அவனிதனிலே நாம் பவனி வர காரணமானவள்
அன்பு, அக்கறை, அரவணைப்பின் பெட்டகமானவள்
தன்னலமற்ற தகழியாக குடும்பத்தை ஒளிரவைப்பவள்
பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தாலும் கிள்ளிக்கூட எடுக்க எண்ணாதவள்
ஈன்ற பிள்ளைகளின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக மட்டுமே நித்தம் நித்தம் ஆண்டவனை வேண்டும் தெய்வமானவள்
பிள்ளைகள் என்றும் பற்றிக்கொள்ளும் நம்பிக்கை கரமானவள்
மூன்று எழுத்தில் மூவுலகத்தையும் சுவாசிக்க செய்பவள்
அம்மா
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
❤️நன்றி❤️