
நகைத் திருட்டு,
பணத் திருட்டு,
உடைத் திருட்டு,
இவை அனைத்தும் புறத் திருட்டு.
அவை பெரும்பாலும்…
பசி போக்கவும்,
பிரச்சினை தீர்க்கவும்
செய்யப்படும் திருட்டுகள்.
ஆனால் இன்று!
அகத்திருட்டு எனப்படும்
கருத்துத் திருட்டு,
அறிவுத் திருட்டு,
படைப்பு திருட்டு
பெருகி வருகிறது.
ஏனெனில்,
தானாக சிந்திக்க
அவர்களுக்கு நேரமுமில்லை,
சிந்தனை திறனுமில்லை.
இத்தகைய திருடர்கள்
நாகரீகத்தின் தோலணிந்த கள்வர்கள்,
பகுத்தறிவின் முகமூடிக்குள் மறைந்து,
பிறரின் கற்பனையையும் சிந்தனையையும் களவாடுகிறவர்கள்.
பசிக்காகவோ!
பெயர் புகழுக்காகவோ!
திருட்டு திருட்டே!
பசிக்காக திருடுபவனைச் சமூகம் புறந்தள்ளுகிறது,
ஆனால் பெயர் புகழுக்காக திருடுபவனை
பெருமையின் பீடத்தில் உயர்த்துகிறது.
அதுவே நாகரீகத்தின் நாணமற்ற பெருமிதம்.