காலை ஆறு மணி ஆனது. நவீன் மிருதுளா ரூமின் கதவு டக் டக் டக் டக் என பலமாக தட்டும் சத்தம் கேட்டு மிருதுளா கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு காட்டவும் பதறியடித்து எழுந்து கதைவைத்திறந்தாள் யாரையும் காணவில்லையே என எண்ணிக்கொண்டே திரும்பலானாள் அப்பொழுது பார்த்தாள் பக்கத்துவீட்டு சிறுவன் கார்த்திக் நின்று கொண்டிருந்ததை. 

ஏய் குட்டி பையா நீ தான் கதவ தட்டினியா?”

ஆமாம் அக்கா. பர்வதம் மாமிதான் மணி ஆறாச்சு நீங்க இன்னும் எழுந்திரிக்கல னு என்னை கதவ தட்டி எழுப்பிவிடச் சொன்னாங்க. அக்கா நானே எழுந்துருச்சிட்டேன் நீங்க இன்னுமா தூங்கரீங்க..நவீன் அண்ணா எங்கஎன்று உள்ளே செல்ல முயன்ற சிறுவனை தடுத்து தாங்கள் கீழே வருவதாக பர்வதம் மாமியிடம் சொல்லும்படி சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவை விடிந்ததும் சிறுவனின் மூலம் அவமானப்படுத்த துவங்கினாள் பர்வதம். கீழே வந்து பல் துலக்கியவுடன் குளிக்கச் சென்றாள் மிருதுளா. அது அவளது வழக்கம். குளித்து முடிந்ததும் ஹாலுக்கு வந்தாள். அவளருகே காபிவை வைத்துவிட்டு…

இந்தா காபி. உனக்கு இதுதான் காலை அஞ்சு மணியோ?” என முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள். 

மிருதுளாவிற்கு என்ன சொல்வது… என்ன செய்வதென்று தெரியாமல் காபியை குடித்துவிட்டு அந்த டம்பளரையும் மற்ற அங்கு கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து வைத்து அடுப்படிக்குள் சென்று ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்க அதற்கு பர்வதம்

இவ்வளவு லேட்டா வந்து கேட்டா. எல்லாம் ஆயாச்சுஎன்று கூறி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அங்கு இருந்த தனது மச்சினர்களை பார்த்துஹாய் குட் மார்னிங்என்றாள் அவர்களும்குட்மார்னிங்என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கலானார்கள்.

மாமனார் உள் ரூமிலிருந்து வரவும் மிருதுளா எழுந்துகுட்மார்னிங்என்று சொல்ல அவரும் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு ரேடியோவை ஆன் செய்து செய்திகளைக் கேட்கலானார். அவரகள் யாருமே ஒருத்தி அங்கு செய்வதறியாது நிற்கிறாளே தானாக பேச்சுக்குடுக்க முன்வருகிறாளே என்று துளியும் புரியாதது போலவே பாவனை செய்து கொண்டிருந்தார்களா இல்லை அவர்கள் குடும்பமே அப்படி தானா என்ற சந்தேகம் மிருதுளாவின் மனதில் எழுந்தது. 

மிருதுளாவிற்கு ஏதோ ஒரு அன்னிய வீட்டினுள் யாருமே இல்லாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. நவீன் எப்போது எழுந்து வருவார் என மனதில் நினைத்துக்கொண்டே மாடிப்படியை பார்த்தாள் நவீன் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்துஅப்பாடஎன பெருமூச்சு விட்டாள். அவன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்ததும் மிருதுளாவைப் பார்த்து 

ஹே மிருது அதுக்குள்ள குளிச்சிட்டயா. குட் குட்என கூறிக்கொண்டே பர்வதம் கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டான். நவீனுடனும் அவர்கள் அவ்வளவாக யாருமே பேசவில்லை. அதனால் அவர்களின் சுபாவமே அதுதான் என மனதில் நினைத்துக்கொண்டாள் மிருதுளா. 

நான் மன்டே டூ ஃப்ரைடே உன்ன மாதிரிதான் எழுந்ததும் குளித்துவிட்டு தான் வருவேன் ஆனால் சாட்டர்டே சன்டே மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடிதான் குளிப்பேன். சரி நீ சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளில போகனும்என்றதும் மிருதுளாவின் மனம் அப்பாட இந்த இறுக்கமான இடத்திலிருந்து சற்று நேரம் ரிலீஃப் கிடைக்கப்போகிறதே என சந்தோஷத்தில் துள்ளியது. அதில் மண்ணைப்போட்டு அணைத்தது போல பர்வதம் குறுக்கிட்டு

இனைக்கு எதுக்கு வெளில போகனும் அதுவும் வெயில்ல ஒன்னும் வேண்டாம்” 

ஏதோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே போயிட்டு வரட்டும் சந்தோஷமா இருக்கட்டும் என்றில்லாமல் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைத்தாள் பர்வதம். ஆனால் நவீன் உடனே

இங்க இருந்துண்டு என்ன பண்ணப்போறோம். இட் வில் பி போரிங் ஃபார் அஸ். கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரோம். உனக்கு ஏதாவது வாங்கிண்டு வரனுமா?”

எனக்கென்ன வேனும்!!என்று அலுத்துக்கொண்டாள் பர்வதம். ஆமாம் அவளுக்கு வேண்டியது கடையில் கிடைக்காது ஏனெனில் அவளுக்கு வேண்டியது மிருதுளாவின் நிம்மதி, சந்தோஷம் என்பது இதுவரை படித்ததை வைத்து நமக்குத்தானே தெரியும். என்ன மக்களே நான் சொல்வது உண்மை தானே??

சரி எங்க கல்யாணத்துக்கு பக்ஷணம் தந்தாலே அதெல்லாம் நம்ம தெரு ஆட்களுக்கெல்லாம் கொடுத்தயா? நேத்து என் நண்பன் ஆத்துக்கு போனேனே அவா அம்மா சொன்னா கல்யாண பக்ஷணமே வரலயேனுட்டு

இவாளுக்கெல்லாம் கொடுக்க எங்கப்போறது!! உன் மாமனார் ஆத்துல அவளவா கொடுத்தா?” இதை கேட்டதும் ஈஸ்வரன் பர்வதத்தைப்பார்த்து …

ஏண்டி இப்படி சொல்லற…உள்ள அவா கொடுத்தனுப்பிய பக்ஷணம் எல்லாம் அட்டப்பெட்டியோட அப்படியே இருக்கே. உன் ஆத்துக்காராளுக்கெல்லாம் கொடுத்தது போக எவ்வளோ மீதி இருக்கு !!!என்றதும் பர்வதம் அவரை ஒரு முறை முறைத்தாள். மனிதர் கப்சிப் ஆனார். 

ஆமாம் மிருது ஆத்துலேருந்து நிறைய பக்ஷணம் எல்லாம் அவ தம்பி வேனு நம்ம வேனுல ஏத்தும்போது நான் கேட்டேன் என்னது இவ்வளவு டப்பா ஏத்தறேங்கள் னு அப்போ அவன் சொன்னான் எல்லாம் சீர் பக்ஷணங்கள் னுட்டு

ஆமாம் ஆமாம் அவன் அக்கா சூட்கேஸை எல்லாம் பக்ஷணம் டப்பா னுட்டு சொல்லிருக்க போறான்என்று நக்கலாக சொன்னாள் பர்வதம் 

மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் காலை முதல் தன்னை வம்புக்கு இழுப்பது போலவே பேசும் தனது மாமியாரிடம் ஒன்றுமே பதில் அளிக்காமல் விலகிச்சென்றாள். ஆம் மிருதுளா நினைப்பதும் சரிதான் பதிலுக்கு பதில் பேசி வந்ததும் சண்டை போடுறா என்கிற பேரை அவளுக்கு பட்டமளிக்க வோஇல்லை சண்டைக்கு இழுத்து அவர்கள் மன நிம்மதியை குலைக்க வா!!!… என்னவோ ஏதோ ஆனால் மிருதுளாவை முனுமுனுத்துக்கொண்டே சீண்டிக்கொண்டு இருந்தாள் பர்வதம். இப்படியும் சில மனிதர்கள். 

அனைவரும் காலை உணவு அருந்த அமர்ந்தனர். மிருதுளா தயங்கி நின்றிருந்தாள் அப்போது நவீன் மிருதுளாவையும் அமரும்படி சொல்ல பர்வதத்திற்கு கோபம் வந்து..

ஏன் இவ்வளவு நாள் மிருதுளா கூடதான் சாப்பிட்டயோ!!! அவள் பக்கத்தில் இல்லாமல் சாப்பாடு இறங்காதோஎன்று கேட்க

அதுக்கில்ல அவள யாருமே கூப்பிடலை அதுதான் நான் கூப்பிட்டேன் ஏன் இதுல என்ன இருக்கு? இதுக்கு ஏன் இப்படி சொல்லற?” என நவீன் திருப்பி கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள் பர்வதம் 

அவளும் நானும் அப்பறமா சாப்பிட்டுக்கறோம் முதல்ல நீங்கெல்லாம் சாப்பிட்டு எழுந்திரிங்கோஎன்றாள்

ஓகே மிருது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ ஆனா சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகிடு

சரிஎன்று புன்னகையித்தால் மிருதுளா. 

நவீன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்சென்றான். அனைவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் மிருதுளா. பின் மாமியாருடன் சாப்பிட தட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். இட்டிலி என்று ஒன்றை சுட்டு வைத்திருந்தாள் பர்வதம் அதை மிருதுளா சாப்பிட்டதும் அவளின் அம்மா நினைப்பு வந்தது அவளுக்கு. அவள் அம்மா சுடும் இட்டிலி பஞ்சுப்போல இருக்கும். ஏதோ ஒரு நாள் கொஞ்சம் ஹார்டான இட்டிலி சுட்டதற்கு வேனுவும் மிருதுளாவும் அவர்கள் அம்மாவை கல்லிட்டிலி அம்பு என கிண்டலடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதைவிட பல மடங்கு கனமான இட்டிலியை அன்று நவீன் வீட்டில் தான் முதல் முறையாக பார்க்கிறாள். அதையும் ஒன்றும் சொல்லாமல் ஐந்தைந்து உண்டு எழுந்த தனது மாமனார், கணவர், மச்சினன்களை பாவம் என்று மனதில் எண்ணிக்கொண்டே ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழலானாள் அப்போது பார்த்து பர்வத்திற்கு எங்கிருந்தோ பாசம் மடைத்திறந்து தாவும் நதியலைப்போல 

என்ன இது ஒரு இட்டில எழுந்திரிக்கறாய் உட்காருஎன இன்னும் இரண்டு தட்டில் கேட்காமல் போட திரு திருவென முழித்துக்கொண்டு சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்து தட்டைக்கழுவி வைத்து விட்டு தான் டிரஸ் மாற்ற போவதாக சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள். அங்கே நவீன் ரெடியாகி அமர்ந்திருந்தான். மிருதுளாவை பார்த்ததும் அவளிடம்..

ஹே மிருது நீ உன் நகைகளை எல்லாம் ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கோ நம்ம பிச்சுமணி மாமா பாங்கில் லாக்கருக்கு சொல்லிருக்கேன் அங்க போய் வச்சுடலாம். இந்த ஏரியா அவ்வளவு ஸேஃப் இல்ல மோரோவர் அப்பாவும் வயசானவர் அதுனால தான் சொல்லறேன். நீ என்ன சொல்லற” 

ஓகே வச்சுடலாம் எனக்கு வேண்டியதை மட்டும் வச்சுக்கறேன் மத்ததை எல்லாம் பாங்க் லாக்கர்ல வச்சுடலாம்” 

என பேசிக்கொண்டு கையில் பேக்குடன் கீழே இறங்கி வந்தவர்களை பார்த்து பர்வதம்

என்ன அது பேக்?”

இது எனக்கு இப்போதைக்கு தேவையில்லாத நகைகள் அம்மா. இத ஊருக்கும் எடுத்துண்டு போகவேண்டாமாம் நவீன் சொல்றார். அவர் பிச்சுமணி மாமா பாங்க் லாக்கர்ல வைக்கலாம் னு சொன்னார் அதுதான் எடுத்துண்டு போறோம்” 

காலை முதல் சண்டைக்காக காத்திருந்த பர்வதம் இதையே பிரச்சினை ஆக்க முடிவெடுத்து ஆரம்பித்தாள்

இதோ பாருமா இது மாதிரி உன் எண்ணங்களை எல்லாம் நவீன் சொன்னான் என்று அவன் மேல போட்டுட்டு ஒன்னுமே தெரியாததுபோல நின்னுட்டா நாங்க நம்பிடுவோமா. எல்லாத்தையும் மேலே அவனுக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ என்னவோ அவனே சொன்னா மாதிரியும் உனக்கு ஒன்னும் தெரியாதது போலவும் சொல்லற!!

அவளுக்கு ஒன்னும் தெரியாதுதான் நான் அவளுக்கே இப்போ தான் சொன்னேன்

அப்படிப்போடு ஒரு நாள்லயே இவளோ மாறிட்ட பேஷ். சரி அப்படியே வச்சுப்போம்…

வச்சுக்க எல்லாம் வேண்டாம் அதுதான் உண்மை

சரிடா அப்படியே இருக்கட்டும். நீ சொன்ன சரி நாங்க ரெண்டு பேரு ஆத்துல இருக்கோமே எங்களாண்ட இது மாதிரி வைக்கலாம் னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள் னுட்டு ஒரு வார்த்த கேட்டயாடா?”

அது மிருதுளாவோட நகை அத லாக்கர்ல வைக்கறதுக்கு உங்கள்ட்ட ஏன் கேட்கனும்? மிருதுளாட்ட தான் கேட்கனும் அதுதான் கேட்டேன். அவளும் சரினுட்டா. இதுல இப்போ உனக்கென்ன ப்ராப்ளம்?”

என்ன ப்ராப்ளமாமே நன்னாருக்குடா நன்னாருக்கு நீ பேசறது ரொம்ப நன்னாருக்கு. எல்லாத்துக்கும் இவதான் இவளேதான் காரணம். பெரியவானுட்டு ஒரு மரியாத இல்லை அவாள்ட்ட சொல்லிட்டு எதாருந்தாலும் செய்வோம்னு இல்ல எல்லாம் அவ இஷ்டம் இல்லையா!!!

அத தான் மிருது இப்போ சொன்னாளே பின்ன என்ன. நாங்க சொல்லாம போயிட்டு வந்தா நீ சொல்லறா மாதிரி கூட வச்சுக்கலாம் ஆனா அவ தான் இப்போ கீழே வந்ததும் சொன்னாலே

எப்போ சொன்னா? எப்போடா சொன்னா? நானா கேட்டதுக்கப்பறம் தானே சொன்னா? என்னமோ தானா ஓடி வந்து சொன்னா மாதிரி சொல்லற

அய்யோ எப்ப சொன்னா என்ன? சொன்னாளா இல்லையா?

என பர்வதத்திற்கும் நவீனுக்கும் பேச்சு முற்றி விடுவதற்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி மிருதுளா 

சாரி மா அவர் உங்கள்ட்ட சொல்லிருக்கனும் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள மன்னிச்சுடுங்கோ” 

ஏய் மிருதுளா நாம மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒரு தப்புமே பண்ணல தென் வை ஆர் யூ ஆஸ்க்கிங் சாரி?” என்றான் நவீன்

மிருதுளா தடாலென்று சாரி கேட்டதும் அதை எதிர்பார்க்காத பர்வதம் 

சரி சரி ஏதோ இந்த தடவ மன்னிச்சுடரேன் இத தொடராமா பார்த்துக்கோங்கோ.என கூறி உள் ரூமிற்குள் சென்றாள். 

இப்படியாக வெளியே கிளம்பியவர்களிடம் சண்டையிட்டு மன நிம்மதியை குலைத்து விட்டு மன திருப்தியுடன் உள்ளே சென்றாள் பர்வதம். அவள் காலை முதல் மிருதுளா ஏதாவது தன்னை எதிர்த்து பேசுவாள் என்று பலவற்றை முயற்சித்து  நடக்காததால் சற்று வருத்தமாகவும் இருந்தாள். பர்வதத்திற்கு என்னதான் ஒரு பிரச்சினையை கிளப்பின திருப்தி இருந்தாலும் அவள் எதிர்பார்த்தது மிருதுளாவை சீண்டினால் அவள் திருப்பி பேசுவாள் அதை வைத்து ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கலாம் என்று ஆனால் மிருதுளாவின் மௌனம் அவளை ஏமாற்றமடையச் செய்து புஸ்ஸுவானமாக்கியது.  

இப்படி வம்புக்கென்றே திட்டம் தீட்டும் பர்வதத்துடன் மீதமிருக்கும் ஒரு வாரம் காந்தி நகர் செல்லும் வரை என்னவெல்லாம் நம்ம மிருதுளா எதிர்கொள்ள வேண்டிருக்கப்போகிறதோ? பொறுமையை இழக்க நேரிடுமா? அதைப்பற்றி வரும் செவ்வாய் தெரிந்துகொள்ளலாம். இப்போ நம்ம நவீனும் மிருதுளாவும்  நிம்மதியாக வெளியே சென்று வரட்டும். 

தொடரும்…..

 

 

 

திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் மண்டபத்தைக் காலி செய்ய வேண்டியிருந்ததால் கிளம்பிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஒன்பது மணிக்கு டைரெக்ட்டாக சாப்பாடு பரிமாறப்பட்டது. கட்டு சாத கூடைகள், அங்குமணி சீர்கள், சீர் பக்ஷ்ணங்கள் என திருமண காண்ட்ராக்ட் காரர்கள் அனைத்தையும் பக்காவாக பேக் செய்து மண்டப மேடை அருகே வைத்து அம்புஜத்திடம்…

மாமி எல்லாம் ரெடி நீங்க ஆர்டர் கொடுத்த அனைத்தும் தயார். ஒரு தடவ சரி பார்த்துக்கோங்கோ. 7 சுத்து முறுக்கு , முத்துச்சரம், அதிரசம், மைசூர்பாக், லட்டு எல்லாத்துலயும் 101 மாப்பிள்ளை ஆத்துக்கும் 51 உங்க ஆத்துக்கும் னு தனித்தனியா பேக் பண்ணிருக்கோம். மஞ்சள் நிற டப்பாக்கள் எல்லாம் மாப்பிள்ளை ஆத்துக்கு பச்சை நிற டப்பா எல்லாம் பொன்னாத்துக்கு. அங்குமணி சீர் பேக் அந்த ரெண்டு பெரிய பிளாஸ்டிக் ஃபாக்ஸ் ல இருக்கு. கட்டு சாதக்கூடை  இதோ இந்த அஞ்சு ஆரஞ்சு பக்கெட்டில் இருக்கே இது மாப்பிள்ளை ஆத்துக்கு அதே மாதிரி அஞ்சு பச்சை பக்கெட்டில் இருக்கறது உங்களுக்கு. அதுல பொடி தடவிய இட்டிலி, புளியோதரை, தயிர் சாதம், ஊறுகாய் னு அஞ்சு ஐட்டம் பேக் செய்திருக்கோம். எல்லாம் ஓகே வா மாமி?” 

ரொம்ப சந்தோஷம் எல்லாம் சூப்பரா நடத்திக்கொடுத்தேள். தாங்க்ஸ்

பின் அம்புஜம் பர்வதத்தை அழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சாமான்களையும் காண்பித்து எடுத்து வேனில் வைக்க சொல்லலாமா என்று கேட்க பர்வதம் சரி என்று தலை அசைக்க அனைத்தும் நவீன் வீட்டார் வேனில் ஏற்றப்பட்டது. பாக்கி டப்பாக்கள் பெண்வீட்டார் வேனில் ஏற்றினார்கள்.

 இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது. 

கட்டு சாத கூடை என்பது மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அன்று மத்திய உணவை சமைத்து உண்ண வேண்டிய கஷ்ட்டத்தை குறைப்பதற்காக ஏற்படுத்துப்பட்டது. அங்குமணி சீர் என்பது புது மண தம்பதியினர் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்களும் பெண்ணின் பெற்றோர் வழங்குவது. 

ராமானுஜம் பணம் செட்டில்மென்ட் செய்துக்கொண்டிருந்தார். வேனு அனைத்து சீர் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைத்ததை எல்லாம் எடுத்து  அட்டைப்பெட்டிகளில் மறுபடியும் அடுக்கி அதை நவீன் வீட்டார் வேனில் வைத்தான். அதோடு தனது அக்காவின் 4 சூட்கேஸ்களையும் ஏற்றி வைத்தான். பின் அவர்களின் சூட்கேஸ்களை அவர்கள் வண்டியில் வைத்தான். இப்படி ஒவ்வொரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நவீனும் மிருதுளாவும் மண்டபத்தின் நடுவில் சொந்த பந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அனைத்தும் பேக் செய்து அவரவர் வண்டியில் ஏற்றப்பட்ட பின் எல்லாரையும் ஒன்றாக அமரச் செய்து அனைவருக்கும் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள் மண்டபத்துக்காரர்கள். 

எல்லாம் சுபமாக நிறைவேறியது என்ற திருப்தியில் அவரவர் வண்டியில் ஏறி மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அங்கு அம்பிகா உள்ளிருந்து ஆரத்தி தட்டு எடுத்து வந்து புது தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். நவீனும் மிருதுளாவும் உள்ளே சென்றனர். பின் அனைவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மிருதுளாவின் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் நவீனிடமும் நவீன் வீட்டாரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மிருதுளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சமத்தா பொறுமையா இருக்கனும் என அம்புஜம் கூற மிருதுளா கண்களில் கண்ணீர் பெருக அதை டக்கென்று துடைத்துக்கொண்டாள். 

அனைவரும் சென்றபின் மிருதுளாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒன்றுமே புரியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து பர்வதம் 

என்ன சும்மா நின்னுண்டிருக்க போய் டிரஸை மாத்திட்டு வா” 

என்று சொல்ல உடனே மேலே மாடிக்குச்சென்று பட்டுப்புடவையை கழற்றிவிட்டு ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு கீழே வந்தவளைப் பார்த்து பர்வதம் ..

இது என்ன இப்படி வந்திருக்க இந்த மாதிரி எல்லாம் டிரஸ் போட்டுண்டா அப்பாவுக்கு பிடிக்காது சத்தம் போடுவார். போ ..போய் ..ஒரு புடவையை கட்டிண்டு வா.என கூற

மிருதுளாவும் மறுபடியும் போய் புடைவையை கட்டிக்கொண்டு கழற்றி போட்ட பட்டுப்புடவையையும் சல்வாரையும் மடித்துக்கொண்டிருக்கையிலே கீழிருந்து பர்வதம் சத்தமாக அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும்படி

ஏய் மிருதுளா என்ன இவ்வளவு நேரமா மாடில பண்ணர? ஒரு புடவை மாற்ற தானே போன அதுக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரம் கீழே வாஎன்றாள்

மிருதுளாவும் கீழே இறங்கி வந்தாள். இதை அனைத்தையும் பார்த்த வண்ணம் இருந்தனர் ஈஸ்வரன் நவீன் மற்றும் அவன் தம்பிகள். ஒருவர் கூட ஏன் அவ்வாறு பர்வதம் கத்தி கூப்பிட்டாள் என அவளை கேட்கவில்லை. அனைவரும் மத்திய உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுது பர்வத்தின் அக்கா ரமணி மிருதுளாவிடம்…

மிருது நீயும் நவீனோடயே உட்கார்ந்துக்கோ நாங்க பார்த்துக்கறோம்என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டே உடைமாற்ற சென்ற பர்வதம் வந்து.

பரவாயில்லை மிருதுளா பரிமாறுவாள் நீங்க எல்லாரும் உட்காருங்கோஎன்றதும் அம்பிகா குறிக்கிட்டு

அக்கா அவ இப்பதான் நம்ம ஆத்துக்கு வந்திருக்கா பரவாயில்லை அவள் நவீனுடன் சாப்பிட உட்காரட்டும் நான் பரிமாறரேன். நீங்களும் வேனும்னா உட்காருங்கோஎன்று கூறுவதோடு நிற்காமல் மிருதுளாவை பிடித்து அமர வைத்தாள். அனைவரும் கட்டு சாத கூடையில் வந்ததை பலே பேஷ் என்று சாப்பிட்டனர். அனைவரும் மிருதுளாவிடம் அவள் பெற்றோர் சூப்பராக திருமணம் செய்து வைத்தார்கள் என்றும் கட்டு சாத கூடை ஐட்டம்ஸ் வரை எல்லாமுமே நன்றாக ருசிகரமாக இருந்தது எனவும் பாராட்டினர். இதை பிடிக்காத பர்வதம் அம்பிகாவிடம் …

கட்டு சாத கூடை சாப்பாடு பத்தாதோ!! இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம் உங்க அப்பா அம்மா மிருதுளாஎன்றாள் 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே ஈஸ்வரன்

என்ன பேசர நீ. இவ்வளோ சாப்பாடு கொடுத்தனுப்பிருக்கா. பத்தாதூங்கறாய். உனக்கு கண்ணுல ஏதாவது கோளாறாஎன்றதும் அனைவரும் அதுதானே என்று கூறி சிரித்தார்கள். பர்வதத்திற்கு கோவம்  தலைக்கேறியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

உணவு உண்ட பின் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நவீன் மிருதுளாவை மாடிக்கு வரும்படி அழைக்க அதைப்பார்த்த பர்வதம் மிருதுளாவிடம் …

சாயந்தரம் நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் மாலை சாத்தனும் அதனால நீ இங்கயே இப்படி படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுஎன்றதும் அவளருகே மிருதுளா படுத்ததும் நன்றாக அசந்து தூங்கிப்போனாள். 

மிருதுளாவிற்கு அப்பொழுதுதான் கண் மூடியதுபோல இருந்தது ஆனால் மணி நாலரை ஆனது அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். எழுந்ததும் பர்வதம் ..

சீக்கிரம் ஆகட்டும் இப்படியா தூங்குவ!!

சாரி மா இரண்டு நாளா சரியா தூங்கலையா அதுதான் கொஞ்சம் அசந்துட்டேன்என்றாள் மிருதுளா

சரி சரி போய் பட்டுப்புடவை கட்டிண்டு வா. ” 

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நவீன் மிருதுளா பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர் பின் பர்வதம் மிருதுளாவிற்கு கோவிலைச் சுற்றி காண்பிப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றாள். ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். அப்போது பர்வதம் ஏதோ நவகிரகத்தை வலம் வந்துக்கொண்டிருந்த ஒரு மாமியை காட்டி…

மிருதுளா அந்த மாமிக்கு மூணு பொண்ணுகள்

. அவாளுக்கு நவீனை அவா ரெண்டாவது பொன்னுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா அதுவும் இல்லாம அவா ஆத்த பொன்னுகள் எல்லாரும் சிலிம்மா வெள்ள வெளேர்னு இருப்பா. ஹும் …என்ன பண்ண நவீன் என்னடான்னா உன்ன தான் கட்டிப்பேனுட்டான். சரி வாஎன்று அலுத்துக்கொண்டாள். 

இதைக்கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது ஆனால் தன் தாயின் அறிவுரை அவள் காதில் ஒலித்தது. ஆகையால் அமைதியாக ஒன்றும் கூறாமல் பர்வததின் பின் சென்றாள்.  நவீனின் சொந்தக்காரர்கள் அனைவரும் அங்கிருந்தே விடைபெற நவீன் குடும்பத்தினர் மட்டும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் மீண்டும் உடைகளை மாற்றினர். மிருதுளாவும் பட்டுப்புடவையை மாற்றி ஒரு சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு வேகமாக கீழே வந்தாள். 

அவள் வந்ததும் பர்வதம் நவீனை அவன் நண்பன் அழைத்ததாக கூறி அவனை சென்று பார்த்துவரச்சொன்னாள்.  நவீன் மிருதுளாவையும் கூட்டிச்சென்று வருவதாக கூற…

அவ என்னத்துக்கு இங்க கொஞ்சம் அவளுக்கு வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வாஎன நவீனை வெளிய அனுப்பியதும் மிருதுளாவைப்பார்த்து

இன்னைக்கு நைட்டுக்கு சாதம் வச்சுட்டேன் நீ ஒரு ரசம் பண்ணி அப்படியே உருளைக்கிழங்கு பொரியல் பண்ணி வை இதோ நான் வரேன்என்று கூறி வாசலுக்குச் சென்று அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களுடன் அரட்டையில் மூழ்கினாள். 

முதல் நாளே சமையல் கட்டில் எங்கே எது இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளே நுழைந்தாள் மிருதுளா. மெதுவாக ஒவ்வொரு டப்பாவாக திறந்து திறந்து பார்த்து எதுஎது எங்கெங்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொண்டபின் சமையலில் இறங்கினாள். மாமியார் வைத்துவிட்டுப்போன குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து மேடையின் ஓரமாக வைத்துவிட்டு ரசம் செய்ய ஆரம்பித்தாள். ரசத்துக்கு வேண்டியதை எல்லாம் போட்டு சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கை நறுக்க தொடங்கினாள் அப்பொழுது கவின் வந்து 

மன்னி எனக்கு உருளை ரொம்ப ரோஸ்ட் ஆனா பிடிக்காது ஸோ பார்த்துப்பண்ணுங்கோஎன்றான்

அவன் பின்னாடியே ஈஸ்வரன் வந்துநீ நல்லா உருளை ரோஸ்ட் பண்ணுமா எனக்கு அது தான் பிடிக்கும்என்றார். 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கவும் மிருதுளாவிற்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது ஆனாலும் அவள் இரண்டும் செய்தாள். ரசம், உருளை பொரியல், உருளை ரோஸ்ட், அப்பளம் என அனைத்தையும் ஒரே சட்டி உபயோகித்து அறைமணி நேரத்தில் செய்து மேடையின் மூலையில் மூடி வைத்துவிட்டு அடுப்படியை சமைத்தது போலவே தெரியாதவாறு சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஈஸ்வரன் டீவியில் பார்த்துக்கொண்டிருந்த நியூஸை பார்க்கலானாள். ஒரு மணிநேரம் கழித்து நவீன் வீட்டினுள்என்ன இன்னைக்கு நம்ம ஆத்துல ரசம் வாசம் வாசல் வரைக்கும் வீசறது. என்ன அப்படி செபெஷல் ரசம் பண்ணிருக்கா அம்மாஎன்று கூறிக்கொண்டே நுழைந்தான்.  பின்னாடியே கேட்டுக்கொண்டே வந்த பர்வதம்.எனக்கு ஒன்னும் அப்படி வாசம் வரலையேஎன சொல்லிக்கொண்டே நுழைந்தாள். 

மாலை உணவை மிருதுளாதான் செய்தாள் என ஈஸ்வரன் நவீனிடம் சொல்ல பர்வதம் ஈஸ்வரனை முறைத்தாள்.  அனைவரும் இரவு உணவருந்த அமர்ந்தனர். உணவு மிக அருமையாக இருந்ததை அனைவரும் பாராட்டினர் ஆனால் கவின் 

இந்த உருளையை இன்னும் கொஞ்சம் கூட சாஃப்ட்டா செய்திருக்கலாம்என்றான்

ரசத்துல உப்பு ஜாஸ்தியா இருக்கு எல்லாரும் எப்படி சாப்படரேங்கள்என்றாள் பர்வதம்

உடனே பதற்றம் ஆனா மிருதுளா ..

அச்சச்சோ சாரி மா.என்றதும் நவீன் குறுக்கிட்டு

நோ நோ இட் ஈஸ் சூப்பர். அம்மா உனக்கு மட்டும் எப்படிமா உப்பு ஜாஸ்தியா இருக்கும்?” என்றதும் மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்னர் அனைத்துப்பாத்திரங்களையும் தேய்த்து வைத்தாள் மிருதுளா‌. அனைவரும் பாயை விரித்து படுக்கலானார்கள் வேலைகளை முடித்ததும் மாடிக்கு செல்லலாமா இல்லை பர்வதம் ஏதாவது சொல்லி கூப்பிடுவாளா என்ற எண்ணத்தில் தயங்கி ஹாலில் நின்றிருந்தாள். நவீனாவது அவளை கூப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவன் பாட்டுக்கு மாடிக்கு சென்றுவிட்டான். கீழே இவர்களும் அவரவர்கள் உறங்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர். மிருதுளா எனும் ஒரு பெண் அங்கு இருந்ததையே கண்டுக்கொள்ளாதது போல அனைவரும் நடந்துக்கொண்டார்கள். சிறிது நேரம் நின்றுப்பார்த்த மிருதுளா மெல்ல அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்ததும் பர்வதம் அழைத்தாள்…மிருதுளா மனதிற்குள்

இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன் அப்பெல்லாம் ஏதோ நான் இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல இருந்துட்டு கரெட்டா கூபிடறா ஹும்…என்று நினைத்துக்கொண்டேவந்துட்டேன் மாஎன பர்வதம் முன் நின்றாள் 

நாளைக்கு நவீன் பெரியப்பா ராசாமணி ஆத்துக்கு விருந்துக்கு போகனும் அதனால நல்ல பட்டுப்புடவையா கட்டிண்டு போ சரியா.

சரி மாஎன்றாள் மிருதுளா

சரி சரி போய் தூங்கு காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கனும் இல்லாட்டி அப்பாவுக்கு பிடிக்காது அப்பறம் சத்தம் போடுவார் சொல்லிட்டேன்என கூறி போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டாள்.

அப்பாட என பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிக்கு வேகமாக சென்றாள் மிருதுளா. 

ஒரு நாளில் இவ்வளவு பதற்றம் அடைந்த நம்ம மிருதுளா இனி ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போகிறாள் என்பதை வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்…..

இருபத்தி எட்டாம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் ராமானுஜம் எழுந்து அனைவரையும் எழுப்பினார். அம்புஜம், வேனு, மிருதுளா, ஈஸ்வரன், பர்வதம், நவீன் எழுந்தார்கள். மடமடவென குளித்து அனைவரும் தயார் ஆனார்கள். அன்று அதிகாலை பெண்வீட்டாருக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நவீன் வீட்டார் வாத்தியார்கள் வந்ததும் விரதத்தில் மும்முரமானார்கள். ஃபோட்டோ கிராஃபர்கள் கேமராவுடன் அங்கும் இங்குமாக க்ளிக் செய்ய தொடங்கினர். 

 விரதம் முடிவதற்குள் அனைத்து சொந்த பந்தங்களும் எழுந்து குளித்து பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிந்து தலைநிறைய பூ வைத்து கொண்டார்கள். ஆண்கள் அனைவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்து சபையில் முன் வரிசையில் அமர்ந்தார்கள். இளவட்டங்கள் புத்தாடை உடுத்தி அந்த கூட்டத்தில் அங்கும் இங்குமாக நண்பர்களுடன் நடந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பொடிசுகள் அனைவரையும் அழகாக டிரஸ் பண்ணி மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே விளையாட அவர்கள் அன்னையர் சொல்ல அங்கும் இங்குமாக ஓடி ஆடி டேய் சதீஷ் என்ன புடி பார்ப்போம்..ஏய் ஆஷா நீ என்ன கண்டுபிடி என குட்டீஸ் லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். 

நாதஸ்வரமும், தவிலும், மிருதங்கமும் இன்னிசையை தந்தன.

வயதானவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அந்த காலத்துல ஆத்துலேயே தான் கல்யாணம் பண்ணினா என்று கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு அனைத்து சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

நவீன் வீட்டார் விரதம் முடிந்ததும் காசி யாத்திரைக்கு தயாராகினர். காசி யாத்திரைக்கு வேண்டிய குடை, கைவிசிறிகொஞ்சம் பருப்பு, அரிசி முடிந்த சிறு மூட்டை என அனைத்துப்பொருட்களும் மாப்பிள்ளை ரூமில் வைக்கப்பட்டிருந்தது. நவீனின் மாமா நவீனுக்கு பஞ்சகஜம் கட்டி, மாலையிட்டு அத்தை வசுந்தரா நவீனின் கண்களுக்கு மையிட்டாள். நவீனுடன் அனைவரும் மண்டப வாசலுக்கு வந்தனர். 

காசி யாத்திரை என்றால் என்ன? ஏன் இதை இவர்கள் திருமணங்களில் வைக்கிறார்கள் ? அப்பொழுது சொல்லும் மந்திரங்களின் பொருள் என்னமாப்பிள்ளை தனக்கு திருமண வாழ்வில் இஷ்டமில்லை என்றும் காசிக்கு சென்று வேத பாடங்களை கற்று சன்யாசம் ஏற்க போவதாகவும் முடிவெடுத்து அவர் செல்லும்போது மணமகளின் தந்தை அவரைத் தடுத்து திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களை அவருக்கு எடுத்துறைப்பதோடு மட்டுமல்லாமல் தனது பெண்ணை அவருக்கே மணமுடித்து தருவதாகவும் வாக்களித்து தனது மகனை மாப்பிள்ளைக்கு குடைப்பிடிக்கச் சொல்லி இருவருமாக மணமகனை திருப்பி மண்டபத்திற்குள் அழைத்து வருவதே இந்த காசி யாத்திரை சடங்கின் விளக்கமாகும். 

இவ்வாறு அவர்கள் திரும்பியதும் மணமகளை கீழே வரச்சொல்லி  இருவர் கழுத்திலும் மூன்று மாலைகள் போட்டு மூன்று முறை மாற்றிக்கொள்ள சொல்வார்கள். இதை சற்று விளையாட்டாக மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்களும் அவர்களை தூக்கிக்கொள்ள மாலைகளை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் ஆனால் இருவரையும் உயர்த்தித் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். சிறிது நேரம் விளையாடிய பின்னர் பெண்ணின் தந்தை கூறியது போலவே இருவர் கைகளிலும் கல்யாண மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அவர்களும் மாலையை மாற்றிக்கொண்டு தனது மகளின் கரங்களை பிடித்து மணமகனின் கரங்களில் கொடுத்து இனி என் மகளுக்கு எல்லாமும் நீங்கள்தான் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுவார். இதுவே கண்ணிகாதானம் ஆகும்.

மணமகன் மணமகள் கரங்களைப் பிடித்தவாறே இருவரையும் அலங்காரம் செய்த ஊஞ்சலில் அமரச்செய்து ஊஞ்சல் பாடல்களை பெண்கள் அனைவரும் பாட, சுமங்கலிகள் அவர்களுக்கு பச்சப்பொடி சுற்ற பாலும் பழமும் மணமக்கள் கைகளில் கொடுத்து பின் மாங்கல்ய தாரணத்திற்கு மண்டபத்திற்குள் அழைத்துச்சென்றனர். 

இந்த ஊஞ்சல் வழக்கத்தில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்…திருமண வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடுவது போல பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதை இருவருமாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இன்று கரங்கள் இணைந்து இருப்பது போலவே இருந்து சரிசெய்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். 

அனைவரும் ஊஞ்சல் முடிந்து மண்டபத்திற்குள் வந்தனர். இருவீட்டாரும் அழைப்பு விடுத்திருந்த அனைத்து சொந்தங்களும் நண்பர்களும் வந்திருந்து மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து வழிந்தனர். இரண்டு வீடுகளிலும் இது முதல் கல்யாணம் ஆகையால் அன்று விடுமுறை இல்லாத போதும் அழைத்த அனைவரும்  வந்திருந்தனர். கல்யாண மேடையில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இருந்தனர். இருவீட்டாரின் சில முக்கிய பெரியவர்களும் இருந்தனர்.

வேதங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க நவீன் மிருதுளாவிடம் கல்யாண கூரை புடவையைக்கொடுத்து கட்டிவரச்சொல்ல மிருதுளாவும் உள்ளே புடவை மாற்ற சென்றாள். அப்பொழுது மேடையில் மாப்பிள்ளைக்கு ராமானுஜமும் அம்புஜமும் பாத பூஜை செய்தனர். 

மிருதுளாவுடன் அனைத்து நவீன் வீட்டார் மாமிகளும் உள்ளே சென்று ஒன்பது கஜப்புடவையை கட்டிவிட்டு (அது சரியாகவும் கட்டவில்லை) மேடைக்கு அழைத்துவந்தனர். பின் ராமானுஜம் மடியில் அமர்ந்தாள் மிருதுளா. பர்வதத்தின் தம்பி சும்மா இல்லாமல்அப்பா பாவம் கொஞ்சம் பார்த்து உட்காருமா மிருதுளாஎன்று கூறி கெக்க புக்கே என சிரிக்க பெண் வீட்டார்களுக்கும் மிருதுளாவிற்கும் துளியும் பிடிக்கவில்லை. அவருக்கு யாரும் அந்த நேரத்தில் பதில் குடுக்கவும் போகவில்லை. 

எல்லோரும் மாங்கல்ய தாரணத்திற்காக காத்திருந்தனர். மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நவீன் மிருதுளா கழுத்தில் தாலியின் இரண்டு முடிச்சுப் போட மூன்றாவது முடிச்சை அவனின் பெரியப்பா மகள் நாத்தனார் முடிச்சுப்போட மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்து மணமக்கள் மேல் பூக்களையும் அட்சதையும்‌ போட்டு வாழ்த்த நமது நவீன் மிருதுளா திருமணம் இனிதே நடந்தது. அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் கண்கள் களங்கியது. இருவீட்டாரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆத்துக்கு மாட்டுப்பொன் வந்தாச்சா? உங்க ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சா என மகிழ்ச்சியாக விசாரித்துக்கொண்டனர். அனைவருக்கும் ஜூஸ் பரிமாறப்பட்டது. நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ஜூஸ் கொடுககப்பட்டது. 

மாங்கல்ய தாரணம் ஆனதும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மற்ற சடங்குகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது அப்பொழுது மேடையில் நவீன், மிருதுளா மட்டுமே இருந்தனர். அனைத்து சொந்தங்களும் மேடைவிட்டு கீழே இறங்கினர். நவீன் மற்றும்  மிருதுளாவின் பெற்றோர்கள் வந்த அனைவரையும் வரவேற்ப்பதில் மும்முரமானார்கள்.  திருமணத்திற்கு வந்திருந்த பெண்வீட்டார் வலதுபுறமும் மாப்பிள்ளை வீட்டார் இடதுபுறமும் என இரு வரிசையில் பலர் பரிசுப்பொருட்களுடனும், பணத்துடனும் மொய் செய்வதற்காக பொறுமையாக நின்று அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்க்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றனர். 

காலைமுதல் ஒன்றுமே சாப்பிடாமல் வெரும் பாலும் பழமும் ஜூஸும் மட்டுமே அருந்திய நவீனுக்கும் மிருதுளாவிக்கும்

தனியாக ஒரு டேபிளில் இரண்டு கோலமிட்டு அதன் மேல் இரண்டு வாழை இலை போட்டு அதில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சொந்தங்கள் நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டு இருவரையும் கலாயித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒருவரொக்கொருவர் ஊட்டிவிடும் படி அனைவரும் சொல்ல நவீன் முதலில் மிருதுளாவிற்கு லட்டு ஊட்டிவிட்டான் பின் மிருதுளா நவீனுக்கு ஜாங்கிரி ஊட்டிவிட அனைவரும் கைத்தட்டினார்கள். மத்திய கல்யாண சாப்பாடு ஆன பின் மண்டபம் சற்று காலியானது ஆம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர் மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். 

நவீனும், மிருதுளாவும் அவரவர் ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டனர். கிருஹப்ரவேசம் என பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அறைக்கும் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டார் அறைக்கும் சென்று மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பின் வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி என சுமங்கலிகளுக்கு இருவீட்டிலும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் முடிந்ததும் அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அப்பொழுது அம்புஜம் ரூம் கதவு தட்டப்பட்டது.யாரதுஎன கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள். வெளியே பர்வதம் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து 

வாங்கோ மாமி. உள்ள வாங்கோஎன்றழைக்க அதற்கு பர்வதம் சத்தமாக 

பருப்பு தேங்காய் ரெண்டிருக்கனும் ஆனா ஒன்னு தான் எங்க ரூமுக்கு வந்திருக்குஎன்று கேட்க

இல்லையே மேடையிலிருந்த எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கச்சொன்னேன். அவாளும் வச்சானுட்டு சொன்னாலே. இருங்கோ பார்க்கறேன்” 

என அம்புஜம் மேடைக்குச்சென்று பார்த்தாள் அங்கு மேடையின் ஓரமாக ஒரு செட் பருப்பு தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து பர்வதம் கையில் கொடுத்து…

சாரி மாமி அவா மேடை ஓரமா வச்சிருக்கா. கவணிக்கலை போல. இதாங்கோஎன்று கூறி கொடுத்தாள் 

அதை பர்வதம் வாங்கிக்கொண்டாள். இதை காரணமாக வைத்து வம்பிழுக்கப்பார்த்து வடிவேலு மாதிரி வடபோச்சே என்ற ரியாக்ஷனுடன் அங்கிருந்து சென்றாள்.

மாலை நாலு  மணி ஆனதும் அனைவருக்கும் காபி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. மிருதுளா நலங்குக்கு ரெடியானாள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து  மிருதுளா நவீன் ரூமிற்கு சென்று நலங்கிற்கு அழைத்தாள் அப்பொழுது நவீனின் சித்திகள்

 “ஒரு பாட்டு பாடினா தான் எங்க நவீன் வருவான்என்று சொல்ல எந்த வித தயக்கமுமின்றி மிருதுளாவும் பாட்டு பாடினாள்.சூப்பரா பாடர மிருதுஎன்றனர்.

நெருங்கிய சொந்தகளும் நண்பர்களும் ஒன்றாக மண்டபத்தின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் இருவீட்டாரின் பெண்கள் வட்டமாக அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் அவர்களைச்சுற்றி நாற்காலியில் அமர்ந்தார்கள். நடுவிலே எதிர் எதிராக நவீனும் மிருதுளாவும் இரண்டு அணிகளோடு அமர்ந்திருந்தனர். அழகிய பாட்டுடன் நலங்கு ஆரம்பமானது. அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், அரிசி தறேன் பருப்பு தருவியா என்று கேலிச் செய்தல், அந்தாக்ஷரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு என்று ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக நடந்தேறியது நம்ம மிருதுளா நவீன் நலங்கு. இருவரையும் ஒன்றாக அமரச்செய்து ஆரத்தி எடுத்தனர். 

அந்த காலத்தில் பெரும்பாலும் அரேஞ்ஜ் மேரேஜாக தான் இருந்தது. அத்தகைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் அவ்வளவாக ஒருவருக்கொருவர் பரிட்சயமாகாதவர்கள் என்பதால் இப்படி நலங்கு என சில விளையாட்டுகளை வைத்து அவர்களுக்குள் (ஆங்கிலத்தில் இதை – the ceremony where the bride and groom break the ice and get along என்பார்கள்)  நெருக்கத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு இது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். 

அனைவரும் இரவு சாப்பாடு முடிந்ததும் நவீனையும், மிருதுளாவையும் சாந்தி முஹூர்த்த ரூமிற்குள் அனுப்பி விட்டு வெளியே கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து எல்லோரும் அவரவர் ரூமில் உறங்கச் சென்றனர். சீட்டுக்கச்சேரி கும்பல் மீண்டும் சீட்டாட துவங்கியது. அம்புஜம் காலை முதல் அங்கும் இங்குமாக ஓடியாடியதில் களைத்திருந்தாலும் மிருதுளாவின் பெட்டியை அடுக்கி அவளது புடவைகள் நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தனியாக மற்றொரு பெட்டியில் அடுக்கி மறுநாள் மண்டபத்தை காலி செய்ய வேண்டுமே என அவர்கள் ரூமில் ராமானுஜம், வேனு எல்லாரும் அவிழ்த்துப்போட்ட துணிகளை மடித்து அவரவர் சூட்கேசில் போட்டு மறுநாள் போட்டுக்கொள்ள வேண்டி டிரெஸ்ஸை மட்டும் நால்வருக்கும் எடுத்து வைத்து விட்டு எல்லாவற்றையும் பேக் செய்து அவள் உறங்கும் போது மணி இரண்டரை ஆனது. அங்கே பர்வதமும் இதே போல அவர்கள் ரூமிலிருந்த துணிகளை எல்லாம் அவரவர் சூட்கேசில் போட்டு பேக் செய்தாள்.

இவ்வாறு பலர் தடுக்க எண்ணியும் அவைகளை எல்லாம் சாம்பலாக்கி நவீனுடன் மிருதுளாவை கைகோர்க்க வைத்த அம்புஜம் நம்பும் அந்த அம்பாளின் அடுத்த விளையாட்டு தான் என்னஎதார்த்தமான, சூது வாது தெரியாத வெகுளிபெண்ணான நம்ம மிருதுளா துளியும் உண்மை இல்லாத, சூது வாது நிறைந்த குடும்பத்தில் அதுவும் ஆகாத மருமகளாக நுழைந்திருக்கிறாள். என்னவெல்லாம் அவளுக்கு காத்திருக்கிறதோ? நவீன் அவளுக்கு பக்கத்துணையாக இருப்பானாஇப்படி இருக்கும் மிருதுளா மாறுவாளா? என்பதைப் பற்றி வரும் நாட்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

எனது அழைப்பை ஏற்று மிருதுளா நவீன் திருமணத்திற்கு வருகைதந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்….

இருபத்தி ஏழாம் தேதி காலை சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண வைபோகமே என்ற பாடலை வ்ரதம் மேற்கொண்ட கல்யாண பெண்ணான நமது மிருதுளாவிற்கு ஆரத்தி எடுத்துக்கொண்டே பாடினர் பரிமளமும், மேகலாவும். பின் மிருதுளாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக காலை டிபன் அருந்தினார்கள். 

வ்ரதம் என்பது திருமணத்தின் முன்தினம்  மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு  கைகளில் மஞ்சள் தடவிய கயிறு கட்டி பிரம்மச்சரியத்தை அன்றுடன் முடித்து கிரஹஸ்த்தர்களாக மாறுவதே இந்த சடங்கின் அர்த்தம். இந்த சடங்கு முடிந்தால் மணப்பெண் மணமகன் இருவரும் வீட்டை விட்டு திருமணம் முடியும் வரை வெளியே செல்லக்கூடாது ஆகையால்தான் பெரும்பாலும் வ்ரதம் மண்டபத்தில் திருமணத்திற்கு முன்தினம் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில நேரம் மாப்பிள்ளை திருமணத்தினத்தன்று விடியற்காலையிலும் மேற்க்கொள்வர்.

இருபத்தி ஏழாம் தேதி காலை உணவு ஆன பின் சிலர் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். ஒரு கூட்டம் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். ஒரு சிலர் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டும் பழங்கதைகளை அசைப்போட்டுக்கொண்டும் வட்டமாக அமர்ந்திருந்தனர். மிருதுளாவும் அம்புஜமும் அவர்கள் அறையில் கொண்டுவந்த பெட்டிகள் நகைகள் எல்லாவற்றையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். வேனுவும் ராமானுஜமும் சீர் ஜாமான்களை ராமனுஜம் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க அவற்றை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான் வேனு. 

அம்புஜத்திடம் அவள் தங்கையின் கணவனின் ஒன்னு விட்ட மாமா ..

ஏம்மா அம்புஜம் இப்பத்தான் கேள்விப்பட்டேன் கல்யாண புள்ளான்டான் அவா ஆத்த மூத்தப்புள்ளையாமே!!

ஆமாம் மாமா ஏன் அதுக்கென்ன இப்போ?”

நம்ம மிருதுளாவும் நம்ம ஆத்த மூத்தப்பொன்னு

ஆமாம். சரி

இல்லை மூத்த புள்ளைக்கு மூத்த பொன்னை கல்யாணம் பண்ணப்டாதுனு சொல்லுவா அதுதான் நீ எப்படி ஒத்துண்ட ?”

ஓ அப்படியா எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா அதுவும் இல்லாம இதை இது வரைக்கும் யாருமே சொல்லலையே!!! இனி ஒன்னும் செய்ய முடியாதே. எல்லாம் அந்த பகவதி பார்த்துப்பள். அவ மேல பாரத்த போட்டுதான் இவ்வளவு ஏற்பாடுகளும் பண்ணிருக்கோம் அதனால எல்லாம் அவள் செயல். சரி மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாம் வர நேரமாச்சு நான் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆயாச்சானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.

என்று கூறி அங்கிருந்து நேராக மண்டப டைனிங் ஹாலுக்குச்சென்று எல்லாம் தயாராக உள்ளதா என்று விசாரிப்புடன் ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் திருமண கான்ட்ராக்ட் தலைவர்  மாப்பிள்ளைவீட்டார் வந்ததும் சம்பந்தி கையில் கொடுக்க வேண்டிய தெரட்டிப்பாலை ஒரு அழகான டப்பாவிலிட்டு அம்புஜத்திடம் கொடுத்து …

மாமி ஏற்பாடெல்லாம் நன்னாருக்கா. உங்களுக்கு திருப்தியாருக்கா.

இதுவரைக்கும் எல்லாம் நன்னா இருக்கு. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்ததும் அவாள எல்லாரையும் நன்னா கவனிச்சுக்கோங்கோ. எந்த குற்றமும் குறையும் அவா சொல்லிடப்டாது அது உங்க கையில் தான் இருக்கு“.

கவலைய விடுங்கோ மாமி. ஒரு குறையுமில்லாம பேஷா நடத்திக்கொடுத்திடுவோம் சரி நான் பந்திக்கு எல்லாத்தையும் ரெடி பண்யுடறேன்

டைனிங் ஹால் கீழே உள்ளது. திருமண மண்டபம் டைனிங் ஹாலுக்கு மேலே உள்ளது. அம்புஜம் கீழே எல்லாம் ரெடி என்று திருப்தி ஆனபின் மேலே சென்று மிருதுளாவை புடவை மாற்றி தயாராக சொல்லி தானும் தயார் ஆனாள். 

வேனு வேகமாக மேலே வந்து 

அம்மா அம்மா அவா எல்லாரும் வந்தாச்சு. சீக்கிரம் கதவ தொறந்து வா மா. அப்பா உன்னை கூட்டிண்டு வரச்சொன்னா

என்றதும் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்புஜம். மிருதுளாவை ரூமிலேயே இருக்கச்சொல்லிவிட்டு பெண்வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க கீழே சென்றனர். மாப்பிள்ளை வீட்டு வேன்களும், கார்களும் சர் சர்ரென வந்து நின்றது. அனைவரும் இறங்கி மண்டப வாசலுக்கு சென்றதும் அம்புஜத்தின் மன்னியும், ராமானுஜத்தின் சித்தியுமாக மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர். அம்புஜம் தன் கையில் வைத்திருந்த தெரட்டிப்பால் டப்பாவை பர்வதத்திடம் கொடுத்து வரவேற்றாள். வேனு மாப்பிள்ளைக்கு மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு பன்னீர் தெளித்து உள்ளே அழைத்தான். ராமானுஜம் ஈஸ்வரனுடன் கைக்குலுக்கி வாங்கோ என்று அனைவரையும் வரவேற்றார்கள். அனைவரும் வந்ததும் மேலே சென்று அவரவர் ரூமுகளில் பெட்டிகளை வைத்துவிட்டு மிருதுளாவைப்பார்க்காத நவீன் வீட்டார் அவளை காண சென்றனர். மிருதுளா ரூம் கதைவை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றனர் பர்வதத்தின் டில்லி தங்கைகள் லட்சுமியும், லலிதாவும். மிருதுளாவைப்பார்த்ததும் லட்சுமி..

ஹேய் இவ நம்ம பர்வதம் சொன்னா மாதிரி குண்டெல்லாம் இல்லையே அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கா

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத மனிதர்கள். இத்தகைக்கு நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பெண்மணிகளாம். ஒரு பெண்ணை முதன்முதலில் பார்க்கும் போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு மக்குகள் இல்லை..பர்வதம் ஏத்திவிட்டதை அப்படியே கக்கிவிட்டு சங்கடப்படுத்த வந்தவர்கள் போலவே பேசினர். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பதை மறந்து போனார்கள் அடுத்தவர் பெற்று வளர்த்த பெண்ணை பழிக்கும் ஜோரில். பர்வத்துடன் கூட பிறந்தவர்களாயிற்றே.

சீர் சாமான்கள் அடுக்கிவைத்திருந்த ரூமில் அழகான அலங்கார விளக்குள் ஆன் செய்யப்பட்டிருந்தது. அதில் வேனுவின் கைவனம் ஜொலித்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் அனைத்தையும் அவரவர் கண்களாலேயே ஸ்கேன் செய்தனர். ஈஸ்வரனின் அக்காக்கள் சொர்னமும் வரலட்சுமியும் பேசிக்கொண்டனர்….

பர்வதத்திற்கு வந்த சம்பத்திகள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழகா பண்ணிருக்கா..இந்த பர்வதம் வம்பேதும் செய்யாமல் இருந்தால் நல்லாருக்கும்

அதச் சொல்லு சொர்னம் அக்கா. அவளால சும்மா இருக்க முடியாதே ஏதாவது செய்வள். எனக்கு அந்த மிருதுளா பொன்ன நெனைச்சா பாவம்னு தோனறது. நாம அந்த பொன்னுக்காக வேண்டிப்போம். வேறென்ன செய்யறது.

நவீன் வீட்டார் அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆனதும் ராமானுஜமும் அம்புஜமும் வேனுவும் சென்று அவர்கள் அனைவரையும் மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுத்தப் போது பர்வதம் அவர்கள் அறைக்குள் வரும்படி சொல்ல இவர்கள் உள்ளே “நாழி ஆகறது சாப்பிட கூட்டிண்டு போக வந்தோம்”  என்று கூறிக்கொண்டே சென்றனர். அப்போது ஒரு நவரத்தின ப்ரேஸ்லெட் ஒன்றை எடுத்து பர்வதம் அவர்களிடம் காண்பித்து…

இது உங்க பொன்னு மிருதுளாவிற்காக என் புள்ள கவின் குவைத்திலிருந்து வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ

அம்புஜம் பார்த்துவிட்டு 

ரொம்ப அழகா இருக்கு மாமி. ஆமாம் எங்க யாரையுமே காணம் நீங்க மட்டும் இருக்கேங்கள்என்று கேட்க அதற்கு பர்வதம்

எல்லாரும் பக்கத்து ரூம்ல இருக்கா. சரி வாங்கோ இத காட்டத்தான் கூப்பிட்டேன். அவாளையும் அழைச்சுண்டு வரேன். நீங்க முன்னாடி போங்கோ

எல்லாருமாக அமர்ந்து முதல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அடுத்த பந்தியில் மீதமிருந்த நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் உணவருந்த அமர்ந்தனர். அம்புஜம் பங்கஜத்தை அழைத்து மிருதுளாவையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னாள். இது சாப்பிட்டு கை கழுவுவதற்கு எழுந்த நவீன் காதில் விழ அவன் மெதுவாக கை கழுவச்சென்றான். பின் அங்கிருந்தவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருப்பது போல மிருதுளா வரவுக்காக காத்திருந்தான். மிருதுளாவும் பங்கஜமும் வந்தார்கள். உடனே நவீன் ஹாய் மிருதுளா என்றான் அவளும் ஹாய் என்றாள். பங்கஜம் கிண்டலாக…

சரி சரி நாளையிலிருந்து பேசத்தான் போரேள் அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்கோ ரெண்டு பேரும்

உடனே நவீன்..

ஒரு ஹாய் தானே சொல்லிண்டோம். நீங்க சொல்வதும் சரிதான். நாங்க நாளையிலிருந்தே பேசிக்கறோம். ஓகே வா.என்றதும் பங்கஜம் மீண்டும்

நாளையிலேர்ந்து நீங்களாச்சு உங்க ஆத்துக்காரியாச்சு. அதெல்லாம் சரி நான் ஒன்னு கேள்ளிப்பட்டேன் அதப்பத்தி உங்கள்ளட்ட கேக்களாமா?”

ஓ எஸ் தாராளமா. அப்படி என்ன கேள்விப்பட்டேங்கள் சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன்

என்ன எங்க மிருதுவ கூட்டிண்டு போகமாட்டேன்னு சொன்னேங்களாமே!! உங்களோட வாழரத்துக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கறோம் இங்கேயே விட்டுட்டுப் போறத்துக்கா எங்க அக்காவும் அத்திம்பேரும் இத்தர கஷ்ட்டப்பட்டு உங்களுக்கு மிருதுளாவ கல்யாணம் பண்ணி வைக்கறா?!”

அவளுக்கு தான் ஏதோ பரீட்சை இருக்குனுட்டு ஒரு கன்ஃப்யூஷன் ஆச்சு. நான் அப்படி ஒன்னுமே சொல்லலையே

ஸோ அவள உங்ககூட கூட்டிண்டு போறதுல உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லையா

அஃப்கோர்ஸ் எஸ் எனக்கு நோ இஷூஸ் அட் ஆல். நான் வீடு கூட பார்த்தாச்சு. டிகெட் மட்டும் தான் எடுக்கனும்

ஏன் இன்னும் டிக்கெட் எடுக்கலை?”

இதோ எடுக்க என் பெரியம்மா பையனிட்ட சொல்லிருக்கேன் நாளைக்கு எடுத்துண்டு வருவான்

அப்போ இப்ப வரைக்கும் கூட்டிண்டு போற ஐடியாவே இல்லை ம்ம்ம்ம்… நாளைக்கு டிக்கெட் வந்தாதான் நான் நம்புவேன்

ஓகே ஓகே அப்படியே ஆகட்டும்.

என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் நவீனை அவன் அத்தை மகன் வந்து பர்வதம் அழைத்துவரச்சொன்னதாக  அழைத்தான். பங்கஜமும்…

சாரி உங்கள ரொம்ப நேரம் பிடிச்சுண்டுட்டேன். சரி நீங்க போய் உங்க வேலைகளைப்பாருங்கோ நானும் போய் சாப்பிடட்டும் ஆல்ரெடி மணி இரண்டரை ஆயிடுத்து.

ஓகே பை ஃபார் நௌ

அனைவரும் மத்திய உணவு அருந்திய பின் ஓய்வெடுத்தனர். மிருதுளாவும் அம்புஜமும் சற்று நேரம் படுத்துக்கொண்டனர். சற்று கண் அசந்ததும் …டக் டக் டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள் அம்புஜம். அவர்கள் ரூம் வாசலில் மிருதுளாவிற்கு மேக்அப் போட இருவர் வந்திருந்தனர். 

 அப்பொழுதுதான் டைமைப்பார்த்தாள் அம்புஜம் மணி மூன்றரை ஆகியிருந்தது. மிருதுளாவை எழுப்பி குளித்துவிட்டு வரச்சொல்லி மேக்அப் போட வந்தவர்களை ரூமிற்குள் அமரவைத்துவிட்டு அவர்களுக்கு காபி கொடுக்க சொல்லி மிருதுளா மாலை கட்ட வேண்டிய புடவை நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து மிருதுளாவை தயார் படுத்தச் சொல்லிவிட்டு தான் தயாராகிக்கொண்டிருக்கையில் நவீனின் அம்பிகா மாமி ஒரு பட்டுப்புடவையை எடுத்து வந்து அம்புஜத்திடம்…

மாமி இந்தாங்கோ நிச்சயதார்த்தப்புடவை பர்வதம் அக்கா உங்களாண்ட கொடுக்கச் சொன்னா

இத ஏன் இப்ப தறேங்கள். சபேல நிச்சயதார்த்தம் சமையத்துல தானே தரனும்

அதெல்லாம் எனக்கு தெரியாது மாமி கொடுக்கச்சொன்னா குடுத்துட்டேன் நான் வரேன் மாமி“.

சரி நான் சம்பந்தி மாமிகிட்டேயே கேட்டுக்கறேன். அதை அப்படியே மிருதுளாட்ட கொடுத்திடுங்கோ. மிருது அத மாமிகிட்டேருந்து வாங்கிக்கோமா.

என்றாள். மிருதுளாவிற்கு மேக்அப் போட்டுக்கொண்டிருந்ததினால் அம்புஜத்தின் தங்கை கோமளம் அந்தப்புடவையை அம்பிகாவிடமிருந்து வாங்கி ஷெல்ஃபில் வைத்தாள். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் ஜானவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பிற்கு  தயாராகி அனைவருக்கும் மாலை டிபன் காபி எல்லாம் சரியாக பரிமாரப்பட்டதா என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

ஜானவாஸத்திற்கு அனைவரும் அருகே உள்ள கோவிலுக்கு செல்ல விறுவிறுப்பாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பர்வதம் மெல்ல பூனைப்போல மிருதுளா அறைக்குச்சென்று…

என்ற மிருதுளா மேக்அப் நடக்கறதா..டைமுக்கு ரெடி ஆயிடுவியோனோ!

ஆயிடுவேன் மா. ஜஸ்ட் புடவைதான் கட்டனும். நீங்கள் எல்லாரும் கோவில் போயிட்டு வரத்துக்குள்ள ரெடி ஆகிடுவேன்!

சரி அம்பிகா ஒரு புடவை குடுத்தாளா.

ஆமாம் மாமி நிச்சயதார்த்தப் புடவைனுட்டுத் தந்துட்டுப்போனாஎன்றாள் கோமளம்.

ஓ நீங்களும் இங்க தான் இருக்கேளா நான் கவணிக்கலை. எப்படி இருக்கேங்கள்? சரி எனக்கு நாழி ஆகறது அந்தப் புடவையை கொஞ்சம் தாங்கோ நான் நிச்சயத்தப்போ சபேல வைக்கனும்

அதத்தான் அம்புஜமும் அம்பிகா மாமிகிட்ட சொன்னா ஆனா நீங்கதான் குடுத்துட்டு வரச்சொன்னதா இல்லையா சொன்னா

ஆமாம் ஏதோ ஒரு எண்ணத்துல சொல்லிட்டேன் சரி தாங்கோ நான் போய் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்

இந்தாங்கோ மாமி அந்த புடவைஎன்று கோமளம் குடுத்ததும் ரூமைவிட்டு வெளியேறினாள் பர்வதம். அவளைப்பார்த்த அவளது அக்கா …

என்ன பர்வதம் உன் மாட்டுப்பொன் ரூமிலேருந்து கையில ஏதோ புடவ டப்பா மாதிரி எடுத்துண்டு போறாய்

அது ஒன்னுமில்லை ரமணி. சரி நம்ம ஆளுகள் எல்லாரும் கோவிலுக்கு போக ரெடி ஆகிட்டாளான்னு ஒன்னுப் பார்த்துட்டு வாயேன்” 

என ரமணியை அனுப்பிவைத்துவிட்டு அந்த புடவையை அவள் ரூமிலுள்ள பீரோவில் வைத்துப்பூட்டினாள் பர்வதம்.

அவள் புடவையை அவசரமாக வாங்கிக்கொண்டுப்போனது கோமளத்திற்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் எப்படியும் நிச்சயதார்த்தம் சமயத்தில் சபையில் வைத்து தரத்தானே போகிறார்கள் என்று விட்டுவிட்டாள் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. 

 மண்டபத்தில் மிருதுளாவும் அவளுக்கு துணையாக கோமளமும்  மட்டும் இருந்தனர். மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இருந்தனர். அங்கிருந்துதான் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும் ஜானவாசம் தொடங்கவுள்ளது. 

கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு அன்று நிச்சயதார்த்த்திற்கு நவீன் எடுத்து வந்த கோட் சூட்டை, மாலை அனைத்தயும் தாம்பாளத்தில் வைத்து ராமானுஜமும் அம்புஜமும் கொடுத்தனர் அதை வாங்கிக்கொண்டு கோவிலில் ஒரு மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொண்டு வருவதர்க்குள் அனைத்து சொந்த பந்தங்களும் வட்டமாக ஒரு பாதி பெண்வீட்டாரும் மறு பாதி மாப்பிள்ளை வீட்டார் என அமர்ந்திருந்தனர். அங்கே நவீனையும் அமரவைத்தனர். 

வேனுவும் ஜம்முனு ஒரு கோட் சூட் போட்டுக்கொண்டு தனது அக்காவிற்கு கணவராக போகும் நவீனுக்கு மாலை போட்டு பூச்செண்டை கையில் கொடுத்து தங்க சேயின் ஒன்றை போட்டுவிட்டான். வேனு சேயின் போட்டதும் பர்வதம் தனது இரண்டாவது மகனாகிய கவினைப்பார்த்து கண் அசைத்தாள்.

 என்னென்ன விளங்க வில்லை அல்லவா. வாருங்கள் அன்று காலை நவீன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை உங்கள் முன் தோன்றவிருக்கும் சுழல்களின் நடுவில் பார்த்துவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வருவோம். அன்று காலை நவீன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் அப்பொழுது குவைத் கவின் அனைவர் முன்னும் நவீனுக்கு சேயின் போட்டு விட்ட சிறுது நேரத்தில் பர்வதம் நவீனிடம் சென்று..

நவீன் அந்த செயினை கழற்றிக்கொடுத்துவிடுஎன்றாள் அதற்கு நவீன் ஏன் என்று கேட்க 

உனக்கு மண்டபத்தில் அவர்கள் செயின் போடுவார்கள் அதனால் இதை என்னிடம் கழற்றித் தந்துவிடு”  என்றதும் நவீனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் அந்த பேச்சை அதற்கு மேல் வளரவிட விருப்பமில்லாமல் கழற்றிக்கொடுத்துவிட்டான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவினும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதுதான் பர்வதத்தின் கண்ணசைவுக்கு பின் இருந்த ஃபிளாஷ் பேக். சரி சரி சுழல் நின்னுப்போய் நாம அனைவரும் மீண்டும் கோவில் வந்துவிட்டோம். அனைவரும் வேனு செயின் போட்டதுக்கு கைத்தட்டினார்கள். பின் மாப்பிள்ளையான நவீனை பூவெல்லாம் வைத்து அலங்கரித்த ஜானவாச காரில் ஏறி அமரச்சொன்னார்கள் கூடவே சித்தப்பா, மாமா, அத்தை ஆகியவர்களின் குழந்தைகளையும் காரில் ஏற்றி நவீனுடன் அமர்த்தினர். காரின் வலதுபுறம் பெண்வீட்டாரும், இடதுபுறம் மாப்பிள்ளை வீட்டாரும் என ஜானவாச கார் மெல்ல மெல்ல வானவேடிக்கைகளுடன் நாதஸ்வரம் இசைக்க மேள தாளங்களுடன் நகர்ந்து மண்டப வாசல் வந்தடைந்தது. உடனே ராமானுஜம் நண்பரான சீனிவாசன் உள்ளேச் சென்று மிருதுளாவை வெளியே அழைத்து வந்தார். அவர் பெண்ணின் திருமணத்தின் போது அவ்வாறு செய்ததால் இங்கேயும் அதையே செய்தார். 

ஜானவாச காரில் மிருதுளாவையும் ஏறி அமரச்சொன்னார் யாருமே அதை வித்தியாசமாக பார்க்கவில்லை ஆனால் பர்வதமும் அவள் தங்கைகளும் மூஞ்சியை சுளித்துக்கொண்டு இது என்ன கூத்து என்று அவர்களுக்குள் ஆனால் அம்புஜம் கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் அம்புஜம் அதைக்கண்டுக்கொள்ளாதது போல அவள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அழகைப்பார்த்து மெய் மறந்து நின்றிருந்தவளை ..

மாமி போதும் ரசிச்சது வாங்கோ இரண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கனும்என்று வாத்தியார் கூற சுயநினைவுக்கு வந்தாள் அம்புஜம். பின் நவீனையும் மிருதுளாவையும் காரிலிருந்து கீழே இறங்கச்சொனார். அப்பொழுது நவீன் முதலில் இறங்கி பின் மிருதுளா இறங்க கஷ்ட்டப்படும்போது மிருதுளாவின் தோழிகள் 

நவீன் ப்ளீஸ் ஹெல்ப் மிருதுஎன்று சொன்னதும் நவீன் திரும்பி கையை நீட்ட அதற்கு அவன் சித்தி லலிதா சட்டென்று நவீன் கையை தட்டிவிட்டு

தாலி கட்டறதுக்கு  முன்னாடி எல்லாம் தொடப்டாது” (இதே சித்திக்காரியின் மகள்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைகளோட அடிக்கப்போற லூட்டிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின் நாம பார்க்கத்தானே போறோம். அதுவரை பொறுத்திருங்கள்) என்றதும் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆக உடனே மிருதுளா தானாக பிடித்து இறங்கினாள். 

இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அனைவருமாக அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டப மேடையில் அமர்ந்தனர். நிச்சயதார்த்தம் துவங்கியது. 

நவீனுக்கு டிரஸ் கோவிலில் பெண்வீட்டாரால் கொடுக்கப்பட்டது.(என்னதான் நவீன் டில்லியிலிருந்து தானே எடுத்து வந்திருந்தாலும் அதற்கான பணத்தை பர்வதமும் ஈஸ்வரனும் வாங்கிக்கொண்டமையால் அது ராமானுஜமும் அம்புஜமும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்தததாக தான் நாமும் கருதுவோம். அதுதான் நியாயமும்.) அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் பட்டுப்புடவை மணப்பெண்ணிற்கு நிச்சயதார்த்தத்தன்று ஆசிர்வாதம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் சம்பிரதாயம். இங்கு என்ன நடக்கிறது என்பதைப்பார்ப்போம் வாருங்கள். 

நிச்சயதார்த்தப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அனைவராலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தப்புடவையை மாற்றிக்கொண்டு வருமாறு மிருதுளாவிடம் வாத்தியார் கூற அவள் புடவை எங்கே கட்டிக்கொண்டு வருவதற்கு என்று முழிக்க உடனே பர்வதம் …

சாயந்தரம் கொடுத்தேனே அதுதான் போய் கட்டிண்டு வாஎன்று சபையில் தில்லாக சொல்ல அதிர்ந்துப் போனாள் மிருதுளா. 

அம்புஜமும், பங்கஜமும், கோமளமும், மேகலாவும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு ரூமிர்க்குள் புடவை மாற்ற செல்ல முயன்ற போது…. சில சம்பிரதாயங்களை செய்வதற்காக வாத்தியார் அம்புஜத்தை மேடையிலேயே இருக்கும்படியும் சொல்ல மற்றவர்கள் மிருதுளாவுடன் சென்றனர். 

ரூமுக்குள் சென்றதும் பங்கஜம் மிருதுளாவைப் பார்த்து…

சரி மிருது உங்க மாமியார் குடுத்தப்புடவையை எடு சீக்கிரம் மாத்திக்கட்டனும். இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தியார் கூப்பிட ஆரம்பிச்சுடுவார்அதற்கு கோமளம்

எங்கேருந்து வரும் புடவை. திருட்டுத்தனமா வந்து குடுத்தப்புடவையை திருப்பி வாங்கிண்டு போனப்பவே எனக்கு  அந்த மாமி மேலே சந்தேகம் வந்தது.

என்ன சொல்றே கோமளம். எங்களுக்கு ஒன்னுமே புரியலைஎன்றாள் பங்கஜம். மிருதுளா அன்று மாலை ஜானவாசத்திற்கு முன் நடந்தவற்றை எல்லாம் கூறிமுடிக்க….பங்கஜம்…

அடகடவுளே. ஏன் அந்த மாமி அப்படி பண்ணினா?” உடனே மேகலா

இத நாம சொன்ன அந்த மாமி உடனே தான் அம்பிகாட்ட குடுத்தனுப்பிச்சத மட்டும்  சொல்லுவா திருப்பி வாங்கிண்டு போனது கோமளத்திற்கும் மிருதுளாவிற்கும் மட்டும் தான் தெரியும் ஸோ அத ஒத்துக்கமாட்டா”  கோமளம் குறுக்கிட்டு

அதனால அந்த மாமிக்கு என்ன லாபம்?”

வேறென்ன சண்ட வரனும்முனு தான் பண்ணிருக்கானு நேக்கு படரதுஎன்றாள் மேகலா.

கோமளம் ….இப்போ என்ன பண்ணறது பாவம் நம்ம மிருது முழிச்சிண்டு நின்னுண்டிருக்கா

ரூமுக்கு வெளியிலிருந்து வேனு கதவைத்தட்டிக்கொண்டே வாத்தியார் மேடைக்கு அழைப்பதாக கூப்பிட்டான். 

இதோ வந்துட்டோம்என்றாள் கோமளம்.

சரி மிருது உன்ட்ட வேற புடவை இருக்குமில்லையா அதில் ஒன்றை எடு மாத்திண்டு போவோம்என்றாள் கோமளம் அதற்கு கோபத்துடன் பங்கஜம்…

எடுத்துக்குடுக்காதது அவா தப்பு மிருது இப்ப அவளோட புடவையையே மாத்திக்கட்டிண்டு போனா அவா எடுத்துக்குடுத்ததா ஆகிடுமே” 

ஐயோ சித்தி வேனு வேற கூப்பிட்டுண்டே இருக்கான் இப்போ என்ன தான் பண்ண.. சீக்கிரம் சொல்லு பங்கு சித்தி

பங்கஜம் மிருதுளாவின் ஒட்டியானத்தை மட்டும் கழட்டிவிட்டுட்டு 

இப்போ இப்படியே இதே புடவையிலேயே மேடைக்கு போவோம் வா. அவா எடுத்துதரலைங்கறது எல்லாருக்கும் தெரியட்டும்என்று ரூமின் கதவைத்திறந்து மிருதுளாவை மேடைக்கு கூட்டிச்சென்றாள். கோமளமும், மேகலாவும் ரூமைப்பூட்டிவிட்டு பின்னாலே சென்றனர். மேடை ஏறும்போது பர்வதம் சும்மா இல்லாமல் ..

அதே புடவைல வந்திருக்க என்று மிருதுளாவிடம் எல்லார் முன்னாடியும் கேட்க” 

பிரச்சனை பண்ணுவதற்காகவே கேட்கிறாள் பர்வதம் என்பதை அறிந்துக்கொண்ட பங்கஜம் டைமில்ல மாமி அதுதான் என்று சம்மாளிக்க…

எடுத்துக்குடுத்ததை கட்டிக்காம வந்திருக்கா பாருஎன்று பர்வதம் வேண்டுமென்றே எல்லோர் காதிலும் படும்படி முனுமுனுத்தாள். அதை கேட்ட அம்புஜம் சும்மா இல்லாமல் பங்கஜத்திடம்….

ஏன்டி பங்கு ஏன் மாமி தந்த புடவையை மிருதுளாவுக்கு மாத்தாமா அழைச்சுண்டு வந்திருக்கேள்என கேட்க உடனே பங்கஜம் 

அம்பு செத்த சும்மா இருக்கயா. இதுக்குப்பின்னாடி பர்வதத்தோட பெரிய சூழ்ச்சியே இருக்கு. இப்போ எதுவும் விளக்க முடியாது ஸோ பேசாம இரு.என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நிலைமையை சுதாரித்துக்கொண்டு சட்டென்று பேச்சை மாற்றி நிச்சயதார்தத்தை எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் நடத்தி முடித்தனர். பின் ரிசப்ஷென் தொடங்கியது. எல்லோருமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் கோமளம் அம்புஜத்திடம் அன்று மாலை நடந்த பர்வதலீலையை கூறிமுடித்ததும் அம்புஜம் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வர அவளை ரூமுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கு அம்புஜத்தைப்பார்த்து

என்னத்துக்கு அழுத. அதுதான் பங்கஜம் சம்மாளிச்சிட்டாளோனோ. உனக்கு தெரியனமேனுட்டு தான் சொன்னேன்

அதுக்கில்லடி கோமளம் இப்பவே இந்த மாமி இப்படி எல்லாம் பண்ணறாளே. இவ மிருதுவ படுத்துவாளோடி. அத நெனச்சுத்தான் அழுதேன்

மாமி அம்புஜம் மாமிஎன்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் வாத்தியார். 

உடனே கண்களை வேகமாக துடைத்துக்கொண்டாள் அம்புஜம்.

காலை செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவரித்துவிட்டு சென்றார். அனைவரும் இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்து சாப்பிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று படுத்தார்கள். வழக்கம் போல ஒரு பெரிய கூட்டம் வட்டமாக அமர்ந்து சீட்டு கச்சேரியில் ஆழ்ந்தது. 

அனைவரும் உறங்கினாலும் அம்புஜத்திற்கு கவலை விட்டப்பாடாக இல்லை…கண்களை இறுக்க மூடினாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்து அவளுக்கே தெரியாமல் கண் அசந்தாள்.

இருபத்தி ஏழாம் தேதி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வந்திருந்து பார்த்த வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

தொடரும்…..

பரிமளமும் பங்கஜமும் சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு பதினோரு மணி வாக்கில் டெலிபோன் மணி அடித்தது. மிருதுளா அம்புஜத்தைப் பார்தாள் …

அம்மா சித்திகள் சொன்னா மாதிரி அவா தானோ ?” என்றாள் மிருதுளா.

ஃபோனை எடுத்தா தானே தெரியும் மிருது. அட்டென்ட் பண்ணேன் அம்மா இந்த உளுந்த கிரைண்டரலேருந்து வழிச்சுட்டு வந்துடறேன். போ மா

மிருதுளா நினைத்தது சரிதான். அங்கிருந்து ஈஸ்வரன்ஹலோஎன்றதும் மிருதுளா…

ஹலோ அப்பா நான் மிருதுளா பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

நாங்க நல்லா இருக்கோம். சரி நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க? அத கேட்க தான் ஃபோன் பண்ணினேன்

என்று நவீன் ஏதும் சொல்லாதது போலவே விசாரித்தார் அதற்கு நம்ம மிருது…

ஆமாம் ..பா …யோசிச்சேன் ….நான் அவர் கூடவே கிளம்பிடலாம்னு இருக்கேன்

ஓ அப்படியா!! நான் ஏன் இன்ஸிஸ்ட் பண்ணினேனா …நவீனும் ஆடிட்டிங்க்கு படிச்சிண்டிருக்கான் அவனுக்கும் மே மாசம்  பரீட்சை வருதாம். ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. அதுவும் இல்லாம நீ அவன் கூட கிளம்பினாய் னா பின்ன ரெண்டு பேருமே பரீட்சையை சரியா எழுத மாட்டேங்களே. கஷ்ட்டப்பட்டு படிக்கறேங்களோனோ அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ நான் சொன்னதையும் மனசுல வச்சுண்டு ஒரு நல்ல முடிவா சொல்லு நான் அடுத்த வாரம் அகேய்ன் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கறேன். இப்போ ஃபோனை வச்சிடறேன்.

என்று கால்ஐ துண்டித்தார். திருமணத்திற்கு பின் மருமகள் தன் மகனுடன் செல்வது ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் நல்ல முடிவு இல்லை என்பது அவர் பேசிய விதத்திலே நமக்கு புரிகின்றது. ஆனால் மிருதுளாவும் அம்புஜமும் புரிந்துக்கொண்டார்களா? வாருங்கள் மேலும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

மிருதுளாவிற்கு அவள் சித்தி சொன்னதுப்போல ஏதோ சரி இல்லை என்பது புரிய ஆரம்பித்தது. அவள் நவீன் முந்தின நாள் பேசியதையும் சற்றுமுன் ஈஸ்வரன் பேசியதையும் மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தாள். 

நவீன் அவரது பரீட்சை பற்றி ஒன்றுமே கூறவில்லையே. ஏன்? எனது விருப்பத்தை தானே கேட்க ஃபோனில் அழைத்ததாக சொன்னார். அவர் அப்பா முதலில் எனது பரீட்சையை காரணமாக சொன்னார் ஆனால் இப்போது

நவீனின் பரீட்சையை காரணமாக சொல்றார்!!!! எதுக்கும் அவரிடமே கேட்டுத்தெரிந்துக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம்…அதுதான் சரி

என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் நவீனுக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

ஹாய் மிருதுளா எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!! ” 

உங்களுக்கும் மே மன்த் எக்ஸாம் இருக்கா?”

ஆமாம் ஏன் கேக்கறே?”

அதனாலதான் என்னை இங்கேயே விட்டுட்டு போகனும்னு யோசிக்கறேங்களா?”

என்ன சொல்லுற!!! எனக்கு எக்ஸாம்னா உன்னை ஏன் அங்க விட்டுட்டு வருவேன். உனக்கு எக்ஸாம் எழுதனுமேனு தான் சொன்னேன்

ஓ சரி சரி அப்போ என்ன கூட்டிண்டு போறது கன்ஃபார்ம் தானே?”

ஆமாம் இட்ஸ் கன்ஃபார்ம். சரி எனக்கு லஞ் டைம் ஆச்சு. ஐ ஹாவ் டு கெட் பேக் டு வர்க். பை மிருது. வில் கால் யூ டுமாரோ.

ஓகே பை. ஹாவ் அ நைஸ் டே

என்று பேசி முடித்தாள். 

இன்னார் சொன்னதினால் கேட்கிறேன், ஏன் அப்படி சொன்னீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டு பேசினால் பிரச்சனை தீரும்.  இவர்களுக்குள் முன் பின் அவ்வளவாக அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை. இருவருமே மனம் விட்டு பேசவுமில்லை. மனதிற்குள் அச்சம், வெட்கம், ஃபோனில் தான் பேச முடியும் திருமணத்திற்கு முன் நேரில் பேச வாய்ப்பேயில்லை, அதனால் ஏதாவது சொன்னால் அதை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருந்ததனால் இருவரையும் சரிவர பேச அனுமதிக்கவில்லை. 

இந்த இரண்டு மாதத்திற்குள் அவர்களுக்குள்  இவ்வளவு குழப்பத்தை உருவாக்கும் ஈஸ்வரனும் பர்வதமும் அவர்களை நாலு மாதம் பிரித்துவைக்க பார்ப்பது நல்லது செய்யத்தான் என்று நம்பமுடிகிறதா வாசகர்களே?

அன்று மாலை ராமானுஜத்துடன் அவரது அலுவலகத்தில் வேறு டிப்பார்ட்மென்டில் பணிப்புரியும் ஜெயேந்திரன் என்பவர் ராமானுஜம் வீட்டிற்கு

வந்தார். ராமானுஜம் அவசரமாக இரவு நேர ஷிஃப்ட்டுக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தார். ஜெயேந்திரன் வருவதைப்பார்த்து ….

வாங்கோ வாங்கோ ஜெயேந்திரன்

எங்கயோ கிளம்பறேள் போல தெரியறது. தப்பான நேரத்துல வந்துட்டேனோ?”

கடமை அழைக்கறது வேறு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட் ஷிஃப்ட் அதுவும் இல்லாம கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும் அதுதான். சொல்லுங்கோ

யாருன்னா என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள்…

நமஸ்காரம் மாமி. நான் ஜெயேந்திரன்

ஓ தெரியுமே. எப்படி இருக்கேங்கள்? ஆத்துல மாமி அப்பறம் உங்க பொன்னுகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

எல்லாரும் நல்லா இருக்கா. நான் இப்போ வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச

என்னது சொல்லுங்கோஎன்றாள் 

அம்புஜம்.

ராமானுஜம் வந்தவரிடம் என்ன ஏதுனு கேட்காமல் தனது பணியைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தார். அலுவலக வேலை என்று வந்தால் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காத இப்படியும் ஒரு மனிதர் மிருதுளாவைப்பெற்றவர். 

மாமாக்கு நாழி ஆகறதோ?”

உடனே அம்புஜம் 

இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ. அவர் அப்படித்தான் பத்து மணிக்கு ஒரு எடத்துக்கு போகனும்னா எட்டு மணிலேருந்தே பரக்கம் பாய்வார். அது அவருடை சுபாவம். நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னேளே அது என்னனு சொல்லுங்கோ

இல்ல உங்க பொன்னுக்கு பார்த்திருக்கேளே ஒரு குடும்பம்.

ஆமாம் ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஃபேமிலி. அவாளுக்கு என்ன

ஆமாம் அவாளே தான்.  அவாள பத்தி விசாரிச்சேளோ?”

ஏன் இப்போ வந்து இப்படி கேக்கறேங்கள்?”

அவா இப்ப இருக்கிற வீட்டுக்கு முன்னாடி எங்க ஆத்துப்பக்கத்தில தான் வாடகைக்கு குடி இருந்தா. அந்த மாமா மொடாக்குடிகாரர்

அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே

இப்போ கொஞ்ச வருஷமா எல்லாத்தையும் விட்டுருக்கார். அந்த பர்வதம் மாமி இருக்காளே அவ எமகாதகியாக்கும். அவ இருக்கற ஆத்துக்கு உங்க பொன்னை கொடுக்க போறேங்கள்னு இன்னைக்கு காலைல தான் கேள்விப்பட்டேன் அதுதான் என் ஷிஃப்ட் முடிஞ்சதும் நேரா இங்க வந்தேன். எனக்கும் மூனு பொன்கள் இருகாளோனோ அதுதான் மனசு கேட்கலை ஓடி வந்துட்டேன் உங்களாண்ட சொல்ல. இந்த சம்மந்தம் வேண்டாமே அந்த மாமி உங்க பொன்ன நிம்மதியா வாழ விடமாட்டா.

அம்புஜத்திற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 

அந்த மாமாவும் மாமியும் துளி கூட பொறுப்பில்லாதவா. சுயநலவாதிகள்

அவா புள்ள நவீன் எப்படி? மாமாஎன்று கேட்டாள் அம்புஜம்

தங்கமான புள்ள மாமி. புள்ள நல்ல புள்ள தான் அவனை ஒரு குற்றமும்  சொல்ல முடியாது.

அப்பாடா பின்ன என்ன மாமா. புள்ள கூடதான் வாழ்க்கை பூரா இருக்கப்போறா அவர் நல்லவரா இருந்தா போராதா. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தேங்கள்னா ஏதாவது யோசிச்சிருக்கலாம். ஆனா இத இப்போ வந்து சொல்லறேளே. நிச்சயமாயாச்சு. புடவை, தாலி, மண்டபம் எல்லாம் ஆயாச்சே” 

ஆனா உங்க பொன்னு அந்த குடும்பத்துக்குள்ள போனுமோல்யோ. அவா கூடவும் தானே வாழ்ந்தாகனும்.  எனக்கு இன்னைக்கு தானே தெரிய வந்துது மாமி.  அதுதான் உடனே ஓடி வந்தேன். அதனால என்ன இன்னும்  கல்யாணமாகலையே. அவா எப்படிப்பட்டவா னா…..

உடனே ராமானுஜம் குறிக்கிட்டு ஏதோ சொல்ல வருபவரை தடுத்து தனக்கு வேலைக்கு நேரமாச்சு என்றும் …கூட வருகிறாயா என்று கேட்டதும் ஜெயேந்திரன் வேறு வழியில்லாமல் அவருடன் புறப்பட்டுச் சென்றார். எத்தனை பொறுப்பான தந்தை என்பது புரிகிறதா. அவரைப் பொறுத்தவரை சம்பாத்தியம் தான் முக்கியம். ஜெயேந்திரனை சொல்லவிடாமல் தடுத்து அவருடன் கூட்டிச்சென்றதனால் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. தங்களது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாரோ ஒருவர் அக்கரையுடன் சொல்ல வந்தவரையும் முழுவதுமாக சொல்லவும் விடாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்ட ராமனுஜம் மேல் நமக்கே கோபம் வரும்போது பெற்றவள் அம்புஜத்துக்கு வராதா என்ன மக்களே. அவளுக்கு அடிவயிறு கலங்கியது. ஏதோ பூமி சுற்றுவது நின்றது போல் இருந்தது. உடனே ஓடினாள் பூஜை அறைக்கு. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அம்பாளுக்கு சூடியிருந்த பூக்களில் இருந்து மல்லிகையையும் கனகாம்பரத்தையும் எடுத்து இரு பேப்பரில் பொதிந்து மனதில் 

ஆண்டவா இந்த நேரத்தில் எங்களுக்கு இப்படி ஒரு மனக்குழப்பமா. பொறுப்பில்லாத புருஷனை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தையை நீயும் தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்!! எங்களுக்கு விவரங்களை விசாரித்துச்சொல்ல யாரும் இல்லை நீயா சொல்ல அனுப்பியவரையும் எங்காத்துக்காரர் சொல்ல விடாமல் செய்துட்டார். அதுவும் உன் திருவிளையாடலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன் தாயே. ஆனாலும் தாயல்லவா என் மனதிலிருக்கும் அச்சம் நீங்க … இதோ இந்த பூக்களில் கனகாம்பரம் வந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் தொடரட்டும் நல்லபடியாக உன் மகள் என் பெண் மிருது வாழ்வாள் என்றும் மல்லிகைப்பூ வந்தால் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்றும் உன் உத்திரவாக ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பேன் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீயே துணை அம்மா

என்று மனதார வேண்டிக்கொண்டு குலுக்கிப் போட்டு வேனுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்கச்சொன்னாள். வேனுவும் எடுத்துக்கொடுத்துவிட்டு….

இது என்ன மா? என்ன பண்ணறாய்என்று வினவ

எடுத்துக்கொடுத்ததுக்கு தாங்கஸ் டா கண்ணா. நீ போய் உன் வேலையைப்பார்” 

என்று சொல்லி அவன் சென்றபின் கண்களில் கண்ணீர் பெருக மனதில் அம்மனை நினைத்துக்கொண்டு திறந்துப்பார்த்தாள். அவளது கண்ணீரை ஆனந்த கண்ணீராக கனகாம்பரத்தைக்கொடுத்து மாற்றினாள் அந்த சமயபுரத்தாள். அதன் பின் மனதில் எந்த அச்சமுமின்றி கல்யாண வேலைகளில் இறங்கினாள் அம்புஜம். 

மறுநாள் விடிந்ததும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேராக பக்கத்திலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று இருவரும் அந்த அகிலாண்டேஸ்வரியை, ஆயிரம்கண்ணுடையாளை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டு அம்பாள் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பின் பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் அம்புஜம் 

ஹலோ மாமி நான் அம்புஜம் பேசரேன்

ம்..ம்… சொல்லுங்கோ என்ன விஷயம்?”

என்று விருப்பமில்லாதவள் போலவே கேட்டாள் பர்வதம்.

இன்னைக்கு சாயந்திரம் ரிசப்ஷன் புடவை மற்றும் எங்க சொந்தகாராளுக்கெல்லாம் டிரஸ் எடுக்க போரோம் அப்படியே பின் தாலி முடியற நாத்தனாருக்கும் பட்டுப்புடவை எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு இரண்டாயிரத்துல எடுக்கலாமா என்ன ஏதுனு கேட்க தான் கூப்பிட்டேன் மாமி

இதை கேட்டதும் பர்வதம் 

என்னத்துக்கு அவ்வளவு காஸ்ட்லியான புடவை அவ என்ன உங்க பொன்னோட சொந்த நாத்தனாரா? இல்லையே …அதனால ஒரு ஐநூறு ரூபாய்க்கு எடுத்தா போரும். அந்த பணத்தை சம்மந்தி சீர்க்கு சேத்துப்போட்டு எடுங்கோ என்ன கரெக்டா?”

இதை கேட்ட அம்புஜத்திற்கு ச்சே என்ன இப்படி இருக்கானு தோன்றியது.

சரி மாமி அப்படியே செய்துடறோம். பை

என்று ஃபோனை வைத்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார்கள். பர்வதம் அப்படி சொன்னாலும் அம்புஜம் நல்ல புடவையாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு எடுத்தாள். மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் நகையும் வாங்கிக்கொண்டு அனைத்து பர்சேஸிங்கும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபின் ராமானுஜம் கணக்குப் போட்டுப்பார்த்தார் பின் அவர் அனைவரையும் அழைத்து…..

நகை கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுத்து…இப்பவே இவ்வளவையும் போட்டா எப்படி இனி நிறைய சீர் செய்யனுமே என்று கூற

உடனே மிருதுளா 

எவ்வளவு அதிகமாகறது

ஆறு பவுன்

சரி அப்பா அப்போ இந்த வளையலை திருப்பிக்கொடுத்திடலாம். அது கரெக்டா ஆறு பவுன் இருக்கு

ஏய் மிருது நீ அது ஆசைப்பட்டு எடுத்ததுடி அதை ஏன் திருப்பிக்கொடுக்கனும்

வேனு….

இதெல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் பணம். பேசாம இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அதை அப்படியே அக்கா பேருல ஒரு ஃப்டி ல போட்டா அவளுக்காவது பின்னாடி யூஸ் ஆகும்.

டேய் போடா நடக்கறகார்யத்த பேசுவோமாஎன்றாள் அம்புஜம்

விடு மா எனக்கு அந்த வளையல் வேண்டாம் இதுவே போரும்

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ளது நவீன் வருவதற்கு ஏழே நாட்கள் உள்ள நிலையில் ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் இன்னும் உருத்திக்கொண்டிருந்த விஷயம் தெளிவாகாததால் பிப்ரவரி பத்தாம் தேதி ஃபோன் செய்தனர்…மிருதுளா அட்டென்ட் செய்தாள்…

ஹலோ நான் மிருது பேசறேன்.

ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன். என்ன முடிவெடுத்திருக்காய் நவீனுடன் ஊருக்கு போவதைப்பற்றி?”

என்று பழைய பல்லவியை பாடினார். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் செல்லப்போவதாக கூறியதும் ஆத்திரத்தில் ஈஸ்வரன்….

என்ன இது கிளி மாதிரி சொன்னதையே சொல்லிண்டிருக்க. பெரியவா சொல்லறதை கேட்டு நடக்க உன் அம்மா சொல்லி‌க்குடுக்கலையா. எத்தனை வாட்டி நான் சொன்னேன் போக வேண்டாம் னு மறுபடியும் மறுபடியும் நீ போவேனு அல்ச்சாட்டியம் பண்ணராய். அதுவும் நவீன்ட்டயே சொல்லிருக்காய்  என்ன திமிரு உனக்கு. நாங்க யாரு அப்போ. ஏன் எங்க பேச்செல்லாம் கேட்கமாட்டியோ. ஆனாலும் ஒரு பொன்னுக்கு  இவ்வளவு அழுத்தம் கூடாது.

என்று குரலை ஒசத்தி மிரட்டுவது போல பேச மிருதுளா பயந்து போய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடின. அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது ஏண்டி அழறாய் என்ன ஆச்சுமா? யாருமா ஃபோன்ல…ஏய் ஃபோனை என்கிட்ட தா

என்று வாங்கி ஹலோ என்றதும் ஈஸ்வரன் வழக்கம் போல் காலைத்துண்டித்தார். பின் மிருதுவிடம் விவரங்கள் கேட்டதும் அம்புஜமும் கலங்கினாள் ஆனால் அதைக்காட்டிக்கொள்ளாமல் இதுக்கெல்லாம் அழறதா என்ன மா நீ. அவா போகக்கூடாதுனு சொன்னா நீ உன் புருஷனோடு தானே போவேனு சொன்ன இதுல எந்த தப்பும் இல்லை. என்னத்துக்கு பின்ன இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணறோம். நீ நல்லா இருப்பமா… கண்ண தொடச்சுண்டு போய் நாளைக்கு சுமங்கலி பிராத்தனைக்கு வாங்கிண்டு வந்ததை எல்லாம் அடுக்குவோம் வா என்று மிருதுளாவை தேத்தினாள் அம்புஜம். அவள் மனதில் அந்த அம்மனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தான் இதை கூறினாள்.

இவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண் வீட்டார் திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுப்பெண்ணை சாமியான சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து மறுவீடு அனுப்புவதும் அதேபோல மாப்பிள்ளைவீட்டில் திருமணத்திற்கு பின் சுமங்கலி பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை சாமியான அவர்கள் வீட்டு சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்பதும்  தான் வழக்கம். அதே போல மிருதுளா வீட்டில் சிறப்பாக சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை பர்வதம் ஃபோன் செய்தாள். 

ஹலோ நான் பர்வதம் பேசரேன்

மிருதுளா தான் ஃபோனை எடுத்தாள் குரலைக்கேட்டதும் உடனே ஃபோனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்..

மாமி சொல்லுங்கோ நான் அம்புஜம் தான் பேசரேன்

சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஆச்சா

எல்லாம் நல்லப்படியா நடந்தது மாமி. எங்காத்து சுமங்கலிகளின் ஆசிர்வாதங்களோட எங்க மிருது உங்க ஆத்துக்கு வர தயார் ஆகிட்டா. மாப்ள ஊர்ல இருந்து வந்தாச்சா?”

நேத்து நைட் வந்தான். நாளைக்கு எங்காத்த சுமங்கலிப் பிரார்த்தனை அதுக்கும் மறுநாள் சமாராதனை அதனால நீங்க மிருதுளாவ அழைச்சுண்டு சமாராதனைக்கு வந்திடுங்கோ அத சொல்லத்தான் கூப்பிட்டேன்

ஆனா மாமி“… என்று அம்புஜம் ஏதோ கூற வருவதற்குள் 

சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வச்சுடரேன் நாள மறுநாள் வந்திடுங்கோ. பை

என்று ஃபோனை வைத்தாள்.

சமாராதனை நாளன்று அம்புஜமும் மிருதுளாவும் டூ வீலரில் நவீன் வீட்டுக்கு சென்றனர். நவீனும் பர்வதமும் வாங்கோ என்று வரவேர்த்தனர் அவர்கள் வீட்டில் பர்வதம், ஈஸ்வரன்நவீன்ப்ரவீன், பவின் மற்றும் பர்வதத்தின் அக்கா ரமணி அவர் மகன் ராஜூ ஆகியோர் இருந்தனர். 

உள்ளே சென்றதும் பர்வதம் ரொம்ப அக்கரை உள்ளவள் போல நவீன் ஏதோ மிருதுட்ட பேசனும்னு சொன்னயே போ மாடில போய் பேசிட்டு வா என்று சொல்லி வைத்தது போல இருந்தது அவர்களின் பரிமாற்றம். உடனே நவீன் மிருதுளாவை அழைத்துக்கொண்டு புதிதாக அவர்களுக்கென்று கட்டியிருந்த

அறைக்கு மாடியில் சென்றான். அம்புஜம் மிருதுளா வையே பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது பர்வதம்…

மாமி நீங்களும் மாமாவும் சேர்ந்து போய் இவர் அண்ணா ராசாமணிக்கும், என் அக்கா ரமணிக்கும், தம்பி பிச்சுமணிக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சு அழைச்சுடுங்கோ. அப்பறம் அவாளுக்குள்ள பேச ஏதாவது இருக்குமோள்யோ அதுதான் அனுப்பி வைத்தேன் பாவம் ரெண்டும் தயங்கறதுகள். பேசிட்டு தான் வரட்டுமே. நீங்க சொல்லுங்கோ மாமி நாங்க உங்க பொன்ன நவீன் கூட எக்ஸாம் எழுதிட்டு போனாபோரும்னு தானே சொன்னோம் ஏனா நாமளும் அந்த வயச கடந்து வந்தவா தானே நமக்கு தெரியாதா எப்படி ரெண்டு பேரும் படிப்பானுட்டு

என்று கூறி ஒரு சிரிப்பு வேற இதைக்கேட்டதும் அம்புஜத்திற்குஐயோ மறுபடியும் மொதல இருந்தாஎன்னும் வடிவேலு டயலாக் மனதிற்குள் ஒலித்தது.

அதே நேரம் மாடி ரூமில் நவீன் மிருதுளாவிடம். 

நீ எக்ஸாம் எழுதிட்டு தான் வரமுடியுமாமே.

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே உங்க கூட தான் வருவேனு அப்பறம் ஏன் மறுபடியும் மறுபடியும கேக்கறேங்கள். ஏன் வீடு பார்க்கலையா?”

வீடெல்லாம் பார்த்தாச்சு டிக்கெட் இன்னும் போடலை அதுக்கு முன்னாடி உன்னிடம் கேட்டுடலாம்னு தான்

ஓ அப்போ என்ன கூட்டிண்டு போற ஐடியாவே இல்லையா அதுதான் டிக்கெட் கூட புக் பண்ணலையா?”

அது பண்ண எவ்வளவு நேரமாக போறது. ஸோ யூ ஆர் கம்மிங் வித் மீ ரைட்டா

ஓ மை காட் நான் எத்தனை தடவ சொல்லறது. எஸ் எஸ் எஸ் போதுமா

ஏய் ஓகே ஓகே இதோ இது தான் நான் ரிசப்ஷனுக்கு எடுத்திருக்கும் கோட் சூட். நல்லாருக்கா

சூப்பரா இருக்கு அன்ட் என்னோட சாரியும் ஏகதேசம் இதே கலர் தான் வாட் எ கோயின்ஸிடன்ஸ்

கொடுத்த டைம் முடிந்துவிட்டது போல கரெக்டா பவினை அனுப்பி அவர்களை கீழே வரச்சொன்னாள் பர்வதம். அவர்களும் வந்தனர். பின் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். 

இரு வீட்டாரும் மும்மரமாக பத்திரிகைகளை அனைவருக்கும் டிஸ்ட்ரிப்யூட் செய்யத்தார்கள். வெளியூர்காரர்களுக்கு முன்னதாகவே போஸ்ட்டில் அனுப்பிவைத்துவிட்டனர். பர்வதம் சொன்னது போலவே ராமனுஜமும் அம்புஜமும் ரமணி, பிச்சுமணி வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு ராசாமணி வீட்டிற்கு சென்றனர். அங்கே ஈஸ்வரனின் அக்கா சொர்னம் அம்புஜத்திடம் 

என்ன உங்க பொன்னுக்கு நிறைய நகையும், வெள்ளியும், பாத்திங்களும் எல்லாம் செய்யறேளாமே ஈஸ்வரன் சொன்னான்

ஏதோ அந்த கடவுள் ஆசிர்வாதத்தால எங்களால செய்ய முடிஞ்சதை செய்யறோம் மாமி

அதெல்லாம் சரிதாம்மா ஆனா எல்லாத்தையும் ஒன்னா கல்யாணத்துக்கே செய்து காட்டினேங்கள்னா அவ்வளவுதான் அந்த பர்வதம் பெரிய பேராசைப்பிடிச்சவள் எப்போவும் அதையே எதிர்ப்பார்ப்பள் சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்கோ

அப்போதும் தனது சம்மந்தியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அம்புஜம்

மாமி எங்களுக்கு இருக்கறது ஒரு பொன்னு அவளுக்கு செய்யாம வேற யாருக்கு. அதெல்லாம் நல்ல படியா செய்ய அந்த அம்பாள் துணையிருப்பா

அப்பறம் உங்க விருப்பம். உங்களப் பார்த்தா நல்ல மனுஷாளா தெரியறது …அந்த பர்வததத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கோ. ஏதோ  சொல்லனும்னு தோனித்து சொல்லிட்டேன். ஆனா அவ தான் அப்படி நவீன் தங்கமானவன். உங்க பொன்ன பத்திரமா இருக்கச் சொல்லுங்கோ

சரி மாமி நாங்க போயிட்டு வரோம்

என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றனர் ராமானுஜமும் அம்புஜமும். பஸ்ஸில் வீட்டிற்கு வரும்பொழுது மனதிற்குள் யோசித்துக்கொண்டே வந்தாள் அம்புஜம்..

ஏன் எல்லாரும் அந்த பர்வதத்தை கண்டு பயப்படரா? சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் அவள்ட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்றாலே ஏன்? இதை மிருதுட்ட சொன்னா பாவம் அது பயந்துடும். சொல்ல வேண்டாம். அம்மா நீ உன் மகளுக்கு கொடுத்த வாழ்க்கை அவளை எல்லா இக்கட்டுகளிலும் நீதான் காப்பாத்தனும் தாயேஎன்று வேண்டிக்கொண்டாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன் அதாவது இருபத்தி ஆறாம் தேதி மாலை மிருதுளா குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். 

இருபத்தி ஏழாம் தேதி காலை முதல் கல்யாண சம்பிரதாயங்கள் நடக்கவிருப்பதால் அவற்றையும் மேலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் நேராக மண்டபத்திற்கு வந்து தெரிந்துக்கொள்ளும்படி பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வரும் செவ்வாய் அன்று கல்யாண மண்டபத்தில் சந்திப்போம்.

தொடரும்….

நிச்சயதார்த்தம் முடிந்து நண்பர்களையும் சொந்தங்களையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு ராமானுஜம் குடும்பத்தினர் வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணியானது. அனைவரும் அசதியாக இருந்தார்கள். அம்புஜம் கவலையாகவும் இருந்தாள். இதை கவனித்த வேனு 

என்ன மா சந்தோஷப்படாமல் கவலையா இருக்க?”

அது ஒன்னுமில்லடா கொஞ்சம் அசதி இனி இருக்கற வேலைகள் எல்லாம் நினைச்சா மலப்பா இருக்குடா. அதத்தான் யோசிண்டு வரேன்

அனைவரும் உறங்கினார்கள். அம்புஜம் நன்றாக தூங்கும் மிருதுளாவையே சற்று நேரம் பார்த்து …

கள்ளம் கபடமில்லாத வெகுளியான என் பொன்னை நீ தாம்மா  காப்பாத்தனும் தாயே” 

என்று வேண்டிக்கொண்டு பின் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் விடிந்தது. கல்யாண தேதி குறிப்பதற்கு நல்ல நாள் பார்க்கப்பட்டது. ஐப்பசி மாதத்தின் இரண்டாம்  வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருந்தார் ஜோதிடர். 

இந்த கல்யாண ஏற்பாடுகள் நடப்பது மொபைல் ஃபோன்கள் இல்லாத காலக்கட்டமாகும். சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள். அப்பொழுது வீட்டில் லாண்ட் லைன் ஃபோன் வைத்திருப்பதே ஆடம்பரமாக கருதப்பட்ட காலம்.

நவீன் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் பவின் மற்றும்  ஈஸ்வரன் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர். ரெயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நவீனின் மனது அவள் வருவாளா என்று ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் அழகான சுடிதார் அணிந்து மிருதுளா தனது பெற்றோர்களுடன்  நடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அருகே வந்ததும்

 “வாங்கோ வாங்கோஎன்று நவீனும் ஈஸ்வரனும் சொன்னார்கள்.

பின் அனைவருமாக உரையாடினார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக பேச தயங்கினர். ரெயில் கிளம்ப ஐந்தே நிமிடங்கள் இருந்தது. ரெயிலில் நவீன் ஏறியப்பின் தனது இருக்கையில் அமர்ந்தான். ரெயில் கிளம்ப தயாரானதை சப்தம் எழுப்பி அறிவித்தது. நவீன் தனது கைகளை அசைத்து பை பை மிருது என்று முதல்முறை அவளிடம் சொன்னான். மிருதுளாவும் பை என்றாள். இதுதான் அவர்கள் நிச்சயதார்த்திற்கு பின் பேசியவை. ரெயில் புறப்பட்டு சென்றதும் ஈஸ்வரன், பவின், ராமானுஜம், அம்புஜம் மற்றும் மிருதுளா அவரவர் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.

ஐப்பசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்தது ராமானுஜமும் அம்புஜமும் ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர். மாப்பிள்ளைப் பெண்ணின் ஜாதகப்படி மாசி மாதம் திருமணத்திற்கு உகந்தது என்று அந்த மாதத்தில் மூன்று தேதிகளைக் குறித்துக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு பர்வதம் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்டு சொல்ல சொன்னார்கள். 

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….பின் பர்வதம் …

கல்யாணமானதும் நவீன் பத்து நாளில் குஜராத் போயிடுவான். கல்யாணம் முடிந்ததுக்கப்பறம் தான் ஃபேமிலி குவார்ட்ஸ் தருவா. அவன் போய் தான் வீடு பார்க்கனும் அதனால மிருதுளா இங்க தான் இருக்கனும் ஒரு ரெண்டு மாசத்தில வீடு அலாட் ஆகிடும் அப்பறம் லீவு போட்டு வந்து அழைச்சிண்டு போவான். ஸோ நாளு மாசம் இங்கயே இருக்கட்டும் என்ன சொல்லறேங்கள்?”

இப்பொழுது ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அம்புஜம்…

என்ன மாமி கல்யாணம் ஆன உடனே நாளு மாசம் மிருதுளா மாப்பிள்ளையை பிரிஞ்சு இருக்கனுமான்னு யோசனையா இருக்கு!

ஏன் நாங்களெல்லாம் இல்லை என்ன?”

அதுவும் சரிதான் ஆனாலும்……. மிருதுவோட எக்ஸாம் வேற மே மாசம் வரது. அதுதான் அவ எப்படியும் போயிட்டு ரெண்டு மாசத்தில திரும்பி வரத்தான் வேணும்….

உடனே ஈஸ்வரன் குறுக்கிட்டு…

என்னத்துக்கு அலஞ்சுண்டு கல்யாணம் முடிந்ததும் உங்க பொன்னு இங்கயே இருந்து எக்ஸாம் எல்லாம் முடிசிட்டு அப்பறம் ஜூன் ஆர் ஜூலைல போனா போரும். அதுக்குள்ள நவீனுக்கும் வீடு அலாட் ஆயிடும். இது தான் சரி அப்படியே இருக்கட்டும். நீங்களும் மிருது கிட்ட எடுத்து சொல்லிடுங்கோ

அம்புஜத்திற்கு தற்மசங்கடமான நிலையானது. மனதிற்குள் ஒரு நெருடல்…அவள் மறுப்பு தெரிவிக்க முயல்வதற்குள் ராமானுஜம் குறுக்கிட்டு..

சரி மாமா அப்படியே ஆகட்டும். நாங்க கிளம்பறோம். நாழி ஆயிடுத்து.

என்று கூறி விடைப்பெற்றனர்.

வீடு வந்ததும் அம்புஜம் ராமானுஜத்தைப்பார்த்து ….

ஏன் அவா சொன்னதுக்கு சரினு சொன்னேங்கள்? எனக்கென்னவோ இது சரியா படலை

ஆமாம் அவா ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டா மிருதுளாவ அனுப்பக்கூடாதுனு …அது அவா பேசர விதத்திலருந்தே நன்னா புரிஞ்சுது அதனால ஆர்க்யூ செய்து ஒரு யூஸும் இல்லை

நீங்க சொல்லறதும் சரிதான். நம்ம பொன்னுக்கு நல்ல வரன் தானே பார்த்திருக்கோம்? நாம ஏதும் விசாரிக்கலை…எல்லாம் பகவதி துணை

மிருதுளாவுடன் ஜோதிடர் குறித்துக் குடுத்த தேதிகளை டிஸ்கஸ் செய்து பிப்பிரவரி இருப்பத்தி எட்டாம் தேதியை தேர்ந்தெடுத்தனர். அதை நவீன் வீட்டாரிடமும் தெரிவித்தனர். அவர்களும் சம்மதித்தனர்.

அடுத்து கல்யாண மண்டபம் புக் செய்யும் வேலையில் இறங்கினர் மிருதுளாவின் பெற்றோர்.  அவர்கள் ஒரு மண்டபம் செலக்ட் செய்து அதை நவீன் வீட்டாரிடம் தெரிவித்தப்போது அவர்கள் அதில் திருப்தி இல்லாததுபோல….பர்வதம் …

நல்லாதான் இருக்கு ….எங்காத்து மனுஷா நிறைய பேர் வருவா அதனால இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா இருந்தா சௌகர்யமா இருக்கும்என்றிழுக்க ….

ஓகே மாமி இன்னொரு மண்டபம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணறோம்என்றார் ராமானுஜம்.

ராமானுஜம் அம்புஜம் தம்பதியினர் நவீன் பெற்றொரை அந்த ஊரிலேயே உள்ள இரண்டாவது பெரிய மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இதை ஓகே பண்ணலாமா என்று கேட்டனர். ஈஸ்வரன் சூப்பரா இருக்கு என்றார் ஆனால் பர்வதம்ரெண்டே ரெண்டு ஏசி ரூம் தானா”  என்று கூறவும்….ராமானுஜம் சட்டென்று…

மாமி இதுவே என் சக்திக்கு மீறினது இதுக்கு மேலே எங்களால முடியாது முடிவா என்ன சொல்லறேங்கள்?”

சரி சரி நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். பரவாயில்லை இதையே புக் பண்ணுங்கோ” 

 என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் பிடிக்கவில்லை. மண்டபத்தின் மேலாலரைப்பார்த்து முன்பணம் கட்டி பதிவு செய்தார்கள். சமையல், சீர் பட்சணங்கள், பூ, மாலை, நலங்கு என அனைத்தையும் மண்டபகாரர்களிடமே கான்ட்ராக்ட் போட்டார் ராமானுஜம். இல்லாவிட்டால்  ஒவ்வொன்றுக்கும் குற்றப்பத்திரிகையை பர்வதம் வாசித்து விடுவாரோ என்ற அச்சம் போல பாவம். மணடபத்தை விட்டு வெளியே வந்ததும் பர்வதம்…

எப்போ முகூர்த்த புடவை எடுக்க போறேங்கள். எங்களாண்ட ஒரு வார்த்தை சொன்னா நாங்களும் வருவோம். தாலி

 எங்க செய்ய சொல்லப்போறேள்?” அம்புஜம் பதிலளித்தாள்‌..

மாமி மண்டபம் பார்க்கவே உங்களைக்கூட்டிண்டு வந்திருக்கோம் பின்ன புடவை தாலி எடுக்கும் போது சொல்லாமல் இருப்போமா? தாலி எங்களுக்கு தெரிந்த ஆசாரியிடம் செய்ய சொல்லாம்னு இருக்கோம். ஒரு தாலி நீங்க தானே செய்யனும் அதையும் அவரே செய்து தருவார் ஒரு தாலிக்கு உண்டான பைசா மட்டும் நீங்க தந்தா போரும்.

இல்லை இல்லை அது சரிவராது எங்களுக்கு தெரிந்த நகைக்கடை ஒன்று இருக்கு அங்கத்தான் ஆர்டர் கொடுக்கனும்என்றாள் பர்வதம் அதற்கு அம்புஜம்..

சரி அதுவும் உங்கள் விருப்ப்படியே ஆகட்டும். நாளை மறுநாள் சுபமுகூர்த்த நாளா இருக்கு நீங்களும் இதே பஸ்டாப்பிற்கு வந்திடுங்கோ நாங்களும் வந்துடறோம் நாம எல்லாரும் சேர்ந்தே போய் புடவை தாலி எல்லாம் எடுத்துண்டு வரலாம்

சரி எங்களுக்கு பஸ் வந்துடுத்து நாங்க கிளம்பறோம். போயிட்டு வரோம்.” 

என்று கூறி ஈஸ்வரனும் பர்வதமும் இடத்தைக் காலி செய்ததும் அம்புஜம் ராமானுஜத்திடம் …

ஏன்னா இவா நாம என்ன சொன்னாலும் அதுல ஏதாவது குறைச்சொல்லிண்டே இருக்காளே இவாள திருப்திப் பட வைக்கறத்துக்கு நாம ரொம்ப சிறமப்படப்போறோம்னு நினைக்கறேன்.. எல்லாத்துக்கும் பகவதி துணை

முகூர்த்த புடவை எடுக்கவும் தாலி ஆர்டர் குடுக்கவும் நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோருடன் மிருதுளாவும் சென்றாள்.. தாலி டிசைனிலும் பிரிச்சனை எழுப்பினாள் பர்வதம் அதையும் விட்டுக்கொடுத்தனர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் முறைப்படி பெண்வீட்டார் ஒரு தாலியும் மாப்பிள்ளைவீட்டார் ஒரு தாலியும் செய்வது வழக்கம் ஆனால் இங்கே தாலி ஆர்டர் கொடுத்ததும் பில் கட்டவேண்டிய நேரத்தில் ஈஸ்வரனும், பர்வதமும் பக்கத்துக்கடையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றனர். மொத்த பணத்தையும் ராமானுஜமே கட்டவேண்டியிருந்தது. உள்ளே கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க சென்றனர். புடவைக்கடையும் பர்வதம் சாய்ஸ் தான் கையோங்கியது பட்டில் ஒன்பது கஜம் கல்யாண  முகூர்த்தப் புடவை காட்டச்சொல்ல பல ரகங்களில் பல வண்ணங்களில் விரித்துக்காட்டப்பட்டது. அதில் மிருதுளாவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பச்சைப்பார்டர் போட்டப்புடவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதே கலரில் தான் நடிகை மீனா அவ்வைசண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலில் கட்டிக்கொண்டு வருவார்.  ராமானுஜமும் எடுத்துக்கொள்ளச்சொன்னார். விடுவாளா பர்வதம் !!!!….இடையில புகுந்து 

இந்த கலர்ல எல்லாம் கட்டிக்கக்கூடாது வெரும் மெரூன் இல்லாட்டி அரக்கு கலர்ல தான் எடுக்கனும்

 என்றதும் மிருதுளா….

அம்மா எனக்கு இந்தக்கலர் தான் பிடிச்சிருக்கு என் அப்பா தானே காசு கொடுத்து எடுத்துத்தரா அப்போ நம்ம இஷ்ட்டத்துக்கு தானே எடுக்கனும்…ப்லீஸ் மா இதையே எடுக்கலாமா” 

என்று அம்புஜம் காதில் கூறினாள். இதை கவனித்த பர்வதம்…

என்ன அங்க உங்க பொன்னு என்னமோ முனுமுனுன்னு சொல்லறா?” 

அது ஒன்னும் இல்லை மாமி. நீ கட்டிண்டா அரக்கு கலரும் அழகாதான் இருக்கும்னு சொல்லிண்டிருக்கேன்என்று அம்புஜம் கூறி சமாளிக்க…மிருதுளா அம்மா…என்று அம்புஜம் கையை இருக்கப்பிடித்தாள் உடனே அம்புஜம் …மகள் கைகளை தட்டிக்கொடுத்து பரவாயில்லை விடு என்று மெல்லச்சொன்னாள். 

ஆக அன்று எல்லாமே பர்வதத்தின் சாய்ஸ் படி தான் நடந்தது. ராமானுஜம் குடும்பத்தினர் பணம் கட்ட மட்டும் வந்தது போல் ஆக்கினாள் பர்வதம். 

அனைவரும் மத்திய உணவருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அனைவரும் மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள் அம்புஜம் வெளியே உணவு உட்கொள்ளாமாட்டாள் அதனால் ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். மிருதுளா பொரோட்டா ஆர்டர் செய்ய உடனே பர்வதம் அதெல்லாம் என்னத்துக்கு பேசாம மீல்ஸே ஆர்டர் பண்ணு என்று சொல்ல மிருதுளா அம்புஜத்தைப்பார்க்க அவளும் அவர்கள் சொல்படியே  கேள் என்று கூற வேற வழியின்றி மீல்ஸே ஆர்டர் செய்தாள். அதன் பில்லும் ராமானுஜமே கட்டினார். பின் அனைவரும் பஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்த சமயத்தில் ஈஸ்வரன் மிருதுளாவிடம் ….

மிருதுளா உனக்கு மே மாசம் எக்ஸாமாமே?” 

ஆமாம் அப்பா

அதனால நீ நவீன் கூட போக வேண்டாம் அவனே உன்ன கூப்பிட்டாலும் போகாதே. ஏன் வீனா அலைஞ்சுண்டு ஒன்னா பரீட்சை எல்லாம் நல்லப்படியா முடிச்சுட்டே கிளம்பு என்ன சரியா?” 

அதப்பத்தி இன்னும் நாங்க அவகிட்ட எதுவும் டிஸ்கஸ் பண்ணலை பண்ணிட்டு சொல்லறோமேஎன்றாள் அம்புஜம்

சரி நான் அடுத்தவாரம் ஃபோன் போட்டுகேட்டுக்கறேன் அதுக்குள்ள டிசைட் பண்ணுங்கோ. இன்னொரு விஷயம் நவீனுக்கு கோட் சூட், சர்ட், டை, ஷூ எல்லாம் அவன் அங்கேந்தே எடுத்துக்கறானாம் அதனால அவனுக்கு பணம் அனுப்பனும் ஸோ ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்கோ” 

அப்படியா சரி நான் நாளைக்கு இல்லாட்டி அடுத்த திங்கள் கிழமை வந்து தந்துடறேன்என்றார் ராமானுஜம் அதற்கு ஈஸ்வரன்…

இல்லை இல்லை நவீனுக்கு நாளைக்கே நான் அனுப்பனும் அதனால இப்பவே கொடுத்திடுங்கோ

இப்பவா!!! இங்கேயே வா!!! இது பஸ்டாப்!! மாமா நீங்க வயசானவா வேற. நாங்க இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வந்து தந்திடறோமே” 

என்று ராமானுஜம் சொன்னதுக்கு பர்வதம் உடனே…

இல்லை …பரவாயில்லை இங்கேயே தாங்கோ நாங்க பத்திரமா எடுத்துண்டு போயிடுவோம். நீங்க ஏன் இதுக்காக ரெண்டு தடவை அலையனும் பாவம்.

என்று அடாவடியாக கூற வேற வழியில்லாமல் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து ஈஸ்வரன் கையில் கொடுத்தார் ராமானுஜம். உடனே ஈஸ்வரன் அதை எண்ணிப்பார்த்து பின்…

இந்தாங்கோ எங்க வகை தாளிக்கு உண்டான பணம் என்று ரூபாய் இரண்டாயிரத்தை ராமானுஜம் கொடுத்த பணத்திலிருந்தே எடுத்துக்கொடுத்தார்

அவர்கள் பஸ் வந்தது அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர் நவீனின் பெற்றோர். 

 ராமானுஜம் அம்புஜத்திடம்….

என்ன இவா என்கிட்ட இருந்தே காச வாங்கி எனக்கே அவா தாளி காசுனுட்டு தந்துட்டுப்போறா!!!! அதுவும் இல்லாம நவீன் தான் சம்பாதிக்கிறானே அவனுக்கு டிரஸ் எடுக்க ஏன்  இவா பணம் அனுப்பனும்!!!! ஒரே குழப்பமா இருக்கே

ஆமாம் அவாள்ட்ட எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இப்போ என்னாண்ட கேட்டா நான் என்ன சொல்லறது. இதை எல்லாம் அவாக்கிட்ட கேட்டிருக்கனும்

ஆமாம் நீ உன் வாயில என்ன கொழுக்கட்டையவா வச்சுண்டிருந்த நீ கேட்டிருக்க வேண்டியது தானே

என்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்க…பஸ்ஸும் வந்தது அதில் ஏறி அமர்ந்தனர்.  மிருதுளாவுக்கு சங்கடமாக இருந்தது. தனது அப்பா கூறுவதும் சரிதானே என்று அவளுக்கும் தோன்றியது. ஈஸ்வரன் பர்வதம் அன்று காலையிலிருந்து அவர்களை எல்லாக்கடையிலும் பாடாய் படுத்தியது எல்லாம் அசைப்போட்டுப்பார்த்தாள் பின் வீடு சென்றதும் ….

அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ரொம்ப பயமா இருக்குஎன்றாள். உடனே அம்புஜம்…

இதெல்லாம் ஒன்னுமில்லை மா. இதுக்கெல்லாமா பயப்படறது அசடு. நீ எப்போதும் பொறுப்பா நடந்துக்கனும், பொறுமையை எப்போதும் விட்டுடாதே. இதை ஞாபகத்துல வச்சுண்டா போரும் மிருது. அவா சொல்லரா மாதிரி கல்யாணத்துக்கப்பறம் உன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டே மாப்பிள்ளையோட குஜராத்துக்கு கிளம்பு என்ன சரியா

சரிமா. அப்படியே செய்யரேன்

அம்புஜத்தின் முதல் தங்கையான பரிமளம் கல்யாணம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது நடந்தவற்றை எல்லாம் அம்புஜம் அவளுடன் ஷேர் செய்துக்கொண்டாள். பரிமளம் மிருதுளாவைக்கூப்பிட்டாள்.

மிருதுளா வந்தாள்…

என்ன சித்தி?”

ஏன்டி நீ படிச்சவ தானே உங்க அப்பா காசு போடறார் உனக்கு பிடிச்ச புடவையையே எடுத்திருக்க வேண்டியது தானே ஏன் எடுக்கலை?”

இதையேத்தான் நான் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா தான் பரவாயில்லைனா. நீ அம்மாட்ட கேளு.

உங்க அம்மா ஒரு இ.வா ஆனா நீ ஸ்டபேர்ன்னா இருந்திருக்கனும். அதுவும் இல்லாம ஏதோ எம்.காம் எக்ஸாமுக்காக நாளு மாசம் கழிச்சு போன்னு உன் மாமியாரும் அம்மாவும் சொன்னா உடனே தலையை ஆட்டுவியா? இதோ பருமா படிப்பும் இம்ப்பார்ட்டன்ட் தான் நான் இல்லனு சொல்லலை ஆனா  எக்ஸாம் எப்ப வேனும்னாலும் எழுதிக்கலாம் வாழ்க்கை அப்படி இல்லை ஆரம்பத்திலேயே கோட்ட விட்டுட்டனா பின்ன அவ்வளவுதான் என்ன புரியரதா?”

இப்போ நான் என்னப்பண்ணும் சித்தி?”

அடுத்தத்தடவை இந்த பேச்சு வந்துதுனா நீ நவீன் கூட போவேன் எக்ஸாம் அப்பறம் எழுதிக்குவேன்னு சொல்லு அதுதான் உன் வாழ்க்கைக்கு சேஃப். உங்க மாமியார் என்னத்துக்கு உன்ன நாளு மாசம் பிடிச்சுவச்சுக்க பார்க்கரானு நினைக்கற…. கல்யாணமான முதல் வருடம் ஒருவரை ஒருவர் நன்னா புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான காலம் இந்த நேரத்துல உன்னை நவீனுடன் அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் உன் புக்காத்து மனுஷாலோட எண்ணம் எனக்கு சரியாப்படலை“. உடனே அம்புஜம் …

ஏன்டி பரி அவா ஆத்த பொன்னுகளே இல்லை அதனால கூட சொல்லிருக்கலாமோள்யோ!

அட போ அம்பு நீ சொன்னதெல்லாம் வச்சுப்பார்த்தா எனக்கென்னவோ இதுல ஏதோ அந்த பர்வதத்திற்கு உள்நோக்கம் இருக்குனு தோனறது

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பங்கஜமும் அம்புஜம் வீட்டிற்கு விஜயித்தாள். அவளும் விஷயங்களை சொல்லக்கேட்டதும் பரிமளம் சொல்வதுதான் சரி என்றாள். அப்பொழுது ஃபோன் அடித்தது. அம்புஜம் எடுத்தாள் …

ஹலோ நான் அம்புஜம் பேசறேன்

ஹலோ. நல்லாருக்கேளா நான் நவீன் பேசறேன். அங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

ஓ மாப்ள நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் நீங்க நல்லாருக்கேளா? நாங்க நேத்துதான் தாளிக்கு ஆர்டர் கொடுதுட்டு வந்திருக்கோம்.

நான் நன்னா இருக்கேன். ஹோ! ஈஸ் இட்!. குட். மிருதுட்ட பேசலாமா

ஓ தாராளமா. சாரி… இதோ குடுக்கறேன்” 

என்று மிருதுளாவிடம் ரிசீவரை கொடுத்துவிட்டு அனைவரும் உள் ரூமிர்க்குள் சென்று பேசத்தொடங்கினார்கள். அனைவரும் சென்றபின் மிருதுளா…

ஹலோ

ஹாய். எப்படி இருக்க?”

நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கேங்கள்?”

நன்னாருக்கேன் நான் பிப்பிரவரி பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்திடுவேன். இருபது நாள் தான் லீவு ஸோ மார்ச் ஏழு அங்கிருந்து கிளம்பனும். புடவை தாளி எல்லாம் எடுத்தாச்சாமே!

 “ஆமாம் நேத்து தான் எடுத்துண்டு வந்தோம்

எங்க அம்மா சொன்னா ஏதோ உனக்கு மே மாசம்  எம்.காம் எக்ஸாம் இருக்காமே அதனால நீ அத முடிச்சிட்டு தான் என் கூட வருவயாமே அப்படியா?”

இல்லை நான் அப்படி எதுவுமே சொல்லலை. நான் கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூடவே வந்துடறேன்

ஈஸ் இட்!! அப்போ எக்ஸாம்?”

பரவாயில்லை நான் அதை டிசம்பரில் எழுதிக்கறேன்” 

ஓகே நான் அப்போ வீடுப்பார்க்கட்டுமா?”

எஸ் தாராளமா பாருங்கோ

ஓகே தென் டேக் கேர் பை மிருது.

ஓகே பை பை

நவீனுடன் ஓப்பனாக பேசியது ஏதோ பெரிய விஷயம் சாதித்ததுப்போல இருந்தது மிருதுளாவிற்கு. அவள் தன் சித்திகளிடம் தான் திருமணம் முடிந்ததும் நவீனுடன் போவதாக கூறி மகிழ்ந்தாள். அதற்கு பரிமளம்…

நீ இன்னைக்கு நவீனிடம் சொன்னதுக்கு உன் மாமியார் ஆர் மாமனாரிடமிருந்து நாளை ரியாக்ஷன் வந்தால் தென் அவா ஏதோ காரணமா தான் உன்னை அனுப்பாமலிருக்க பார்க்கரானு கன்ஃபார்ம் ஆகிடும்

அப்போ அவா நாளைக்கு எங்கள்ட்ட மறுப்படியும் இதப்பத்திப்பேசுவாளா?” என்றாள் அப்பாவி மிருதுளா.

நிச்சயமா பேசுவா பாறேன்என்றால் பங்கஜம்.  

பரிமளத்திற்கும் , பங்கஜத்திற்கும் கூறப்புடவையை காண்பித்தாள் அம்புஜம். பரிமளம்… அம்புஜத்திடம் ஏமாறாமல் இருங்கோ என்று எச்சரித்து பின் பங்கஜத்துடன் சேர்ந்து அவள் வீட்டுக்கு இருவரும் சென்றனர். 

அடுத்தநாள் பரிமளமும் பங்கஜமும் சொன்னது போல  ஈஸ்வரன் பர்வதம் ஃபோன் செய்தார்களா? இல்லையா? மேலும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

ராமானுஜமும் அம்புஜமும் வீடு திரும்பியதும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு மருதுளாவையும் வேனுவையும் அழைத்து அனைவருமாக நடந்தவற்றை அவர்களுக்குள் உரையாடி பின் நிச்சயதார்த்த தேதியையும் கூறி அன்றே நிச்சயம் பண்ணிடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர். அதை மாப்பிள்ளை வீட்டாரிடமும் ஃபோனில் தெரிவித்தனர். ராமானுஜமும் அம்புஜமும் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும்  நிச்சயதார்த்திற்கு  அழைத்தனர். மற்றவர்களை திருமணத்திற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களே இருப்பதால் விறுவிறுப்பாக வேலைகளில் இருங்கினர். அம்புஜம் பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு  நடந்த அனைத்து விவரங்களையும் கூறி நன்றியையும் தெரிவித்தாள். அதற்கு பங்கஜம்

என்னத்துக்கு இப்போ தாங்ஸ் எல்லாம் சொல்லர அம்பு…ஏதோ என்னால முடிஞ்சது. நீ என் தோழி மேனகாக்கு தான் தாங்ஸ் சொல்லனும் ஏன்னா அவ மூல்யமா தானே இந்த வரன் வந்தது. சரி உனக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இன்னும் நாலு நாள் தானே இருக்கு. போய் ஆகவேண்டியதை பாரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஒரு ஃபோன் போடு போறும். பை த பை மாமியார் ஆக போர என் அக்கா அம்பு… பை… “

சரி பங்கு பை”

ராமானுஜத்தின் நண்பர்கள் விஷயத்தைக் கேள்வி பட்டதும் அவர்கள் அனைவரும் (ஒரு நாலு பேர். ராமானுஜத்திற்கு அதிக நண்பர்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் நாலு பேரும் உண்மையான நட்புடன் இருந்தனர்)  ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ராஜேஷ் பூ மற்றும் மாலைகள், சதாசிவம் பழங்கள், ஸ்வீட்கள், வெங்கட் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் சென்று வர வேன், வெற்றிமாறன் அன்று வேண்டிய காலை, மத்திய உணவு மற்றும் காபிடி  என ஒவ்வொரு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலானார்கள்.

அம்புஜம் தனது மகளுக்கு மேக்அப் போட அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஒரு அழகு நிலைத்தில் சொல்லி வைத்தாள். 

இப்படி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாம் மடமடவென நடந்தது மருதுளா வீட்டில். நமது மாப்பிள்ளை நவீன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை…. மிருதுளா என்ன ஆனாள்? தொடரைப் படிக்கும் வாசகர்களாகிய நாம்

தெரிந்துகொள்ள நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ஆகையால் வாருங்கள் போய் ஒரு எட்டு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வருவோம். 

ஈஸ்வரன் அவர் உறவினர்கள் அனைவருக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் தெரிவித்தப்பின் பர்வதம் கூறளானாள்

காலைல புடவ எடுக்க வெய்யிலில் போயிட்டுவந்ததால ஒரே தலைவலி. சரி ஏன்னா உங்க தங்கை அக்காக்கள் எல்லாரும் எப்ப வராளாம்? பேசாம நிச்சயதார்த்தத்தனைக்கு உங்க அக்காவையே சமைக்க சொல்லிடுங்கோ அப்பறம் நம்ம ஆம் ரொம்ப சின்னது அதனால உங்க அண்ணா ராசாமணி ஆத்துல வச்சுண்டுடலாம் அவராண்ட சொல்லிடுங்கோ. நம்ம பிச்சுமணியையும் என் அக்கா ரமணியையும் அவா ஆத்துக்கே போய் நிச்சயத்துக்கு அழைச்சுட்டு வரலாம். பூ மாலை பழங்கள் எல்லாம் பிச்சுமணி பார்த்துப்பான்.”

பர்வதம் பேசுவதிலிருந்து ஒன்றை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது அது என்னவென்றால் அவள் வீட்டுச் சொந்தங்களை மட்டும் மதிப்பவள் கணவர் வீட்டு சொந்தங்களை நன்றாக தனது கணவர் மூலமே வேலை வாங்கும் சிறந்த ரிங் மாஸ்டர். அடுத்தவர்களிடம் தங்களுக்காக இதை செய்ய மடியுமா என்றெல்லாம் கேட்க தயக்கேமே இல்லாதஅடுத்தவர்களை ஏதோ அவளுக்கு செய்ய கடமை பட்டவர்கள் போல ஒரு நினைப்பு வேற… என்ன மக்களே இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு இருக்கிறதா?

ஈஸ்வரன் குடும்பத்தில் அவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன் ராசாமணி, இரண்டு அக்காக்கள் சொர்ணம், வரலட்சுமி, இரண்டு தங்கைகள் வசுந்தரா, சுபத்திரை. சொர்ணம் அனைவருக்கும் அக்கா ஆவார். இவருக்கு பர்வதத்தை அறவே பிடிக்காது. வரலட்சுமியையும் வசுந்தராவையும்  சமையலுக்கு வரச்சொல்லிருக்காள் பர்வதம். அவர்களும் தங்களது சகோதரனுக்காக மட்டுமே சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் பணத்தை விட மனிதர்களை பெரிதும் மதிப்பவர்கள். தங்களது சகோதரன் ஈஸ்வரன் எதுக்கோ வாக்கப்பட்டு முருங்கை மரம் ஏறி ஆக வேண்டியிருப்பதை புரிந்து அவருக்காக அவர் மேல்லுள்ள பாசத்தினால் செய்ய முன்வந்தனர். 

பர்வதம் வேண்டுமென்றே ஒரு சாதாரணமான ஒரு அழுது வடியும் நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவையை மிருதுளாவுக்காக  எடுத்தாள். அது பட்டுப்புடவை கூட இல்லை. ஆனாலும் அவளை கேள்விகேட்க யாரும் இல்லை அப்படியே கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்ததே. அவளை யாருமே திருத்த முயற்சிக்காமல் அவள் அப்படி தான் என்று விலகிச்சென்ற உறவினர்களே அதிகம்.

நிச்சயதார்த்தம் நாள் வந்தது பர்வதம் வீட்டார் அனைவரும் பர்வதம், ஈஸ்வரன், நவீன், ப்ரவீன் மற்றும் பவின் ராசாமணி வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்துவிட்டனர். வரலட்சுமியும் வசுந்தராவும் அன்று காலை முதல் சமயற்க்கட்டிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

அனைவரும் சேர்ந்து நிச்சயதார்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து சாஸ்த்திரிகளின் வரவுக்காகவும், பெண் வீட்டார் வரவுக்காகவும் காத்திருந்தனர்.

அன்று மாலை ராகுகாலத்திற்கு முன் ஒரு நாலு மணிக்கு சாஸ்த்திரிகள், தாய் மாமா பிச்சுமணி, பெரியம்மா ரமணி அவரவர் குடும்பத்துடன் ராசாமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

வாருங்கள் நம்ம மிருதுளா வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி விட்டார்களா என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நிச்சயத்தன்று காலை அம்புஜம் வேனுவை கூப்பிட்டு மிருதுளாவோடு கோவிலுக்கு சென்று வரும்படி கூறி மிருதுளாவையும் நன்றாக கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நன்றாக எண்ணை தேய்த்து குளித்து ஆத்திப்பின்னலிட்டு அழகான புடவை உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு அறையிலிருந்து வெளியே வந்ததும் அவள் சொந்தங்கள் அனைவரும் அவளைப்பார்த்து

 “மிருது உனக்கு கல்யாணகல வந்துடுத்து.”

லட்சணமா இருக்கா நம்ம மிருது. நவீன் குடுத்துவச்சவர்” 

என்றனர்

அம்புஜத்துடன் கூடப்பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் பாரிமளம், கோமளம், பங்கஜம். ஒரு அண்ணன் மணியன். 

ராமானுஜத்திற்கு ஒரே தம்பி ராமநாதன் அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இவர் மனைவி மேகலா. 

அக்காவும் தம்பியும் கோவில் சென்று வந்ததும் சற்றுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்து மத்திய உணவு உண்ட பின் ஒரு இரண்டு மணிக்கு அழகு நிலைத்தில் மிருதுளாவை கொண்டு விட்டான் வேனு. மிருதுளா அன்று தான் முதன்மதலில் மேக்அப் போட போகிறாள். 

அவளுக்கு மேக்அப் போட்டு பட்டுப்புடவை கட்டி அவள் வெளியே வந்ததும் வேனு அவளைப்பார்த்து கோபப்பட்டான். காலைல சிம்ப்ளா அழகா இருந்த மிருதுக்கா இந்த மேக்அப் உனக்கு சூட் ஆகலை…. எனக்குப்பிடிக்கலை

என்றதும் மிருதுவின் முகம் வாடியது. மேலும் வேனு  வீட்டிற்கு சென்று அனைத்தயும் கலைச்சுட்டு காலைல இருந்த மாதிரி இரு அக்கா என்றதும் அவளுக்கு அழுகை வந்தது. இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வேன் அனைவரையும் ஏற்றிக்கொண்டு இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. வேனு தனது தாயை அழைத்து வீட்டைத்திறக்க சொன்னான். அம்புஜம் வேனிலிருந்து இறங்கினாள்…

என்னடா வேனு இப்ப என்னத்துக்கு ஆம தொறக்கனும்? எல்லாரும் காத்துண்டிருக்கா நாழி ஆகறது”

என்று கூறிக்கொண்டே வீட்டை திறந்தாள். உடனே மிருதுளா அழுதுகொண்டே குளியலறைக்குள் சென்றால்…அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது இப்போ ஏன் பாத்ரூமுக்குள்ள போனாய்? என்னாட வேனு என்ன ஆச்சு”

அக்கா நீ உன் மேக்அப் எல்லாத்தையும் கலச்சுட்டு வா அக்கா”

அடேய் என்னடா அக்காளும் தம்பியுமா விளையாடரேங்களா. அடியே மிருது இப்ப வெளில வரல அப்பறம் …” என்று அம்புஜம் கூறிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…

டேய் வேனு இந்த மேக்அப் அழிய மாட்டேங்கறது டா. நான் என்ன செய்ய ?”

என்னது ?? ஏன்டி இப்படி பண்ணறாய்? சீக்கிரம் மொகத்த தொடச்சுண்டு வா. இதுக்கு மேல ஒன்னும் பண்ணிடாதே…நீ நல்லா தாம்மா இருக்க. வாம்மா நாழி ஆகறதோனோ எல்லாரும் காத்துண்டிருக்கா வாசல்ல”

பங்கஜமும், ராமநாதனின் மனைவி மேகலாவும் உள்ளே சென்றார்கள் …

என்ன வண்டி கிளம்பப்போறது. அத்திம்பேர் அங்க சத்தம் போடரார் இங்க அம்மாவும் புள்ளையும் பொன்னும் கூடிண்டு என்ன பண்ணறேங்கள்?”

ஏய் மிருது ஏன் ஒரு மாதிரி இருக்க?”

அவ தம்பிக்கு அவளோட மேக்அப் பிடிக்கலையாம் அதனால கலச்சுக்கப்போறேன்னு ஒரே அல்ச்சாட்டியம் பண்ணரதுகள் ரெண்டுமா. நான் என்னத்த பண்ண!”

டேய் வேனு உங்க அக்கா இதுவரைக்கும் மேக்அப் போட்டு நீ பார்க்காததால உனக்கு அப்படி தோனரது அவ்வளவுதான். அவள் அழகா தான் இருக்கா. தம்பி சொன்னானாம்..அக்கா மேக்அப்ப அழிக்கறாளாம்…நல்ல தம்பி ..நல்ல அக்கா…”

வாசலில் இருந்து ராமானுஜம்….

 “மணி மூன்றை ஆச்சு. இப்போ கிளம்பினாதான் ராகு காலத்துக்கு முன்னாடி அங்க எத்த முடியும். என்ன பண்ணரேங்கள் எல்லாருமா?!!”

நாலரை டூ ஆறு ராகு காலம் என்பதால் நாலு மணிக்கெல்லாம் ராசாமணி வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்ததிற்கு வேண்டியவற்றை அடுக்கி தயாராகி ஆறு மணிக்கு நிச்சயதார்த்ததை முடித்துக்கொண்டு இரவு உணவு உண்டு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். 

ராமானுஜம் உறக்க சொன்னதும் அனைவரும் வீட்டைச் பூட்டிக்கொண்டு வேனில் ஏறினார்கள். சரியாக நாலு பத்துக்கு ராசாமணி வீட்டை சென்றடைந்தார்கள். ராசாமணி வீட்டிற்கு எதிர் விடு இவர்களுக்காக சுத்தம் செய்யது வைத்திருந்தனர். மிருதுளா வீட்டார் அனைவரும் அந்த வீட்டினுள் சென்று பழங்கள், பூக்கள், மாலைகள் அனைத்தையும் தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்தனர். சக்கரையை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மேல் ஜெம்ஸ் மிட்டாயால் தனது அக்கா பெயரையும் வரப்போர அத்திம்பேர் பெயரையும் அழகாக பதித்தான் வேனு. 

இதற்கிடையில் அனைவருக்கும் காபி பறிமாறப்பட்டது. எல்லாம் தயார் ஆகவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருந்தது. மிருதுளா வீட்டார் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்த சீர்களுடன் ராசாமணி வீட்டிற்குள் சென்றனர். 

நிச்சயதார்த்தம் துவங்கியது. நவீனுக்கு கூட பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் அவன் அத்தைப்பெண் மிருதுளாவின் நாத்தநாராக இருந்து சம்பிரதாயங்களை செய்தார். 

நிச்சயம் ஆனதும் ராமானுஜம் வேனுவிடம் ஒரு அழகிய மோதிரத்தைக்கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டுவிட சொன்னார். வேனுவும் நவீனுக்கு மோதிரம் போட அனைவரும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் அனைவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தை பெற்றனர் நவீனும் மிருதுளாவும்.  வாழை இலை போட்டு இரவு உணவை ஈஸ்வரன் வீட்டார் பறிமாற பெண் வீட்டார் அனைவரும் உண்டு பின் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது மிருதுளாவும் அனைவருடனும் வேனில் ஏற முயன்ற போது பங்கஜம் அவளை நவீனிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நவீனிடம் பங்கஜம் கூறியதை மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தாள். பங்கஜமும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு…

என்ன இந்த பொன்னு இப்படி இருக்கா?”

ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கப்படாது மிருது. நீ நிறைய கத்துக்கணும்…”

அம்புஜம் பர்வத்திடம் சென்று…

பர்வதம் மாமி நிச்சயத்தை அமர்க்களப்படுத்திட்டேள். ரொம்ப நல்லா நடந்தது. இனி எங்க மிருது உங்க பொன்னு.” என்றதும் பர்வதம் சட்டென்று…

அது கல்யாணத்துக்கு அப்பறம் தானே. இப்போ நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு. எல்லாரும் கிளம்பரா போல …உங்கள தேடப்போரா பாருங்கோ” 

என்றாள். இதைக்கேட்டதும் அம்புஜத்துக்குள் ஒரு கவலை பற்றியது. அந்த யோசனையிலேயே அவள் வேனில் ஏறி அமர்ந்தாள். அப்போது மேகலா 

என்ன மன்னி ஒரு மாதிரி இருக்கேள்? என்ன ஆச்சு?”

அதெல்லாம் ஒன்னுமில்லை காலையிலேருந்து ஒரே டென்ஷன் எல்லாம் நல்லப்படியா நடக்கணும்னு அதுதான் கொஞ்சம் அசத்தறது. வேறொன்னுமில்லை.”

அனைவரிடமும் மிருதுளாவின் குடும்பத்தினரும் ராமானுஜத்தின் நண்பர்களும் விடைப்பெற்றுக்கொண்டனர். வேனும் புறப்பட்டு சென்றது.

நம்ம மிருதுளா நவீன் நிச்சயதார்த்த்திற்கு வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அடுத்து நிச்சயதார்த்ததிற்கு பின் கல்யாணத்திற்கு முன் வரை நடக்கவிருப்பதை வரும் செவ்வாய் அன்று வந்து தெறிந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்……

நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

அது ஒன்னுமில்லை மாமா”

அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

என்னவாம் அந்த மாமிக்கு?”

அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

இல்லை விஷயம் என்னனா…”

என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகைவெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!