வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராகவனின் மகன் ராமு, வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்து, பெரிய தொழில் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வந்தான்.
ராமுவின் கடின உழைப்பை அறிந்த ராகவன், தனியாக ஒரு தொழிலும் தொடங்கும் படி கூற அதற்கு ராமு…அது சம்பந்தமான படிப்பு படித்த தன்னை விட அப்பாவுக்கு என்ன தெரிந்துவிட போகிறது என்று அவரின் சொல்லை மதிக்காமல் அலட்சியம் செய்தான்.
ஒரு நாள் ராமு வேலை பார்த்து வந்த நிறுவனம் சில சிக்கல்களால் மூடப்பட்டது. செய்வதறியாது மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினான்.
அப்பாவின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக வாசலில் காலணிகளை கழற்றி வைத்துக் கொண்டிருந்த ராமுவுக்கு கேட்டது.
“எல்லாம் உங்கப்பா தயவால் நடந்தது தம்பி. அவர் போல் ஒரு சிறந்த பிசினஸ் மேன் இல்லைன்னு கூட நான் சொல்லுவேன். எங்க கடைக்கு தினமும் வந்து பிசினஸ் சம்பந்தமான பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் பேச்சோடு பேச்சா சொல்லி கொடுத்ததுல… வர வெள்ளிக்கிழமை என்னோட புது சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு அப்பாவை தலைமை தாங்கி திறந்து வைக்கும்படி அழைக்க வந்திருக்கேன். சுவீட் எடுத்துக்கோங்க தம்பி.”
என்று சொன்னதும்…அனுபவ அறிவில் சிறந்த ராகவனை மதிக்காத மெத்த படிப்பு படித்த ராமுவின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விழுந்தது போல் இருந்தது.
ஒரு பக்கம் சுசிலா அவர்கள் சொசைட்டி குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் சத்தமாக நம் மகாகவியின் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள்.
மறுபக்கம் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களான வசந்தியும் ராதாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
வசந்தி: ஏய் ராதா இன்னிக்கு நம்ம கண்ணம்மா வேலைக்கு உன் வீட்டுக்கு வந்தாளா?
ராதா: இல்லையே வசந்தி. நானும் அவளுக்கு தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். நீ என்னடான்னா என்கிட்ட வந்து கேட்கிற!!!
வசந்தி: என்ன ஆச்சு அவளுக்கு? இந்த சுசிலா வேற ஞாயிறு ஆச்சுன்னா பாரதியார்… பாட்டுன்னு ஆரம்பிச்சிடறா!!!
ராதா: விடுப்பா. இந்த மாதிரி யாராவது சொல்லிக்கொடுத்தா தான் இந்த காலத்து குழந்தைங்க பாரதி யாருன்னே தெரிஞ்ப்பாங்க.
வசந்தி: நான் அந்த கண்ணம்மாக்கு ஃபோன் செஞ்சும் பாத்தேன். ஆனா அவ எடுக்கல!!
ராதா: அவ நம்ம கிட்ட வேலை கேட்டு வந்தப்ப எப்படி இருந்தா!! ஆனா இப்ப!!! ஞாயிறு லீவு வேணுமாம், சம்பளத்த Gpay or phonepay பண்ணுங்கறா!! அதை கேட்ட நான் பப்பேன்னு முழிச்சுக்கிட்டு நின்னேன்!!!
வசந்தி: நீ சொல்லறதும் கரெக்ட் தான் ஒண்ணும் தெரியாதவளா இருந்தவ நம்மக்கே அட்வைஸ் சொல்லற அளவுக்கு என்ன வாய்?
ராதா: அத சொல்லு வசந்தி. சரி சரி விடு! என்ன பண்ண! ஒரு வேளை அவளுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ!! ஏய் அதோ நம்ம சுசிலா வரா!!
வசந்தி: ஆமாம் ஆமாம்!! அவ குடுக்குற தைரியத்துல தான் இந்த கண்ணம்மா ரொம்ப ஆட்டம் போடறா!
ராதா: சும்மா இரு வசந்தி. சுசி! ஏய் சுசி!
சுசிலா: ஹே ராதா. எப்படி இருக்க? ஹாய் வசந்தி நீ எப்படி இருக்க? ஆஃபீஸ் வேலையெல்லாம் எப்படி போவுது?
ராதா: நான் நல்லா இருக்கேன் சுசி.
வசந்தி: ம்…ம்…நல்லா தான் இருக்கேன். சரி இன்னைக்கு அந்த கண்ணம்மா உன் வீட்டுக்கு வேலைக்கு வந்தாளா?
சுசிலா: இப்படி நின்னு பேசறதுக்கு பதிலா வேலையை பார்க்கலாமே!! அவளும் மனுஷி தானே. அவளுக்கும் வாரத்துல ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா?
வசந்தி: உனக்கென்னமா உன் வீட்டுல நீயும் உன் பொண்ணும் மட்டும் தான் ஆனா என் வீட்டுல அஞ்சு டிக்கெட் அப்படீன்னா எவ்வளவு பாத்திரம் சேரும்? எவ்வளவு வேலை இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு!
சுசிலா: சரி சரி! எனக்கு நேரமாச்சு நான் வரேன்.
வசந்தி: நியாயமான கேள்வி கேட்டா எப்படி தப்பிக்கறா பாரு!!
சுசிலா: என்ன சொன்ன வசந்தி!! நான் தப்பிக்கல. எனக்கு வேலை இருக்குப்பா. “புறஞ்சொல்லலாகாது பாப்பான்னு” நம்ம பாரதி சொன்னது பாப்பாக்கு மட்டுமில்ல நம்மளுக்கும் தான். அதுவுமில்லாம கண்ணம்மா அவ கனவ நெனவாக்க போயிருக்கா. அவ இன்னைக்கு வர்றது டவுட் தான். சும்மா பேசிட்டு இருக்காம ரெண்டு பேரும் வேலையை போய் பாருங்க.
ராதா: பார்த்தியா வசந்தி!! அப்படீன்னா அந்த கண்ணம்மா இன்னிக்கு வரமாட்டேன்னு இவகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கா!
வசந்தி: ஏன் நம்மகிட்டயும் சொல்லிருக்கலாம் இல்ல
ராதா: நாம விட மாட்டோம்ன்னு தான் சொல்லலையோ என்னவோ!
வசந்தி: சரி சரி!! நம்ம சுசிலா மாதிரி நானும் ஒரு பாரதியார் லைன் எ இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்தா மாதிரி சொல்லவா…
ராதா: என்னது? சொல்லேன் கேட்போம்!
வசந்தி: “துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா” சாரி ராதா! ராதா! போ நீயும் போய் உன் வேலையை பாரு.
என்று பாத்திரத்தை தேய்ப்பது போல் பாவனை காட்டிக் கொண்டே சொன்னாள் வசந்தி.
ராதா: எனக்கு தோனுற பாட்டு என்ன தெரியுமா “கண்ணம்மா கண்ணம்மா சீக்கிரம் வேலைக்கு வந்துடுமா”
மறுநாள் ஆனது
கண்ணம்மா: வசந்தி மா வசந்தி மா!!
வசந்தி: வாடி மா வா! நேத்து ஏன் மகாராணி வரலை?
கண்ணம்மா: நேத்திலேந்து நான் என் வேலைய விட்டு விலகிட்டேன் மா.
வசந்தி: என்னடி கண்ணம்மா! குண்ட தூக்கி போடற? ராதா க்கு தெரியுமா?
கண்ணம்மா: அவங்க கிட்டயும் சொல்லிட்டேன்ம்மா. இப்போ நம்ம காலனில ஒரு மீட்டிங் வச்சிருக்கேன் மறக்காம வந்திடுங்க. நான் வரேன்.
வசந்தி: ஆஃபீஸ் இருக்கே!
கண்ணம்மா: அம்மா அதுதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் தானேமா! ஒரு பத்து நிமிஷம் தான்ம்மா… வாங்கமா!
வசந்தி: சரி சரி வரேன்.
என்று கண்ணம்மாவிடம் கூறிய வசந்தி நேராக ராதாவிடம் சென்றாள்
வசந்தி: ராதா…
ராதா: வசந்தி….என்ன நடக்குது?
வசந்தி: எனக்கும் ஒண்ணும் புரியல. சரி வா நாம போய் அப்படி என்னத்த இந்த கண்ணம்மா சொல்ல போறான்னு கேட்போம்.
என்று இருவரும் அவர்களின் மற்றொரு தோழியான மாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த காயத்ரி இவர்களை பார்த்ததும்…
காயத்ரி: ஹே உமா, ராதா, வசந்தி என்ன நம்ம கண்ணம்மா எல்லாம் மீட்டிங் போட்டிருக்கா?
உமா: அவ ரொம்ப நாளா அவளுக்கு ஒரு கனவு இருக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா…அது…இந்த மீட்டிங் தானோ!!!
ஹீ ஹீ ஹீ ஹீ… என்று அவர்களுக்குள்ளேயே சிரித்து கேலி செய்துக் கொண்டனர். அப்போது அங்கு ஏதோ பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்த கண்ணம்மா அவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. பேப்பர்களை அடுக்கி கையில் ஏந்திக் கொண்டு வந்து அங்கிருந்த அந்த காலனி பெண்களைப் பார்த்து பேசலானாள்.
கண்ணம்மா: ம்….எல்லாரும் வந்துட்டீங்கன்னு நினைக்கறேன். இன்னேலேந்து நம்ம காலனில நான் வேலைப் பார்க்க போறதில்ல.
வசந்தி: அதத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே!
கண்ணம்மா: ஆனா ஏன்னு காரணத்த சொல்லணுல்லமா.
உமா: என்னடி மா…அந்த காரணம்!!
கண்ணம்மா: அது என்னன்னா!!! எனக்குள்ளேயும் நிறைய கனவு இருக்கு. அதுல ஒண்ணு நல்லா படிக்கணும்ங்ற கனவு, பன்னெண்டாம் வகுப்பு மட்டுமே படிச்ச நான் நம்ம சுசிலா அம்மா தயவால டிகிரி முடிச்சிட்டேன். என்னோட ஒரு கனவு பலிச்சிடுச்சு.
Gayathri: அதுக்கும் நீ வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லறதுக்கும் என்ன கண்ணம்மா சம்மந்தம்?
கண்ணம்மா: இருங்க இருங்கம்மா. என்னோட இன்னொரு கனவு சுயம்மா ஒரு தொழில் பண்ணனும்ன்னுங்கறது. அதுக்கும் சுசிலா மா சொல்லி தந்த பாரதியார் பாட்டு தான் எனக்கு ஊந்துகோலா இருந்துச்சு.
வசந்தி: அப்படி என்ன பண்ணின?
கண்ணம்மா: நேத்து ஒரு ஏஜென்சி எடுக்குற இன்டர்வியூ விஷயமா போயிருந்தேன். அந்த ஆர்டர் எனக்கு கிடைச்சிருக்கு. இனி இந்த காலனி மட்டுமில்லாம இன்னும் நிறைய காலனிகளுக்கும் “கண்ணம்மா ஹோம் க்ளீனிங் சர்வீஸஸ்” லேந்து என்னோட ஸ்டாஃப் தான் உங்க வீடெல்லாத்தையும் பளபளக்க செய்வாங்க.
வசந்தி: அப்பாடா. வயத்துல பால வார்த்த கண்ணம்மா!
கண்ணம்மா: இருங்க அதுக்கும் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கு அதெல்லாம் இந்த ஃபார்ம்ல இருக்கு இதுக்கெல்லாம் உட்படறவங்க மட்டும் கையெழுத்து போட்டு தந்தா உங்க வீட்டுவேலைக்கு ஆள் வருவாங்க. இல்லாட்டி இல்ல. அவங்கள மரியாதையா நடத்தணும்.
என்று அவள் கையில் வைத்திருந்த ஃபார்ம்களை அனைவருக்கும் குடுத்தாள். அதை வாங்கி பார்த்தனர் அக்காலனி பெண்கள். அப்போது ராதா கண்ணம்மாவிடம்…
ராதா: சரி கண்ணம்மா! உனக்கு இவ்வளவு விஷயங்களும் தைரியமும் எங்கேந்து வந்தது?
கண்ணம்மா: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பான்னு பாரதியார் பாட்டு நீங்க கேட்டதில்ல? அதுக்கு ஏத்தா மாதிரி படிப்பை தொழுது படிச்சேன்.
ராதாவை பார்த்து சொன்னாள்
ராதா: ஓ!!!!
வசந்தி: சரி படிச்ச. ஆனா தைரியம் எப்படி வந்துச்சு?
கண்ணம்மா: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! உங்களுக்கு மட்டுமில்ல மா என்னை மாதிரி இருக்கறவங்களுக்கும் தான்
இருக்குற இந்த காலத்துலன்னு இல்லங்க எந்த காலமா இருந்தாலும் நம்ம பாரதியார் சொல்லி இருக்குறா மாதிரி ஒரு பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி அவங்க படிப்பும் அறிவும் உழைப்பும் என்னென்னைக்கும் வீண் போனதில்லை, வீண் போகாது.
ஒரு பொண்ண நல்லா படிக்க வச்சீங்கன்னா அடுத்த சந்ததியையும் சேர்த்து படிக்க வைக்கிறது சமம்ங்க.
சுசிலா: சபாஷ் கண்ணம்மா. சரியா சொன்ன.
கனவு மெய்ப்பட வேண்டும்ங்கற நம்ம பாரதியார் வரிகளுக்கு ஏத்தா மாதிரி கண்ணம்மா கண்ட கனவு நெனவாகிடுச்சு. நீங்க எல்லாரும் எதுக்கு காத்திட்டு இருக்கீங்க? ம்…உங்க கனவுகளை நிஜமாக்க புறப்படுங்க. உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரதியாம்பிகாவுக்காகவே பிறந்து வளர்ந்து வந்து என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எனக்கு முன்னுரிமை கொடுத்த கேசவனை திருமணம் புரிந்து என் புகுந்த வீட்டிற்கு சென்றேன். அங்கே அனைவருடனும் நன்றாக பழகினேன். அவர்கள் அனைவருடனும் உடனே ஒரு இணைப்பு ஏற்பட்டது. மகிழச்சியாக என் திருமண வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள் என நான்கு குழந்தைகள் இரண்டு வருட வித்தியாசத்தில் பிறந்தனர். அவர்களுக்கு ராகேஷ், ராஜேஷ், ரம்யா, ராதா என்று பெயரிட்டோம். வருடங்கள் உருண்டோடின. வசதிகள் பெருகியது. குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஆளுக்கொரு கார், பெரிய பங்களா, வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா என்று மிகவும் அற்புதமாக சென்றுக் கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை. மூத்த இரட்டையர்கள் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியான கூகுளில் பணியாற்றுகிறார்கள். இரண்டாவது பெண் இரட்டையர்கள் லண்டனில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரம்யா ஆடிட்டராகவும், ராதா இன்டிப்பென்டென்ட் ம்யூசிஷியனாகவும் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நின்று பேசக்கூட நேரமின்றி வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.
நானும் ஆரம்பத்தில் நிற்க நேரமின்றி எனது பிள்ளைகள், அவர்களின் வகுப்பு பாடங்கள், பாட்டுக் க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று பிள்ளைகளை கொண்டு விடுதல் கூட்டிக் கொண்டு வருதல் என தினம் தினம் ஓட்டத்திலேயே எனது பாதி வாழ்க்கையும் ஓடியது. இப்போது அனைவரும் நன்றாக அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் செட்டிலாகி விட்டனர். நால்வருக்கும் திருமணமாகி நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இரண்டு மகன்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் லண்டனில் இரண்டு மகள்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் இந்தியாவில் தனிக்குடித்தனம் என்று எங்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்தது.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் எங்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகுப் பார்க்க வேண்டி எங்களது பிள்ளைகள் அனைவரும் இந்தியா வந்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எங்களின் சதாபிஷேகம். அன்று முழுவதும் நானும் கேசவனும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு ஏற்றார் போல அன்றிரவு உறக்கத்திலேயே என்னைத் தனியாக விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார் கேசவன். ஒரு நாள் முன் மகிழ்ச்சி வெள்ளத்திலிருந்த வீடு அடுத்த நாளே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாழ்க்கை என்றால் நம்மோடு எப்போதும் இருப்பவர்கள் நம்முடனே கடைசி வரை வருவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு கேசவனின் மரணம் உண்மையை புரியவைத்தது. எனது வாழ்க்கையே வெருச்சோடிப் போனது போல உணர்ந்தேன். பிள்ளைகள் அவர்களின் கடமைகளை செய்து முடித்ததும் அவரவர் நாட்டிற்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்பு என்னையும் அவர்களுடன் வரும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது இளைய மகன் ராஜேஷ் என்னைப் பார்த்து
“அம்மா நீ தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போற? பேசாம கிளம்புமா. உனக்கு யார் கூட இருக்கணுமோ அவங்க கூடவே போய் இருந்துக்கோமா. நீ எங்க இருந்தாலும் நாங்க எல்லாரும் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்கறோம் மா. ப்ளீஸ் எங்க கூட கிளம்புமா”
“இல்ல கண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிக்கோங்கப்பா உங்களுக்கெல்லாம் வேலையிருக்கு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு. என்னை மட்டும் இங்கேயே விட்டுடங்கப்பா. நானும் கேசவனுமா சென்று வந்த இடங்களின் இந்த ஃபோட்டோஸ், அவரும் நானுமா சேகரித்து வைத்திருக்கும் இந்த க்ராக்கரிஸ், இதோ இதைப் பாரேன் இது கேசவன் ரொம்ப ஆசைப்பட்டு சுவிட்சர்லாந்தில் வாங்கின பெல், அந்த சேர் இந்தோனேசியா ல ஆர்டர் பண்ணி வாங்கினார். இப்படி இந்த வீட்டுல என் கேசவனோட நினைவுகளோட நான் இருந்துக்கறேன்ப்பா. நீங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க சரியா. சாரி கண்ணா. அம்மாவால இந்த தடவை உங்களுக்கெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சுவீட்ஸ் அன்ட் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணித்தர முடியாம போயிடிச்சி.”
என்று நான் சொன்னதும் ராகேஷ் என்னைப் இறுக்கி அணைத்துக் கொண்டு
“அம்மா என்ன பேசற நீ? இப்பவும் நீ எங்களைப் பத்தி தான் நினைக்குற… பேசுற…நாங்க உன்னை நினைச்சுத் தான் கவலைப்படறோம் மா. நீ எப்படி தனியா இங்கே…அதெல்லாம் சரி வராதுமா. எங்களால நிம்மதியா அங்க எங்க வேலையைப் பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்.”
“அதெல்லாம் எந்த கவலையும் உங்க யாருக்குமே வேண்டாம்ப்பா. நானும் கேசவனுமா இங்கே பக்கத்துல இருக்குற ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் ல எங்க பெயர்களைப் பதிவு செய்து வச்சிருந்தோம். அது அவருக்கு தேவைப்படலை ஆனா எனக்குத் தேவைப்படும் போது உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு அங்க போறேன். நீங்க எனக்கு அடிக்கடி ஃபோன் போட்டுப் பேசுங்கப்பா அது போதும். அதுவுமில்லாம அதே கேம்பஸ்லயே ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு அங்கே நானும் உங்க அப்பாவும் அடிக்கடிப் போய் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட்ஸ் மற்றும் சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ஒரு வாரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துக்கிட்டிருந்தோம். அதை நான் தொடர்ந்து செய்யணும்னு நினைக்கிறேன். வயசாயிடுச்சு இல்லப்பா…நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இனி தனியா பயணம் பண்ணறதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சுக்கோங்க.”
அப்போது குறுக்கிட்டு பேசிய என் இளைய மருமகள் விசித்ரா
“அத்தை நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“என்ன விசித்ரா? நான் என்னைக்கு நீ சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிருக்கேன்! நீயும் என் மகள் தானே அதனால் நீ எதையுமே தப்பா கேட்டதுமில்லை இனி கேட்க போவதுமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் மா. அதனால தயங்காம கேளுமா.”
“இவ்வளவு பெரிய வீடு முழுக்க பல வகையான கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், அப்படி இப்படினு இவ்வளவு சாமான்களை சேர்த்து வச்சிருக்கீங்களே இதை எல்லாம் எப்படி துடைச்சு பார்த்துக்கப் போறீங்க?”
“அதுக்கு தான் வேலையாட்கள் இருக்காங்களேமா. அவங்க பார்த்துப்பாங்க. ம்…இருங்க உங்களுக்கு சேரவேண்டியதை தந்திடறேன்”
என்று எனது அறைக்குச் சென்று எங்கள் லாக்ரைத் திறந்தேன். அதிலிருந்த எனது நகைகளை எல்லாம் எடுத்து வந்து என் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என பகிர்ந்துக் கொடுத்தேன். அப்போது என் மகள் ரம்யா என்னைப் பார்த்து
“அம்மா இவ்வளவு நாள் நீ லாக்ர்ல பூட்டி வைத்திருந்ததை எல்லாம் எங்க தலையில கட்டிட்ட இல்ல…இப்போ நாங்க எங்க பாங்க் லாக்ர்ல இதை எல்லாம் வைச்சுட்டு ஊருக்குப் போகப் போறோம். இதுக்காகவா விழுந்து விழுந்து இவ்வளவு நகைகளை சேர்த்த?”
“என்ன பண்ண ரம்யா நானும் பெண் தானே!”
“அம்மா இதெல்லாம் நீ ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கினது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இந்தா நீயே வச்சுக்கோ. உனக்கு இதை வச்சு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணிக்கோ. எங்களுக்கு தரவேண்டியதனைத்தையும் நீயும் அப்பாவும் நிறையவே தந்திருக்கீங்க எங்களுக்கு அது போதும் மா. இந்தா புடி…இல்ல…குடு… நானே உன் லாக்ர்ல வச்சுட்டு வரேன். நீ மறுபடியும் மாடிப்படி ஏறி போக வேண்டாம். என்னப்பா சொல்லுறீங்க நீங்க எல்லாரும்?”
“எஸ் ரம்யா நீ சொல்லறது தான் சரி. அம்மா நீயும் அப்பாவும் எங்களுக்கு கல்வி, அன்பு, பாசம், குடும்பம்ங்கற நிரந்தரமான சொத்துக்களைக் கொடுத்திருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும்.”
என்று ராகேஷும்
“ஆமாம் மா அண்ணணும் ரம்யாவும் சொல்லறது தான் சரி. எங்களுக்கு எதுவும் வேண்டாம் மா.”
என்று ராஜேஷும்
“எஸ் மா தே போத் ஆர் வெரி கரெக்ட். எனக்கும் வேண்டாம் மா. எங்களுக்கு நீ ஆரோக்கியமா, சந்தோஷமா, நிம்மதியா இருந்தாலே போதும் மா.”
என்று ராதாவும் கூறியதைக் கேட்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைத் துடைக்க எட்டுக் கரங்கள் ஓடி வந்தன. அன்று என் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்துள்ளோம் என்று பல தருணங்களில் உணர்ந்திருந்தாலும் அன்று சற்று பெருமிதமாகவும் இருந்ததால் மனம் பூரித்தது. ஆனால் அதைப் பகிர்ந்துக் கொள்ள கேசவனில்லையே என்ற வருத்தம் என் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். நான் ஒரு ஆறு மாதங்கள் அங்கேயே என் கேசவனின் நினைவுகளுடனும், பேரன் பேத்திகளுடன் வீடியோ கால்களும் என்று சுற்றி சுற்றி வந்தேன். ஊருக்கு செல்வதற்கு முன் ரம்யா என்னிடம் சொன்னது என் மனதின் ஓரத்தில் இருந்திருக்கிறது போலும். ஓர் நாள் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு குழந்தை என்னிடம் வந்து
“பாட்டி நீங்க உங்க வீட்டுல நிறைய தோடு வச்சிருக்கீங்களா?”
“ஏம்மா கேக்கற?”
“இல்ல பாட்டி நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் ஒவ்வொரு கலர்ல தோடு போட்டுட்டு வர்றீங்களே அது தான் கேட்டேன்”
அப்போது என் மனதின் ஓரத்திலிருந்த என் ரம்யாவின் பேச்சு அன்று என் மனதில் மீண்டும் உதிக்கச் செய்தது. எதற்காக நான் இவ்வளவு பொருட்களை சேர்த்து வைத்தேன்? யாருக்காக இவைகளை வாங்கி இப்படி அழகாக அடுக்கி வைத்தேன்? இவைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளேன்? இதற்கு பதிலாக இன்னும் அந்த ஆசிரமத்திலிருக்கும் ஒரு இருபது குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமே! என்ற எண்ணங்கள் என்னை அன்று முழுவதும் தூங்க விடாது படுத்தி எடுத்ததில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
மறுநாள் எழுந்ததும் என் பிள்ளைகளை கான்பரன்ஸ் காலில் வரச்சொல்லி அதைச் சொன்னேன். அதைக் கேட்டதும் நால்வரும்
“அம்மா ஏன்மா? இங்க வாயேன் மா.”
“அம்மா நீ ஏன் அந்த ஓல்டேஜ் ஹோம்ல போய் இருக்கணும்? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோமே மா”
“அம்மா திஸ் இஸ் டூ மச். எதுக்காக இப்போ நீ இப்படி ஒரு டிஸிஷன் எடுத்திருக்க?”
“அம்மா உன்னைத் தாங்கறதுக்கு நாங்க நாலு பேர் காத்திருக்கும் போது ஏன் மா நீ முதியோர் இல்லம் போறேன்னு சொல்லற?”
என்று நாலவரும் என்னிடம் மாறி மாறி கேள்விக் கேட்டனர். அவர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்த பின்
“எல்லாரும் பேசி முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா? உங்க எல்லாரோட தவிப்பும் அக்கறையும் எனக்கு நல்லா புரியுது. ஆனால் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாருமே வேலைக்குப் போறீங்க. உங்க பசங்க ஸ்கூல், கிளாஸ்ன்னு போறாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க… இதுல நான் வந்து அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்? அதுவுமில்லாம நீங்களும் சற்று நின்னு நிதானமா யோசிங்க…எதுக்காக? எதை சாதிக்க இப்படி குடும்பம் பிள்ளைகள் எல்லாரையும் விட்டுட்டு இப்படி ஓடிக்கிட்டிருக்கீங்கன்னு…பசங்க வளர்ந்துட்டா அப்புறம் அவங்க …அவங்க வாழ்க்கை, அவங்க ஃப்ரெண்ட்ஸ் ன்னு அவங்க உலகமே வேற ஒண்ணா மாறிடும். நீங்க அவங்களோட இருக்க வேண்டிய தருணங்களில் இப்படி ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் உங்களுக்குன்னு நேரம் கிடைக்கும் போது அவங்க உங்ககிட்ட இருக்க மாட்டாங்க. அதுனால முடிஞ்ச வரை உங்களோட இந்த ஓட்டத்துக்கு இடையில உங்க பசங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அது தான் உங்க வயசான காலத்துல உங்க கூடவே வரப்போற பசுமையான நினைவுகளாயிருக்கும். அது தான் உங்களுக்கு அந்த வயதில் நீங்கள் நகர்ந்துச் செல்ல டானிக்காக இருக்கும். வாழ்க்கையை ஓடிப்பார்க்க நினைக்காதீங்க கொஞ்சம் நிதானித்துக் கொண்டு நடந்து தான் பாருங்களேன் அப்போ அதிலிருக்கும் அமைதி, அழகு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் புரிஞ்சுக்கலாம். நானும் உங்க அப்பாவும் அப்படித் தான் வாழ்ந்திருக்கிறோம் அதுனால தான் இப்போ அந்த பழைய நினைவுகள் என்னை நகர்த்திக்கிட்டிருக்கு. அதுவே எனக்குப் போதும் கண்ணுகளா. அதுவுமில்லாம அங்க இருக்குற பெத்தவங்க இல்லாத அந்த குழந்தைகளுக்கு படிப்பு, கைவேலை, எல்லாம் கத்துக் கொடுத்து அவங்களையும் உங்களைப் போல சிறந்த பிள்ளைகளா உருவாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டோ இல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டோ எது புக் பண்ணினாலும் இனி என்னால அவ்வளவு தூரம் பிரயாணம், இந்த நேரம் மாற்றம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியாதுப்பா...என் உடலும் அதுக்கு ஒத்துழைக்காது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டுமா என்னுடன் இருக்க வேண்டுமா வாங்க சந்தோஷமா இருக்கலாம். என்ன சொல்லுறீங்க?”
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ராகேஷ் பேசி அந்த நிசப்தத்தை உடைத்தெறிந்தான்
“அம்மா நீ சொல்லறது எல்லாமே கரெக்ட் தான் மா. சரி நீ அங்கேயே போய் இருந்துக்கோ. நாங்க மாறி மாறி வந்து உன்னைப் பார்த்துக்கறோம். அப்படி நீ அங்கப் போனேன்னா இப்ப இருக்குற வீடு அதிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் என்ன பண்ணப்போற?”
“ம்…இது நல்ல கேள்வி. அதை அப்படியே வைக்கறேன். நீங்க வந்து ஏதாவது பண்ணிக்கோங்க.”
“இல்லமா…எனக்கு அதுக்கெல்லாம் டைமில்ல…”
“எங்களுக்கும் நேரமில்லை மா.”
“அப்படின்னா நான் இதை எல்லாம் வித்துடவா?”
“அம்மா அதெல்லாம் நீயும் அப்பாவுமா வாங்கின சொத்துக்கள் அதனால் அதை என்னவேண்டுமானாலும் பண்ண உன்னைத் தவிர வேறு யாருக்குமா ரைட்ஸ் இருக்கு! சொல்லு.”
“அப்போ சரி சொல்லிட்டீங்க இல்ல இனி நான் பார்த்துக்கறேன்.”
“பத்திரமா இருமா. நான் ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து உன்னைப் பார்க்கறேன்.”
“அம்மா நாங்க தீபாவளிக்கு வர்றோம்”
“சரி கண்ணுகளா. உங்களால எப்ப முடியுதோ அப்போ வாங்க நோ ப்ராப்ளம். சரி நான் அப்போ இந்த மாசமே அங்கே ஷிப்ட் பண்ணிடறேன் சரியா.”
“ம்….சரி மா. உன் விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். கோ அஹெட் ரதியா மா”
“நன்றி குழந்தைகளா. சரி சரி இப்போ என் பேரப்பிள்ளைகளைப் பேச சொல்லுங்க”
என்றதும் அவர்கள் வந்தனர். அவர்களுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும் அந்த ஹோமுக்குக் கால் செய்து விவரங்களைச் சொன்னேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். அடுத்த நாளே ரியல் எஸ்டேட் காரர் ஒரு வரை வரவழைத்து பேசினேன். அவரும் எங்கள் வீட்டை விற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். எங்களுக்கு இன்னுமொரு சிறிய வீடு இருந்தது. அதில் நானும் கேசவனுமாக சேகரித்து வைத்திருந்த பொருட்களில் முக்கியமான சில வற்றை கொண்டுச் சென்று ஆட்களை வைத்து அடுக்கி ஒரு ம்யூசியம் போல வைத்தேன். வீடு விற்கப்பட்டது. எனக்குப் பிடித்த ஓரிரண்டு நகைகளைத் தவிர மீதமிருந்த அனைத்து நகைகளையும் விற்றேன்.
பணம் என் வங்கியில் போடப்பட்டது. அவ்வளவு பொருட்களின் சொந்தக்காரி, மூன்று பீரோ முழுக்க அடுக்கப்பட்டிருந்த உடைகளுக்கு உரிமைக்காரி, நகைகள் நிரம்பிய லாக்கருக்கு எஜமானி… அன்று… கையில் வெரும் இரண்டு சிறியப் பெட்டிகளுடன் அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.
அங்கேயிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னைப் பாரத்ததும் ஓடி வந்தன நானும் அவர்களை என் இரு கரங்களில் வாரிக் கட்டி அணைத்துக் கொண்டேன். அந்த ஆசிரமத்தில் நானும் ஒருத்தியானேன். என்னிடம் இருந்த பணம் நகை பொருட்கள் எதுவுமே என் பிள்ளைகளுக்கு தேவையில்லை ஏனெனில் அவர்களுக்கு அவை அனைத்தையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஆளாக்கியுள்ளோம். ஆகையால் என்னிடமிருந்த பணத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒன்றை மட்டும் வங்கியில் போட்டேன். இரண்டாவது பங்கை என் பேரப்பிள்ளைகள் பெயரில் எஃப் டியில் போட்டேன். மூன்றாவது பங்கை எங்களுக்காக அத்துனை வருடங்கள் வேலைப்பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நான்காவது பங்கை வைத்து ஆசிரமத்தை விரிவுப்படுத்தினேன். வசதிகளைப் பெருக்கிக் கொடுத்தேன். அங்கிருந்த பிள்ளைகள் படிப்பதற்காக பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தைக் கட்டினேன். அங்கேயிருந்த சிறிய முதலுதவி கூடத்தை அனைவருக்கும் பயன்படும்படியான க்ளினிக்காக மாற்றியமைத்தேன். வங்கியில் போட்டிருந்த எனது பங்கிலிருந்து வந்த வட்டியே எனது மாத செலவுக்கு போதுமானதாக இருந்தது. அதை வைத்து அங்கிருந்த முதியவர்கள், பிள்ளைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களை விமர்சையாக இல்லாவிட்டாலும் நல்ல உணவு, புதிய உடை அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம். என் பிள்ளைகளும் அவ்வப்போது வந்து என்னுடன் இருந்து அவர்களால் ஆன உதவிகளை அந்த இடத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் செய்து வந்தனர். அவர்கள் எங்கள் பெயரிலே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு அதன் மூலம் அந்த இடத்தையும், மருத்துவமனையையும், பள்ளிக்கூடத்தையும் பராமரித்து வந்தனர். பேரப்பிள்ளைகளும் வந்து அங்கிருந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிச் சென்றனர்.
சம்பாத்தியம் என்பது நாம் வாழ்வதற்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கும் எல்லையை வகுத்துக் கொண்டோமேயானால் நமது வாழ்க்கை அழகானதாக அமைதியானதாக நிம்மதியானதாக இருக்கும். ஓட வேண்டிய வயதில் தான் ஓட முடியுமென்றெண்ணி ஓட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணதவாறு நமது வாழ்க்கைக்கு நாமே திரையிட்டுக்கொள்ளாது நின்று நிதானமாக ஓடியும், நடந்தும், ஓய்வெடுத்தும் நமது வாழ்க்கையைக் கடந்துச் சென்றால்…வாழ்க்கை நமக்கு பல அற்புதமான அனுபவங்களை, பாடங்களை, பரிசுகளை, நட்புக்களை நமக்களிப்பதில் தவறுவதில்லை. அவற்றை நாமும் வேகமாக கடந்திடாது ரசித்து வாழ முடியும்.
அந்த ஆசிரமத்தின் பள்ளியில் படித்த பிள்ளைகள் பெரிய பெரிய கம்பெனிகளில் பணிப்புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேச் சென்றாலும் அந்த ட்ரஸ்ட்டுக்கு பணம் அனுப்புவதையும், மாதம் ஒரு முறையாவது வந்து அங்கிருந்த அனைவருடனும் நேரம் செலவிடுவதையும் தவறாது செய்து வந்தனர். அந்த கடவுள் என் மூலம் விதைத்த ஒரு சிறிய விதையானது இன்று பெரிய வானுயர விருட்சமாக ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் எனது டைரியில் குறிப்பெழுதி வைத்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் செல்வேன். அன்றிரவும் குறிப்பெழுதி வைத்துவிட்டு கடவுளுக்கு நன்றிச் சொல்லிவிட்டு மனநிறைவோடு படுத்துறங்கினேன்.
பல வருடங்களாக என்னைப் பிரிந்திருந்த கேசவன் வந்தார் தன் கரங்களை நீட்டி என் கரம் பிடிக்க காத்திருப்பதாக சொன்னார். நானும் என் கரம் நீட்டி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டேன். இருவரும் வானில் புதிய பறவைகளைப் போல வட்டமடித்துப் பறந்துக் கொண்டே வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தோம். அந்தப் பயணத்தின் போது கேசவன் என்னிடம்
“ரதியா நீ நல்ல காரியம் செய்துள்ளாய். நீ இதுவரை செய்துள்ள நல்ல விஷயங்கள் தான்… எந்த பாவப் பொதிளையும் சுமக்காது, எந்த வித வலி வேதனையுமின்றி உனக்கு இவ்வாறான ஒரு இனிய பயணத்தை அளித்துள்ளது.”
என்றார். அதைக்கேட்டதும் நான் இன்னும் மகிழ்ச்சியானேன். என் மறைவினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள் மட்டுமின்றி நான் வளர்த்தப் பிள்ளைகளும் என் ஆசிரமத்து நண்பர்களும் என அனைத்து நல்லுள்ளங்களும் எங்களுக்காக வடித்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நாங்கள் இருவரும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
எங்கள் பெற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்… எதைக் கொண்டு வந்தோம் நாம் எடுத்துச் செல்வதற்கு. வெறும் ஆறடி இடமிருந்தாலே போதுமென்று. அது அந்தக் காலம். இப்போது அந்த ஆறடியும் சொந்தமில்லை நமக்கு. மின்சார தகனம் செய்து சில மணிநேரத்தில் எல்லாம் ஒரு பிடி சாம்லுடன் திரும்பிச் சென்று விடுகிறார்கள் நம் சொந்தங்கள்.
நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து வேறுலகம் செல்லும் போது நாம் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நாம் வாழும் காலத்தில் ஓடோடி சேர்த்துவைக்கும் பொருட்களையும், பொன்னையும், சொந்தங்களையும், நட்புக்களையும் தான் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாமும் நம்முடன் எடுத்துச் செல்ல சிலவற்றை அதாவது கண்ணுக்கு தெரியாத, உருவமில்லாத சிலவற்றை சேர்த்து வைத்தோமே என்றால் அவை நாம் இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் போது நம் கரம் பிடித்து கேசவன் என்னிடம் சொன்னது போல எந்த வித வலி வேதனையுமின்றி ஒரு இனிமையான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அது தான் நாம் வாழும் காலத்தில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சொத்தாகும். அது வேறெதுவுமில்லை புண்ணியம் தான் அது.
நாங்கள் சேர்த்து வைத்த பொன், பொருள், வீடு, வாசல் எங்களுடைய இந்த இனிய பயணத்திற்கு சிறிய வகையில் உதவியிருந்தாலும் பெரியதாக உதவியவை எவை தெரியுமா?… நாங்கள் எங்கள் கடமைகளை சரிவரச் செய்தது, எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதனைத்தையும் செய்து முடித்தது, இந்த சமுகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கிக் கொடுத்தது, அனைவருக்கும் நல்லதையே நினைத்தது, எங்களால் முடிந்த வரை அனைத்து நல்ல காரியங்களையும் செய்தது ஆகியவையாகும். அவைகளை செய்யும் போது அவைகள் அனைத்தும் விண்ணுலகில் எங்களைக் காக்கப் போகும் துவார பாலகர்கள் என்றறிந்திடாது செய்தோம். கேசவன் எனக்கு முன்னே அறிந்துக் கொண்டுவிட்டார் ஆனால் நான் அன்று தான் அதை அறிந்துக் கொண்டேன்.
பணம், பொன், பொருள், பதவி அகியவை மண்ணுலகத்தில் நாம் மேற்கொள்ளும் பயணங்களுக்குத் தான் உதவியாக இருக்கும்.
நாம் அவைகளை வைத்து செய்யும் புண்ணியக் காரியங்கள் தான் நமது விண்ணுலகப் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எங்களால் அந்த புண்ணிய பணியை விட மனமில்லாததால் நானும் கேசவனும் இணைந்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு பாதுக்காப்பாகவும், அவ்வப்போது எங்களாலான… ஆனால் அவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு சில சிறிய உதவிகளையும் செய்து வந்ததில் மரணமில்லா மகிழ்ச்சியைப் பெற்று வந்தோம்.
உயிருடன் இருந்தாலும், உயிரற்றுப் போனாலும், நம்முடனே வருவதும், நம்மால் செய்ய முடிந்ததும் புண்ணியக் காரியங்களே! பணம், பொன், பொருள்களுக்கு எல்லை நம் மரணம் புண்ணியக் காரியங்களுக்கு எல்லை என்பது இன்னும் வகுக்கப்படவில்லை! முடிந்த வரை புண்ணியக் காரியங்களில் ஈடுபடுங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
மண்ணுலகின் பிரதி பிம்பமே விண்ணுலகம். மண்ணுலகில் எதை விதைக்கிறீர்களோ அது தான் விண்ணுலகில் உங்களுக்கு நன்மைத் தரக்கூடிய விருட்சமாகும். ஆகையால் நல்லதே எண்ணுங்கள், நல்லவைகளையே செய்திடுங்கள், இரு உலகிலும் நன்மையையே பெற்றிடுங்கள்.
எங்களுக்குக் கிடைத்த இந்த இரு உலகப் பயணத்திலும் நாங்கள் நன்றாகவே பயணித்தோம், பயணித்துக் கொண்டும் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன்.
“விஷ் யூ போத் அ ஹாப்பி 2020 மை டியர் அப்பா அன்ட் அம்மா”
“தாங்க்ஸ் மா. ஹாப்பி நியூ இயர் டா ராதா கண்ணா. ஹாப்பி நியூ இயர் மை டியர் வைஃப்”
“நன்றி ராதா அன்ட் மை நாதா. என் கணவருக்கும் மகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
“வாரே வா!!! கலக்கல் அம்மா”
என்று கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதன் பின்னர் ராதா அவள் நண்பர்களுடனும், ராஜு அவர் நண்பர்களுடனும் ஃபோனில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். ராஜம் மீதமிருந்த அந்த கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அவளது தோழிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பிவிட்டு, விளக்கை சாந்தப் படுத்திய பின் உறங்கச் சென்றாள்.
மறுநாள் முதல் அவரவர் வேலைகள் மற்றும் நண்பர்கள் என முழ்கினர். ராஜம் வழக்கம் போல சமையல் அடுப்படி என்றிருந்தாள்.
ஜனவரி ஐந்தாம் தேதி ராதா அவளது இரண்டாம் வருட இஞ்சினியரிங் படிப்பின் இரண்டாவது செமஸ்டரை முடிக்க கனடா நாட்டுக்குச் செல்ல ஆயத்தம் ஆனாள். ராஜம் மகளுக்கு வேண்டிய புளிக்காய்ச்சல், பருப்புப் பொடி, ஊறுகாய்கள் என தயார் செய்வதில் மும்முரமானாள். அனைத்தும் பேக் செய்து இரண்டு பெட்டிகளை காரில் ஏற்றி ஏர்போர்ட் சென்றார்கள். அங்கே ராதா தன் பெற்றோரை கட்டி அணைத்து “பை” சொல்லிவிட்டு இமிக்ரேஷனுக்கு உள்ளே செல்லவதற்கு முன் சற்று நின்று திரும்பி தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து கை அசைத்தாள். ராஜம் தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவள் கண்ணிலிருந்து ராதா மறையும் வரை அதே இடத்தைப் பார்த்தபடி நின்று அழுதாள். உடனே ராஜு தன் மனைவி தோளில் கையைப் போட்டு தட்டிக் கொடுக்க சுயநினைவுக்கு வந்தாள் ராஜம். பின் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இது கடந்த இரண்டு வருடங்களாக ராதா ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து செல்லும்போதும் நடைப் பெரும் நிகழ்வே. ஆனால் இந்த முறை ராஜத்தின் அழுகை ஒரு நாள் ஆகியும் நிற்கவில்லை. அதை பார்த்த ராஜு..
“என்ன ராஜம் நம்ம ராதா படிக்க தானே போயிருக்கா!! ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் அழுற? அதுவும் இந்த தடவை ஜாஸாத்தி வருத்தப் படுற!!!”
“ஆமாம் ராஜு ஏதோ சொல்ல முடியாத கவலை என் மனச போட்டு அழுத்தறது. ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரியே இருக்கு. இருங்கோ நான் அந்த அம்பாளுக்கு வேண்டிண்டு காசு முடிஞ்சு வச்சுட்டு வந்துடறேன்”
என்று கூறிவிட்டு அம்பாள் படத்திற்கு முன் நின்று மனதார வேண்டிக்கொண்டு காசை முடிந்து வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்தாள்.
மறுநாள் ராதா நல்லபடியாக அவளது கல்லூரி ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என அவளிடமிருந்து ஃபோன் வந்த பிறகு சற்று ஆசுவாசமானாள் ராஜம்.
ராஜுவிற்கு ஆபிஸ் வேலைக்காக மார்ச் மாதம் கனடா போகவேண்டி வந்தது அப்போது அவருடன் ராஜமும் சேர்ந்து போய் அவர்கள் மகளுடன் வசந்த கால விடுமுறை ஒரு வாரத்தை செலவழிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
பிப்பரவரி மாதம் இறுதியில் கொரோனா என்ற கொடிய நச்சுயிரி உலகெங்கும் பரவி வருவதாகவும் அதனால் பல லட்சம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்துக் கொண்டே இருந்தன.
அந்த நச்சுயிரி பரவாமல் இருப்பதற்காக பல நாடுகள் கதவடைத்து வருவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியதும் ராஜு அவர்களின் கனடா பயணத்தை தவிர்த்து ஆக வேண்டும் என்று முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்தார்.
ராதாவிற்கு திரும்பி ராஜு, ராஜம் வசிக்கும் நாட்டிற்கு வருவதற்கு ஏப்ரல் முப்பதாம் தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இந்த செய்திகளைப் பார்த்ததும்… மார்ச் பண்ணிரெண்டாம் தேதி ராதாவுடன் பேசியபோது டிக்கெட்டை அவள் பரீட்சை முடியும் நாளான ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மாற்றி சீக்கிரம் வீட்டிற்கு வரும்படி சொன்னார்கள்.
ஆனால் ராதாவுக்கு ஏதோ ரிசர்ச் சம்மந்தமான வேலை இருபத்தி எட்டாம் தேதி இருப்பதால் அதுவரை அங்கு இருந்தாக வேண்டும் என்று சொல்லி முப்பதாம் தேதி டிக்கெட்டை இருப்பத்தி எட்டாம் தேதிக்கு மாற்ற முயற்சித்தாள். அது செய்ய முடியாது ஏனென்றால் நிறைய டிக்கெட் ரத்துக்களும் மாற்றங்களும் உலகெங்கும் செய்யப்படுவதால் கையிலிருக்கும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக தான் டிக்கெட் பதிவு செய்ய இயலும் என்று ராதா டிக்கெட் பதிவு செய்த வலைத்தளம் குறிப்பிட வேறு வழியின்றி முப்பதாம் தேதி பயணச்சீட்டை ரத்து செய்து புதிதாக இருப்பத்தி எட்டாம் தேதிக்கு அவள் அங்கே கேம்பஸில் வேலைப் பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து மீண்டும் பதிவு செய்தாள். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் காசு இரண்டு வாரங்களில் அக்கௌன்டில் வந்து சேரும் என்று அச்சிடப்பட்டிருந்தது அந்த வலைத்தளத்தில்.
பதிமூன்றாம் தேதி செய்தித்தாள் படித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள் ராஜுவும் ராஜமும். அவர்கள் வசிக்கும் நாட்டில் மார்ச் பதினேழாம் தேதி முதல் அனைத்து வகை விசாக்களையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப் போவதாக அச்சிடப்பட்டிருந்தது. பலர் விசாக்கள் நிறுத்திவைக்க துவங்கி விட்டார்கள் எனக் கூறிவும் அதிர்ந்து போனார்கள் இருவரும்.
அப்படி விசாக்கள் வழுங்குவதை காலவரையின்றி நிறுத்திவிட்டால் ராதாவால் இருபத்தி எட்டாம் தேதி அவள் பெற்றோர் வசிக்கும் நாட்டிற்குள் நுழைய முடியாது ஏனெனில் அவளது விசா முடிவடைந்ததை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை ஆகையால் ஏப்ரல் மாதம் விசா ஆன் அரைவலில் வந்துவிட்டு பின் மீண்டும் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றிருந்தனர். ஆனால் விசாவை நிறுத்தி விட்டால் அவள் பெற்றோருடன் இருக்க முடியாது அவளை இந்தியாவிற்கு அவள் தாத்தா பாட்டியிடம் அனுப்பலாம் என்றும் யோசித்தார்கள் ஆனால் இந்தியாவிலும் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது.
செய்வதறியாது ராஜுவும் ராஜமும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ராதா அவர்களை வீடியோ காலில் அழைத்தாள். அவள் அழைக்கும் போது ராஜு தம்பதியினருக்கு மணி காலை எட்டரை ராதாவிற்கு நள்ளிரவு பண்ணி ரெண்டு.
“ஹலோ அப்பா. எப்படி இருக்கேங்கள் ரெண்டு பேரும். அங்க லாக்டவுன் ஏதும் இல்லையே?”
“என்னம்மா உனக்கு டைம் பண்ணண்டு ஆயிருக்குமே இன்னுமா தூங்காம இருக்க?”
“இன்னைக்கு கல்லூரிக்கு கடைசி நாள் அப்பா அதனால நண்பர்கள் அனைவருமாக டின்னருக்கு சென்று வந்தோம். அதுதான் இவ்வளவு லேட் ஆயிடுத்து”
“அங்க ஒண்ணும் உனக்கு பிரச்சினை இல்லையே ஏன்னா கனடா ல நிறைய யூனிவெர்ஸிட்டீஸ் ஆன் லைன் ல க்ளாஸஸ் ஆரம்பிக்க போறான்னுட்டு நியூஸ் பார்த்தேன். உங்க காலேஜ் என்ன பண்ண போறா?”
“அதப்பத்தி சொல்லத்தான் இப்போ கால் பண்ணினேன். எங்க காலேஜும் இந்த ஸ்ப்ரிங் ப்ரேக்குக்கு ஊருக்கு போற ஸ்டூடன்ட்ஸை திரும்பி வரவேண்டாம்ன்னும் க்ளாஸஸ் ஆன் லைன்ல நடத்தப் போறான்னும் இன்னைக்கு மத்தியானம் எங்க எல்லாருக்கும் காலேஜ் ப்ரெஸிடென்ட் கிட்ட இருந்து ஈமெயில் வந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவாஅவா ஊருக்கு நாளை மறுநாள் அதாவது பதினைந்தாம் தேதி கிளம்பிப் போகப்போறாளாம் டின்னரில் டிஸ்கஸ் பண்ணினா. அது தான் நானும் வந்திடலாமா இல்லை இங்கேயே இருக்கலாமான்னு யோசிக்கறேன்”
“இதுல என்ன யோசிக்க இருக்கு ராதா பேசாம நீயும் உன் இருபத்தி எட்டாம் தேதி டிக்கெட்டை பதினைந்தாம் தேதிக்கு மாத்திண்டு இங்க எங்கள்ட்டயே வந்துடுமா”
“ஆனா அப்படி எங்க ஸ்டூடன்ட் வெப்சைட்டில் ப்ரீபோன்ட் பண்ண முடியாது பா. கான்ஸல் பண்ணிட்டு புதுசா தான் பூக் பண்ணணும்.”
“சரி அதை பண்ணு”
“அம்மா நான் ஃபர்ஸ்ட் செஞ்ச கேன்ஸலேஷனுக்கே இன்னும் காசு திரும்பி என் அக்கௌன்ட்க்கு வரலை.”
“அது வரும்போது வரட்டும் நீ இப்போ இந்த டிக்கெட்டையும் கான்ஸல் பண்ணிட்டு புதுசா புக் பண்ணிடு”
“அம்மா என் கிட்ட புது டிக்கெட் புக் செய்யற அளவுக்கு அக்கௌன்டில் பணமில்லை…நீங்க எனக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தாலும் அது என் அக்கௌன்ட்டுக்கு வரத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆகிடும்”
“சரி அப்போ ஒண்ணு பண்ணறேன் நான் டிக்கெட் பார்க்கறேன் கிடைச்சா உன் ஈமெயில் ஐடி கொடுத்து புக் பண்ணறேன் சரியா”
“அம்மா என் ஃப்ரெண்ட்ஸ் பாரிஸ் வழியா வர்ற ஃப்ளைட் புக் பண்ணிருக்கா எனக்கும் அதுல இருக்கான்னுட்டு பாரு”
“சரி உன் ரூம்ல இருக்கற திங்க்ஸ் எல்லாத்தையும் என்ன பண்ணப் போற?”
“எங்க ஃப்ரெண்ட் ஆன்ட்ரியா வீட்டு பேஸ்மென்ட் ல வைக்க போறோம். அவா எல்லாம் பேக்கிங் ஆரம்பிச்சுட்டா. நான் டிஸிஷன் தெரியாம வெயிட் பண்ணிண்டிருந்தேன். இதோ நானும் பேக் பண்ணப் போறேன்”
“முக்கியமா வேண்டியதை மட்டும் எடுத்துண்டு வா போறும்”
“சரி நான் எல்லாத்தையும் பேக் பண்ணட்டும் பை.”
“ஓகே பை ராதா”
“ஓகே ராஜம் டிக்கெட் புக் பண்ணிட்டே ஆனா ராதாவோட விசா ரின்யூ பண்ணிட்டில்லையே….இங்க வேற பதினேழாம் தேதி முதல் எல்லா விசாவையும் ஸ்டாப் பண்ணப்போறா…இன்னைக்கு இங்க லீவு… ஸோ ஒண்ணும் பண்ண முடியாது நாளைக்கு காலை ல தான் என் ஆபிஸ் டிராவல்ஸ் ல பேசி ஏற்பாடு பண்ணணும்”
“ஓ அது வேற இருக்கே!!! ரின்யூ பண்ணலைன்னு நான் ஞாபகப் படுத்தும்போதெல்லாம் எங்களுக்கு தெரியும்ன்னுட்டு இப்போ எப்படிப் பட்ட இக்கட்டான நிலைமை ல நிக்கறோம்ன்னு பாருங்கோ.”
“இப்போதான் குத்திக் காமிக்கற நேரமா? நாளைக்கு காலை ல ஏழு மணிக்கெல்லாம் ப்ராஸஸை ஸ்டார்ட் பண்ணிடணும்”
“ராதா நாளன்னைக்கு கிளம்பறா பதினாறாம் தேதி ராத்திரி பதினோரு மணிக்கு இங்க வந்திடுவா அப்போ அவள் கிட்ட விசா இருக்கணுமே…ஒரே நாள்ல விசா கிடைச்சுடுமா?”
“லெட் அஸ் ட்ரை.”
“பகவானே என்னப்பா இந்த சோதனை”
“ஒரு சோதனையும் இல்லை ராஜம். பீ கூல். எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். வர்றியா லஞ்ச்சுக்கு வெளியே போகலாம்”
“அப்படி எல்லாம் ஒண்ணுமே நடக்காது. நீ வேணும்ன்னா பாரு எல்லாமே ஸ்விஃப்ட்டா நடக்கும்”
அன்று முழுவதும் மனக்கவலையில் ராஜம் ஒன்றும் சாப்பிடாமலும் சரியாக தூங்காமலும் தவித்துக்கொண்டிருந்தாள். ஆனால் ராஜு எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் நன்றாக டிவி பார்த்துவிட்டு உறங்கலானார். அவர் உறங்குவதைப் பார்த்து ராஜம் மனதிற்குள்….
“இந்த மனுஷனா ல எப்படி இப்படி நிம்மதியா தூங்க முடியறதுன்னே எனக்கு புரியலை….சரி அவராது தூங்கட்டும் பாவம்”
மறுநாள் பதினான்காம் தேதி விடிந்ததும் சீக்கிரம் எழுந்து தயாராகி ஆபிஸ் சென்று ட்ராவல்ஸிடம் விவரத்தைக் கூறி ஏற்பாடுகளை செய்தார் ராஜு. அவற்றை எல்லாம் அவ்வப்போது ஃபோன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள் ராஜம். அங்கே ராதா அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து வைத்து விட்டு தன் அம்மாவுடன் பேசினாள்.
“அம்மா இதோ பார் பத்து கார்டன் பாக்ஸ் ல போட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணியாச்சு நாளைக்கு காலை ல ஒரு கார் வாடகைக்கு எடுத்து அதுல எங்க மூணு பேரோட திங்க்ஸையும் லொடு பண்ணி ஆன்ட்ரியா வீட்டுல வைக்கணும்”
“என்னடி பத்து டப்பாவா!!!”
ராஜம் அவளது தவிப்பு, மற்றும் விசா பிரச்சினை எதையுமே ராதாவிடம் காட்டிக்கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவே பேசினாள்.
“ஆமாம்”
“சரி உனக்கு இப்போ டைம் மூணு ஆகிருக்குமே போய் தூங்கு ராதா”
“இப்போ தான் எல்லாத்தையும் ஃபுல் பேக்கிங் முடிச்சேன் சரி உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கப்போலாமேன்னு கூப்பிட்டேன்”
“அது தான் நாளன்னைக்கு வந்திடுவயே அப்போ பேசிக்கலாம் இப்போ போய் தூங்கு”
“சரி மா பை”
ராஜம் ராதாவுடன் பேசி முடித்ததும் ராஜுவின் கால் வந்தது. அதில் அவர் ஆபிஸ் ட்ராவல்ஸ் ஒரே நாளில் விசா கிடைக்க முயற்சிப்பதாக சொன்னார்கள் என்று சொல்ல….
“என்னப்பா முயற்சிக்கிறோம் என்று சொல்கிறார்களே கிடைக்குமா!!!கிடைக்காதா!!! கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நம்மகிட்டயும் வரமுடியாது, இந்தியாவிற்கும் செல்ல முடியாமல் ஏர்போர்ட்டில் மாட்டிக்கொள்வாளே நம்ம பொண்ணு”
என்ற மனவேதனை ராஜத்தின் மனநிம்மதி, தூக்கம், பசி என அனைத்தையும் பாதித்தது. அங்கே இவர்கள் மகள் அனைத்து பொருட்களையும் அவள் தோழி வீட்டில் வைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகினாள்.
இந்த இக்கட்டான நிலையில் மொத்தம் இரண்டாயிரத்தி மூன்னூறு டாலர் பணம் அந்த டிக்கெட்டிங் வலைதளத்தில் மாட்டியிருந்தது.
பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்தியம் பண்ணி ரெண்டு மணி வரை ராதாவின் விசா பற்றிய எந்தவித தகவலும் வராததால் மூன்றாவது முறையாக ஃபோன் செய்து கேட்டார் ராஜு அப்போதும் ஆகிவிடும் என்று சொன்னார்களே தவிர எப்போ என்று சொல்லவில்லை. அன்றிரவு எட்டரை மணிக்கு (அதாவது ராஜு வசிக்கும் நாட்டின் டைம் பதினாறாம் தேதி விடியற் காலை நாலரை மணி) ராதாவிற்கு ஃப்ளைட். ராஜம் தோழி ஒருத்தி ராதா வரும் ஏர்லைன்ஸில் பணிப்புரிவது ஞாபகம் வர அவளுக்கு ஃபோன் செய்தாள். அவளிடம் விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என அனைவரும் கூறுகிறார்களே அது உண்மையா என்றும் தன் மகள் பதினாறாம் தேதி இரவு பதினோரு மணிக்கு வருவாள் உள்ளே அழைத்து வர என்ன வழி என்றும் கேட்டாள் ராஜம். அவள் தோழி சொன்ன பதில் ராஜத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. விசா வழங்குவதை பதினேழாம் தேதி முதல் தான் நிறுத்த போகிறார்கள் எதற்கும் ஏர்போர்ட் சென்று அந்த ஏர்லைன்ஸ் கௌன்டரில் நேராக விசாரித்துக் கொள்ளும்படி கூறினாள். உடனே ராஜம் ராஜுவை அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூற அவரும் ஆபிஸில் வேலை ஓடவில்லை என்று கிளம்பி வந்து ராஜத்தையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்று ஏர்லைன்ஸ் கௌன்டரில் விசாரித்தனர்.
விசா ஆன் அரைவல் பதினாறாம் தேதி கிடைக்கும் ஆனால் அது செல்லுபடியாகும் பதினான்கு நாட்கள் முடிந்ததும் அந்த விசாவை புதுப்பிக்க முடியாது என்றும் முடிந்தால் லாங் டெர்ம் விசா எடுக்கும்படியும் கூறினார் அந்த ஏர்லைன்ஸ் ஊழியர். ராஜுவிற்கும் ராஜத்திற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த டென்ஷன், இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாதது, தூங்காதது என்று அனைத்தும் ஒருசேர ராஜத்திற்கு சற்று தலைச்சுற்றலை தந்தது.
ராஜு அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்து தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அந்த டிராவல்ஸ்க்கு ஃபோன் போட்டுக் கேட்டதில் அதே பதில் தான் கிடைத்தது. இனி ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்து ஒண்ணும் ஆக போவதில்லை என்று வீட்டிற்கு வந்து சேரும் போது மணி மூன்றரை அதற்கு மேல் என்னத்த சாப்பிட என்று இருவரும் காபி போட்டு குடித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். ராஜம் மீண்டும் சாமி படங்கள் முன் அமர்ந்து அவர்களின் அந்த இக்கட்டான நேரத்தில் ஏதாவது ஒரு வழி காட்டி காப்பாற்ற வேண்டி மனமுருகி நின்றாள்.
ராஜு வசிக்கும் நாட்டின் நேரம் மாலை ஆறு மணிக்கு (ராதாவுக்கு காலை பத்து மணி) மகள் ஃபோன் செய்து விசா வந்ததா என்று கேட்க ராஜுவும்
“வந்து விடும், வந்ததும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்” என்று கூறினார்.
விசா இல்லாமல் பயணித்தால் அங்கே இமிக்ரேஷனில் கேள்வி எழும் ஆகையால் ராதா அங்கிருந்து கிளம்பும் முன் அவளுக்கு ராஜு விசாவை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாததை எங்கிருந்து அனுப்புவது என்று பரிதவித்தார்கள் ராஜுவும் ராஜமும். இரவு அவர்கள் நேரம் பத்து மணிக்கு ராஜுவின் மின்னஞ்சலுக்கு விசா வந்தது உடனே அதை அவர்கள் மகளுக்கு ஃபார்வேர்டு செய்தபின் தான் அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
பதினாறாம் தேதி மாலை ஒரு எட்டு மணியளவில் மெது வடை, சட்னி, சாம்பார், வெண்பொங்கல் எல்லாம் செய்து ஹாட்பேக்கில் போட்டு வைத்து விட்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றனர் ராஜுவும் ராஜமும். அங்கே அவர்கள் மகள் வெளியே வந்து அவர்களை கட்டி அணைத்துக் கொண்டதன் பின் தான் அவர்களுக்கு உயிர் திரும்பியது போல் இருந்தது. வீட்டிற்கு வந்து ராதா குளித்து விட்டு வருவதற்குள் ராஜம் சூடாக இட்டிலி செய்து டேபிளில் அனைத்து சாப்பாடு வெரைட்டி களையும் வைத்துவிட்டாள். ராதா வந்ததும் மூவரும் அமர்ந்து மூன்று நாட்கள் கழித்து அப்போதுதான் நிம்மதியாக சாப்பிட்டனர்.
பிப்ரவரியிலிருந்தே இருந்து வந்த மனக்கவலை மற்றும் மார்ச் பதிமூன்றாம் தேதி தொடங்கிய பதற்றமான சூழல் மார்ச் பதினாறாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு தான் நிதானத்திற்கு வந்தது. அவர்கள் வசிக்கும் நாட்டிலும் லாக்டவுன் செய்யப்பட்டதால் ராஜு வீட்டிலிருந்தே வேலை பார்க்கத் துவங்கினார். காலை டிபன், மத்திய சாப்பாடு தயார் செய்து வைத்துவிட்டு, மகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் ராஜமும் ராதாவும் வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். இரவில் டின்னர் முடிந்ததும் மூவரும் ஊனோ எனும் கார்ட் விளையாட்டை விளையாடிய பின் தான் உறங்கச் சென்றார்கள். ஒரு வாரம் விடுமுறை முடிந்ததும் காலையில் ராஜு வேலைப் பார்த்தார் மாலையில் ராதா கல்லூரி ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்தாள். ராஜம் அவளது அடுப்படி வேலைகள் என அவரவர்களின் நேரத்தில் அவரவர் பணியை செவ்வனே செய்யத் துவங்கினர்.
மாலை ராஜு ஆபிஸ் வேலை முடிந்தது, ராதா வகுப்பு துவங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அதை இருவரும் ரசித்து உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள் ராஜம். இப்படியே ஜூன் மாதம் வரை விதவிதமான சாப்பாடு வகைகள், ஸ்னாக்ஸ் வகைகள் என்று செய்வதும் சாப்பிடுவதும், வீடியோ கேம்ஸ், திரைப்படங்கள் என காலை நேரமும், கார்ட்ஸ், ஊனோ என்று இரவு நேரமும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தனர் ராஜு குடும்பத்தினர்.
ஜூலை முதல் ராஜு ஆபிஸுக்கு செல்ல ஆரம்பித்தார். ராதாவிற்கு ஆகஸ்ட்டில் கல்லூரி துவங்க உள்ளதால் அவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவர்கள் கல்லூரியிலிருந்து வந்த மின்னஞ்சல் அவர்களுக்குள் இருந்து வந்த குழப்பத்தை நீக்கியது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்தது, அவர்களின் வழக்கமான சமையல், சாப்பாடு, விளையாட்டும் தொடர்ந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின் அவர்கள் மூவரும் இந்த வருடம் தான் எல்லா பண்டிகை தினங்களிலும் ஒன்றாக சேர்ந்திருக்கிளார்கள் என்பதனால் எல்லா பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த வருடம் பலருக்கு பலவகையான அனுபவங்களை கொடுத்துள்ளது. ராஜு குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம், குழப்பம், கவலை என இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியையே தந்துள்ளது.
வெளியே எங்கும் போகாமல் எவர் முகத்தையும் பாராமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக்கிடந்தாலும் சந்தோஷத்திற்கு எந்த வித குறையுமில்லாமல் அற்புதமாக கிடைத்த அந்த நேரத்தை மிக மிக அழகான தருணங்களாக மாற்றி செவ்வனே அவரவர் வேலைகளை செய்துக்கொண்டும், வீடியோ கேம்ஸ் மற்றும் போர்ட் கேம்ஸ், சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டும், பலவகையான தலைப்புகளை எடுத்து அதை பற்றி கலந்துரையாடிக் கொண்டும் செலவிட்டு வந்ததில் அவர்களுக்குள் இருந்த குடும்ப பிணைப்பு எனப்படும் family bonding இன்னும் வலிமை பெற்று பல நல்ல தருணங்களை பரிசளித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அவர்களின் வழக்கமான வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அவர்களுக்கு கொடுத்த இந்த இனிமையான இடைவேளைக்கு நன்றி தெரிவித்தாள் ராஜம்.
நமக்கு கிடைப்பதை/நடப்பது (நல்லதோ கெட்டதோ) ஏற்றுக்கொண்டு அதிலிருக்கும் துன்பங்களை, கஷ்ட்டங்களை அல்லது தீயவைகளை நீக்கி நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நன்றாக வாழ ஏதுவாக இருக்கும்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப சோதனைகளை/துன்பங்களை/கஷ்டங்களைக் கண்டுக் கலங்காமல் அதை வெல்லக்கூடிய மகிழ்ச்சியை, நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொண்டோமேயானால் அவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மனதில் நல்லெண்ணத்தை பயிரிடுவோம் நன்மையை அறுவடை செய்வோம்.
காவிரி ஆறு கரைபுரண்டு ஒடியது. புது வெள்ளம் செம்மண் கலந்து வழியில் இருந்த மரம் செடி கொடி குடிசைகள் என்று ஒன்று விடாமல் எல்லாவற்றையும் புரட்டி அடித்து சென்றுக்கொண்டிருந்தது. அந்த கண் கொள்ளா காட்சியை ரசித்து பிரம்மித்து ஆப்பிள் போன்ற கன்னத்தில் கைகளை வைத்தவாறு கரையில் நின்றிருந்தாள் மிருதுளா என்ற பதினெட்டு வயது அழகிய பெண். அவளுக்கு நினைவு தெறிந்த காலத்திலிருந்து அன்று தான் முதல் முறையாக இருகரை புரண்டோடும் வெள்ளத்தை பார்க்கிறாள்.
ஒடும் வெள்ளம் பயங்கர சப்தம் எழுப்பி தன் வருகையை முழக்கமிட்டு கொண்டே சென்றது. அவ்வளவு இரைச்சலிலும் ஏதோ ஒரு சிறு வயது பெண்ணின் அழுகுரல் கேட்டது மிருதுளாவுக்கு. பிரமிப்பில் இருந்து வெளிவந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். தனது வலது புரம் திரும்பிப் பார்த்தாள். ஐந்து வயது சிறுமி கரையில் நின்று அழுது கொண்டிருந்தாள். உடனே வேகமாக அவள் அருகில் சென்று
“பாப்பா பின்னால் வா. தண்ணிக்குள்ள விழுந்துடுவ” என்று கத்திக்கொண்டே சிறுமியை பின்னால் இழுத்தாள் மிருதுளா. சிறுமி அதிர்ச்சியானாள் பின் மீண்டும் தன் கைகளை ஆற்றுப்பக்கம் காட்டி “அம்மா அம்மா” என்று அழுதாள்.
எங்க உங்க அம்மா பாப்பா? நீ எப்படி இங்கே வந்த?
நானும் அம்மாவும்…. வந்தோம்….அதோ என் அம்மா ஆற்றில் நடந்தே போறாங்க நான் அழுவதை பார்த்தும் நீ போ நீ போ என்று சொல்லிக்கிட்டே போயிட்டிருக்காங்க அக்கா…அவங்க பின்னாடி….என்று விக்கி விக்கி அழுதாள்…
உடனே விஷயம் புரிந்தது மிருதுளாவிற்கு. சிறுமியை அங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போக முடிவு செய்தாள். அவள் பெற்றோரும் தனது தூரத்து சொந்தக்காரரின் பய்யன் திருமணத்தில் கலந்துக்கொள்ள பக்கத்து ஊருக்கு சென்றிருக்கிறார்கள்.
“பாப்பா பாரு என் டிரஸும் பூரா ஈரமாயிருக்கு. உன் டிரஸும் ஈரமா இருக்கு. வீட்டுக்கு போய் உடைய மாத்திக்கலாமா. இப்படியே ஈரத்தோட எவ்வளவு நேரம் இருக்கறது. வா வா”
“பாப்பா என் கூட என் வீட்டுக்கு வந்தினா. நான் உனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி தரேன்”
என்று சொல்லி அந்த சிறுமியை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றாள். செல்லும் வழியில் அண்ணாச்சி கடையில் நின்றாள். காசு எடுக்க தன் கைபையை தேடினாள். அது அவளிடம் இருக்கவில்லை. உடனே சிறுமியிடம்
“அக்காவின் கைபையை காணல…உன்ன காப்பாத்தும்போது தவறிடுச்சுனு நினைக்கிறேன். வீட்டிற்கு போய் காசு எடுத்து வந்து வேண்டியதை வாங்கலாம் சரியா”
என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். வீட்டினுள் சென்றதும் பிஸ்கட் எடுத்து சிறுமியிடம் கொடுத்து
“இதை சாப்பிட்டிட்டு இரு நான் உனக்கு சாப்பாடு சமைத்து தருகிறேன்”
சமையலில் இறங்கினாள் மிருதுளா. அவள் சமைத்துக் கொண்டிருக்கையில் அந்த சிறுமி அவள் அருகே சென்று
“பாப்பா உங்க வீடு எங்கே? யாரெல்லாம் இருக்கீங்க? நாளைக்கு எங்க அப்பா அம்மா வந்திடுவாங்க அப்பறம் உன்னை உன் வீட்டில கொண்டு போய் விடறோம் சரியா. “
“எனக்கு யாருமே இல்லை அக்கா… அம்மாவும் நானும் மட்டும் தான் இருந்தோம் ஆனா இப்போ அம்மாவும் ஆத்துல நடந்து போயிட்டாங்க என்ன விட்டுட்டு….எங்க குடிசையும் அந்த ஆறு எடுத்துக்கிச்சு” ஆனா அம்மா பின்னாடி…ஹும்… ஹும்…ஹீம்…
“சரி சரி அழாத பாப்பா. இதோ சாப்பாடு ரெடி. வா சாப்பிடலாமா? அக்கா சமையல் பிடிச்சிருக்கானு சொல்லு பார்க்கலாம்”
என பேச்சை திசை திருப்பி சிறுமிக்கு கதை சொல்லி சாதம் ஊட்டி முடித்தாள்.
” இது எப்படி உனக்கு தெரியும்? உன்னை இந்த ஊர்ல இன்னிக்கு தான் பார்க்கிறேன்”
“மிருதுளா அக்கா தான் சொன்னாங்க….மிருதுளா அக்கா நானே சொல்லிட்டேன் ….இனி ஒளிய வேண்டாம் வெளியே வாங்க”
“ஏய் பாப்பா என்ன உளருர ….போயிடு எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”
என்று சொல்லிக்கொண்டே கதவை தாழிட்டு வீட்டினுள் சென்றாள் கோமதி.
இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த மிருதுளாவிற்கு ஒரே குழப்பம்…
“ஏன் கோமதி சட்டென்று கதவடைத்தாள் என்னை பார்க்கக்கூட வரவில்லை.என்ன ஆச்சு இவளுக்கு …இவள் கொஞ்சம் சிடுமூஞ்சி தான் வான்மதி இருந்திருந்தா அப்படி செய்திருக்க மாட்டாள்.”
இருவரும் சந்தையை சென்றடைந்தனர். சிறுமி மிருதுளாவிடம் பஞ்சு மிட்டாய் கேட்டாள்.
” ஓ வாங்கி தரேன் வா….அண்ணே ஒரு பஞ்சு மிட்டாய் தாங்க “
என்று காசை எடுத்து நீட்டினாள்… பஞ்சு மிட்டாய் காரர் காசை வாங்கிக்கொண்டு சிறுமியைப்பார்த்து திரு திரு என விழித்தார்…உடனே மிருதுளா
“என்ன அண்ணே என்னமோ புதுசா பார்கரா மாதிரி முழிக்கிறீங்க….ஓ இதுவா இந்த பாப்பா எங்க வீட்டு விருந்தாளி…சரி நாங்க வரோம்”
“அக்கா அக்கா எனக்கு இராட்டினத்தில ஏறனும்முன்னு ஆசையா இருக்கு அக்கா…ஏத்தி விடுறேங்களா!!!”
“ஓ அதுக்கென்ன வா வா …இதோ ஏறு..நல்லா உட்கார்ந்திட்டயா….கெட்டியா கம்பிய பிடிச்சுக்க பாப்பா… இந்தாங்க அண்ணே காசு …இராட்டினத்த சுத்துங்க…என்ன அண்ணே அப்படி பார்க்குறீங்க?”
இராட்டினம் சுழன்றது மூன்றுமுறை. பின் நிறுத்தப்பட்டதும்..
“பாப்பா வா வீட்டுக்கு போகலாம்”
“அக்கா அக்கா இன்னொரு ரவுண்டு”
“ஹூம்… ஹூம் …வா வா ….நாளைக்கு காலைல என் அம்மா அப்பா வந்திடுவாங்க…இப்ப போய் சாப்பிட்டுட்டு தூங்கினா தானே காலைல சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளையும் நான் முடிக்க முடியும். போகலாமா?”
” அது சரி பாப்பா என்கிட்ட ஏதாவது வித்தியாசம் தெரியுதா”
“அப்படினா”
“நான் பவுடர் ஜாஸ்தியா போட்டிருக்கேனா”
“இல்லை அக்கா ..நீங்க அழகா இருக்கீங்க”
“அப்புறம் ஏன் அந்த ரெண்டு அண்ணன்களும் அப்படி வெரிச்சு வெரிச்சுப் பார்த்தாங்க….பயந்தாங்க…ஏன்? என்னவா இருக்கும்? சரி சரி வேகமா வா இருட்டிடுச்சில்ல”
“உங்க கூடவே தானே அக்கா வரேன்”
இருவரும் வீட்டிற்குள் சென்றனர். இரவு உணவு உண்டபின்…முன்வாசல் கதவையும், பின்வாசல் கதவையும் சாற்றி படுத்துறங்க பாயை விரித்து
“பாப்பா உங்க அம்மா சாமிகிட்ட போயிருக்காங்க அவங்க வரத்துக்கு ரொம்ப நாள் ஆகும். உன்ன பத்திரமா பார்த்துக்க மிருதுளா அக்கா இருக்கேன் நாளைக்கு என்னோட அப்பா அம்மா வந்திடுவாங்க அவங்க உனக்கும் அப்பா அம்மா தான்…மிருதுளா அக்காவும் பாப்பாவும் அப்பா அம்மா கூட ஜாலியா இருக்கலாம்…எங்க அப்பாக்கு பெரிய மீசை இருக்கு…நான் உன் வயசுல அதை பிடிச்சு இழுப்பேன் …. இதோ என் அம்மாவின் இந்த சேலையை எப்போதுமே போத்திகிட்டு தான் தூங்குவேன்…இந்தா இன்னிக்கு நீ போத்திக்கோ…நிம்மதியா தூங்கு சரியா”
“ஓ ஓ ஓ அக்கா அப்போ அம்மா பின்னாடில இருந்து …. அதுக்கு தானா”
“என்ன சொல்ற பாப்பா? எனக்கு புரியலையே”
“அம்மா சாமிகிட்ட தண்ணீல நடந்து போனாங்கலே அப்போ அவங்க பின்னாடியே நீங்க போனீங்க இல்ல அப்போ அம்மா என்ன பார்த்துக்க சொல்லிதான் உங்கள போக சொன்னாங்களா? அது தான் அவங்க சொன்னதும் நீங்க சட்டுனு என் பின்னாடிலருந்து என்ன கூப்பிட்டிங்களா!!! நீங்க ரொம்ப நல்ல அக்கா…ஆனா அம்மா ஏன் உங்கள அவங்க பின்னாடிலேருந்து அனுப்பனும் ….அதுக்கு அவங்களே வந்திருக்கலாமில்ல அக்கா….அக்கா..அக்காஆஆஆ!!!!.”
இதை கேட்ட மிருதுளா மிரண்டு போனாள். பூமி சுற்றாமல் நின்றது போல இருந்தது.
“ஆமா அக்கா அத தான் நான் காலைல இருந்து சொல்லறேன் …அம்மா பின்னாடி அம்மா பின்னாடி னு …நீங்க தான் கேக்கவே இல்லை அதுதான் இப்பொ சொல்லிட்டேனே…படுங்க அக்கா தூங்கலாம்..அப்பா அம்மா காலைல வந்திடுவாங்க ல”
மிருதுளா மெல்ல சிறுமி அருகே படுத்தாள். சிறுமி நன்றாக உறங்கினாள். மருதுளாவிற்கு சிறுமி சொன்னதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் காலையிலிருந்து நடந்தவற்றை எல்லாம் அசைபோட்டுப்பார்தாள். ஆனால் அவளுக்கு எதுவும் தவறாக படவில்லை. ஈரமான உடை, கைபை தவறியது, கோமதியின் பதட்டம், சடால் கதவடைப்பு, சந்தையில் இருந்த அந்த பஞ்சு மிட்டாய் காரர் மற்றும் இராட்டினம் சழற்றும் நபரின் வித்தியாசமான அந்த மிரண்ட பார்வை அவள் கண்முன் சட்டென்று வந்து சென்றது. ஏதோ தவறாக இருப்பது போல இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் யோசித்து யோசித்து பார்த்தாள் அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
விடிந்தது… காலை சூரியன் பிரகாசத்தை வழங்கினார். வெளியே ஏதோ சப்தம் கேட்டது. அவள் அப்பா அம்மா வின் அழுகுரல். உடல் நடுங்கியது, உள்ளம் பத பதைத்தது மெல்ல எட்டிப்பார்தாள். வீட்டு வாசலில் ஊர் மக்கள் அனைவரும் இருந்தனர். அப்பாவும் அம்மாவும் அழுதுகொண்டே
” எங்களுக்கு ஒன்னுமே புரியல சார் இந்த பொன்னுங்க என்னென்னமோ சொல்லுதுங்க…எங்க பெண்ண காணலைங்க “
எற்றார்கள் போலிஸிடம்.
” என்னமா நீ தான் வான்மதியா? என்ன நடந்துசுன்னு விரிவா சொல்லுமா”
“ஆமா சார் நான் தான் வான்மதி. மிருதுளாவோட தோழி. நாங்க நேற்று”
“நாங்கன்னா!!! யாருயாருன்னு தெளிவா சொல்லுமா”
“நான், என் தங்கச்சி கோமதி, மிருதுளா மூனு பேரும் புது வெள்ளத்த பார்க்க ஆத்தங்கரைக்கு போனோம். அப்ப மிருதுளா அந்த புது செம்மண் கலந்த தண்ணீய கையால தொட்டு பார்க்கனும்னு கயித்த தாண்டி ஆத்துக்கிட்ட போனப்போ நாங்க வேண்டாம் வேண்டாம்னு கத்தினோம் ஆனா அவ காதுல விழல …அவ கயித்த தாண்டி கைய தண்ணீல வச்சா அவ்வளவுதான் காவிரி அவள அடிச்சுகிட்டு போயிடுச்சு சார்”
என்று கூறி கதறி அழுதாள். இதை கேட்டதும் அதிர்ந்து போனாள் மிருதுளா…
“அப்போ இந்த பாப்பா நேத்து ராத்திரி சொன்னதெல்லாம் நிஜமா….நான் அவ அம்மா பின்னாடி தண்ணீல போயிட்டிருந்தேனா? நான் இந்த சிருமியை காப்பாத்தினேன் நினைச்சேன் ஆனா உண்மையில் என் அப்பா அம்மாவுக்கு உதவ தான் வந்திருக்கேனோ!!! ஆனா கடையிலேயும், சந்தையிலேயும் என்ன எல்லாரும் வெரிச்சு வெரிச்சு பார்த்தாங்களே அது எப்படி? உண்மையில் நான் இருகேனா ? இல்லையா? ஐயோ! எனக்கு தலை சுத்துதே!!!!”
கண்களை மூடி சற்று நேரம் அமைதியாக நடந்தவற்றை ஆழ்மனதிலிருந்து யோசித்தாள் மிருதுளா. அப்போ அவள் முன் ஒரு பெண் உருவம் தோன்றியது. இரு கண்களிலும் கண்ணீருடன் பாப்பாவை பார்த்த படி நின்று கொண்டு இருப்பதை உணர்ந்த மிருதுளா மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்மூடி கண்ட உருவம் அவள் முன்னே இருந்தது.
“நீங்க யார்? எப்படி என் வீட்டுக்குள்ள வந்தீங்க? ஏன் பாப்பாவையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?”
“நான் மாலினியின் தாய். எவ்வளவு அழகாக உறங்குகிறாள் என் மகள். அவள் நிம்மதியாக தூங்க நீயே காரணம். நன்றி மிருதுளா”
“என் பேரு உங்களுக்கு எப்படி…ஓ ….ஓ… பாப்பா…ச்சே….மாலினி சொன்னதெல்லாம் உண்மையா? அப்போ நானும் இறந்துவிட்டேனா? ஆனா நீங்க வந்து உங்க மாலினிய சமாதானம் பண்ணாம உங்க பின்னாடி காவிரியில் மிதந்த என்ன ஏன் அனுப்பினீங்க? நான் அதனால உயிரோட இருக்கேன்னு நினைச்சு ஒரு நாள் பூரா உங்க பொன்னு கூட இருந்திருக்கேன்…. எனக்கு ஏன் இது நேர்ந்தது”
புலம்பினாள் மிருதுளா…
“மிருதுளா …மிருதுளாஆஆஆ சற்று சாந்தமாக இரு…நீ உயிருடன் தான் இருக்கிறாய்….நானும் உங்க ரெண்டு பேரோட நேத்து பூரா ….இப்ப வரைக்கும் இருக்கேன்…என் மகளுக்கு பாதுகாப்பா நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு..எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இனி இந்த மண்ணுலகில் இருந்து நான் விண்ணுலகம் செல்ல நேரம் வந்திடுச்சு.”
“என்ன சொல்லுறீங்க? அப்போ தண்ணீ என்ன அடிச்சிட்டு போயிருச்சுனு வான்மதி அழுவது…நான் செத்துட்டேன்னு எல்லாரும் வாசலில் கூடி இருக்காங்க …ஆனா நான் உயிரோடு இருக்கேன்னு செத்துப் போன நீங்க சொல்லுறீங்க….ஐயோ எனக்கு ஒரே குழப்பமா இருக்கே!!!!”
“உன்னை காவிரி ஆறு அடித்துக்கொண்டு போவதற்கு சற்று முன் என்னை விழுங்கி என் உயிர் குடித்தது. அதற்கு பசி அப்போதும் அடங்காமல் உன்னையும் முழுங்க பார்த்தது. அப்போ பார்த்தேன் நீ உயிரோடு போராடிட்டிருந்த உடனே உன்னை காப்பாற்றி என் மகளுடன் சேர்தேன். இதுதான் நடந்தது. தெளிவானதா??”
“அப்போ ஏன் என்னை பார்த்தவங்க எல்லாரும் வெரிச்சு வெரிச்சுப் பார்த்தாங்க…ஏதோ பேய பார்த்தா மாதிரி?”
“அது ஏன்னா உன் தோழிகள் இருவரும் ஊர் முழுக்க உன்னை காவிரி அடித்து சென்று விட்டதாக தண்டோரா போட்டிருக்காங்க அதனாலதான் உன்னை அப்படி பார்த்தார்கள்”
“இதெல்லாம் நேத்திக்கே என்கிட்ட சொல்லிருக்கலாமே…நானும் என் தோழிகள்ட்ட சொல்லி அவங்களை துக்கப்படாமல் செய்திருப்பேனே”
“ஹம் …என் மகள் சரியானவரிடம் தான் சேர்த்திருக்கேனானு நான் தெரிஞ்சுக்கனுமில்ல ….இப்போ தெரிஞ்சுகிட்டேன் …அது தான் சொல்லிட்டேன்”
பேச்சு சத்தம் கேட்டு எழுந்தாள் மாலினி பாப்பா. கண்களைக் கசக்கி கொண்டே நிமிர்ந்தாள். அம்மா என்று கத்திகொண்டே வாரி அணைக்க ஓடினாள். ஆனால் முடியாமல் மலைத்து நின்றாள்.
“கண்ணு மாலினி இனி இவங்க தான் உன் சொந்தம் பந்தம் எல்லாமும்…இனி இவங்க சொல்படி கேட்டு நல்ல பெண்ணாக உன் மிருதுளா அக்கா மாதிரி வரணும் சரியா.. உன்ன பார்த்து இத சொல்லத்தான் சாமி என்னை அனுப்பினார். அம்மா போயிட்டு வரேன்டா கண்ணே. மிருதுளா என் மாலினிக்குட்டிய நல்லபடியா பார்த்துக்கோமா”
என்று கூறி மறைந்தாள் அந்த தாய்.
“அம்மா அம்மாஆஆஆஆஆ”
வீட்டினுள் சிறுமியின் கதறல் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்றவர்கள் கதவை உடைத்து உள்ளே போக முயர்ச்சித்தார்கள். சட்டென்று கதவு திறந்தது. மிருதுளா ஒரு சிறுமியுடன் நின்றிருந்தாள். மிருதுளாவின் பெற்றோர் எல்லாரையும் தள்ளிக்கொண்டு முன்னே வந்து தங்கள் பெண்ணை பார்த்ததும் ஓடி சென்று கட்டி அணைத்து கதறி அழுதார்கள். வான்மதியும், கோமதியும், ஊர் மக்களும் வாய் பிளந்து நின்றனர். இன்ஸ்பெக்டர் முன்னே வந்தார்.
“என்னம்மா உன்ன காவிரி ஆறு அடிச்சுட்டு போயிருச்சுன்னு இந்த ரெண்டு பொன்னுங்க நேத்திலேருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க ஆனா நீ வீட்டுக்குள்ள இருந்து வர. என்னதாம்மா நடந்துச்சு”
மிருதுளா நடந்தவற்றை விளக்கமாக கூறினாள். உடனே தோழிகள் வான்மதியும் கோமதியும் அவளை கட்டிக்கொண்டு அழுதார்கள். மிருதுளா தனது பெற்றோரைப்பார்த்து…
“அப்பா, அம்மா இனி மாலினி என் தங்கை. நீங்கள் அவளை உங்கள் மகளாக ஏத்துப்பீங்களா?”
“ஏத்துக்கறதா? நீ வாடி மாலினிக்குட்டி இனி நான் தான் உன் அம்மா வள்ளியம்மா, அவர் தான் உன் அப்பா சேகர். எல்லாரும் கேட்டுக்கோங்க இனி எங்களுக்கு இரண்டு மகள்கள்”
மாலினி பாப்பாவின் தாயின் வலிக்கும் வேதனைக்கும் மருந்தானார்கள் வள்ளியம்மையும், சேகரும், மிருதுளாவும்.
புது வெள்ளத்தில் வந்த புது உறவுக்கு புத்தம் புது வாழ்க்கை அமைந்தது.
தாய் உயிர்நீத்தாலும் தாய்மை என்றும் உயிர்த்திருக்கும்.
“எங்கள் அக்கா துளசி நம் கையில் இருக்கும் கட்டைவிரல் போல யாருடனும் ஒட்டாதவள் ஆகையால் மற்ற நான்கு விரல்களாகிய நாங்கள் அவளை ஒதுக்கி வைத்துள்ளோம்”
என்று ருக்குமணியும், பாமாவும் அவர்கள் சொந்தகாரர் திருமணத்தின் போது கூறியதை கேட்டு அதிர்ந்து போனாள் துளசியின் சிநேகிதி லதா. ஆம் இவர்கள் கூறும் அந்த கட்டைவிரலாகிய இவர்களின் அக்கா துளசி எப்படிப்பட்டவள் என்பதும், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் லதா நன்கு அறிந்தவள் ஆவாள்.
துளசிக்கு….ரமா, பாமா, ருக்கு, கார்த்திகா என நான்கு தங்கைகளும் சூரியா என்ற அண்ணனும் இருக்கிறார்கள். சூரியாவிற்கு திருமணம் ஆகவில்லை. அண்ணன் சூரியா சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். தந்தை இல்லாத இந்த குடும்பம் சூரியாவின் உழைப்பில் தான் ஓடிக்கொண்டிருந்தது. சூரியா தனது மூத்த தங்கை துளசி அவள் கணவன் நடராஜனின் உதவியோடு நான்கு தங்கைளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.
கார்த்திகா திருமணம் முடிந்த சில வருடங்களில் அவர்கள் அம்மாவும் இறைவனடி சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்களில் சூரியாவும் மாரடைப்பால் காலமானார். வருடங்கள் உருண்டோடின.
துளசி நடராஜன் தம்பதியினருக்கு ஒரு மகள் வீணா ஒரு மகன் விக்னேஷ். தங்களால் முடிந்த உதவிகளை இரு வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் செய்து தன்னிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் அளவான அழகான குடும்பம்.
ரமா அவள் கணவர் நீலமேகத்துடனும் பெண் குழந்தை நிஷாவுடனும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
பாமாவும் அவள் கணவர் கமலனும் திருச்செந்தூரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. வருமானமும் அவ்வளவாக இல்லை. ஆகையால் அடிக்கடி துளசி கணவரிடம் கடனாக பணம் வாங்குவதும் கொடுப்பதுமாக இருந்து வந்தாள். ஒரு முறை பணக்கஷ்டம் அதிகமாக… துளசியிடம் உதவி கேட்டாள் அந்த சமையம் நடராஜனுக்கே பணம் சற்று தட்டுப்பாடு இருந்தது அதனால் கொடுக்க மறுத்துவிட்டார். தற்செயலாக நடந்ததை… துளசி தான் தர மறுக்கிறாள் என எண்ணிக்கொண்டு துளசியை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ருக்குமணியின் கணவர் நரசிம்மன் குடி போதையில் கீழே விழுந்து காலில் ஃப்ராக்சர் ஆனதால் ஆறு மாதம் துளசி வீட்டில் தான் இரு குழந்தைகளுடன் இருந்து வந்தாள். துளசி வீட்டிலிருந்து தன் கணவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போவதும் வருவதுமாக இருந்து ஒரு வழியாக கால் சரியாகி துளசி வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு பார்த்தபின் குடியேறினர் அதுவரை அவர்களை பார்த்துக்கொண்டு வேண்டியதை செய்துக்கொடுத்தது எல்லாமும் துளசியும், நடராஜனும் ஆவர். ருக்குவுக்கு தனது அக்கா துளசி மீது அதீத பொறாமை இருந்தது. துளசி கணவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை வருடத்தில் ஒரு முறை வெளியூர்களுக்கு டூர் போவார்கள், நகை வாங்குவார்கள். ஆனால் ருக்கு வீட்டுக்காரர் அவளையும் அவள் பிள்ளைகளையும் எங்கேயுமே கூட்டிக்கொண்டு போனது கிடையாது. தனது இந்த பொறாமை குணத்தை வெளிக்காட்டாமல் துளசியுடன் உறவாடிக்கொண்டே தக்க சமையத்துக்காக காத்திருத்தாள். அவளது பொறாமை ஆறு மாசம் துளசி அவர்களை உட்கார வைத்து சோறு போட்டதை கூட மறக்கச் செய்தது.
கார்த்திகா இளமாறன் தம்பதியினர் திருமணம் முடிந்ததும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர்.
அனைவரும் துளசி மகள் வீணா திருமணத்திற்கு வந்திருந்தனர். வீணாவின் திருமணத்திற்கு வாங்கியிருந்த நகைகளை பார்த்து எங்கு எவ்வளவு என விசாரித்து அதே போல் தனக்கும் வேண்டும் என்று அதே கடைக்கு சென்றாள் கார்த்திகா ஆனால் அதே போல் கிடைக்கவில்லை ஆகையால் தன்னிடம் இருக்கும் பணத்திமிரால் துளசியிடம் வீணாவுக்கு வேறு நகைகள் வாங்க பணம் தருவதாகவும் அவளுக்கு வாங்கிய நகைகள் தனக்கு பிடித்திருப்பதால் தனக்கே தருமாறு கூறினாள். அந்த நகைகள் அனைத்தும் வீணா அவளுக்காக பார்த்து பார்த்து எடுத்திருப்பது அதனால் கார்த்திகாவிற்கு தர மறுத்து விட்டாள் துளசி. இதனால் துளசி மீதும் வீணா மீதும் தேவையே இல்லாமல் கோபம் கொண்டாள் கார்த்திகா.
வீணாவின் திருமண நாள் அன்று ரமாவை தவிர மற்ற மூன்று சகோதரிகளும் அதுதான் சரியான சமையம் துளசியை பழிவாங்க என எண்ணி துளசியைப்படாத பாடு படுத்தினார்கள். இதில் கார்த்திகா தனது மகனை மாப்பிள்ளை அழைப்பு காரில் ஏற்ற வில்லை என ஒரு பெரிய சண்டைப்போட அவளுடன் பாமாவும், ருக்குமணியும் கைகோர்த்துக்கொண்டு துளசியை பந்தாடினார்கள்.
இவர்கள் திருமணமே துளசி நடராஜன் இல்லாவிட்டால் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறந்துவிட்டனர்.
ஒருபக்கம் தன் வீட்டு ஆட்களின் ஆட்டம் என்றால் மறுபக்கம் தனது மாமியாரை பேத்தி திருமணத்திற்கு கூட வரவிடாமல் தடுத்த துளசியின் நாத்தனார்.
எப்படியோ இவர்களின் பிரச்சனைகளுக்கு நடுவில் துளசி நல்லபடியாக தன் மகள் திருமணத்தை முடித்தாள். எல்லாருக்கும் நல்லதை மட்டுமே நினைத்து நல்லது மட்டுமே செய்த துளசி நடராஜனுக்கு அவர்கள் மகளின் திருமணத்திற்கு அவர்கள் உதவிய சொந்தங்கள் எவருமே துணை நிற்கவில்லை. இது தான் இன்றைய சொந்தங்களின் லட்சணம். மனித உதவி இல்லாவிட்டால் என்ன ? அவர்கள் செய்த நல்லவை அவர்களுக்கு அனைத்தையும் நன்றாக சிறப்பாக நடத்த உதவியது. கடவுள் இருக்கிறார் என்பதை அன்று உணர்ந்தேன்.
இவ்வளவும் தெரிந்த லதா கோபப்பட்டு ருக்கு மற்றும் பாமா பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு வேகமாக சென்றாள் ….
“ஆமாம் ஆமாம் கரெக்ட் வெரி வெரி கரெக்ட் ருக்குமணி!!!! துளசி கட்டை விரலே தான் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை”
“பார்த்தாயா பாமா நான் சொன்னதையே தான் துளசி சிநேகிதி லதாவும் சொல்லறா!! இதுக்கு மேல யார் சொல்லனும்”
“இரு இரு ருக்குமணி கொஞ்சம் பொறுமை. நீ சொல்லும் விதமான கட்டைவிரல் அல்ல நான் சொல்லப்போவது. உங்கள் கைகளை நன்றாக பாருங்கள் கட்டைவிரல் மட்டுமே மற்ற நான்கு விரல்களையும் வளைந்து தொட முடியும். ஒற்றுமையாக தெரியும் மற்ற நான்கு விரல்களால் எல்லா விரல்களையும் தொட முடியாது. கட்டை விரலோடு இணைந்திருக்கும் சதையின் உதவியோடு அந்த கட்டை விரல் மற்ற நான்கு விரல்களுக்கும் உண்டான வேலைகளை செவ்வனே செய்ய உதவுகிறது. கட்டைவிரலின்றி மற்ற நான்கு விரல்களும் சின்ன வேலையை செய்யக்கூட மிகவும் சிரமப்படும். மகாபாரத துரோணர் கூட ஏகலைவனின் கட்டைவிரலைத்தான் குருதட்சணையாக கேட்டார் மற்ற விரல்களை அல்ல. கட்டை விரல் இல்லை என்றால் மற்ற விரல்கள் இருந்தும் பிரயோஜனமில்லை. கட்டைவிரலை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்பது புரிந்திருக்குமே!!! அது விலகி நின்றாலும் மற்ற விரல்களுக்கு என்றும் உதவுகிறது. கை இல்லாதவர்கள் கூட வாழ்கிறார்கள் இந்த உலகில். ஆனால் கையிருந்தும் கட்டைவிரலின்றி வாழ்வது மிகவும் கஷ்டம். என்ன சொன்ன ருக்குமணி கட்டைவிரலாட்டம் துளசியை ஒதுக்கி வச்சிருக்கேங்களா? ஹா! ஹா! ஹா! எங்கே உன் கட்டை விரலை ஒரு நாளைக்கு செலோடேப் போட்டு ஓட்டிட்டு நீ சொன்ன ஒற்றுமையான நான்கு விரல்களோடு எல்லாவற்றையும் செய்து தான் பாரேன்.!!!. அது மட்டுமில்லாமல் மனிதனை மனிதன் ஒதுக்கி வைப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை ஆனால் நமது தீய செயல்களாலும் தீய எண்ணங்களாலும் கடவுள் நம்மை ஒதுக்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லது செய்தவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை தீமையோ, துரோகமோ மட்டும் செய்து விடாதீர்கள் அதன் தண்டனையை கடவுள் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் வழங்குவார். இப்போதாவது கட்டை விரலாகிய எனது சிநேகிதி துளசியின் மகிமை புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரியலை என்றால் ஏதாவது வழியில் கடவுள் உங்களுக்கு புரியவைப்பார். வரட்டுமா ஆள் காட்டி மற்றும் மோதிர விரல்களே “
என்று டாக்டர் லதா தனது சிநேகிதிக்காக சற்று நேரம் வக்கீலாக மாறி ருக்குமணிக்கும் பாமாவுக்கும் நல்ல பதிலடி கொடுத்தாள். 🙂
ஒரே கல்லூரியில் படித்த தோழிகள் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பி.ஏ ’98 என பெயர் சூட்டினர். அதில் ஆரம்பத்தில் அவர்கள் பல விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நாட்கள் போக போக குழு அமைதி பூங்காவனமாக மாறியது. யாரும் எதுவும் பகிந்துக் கொள்ளவில்லை.
இப்படி அமைதி நிலவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருத்தி அவர்கள் கல்லூரியில் அவர்களுடன் படித்த ஐஸ்வர்யாவை குழுவில் இணைத்தாள். மீண்டும் குழு விருவிருப்பானது. அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்வதில் தொடங்கி அவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் வரை அனைத்தும் பகிரந்துக்கொள்ளப்பட்டது. பழைய நினைவுகளில் சில மாதம் ஓடியது பின் மீண்டும் குழு அமைதியானது.
இவ்வாறு புது தோழிகள் சேர்க்கப்படும் போதெல்லாம் குழு விழித்துக்கொள்ளும். குழுவினரும் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு ஹாயில் ஆரம்பித்து விசாரிப்புகளும் புகைப்படங்களும் சரமாரியாக பதிப்பிக்கப்படும் பின் மீண்டும் கும்பகர்ணன் போல நீண்ட கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும்.
குழுவில் யாராவது அந்த குழுவில் இல்லாத பழைய தோழியை இணைக்கும் பொழுது யார் ? எவர் ? என்ற விவரங்களை முன்னுரையாக கொடுப்பது வாட்ஸ்அப் குழுவின் சம்பிரதாயம். இது பல குழுக்களில் இணைந்துள்ள நாம் அனைவரும் அறிந்த சடங்காகும். இந்த சடங்கை கடைப்பிடிக்காமல் ஒருவரை நாம் இணைத்துவிட்டோமே என்றால் பாவம் அந்த புது நபர்
“ஹாய் நான் தான் வள்ளி”
என தொடங்கி
“என்ன ஞாபகம் இருக்கா?“
என தன்னைத்தானே அறிமுகம் செய்துக்கொள்ள வேண்டிவரும். மேலும் அவர்கள் கல்லூரி ஃபேர்வெலில் கடைசியாக பார்த்திருப்பார்கள் சில பேருக்கு பெயரைக் கேட்டாலே யார் என்று விளங்கி விடும் சகஜமாக உறையாட தொடங்கி விடுவார்கள் ஆனால் பலருக்கு யாரென்று ஞாபகம் இருக்காது அதனால்
யார்? எந்த செக்ஷன் ? எந்த பென்ச்? எந்த பஸ்ஸில் கல்லூரிக்கு வருவாய்?
என பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை வைத்து இன்னார் என யூகிக்க முயல்வார்கள்.
இவ்வாறு இந்த பி.ஏ’98 குழுவில் பூமிகா எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவரை முன்னுரை ஏதுமின்றி இணைத்தாள்….அவரும் சில நேரம் பூமிகா இன்ட்ரோ செய்வதற்காக பொருத்திருந்து பின் அவரே ஆரம்பித்தார்…
ஹாய் எவ்விரிஒன் ஹவ் ஆர் யூ ஆல்? ஹோப் யூ ஆல் ஆர் சேஃப்.
லதா: ஹாய் வெல்க்கம். மே ஐ நோ யுவர் நேம்.
வனஜா: ஹாய் உன் பொரோஃபைல் போட்டோவ பார்த்தா…. நீ எங்க செக்ஷன்ல தான் இருந்தனு நினைக்கிறேன்? இஸ் யுவர் நேம் வள்ளி?
கிரிஜா: ஹாய் நீ என்னோட பஸ்ஸில் தானே வருவ?
ரமா: ஹாய் யூ வேர் தி ஒன் ஹூ பிரிங் எக் ரைஸ் ? வாவ் அதோட வாசம் இன்னும் இருக்குப்பா..
பிரியங்கா: ஹே ரமா இது அவ இல்லடி அது நம்ம ரோஸி. இவ நாமகூட ஐஸ்கிரீம் சாப்பிட வந்துட்டு விலைய பார்த்ததும் தண்ணியை குடிச்சிட்டு வந்தாளே அவ தான்…ஆனா ….பேரு மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது…
மது: ஹேய் பிரி ….தட் இஸ் மீனு …மா..இவ இல்ல. இவள பார்த்தா மாதிரி இருக்கு ஆனா நீ சொல்லர மாதிரி பேரு மட்டும் ஞாபகம் இல்லமா.
பிரஸீ: எனக்கும் நல்லா பழக்கமானவ மாதிரி தான் இருக்கு.
மாதவி: ஹே! நியூ கம்மர்… வை டோன்ட் யூ இன்ட்ரோ யுவர் செல்ஃப்? நாங்க எல்லாரும் இப்படி கெஸ்ஸிங் கேம் விளையாடாமா இருப்போம்ல…
மைதிலி: யாருப்பா அந்த மர்ம நபர் நம்ம குரூப்ல…ஏய் பூமி சொல்லேன்டி…
ரம்பா: ரொம்ப நாளா தூங்கிட்டு இருந்த நம்ம குரூப் முழிச்சுடுச்சுனு சந்தோஷப்படரதா இல்ல “யார் நீ” னு கேட்டுட்டே இருக்கறதா…
மனோன்மணி: ஏன்மா புதுசா இணைந்த புண்ணியவதி… பூமி தான் ஏதோ பிஸியா இருக்காப்போல நீயாவது உன்னைப்பத்தி சொல்லலாம்ல…
பூமிகா: ஹலோ கேர்ள்ஸ் என்னப்பா இது?? எல்லாருமா மறந்துட்டிங்க? நான் முன்னுரை கொடுத்திருக்கவேண்டும் அனைவரும் மன்னிக்கவும்.
நான் ஒரு ஹாய் சொன்னா எப்பவாவது உடனே பதில் சொல்லிருக்கீங்களா ? இன்னிக்குனு ஒரு அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு மெஸேஜஸ்ஸா!!!!
நான் ஆட் பண்ணியது நம்ம இங்கிலீஷ் பொரொஃபஸர் மிஸ் லில்லி. அம் எக்ஸ்டிரீம்லி சாரி மேம். நான் இன்ட்ரோ கொடுக்க கொஞ்சம் லேட் ஆனது இவ்வளோ விபரீதமாகும்னு நினைக்கலை. ஸோ சாரி.
என்ற பூமிகா வின் மெஸேஜ்க்கு பிறகு சற்று அமைதி நிலவியது. பின் குழுவில் ஒரே சாரி மெஸேஜஸாக பொழிந்தது. அதற்கு அவர்கள் லில்லி மேம் “இட்ஸ் ஓகே” என்று பதிலளித்தும் மீண்டும் சாரி என்று பலர் கூற அதற்கு அவர் பதில்….
லில்லி மேம்: ஹாய்கேர்ள்ஸ் ஏன் எல்லாரும் சாரியை மாரியாய் பொழிகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் நான் பார்த்து வளர்ந்த என் பிள்ளைகள். உங்கள் அனைவரையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க்கை எனும் ஓடு களத்தில் நீங்கள் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால் எனது வாழ்க்கை நிதானமாகிவிட்டது.
மறதி என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் நீங்கள் இதிலுள்ள முகியமான பாடத்தை கவனிக்காமல் விட நான் அனுமதிக்க மாட்டேன்.
என்னடா இந்த மேம் இத்தனை வருஷத்துக்கப்புறமும் க்ளாஸ் எடுக்க வந்துட்டாங்கனு நீங்க நினைத்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு இது என்றாவது உதவாமல் போகாது. வாழ்வில் ……
“எது நடந்தாலும் வேய்ட் ஃபார் அ வைல். டு நாட் ஜம்ப் டூ ரெஸ்பான்ட் ஆர் ரியாக்ட்.”
தினமும் ஏதாவது மெஸேஜஸ் பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் விஷ் செய்துக் கொள்ளுங்கள். ஓகே கேர்ள்ஸ்👍 லவ் யூ ஆல். இதுதான் எனது அலைபேசி எண் அனைவரும் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
நானும் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பேன். எனது நம்பர் உங்கள் அனைவரிடமும் இருப்பதால் உங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் என்னை அழைத்து உறையாடலாம். சிநேகிதிகளான உங்களுக்குள் டிஸ்கஷன்ஸ் நிறைய இருக்கும் ஸோ ஐ திங்க் ஐ ஷுட் லீவ் திஸ் குரூப். நோ ஹார்டு ஃபீலிங்க்ஸ். இட் வாஸ் ஸோ நைஸ் டு ரீட் ஆல் யுவர் மெஸேஜஸ். பை ஆல். டேக் கேர் அன்ட் பி சேஃப் ஆல் ஆஃப் யூ.
என்று கூறி லில்லி டிச்சர் குழுவை விட்டு வெளியேற மீண்டும் அமைதி நிலவியது... ஆனால் குழுவில் மாற்றங்கள் சில நேர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் குழு எந்த நாளும் ஒரு மெஸேஜ் கூட இல்லாமல் இருந்ததே இல்லை. குழு நிதானமாக செயல்பட தொடங்கியது. பல கும்பகர்ணிகளை தட்டி எழுப்பி செயல்பட வைத்த லில்லி மேமுடன் “வீ லவ் லில்லி மேம்” என மற்றுமொரு குழு ஆரம்பிக்கப்பட்டது.
வேனு என்கிற வேனுகாந்தன் நமது இந்திய தலைநகரில் உள்ள ஓர் பிரபலமான கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு அதற்காக நன்றாக படித்து பல பரீட்சைகளில் முழு மதிப்பெண்கள் பெற்று. அதில் சேருவதற்காக விண்ணப்பித்து அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதிற்கான பதில் மின் அஞ்சலுக்காக காத்திருந்தான். அவனின் கடின உழைப்பும், நம்பிக்கையும் வீணாகவில்லை. அவன் விரும்பி எதிர்ப்பார்த்த கல்லூரியிலேயே அவனுக்கு ஓர் இடம் கிடைத்தது.
தந்தை சேகர் ஒரு தனியார் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தாய் வள்ளியம்மை இல்லத்தரசி. தங்கை மீனு ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இவர்கள் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். சேகரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. சேகரும், வள்ளியம்மையும் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு கஷ்ட்டமும் தெரியாதவாறு வளர்த்து வந்தனர். வேனுவும், மீனுவும் பெற்றவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்ப அனாவசியமாக எந்த செலவுகளும் செய்யாமல் நல்ல பொறுப்புள்ள பிள்ளைகளாகவே இருந்தனர்.
வேனுவிற்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்ததில் சேகருக்கும், வள்ளியம்மைக்கும் சந்தோஷமும் பெருமிதமும் இருந்தாலும் கல்லூரி செலவுகளுக்கான பணத்தை எப்படி புரட்டுவது என்ற கவலையும் கூடவே தொற்றியது. பிள்ளையின் கனவை கலைக்க அவர்களுக்கு மனமில்லை. அதற்காக அவன் எவ்வளவு முயற்சி எடுத்துள்ளான் என்பது அவர்கள் நன்கு அறிந்தவர்களாயிற்றே!!!!வேனு தனது தந்தையின் பாரத்தை குறைக்க எண்ணி கல்லூரி ஃபீஸ் மட்டும் தந்தையை தருமாறும் மற்ற இதர செலவுகளை எல்லாம் தான் ஏதாவது வேலைப்பார்த்து சம்மாளித்துக்கொள்வதாகவும் கூறினான். சேகருக்கு சற்று வருத்தமாகவே இருந்தாலும் அரை மனதுடன் சம்மதித்தார்.
அவன் பயணிப்பதற்கு வேண்டியதை எல்லாம் வள்ளியம்மை செய்து கொடுத்தாள். பதினேழே வயதான தனது மகன் எப்படி தனியாக தெரியாத ஊரில் சென்று இருக்கப்போகிறானோ என்ற பதற்றமும், அச்சமும் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொண்டால் மகனின் மனது கஷ்ட்டப்படுமே என்று எண்ணி அதை மனதிற்குள் பூட்டி வைத்தாள் மகனின் ஆசையை நிறைவேற்ற.
வேனுவின் அறிவுக்கான தேடல் அவனை புதுதில்லி கொண்டு சென்றது. தனது குடும்பத்தை பிரிந்து வந்ததில் அவனுக்கும் சற்று வருத்தமாக தான் இருந்தது ஆனாலும் படிப்பு மீதிருந்த ஆர்வம் அவனை சமாதானம் செய்தது.
வீட்டில் எந்த வேலையும் செய்யாத வேனு கல்லூரி அருகே ஓர் உணவகத்தில் வேலைப்பார்த்துக்கொண்டே படிக்கலானான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகே இருக்கும் ஒரு டியூஷன் சென்ட்டரில் சென்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து தன் செலவுகளுகானதை ஓரளவு மாதாமாதம் தேற்றினான். முதல் அரை ஆண்டு விடுமுறை டிசம்பர் மாதம் வந்தது. தனது எல்லா நண்பர்களும் விடுமுறைக்கு அவரவர் ஊர்களுக்கு சென்றனர். வேனுவிற்கும் தனது குடும்பத்தினரை பார்க்க, அம்மா கையால் உணவருந்த ஆசைதான் ஆனால் ஒரு பதினைந்து நாட்களுக்காக அதுவும் பயணத்திலேயே போக மூன்று வர மூன்று என்று ஆறு நாட்கள் போய்விடும்…ஏன் அவ்வளவு செலவு செய்யவேண்டும் அந்த பணமிருந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கான செலவுக்கு உதவும் என்று போகாமல் கல்லூரி விடுதியிலேயே தனியாக இருந்தான்.
அவனைப்போல் இன்னும் சிலர் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அவர்களுடன் உரையாடி அவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டான். அப்பா, அம்மா, தங்கையுடன் தினமும் சிறிது நேரமே பேசினாலும் வேனுவிற்கு அன்று முழுவதும் ரீச்சார்ஜ் ஆனதுப்போலிருக்கும். அவன் அங்கு தனிமையிலிருப்பதை வீட்டினருடன் பகிர்ந்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என்று கூறாமல் மறைத்தான். அந்த தனிமை அவனுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.
மீண்டும் ஜனவரியில் கல்லூரி திறந்தது தனது நண்பர்களைப்பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தான் வேனு. மறுபடியும் படிப்பு வேலை என்று வாழ்க்கை நகர ஆரம்பித்தது. பிப்ரவரி மாத கடைசியில் எல்லா நாடுகளிலும் ஒரு வைரஸ் பரவுவதாகவும் அதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு போட்டதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. இந்தியாவிலும் இது நிகழும் என்பதை வேனு எதிர்ப்பார்க்கவில்லை. கல்லூரி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் மின் அஞ்சல் அனுப்பியது. டங் என்று வேனுவின் அலைபேசி சப்தம் எழுப்பியது. அந்த கடிதத்தை படித்ததும் வேனுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் காலவரையின்றி கல்லூரி முடப்போவதாகவும், வகுப்புகள் அனைத்தும் இணையதளம் மூலம் நடைபெறும் என்றும் அனைவரும் கல்லூரி விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களிடம் கல்லூரி கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவரத்தை செய்தித்தாள்களிளும், தொலைக்காட்சி செய்திகளிளும் தெரிந்துக்கொண்ட சேகரும், வள்ளியம்மையும் துடித்துப்போனார்கள். உடனே எப்படியாவது கிளம்பி வரச்சொல்லி வேனுவிடம் கூறினார்கள்.
ஆனால் வேனு ஒரு முடிவெடுப்பதற்குள் அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. நாடே ஸ்தம்பித்தது. நண்பர்களை அவர்கள் வீடுகளிலிருந்து கார்கள் வந்து அழைத்துச்சென்றது. அதில் ஒரு நண்பன் வேனுவை தன்னுடன் வருமாறு கூறினான். எத்தனை நாள் நண்பன் வீட்டில் தங்குவது என்று எண்ணி மறுத்துவிட்டான் வேனு. தான் எங்கு செல்வது எங்கே தங்குவது என்ன செய்வது என்று பல கேள்விகள் அவனுள் உதித்தது.
பெட்டியுடன் கல்லூரிக்கு வெளியே வந்தவன் ஒரு சுவரொட்டியைப்பார்த்தான். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துமனைக்கு தன்னார்வத் தொண்டர்கள் தேவை இருக்க இடம் மற்றும் உணவு வழங்கப்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது. மனதிற்குள் ஒரு தெம்பு வந்தது வேனுவிற்கு. நேராக அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றான். ஓர் நேர்காணல் நடந்தது. வேனு அதில் தேரச்சிப்பெற்று தனது சேவையை தொடங்கினான். அங்கு பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தான். பணம் படைத்த தனவான்கள் பலர் முன் வந்து உதவுவதைப்பார்த்து தானும் நாளை படித்து பெரிய ஆளாகி இப்படி நம்மால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தான். ஒரு நச்சுயிரின் வெறியாட்டத்தை தன் கண்களால் காண நேர்ந்தது வேனுவிற்கு. அவன் கண்கள் கலங்கின. இரண்டு நாள் உணவும் உட்க்கொள்ளவில்லை. இதை கவனித்த மற்றொரு தன்னார்வ தொண்டர் ஒருவர் வேனுவிடம் ….நன்றாக உணவு அருந்தவில்லை என்றால் பின்பு எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினார்.
மீண்டும் தன் சேவைகளில் இறங்கினான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டதாக செய்தி வர வேனு நேராக தன்னார்வத் தொண்டர்கள் தலைவரிடம் சென்று தான் ஊருக்கு போவதற்கு அனுமதிக்கேட்டான். அவரும் அவனது இரண்டு மாத சேவைக்கு நன்றி தெரிவித்து பயணத்திற்கு கொஞ்ம் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். இவை அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி தன் வரவை தெரிவித்தான்.
மனதிற்குள் தனது குடும்பத்தினரை காணப்போகும் சந்தோஷத்தில் வேகமாக நடந்தே ரயில் நிலையம் சென்றான். அங்கு எல்லா ரெயில்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவர்கள் எவரும் முககவசம் அணிந்திருக்கவில்லை. எல்லாரும் அவரவர் ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்தில் இப்படி கூடிச்சென்றால் அந்த நச்சுயிர் மிக சுலபமாக தன்னினத்தை பெருக்கி விடுமே அதிலிருந்து தப்பித்து அனைவரும் பத்திரமாக குடும்பத்துடன் சேர்ந்திட வேண்டுமே என்று மனதார வேண்டிக்கொண்டு ரயில் ஏறினான் வேனு.
ரயிலில் ஒரு கட்டிட தொழிலாளியுடனும் அவர் குடும்பத்தினருடனும் உரையாட வாய்ப்பு கிடைத்ததும் அவர்களைப்பற்றியும் அந்த ஊரடங்கினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் அவர்கள் சொல்லக் கேட்டதும் தனது கஷ்ட்டங்கள் ஓன்றுமே இல்லை என்ற எண்ணம் வேனு மனதில் தோன்றியது.
மூன்று நாட்கள் பயணத்தில் வேனு வெரும் தண்ணீரும், டியும், பிஸ்கெட்டும் உண்டு வந்தான். மூன்றாவது நாள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவனுள் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. சேகர் ரயில் நிலையம் வந்து தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வள்ளியம்மை ஆரத்தி தட்டுடன் வாசலில் அமர்ந்திருந்தாள். சேகரின் வண்டி வந்து நின்றதும் முதலில் வள்ளியம்மையும் மீனுவும் வேனுவிற்கு ஆரத்தி எடுத்தனர் அதற்கு வேனு
“என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கேன் ஆரத்தி எல்லாம் எடுக்குறீங்க” என்று நகைத்தான்.
சேகர் : உண்மையிலே இதுவும் ஒரு வகை போர் தாம்பா. நாங்க பதரின பதரல், பயந்தது, எல்லாம் உனக்கு புரியாதுப்பா. பத்திரமாக திரும்பி வந்திருக்க அதற்கு தான் இந்த ஆரத்தி. வா வா உள்ள போகலாம்.
வள்ளியம்மை: எப்படிப்பா இந்த இரண்டு மாதம் சம்மாளிச்ச? ரொம்ப கஷ்டப்பட்டியோ? ரொம்ப மெலிஞ்சிட்டயே !! சரியா சாப்பிடலயா??
சேகர்: அவன் குளிச்சிட்டு வரட்டும் அப்புரம் வெச்சுக்கோ உன் கேள்விகளை…நீ போப்பா குளிச்சிட்டு சாப்பிட வா… முதல்ல பிள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை வள்ளி.
தனது மாற்று துணி எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி சென்றான். மீனு ஒடிவந்து அண்ணனுக்கு துண்டு கொடுத்தாள். வள்ளியம்மை அடுப்படியிலிருந்து அப்பளம் பொறித்துக்கொண்டே
“உடுத்திருக்கற துணிகள அப்படியே பக்கெட்டில போட்டூப்பா நான் துவைச்சுக்கறேன்” என்றாள்
குளித்தபின்பு நேராக பூஜை அறைக்கு சென்று விபூதி பூசிக்கொண்டு உணவருந்த குடும்பத்தினருடன் அமர்ந்தான். தனது குடும்பத்தினரின் அன்பிலும், சுட சுட சாதத்தில் அம்மா செய்த சாம்பார் ஊற்றியதும் எழுந்த வாசத்திலும் அவன் கல்லூரி சென்ற நாளிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து சேரும் வரை பட்ட அத்தனை கஷ்ட்டங்களும் காணாமல் போனது வேனுவிற்கு.
அறிவு தாகத்தினால் திண்டுக்கல்லிருந்து தில்லி வரை பயணம் மேற்கொண்டு பல இன்னல்களுக்கு ஆளாகினாலும் வாழ்க்கை வேனுவிற்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. சிறு வயதில் நமக்கு நேரும் சிரமங்களையும் கஷ்ட்டங்களையும் பாடங்களாக ஏற்று அதையும் நன்கு படித்து வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற்றோமேயானால் நம்மை வெல்ல எவராலும் முடியாது.
பூங்கரை ஒரு அழகான பசுமையான கிராமம். இந்த கிராமம் புலிவனம் எனும் அடர்ந்த காட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஊர் மக்களின் கூற்றுப்படி காட்டிற்குள் புலிகள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அப்பெயர் பெற்றது. இவ்வாறு பசுமை செழிப்பான கிராமத்தில் இரு அழகான பெண்கள் வசித்து வந்தார்கள். இருவரும் பக்கத்து வீட்டு காரர்கள் ஆவர். அவர்களில் ஒருத்தியை தவுட்டுபெண் என்றும் இன்னொருத்தியை தகரபெண் என்றும் ஊர் மக்கள் அனைவரும் அழைப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி ஒர் பெயர் வந்தது? என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா? வாருங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தவுட்டுபெண்ணின் பெயர் ரகசியத்தையும் அவள் குடும்பத்தினரையும் தெரிந்து கொள்ளலாம். இவளுக்கு திருமணமாகி 10 வயதில் மகன் இருக்கிறான். அழகான நாம் இருவர் நமக்கொருவர் என்று வாழும் குடும்பம். இவளது கணவன் வேலை காரணமாக வெளியூரில் தங்கிவருகிறான். ஏதாவது விஷேஷ நாட்களுக்கு மற்றும் மாசத்துக்கு ஒரு முறை மட்டுமே வந்து மனைவி மகனுடன் நேரம் செலவிட்டு அடுத்து தான் திரும்பி வரும் வரையில் தேவையான பணத்தை செலவுக்காக மனைவியிடம் கொடுத்து செல்வான். அவளும் சிக்கனமாக இருந்து அதில் சேமித்தும் வந்தாள். அவள் பெரும்பாலும் தவிடு எடுத்து வந்து அதில் தனது வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் கலந்து அடை வார்த்து தனது மகனுக்கும் கணவருக்கும் கொடுத்து தானும் உண்டு வந்ததால் அவளை தவுட்டுபெண் என்று ஊர் மக்கள் அழைத்தனர்.
இப்போது தகரபெண்ணின் பெயர் பற்றியும் குடும்பம் பற்றியும் அறிந்துக் கொள்ளலாம். இவளுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் 10 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவளது கணவன் பக்கத்து ஊரில் பணியாற்றி வருகிறான். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு பின் குடும்ப செலவிற்கு பணம் கொடுத்து செல்வான். இவளும் சிக்கனமாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்தாள். கணவன் ஊருக்கு சென்றால் இவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காட்டிற்குள் சென்று தகர (திகரை) இலைகளை பறித்து வந்து அதைவைத்து தான் சமையல் செய்வாள். இப்படி தகர இலையை வைத்து சமைத்து வந்ததால் இவளுக்கு தகரபெண் என்ற பெயர் வந்தது.
ஒரு வழியாக ஊர் மக்களிடம் விசாரித்து பெயர் ரகசியத்தையும் குடும்ப விவரங்களையும் அறிந்துக் கொண்டு விட்டோம். மேலும் கதைக்குள் பயணிக்க தங்களின் இருக்கை வார்ப்பட்டையை அணிந்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்☺️
இப்படியாக இருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்ததால் தகரபெண் தகர இலையை பறிப்பதற்காக காட்டிற்குள் செல்ல சற்று தாமதமானது அதனால் திரும்பி வருவதற்கும் தாமதமாகலாம் என்று எண்ணி தவுட்டுபெண்ணிடம் பள்ளியிலிருந்து வரும் தன் பிள்ளைகளை தான் வரும்வரை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பி சென்றாள். அவள் காட்டிற்குள் சென்று இலைகளை தேடி கண்டுப்பிடிப்பதற்கே மாலை நேரம் ஆகிவிட்டது. அது பனிக்காலம் என்பதால் சீக்கிரமே இருட்டியது. எப்பொழுதும் சாப்பாடு கட்டிக்கொண்டு வருபவள் அன்று அவசரத்தில் மறந்துபோனாள். இருளில் எப்படி வந்த வழி மாறாமல் ஊருக்குள் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும்போது தூரத்தில் ஒரு ஒளி தெறிந்தது. தகரபெண் அதை நோக்கியபடி நடந்து சென்றால். தான் செல்லும் வழிநெடுக தனது சேலையை சிறிது சிறிதாக கிழித்து கையில் பட்ட செடிகளில் அல்லது மரப்பட்டைகளில் சொருகி வைத்துக்கொண்டே சென்றாள். சேலை தாவணியானது அவள் அந்த ஒளி வந்த இடத்தை சென்றடைவதற்குள். அந்த அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு அழகான பெரிய வீடு அதன் வாசலில் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமே நம் தகரபெண் நோக்கி வந்த ஒளி. சற்று பசி, பயம், பதற்றம் ஆகியவற்றுடன் மெல்ல கதவை தட்டினாள். யாரும் திறக்கவில்லை மீண்டும் தட்டினாள் பதில் இல்லை. கடைசியாக ஒருமுறை தட்டிப் பார்ப்போம் பதில் இல்லையெனில் வீட்டு வாசலின் தின்னையில் படுத்துறங்கி காலை விடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் என்று எண்ணி கதவைத் தட்ட கையை உயர்த்தினாள் கதவு திறந்தது.
கதவு திறந்ததும் ஆச்சர்யமானாள் தகரபெண். ஏனெனில் கதவை திறந்தது ஒரு 80 வயது மூதாட்டி. காட்டிற்குள் உள்ள வீட்டில் இவ்வளவு வயதான பாட்டியா! அவர் தனியாக இருக்கிறாரா இல்லை வீட்டினுள் வேறு யாரேனும் இருக்கிறார்களா! அப்படி இருந்தால் அவர்கள் கதவை திறக்காமல் ஏன் இந்த வயதான பாட்டி வரவேண்டும்!!! என்ற பல சந்தேகங்கள் அவள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றியபடி இருக்க “யாரது” என்றாள் பாட்டி. உடனே சுதாரித்துக் கொண்டு தான் யார் என்பதையும் ஏன்?, எப்படி? அங்கு வந்தாள் என்பதையும் சொல்ல தொடங்கியதும் …”உள்ள வந்து உட்கார்ந்து சொல்லுமா. என்னால ரொம்ப நேரம் நிற்க முடியாது” என்றால் பாட்டி. உடனே வீட்டிற்குள் சென்றாள் தகரபெண். வீடு அலங்கோலமாக கிடந்தது ஒரு கெட்ட நாற்றம் வேற….”
தபெ: பாட்டி இந்த காட்டிற்குள் நீங்க தனியாவா இருக்கீங்க?
பாட்டி: ஆமாம் மா தனியாக தான் இருக்கேன் ஏன் கேக்கறே? சரி என்ன விடு.. இந்த காட்டுக்குள்ள இந்த நேரத்துல உனக்கு என்ன வேலை அத சொல்லு.
தபெ: நடந்தவற்றை எல்லாம் கூறினாள்.
பாட்டி :அச்சச்சோ குழந்தைகள் உன்ன தேடாதோ
தபெ : அதுதான் எனக்கும் வருத்தமா இருக்கு பாட்டி. இதுவரை அவங்களை நான் இப்படி தனியா விட்டு இருந்ததே இல்லை. என் தோழி தவுட்டுபெண் நல்லாதான் பார்த்துப்பா ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்??
பாட்டி: எனக்கு யாரும் இல்லை மா. நான் தனி ஆளாக தான் இந்த காட்டுக்குள்ள பல வருஷங்களா இருந்துட்டு இருக்கேன். இந்த காடு தான் எனக்கு எல்லா உறவுகளும். நான் சொல்லுவது எல்லாம் கேட்கும். என்னை பாதுகாப்பாக இத்தனை வருஷம் பார்த்துக்கிட்டு வருதுனா பாரேன்.
இப்படி பாட்டி கிட்ட பேச்சு குடுத்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்தாள் தகரபெண். பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பாட்டி: அடடே என் வீடா இது பளிச்சுன்னு இருக்கே. பலே!! வாய் பேசும் போதே கை வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்திடுச்சே. என் வீட இப்படிப்பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. வயசாயிடுச்சுல்ல என்னால வேலைகள் எல்லாம் செய்ய முடியலையே.
தபெ: யாரையாவது துணைக்கு வச்சுக்கலாம் இல்லையா பாட்டி.
பாட்டி :இந்த காட்டுக்குள்ள எனக்கு வேலை செய்துதர யாருமா வருவா?
தபெ: நாளையிலிருந்து நான் காட்டுக்கு இலை பறிக்க வரும்போது உங்களை வந்து விசாரித்து வீடு சுத்தம் செய்து தந்துவிட்டு போறேன் பாட்டி கவலை படாதீங்க.
பாட்டி: உனக்கு நல்ல மனசு மா. சரி நீ ஏதாவது சாப்பிட்டாயா??
தபெ: இல்லை பாட்டி. நீங்க சாப்பிடிங்களா?
பாட்டி: இதோ இன்று இந்த பழம் தான். சமையல் கட்டில் எல்லா பொருட்க்களும் இருக்கு ஆனா சமைக்க ஆளில்லை என்ன செய்ய!!
தபெ: நான் சமைக்கட்டுமா பாட்டி?
பாட்டி: ஓ தாராளமா!! நானும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு.
தகரபெண் சமையலறைக்குள் சென்றாள். அவளுக்கு தலை சுற்றியது. எல்லாப் பொருட்களும் சிதறி, கொட்டி கிடந்தன. காய்கள் எல்லாம் அழுகி இருந்தது. பாத்திரங்கள் எதுவும் கழுவாமல் குமிந்திருந்தது. உடனே வேலையில் இறங்கினாள். சமையலறை பளிச்சிட்டது. தான் பறித்து வந்து தகர இலை வைத்து சிறிது நேரத்தில் சுட சுட சாப்பாடு தயாரித்து பாட்டியை சாப்பிட அழைத்தாள். பாட்டி அதற்குள் தூங்கிவிட்டாள். தகரபெண் பாட்டியை எழுப்பி உணவு பரிமாறினாள். பாட்டி தகரபெண்ணையும் உணவு அருந்துமாறு கூறினாள். ஆனால் தகரபெண் மறுத்து விட்டாள். ஏனென்றால் அவள் கொண்டு வந்த இலை கொஞ்சம் தான் அதை வைத்து சமைத்துள்ளாள். பாட்டி வேற… நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருஷமாச்சுன்னு சொன்னதினால் அவள் பாட்டி உண்டபின் மீதமுள்ளதை உண்ணலாம் என்றிருந்தாள். ஆனால் சாதம் மட்டுமே மீந்தது. பாட்டியிடம் ஒரு குவளை நீரும் ஒரு பாத்திரமும் கொடுத்து கைகளை கழுவ சொன்னாள். பின் பாட்டி தனது சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தார். தகரபெண் மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைத்தாள். இட்டிலிக்கு மாவு, பருப்பு ஊற வைத்துவிட்டு இருந்த பழங்களை உண்டு பாட்டி அருகில் வந்து அமர்ந்தாள். பாட்டி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
தபெ: ஏன் பாட்டி அப்படி பாக்குறீங்க?
பாட்டி: இப்பத்தான் வயிறும் மனசும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நெறஞ்சிருக்கு. ருசியான சாப்பாடு. நன்றி மா. ஆமாம் ருசில அளவு பாக்காம சாப்பிட்டு விட்டேன.. உனக்கு??
தபெ: பரவாயில்லை பாட்டி நான் பழங்கள் எல்லாம் சாப்பிட்டேன். அதுவே போதும். நாளைக்கு வீட்டுக்கு போய் சமைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிட்டா போச்சு.
பாட்டி: சரி மா….நல்ல உணவு உண்டதில் என்க்கு நல்ல உறக்கம் வருது. உனக்கு தூக்கம் வரலையா.
தபெ: தூங்கனும் பாட்டி ஆனா என் பிள்ளைகள் சாப்பிட்டாங்களோ இல்லையோ என்ற கவலை தூக்கத்தை கலைக்கிறது என்ன செய்ய.
பாட்டி: சரி நான் தூங்க போகிறேன். உனக்கு தூக்கம் வந்தால் அந்த அறையில் போய் தூங்கு. அங்கு தேக்கினால் செய்த கட்டிலில் பஞ்சு மெத்தை போட்டிருக்கும் அதற்கு பட்டுத் துணி விரித்திருக்கும். நன்றாக உறக்கம் வரும்.
தபெ: அச்சச்சோ !!! பாட்டி எனக்கு அதிலெல்லாம் படுத்து பழக்கம் இல்லை. ஒரு பாய் போதும் இப்படியே தரையில் படுத்துக்கறேன்.
பாட்டி: அப்படியா சரி அப்போ அதுக்கு பக்கத்து அறையில் பாய் இருக்கு அங்க போய் தூங்கிக்கோ. சரியா நான் உறங்க போறேன். காலை பார்ப்போம்.
என்று சொல்லி பாட்டி உறங்க சென்றாள். தகரபெண்ணுக்கு உறக்கம் வரவில்லை. அவள் பாட்டி சொன்ன அறைக்குள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு பாய் இருந்தது ஆனால் அந்த அறை முழுவதும் பஞ்சு பறந்து கிடந்தது. ஊசி நூல் எல்லாம் சிதறிய படி கிடந்தன. அவள் அந்த பஞ்சை எல்லாம் ஒரு துணி கொண்டு ஒன்றுசேர்த்து அவற்றை அங்கு கிடந்த காலி தலையனை உறைக்குள் நிறப்பி பின் ஊசி நூல் கொண்டு தைத்து அழகான தலையனைகளை செய்து அடுக்கி வைத்து அறையை சுத்தம் செய்தாள். பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை ஆட்டுக்கள்ளில் அறைத்து மாவாக்கி மூடி வைத்தாள். அழுகாத காய்களை தனியாக எடுத்து வைத்தது அவளுக்கு ஞாபகம் வர உடனே அவற்றை நன்றாக நீரில் அலம்பி ஒரு கூடையில் போட்டு வைத்தாள். பூஜை அறையை சுத்தம் செய்தாள். இப்படியே ஒன்றன் பின் ஒன்றாக வேலை செய்து கொண்டே இருந்ததில் சற்று கண் அசந்து போனாள். பொழுது விடிந்தது. உடனே எழுந்து வீட்டின் வாசலை கூட்டி, கழுவி கோலமிட்டாள். பின் காலை உணவுக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் செய்தாள். பாட்டி எழுந்து வந்தாள்.
பாட்டி: என்ன ஒரு அருமையான சாப்பாட்டின் வாசனை. என்னை படுக்கையறையிலிருந்து இழுத்து வந்துள்ளது.
தகரபெண் தான் கிளம்ப வேண்டும் என்பதை சொல்ல வந்தாள் அதற்குள் பாட்டி குறுக்கிட்டு …
பாட்டி: இரு இரு நான் குளித்து விட்டு வரேன் இருவரும் ஒன்றாக உணவு அருந்தலாம்.
என்று கூறி உள்ளே சென்றாள்.
தகரபெண்ணுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்ற கவலை இருந்தாலும் பாட்டிக்காக காத்திருந்தாள்.
“ஆஹா ஆஹா என் வீடு தெய்வீக மணம் கமழுதே. மிக சுத்தமாக இருக்கிறதே. மகிழ்ச்சியாக இருக்குமா.” என்று சொல்லிக்கொண்டே இட்டிலியை சட்டினி சாம்பார் போட்டு சாப்பிட்டாள். நீயும் சாப்பிடுமா என்றாள் பாட்டி.
தகரபெண் : பாட்டி நீங்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக தான் காத்திருந்தேன். நான் உடனே கிளம்ப வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். உங்களுக்கு மத்திய உணவும் செய்து வைத்துள்ளேன். சாப்பிடுங்கள். நான் விடைபெற விரும்புகிறேன். நாளை மீண்டும் வருகிறேன்.
பாட்டி: புரிகிறது மா. உன் அவசரம் புரிகிறது. சரி போவதற்கு முன் அதோ ஒரு அறை இருக்கிறதே அதில் நிறைய பெட்டிகள் இருக்கு. அதிலிருந்து ஏதாவது பெட்டியை என் பரிசாக நீ எடுத்துக்கோ.
தபெ: வேண்டாம் பாட்டி நான் சென்று நாளை வரும்போது எடுத்துக்கொள்கிறேனே.
பாட்டி: இந்தா சாவி. போய் எடுத்துக்கொண்டு கிளம்பு.
என்றாள் அதட்டலாக. உடனே வீட்டின் ஞாபகத்தில் வேகமாக சாவியை வாங்கி அறையை திறந்து ஆக சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அறையை பூட்டி சாவியை பாட்டியிடம் கொடுத்து
தபெ: நான் எடுத்துக்கொண்டேன் பாட்டி சந்தோஷமா. இப்பொழுது கிளம்பட்டுமா
பாட்டி: இது சிறிய பெட்டியாச்சே பெரிசு எடுத்திருக்கலாமே சரி சரி உன் விருப்பம் அதுவானால் நான் என்ன சொல்ல ..சரி இப்படியே கிழிந்த புடவையுடனா போக போகிறாயா?பெட்டி எடுத்த அறைக்கு பக்கத்தில் தான் எனது அறை இருக்கிறது போய் உனக்கு வேண்டிய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு வா. பட்டுப்புடவைகள் நிறைய இருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோ. இனி எங்க நான் பட்டுப்பீதாமரமா உடுத்திக்க போகிறேன். அப்படியே அங்கு ஒரு பெட்டியில் எனது நகைகளும் இருக்கும். அதிலிருந்தும் வேண்டியதை எடுத்துக்கொள்.
தகரபெண் வீட்டிற்கு போக தவிக்கிறாள். இந்த பாட்டி என்னடான்னா அது செய் இது செய் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தகரபெண்ணும் ஒன்றும் மறுத்துப்பேசாமல் பாட்டி அறைக்கு சென்றாள். மறுத்து பேசினால் பாட்டி இன்னும் தாமதமாக்குவாரோ என்ற பயம். வேகமாக ஒரு நூல் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு ஒரேஒரு சங்கிலி மட்டும் அணிந்து கொண்டு ஓடி பாட்டியிடம் வந்து தான் கிளம்பியாக வேண்டும் என்று கெஞ்சாத குறையாக சொன்னாள்.
பாட்டி அவளது அவசரம் புரியாததுபோல் ஏன் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளவில்லை? ஏன் ஒரேஒரு சங்கிலி தான் அணிந்து “பத்திரமாக சென்று வா பெண்ணே நாளை சந்திப்போம் என கூறி விடை கொடுத்தாள்”
ஒரு வழியாக பாட்டி வீட்டிலிருந்து கிளம்பினாள் தகரபெண். அவள் தான் வழிநெடுக போட்ட புடவை கிழிசல்களை தொடர்ந்து ஊருக்கு போய் சேர்ந்தாள். நேராக தவுட்டுபெண் வீட்டின் கதவை தட்டினாள். கதவு திறந்ததும் தன் பிள்ளைகளை பற்றி விசாரித்தாள்.
தவுட்டுபெண் : இரு இரு என்ன அவசரம் உனக்கு?? அவர்கள் எழுந்து பால் அருந்துகின்றனர். ஆமாம் நீ எங்கே சென்றாய்? இரவெல்லாம் எங்கிருந்தாய் ?
தகரபெண்: அந்த விவரம் எல்லாம் என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்து சொல்கிறேன்.
என்று கூறிக்கொண்டே தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். பின் வேகமாக காலை உணவு செய்து பிள்ளைகளுக்கு கொடுத்து, பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியதும் அப்பாடா என்றிருந்தது அவளுக்கு. சற்று நேரம் படுத்துக்கொண்டாள். அப்பொழுதுதான் அவளுக்கு அந்த பாட்டி பரிசாக தந்த பெட்டியின் ஞாபகம் வந்தது. பிள்ளைகளை கிளப்பும் அவசரத்தில் மறந்தே போனாள். உடனே அதை எடுத்து திறந்ததும் அதிர்ச்சியுற்றாள். ஏனென்றால் அந்த பெட்டி முழுவதும் தங்க காசுகளும், வைர வைடூர்யங்களின் ஒளி கண்ணைப் பறித்தது. அப்படியே பிரமையில் ஆழ்ந்தாள். கதவை யாரோ தட்டும் சத்தம் அவளை பிரமையிலிருந்து மீட்டு வந்தது. கதவை திறந்தாள்.
தவுட்டுபெண்: என்னடி கதவை திறக்க இவ்வளவு நேரம்? என்ன செய்து கொண்டிருந்த? சரி நேற்று முழுவதும் எங்க இருந்த? அத கேட்க தான் வந்தேன்.
தகரபெண் : வா வா நானே உன் வீட்டுக்கு வந்திருப்பேன். உனக்கு ஒன்னு காட்டுகிறேன் நீ அசந்துடுவ.
தவுட்டுபெண் : நான் என்ன கேக்கறேன் நீ என்ன சொல்லுற!!!!
என்று கூறிக்கொண்டே தகரபெண் காட்டிய பெட்டியை பாத்து வாயடைத்து போனாள்.
தவுபெ: என்னப்பா இது இவ்வளவு ஜொலிக்கிறது. ஏது உனக்கு? அவ்வளவும் நிஜமாகவே தங்கமும் வைரமுமா? இதை எடுக்கதான் போயிருந்தாயா? சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன் இல்லையா!! இதை வைத்து நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே!! நம் கணவர் இப்படி வெளியூரில் கஷ்டப்பட வேண்டியதில்லை!!
தகபெ: நீ இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே போற!!! என்னை பதில் சொல்ல விடு.
என்று சொல்லிக்கொண்டே தகரபெண் நடந்தவற்றை கூறி முடித்ததும்….
தவுபெ: அட அசடே எடுத்தது தான் எடுத்த கொஞ்சம் பெரிய பெட்டியா எடுத்திருக்கலாமில்லையா!!
தகபெ: எனக்கு இதை தூக்கிகிட்டு வரத்துக்கே கஷ்டமாக இருந்தது. பாவம் வயசான பாட்டி தனியா இருக்காங்க. நாளைக்கு வரேன் என்று சொல்லியுள்ளேன் ஆனால் என்னால் போக முடியாது. என் கணவர் நாளை வருவார். இப்போதான் ஞாபகம் வந்தது. இரண்டு நாள் கழித்து போகனும். சரி இந்தா இதிலிருந்து நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள்.
தவுட்டுபெண் அதிலிருந்து பாதி பொருளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு போனாள். அதிலிருந்து எடுத்து வந்த நகையை போட்டு அழகு பார்த்தாள். அப்பொழுது அவளுள் பேராசை எழுந்தது. தானும் ஒரு பெட்டி எடுத்து வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்பொழுதே சென்றால் வேலையும் அவ்வளவாக இருக்காது ஏனெனில் தகரபெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக செய்பவள் என்பது ஊர் அறிந்ததே அதனால் பாட்டியின் வீடு பளிச்சிடும் மேலும் மாவாட்டி வைத்திருப்பதால் சட்டென்று உணவும் பாட்டிக்கு கொடுத்திடலாம் என்றெல்லாம் யோசித்து மனதிற்குள் ஒரு திட்டமிட்டு தகரபெண்ணிடம் சென்று தனது ஊர்க்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை அதனால் தான் உடனே போகவேண்டும் தனது பிள்ளையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள் காட்டிற்குள்.
தகரபெண் சொன்ன வழியாக சென்றாள். சிறுது நேரத்தில் தகரபெண்ணின் புடவை கிழிசல்களை பார்த்தாள். அதே வழியில் பயணித்தாள். மாலையானது இருளும் படிந்தது, வீடும் தெறிந்தது. மகிழ்ச்சியாக கதவை தட்டினாள். தகரபெண் கூறியது போல் இரண்டு முறையும் கதவு திறக்கவில்லை. மூன்றாவது முறை திறந்தது. பாட்டி “யாரது” என்று கேட்டாள். உடனே தவுட்டுபெண் உள்ள போய் பேசலாம் பாட்டி வாங்க என்று பாட்டிக்கு முன் அவர் வீட்டிற்குள் சென்றாள். சென்றவள் கெட்ட நாற்றம் தாளாமல் ஒடி வெளியே போனாள். தகரபெண் வீட்டை சுத்தம் செய்து முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் வீடு அலங்கோலமாகவும் கெட்ட நாற்றத்துடனும் இருக்கே!!!! தகரபெண் பொய் சொல்லியிருப்பாலோ!!!! என்றெல்லாம் பல எண்ணங்கள் தோன்றியது தவுட்டுபெண்ணுக்கு. பாட்டி உள்ளே இருந்து ” ஏம்மா ஓடிட்ட” என்று கேட்டாள். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டை சுற்றிப்பார்க்க போனதாக சொல்லி சமாளிக்க நினைத்தாள் ஆனால் பாட்டி விடுவாரா!!!
பாட்டி: அதற்கு ஏன் ஓடின ஏதோ என் வீடு இடியபோறாமாதிரி? நிதானமாக சுற்றி பார்க்க வேண்டியது தானே!! அதுவும் வெளியே இந்த இருட்டில் என்னத சுற்றி பார்ப்ப வா உள்ள வா. நீ யாரு ? எப்படி இங்கே வந்த ? இந்த விவரங்கள் எல்லாம் சொல்லு கேட்போம்.
தவுபெ: இதோ வரேன். சொல்லுங்க பாட்டி. சாப்பிட ஏதாவது வச்சிருக்கேங்களா?? இல்லை மாவெல்லாத்தையும் முடிச்சிட்டிங்களா??
பாட்டி: என்னது!!! ஏதோ நீ தான் நேற்று வந்து மாவு அறைத்து வச்சிட்டு போன மாதிரி கேக்கறே?
தவுபெ: வீடுன்னா இட்டிலிக்கு மாவாட்டி வைத்திருப்பது சகஜம் தானே அதனால கேட்டேன் !!
என்று சொல்லிக்கொண்டே நாலாபுறமும் அவள் கண்கள் சுழன்றது
பாட்டிக்கு இவள் எப்படி அங்கு வந்தாள்? ஏன் வந்திருக்கிறாள்? எதை அவள் கண்கள் சுழன்று தேடுகிறது என்பதெல்லாம் புரிந்தும் புரியாததுபோல தனக்கு பசிப்பதாகவும் சமைத்து தரும் மாறு தவுட்டுபெண்ணிடம் கூறினாள். அதற்கு தவுட்டுபெண் பாட்டிக்கு வயசாகிவிட்டதால் பழம் மட்டும் சாப்பிடுமாறு கூறிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாகவும் எங்கே படுத்துரங்க வேண்டும் என்று கேட்டாள். பாட்டியும் தகரபெண்ணிடம் சொன்னது போலவே இரண்டு அறைகளைப்பற்றி சொல்லி முடிப்பதற்குள் தான் தேக்கு கட்டிலில் படுத்துக்கொள்வதாக கூறினாள். சரி என்று பாட்டி அறையை காண்பிக்க ஓடீ சென்று மெத்தையில் படுத்துருண்டாள். நன்றாக உறங்கினாள். காலை விடிந்து பல மணிநேரம் ஆகியும் எழாமல் உறங்கிக்கொண்டிருந்த தவுட்டுபெண்ணை எழுப்பினார் பாட்டி. வேகமாக எழுந்தாள். வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். பாட்டி புன்முறுவலுடன் “சரி சரி அந்த கடைசி அறைல பெட்டிகள் அடுக்கி இருக்கும் நீ போய் உனக்கு வேண்டியதை என் பரிசாக எடுத்துக்கொள்” என்று கூறி முடிப்பதற்குள் சாவியை பறித்து கொண்டு போய் அறையை திறந்து இருப்பதிலேயே பெரிய பெட்டியை தூக்க முடியாமல் இழுத்துக்கொண்டு வந்தாள். இதை பார்த்ததும்…
பாட்டி : இது போதுமா?
தவுபெ: இதைவிட பெரிய பெட்டி இருக்கா?
பாட்டி: இல்லை இதை இப்படி வீடு வரை இழுத்துக்கொண்டே போக போறயா?? சரி உன் பாடு சென்று வா.
தவுட்டுபெண் யோசித்தாள் “என்ன இந்த பாட்டி பொசுக்கென்று போயிட்டு வா என்று சொல்லுது அப்போ பட்டுப்புடவை…அதையும் விட கூடாது”
தவுபெ : ஏன் பாட்டி உங்க கிட்ட புடவைகள் நிறைய இருக்குமே இத்தனை வருஷமாக சேர்த்து வச்சிருப்பேங்களே!!!
பாட்டி: அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மா. இந்த காட்டுக்குள்ள எனக்கு யாரு புடவை எடுத்து தர போறா!!! சரி உனக்கு நேரமாகுதில்ல. கிளம்ப வில்லை?
தவுட்டுபெண் மனதிற்குள் ” போச்சு பட்டுப்புடவை போச்சு இந்த கிழவி தராது போல… பரவாயில்லை இந்த பெட்டில இருக்கறத வச்சு நாமளே வாங்கிக்கலாம்”
பாட்டி: என்னடிமா யோசனை??
தவுபெ: ஒன்னுமில்லை!! நான் சென்று வருகிறேன்
பெரிய பெட்டியை தூக்கவும் முடியாமல் இழுக்கவும் முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். அவள் பிள்ளையை பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்தாள். வேகமாக கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அவசர அவசரமாக பெட்டியை திறந்தாள். அதனுள் பாம்பு, பூரான், தேள் எல்லாம் நிரம்பி வழிந்தன. பயந்து போனாள் தவுட்டுபெண். தகரபெண் மீது கோபம் கொண்டாள். அவள் தன்னிடம் பொய் சொன்னதாக கருதினாள்.
இவ்விடத்தில் தவுட்டுபெண்
பேராசையால் பொறாமை கொண்டு பொறாமையால் கோபம் கொண்டு மதியிழந்தாள். செய்வதறியாது தகரபெண் தான் தனது இந்த நிலைமைக்கு காரணம் என்று மதிகெட்டு நினைத்து அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் கொண்டு போய் போட்டாள். அந்த பெட்டி தகரபெண் வீட்டின் பின்புறம் மண் தரையில் விழுந்த வேகத்தில் திறந்து கொண்டது. அதனுள்ளே பாம்பு தேள்களுக்கு பதில் தங்கமும் வைரமும் ஜொலித்து.
அதிர்ச்சியடைந்த தவுட்டுபெண் வேகமாக தகரபெண் வீட்டின் கதவை ஓடிபோய் தட்டினாள். தகரபெண் கதவை திறந்து நலம் விசாரித்தாள். அதற்கு பதில் சொல்லாத தவுட்டுபெண் தனது பெட்டி ஒன்று தகரபெண் வீட்டின் பின்புறம் விழந்ததாகவும் அதை எடுக்க வந்ததாகவும் கூறிக்கொண்டே பின்புறம் கதவை திறந்து தகரபெண் பார்ப்பதற்குள் வேகமாக பெட்டியை மூடி அதை அவள் வீட்டுப் பக்கமாக வேலியின் அடிவழியாக தள்ளிவிட்டு சென்றுவருவதாக கூறி தன் மகனையும் அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு பின்புறம் போய் பெட்டியை இழுத்து வந்து வீட்டினுள் வைத்து திறந்தாள் மீண்டும் பாம்பும், தேளும் நெளிந்தது. குழம்பி போன தவுட்டுபெண் தன் பிள்ளையை கூட கவனிக்காமல் மீண்டும் தகரபெண் வீட்டினுள் பெட்டியை போட்டாள் பொன்னும் வைரமுமாக மின்னியது. பின் தனது வீட்டினுள் எடுத்து வந்தால் மீண்டும் பாம்பாக மாறியதில் தவுட்டுபெண்ணுக்கு பித்து பிடித்தது. இதைப்பார்த்த அவள் மகன் அழுது கொண்டே எந்த பெட்டியால் தனது தாய் இப்படி ஆனாளோ அந்த பெட்டியை தகரபெண் வீட்டின் பின்புறம் போட்டு விட்டு தன் தாயை அழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் அங்கேயே இருந்தார்கள். தகரபெண் தனது வீட்டின் பின்புறம் சென்று பார்த்தாள் பாட்டி வீட்டில் பார்த்த அதே பெட்டி கிடந்தது. அப்பொழுது தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. தன் கணவரிடம் நடந்தவற்றை கூறி இருவரும் பாட்டி வீட்டிற்கு காட்டிற்குள் சென்றார்கள். அங்கு அப்படி எந்த வீடும் இருந்ததுக்கான அறிகுறியும் இல்லை. அந்த வீடு இருந்த இடத்தை தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்த தம்பதியர் மெல்ல பெட்டியை திறந்தார்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
இத்துடன் இந்த பயணம் இனிதே நிறைவுற்றது. உங்கள் இருக்கை வார்ப்பட்டையை இத்துடன் அவிழ்த்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கோமு என்ற ஒரு வாலிபன் முருங்கைக்கரை என்ற ஊரில் வசித்து வந்தான். அவனது தொழில் வேட்டையாடுதல். காட்டுக்குள் சென்று விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி அவற்றை ஊர் மக்களிடம் விற்பனை செய்து காசு சம்பாதித்து வாழ்ந்து வந்தான். காட்டுக்குள் கிடைக்கும் அரிய வகை மூலிகைகள் பொருட்கள் ஆகியவற்றையும் சேகரித்து அதை ஏலத்தில் விட்டு அதையும் காசாக்கிவிடுவான். நல்ல கெட்டிக்காரன், திறமைசாலி, யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம் படைத்தவன். கடவுள் பக்தி உடையவன். அவன் அந்த ஊர் தலைவர் ஆகவேண்டும் என்று பல நாள் ஆசை பட்டு அதற்கு பல வழிகளில் முயற்சியும் செய்துப்பார்த்து பயனில்லாமல் போனது. கடவுளிடம் கோபம் கொண்டான். அந்த ஆசையை அப்படியே மனதினுள் பூட்டி வைத்து விட்டு தனது வேலையை பார்த்தான்.
ஒரு நாள் வேட்டைக்கு சென்றவன் ஊர் திரும்பவில்லை. அனைவரும் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர். காட்டுக்குள் சென்ற கோமுவை வனவிலங்குகள் தாக்கியதில் அவன் மூக்கு பாதியாக அறுப்பட்டு போனது. அவன் பல மூலிகைகளை காயம் பட்ட இடங்களில் போட்டு தனக்கு தானே வைதியம் பார்த்துக்கொண்டு அங்கு கிடைத்த பழங்களை உண்டு இருந்தான். விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடியதில் வழி மாறி போய்விட்டான். எங்கு இருக்கின்றான் என்பது அவனுக்கே தெரியாது.
காயங்கள் எல்லாம் மாய்ந்து கொஞ்சம் உடலில் சக்தி வந்ததும் எழுந்து மீண்டும் நடக்கலானான் தன் ஊரைத் தேடி முறிந்த அரை மூக்குடன். பல நாள் நடந்தும் அவனால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை ஏனெனில் அவன் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளான். அவ்வளவு தூரம் காட்டிற்குள் அவன் சென்றதில்லை. ஊருக்கு வழி தெரியாததால் குழப்பம், வலியால் வேதனை, நல்ல உணவுக்காக ஏக்கம், மூக்கு அறுப்பட்டு பாதியானதில் கோபம், ஊர் தலைவர் பதவி ஆசை இப்படி பல உணர்ச்சிகளால் சூழப்பட்டு அதில் சிக்கி செய்வதறியாது கடவுளை திட்டித்தீர்தான். ஏன் தனக்கு இப்படி கஷ்டங்களையும் தோல்விகளையும் கொடுத்து வாட்டி வதைக்கிறார் என்ற ஆத்திரத்தில் கத்தினான். காடே அதிர்ந்தது. எங்கடா மீண்டும் காட்டு விலங்குகள் தனது சப்தத்தில் வந்து மீதமுள்ள மூக்கையும் தின்று விடுமோ என்று பயந்து சற்று நேரம் ஒளிந்து கொண்டான். பின்னர் வலது புரம் திரும்பிபார்த்தான் ஏதோ ஒரு ஒளி தெறிந்தது. ஒளியின் பிரகாசத்தை நோக்கியே நடக்கலானான். தனது ஊர் என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தான்.
அவன் நடந்து நடந்து களைத்து விட்டதால் ஒரு மரத்தாலான கம்பம் ஒன்றில் சாய்ந்தான். சற்று நேரம் கழித்து தான் எதன் மேல் சாய்ந்துள்ளோம் என்று தலையை தூக்கிப் பார்த்தான். பெரிய பெயர் பலகை தெரிந்தது அதில் வெள்ளரிக்கா பட்டினம் என்று எழுதியிருந்தது. தனது ஊர் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு ஊரை அடைந்தது அவனுக்குள் மகிழ்ச்சியை அளித்தது. ஊருக்குள் சென்றான் அதிர்ச்சியுற்றான். ஏனெனில் அந்த ஊர் மக்களுக்கு யாருக்குமே மூக்கு என்ற ஒரு உறுப்பு முகத்தில் இல்லை. அதற்கு பதில் சிறு இரு துவாரங்கள் மட்டுமே இருந்தது. ஏதோ வித்தியாசமான ஊருக்குள் நுழைந்து விட்டோம் ஏதோ விபரீதம் தனக்கு நடக்க போகிறது, இன்னொரு சோதனை தனக்காக அந்த கடவுள் கொடுத்து ரசிக்கிறார் என்ற பல எண்ணங்கள் அவனுள் பறந்தன. வெள்ளரிக்கா பட்டின மக்கள் கோமுவைப்பார்த்து அதிசயித்துப் போனார்கள் ஏனென்றால் அவர்கள் அரை மூக்குடன் இருக்கும் மனிதனை அன்று தான் முதல் முதலில் காண்கிறார்கள். அவர்கள் காட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாதவர்கள். அவர்கள் ஊருக்குள் நுழைந்த முதல் அரை மூக்குடைய வேற்று ஆள் நமது கோமு தான்.
வெள்ளரிக்கா பட்டினத்துக்கு ஒரு வயதான ராஜா இருக்கிறார் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அடுத்து யார் தங்கள் ஊரை ஆளப்போகிறார் என்ற குழப்பம் ஊர் முழுவதும் நிலவி இருந்தது. ராஜா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். மக்களும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த ஊரில் வெள்ளரிக்காய் செடியிலும் கொடியிலும் காய்த்து ஊர் முழுவதும் பரவி கிடந்தது. இது போக மா, பலா, தென்னை மரங்களும் தெருக்களின் ஓரங்களில் நெடு நெடுவென காய் கனிகளோடு அழகாக வளர்ந்திருந்தது. அவர்கள் தோட்டத்தில் தங்கமும் வைரமும் சாதாரண கற்கள் போல கிடந்தன. ஊரின் மேற்கு எல்லையில் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதிலுள்ள நீர் அமிர்தம் போல் இருக்கும். காட்டிற்குள் இப்படி ஒரு தன்னிறைவு பசுமை கிராமம் இருப்பதே யாருக்கும் தெரியாது. கோமுவை போல் வழிதவறி வந்தவர்கள் இந்த ஊரின் வளத்தை கண்டு பேராசைக்கொள்ள..அவர்கள் காட்டு விலங்குகளுக்கு இறையாக வெட்டி வீசப்பட்டனர். இதெல்லாம் நமது கோமுவுக்கு தெரியாதல்லவா. அவன் செய்வதறியாது நின்றான்.
நாட்டு மக்கள் அவனை தூக்கிக்கொண்டு அரசரிடம் சென்றார்கள். அரசரும், அவரது மந்திரியும் அரைமூக்கனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். கோமுவை பார்த்து யார், எப்படி இங்கு வந்தாய் என்று கேட்டார்கள். கோமு நடந்ததை கூறினான். ராஜா அவனுக்கு ஒரு வீடு கொடுத்து அதில் இருக்கச்சொன்னார். அவனும் ஆரம்பத்தில் சற்று பயத்துடன் இருந்தான். ஏனென்றால் அது புது ஊர் அதுவும் அடர்ந்த காட்டிற்குள். மூக்கில்லாத வித்தியாசமான மனிதர்கள். தனக்கு நல்லது செய்கிறார்களா இல்லை தன்னை பலி கொடுக்க நல்ல நாளுக்காக விட்டுவைத்திருக்கிறார்களா என்ற குழப்பத்தில் இருந்தான். மீண்டும் கடவுளை மனதில் திட்டினான்.
சில நாட்கள் கடந்தது அந்த நாட்டு மக்கள் கோமுவிடம் நன்றாக பழகினார்கள் கோமுவும் அவர்கள் ஊரில் சில மாற்றங்களை செய்து அழகாகினான். புதுப்புது உணவு வகைகளை செய்தும் கொடுத்தான், செய்முறையை கற்றும் கொடுத்தான். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தான். வெளி உலகம் பற்றி நிறைய விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டான். ஆனால் அவன் அங்கு இருக்கும் தங்கத்துக்கும், வைரத்துக்கும், அந்த நாட்டின் வளத்துக்கும் ஆசைப்படவே இல்லை ஏனென்றால் அவன் உயிரோடு வாழ்வதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அரசருடனும் கோமு நன்றாக பழக ஆரம்பித்தான். இப்படியே பல மாதங்கள் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா இறந்துவிட்டார். ஊரே கவலையில் ஆழ்ந்தது.
அடுத்து யார் தங்களுக்கு ராஜாவாக இருந்து வழி நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மந்திரி எழுந்தார் மக்களை பார்த்தார் ” நமது நாட்டிற்கு வந்து சில காலங்களே ஆனாலும் நம் அனைவரையும், நம் பழக்கவழக்கங்களையும், நம் முறைகளையும் நன்கு புரிந்துகொண்டு, கற்றுக்கொண்டு மேலும் நம் நாட்டு நலனுக்காக பல திட்டங்களை வகுத்து தந்து, கல்வி என்ற ஒன்றை நம் பிள்ளைகளுக்கு கற்ப்பித்து நமது அரசரின் செல்ல பிள்ளையாக இருந்த முறிமூக்கனை நமது ஊரின் ராஜாவாக்க முடிவெடுத்துள்ளோம் இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்” என்று கூறி அமர்ந்தார். சற்று நேரம் அமைதி நிலவியது. பின் மக்கள் அனைவரும் முறிமூக்கன் ராஜா வாழ்க !! முறிமூக்கன் ராஜா வாழ்க!! வாழ்க!! என கோஷம் எழுப்பினர். நடப்பவை அனைத்தும் கனவா இல்லை நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு திகைத்து நின்றான்.
ஒரு ஊருக்கு தலைவராக ஆசைப்பட்ட கோமு இப்பொழுது காட்டிலிருக்கும் ஊருக்கு ராஜா ஆனான். அன்றிரவு அவன் தனக்கு நடந்தவைகளை நினைத்துப்பார்த்தான். ஒவ்வொரு முறை அவனுக்கு கெடுதல் நடந்த போதும் அவன் கடவுளை திட்டியது ஞாபகம் வந்தது. இப்போது அவனுக்கு புரிந்தது கடவுள் அவனுக்கு கொடுத்த கஷ்டங்கள் எல்லாமுமே அவனை இப்படி ஓர் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பதற்கே என்று. அந்த ஊரில் ஒரு கோவில் கூட அவன் பார்க்கவில்லை என்பதும் அவன் நினைவிற்கு வந்தது. மறுநாள் மக்களிடம் அவன் கற்ற பாடத்தை கூறி ஒரு கோவில் கட்ட ஆலோசனை கேட்டான். மந்திரிகளும் மக்களும் அமோதிக்க உடனே கட்டுமானம் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
அவனது கோமு என்ற பெயர் மாய்ந்து போனது. மூக்கில்லா ராஜ்ஜியத்தில் முறிமூக்கன் ராஜாவாக சிறப்புடன் நல்லாட்சி புரிந்து வந்தான். நல்ல சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும், பொருமையும் இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு கோமு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தான். அவன் நினைத்திருந்தால் தப்பி செல்ல முயன்றிருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யாமல் கிடைத்தை ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் தனது காலத்தை மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல்/செய்யாமல் முடிந்தவரை உதவிகள் செய்து கடவுளை மனதில் திட்டினாலும் அவர் மீது வைத்த நம்பிக்கையை விடாமல் நல்லதே நடக்கும் என்று நம்பியதால் அவனுக்கு நல்லதே நடந்தது.
வாழ்க்கை என்பது நமக்கு கடவுள் வழங்கிய விசித்திர பரிசுப் பெட்டகம். ஆம் ஒவ்வொரு முறை நாம் திறக்கும்போது ஒவ்வொரு அனுபவங்களை கொடுத்து நமக்கு பாடம் கற்ப்பிக்கும் மந்திரம் நிறைந்த பெட்டிகள் கொண்ட பெட்டகமே. நமது வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணமின்றி எந்த காரியமும் நடந்திராது. உதாரணமாக நமது குடுபம்பத்தை கெடுப்பதற்க்கும் நிம்மதியை குலைப்பதற்கும் என்றும் சில பொறாமை கார்கள் நமக்கு பின்னால் அவர்களைப் போன்றே எண்ணமுடையவர்களோடு கைக்கோர்த்து பல வேலைகளை செய்வார்கள். அது அவர்களின் குணம். அவர்கள் மீது கோபப்பட்டு அல்லது ஆத்திரப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை. நமது வாழ்வில் அப்படி ஒரு சங்கடம் நடக்க வேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும். கெட்டவை கெட்டவர்கள் மூலம் தான் நடக்கும். சிலர் கஷ்டப்படும் காலங்களில் கடவுளை திட்டித்தீர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கே நல்லது நடந்தால் நன்றி கூறுபவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருப்பார்கள் நம் கோமுவைப்போல் சிலர். கஷ்டமோ நஷ்டமோ சந்தோஷமோ துக்கமோ எதுவாயினும் நாம் தான் கடந்து ஆகவேண்டும். அவ்வாறு நடப்பவைகளை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும் என்பதை உணர்ந்திடவே வெள்ளரிக்கா பட்டினம் சென்று வந்தோம்.
உங்களின் இந்த வெள்ளரிக்கா பட்டினம் வரையிலான பயணம் இனிதே முடிந்தது.
பசும்பொன் என்ற ஒரு கிராமம். பெயரை கேட்டதுமே உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் அப்படி ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்று. ஆம் பசுமையான வயல்கள் அதிலே பொன்னிற நெல் கதிர்கள். பார்ப்பதற்கு பச்சையும் பொன்னிறமுமான பட்டுக்கம்பளம் விரித்தது போல் இருக்கும்.
இப்படிப்பட்ட கிராமத்தில் ஜான் பல்லன், முழம் பல்லன் என்று இருவர் வசித்து வந்தனர். கிராமத்திற்கு அதன் அழகை கண்டு எப்படி பெயர் வந்ததோ அதே போல் இவ்விருவரின் பற்களை கண்டு இவர்களை சிறு வயதிலிருந்தே அப்படி அழைத்தனர் கிராம வாசிகள். பின்னர் அதுவே அவர்கள் பெயரும் ஆனது.
ஜான் பல்லனுக்கு பற்கள் ஒரு ஜான் அளவிற்கும், முழம் பல்லனுக்கு பற்கள் ஒரு முழம் அளவிற்கும் நீட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் அப்பெயரை பெற்றனர்.
இருவரும் நல்ல நண்பர்கள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர்.
முழம் பல்லன் அவனால் ஆன உதவிகளை ஊருக்கும் ஊர் மக்களுக்கும் செய்து வந்தான். நல்ல குணம் படைத்தவன். அவனால் முடிந்தால் உதவுவான் இல்லை என்றால் ஒதுங்கி கொள்வான். அவனுடைய கொள்கையானது யாருக்கும் உதவாவிட்டாலும் உபத்ரவமாக இருக்கக்கூடாதென்பதே. அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
ஜான் பல்லன் வெளி உலகிற்கு நல்லவன் வேஷம் போடும் வேஷதாரி. சரியான வடி கட்டின கஞ்சன். யாருக்கும் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் முழம் பல்லன் செய்வதை எல்லாம் தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆசாமி. யாரையாவது புகழ்ந்தால் இவனுக்கு பிடிக்காது. அவனை யாராவது புகழ்ந்தால் புலங்காகிதம் கொள்வான். அதிலும் முழம் பல்லனை யாரேனும் புகழ்ந்தாலோ இல்லை நல்லதாக நாலு வார்த்தை சொன்னாலோ இவனுக்கு இருப்புக்கொள்ளாது அவர்களிடம் காரணமின்றி சண்டையிடுவான். அவனுக்கு முழம் பல்லனை ஊரார் போற்றுவது சற்றே பொறாமையை கொடுத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்.
இப்படியாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்த சமையத்தில் முழம் பல்லன் தன் பக்கத்து ஊரில் இருக்கும் நண்பனின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தது. பிரயாணத்திற்கு சாப்பாடு பொட்டலம் எல்லாம் கட்டிக்கொண்டு கிளம்பினான். முழம் பல்லனின் தாய் ருசியாக சமைப்பார்கள். தன் நண்பன் ஜான் பல்லனிடம் கூறி விட்டு புறப்பட்டான். ஜான் பல்லனுக்கு மனதில் ஒரே கொண்டாட்டம் இனி ஊர் மக்கள் அவனிடம் தான் உதவி கேட்பார்கள், சில நாட்கள் இனி முழம் பல்லனை போற்றி பேச மாட்டார்கள் என்று.
அந்தக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்தே செல்வார்கள். இடையிடையே கிடைத்த இடத்தில் இளைப்பாறி பின் மீண்டும் பயணத்தை மேற்கொள்வார்கள். அதுபோல் நம் முழம் பல்லன் ஒரு நதியின் கரையில் இளைப்பாற முடிவு செய்தான். சூரியன் வானுக்குள் மறைந்தார். நிலவு மெல்ல மேலே எழ ஆரம்பித்தார். நாள் முழுவதும் நடந்த களைப்பால் அவனை மேலும் நடக்க அனுமதிக்கவில்லை அவனது கால்கள். எனவே அங்கேயே அமர்ந்தான். முகம், கை, கால்களை கழுவி விட்டு கட்டிக்கொண்டு வந்த புளியோதரையில் கொஞ்சம் சாப்பிட்டு மீதியை மீண்டும் கட்டி பையினுள் வைத்து விட்டு கைகளை நதியில் கழுவினான். மிதமான தென்றல் வீசியது, இரவு உணவும் ஆனது, தனது மேல் துண்டை தரையில் விரித்தான் நன்றாக உறங்கினான்.
நடுஇரவில் ஏதோ சப்தம் கேட்டது. அவன் அசையாமல் கண்களை மட்டும் திறந்து சப்தம் வந்த திசை பார்த்தான்……….தேவதைகள் போல் இரு உருவம் அவன் பையில் இருந்த புளியோதரையை சாப்பிட்டுக்கொண்டிந்ததை கண்டான். ஏதோ பயணிகள் பசியினால் தன் உணவை சாப்பிடுகிறார்கள் இந்த வேளையில் தான் எழுந்தால் அவர்கள் பயத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று எண்ணி அவர்களை காணாதது போல் மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.
பொழுது விடிந்ததும் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவ்விருவரும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. சரி புறப்பட்டுச் சென்றிருப்பார்கள் என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான். நதியில் குளித்து பின் பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்து நீருக்குள் செல்வதற்கு முன் முகத்தை கழுவுவதற்கு கைகளில் நீர் எடுக்க குனிந்தான் நீரில் அவன் முகத்தை பார்த்து அதிர்ச்சியுற்றான். மீண்டும் பார்த்தான் அவனால் நம்ப முடியவில்லை. அவனது முகத்தில் ஒரு மாற்றம். அவனது முழம் பற்கள் எல்லாம் மாய்ந்து அழகான பல் வரிசையுடன் முகம் மிளிர்ந்தது. மேலும் அவன் சாப்பாட்டு பையில் பொன்னும், வைரமும், வைடூர்யமும் மின்னின. மகிழ்ச்சியில் வேகம் கூடியது அவன் நடையில். தன் தாயிடமும் நண்பனிடமும் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது ஊருக்கே திரும்பி சென்றான். கிராம மக்கள் எல்லோரும் எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று வினவினார்கள். அவனும் நடந்தவற்றை ஒளிவு மறைவு இன்றி அப்படியே கூறினான்.
இதை அனைத்தையும் கேட்ட ஜான் பல்லன் உடனே இரண்டு பையில் உணவு பொட்டலங்கள் கட்டிக்கொண்டு நண்பனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு சென்றான்.
அதே நதிக்கரையை பொழுது சாயும் வேளையில் சென்றடைந்தான். ஒரு பையிலிருந்த உணவை உண்டு மற்றொரு பையை சற்று தள்ளி வைத்து விட்டு உறங்காமல் அவ்விரு உருவங்களுக்காக காத்திருந்தான். நள்ளிரவில் சப்தம் கேட்டது மெல்ல திரும்பி பார்த்தான் அதே தேவதைகள் போல இருவர் பையை திறந்து பார்த்தனர் ஆனால் அதில் நல்ல உணவு இல்லாததால் அவர்கள் உண்ணாமல் எழுந்து ஜான் பல்லனை பார்த்து “பாவம் இம் மானிடன் நல்ல உணவும் இல்லை பற்களும் இவ்வளவு நீளமாக இருக்கிறதே” என்று
அவர்களுக்குள் உரையாடினர். இதை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஜான் பல்லனுக்கு கோவம் ஏனெனில் அந்த தேவதைகள் உணவை உண்ணாததால் வைரமும், வைடூரியமும் வைக்கவில்லையே என்று. தேவதைகள் கூறிக்கொண்டனர் “உணவு தான் இல்லை வந்ததற்கு அவன் பல்லையாவது சரி செய்துவிட்டு செல்வோம்” என்று கூறிக்கொண்டே அவன் அருகில் சென்றனர். ஜான் பல்லனுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லையே என்ற கோபம் ஒருபுறம் ..எங்கே இவர்கள் தன் பற்களை முழம் பல்லனை போல் அழகாக்காமல் போய் விடுவார்களோ என்ற எண்ணம் மறுபுறம். இந்த சிந்தனை அவனை பொருமை இழக்க செய்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ….ஜான் பல்லன் சும்மா இல்லாமல் “அவன் பல்லைப்போல எம்பல்லும்” என்று கூற தேவதைகள் சட்டென்று மறைந்தனர். ஜான் பல்லனும் மயங்கி விட்டான்.
மறுநாள் சூரியன் உதயம் ஆகி பல மணிநேரம் ஆனபிறகு எழுந்தான் ஜான் பல்லன். உடனே வேகமாக நதியில் முகம் பார்க்க ஓடினான். நீரில் முகம் பார்க்க குனிந்தான் அதிர்ச்சியுற்றான். முன்னிருந்த ஜான் பல்லுடன் முழம் பல்லும் சேர்ந்து ஒரு அடி நீளத்திற்கு பல் இருந்தது. கவலையில் ஆழ்ந்தான். ஊருக்கு சென்றான். அனைவரும் சிரித்தனர். முன்னாள் முழம் பல்லன் ஓடி வந்து வினவினான்.
விம்மி விம்மி அழுதுகொண்டே ஜான் பல்லன் நடந்தவற்றை கூறினான். இப்பொழுது அழுது என்ன பயன். முன்னாள் முழம் பல்லன் அவனை சமாதானம் செய்தான். அவனுக்கு கிடைத்த வைரம், வைடூர்யங்களை ஜான் பல்லனுடன் பகிர்ந்து கொண்டான். ஜான் பல்லன் தன் நண்பனை கட்டி கொண்டு “நண்பா உன்னைப் போல ஒரு நல்லுள்ளம் படைத்தவன் மீது நான் பொறாமை கொண்டதாலும், அதன் காரணமாக உன்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்ததாலும், இந்த ஊர் மக்கள் உன்னை பழித்து என்னை உயர்த்தி பேச வேண்டும் என்று எண்ணியதாலும் வந்த விளைவு தான் இந்த ஒரு அடி நீள பற்கள். நான் கற்றுக் கொண்ட இந்த பாடத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.” என்று கூறியதுடன் விடாமல் வாழ்ந்தும் காட்டினான்.
ஜான் பல்லனைப் போல் பட்டால் தான் திறுந்துவேன் என்று இல்லாமல் பெரியவர் சொல்கேட்டு அல்லது இது போன்ற கதைகள் கேட்டு /படித்து நம்மை திருத்திக் கொண்டால் வாழ்வில் எந்தவிதத்திலும் நஷ்டப்படாமல் நிம்மதியாக வாழலாம்.
பொறாமை குணம் கொண்டால் நஷ்டமும் சில நேரங்களில் அழிவும் நிச்சயமே. மல்லிகைப்பூ தாமரையை கண்டு பொறாமை கொண்டால் தன்னிடம் இருக்கும் சுகந்தம் என்ற குணத்தை மறக்கின்றது, தன்னை தலையில் சூடி அழகு பார்ப்பார்கள் என்பதை மறக்கின்றது. அதுபோல ஒருவர் மற்றொருவர் மீது பொறாமை கொண்டால் தனது நற்குணங்களை தானே மறந்து விட நேரிடும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தனித்தன்மைகள், குணாதிசயங்கள் எல்லாம் வேறுபடும். அதில் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். அன்னப்பறவை எப்படி பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால்…பாலை மட்டும் குடிக்குமோ அதுபோல நல்லதை உணர்வோம், அதை மட்டும் பின்பற்றுவோம். வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தை கலையை கற்ப்பித்த ஆசான் துரோணாச்சாரியார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு அஸ்வத்தாமன் என்ற ஒரு மகன் இருந்தான்.
குழந்தை பிறந்தவுடன் குதிரை போல் கனைத்ததால் அவருக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். “அஸ்வம்” என்றால் சமஸ்கிருதத்தில் “குதிரை ” என்பது பொருள்.
துரோணாச்சாரியாரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தான் அஸ்வத்தாமரன். குருவாகிய தன் தந்தையிடம் இருந்து எல்லா வித்தைகளையும் கற்று வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.
அஸ்வத்தாமனின் தாய் வில்வித்தையில் சிறந்து விளங்கிய கிருபாச்சாரியாரின் சகோதரி ஆவார். கிருபாச்சாரியார் அஸ்வத்தாமனுக்கும், பாண்டவர்களுக்கும் மற்றும் கௌரவர்களுக்கும் வில்வித்தையில் குருவாக இருந்து பல கலைகளை கற்ப்பித்துள்ளார்.
அஸ்வத்தாமன் தன் தாய் மாமாவிடமும், தந்தையிடமும் பாடங்களை படித்து வில்வித்தையில் பல நுணுக்கங்களையும், ரகசியங்களையும் வேகமாக கற்று தேர்ந்து சிறந்த வில்லாளியாக திகழ்ந்தான்.
பாண்டவர்கள் கௌரவர்களால் பகடை ஆட்டத்தில் தோற்க்கடிக்கப்பட்டு காட்டில் இருந்த சமயத்தில் அஸ்வத்தாமன் கிரேஷ்ணனிடமிருந்து ஏதாவது தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கிருஷ்ணரை பார்க்க சென்றான்.
மாயக்கண்ணனுக்கு அஸ்வத்தாமனின் எண்ணம் தெரியாதா என்ன? இருந்தும் ஒன்றும் தெறியாதது போல் வா அஸ்வத்தாமா வா என்றார்.
தான் ஏதாவது கண்ணனிடம் வாங்கியே தீரவேண்டும் என்று அஸ்வத்தாமன் கூறலானான் ” கிருஷ்ணா என்னிடம் இருக்கும் அஸ்திரங்களில் தலையாயதும் மிக சக்தி வாய்ந்ததும், யார் மீது ஏய்தினாலும் அவர்களை கொன்று விடும் பிரம்மஷீரா அஸ்திரத்தை உனக்கு தருகிறேன் அதற்கு பதிலாக உன்னுடைய சுதர்சன சக்கரத்தை தருவாயா? எனக்காக இதை நீ செய்ய வேண்டும். நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன்” என்றான்.
மனதார கண்ணனை நினைத்து வேண்டினாலே நமக்கு வேண்டியதை கேட்காமலேயே அள்ளித்தருவார் அந்த பரந்தாமர். அவரிடம் போய் நான் ஒன்று தருகிறேன் நீ ஒன்று தா என்று சொன்ன அஸ்வத்தாமனை பார்த்தார் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் தருவாரா இல்லை மறுத்துவிடுவாரா என்ற குழப்பத்தில் நின்றிருந்த அஸ்வத்தாமனை பார்த்து கண்ணனுக்கே உரித்தான புன்முறுவலுடன் “எனக்கு இந்த வர்த்தகம் பிடித்திருக்கிறது. நான் என் சுதர்சன சக்கிரத்துக்கு உன் பிரம்மஷீரா அஸ்திரத்தை மாற்றிக்கொள்ள தயார் ” என்றார். சொல்வதோடு நிறுத்தாமல் “இதோ எடுத்துக்கொள்” என்று அஸ்வத்தாமனிடம் நீட்டினார்.
அஸ்வத்தாமன் சக்கரத்தை எடுக்க முயன்றான் ஆனால் அவனால் கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தூக்க முடியாமல் திகைத்து நின்றான்.
கிருஷ்ணன் அஸ்வத்தாமனை பார்த்து கேட்டார் ” அஸ்வத்தாமா உன்னால் சுதர்சன சக்கரத்தை தூக்கக்கூட முடியவில்லையே பின்னர் எப்படி அதை உபயோகிப்பாய்”
அஸ்வத்தாமனுக்கு பெருத்த அவமானமாகவும், சங்கடமான தருணமாகவும் இருந்தது. செய்வதறியாது, கைகளை பிசைந்து கொண்டிருந்தவனை பார்த்து சிறு புன்னகையுடன் கிருஷ்ணர் கூறினார் ..
” உன்னிடம் இருப்பதை கொண்டு திருப்த்தியாக வாழ பழகு. உன்னிடம் உள்ள ஆயுதத்தை உபயோகித்து சண்டையிட்டு வெற்றி காண முயற்சி செய். என்னுடைய ஆயுதம் உனக்கு மிக கனமானதாகும்.”
இது அஸ்வத்தாமனுக்கு மட்டும் அல்ல நாம் அனைவருக்கும் நல்ல பாடமே.
அடுத்தவரின் பொருள் மீதோ அல்லது அடுத்தவர் வாழ்க்கை மீதோ ஆசை கொண்டு அதே நமக்கு வேண்டும் என்றோ அல்லது அதே வாழ்க்கை நாமும் வாழ வேண்டும் என்று நினைத்தால் முடிவு அஸ்வத்தாமனின் நிலைமை தான் நமக்கும்.