அத்தியாயம் 33: விருந்தோம்பலும் விசாரணையும்

சக்தி மனதில் நடந்த பட்டி மன்றத்தின் முடிவு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தீர்ப்பானதும் அவள் அதை ஜேம்ஸிடம் இருந்து தப்பிக்க அவனிடம் குக்கீஸ் தட்டை நீட்டி மீண்டும் குக்கீஸ் எடுத்துக்க சொல்லி வலியுறுத்திக் கொண்டே,

“அது இருக்கட்டும் ஜேம்ஸ் அதை உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன். சொல்லுங்க. சரி நீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட முதல் கணவர் அவங்களை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்கார்னு சொன்னீங்களே அது எப்போ நடந்த சம்பவம்?”

சக்தி அந்த பொக்கிஷம் விஷயத்தை தன்னிடமிருந்து மறைக்க நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளை அவள் போக்கில் சென்று விஷயத்தை தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து,

“மொத்தத்துல அந்த பொக்கிஷம் என்னன்னு சொல்ல மாட்டீங்க.
ஆங்! சரி இப்போ அதை விட்டு விடுவோம். 
என்ன கேட்டீங்க சக்தி?
மிஸ்ஸர்ஸ் டேவிட் சம்பவம் எப்போ நடந்ததுன்னு தானே!
அது நடந்து ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏன்! நீங்க நியூஸ் பேப்பர்ல எல்லாம் பார்த்திருப்பீங்களே.”

“எங்கேந்து! நான் இந்த ஊருக்கு வந்தது எம்.எஸ் படிக்க.
அதுக்கப்புறம் வேலை.
அப்படி இப்படீன்னு பார்த்தா…
நான் இந்த ஊர்ல கடந்த அஞ்சாறு வருஷமா தானே இருக்கேன்”

“ம்…அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”

“ஏன் அப்படி அந்த மனுஷன் செஞ்சாறாம்?”

“சக்தி…அதுவும் அரசியல் தான்.”

“ஓ! சரி நேத்து அவங்க வீட்டு பின்வாசல் கதவு ஏன் தொறந்து இருந்துச்சு?
அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“ம்‌…அது அந்த வீட்டில் வேலை பாக்குற அந்த ஜான் பையனின் அஜாக்கிரதையால நடந்திருக்கு.”

“அப்படியா!
அவன் என்ன செஞ்சான்?”

“வேலையை முடிச்சிட்டு பின் வாசல் கதவை பூட்ட வந்தவனுக்கு அவன் கேர்ள் பிரெண்ட் கிட்டேந்து கால் வந்திருக்கு…
அய்யா அதுல முழுகி கதவை திறந்து போட்டுட்டு அப்படியே ஃபோன்ல பேசிகிட்டே அவன் கேர்ள் பிரெண்ட பார்க்க போயிருக்கான்.”

“அச்சச்சோ! அப்போ நான் கேட்ட அந்த சத்தம்?”

“வீட்டு கதவு திறந்து இருந்ததும், ஒரு பெரிய பூனை வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு…
அந்த நேரம் பார்த்து நீங்க வாசல் கதவை தட்ட…
அது பயந்து வந்த வழியே வெளியே ஓடிருக்கு.”

“சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்தது?”

“எல்லாம் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வீட்டு சிசிடிவி கேமரா மூலமா தான். அப்புறம் அந்த வேலைக்கார பையன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க.
உண்மை வெளிய வந்துது.”

“சூப்பர்.
நானும் எங்க ஓனர் கிட்ட சொல்லி சிசிடிவி பிக்ஸ் பண்ண சொல்லணும்.
எவ்வளவு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு பாருங்க.”

“அது என்னமோ உண்மை தாங்க.”

“சரி சரி பார்த்தீங்களா நான் கேட்ட கேள்விக்கு உங்களை பதில் சொல்ல விடாம அடுத்த கேள்வி கேட்க போய் மொதோ கேள்வி பதில் இல்லாம இருக்கு. அதையும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…”

“ஓ மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் சார்ல்ஸ் விஷயமா!! அது தான் சொன்னேனே அதுவும் அரசியல் தான். ஆனா அதுலேந்து எப்படியோ தப்பிச்ச மிஸ்ஸர்ஸ் சார்ல்ஸ் பின்னாளில் டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் தான் இப்போ அவங்களோட கணவரும் அவங்களோட கல்லூரி நண்பருமான மிஸ்டர் டேவிட்டை கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க.”

“அம்மாடியோ!
ஏதோ பெரிய இடம்ன்னு நாம நினைக்கிறோம் ஆனா அதுக்குள்ள இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு இல்ல!”

“ஆமாம் சக்தி எல்லார் வாழ்க்கையும் அப்படி தான்.
வெளியே தெரியுறது உண்மையான வாழ்க்கை இல்ல.
அவங்கவங்க பணக்காரன், ஆரோக்கியமானவன், ஆசிர்வதிக்கப்பட்டவன்,  அன்பானவன், உதவிபுரிபவன் அப்படின்னு அழகு அழகான முகமூடிகளை போட்டுட்டு வலம் வந்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்.
எனக்குள்ள எவ்வளவு புதைந்து கிடக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதே போல் உங்களுக்குள்ள எவ்வளவு புதைந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  ஏன்னா நாம ரெண்டு பேருமே முகமூடி போட்டுட்டு தான் பழகறோம்.”

“ம்…ஒரு விதத்துல பார்த்தா நீங்க சொல்லறது சரிதான்.
ஆனா பொதாம் பொதுவா எல்லாரும்ன்னு நாம சொல்லிட முடியாது.
சொல்லவும் கூடாது.
நமக்குள்ளேயும் உண்மையான முகத்தோடு வாழறவங்க இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சரி நீங்க சொன்ன விபத்து வருடம் அப்பறம் மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த சார்ல்ஸ்க்கும் நடந்த கல்யாணம் எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா அவன் தான் இவனா இருப்பானோன்னு எனக்கு தோணுது.”

“எவனா! எவன்?”

“என்ன நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க?”

“இல்ல புரியலை சக்தி.
நீங்க கேட்டத வச்சு தான் நான் கேட்டேன்.
வேற யாரு உங்ககிட்ட கேட்டா?”

“அது…அது வந்து.
ஆங்!
நான் கேட்டதையே நீங்களும் கேட்டவை தான் நான் அப்படி சொன்னேன்.”

“சரி இருக்கட்டும்.
இப்போ தெளிவா யார பத்தி சொன்னீங்கன்னு சொல்லுங்க.”

“எங்க காலேஜ் கடைசி நாள்ல நடந்த விஷயத்தை பத்தி சொன்னேன் இல்லையா!”

“ஆமாம் சொன்னீங்க.
அதுக்கு?”

“அதுல ப்ரொபஸர் சேவியர் செய்த அந்த மனிதன் போலவே இருக்கும் ரோபோ விஷயம் எனக்கும் பிஎச்டி மாணவனான பீட்டருக்கும் மட்டும் தான் தெரியும்ன்னும்.
அதை அவனோடதுன்னு சொல்லி அவன் உரிமை கொண்டாட, அதை தடுக்க நினைத்த ப்ரொபஸரை அன்று அந்த இரவு அந்த கோலத்திற்கு உள்ளாக்கியதும் அந்த பீட்டரும் அவன் அப்பாவின் அரசியல் பின்னணியும் தான்னு சொன்னேன் இல்லையா!”

“ம்…ஆமாம் சொன்னீங்க.
ஆங்! இருங்க இருங்க…
இப்போ நீங்க என்ன சொல்ல வரேங்க ன்னா…
அந்த பிஎச்டி மாணவன் பீட்டர்,
இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த அரசியல்வாதி சார்ல்ஸுக்கும் பொறந்த  மகனா இருப்பானோன்னு கேட்க வறீங்க சரியா!”

“ஆமாம்.
அதே தான்.
இதைத் தான் நேத்து ராத்திரிலேந்து எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன்.”

“நீங்க நினைக்கிற மாதிரியே தான்.
இந்த சார்ல்ஸோட மகன் பீட்டரும் நீங்க படிச்சதா சொன்ன அதே கலேஜ்ல தான் படிச்சிருக்கான்.
சோ உங்க யூகம் சரிதான்.
ஆனா அதுக்கு நீங்க ஏன் பதற்றமாகணும்?”

“இல்ல…
ப்ரொபஸரை ஒரு வாரம் வச்சு துன்புறுத்தி,
அவருக்கிட்டேந்து என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு…”

“தெரிஞ்சுகிட்டு? என்ன சக்தி?”

“என்னை அன்னைக்கு கடத்திருப்பானோ?”

“அப்படிங்கறீங்களா?
ஆனா அவன் தான் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட் ல பெராலிஸ் வந்து படுத்து படுக்கயாய் இருக்கான்.
அவனோட சிகிச்சைக்காக டாக்டர்ஸ் அன்ட் நர்ஸ் எல்லாரும் அவன் வீட்டோடு இருக்காங்க.
இந்த நிலையில் அவன் பண்ணிருக்க வாய்ப்பில்லன்னு சொல்ல முடியாது ஆனா வாய்ப்புகள் கம்மி.”

“ஓ! அதுனால தானா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட பையன் இந்த ரெண்டு வருஷமா அவங்கள பார்க்க வரலையா?”

“இருக்கலாம்.”

“ஆனா…இவங்களும் மகனை பார்க்க போனதில்லையே!”

“அது ஏன் அவங்க தான் சொல்லணும்.
இல்லாட்டி…அந்த அரசியல் வாதி அவங்களை பார்க்க விடாமல் செய்திருக்கலாம்.”

“இருக்கும் இருக்கும்.
அந்த பீட்டர் என்னைவிட நாலு வயசு தான் பெரியவன்.
அவனுக்கு இப்படி ஆனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்…
அவன் எங்க ப்ரொபஸருக்கு செஞ்சதை நெனச்சா…
அவனுக்கு இது தேவை தான்னு மனசு சொல்லுது.
நானும் மனுஷி தானே!”

“ம்…புரியுது சக்தி.”

“இப்போ மிஸ்ஸர்ஸ் டேவிட்  எங்க தான் போயிருக்காங்க?
உங்களுக்கு தெரியுமா?”

“ஆமாம்.
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல…
அந்த சார்ல்ஸ் அன்ட் பீட்டர் சேர்ந்து அவங்கள ஏதாவது செய்துட்டாங்களோன்னு பயம் வருது. அதுதான் கேட்டேன்.”

“அவங்க இப்போ அவங்க மகனை பார்க்க தான் போயிருக்காங்க சக்தி.”

“ஆங்! அப்படியா!”

“ஆமாம்.”

“என்ன இத்தனை வருஷம் போகாதவங்க…
திடீர்ன்னு போயிருக்காங்க?
என்னவா இருக்கும்”

“அதை எல்லாம் நினைச்சு குழப்பமாகாதீங்க சக்தி.
நேத்து நியூஸ் பேப்பர் நீங்க படிக்கலையா?”

“எங்கேந்து.
இல்ல படிக்கலை.
ஏன்?”

“அதை படிச்சிருந்தா நீங்க இன்னும் குழம்பி போய் இருப்பீங்க.”

“அப்படியா? அப்படி என்ன நியூஸ் வந்தது.”

“அந்த சார்ல்ஸோட ஒரே  மகன்…
அதாவது சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு பெண்மணி மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு பொறந்த மகனான பீட்டரின் உயிர் ரெண்டு நாள் முன்னாடி அவன் உடலை விட்டு பிரிந்தது.”

“அச்சச்சோ! பீட்டர் இறந்துட்டானா?”

“எஸ் சக்தி.
அதுக்கு தான் மிஸ்ஸர்ஸ் டேவிட் அவசர அவசரமா யார்கிட்டேயும் சொல்லிக்காம போயிருக்காங்க.”

“ச்சே!
நான் ரொம்ப மோசம்.”

“ஏன் அப்படி?”

“பின்ன! அவங்க, அவங்க மகன் இறப்புக்கு போயிருக்காங்க…
ஆனா நான், எனக்கு இப்படி நடந்ததுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருககுமோன்னு யோசிச்சேன்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
அவங்க வந்ததும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.”

“சரி யோசிச்சீங்க.
விடுங்க.
நாம யோசிக்கிறதுக்கெல்லாம் வருத்தப் படணும்னா…
நான் எவ்வளோ யோசிச்சிருப்பேன்…
எத்தனை பேரை சந்தேகப்பட்டிருப்பேன்.
அப்போ நான் எப்படி போய் அவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கறது! ம்…”

“அது உங்க தொழில்.
அதுல தப்பில்ல.
ஆனா நான் அப்படி இல்லையே!”

“அட போங்கங்க.”

“சரி அப்படிப்பார்த்தா…
உங்க சந்தேகம் தப்புன்னு ஆயிடுச்சு.
என் சந்தேகம் தப்புன்னு ஆகலை ஆனா சந்தேகப்பட்ட நபர் இப்போ உயிரோடு இல்ல.
அப்படின்னா என்னை கடத்தியது பீட்டர் தான்னும் அவன் இறந்துட்டான்னும் இந்த கேஸை முடிஞ்சிடுமா?”

“நான் சந்தேகப்பட்ட ருத்ரா இல்லன்னு ஊர்ஜிதம் ஆகிடுச்சு.
ஆனா இப்போ நீங்க சொன்ன சம்பவத்தை வச்சு இந்த கேஸை அப்படி எல்லாம் மூடிட முடியாது
ஏன்னா அந்த பையன் பெரிய அரசியல் புள்ளியின் மகன்.  அது பீட்டராக இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனா அவன் உயிரோடு இல்லைனாலும்…
அந்த டாக்டர் வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?
அந்த ரெண்டு நர்ஸுகளுக்கு ஏன் அப்படி நடந்தது?
இதுக்கெல்லாம் பதில் வேண்டாமா?
அதுக்கும் இறந்து போன பீட்டருக்கும் இல்ல அவன் அப்பனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இதெல்லாம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல என் நண்பன் கட்டிக்க போற 
உங்களுக்காகவாவது அன்னைக்கு நடந்தது என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்.”

“ம்…அப்போ ருத்ராவும் இல்ல, மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் இல்ல, பீட்டரா இருக்க வாய்ப்பிருந்ததுன்னு சொல்லுறீங்க சரி.
ஆனா எங்க ஆஃபிஸ் கேன்டீன் ஸ்டாஃப் அந்த ஜானை விட்டுட்டேங்களே!”

“அவனை தேடிட்டு தான் இருக்கோம்.
நிச்சயம் எங்ககிட்ட மாட்டுவான்.”

“சரி…உங்க காலேஜ் கடைசி நாள் இரவு நடந்த சம்பவத்தை சொன்னீங்களே!  உங்க ப்ரொபஸர் சேவியரை அந்த நிலைமைக்கு தள்ளியது அந்த பீட்டர் தான்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?
இல்ல அவனா இருந்திருக்க ஏதாவது க்ளூ ஆர் எவிடன்ஸ் உங்க கிட்ட இருக்கா?”

“ஆங்! அப்படி எதுவும் என்கிட்ட இல்லை.
எனக்கே அன்னைக்கு மிட் நைட்ல எங்க ப்ரொபஸர் சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் தெரிய வந்துது.”

“சரி…
அதுக்கு முன்னாடி எப்பவாவது உங்க ப்ரொபஸருக்கும் அந்த பீட்டருக்கும் இந்த பேட்டென்ட் விஷயமா பிரச்சினை வந்திருக்கா?
அப்படி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”

“இல்ல…
அப்படி எதுவும் அதுவரை நடந்ததா…
எந்த நியூஸும் வரலை.
எனக்கும் தெரியாது.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“சோ…உங்க ப்ரொபஸருக்கு அப்படி ஆனது பீட்டரால தான்னு உங்களுக்கு உங்க ப்ரொபஸர் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது உங்கிட்ட சொன்னது தான்.
இல்லையா!”

“எஸ். யூ ஆர் ரைட்.”

“அதுவரைக்கும் அந்த சேவியருக்கும் பீட்டருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லைன்னும் நீங்க தான் சொன்னீங்க.
ஆனா எப்படி அன்னைக்கு திடீர்ன்னு உங்க ப்ரொபஸர் சொன்னதை மட்டும்  அப்படியே நம்பினீங்க?”

“நீங்க சொல்லுற மாதிரி அன்னைக்கு என் ப்ரொபஸர் சேவியர் சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவுமில்லாம அந்த பீட்டர் பெரிய அரசியல்வாதி புள்ளை வேறயா அதுனால எல்லாத்தையும் மூடி மறச்சுட்டாங்களோன்னு நானே நெனச்சுக்கிட்டேன்.”

“ம்…இப்படி யோசிச்சு பாருங்க…”

“எப்படி?”

“பீட்டர் அரசியல்வாதி பையன் அப்படீங்கற விஷயத்தை ஏன் உங்க ப்ரொபஸர் யூஸ் பண்ணிருக்கக்கூடாது?”

“புரியலை ஜேம்ஸ்.
அவர் ஏன் அப்படி பீட்டர் பெயரை யூஸ் பண்ணணும்?
அதுவுமில்லாம அன்னைக்கு அவர உயிர் போற நிலைமைக்கு தள்ளியது யாரு?”

“அதோட உங்க கேள்விகளை நிப்பாட்டிடாதீங்க சக்தி.
அவர் ஏன் உங்களை கடைசியாக சந்திச்சதுக்கப்புறமா… விஷால் சொன்னதா நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட் படி ஒரு வாரம் உயிரோடு இருந்திருக்கார்?
எங்க இருந்திருக்கார்?
ஒரு வாரம் தான் இருந்தாரா?
இல்ல இன்னமும் இருக்காறா?”

“அய்யோ! இது என்ன புது குழப்பம்.”

“இல்ல நீங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க சக்தி.
அன்னைக்கு நைட் உங்களை மயானத்துக்கு வரவைத்து உங்களை பதற்றமாக்கி, பீட்டர் பின்னணியை உபயோகப்படுத்தி அவர் சொன்னதை எல்லாம் உங்களை நம்பி வைத்திருக்கக் கூடாது?”

“பட் வை?!
நீங்க சொன்னா மாதிரியே வச்சுக்கிட்டாலும்…
பின்ன ஏன் அவரோட அந்த பொக்கிஷத்தை என்கிட்ட எடுத்துக்க சொல்லணும்.
அவரே வச்சிருக்கலாமே!
அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவர் உயிரோடு இருந்திருந்தா இல்ல இன்னமும் உயிரோடு இருக்கார்ன்னா…
ஏன் அதை தேடி அவர் வரலை?”

“ம்…நவ் யூ ஆர் கம்மிங் டூ தி பாயிண்ட்.
இப்போவாவது சொல்லுங்க அந்த பொக்கிஷம் என்னது?
அதை அவர் சொன்ன இடத்துக்கு போய் எடுத்தீங்களா?
இப்போ அது உங்ககிட்ட தான் இருக்கா?”

“அது…அது வந்து…அது…”

“சக்தி நீங்க இந்த விஷயத்துல என்னை நம்பித்தான் ஆகணும்.
அப்போ தான் ஏதாவது நான் செய்ய முடியும்.
நீங்க அன்னைக்கு இரவு நடந்ததா சொன்ன கதைப்படி அல்லது உங்க ப்ரொஃபசர் உங்கிட்ட சொன்னது படி பீட்டர்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா…
அதுக்கு எவிடன்ஸ்?
ஏன்னா
நீங்க காணாம போனது போலவே!
அதைப் பத்தியும் எந்த நியூஸும் வெளிவரவே இல்லையே!
இதுலேந்தே தெரியலையா?
என்னை பொறுத்தவரை…
எனனோட யூகப் படி அன்னைக்கு உங்க காலேஜ் கடைசி நாள் முதல் 
யாரோ…
எதுக்காகவோ…
உங்களை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த மர்ம நபர் யார்?
உங்களுக்கே தெரியாம நீங்க அந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ள மாட்டிட்டு இருக்கீங்க.”

“இல்ல…இல்ல…இல்ல…
அப்படி எந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ளேயும் நான் மாட்டிக்கவும் இல்ல.
அப்படி எல்லாம் மாட்டிக்கவும் மாட்டேன்.”

“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் சக்தி.
ரிலாக்ஸ்…

ஜேம்ஸ் சொன்னவற்றை எல்லாம் கேட்ட சக்தி நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிப்புக்குள்ளானாள்.

தொடர்வாள்…

Leave a comment