நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

அது ஒன்னுமில்லை மாமா”

அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

என்னவாம் அந்த மாமிக்கு?”

அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

இல்லை விஷயம் என்னனா…”

என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகைவெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன்.  அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..

“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”

என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான்.  சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …

“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”

“இது என்ன கேள்வி மிருது?”

“ப்ளீஸ் சொல்லுங்கோ”

“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”

“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”

“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”

“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”

“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”

“”என்னத்துக்கு  இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்?  எனக்கு ஆற மாட்டேங்கறது!!!” 

“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”

“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”

“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”

“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு  வந்த என் குழந்தையைப்  பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”

“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”

“ஓகே ஓகே”

வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …

“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”

“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”

“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”

“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!” 

“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”

“எந்த குழந்தை அழறதாம் இங்க?”

“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”

“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்” 

“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”

“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”

ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! 

என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள். 

செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..

“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”

“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”

“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”

“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”

“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”

“பை மிருது டேக் கேர்”

நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில்  திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து  கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..

“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”

“ஆமாம் லதா அக்கா.”

“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”

“ஆமாம் லதா அக்கா  நான் கன்சீவ் ஆகிருக்கேன்”

“வாவ்!! வாழ்த்துக்கள்” 

“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”

“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”

“ஓகே லதா அக்கா”

“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”

“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”

“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”

“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”

“ஓகே பை”

க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர்‌. ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது,  அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது. 

ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …

“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”

“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”

“ஷுவரா கேட்கறேன்”

ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம்  எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு.  அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…

“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”

“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்?  உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”

“சரி சாரி”

“என்னது”

“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”

“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்?  நவீ!!”

“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”

இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …

“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”

“பேசலாம் ஆனா”

“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”

“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”

என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…

“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”

“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”

“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”

“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”

“எஸ் போகலாம்”

அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான். 

மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார். 

“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”

“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”

“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”

“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”

நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள்.  அதற்கு வேனு..

“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”

“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”

“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”

“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”

“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”

“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”

“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”

“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”

மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..

“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”

“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”

“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”

“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”

“ஓ அப்படியா. சரி எப்போ கி‌ளம்பறேங்கள்”

“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”

“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”

“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”

என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள். 

அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும் 

“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”

“என்னது நவீ?”

“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”

“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”

“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”

“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”

“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”

“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”

“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”

சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது. 

தொடரும்….

 காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும்,  போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….

“குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே”

“ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”

“இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு”

“இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.”

“நீங்க குடிச்சாச்சா?”

“ஓ! குடிச்சிட்டேன்”

ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …

“நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”

“நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”

“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!”

“ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”

“ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்”

“அப்படி வா வழிக்கு”

“சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்”

“சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”

“எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

“டன். காலை ல டிஃபன் என்ன?”

“என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..‌என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.”

“நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”

“நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”

“இல்லை”

“அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..”

மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…

“ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.”

“ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.”

“ஓகே”

“ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”

“அது வந்து மிருது”

“ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ”

“நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”

“ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக். “

“என்ன சொல்லற மிருது”

“என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்”

“நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்”

“ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.”

மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …

“இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு  தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.”

“எனக்கு தெரியும் ஆனாலும்…..”

“என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”

“உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்”

“அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”

“இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது”

“ஐ லவ் யூ டூ நவீ”

அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள். 

தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது. 

கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!! 

அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…

“நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”

“ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்”

“என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”

“அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை”

என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…

“ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”

“எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா  சதீஷ்”

“வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.”

“அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.”

“டேய் நவீன் யூ ஆர் லக்கி டா.  சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”

“நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”

“எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா”

“பை டா சதீஷ்”

“பை சதீஷ்”

மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. 

திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர  தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…

“மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.”

என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர். 

“நீங்க தான் மிருதுளா வா?”

“ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”

“இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க. “

“ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”

“இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க”

“ஓகே சிஸ்டர் தாங்க்யூ”

மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…

“எல்லாம் ஆச்சா மிருது?”

“எஸ் நவீ ஆல் டன்”

“ஓகே குட். டீ குடிக்கறயா?”

“வேண்டாம் பா.”

டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து  நர்ஸிடம் கேட்டான்…

“என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க”

“சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்”

என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..

“இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க”

அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..

“வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.”

“தாங்க்ஸ் டாக்டர்”  என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.

“எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்”

மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…

“மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.”

“ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.”

“ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே”

“ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”

“இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்”

“இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்”

“ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு”

மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள். 

பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான். 

“மிருது எங்க போற?”

“மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.”

“ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.”

என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…

“நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்”

“இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா”

“ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”

“உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.”

“எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்”

“ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு  ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்”

“ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ”

“அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு”

“ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே. “

“தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு”

இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…

“நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”

“ஓ போகலாமே.”

ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…

“நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”

“ஓகே மா. வா வா”

முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”

“ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்”

“சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”

“அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.”

“அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல  இருக்காரா?”

“இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்.”

“வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்”

“வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ”

“ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

“நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்”

“ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”

“பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ”

நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…

“உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்”

“பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ”

நவீன் அவன்  பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…

“ஹலோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“ஹாங் நவீன் சொல்லு பவினும்,  ப்ரவினும் வந்தாச்சு”

“ஒகே. ஒரு குட் நியூஸ்.”

“என்னது?”

“நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்”

“அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.”

“ஹலோ”

“மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.”

“ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு “

நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளா “என்ன ஆயிற்று ” என்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”

என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…

பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது. 

“என்னமா கேட்டேங்கள்?”

“இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்” 

எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள்.  அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…

“சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்”

என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….

“நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ” 

என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான். 

தொடரும்….

ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர்.  அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள். 

வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு 

அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல  காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர்.  சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..

“அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ”

என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…

“மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.”

என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…

“என்னது இது மன்னி?”

“இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு”

“மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”

“இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்” 

என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன். 

“வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா”

“ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.” 

“அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.”

“சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்”

“நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றார் ராமானுஜம்

“அட ஆமாம் நல்லா தான் இருக்கு” என அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள். 

ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..

“மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக  நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு”

“அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்

“அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு” 

வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….

“மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ”

“இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்” என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….

“அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ”

“தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.”

“அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!”

இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….

“மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா”

“டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா”

“அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே”

“சரி டா வேனு நான் வறேன்”  நவீன் சொல்ல

“நாங்களும் வறோம்” என்றனர் பவினும் ப்ரவினும்.

மெஜாரிட்டி ஆண்கள் பக்கம்  என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள். 

மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…

“என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.”

“இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!”

“சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்” என பவின் கேட்க

“எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.”

அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம். 

ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர்  சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….

“சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.” 

ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான  சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….

“பை அண்ணா மன்னி “

“அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்” என்றாள் மிருதுளா

“பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்” 

“பை டா வேனு. டேக் கேர்.”

“அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!”

“பை மா மிருது. பை மாப்ள” என்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு

“நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருது” என்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம். 

“ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோ” என்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.

ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….

“மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை  திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.”

மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற  ஆகிறதென்றோ!!!  ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.

அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …

“இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”

“அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?” 

“மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்”

” மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”

“அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ”

“இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்”

“ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்”

என்று கூறினாலும் அவள்  கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…

“என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே  இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?” 

என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…

“ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ” 

இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…

“ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!”

“ஓ எஸ்” என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை. 

“அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!”

“ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்”

“சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்”

நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….

“டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.”

என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள். 

ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம்.  உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும். 

இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா? 

தொடரும்…….

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே.  ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…

“ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே  இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”

“அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே”

“ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!”

“செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை  மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.”

“அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா”

“அது வாஸ்தவம் தான்”

“சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்”

“இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா”

“என்ன மெனு கட்டிண்டு போற மா நீ”

“காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு  புளியோதரையும் தயிர் சாதமும்,  வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு.  இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன்.  ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.”

“அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது”

“டேய் அது தான் டா நம்ம அம்மா!!”

“மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”

“சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”

“ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ”

“டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ”

“மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”

“ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.”

“அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்”

“குட் நைட்” என எல்லாரும் கூறினர். 

“யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின் 

“என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோ” என்றார் ராமானுஜம்.

அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப  நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள்.  கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது. 

நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…

“உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”

“நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும்.  ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?” 

“நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்”

“ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.”

“ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.”

“டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது”

“ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.”

“எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!”

“ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!”

“என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!”

“உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த  தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….

“இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு”

“ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்”

“எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.”

“உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய  நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்”

“இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”

“கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”

“இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி”

“இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி”

“நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு”

“இதோ சாப்டுண்டே தானே பேசறேன்”

உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…

“நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.”

“ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா”

“இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு   நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா”

என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…

“என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல”

“அப்படியா சொல்லறேங்கள்”

“ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.” 

“நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்

“அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா”

என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

“சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்”

“ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”

“மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”

என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…

“அம்மா நீ என்னத சாப்பிடுவ?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.”

“மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா”

“அதுவும் சரிதான் டா வேனு”

“எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்” 

“நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்” என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.

அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது மிருதுளா ப்ரவினிடம்….

“என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா”

“ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள்  இருக்கு சொல்ல”

“அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்” என்றான் நவீன்.

“என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்”

தொடரும்…..