எப்படி…

படித்தவர்களை விட படிக்காதவர்/ படிப்பை பாதியில் நிறுத்தியவர் தான் பெரிய தனவான்களாகியிருக்கிறார்கள் எனவே படிப்பு முக்கியமில்லை என்ற ஒன்றை பரப்பி வந்தனரோ!

அதே போல்…

காசு பணம் பதவி வீடு வாசல் இருந்து என்ன? ஒரு இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதையும் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

படிப்பின்றி உயர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காமல் இருக்கிறார்களா?

இல்லை இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதற்காக பொன் பொருள் வீடு வாசல் என்று வாழாமல் இருக்கிறார்களா?

பின்பு எதற்கு இப்படி ஒரு கூற்று உலா வருகிறது?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் ரெட்டுக்கு மாறு…

பச்சை நிறம்: ஏய் ரெட் ரெமோ உன்ன தான் சொல்லுறாங்க

மஞ்சள் நிறம்: அடேய் சிவப்பு! சீக்கிரமா எழுந்திரிடா இல்லாட்டி இந்த மக்கா போயிட்டே இருப்பாங்க…அப்புறம் ஏதாவது ஏடா கூடமா ஆயிடும்.

பச்சை நிறம்: அப்புறம் உன்னால நம்மள அப்படியே கழட்டிட்டு போய் வேற எங்கேயாவது போட்டுட்டு… வேற ஒரு கும்பல கொண்டு வந்து ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க!! ம்…சீக்கிரம்.

மெல்ல வெளிச்சமிட்டு காட்டியது சிவப்பு நிற விளக்கு. ஆனால் அதில் அவ்வளவாக பிரகாசம் இருக்கவில்லை.

பச்சை நிறம்: டேய் ஏன்டா இப்படி? கொஞ்சம் பிரைட்டா எரிஞ்சாதானே மக்களுக்கு தெரியும். நீ ஏன் வரவர ரொம்ப சோர்வாவே இருக்க?

சிவப்பு நிறம்: ஆமா!! நான் பிரைட்டா எரிஞ்சா மட்டும் நின்னுடவா போறாங்க?!!! அட போ பச்ச பரிமளம்!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

பச்சை நிறம்: ஆங்!! ஆங்!! இதோ.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: அப்பாடா கரெக்ட்டா எரிஞ்சுட்டேன் இல்ல!!! சரி உன் கதைக்கு வருவோம். சொல்லுடா ரெட் ரெமோ.

சிவப்பு நிறம்: நம்மளோட பேட்ச்ல இருந்த அந்த அடையாறு சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் அட்ரா சிட்டி தாங்க முடியல!!

பச்சை நிறம்: அவன் என்ன பண்ணினான். சிவப்பு சிக்கல்நாதன் எங்கயாவது தப்பாகிப்பா கண்ணடிச்சு சிக்கிக்கிட்டானா?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அங்க அவன் அவனோட அந்த பச்சை பாரிஜாதத்தோடையும் மஞ்சள் மங்களத்தோடையும் ஜாலியா ரோட்டுல, அழகான வண்டிகளுக்கு சிவப்பு நிறக் கண்ணடிக்கறானோ இல்லையோ அவனோட கேர்ள் பிரண்ட்ஸுக்காக ஒழுங்கா கண்ணடிச்சுக்கிட்டிருப்பானே!! சந்தோஷமா இருப்பாங்க! ம்….

பச்சை நிறம்: என்ன மஞ்ச மருது! ரொம்ப வருத்தப்படறா மாதிரி தெரியுதே!!! ஏன் என்னைய பாத்தா கேர்ள் மாதிரி தெரியலையோ. நீ ஒரு மஞ்ச காமாலக்காரன்.. நான் என்னத்த பண்ண!!!

மஞ்சள் நிறம்: அச்சச்சோ!! நீங்க அக்கா கா!!

பச்சை நிறம்: ஏன் அக்கா எல்லாம் கேர்ள்ஸ் இல்லையா என்ன?

மஞ்சள் நிறம்: அது வேற! இது வேறக்கா!!

பச்சை நிறம்: என்னடா வேற வேற?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

மஞ்சள் நிறம்: சரி சரி அதை விடுக்கா. நீ நல்லாவே எரியிறக்கோய்! சிவப்பண்ணே நீ கண்டின்யூ பண்ணு.

சிவப்பு நிறம்: அதை ஏன் கேட்குறீங்க! நான் சோர்வா இருக்கேன்னு என்னை சரி செய்ய நேத்து கழட்டிட்டு போனாங்க இல்ல!!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: அட ஆமா! அந்த செந்தில்நாதன் தான் உன்னைய எடுத்துட்டு போய்…சரி செஞ்சாருன்னு சொன்னாரு…ஆனா எனக்கு… நீ சரி ஆனா மாதிரி ஒண்ணும் தெரியலை!

சிவப்பு நிறம்: இந்த காலத்துல முக்கால் வாசி பேரும் அப்படி தான் பண்ணறாங்க. ஒருத்தரும் அவங்க வேலைய சரியாவே பண்ணறதில்ல. என்ன பண்ண. நான் சொல்ல வந்தது செந்தில பத்தி இல்ல.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அட பாவிங்களா!! தம் புடிச்சு எவ்வளவு நேரம் பளிச்சுன்னு எரிஞ்சேனே!! கொஞ்சமாவது பாத்து போனாங்களான்னு பாரு! பச்சை அக்கா உன்னைய பார்த்தா மாதிரி இல்ல பறக்குறாங்க.

பச்சை நிறம்: அட ஆமா மஞ்ச மருது! என்னத்த சொல்ல போ! இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு நம்ம மூணு பேருன்னே தெரியல!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு

சிவப்பு நிறம்: அதைச் சொல்லு பச்சைக்கா.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: டேய் ரெட் ரெமோ, நீ சொல்ல வந்ததை அப்படியே விட்டுட்டியே! மேல சொல்லு.

சிவப்பு நிறம்: ஆங்!! எங்க விட்டேன். ஆங்… அங்க என்னைய சரி செஞ்சுகிட்டே… அங்க இருந்தவங்க எல்லாருமா பேசிகிட்டு இருந்தாங்க.

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு

பச்சை நிறம்: ரெட் நீ அப்படியே எரிஞ்சுகிட்டே உன் கதையை சொல்லு.

சிவப்பு நிறம்: ஆங்! இதோ.

பச்சை நிறம்: ம்…ஹும்…உன்னைய அந்த செந்தில்நாதன் மறுபடியும் கழட்டிட்டு போவாருன்னு நெனைக்கிறேன். சுத்தம். உசுரு போறா மாதிரியே ஏரியிற. ம்…சரி சரி மேல சொல்லு.

சிவப்பு நிறம்: அவங்க சொன்னாங்க நம்ம அடையார் சிக்னல் சிவப்பு சிக்கல்நாதன் கொஞ்சம் கூட ஓய்வு இல்லாம இத்தனை வருஷம் உழைச்சும் எந்த விதத்திலும் பழுதாகாம இன்னமும் ப்ரைட்டா இருக்கானாம். ஆனா நான் அடிக்கடி வர்க்ஷாப்புக்கு விசிட் அடிக்கிறேனாம்!! அது எப்படி அவனால மட்டும் அப்படி ஃபிட் அன்ட் ஃபைனா இருக்க முடியுது. ஒவ்வொரு வருஷம் கூட கூட ஒவ்வொரு வயசும் ஏறிக்கிட்டே தானே போகும். அவனுக்கு மட்டும் கொறஞ்சுக்கிட்டே வருதா என்ன?

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…

மஞ்சள் நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு பச்ச பரிமளம் அக்கா வாயத் திறக்க மாட்டாங்களே!!!

சிவப்பு நிறம்: ஆங்! எப்பவும் என்னைய மட்டும் எரிஞ்சுக்கிட்டே சொல்லும்பாங்க ஆனா அவங்க வேலைன்னு வந்துட்டா பேச மாட்டாங்களே!!

மஞ்சள் நிறம்: என்ன ரெட் ரெமோண்ணே! என்னமோ புதுசா நடக்கறா மாதிரி சொல்லுறீங்க? பச்சை பரிமளம் அக்கா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி ஆக்கும்! சரி நீங்க அக்கா கிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களோ!! எங்க கிட்ட சொன்னா என்ன ஆயிடுமா!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

மஞ்சள் நிறம்: இதோ அழைப்பு வந்துடுச்சு. என்னைய நீங்களும் மதிக்கறது இல்ல!! மக்களும் மதிக்கறதில்ல!! என்னத்த சொல்ல.

பச்சை நிறம்: ம்…என்ன சொன்ன ரெட்டு!! ஆங்!! நம்ம சிக்கல்நாதனுக்கு வயசு கொறஞ்சுகிட்டே வருதான்னு கேட்ட இல்ல!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் சிவப்புக்கு மாறு…

சிவப்பு நிறம்: இதோ வந்திடுறேன்க்கா!

பச்சை நிறம்: சரி ரெட் ரெமோ. நீ போய் உன் வேலையை பாத்துக் கிட்டே என் பதில கேளு. அந்த அடையாறு சிக்னல சர்வீஸ் செய்யறவரு நம்ம கந்தசாமி ஐயா. அவருக்கு வயசு ஐம்பத்தி எட்டு. இன்னும் ஒரு வருஷமோ இல்ல ரெண்டு வருஷமோ அப்புறம் ரிட்டையர் ஆயிடுவார். ஆனா அவரோட இந்த முப்பத்தெட்டு வருஷ சர்வீஸ்ல அவரு சரி பார்த்த டிராஃபிக் லைட்ஸ் எதுவுமே சீக்கரத்துல பழுதானதா சரித்திரமே இல்ல. அப்படி ஒரு பொறுப்பான வேலை ஆள்.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் பச்சைக்கு மாறு…

சிவப்பு நிறம்: அப்படியாக்கா? அப்போ ஏன் நம்மள மட்டும் இந்த செந்திலுக்கிட்ட விடுறாங்களாம்!! நல்ல வேலை தெரிஞ்ச, நல்லா வேலை செய்யுற கந்தசாமி ஐயா கிட்டயே கொடுத்து சரி செய்ய சொல்லலாம் இல்ல…நானும் அந்த சிவப்பு சிக்கல்நாதன் மாதிரியே எப்பவும் யூத்தா இருப்பேன்ல்ல.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் மஞ்சள் நிறத்துக்கு மாறு…

பச்சை நிறம்: என்ன பண்ண ரெட் ரெமோ! அவரு அந்த ஏரியா சர்விஸ் மேன். நமக்கு வாச்சிருக்கறது இந்த செந்தில் தான். ஆனா ரொம்ப மக்கர் பண்ணற விளக்கு எல்லாம் கடைசியில் அவரு கிட்ட தான் கொண்டு போவாங்க. உன்னைய பாத்தா எனக்கென்னவோ அடுத்த தடவை உன்னைய கந்தசாமி ஐயா கிட்ட தான் கூட்டிட்டு போவாங்கன்னு நெனைக்கிறேன்.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு….ம்…சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: அய்யய்யோ!! பச்ச பரிமளம் அக்கா!! இவன் என்ன முழுசா அணஞ்சுட்டான். சுத்தம்…அதோ அங்க பாருங்க அந்த டிராஃபிக் போலிஸ் அண்ணே ஓடி வராரு.

பச்சை நிறம்: கொஞ்சம் கீழே பாரு மஞ்ச மருது. நம்ம ரெட் ரெமோவ கழட்டிட்டு போக ஆளு வந்தாச்சு.

மஞ்சள் நிறம்: அட ஆமா! இந்த தடவையாவது அவனை அந்த கந்தசாமி ஐயா கிட்ட கொண்டு போகட்டும்.

பச்சை நிறம்: இனி கொஞ்ச நேரத்துக்கு நமக்கு வேலையில்லை.

மஞ்சள் நிறம்: ஏன்க்கா எல்லா மக்களும் இந்த கந்தசாமி ஐயா மாதிரி அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செஞ்சா எந்த வித பிரச்சினையுமே வராது இல்ல. அப்புறமும் ஏன் சிலர் தனக்கான வேலையை சரியாவே செய்ய மாட்டேங்கறாங்க? இந்த செந்தில் நாதன போல!!

பச்சை நிறம்: நாம மூணு பேருமே டிராஃபிக் சிக்னல் தான் ஆனா நம்ம மூணு பேருக்கும் வித்தியாசம் இருக்கு தானே!

மஞ்சள் நிறம்: என்ன பெரிய வித்தியாசம் நீங்க பச்சை நிறம், நான் மஞ்சள் நிறம் அப்புறம் நம்ம ரெமோ சிவப்பு நிறம்…மத்தபடி நாம ஒரே மாதிரி தானே இருக்கோம். ஒரே வேலையை தானே செய்யறோம்!

பச்சை நிறம்: ஏதோ ஒரு வித்தியாசமாவது இருக்கு தானே!

மஞ்சள் நிறம்: ஆமாம் இருக்கு.

பச்சை நிறம்: பொதுவா பார்த்தா நாம டிராஃபிக் சிக்னல் ஆனா நமக்குள்ளேயே வித்தியாசம் இருக்கும்போது, மனுஷங்களுக்குள்ள இருக்காதா என்ன? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. சிலர் அவங்க வேலையில் சின்சியறா இருப்பாங்க, சிலர் அப்படி இருக்கறதில்ல. என்ன பண்ண மஞ்ச மருது?

மஞ்சள் நிறம்: அக்கா அக்கா! பச்சை பரிமளம் அக்கா! அங்க பாரு. நம்ம ரெட் ரெமோவை எடுத்துட்டு வராங்க.

பச்சை நிறம்: ஏய் இந்த தடவ வேற யாரோ வர்றாங்க போல! அடேய் இது நம்ம செந்தில் இல்லையே டா!

மஞ்சள் நிறம்: அட ஆமாக்கா!! இவரு புதுசு போல. அவரு சட்டையில பேரு ஏதோ ராமசாமின்னு போட்டுருக்குக்கா. அப்பாடா அந்த சொதப்பல் செந்தில் நாதன்ட்டேந்து நமக்கு விடுதலை. அக்கா சிவப்பு அண்ணனை பொறுத்தராருக்கா. இறங்கிட்டாருக்கா.

தாம்பரம் டிராஃபிக் சிக்னல் சிவப்புக்கு மாறு…

மஞ்சள் நிறம்: பச்சை பரிமளம் அக்கா முன்ன விட இப்போ எவ்வளவு பளிச்சுனு எரியுறான் பாருங்க அக்கா!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் பச்சைக்கு மாறு…

சிவப்பு நிறம்: ஹாய்! ஐ ஆம் ரெட் ரகு. அன்ட் யூ!

மஞ்சள் நிறம்: பச்ச பரிமளம் அக்கா சாச்சுப்புட்டாங்கக்கா!!!

தாம்பரம் நால்ரோடு சிக்னல் மஞ்சளுக்கு மாறு…

பச்சை நிறம்: என்னடா மஞ்ச மருது! நான் தான் அப்பவே சொன்னேன் ல நமக்குள்ளேயும் வித்தியாசம் இருக்குன்னு!! நம்ம ரெட் ரெமோ அவன் வேலையை பாக்காம அந்த அடையாறு சிவப்பு சிக்கல பத்தியே நெனைச்சுட்டு கோட்டை விட்டுட்டான். அடுத்தவனை பத்தி நினைக்காம ஒழுங்கா அவன் வேலையில மட்டும் கவனம் செலுத்தி இருந்தா இங்கேயே நம்ம கூடவே இருந்திருப்பான்! ஆனா அவன் அப்படி செய்யல அதுதான் ரெமோ இடத்துல இப்போ ரகு! அதே மாதிரி தான் அந்த செந்தில் நாதனும் அதுனால தான் செந்திலுக்கு பதில் ராமசாமி. தட்ஸ் ஆல். வெஹிக்கிள் மே கம் வெஹிக்கிள் மே கோ பட் சிக்னல் ஹாஸ் டூ கோ ஆன் ஃபார் எவர்! ஹாய் ரெட் ரகு! ஐ ஆம் பச்சை பரிமளம். வெல்கம் டூ தாம்பரம் நால்ரோடு சிக்னல்.



❤️முற்றும்❤️
நா. பார்வதி

நளபாகத்தின் ஒரு பாகமான மத்திய விருந்தில் நடந்த சம்பாஷணை;

நடக்கிறதோ இல்லையோ யாமறியேன் பராபரமே!
ஆனால் நடந்தால் எப்படி இருக்கும்?
கற்பனை பிறந்தது
சம்பாஷணை நடந்தது.

வாழை இலை 1 : அப்பாடா மூச்சு முட்ட முட்ட எங்களை ஒருவர் மீது ஒருவர் என அடுக்கி வைச்சதிலிருந்து விடுதலை விடுதலை விடுதலை…

வாழை இலை 2: என்னத்த விடுதலை! இதோ இப்போ நம்ம மேல தண்ணீயை தெளித்து ஒவ்வொன்னா வைக்க ஆரம்பிப்பாளே..

வாழை இலை 3: அதோ வர ஆரம்பிச்சுட்டா! முதலில் என்னது?

சுவீட் : ஹாய் வாழை இலை..நான் வந்துட்டேன்.

பாயசம் : நானும் வந்துட்டேன்…ஆனா! இப்போ எல்லாம் என்னை இந்த கப்புல வச்சுடறா. என்ன பண்ண!

சுவீட் : உன்னை வாழை இலையில் ஊத்தினா நீ தான் எல்லாத்தோடயும் கலந்து எல்லாத்தையுமே இனிக்க வச்சுடறயே. அதுனால இருக்குமோ!

வாழை இலை 4 : அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனா… என்னக்கென்னவோ அந்த காலத்துல இருந்த பாயசம் மாதிரி இல்லாம… இப்பெல்லாம் உன்னை தண்ணியாட்டம் செஞ்சுடறாளா அதுனால குடிக்க வசதியா இருக்குமேன்னு கப்புல வச்சிருக்கா போல!

வாழை இலை 5: சுவீட்டும் அதைத் தானே சொன்னா!!

வாழை இலை 6: எதுவா இருந்தா என்ன நம்ம தலையில விழறதுல ஒரு ஐட்டம் கம்மி ஆகிடுத்துன்னு நெனைச்சு நாம சந்தோஷப் பட்டுப்போம். இதோ அடுத்தது வந்துண்டிருக்கு பாருங்கோ.

சுவீட் பச்சடி : என்ன! என்ன! இங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமா இருக்கு?

சுவீட் : வாடி என் பச்சடி. நீயும் இனிப்பு நானும் இனிப்பு. பின்ன எதுக்கு நம்ம ரெண்டு பேரையும் பரிமாரறாளோ தெரியலை?

சுவீட் பச்சடி : ஏன் பாயசம் மட்டும் என்ன கசப்பா!!! அது மாதிரி தான். நான் வந்ததுல உனக்கென்ன கஷ்டமா போச்சு?

சுவீட் : எனக்கென்ன கஷ்டம்? நான் தான் ஃபர்ஸ்ட் டு பி சர்வ்டு ஆக்கும்.

சுவீட் பச்சடி : க்கும்!!

வாழை இலை 7: ரெண்டு பேரும் நிப்பாட்டுங்கோ!! ஏய் சுவீட் பச்சடி எங்கடி உன் சிநேகிதி தயிர் பச்சடி? அவளும் நீயுமா தானே ஜோடி போட்டுண்டு வருவேள்! இன்னைக்கு ஏன் நீ மட்டும் வந்திருக்க?

சுவீட் பச்சடி : ஹா ! ஹா! ஹா! எப்போ நான் மட்டும் வந்திருக்கேன்? இதோ என் பக்கத்திலேயே சத்தமில்லாம உட்கார்ந்திருக்காளே! வெள்ளரி தயிர் பச்சடி. ஏன் உன் தலையில அவ உட்கார்ந்தது தெரியலையோ!!

சுவீட் : அது ஒண்ணுமில்லை ரெண்டு பேரையும் ரெட்டைப் பிரவிகளாட்டம் டக்கு டக்குன்னு போட்டுட்டுப் போயிட்டாளோனோ! அது தான் வாழை இலைக்கு ஒண்ணு போல தோனிருக்கு!

வாழை இலை 8: சரி சரி அதோ அங்க வரது நம்ம பாசிபருப்பு கோஸ்மல்லி தானே!

வாழை இலை 9: சாக்ஷாத் அவனே தான்.

பாசிபருப்பு கோஸ்மல்லி : டன்டடான் ஹாய் படீஸ்

தயிர் பச்சடி : வாடா வா. வந்து ஐக்கிய மாகிக்கோ!

பாசிபருப்பு கோஸ்மல்லி : என்ன தச்சு பச்சு அக்கா!

சுவீட் பச்சடி : டேய்! நீ அப்படி அவளை கூப்பிடறது நல்லா தான் இருக்கு டா. ஹீ ஹீ ஹீ!

தயிர் பச்சடி : ம்…இருக்கும் இருக்கும்!! ஏன் போன முஹூர்த்துக்கு அந்த ஜட்ஜ் ஆத்து சஷ்டியப்தபூர்த்தி பந்தில உன்ன அவன் எப்படி கூப்பிட்டான்னு ஞாபகம் இருக்கா?

சுவீட் பச்சடி : அச்சச்சோ! அது ஏன் இப்போ?

தயிர் பச்சடி : ஆங்! அது! அப்போ நான் என்ன அவனோட சேர்ந்துண்டு உன்னை கேலி செஞ்சேனா! இல்ல ஹீ ஹீ ஹீன்னு எகத்தாளமா சிரிச்சேனா!

சுவீட் பச்சடி : மன்னிச்சுக்கோமா தாயே! சரி சரி நம்ம உருளை காரகறி உருண்டுண்டே வந்து விழறத எல்லாரும் பாருங்கோளேன்!

பாசிப்பருப்பு கோஸ்மல்லி : டேய் ! உருளை செத்த நகந்துக்கோயேன்டா! எப்பப் பார்த்தாலும் உருண்டுண்டே என் மேல வந்து விழறதே உன் பொழப்பா போச்சு!

உருளை காரகறி : சாரி அண்ணா! நானாவா வந்து உங்க மேல விழறேன்!! அதோ பறிமாறறாரே அந்த சுப்புணி பண்ணற வேலையாக்கும்! அவருக்கு என்ன அப்படி தலபோற அவசரம்ன்னு தெரியலை. இப்படி என்னை படக் படக்னு இலையில உருட்டி போட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிண்டுருக்கார். ம்…இதோ நம்ம இலைக்கு முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்குற புன்னியவதி என்னை உங்க மேலேந்து நகர்த்தி வச்சுட்டா. நிம்மதியாச்சா?

பாசி பருப்பு கோஸ்மல்லி: பின்ன! ஆங் ஆங்! சரி சரி

உருளை காரகறி : அண்ணா இதோ நம்மகூட அளவலாவ பீன்ஸ் உசிலி துள்ளிண்டு வந்துட்டான் பாருங்கோ!

பீன்ஸ் உசிலி : எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லிக்கறேன்! என்ன நான் வர்றதுக்குள்ள நிறைய பேசிறிப்பேளே! நான் என்னத்த மிஸ் பண்ணினேன்னு வரிசையா சொல்லுங்கோ பார்ப்போம்!

தயிர் பச்சடி : ஐய்யயோ!!

பீன்ஸ் உசிலி : என்ன ஆச்சு பச்சடி அக்கா?

தயிர் பச்சடி : நம்மளை எல்லாரையும் சேர்த்து செஞ்ச மாதிரி இருப்பானே! அவன் வந்துட்டான் டா வந்துட்டான்!

பீன்ஸ் உசிலி : நம்மளை சேர்த்து செஞ்சா மாதிரியா? ஓ! ஓ! ஓ! ஆங்! ஆங்! ஆங்! ஆமாம்! அதுவும் என் பக்கத்துலயே வந்து உட்காருவானே…ம்…உட்கார்ந்துட்டன்… ஹலோ மிஸ்டர் அவியல்

அவியல் : ஹாய் மை டியர் தோழர்களே! தோழிகளே!

உருளை காரகறி : இவரே ஒரு கலப்படம்! இதுல மொழி கலப்படம் வேறயா! ஹாய்

அவியல் : உருளை நீ ஏதோ சொன்னா மாதிரி இருந்துதே!

உருளை காரகறி : ஒண்ணுமில்ல மாமா!

அவியல் : இப்படியே மெயின்டேயின் பண்ணிக்கோ! சரியா! உன்னோட இந்த வாயால தான் உன்னை என்னோட சேர்த்துக்க மாட்டேங்கறேன்!

உருளை காரகறி : ஓகே ஓகே! அதுதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே மாமா!

அவியல் : அச்சச்சோ! இவளா! இவளைப் பார்த்தாலே புளிப்பு மண்டைக்கு ஏறுமே!

பீன்ஸ் உசிலி : வாம்மா மின்னல்!

இஞ்சிப்புளி : எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? நலமா?

அவியல் : ம்க்கும்! எங்க!! அதுதான் நீ வந்துட்டியே!

இஞ்சிப்புளி: நான் மட்டும் தனியா வரலை இதோ இவளும் வந்திருக்கா. ஏன்டி ஒரு ஹாய் சொன்னா தான் என்னவாம். உனக்கு ஊறும் காய்ன்னு பேரு வச்சாலும் வச்சா நீ அப்படியே ஊறி போயிட்டயாக்கும்.

ஊறுகாய்: ஹாய்

இஞ்சிப்புளி: ம்க்கும்! இப்படி சுரத்தே இல்லாம சொல்லறதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம் போ.

வாழை இலை 10: வந்துட்டாங்கப்பா கொற கொறன்னு சத்தம் குடுக்கற டிவின்ஸ்! வாங்க அப்பளம் சார் அன்ட் மொறு மொறு வடை சார்.

அப்பளம் : என்ன இந்த பந்தில வரவேற்பு கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி இருக்கே! நீ என்ன சொல்லற வட்டு என்கிற வடையாரே?

வடை : அட ஆமாம்! அப்பு என்கிற அப்பளமாரே நீர் சொல்லறது சரி தான். நமக்கு முன்னாடியே வந்து ப்ரைம் ஸ்லாட்டை பிடிச்சுண்டு உட்கார்ந்துக்கறதால ரொம்ப தான் பண்ணறா!! இருக்கட்டும்! இருக்கட்டும்! அடுத்த பந்தில நாம இல்லாம போனோம்ன்னா தெரியும் இவாளோட கதி!

இஞ்சிப்புளி : அதை விடுங்கோ அப்பு அன்ட் வட்டு. இதோ வந்திருக்கானே இவனை போட்டு தான் நம்ம எல்லாரையும் தயார் பண்ணறா! ஆனாலும் இவனை எதுக்கு இப்படி நம்மளோட சேர்த்து பந்தில வாழை இலை மூலையில வைக்கறாளோ தெரியலை!

அப்பளம் : என்ன தான் இவனைப் போட்டு உங்களை செய்திருந்தாலும் சிலருக்கு இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படுறான் அதுதான் காரணம். என்னடா உப்பு நான் சொன்னது சரி தானே!

உப்பு : சரி தான் அய்யா! உங்களிலும் நான் இருக்கிறேன்! ஆனால் ஏனோ நீங்கள் அதை மறந்து விடுகிறீர்கள். பரவாயில்லை.

அப்பளம்: இதோ வந்துடுத்து வழவழ கொழ கொழ வாழைப்பழம்.

வாழை இலை 11: அச்சச்சோ! அதோ சாதம் வந்துண்டிருக்கே! சுட சுட வந்து என் தலையில அவளை போடுவாளே! தயாரா இருங்கோ அவளோட ஆவி உங்க மேலயும் படும்.

சாதம்: சூடான சாதம் நான், சுட சுட சுட இருப்பேனாம். ஈடில்லா சூடு சாதம் இதை நீங்க பாருங்க. ஓ….

வாழை இலை 12: அச்சச்சோ இவளையே தாங்க முடியல இதுல இவ பாட்டு வேற!!! இவளவிட சூடா ஒருதன் வருவானே அவனெங்க?

பருப்பு: ….ஆங் அவனுக்கு முன்னாடி நான் தான் வருவேன்.

நெய்: நானும் தான்!

வாழை இலை 12: வந்துட்டான்யா வந்துட்டான் எல்லாரையும் நகர்ந்துக்க சொல்லுவான்…நானும் அவன் பேச்சை கேட்டு நகர்ந்துண்டேன்னா என்னாகும்?

சாம்பார் : ஏய்!! எல்லாரும் தள்ளுங்கோ தள்ளுங்கோ வரிசைப்படி நான் தான் ஃபர்ஸ்ட் …நீங்க எல்லாரும் நெக்ஸ்ட்.

பொறியல்கள் : ஹலோ மிஸ்டர் சாம்பார் உங்களை மட்டும் ஊத்தி சாப்பிட்டா ருசியிருக்காது எங்களையும் தொட்டுண்டா தான் ருசிக்கும்

அவியல் : எல்லா காய்கறிகளையும் என்னோடு சேர்த்துண்டு, ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான அவியல் ஆகிய நான் இல்லாத விருந்தே கிடையாது தெரியுமா!

இவைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சாம்பர் சாதத்தோடு கைக்கோர்த்து பொறியலை அதனுள் அனுமதித்து, எஜமானரின் வயிற்றுக்குள் சென்று வயிற்றை நிரப்பியது.

சாதம்: அச்சச்சோ! இவாளுக்கு சரி பசி போல, அதுதான் இவ்வளவு சீக்கிரமா நான் மறுபடியும் பிரவேசிக்க வேண்டியதா போச்சு.

ரசம்: “வெண்ணிற சாதமாய் வெந்தவனே! தக்காளி ரசம் என்னை பாராய்”

என்று பாட்டாவே படிச்ச ரசம்… சாதத்துடன் கைக்கோர்த்து, அப்பளத்தை அதில் நொறுக்கிப் போட்டு, மீதமுள்ள காய்கறிகளுடன் இணைந்து எஜமானருக்கு ஜீரன சக்தியை அதிகரித்தது.

சாதம்: மறுபடியும் நானா!!

தயிர்: நீயும் வெள்ளை நானும் வெள்ளை ஒன்றாய் சேர்ந்தால்!!! குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவோமே. அதுனால தான் நம்மை விருந்தில் கடைசியா சாப்படறா!! லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்ட்டாக எப்போதும் திகழும் தயிர் சாதம் ஆகிய நான் என்னை உட்கொண்டவருக்கு அருமருந்தாகி இந்த விருந்தை நிறைவு செய்கிறேன்.

என்று தயிர் சாதம் சொன்னதும்

வாழை இலை 13: அச்சச்சோ! இப்போ நம்ம மேல பரிமாறப்பட்டதுல மீதமிருக்கறதெல்லாத்தையும் ஒண்ணாக்கி நடுவுல வச்சுட்டு நம்மள மூடிடுவாளே!!

வாழை இலை 14: ஆமாம்! அவ்வளவு தான் நம் வாழ்க்கை அவ்வளவு தான்.

வாழை இலை 1: இதுக்கு நாம பேசாம ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துன்னு இருந்திருக்கலாம் இல்ல!

வாழை இலை 15: அப்படி இருந்திருந்தா நாம யாருக்குமே பிரயோஜனம் இல்லாம காஞ்சு போயிருப்போம். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

வாழை இலை 16: ஆமாம்! ஆமாம்! வெரி வெரி கரெக்ட். நம்மகிட்ட இருந்த சத்துக்கள் எல்லாத்தையும் நம்மள உபயோகப்படுத்தினவாளுக்கு கொடுத்துட்டோம்.

வாழை இலை 17: அடுத்தது என்ன?

வாழை இலை 18: அடுத்தது என்ன!!
குப்பையில் போடப்படுவோம்
ஆடும் மாடும் நம்மள நன்னா மென்னு தின்னும்.
இப்படி ஒரு விருந்து சாப்பாட்டோட சுவடே இல்லாம போயிடும்.

வாழை இலை 19: அது மட்டுமில்லக்கா நம்மளால ஆரோக்கியம் பன்மடங்காகும்.

வாழை இலை 20: ஆட்களுக்கும் ஆடு மாடுகளுக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லுமா…
ஓகே அடுத்த விருந்தில் மீண்டும் பிறப்போம்
இதே போல சுவையான உணவோடு இணைவோம்
நம்ம அரட்டையை தொடர்வோம்.

வாழ வைக்கும் வாழை இலையில் உணவு உட்கொள்ளுங்கள்
வாழ்க்கை முழுதும் ஆரோகிய குறைபாடுகள் ஏதுமின்றி நல்வாழ்வு வாழ்ந்திடுங்கள்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி. பிடித்திருந்தால் பகிரலாமே.

நன்றி
நா. பார்வதி.

கடவுளை வெறும் கல்லென  நினைத்து

மனக்குறைகளை தீர்த்து வைக்காது

சொன்னாலும் காது கேளாது என்றெண்ணி

கண்டவர்களிடம் சொல்லி

அவர்களை கடவுளென்று போற்றி

அனைத்தையும் இழந்தப் பின்

கடவுள் அல்ல காட்டுமிராண்டி என்றுணர்ந்ததும்

கூண்டில் இட தவிக்கும் ஒவ்வொருவரும்

இனியாவது கல்லானாலும் கடவுள்

இருக்கிறார் என்றுணர்ந்து

நல்வாழ்வு வாழ்ந்திட

மனிதம் மேம்பட

எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

பெண்ணின் அப்பா: வாங்கோ வாங்கோ உட்காருங்கோ. லச்சு மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாரும் வந்துட்டா பாரு.

மாப்பிள்ளையின் அப்பா: நமஸ்காரம் சுப்பிரமணியன். நான் பையனோட அப்பா கேசவன் இவ தான் என் ஆத்துக்காரி ராஜம் பையனோட அம்மா.

பெண்ணின் அப்பா: உங்க ஆத்துக்காரின்னா பையனோட அம்மா தானே…ஹா!ஹா!ஹா!

மாப்பிள்ளையின் அப்பா: அவசியம் அப்படி இருக்கணுமா என்ன? ஹா! ஹா! ஹா! பயந்துட்டேளோ!!

பெண்ணின் அப்பா: லச்சு நம்ம பொண்ணு சரசுவை அழைச்சுண்டு வந்துடு மா.

மாப்பிள்ளையின் அத்தை: முன்னெல்லாம் பொண்ணைப் பார்த்தா மூக்கும் முழியுமா நல்லா லட்சணமா இருக்கான்னு சொல்லுவா…ஆனா இப்போ என்னன்னு சொல்லறது? முகத்தில் பாதியும் மாஸ்க் மறைச்சுண்டிருக்கே!!!!

மாப்பிள்ளையின் அப்பா: பொண்ணு மாஸ்க்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு சொல்லிண்டா போறது. காலத்துக்கு ஏத்தா மாதிரி டைலாக்கை மாத்திக்கோங்கோளேன்.. ஹா! ஹா! ஹா!

– பார்வதி நாராயணன்

மாப்பிள்ளை வீட்டார் : எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க புள்ளைக்கும் பிடிச்சிருக்கு. நாம மத்ததைப் பேசலாமா?

பெண்ணின் அப்பா: எங்களுக்கு இருப்பது ஒரு புள்ள ஒரு பொண்ணு அதுனால எங்க பொண்ணுக்கு எல்லாம் நிறைவா செய்வோம். நகையா ஒரு….

மாப்பிள்ளை வீட்டார்: இருங்கோ இருங்கோ அதெல்லாம் உங்க இஷ்டம் அதைப் பத்தி எல்லாம் எங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனா எங்க சைடுலேந்து ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் அதை நீங்க செய்தா போதும்.

பெண் வீட்டார்: என்னது அது தயங்காம சொல்லுங்கோ.

மாப்பிள்ளை வீட்டார்: உங்க பொண்ணுக்கு லைஃப் லாங் தேவையான மாஸ்க், க்ளௌஸ், சானிடைசர், வருஷா வருஷம் கொரோனா தடுப்பூசி, அவா டிராவல் பண்ணும்போதெல்லாம் எடுக்கற பி.சி.ஆர் டெஸ்ட், ஆக்ஸிஜன் சிலிண்டர்ஸ், அப்படியே தொற்று ஏற்பட்டால் அதற்கான ஆஸ்பத்திரி, பெட், மற்றும் இதற செலவுகள்…..அதை எல்லாம் நீங்களே பார்த்துண்டா போதும். ஏன்னா எங்களால ஆஸ்பத்திரிக்கும் பெட்டுக்கும் அலைய முடியாது பாருங்கோ!!! என்ன சொல்லறேங்கள்? 

பெண் வீட்டார்: ஆங்!!!

– பார்வதி நாராயணன்

நண்பர்களின் வாட்ஸ்அப் குழு மூன்று மாதங்கள் முன்புவரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு நூறு மெஸேஜ் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு மெஸேஜுக்கு பதில் அளிப்பதற்குள் பத்து மெஸேஜஸ் குவிந்து விடும்

அரசியல், அலுவலகம், சினிமா, சீரியல் என்று ஒன்று விடாமல் எல்லாமும் குழுவில் புரட்டி எடுக்கப்படும்.

அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு

இந்த மூன்று மாதங்களாக கிணற்றில் கல்லை போட்டது போல கம்முனு இருந்தது.

மெதுவாக குழுவில் ராமு…

எல்லாரும் இருக்கீங்களா? ஏன் ஒரு மெஸேஜ்ம் இப்பெல்லாம் யாரும் போடரதே இல்ல…ஒரு கொரோனா ஃபார்வேட் மெஸேஜ் கூட காணோமே ஹலோ டியர் நண்பர்களே!!!

ரொம்ப நேரம் கழித்து கோமுவிடமிருந்து பதில் வந்தது

கோமு: டேய் ராமு உனக்கு வாட்ஸ்அப் ல மெஸேஜ் பண்ணுற அளவுக்கு டைம் இருக்காடா??

ரவி : அப்போல்லாம் ஆஃபிஸ் போயிட்டிருந்தோம் வாட்ஸ்அப் ல ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருந்தோம்….இப்போ அப்பிடியா!!!வீட்டு வேலை பென்டெடுக்குதுடா…சரி சரி …நான் துணியை துவைத்துக்கொண்டிருந்தேன்.. பாதிலயே விட்டுவிட்டு உங்களோட பேச ஆரம்பிச்சிட்டேன்….குட்…பை …நண்பர்களே.

ரகு: சீக்கிரமே ஆபிஸுக்கு வரசொல்லனுமுனு வேண்டிக்கோங்கடா…

கொரோனாவால் பதிக்கப்படுவது உடல்நலம் மட்டும் அல்ல…..😉

அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.

ராணி:  அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…

ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.

அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?

பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.

ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.

எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.

அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!

பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?

அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?

பாட்டி : சரிதான்.

அஞ்சனா: அ  ஃபார் அஞ்சனா ரைட்டா?

பாட்டி : ரைட்டுதான்.

அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?

பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.

அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.

அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….

பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…

அஞ்சனா : சூப்பர் பாட்டி.

என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.

ஆட்டோ வில் செய்தித்தாள் படித்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தவருக்கும் ஆட்டோக்காருக்கும் இடையே நடந்த உரையாடல்

“என்ன சார் நியூஸ் இன்னிக்கு”

“அமைச்சர்களை எல்லாம் பதம் பார்த்த கொரோனா இப்போ நம்ம தலைவரையே பதம் பார்க்க போவுது போல”

“ஏன் சார் தலைவருக்கு மா! வந்துடுச்சு?”

“தெரியலையேப்பா டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்”

“இருக்கா? போயிடுச்சா? சார்?”

“எத …யாரை… கேக்கறே”

“கொரோனா வ தான் பின்ன தலைவரையா!!!! ச்சசச …ஏன்னா நம்ம ஆளுங்களப்பத்தி நமக்குத்தானே நல்லா தெரியும்…. கொரோனாக்கிட்டயே கம்மிஷன் கேட்டோ இல்ல அதுல அவங்க ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லியோ துன்புறுத்தி அத தொறத்தி கிறத்தி விட்டுட்டாங்களோனு கேட்டேன்”

“அந்த  வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா?  கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”

“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”

“எப்படி?”

“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு  ஸ்டிக்கராலேயே அழிவு னு”

“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது”