
எப்படி…
படித்தவர்களை விட படிக்காதவர்/ படிப்பை பாதியில் நிறுத்தியவர் தான் பெரிய தனவான்களாகியிருக்கிறார்கள் எனவே படிப்பு முக்கியமில்லை என்ற ஒன்றை பரப்பி வந்தனரோ!
அதே போல்…
காசு பணம் பதவி வீடு வாசல் இருந்து என்ன? ஒரு இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதையும் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறான கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
படிப்பின்றி உயர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காமல் இருக்கிறார்களா?
இல்லை இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதற்காக பொன் பொருள் வீடு வாசல் என்று வாழாமல் இருக்கிறார்களா?
பின்பு எதற்கு இப்படி ஒரு கூற்று உலா வருகிறது?