🕊️ வலிமையும் வலியனும்… 💭

அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும்
வலியவன் எளியவனை தாக்க ஒருபோதும் தயங்குவதில்லை;
தயங்கியதுமில்லை!

வலியவன் வலி அறியமாட்டான்!

அதனால்…

மீண்டும் ஒட்டி, உறவாடி,
ஒற்றுமையை நிலைநாட்ட பெருந்தன்மையோடு முன்வருவான்!

ஆனால்…

தாக்கப்பட்ட எளியவன்!

அதை மறந்து, மன்னித்து,
தன்னை தாக்கியவனை மீண்டும் மதித்து, ஏற்று, உறவாட வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது…
சர்வசாதாரணமப்பா…

என்று குடும்பங்களில் நடக்கும் கூற்று,
இன்று உலக அரங்கில் வெகுவிமர்சையாக நடைந்தேறி வருகிறது.

🌍 தாக்கிய வலியவன் வருந்தி, திருந்த வேண்டும்!

💫 தாக்கப்பட்ட எளியவன், தனித்துநின்றாலும் துணிந்து,
அதனை உணர்த்த வேண்டும்!

🔥 வலியவன் மீண்டும் தாக்க கையை ஓங்கும் முன்,
எளியவன் எட்டாத தூரத்தில் இருத்தல் வேண்டும்!

Leave a comment