“குற்றம் குற்றமே”

🎬 சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள்
கருத்துகளை விதைக்கவும், மாற்றங்களை உருவாக்கவும் வல்லமை கொண்டவை. அதே நேரம், கருத்து சொல்லுகிறோம் என்ற பெயரில்
❌ தவறான எண்ணங்கள் அல்லது 👶 குழந்தைகள் மற்றும் 👥 சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள்
வெளிப்படுத்தப்படும் போது,
அவற்றை “போட்டி” என்ற பெயரில் 🌟 புகழ்ந்து, பாராட்டி 🏆, பரிசளித்து 🎁 ஊக்குவிப்பது நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இந்த உண்மையைச் சொன்னால்,
“பூமர்” 🌿,
“பழைய பஞ்சாங்கம்” 📜,
“பாராட்டத் மனமில்லாதவர்” 😐, “முற்போக்கு சிந்தனை இல்லாதவர்” 🤔
என்ற முத்திரைகள் உடனே குத்தப்படும்.

ஆனால் முகஸ்துதிக்காக 😏
“சோ ஸ்வீட்” 🍬, “க்யூட்” 😍,
“வாவ்” 😲, “ஆஹா” 😄, “ஓஹோ” 😮 என்று புகழ்ந்து தள்ளிவிட்டு,
பின்னால் சென்று
“இதெல்லாம் ஒரு சினிமாவா / நாடகமா / நிகழ்ச்சியா / போட்டியா!” 🎭
“இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” 🤷‍♂️
என்று சொல்லிக்கொள்பவர்களே,
இந்த நவநாகரீக சமுதாயத்தில் அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களாக💡 கருதப்படுகின்றனர்.

🔥 “தீயது தீ போலப் பரவும்.
நல்லதும் நீர் போலப் பரவ வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது” 🌊

எனவே, இந்த சமூக ஊடகங்கள் நிறைந்த காலத்தில், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம், எப்படி வெளிப்படுத்துகிறோம்,
எதைப் பரப்புகிறோம் என்பதில் நமக்குள்ள பொறுப்பை 📌
சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அவசியம் அத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்களை சேர்ந்த அனைவருக்கும் இருத்தல் வேண்டும்.

திரை 🎬 அல்லது மேடையை 🎭 விட,
வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்குவாதிகளின் 💡 நடிப்புதான்
உண்மையில் அபாரம் 👏👏👏

தவறான கருத்துக்கு மன்னனே பரிசளிக்க இருந்த போதும்,
“குற்றம் குற்றமே” ⚖️ என்று
சிவபெருமானிடமே துணிந்து சொன்ன
நக்கீரர் 🏛️ இருந்த மண்ணில்…
இன்று
அத்தகைய நக்கீரர்கள் மறைந்துவிட்டனரா⁉️,
இல்லை
உண்மையைச் சொன்னால் சுட்டுப் பொசுக்கி விடும் 🔥
நெற்றிக்கண்கள் 👀👀👀👀
அதிகமாகிவிட்டனவா⁉️

💭 சிந்தனை செய் மனமே…

Leave a comment