அத்தியாயம் 32: அவனா இவன்!

ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் தனது படுக்கை அருகே இருந்த லைட் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு படுத்தாள் சக்தி.  பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போல இருந்தாலும், அவற்றிற்கு பின் ஏதோ ஒரு வியூகம் பின்னப்பட்டு  கொண்டே வருவதை போலவும் அவள் மனம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மனக்கண் முன் படம் போட்டு காட்டியதில், உறக்கம் வராமல் வலது புறம் இடது புறம் என புரண்டு புரண்டு படுத்தாள்.

அவ்வாறு தூக்கமின்றி புரளும் போது அவளுக்கு சட்டென மிஸ்ஸர்ஸ் டேவிட் மகன் பெயர் ஞாபகம் வந்தது. உடனே தனது மொபைலை எடுத்தாள். அதில் ஜேம்ஸிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தாள். மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். பின்பு

“அவன் தான் இவனா? அப்படின்னா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட்? ஐயய்யோ! யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகிட்டே போகுதே! ஆண்டவா அன்னைக்கு எனக்கு என்னதான் நடந்தது?”

என்று தனக்கு தானே  பேசிக்கொண்டாள். அதே சிந்தனைகளில் மூழ்கியவள் முத்தேதுமின்றி குழப்பம் என்னும் முட்டு சந்தில் மோதி நின்றாள். யோசித்து யோசித்து அவளுக்கே தெரியாது உறக்கம் என்னும் யோக நிலையை அடைந்தாள்.

மறுநாள் காலை விடிந்ததும்‌ வழக்கம் போல ப்ளூ அவளருகே வந்து அவளை எழுப்பியது. ஆனால் இந்த முறை அவள் டூ மின்ட்ஸ் என்று டைம் கேட்கவில்லை. மாறாக விருட்டென எழுந்து கொண்டு ப்ளூவை பார்த்து

“அவனா இவன்?”

என்று கேட்டாள். அதை கேட்ட ப்ளூ அவளையே உற்றுப் பார்த்து

“எவனா! எவன்?”

என்று கேட்டது. ப்ளூவின் பதிலை கேட்டு சக்தி சலித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை பார்த்த ப்ளூ விடியற்காலையில் அவளின் சலிப்புக்கு காரணமறியாது விழித்தது. சக்தி வெளியே வந்து  ஏதாவது சொல்வாள் என்றெண்ணி சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தது. ஆனால் அவள் வரவில்லை என்றதும் பாத்ரூம் அருகே சென்று,  தான் கீழே செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

சக்தியும் குளித்து ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். அதைப் பார்த்த ப்ளூ அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் ஒன்றுமில்லை என்ற பதிலை சொல்லிவிட்டு வழக்கமான ரெண்டு பிரட் டோஸ்ட் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

சக்தி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட ப்ளூ மெல்ல அவளருகே சென்று,

“தீ… தீ…
நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு எனக்கு தெரியுது.”

“சரி ஓகே! தெரிஞ்சுகிட்ட இல்ல. இப்போ என்ன அதுக்கு”

“இல்ல என் கிட்ட பகிர்ந்துக்குறதால   உன் குழப்பத்துக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…ன்னா 
என்கிட்ட சொல்லு நான் ஏதாவது சல்யூஷன் தர முடியுமா…ன்னு பார்க்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ளூ.
ப்ளீஸ் லீவ் மி அலோன்.”

“ஓகே.
தென் இட்ஸ் அப் டூ யூ.
நான் வரேன்.”

“எங்க போற ப்ளூ.”

“இப்போ நீ தான் உன்னை தனியா விட சொன்ன…
அதுதான் நான் இங்கேந்து என்னோட சார்ஜிங் ஸ்டேஷனுக்கே போகலாம்னு கிளம்பிட்டேன்.”

“ம்‌…அதுவும் சரி தான்‌.
நானா கூப்பிடாத வரைக்கும் நீ இங்க வர வேண்டாம்.
அங்கேயே இரு ப்ளூ.
சரியா.”

“முன்னெல்லாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவ…
ஆனா இப்போ எல்லாம் என்னை போ போன்னு சொல்லுற!!”

“அது அப்படி இல்ல ப்ளூ.
எல்லாம் உன் நல்லதுக்கும்…
என்னோட நல்லதுக்கும் தான் அப்படி சொல்லறேன்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ப்ளூ.
நான் ஆல்ரெடி ஏதேதோ நினைச்சுக்கிட்டு ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன்.
ப்ளீஸ் டிரை டூ அன்டர்ஸ்டான்ட் மி.”

“அச்சோ! தீ.
உன்ன நல்லா அன்டர்ஸ்டான்ட் பண்ணிருக்கறதால தான் நான் உன்கிட்ட அப்படி கேட்டேன்.”

“புரியுது ப்ளூ.
ஆனா அதுக்கான எக்ஸ்பிளநேஷன் குடுக்குற நிலைமையில இப்போ நான் இல்ல.
உன்கிட்ட எப்போ சொல்லணும்னு எனக்கு தோணுதோ அப்போ நிச்சயம் உன்கிட்ட நானே வந்து சொல்லுவேன்.
ஓகே வா.”

“ம்…சரி தீ.
நான் பேஸ்மென்ட் போறேன்.
நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்.
பை.”

“குட் பாய் ப்ளூ.
ஐ லவ் யூ.
பை ஃபார் நவ்‌.”

என்று ப்ளூவை இறுக்க கட்டியணைத்துக் கொண்டு சக்தி கூறியதும். ப்ளூ அங்கிருந்து கிளம்பி சக்தி வீட்டு பேஸ்மென்ட்டில் இருக்கும் அதன் சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று செட்டில் ஆனது. இரவு சரியாக தூங்காத சக்தி, காலை உணவை அருந்தியதும் அப்படியே அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டே தனது மொபைலில் வந்த அவளது ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதிலளித்தாள். பின் அந்த சோஃபாவின் இருபுறமும் போடப்பட்டிருந்த சைட் டேபிளில்,  சக்தியின் தலைமாட்டில் இருந்த ஒரு ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தாள். அதில் அவள், நவீன் மற்றும் மிருதுளா இருந்தனர். அந்த புகைப்படம் போன வருடம் நவீனும் மிருதுளாவும் சக்தியை காண மெட்ஸ் வந்தபோது காத்தெட்ரெல் ஆஃப் செயின்ட் ஸ்டீஃபன் முன் நின்று எடுத்ததாகும். அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

“அப்பா அம்மா எனக்கென்ன நடக்கறதுன்னே புரியலை.
நான் எந்த தப்பும் செய்யலை.
நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.
இருப்பேங்கள்.”

என்று கூறிக்கொண்டே மெல்ல கண் அசந்தளாள். சற்று நேரத்தில் அவள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் அவள் எழவில்லை. மீண்டும் ஒலித்தது. அது சக்தியின் உறக்கத்தை கலைத்தது. உடனே எழுந்து வேகமாக வீட்டின் கதவை திறந்தாள்.

“ஹாய் சக்தி.
என்ன காலையிலே தூங்கறீங்களா?
சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ!”

என்று கேட்டுக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை வீட்டிற்குள் வரச் சொல்லி, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமரச் சொன்ன சக்தி அங்கே அவள் உண்டும் குடித்தும் வைத்திருந்த தட்டு மற்றும் காபி கப்பை எடுத்து அடுப்படியில் வைத்துக் கொண்டே ஜேம்ஸிடம்

“ஜேம்ஸ் வாட் வுட் யூ லைக் டு ஹால்?
காபி, டீ ஆர் ஜூஸ்?”

“காபி வுட் டூ சக்தி.”

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”

என்று கூறியது போலவே இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு ட்ரேயில் ஒரு கப் காஃபி மற்றும் குக்கீஸுடன் வந்த சக்தி, அதை ஜேம்ஸ் முன் வைத்து,

” ம்…எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.”

என்றாள். ஜேம்ஸும் வலது கையில் ஒரு குக்கீஸையும் இடது கையில் காபி கப்பையும் எடுத்துக் கொண்டே

“உங்களுக்கு?”

“இப்போ தான் நான் குடிச்சேன்.
நீங்க வந்த போ தான் குடிச்ச காபி கப் அன்ட் டோஸ்ட் சாப்ட்ட ப்ளேட் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே போனேன்.
நீங்க சாப்பிடுங்க.”

“ஓகே.
ம்…காஃபி இஸ் குட்.
குக்கீஸ் டூ.”

“தாங்க்ஸ் ஜேம்ஸ்.
நேத்து நைட் உங்க மெஸேஜ் படிச்சதுலேந்து எனக்கு தூக்கமே வரலை.
சொல்லப் போனா நான் நேத்து சரியாவே தூங்கலை.
அதுதான் இன்னைக்கு காலையிலேயே சோஃப்வுல சும்மா படுத்தேன்.
அப்படியே தூங்கிட்டேன்.”

“இல்ல சக்தி.
சில விஷயங்களை மஸேஜஸ் ல விவரிக்க முடியாது.
நேருல தான் சொல்ல முடியும்.
அப்படி சொல்லறது தான் நல்லதும் கூட.
அதுனால தான் நான் இப்போ வந்தேன்.
அதுவுமில்லாம நானும் நேத்து நைட் புல்லா சரியாவே தூங்கலன்னு வச்சுக்கோங்க!!”

“ஏன் ? இந்த கேஸ் பத்தி ரொம்ப நேரம் ஏதாவது யோசனையில இருந்தேங்களா?
இருக்கலாம்! இருந்திருக்கலாம் தான்!
ஏன்னா என்னை சுத்தி நடக்கறது என்னனென்னே தெரியாத எனக்கே தூக்கம் வராதப்போ…
அதை டீல் பண்ணற உங்களுக்கு எப்படி இருக்கும்.
புரியறது.”

“அச்சச்சோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.
எல்லாம் நம்ம ருத்ராவால தாங்க.”

“என்னது ருத்ராவாலையா?”

“இல்ல இல்ல…
இந்த கேஸுக்கும் அவங்களுக்கும் எந்த கனக்ஷெனும் இல்லைங்கறது எனக்கு ஊர்ஜிதமாகிருச்சு.
ஏன்னா அவங்க வாங்கினதா சொன்ன அந்த ஜூஸ் ஷாப் அன்ட் அவங்கள விசாரிச்சு பார்த்ததுன்னு…
எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்ததுல தெரிஞ்சுது.”

“அப்புறம் ஏன் ருத்ராவாலன்னு சொன்னீங்க?”

“அது வந்து…
அவங்க நேத்து கால் பண்ணினாங்க.
அவங்க என்னங்க படு ஒப்பன் டைப் ஆ இருக்காங்க.
படபடபடன்னு அவங்க கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்ன்னு எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிட்டங்க.”

“அவ அப்படி தான்.
கொஞ்சம் வெகுளி வேற.
அவளோட இந்த குணத்த நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க.
அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.
ஆனாலும் அவ கொஞ்சம் கூட தன்ன மாத்திக்கவே இல்ல.
ஆனா அடிப்படைல அவ தங்கமான பொண்ணு.
அதுனால தான் நீங்க என்கிட்ட அன்னைக்கு அவளை விசாரிக்கணும்ன்னு சொன்னப்போ நான் அவ செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன்.
ஆனாலும் வசுவோட பேச்சு அன்ட் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்னையும் அவள சந்தேகப்பட வச்சுடுத்து.
என்ன செய்ய.
இப்போ நீங்க சொன்னதும் அவள்ட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்னு தோணறது.”

“உண்மை தான்.
அவங்க ரொம்பவே வெகுளியா இருக்காங்க.
ஆனா அவங்க கிட்ட பேசினது லேந்து அவங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ப்ளீஸ் ஜேம்ஸ்.
அவளோட நல்ல ஃபிரெண்டா சொல்லறேன்.
உங்களுக்கு அவளை பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காட்டாலும்  சரி…
எதுவானாலும் அவ கிட்ட சொல்லிடுங்க.
இல்லாட்டி அவ பாட்டுக்கு மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிடுவா.
இன்நேரம் ஆரம்பிச்சிருப்பா.”

“இல்ல இல்ல என்னோட விருப்பத்தை நேத்தே சொல்லிட்டேன்.”

“பரவாயில்லையே கண்டதும் காதல் ஆ.
பேஷ் பேஷ்.
அப்போ உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எங்க கல்யாணத்தோட சேர்த்து நடந்திடுவோம்.
என்ன சொல்லுறீங்க?”

“எனக்கு ஓகே.
ஆனா ஒரே ஒரு கன்டீஷன்.”

“கன்டீஷனா!
அது என்ன?”

“உங்களோட இந்த கேஸ் முடிச்சிட்டு தான் கல்யாணம்.”

“டன். டீல்.
சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயம் ஏதோ பெரிய லெவல்ன்னு எல்லாம் எழுதி இருந்தீங்களே…
அது என்ன?
அவங்க வீட்டுக்கு பின் வாசல் வழியா நேத்து வந்துட்டு போனது யாரு?
ஏன் வந்தாங்க?”

“பாருங்க…
அதை பத்தி பேச வந்துட்டு…
நான் பாட்டுக்கு என் கதையை பேசிட்டே இருக்கேன்.”

“உங்க கதை மட்டுமில்ல.
என் தோழியோட கதையும் தான்.
அதுனால மன்னிப்போம் மறப்போம்.”

“அப்பா எவ்வளோ பெரிய மனசுங்க உங்களுக்கு.”

“நன்றி.
சரி இப்போ சொல்லுங்க”

“உங்க பக்கத்து வீட்டு பெண் அந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் அவங்களோட புருஷன் மிஸ்டர் டேவிட் அன்ட் அவங்களோட முன்னாள் புருஷன்னு எல்லாரோட  பேக்ரௌண்ட் செக் பண்ணினதுல…
அவங்க முன்னாள் புருஷன் வேற யாருமில்லை இந்த நாட்டோட பெரும் அரசியல் புள்ளி மிஸ்டர் சார்ல்ஸ் டிக்சன்னு தெரிய வந்திருக்கு.”

“ஓ! மை காட்!
நான் அவர பத்தி நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்.
ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட் ஒரு நாள் கூட அவர் பத்தி சொன்னதில்லை.”

“எப்படி சொல்லுவாங்க சக்தி.
அந்த ஆளு பண்ணிண செயல் அப்படி.”

“அப்படி என்ன பண்ணிருக்காரு?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்காருன்னா பாருங்களேன்.”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
அவங்க தங்கமான மனுஷியாச்சே!
அவங்கள ஏன்?
எதுக்கு அப்படி செய்ய முயற்சி செஞ்சிருக்காரு?”

“அதை நான் சொல்லறேன்.
அதுக்கு முன்னாடி நீங்க என் கிட்ட ஏதோ சொல்லணும்னு மெஸேஜ் ல குறிப்பிட்டிருந்தீங்களே!
அது என்னன்னு சொல்லுங்களேன்.”

“அது…அது வந்து…”

“ஏன் இழுக்குறீங்க சக்தி?
எதுவானாலும் சொல்லுங்க.”

“இல்ல அது இந்த கேஸுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியலை.
ஆனாலும் அதை உங்ககிட்ட சொல்லிட சொல்லி விஷால் சொன்னான்.”

“சரி அப்படி என்ன அந்த விஷயம்ன்னு சொல்லுங்க.
அது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்டதா இல்ல சம்பந்தபடுமான்னு எல்லாம் நான் தீர்மானிச்சுக்கிறேன்.”

என்று ஜேம்ஸ் கூறியதும் சக்தி படபடவென அவர்களின் காலேஜ் இறுதி நாளில் நடந்த சம்பவங்களை, விஷால்  பிரப்போஸ் பண்ணியதில் இருந்து ப்ரொஃபசர் சேவியரை பார்த்து பின் அங்கிருந்து கிளம்பி வந்தது வரைக்கும் சொல்லி முடித்தாள். அவளை இடைமறித்து பேசாது பொறுமையாக அனைத்தையும் கேட்ட ஜேம்ஸ் அவளிடம்,

“அப்போ…
அந்த ப்ரொஃபசர் சேவியர் இறந்துட்டாறா?”

“அப்படி தான் நான் நினைச்சு அங்கேந்து வேகவேகமா வந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே இறந்துட்டாறா இல்லையான்னு எனக்கு தெரியாது.”

“சரி அவர் இறந்துட்டார்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?”

“பேசிட்டே இருந்தவரு சட்டுன்னு தலையை குனிந்துட்டார்.
நானும் அவரை எழுப்பிப் பார்த்தேன் ஆனா அவர் எழுந்துக்கல.
அதுனால இறந்துட்டார்ன்னு நினைச்சுட்டேன்.”

“அவர் மயக்கமடைந்திருக்கலாம் இல்லையா?
நீங்க அவர் ஹார்ட் பீட் ஆர் பல்ஸ் செக் பண்ணிருக்கலாமே!”

“செய்திருக்கலாம் தான்.
இப்போன்னா நிச்சயம் அதெல்லாம் செய்திருப்பேன்.
ஆனா அன்னைக்கு நான் இருந்த நிலைமை அப்படி.
அர்த்த ராத்திரி…
மயானம் வேற…
பயத்துல அங்கேந்து எப்படியாவது கிளம்பிடணும்ன்னு தான் தோணிச்சு.
நீங்க சொன்னா மாதிரி எல்லாம் செக் பண்ண தோணவே இல்ல.
என்ன பண்ண?”

“ம்…
உங்க சிட்டுவேஷன் அப்படி.
புரியுது‌…”

“அப்படின்னா அவர் உயிரோட தான் இருக்காறா?”

“இல்ல இல்ல…
இருக்கலாம்.
இல்லாமையும் இருக்கலாம்.”

“இல்லையே! இருங்க…இருங்க
இப்போ தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது…
வி கிட்ட… இதை எல்லாம் சொன்னப்போ…
அவன் கூட ப்ரொபஸர் சேவியர் ஏதோ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்னு சொன்னான்.
அதுவும் நாங்க காலேஜ் முடிச்சு வெளிய வந்த ஒரு வாரத்துலன்னு சொன்னதா ஞாபகம்…
அப்படிப் பார்த்தா அவரை நான் சந்திச்சதுக்கு அப்புறமா ஒரு வாரம் உயிரோட இருந்திருக்காறா?”

“ஓ! அப்படியா!
சரி அதை விஷால் கிட்ட விசாரிச்சுக்கறேன்.
அந்த ப்ரொபஸர் சொன்ன அந்த பொக்கிஷம் இருந்த இடத்துக்கு நீங்க போய் பார்த்தீங்களா?
அது என்னது?”

“அது வந்து…அது…வந்து…”

“ஏன் சக்தி தயங்குறீங்க?”

என்று ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கிய சக்தி மனதிற்குள் அதை ஜேம்ஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பட்டிமன்றம் நடந்தேறியது.

பொக்கிஷம் பற்றிய ரகசியத்தை சொல்லலாமா! வேண்டாமா! என்ற மனப் பட்டிமன்றத்தின் முடிவைத் தேடி…

தொடர்வாள்…

Leave a comment