கடவுளை வெறும் கல்லென நினைத்து
மனக்குறைகளை தீர்த்து வைக்காது
சொன்னாலும் காது கேளாது என்றெண்ணி
கண்டவர்களிடம் சொல்லி
அவர்களை கடவுளென்று போற்றி
அனைத்தையும் இழந்தப் பின்
கடவுள் அல்ல காட்டுமிராண்டி என்றுணர்ந்ததும்
கூண்டில் இட தவிக்கும் ஒவ்வொருவரும்
இனியாவது கல்லானாலும் கடவுள்
இருக்கிறார் என்றுணர்ந்து
நல்வாழ்வு வாழ்ந்திட
மனிதம் மேம்பட
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.