பல கேள்விகளை தாங்கியவளாய் விஷாலை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை எதேச்சையாக கவனித்த விஷால் வேகமாக கையசைத்து “டூ மினிட்ஸ்” என்று சைகை காட்ட, உடனே, ப்ளூ தன்னை காலையில் எழுப்பும் போது அவள் சொல்லும் அதே “டூ மினிட்ஸ்” இப்போது அவளுக்கே எதிரொலித்ததை கேட்டதும் ப்ளூ வின் நினைவுகள் சக்தியின் மனக்கண்ணில் நிழலாடியது. அவள்  ஏதோ சிந்தனையில் மேலே பார்த்தபடி அமர்ந்திருந்ததை கண்ட விஷால் தனது கைபேசியில்,

“சரி. சரி. ஐ வில் டூ தட். 

 ஷார்ப் ஏயிட்டோக்ளாக் அங்க இருப்போம். 

பை ஃபார் நவ்.”

என்று பேசிக்கொண்டிருந்த மொபைல் அழைப்பை துண்டித்து விட்டு வீட்டனுள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததை கூட கவனிக்காதவளாய் உட்கார்ந்திருந்த சக்தியை குரலுயர்த்தி அழைத்தான் விஷால். அவனின் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து வருவதை போல் மெலிதாக கேட்க, அதற்கு எவ்வித அசைவும் இன்றி இருந்தவளருகே சென்றமர்ந்து அவள் கன்னங்களை தனது இரு கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழைக்க…சட்டென சக்திக்கு அவனின் குரல் மிக அருகாமையில் கேட்க நெட்டி எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது விஷால் அவளிடம்,

“ஹேய் தி! 

என்ன ஆச்சு?

ஏன் இப்படி பிரம்ம பிடிச்சா மாதிரி உட்கார்ந்திருக்க?”

“ம்…நீ…டூ மினிட்ஸ்ன்னு சொன்னதும்,

எனக்கு என் ப்ளூ ஞாபகம் வந்துடுத்து.

அவன் என்னை காலையில எழுப்பும் போது நான் டூ மினிட்ஸ்ன்னு சொல்லுவேன்…

அவனும் கரெக்ட்டா டூ மினிட்ஸ்ல மறுபடியும் எழுப்புவான். 

அந்த நெனவெல்லாம் வந்ததுல…

அப்படியே இருந்துட்டேன் போல.”

“சரியா போச்சு போ.”

“சரி…யாரு ஃபோன்ல.

ஏன் அவ்வளவு வேகமா வெளில போன?

நீ பேசும் போது உன் முகம் ஒரு மாதிரி டென்ஸ்டா இருந்துதே ஏன்?

என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லு.

இல்லாட்டி ஃபைன் நோ ப்ராப்ளம்.

நான் உன்னை அது விஷயமா தொந்தரவு செய்ய மாட்டேன்.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.

நம்ம ஜேம்ஸ் தான்.”

“அவரா!

ஆமாம்… அவரு இப்ப தானே நம்ம வீட்டுலேந்து கிளம்பி போனார். 

அதுக்குள்ள எதுக்கு கால் செஞ்சார்!”

“அவன் நம்மளுக்கு டின்னர் குடுக்கணுமாம்.

இன்னைக்கு அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர முடியுமான்னு கேட்டான்.”

“அதுக்கெதுக்கு நீ அவ்வளவு பதற்றமா வெளில போய் பேசணும்.

இங்கேந்தே பேசிருக்கலாமே!”

“இல்ல தி. 

அவன் ஃப்ர்ஸ்ட் தனியா பேசணும்ன்னு மெஸேஜ் அனுப்பினான்.

அதைப் பார்த்ததும்…

என்னடா இப்ப தானே போனான் அதுக்குள்ள என்ன இப்படி ஒரு மெஸேஜ்ன்னு குழம்பிட்டேன்.

அது தான் என் முகத்துல பிரதிபலிச்சிருக்கு.

அப்புறம் விஷயத்தை கேட்டதும்…

நானும் அவன்கிட்ட இதையே தான் சொன்னேன்.

உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொன்னான். 

உன்னை எப்பவும் போல லீ கார்னர் கூட்டிட்டு போறதா சொல்லி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னான். 

ஐ திங்க் அங்க உன்னோட ஃப்ரெண்ட் ருத்ராவும் வரப்போறா போல…

அதையும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்.”

“சரி…எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்ச உன் ஃப்ரெண்டோட ஃப்ளான் எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டியே! 

இது நியாயமா?”

“உன்கிட்ட மறைக்க எனக்கு மனசு வரலை தி.

நான் அவ்வளவு சின்சியர் இன் மை ரிலேஷன்ஷிப்.”

“அட அட அட…

சூப்பர்.

உன் ஃப்ரெண்டோட விஷயத்தை சொல்லி…

என்கிட்ட ப்ரௌனி பாயிண்ட்ஸ் வாங்கிக்கற…

இரு…இரு…நான் ஜேம்ஸ்ட்ட சொல்லறேன்.”

“தி…

ப்ளீஸ் வேண்டாம் மா…

அப்புறம் அவன் இன்னைக்கு நைட்டு எனக்கு அவன் வீட்டுல இடம் கொடுக்காம போயிட போறான்.

அப்புறம் நான் ராத்திரி ஃபுல்லா உன் வீட்டு வாசல்ல தான் தூங்கணும்.”

“ஓகே ஓகே…

சொல்லமாட்டேன்.

கவலை வேண்டாம்.

எத்தனை மணிக்கு கிளம்பணும்?”

“ஒரு எட்டு மணிக்கு வரச் சொல்லிருக்கான்.”

“ஓ இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே…

சரி நான் இந்த காஃபி கப்ஸ் அன்ட் ஜூஸ் கிளாஸ் எல்லாத்தை டிஷ்வாஷர்ல வச்சுட்டு கிட்சனை சுத்தம் செய்துட்டு வரேன்.”

என்று சக்தி சொன்னதும் விஷாலும் அவளுக்கு உதவுவதாக சொல்லி எழுந்து சென்று இருவருமாக வேலைகளை செய்ததில் அங்குமிங்குமாக இடித்துக்கொண்டனர்…

மெல்ல காமன் தன் மலர்க்கணைகளை எய்திட எட்டிப்பார்த்தான். 

ஆனால் சக்தி சட்டென கடிகாரத்தை நிமிர்ந்து நேரம் பார்க்க திரும்பியதில் காமன் மலர்க்கணைகள் இருவர் மீதும் படாமல் ஓரமாக சென்று தரையில் விழுந்தது. 

அடுத்து ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் காமன். 

கடிகாரத்தில் ஆறரை என்ற நேரம் காட்ட, 

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே என்றுக் கூறிக்கொண்டே இருவரும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தனர். 

விஷால் டிவியை ஆன் செய்து  ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்ததைப் பார்த்த சக்தி,

அவன் கையிலிருந்த ரிமோட்டை தட்டிப்பரித்து அவளுக்கு விருப்பமான சேனலை போட முயன்றாள்.

அப்போது விஷால் அவளிடமிருந்து ரிமோட்டை வாங்க முயன்றான்…

அத்தகைய ரிமோட் விளையாட்டின் போது…

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த காமன் சற்று அவன் விளையாட்டை துவங்க நினைத்து இருவரையும் சற்று தூண்டிவிட, 

இருவரும் ஒருவருக்கொருவர் மிக அருகில் நெருங்கியதும்…

இருவரின் இதயத்துடிப்பும் மடமடவென பங்கு சந்தையின் சென்செக்ஸ் கிடுகிடுவென ஏறுவது போல் ஏறிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த காமன்…

அவனுக்கான அன்றைய டார்கெட்டை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருக்கையிலே…

சட்டென மென்மையான கூடலினூடே கை தவறி…

சக்தி ரிமோட் பொத்தானை அழுத்த டிவியில் ஃப்ளபர் என்ற ஆங்கிலப்படம் பளிச்சிட, அதைப் பார்த்ததும் சக்தி விஷாலின் பிடியிலிருந்து விலகி…

“ஊப்பஸ்! சாரி வி.”

என்று எழுந்து நிற்க உடனே விஷால் அவள் கைகளைப் பிடித்து,

அவளை தன்னருகே அமர வைத்து அவளின் வலது கையை மெல்ல வருடிக்கொடுத்துக் கொண்டே. 

“இட்ஸ் ஓகே தி.

ஐ ஆம் சாரி டூ”

என்று இருவரும் மாறி மாறி சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவர்களை கடிகாரம் ஏழு என்று மணியடியத்து தட்டி எழுப்பியதும் காமனின் மலர்க்கணைகள் மாய்ந்து போயின, காமனும் காணாமல் போனான். 

சக்தி அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு மெல்லிய சிரிப்போடு உதட்டை மெல்ல கடித்து…

“ஐய்யோ சக்தி! 

ச்சே…

ஏன்!!”

என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டே…

கண்ணாடி முன் நின்று தன்னையே தலைமுதல் கால் வரை பார்த்து…

“வேண்டாம் தி.

வேண்டாம்” என சொல்லிய பின் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்த விஷால் தன் ‘தி’ சென்ற வழியையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் இருந்து விட்டு…

பின் டிவியை ஆஃப் செய்து, 

இரு கைகளையும் மேலே உயர்த்தி, 

“உஃப்”

என்று பெருமூச்சு விட்டான். எதையோ நினைத்துக் கொண்டே தனக்குத்தானே சரித்துக் கொண்டிருக்கையில்…அங்கு வந்த சக்தி தனது தொண்டை கரகரப்பை சரி செய்வது போல இருமினாள். அதைக் கேட்டதும் திரும்பி பார்த்த விஷால்,

“ஓ! வாவ்! 

தி! யூ லுக் கார்ஜியஸ்.”

என்று கூறிக்கொண்டே அவளருகே சென்றவன் சடாரென அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவளின் வலது கையை பிடித்து முத்தமிட்டு,

“வில் யூ மேரி மீ” 

என்று கேட்க…அதற்கு சக்தி…

“ஹலோ என்ன மறுபடியும் முதல்லேந்தா!”

என்று சொல்ல இருவரும் புன்னகையித்துக் கொண்டனர். 

“தி…

இன்னைக்கு நைட் நான் இங்கேயே தாங்கிக்கலாமா?”

என்று கேட்ட விஷாலிடம் ஹாலின் மூலையில் இருந்த ப்வுடர் ரூமை கைக்காட்டி…

“போய் ரெடியாகி வா வி.

டைம் ஆயிடுத்து. 

கம் ஆன்.

கோ நௌ.” 

எனக் கூறிக்கொண்டே விஷாலை தள்ளிக்கொண்டு போய் பவுடர் ரூமுக்குள் அவனை அனுப்பிவைத்து விட்டு ஹாலின் லைட்டை ஆன் செய்தாள். 

விஷால் ரெடியானதும் கதவைப் பூட்டிவிட்டு இருவருமாக விஷாலின் காரில் ஏறி ஜேம்ஸ் வீட்டுக்குச் சென்றனர். 

அவர்கள் சென்ற வழியில் ஓரிடத்தில் சக்தி காரை நிப்பாட்ட சொன்னாள். விஷாலும் எஜமானியின் உத்தரவிற்கு இணங்கி காரை பார்க் செய்தான். காரில் இருந்து இறங்கிய சக்தி “போல் பட்டீசரி” என்றொரு ஃபேமஸான ஃப்ரெஞ்ச் பேக்கரிக்குள் சென்று மேக்ரோன்கள் வாங்கிக்கொண்டு அப்படியே பக்கத்து கடையான இந்தியன் ஸ்டாருக்குள் சென்று நமது இந்திய பலகாரங்களான மிக்ஸ்சர், ஜாமுன், முறுக்கு போன்றவைகளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவளிடம் விஷால்,

“என்னது இது? தி!

அவன் வீட்டுல அவன் மட்டும் தான் இருக்கான்.

எதுக்கு நீ இப்போ இவ்வளவு எல்லாம் வாங்கிருக்க?”

என்று கேட்க அதற்கு வாங்கி வந்ததை காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு முன் இருக்கையில் சென்றமர்ந்த சக்தி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விஷாலைப் பார்த்து,

“ம்… இப்போ போகலாம்.”

“சரிங்க மேடம்.

ஆமாம் நான் கேட்டதுக்கு பதிலேதும் உண்டா?”

“வி…

நாம ஒருத்தர் வீட்டுக்கு மொதோ தடவையா போறோம்.

எப்படி கைவீசிண்டு போறது?

அதுதான் வாங்கினேன்.”

“ம்…ஓகே ஓகே.

இதுக்கு தான் வீட்டுக்கு பெண்கள் தேவைன்னு சொல்றாங்களா?”

“எதுக்கு ஸ்னாக்ஸ் வாங்கவா!”

“இல்லம்மா…

நானும் தான் அன்னைக்கு ஜேம்ஸ் வீட்டுக்கு மொதோ தடவையா போனேன், 

ஆனா எனக்கு இது தோணலையே!

அதுவுமில்லாம உன் வீட்டுக்கும் மூணு தடவை வந்துட்டேன்…

இதுவரை ஒண்ணுமே வாங்கிண்டு வந்ததில்லை…

அதுனால சொன்னேன்.”

“எல்லாத்துக்குமா சேர்த்து கல்யாணதுக்கு அப்புறம் வாங்கிக்கறேன். சரியா.”

“ம்…நான் குடுக்க தயார்.

நீயும் வாங்கிக்க தயாரா இரு.

இதோ ஜேம்ஸ் வீடு வந்துடுத்து.

அதோ அந்த வீடு தான்.

வா ‘தி’ போகலாம்”

என்று காரை ஜேம்ஸ் வீட்டருகே இருந்த கார் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு இருவருமாக ஜேம்ஸ் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தனர். ஜேம்ஸ் வந்து கதவை திறந்து இருவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றான். 

சக்தி வாங்கி வந்த ஸ்னாக்ஸை ஜேம்ஸிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்ட ஜேம்ஸ் விஷாலைப்பார்த்து,

“டேய் உன்னை சொல்லாம கூட்டிட்டு தானே வரச்சொன்னேன்.”

என்று சொன்னதும் சக்தி தன் தலையில் மெல்லமாக வலது கையால் தட்டிக்கொண்டே விஷாலைப்பார்த்து தன் இரு கைகளால் இரு காதுகளையும் பிடித்தவாரு “சாரி” என்று சொல்ல. அதை கவனித்த ஜேம்ஸ், 

“இட்ஸ் ஓகே சக்தி.

உங்க சாரியை வேஸ்ட் பண்ணாதீங்க.”

“என்ன ருத்ராவும் வருவான்னு விஷால் சொன்னானே!

அவளை காணமே!”

“வருவாங்க வருவாங்க.

வாங்க நாம அந்த ரூமுக்குள்ள போய் உட்காரலாம்.

அங்க இட் வில் பி கோசி அன்ட் கம்ஃபர்டபுள்.

அன்ட் அங்க தான் எல்லா ஸ்னாக்ஸ் அன்ட் ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாம் உங்களுக்காக அரேஞ்ச் செஞ்சி வச்சிருக்கேன்.

பட் நோ மொபைல்ஸ் அளௌடு.

சோ உங்க மொபைல்ல இங்க இந்த டிரேல வச்சுட்டு வாங்க.”

என்று ஜேம்ஸ் கூறியதும் விஷாலும் சக்தியும் அவரவர் மொபைல்களை டிரேவில் வைத்துவிட்டு அவன் கைக்காட்டிய ரூமுக்குள் சென்றனர். மூவரும் உள்ளே சென்றதும் ஜேம்ஸ் அந்த அறையை சாற்றி தாழ்ப்பாளிட்டான். அங்கு நடந்தவைகளை பார்த்து குழம்பிய சக்தி, கதவைப் பூட்டிய ஜேம்ஸை, தன் முகத்தில் “ஏன்” என்றொரு கேள்க்குறியோடு பார்த்துக் கொண்டே அறையை நோக்கி திரும்பினாள், சட்டென்று அவளுக்கு தலைவலிப்பது போல் இருக்க தன் இரு கைகளால் வெற்றியைப் பிடித்து அழுத்திக்கொண்டே பார்த்தாள்…

அந்த அறையில் இன்னுமொரு ஆள் அமர்ந்திருந்தது போல் அவளுக்கு தோன்ற, கண்களை கசக்கிக்கொண்டு நன்றாக பார்த்தாள். அப்போது அவளருகே இருந்த விஷாலின் மேல் சாய்ந்தவாரு அவனிடம்…

“இவர் எப்படி இங்கே? ஏன்?

எனக்கு என்னமோ தெரியலை வி…

சடன்னா தலைவலிக்கறது.”

என்று சொல்ல அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தான். ஜேம்ஸ் ஏதோ ஜூஸ் ஒன்றை எடுத்து வந்து சக்திக்கு கொடுக்கும் படி விஷாலிடம் சொல்ல, விஷாலும் அந்த ஜூலை எடுத்து சக்தியிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். அது என்ன ஜூஸ் என்றும் அது ஏன் தனக்கு மட்டும் தரப்படுகிறது என்றும் கேட்டாள் சக்தி.

தொடர்வாள்…

ஜேம்ஸ் உடனான உரையாடலில் ரொம்பவே குழம்பி போன சக்தி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று தவிப்புக்குள்ளானாள். அவள் குழம்பிப் போய் இருப்பதை அவளின் பதற்றத்தில் இருந்தே அறிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர அவர்கள் அமர்ந்திருந்த ஹாலின் இடது புறமாக இருந்த திறந்த சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஃபிரிஜை திறந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதன் அருகே இருந்த கண்ணாடி தம்பளர் ஒன்றை எடுத்து அதில் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதை சக்திக்கு குடுக்க அடுப்படியில் இருந்து ஒரு அடி முன் வைத்தனுக்கு அடுப்படிக்கு அருகே மூடி இருந்த கதவின் வழியே ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது. உடனே நடையை நிறுத்தி உன்னிப்பாக கேட்டான். ஆனால் இம்முறை சற்று முன் அவனுக்கு கேட்ட சத்தம் ஏதும் கேட்கவில்லை. முகத்தில் சந்தேகத்துடணும், கையில் தண்ணீர் தம்பளருடணும் சக்தி முன் நின்ற ஜேம்ஸ் அவளிடம் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறி நின்றான். சக்தியும் அவன் குடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனோ பின்னால் திரும்பி சமையலறையையே பார்த்துக் கொண்டு இருந்தான். 

“என்ன ஜேம்ஸ். 

ஏன் கிட்சனையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”

“இல்ல…”

“என்னாச்சு?”

“உங்க கிட்சன் பக்கத்துல ஒரு டோர் இருக்கே அது…”

“அது பேஸ்மென்ட் போறதுக்கான டோர். 

ஏன் அந்த டோர்க்கு என்ன?”

“அந்த டோர்க்கு ஒண்ணுமில்ல ஆனா அதுக்குள்ளேந்து ஏதோ சத்தம் வந்தா மாதிரி இருந்தது. 

அது தான்… யோசனையா இருக்கு.”

“ஏதாவது டப்பா ஆர் தட்டுமுட்டு சாமான்கள் விழுந்திருக்கும்.

வேறென்ன!”

“இல்ல அந்த சத்தம் அப்படி பொருள் கீழ விழும் சத்தம் இல்ல. 

யாரோ நாலஞ்சு பேரு பேசிக்கறா மாதிரி கேட்டுச்சு.”

“என்னது என் வீட்டு பேஸ்மென்ட்ல நாலஞ்சு பேரு பேசறா மாதிரி கேட்டுச்சா!! 

ஹா! ஹா! ஹா!

என்ன சொல்லுறீங்க ஜேம்ஸ்.”

“அட ஆமாங்க.

சத்தியமா கேட்டுச்சு.

எதுக்கும் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா?”

“இல்ல இல்ல.

அதெல்லாம் வேண்டாம்.”

“அதுக்கு எதுக்கு நீங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க?”

“டென்ஷன் எல்லாம் ஒண்ணுமில்ல…

அப்படியே நீங்க சொல்லுறது மாதிரி நாலஞ்சு பேரு பேஸ்மென்ட்ல இருக்காங்கன்னே வச்சுகிட்டாலும்…

அவங்க எப்படி அங்க போயிருப்பாங்க.

நாம் இரண்டு பேரும் இங்கயே தானே உட்கார்ந்திருக்கோம்.

நம்மள தாண்டி இதுவரை யாரும் போனதா எனக்கு தோனலை.

உங்களுக்கு?”

“விளையாடாதீங்க சக்தி.

மறுபடியும் உங்க கிட்ட நான் கேட்கிறேன்.

நீங்க எதையாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா?”

“இல்ல இல்ல இல்லன்னு எவ்வளவு தடவ சொல்லுறது ஜேம்ஸ்.”

“சரி அப்படின்னா உங்க வீட்டு பேஸ்மென்ட்ட பார்க்க அனுமதி குடுங்க சக்தி.”

“ஜேம்ஸ் ஆல்ரெடி இன்னைக்கு நீங்க சொன்ன விஷயங்களும் நான் சொன்னதும்ன்னு ரொம்பவே குழம்பி போய் இருக்கேன். 

ப்ளீஸ் இதுல நீங்க இன்னும் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க.”

“ஓகே ஓகே. 

உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ ஒரு கால் செஞ்சு சொல்லுங்க. 

சரியா.”

“நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே! 

மறுபடியும் சொல்லுங்கன்னா…

நான் என்னத்த சொல்ல?”

“என்ன சொல்லணும்னு தோணுதோ அதை.

சரி நான் இந்த சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு விஷயங்களை நேருல சொல்லிட்டு போக தான் வந்தேன்.

சொல்லிட்டேன்.

மேலும் கூடுதல் தகவல்களை என்னை நம்பி என்னிடம் சொன்னதற்கு நன்றி.”

என்று கூறி சக்தியிடம் இருந்து விடைப்பெற்றுச் செல்ல இருந்த ஜேம்ஸுக்கு அவனின் கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்ததும் அந்த அழைப்பை ஏற்று.

“அப்படியா! 

சூப்பர்.

இதோ நான் உடனே வரேன்.”

என்று கூறிக்கொண்டே சக்தி வீட்டின் வாசற்கதவை திறந்தான். பின் அழைப்பை துண்டித்து விட்டு சக்தியிடம்

“சக்தி தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிட்டாலிடி.

நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா போகணும்.

சோ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.

எங்க ஆளுங்க உங்க பக்கத்து வீட்டு சமாச்சாரத்தை பாரத்துப்பாங்க.

நீங்க இனி அதைப் பத்தி கவலை பட வேண்டாம்

டேக் கேர்.

பை.”

“பை ஜேம்ஸ்.

ஹாவ் எ நைஸ் டே.”

என்று சக்தி கூறியதும் அங்கிருந்து கிளம்பி தனது காரில் ஏறி அந்த தெரு முனையில் சர்ரென்று ஒரு யூ டர்ன் செய்து பறந்து சென்றான். ஜேம்ஸ் சென்றதும் வீட்டினுள் வந்து கதவை தாழிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள். தலையை அந்த சோபாவின் மேல் நன்றாக அழுத்தி சாய்த்துக் கொண்டு அமர்ந்த சக்தி,  ஜேம்ஸ், சார்ல்ஸ் மற்றும் பீட்டரை பத்தி சொன்னதையும் மிஸ்ஸர்ஸ் டேவிட் பத்தி சொன்னதையும் மேலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்த்தாள். சட்டென பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ ஒரு சப்தம் கேட்க உடனே சோஃபாவில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தாள். சப்தம் ஏதும் அதன் பின் கேட்கவில்லை. மீண்டும் சோஃபாவில் சாய்ந்தாள். அவள் சோஃபாவில் படுத்த சில நொடிகளில் மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து சப்தம் வந்தது. விருட்டென எழுந்த சக்திக்கு பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ சப்தம் வந்ததாக ஜேம்ஸ் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து 

“ப்ளூ…இப்ப நீ வரலாம்.

ஏய் ப்ளூ அங்க என்னத்த உருட்டுற?

நீ அப்படி எல்லாம் சத்தம் குடுக்குறவன் இல்லையே!

சரி சரி வா வா.

உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லணும். 

ப்ளூ”

என்று ப்ளூவை அழைத்து விட்டு அதன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அழைத்து சற்று நேரம் ஆகியும் ப்ளூ ஹாலுக்கு வரவில்லை. ப்ளூ மேலே வராததால் சக்தி பேஸ்மென்ட் செல்ல முடிவெடுத்து சோஃபாவில் இருந்து எழுந்து பேஸ்மென்ட் கதவை நோக்கி ப்ளூவை அழைத்துக் கொண்டே நடக்கலானாள். அப்போது அவளுக்கு ஏதோ மனதில் ஒரு அச்சம் எழ 

“ஏய் ப்ளூ.

வேண்டாம்.

விளையாடாத.

இப்போ நீ இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்.

ப்ளூ.”

என்று கூறிக்கொண்டே பேஸ்மென்ட் கதவருகில் சென்றவள் மனதில் ஏதோ ஒரு வகையான நடுக்கத்தை உணர்ந்தாள். மெல்ல வலது கையால் அந்த கதவின் கைப்பிடியை பிடித்தாள். அவள் வலது கை நடுங்கியது. அதை நிறுத்த இடது கையை வலது கை மேல் வைத்து அழுத்தினாள். அப்போதும் நடுக்கம் அடங்கவில்லை. பின் இரண்டு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை ப்ளூவை அழைத்துப் பார்த்தாள். பதிலேதும் வராததால் கீழே சென்று விடலாமென்று மனதில் இருந்த பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து, தைரியத்தை கேடயமாக கொண்டு கதவை திறந்தாள் சக்தி. 

ஒரே கும்மிருட்டாக இருந்தது. முதற்படியின் வலது புறம் இருந்த லைட் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் பேஸ்மென்ட் லைட் எரியவில்லை. சுவிட்சை நன்றாக அழுத்தி பார்த்தாள். அப்போதும் லைட் ஆன் ஆகவில்லை. இருட்டில் செல்ல மனமில்லாது அந்த அறையிலிருந்து வெளியே வந்து எமர்ஜென்சி லைட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் பேஸ்மன்ட்டிற்குள் செல்ல ப்ளூவை அழைத்துக் கொண்டே முதற்படியில் கால் பதித்தாள். அப்போதும் ப்ளூவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 

சக்தி வீட்டு பேஸ்மென்ட்டுக்கு செல்ல இருந்த படிக்கட்டுகளோ பத்து

அவற்றில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து

கை விளக்கு ஏந்திய காரிகை போல் படிகளில் இறங்கி சென்றாள்.

பேஸ்மென்ட்டில் ப்ளூ எப்போதும் அமர்ந்திருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அருகே சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷனில் ப்ளூ இருக்கவில்லை. உடனே கையில் இருந்த அந்த சிறிய விளக்கு கொண்டு சுற்றிப் பார்த்தாள். அவளால் ப்ளூவை பார்க்க முடியவில்லை. 

உடனே ப்ளூ…ப்ளூ…ப்ளூ என்று மெதுவாக அழைத்தாள். 

அதற்கும் பதில் வரவில்லை. 

தள்ளி வைத்த பயம் மீண்டும் வேதாளம் விக்கிரமாதித்தனை தொற்றிக்கொண்டது போல்  தொற்றிக் கொண்டது. 

சட்டென பேஸ்மென்ட் லைட் ஆன் ஆனது. எதிர்பார்க்காத நேரத்தில் லைட் ஆன் ஆனதும் பயத்தில் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை கீழே தரையில் போட்டாள். 

அந்த அறையின் விளக்கு எரிவதை உணர்ந்ததும் நன்றாக பேஸ்மென்ட்டை சுற்றிப் பார்த்தாள். எல்லா பொருட்களையும் நகர்த்தியும் பார்த்தாள். ஆனால் ப்ளூ அங்கு இருக்கவில்லை. பின் மீண்டும் அந்த படிக்கட்டுகளில் ஏறி வெளியே அடுப்படிக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பேஸ்மென்ட் கதவு வழியாக வெளியே வந்து அந்த அறையின் கதவை சும்மா சாற்றி வைத்துவிட்டு அடுப்படிக்குள் சென்று அங்கிருந்த கிரானைட் மேடையில் சாய்ந்து கொண்டு ப்ளூ எங்க போயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு சட்டென யாரோ பேஸ்மன்ட் படிக்கட்டுகளில் கடகடவென இறங்குவது போல் சப்தம் கேட்டதும் அடுப்படியில் இருந்தே எட்டி பார்த்தாள். பேஸ்மென்ட்டுக்கு செல்லும் கதவு திறந்துக் கிடந்ததை பார்த்து தனக்குதானே

“நான் அந்த கதவ சாத்திட்டு தானே வந்தேன்!

அப்புறம் எப்படி அது தொறந்து இருக்கு?”

என்று கூறிக்கொண்டே அந்த அறையின் வாசலுக்கு சென்றவள் உள்ளே செல்ல தயங்கி சற்று நேரம் வாசலிலேயே நின்றாள். பின் சென்று பார்த்துவிடலாம் என்று மனம் உரைத்ததை ஏற்று அதன் படியே மீண்டும் பேஸ்மென்ட்டுக்குள் நுழைந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள். அப்போது மீண்டும் அந்த அறையின் லைட் ஆஃப் ஆனது. அதே நேரம் அவள் காலடியில் எமர்ஜென்சி லைட் சர்… சர்… சர்… சரென ஆடிக்கொண்டிருந்தது. உடனே அதன் ஆட்டத்தை தனது காலால் நிறுத்தினாள். எமர்ஜென்சி லைட் ஆடுவது நின்றது. அதன் வெளிச்சம் நேராக ஓரிடத்தில் வீசியது. அந்த வெளிச்சம் சென்ற திசையிலேயே தனது பார்வையையும் வீசினாள் சக்தி. எமர்ஜென்சி லைட்டின் ஒளி சென்று முட்டி மோதி நின்றிருந்த இடத்தை சக்தியின் பார்வை சென்றடைந்ததும். அவள் அதிர்ச்சிக்குள்ளானாள். 

அதிர்ச்சியில் லைட்டை அழுத்திக் கொண்டிருந்த அவளின் கால் படிக்கட்டுகளை தேடி ஓட தயாரானதும் மீண்டும் அந்த லைட் சர்…சர்…சரென சப்தம் எழுப்பியது. 

வேக வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பேஸ்மென்ட்டை விட்டு வெளியேறிய சக்தி அந்த அறையின் கதவை தாழிட்டு,  அதிலேயே சாய்ந்தபடி உடல் முழுவதும் பயத்தால் வியர்த்து விட, பதற்றத்தில் கை கால் நடுநடுங்க, தனக்கு தானே ஏதேதோ கேள்விகளை கேட்டுக்கொண்டு அந்த கதவில் மெல்ல வழுக்கிக்கொண்டே தரையில் அமர்ந்தாள். 

அப்படி பேஸ்மென்ட்டில் சக்தி பார்த்தது என்ன? அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது? பேஸ்மன்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய ப்ளூ எங்கே?

போன்ற கேள்விகளுக்கான பதில்?

தொடர்வாள்…

சக்தி மனதில் நடந்த பட்டி மன்றத்தின் முடிவு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தீர்ப்பானதும் அவள் அதை ஜேம்ஸிடம் இருந்து தப்பிக்க அவனிடம் குக்கீஸ் தட்டை நீட்டி மீண்டும் குக்கீஸ் எடுத்துக்க சொல்லி வலியுறுத்திக் கொண்டே,

“அது இருக்கட்டும் ஜேம்ஸ் அதை உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன். சொல்லுங்க. சரி நீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட முதல் கணவர் அவங்களை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்கார்னு சொன்னீங்களே அது எப்போ நடந்த சம்பவம்?”

சக்தி அந்த பொக்கிஷம் விஷயத்தை தன்னிடமிருந்து மறைக்க நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளை அவள் போக்கில் சென்று விஷயத்தை தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து,

“மொத்தத்துல அந்த பொக்கிஷம் என்னன்னு சொல்ல மாட்டீங்க.
ஆங்! சரி இப்போ அதை விட்டு விடுவோம். 
என்ன கேட்டீங்க சக்தி?
மிஸ்ஸர்ஸ் டேவிட் சம்பவம் எப்போ நடந்ததுன்னு தானே!
அது நடந்து ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏன்! நீங்க நியூஸ் பேப்பர்ல எல்லாம் பார்த்திருப்பீங்களே.”

“எங்கேந்து! நான் இந்த ஊருக்கு வந்தது எம்.எஸ் படிக்க.
அதுக்கப்புறம் வேலை.
அப்படி இப்படீன்னு பார்த்தா…
நான் இந்த ஊர்ல கடந்த அஞ்சாறு வருஷமா தானே இருக்கேன்”

“ம்…அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”

“ஏன் அப்படி அந்த மனுஷன் செஞ்சாறாம்?”

“சக்தி…அதுவும் அரசியல் தான்.”

“ஓ! சரி நேத்து அவங்க வீட்டு பின்வாசல் கதவு ஏன் தொறந்து இருந்துச்சு?
அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“ம்‌…அது அந்த வீட்டில் வேலை பாக்குற அந்த ஜான் பையனின் அஜாக்கிரதையால நடந்திருக்கு.”

“அப்படியா!
அவன் என்ன செஞ்சான்?”

“வேலையை முடிச்சிட்டு பின் வாசல் கதவை பூட்ட வந்தவனுக்கு அவன் கேர்ள் பிரெண்ட் கிட்டேந்து கால் வந்திருக்கு…
அய்யா அதுல முழுகி கதவை திறந்து போட்டுட்டு அப்படியே ஃபோன்ல பேசிகிட்டே அவன் கேர்ள் பிரெண்ட பார்க்க போயிருக்கான்.”

“அச்சச்சோ! அப்போ நான் கேட்ட அந்த சத்தம்?”

“வீட்டு கதவு திறந்து இருந்ததும், ஒரு பெரிய பூனை வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு…
அந்த நேரம் பார்த்து நீங்க வாசல் கதவை தட்ட…
அது பயந்து வந்த வழியே வெளியே ஓடிருக்கு.”

“சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்தது?”

“எல்லாம் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வீட்டு சிசிடிவி கேமரா மூலமா தான். அப்புறம் அந்த வேலைக்கார பையன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க.
உண்மை வெளிய வந்துது.”

“சூப்பர்.
நானும் எங்க ஓனர் கிட்ட சொல்லி சிசிடிவி பிக்ஸ் பண்ண சொல்லணும்.
எவ்வளவு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு பாருங்க.”

“அது என்னமோ உண்மை தாங்க.”

“சரி சரி பார்த்தீங்களா நான் கேட்ட கேள்விக்கு உங்களை பதில் சொல்ல விடாம அடுத்த கேள்வி கேட்க போய் மொதோ கேள்வி பதில் இல்லாம இருக்கு. அதையும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…”

“ஓ மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் சார்ல்ஸ் விஷயமா!! அது தான் சொன்னேனே அதுவும் அரசியல் தான். ஆனா அதுலேந்து எப்படியோ தப்பிச்ச மிஸ்ஸர்ஸ் சார்ல்ஸ் பின்னாளில் டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் தான் இப்போ அவங்களோட கணவரும் அவங்களோட கல்லூரி நண்பருமான மிஸ்டர் டேவிட்டை கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க.”

“அம்மாடியோ!
ஏதோ பெரிய இடம்ன்னு நாம நினைக்கிறோம் ஆனா அதுக்குள்ள இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு இல்ல!”

“ஆமாம் சக்தி எல்லார் வாழ்க்கையும் அப்படி தான்.
வெளியே தெரியுறது உண்மையான வாழ்க்கை இல்ல.
அவங்கவங்க பணக்காரன், ஆரோக்கியமானவன், ஆசிர்வதிக்கப்பட்டவன்,  அன்பானவன், உதவிபுரிபவன் அப்படின்னு அழகு அழகான முகமூடிகளை போட்டுட்டு வலம் வந்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்.
எனக்குள்ள எவ்வளவு புதைந்து கிடக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதே போல் உங்களுக்குள்ள எவ்வளவு புதைந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  ஏன்னா நாம ரெண்டு பேருமே முகமூடி போட்டுட்டு தான் பழகறோம்.”

“ம்…ஒரு விதத்துல பார்த்தா நீங்க சொல்லறது சரிதான்.
ஆனா பொதாம் பொதுவா எல்லாரும்ன்னு நாம சொல்லிட முடியாது.
சொல்லவும் கூடாது.
நமக்குள்ளேயும் உண்மையான முகத்தோடு வாழறவங்க இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சரி நீங்க சொன்ன விபத்து வருடம் அப்பறம் மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த சார்ல்ஸ்க்கும் நடந்த கல்யாணம் எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா அவன் தான் இவனா இருப்பானோன்னு எனக்கு தோணுது.”

“எவனா! எவன்?”

“என்ன நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க?”

“இல்ல புரியலை சக்தி.
நீங்க கேட்டத வச்சு தான் நான் கேட்டேன்.
வேற யாரு உங்ககிட்ட கேட்டா?”

“அது…அது வந்து.
ஆங்!
நான் கேட்டதையே நீங்களும் கேட்டவை தான் நான் அப்படி சொன்னேன்.”

“சரி இருக்கட்டும்.
இப்போ தெளிவா யார பத்தி சொன்னீங்கன்னு சொல்லுங்க.”

“எங்க காலேஜ் கடைசி நாள்ல நடந்த விஷயத்தை பத்தி சொன்னேன் இல்லையா!”

“ஆமாம் சொன்னீங்க.
அதுக்கு?”

“அதுல ப்ரொபஸர் சேவியர் செய்த அந்த மனிதன் போலவே இருக்கும் ரோபோ விஷயம் எனக்கும் பிஎச்டி மாணவனான பீட்டருக்கும் மட்டும் தான் தெரியும்ன்னும்.
அதை அவனோடதுன்னு சொல்லி அவன் உரிமை கொண்டாட, அதை தடுக்க நினைத்த ப்ரொபஸரை அன்று அந்த இரவு அந்த கோலத்திற்கு உள்ளாக்கியதும் அந்த பீட்டரும் அவன் அப்பாவின் அரசியல் பின்னணியும் தான்னு சொன்னேன் இல்லையா!”

“ம்…ஆமாம் சொன்னீங்க.
ஆங்! இருங்க இருங்க…
இப்போ நீங்க என்ன சொல்ல வரேங்க ன்னா…
அந்த பிஎச்டி மாணவன் பீட்டர்,
இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த அரசியல்வாதி சார்ல்ஸுக்கும் பொறந்த  மகனா இருப்பானோன்னு கேட்க வறீங்க சரியா!”

“ஆமாம்.
அதே தான்.
இதைத் தான் நேத்து ராத்திரிலேந்து எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன்.”

“நீங்க நினைக்கிற மாதிரியே தான்.
இந்த சார்ல்ஸோட மகன் பீட்டரும் நீங்க படிச்சதா சொன்ன அதே கலேஜ்ல தான் படிச்சிருக்கான்.
சோ உங்க யூகம் சரிதான்.
ஆனா அதுக்கு நீங்க ஏன் பதற்றமாகணும்?”

“இல்ல…
ப்ரொபஸரை ஒரு வாரம் வச்சு துன்புறுத்தி,
அவருக்கிட்டேந்து என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு…”

“தெரிஞ்சுகிட்டு? என்ன சக்தி?”

“என்னை அன்னைக்கு கடத்திருப்பானோ?”

“அப்படிங்கறீங்களா?
ஆனா அவன் தான் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட் ல பெராலிஸ் வந்து படுத்து படுக்கயாய் இருக்கான்.
அவனோட சிகிச்சைக்காக டாக்டர்ஸ் அன்ட் நர்ஸ் எல்லாரும் அவன் வீட்டோடு இருக்காங்க.
இந்த நிலையில் அவன் பண்ணிருக்க வாய்ப்பில்லன்னு சொல்ல முடியாது ஆனா வாய்ப்புகள் கம்மி.”

“ஓ! அதுனால தானா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட பையன் இந்த ரெண்டு வருஷமா அவங்கள பார்க்க வரலையா?”

“இருக்கலாம்.”

“ஆனா…இவங்களும் மகனை பார்க்க போனதில்லையே!”

“அது ஏன் அவங்க தான் சொல்லணும்.
இல்லாட்டி…அந்த அரசியல் வாதி அவங்களை பார்க்க விடாமல் செய்திருக்கலாம்.”

“இருக்கும் இருக்கும்.
அந்த பீட்டர் என்னைவிட நாலு வயசு தான் பெரியவன்.
அவனுக்கு இப்படி ஆனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்…
அவன் எங்க ப்ரொபஸருக்கு செஞ்சதை நெனச்சா…
அவனுக்கு இது தேவை தான்னு மனசு சொல்லுது.
நானும் மனுஷி தானே!”

“ம்…புரியுது சக்தி.”

“இப்போ மிஸ்ஸர்ஸ் டேவிட்  எங்க தான் போயிருக்காங்க?
உங்களுக்கு தெரியுமா?”

“ஆமாம்.
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல…
அந்த சார்ல்ஸ் அன்ட் பீட்டர் சேர்ந்து அவங்கள ஏதாவது செய்துட்டாங்களோன்னு பயம் வருது. அதுதான் கேட்டேன்.”

“அவங்க இப்போ அவங்க மகனை பார்க்க தான் போயிருக்காங்க சக்தி.”

“ஆங்! அப்படியா!”

“ஆமாம்.”

“என்ன இத்தனை வருஷம் போகாதவங்க…
திடீர்ன்னு போயிருக்காங்க?
என்னவா இருக்கும்”

“அதை எல்லாம் நினைச்சு குழப்பமாகாதீங்க சக்தி.
நேத்து நியூஸ் பேப்பர் நீங்க படிக்கலையா?”

“எங்கேந்து.
இல்ல படிக்கலை.
ஏன்?”

“அதை படிச்சிருந்தா நீங்க இன்னும் குழம்பி போய் இருப்பீங்க.”

“அப்படியா? அப்படி என்ன நியூஸ் வந்தது.”

“அந்த சார்ல்ஸோட ஒரே  மகன்…
அதாவது சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு பெண்மணி மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு பொறந்த மகனான பீட்டரின் உயிர் ரெண்டு நாள் முன்னாடி அவன் உடலை விட்டு பிரிந்தது.”

“அச்சச்சோ! பீட்டர் இறந்துட்டானா?”

“எஸ் சக்தி.
அதுக்கு தான் மிஸ்ஸர்ஸ் டேவிட் அவசர அவசரமா யார்கிட்டேயும் சொல்லிக்காம போயிருக்காங்க.”

“ச்சே!
நான் ரொம்ப மோசம்.”

“ஏன் அப்படி?”

“பின்ன! அவங்க, அவங்க மகன் இறப்புக்கு போயிருக்காங்க…
ஆனா நான், எனக்கு இப்படி நடந்ததுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருககுமோன்னு யோசிச்சேன்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
அவங்க வந்ததும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.”

“சரி யோசிச்சீங்க.
விடுங்க.
நாம யோசிக்கிறதுக்கெல்லாம் வருத்தப் படணும்னா…
நான் எவ்வளோ யோசிச்சிருப்பேன்…
எத்தனை பேரை சந்தேகப்பட்டிருப்பேன்.
அப்போ நான் எப்படி போய் அவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கறது! ம்…”

“அது உங்க தொழில்.
அதுல தப்பில்ல.
ஆனா நான் அப்படி இல்லையே!”

“அட போங்கங்க.”

“சரி அப்படிப்பார்த்தா…
உங்க சந்தேகம் தப்புன்னு ஆயிடுச்சு.
என் சந்தேகம் தப்புன்னு ஆகலை ஆனா சந்தேகப்பட்ட நபர் இப்போ உயிரோடு இல்ல.
அப்படின்னா என்னை கடத்தியது பீட்டர் தான்னும் அவன் இறந்துட்டான்னும் இந்த கேஸை முடிஞ்சிடுமா?”

“நான் சந்தேகப்பட்ட ருத்ரா இல்லன்னு ஊர்ஜிதம் ஆகிடுச்சு.
ஆனா இப்போ நீங்க சொன்ன சம்பவத்தை வச்சு இந்த கேஸை அப்படி எல்லாம் மூடிட முடியாது
ஏன்னா அந்த பையன் பெரிய அரசியல் புள்ளியின் மகன்.  அது பீட்டராக இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனா அவன் உயிரோடு இல்லைனாலும்…
அந்த டாக்டர் வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?
அந்த ரெண்டு நர்ஸுகளுக்கு ஏன் அப்படி நடந்தது?
இதுக்கெல்லாம் பதில் வேண்டாமா?
அதுக்கும் இறந்து போன பீட்டருக்கும் இல்ல அவன் அப்பனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இதெல்லாம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல என் நண்பன் கட்டிக்க போற 
உங்களுக்காகவாவது அன்னைக்கு நடந்தது என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்.”

“ம்…அப்போ ருத்ராவும் இல்ல, மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் இல்ல, பீட்டரா இருக்க வாய்ப்பிருந்ததுன்னு சொல்லுறீங்க சரி.
ஆனா எங்க ஆஃபிஸ் கேன்டீன் ஸ்டாஃப் அந்த ஜானை விட்டுட்டேங்களே!”

“அவனை தேடிட்டு தான் இருக்கோம்.
நிச்சயம் எங்ககிட்ட மாட்டுவான்.”

“சரி…உங்க காலேஜ் கடைசி நாள் இரவு நடந்த சம்பவத்தை சொன்னீங்களே!  உங்க ப்ரொபஸர் சேவியரை அந்த நிலைமைக்கு தள்ளியது அந்த பீட்டர் தான்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?
இல்ல அவனா இருந்திருக்க ஏதாவது க்ளூ ஆர் எவிடன்ஸ் உங்க கிட்ட இருக்கா?”

“ஆங்! அப்படி எதுவும் என்கிட்ட இல்லை.
எனக்கே அன்னைக்கு மிட் நைட்ல எங்க ப்ரொபஸர் சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் தெரிய வந்துது.”

“சரி…
அதுக்கு முன்னாடி எப்பவாவது உங்க ப்ரொபஸருக்கும் அந்த பீட்டருக்கும் இந்த பேட்டென்ட் விஷயமா பிரச்சினை வந்திருக்கா?
அப்படி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”

“இல்ல…
அப்படி எதுவும் அதுவரை நடந்ததா…
எந்த நியூஸும் வரலை.
எனக்கும் தெரியாது.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“சோ…உங்க ப்ரொபஸருக்கு அப்படி ஆனது பீட்டரால தான்னு உங்களுக்கு உங்க ப்ரொபஸர் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது உங்கிட்ட சொன்னது தான்.
இல்லையா!”

“எஸ். யூ ஆர் ரைட்.”

“அதுவரைக்கும் அந்த சேவியருக்கும் பீட்டருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லைன்னும் நீங்க தான் சொன்னீங்க.
ஆனா எப்படி அன்னைக்கு திடீர்ன்னு உங்க ப்ரொபஸர் சொன்னதை மட்டும்  அப்படியே நம்பினீங்க?”

“நீங்க சொல்லுற மாதிரி அன்னைக்கு என் ப்ரொபஸர் சேவியர் சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவுமில்லாம அந்த பீட்டர் பெரிய அரசியல்வாதி புள்ளை வேறயா அதுனால எல்லாத்தையும் மூடி மறச்சுட்டாங்களோன்னு நானே நெனச்சுக்கிட்டேன்.”

“ம்…இப்படி யோசிச்சு பாருங்க…”

“எப்படி?”

“பீட்டர் அரசியல்வாதி பையன் அப்படீங்கற விஷயத்தை ஏன் உங்க ப்ரொபஸர் யூஸ் பண்ணிருக்கக்கூடாது?”

“புரியலை ஜேம்ஸ்.
அவர் ஏன் அப்படி பீட்டர் பெயரை யூஸ் பண்ணணும்?
அதுவுமில்லாம அன்னைக்கு அவர உயிர் போற நிலைமைக்கு தள்ளியது யாரு?”

“அதோட உங்க கேள்விகளை நிப்பாட்டிடாதீங்க சக்தி.
அவர் ஏன் உங்களை கடைசியாக சந்திச்சதுக்கப்புறமா… விஷால் சொன்னதா நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட் படி ஒரு வாரம் உயிரோடு இருந்திருக்கார்?
எங்க இருந்திருக்கார்?
ஒரு வாரம் தான் இருந்தாரா?
இல்ல இன்னமும் இருக்காறா?”

“அய்யோ! இது என்ன புது குழப்பம்.”

“இல்ல நீங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க சக்தி.
அன்னைக்கு நைட் உங்களை மயானத்துக்கு வரவைத்து உங்களை பதற்றமாக்கி, பீட்டர் பின்னணியை உபயோகப்படுத்தி அவர் சொன்னதை எல்லாம் உங்களை நம்பி வைத்திருக்கக் கூடாது?”

“பட் வை?!
நீங்க சொன்னா மாதிரியே வச்சுக்கிட்டாலும்…
பின்ன ஏன் அவரோட அந்த பொக்கிஷத்தை என்கிட்ட எடுத்துக்க சொல்லணும்.
அவரே வச்சிருக்கலாமே!
அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவர் உயிரோடு இருந்திருந்தா இல்ல இன்னமும் உயிரோடு இருக்கார்ன்னா…
ஏன் அதை தேடி அவர் வரலை?”

“ம்…நவ் யூ ஆர் கம்மிங் டூ தி பாயிண்ட்.
இப்போவாவது சொல்லுங்க அந்த பொக்கிஷம் என்னது?
அதை அவர் சொன்ன இடத்துக்கு போய் எடுத்தீங்களா?
இப்போ அது உங்ககிட்ட தான் இருக்கா?”

“அது…அது வந்து…அது…”

“சக்தி நீங்க இந்த விஷயத்துல என்னை நம்பித்தான் ஆகணும்.
அப்போ தான் ஏதாவது நான் செய்ய முடியும்.
நீங்க அன்னைக்கு இரவு நடந்ததா சொன்ன கதைப்படி அல்லது உங்க ப்ரொஃபசர் உங்கிட்ட சொன்னது படி பீட்டர்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா…
அதுக்கு எவிடன்ஸ்?
ஏன்னா
நீங்க காணாம போனது போலவே!
அதைப் பத்தியும் எந்த நியூஸும் வெளிவரவே இல்லையே!
இதுலேந்தே தெரியலையா?
என்னை பொறுத்தவரை…
எனனோட யூகப் படி அன்னைக்கு உங்க காலேஜ் கடைசி நாள் முதல் 
யாரோ…
எதுக்காகவோ…
உங்களை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த மர்ம நபர் யார்?
உங்களுக்கே தெரியாம நீங்க அந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ள மாட்டிட்டு இருக்கீங்க.”

“இல்ல…இல்ல…இல்ல…
அப்படி எந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ளேயும் நான் மாட்டிக்கவும் இல்ல.
அப்படி எல்லாம் மாட்டிக்கவும் மாட்டேன்.”

“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் சக்தி.
ரிலாக்ஸ்…

ஜேம்ஸ் சொன்னவற்றை எல்லாம் கேட்ட சக்தி நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிப்புக்குள்ளானாள்.

தொடர்வாள்…

ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் தனது படுக்கை அருகே இருந்த லைட் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு படுத்தாள் சக்தி.  பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போல இருந்தாலும், அவற்றிற்கு பின் ஏதோ ஒரு வியூகம் பின்னப்பட்டு  கொண்டே வருவதை போலவும் அவள் மனம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மனக்கண் முன் படம் போட்டு காட்டியதில், உறக்கம் வராமல் வலது புறம் இடது புறம் என புரண்டு புரண்டு படுத்தாள்.

அவ்வாறு தூக்கமின்றி புரளும் போது அவளுக்கு சட்டென மிஸ்ஸர்ஸ் டேவிட் மகன் பெயர் ஞாபகம் வந்தது. உடனே தனது மொபைலை எடுத்தாள். அதில் ஜேம்ஸிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தாள். மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். பின்பு

“அவன் தான் இவனா? அப்படின்னா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட்? ஐயய்யோ! யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகிட்டே போகுதே! ஆண்டவா அன்னைக்கு எனக்கு என்னதான் நடந்தது?”

என்று தனக்கு தானே  பேசிக்கொண்டாள். அதே சிந்தனைகளில் மூழ்கியவள் முத்தேதுமின்றி குழப்பம் என்னும் முட்டு சந்தில் மோதி நின்றாள். யோசித்து யோசித்து அவளுக்கே தெரியாது உறக்கம் என்னும் யோக நிலையை அடைந்தாள்.

மறுநாள் காலை விடிந்ததும்‌ வழக்கம் போல ப்ளூ அவளருகே வந்து அவளை எழுப்பியது. ஆனால் இந்த முறை அவள் டூ மின்ட்ஸ் என்று டைம் கேட்கவில்லை. மாறாக விருட்டென எழுந்து கொண்டு ப்ளூவை பார்த்து

“அவனா இவன்?”

என்று கேட்டாள். அதை கேட்ட ப்ளூ அவளையே உற்றுப் பார்த்து

“எவனா! எவன்?”

என்று கேட்டது. ப்ளூவின் பதிலை கேட்டு சக்தி சலித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை பார்த்த ப்ளூ விடியற்காலையில் அவளின் சலிப்புக்கு காரணமறியாது விழித்தது. சக்தி வெளியே வந்து  ஏதாவது சொல்வாள் என்றெண்ணி சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தது. ஆனால் அவள் வரவில்லை என்றதும் பாத்ரூம் அருகே சென்று,  தான் கீழே செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

சக்தியும் குளித்து ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். அதைப் பார்த்த ப்ளூ அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் ஒன்றுமில்லை என்ற பதிலை சொல்லிவிட்டு வழக்கமான ரெண்டு பிரட் டோஸ்ட் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

சக்தி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட ப்ளூ மெல்ல அவளருகே சென்று,

“தீ… தீ…
நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு எனக்கு தெரியுது.”

“சரி ஓகே! தெரிஞ்சுகிட்ட இல்ல. இப்போ என்ன அதுக்கு”

“இல்ல என் கிட்ட பகிர்ந்துக்குறதால   உன் குழப்பத்துக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…ன்னா 
என்கிட்ட சொல்லு நான் ஏதாவது சல்யூஷன் தர முடியுமா…ன்னு பார்க்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ளூ.
ப்ளீஸ் லீவ் மி அலோன்.”

“ஓகே.
தென் இட்ஸ் அப் டூ யூ.
நான் வரேன்.”

“எங்க போற ப்ளூ.”

“இப்போ நீ தான் உன்னை தனியா விட சொன்ன…
அதுதான் நான் இங்கேந்து என்னோட சார்ஜிங் ஸ்டேஷனுக்கே போகலாம்னு கிளம்பிட்டேன்.”

“ம்‌…அதுவும் சரி தான்‌.
நானா கூப்பிடாத வரைக்கும் நீ இங்க வர வேண்டாம்.
அங்கேயே இரு ப்ளூ.
சரியா.”

“முன்னெல்லாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவ…
ஆனா இப்போ எல்லாம் என்னை போ போன்னு சொல்லுற!!”

“அது அப்படி இல்ல ப்ளூ.
எல்லாம் உன் நல்லதுக்கும்…
என்னோட நல்லதுக்கும் தான் அப்படி சொல்லறேன்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ப்ளூ.
நான் ஆல்ரெடி ஏதேதோ நினைச்சுக்கிட்டு ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன்.
ப்ளீஸ் டிரை டூ அன்டர்ஸ்டான்ட் மி.”

“அச்சோ! தீ.
உன்ன நல்லா அன்டர்ஸ்டான்ட் பண்ணிருக்கறதால தான் நான் உன்கிட்ட அப்படி கேட்டேன்.”

“புரியுது ப்ளூ.
ஆனா அதுக்கான எக்ஸ்பிளநேஷன் குடுக்குற நிலைமையில இப்போ நான் இல்ல.
உன்கிட்ட எப்போ சொல்லணும்னு எனக்கு தோணுதோ அப்போ நிச்சயம் உன்கிட்ட நானே வந்து சொல்லுவேன்.
ஓகே வா.”

“ம்…சரி தீ.
நான் பேஸ்மென்ட் போறேன்.
நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்.
பை.”

“குட் பாய் ப்ளூ.
ஐ லவ் யூ.
பை ஃபார் நவ்‌.”

என்று ப்ளூவை இறுக்க கட்டியணைத்துக் கொண்டு சக்தி கூறியதும். ப்ளூ அங்கிருந்து கிளம்பி சக்தி வீட்டு பேஸ்மென்ட்டில் இருக்கும் அதன் சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று செட்டில் ஆனது. இரவு சரியாக தூங்காத சக்தி, காலை உணவை அருந்தியதும் அப்படியே அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டே தனது மொபைலில் வந்த அவளது ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதிலளித்தாள். பின் அந்த சோஃபாவின் இருபுறமும் போடப்பட்டிருந்த சைட் டேபிளில்,  சக்தியின் தலைமாட்டில் இருந்த ஒரு ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தாள். அதில் அவள், நவீன் மற்றும் மிருதுளா இருந்தனர். அந்த புகைப்படம் போன வருடம் நவீனும் மிருதுளாவும் சக்தியை காண மெட்ஸ் வந்தபோது காத்தெட்ரெல் ஆஃப் செயின்ட் ஸ்டீஃபன் முன் நின்று எடுத்ததாகும். அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

“அப்பா அம்மா எனக்கென்ன நடக்கறதுன்னே புரியலை.
நான் எந்த தப்பும் செய்யலை.
நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.
இருப்பேங்கள்.”

என்று கூறிக்கொண்டே மெல்ல கண் அசந்தளாள். சற்று நேரத்தில் அவள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் அவள் எழவில்லை. மீண்டும் ஒலித்தது. அது சக்தியின் உறக்கத்தை கலைத்தது. உடனே எழுந்து வேகமாக வீட்டின் கதவை திறந்தாள்.

“ஹாய் சக்தி.
என்ன காலையிலே தூங்கறீங்களா?
சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ!”

என்று கேட்டுக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை வீட்டிற்குள் வரச் சொல்லி, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமரச் சொன்ன சக்தி அங்கே அவள் உண்டும் குடித்தும் வைத்திருந்த தட்டு மற்றும் காபி கப்பை எடுத்து அடுப்படியில் வைத்துக் கொண்டே ஜேம்ஸிடம்

“ஜேம்ஸ் வாட் வுட் யூ லைக் டு ஹால்?
காபி, டீ ஆர் ஜூஸ்?”

“காபி வுட் டூ சக்தி.”

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”

என்று கூறியது போலவே இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு ட்ரேயில் ஒரு கப் காஃபி மற்றும் குக்கீஸுடன் வந்த சக்தி, அதை ஜேம்ஸ் முன் வைத்து,

” ம்…எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.”

என்றாள். ஜேம்ஸும் வலது கையில் ஒரு குக்கீஸையும் இடது கையில் காபி கப்பையும் எடுத்துக் கொண்டே

“உங்களுக்கு?”

“இப்போ தான் நான் குடிச்சேன்.
நீங்க வந்த போ தான் குடிச்ச காபி கப் அன்ட் டோஸ்ட் சாப்ட்ட ப்ளேட் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே போனேன்.
நீங்க சாப்பிடுங்க.”

“ஓகே.
ம்…காஃபி இஸ் குட்.
குக்கீஸ் டூ.”

“தாங்க்ஸ் ஜேம்ஸ்.
நேத்து நைட் உங்க மெஸேஜ் படிச்சதுலேந்து எனக்கு தூக்கமே வரலை.
சொல்லப் போனா நான் நேத்து சரியாவே தூங்கலை.
அதுதான் இன்னைக்கு காலையிலேயே சோஃப்வுல சும்மா படுத்தேன்.
அப்படியே தூங்கிட்டேன்.”

“இல்ல சக்தி.
சில விஷயங்களை மஸேஜஸ் ல விவரிக்க முடியாது.
நேருல தான் சொல்ல முடியும்.
அப்படி சொல்லறது தான் நல்லதும் கூட.
அதுனால தான் நான் இப்போ வந்தேன்.
அதுவுமில்லாம நானும் நேத்து நைட் புல்லா சரியாவே தூங்கலன்னு வச்சுக்கோங்க!!”

“ஏன் ? இந்த கேஸ் பத்தி ரொம்ப நேரம் ஏதாவது யோசனையில இருந்தேங்களா?
இருக்கலாம்! இருந்திருக்கலாம் தான்!
ஏன்னா என்னை சுத்தி நடக்கறது என்னனென்னே தெரியாத எனக்கே தூக்கம் வராதப்போ…
அதை டீல் பண்ணற உங்களுக்கு எப்படி இருக்கும்.
புரியறது.”

“அச்சச்சோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.
எல்லாம் நம்ம ருத்ராவால தாங்க.”

“என்னது ருத்ராவாலையா?”

“இல்ல இல்ல…
இந்த கேஸுக்கும் அவங்களுக்கும் எந்த கனக்ஷெனும் இல்லைங்கறது எனக்கு ஊர்ஜிதமாகிருச்சு.
ஏன்னா அவங்க வாங்கினதா சொன்ன அந்த ஜூஸ் ஷாப் அன்ட் அவங்கள விசாரிச்சு பார்த்ததுன்னு…
எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்ததுல தெரிஞ்சுது.”

“அப்புறம் ஏன் ருத்ராவாலன்னு சொன்னீங்க?”

“அது வந்து…
அவங்க நேத்து கால் பண்ணினாங்க.
அவங்க என்னங்க படு ஒப்பன் டைப் ஆ இருக்காங்க.
படபடபடன்னு அவங்க கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்ன்னு எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிட்டங்க.”

“அவ அப்படி தான்.
கொஞ்சம் வெகுளி வேற.
அவளோட இந்த குணத்த நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க.
அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.
ஆனாலும் அவ கொஞ்சம் கூட தன்ன மாத்திக்கவே இல்ல.
ஆனா அடிப்படைல அவ தங்கமான பொண்ணு.
அதுனால தான் நீங்க என்கிட்ட அன்னைக்கு அவளை விசாரிக்கணும்ன்னு சொன்னப்போ நான் அவ செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன்.
ஆனாலும் வசுவோட பேச்சு அன்ட் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்னையும் அவள சந்தேகப்பட வச்சுடுத்து.
என்ன செய்ய.
இப்போ நீங்க சொன்னதும் அவள்ட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்னு தோணறது.”

“உண்மை தான்.
அவங்க ரொம்பவே வெகுளியா இருக்காங்க.
ஆனா அவங்க கிட்ட பேசினது லேந்து அவங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ப்ளீஸ் ஜேம்ஸ்.
அவளோட நல்ல ஃபிரெண்டா சொல்லறேன்.
உங்களுக்கு அவளை பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காட்டாலும்  சரி…
எதுவானாலும் அவ கிட்ட சொல்லிடுங்க.
இல்லாட்டி அவ பாட்டுக்கு மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிடுவா.
இன்நேரம் ஆரம்பிச்சிருப்பா.”

“இல்ல இல்ல என்னோட விருப்பத்தை நேத்தே சொல்லிட்டேன்.”

“பரவாயில்லையே கண்டதும் காதல் ஆ.
பேஷ் பேஷ்.
அப்போ உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எங்க கல்யாணத்தோட சேர்த்து நடந்திடுவோம்.
என்ன சொல்லுறீங்க?”

“எனக்கு ஓகே.
ஆனா ஒரே ஒரு கன்டீஷன்.”

“கன்டீஷனா!
அது என்ன?”

“உங்களோட இந்த கேஸ் முடிச்சிட்டு தான் கல்யாணம்.”

“டன். டீல்.
சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயம் ஏதோ பெரிய லெவல்ன்னு எல்லாம் எழுதி இருந்தீங்களே…
அது என்ன?
அவங்க வீட்டுக்கு பின் வாசல் வழியா நேத்து வந்துட்டு போனது யாரு?
ஏன் வந்தாங்க?”

“பாருங்க…
அதை பத்தி பேச வந்துட்டு…
நான் பாட்டுக்கு என் கதையை பேசிட்டே இருக்கேன்.”

“உங்க கதை மட்டுமில்ல.
என் தோழியோட கதையும் தான்.
அதுனால மன்னிப்போம் மறப்போம்.”

“அப்பா எவ்வளோ பெரிய மனசுங்க உங்களுக்கு.”

“நன்றி.
சரி இப்போ சொல்லுங்க”

“உங்க பக்கத்து வீட்டு பெண் அந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் அவங்களோட புருஷன் மிஸ்டர் டேவிட் அன்ட் அவங்களோட முன்னாள் புருஷன்னு எல்லாரோட  பேக்ரௌண்ட் செக் பண்ணினதுல…
அவங்க முன்னாள் புருஷன் வேற யாருமில்லை இந்த நாட்டோட பெரும் அரசியல் புள்ளி மிஸ்டர் சார்ல்ஸ் டிக்சன்னு தெரிய வந்திருக்கு.”

“ஓ! மை காட்!
நான் அவர பத்தி நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்.
ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட் ஒரு நாள் கூட அவர் பத்தி சொன்னதில்லை.”

“எப்படி சொல்லுவாங்க சக்தி.
அந்த ஆளு பண்ணிண செயல் அப்படி.”

“அப்படி என்ன பண்ணிருக்காரு?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்காருன்னா பாருங்களேன்.”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
அவங்க தங்கமான மனுஷியாச்சே!
அவங்கள ஏன்?
எதுக்கு அப்படி செய்ய முயற்சி செஞ்சிருக்காரு?”

“அதை நான் சொல்லறேன்.
அதுக்கு முன்னாடி நீங்க என் கிட்ட ஏதோ சொல்லணும்னு மெஸேஜ் ல குறிப்பிட்டிருந்தீங்களே!
அது என்னன்னு சொல்லுங்களேன்.”

“அது…அது வந்து…”

“ஏன் இழுக்குறீங்க சக்தி?
எதுவானாலும் சொல்லுங்க.”

“இல்ல அது இந்த கேஸுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியலை.
ஆனாலும் அதை உங்ககிட்ட சொல்லிட சொல்லி விஷால் சொன்னான்.”

“சரி அப்படி என்ன அந்த விஷயம்ன்னு சொல்லுங்க.
அது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்டதா இல்ல சம்பந்தபடுமான்னு எல்லாம் நான் தீர்மானிச்சுக்கிறேன்.”

என்று ஜேம்ஸ் கூறியதும் சக்தி படபடவென அவர்களின் காலேஜ் இறுதி நாளில் நடந்த சம்பவங்களை, விஷால்  பிரப்போஸ் பண்ணியதில் இருந்து ப்ரொஃபசர் சேவியரை பார்த்து பின் அங்கிருந்து கிளம்பி வந்தது வரைக்கும் சொல்லி முடித்தாள். அவளை இடைமறித்து பேசாது பொறுமையாக அனைத்தையும் கேட்ட ஜேம்ஸ் அவளிடம்,

“அப்போ…
அந்த ப்ரொஃபசர் சேவியர் இறந்துட்டாறா?”

“அப்படி தான் நான் நினைச்சு அங்கேந்து வேகவேகமா வந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே இறந்துட்டாறா இல்லையான்னு எனக்கு தெரியாது.”

“சரி அவர் இறந்துட்டார்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?”

“பேசிட்டே இருந்தவரு சட்டுன்னு தலையை குனிந்துட்டார்.
நானும் அவரை எழுப்பிப் பார்த்தேன் ஆனா அவர் எழுந்துக்கல.
அதுனால இறந்துட்டார்ன்னு நினைச்சுட்டேன்.”

“அவர் மயக்கமடைந்திருக்கலாம் இல்லையா?
நீங்க அவர் ஹார்ட் பீட் ஆர் பல்ஸ் செக் பண்ணிருக்கலாமே!”

“செய்திருக்கலாம் தான்.
இப்போன்னா நிச்சயம் அதெல்லாம் செய்திருப்பேன்.
ஆனா அன்னைக்கு நான் இருந்த நிலைமை அப்படி.
அர்த்த ராத்திரி…
மயானம் வேற…
பயத்துல அங்கேந்து எப்படியாவது கிளம்பிடணும்ன்னு தான் தோணிச்சு.
நீங்க சொன்னா மாதிரி எல்லாம் செக் பண்ண தோணவே இல்ல.
என்ன பண்ண?”

“ம்…
உங்க சிட்டுவேஷன் அப்படி.
புரியுது‌…”

“அப்படின்னா அவர் உயிரோட தான் இருக்காறா?”

“இல்ல இல்ல…
இருக்கலாம்.
இல்லாமையும் இருக்கலாம்.”

“இல்லையே! இருங்க…இருங்க
இப்போ தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது…
வி கிட்ட… இதை எல்லாம் சொன்னப்போ…
அவன் கூட ப்ரொபஸர் சேவியர் ஏதோ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்னு சொன்னான்.
அதுவும் நாங்க காலேஜ் முடிச்சு வெளிய வந்த ஒரு வாரத்துலன்னு சொன்னதா ஞாபகம்…
அப்படிப் பார்த்தா அவரை நான் சந்திச்சதுக்கு அப்புறமா ஒரு வாரம் உயிரோட இருந்திருக்காறா?”

“ஓ! அப்படியா!
சரி அதை விஷால் கிட்ட விசாரிச்சுக்கறேன்.
அந்த ப்ரொபஸர் சொன்ன அந்த பொக்கிஷம் இருந்த இடத்துக்கு நீங்க போய் பார்த்தீங்களா?
அது என்னது?”

“அது வந்து…அது…வந்து…”

“ஏன் சக்தி தயங்குறீங்க?”

என்று ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கிய சக்தி மனதிற்குள் அதை ஜேம்ஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பட்டிமன்றம் நடந்தேறியது.

பொக்கிஷம் பற்றிய ரகசியத்தை சொல்லலாமா! வேண்டாமா! என்ற மனப் பட்டிமன்றத்தின் முடிவைத் தேடி…

தொடர்வாள்…

அத்தியாயம் 31: அழைப்பு-இணைப்பு

ஜேம்ஸின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் டேவிட் வீட்டு விசாரணையில் முழுமனதோடு அவனால் ஈடுபட முடியாது போனது. அவன் உடனே அங்கு இருந்த அவன் டிப்பார்ட்மென்ட் ஆட்களிடம் சில விவரங்களை சேகரித்து அவனது மொபைலுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சக்தியும் அவள் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் இட்டாள். வீட்டினுள் நுழைந்த சக்தி முன், சுட சுட ஒரு கப் காபியுடன் வந்து நின்ற ப்ளூ, அதை அவளிடம் கொடுத்தது. அவளும் காபியை எடுத்துக் கொண்டு ப்ளூவிடம் நன்றி கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்‌. அப்போது ப்ளூ அவளருகே சென்று
சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலுக்கு சென்றாள்?
அவளை பார்க்க வந்த நபர் யார்?
ஏன் டேவிட் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது?
என்று பல கேள்விகளை கேட்டு பதிலுக்காக சக்தியை பார்த்து நின்றிருந்தது.

ப்ளூ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டே வரிகளில் பதிலளித்தாள்.

“தோணிச்சு போனேன். கதவு தொறந்து இருந்துது…சோ… போலிஸை வர வச்சேன்.”

என்று கூறி குடித்த காபி கப்பை அங்கிருந்த காஃபி டேபிளில் வைத்து விட்டு தனது அறைக்கு செல்ல எழுந்தாள். அப்போது ப்ளூ மீண்டும் அவளிடம்,

“மிஸ்ஸர்ஸ் டேவிட் அவங்க வீட்டுல இல்லையே! அப்புறம் எப்படி கதவு தொறந்திருந்தது?”

“அதை கண்டு பிடிக்க தான் போலிஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவா கண்டுபிடிச்சுப்பா.”

“ஸோ… உன் கூட பேசிட்டு இருந்தது போலிஸா?”

“ஆமாம். சரி ப்ளூ நான் என் ரூமுக்கு போறேன். பை. ஐ வில் கம் ஃபார் டின்னர் அட் எய்ட். ஓகே.”

“ஓகே தீ. டேக் ரெஸ்ட்”

என்று ப்ளூ கூறியதும் சக்தி அவளது அறை கதவை மூடினாள். பின் உடைகளை மாற்றி ஃபிரெஷ் ஆனா பின் படுக்கையில் படுத்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து விஷாலுக்கு கால் செய்தாள். ஆனால் விஷால் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள். கால் வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. உடனே தான் தான் அழைப்பதாகவும் அன்று நடந்த சிலவற்றை பற்றி பேச வேண்டுமென்றும், டைம் கிடைக்கும் போது திருப்பி அழைக்க சொல்லிவிட்டு வாய்ஸ் மெயிலை துண்டித்தாள்.  பின்பு சில ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டு அப்படியே சற்று அசந்து தூங்கிப் போனாள்.

அவள் வலதுபுறமாக திரும்பி படுத்திருந்த மெத்தையில் அவளின் இடுப்புக்கு அடியில் புஸ்… புஸ்…. புஸென அவளின் மொபைல் அதிர்ந்ததில் விருட்டென எழுந்து மொபைலை துழாவி தேடியெடுத்துப் பார்த்தாள். அவள் எதிர் பார்த்த கால் விஷால் இடமிருந்து ஆனால் அழைப்பு வந்ததோ அவள் பெற்றோரிடமிருந்து. கண்களை நன்றாக கசக்கி தூக்கத்தை கலைத்து கொண்டே அவளின் பெற்றோரை மொபைலில் வீடியோ காலில் அழைத்தாள். அவளின் அழைப்புக்காக காத்திருந்த நவீனம் மிருதுளாவும் உடனே வீடியோ காலில் இணைந்தனர்‌.

வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும். கல்யாண தலைப்பை வாசிக்க ஆரம்பித்தனர் நவீன் மற்றும் மிருதுளா. அதை கேட்ட சக்தி அவர்களிடம்

“அப்பா அன்ட் அம்மா…கல்யாண விஷயத்துல ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களுக்கு சொல்லுவேன். சோ…நீங்க அதுக்காக கால் பண்ணி கேட்க வேண்டாம். ஓகே வா.”

“சரி மா. இனி நீயா சொல்லற வரைக்கும் நாங்க அதை பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம். போறுமா.”

“தாங்க்ஸ் மா.”

“அப்பறம் உங்க ஆஃபிஸ் ல, உன் பக்கத்து வீட்டு அம்மா மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுல எல்லாம் என்ன விஷேஷங்கள்.”

“ஆங்! ஏன் கேட்கற அப்பா? உனக்கு பேச வேறெதுவும் இல்லையா “

“பின்ன என்ன நீ! நாங்க உன் கிட்ட வேற எதைப் பத்தி தான் பேசறது? உன் கல்யாணத்த பத்தி பேசக்கூடாதூன்னுட்ட!”

“அப்பா! ஓகே ஓகே! ஆஃபிஸ் வேலை எல்லாம் நல்லா போறது. அப்புறம் நம்ம  பக்கத்தாத்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் ரெண்டு பேருமே எங்கயோ ஊருக்கு போயிருக்கா.”

“இன்னைக்கு அவங்க வீட்டு கதவு கூட திறந்து கிடந்தது மிஸ்டர் நவீன். அப்போ நம்ம தீ தான் போலிஸுக்கு கால் செஞ்சு அவங்களை வர வச்சு இப்போ விசாரணை போயிட்டிருக்கு.”

உடனே காலை ம்யூட் செய்த சக்தி ப்ளூவைப் பார்த்து

“ஹே ப்ளூ இதை ஏன் இப்போ அவங்க கிட்ட சொன்ன?”

“ஏன் சொன்னா என்ன தீ?”

“அவங்க பயந்துட மாட்டாங்களா ப்ளூ!”

“ஹலோ! ஹலோ தீ! நீ இருக்கயா?”

“நவீ… ஒரு வேளை நம்ம இன்டர்நெட் கட் ஆகியிருக்கோ என்னவோ.”

ஃபோனை அன்மியூட் செய்த சக்தி

“ஆங்… அப்பா…அம்மா என் சைட்ல தான் ஏதோ ப்ராப்ளம். இப்போ சரி ஆயிடுத்து.”

“சரி கால் கட் ஆகறதுக்கு முன்னாடி ப்ளூ ஏதேதோ சொல்லித்தே! அங்க என்ன ஆச்சு? மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் அவ ஆத்துக்காரரும் நன்னா இருக்காளோனோ!”

“அதுதானே! அப்படி கேளுங்கோ நவீ. இவ என்னடான்னா அவா ஊருக்கு போயிருக்கான்னு சொன்னா… ஆனா ப்ளூ என்னடான்னா…”

“அம்மா! அம்மா! உடனே உன்னோட கற்பனா சக்தியை எல்லாம் இங்க கொண்டு வந்து உன்னையும் குழப்பி அப்பாவையும் குழப்பிடாதமா.”

“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்லு.”

என்று மிருதுளா கேட்டதும் சக்தி அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்ததில் இருந்து அப்போது அவர்களுடன் போனில் பேசக் கொண்டிருந்தது வரை கூறி முடித்தாள். அதை முழுவதுமாக கேட்ட நவீன் மிருதுளா தம்பதியினர் அதிர்ச்சிக்குள்ளாகி ஏதும் பேசாது இருந்தனர். அப்போது சக்தி அவர்களிடம்

“அப்பா…அம்மா… இருக்கேங்களா? இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு?”

” ம்…இருக்கோம் இருக்கோம். ஏன் மா தீ…”

“சொல்லுப்பா”

“அந்த ஊரு நல்ல சேஃபான ஊருன்னு இல்ல நெனச்சேன்!”

“இப்போ என்ன ஆச்சுப்பா?”

“இப்படி எல்லாம் நடக்கறதே!”

“அப்பா…அது ஏன் நடந்ததுன்னு போலிஸ் விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுவாப்பா. சோ கவலை படாதே.”

“அது சரி டி. ஆனா நீ எப்படி போலிஸுக்கெல்லாம் ஃபோன் பண்ணி வர சொன்ன?”

“ஏன் மா. நான் சொல்லக் கூடாதுன்னு மெட்ஸ் கவர்மென்ட் ஏதாவது ரூல்ஸ் போட்டிருக்கா என்ன?”

“அதுக்கில்லடி…நாளை பின்ன அந்த திருடனுக்கு நீ தான் போலிஸுக்கு போனன்னு தெரிஞ்சுதுன்னா?”

“அம்மா கவலையே வேண்டாம் அந்த போலிஸ்காரர் ஜேம்ஸ் எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான்.”

“என்னது! அது எப்படி போலிஸ்காரரை உனக்கு தெரிய வந்தது.”

பேச்சுவாக்கில் ஜேம்ஸ் பற்றி சக்தி கூறியதும் அதைப் பிடித்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். தான் தேவையில்லாமல் ஜேம்ஸ் பெயரை கூறிவிட்டோமே என்று  எண்ணிய சக்தி சட்டென

“ஊப்ஸ்!…”

என்று தனக்குத் தானே சொல்லியதை கேட்ட நவீன் அவளிடம்

“ஹே தீ! நீ ஏதாவது எங்க கிட்டேந்து மறைக்கறீயா?”

“ஏன் பா அப்படி கேட்கற?”

“இல்ல இவ்வளவு வருஷமா நீ அங்க வேலைப் பாக்கற! ஆனா இப்போ நீ அந்த விஷாலை பார்க்க பாரிஸ் போனது லேந்து… அங்க என்ன நடக்கறதுன்னே எங்களுக்கு தெரிய மாட்டேங்கறது. ஏதேதோ நடக்கறதாகவும் நாங்க சங்கட படக்கூடாதூன்னுட்டு நீ எங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறதாகவும் சதா சர்வநேரமும் உன் அம்மாவோட புலம்பலை தான் கேட்டுண்டே இருக்கேன். இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா…அவ சொல்லறதுலேயும் ஏதோ இருக்கறா மாதிரின்னா இருக்கு!”

“அச்சோ! அப்பா. ஜேம்ஸ் என்னோடு புது ஃப்ரெண்டுப்பா.”

“அது எப்படி போலிஸ்காரர் உனக்கு ஃப்ரெண்ட் ஆனார்? நீ எதுக்காவது அவர் கிட்ட போயிருந்தா தானே உனக்கு அவரை தெரிய வாய்ப்பிருக்கு.”

“அது தானே! உன் அம்மா சொல்லறதும் சரிதானே!”

“சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் மா. ஆனா நான் அவர்கிட்ட எதுக்கும் போகலை.”

“பின்ன எப்படி டி உனக்கு அவர் ஃப்ரெண்ட் ஆனார்?!”

“அம்மா…என்னை பேச விடுமா. அப்போ தானே நான் சொல்ல முடியும்.”

“ம்…சரி சொல்லு.”

“நீ முந்தி மாதிரி இல்லமா. உன் பொறுமை எல்லாம் எங்க போச்சு?”

“ம்…அதை எல்லாம் தோச்சு காயப்போட்டிருக்கேன் போதுமா.”

“ஹீ ஹீ ஹீ! உன் ஜோக்குக்கு சிரிச்சுட்டேன் ஓகே வா. சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட். ஜேம்ஸ் விஷாலோட ஃப்ரெண்ட்… சோ… அவர் எனக்கும் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்”

“இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே தீ மா”

“அப்பா எங்க நீங்க ரெண்டு பேரும் என்னை சொல்ல விட்டேங்கள்.”

“அவர் நம்ம ஊர் காரறா? இல்ல அந்த ஊர் காரறா?”

“அப்பா…அவர் நம்ம ஊர் காரர் ஆனா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். சோ… 95% இந்த ஊர் காரர் தான்.”

“சரி சரி எதுவா இருந்தா என்ன…எதுக்கும் நீ கொஞ்சம் அந்த போலிஸ் காரர்ட்டேந்து தள்ளியே இரு.”

“ஓகே மா. சரி நான் வச்சுடட்டுமா. வி கால் பண்ணறான்.”

“ஓகே டா. டேக் கேர். பை”

“பை ப்பா.”

“நாங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோடி.”

“சரி மா. பை பை.”

“ம்…சரி பை.”

என்று பெற்றோரின் அழைப்பை துண்டித்து விட்டு விஷாலின் அழைப்பை ஏற்ற சக்தி அவனிடம் அன்று நடந்த விவரங்களை கூறி முடித்தாள். அவள் கூறியதனைத்தையும் கேட்டு முடித்த விஷால் சக்தியிடம்,

“தீ… ஜேம்ஸ் ஏன் அவன் கிட்டேந்து  எதையாவது மறைக்கிறியான்னு கேட்கணும்?”

“இது எல்லா போலிஸ் காராலும் கேட்கற வழக்கமான கேள்வி தானே வி.”

“தீ…நீ ஒண்ணு கவனிச்சியா?”

“என்னது வி”

“ஜேம்ஸ் கிட்ட நாம காலேஜ் லாஸ்ட் டே நடந்த விவரங்களை சொல்லாம விட்டுட்டோம்.”

“என்னது நீ என்னை ப்ரப்போஸ் பண்ணிணதையா?”

“இல்ல தீ. அதுக்கப்புறம் நீ வெளிய போனது. அந்த ப்ரொபஸர் சேவியரை பார்த்தது. உன் மொபைலை காரில் தொலைத்தது. இதெல்லாம் நீ ஜேம்ஸ் கிட்ட சொல்லலையே!”

“ஆனா…அதெல்லாம் எப்பவோ நடந்தது வி. அதை ஏன் நான் ஜேம்ஸ் கிட்ட இப்போ சொல்லணும்? அதுவுமில்லாம ப்ரொபஸர் இன்னும் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாது.”

“அதுனால என்ன தீ. எனக்கென்னவோ நீ ஜேம்ஸ் கிட்ட அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லிருக்கணும்ன்னு தோணறது.”

“ஆனா எனக்கென்னவோ அன்னைக்கு நடந்ததுக்கும் இப்போ நடக்கறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு தான் தோணறது.”

“எதுக்கும் அதை அவன்ட்ட சொல்லிட்டா அவனும் ஏதாவது லிங்க் இருக்கான்னு விசாரிப்பான் இல்ல தீ.”

“ம்…அதை பத்தி விசாரிக்கணும்னா ஒண்ணு அவர் ப்ரொபஸர் சேவிரை மீட் பண்ணணும்… இல்லாட்டி… அந்த பீட்டரை மீட் பண்ணணும். இதுல ப்ரொபஸர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாது. அந்த பீட்டர் எங்க இருக்கான்னோ இல்ல இருக்கானா இல்லையான்னே தெரியாது. எப்படி? எதை? வச்சு ஜேம்ஸ் லிங்க் பண்ணுவார்?”

“ஏய் தீ! தட் இஸ் ஹிஸ் ஜாப். யார் கண்டா இதுவே கூட அவனுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல லீட் கிடைக்க வாய்ப்பா அமையலாம் இல்ல.”

“ம்…சரி நான் இப்போ என்ன பண்ணனும்?”

“நாளைக்கு மொதோ வேலையா நீ ஜேம்ஸுக்கு கால் செஞ்சு நடந்ததை அவன்கிட்ட சொல்லிடு.”

“ஓகே. டன்.”

“என்ன தீ இது! நாம கல்யாணம் பண்ணிக்க போறவா மாதிரியா பேசிக்கறோம். ஏதோ டிடெக்டிவ்ஸ் டிஸ்கஷன் மாதிரின்னா இருக்கு.”

“ஹா…ஹா…ஹா… அப்படின்னா நான் நான்சி அன்ட் நீ ஷெர்லாக் ஓகே வா.”

“விளையாடாதே தீ.”

“சரி சரி…நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசினியா? நான் எப்போ அவாள்ட்ட பேசறது?”

“ம்.‌.. நான் பேசினேன்.
நான் டே ஆஃப்டர் டுமாரோ மெட்ஸ் வரேன் இல்லையா…அப்போ நீயும் அவாள்ட்ட பேசலாம். ஓகே வா.”

“டபுள் ஓகே.
சரி சரி ரொம்ப நேரமாயிடுத்து வி.
நான் காலை கட் பண்ணட்டும்மா?”

“ம்… அதுக்குள்ளேயே வா.”

“அதுதான் நாளன்னைக்கு நீ இங்க வரப்போறயே பின்ன என்ன. அப்போ பேச மிச்சம் மீதி ஏதாவது வை. இப்போ பை.”

“சரி சரி உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்கறது.”

“எல்லாத்தையும்… கல்யாணத்துக்கு அப்புறமா நீ எதிர்பார்க்காததையும்…”

“ஆமாம் இப்படி எல்லாம் பேசிட்டு வை. அப்புறம் எங்கேந்து நான் தூங்க.
சரி சரி பை ஃபார் நவ்”

என்று விஷால் கூறியதும் அழைப்பை துண்டித்தாள் சக்தி. பின் சற்று நேரம் அவனையும் அவன் கடைசியாக கூறியதையும் மனதில் அசைப்போட்ட சக்தி புன்னகைத்துக் கொண்டே மொபைலை பார்த்தாள். அதில் ஜேம்ஸிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள். உடனே அதை திறந்து படித்தாள். அதில் மிஸ்ஸர்ஸ் டேவிட் பற்றி விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாகவும், அதைப் பற்றி டிஸ்கஸ் செய்யவும், அவர்கள் வீட்டிற்குள் வந்தது யார் என்ற விவரங்களை
கூறவும், மறுநாள் காலை அவள் வீட்டிற்கு வருவதாகவும்,  அவள் வீட்டில் இருப்பாளா என்றும் ஜேம்ஸ் கேட்டிருந்தான்.

அதைப் படித்ததும் சக்தி, தான் வீட்டில் இருப்பாள் என்றும் தனக்கும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாராளமாக வரலாம் என்றும் ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தியில் அழைப்பு விடுத்தாள். 

உண்மையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் யார்?,
ஜேம்ஸின் அந்த ஒரு கேள்வி…,
சக்தி ஜேம்ஸிடம் கூற தவறியதாக விஷால் சுட்டிக்காட்டிய விஷயம்,
காலேஜ் கடைசி நாள் நடந்த சம்பவங்கள்,
சக்தியின் அந்த மர்ம இரவு சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில்…

தொடர்வாள்….

காரை நிறுத்திவிட்டு அன்று ஆஃபிஸிற்கு வந்து ஜேம்ஸ் சொன்ன விஷயங்கள், சிசிடிவி விவரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் அந்த டிரக் மற்றும் ஜான் ஆகிய விஷயங்களை மனமெனும் சிந்தனை குட்டையில் போட்டு குழப்பி, மூழ்கி மெல்ல அதில் தெளிவை தேடிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து சென்றவளுக்கு சட்டென பக்கத்து வீட்டு திண்ணையில்  மிஸ்ஸர்ஸ் டேவிட் அமர்ந்து அவளைப் பார்த்து கை அசைப்பது போல தோன்றியதும் குழப்பத்தில் இருந்த அவளின் முகம் பிரகாசமானது.

உடனே அவர் அருகே சென்றாள் சக்தி. ஆனால் அங்கு சென்றவள் வெறிச்சோடி கிடந்த திண்ணையைப் பார்த்ததும் கனவா! என்று  தனக்குத்தானே கூறிக்கொண்டே அவள் வீட்டுக்கு செல்ல திரும்பினாள். அப்போது மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் அவளுக்கு கேட்டது. சட்டென திரும்பி அவர் வீட்டின் கதவுக்கு முன் சென்று  கதவை தட்டினாள். பதிலேதும் இல்லாததால் அவர் வீட்டின் வலது புறம் தோட்டம் வழியாக சென்று அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க முயன்றால் ஆனால் அவளுக்கு ஒன்றும் சரிவர தெரியவில்லை. உடனே  வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் மெல்ல நடந்துக் கொண்டே வீட்டின்  பின்புறம் சென்று பார்த்தாள். வீட்டின் பின் பக்க கதவு பாதியாக திறந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி கதவின் அருகே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை சொல்லி அழைத்தாள். அதற்கும் பதிலேதும் வரவில்லை.

சற்றே குழப்பமடைந்த சக்தி. மீண்டும் ஒருமுறை மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை உறக்க சொல்லி அழைத்தார். அப்போதும் பதில் வரவில்லை என்றதும்‌ செய்வதறியாது சற்று நேரம் தோட்டத்திலேயே அங்குமிங்குமாக பரிதவித்து நடந்தாள். பின் ஜேம்ஸுக்கு கால் செய்து விவரங்களை கூறி அவனை அங்கு வரச் சொன்னாள்.

ஜேம்ஸும் வருவதாக கூறி ஃபோனை வைத்தான். சக்தி அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுத் தோட்டத்திலேயே நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது சக்தியின் அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ப்ளூ மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் சக்தி நிற்பது போல் தோன்ற, உடனே அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நன்றாக பார்த்தது. அது சக்தியே தான் என்று தெரிந்ததும் மெல்ல ஜன்னலின் கண்ணாடி கதவைத் திறந்து சக்தியை அழைத்தது. அப்போது சக்தியின் மொபைல் ஒலிக்க உடனே அவள் அதை எடுத்து பேசிக் கொண்டே அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்றாள்.

சக்திக்கு கால் வந்ததும் அவளை அழைக்க இருந்த ப்ளூ கப்சிப் ஆனது. ஆனால் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டே சக்தி வீட்டு ஹாலுக்கு வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு முன் வாசலை பார்த்தது.

அங்கே சக்தி யாரோ ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ப்ளூ, சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்திற்கு சென்றாள் என்ற சிந்தனையிலிருந்து வெளியே வந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது.

மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு வாசலில் நிற்பதாக ஜேம்ஸ் கால் செய்ததால் சக்தி அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்று ஜேம்ஸை வரவேற்று நடந்ததை மீண்டும் ஒரு முறை விளக்கினாள். இருவரும் பேசிக்கொண்டே டேவிட் வீட்டு பின் பக்கம் சென்றதும் சக்தி திறந்திருந்த கதவை ஜேம்ஸிடம் காட்டினாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் அவளிடம்,

“நீங்க உள்ள போகலை இல்ல!”

“இல்ல ஜேம்ஸ். எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது அதுனால தான் உடனே உங்களை கூப்பிட்டேன்.”

“இங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?
இல்ல அவங்க இங்க இருந்த போ அவங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க?
அவங்க இந்த வீட்டுல எவ்வளவு வருஷமா இருக்காங்க?”

“இதோ இது தான் என் வீடு ஜேம்ஸ்.”

“ஓ! ஓகே!”

“நான் ருத்ராவை பிரிஞ்சு வீடு தேடிட்டிருந்தப்போ எனக்கு பிடிச்ச,
என் பட்ஜெட்க்கு கிடைச்ச வீடு இதுதான்.
நான் இங்க குடி வந்ததுலேந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் ஃபேமிலி இங்க தான் இருக்காங்க.
அவங்க கிட்ட பேசின போது தான் தெரிய வந்தது அவங்க இங்க இந்த வீட்டை வாங்கி இங்க ஷிப்ட் செஞ்சு பத்து வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு. நான் இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷமாச்சு.
சோ எப்படி பார்த்தாலும் அவங்க இங்க ஒரு பன்னிரண்டு வருஷமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.”

“ஓ! ஓகே! அவங்க தனியா வா இருந்தாங்க?”

“இல்ல ஜேம்ஸ்.
அவங்க ஹஸ்பண்ட் மிஸ்டர் டேவிட்டும் அவங்க கூட இருந்தார்.
அதுமட்டும் இல்லாம அவங்க வீட்டுக்கு தினமும் ஜான்னு ஒரு பையன் வேலைக்கு வருவான்.
அவங்க ஊருக்கு போன விஷயத்தை கூட ஒரு நாள் இங்க இருந்த அந்த ஜான் தான் எனக்கு சொன்னான்.
இப்போ கூட நான் அவன் தான் இப்படி கதவ தொறந்து போட்டுட்டு உள்ள இருக்கான்னு நினைச்சேன்.
ஆனா அவனும் உள்ள இருக்கறா மாதிரி தெரியலை.”

“அவங்க இப்படி அடிக்கடி ஊருக்கு போவாங்களா?”

“நான் இங்க குடி வந்ததுலேந்து அவங்க வீட்டை விட்டு வேற எங்கேயுமே போனதில்லை.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் இந்த தெருவுல வாங்கிங் போவாங்க.
அதுவும் மிஸ்ஸர்ஸ் டேவிட் மட்டும் தான் போவாங்க.”

“என்ன சக்தி உங்களுக்கும் ஜான்ங்கற பேருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல?”

“ஏன் அப்படி சொல்லுறீங்க ஜேம்ஸ்?”

“இன்னைக்கு காலையிலேந்து இந்த பெயர் தானே ஆஃபிஸுலேந்து வீடு வரைக்கும் தொடர்ந்துட்டே வருது.
அது தான் அப்படி சொன்னேன்.”

“ம்…ஆமாம் இல்ல.!”

“ஆமாம் ஆ இல்லையா!”

“ஆமாம் ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.”

“சரி அவங்க பசங்க எல்லாம்!”

“அவங்களுக்கும் டேவிட்டுக்கும் குழந்தைகள் இல்லை ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு ஒரு பையன் இருக்கார்ன்னு சொல்லிருக்காங்க. அவரு பேரு கூட பீட்டர்ன்னு சொன்னாங்க.”

“நீங்க அவங்க பையன் பீட்டரை பாத்திருக்கீங்களா?
அவரு கூட பேசியிருக்கீங்களா?”

“இல்லவே இல்லை?”

“ஏன் சக்தி?
ரெண்டு வருஷமா பக்கத்து வீட்டுல இருக்கீங்க. அவங்க பையனோட பேசினது இல்லைன்னு சொல்லுறீங்க!”

“ஆமாம்.
ஏன்னா மிஸ்ஸர்ஸ் டேவிட் பையன் இந்த ரெண்டு வருஷத்துல அவங்கள பார்க்க வந்ததே இல்லை.
அப்புறம் எப்படி நான் பார்ப்பேன் இல்ல பேசுவேன்.
ஆக்சுவலி அவங்களுக்கு அந்த வேதனை இருந்துட்டே தான் இருந்துது. அப்பப்போ அவங்க பேச்சுல அவங்க மனவலியை வெளிப்படுத்திருக்காங்க. இன்ஃபாக்ட் அவங்க படற வேதனையை பார்த்து தான் நான் என் பேரன்ட்ஸ்க்கு அடிக்கடி கால் பண்ணி பேசுவேன்.”

“ம்…என்ன பண்ண! இப்படி சில பிள்ளைகள்.
சரி சக்தி.
நீங்க இங்கயே இருங்க.
நான் உள்ள போய் பார்த்துட்டு வரேன்.”

“ஓகே ஜேம்ஸ்.”

என்று கூறிய சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலிலேயே காத்திருந்தாள். அங்கு நடந்ததை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ப்ளூ, ஜேம்ஸ் டேவிட் வீட்டினுள் சென்றதும் மீண்டும் அவளை அழைத்து விசாரிக்க ஜன்னல் கண்ணாடிக் கதவை மெல்ல திறந்து

“தி…தி…”

என்று மெல்ல அழைத்தது. சக்திக்கும் ப்ளூவின் குரல் கேட்டது. உடனே அவளும் ப்ளூ பக்கமாக திரும்பினாள். அந்த நேரம் பார்த்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் ஜேம்ஸ். ஜேம்ஸை பார்த்ததும் சக்தி ப்ளூவிடம் ஏதோ கை அசைத்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் சட்டென சக்தி வீட்டை பார்த்தான். அப்போது ப்ளூ டக்கென்று மறைந்துக் கொண்டது. சக்தி பார்த்து கை அசைத்த திசையில் இருந்த அவள் வீட்டு ஜன்னல் பக்கம் பார்த்த ஜேம்ஸ், அங்கு யாரும் இல்லாததை கண்டு சக்தியிடம்,

“யாருக்கு கை அசைத்து காட்டுறீங்க சக்தி?”

“இல்லையே! யாருக்கும் நான் கை அசைத்து காட்டலயே!
நான் சும்மா என் கையை தலையில வச்சு யோசிச்சிட்டு இருந்தேன்.
நீங்க வந்தீங்க.”

“இல்லையே!
நான் வந்ததும் நீங்க உங்க வீட்டை பார்த்து யாருக்கோ கை அசைச்சீங்களே!
அசச்சா மாதிரி தான் இருந்துச்சு!
இருந்துச்சு என்ன இருந்துச்சு.
அசைச்சீங்க.”

“அச்சோ!
ஜேம்ஸ்!
என்னங்க?
என் வீட்டுல என்னைத் தவிர யாருமே இல்லை.
அப்படி இருக்கும் போது நான் யார்கிட்ட கை அசச்சுருப்பேன்?
சரி! சரி! அதுவா இப்போ முக்கியம்?
உள்ள யாராச்சும் இருக்காங்களா?”

“நீங்க ஏதாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா சக்தி?”

“நான் ஏன் இல்ல என்னத்த மறைக்க போறேன் ஜேம்ஸ்!”

“இல்ல…நீங்க சொல்லற விஷயங்களை வச்சு தான் நான் இந்த கேஸை ப்ரொசீட் பண்ணனும்.
அதுதான் இன்னொரு தடவ கன்பார்ம் பண்ணிக்க கேட்டேன்.
ஏதாவது மறைக்கறீங்கன்னா இப்பவே சொல்லிடுங்க.
நான் இந்த கேஸுலேந்து விலகிக்குறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் ஒண்ணு விடாம உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இனியும் ஏதாவது இருந்தா சொல்லிடறேன்.
ஏன் இதோ இப்போ இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு விஷயத்தை நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும் சொல்லுங்க.
ஆனாலும் பார்த்ததும் மொதல்ல உங்களுக்கு தானே கால் பண்ணி சொன்னேன்.”

“அதெல்லாம் சரி தான் சக்தி.
ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நெருடல் என்னன்னா…
நீங்க முக்கியமான ஏதோ ஒண்ண அல்லது ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்ல விட்டுட்டேங்களோன்னு தோணிகிட்டே இருக்கு.
அதுனால கூட நாம நூடுல்ஸ் மாதிரி இதுல சிக்கிக்கிட்டு இருக்கோமோன்னு தோணுது.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விவரங்களையும் நடந்த விஷயங்களையும் தெளிவா உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இப்போ நீங்க தான் சொல்லணும்.”

“நானா?
நான் என்ன சொல்லணும்?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுக்குள்ள நீங்க தானே போயிட்டு வந்திருக்கீங்க?
அப்போ உள்ள என்ன இருக்குன்னு நீங்க தான் சொல்லணும்.”

“ஓ! அதுவா.
உள்ள யாருமில்லை.
யாரும் வந்துட்டு போனதுக்கான தடயமும் இல்ல.”

“அப்போ நான் என் காரை பார்க் பண்ணிட்டு வரும்போது கேட்ட சத்தம்?”

“மே பி யாராவது திருட வந்திருக்கலாம்.
நீங்க வந்ததைப் பார்த்து பின் வாசலால தப்பி ஓடி இருக்கலாம்.
ஆனா வீட்டுக்குள்ள எல்லாமே வச்சது வச்ச இடத்துல இருக்கறா மாதிரி தான் தெரியுது.
எதுக்கும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்கள வர சொல்லிருக்கேன்‌.
அவங்க வந்து கை ரேகை ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து சொல்லுவாங்க.
அது மட்டுமில்லாம! ஆங் இதோ வந்துட்டாங்க.
வாங்க வாங்க.
இவங்க தான் மிஸ் சக்தி.”

“ஹாய். ஹலோ”

“ஹாய்.”

“இவங்க தான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணினாங்க.
யூ கேரி ஆன் வித் யுவர் டியூட்டி.
சக்தி இதோ இவங்க ரெண்டு பேரு தான் இந்த வீட்டுக்கு காவலா நிப்பாங்க‌.
நாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் மிஸ்டர் டேவிட்டை கான்ட்டாக்ட் செஞ்சு விவரங்களை சொல்லிக்கறோம்.
தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.”

“யூ ஆர் வெல்கம்.
இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
மிஸ்ஸர்ஸ் டேவிட் இஸ் லைக் மை மதர்.
அதுனால தான் நான் கொஞ்சம் பதற்றமாகி உங்களையும் இங்க வரவச்சுட்டேன்.
ஐ ஆம் சோ சாரி”

“இல்ல இல்ல உங்கள மாதிரி தான் எல்லாரும் போலிஸ் மேல நம்பிக்கை வச்சு இது போல அக்கம்பக்கத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்…
வாட் யூ டிட் இஸ் கரெக்ட்.
சோ நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
இனி எங்க ஆளுங்க பார்த்துப் பாங்க.
யூ கேன் காரி ஆன் வித் யுவர் வர்க்.”

“ம்…ஓகே.
என் வீட்டுக்கு வாங்களேன்.
காபி கூடிச்சிட்டு போகலாம்.”

“நோ! நோ! சக்தி.
இன்னொரு தடவ வரேன்.
நான் உடனே என் ஆஃபிஸுக்கு போகணும்‌.
கால் மேல கால் வந்துட்டே இருக்கு. இவங்க எல்லாரும் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அது தான் வந்துட்டாங்க இல்ல.
இனி அவங்க பாத்துப்பாங்க.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
பை.”

“பை ஜேம்ஸ்.
இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் டைம் கட்டாயம் வாங்க.
பை.”

என்று கூறி ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் சக்தி தனது வீட்டிற்குள் சென்றாள்.

பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் கதவு எப்படி/ஏன் திறந்துக் கிடந்தது?
யார் வந்திருப்பார்?
அவர்கள் வீட்டினுள் சக்தி கேட்ட சத்தம் எதனால் வந்தது?
போன்ற வினாக்களின் விடைகளை தேடி…

தொடர்வாள்…