
மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி
ஆலகால விஷத்தை உண்டு அனைவரையும் நீலகண்டன் காப்பாற்றியது மார்கழியில்
பாவை விரதமிருந்து ஆண்டாள் பெருமாளையே மணாளனாகக் கொண்டது மார்கழியில்
மகாபாரத யுத்தம் நடைப்பெற்றது மார்கழியில்
கிருஷ்ணன் கோவர்தனகிரி மலையை குடையாக பிடித்து கோகுலத்தை பெரு மழையிலிருந்து காப்பாற்றியது மார்கழியில்
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது மார்கழியில்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது மார்கழியில்
வீட்டில் மகள் அல்லது மகன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்று வாசல் கோலத்தின் நடுவே பூசணிப் பூ வைத்து தெரிவிக்கப் பட்டது மார்கழியில்
தைப் பிறந்தால் நல்ல வழிப் பிறப்பதற்கு, தெய்வீக மாதமான மார்கழியில் அனைத்திற்கும் ஆதாரமான ஆண்டவனை வழிப்பட்டுத் துதிப் பாடி, அதன் நலன்களை தை மாதம் முதல் காண்போம்.
🙏நன்றி🙏