
நம்பிக்கை + விடாமுயற்சி = மானிடம்


ஊரடங்கு உத்தரவுக்கு நன்றி
நீ எங்களை மறந்திடுவாய்
ஆனால் எங்களால் அது முடியுமா?
உன்னை நாடு முழுவதும் பிறப்பித்த போது
பலரின் கேலி, கிண்டல், மீம்ஸ், விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு எங்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கேற்றாய்
உன்னால் உணர்ந்தோம் எங்கள் குடும்பத்தினரை
உன்னால் அறிந்துக்கொண்டோம் ஆடம்பரம் அவசியம் இல்லை என்று
உன்னால் தீயப்பழக்கம் உள்ளவர்கள் கூட ஒரு மாதம் தங்கள் பழக்கத்தை மறந்திருந்தனர்
உன்னால் தெரிந்தது அண்ணாச்சி கடைகளே நம்பகமானது என்று
உன்னால் உணர்ந்தோம் வீட்டு உணவின் அருமை
உன்னால் அறிந்தோம் நேரத்தின் முக்கியத்துவம்
உன்னால் தெரிந்துக்கொண்டோம் பலரின் வெளிவராத திறமைகளை
உன்னால் உணர்ந்தோம் திரைப்படம் மற்றும் திரைப்பட நடிகர்கள் வெரும் பொழுதுபோக்கிற்கே என்று
உன்னால் புரிந்துக்கொண்டோம் மருத்துவம், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், அனைத்து அரசாங்க ஊழியர்களின் அருமை பெருமைகளை
உன்னால் தெரிந்துக்கொண்டோம் அவசியத்திற்கும், அநாவசியத்திற்குமான வித்தியாசம்
எங்களுக்கு இவ்வளவு உணர்த்திய உன்னை மறப்பது எளிதல்ல
உன்னை பிறப்பிக்க காரணமாக இருந்த எதுவானாலும் /எவரானாலும்… அவைகள் / அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது
ஏனெனில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய எண்ணங்களுடன், புதிய யுக்திகளுடன், மறந்துப்போன பழய பழக்கவழக்கங்களை புதுப்பித்து, புதிய வாழ்க்கை முறையை கையாண்டு புதுப்பொலிவுடன் மிளிர ஆயத்தம் ஆகிவிட்டோம்!!!!

மையின் சாரல்கள் பக்கம் வாசகர்களுக்கு எனது வணக்கங்கள். பல நேரங்களில் நமக்குள் பல கேள்விகள் உதித்து நம்மை அவற்றின் விடைகளை தேட வைக்கும். ஏன், எப்படி, என்று நமக்குள் நாமே கேட்டுக்கொண்டிருப்போம். இப்படி நம்முள்ளே பலருக்கும் விடை கிடைத்தும், கிடைக்காமலும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கீழே பகிர்ந்துள்ள குட்டி கதையை படிக்க வேண்டுகிறேன். உங்கள் பதில்களை படிக்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் தோழி.
ராமு ஒரு நாள் பத்து விதைகள் வாங்கி வந்தான். அவற்றை தனித்தனியாக நட்டு வைத்து நீர் விட்டு பராமரித்து வந்தான். சில நாட்களில் எட்டு செடிகள் முளைத்தது. முளை விடாத இரண்டு விதைகளை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து வேறு ஒரு இடத்தில் விதைத்தான். அவ்விரண்டு விதைகளும் செடியாக வளர்ந்தது. ராமு சந்தோஷமடைந்தான்.
முதலில் முளைவிடாத இரண்டு விதைகள் ராமு அவற்றின் இடத்தை மாற்றிய பின் செடியானது. இதிலிருந்து நாம் எதை தெரிந்து கொள்வது…
விதைகள் செடியானது ….ராமுக்கு விதைகள் மேலிருந்த நம்பிக்கை காரணமா அல்லது
விதைகளின் இடம் மாற்றம் காரணமா?

அம்மா என்பவள் தன்னலமற்றவள்
அம்மா என்பவள் அன்பானவள்
பிள்ளைகள் மீது அக்கறையுள்ளவள்
பாசத்தின் அட்சயப்பாத்திரமானவள்
பிள்ளையின் நலனை மட்டுமே சிந்திப்பவள்
தனக்குள் நம்மை பேணி காத்தவள்
அதற்காக என்றுமே எதையுமே எதிர்பாராதவள்
தாய்மை தூய்மையானது
இந்த நாள் மாத்திரமல்ல நம் வாழ்நாள் முழுவதும் வாழ்த்தி வணங்கி போற்றிடுவோம்
வாழ்க தாய்மை! வாழ்க தாய்மார்கள்!
வாழ்க்கை ரசிப்பதற்க்கே….
அதி காலை வானத்தை துளைத்து வரும் முதல் கதிர் முத்துக்கள்
மலைகளின் மேல் சற்று ஓய்வெடுத்து பயணிக்க ஆயத்தம் ஆகும் மேகங்கள்
காலை பனித்துளியில் சிளிர்த்து சோம்பல் முறித்து துளிர்க்கும் செடி, கொடி, மரங்கள்
நாணத்தால் பாதி மலர்ந்தும், இயற்கையால் முழுவதுமாக விரிந்து மலர்ந்த மலர்கள்
கோழியின் கூவல், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சலசலப்பு என்று நாளை துவங்கும் விலங்குகள் மற்றும் பறவைகள்
காலையில் நீர் தெளித்த வாசலில் வெள்ளை அரிசி மாவினால் பளிச்சிடும் அழகான கோலங்கள்
சுட சுட ஆவி பறக்கும் காபி அதனுடன் ஜோடியாக துடிக்கும் செய்தித்தாள்கள்
மகிழ்வுடன் நமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிரும் காலை வணக்கங்கள்
இவை யாவுமே நமது தினசரி மகிழ்ச்சியான தருணங்களின் மணி முத்துக்கள்
வாழ்க்கையை ரசித்தால் நீயும் கவியே
வாழ்க்கை வாழ்வதற்க்கே…..
எளிமையை எழுச்சிக்கு வித்தாக்கி
வலிகளை வலிமைக்கு வித்தாக்கி
பொருமையை அணுகுமுறைக்கு வித்தாக்கி
முயற்சியை லட்சியத்துக்கு வித்தாக்கி
பாசத்தை அன்புக்கு வித்தாக்கி
வாழ்ந்தால் வாழ்க்கை வாழ்வதற்க்கே …
வாழ்க்கை பூச்செண்டு அல்ல அது ஒரு பூங்காவனம்
வாழ்க்கை வணிகம் அல்ல அது ஒரு வரம்
வாழ்க்கை வீழ்வதற்க்கல்ல வாழ்வதற்க்கே
நம் வாழ்க்கை நம் கையில்
ரசித்து வாழ்வோம்! வாழ்வை ரசிப்போம்!
கொரோனா வந்தது
கொத்து கொத்தாய் மனிதர்களை கொண்டு சென்றது
கொரோனா வந்தது
ஓய்வின்றி ஓடிய மனிதர்களை வீட்டுக்குள்ளே முடக்கியது
கொரோனா வந்தது
தீவுகளாய் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி நேரம் செலவிட செய்தது
கொரோனா வந்தது
சாதாரணமாக இருந்து வந்த தும்மல், இருமல், ஜுரம் இன்று அனைவரையும் அச்சுருறுத்துகிறது
கொரோனா வந்தது
மீம்ஸ் மற்றும் டரோல் கிரியேட்டர்ஸுக்கு நன்றாக தீனி போட்டது.
கொரோனா வந்தது
இதுவும் கடந்து போகும் என்று உள்ளம் கூறுகிறது.
சுத்தம், சுகாதாரம், ஒழுங்கான உணவு முறை, ஒழுக்கம், ஆரோக்கியம் இவைகளே நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தால் எதையும் நேர்கொண்டு போராடி வெற்றி பெறலாம்.
ஒற்றுமையினால் சிறகடித்து பறந்தன பறவைகள் வேடனின் வலையிலிருந்து
ஒற்றுமையினால் சுதந்திரமாக நீந்தின மீன்கள் மீனவனின் வலையிலிருந்து
வேர்-மண் ஒற்றுமையினால் வானளவு ஓங்கி வளர்கிறது மரங்கள்
உடல் பாகங்களின் ஒற்றுமையினால் நடமாடி கொண்டிருகின்றன அனைத்து உயிர்கள்
ஒற்றுமையால் பலன்கள் பலகோடி என்றுனர்ந்தும் மானிடர்கள் ஒற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது ஏன்!!!!
ஒன்றுபடுவோம் உயர்ந்திடுவோம்.
அன்பை சுரப்பது தான் இதயம்
அன்பு சுரக்கா விட்டால் அழிந்திடும் மனிதநேயம்.
இதயமே உன்னை ஆராதிக்கிறேன்
உன்னாலே அன்பை சுவாசிக்கிறேன்.
இதயமே நீ பழுதானால் உண்டு மாற்று அறுவை சிகிச்சை
அதனால் நீ விடு உன் பெரும் மூச்சை.
இதயமே நீ காதலுக்கு ஒரு போதும் சொந்தம் இல்லை
இருந்திருந்தால் அம்பு விட்டு உன்னை கிழித்து கொடுப்பார்களா தொல்லை.
இதயமே உன்னை பேணி காப்பவர்களுக்கு நீ சிறந்த உழைப்பாளி
நீ இருப்பதை மறந்து வாழ்பவர்களுக்கு கொடுப்பாய் வலி
இதயமே உன்னை மக்களவையில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தாகிவிட்டது
தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவருக்கும் தெரிந்திடும் நீ இருப்பது.
சீனாவில் பிறந்து தழைத்த சீன அழகியே
ஐரோப்பாவில் குடி புகுந்து மிரளவைத்தாயே
அமேரிக்காவிர்க்கு இடம்பெயர்ந்து உன் இறக்கைகளை விரித்து சுதந்திர தேவி போல் பறக்கிறாயே
பல நாடுகள் சுற்றி உன் இனத்தை விருத்தி செய்து பெரிய எதிர்பார்ப்புடன் இந்தியா வந்தாயே
நீ செல்லும் வழியெல்லாம் ..மக்களை புதிய யுக்திகளை கையால வைக்கிறாயே
உன்னால் மனித இனத்திற்கு உயிர் இழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சசியே
அனைத்து சொந்தங்களும் உன்னிடமிருந்து அண்டை நாடுகளுக்கு குடியேற வைத்தாயே
முற்றிலுமாக அழிக்க நினைத்து தன் தலையிலேயே கையை வைத்துக்கொள்கிறாயே
அழகியே அடுத்தவர்களை அழித்து நீ மட்டும் வாழவேண்டும் என்று நினைத்தாயே
தானும் வாழவேண்டும் அடுத்தவர்களையும் வாழவிடவேண்டும் என்பதை நாடுகள் ஒருவரொக்கொருவர் உதவுவதை பார்த்தாவது உணர்வாயே!!!!
முகவரி வேண்டும்
நாம் வசிக்கும் இடத்திற்கு
முகவரி வேண்டும்
நாம் வணங்கும் இறைவனின் கோயில்களுக்கு
முகவரி வேண்டும்
நம் திறமைகளுக்கு
முகவரி வேண்டும்
நாம் சென்றடைய வேண்டிய இலக்குகளுக்கு
முகவரி தேடி அல்லது முகவரியின்றி வாழும் மனிதர்களுக்கு
அவர்களின் தன்னம்பிக்கையே சிறந்த முகவரி.
மீன்களின் முகவரி குளம் அல்லது ஏரி
கடல்சார் உயிர்களின் முகவரி கடல்
மிருகங்களின் முகவரி காடு
பறவைகளின் முகவரி மரம்
அவைகள் யாவும் நமது முகவரியை அழிக்க நினைத்ததில்லை
நாம் நமது முகவரிக்காக இவைகளின் முகவரியை அழிக்க நினைத்ததால் இயற்கை அன்னையின் சீற்றத்துக்குள்ளாகியுள்ளோம்
இதை உணர்ந்து வாழ்வோம்! வாழவிடுவோம்!