அத்தியாயம் 40: மலர்க்கணைகளும் மர்ம அறையும்!

பல கேள்விகளை தாங்கியவளாய் விஷாலை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை எதேச்சையாக கவனித்த விஷால் வேகமாக கையசைத்து “டூ மினிட்ஸ்” என்று சைகை காட்ட, உடனே, ப்ளூ தன்னை காலையில் எழுப்பும் போது அவள் சொல்லும் அதே “டூ மினிட்ஸ்” இப்போது அவளுக்கே எதிரொலித்ததை கேட்டதும் ப்ளூ வின் நினைவுகள் சக்தியின் மனக்கண்ணில் நிழலாடியது. அவள்  ஏதோ சிந்தனையில் மேலே பார்த்தபடி அமர்ந்திருந்ததை கண்ட விஷால் தனது கைபேசியில்,

“சரி. சரி. ஐ வில் டூ தட். 

 ஷார்ப் ஏயிட்டோக்ளாக் அங்க இருப்போம். 

பை ஃபார் நவ்.”

என்று பேசிக்கொண்டிருந்த மொபைல் அழைப்பை துண்டித்து விட்டு வீட்டனுள் நுழைந்தான். அவன் உள்ளே வந்ததை கூட கவனிக்காதவளாய் உட்கார்ந்திருந்த சக்தியை குரலுயர்த்தி அழைத்தான் விஷால். அவனின் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து வருவதை போல் மெலிதாக கேட்க, அதற்கு எவ்வித அசைவும் இன்றி இருந்தவளருகே சென்றமர்ந்து அவள் கன்னங்களை தனது இரு கைகளுக்குள் வைத்துப் பிடித்துக் கொண்டு மீண்டும் அழைக்க…சட்டென சக்திக்கு அவனின் குரல் மிக அருகாமையில் கேட்க நெட்டி எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது விஷால் அவளிடம்,

“ஹேய் தி! 

என்ன ஆச்சு?

ஏன் இப்படி பிரம்ம பிடிச்சா மாதிரி உட்கார்ந்திருக்க?”

“ம்…நீ…டூ மினிட்ஸ்ன்னு சொன்னதும்,

எனக்கு என் ப்ளூ ஞாபகம் வந்துடுத்து.

அவன் என்னை காலையில எழுப்பும் போது நான் டூ மினிட்ஸ்ன்னு சொல்லுவேன்…

அவனும் கரெக்ட்டா டூ மினிட்ஸ்ல மறுபடியும் எழுப்புவான். 

அந்த நெனவெல்லாம் வந்ததுல…

அப்படியே இருந்துட்டேன் போல.”

“சரியா போச்சு போ.”

“சரி…யாரு ஃபோன்ல.

ஏன் அவ்வளவு வேகமா வெளில போன?

நீ பேசும் போது உன் முகம் ஒரு மாதிரி டென்ஸ்டா இருந்துதே ஏன்?

என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லு.

இல்லாட்டி ஃபைன் நோ ப்ராப்ளம்.

நான் உன்னை அது விஷயமா தொந்தரவு செய்ய மாட்டேன்.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.

நம்ம ஜேம்ஸ் தான்.”

“அவரா!

ஆமாம்… அவரு இப்ப தானே நம்ம வீட்டுலேந்து கிளம்பி போனார். 

அதுக்குள்ள எதுக்கு கால் செஞ்சார்!”

“அவன் நம்மளுக்கு டின்னர் குடுக்கணுமாம்.

இன்னைக்கு அவன் வீட்டுக்கு டின்னருக்கு வர முடியுமான்னு கேட்டான்.”

“அதுக்கெதுக்கு நீ அவ்வளவு பதற்றமா வெளில போய் பேசணும்.

இங்கேந்தே பேசிருக்கலாமே!”

“இல்ல தி. 

அவன் ஃப்ர்ஸ்ட் தனியா பேசணும்ன்னு மெஸேஜ் அனுப்பினான்.

அதைப் பார்த்ததும்…

என்னடா இப்ப தானே போனான் அதுக்குள்ள என்ன இப்படி ஒரு மெஸேஜ்ன்னு குழம்பிட்டேன்.

அது தான் என் முகத்துல பிரதிபலிச்சிருக்கு.

அப்புறம் விஷயத்தை கேட்டதும்…

நானும் அவன்கிட்ட இதையே தான் சொன்னேன்.

உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொன்னான். 

உன்னை எப்பவும் போல லீ கார்னர் கூட்டிட்டு போறதா சொல்லி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னான். 

ஐ திங்க் அங்க உன்னோட ஃப்ரெண்ட் ருத்ராவும் வரப்போறா போல…

அதையும் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்.”

“சரி…எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்ச உன் ஃப்ரெண்டோட ஃப்ளான் எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டியே! 

இது நியாயமா?”

“உன்கிட்ட மறைக்க எனக்கு மனசு வரலை தி.

நான் அவ்வளவு சின்சியர் இன் மை ரிலேஷன்ஷிப்.”

“அட அட அட…

சூப்பர்.

உன் ஃப்ரெண்டோட விஷயத்தை சொல்லி…

என்கிட்ட ப்ரௌனி பாயிண்ட்ஸ் வாங்கிக்கற…

இரு…இரு…நான் ஜேம்ஸ்ட்ட சொல்லறேன்.”

“தி…

ப்ளீஸ் வேண்டாம் மா…

அப்புறம் அவன் இன்னைக்கு நைட்டு எனக்கு அவன் வீட்டுல இடம் கொடுக்காம போயிட போறான்.

அப்புறம் நான் ராத்திரி ஃபுல்லா உன் வீட்டு வாசல்ல தான் தூங்கணும்.”

“ஓகே ஓகே…

சொல்லமாட்டேன்.

கவலை வேண்டாம்.

எத்தனை மணிக்கு கிளம்பணும்?”

“ஒரு எட்டு மணிக்கு வரச் சொல்லிருக்கான்.”

“ஓ இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே…

சரி நான் இந்த காஃபி கப்ஸ் அன்ட் ஜூஸ் கிளாஸ் எல்லாத்தை டிஷ்வாஷர்ல வச்சுட்டு கிட்சனை சுத்தம் செய்துட்டு வரேன்.”

என்று சக்தி சொன்னதும் விஷாலும் அவளுக்கு உதவுவதாக சொல்லி எழுந்து சென்று இருவருமாக வேலைகளை செய்ததில் அங்குமிங்குமாக இடித்துக்கொண்டனர்…

மெல்ல காமன் தன் மலர்க்கணைகளை எய்திட எட்டிப்பார்த்தான். 

ஆனால் சக்தி சட்டென கடிகாரத்தை நிமிர்ந்து நேரம் பார்க்க திரும்பியதில் காமன் மலர்க்கணைகள் இருவர் மீதும் படாமல் ஓரமாக சென்று தரையில் விழுந்தது. 

அடுத்து ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான் காமன். 

கடிகாரத்தில் ஆறரை என்ற நேரம் காட்ட, 

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே என்றுக் கூறிக்கொண்டே இருவரும் ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தனர். 

விஷால் டிவியை ஆன் செய்து  ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்ததைப் பார்த்த சக்தி,

அவன் கையிலிருந்த ரிமோட்டை தட்டிப்பரித்து அவளுக்கு விருப்பமான சேனலை போட முயன்றாள்.

அப்போது விஷால் அவளிடமிருந்து ரிமோட்டை வாங்க முயன்றான்…

அத்தகைய ரிமோட் விளையாட்டின் போது…

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த காமன் சற்று அவன் விளையாட்டை துவங்க நினைத்து இருவரையும் சற்று தூண்டிவிட, 

இருவரும் ஒருவருக்கொருவர் மிக அருகில் நெருங்கியதும்…

இருவரின் இதயத்துடிப்பும் மடமடவென பங்கு சந்தையின் சென்செக்ஸ் கிடுகிடுவென ஏறுவது போல் ஏறிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த காமன்…

அவனுக்கான அன்றைய டார்கெட்டை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்துக் கொண்டிருக்கையிலே…

சட்டென மென்மையான கூடலினூடே கை தவறி…

சக்தி ரிமோட் பொத்தானை அழுத்த டிவியில் ஃப்ளபர் என்ற ஆங்கிலப்படம் பளிச்சிட, அதைப் பார்த்ததும் சக்தி விஷாலின் பிடியிலிருந்து விலகி…

“ஊப்பஸ்! சாரி வி.”

என்று எழுந்து நிற்க உடனே விஷால் அவள் கைகளைப் பிடித்து,

அவளை தன்னருகே அமர வைத்து அவளின் வலது கையை மெல்ல வருடிக்கொடுத்துக் கொண்டே. 

“இட்ஸ் ஓகே தி.

ஐ ஆம் சாரி டூ”

என்று இருவரும் மாறி மாறி சொல்லி அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவர்களை கடிகாரம் ஏழு என்று மணியடியத்து தட்டி எழுப்பியதும் காமனின் மலர்க்கணைகள் மாய்ந்து போயின, காமனும் காணாமல் போனான். 

சக்தி அவள் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு மெல்லிய சிரிப்போடு உதட்டை மெல்ல கடித்து…

“ஐய்யோ சக்தி! 

ச்சே…

ஏன்!!”

என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டே…

கண்ணாடி முன் நின்று தன்னையே தலைமுதல் கால் வரை பார்த்து…

“வேண்டாம் தி.

வேண்டாம்” என சொல்லிய பின் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்த விஷால் தன் ‘தி’ சென்ற வழியையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் இருந்து விட்டு…

பின் டிவியை ஆஃப் செய்து, 

இரு கைகளையும் மேலே உயர்த்தி, 

“உஃப்”

என்று பெருமூச்சு விட்டான். எதையோ நினைத்துக் கொண்டே தனக்குத்தானே சரித்துக் கொண்டிருக்கையில்…அங்கு வந்த சக்தி தனது தொண்டை கரகரப்பை சரி செய்வது போல இருமினாள். அதைக் கேட்டதும் திரும்பி பார்த்த விஷால்,

“ஓ! வாவ்! 

தி! யூ லுக் கார்ஜியஸ்.”

என்று கூறிக்கொண்டே அவளருகே சென்றவன் சடாரென அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவளின் வலது கையை பிடித்து முத்தமிட்டு,

“வில் யூ மேரி மீ” 

என்று கேட்க…அதற்கு சக்தி…

“ஹலோ என்ன மறுபடியும் முதல்லேந்தா!”

என்று சொல்ல இருவரும் புன்னகையித்துக் கொண்டனர். 

“தி…

இன்னைக்கு நைட் நான் இங்கேயே தாங்கிக்கலாமா?”

என்று கேட்ட விஷாலிடம் ஹாலின் மூலையில் இருந்த ப்வுடர் ரூமை கைக்காட்டி…

“போய் ரெடியாகி வா வி.

டைம் ஆயிடுத்து. 

கம் ஆன்.

கோ நௌ.” 

எனக் கூறிக்கொண்டே விஷாலை தள்ளிக்கொண்டு போய் பவுடர் ரூமுக்குள் அவனை அனுப்பிவைத்து விட்டு ஹாலின் லைட்டை ஆன் செய்தாள். 

விஷால் ரெடியானதும் கதவைப் பூட்டிவிட்டு இருவருமாக விஷாலின் காரில் ஏறி ஜேம்ஸ் வீட்டுக்குச் சென்றனர். 

அவர்கள் சென்ற வழியில் ஓரிடத்தில் சக்தி காரை நிப்பாட்ட சொன்னாள். விஷாலும் எஜமானியின் உத்தரவிற்கு இணங்கி காரை பார்க் செய்தான். காரில் இருந்து இறங்கிய சக்தி “போல் பட்டீசரி” என்றொரு ஃபேமஸான ஃப்ரெஞ்ச் பேக்கரிக்குள் சென்று மேக்ரோன்கள் வாங்கிக்கொண்டு அப்படியே பக்கத்து கடையான இந்தியன் ஸ்டாருக்குள் சென்று நமது இந்திய பலகாரங்களான மிக்ஸ்சர், ஜாமுன், முறுக்கு போன்றவைகளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவளிடம் விஷால்,

“என்னது இது? தி!

அவன் வீட்டுல அவன் மட்டும் தான் இருக்கான்.

எதுக்கு நீ இப்போ இவ்வளவு எல்லாம் வாங்கிருக்க?”

என்று கேட்க அதற்கு வாங்கி வந்ததை காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு முன் இருக்கையில் சென்றமர்ந்த சக்தி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த விஷாலைப் பார்த்து,

“ம்… இப்போ போகலாம்.”

“சரிங்க மேடம்.

ஆமாம் நான் கேட்டதுக்கு பதிலேதும் உண்டா?”

“வி…

நாம ஒருத்தர் வீட்டுக்கு மொதோ தடவையா போறோம்.

எப்படி கைவீசிண்டு போறது?

அதுதான் வாங்கினேன்.”

“ம்…ஓகே ஓகே.

இதுக்கு தான் வீட்டுக்கு பெண்கள் தேவைன்னு சொல்றாங்களா?”

“எதுக்கு ஸ்னாக்ஸ் வாங்கவா!”

“இல்லம்மா…

நானும் தான் அன்னைக்கு ஜேம்ஸ் வீட்டுக்கு மொதோ தடவையா போனேன், 

ஆனா எனக்கு இது தோணலையே!

அதுவுமில்லாம உன் வீட்டுக்கும் மூணு தடவை வந்துட்டேன்…

இதுவரை ஒண்ணுமே வாங்கிண்டு வந்ததில்லை…

அதுனால சொன்னேன்.”

“எல்லாத்துக்குமா சேர்த்து கல்யாணதுக்கு அப்புறம் வாங்கிக்கறேன். சரியா.”

“ம்…நான் குடுக்க தயார்.

நீயும் வாங்கிக்க தயாரா இரு.

இதோ ஜேம்ஸ் வீடு வந்துடுத்து.

அதோ அந்த வீடு தான்.

வா ‘தி’ போகலாம்”

என்று காரை ஜேம்ஸ் வீட்டருகே இருந்த கார் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு இருவருமாக ஜேம்ஸ் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தனர். ஜேம்ஸ் வந்து கதவை திறந்து இருவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றான். 

சக்தி வாங்கி வந்த ஸ்னாக்ஸை ஜேம்ஸிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்ட ஜேம்ஸ் விஷாலைப்பார்த்து,

“டேய் உன்னை சொல்லாம கூட்டிட்டு தானே வரச்சொன்னேன்.”

என்று சொன்னதும் சக்தி தன் தலையில் மெல்லமாக வலது கையால் தட்டிக்கொண்டே விஷாலைப்பார்த்து தன் இரு கைகளால் இரு காதுகளையும் பிடித்தவாரு “சாரி” என்று சொல்ல. அதை கவனித்த ஜேம்ஸ், 

“இட்ஸ் ஓகே சக்தி.

உங்க சாரியை வேஸ்ட் பண்ணாதீங்க.”

“என்ன ருத்ராவும் வருவான்னு விஷால் சொன்னானே!

அவளை காணமே!”

“வருவாங்க வருவாங்க.

வாங்க நாம அந்த ரூமுக்குள்ள போய் உட்காரலாம்.

அங்க இட் வில் பி கோசி அன்ட் கம்ஃபர்டபுள்.

அன்ட் அங்க தான் எல்லா ஸ்னாக்ஸ் அன்ட் ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாம் உங்களுக்காக அரேஞ்ச் செஞ்சி வச்சிருக்கேன்.

பட் நோ மொபைல்ஸ் அளௌடு.

சோ உங்க மொபைல்ல இங்க இந்த டிரேல வச்சுட்டு வாங்க.”

என்று ஜேம்ஸ் கூறியதும் விஷாலும் சக்தியும் அவரவர் மொபைல்களை டிரேவில் வைத்துவிட்டு அவன் கைக்காட்டிய ரூமுக்குள் சென்றனர். மூவரும் உள்ளே சென்றதும் ஜேம்ஸ் அந்த அறையை சாற்றி தாழ்ப்பாளிட்டான். அங்கு நடந்தவைகளை பார்த்து குழம்பிய சக்தி, கதவைப் பூட்டிய ஜேம்ஸை, தன் முகத்தில் “ஏன்” என்றொரு கேள்க்குறியோடு பார்த்துக் கொண்டே அறையை நோக்கி திரும்பினாள், சட்டென்று அவளுக்கு தலைவலிப்பது போல் இருக்க தன் இரு கைகளால் வெற்றியைப் பிடித்து அழுத்திக்கொண்டே பார்த்தாள்…

அந்த அறையில் இன்னுமொரு ஆள் அமர்ந்திருந்தது போல் அவளுக்கு தோன்ற, கண்களை கசக்கிக்கொண்டு நன்றாக பார்த்தாள். அப்போது அவளருகே இருந்த விஷாலின் மேல் சாய்ந்தவாரு அவனிடம்…

“இவர் எப்படி இங்கே? ஏன்?

எனக்கு என்னமோ தெரியலை வி…

சடன்னா தலைவலிக்கறது.”

என்று சொல்ல அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தான். ஜேம்ஸ் ஏதோ ஜூஸ் ஒன்றை எடுத்து வந்து சக்திக்கு கொடுக்கும் படி விஷாலிடம் சொல்ல, விஷாலும் அந்த ஜூலை எடுத்து சக்தியிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். அது என்ன ஜூஸ் என்றும் அது ஏன் தனக்கு மட்டும் தரப்படுகிறது என்றும் கேட்டாள் சக்தி.

தொடர்வாள்…

Leave a comment