
இசைஞானி இளையராஜா அவர்களின் வயதோ எழுபத்து ஆறு
அவரின் இசையோ என்றும் பதினாறு
அன்பு, பாசம், காதல், அக்கறை, பொறுப்பு, ஒற்றுமை என்ற வகையிலும்
குரோதம், கோபம், துக்கம், பொறாமை, அதிர்ச்சி என்ற வகையிலும்
கிண்டல், கேலி, வம்பு, சண்டை, போட்டா போட்டி என்ற வகையிலும்
கும்மி, கதக், பரதம், குச்சிப்புடி, கதகளி, கரகம் என்ற வகையிலும்
அவர் இசையமைத்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம்
அவையனைத்தும் நம் மனதில் பிடித்தது நீங்கா இடம்
இசையே
இசைஞானி இசைத்ததால் தான்
இன்னிசை என்றானதோ!
இசைஞானி பாடியதால்
பாட்டும்
தென்மேற்கு பருவ காற்றாக வீசியதோ!
பூ மாலையே தோள் சேர வா
போன்ற பல பாடல்கள் நம் தோள்களை வருடி சென்ற இளம் தென்றல்
ஒரு பூங்காவனம் புதுமணம் போன்ற பல பாடல்கள் நம்மை அமர்த்தியது இசை என்னும் பூங்காவனத்தில்
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல,
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது,
தென்றல் வந்து என்னை தொடும்,
சுந்தரி கண்ணால் ஒரு சேதி,
தூங்காத விழிகள் ரெண்டு,
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே,
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு,
வானிலே தேன்னிலா,
இது ஒரு பொன் மாலை பொழுது,
பூங்கதவே தாழ்திறவாய்,
கண்மணியே காதல் என்பது கற்பனையோ,
இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது,
வழிநெடுக காட்டு மல்லி
போன்ற பல ஆயிரம் பாடல்களின்
இசையால்
நம்மோடு என்றும் உறவாடும்
ஓர் ஞானி
நம் இசைஞானி அவர்கள்.
இசை, மொழி, குரல் ஒன்றென கலந்தால் அது பாட்டு
அத்தகைய பாட்டுக்கு ஓர் தலைவர் அவர்
மொழியின்றி, குரலின்றி
மௌன ராகம், புன்னகை மன்னன், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி போன்ற படங்களின்
பின்னணி இசையால் நம்மை கட்டிப்போட்டவர்.
இன்றும் நம்முள் பலரின் கைபேசியின் அழைப்பு ஒலியாக ஒலித்துக் கொண்டிருக்கச் செய்தவர்.
நம் மனதுக்கு மருந்தாக
நம் துக்கத்துக்கு துணையாக
நம் தூக்கத்துக்கு தூணாக
நம் மகிழ்ச்சிக்கு மத்தாப்பாக
நம் வீட்டு விஷேங்களுக்கு விருந்தாக
நம் நட்புக்கு நந்தவனமாக
நம் அன்புக்கு அரவணைப்பாக
அவர் இசை ஒலித்து கொண்டிருந்தது
ஒலித்து கொண்டிருக்கிறது
இந்த பிரபஞ்சம் உள்ள வரையில் இசைஞானியின் இசை எங்கும் என்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.
வகை வகையாக ஆயிரம் இசை வந்தாலும்
இசைஞானியின் இசையை மறைக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது🛑