கையில் பத்துப் புடவைகளுடன் மனதில் புதிய கனவுகளுடன் குஜராத் சென்றாள் மிருதுளா. அக்கம் பக்கத்தினரிடம் தான் புடவை வியாபாரம் செய்வதாக தெரிவித்து நமது தென்னிந்திய புடவைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தாள். அவற்றை மாத தவணைக்கு தருவதாகவும் சொன்னாள். அனைவரும் மிருதுளா வீட்டுக்கு சென்று புடவைகளைப் பார்த்தனர். நன்றாக இருக்கிறது என்றும் கூறினர். ஆனால் ஒரு புடவைக் கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் சற்று சோர்வடைந்தாலும் மீண்டும் ஒரு யோசனை செய்து அவர்கள் இருந்த கேம்பஸின் கம்யூனிட்டி சென்டரில் (அந்த யூனிட் ஹெட்டிடம் அனுமதிப் பெற்று) ஒரு பேப்பரில் தான் விற்பனை செய்யும் புடவைகளின் டிசைன்களுக்கு தானே ஒரு விளம்பரப்படம் வரைந்து அதை அங்கே ஒட்டினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கடந்தன எவரும் வரவில்லை. மூன்றாவது நாள் நவீனின் நண்பரும் அவர் மனைவியும் நவீன் மிருதுளா வீட்டிற்கு வந்தனர்.
“ஹாய் ஹர்ஷா ப்ளீஸ் கம் இன்”
“நமஸ்தே பெஹன்”
“நமஸ்தே பையா”
“என்ன பக்கத்து கேம்பஸ் பீப்புள் எங்க கேம்பஸுக்கு வந்து இருக்கீங்க!!”
“அதுவும் ரொம்ப நாள் கழிச்சுன்னு சொல்லுங்கோ நவீன். இந்தாங்கோ உங்களுக்குப் பிடித்த சவுத் இந்தியன் ஃபில்டர் காபி. எடுத்துக்கோங்கோ”
“ம்…இப்போ சொல்லுங்கோ எப்படி இருக்கேங்கள்? பசங்க எப்படி இருக்கா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம் மிருது. நீங்க என்ன பிஸ்னஸ் உமன் ஆகிட்டிங்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை வீட்டில் சும்மா இருக்கறதுக்கு ஏதாவது பண்ணலாமேன்னு தான் ஆரம்பிச்சிருக்கேன்.”
“ஏன் உங்க வேலையை விட்டுட்டிங்க? நீங்க அப்படி ஒரு எம்.என்.ஸீ கம்பெனியில் வேலைப் பார்க்கும் போது எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா!! நம்ம கேம்புலேயே நீங்க ஒரு உமன் தான் அப்படி ஒரு வேலையை பார்த்தீங்க. ரியலீ யூ ஆர் க்ரேட் ன்னு நாங்க எல்லாருமே பேசிக்கிட்டோம்.”
“ஹே ஹர்ஷா அதுக்கு முன்னாடி ஷு காட் ஆன் ஆஃபர் இன் ஜு கேப்பிடல் வித் டிரேயினிங் ஃபார் சிக்ஸ் மந்த்ஸ் இன் அமெரிக்கா. ஷு ரெஃபூஸ்டு இட்”
“ஏன் சிஸ்டர்?”
“இல்ல பையா எனக்கு நவீயையும் எங்க பொண்ணு சக்தியையும் தனியா விட்டுட்டு போறதுக்கு மனசே வரலை அது தான் ரெஃப்யூஸ் பண்ணிட்டேன்.”
“அச்சச்சோ !! ஒரு ஆறு மாசம் தானே சிஸ்டர் நாங்க எல்லாரும் உங்க குழந்தையை பார்த்துக் கொண்டிருந்திருப்போமே!! நம்ம கேம்பஸிலிருந்து ஒரு பொண்ணு அமெரிக்கா போறான்னா நாங்க எல்லாருமா நிச்சயம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருப்போம். நவீன் நீ ஏன் அதை முன்னாடியே சொல்லலை?”
“அது அவளோட இஷ்டம். நான் என்ன சொல்ல இருக்கு ஹர்ஷா? சரி நீ சொல்லு “
“பையா இவரோட ஒண்ணு விட்ட சிஸ்டர் பொண்ணுக்கு விசேஷம் அதுக்கு அவங்களுக்கு இவர் புடவை எடுத்துக் குடுக்கணும் அதுதான் நம்ம மிருதுவோட விளம்பரம் பார்த்தேன் சரி உங்க கிட்டயே எடுக்கலாம்ன்னு வந்திருக்கோம்”
என்று ஹர்ஷா மனைவி கூறியதும் மிருதுளா முகம் பளிச்சிட்டது. அவள் உடனே அந்த புடவை பையை எடுத்து வந்து
“மிஸ்ஸர்ஸ் ஹர்ஷா இதோ பாருங்க இதெல்லாமே சவுத் இந்தியன் ஸ்பெஷல் சாரிஸ் இதோட பல்லுவைப் பாருங்க எவ்வளவு கிராண்டா இருக்குன்னு.”
“நல்லா இருக்கே!! எவ்வளவு மிருது?”
“₹ 750”
“சூப்பரா இருக்கு. ஆமாம் நீங்க இன்ஸ்டால்மென்ட் ல தர்றதா விளம்பரத்துல எழுதி இருந்ததே!”
“ஆமாம். த்ரீ ஆர் சிக்ஸ் மந்த்ஸ் இன்ஸ்டால்மென்ட்டில் எடுத்துக்கலாம்”
“ஹேய் ஹர்ஷ். எனக்கும் ஒண்ணு எடுத்துக்கவா?”
“பிடிச்சிருந்தா எடுத்துக்கோ.”
“ஓகே மிருது அப்போ நான் இந்த இரண்டு புடவையையும் எடுத்துக்கறேன். ஒரு புடவைக்கு இதோ பணம். இன்னொரு புடவைக்கு மூணு மாசமா தந்துடறேன்”
“நீங்க தான் எங்களோட சக்தி சாரீஸோட முதல் கஸ்டமர். தாங்க்யூ ஃபார் தி பர்சேஸ். உங்க நண்பர்களிடமெல்லாம் சொல்லுங்க ப்ளீஸ்”
“இந்தாங்க சிஸ்டர் அவ எடுத்த இன்னொரு புடவையோட காசும் வைச்சுக் கோங்க”
“இல்ல பையா அவங்க சொன்னா மாதிரியே மூணு மாசமா தந்தா போதும்”
“நோ நோ சிஸ்டர் நாங்க தான் ஃபர்ஸ்ட் கஸ்டமர்ன்னு சொல்லறீங்க அப்புறம் எப்படி நாங்க இன்ஸ்டால்மென்ட் ல வாங்கறது. நெக்ஸ்ட் டைம் வாங்கும் போது அப்படி வாங்கிக்கறோம் இப்போ இந்த பணத்தையும் வாங்கிக் கோங்க”
“தாங்க்ஸ் பையா”
“இட்ஸ் ஓகே மா. சரி நவீன் நாங்க இன்னொரு விஷயமாவும் பேச வந்திருக்கோம்”
“என்னது ஹர்ஷா?”
“அதுவும் நம்ம மிருதுளா சம்மந்தப்பட்டது தான். என் மூத்தப் பையன் ப்ளஸ் ஒன் காம்மர்ஸ் குரூப் படிக்கறான். அவனுக்கு டியூஷன் எடுக்கணும். நீ உன் வைஃப் பிகாம் கோல்டு மெடலிஸ்ட்ன்னு சொன்னது ஞாபகம் வந்தது அது தான் கேட்கலாமேன்னு…ஃபீஸ் எவ்வளுவுன்னும் சொன்னா டிசைட் பண்ண வசதியா இருக்கும். அவன் இப்போ ஒரு இடத்துல டியூஷன் போறான் ஆனா அவங்க நல்லா சொல்லித் தரமாட்டேங்கறாங்களாம். அதுவுமில்லாம அந்த இடம் ரொம்ப தூரத்துல வேற இருக்கு..என்ன சொல்லறேங்கள்?”
“ஓ!!! அப்படியா. என்ன சொல்லற மிருது?”
“பையா எனக்கு ஒரு டூ டேஸ் டைம் தர்றேங்களா நான் சொல்லறேன்.”
“ஓகே மா ஆனா நல்ல பதிலா சொல்லுமா. இன்னும் அவன் நண்பர்களும் வரலாம்”
“ஷுவர் பையா. நிச்சயம் ட்யூஷன் எடுக்கறேன். டைமிங் டிசைட் பண்ணதான் டூ டேஸ் கேட்கிறேன். நானும் நவீனும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லறோம்”
“சரி மா. தாங்க்ஸ். நாங்க வந்த இரண்டு வேலைகளும் நல்ல படியா முடிஞ்சுது. எங்கடா இங்க இவளுக்கு புடவைப் பிடிக்கலேன்னா அப்புறம் டவுனுக்கு போகணுமேன்னு யோசிச்சுகிட்டு வந்தேன் நல்ல வேளை இங்கேயே இவளுக்கு பிடிச்ச மாதிரி கிடைச்சிடுச்சு”
“சாரீஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மிருது. நான் எங்க கேம்பிலும் எல்லார்கிட்டயும் சொல்லறேன்.”
“தாங்க் யூ”
“சரி நாங்க அப்போ புறப்படறோம். பை நவீன் அன்ட் மிருதுளா.”
“பை பை ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
என்று வீட்டுக்கு வந்தவர்களை வழியனுப்பி விட்டு வீட்டினுள் வந்ததும் மிருதுளா நவீனிடம்
“வாவ்!!! நவீ நாம இரண்டு புடவைகளை விற்று விட்டோம். ஹேய்!!!”
“எஸ் !! எல்லாம் மெதுவா நடந்தாலும் நல்லபடியா நடக்கறது. சரி ஹர்ஷா சொன்ன டியூஷன் பத்தி நீ என்ன நினைக்கற?”
“எடுக்கலாம்ன்னு நினைக்கறேன். நீங்க என்ன சொல்லறேங்கள்?”
“உன் இஷ்டம் மிருது. உன்னால முடிஞ்சா தாராளமா பசங்களுக்கு சொல்லிக்குடு.”
“டியூஷன் டைமிங்க் ஈவினிங் ஒரு ஆறு மணி டூ ஏழு மணி ஃபிக்ஸ் பண்ணலாமா? ஏன்னா நீங்க ஃபைவ் தர்ட்டிக்கு வந்திடுவேங்கள். அதுக்குள்ள நான் நம்ம சக்திக்கு வேண்டியது ப்ளஸ் நமக்கு டின்னருக்கு எல்லாம் ரெடி செய்துடுவேன். டியூஷன் டைம்ல நீங்க சக்தியைக் கூட்டிண்டு பார்க்குக்கு போயிடுங்கோ. ஏழு மணிக்கு முடிச்சுட்டேன்னா…பசங்க போனதும் நம்ம நம்மளோட ரெகுலர் டைமான ஏழரைக்கு டின்னர் சாப்டிடலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ஓகே டன். ஆமாம் ஃபீஸ் எவ்வளவு சார்ஜ் பண்ணப் போற?”
“நாலு சப்ஜெக்ட்….ஸோ நாறூறு ரூபாய் வாங்கலாமா?”
“ஓகே அப்போ நான் ஹர்ஷா கிட்ட சொல்லிடவா?”
“எஸ் சொல்லிடுங்கோ நாளையிலிருந்து அவா பையனை வரச்சொல்லுங்கோ”
மறுநாள் பக்கத்து கேம்பிலிருந்து இரண்டு பெண்மணிகள் புடவைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் ஹர்ஷா வைஃப் சொல்லி வந்ததாக கூறியதும் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து புடவைகளைக் காட்டினாள் மிருதுளா. அவர்கள் ஆளுக்கு ஒரு புடவை என இரண்டு புடவைகளை ஒருவர் இன்ஸ்டால்மென்ட்டிலும் மற்றொருவர் உடனே காசைக் கொடுத்தும் வாங்கிக் கொண்டுச் சென்றனர்.
இவ்விருவர் மிருதுளா கேம்பிலிருக்கும் அவர்கள் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று புடவை வாங்கியதாக காட்ட அதில் நான்கு பெண்கள் அந்த புடவையைப் பார்த்துவிட்டு மிருதுளா வீட்டுக்கு வந்து அவர்களில் ஒரு பெண்மணி இரண்டு புடவையையும் மற்றவர்கள் ஆளுக்கு ஒரு புடவை என மொத்தம் ஐந்து புடவைகள் மிருதுளாவுக்கு விற்பனையானது.
கொண்டு வந்த பத்தில் ஒன்பது புடவைகள் விற்றுப் போயின. ஒன்று மீதமிருந்ததையும் வந்த பெண்மணிகளில் ஒருத்திக்கு இன்ஸ்டால்மென்ட்டில் தாங்க என்று கூறி அதையும் விற்றாள் மிருதுளா. கையில் ரொக்கமாக வந்த பணத்தில் தனது லாபத்தை கழித்துக் கொண்டு மீதத்தை அவள் புடவை வாங்கியவருக்கு கொடுக்கும் படி அம்புஜத்திற்கு மணியார்டர் செய்தாள். மேலும் புடவைகளை அனுப்பித்தரும்படியும் ஃபோனில் கூறினாள். அம்புஜம் தன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் மிருதுளா குடுக்கச் சொன்னதாக கூறி பணத்தைக் கொடுத்து விட்டு மேலும் புடவைகளை பார்ஸல் அனுப்பும்படி கூற அதற்கு அந்த பெண்
“அம்புஜம் அக்கா அதெல்லாம் எங்களால முடியாது. வந்து எடுததுட்டு போங்க. இல்லாட்டி இருங்க நாங்க மொத்தமா வாங்குற இடத்தோட அட்ரெஸ் தர்றேன்…நீங்களே அங்க போயி வேண்டியதை செலக்ட் பண்ணி வச்சீங்கன்னா அவங்க பார்சல் அனுப்பிடுவாங்க.”
“ஆனா அவங்க கிட்ட முதலில் ரொக்கமா பணத்தைக் குடுக்கணுமேமா? அது தான் யோசிக்கறேன்”
“இல்ல அக்கா மிருதுக்காக நான் அவங்ககிட்ட பேசறேன். நீங்க போங்க அவங்க க்ரெடிட்ல தருவாங்க.”
“ரொம்ப நன்றி மா. சரி நீ அவங்க கிட்ட பேசிடு நான் நாளைக்கே அங்க போறேன் சரியா. அப்போ நான் வர்றேன் மா”
என்று அந்த பெண் சொன்ன விவரங்களை மிருதுளாவிடம் ஃபோனில் சொன்னாள் அம்புஜம். அதைக் கேட்டதும் மிருதுளா
“வாவ்!! ஹோல்சேல் ஷாப் அட்ரெஸ் கொடுத்துட்டாளா!!!நான் தாங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுமா. உன்னால அந்த இடத்துக்கு போய் புடவைகளை செலக்ட் பண்ண முடியுமா மா?”
“நிச்சயம் முடியும் மிருதுளா. நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாதே. நான் நாளைக்கே போய் செலக்ட் பண்ணி அவாகிட்ட அனுப்பச் சொல்லறேன் சரியா. சக்திக் கிட்ட ஃபோனைக் குடு கொஞ்சம் அவ குரலைக் கேட்டுட்டு ஃபோனை வச்சுடறேன்”
அம்புஜம் பக்கத்து வீட்டு பெண் கொடுத்த சேலம் அருகிலிருக்கும் அட்ரெஸுக்குச் சென்று புடவைகளை செலக்ட் செய்து அவர்களிடம் குஜராத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு வீடு திரும்பினாள். தன் பெண்ணின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிரமங்கள் இருந்தாலும் அவ்வளவு தூரம் பஸ்ஸில் பிரயாணம் மேற்கொண்டாள் அம்புஜம்.
புடவைகள் ஒரு வாரத்தில் மிருதுளாவைச் சென்றடைந்தது. டியூஷனுக்கு ஒன்றிலிருந்து பத்து மாணவ மாணவிகள் ஆனார்கள். புடவை வியாபாரம் ஒருபக்கம், டியூஷன் ஒருபக்கம், வீட்டு வேலைகள் ஒருபக்கம், சக்திக்கு வேண்டியதனைத்தையும் ஒன்று விடாமலும் செய்துக் கொண்டு துருதுருவென பம்பரமாக சுழன்றாள் மிருதுளா.
அப்படி விறு விறுப்பாக வாழ்க்கைச் சென்றுக் கொண்டிருக்கும் சமயம் நவீனின் ரம்யா சித்தியின் மூத்த மகளின் திருமணம் வந்தது. அதற்கு ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்தனர். ஆனால் எவருமே மிருதுளா நவீன் வீட்டிற்கு வரவில்லை. அவர்கள் நேராக ரம்யா சித்தி வீட்டிற்கே சென்றனர். நவீனும் மிருதுளாவும் அது அவரவர் விருப்பம் என்று அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமும் இருக்கவில்லை. குவைத்திலிருந்து கவினும் கஜேஸ்வரியும் வந்திருந்தனர். அவர்களும் நேராக ரம்யா சித்தி வீட்டுக்குத் தான் சென்றார்கள். அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நவீன் அன்ட் மிருதுளா. மாப்பிள்ளை அழைப்பிற்கு கிளம்பிச் சென்றனர். அங்கு தான் தங்கள் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர் நவீனும் மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் மாமனாரிடம்
“ஏன் பா நம்ம ஆத்துக்கே வந்திருக்கலாமில்லையா?”
“ம்..ம்…நாங்க ஒரு வாரம் முன்னாடியே ரம்யா ஆத்துக்கு வந்துட்டோம்”
என்று சம்மந்தமில்லாமல் பதில் சொல்ல அதற்கு மேல் மிருதுளாவும் ஏதும் பேசாமல் அங்கிருந்துச் சென்று கவினிடம்
“ஹாய் கவின் அன்ட் கஜேஸ்வரி எப்படி இருக்கேங்கள்? உங்களைப் பார்த்து இரண்டு வருஷமாச்சு. என்ன கஜேஸ்வரி எனி குட் நியூஸ்?”
“இருந்தா சொல்லுவோம்.”
என்று வெடுக்கென பதில் வர மிருதுளாவுக்கு ஒரு மாதிரி ஆனது. அங்கிருந்தும் எழுந்துச் சென்று மற்ற சொந்த பந்தங்களுடன் கலகலப்பாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள் மிருதுளாவும் நவீனும். மூத்த தம்பதியரும் கவினும் தூரத்திலிருந்து தங்களை கவனித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த மிருதுளாவுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. அவர்களின் பரிமாற்றத்தில் வித்யாசமிருததை வைத்து அவர்கள் ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறார்கள் என்பதை மிருதுளாவால் உணர முடிந்தது.
அன்று இரவு உணவருந்தியதும் வீட்டுக்கு கிளம்புவதாகவும் மறுநாள் கல்யாணத்துக்கு விடியற் காலையில் வந்து விடுவதாகவும் ரம்யா சித்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாமென்று அவரைத் தேடினார்கள் நவீனும் மிருதுளாவும். ஆனால் மண்டபத்தில் எங்குமே ஈஸ்வரன் குடும்பத்தினரையும், பர்வதத்தின் அக்காள் தங்கைகளையும், தம்பியையும் காணவே இல்லை. மண்டபத்தின் வாசல் வரை சென்றவர்களை பின்னாலிருந்து அழைத்தார் பிச்சுமணி மாமா. அவரைப் பார்த்ததும் நவீன்
“எல்லாருமா சாப்பிட்டதும் எங்கே காணாமல் போயிட்டேங்கள்? உங்கள் எல்லாரையும் நாங்க தேடிணோம் அப்புறமா சரி லேட் ஆகறதேன்னு இப்போதான் கிளம்பினோம் நீங்க கூப்பிட்டேங்கள்”
“நாங்க எல்லாரும் தங்கறதுக்காக ரம்யா ஏற்பாடு செய்திருந்த அப்பார்ட்மெண்ட் டுல இருந்தோம். அது இதோ இந்த மண்டபத்துக்கு பக்கத்து பில்டிங் தான். சரி உங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் கொஞ்சம் பேசணுமே”
என்று பிச்சுமணி சொல்லிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் கவின் நின்றுக் கொண்டு நவீன், மிருதுளா மற்றும் பிச்சுமணியையே கவனித்துக் கொண்டிருந்தான். அதுவரை அங்கு எவருமே இல்லாமல் இருந்தவர்கள் இப்போது பிச்சுமணி மாமா பேசவேண்டும் என்று வந்ததும் அவருக்கு பின்னாலேயே கவின் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததையும் சட்டென அசைப் போட்டுப் பார்த்த மிருதுளாவின் மனம் அவளிடம்
“மிருது இதுல ஏதோ ஒரு விஷயமிருக்கு. உஷார் உஷார்”
என்று உணர்த்தியது. நவீன் தன் மாமாவிடம்
“ம்… என்ன விஷயம் மாமா நாளைக்கு பேசலாமா? ஏன்னா எங்களுக்கு இப்பவே லேட்டாகிடுத்து. சக்தி வேற தூங்கிட்டா.”
“இல்லடா இப்பவே பேசிடறேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ்”
“சரி சொல்லுங்கோ”
“அமாம் ஏன் நீங்க ரெண்டு பேரும் உன் அப்பா அம்மா ஆத்துக்கே போக மாட்டேங்கறேள்? எப்போ வந்தாலும் மிருதுளா அப்பா அம்மா ஆத்துக்கே போறேங்கள்”
“இதை யார் உங்ககிட்ட சொல்லி கேட்கச் சொன்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா மாமா.”
“அதெல்லாம் எதுக்கு மிருது. நான் கேட்டதுக்கு பதில்”
“அதுக்கு பதில் சொல்லணுனா நான் ஃபுல் ஸ்டோரியையும் சொல்லணும் மாமா அதுக்கு ரொம்ப நேரமாகுமே”
“பரவாயில்லை சுருக்கமா சொல்லேன்”
“சரி சொல்லறேன் நல்லா கேட்டுக்கோங்கோ…கவின் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணி அந்த வீட்டுக்கு இவர் அப்பா அம்மா பவின், ப்ரவின் எல்லாரும் பழைய வீட்டிலிருந்து கவின் வீட்டுக்கு மாறினா ஆனா வீடு வாங்கியதைப் பத்தி கவினோ, இவர் அப்பாவோ அம்மாவோ இவ்வளவு ஏன் ப்ரவின் பவின் கூட எங்க கிட்ட சொல்லலை இது தெரியுமா உங்களுக்கு? அப்புறம் எப்படி நாங்க அங்க போவோம்? அப்படியும் நாங்க அங்க போகாம வராம எல்லாம் இல்லை மாமா.”
“உனக்கு உங்க அப்பா சீர் கொடுத்த பாத்திரங்கள் பீரோ அது இதுன்னு எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேரும் அவாகிட்ட சொல்லாம கொள்ளாம வண்டி வச்சுண்டு உங்க அப்பா ஆத்துக்கு கொண்டு போனா அவாளால எப்படி அங்க இருக்க முடியும்? அக்கம் பக்கத்தினர் கேட்க மாட்டாளா? அதுனால தான் அவா வீடே மாறினா தெரியுமா?”
“ஹா!!! ஹா!! ஹா!!! மாமா மாமா ப்ளீஸ் அவா சொன்ன கதையெல்லாம் கேட்டுட்டு எங்ககிட்ட வந்து இப்படி கேட்கறேங்களே!!! உங்களுக்கு உங்க அக்காவை பத்தித் தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு எங்க அம்மாவைப் பத்தி நல்லாவே தெரிஞ்சுடுத்து. ஸோ ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோடு விட்டு விடுங்கோ!”
“அது எப்படி டா உன்னால அப்படி சட்டுன்னு உங்க பொருளெல்லாம் உன் வீட்டிலிருந்து அப்பா அம்மா கிட்ட கூட சொல்லாமா வண்டி வச்சு எடுத்துண்டு போக முடிஞ்சுது?”
“மாமா ப்ளீஸ் நீங்க ஒரு பக்கம் கதையை மட்டும் கேட்டுட்டு அது உண்மையா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்காம எங்களை தப்பு செஞ்சவா மாதிரி இப்படி கேள்விக் கேட்கறது நல்லா இல்லை.”
“ஏம்மா மருது? நாளைக்கு உங்க வேனுவுக்கு கல்யாணமாகி அவனும் அவன் வைஃபும் நீங்க பண்ணின மாதிரி சொல்லாம கொள்ளாம அவா பொருளெல்லாம் எடுத்துண்டு போயிட்டு எப்பவாவது ஆத்துக்கு வந்துட்டுப் போணா எப்படி இருக்கும் உன் அப்பா அம்மாக்கு சொல்லு…”
“மாமா எங்க அப்பா அம்மா எங்காத்துக்கு வர்ற பொண்ணோட பொருட்களை எல்லாம் போட்டு உடைச்சு நசுக்கி நாசமாக்க மாட்டா உங்க அக்காவையும் அத்திம்பேரையும் போல. அதுவுமில்லாம ஆத்துக்கு வந்த பொண்ணு அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னதுக்கு கண்டபடி பேசி துரத்தி விட மாட்டா, அதைத் தட்டிக் கேட்க வந்த அப்பா அம்மாட்டயும் காசை விட்டெரியறோம்ன்னு திமிரா பேச மாட்டா…மாசமான பொண்ண உங்க அக்காவை மாதிரி பட்டினிப் போட மாட்டா, அன்பா பார்த்துப்பா, பேத்தியை இதுவரை தொட்டுத் தூக்கிக் கொஞ்சாத உங்க அக்காவை மாதிரி எல்லாம் கல் நெஞ்சுக் காரா கிடையாது என் அப்பா அம்மா அதுனால வேனுவும் அவனுக்கு வர்ற மனைவியும் அப்படி எல்லாம் ஏதும் செய்ய மாட்டார்கள்”
“என்ன நீ என்னென்னமோ சொல்லுற?”
“மாமா நிறைய அட்டூழ்யம் செய்திருக்கா. அதெல்லாத்தையும் மறைச்சுட்டு அவாளுக்கு ஏத்தா மாதிரி பேசி உங்களை எங்ககிட்ட பேச அனுப்பிருக்கா. ஒண்ணு யோசிங்கோ அவா நேர்மையானவா, உத்தமர்கள்ன்னா அவாளே பேச வந்திருக்கலாமே என்னதுக்கு உங்களை விட்டு தேவையில்லாம பேச வைக்கணும் சொல்லுங்கோ”
“அது ஒண்ணுமில்லை நவீ கவின் கல்யாணத்துல ஒருவிதத்துல என்னை அவமானப்படுத்தியாச்சு இப்போ இதோ நான் அடென்ட் பண்ணும் இரண்டாவது விசேஷம் இதுலயும் ஏதாவது செய்து என்னை அவமானப்படுத்த தான் இந்த ஏற்பாடெல்லாம்.”
என்று பிச்சுமணியிடம் நடந்ததை அப்படியே விளக்கினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் பிச்சுமணி
“ஓ !!! இவ்வளவெல்லாம் நடந்திருக்கா?”
“மாமா நான் தான் ஃபர்ஸ்ட்டே சொன்னேனில்லையா!! வேண்டாம் விட்டுவிடுங்கோன்னு.”
“அவா பண்ணினது எல்லாமே தப்பு தான் டா அதை இல்லைன்னு மறுக்கவே முடியாது அதை ஒத்துக்கறேன் நவீன் ஆனா பேயானாலும் தாயில்லையாடா”
“பேய் தாய் கூட தன் பேய் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது மாமா மனுஷாளைத் தான் துன்புறுத்தும். இவாளை அந்த இனத்தோட இணைத்து பேய்களை அவமானப்படுத்தாதீங்கோ. அதுவுமில்லாம இப்போ என்ன ஆயிடுத்தாம் அவாளுக்கு. நாங்க ரெண்டு பேரும் என்ன மதிக்காம இருக்கோமா? மரியாதைத் தராம இருக்கோமா? பேசாம இருக்கோமா? இல்ல போக வரமா அவாளை மாதூரி இருக்கோமா? எங்களை அவமானப்படுத்த உங்களை கருவியா யூஸ் பண்ணறா அது உங்களுக்கா தெரியாட்டாலும் நாங்க அடிப்பட்டவா நாங்க சொல்லுறதையாவது கேட்டு பேசாம உங்க வேலையைப் பாருங்கோ மாமா ப்ளீஸ்”
“ஓகே !! அப்புறம் உங்க இஷ்டம். நான் வர்றேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போங்கோ. பைக்கை மெதுவா ஓட்டுண்டு போடா நவீன்.”
பிச்சுமணியிடம் ஏதேதோ சொல்லி பேச அனுப்பிவிட்டனர் மூத்த தம்பதியர். பிச்சுமணியும் தன்
அக்கா அத்திம்பேர் உத்தமர்கள் என்றெண்ணி பேச போய்
நடந்தவைகளை அறிந்துக் கொண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய்
செய்வதறியா அம்பு போல் ஏய்தவர்களிடமே திரும்பிச் சென்றார்.
தொடரும்……