
இரண்டாயிரத்து இருபது ஆரம்பம் ஜோரு
பிப்ரவரியில் ஆரம்பித்தது அக்கப் போரு
மார்ச்சில் செய்திகள் எல்லாம் தாறு மாறு
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம் பாரு
சொந்தங்கள் பல நம்மை விட்டுப் பிரிந்தன
பந்தங்கள் அனைத்தும் தூரத்திலேயே இருந்தன
அன்பு, பாசம், அக்கறை, வேலை, படிப்பு என்று எல்லாமும் நிகழ்நிலையில் நடந்தன
பலர் வேலையை இழந்தனர்
சிலர் வேலையை உருவாக்கிக் கொண்டனர்
குடும்பம், பிள்ளைகள் என நேரத்தை உபயோகமாக செலவழித்தனர்
முகக் கவசம் முக்கிய அணிகலனாக அணியத் துவங்கினர்
தொலைந்த சுத்தம் சுகாதாரம் உயிர்தெழச் செய்தனர்
நிலையில்லாதது வாழ்க்கை என்பதை உணர்ந்தனர்
எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்துக் கொண்டனர்
பணம், பதவி, கௌரவத்தை விட உயிர் தான் முக்கியம் என்று எண்ணத் துவங்கினர்
மறைந்துக் கொண்டிருந்த மனிதம் மீண்டும் துளிர்க்க காரணமாயினர்
உயிர், குடும்பம், பிள்ளைகள், அன்பு, பாசம், அக்கறை, மனிதநேயம் ஆகியவைகளை விதைத்து இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்
நடக்கபோவதெல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்