!
கேட்கவும் கூட்டத்தோடு கூட்டமாக கைத்தட்டவும் ஆட்கள் இருக்கும் வரை இது போன்றோர் பேச்சுக்கு மௌசு இருக்க தான் செய்யும்.

நான் சம்பாதிக்கிறேன் இது என்னுடையது நீ சம்பாதிக்கிறாய் அது உன்னுடையதும் என்னுடயதும். நான் எங்கு வேண்டுமானாலும் சென்று வருவேன் அது என் சுதந்திரம் அதில் நீ தலையிடக்கூடாது ஆனால் நீ எங்கு செல்வதாக இருந்தாலும் என்னிடம் கூறவேண்டும். நம் பிள்ளைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் இரண்டு நாட்கள் நீ பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன். சமையலை நீ பார்த்துக் கொள் ஏனெனில் நான் வேலைக்கு போகிறேன் என்றெல்லாம் பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் அவர்களின் பொறுப்புகளில் இருந்து அவர்கள் தப்பிப்பதற்கு கூறும் காரணங்களாக தான் தோன்றுகிறது. ஏனெனில் அந்த காலத்திலும் பெண்கள் பலர் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். தம்பதிகள் பலர் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு குடும்ப ஒற்றுமைக்காக வளைந்துக் கொடுத்து (ஆணும் சரி பெண்ணும் சரி) வாழ்க்கை என்னும் சாகரத்தை கடந்து வந்துள்ளனர். (நடிகை, பேச்சாளர், பாடகி ரேவதி சங்கரன் அவர்களின் பேட்டியை பார்த்தால் புரியும்) இந்த காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் சம்பாதித்தாக வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால் பணமிருந்தால் படைபலம் வரும் என்ற தவறான நம்பிக்கையை அடுத்த சந்ததியினரிடம் விதைக்காதிருங்கள். நல்ல குணமிருந்தால் மன நிம்மதியுடன் அமைதியான அழகான வாழ்க்கையை வாழலாம் என்றவிதையை தூவுங்கள், அவை வளமான செடி, மரங்களாகி மானிடம் உயிர்ப்பித்திருக்க ஏதுவாக இருக்கட்டும்.

ஆக பணம் அல்லது பொருளாதார சுதந்திரமிருந்தால் மட்டும் ஒரு பெண் அதிகாரம் பெற்றவள் அல்லது சக்தி பெற்றவளாகி விடுவாள் என்பது என்னை பொறுத்தவரை தவறான கருத்தாகும்.

இன்னொரு கூட்டத்தில் வெளிநாட்டில் ஒரு பணியில் இருக்கும் இந்திய பெண் கூறுவதாவது, நாம் எங்கு பணி புரிகிறோம் எந்த ஊரில் இருக்கிறோம் என்பதற்கு ஏற்றார் போல் உடையணிந்துக் கொள்ள வேண்டுமாம் இல்லையென்றால் நாம் ஒதுக்கி வைக்கப்படுவோமாம். இது என்ன அபத்தம். (குளிர், வெயில் அல்லது பனி பிரதேசத்துக்கு ஏற்றார் போல் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்றால் அதில் ஒரு அர்த்தம் உள்ளது) முதலில் நாம் நமது தேசிய உடைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு அதன் அருமை பெருமை அறிந்திருக்க வேண்டும். நமக்கு நம்மீதும் நமது திறமை மீதும் நம்பிக்கை இருந்தால் உடை என்பது எப்போதுமே தடையாகாது. சில தருணங்களில் தடையாக மற்றவர் பார்வையில் தோன்றினாலும் அதை தகர்த்தெறிய வேண்டியது நாம் தான். நமது செயல் தான். ஒரு மேல் நாட்டு பெண் நம் நாட்டின் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் சில காலம் பணிப்புரிய வந்தாலும் அவர் என்றுமே நமது நாட்டு உடையை அணிந்து அலுவலகம் வருவதில்லையே!! அது ஏன்? அதை ஏன் நம் மக்கள் (குறிப்பாக பெண்கள்) விமர்சிப்பதில்லை. அவர்கள் பணி நிமித்தம் வந்திருப்பதோ இந்தியா! அப்படி இருந்தும் அவர்கள் ஏன் புடவையோ அல்லது சல்வாரோ அணிவதில்லை. ஆனால் நமது இந்திய பெண்கள் வெளிநாடுகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதென்றாலே ஏதோ அவர்கள் பொறந்து வளர்ந்ததே அந்நாட்டில் தான் என்பதைப் போல உடை அணிந்துக் கொள்வார்கள். ஏன் வெளிநாடு வரை செல்ல வேண்டும் நமது இந்தியாவிலேயே இது தானே நடந்து வருகிறது. புடவையோ, சல்வாரோ அல்லது சுடிதாரோ அணிந்து செல்வதனால் எவ்விதத்திலும் நாம் எவருக்கும் குறைந்தவர்களாக போவதில்லை. உடை என்பது அவரவர் விருப்பம் என்றெல்லாம் கொடிப்பிடிப்போரே!!! அதை யாரும் மறுக்கவில்லை ஆனால் அதே நேரம் நமது நாட்டு உடைகள் அணிபவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்கலாமே!

ஆக women empowerment என்பது நாம் அணியும் ஆடைகளில் இல்லை. நாம் எவ்வித உடை அணிந்தாலும் அது எதற்கும் தடையாக இருக்க போவதும் இல்லை.

பெண்கள் கேட்டு பெறுவதில்லை “Women Empowerment” அவளுக்கென அவளே உருவாக்கி அல்லது செதுக்கிக் கொள்ளும் திறன்.

உன்னையும் என்னையும் இந்த பூமிக்கு கொண்டுவந்தவளே பெண் தானடா.
பின் அவளுக்கு அதிகாரம் கொடுப்பதற்கோ, மறுப்பதற்கோ இல்லை தட்டிப் பறிப்பதற்கோ நீ யாராடா.

பெண்ணே உன்னால் ஒரு உயிரை இந்த உலகிற்கு அளிக்க முடியுமெனில் உன்னால் இது/அது முடியாதென்பவர் மூடர்களே!

உனக்கான அதிகாரத்தை ஏன் வெளியில் தேடுகிறாய்? ஏன் மேடையில் முழக்கமிட்டு செவிடர்கள் காதில் சங்கு ஊதுவதைப் போல் உன் ஆற்றலை வீணடிக்கிறாய்? பெண்ணே உனக்கான அதிகாரம், சுதந்திரம் எதுவாக இருந்தாலும் அதை இந்த சமுதாயமோ பொருளாதாராமோ தந்துவிடாது. எனவே பெண்ணே தைரியத்தை வளர்த்துக் கொள். உனது எண்ணத்தை உரக்க சொல்ல பழகி கொள்.

தவராக இருந்தால் திருத்திக் கொள் இல்லையேல் மனத் திருப்த்திக் கொள்.

நமக்கு நாமே, உனக்கு நீயே என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள். நீயே உனக்கான உனது முதுகெலும்பாவாய். எனவே பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற ஓட்டத்தில் உனது குடும்பத்தினரை விட்டுவிடாதே/தொலைத்து விடாதே. ஏனெனில் அவர்களும் முதுகெலும்பான உன்னை சேர்த்துப் பிடித்து நிமிர்த்த உதவும் சிறிய எலும்புகளாவார்கள் என்பதை நீ மறந்து விடாதே.

பெண் சக்தி என்பது இவை அனைத்தும் ஒருசேர இருப்பதே.
எனவே தனித்தனியாக பிரித்து அதில் எனக்கு அதிகாரம்/சுதந்திரம் வேண்டும், இதில் வேண்டுமென்றெல்லாம் எவரிடமும் கேட்காதே.

உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே.
நமது பண்பு, குணம், கலாச்சாரம், அன்பு, பாசம், அக்கறை, தைரியம், மனோபலம் ஆகியவற்றை பெண் அதிகாரம்/சுதந்திரம் வேண்டி தொலைத்து விடாதே. இவ்வுலகில் சுதந்திர தேவிக்கு தான் சிலை உள்ளது எந்த சுதந்திர தேவனுக்கும் இல்லை என்பதை மறந்து விடாதே!
உனது சுதந்திரம் (அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி) அடுத்தவருக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தலாகாது என்பதை மட்டும் நினைவில் கொள். உனக்கே உரித்தான உனது பெண்மை என்ற சிறகுளை விரித்துடு, பறந்திடு.

🙏நன்றி 🙏

ஏர்போர்ட்டில் காத்திருந்த நவீன் மிருதுளாவின் கண்கள் வெளியே வருவோரை எல்லாம் வழியிலிருந்து நகர்த்தி தங்கள் மகளின் வருகையைப் பார்த்திருந்தன. சிறிது நேரமாகியும் சக்தி வராததால் இருவரும் பதற்றமானார்கள். உடனே நவீன் சக்தியை அவள் கைப்பேசியில் அழைத்தான். அப்போது மிருதுளா அவனைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பிய நவீன் சக்தியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான். சக்தியும் தன் அம்மாவையும் அப்பாவையும் இறுக்கி அணைத்துக் கொண்டு..

“ஐ மிஸ் யூ போத் வெரி மச்.”

“என்னடி சக்தி இப்படி இளைச்சுப் போயிருக்க?”

“ம்…அதுதான் பதினைந்து நாள் இருக்கப் போறேனே”

“அதுக்கு?”

“நீ அத சாப்புடு இத சாப்புடுனுட்டு ஏத்தி விட்டிடுவியேமா!!
அப்புறம் என்ன?”

“ம்…சரி சரி கார்ல ஏறு சக்தி‌.
உங்க அம்மாவை விட்டா இங்கேயே நின்னுண்டு பேசிண்டே இருப்பா.
மிருது வண்டில ஏறுமா”

என்று மூவரும் காரில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.

“சக்தி நீ போய் குளிச்சிட்டு வா.
அதுக்குள்ள நான் இட்டிலி வைச்சுடறேன்.”

“சரி மா. இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்.
பொங்கல், வடை அன்ட் சாம்பார் வாசம் தூக்கறது.”

“போமா போய் குளிச்சிட்டு வாடா”

“அப்பா அந்த குட்டி வடையை மட்டும் எடுத்து ஊட்டிவிடேன். நான் போய் குளிச்சிட்டு வந்து மிச்சத்தை சாப்பிட்டுக்கறேன்”

“ம்….இந்தா ஆ காட்டு. ஓடு ஓடு குளிச்சிட்டு வா‌. நாங்களும் உன் கூட சாப்பிடறதுக்காகக் காத்திருக்கோம்.”

“ஓ!! நீங்களும் இன்னும் சாப்பிடலையா. அச்சச்சோ. அப்போ இரு ஜஸ்ட் டூ மினிட்ஸ் ல குளிச்சிட்டு வந்துடறேன்”

சக்தி குளித்து வந்ததும் மூவருமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்து உண்டனர். சக்திக்கோ அம்மா கையால் சாப்பிட்டு நான்கு மாதங்களானது, நவீன் மிருதுளாவுக்கோ தங்கள் மகளின்றி சாப்பிட பிடிக்காது போய் நான்கு மாதங்களானது. ஆக மூவருமே நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று தான் நன்றாக உண்டனர். பின் சற்று நேரம் கல்லூரிக் கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். சக்தி வீட்டிலிருந்த பதினைந்து நாட்களையும் தன் அப்பா அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததில் பதினைந்து நாள் முடியப் போகிறது என்று வந்ததும் அவளை கவலை தொற்றிக் கொண்டது. மிருதுளா வழக்கம் போல அவளுக்கான பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, கொத்தமல்லிப் பொடி, ஊறுகாய், தக்காளி தொக்கு, முறுக்கு, பக்கோடா, ஸ்வீட்ஸ் என எல்லாம் சக்தி ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் செய்து பேக்கிங்கிற்கு தயாராக வைத்தாள். நவீனும் சக்தியுமாக அன்றிரவு அனைத்தையும் பேக் செய்தனர். மீண்டும் லண்டனுக்கு பயணிக்க ஆயத்தம் ஆனாள் சக்தி.

மறுநாள் விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சக்தி கையில் கட்டிக் கொண்டு போவதற்காக இட்டிலி, வெங்காயச் சட்டினி, சப்பாத்தி, புளியோதரை எல்லாம் செய்து அவற்றை ஆற வைத்தாள். நவீன் ஐந்து மணிக்கு எழுந்து வந்து மிருதுளா செய்து வைத்திருந்ததை பேக் செய்து வைத்தான். பின் சக்தியை ஐந்தே முக்கால் மணிக்கு எழுப்பி விட்டான். சக்தியும் எழுந்து கிடுகிடுவென குளித்து கிளப்பி ஹாலுக்கு வந்து சாப்பாட்டுப் பேக்கிங்கைப் பார்த்து

“அம்மா இதெல்லாம் என்ன? நான் எங்க வைச்சுப்பேன்?”

“இது இட்டிலி அன்ட் சட்னி, இதுல சப்பாத்தி இருக்கு தக்காளித் தொக்கு தொட்டுண்டு சாப்ட்டுக்கோ, இது புளியோதரை.”

“அம்மா…இதெல்லாம் நான் இன்னைக்கே எப்படி சாப்டுவேன். அப்போ ஃப்ளைட்ல தர சாப்பாட்டை என்ன பண்ணுவேன்”

“சரி அப்போ இதை எல்லாம் உன் ரூமுக்குப் போனதும் ஃப்ரிட்ஜில வச்சுடு. இரண்டு நாளைக்கு ஆச்சு.”

“அப்போ நேத்து என்னென்னவோ கட்டிக் குடுத்தியே அதெல்லாம் என்ன?”

“அதெல்லாம் தொக்கும், ஊறுகாயும், ஸ்னாக்ஸும். அது மூணு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. இது ஜஸ்ட் ஃபார் டூ டேஸ். நீ போய் செட்டில் ஆகற வரைக்கும்…சாப்பாட்டுக்காக வெளியில போக வேண்டாம் பாரு அதுக்காக”

“அதெல்லாம் சரி…இப்போ இதெல்லாம் எங்க வச்சுப்பேன்?”

“சக்தி உன் ஹான்ட் லக்கேஜ்ல இடம் விட்டு வச்சிருக்கேன் பாரு அதுல வச்சுக்கோ. சரி மிருது நானும் குளிச்சிட்டு வந்தாச்சு. நீ போய் குளிச்சிட்டு வந்துடு ஏர்போர்ட் போகணும் நாழியாகறது பாரு.”

என்று மிருதுளா குளிக்கப் போனதும் நவீனும் சக்தியுமாக அவளது ஹான்ட் லக்கேஜ்ஜை பேக் செய்து ஏர்போர்ட் செல்ல தயாரானார்கள். மிருதுளா குளித்து ரெடியாகி வந்து சுவாமிக்கு விளக்கேற்றி நன்றாக வேண்டிக்கொண்டு சக்திக்கு விபூதி இட்டு விட்டாள். சக்தியும் சாமி கும்பிட்டுக் கொண்டப்பின் மூவரும் ஆளுக்கொரு பெட்டி எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்று அங்கிருந்து தங்கள் காரில் ஏர்போர்ட் சென்றனர். அங்கே செக் இன் முடிந்ததும் சக்தி உள்ளே போகாமல் தயங்கி தயங்கி நவீனையும் மிருதுளாவையுமே பார்த்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்துச் சென்றதைப் பார்த்த நவீன் அவளை தங்களிடம் வரும் படிச் சொன்னான். உடனே ஓடி வந்தாள் சக்தி

“கண்ணா என்ன ஆச்சு? ஏன் செக்யூரிட்டி செக்கிங் போக உனக்கு இவ்வளவு தயக்கம்?”

“அப்பா அம்மா எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. ஐ திங்….”

“சரி அப்படீன்னா நீ போக வேண்டாம். எங்களோட ஆத்துக்கு வந்துடு”

“அம்மா என்னம்மா சொல்லற? எனக்கு படிக்க போகணும் ஆனா உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனேன்னு கஷ்டமா இருக்கு…அதுதான் யோசிக்கறேன்…நீ என்னடான்னா ஆத்துக்குப் போகலாம்னு சொல்லறயே!!”

“இங்க பாரு சக்தி அப்படித்தான் இருக்கும் ஆனா என்ன பண்ண படிப்பும் முக்கியம் தானே. போடா கண்ணா போய் நல்லபடியா படிப்ப முடிச்சிட்டு வா. இதோ பாரு ஒரு செமஸ்டர் முடிஞ்சாச்சு இன்னும் ஒரு அஞ்சு தானே…அதுவுமில்லாம ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்சிட்டும் நீ ஆத்துக்கு வரப்போற அப்புறம் என்ன? இன்னும் ஜஸ்ட் ஒரு நாலே மாசம் தானே. கண்ணைத் தொடச்சிண்டு போய் படிக்கற வேலையைப்பாரு”

“ஓகே அம்மா. நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி. நான் போயிட்டு வர்றேன் அப்பா அன்ட் அம்மா. பை. லவ் யூ போத். டேக் கேர்”

“வீ டூ லவ் யூ கண்ணா. யூ டூ டேக் கேர். பை பை”

என்று கூறி சக்தியை தேத்தி அனுப்பிய மிருதுளா …சக்தி தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை கவனித்த நவீன்

“ஏய் மிருது என்ன இது மறுபடியுமா? சக்திக்கு அவ்வளவு எடுத்துச் சொல்லிட்டு நீயே அழலாமா?”

“நான் அம்மாவாச்சே நவீன். அவளுக்கு தைரியம் சொல்வது என் கடமையாச்சே. ஆனா அவளைப் பிரியும்போது ஏதோ உள்ளப் பண்ணறதுப்பா.”

“இட்ஸ் ஓகே. அவ இன்னும் நாலே மாசத்துல திரும்பி வந்து நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறா அப்புறமென்ன. கண்ணைத் தொடச்சுக்கோ. வா நாம ஆத்துக்குப் போகலாம்.”

என்று சக்திக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்த மிருதுளாவுக்கு நவீன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்றதும் மிருதுளா நவீனிடம்

“சரி சக்தி அவ பாட்டுக்கு வந்தா இருந்தா இதா இப்போ ஊருக்கும் கிளம்பி போயிட்டா. இனி நான் என்னப் பண்ணுவேன்?”

“ம்…
உன் வேலையை விடும்போது இந்த யோசனை இருக்கலையா?
உனக்கு யாரு நாலு நாலு மாசம் மட்டும் வேலைத் தருவா?
பேசமா உன்னோட வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையிருக்கு இல்ல அதைப் பாரு.”

“நவீன் எனக்கொரு யோசனை சொல்லவா”

“ம்…சொல்லு மிருது”

“நாமளே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”

“என்னது?”

“அதுதான் இங்க பிஸினஸ் தொடங்கறது ரொம்ப ஈஸியாமே. டாக்யூமென்ட்ஸ் எல்லாம் ஒங்கா சப்மிட் பண்ணினா லைசென்ஸ் உடனே கிடைச்சிடுமாமே! நியூஸ் பேப்பர்ல படிச்சேன்.”

“அதெல்லாம் சரி தான் மிருது.
ஆனா நான் என் வேலையை விடவேண்டியிருக்கும்.
ஏன்னா நான் என் வேலையையும் பார்த்துண்டு பிஸினஸும் பண்ணக் கூடாது.
எத்திக்கலி இட்ஸ் ராங்.
அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சா ஸ்டார்ட்டிங்ல வீ வில் நாட் கெட் ரெகுலர் இன்கம்.
அப்புறம் எப்படி நம்ம சக்திப் படிப்புக்கு பணம் கட்டுவோம்?
அப்படியே ஆரம்பிச்சாலும் என்ன பிஸஸ் பண்ணறது?”

“கன்சல்டன்சி ஃபேர்ம் தான். நான் அக்கௌன்ட்டிங் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட லீகல் பார்த்துக்கோங்கோ. என்ன சொல்லறேங்கள்?”

“நல்லா தான் இருக்கு.
நம்ம சக்தி படிப்பு முடிஞ்சிட்டு ஆரம்பிக்கலாம்.
நானும் அதுக்குள்ள அதுக்கு வேண்டிய டீட்டேயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன்.
ஆனா இப்போதைக்கு வேண்டாம் மிருது.
ஒரு இரண்டரை வருஷம் கழிச்சு பார்ப்போம்”

“ம்…அதுவும் கரெக்ட் தான் நவீ.
நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்.
அவ படிப்பு முடிச்சதும் ஆரம்பிச்சுக்கலாம்.”

என்று அவளின் எண்ணத்தை மீண்டும் மூட்டைக் கட்டி பரணில் போட்டாள் மிருதுளா. பின் இரண்டரை வருடங்களும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை என சக்தியின் வரவு, மகிழ்ச்சியான தருணங்கள், மீண்டும் சக்தியின் புறப்பாடு, சாப்பாடு, ஸ்னாக்ஸ், ஊறுகாய், பொடிகள் கட்டுவது, மீண்டும் கண்ணீர், மீண்டும் வரவு …மீண்டும் பிரிவு என்று முடிந்து சக்தி குவைத்துக்கே திரும்பி வந்தாள். ஆனால் வந்தவள் அவளுக்கு யூரோப்பில் மேல் படிப்புப்புக்காக அட்மிஷன் கிடைத்துள்ளதாகவும் அதுவும் ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவள் கூறியதில் பெருமையடைந்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் மனதோரத்தில் மீண்டும் தங்கள் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் சக்தியின் இளங்கலைப் படிப்பு அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை அளித்தது. மன தைரியத்தை வளர்க்க ஏதுவாக இருந்தது. தங்கள் மகள் திருமணமாகிச் சென்றால் எப்படியும் தாங்கள் இருவரும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்பதை தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களை அவர்களே தேத்திக் கொண்டனர்.

சக்தி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக யூரோப்பிற்குச் சென்றாள். அவளுக்காக இனி நவீன் எந்த வித செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லாது போனது. ஏனெனில் அவளுக்கு படிப்பு செலவு, தங்குவதற்கான செலவு மற்றும் ஸ்டைஃபன்ட் எனப்படும் உதிவித் தொகை என எல்லாம் கிடைத்தது. அவள் யூரோப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும் மிருதுளா நவீனிடம் மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்

“மிருது நாம லைசென்ஸ் க்கு அப்ளைப் பண்ணலாம்.
ஆனா நான் இப்போதைக்கு வேலையை விட மாட்டேன்.
நீ தான் பிஸினஸைப் பார்த்துக்கணும். நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணறேன். லீட்ஸ் தர்றேன்.
என்னால முழுசா அதுல இப்போ இறங்க முடியாது.
என்ன சொல்லற?”

“ம்…
ஓகே நவீன்.
நான் பார்த்துக்கறேன்”

“மிருது இது நீ போன வேலைகள் மாதிரி இல்ல…
வேண்டாம்னா விட்டுட்டு வர்றதுக்கு…
ஒரு லைசென்ஸ் எடுக்கவே அஞ்சு ஆறு லட்சமாகும்…
நன்னா யோசிச்சு சொல்லு”

“நான் இந்த இரண்டரை வருஷமா நல்லா யோசிச்சாச்சுப் பா.
நிச்சயம் நான் நல்லா பண்ணுவேன்.
நீங்க லைசென்ஸ் க்கு அப்ளை பண்ணுங்கோ.”

“நீ தான் உன் பெயர்ல தான் பண்ணணும்.”

“ஓ!! ஓகே சரி நாளைக்கு புதன் கிழமை. நாளைக்கே பண்ணிடுவோம்”

“அது என்ன!
நாளை என்ன ஸ்பெஷாலிட்டி?”

“பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.
அதுதான் சொன்னேன்.”

“ம்…
ஓகே.
அப்போ நாளைக்கே அப்ளைப் பண்ணிடலாம்.
ஸோ மிருது பெரிய பிஸினஸ் மாக்னெட்டாகப் போறா!”

“பார்ப்போம்.
எல்லாம் அந்த கடவுளோட அனுகிரகம் இருந்தா நல்லப்படியா தான் நடக்கும்.”

“சரி உன் பிஸினஸுக்கு என்னப் பெயர் வைக்கப் போற மிருது?
ஏன்னா நாளைக்கு அப்ளை பண்ணும் போது மூணு பெயர்களைக் கொடுக்கணும்.
அதுல ஒன்னைத் தான் அவா அப்ரூவ் பண்ணுவா”

“ஆங்…
அதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.
உத்கிருஅஷ்ட் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்
தக்க்ஷக் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
எப்படி?”

“அட…
சூப்பர் மிருது.
இதெல்லாம் எப்ப யோசிச்சு வச்ச?”

“இரண்டரை வருஷமா யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.”

“பார்ப்போம்.
இதில் எதை அப்ரூவ் பண்ணறான்னு?”

என்று அவர்கள் பேசிக்கொண்டது போலவே மறுநாள் புதன்கிழமை பிஸ்னஸ் லைசென்ஸ் க்கு அப்ளை செய்தனர். மளமளவென வேலைகளும் நடந்தன. லைசென்ஸும் கிடைத்தது.

“ஹேய் நவீ.
இன்னைக்கு எனக்கு ஈமெயில் வந்தது. நம்ம கன்சல்டன்சி ஃபேர்முக்கு அப்ரூவான பெயர் “விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்”.”

“சூப்பர் மிருது.
கங்ராட்ஸ்.
எப்பேலேந்து வேலைகளைத் துவங்கப் போற?”

“முதல்ல இந்த லைசென்ஸ் வச்சு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும். அதுக்கப்புறம் மெல்ல வேலைகளை ஆரம்பிக்கணும் நவீ”

“சூப்பர்.
பேங்க் அக்கவுண்ட் ஓபனிங்குக்கு பிஸினஸ் ப்ளான் எல்லாம் ரெடியா வச்சிருக்கனு சொல்லு.”

“எஸ் எஸ்…
கொஞ்சம் இருங்கோ.
ம்…
இந்தாங்கோ.
படிச்சுப் பார்த்துட்டு ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்கோ.”

“ம்…ம்…
வாவ்.
பக்காவா எழுதியிருக்க மிருது.
இதை எல்லாம் பார்த்தா…
நீ பிஸினஸ் உமன் ஆகனும்ங்கறதுக்காக தான் கடவுள் உன்னை எந்த வேலையிலலேயும் இருக்க விடலைப் போல.”

“இருக்கலாம்.
இது தான் எனக்கானதுப் போல!”

“கலக்கு கலக்கு மிருது.
நானும் உனக்கு லீட்ஸ் தர்றேன்.”

“நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ரெண்டு மூணு அக்கவுண்ட்டிங் அன்ட் ஆடிட்டிங் ஃபேர்ம்ஸ் கூட அக்ரிமெண்ட் போட ஏற்பாடு செய்திருக்கேன் நவீ”

“சூப்பர். சூப்பர்.
மிருது இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் வேலையை விட்டுட்டு உன் ஃபேர்ம்லேயே ஜாயின் பண்ணிடறேன்‌.”

“என்னோட ஃபேர்ம் பிக்கப் ஆகற வரைக்கும் நீங்க உங்க வேலையை விட வேண்டாம் நவீ.
எப்போ நல்லா வளர்ந்து ரெகுலர் இன்கம் வர்றதோ…
அப்போ நீங்க உங்க வேலையை விட்டுட்டு வாங்கோ…
நான் உங்களுக்கு வேலை தர்றேன்.”

“ம்….
ஓகே மேடம்”

“ஏய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பா”

“நானும் தான் விளையாட்டுச் சொன்னேன்”

“ஏய்!!!
ஹா! ஹா! ஹா! ஹா!”

நவீனும் மிருதுளாவும் ஒரு சின்ன ஆபீஸ் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். நல்ல நாள் பார்த்து தன் பிஸினஸை துவங்கினாள் மிருதுளா. முதலில் ஒன்றிரண்டு வேலை ஆர்டர்களே வந்தன. அவற்றை நல்லப் படியாக முடித்துக் கொடுத்ததில் மீண்டும் ஒன்று வந்தது. இப்படியே இரண்டு மூன்றானது மூன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபது வேலைகளுக்கான ஆர்டர்களானது. இரண்டு வருடத்தில் சக்தி தன் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து யூரோப்பிலேயே பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாள். மிருதுளா தனது பிசினஸில் மும்முரமானாள். வேலைக்கான ஆர்டர்கள் பெருகி மாத வருமானம் வர ஆரம்பித்ததும் நவீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மிருதுளாவுடன் இணைந்து அவனது லீகல் வேலைகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ராப்பகலாக கடினமாக உழைத்தார்கள்.

அவர்கள் உதவிக்காக இரண்டு நபர்களை வேலைக்குச் சேர்த்தனர். பின்பு அதே ஆபீஸையும் அதன் பக்கத்து கடையையும் சேர்த்து லீசுக்கு எடுத்து…தங்கள் ஆபீஸை விரிவுப் படுத்தி இன்னும் ஐந்து நபர்களுக்கு வேலைக் கொடுத்தனர். இப்படியே அவர்களின் பிஸினஸ் விரிவடைந்தது. பேரும், புகழும், நன்மதிப்பும் சம்பாதித்தனர். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததில் மிருதுளாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் உமன் என்ற அவார்டும் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களுடனும் நிறைவாக வாழ்ந்தனர்.

மிருதுளாவும் நவீனும் அவர்கள் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தான் ஆரம்பித்தனர். நவீன் பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொண்டு தான் திருமணம் முடித்திருப்பார் என்ற எண்ணத்தில் தங்கள் மகளை தாரவாத்துக் கொடுத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். பிறந்த வீட்டில் ராணிப் போல் வாழ்ந்த மிருதுளா புகுந்த வீட்டில் படாத கஷ்டங்களுமில்லை, அவமானங்களுக்கும் அளவில்லை. ஆனால் அனைத்தையும் பொறுமையாக இருந்து தன் கனவனையே தானாக அனைத்தையும் புரிந்துக் கொள்ள வைத்தாள்.

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழிபோல மிருதுளா சொல்லிக் கொடுத்து நவீனைப் புரிந்துக் கொள்ள வைப்பதைவிட அவனையே தானாக புரிந்துக் கொள்ள வைத்தால் தான் அவனுள் நேரும் மாற்றம் உண்மையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும் என்றெண்ணி அவள் நடந்துக் கொண்டது அவளுக்கு சில காலம் வேதனைகளையும், வலிகளையும் தந்திருக்கலாம் ஆனால் அவை அணைத்தும் அவள் தாங்கிக்கொள்ளக் கூடிய வயதிலேயே வந்து கடந்து சென்று விட்டன. ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் மன நிம்மதியும், அமைதியும் தேவையோ அந்த வயதில் மிருதுளாவுக்கு அவை மிகுதியாகவே கிடைத்தது.

திருமணமான புதிதில் நவீன் தனக்காக தன் தாய் தந்தையிடம் பேசாது இருந்ததில் மனவருத்தமிருந்தாலும் நவீனின் நிலைமையையும் புரிந்துக் கொண்டு அதைப் பெரிதாக்காது நடந்துக் கொண்டதினால் நவீனும் அவளை நன்றாக புரிந்துக் கொண்டு பின்னாலில் அவளுக்கு நல்ல துணையாக மாறினான்.

மிருதுளா திருமணமானது முதல் தன் புகுந்த வீட்டினரை மதித்து நடந்துக்கொண்டது, அவர்களை அரவணைத்துச் சென்றது, அவர்கள் அவமானப்படுத்தினாலும் அவர்களை விடாது தங்களுடன் வைத்துக் கொள்ள முயன்றது, அதற்காக பலமுறை தோற்றுப் போனது என தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்த அவளின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதில் எந்த வித முன்னேற்றமுமின்றி ஆனதில் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். ஆனால் இனி அவர்களுக்காக வருந்தியோ வேதனைப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அன்று முதல் அவர்களை எல்லாம் தன்னுளிருந்தும் தன்னிடமிருந்தும் தள்ளி வைத்துவிட்டு அவள் அவளுக்காகவும் அவளின் கனவன் மகளுக்காகவும் மட்டுமே வாழத் துவங்கினாள். அப்படி அவள் வாழத் துவங்கியதிலிருந்து அவள் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருந்தது.

ஒரு பெண்ணிற்கு பொறுமை மிக மிக அவசியமான அணிகலனாகும். அதை மட்டும் அவள் அணிந்துக் கொண்டால் அவளை விட வலிமை வாய்ந்தவர்கள் இந்த பூமியில் எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்பவளும் அவளே! தனது பொறுமை என்று மற்றவர்களால் உபயோகித்துக் கொள்ளப் படுகிறதோ அன்று அதை உடைத்தெறியும் பெண்ணிற்கு இணையானவரும் இந்த பூமியில் இருக்க வாய்ப்பில்லை.
நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் பொறுமையின் எல்லை வரை பொறுத்திருப்பார்கள். எப்போது அப்படி சீண்டிப் பார்ப்பவர்கள் அதைத் தாண்டுகிறார்களோ அன்று அவள் அவர்களை பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ செய்யாது அவர்களிடமிருந்து… அவர்கள் கண்ணிற்குக் கூட தெரியாத உயரத்திற்கு பறந்துச் சென்றிடுவாள். இதுவே வலிமையான பெண்ணினத்தின் குணம்.

எப்போதும் நாம் நமக்காக எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் சண்டையிட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “சூஸ் யுவர் பேட்டில் வைஸ்லீ”. அதாவது உனக்கான போர், யுதம் அல்லது சண்டை எதுவானாலும் அதை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாக இரு என்பது அதன் அர்த்தமாகும். நாம் ஒரு பிச்சினையை சந்திக்கும் பொழுது அதற்காக நாம் பொங்கி எழ வேண்டுமா? திருப்பி சண்டையிட வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். சிலருடன் பேசி நியாயத்தை நிலை நாட்டலாம், சிலருடன் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டலாம் ஆனால் பல நேரங்களில் நமது நியாயத்தை நிலையாட்டிக் கொள்ளவும் நமது மன அமைதிக்காகவும் சிலரிடமிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. அதைத் தேர்ந்தெடுத்த மிருதுளா விட்டுக்கொடுத்து அனுசரித்து இளிச்சவாய் என்ற பெயரெடுத்தாலும் அவளின் பொறுமைக்கு கிடைத்தப் பரிசு தான் அவளின் கனவனும், மகளும், மனநிம்மதியும், அவளின் உயர்வும் ஆகும்.

விட்டுக்கொடுப்பவர் என்றுமே கெட்டுப்போவதில்லை. அதே போல விட்டு விலகுபவர்களும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு மிருதுளாவே சிறந்த உதாரணமாவாள். பெரியவர்கள் பெரியவர்களாக நடந்துக் கொண்டால் சிறியவர்களும் அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அவற்றை உருட்டி மிரட்டி எல்லாம் பெற முடியாது. அப்படியே பெற்றுக் கொண்டாலும் அது நிலைக்காது. உண்மை, நேர்மை, பொறுமை, ஒழுக்கம் இவை ஒருவரிடமிருந்தால் அவர்களின் வெற்றி மற்றவர்களை வாய்பிளக்கச் செய்யும். அதுவே மிருதுளாவின் வாழ்விலும் நடந்தது. அன்று அவளைத் தூற்றியவர்களிடமும் விமர்சித்தவர்களிடமும் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காது மேலே மேலே உயரப் பறந்துச் சென்றாள். அவளின் வளர்ச்சியைக் கண்டு அன்று அவளைத் தூற்றியவர்களையும், விமர்சித்தவர்களையும் இன்று அதற்காக வருத்தமடையச் செய்தாள் மிருதுளா.

பர்வதீஸ்வரன் படைப்பே அப்படி இருந்ததால் மிருதுளா அல்ல மற்ற எவராலும் புரிய வைக்கவோ மாற்றவோ முடியாது போனது. அவர்கள் அப்படித்தான் என்று அனைவரும் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர்.
அவர்களின் வாரிசுகளாவது திருந்த முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறதே!! திருந்துவார்களா? காலம் தான் அதற்கு பதிலளிக்கும்.

ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பதில் பல பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்ணே சிறந்தவள் என்பதை அறியாது போராடிவருகின்றனர். பெண் தன்மேம்பாடு பெறுதல் பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விடுத்து பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு பெண் தன்மேம்பாடு பெறுவதற்காக ஏன் போரட்டமோ அல்லது ஊடகங்களிலோ போட்டு விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு… எப்படி எந்த வித சத்தமுமின்றி ஒரு சிறிய செடி பெரிய விருட்சமாகி அனைவருக்கும் பலன் அளிக்கிறதோ அதே போல நமது வளர்ச்சி சத்தமின்றி இருக்கட்டும் அதன் வெற்றி உலகமெங்கும் பறைசாற்றட்டும்.
மிருதுளாவின் வாழ்விலும் இதுதான் நடந்துள்ளது.

கடவுள் ஒருவருக்கு நிறைய கஷ்டங்களும் வேதனைகளும் கொடுப்பது அவரை சோதித்துப் பார்க்கவே. அவரின் சோதனையில் ஒருவர் வெற்றியடைந்தால் அதற்கு கடவுள் கொடுக்கும் பரிசை எவராலும் அவரிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. அதுபோல தான் மிருதுளாவிற்கு கடவுள் கொடுத்த சோதனைகளில் எல்லாம் அவள் தேர்ச்சிப் பெற்றதால் அவளுக்கு பொன், பொருளோட நிறுத்திடாது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சேர்த்து அளிக்கொடுத்திருக்கிறார். மிருதுளா என்ன ஆனாள் என்று இன்றுவரை படித்துவந்த நமக்கு இப்போது புரிந்திருக்குமே!!

முற்றும்
🙏நன்றி🙏

இதுவரை மிருதுளா என்ன ஆனாள் என்ற இந்த தொடரைப் படித்து ஆதரவளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி சக்தியின் பயணம் தொடரும்.

மெல்ல சக்தியின் அறைக்குச் சென்றுப் பார்த்தான் நவீன். அங்கே சக்தியின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் வேகமாகச் சென்று மிருதுளாவிடம்…

“ஏய் மிருது என்ன ஆச்சு?
ஏன் இப்படி அழுதுண்டிருக்க?
இங்க பாரு மிருது.
ஏன்னு சொல்லு அப்போ தானே நான் என்ன செய்யணும்னு எனக்கும் தெரியும். ப்ளீஸ் அழுகையை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லு மிருது.”

என்று நவீன் கூறியும் விடாது அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவள் அருகிலேயே அவளின் அழுகை நிற்கும் வரை அமர்ந்திருந்தான் நவீன். வெகுநேரத்திற்குப் பின் மிருதுளா தன்னைத்தானே சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு நவீனைப் பார்த்து

“ஆம் சாரிப்பா.
என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை அதுதான் அழுது தீர்த்துட்டேன்”

என்று கூறிக்கொண்டே இருக்கும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டே நவீன் அவளிடம்

“நீ எதுக்கு இப்போ இப்படி விக்கி விக்கி அழுத?”

“ம்….”

“என்ன மிருது?
ஏன்? பதில் சொல்லு!
நம்ம சக்தி ரூமுல உட்கார்ந்துண்டு ஏன் அழுதுண்டிருக்க?
சக்தி ஞாபகம் வந்துடுத்தா?”

என்று நவீன் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் காட்டாறு போல பெருக்கெடுத்தோடியது. அதை அடக்க முயன்றும் முடியாது அழுது கொண்டே…

“ஆமாம் நவீ.
எனக்கு அவ அம்மான்னு கூப்பிடறா மாதிரியே இருக்கு.
அவ ரூமை அடிக்கடி எட்டிப் பார்த்துண்டே இருக்கேன்.
எனக்கு அவ ஞாபகமாவே இருக்குப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு”

“என்ன மிருது இது!!
அன்னைக்கு எனக்கு தைரியம் சொல்லிட்டு இப்ப என்னடான்னா நீ இப்படி அழுதுண்டிருக்க?
நம்ம சக்தி எங்க போயிருக்கா?
படிக்கத் தானே!!
அது தான் அவ வர்ற டிசம்பர் மாசம் வின்டர் லீவுக்கு வந்திடுவாளே!
அப்புறம் என்ன?
நீ அங்கிருந்து கிளம்பும் போது உனக்கு இருந்த மன திடத்தைப் பார்த்து நானே அசந்து நின்னேன்…
ஆனா நீ என்னடான்னா…
அசடு மாதிரி இப்படி அழுதுண்டிருக்கயே!”

“அழுதா அசடா?
அன்னைக்கு நீங்களே ரொம்ப டவுனா இருந்தேங்கள்.
அந்த நேரத்துல நானும் அப்படி இருந்திருந்தா அப்புறம் நம்மளை தேத்தறதுக்கு யாரு இருக்கா?
அதுனால தான் நான் ஸ்ட்ராங்கா இருந்தா மாதிரி காட்டிண்டு உங்களைத் தேத்தினேன்.
ஆனா இங்க வந்ததுக்கப்புறமா என்னால அவ இல்லாத இந்த வீட்டை நினைச்சுக் கூட பார்க்க முடியலை நவீ!
அது தான் அழுதுட்டேன்”

“இட்ஸ் ஓகே மிருது.
சரி முழுசா அழுது முடிச்சாச்சா?
இப்போ சொல்லறேன் நன்னா கேட்டுக்கோ மிருது.
நீ என்னோட முன்னேற்றத்துக்காகவும் நம்ம பொண்ணுக்காவும் உன்னோட வேலை, விருப்பங்கள், ஆசைகள், திறமைகள் எல்லாத்தையும் இத்தனை வருஷங்களா மூட்டைக் கட்டி பரண் மேல போட்டு வைத்திருந்ததை தூசி தட்டி எடுத்து அதுல உன் நேரத்தை செலவிட ஆரம்பி.
இனி நீ உனக்காக வாழ ஆரம்பி.
அதுக்கு என்னாலானதை நான் உனக்குச் செய்யறேன்.
நம்ம பொண்ணு அவ வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா.
இனியும் நீ அவளை நினைச்சுண்டு கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.
பதினெட்டு வயசுல தானே ஒரு டிஸிஷன் எடுத்து வெளிநாட்டுல போய் தனியா இருந்து படிக்கப் போயிருக்காங்கறது சாதாரண விஷயமில்லை!!
இதை நான் உனக்கு சொல்லணும்னும் இல்லை.
இத்தனை வருஷமா நம்மக்கூடவே இருந்த நம்ம பொண்ணு சடன்னா ஒரு நாள் நம்மைவிட்டு இவ்வளவு தூரம் போனா அவ என்ன செய்வா?
தனியா இருப்பாளா?
பசிச்சா என்ன சாப்பிடப் போறா? அவளுக்குப் பிடிச்சது அங்கே கிடைக்குமா?
அப்படியே கிடைச்சாலும் அதை வாங்கி சாப்பிடுவாளா இல்லை காசாகுமேனுட்டு சாப்பிடாம இருப்பாளா?
அப்படிங்கற கவலையெல்லாம் வர தான் செய்யும். என்ன பண்ண?
நாம பெத்தவாளாச்சே! ஆனா இது எல்லாமே அவ நல்லதுக்கு தான்னு நினைச்சுப்போம்.
இந்த எக்ஸ்பீரியன்ஸ் அவளை இன்னும் ஸ்ட்ராங்கான பெண்ணா மாத்தும்.
ஸோ நீ உன் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்க மிருது.
அதுக்காக நீ சந்தோஷப்படணும் பெருமைப்படணுமே தவிர இப்படி விக்கி விக்கி அழப்படாது.
புரியறதா!! சரி வா நாம இப்படியே நடந்துப் போய் நம்மளோட ஃபேவரைட் ஷாப்ல போய் ஆளுக்கொரு சமோசா சாப்டுட்டு அப்படியே ஈவினிங் டீயும் குடிச்சுட்டு வரலாம்.
கம் ஆன் கெட் அப் அன்ட் கெட் ரெடி மை டியர் வைஃப்.”

“நவீ வேண்டாம்…
நம்ம சக்திக்கு அந்த கடை சமோசான்னா ரொம்ப பிடிக்கும்.
அவளுக்கு அங்க அதெல்லாம் சாப்பிட கிடைக்காத போது நாம எப்படி இங்கே சாப்பிடறது?”

“அச்சச்சோ!!!
அப்படீன்னா சக்தி வந்ததுக்கப்புறம் தான் சமோசாவா?”

“எஸ்.
நான் உங்க கூட கடைக்கு வர்றேன் ஆனா சமோசா சாப்பிட மாட்டேன்.
நீங்க சாப்பிட்டுக்கோங்கோ.
நான் டீ மட்டும் குடிக்கறேன்.”

“நமக்கும் இந்த சமோசாவுக்கும் நம்ம லைஃப் ஆரம்பிச்சதுலேந்து டிஷ்யூம் டிஷ்யூமா தான் இருக்கு!!
அது ஏன்னே தெரியலை மிருது!! என்னோட போன ஜென்மத்துல யாருக்கோ சமோசா வாங்கித் தரமா இருந்ததில் அவா விட்ட சாபம் போல எனக்கு தோனறது!!!
டீ மட்டும் குடிக்க எதுக்கு அங்க போகணும்?
இரு நான் சூப்பர் மசாலா டீ வச்சுக் கொண்டு வர்றேன்.
அதுக்குள்ள நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணி ஃப்ரெஷ்ஷா வா பார்ப்போம். போ போ போ”

“ம்..ஓகே. தாங்ஸ்ப்பா”

“எதுக்கு? நான் இன்னும் டீ வைக்கவேயில்லையே…
அதுக்குள்ளேயே தாங்ஸ் சொல்லற”

“டீக்கு இல்லப்பா…
அதைவிட நீங்க ஸ்டாங்கா குடுக்கற சப்போர்ட்டுக்கு சொன்னேன்”

“அதுக்கா!! ஆமாம்.
நம்ம லைஃபோட ஆரம்பத்துல எனக்கு நீ செஞ்சதை நான் உனக்கு இதுவரை செய்யாததை இப்பவாவது செய்யணுமில்லையா அதுனால தான் இன்னேலேந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். எப்படி?”

“எனக்கான உங்க சப்போர்ட்டை என்னை தேவையில்லாம பேசறவாகிட்டேயும், அடுமாண்டு பழி போடறவாகிட்டேயும் திருப்பிப் பேசறதுல காமிங்கோ.
அது தான் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்.
இப்போ இந்த டீயை நானே போட்டுத்தறேன் நகருங்கோ.”

“என்ன மிருது அன்னைக்கு ஹோட்டல்ல என்னென்னமோ வீர வசனங்கள் எல்லாம் பேசின…
நானும் விசிலெல்லாம் அடிச்சேன்…
ஆனா இப்ப என்னடான்னா மறுபடியும் அந்த கூட்டத்தைப்பத்திப் பேசற!!”

“நவீ நான் அன்னைக்கு ஹோட்டல்ல சொன்னது சொன்னது தான் அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனாலும் நம்ம கூட்டம் சும்மா இருக்குமா.
அங்கேந்தும் இங்கேந்தும் அம்புகளை ஏவி விடுவாளே!!
அதைப் பத்தி சொன்னேன்”

“ம்…அதுவும் சரி தான்.
இனி எதைப் பத்தியும் நீ கவலைப்படாதே எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
ஓகே. டீ கொதிச்சிடுத்து…”

“ம்….இத்தனை வருஷமா நீங்க டீ போட்டுத் தந்தா மாதிரி சொல்லறேங்கள்…
எனக்கும் தெரியும் டீ கொதிக்கறதுனுட்டு. நகருங்கோ டம்பளர் எடுக்கணும்.”

என்று இருவருமாக பேசிக்கொண்டே டீ போட்டு இரண்டு டம்பளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்தனர்.

“நவீ நாளையிலேந்து நீங்க வேலைக்குப் போயிடுவேங்கள்.
நம்ம சக்தியும் இங்க இல்ல எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அதுனால நான் ஏதாவது வேலைக்கு டிரைப் பண்ணவா?”

“அதுதான் நீ வீட்டிலிருந்தே அந்த அட்மிஷன் சென்டருக்கு வேலைப் பார்க்கறயே மிருது.”

“அது என்னப்பா ஜஸ்ட் இரண்டு மணி நேர வேலை தான்.
ஆனா அதுக்கப்பறம்?
முன்னாடின்னா சக்தி ஸ்கூலேந்து வருவா அவளுக்கு டிபன் செய்யணும். அப்புறம் ஸ்னாக்ஸ் செய்யணும்னு இருந்தேன் இப்போ அதெல்லாம் இல்லையே! அதுதான் கேட்டேன்”

“உனக்கு விருப்பம்னா தாராளமா போ மிருது. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா”

“என்ன அது?”

“பேசாம நீ சின்னதா வீட்டிலிருந்தே அந்த சென்டருக்குப் பண்ணிக் கொடுத்திண்டிருக்கறதை அவா ஆஃபீஸ்லேயே போய் முழு நேர பணியாளரா ஆயிடேன்.
என்ன சொல்லற?”

“ம்…நல்ல ஐடியா.
நான் இப்பவே ஈமெயில் போட்டுக் கேட்கறேன்”

என்று உடனே வேலைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கழித்து அவளை நேர்காணலுக்கு வரும்படி மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. உடனே மிருதுளா சந்தோஷமானாள். அந்த நேர்காணலுக்கான நாள் வந்தது. என்ன தான் முன்பு ஐந்தாறு வருடங்கள் வேலைப்பார்த்திருந்தாலும் இடையே பத்து வருட காலம் இடைவெளி இருந்ததால் சற்று பதற்றமாகவே இருந்தாள் மிருதுளா. நவீன் அவளின் பதற்றத்தைப் போக்க வேண்டி

“இங்கே பாரு மிருது நமக்கு இப்போ இந்த வேலைக் கிடைச்சா தான் ஆச்சுன்னுட்டு இல்லை.
ஸோ ரிலாக்ஸா இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணு சரியா. அதுவுமில்லாம நீ குவாலிட்டி வொர்க் பண்ணுவனு அவாளுக்கு தெரிஞ்சதுனால தானே இந்த இன்டர்வியூவுக்கே கூப்பிட்டிருக்கா.
ஸோ எந்த வித டென்ஷனுமில்லாம அட்டென்ட் பண்ணு சரியா”

“என்ன தான் சொன்னாலும் ஒரு வித பதற்றம் இருக்கத்தான் செய்யறது நவீ”

“சரி நான் இங்கே ரிசப்ஷனில் உட்கார்ந்துண்டிருக்கேன் நீ போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வா. ஓகே.
ஆல் தி பெஸ்ட்”

என்று நவீன் அவளை அந்த அலுவலகத்தில் விட்டுவிட்டு அவள் இன்டர்வியூ முடித்து வரும் வரை காத்திருந்தான். ஒவ்வொரு முறை லிஃப்ட்டின் கதவு திறக்கும் போதெல்லாம் மிருதுளா வருவாள் என்று எண்ணி எட்டி எட்டிப் பார்த்தான் நவீன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிருதுளா கீழே ரிசப்ஷனுக்கு வந்தாள். நவீன் லிஃப்ட்டைப் பார்த்துப் பார்த்து அசந்துப் போய் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முன் போய் நின்றாள் மிருதுளா. அவளைப் பார்த்ததும் நவீன் தான் அமர்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்து

“ஹேய் மிருது.
இன்டர்வியூ முடிஞ்சுதா?
நீ வருவ வருவேன்னு லிஃப்ட் டோர் ஒவ்வொரு தடவை திறக்கும் போதும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இப்ப தான் இந்த புக்கைப் படிக்க ஆரம்பிச்சேன்…
நீ வந்து நிக்கற…
இப்படின்னு தெரிஞ்சிருந்தா …
நான் இந்த புக்கை அப்பவே படிச்சிருப்பேன்….
ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்…
இன்டர்வியூ எப்படிப் போச்சு?
உன் முகத்தைப் பார்த்தா சக்ஸ்ஸன்னு தான் தோனறது…
அதைப் பத்தி சொல்லு”

“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு வேலைக் கிடைச்சிடுத்து.
இந்தாங்கோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார் சம்பளம்.
ஆம் ஸோ ஹாப்பி நவீ.
இதை நான் உடனே நம்ம சக்தி கிட்ட சொல்லணும்”

“வாவ்!! தட்ஸ் க்ரேட் மிருது.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார்ன்னா நம்ம இந்தியா காசுக்கு கிட்டத்தட்ட மாதம் எட்டு லட்சம் மிருது.
கலக்கிட்டப் போ”

“என்னப்பா நீங்க வாங்கறதுல இது வெறும் அஞ்சோ ஆறோ பர்சன்ட் தானே”

“அதை விடு மிருது.
இத்தனை வருஷங்கள் க்யாப் விட்டுட்டும் நீ இன்டர்வியூ அட்டெனட் பண்ணி அதுல ஆஃபரும் வாங்கிருக்க…
இது பெரிய விஷயம் மா.
சக்திகிட்ட அவ இன்னைக்கு நைட் நமக்கு கால் பண்ணுவால அப்போ சொல்லுவோம்.
சரி சரி டிரீட் எங்க?”

“ம்….மொதோ மாசம் சம்பளம் வாங்கினதுக்கு அப்புறமா தர்றேன்”

“ஓகே மேடம்.
ஜாய்னிங் டேட் என்ன?”

“வர ஞாயிற்றுக்கிழமை ஜாயின் பண்ண சொல்லிருக்கா நவீ”

“சூப்பர்.
நாம இப்போ வீட்டுக்குப் போகலாமா?”

“ஓ எஸ் போகலாம்.
நவீ வீட்டுக்கு போற வழியில் ஸ்டார்பக்ஸ்ல ஒரு காப்பசீனோ காஃபி குடிச்சிட்டுப் போகலாமா ?”

“வித் எக்ஸ்ட்ரா ஷாட் அன்ட் எக்ஸ்ட்ரா ஹாட் ரைட்டா மேடம்”

“எஸ் சார்.”

“ஓகே டன்.”

என்று இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மிருதுளா. முதல் நாள் நவீன் அவளை அவளது ஆஃபீஸில் டிராப் செய்தான். அடுத்த நாள் முதல் அவள் மெட்ரோவில் செல்ல ஆரம்பித்தாள். இப்படியே நான்கு மாதங்களும் இருவரும் வேலை, வீடு, இரவில் சக்தியுடன் ஃபோனில் அரட்டை என ஓடிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் வந்தது சக்தி லீவுக்கு ஊருக்கு வருவதற்காக நவீன் டிக்கெட் புக் செய்தான். அப்போது மிருதுளா நவீனிடம்

“நவீ நம்ம சக்தி வரும்போது நான் ஆத்துல இருக்க வேண்டாமா.
நான் வேலைக்கு போயிட்டா அவ லோன்லியா ஃபீல் ஆகமாட்டாளா?”

“அதெல்லாம் ஆக மாட்டா மிருது. அதுவுமில்லாம அவ வந்து இருக்கப் போறது வெறும் பதினைந்து நாட்கள் தான்”

“அதுதான் சொல்லறேன் அவ நம்ம கூட இருக்கப் போற அந்த பதினைந்து நாட்களும் நான் அவகூடவே இருக்கணும், அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுக் குடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு”

“அதுக்கு!!”

“நான் வேலையை விட்டுடவா?”

“உனக்கென்ன ஆச்சு மிருது?
இதுக்காக யாராவது வேலையை விடுவாளா?
லீவு கேட்டுப் பாரு.”

“ஓ!! ஆமாம் இல்ல.
சப்போஸ் லீவு தரல்லைன்னா?”

“அதைப் பத்தி அப்புறம் பார்த்துப்போம். முதலில் லீவு கேளு”

“ம்…ஓகே.”

மறுநாள் ஆஃபீஸுக்கு சென்றதுமே தன் மேலாளரிடம் சென்று விவரத்தைக் கூறி லீவு கேட்டாள் மிருதுளா. அவர் அவளிடம்

“பதினைந்து நாளெல்லாம் லீவு குடுக்க முடியாதுமா.
நீங்க இன்னும் உங்க ப்ரொபேஷன் பீரியட்ல தான் இருக்கீங்க.
வேணும்னா ஒரு வீக்கென்ட்டை ஒட்டி மூனு நாள் தர்றேன் அவ்வளவு தான் என்னால தரமுடியும்.”

“ம்…சார் ப்ளீஸ் கொஞ்சம் டிரைப் பண்ணுங்க சார்.
நம்ம ஹெட்டுட்டப் பேசிப் பாருங்க சார்.”

“எனக்குத் தெரிந்து அவர் குடுக்க மாட்டார்.
இருந்தாலும் கேட்டுப் பார்க்கறேன். ஆனா நிச்சயம் கிடைக்கும்னு நம்ப வேண்டாம்”

என்று மேலாளர் கூறியதும் மிருதுளா சோர்ந்துப் போய் அவள் இருக்கையில் அமர்ந்து வேலையை செய்ய ஆரம்பித்தாள். சக்தி வருவதற்கு நான்கே நாள் இருந்தது. அதுவரை அவளின் லீவைப் பற்றி அவளது மேலாளர் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் அவரிடம் அதைப் பற்றிப் பேச அவரது கேபினுக்குச் சென்று…

“சார் என் லீவு பத்தி நம்ம ஹெட்டுகிட்டப் பேசறேன்னு சொன்னீங்களே.
அவர் என்ன சொன்னார்?”

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே. அவர் தரமாட்டார்னு.
அதே தான் இன்னைக்கும்.
அவர் ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியருக்கு…
அதாவது உங்களுக்கு அவ்வளவு நாளெல்லாம் லீவு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்மா. அதுவுமில்லாம நான் தர்றேன்னு சொன்ன அந்த மூணு நாள் லீவையும் குடுக்கக்கூடாதுன்னும் சொல்லிட்டார். அதுனால என்னாலயும் உங்களுக்கு அந்த மூணு நாள் லீவு தரமுடியாது”

“ஓ!!! அப்படியா. அப்போ நான் ஒரு முடிவு எடுக்கணும்.”

“என்ன சொன்னீங்க?”

“இல்ல நான் நம்ம ஹெட்டுட்டயே பேசிக்கறேன்”

“ஓகே! ஆல் தி பெஸ்ட்”

“தாங்ஸ்”

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கினாள் மிருதுளா. ப்ராக்டிக்காலட்டிக்கும் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவித்தாள் …அவளுக்குள் இவை இரண்டுக்கும் இடையே பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்ததால் அவள் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது தவித்தாள். வேகமாக எழுந்துச் சென்று தன் குழுவின் ஹெட் என்றழைக்கப்படும் தலைவரிடம் சென்று அவர் அறையின் கதவைத் தட்டி…

“மே ஐ கம் இன் சார்”

“எஸ் கம் இன்”

என்றதும் உள்ளேச் சென்ற மிருதுளா முன் தன் ஹெட் உட்பட ஆறு பேர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் தான் பேச வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு செய்வதறியாது நின்றவளிடம்…

“எஸ் மிஸஸ் மிருதுளா.”

“ம்…ஐ நீட் டூ டாக் டு யூ சார்.”

“நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஷால் வீ டாக் ஆஃப்டர் ஒன் ஆர்…சே….ஒன்னோக்ளாக்”

“இட்ஸ் ஓகே சார். ஐ வில் வெயிட் அன்ட் கம் அட் ஒன் சார். தாங்யூ”

என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து மணி ஒன்றாவதற்காக காத்திருந்தாள். தன் கைக்கடிகாரத்தில் சரியாக ஒரு மணியானதும் எழுந்து அவர் அறைக்குச் சென்றாள். மீண்டும் கதவைத் தட்டி உள்ளே சென்றாள். அங்கே அவர் மட்டும் அமர்ந்திருந்தார். மிருதுளா உள்ளே வந்ததும் அவளிடம்

“உட்காருங்க மிஸஸ் மிருதுளா நவீன்.”

“தாங்ஸ் சார்”

“ம்…என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”

“அது வந்து …சார்…வந்து”

என்று பேச வந்ததைப் பேசாது தயங்கியவளிடம்

“என்ன உங்க லீவு விஷயமாவா?”

“ஆமாம் சார்.
எங்க பொண்ணு நாலு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு வர போறா சார்.
அதுவும் வெறும் பதினைந்து நாட்களுக்கு தான் சார்.
அதுனால தான் நான் லீவு கேட்டேன்”

“அதெல்லாம் சரி தான்.
ஆனா இந்த ஆஃபீஸ் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியர்களுக்கு லீவே குடுக்கக்கூடாதுன்னு தான் இருக்கே!! அதுக்கு நான் என்ன செய்வேன் சொல்லுங்க.”

“ஸோ இதுக்கு வேற வழியே இல்லையா சார்”

“ம்.ஹூம். எனக்குத் தெரிஞ்சு இல்ல. ஆம் சாரி.”

என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சைலென்ட் மோடில் வைத்திருந்த மிருதுளாவின் ஃபோன் வைப்ரேட் ஆனது. அவள் தன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தாள். பின் எழுந்து தன் ஹெட்டிடம்

“தென் சார்….ஐ வில் ஹாவ் டூ ரிசைன் மை ஜாப்.”

“வாட்?”

“எஸ் சார் எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியலை.”

“இங்க பாருங்க மிருதுளா.
நீங்க போய் உங்க சீட்டுல உட்கார்ந்து ஒரு தடவைக்கு பத்துத்தடவை நல்லா யோசிங்க.
அப்புறமா என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க சரியா”

“இல்ல சார் இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல சார்.
நான் மறுபடியும் வொர் ஃப்ரம் ஹோம் மாட்யூலுக்கே போயிடறேன் சார்.”

“ஆனா அதுல இப்ப நீங்க வாங்கற சம்பளத்துல பாதிக்கும் கம்மியா தான் கிடைக்கும்”

“இட்ஸ் ஓகே சார்.
எனக்கு அது போதும்.
நான் என் பொண்ணுக் கூட இருக்கணும் தட் இஸ் மோர் இம்பார்ட்டன்ட் ஃபார் மீ சார்.”

“யுவர் டாட்டர் இஸ் லக்கி டூ ஹாவ் யூ ஆஸ் ஹெர் மதர்.
அப்போ இது தான் உங்க முடிவா?”

“எஸ் சார்.
என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன் சார்.
ஆக்சுவலி அப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் குடுத்துவச்சிருக்கணும் சார்.”

“ஓகே தென்.
ஒரு ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் கொடுத்திடுங்க.
நீங்க இந்த மாசம் இன்னையோட சேர்த்து பதினோரு நாள் ஆஃபீஸ் வந்திருக்கீங்க ஸோ அதுக்கு உண்டான சம்பளத்தை நம்ம அக்கௌன்டன்ட்ட வாங்கிக்கோங்க நான் அவர்கிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
மீண்டும் ஆன்லைன்லயே உங்க வேலையைத் தெடருங்கள்.”

“தாங்யூ சோ மச் சார்.‌ ஷுவர் சார். பை”

“ம்….பை.”

என்று அவருடன் பேசி முடித்து அந்த அறையை விட்டு வந்ததும் மிருதுளாவுக்கு ஏதோ சாதிச்சதுப் போல உணர்ந்தாள். வேகமாக தன் க்யூபிக்கலுக்குச் சென்று தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்தப் பின் அக்கௌன்ட்டென்ட்டிடம் சென்று கணக்கை சரி பார்த்து அதற்கான காசோலையைப் பெற்றுக் கொண்டு அங்கு அவளுடன் வேலைப் பார்த்தவர்களிடம் சொல்லிக் கொண்டுவிட்டு சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மெட்ரோ ஸ்டேஷன் சென்று டிரெயினைப் பிடித்து வீட்டுக்குச் சென்றாள். மாலை ஐந்தரை மணியானதும் வழக்கம் போல நவீன் வீட்டுக்கு வந்து கதவில் சாவியைப் போட்டுத் திறக்க முயற்சிக்கும் முன் கதவைத் திறந்தாள் மிருதுளா. அவளை அந்நேரம் வீட்டில் பார்த்ததும் நவீன் ஆச்சர்யத்தில்

“மிருது என்ன இந்த நேரத்துல நீ இங்க இருக்க!!!.
எப்பவும் ஆறு மணிக்கு தானே வருவ?”

“உள்ள வாங்கோப்பா நான் சொல்லறேன்”

என்று கூறி நவீன் வீட்டினுள் வந்ததும் கதவை சாற்றிவிட்டு அடுப்படிக்குச் சென்று ஒரு டிரேவில் இரண்டு கப் காஃபி மற்றும் இரண்டு சமோசா வைத்து ஹாலுக்கு எடுத்து வந்து நவீன் ஃப்ரெஷ்ஷாகி வரும்வரைக் காத்திருந்தாள் மிருதுளா. நவீன் வந்தான் சமோசாவை வலது கையிலும் காஃபி கப்பை இடது கையிலும் எடுத்து எடுத்துக் கொண்டே

“என்ன மிருது நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே நீ!!”

என்று சமோசாவை முதலில் சாப்பிட்டான். அப்போது மிருதுளா மெல்ல தயங்கி தயங்கி அவனிடம்

“நவீ நான் ஒண்ணு செஞ்சுட்டு வந்திருக்கேன்…
அதைச் சொன்னா நீங்க கோபப்படக்கூடாது சரியா”

“நான் என்னைக்கு எதுக்கு உன் கிட்ட கோபப்பட்டிருக்கேன் மிருது. சும்மா சொல்லு”

“நான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்”

“என்னது ரிசைன் பண்ணிட்டேன்னு சொன்னயா!!
இல்ல பண்ணட்டுமானு சொன்னயா!!!”

என்று கேட்டுக் கொண்டே தன் கைகளிலிருந்த கப்பையும் சமோசாவையும் டிரேயில் வைத்துவிட்டு மிருதுளாவைப் பார்த்தான் அவளின் பதிலிளுக்காக…

“இல்ல நவீ…
ரிசைன் பண்ணிட்டேன்னு தான் சொன்னேன்.
சாரி. நான் எங்க ஹெட்டுட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் ஆனா அவர் லீவு தரவே முடியாதுன்னுட்டார்.
எனக்கு வேற வழித் தெரியலை அதுனால உடனே ரெஸிக்னேஷன் லெட்டரைக் குடுத்துட்டு இந்த மாசம் நான் வேலைக்குப் போன இந்த பதினோரு நாள் சம்பள செக்கையும் வாங்கிண்டு வந்துட்டேன்.”

“என்ன மிருது சொல்லற?
மாசம் எட்டு லட்சம் சம்பாதிச்சிண்டிருந்ததையா இவ்வளவு ஈஸியா விட்டுட்டு வந்திருக்க?”

“மாசம் மூவாயிரத்து ஐநூறை தான் விட்டுட்டு வந்திருக்கேன் நவீ.
எனக்குப் பணத்தை விட என் பொண்ணுக் கூட இருக்கறது, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணறது தான் முக்கியமாவும் ஆசையாவும் இருந்தது அதுனால தான் இப்படிச் செஞ்சேன்.
அவ கல்யாணம் பண்ணிண்டு போயிட்டான்னா அப்புறம் அவளைப் பார்க்கக் கூட நாம பல பேர்ட்ட பர்மிஷன்‌கேட்க வேண்டி வரலாம். இல்ல அவளே கூட அவ லைஃப்ல பிஸியாகிடலாம் இல்லையா.
அதுனால இப்போ கிடைக்கற இந்த நேரங்களை மிஸ் பண்ண நான் தயாரா இல்லை நவீ”

“ம்….ஓகே! உன் இஷ்டம்.”

“ஆனா நான் சக்திக்காக தான் வேலையை விட்டேன்னுட்டு அவ வந்தா சொல்லக் கூடாது சொல்லிட்டேன்.”

“உத்தரவு மேடம்.”

தன் மகளுடன் இருக்க வேண்டும் என்று தன் வேலையை வேண்டாம் என்று தள்ளி வைத்த மிருதுளா சக்தியின் வரவுக்காக அவளுக்கு மிகவும் பிடித்த முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சுவீட் எல்லாம் செய்து வைத்தாள். நான்கு மாதங்கள் காத்திருந்த மிருதுளாவும் நவீனும் ஏர்போர்ட்டில் தங்கள் மகளின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

தொடரும்….

ஈஸ்வரன் வீட்டிலிருந்து ஹோட்டல் ரூமிற்கு திரும்பி சென்றனர் நவீன், மிருதுளா மற்றும் சக்தி. மிருதுளா அவளின் அப்பா அம்மா தங்கியிருந்த அறைக்குச் சென்று

“அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் டின்னர் சாப்டேங்களா?”

“ஆங் நாங்க சாப்டாச்சு. இங்கேயே ரெஸ்டாரண்ட் ல ஆர்டர் செஞ்சு சாப்டுட்டோம். நீங்க மூணு பேரும் சாப்டாச்சா?”

“ஆங் நாங்க சாப்டாச்சு. சரி… அது கேட்டுட்டு போக தான் வந்தேன்.
சரி நீங்க தூங்குங்கோ. நானும் போய் தூங்கட்டும்.
நாளைக்கு காலையில ஒரு ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே சென்னை போயிடலாம் சரியா”

“ஓகே மிருது நாங்க ரெடியா இருக்கோம். குட் நைட் போய் தூங்கு”

மிருதுளா அவர்கள் அறைக்கு வந்துப் பார்த்தாள்

“என்னப்பா அதுக்குள்ள சக்தி தூங்கிட்டாளா?”

“ஆமாம்… காலையிலேந்து டிராவல் பண்ணிருக்கா இல்லையா…அதுதான் தூங்கிட்டா போல.
என்ன உன் மச்சினன் உன்னை மதிச்சு நாளைக்கு காதுக்குத்துக்கு கூப்பிட்டிருக்கான்…
நீ என்னடான்னா வரலைன்னு சொல்லிட்டப் போல!!!”

“ஏன் உங்களுக்கு போகணும்னா நாம போயிட்டு வரலாமே!!
எப்பவும் நான் மட்டுமே தான் குத்திக்கறேன்.
ஒரு தடவை நீங்களும் குத்திக்கோங்கோ …காத..!!”

“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் உறவு விட்டுப் போய் ரொம்ப வருஷங்களாயாச்சு…
உனக்கு தானே அவா எல்லாம் சொந்தம். அதுதான் உன் கிட்ட கேட்டேன்.
எனக்கு தெரியாம எவ்வளவோ காது குத்திருக்கா நான் இல்லன்னு சொல்லலை …
ஆனா என்னைக்கு எனக்கு தெரிஞ்சே காது குதத்தினாளோ அன்னேலேந்து நான் உஷாராகிட்டேன்.
நானா அங்க போகணும்னு சொன்னேன்!! நானா அவாளை டிரிப்புக்கு கூட்டிண்டு போகணும்னு சொன்னேன்?
இல்ல நானா வாட்ச், வைர மூக்குத்தி அப்புறம் என்ன அது ..
ஆங் ஜர்கான் தோடு அன்ட் டேப்லெட் வேற….
ம்… என்ன ஆச்சு காலையில நீ அவாளுக்கு கொடுத்தது மாலையில் கை மாறிடுத்து பார்த்தே இல்ல!!.”

“ஆமாம் நவீ. எனக்கு அதுல ரொம்ப கோவம் தான்.”

“இதுக்குத் தான் பெரியவா சொல்லி வச்சிருக்கா….
தானமானாலும், பரிசானாலும், உதவியானாலும் அதோட மதிப்பு தெரிஞ்சவாளுக்கு மட்டும் தான் இதெல்லாம் செய்யணும்னு.
அதை விட்டுட்டு கண்டவாளுக்கெல்லாம் செஞ்சா அது இப்படி தான் கை மாறும். கொடுத்தவாளையே வேதனையும் பட வைக்கு.”

“ம்…உண்மை தான்.
நான் ஒத்துக்கறேன்.
இனிமே இவாளுக்கு எல்லாம் எதுவுமே வாங்கிக் குடுக்க மாட்டேன்.
இதுவே கடைசி நவீ.”

“ம்…பார்ப்போம் பார்ப்போம்.”

“இல்ல நவீ…இவ்வளவு வருஷங்களா நானும் விட்டுக் கொடுத்து வந்ததில் அவா கொஞ்சமாவது மாறியிருப்பானு நினைச்சேன்.
இல்லை துளி கூட அவா மாறலை. இன்னமும் அவா மனசுல அதே வஞ்சத்தோட தான் இருக்கா.
நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி இவா எல்லாம் எப்போதும் திருந்த மாட்டானு நான் நல்லா புரிஞ்சுண்டுட்டேன்.
இனி நீங்க பார்க்கப் போறது வேற வேற வேற மாதிரியான மிருதுளாவ.”

“டைலாக் எல்லாம் சூப்பர் தான். கை தட்டி விசிலடிக்கணும் போல தான் இருக்கு…”

“ஏன் இழுக்கறேங்கள் நவீ… சொல்ல வந்ததை சொல்லிடுங்கோ”

“இல்ல உன் பேச்சு …
அவா உன் முன்னாடி நல்லவா மாதிரி நடந்துண்டாலே காணாம போயிடுமேன்னு சொல்ல வந்தேன்.”

“இனி அது மாதிரி எல்லாம் நடக்கவே நடக்காது நவீ.
மதியாதார் வாசல் மிதியாதேன்னு சொல்லுவா…
அது மூனாம் மனுஷாலுக்கு தான்னு இவ்வளவு நாளா நினைச்சுண்டிருந்தேன். ஆனால் அது பெத்தவாளானாலும், கூடப் பிறந்தவாளானாலும் பொருந்தும்னு இப்போ தான் உணர்ந்தேன்.
என்னை பாடாப்படுத்தினா, உங்களை மதிக்கறதே இல்லை, இன்னமும் என்னைப் படுத்திண்டு தான் இருக்கா. அவாளோட படுத்துற ஸ்டைல் அதாவது பாங்கு இருக்கே அதை இந்த பதினேழு வருஷமா அப்படியே ஒரே மாதிரி தான் ஃபாலோ பண்ணிண்டு வரா .
இதுல என்னன்னா அதெல்லாம் நான் புரிஞ்சுக்காததால தான் அவாளுக்கு திருப்பி பேச மாட்டேங்கறேன்…
இல்ல திருப்பி எதுவும் செய்ய மாட்டேங்கறேன்ங்கறது அவாளோட நெனப்பு…
ஆனா உண்மையில் சொல்லப் போனா நான் இத்தனை வருஷங்களா அவாளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துண்டே வந்திருக்கேன்…
ஏதாவது ஒரு வாய்புல அல்லது சந்தர்பத்துல எப்பயாவது…
மனசுக்குள்ளயாவது…
“ச்சே இந்த பொண்ணை நாம என்ன பாடுபடுத்தியிருக்கோம்!! ஆனாலும் அவ ஒரு வார்த்தைக்கூட மரியாதைக் குறைவாவோ இல்ல திருப்பி அவமானப்படுத்தவோ இல்ல பேசவோ கூட செய்ய மாட்டேங்கறாளே…
எங்களுக்கு எப்போதும் நல்லதே தானே செஞ்சிண்டிருக்கா…” ன்னு ஒரு மூலையில நினைச்சிருந்தான்னா ஒருவேளை திருந்தி இருக்கலாம்!!!
ஆனா இவா நீங்க சொல்லறா மாதிரி ஜென்மத்துக்கும் திருந்த மாட்டானு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுத்து. எனக்கு அவா கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் இருந்தது.
அதை அவா உடைச்சு சுக்கு நூறாக்கிட்டா ஸோ இனிமேல் எனக்கு எந்த வித எதிர் பார்ப்பும் இல்லை பந்தமும் இல்லை. நான் படிச்சது கான்வென்ட்டா அங்கே ஸ்கூல் சுவற்றில் எழுதியிருந்தது என் மனசுலப் பதிஞ்சிடுத்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” னுட்டு போட்டிருந்தது…
அதை செய்யப் போய் நல்லா ரெண்டு கன்னத்துலேயும் மாறி மாறி வாங்கிண்டதுக்கப்புறமா தான் புத்தி வந்திருக்கு அதெல்லாம் கடவுள் அவதாரங்களால தான் முடியும் நான் வெறும் சாதாரணமான மனுஷி தானே. என்ன பண்ண?
ஒரு நாள் ஃபேஸ்புக்ல ஒண்ணு படிச்சேன்…”நீ எவ்வளவு பொறுத்துக் கொள்கிறாய் என்பதில் தான் அடுத்தவர் உன்னிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். ஆகையால் உன் பொறுமையை எப்போது முறித்திறிய வேண்டுமென்பது உன்னிடம் தான் உள்ளது. கவனமாக இரு” னுட்டு எனக்காகவே போட்டா மாதிரி இருந்தது அந்த போஸ்ட்.
நான் நிறைய யோசிச்சாச்சு ….
இவாளுக்கு நான் என்ன தான் நல்லது நினைச்சாலும் சரி செஞ்சாலும் சரி என்னை கெட்டவள்ன்னு தான் முத்திரைக் குத்தப்போறா …
அப்புறமும் நான் ஏன் இவாளுக்கு நல்லவளா இருக்கணும்? சொல்லுங்கோ!!”

“மிருது!!! நீ ஒண்ணு அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போற இல்லாட்டி இந்த எக்ஸ்ட்ரீமுக்கு வர…
நீ சொல்லறதெல்லாமே வெரி வெரி கரெக்ட் தான்…
ஆனா நீ கடைசியா சொன்ன பாரு இவாளுக்கு ஏன் நீ நல்லவளா இருக்கணும்னு….
அது தான் எனக்கு பயத்தைக் குடுக்கறது”

“இதுல என்ன பயப்படறதுக்கு இருக்கு நவீ”

“இல்ல நீயும் அவாளை மாதிரியே மாறப்போறயோன்னு தான்….
நீ நல்லவள்.
நல்லவளாகவே இரு.
ஆனா அவாகிட்ட வேண்டாம் அவ்வளவு தான் நான் சொல்வேன்…
ஆனா நீ ஏன் அவாகிட்ட கெட்டவளாக
நடந்துக்கணும்?”

“ச்சே ச்சே!!! நவீ நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்.
நான் கெட்டவளா ஆவேன்னும் சொல்லலை…
இனி அவாளுக்கு கெட்டதை செய்யவேன்னும் சொல்லலை…
அது என்னால முடியாததும் கூட…
நான் என்ன சொல்ல வந்தேன்னா நல்லது செய்து கெட்டவளாகறதை விட எதுவும் செய்யாமலிருந்தே கெட்டவளா இருந்துடறேனேனு சொல்ல வந்தேன்….
அப்படி இருந்தா எனக்கும் மனசு வலிக்காதில்லையா!!
ஆமாம்…நாம இப்படி எப்போதும் நல்லதையே செஞ்சுட்டு கடைசியில அவா அவாளோட குணத்தைக் காட்டினா அப்புறம் நமக்கு வலி ரொம்ப இருக்குமில்லையா…
அதே நாம எதுவுமே பண்ணாம இருந்துட்டு அவா அப்படியெல்லாம் பண்ணியிருந்தா நமக்கு வலியே இருந்திருக்காதுன்னு சொல்ல வந்தேன்.”

“ஓ!! அப்படி!! ஓகே ஓகே!!
நான் நினைச்சேன் அடிப்பட்டு அடிப்பட்டு ஒரேயடியா நல்லவளேந்து அப்படியே கெட்டவளாகிடுவியோன்னு!!
அதுதானே!
நீ சொன்னா மாதிரி உன்னால அது முடியாது தான்.
ஆனாலும் அவா உன்னை அப்படி மாத்திட்டாளோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான்‌”

“அப்படி இல்லை நவீ…
ஆனாலும் அவா என்னை மாத்ததான் செய்திருக்கா.
வெறும் பச்ச மண்ணாட்டம் உங்காத்துக்குள்ள வந்தேன்…
அங்கேயே வேரூன்றிய மரமாட்டம் நீங்களும், உங்களை இறுக்க பிடித்திருக்கும் வளமையான மண் போலவும் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க சொன்னா மாதிரி இந்த மண்ணை எல்லாருமா போட்டு அடிச்சு, மிதிச்சு, சுட்டு, அதில் துப்பி எல்லாமே செஞ்சா, செஞ்சுண்டுமிருக்கா.
கணவன்ங்கற செடியை பிடிச்சுண்டு அவரையும் வளமாக்கி நாமளும் வளமாகலாம்னு தான் வந்தது மண்ணுங்கற மனைவி.
ஆனால் அந்த கணவன் அந்த மண் தன்னை வந்து பிடித்துக் கொண்ட புதிதில் எல்லாருமா தூற்றி பாடாய்ப் படுத்தும் போது அவர் கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, வாய் பேசவில்லை, மூலை செயலிழந்து போனதால் தான் மண் எவ்வளவு வளத்தை அள்ளிக் கொடுத்தாலும் இன்னமும் தூற்றப் பட்டுக்கொண்டே இருக்கு…
கணவன்ங்கற செடி எப்போது அந்த மனைவிங்கற மண்ணோடு சேர்ந்தானோ அப்போதே அவர்களைச் சுற்றி வளர்ந்த பழி, பொய், திமிர், படுத்தல்கள், இகழ்ச்சி, அவமரியாதை போன்று (அவன் வீட்டினுள்) முளைத்த புல்லுருவிகளை எல்லாம் வெட்டி எறிந்திருந்தால் அந்த மண்ணை எவரும் தூற்றியிருக்க மாட்டார்கள்.
தூற்றவும் யோசித்திருப்பார்கள். ஏனெனில் தாங்கள் புல்லுருவிகளானால் வெட்டி எறியப்படுவோம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் அந்த செடி அதை செய்யாது அது பாட்டுக்கு தானாக மண்ணின் வளங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பெரிய விருட்சமானது.
அப்போது அந்த விருட்சம் தங்களுக்கு இனி தீனி போடாது என்றுணர்ந்த புல்லுருவிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முன்பு மண்ணை தாக்கியது போலவே அந்த விருட்சத்தை தாக்கியது.
அப்போது தான் விருட்சம் அதன் வலியையும் வேதனையையும் உணர்ந்து இனி அங்கே இருந்தால் நாம் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
உடனே அந்த இடத்திலிருந்து தனது மண்ணோடு வேறு இடம் சென்றது. அன்று முதல் அந்த விருட்சம் தான் செடியாக இருந்த இடத்தையே மறந்துப் போனது.
ஆனால் மண் அன்றும் மண் தான் இன்றும் மண் தான்.
செடி விருட்சமானதும் மண்ணிடம் தன்னையும் மணலாக மாறச்சொல்லி வற்புறுத்தியது….
மண்ணும் மணலாகியிருந்தால் அப்படியே சர்ரென்று சருக்கி எங்காவது தப்பித்திருக்கலாம் …
ஆனால் விருட்சத்துக்கு தெரியாது இந்த மண் மணலானால்…
தான் அதில் அப்படி கம்பீரமாக நிற்க முடியாதென்பது.
ஆகையால் தான் மண் மணலாகாமல் இவ்வளவு நாட்கள் அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தது.
மண்ணில் விதையைத் தவிர வேறு எது வீழ்ந்தாலும் அவற்றை மட்க வைத்துவிடும்.
அது போல தான் திருமணம் என்ற விதையை இந்த மண்ணில் விதைத்ததால் அந்த விதை வளரும் பருவத்திலேயே அதனோடு சேர்ந்து அந்த மண்ணில் விளைந்த புல்லுருவிகளில் நல்லவைகளை விட்டுவிட்டு தேவையில்லாதவைகளை மட்கச் செய்தது அந்த மண்.
அப்படி மண் மட்கச் செய்துக் கொண்டிருந்ததிலே அதுவும் சோர்ந்துப் போய்விட்டது…
இனி அதனால் அதற்கு மேல் எந்த புல்லுருவிகளையும் மட்கச் செய்ய முடியாது என்றானதும் மணல்சாரி மண்ணாக மாற முடிவெடுத்துள்ளது. அதாவது விருட்சம் பாதிக்காதவாறு மண்ணாகவும் மற்றவை எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு மணல்சாரி மண்ணாக இருந்து நம்முள் தங்க விடாது சருக்கிக் கொண்டே போகப் போகிறாள் இந்த புது வகையான மணல்சாரி மண்ணான உங்கள் மனைவி மிருதுளா.”

“அப்பப்பா!!! மிருது கலக்கிட்ட போ…
நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் ஆரம்பத்துல கொஞ்சம் அவாளை லூசா விட்டுட்டேன்…
அப்பா அம்மா தானேனுட்டு கொஞ்சம் விட்டது தப்புதான்.
ஆரம்பத்துலேயே கடிவாளத்தைப் போட்டிருந்தா குதிரைகள் சரியா ஓடியிருக்கும் மண்ணுக்கும் பாதிப்பு வந்திருக்காது….
ஆனால் அந்த குதிரைகளுக்கு அவ்வப்போது கடிவாளத்தைப் போட்டுண்டு தான் இருந்தேன்….
ஒரு கட்டத்துல அதுகள் அதுக்கெல்லாம் அடங்காததுகள்னு தெரிஞ்சுடுத்து…
அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்…
அது உன்னை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.
சாரி மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ.
நீங்களும் அப்போ திருமணம்ங்கறதுல நான் எப்படி புது மண்ணாக இருந்தேனோ அதே போல நீங்களும் புது விதையாகத் தானே இருந்தேங்கள்.
நீங்களும் சுற்று சூழல்களை புரிஞ்சிண்டு வேரூன்றி வளர்றதுக்கு கொஞ்சம் வருஷம் எடுத்தது…
அதை அவா எல்லாருமா யூஸ் பண்ணிண்டுட்டா அவ்வளவு தான். ‘மண்ணுங்கிறது காலுக்குக் கீழே சும்மா கிடக்குற தூசி’ ன்னுதான் பெரும்பானவாளோட நினைப்பு. அப்படித்தான் உங்க ஆத்துலேயும் நினைச்சிருக்கா.
ஆனா அதுனால தான் அதில் விதைத்த திருமணம்ங்கற விதை
இன்று விருட்சமாக வளர்ந்து தனக்கும் தன்னை வளமாக வளரச்செய்த மண்ணுக்கும் அவர்களின் சின்ன செடிக்கும் பாதுகாப்பாக இருக்குங்கறதை அவாளால ஏத்துக்க முடியாதைக்கு தான் அவா இப்படி கிடைக்குற சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை படுத்திண்டிருக்கா.
ஆனா இனி அவாளுக்கெல்லாம் டாட்டா பை பை சொல்லிட்டு என்னோடிருக்கும் விருட்சத்தையும், செடியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டு நானும் வளமாக வாழப் போகிறேன்.
டாட்”

“வாவ்!!! வாவ்!!! வாவ்!!! மிருது ஆசம். சூப்பர் இப்போ அடிக்கறேன் பாரு விசில்.”

“அச்சச்சோ!! பேசாம இருங்கோப்பா குழந்தை எழுந்துக்கப் போறா.
அப்புறம் ஹோட்டல் ஸ்டாஃப் யாராவது என்ன ஏதுன்னு கேட்டுண்டு வந்திடப் போறா”

“ஓகே !! ஓகே!! ஓகே!! ஆனா ஒண்ணு உன்கிட்ட நான் சொல்லியே ஆகணும் மிருது.”

“என்னது நவீ?”

“நீ இவ்வளவு பொறுமையா இருந்ததால தான் என்னால அவாளை எல்லாம் நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“என் பொறுமை எப்படி உங்களுக்கு அவாளை புரிய வச்சுது? புரியலையே நவீ!”

“அதாவது அவா அப்படி உன்னைப் படுத்தின போதெல்லாம் நீ அமைதியா ஏதும் திருப்பி சண்டை போடாமலும், திருப்பி பேச்சுக்குப் பேச்சு பேசாமலும் இருந்ததால் தான் எனக்கு தப்பு யார் சைடுல இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ம்…ஹூம்…ப்ளீஸ் எக்ஸ்ப்ளேயின் நவீ”

“சப்போஸ் நீயும் அவாகிட்ட எகிறிண்டு போயிருந்தேனா அப்புறம் சண்டை பெருசாகியிருக்கும்.
அப்போ அந்த சண்டையை நிறுத்தறதுல தான் என் கவனம் போயிருக்குமே தவிர தப்பு யார் பண்ணிருப்பானு யோசிச்சிருக்கக் கூட மாட்டேன்.
ஆனா நீ அமைதியா பொறுமையா இருந்ததால ஐ காட் எ க்ளியர் பிக்சர் ஆஃப் எவ்ரிதிங்”

“ஓ!!! அப்படி சொல்லறேளா!!! ஓகே!! இப்போ புரியறது.
எல்லா நேரங்களிலேயும் நாம திருப்பி பேசணும்னு இல்ல நவீ.
அதே போல எல்லா சண்டைகளிலும், போராட்டங்களிலும் நாம கலந்துக்கணும்னும் இல்லை.
நமது சண்டைகளையும், பேச்சையும், போராட்டங்களையும் எப்போ நம்ம எதிராளி கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள்னு தோனறதோ அப்போ போதும்.
இல்லாட்டி அப்படியே நகர்ந்துப் போயிடறது தான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது.
எப்பவுமே கத்திண்டும் சண்டைப் போட்டுண்டும், எல்லாத்துக்கும் போராடிண்டும் இருந்தா குடும்பம் நல்லாவா இருக்கும்?
அதுவுமில்லாமல் பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்லுவா இல்லையா அது போல என்னோட இந்த பதினேழு வருடப் பொறுமை எனக்கு இனி நான் வாழப் போற இருபது, முப்பது அல்லது ஐம்பது வருஷங்களை நிம்மதியாக இருக்கச் செய்யப் போறது.
இது என்னோட ஸ்ட்ரேடர்ஜீன்னு சொன்னாலும் ஐ வில் நாட் கேர் அபௌட் இட்.
ஏன்னா நான் அவாகிட்டேந்து எல்லாம் ஒதுங்கினாலும் அவாளுக்கு என்கிட்ட வந்து ஏன் இப்படி பண்ணறனு கேட்க இனி எந்த வாயுமில்லை.
அப்படியே கேட்டுண்டு வந்தாலும் என் விருட்சம் அவாளை எல்லாம் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடாது?”

“ஓ!! ஷுவர்.
நோ டவுட் அபௌட் இட்.
நிச்சயமா.
இனி இந்த விருட்சம் இருக்கும் காலம் வரைக்கும் அதுக்கு சொந்தம், பந்தம் எல்லாமே இந்த பொறுமையான பூமா தேவியும் அவளின் அழகிய இளவரசியும் தான்.
வேறு எவருமில்லை.
வேறு எவரும் இனி நம்மை வீழ்த்தும் எண்ணத்திலோ இல்ல
நமக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்திலோ இல்ல
நம்மளை அவமானப்படுத்தும் விதத்திலோ ஏதாவது செஞ்சான்னா அவாளை எல்லாம் பிடித்து நொறுக்கிடுவேன்.
கவலையில்லாமல் நிம்மதியா படுத்துத் தூங்கு மிருது.
டைம் என்ன ஆயிடுத்து பாரு”

“ஓ மை காட்!!! இட்ஸ் டுவெல்வோ க்ளாக்!!! சரி சரி சரி படுங்கோ தூங்குவோம். நாளைக்கு காலையில என் அப்பா அம்மா ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி வந்து காலிங் பெல் அடிக்கப்போறா நாம தூங்கிண்டு இருக்கப் போறோம்…குட் நைட் நவீ.”

“குட் நைட் மிருது”

மறுநாள் விடிந்ததும் அனைவரும் எழுந்து கோவில்களுக்கெல்லாம் சென்று விட்டு சென்னையை சென்றடைந்தனர்.
அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு ஜூலைப் பத்தாம் தேதி குவைத்துக்கு திரும்பினர் நவீன் குடும்பத்தினர்.
சக்தி நன்றாக படித்து ப்ளஸ்டூ தேர்வில் அவளின் பள்ளியிலேயே இரண்டாவதாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று லண்டனில் சென்று படிக்க வேண்டும் என்ற அவளின் கனவும் நெனவானது.
அவளை நவீனும் மிருதுளாவும் லண்டனுக்கு கல்லூரியில் விட்டு வரச் சென்றனர்.
அவளை அங்கே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பும் நாளன்று நவீனால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தவித்தான்.
ஆனால் சக்தி முன் அழுதால் அவளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடுவோமோ என்றெண்ணி எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சக்திக்கும் அழுகை அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்த்தது உடனே மிருதுளா அவளைக் கட்டியணைத்துக் கொண்டு

“இது உன்னுடைய கனவு இல்லையா.”

“ஆமாம்”

“இதுக்காக நீ கஷ்டப்பட்டு படிச்சு இங்க வந்திருக்க?”

“ஆமாம்மா”

“நாற்பதாயிரம் பேர் அப்பளைப் பண்ணி அதுல மூவாயிரம் பேர் தான் தேர்வாகியிருக்கா அதுல நீயும் ஒருத்தி இல்லையா”

“ஆமாம்மா”

“நாங்க உன்னை நினைத்து மிகவும் சந்தோஷப்படறோம்.
உன் அப்பா அம்மான்னு சொல்லிக்கறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அதை நீ எங்களுக்குத் தந்திருக்க சக்திமா.
இனி உன் ஆசைகள், உன் கனவுகள் அதையெல்லாம் தேடிப் போ கண்டுபிடி வாழ்க்கையை சுவாரஸ்யமா வாழக்கத்துக்கோ…
அழதே கண்ணா.
உனகாக நாங்க ரெண்டு பேரு எப்பவுமே இருப்போம்.
சரியா.
ஆர் யூ ஓகே நவ்.
இல்லாட்டி வா எங்களோடவே திரும்பி குவைத்துக்கே வந்துடு”

“ம்…ம்….அப்புறம் எதுக்கு இவ்வளவு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் எழுதினேனாம்”

“ம்…தெரியறதுல்ல…
அப்போ ஒழுங்கா இங்கு இருந்து உன் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வா.
சரியா.
எப்படியும் நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரலாமே அப்புறமென்ன.
ஓகே சியர்அப் மை பேபி.”

“இப்போ பாருமா.
அம்மா அன்ட் அப்பா பத்திரமா குதைத் போயிட்டு வாங்கோ.
நான் நல்லா படிச்சுட்டு ஊருக்கு வர்றேன். இந்த டிசம்பரில் பார்ப்போம் பை.
எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு பை பை. பைப்பா”

என்று நவீனையும் மிருதுளாவையும் இறுக்கக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு அவளின் கனவுகளுக்குப் பின்னால். சென்றாள் சக்தி.

ஹுத்ரோ ஏர்போர்ட்டில் நவீன் பாத்ரூமுக்குள் அடிக்கடிச் சென்று அழுதுவிட்டு வந்தான். அவர்களின் ஃப்ளைட்டுக்காக அமர்ந்திருந்த போது

“நவீ என்னது இது இப்படி அழுதுண்டே இருக்கேங்கள்.
நம்ம சக்தி இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த காலேஜ்ல சேர்ந்திருக்கா.
அவளே தன்னம்பிக்கையோட எவ்வளவு தெளிவா முடிவெடுத்து வந்திருக்கா…
அவ்வளவு நல்லா அவளை வளர்த்திருக்கோம் நாம…
அதை எல்லாம் நினைச்சுப் பெருமைப் படுவேங்களா அதை விட்டுட்டு அழுதுண்டே இருக்கேங்களே!!”

“அழுதேனா இல்லையே”

“ம்…உங்க முகமே காட்டிக் கொடுக்கறதே”

“இல்ல மிருது …பதினெட்டு வருஷமா நம்ம கூடவே இருந்துட்டு இப்போ திடீன்னு அவ பாட்டுக்கு கிளம்பி லண்டன் வந்துட்டா…
நாம குவைத்துல என்ன பண்ணப்போறோம்?”

“இது நல்லா இருக்கே!!!
அதுக்காக அவளை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா சொல்லுங்கோ.
அவளைப் பெத்தோம் சந்தோஷமா நல்லபடியா வளர்த்தாச்சு.
இப்போ அவ அவளோட கனவுகளைத் தேடி போக ஆரம்பிச்சுட்டா…
இனி நாம நம்மளால ஆன ஹெல்ப்பை மட்டும் பண்ணிண்டு பேசாம நாம இருக்கற இடத்துல இருந்துக்க வேண்டியது தான்.
எனக்கும் வருத்தமா தான் இருக்கு ஆனாலும் ப்ராக்டிக்கலாவும் யோசிக்கணும் இல்லையா நவீ.
உங்க பொண்ணை படிக்க காலேஜ்லுல விடறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே…
அப்போ இருபத்தி இரண்டு வருஷமா என்னை பார்த்து பார்த்து வளர்த்த என் பேரன்ட்ஸை கல்யாணம்ங்கற பேர்ல ஒரே நாள்ல எல்லாத்தையும் விட்டுட்டு உங்காத்துக்கு வந்தேனே அப்போ எங்க அப்பா அம்மாக்கு எப்படி இருந்திருக்கும்!!”

“எஸ் எஸ்…எனக்கு புரியறது ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்கறது மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ.
உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்…
இனி அவ்வளவு தான்.
சக்தியை நாம் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவள் அவளின் கனவுகளை தேடி பிடித்து வரட்டும்.”

என்று நவீனின் தோளில் சாய்ந்துக் கொண்டே சொன்ன மிருதுளாவின் தோள்களில் தன் கையைப் போட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஃப்ளைட் ஏறினர். எப்போதும் மூவராக பயணித்தவர்களில் ஒருவருக்கு சிறகு முளைத்து தானாகவே பறக்க ஆரம்பித்து விட்டதால்
இன்று இருவரானார்கள்.

குவைத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒன்றரை நாள் பயணம் முடித்து வந்து சேர்ந்தனர். வந்ததும் சக்திக்கு கால் செய்து பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். தன் அப்பா அம்மாவிடமிருந்து கால் வந்ததும் மகிழ்ச்சியடைந்தாள் சக்தி.

மறுநாள் விடுமுறை என்பதால் நவீன் வீட்டிலேயே இருந்தான். காலை எழுந்ததும் வீட்டில் சக்தி இல்லாதது அவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தொலைத்ததுப் போலவே தோன்றியது.

மிருதுளா காலை டிபனை செய்யணுமே என்பது போல செய்தாள். அதை சாப்பிடனுமே என்பது போல இருவரும் ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழுந்தனர். இரண்டு மூன்ளு நாட்களாக தூங்காத நவீன் அன்று மத்தியம் சோஃபாவில் படுத்தப் படியே தூங்கிப் போனான்.

சற்று நேரத்தில் அது அவனுக்கு அசௌகரியமாக இருக்கவே பெட்டில் படுக்கலாமென்று எழுந்து தன் அறைக்குச் சென்றான். அப்போது சக்தி அறையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. சக்தி அறையிலிருந்து எப்படி அழுகைக் குரல் கேட்கிறது என்ற ஆச்சர்யத்தோடு அங்குச் சென்றுப் பார்த்தான்.

தொடரும்….











ஐவரும் சென்னையிலிருந்து கிளம்பி நான்கு மணிநேரம் காரில் பயணம் செய்து ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் தன்னிடம் சொன்னது போல வருவார்களா அல்லது நவீன் சொன்னது போல கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்களா!!! அங்கே கஜேஸ்வின் இருப்பார்களா? இருந்தால் என்ன செய்வது என்று மனதில் பல குழப்பங்களுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் மிருதுளா. கதவைத் திறந்தார் ஈஸ்வரன்

“ம்….வா வா. எங்கே உன் அம்மா, அப்பா, நவீன் எல்லாரும்”

“அவா கீழே கார்ல உட்கார்ந்திருக்காப்பா. உங்களை அழைச்சுண்டு போக தான் நான் வந்திருக்கேன். இப்போ கிளம்பினா தான் சாயந்தரத்துக்குள்ள முன்னார் போய் சேர முடியும்.”

“ஓ!! அப்படியா. சரி சரி சரி. நாங்களும் ரெடியா தான் இருக்கோம். கதவைப் பூட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான். வா போகலாம்”

“அம்மா அந்த பேக் தாங்கோ நான் தூக்கிண்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் கதவைப் பூட்டிட்டு வாங்கோ”

என்று அவர்களின் வருகையை நவீனிடம் கூற வேகவேகமாக இரண்டாவது தளத்திலிருந்து மாடிப்படிகளில் இறங்கிச் சென்றாள் மிருதுளா. கீழே சென்றதும் நவீன் அவள் கையிலிருந்த பையை கவனிக்காமல் அவள் மட்டும் வருவதைப் பார்த்து

“என்ன மிருது நான் சொன்னது தானே நடந்தது!! சரி சரி வா நீ வந்து கார்ல
ஏறு நாம போவோம்”

“இல்லை நவீ அவா ரெண்டு பேரும் நம்ம கூட வரா. இதோ அவா பை. ம்…‌இதோ வந்துட்டா. வாங்கோ வண்டியில் ஏறுங்கோ”

என்றதும் ஈஸ்வரன் நேராகச் சென்று டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம், அம்புஜம், ராமானுஜம் மூன்று பேர் அமரக்கூடிய நடு இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நவீன், மிருதுளா மற்றும் சக்தி பின்னால் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அனைவரும் காரில் ஏறியதும் அம்புஜம் பர்வதீஸ்வரனிடம்

“எப்படி இருக்கேங்கள் மாமா அன்ட் மாமி? கடைசியா நாம வேனு கல்யாணத்துல பார்த்தது இல்லையா”

“ஆமாம். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேங்கள். வேனு மாட்டுப்பொண்ணு எல்லாரும் எப்படி இருக்கா?”

“எல்லாரும் நன்னா இருக்கா மாமி.”

என்று கொஞ்ச நேரம் குசலம் விசாரித்து விட்டு பின் பொதுவான சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது வண்டி ஓர் ஹோட்டலின் வாசலில் நின்றது. அனைவரும் இறங்கி காலை உணவை உண்டபின் மீண்டும் கார் முன்னாரை நோக்கிச் சென்றது. அதிகாலை எழுந்ததாலும் காலை உணவாக வெண்பொங்கல் உண்டதாலும் ஈஸ்வரனைத் தவிர அனைவரும் நன்றாக உறங்கிப் போனார்கள். ஒரு ஐந்து மணிநேரம் ஆனதும் முழித்துக் கொண்ட நவீன் டிரைவரிடம்

“அண்ணா எங்க வந்திருக்கோம்? இன்னும் எவ்வளவு நேரமாகும் அந்த ரிசார்ட்டுக்கு போக?”

“சார் கிட்டக்க வந்துட்டோம் சார். இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரம் தான் சார் அங்க ரீச்சாகிடுவோம்”

“ஓகே! ஓகே!”

என்று நவீனும் டிரைவருமாக பேசிக் கொண்டதில் அனைவரும் விழித்துக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா நவீனிடம்

“அப்படிப் பார்த்தா நாம அங்க ரீச்சாக எப்படியும் இரண்டு இரண்டரை மணியாகிடுமே நவீ!!”

“ஆமாம்…ஆகலாம்”

“அப்போ வழியிலேயே எங்கயாவது லஞ்ச் முடிச்சுட்டு போகலாமா? எல்லாரும் வயசானவா ஸோ பசி தாங்க மாட்டா இல்லையா…இப்பவே மணி ஒன்னாச்சு”

“அப்படியா சரி டிரைவர் நல்ல வெஜ் ரெஸ்டாரண்ட்டா பார்த்து நிப்பாட்டுங்க சாப்டுட்டு போகலாம்”

என்றதும் வண்டி ஓர் ஹோட்டல் முன் நின்றது. அனைவரும் இறங்கி மத்திய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணித்தனர். அப்போது அரசியல் மற்றும் சினிமா பிரமூகர்கள் என பேப்பரிலிருந்த விஷயங்களைப் பற்றி மும்முரமாக நான்கு பெரியவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். சக்தி தன் மொபைலில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தாள். நவீனும் மிருதுளாவும் மாலை எல்லோருமாக எங்கு செல்லலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வண்டி மூன்று மணிக்கு அவர்கள் புக் செய்திருந்த ரிசார்ட் முன் சென்று நின்றது. அனைவரும் இறங்கினர். வயதானவர்கள் நால்வரும் பாத்ரூம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கே சென்றனர். மிருதுளாவும் நவீனும் செக் இன் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா மூன்று அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கூறினாள். அவர்களும் அதுபடியே தருவதாக கூறினர். டிரைவர் அவர்கள் பைகளையும் பெட்டிகளையும் இறக்கி வைத்ததும் ரிசார்ட் ஊழியர்கள் அவற்றை ஒரு தள்ளு வண்டியில் வைத்து ரிசப்ஷனில் கொண்டு வைத்தனர். மூத்தவர்கள் வந்து ரிசப்ஷனில் அமர்ந்ததும் அனைவருக்கும் வெல்கம் டிரிங்க் எனப்படும் வரவேற்பு பானம் வழங்கப் பட்டது.

அதன்பின் அனைவரையும் அவரவர் அறைகளைக்கு அழைத்துச் சென்றனர் ரிசார்ட் ஊழியர்கள். மூவரின் அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. மிருதுளா மூத்தவர்களிடம் ஐந்து மணிக்கு வெளியே செல்லவேண்டும் அதுவரை நன்றாக ஓய்வெடுங்கள் என்று கூறி அவர்களுக்கு அவர்களின் அறைகளை காண்பித்து எது எது எங்கெங்கு உள்ளது என்பதையும் சொல்லிக் கொடுத்து, ஏதாவது அவசரமென்றால் தன்னை எப்படி தொலைபேசியில் அழைப்பது என்பதையும் சொல்லி, சாப்பிட ஏதாவது தேவையென்றால் ரூம் சர்வீஸுக்கு எந்த எண்ணை அழுத்த வேண்டுமென்றும் விவரித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அங்கே நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சக்தி டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தியையும் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு மிருதுளாவும் சிறிது நேரம் கண் அசந்தாள்.

மாலை ஐந்தரை மணிக்கு அருகேயிருந்த ஒரு கோவிலுக்கு மட்டும் சென்று ரிசார்ட் திரும்பினர். ஏனெனில் அன்று மாலை ரிசார்ட்டில் ஏதோ விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாக தெரியவந்ததும் சீக்கிரம் ஒரு ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வந்தனர். ஏழு மணிக்கு விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது. ஈஸ்வரன் தன் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டும் பின் ஏதோ டைப் செய்துக் கொண்டுமிருந்ததை கவனித்தாள் மிருதுளா. எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்ததும் அனைவருக்கும் பஃபே முறையில் இரவு உணவு வழங்கப்பட்டது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப் பட்டிருந்தது. அனைத்தையும் என்னென்ன என்பதை மூத்தவர்களுக்கு விவரித்தாள் மிருதுளா. பின் அனைவரும் தட்டை எடுத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டியதை எடுத்து உண்டு மகிழ்ந்தனர். பின் எல்லோருமாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காலார நடந்து அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

மிருதுளா, நவீன், சக்தி மூவரும் அவர்கள் அறைகளுக்குச் சென்றதும் சக்தி தன் பெற்றோரிடம்

“அப்பா அம்மா இன்னைக்கு என்ன டேட்?”

“ஜூன் ட்வென்டி செக்கண்ட் டி. அதுக்கென்ன?”

“அம்மா இன்னைக்கு என்னோட யூ.எஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கும்”

“அமாம் சக்தி …நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!! சரி சரி வா என் லேப்டாப்ல பார்ப்போம்”

“ம்…ஓகேப்பா.”

“சரி அதுக்கு உன் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்ற லாகின் டீட்டேய்ல்ஸ் எல்லாம் வேணுமே டா கண்ணா”

“எல்லாமே என் மொபைல்ல இருக்குப்பா. நீ அந்த பேஜ்ஜை ஓபன் பண்ணு நான் எல்லா டீட்டேய்ல்ஸும் தர்றேன்”

என்று மூவரும் ஆவலாக சக்தி எழுதிய ஒரு நுழைவுத் தேர்வின் முடிவுகளைப் பார்த்தனர். அதைப் பார்த்ததும் சக்தி ஐய்யா என்று சந்தோஷத்தில் குதித்தாள் நவீனும் மிருதுளாவும் அவளை கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார்கள். பின் மிருதுளா தன் அம்மா அப்பா அறையின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னாள். அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சக்தியிடம் பாராட்டுத் தெரிவிக்கும் படியும் காலையில் நேரில் தாங்கள் தெரிவிப்பதாகவும் சொல்லி ஃபோனை வைத்தனர். பின் தன் மாமனார் மாமியாருக்கு கால் செய்து அதே விஷயத்தை சொன்னாள்…அதற்கு ஃபோனை எடுத்த ஈஸ்வரன்

“ஓ!! அப்படியா. சரி சரி.”

என்று ஃபோனை வைத்தார். உடனே மிருதுளா முகம் மாறியதைக் கண்ட நவீன் அவளிடம்

“என்ன உன் மாமனார் வழக்கம் போல ஒண்ணுமே சொல்லாம ஃபோனை வச்சுட்டாரா?”

“ஒரு வேளை தூங்கிட்டாளோ என்னவோ? அதுனால கூட இருக்கலாம். அவா நாளைக்கு காலையில நம்ம சக்திக்கு விஷ் பண்ணுவா பாருங்கோ.”

“நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட…எனக்கு தூக்கம் வர்றது….சக்தியும் தூங்கிட்டா…வா வந்து நீயும் தூங்கற வழியப்பாரு.”

என்று நவீன் சொன்னதும் சென்று படுத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மிருதுளா. மறுநாள் காலை எழுந்து தயாராகி அனைவரும் அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் ஒன்று கூடினர். அப்போது அம்புஜம் சக்தியைக் கட்டிக் கொண்டு

“வாழ்த்துகள் சக்தி. உன் அம்மா நேத்து நைட்டு ஃபோன் பண்ணி சொன்னா. நீ அந்த பரீட்சையில் 2400 க்கு 2370 எடுத்திருக்கயாமே ரொம்ப சந்தோஷமா இருக்குக் கண்ணா.”

ராமானுஜம் சக்தியை தட்டிக்கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால் பர்வதீஸ்வரன் கண்டுக் கொள்ளாதது போல நடந்துக் கொண்டனர். அது மிருதுளாவை மனதளவில் பாதித்தது ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாது இருந்துக் கொண்டாள். காலை உணவு உண்ட பின் வெளியே சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது ஓரிடத்தில் மிருதுளாவை தனியாக அழைத்துச் சென்ற அம்புஜம் அவளிடம்

“ஏய் மிருது எங்க கிட்ட சக்தி பரீட்சை முடிவைப் பத்தி சொன்னதை நீ உன் மாமனார் மாமியார்ட்ட சொல்லலையா? நீ அவாகிட்டயும் சொல்லிருப்பனுட்டு தான் நாங்க பாட்டுக்கு குழந்தையை பாராட்டினோம்…அவா கோவிச்சுக்கப் போறாடி”

“அம்மா நான் உங்ககிட்ட என்ன சொன்னேனோ அதை அப்படியே அவாகிட்டயும் நேத்து நைட்டு சொன்னேன்.”

“ஓ!! அப்படீன்னா அவா நைட்டே பாராட்டிட்டாளோ? அதுதான் காலையில நாங்க குழந்தையைப் பாராட்டும் போது ஒண்ணும் சொல்லாமல் இருந்தாளா?”

“ம்..ம்…சரி சரி வா. அவா எல்லாரும் அங்க போயிட்டா பாரு.”

என்று தாயிடமும் அவர்களைப் பற்றி ஏதும் கூறாது தவிர்த்துவிட்டாள் மிருதுளா.

எல்லா சுற்றுலா தளங்களுக்கும் சென்று மத்திய உணவை ஒரு ஹோட்டலில் அனைவரும் அமர்ந்து அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்துக் கொண்டிருக்கையில் அம்புஜத்தின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப்பில் வந்தது. அதை எடுத்து என்னவென்று பார்த்தாள். அதில் வேனு தன் மனைவியுடன் எடுத்த படத்தை பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் அம்புஜத்துக்கு ஓரே சந்தோஷமானது. உடனே ராமானுஜத்திடமும் மிருதுளாவிடமும் காண்பித்தாள். அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம் காட்டிவிட்டு தன் அம்மாவிடம் கைபேசியைக் கொடுத்து

“அம்மா இந்த ஃபோட்டோவுல மகதி ரொம்ப அழகா இருக்காமா”

என்றதும் பர்வதத்திடம் கைபேசியிலிருந்த படத்தைக் காட்டினாள் அம்புஜம் அதற்கு பர்வதம் மெல்ல மிருதுளா காதில் மட்டும் விழும்படி

“ஆமாம் ஆமாம்…அவ அழகா இருக்கா அதுனால படத்துலயும் அழகா தெரியறா…நாம அழகா இருந்தா தானே படத்துலேயும் அழகா தெரிவோம்”

என்று குத்தலாக கூறினாள். மிருதுளாவுக்கு கோபம் வந்தது ஆனால் தான் அழைத்து வந்ததால் அவர்களிடம் பிரச்சினை ஏதும் செய்யாது நல்லபடியாக திருப்பிக் கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் அவளை அதற்கு பதில் பேசவிடாமல் தடுத்தது. இதே போல அங்கிருந்த நான்கு நாட்களும் கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் குத்தலாகவே பேசினாள் பர்வதம். அதை அனைத்தையும் வழக்கம் போல பொறுத்துக் கொண்டாள் மிருதுளா.

மூன்றாவது நாள் இரவு உணவு உண்டு முடித்தப்பின் அம்புஜமும் ராமானுஜமும் அவர்கள் அறைக்கு செல்ல வேண்டி மற்ற அனைவருக்கும் “பை பை” சொல்ல உடனே சக்தி மிருதுளாவிடம்

“அம்மா அம்மா நான் இன்னைக்கு அம்பு பாட்டிக்கூடப் படுத்துக்கறேன் மா”

“ம்…சரி சரி போ…அம்மா அவளை ரொம்ப நேரம் டிவி பார்க்க விடாதே.”

“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீ வாடி என் செல்லக் குட்டி நாம போகலாம். சரி மாமா அன்ட் மாமி நாங்க வர்றோம். குட் நைட்”

“அம்மா அன்ட் அப்பா நாளைக்கு காலையில எட்டு மணிக்கு உங்க பெட்டியெல்லாம் பேக் பண்ணிண்டு இதே ரெஸ்டாரண்ட்டுக்கு வந்திடுங்கோ. நாம ஒன்பது மணிக்கெல்லாம் இங்கேந்து கிளம்பணும் சரியா”

“ஓகே டன். வந்திடுவோம். குட் நைட்”

என்று கூறி அவர்கள் சென்றதும் தன் ரூமுக்கு செல்வதற்காக எழுந்த நவீனை சற்று நேரம் கூட அமர்ந்து விட்டு செல்வோம் என்று கூறி அமரவைத்து பர்வதம் ஈஸ்வரன் மிருதுளா மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர். நவீன் ஏதும் பேசாது அமர்ந்திருந்தான். அவன் அந்த மூன்று நாட்களிலுமே அவர்களுடன் ஏதும் பேசவில்லை. பர்வதீஸ்வரன் அங்கிருந்த மூன்று நாட்களிலும் கவினின் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி எதுவுமே நவீனிடமோ மிருதுளாவிடமோ மூச்சுவிடாதிருந்தனர் . நவீனும் மிருதுளாவும் அதைப் பற்றி ஏதும் கேட்டுக்கொள்ளாது இருந்தனர். ஈஸ்வரன் தன் கைபேசியையே நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்து

“மிருதுளா இந்த பிச்சுமணி ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்கான்…அது ஒண்ணுமே புரியலை…சரியா தெரியலை… என்னன்னு படிச்சு சொல்லு”

என்று கூற மிருதுளாவும் அதை வாங்கிப் படித்தாள். அவளருகிலிருந்த நவீனும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தான். அதில் “கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாது போனதுக்கு மன்னிக்கவும். அவனிடம் எங்களின் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் தெரிவிக்கவும்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தன் மாமானாருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமென்பது மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் அந்த விஷயத்தை இவர்களிடம் கன்வே செய்வதற்காக இப்படிச் செய்கிறார் என்பதை உணர்ந்த மிருதுளா அவரிடம்

“உங்க புள்ளைக்கு வாழ்த்தும் ஆசிர்வாதமும் தெரிவித்திருக்கார் பிச்சுமணி மாமா”

என்று பொதுவாக சொல்லி அவர் ஃபோனை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துத்தாள். அதற்கு மேல் அவரை அதைப் பற்றி பேச விடாமலிருக்கவும் அதைப் பற்றி கேட்க விரும்பாததாலும் சட்டென அவரிடம்

“ஆமாம்ப்பா நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்…நீங்க ஃபோட்டோ எடுக்கறேங்கள் உடனே உங்க ஃபோனில் ஏதோ மெஸேஜ் டைப் பண்ணறேங்கள். அப்படி என்னதான் செய்யறேங்கள் எடுத்த ஃபோட்டோஸை?”

“அதுவா…அதெல்லாம் என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும் எல்லா இன்பஃர்மேஷன்ஸையும் உடனே உடனே அனுப்பணுமில்லையா அதுதான் அனுப்பறேன். வேற ஒண்ணுமில்லை”

“ஓ!!! அப்படியா!!! ஆனா இதுவரைக்கும் நவீனுக்கோ இல்ல எனக்கோ இது மாதிரியெல்லாம் டக்டக்குனு எந்த மெஸேஜும் …சாரி… சாரி… இன்பஃர்மேஷன்ஸும் நீங்க அனுப்பினதில்லையா அது தான் கேட்டேன்….சரி… அது என்ன உடனுக்குடன் அனுப்பவேண்டிய இன்பஃர்மேஷன்?”

“ம்…அது நாம போற இடங்கள் அதோட பேரு அங்க என்னென்ன இருக்கு? அதோட ஃபோட்டோஸ் அப்புறம் நாம எல்லாருமா எடுத்துண்ட ஃபோட்டோஸ் இதெல்லாம் தான் வேறென்ன…சரி சரி …எனக்குத் தூக்கம் வர்றது. நாங்க போய் படுத்துக்கறோம். காலையில எட்டு மணிக்கு ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கலாம். பை”

என்று கூறி அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் மூத்த தம்பதியர். அவர்கள் போன பின்னாலும் நவீனும் மிருதுளாவும் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது நவீன் மிருதுளாவிடம்

“பார்த்தயா உன் மாமனாரின் சாமர்த்தியத்தை…அவன்ட்ட ஏன்டா அழைக்கலைன்னு கேட்கத் துப்பில்லை, நம்ம கிட்ட சொல்ல திராணி இல்லை ஆனாலும் நாம தெரிஞ்சுக்கணுமாம் அவன் வீட்டு கிரகப்பிரவேசம் நல்லா நடந்ததுன்னு …எப்படி?”

“அதைவிட என்னை ஹிட் பண்ணினது வேற ஒரு டையலாக் தான் நவீ!!”

“இதைவிட வேற என்ன?”

“நீங்க அவர் அதை சொன்னதும் திருப்பி கேட்பேங்கள்னு நினைச்சேன். ஆனா நீங்க கேட்காததால நான் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.”

“அப்படி என்ன சொன்னா? எனக்குப் புரியலை மிருது”

“என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும்னு சொன்னாரே கவனிச்சேங்களா? அப்படீன்னா நாங்க யாராம்ன்னு எனக்கு கேட்கத் தோணித்து…ஆனா அதைக் கேட்க போய் அப்புறம் அதுக்கு அவா கத்த ஆரம்பிச்சான்னா அப்புறம் எல்லாருக்கும் வந்த இடத்துல தர்மசங்கடமாகிடுமேனுட்டு பேசாம லைட்டா அதுக்கு திருப்பிக் கொடுத்துட்டு விட்டுட்டேன்”

“ம்…ம்…கவனிச்சேன்…எல்லாம் கவனிச்சேன். நீ இந்த ஒரு இடத்துல மட்டும் விட்டுக் கொடுக்கலைங்கறதையும் நான் மூணு நாளா கவனிச்சிண்டு தான் இருக்கேன் மிருது.”

“ம்…சரி சரி…அதை விடுங்கோ நம்ம சக்திக் குட்டி இப்படி ஃபுல் ஃபுல்லா மார்க் எடுத்திருக்காளே அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்.”

“அவகிட்டயே அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக் குடுப்போம்”

“அதுவுமில்லாம நாம உங்க அப்பா அம்மாவை வீட்டுல விட்டுட்டு ஒரு ஹோட்டல் புக் பண்ணி அங்கே அன்னைக்கு நைட்டு இருந்துட்டு மறுநாள் காலையில நாம அங்க ரெகுலரா போற கோவில்களுக்கெல்லாம் போயிட்டு சென்னைக்கு போவோம் நவீ…ப்ளீஸ்”

“ம்…சரி ஓகே. அப்படியே செய்யலாம். இப்போ போய் தூங்கலாமா!!!”

“ம்…ஓகே வாங்கோ. காலையில சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் பேக் பண்ணணும் வேற…”

அவர்கள் முன்னாரிலிருந்து ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அன்று காலை எட்டு மணிக்கு அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் அனைவரும் அவரவர் பெட்டி மற்றும் பைகளுடன் கூடினர். காலை உணவை உண்டு முடித்ததும். மிருதுளா சக்தியிடம் ஏதோ சொன்னாள். உடனே சக்தி தன் ஈஸ்வரன் தாத்தாக்கும் பர்வதம் பாட்டிக்குமாக குவைத்திலிருந்து வாங்கி வந்த கிஃப்ட்ஸை அவரவரிடம் கொடுத்து

“தாத்தா அன்ட் பாட்டி எங்களோடு இந்த நான்கு நாட்கள் வந்திருந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தமைக்கு நன்றி”

என்றதும் ஈஸ்வரன் திருப்பி

“தாங்ஸ்” என்றார்

உடனே சக்தி

“தாத்தா அன்ட் பாட்டி பிரித்துப் பார்த்துப் பிடிச்சிருக்கானு சொல்லுங்கோ ப்ளீஸ்” என்றாள்

உடனே பரிசுப் பொருட்களை மூத்தவர்கள் பிரித்துப் பார்த்தனர். முதலில் ஈஸ்வரன் பிரித்துப் பார்த்தார் அதிலிருந்த வாட்ச்சையும் டேப்லெட்டையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமானுஜம் தன்னிடமிருந்த புது டேப்லெட்டை எடுத்துக் காட்டி

“மாமா இங்கே பாருங்கோ எனக்கும் உங்களுக்கு வாங்கினா மாதிரியே ஒரு டேப்லெட் வாங்கித் தந்திருக்கா”

என்று காட்டியதும் அதை வாங்கிப் பார்த்த ஈஸ்வரன்

“அட ஆமாம் அதே தான். அப்போ வாட்ச் எங்கே?”

“அது ஆத்துல வச்சிருக்கேன். அதுவும் நாம ரெண்டு பேருக்கும் ஒண்ணே தான்’

“ஏய் பர்வதம் நீயும் திறயேன்டீ”

என்று ஈஸ்வரன் சொன்னதும் திறந்துப் பார்த்த பர்வதம்

“என்கிட்ட மூக்குத்தியும் தோடும் நிறைய இருக்கு…ம்…இதுவும் நல்லாதான் இருக்கு”

என்று கூறியதும் மிருதுளா சட்டென

“அம்மா உங்க கிட்ட நிறைய மூக்குத்தி அன்ட் தோடு இருக்கலாம்…ஆனா வைர மூக்குத்தி இருக்கா?”

“இல்லை”

“ஆங்!! இல்லையில்லையா…இன்னேலேந்து அதுவும் உங்ககிட்ட இருக்கு.”

என்று மிருதுளா கூறி முடித்ததும் அம்புஜம்

“ஆமாம் மாமி எனக்கும் இதே தோடு அன்ட் வைர மூக்குத்தி தான் இவா வாங்கித் தந்திருக்கா. பாருங்கோ நான் அதைத் தான் போட்டுண்டும் இருக்கேன்.”

என்று காண்பிக்க அதற்கு மிருதுளா

“ஆமாம் மா. எங்களுக்கு நீங்க நாலு பேருமே அப்பா அம்மா தான். அதுனால குடுக்கற கிஃப்ட்டுல கூட பேதமிருக்கக் கூடாதுங்கறது எங்களோட பாலிசி. உங்க ரெண்டு பேருக்காக நாங்க வாங்கிண்டு வந்த வைர மூக்குத்தியும் ஜர்கான் தோடும் தான் அது ரெண்டும்”

“என்னது வைர மூக்குத்தியா???”

என்று வாயைப் பிளந்தாள் பர்வதம்.

பின் அனைத்தையும் அவரவர் கைப்பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர். மத்திய சாப்பாட்டையும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபியையும் ஹோட்டலில் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு ஐந்து மணி போல முதலில் ஈஸ்வரன் தம்பதியரை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வழக்கமான கோவில்களுக்கெல்லாம் சென்று வரவேண்டி அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக அன்று மாலை ஒரு ஏழு மணிக்கு புறப்பட்டு ப்ரவீன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே துளசி இருக்கவில்லை. ப்ரவீன் வந்தவர்களிடம்

“வாங்கோ வாங்கோ அண்ணா அன்ட் மன்னி. வெல்கம் சக்தி”

“எப்படி இருக்கேங்கள்? எங்க துளசி குழந்தைகளை எல்லாம் காணம்? நீ மட்டும் இருக்க?”

“அவா எல்லாருமா துளசியோட அண்ணா ஆத்துக்கு போயிருக்கா மன்னி. அவா போய் ஒரு மூணு நாளாச்சு. நாளைக்கு வந்திடுவா. அப்புறம் டிரிப் எல்லாம் எப்படி இருந்தது?”

“சூப்பரா இருந்தது. இந்தா ப்ரவீன் குழந்தைகளுக்கும் உனக்கும் துளசிக்கும் எங்களோட ஒரு சின்ன அன்பளிப்பு.”

“ஓ!! தாங்ஸ் மன்னி. இருங்கோ குடிக்க தண்ணிக் கொண்டு வர்றேன். இவ்வளவு நேரம் நான் அப்பா அம்மா ஆத்துல தான் இருந்தேன். இப்போ தான் இங்கே வந்தேன். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருந்தேங்கள்னா நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். இந்தாங்கோ தண்ணி எடுத்துக்கோங்கோ”

என்று அவன் தண்ணீர் டம்பளரைக் கொடுக்கும் போது அவன் கையை கவனித்த மிருதுளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் ஆசையாக ஈஸ்வரனுக்கு பரிசளித்த வாட்ச் ப்ரவீன் கையிலிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு டம்பளரை ப்ரவீனிடம் திருப்பிக் கொடுத்ததும் அதை அடுப்படிக்குள் வைக்கச் சென்றான் ப்ரவீன். அப்போது மிருதுளா மெல்ல நவீனிடம் ப்ரவீனின் கையை கவனிக்கச் சொன்னாள். அவனும் பேச்சு வாக்கில் கவனித்தான். பின் நவீன் எழுந்து

“சரி டா நாழி ஆயிடுத்து நாங்க கிளம்பறோம்.”

“எங்க ? அப்பா அம்மா ஆத்துக்கு தானே நானும் வர்றேன்”

“இல்ல இல்ல நாங்க ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடப் போறோம். எங்களோட வாயேன் நீயும் தனியா தானே இருக்க “

“சரி வரேன்.”

என்று நால்வரும் ஹோட்டலுக்குச் சென்று டின்னர் அருந்திக் கொண்டிருக்கும் போது ப்ரவீன் நவீனிடம்

“அண்ணா அப்போ நீங்க நாளைக்கு பவினோட புள்ளைக்கு முடியெறக்கி காதுக்குத்துற பங்ஷனுக்கும் வர்றேங்கள் தானே!!”

“என்னது அப்படி ஒரு பங்ஷன் நாளைக்கு நடக்கப் போறாதா என்ன?”

“ஆமாம். ஏன் அவன் உங்களுக்கு சொல்லலையா?”

“ம்…ம்….”

“அப்பா அம்மாவும் சொல்லலையா?”

“ம்..ம்..”

என்று இரண்டே சப்தத்தில் பதிலளித்தான் நவீன். பின் அங்கிருந்து ப்ரவீனை அவன் வீட்டில் விடச்சென்ற போது அவன்

“இல்ல அண்ணா என்னை அப்பா ஆத்துலேயே விட்டுவிடு. ஏன்னா காலையில சீக்கிரமா கிளம்பி போகணும். நான் எங்காத்துல இருந்தேன்னா அப்புறம் தூங்கிடுவேன்”

“சரி ப்ரவீன் அப்போ துளசி அந்த பங்ஷனுக்கு வரமாட்டாளா?”

“இல்ல மன்னி அவ வரலை. நான் மட்டும் தான் போகப் போறேன்”

என்று பேசிக்கொண்டே இருக்கும் போது ஈஸ்வரன் வீட்டு வாசலில் கார் நின்றது. ப்ரவீனை இறங்கச் சொன்னான் நவீன். அப்போது ப்ரவீன்

“வாங்கோ இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராமல் போனா எப்படி வாங்கோ மன்னி வாண்ணா”

“சாயந்தரம் தானே டா வந்தோம்”

“சாயந்தரமும் நீ வாசலோட போயிட்டயாமே…வாண்ணா”

என்று ப்ரவீன் வற்புறுத்தியதால் மூவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். அப்போது ஈஸ்வரன்

“நீங்க சென்னைக்கு போகலையா?”

“இல்லப்பா நாங்க நாளைக்கு கோவிலுக்கெல்லாம் போயிட்டு தான் சென்னைப் போவோம்”

என்று கூறிக்கொண்டே ப்ரவீன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அதை கவனித்த ஈஸ்வரன்

“ஓ!! அப்படியா…சரி சரி சரி…நீங்க குடுத்த வாட்ச் இவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு அவன் எடுத்துண்டுட்டான். டேப்லெட்டை நான் அவன் புள்ளைக்குக் கொடுத்துட்டேன்”

என்று சொன்னதும் மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்ல உடனே அவர் தன் கைபேசியில் யாரிடமோ பேசி பின் தன் கைப்பேசியை நவீனிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். அதற்கு நவீன்

“யார் ஃபோன்ல? என் கிட்ட எதுக்கு குடுக்கற?”

“இந்தா பேசு பவின் தான். அவன் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம்”

“ஹலோ!”

“அண்ணா எப்படி இருக்க? இந்தியா வந்திருக்கையாமே? சரி நாளைக்கு எங்க புள்ளைக்கு முடியெறக்கிக் காதுக் குத்தறோம் நீயும் மன்னியும் வந்திடுங்கோ. ஒரு நிமிஷம் மன்னிட்ட ஃபோனைக் குடு பவித்ரா பேசணுமாம்”

என்று சொல்ல வேண்டுமே என்பது போல பேசிய பவினிடம் வேறேதும் பேச விரும்பாத நவீன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்தான்.

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“ஹாய் மன்னி நான் பவித்ரா பேசறேன். நாளைக்கு எங்க புள்ளைக்கு கோவில்ல வச்சு முடியிறக்கி காதுக்குத்தப் போறோம் நீங்க அவசியம் வரணும்.”

“ரொம்ப சந்தோஷம் பவித்ரா. ஆனா சாரி எங்களால வரமுடியாதுமா.”

“ஏன் மன்னி காலையில வந்துட்டு போயிடுங்கோளேன். ஒரு எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்”

“இல்லமா இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தேங்கள்னா நிச்சயம் வந்திருப்போம். இப்படி வந்த இடத்துல சொன்னதால வரலைன்னு சொல்லறேன்னு நினைச்சுக்காத பவித்ரா…எங்களுக்கு இது சாயந்தரம் வரைக்கும் தெரியாதில்லையா அதுனால வேற ப்ளான் போட்டுட்டோம்… ஸோ நாங்க வரமுடியாதுமா. எங்களோட ஆசிர்வாதம் எப்போதும் குழந்தைகளுக்கு உண்டு.”

“அப்படியா சரி மன்னி. நீங்க ஃபோனை அப்பாட்டயே குடுங்கோ”

என்று வந்த இடத்தில் அழைக்கிறார்கள் என்பதை உணர்த்தும் படி பவினுக்கும் பவித்ராவுக்கும் நன்றாக பதிலடிக்கொடுத்தாள் மிருதுளா. ஈஸ்வரன் ஃபோனில் ஏதோ பேசிவிட்டு கட் செய்தபின் ஹாலுக்கு வந்து….

“அது ஒண்ணுமில்லை. நீங்கள் வரேங்கள்னு அவாளுக்கு தெரியாதோன்னோ அதுதான் முன்னாடியே சொல்லலையாம். நீங்க வர்றேங்கள்ன்னு சொல்லியிருந்தா நிச்சயம் கூப்பிட்டிருப்பாளாம்”

“ஏன் நாங்க சொல்லாம? உங்க கிட்ட தான் அப்பவே நான் ஸ்கைப்ல சொன்னேனே!!”

“என்கிட்ட இல்ல…அவாகிட்ட சொல்லலையோன்னோ!!! அதைச் சொல்லறேன்”

“ஓ!! அப்படீன்னா அவா யார் யார் விசேஷத்துக்கு வருவாளோ அவாளை மட்டும் தான் இன்வைட் பண்ணுவாளா? எல்லா சொந்த பந்தங்களையும் கூப்பிடமாட்டாளா? நல்லா இருக்கே இந்த சிஸ்டம் இல்ல நவீ.”

“அப்படி இல்ல”

“சரி நவீ நாழியாயிடுத்து நாம கிளம்பலாமா?”

“எங்கே கிளம்பறேங்கள் இங்கேயே இருக்கலாமே”

“இல்லப்பா என்னோட அப்பா அம்மா வேற இருக்கா”

“அதுனால என்ன? அவாளும் இங்கேயே வந்து தங்கட்டுமே”

“இல்லாட்டி …என் வீட்டில் யாருமே இல்லையே மன்னி அங்க வந்து தங்கிக்கோங்கோ. சரி… இப்போ உங்க அப்பா அம்மா எங்க?”

“நாங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கோம். அங்கே தான் ஆவா இருக்கா. நாங்களும் இப்போ அங்கே தான் போகப் போறோம்.”

“என்னத்துக்கு அனாவசியமா ரூமெல்லாம் போட்டுண்டு.”

“சரி மிருது நாம போகலாம். நாங்க வர்றோம்”

என்று அவர்கள் போட்டுக்கொண்டிருந்த நாடகம் பிடிக்காத நவீன் வெடுக்கென கூறிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக இறங்கிச் சென்றான். மிருதுளாவும் அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நவீன் பின்னாடியே சக்தியை அழைத்துக் கொண்டுச் சென்றாள்.

தொடரும்….