அத்தியாயம் 91: அறியாததும் அறிந்தது!

பம்பாய் வந்து சேர்ந்ததும் வழக்கம் போல் ஆஃபீஸ், ஸ்கூல் என்று நவீனும், சக்தியும், சமையல் வீட்டு வேலைகள், சக்தியை க்ளாஸுக்கு அழைத்துப் போய் வருவது, அவளை ஹோம் வொர்க் செய்ய வைப்பது என்று மூவரும் அவரவர் தினசரி வேலைகளில் மூழ்கினர். மாதங்கள் கடந்தன. ஒரு நாள்…

நவீன் ஊரில் வாங்கி வித்த அப்பார்ட்மெண்ட்ஸ் பில்டர் தயானந்தன் நவீனை அவன் மொபைலில் கூப்பிட்டார். ஃபோன் ரொம்ப நேரம் அடித்து பின் தானாக நின்றது. நவீன் தனது ஆஃபீஸ் வேலையில் பிஸியாக இருந்ததால் அட்டென்ட் செய்யவில்லை. மத்திய சாப்பாட்டு ப்ரேக் சமயம் நவீனே அவரை கைப் பேசியில் அழைத்து

“ஹலோ மிஸ்டர். தயானந்தன் இப்போ பேசலாமா நீங்க ஃப்ரீயா?”

“ஆங் சொல்லுங்க மிஸ்டர் நவீன். எப்படி இருக்கீங்க?மேடம் பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? சாரி நான் ஒரு முக்கியமான மீட்டிங் ல இருந்தேன் அதுதான் உங்க ஃபோன் கால் அட்டென்ட் பண்ண முடியாம போச்சு”

“பரவாயில்லை நவீன்.”

“சொல்லுங்க என்ன விஷயமா கால் பண்ணிருந்தீங்க?”

“மிஸ்டர் ப்ரவீன்னு ஒருத்தர் வந்திருந்தார் நம்ம 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் ஒண்ணு புக் செஞ்சுட்டு போயிருக்கார்.”

“ஓ!! சரி அதுக்கு எதுக்கு எனக்கு கால் பண்ணிருக்கீங்க சார்?”

“என்ன நவீன் உங்க தம்பின்னு சொன்னார். நீங்க முதல்ல வாங்கியிருந்ததால தான் வாங்க வந்ததாகவும் சொன்னாரே!!! அதுனால விலை கூட கொஞ்சம் குறைச்சுக்கிட்டேன்.”

“என்னது என் தம்பின்னு சொன்னாரா?”

“ஆமாம் மிஸ்டர் நவீன். அவர் அட்வான்ஸ் குடுத்ததோட சரி மற்ற பேமெண்ட்ஸ் லோன் போட்டுட்டு சொல்லறேன்னு சொன்னாரு ஒரு விவரமும் வரலை அதுதான் சரி உங்ககிட்ட கேட்டா ஏதாவது தெரிய வருமேன்னு கால் பண்ணினேன்.”

“என் தம்பிங்க யாரும் சமீபத்துல வீடு வாங்கினதா எனக்கு தெரியலையே. அதுவுமில்லாம நீங்க அவங்க அப்படி சொன்னபோதே எனக்கு கால் பண்ணிருந்தேங்கள்ன்னா கன்பார்ம் பண்ணிருப்பேன்”

“என்ன இப்போ ஒரு ஃபோன் போட்டு கேட்டுச் சொல்லுங்களேன்”

“இல்ல சார் அது நல்லா இருக்காது. நீங்களே கேளுங்களேன்”

“கேட்டுட்டேன் மிஸ்டர் நவீன் ஆனா இதோ தரேன் அதோ தரேன்ங்குறார் ஆனா பணம் வந்த பாடில்லை”

“மொதல்ல அது என் தம்பி தானான்னு தெரிஞ்சுக்கனுமே”

“உங்களுக்கு ப்ரவீன் தம்பி இருக்கார் தானே”

“இருக்கார் சார். ஆனா எல்லா ப்ரவீனும் என் தம்பி ஆகிட முடியுமா? சரி அவர் எங்கே வேலைப் பார்ப்பதாக சொன்னார்?”

“அது வந்து ஏதோ ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனின்னு சொன்னார். ஆனா நான் அவரை நம்பி டீல் பேசலை அவர் வைஃப் போஸ்ட் ஆபீஸ் ல வேலைப் பார்க்கறாங்க அதுனாலயும் நீங்க என்னோட பழைய கஸ்டமர் அன்ட் பேமெண்ட் விஷயத்துல கரெக்ட்டான ஆளு அதுனால தான் சரி உங்க தம்பியும் அப்படி இருப்பார்ன்னு நினைச்சேன்”

“சார் அது என் தம்பியே தான். நான் அவங்க கிட்ட இதைப் பத்தி பேச முடியாது சார் ஏன்னா அவங்க வீடு வாங்கியிருக்கற விஷயமே இப்போ நீங்க சொல்லித் தான் எனக்கே தெரிய வந்தது. அதுனால இதுல எனக்காக நீங்க எதுவும் பண்ண வேண்டாம்ன்னு மட்டும் உங்க கிட்ட கேட்டுக்கறேன். சரி எனக்கு அடுத்த மீட்டிங்க்கு ஆள் வந்திட்டாங்க நான் வச்சுடறேன் சார். ஐ ஆம் எக்ஸ்ட்ரீமிலி சாரி. என்னால உங்களுக்கு இந்த விஷயத்துக்காக உதவி பண்ண முடியாம போனதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன்.”

“ஓகே மிஸ்டர் நவீன். உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சுடுங்க. அவங்க கிட்ட நானே பேசிக்கறேன். பை”

“தாங்க்ஸ் ஃபார் அன்டர்ஸ்டாண்டிங் மீ. பை”

என்று ஃபோனை வைத்ததும் அடுத்த மீட்டிங் அட்டெண்ட் செய்ய எழுந்துச் சென்றான். அன்றையே வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் உர்ரென்று நவீன் இருந்ததைக் கவனித்த மிருதுளா அவன் ஃப்ரெஷாகி வந்ததும் சுடச்சுட ஒரு கப் பில்டர் காபி கொடுத்து

“என்ன நவீ இன்னை நாள் எப்படி இருந்தது?”

“ம்…ம்.‌…மீட்டிங் மாத்தி மீட்டிங். ஒரே ஹெக்டிக்கா இருந்தது”

“அது எப்பவுமிருப்பது தானே”

“என்ன சொல்லற மிருது?”

“இல்ல மீட்டிங்ஸ் எல்லாம் ரெகுலரா நடக்கறது தானே ஆனா இன்னைக்கு நீங்க ஒரு மாதிரி இரிட்டேட்டா இருக்குற மாதிரி எனக்கு தோனறது. அது தான் கேட்டேன்”

“ம்….ஆமாம் ஆமாம். நான் இரிட்டேட்டட்டா தான் இருக்கேன். என்னோட கூட்டத்தால”

“ஏன் அவா என்ன பண்ணினா இப்போ? அது தான் பவின் கல்யாணத்துக்கப்புறமா பேச்சு வார்த்தையே இல்லையே”

“அவான்னா அவா டைரெக்ட்டா எதுவும் பண்ணலை பேசலை ஆனா இன்னைக்கு நம்ம மொதல்ல வாங்கின அப்பார்ட்மெண்ட்ஸ் பில்டர் தயானந்தன் எனக்கு கால் பண்ணினார். இந்த ப்ரவீன் ஏதோ நம்ம வாங்கின அதே அப்பார்ட்மெண்டுல வீடு வாங்கிருக்குனாம். அதுக்கு என் பெயரை யூஸ் பண்ணிருக்கான். அட்வான்ஸும் கொடுத்திருக்கான் ஆனா அதுக்கப்புறம் ஒண்ணுமே சொல்லலையாம் அது தான் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க எனக்கு கால் பண்ணினார்.”

“இது நல்லா இருக்கே வீடு வாங்கினவன் ப்ரவீன். அவன் வாங்கியிருக்கறது கூட நமக்கு தெரியாது இந்த லட்சணத்துல என்ன ஆச்சுன்னு வாங்கினவன் கிட்ட கேட்காம உங்ககிட்ட கேட்டா எப்படி?”

“அதுதான் நானும் கேட்டேன். அப்போ அவர் என்கிட்ட உங்க தம்பி தானே சார்ன்னு சொன்னார். அதுவும் ஒரு நக்கலா …எனக்கு கோபம் வந்தது.”

“சரி இன்னுட்டு என்ன தான் சொன்னேங்கள்?”

“நான் சொல்லிட்டேன் இதுல நான் தலையிட மாட்டேன். நீங்களாச்சு ப்ரவீனாச்சுன்னு. அவன் என் பெயரைச் சொல்லி பேச வந்தப்பவே சொல்லிருக்கணும். அதை விட்டுட்டு இப்போ வந்து சொன்னா. அப்போ எல்லாம் சுமுகமா நடந்திருந்தா என் பெயரை யூஸ் பண்ணினது கூட நமக்கு தெரியாம போயிருக்கும்”

“நாம தான் அவாளுக்கே தூசு ஆச்சே அப்புறம் ஏன் தூசோட பெயரெல்லாம் யூஸ் பண்ணறாளாம்!!!”

“அதை எல்லாம் அங்கே கேட்க் முடியுமா? அப்படியே கேட்டாலும் எல்லாமும் சேர்ந்துண்டு ஒக்கே ஒக்கேன்னு கத்துங்கள். பொய் பொய்யா சொல்லி டாப்பிக்கை மாத்துங்கள். ஆனா இதுலேந்து ஒண்ணு தெரிஞ்சுக்க முடிஞ்சுது மிருது”

“என்னது நவீ?”

“நம்மளை என்ன தான் பாடாய்படுத்தினாலும் என் பெயர் கூட அவாளுக்கு உதவி தான் செய்யறது….என்ன பண்ண?”

“என்னமோ பண்ணிக்கட்டும் நவீ. தூசை கூட்டிக் கூட்டி மூலையில வச்சா அது ஒரு நாள் நிச்சயம் கோபுரமாகும். அப்போ அந்த தூசு என்னோடதாக்கும்ன்னு சொல்லிக்கற காலமும் வரும்…லெட்ஸ் வெயிட் அன்ட் வாட்ச்.”

“ம்… ம்… ஆனா என்ன தைரியம் பாரேன் நாம வேண்டாமாம் ஆனா நம்ம பேரு மட்டும் வேணுமாம் எப்படி இருக்கு பாரேன்”

“இவா பேரை எங்கயாவது யார்கிட்டயாவது சொல்லிண்டு ஏதாவது வேலையை நாம நடத்திண்டிருப்போமா?”

“ஆமாம் அப்படி எவன் பெயர் இருக்கு?”

“அப்படி சொல்லாதீங்கோ நவீ. இப்போ இல்லாட்டியும் எப்பவாவது வரலாம் இல்லையா. ஆனா எப்பவும் நாம எவர் பெயரையும் நம்ம நலனுக்கா உபயோகித்ததில்லை இனியும் உபயோகிக்க வேண்டாம். நமக்கு அந்த ஆண்டவன் இருக்கிறார். அவர் போதும்!! அவர் நாமம் சொன்னால் போதும். சரி சரி இதுக்காக நீங்க ஏன் அப்செட் ஆகனும். லீவ் இட்”

“இவாளுக்கெல்லாம் அப்பவும் நான் வேணும் இப்பவும் நான் வேணும் ஆனா மதிக்க மட்டும் மாட்டா”

“நவீ இவா எல்லாம் நம்மளை மதிக்காட்டா நமக்கொண்ணும் ஆகிடாது. கவலைப் படாதீங்கோ. உங்களுக்கு பிடிச்ச ஆறிலிருந்து அறுபது வரை படத்தோட க்ளைமாக்ஸ் நினைச்சுக்கோங்கோ அது தான் நடக்கப்போறது”

“அப்போ என்னை விட்டுட்டுப் போயிடுவியா நீ?”

“ம்…அது எப்படி போவேன்? இருந்து பாடாய் படுத்த இன்னும் எவ்வளவு இருக்கு!!! அதெல்லாம் யாரு பண்ணுவா? கவலைப்படாதீங்கோ நான் உங்க கூட நூறு வயசு வரை இருந்து படுத்தறேன் ஹாப்பியா?”

“டபுள் ஹாப்பி.”

“சரி நீங்க இந்த ஹாப்பி மூட்லயே இருங்கோ நான் போய் டின்னர் எடுத்து வைக்கறேன்”

“ஹாப்பி மூட்ல இருக்கச் சொல்லிட்டு உடனே ஷாக்கான நியூஸ் சொல்லறையே மிருது…இது உனக்கே நியாயமா சொல்லு”

“ஓ !! அப்படியா என்னோட டின்னர் உங்களுக்கு ஷாக்கான நியூஸா… ஓகே ஓகே அப்போ நானும் சக்தியும் மட்டும் சாப்டுக்கறோம் அய்யா ஹாப்பி மூட்லயே இருந்துக்கோங்கோ”

“டின்னருக்கு என்ன பண்ணிருக்க?”

“சொன்னா ஷாக் ஆக மாட்டேங்களே”

“ம்….அது நீ சொல்லறதைப் பொறுத்து”

“பார்ரா!!! சப்பாத்தியும், மட்டர் பன்னீர் சப்ஜியும், தால் தடுக்காவும் பண்ணிருக்கேன்!!! கேட்டதும் இன்னும் ஷாக் ஆகிருப்பேங்களே”

“இல்ல அவ்வளவு ஷாக் ஆகலை அதுனால நானும் சாப்பிடறேன்”

என்று வேடிக்கையாக பேசி நவீனின் மூடை மாற்றி மூவரும் மகிழ்ச்சியாக இரவுணவு அருந்தி, சற்று நேரம் சக்தியுடன் விளையாடிவிட்டு படுதுறங்கினர். நவீனின் மனதில் நெருடல் இருந்தாலும் அவனை அவனே மிருதுளா சொன்னதை எல்லாம் அசைப்போட்டுப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு உறங்கினான். மறுநாள் முதல் மீண்டும் அவரவர்களின் வேலையில் மூழ்கினர்.

ஒரு நாள் மாலை ப்ரவீன் நவீனின் வீட்டு நம்பருக்கு கால் செய்தான்.

“ஹலோ நவீன் ஹியர்”

“ஹலோ நான் ப்ரவீன் பேசறேன்”

“ம்….சொல்லு என்ன விஷயம்?”

“நாங்க ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கோம். அதுக்கு வர்ற தை மாசம் கிரகப் பிரவேசம் வச்சிருக்கோம். நீயும் மன்னியும் வரணும். பத்திரிகை அனுப்பியிருக்கேன். மூணு பேருமா வந்திடுங்கோ. மன்னி கிட்ட ஃபோனைக் குடேன் துளசி பேசணுமாம்”

“ஆங் ஆங் வெயிட் பண்ணு….மிருது மிருது இந்தா துளசி பேசறா”

“ஹலோ”

“ஹலோ மன்னி நான் துளசி பேசறேன்”

“ஆங் சொல்லு துளசி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம் மன்னி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்களும் நால்லா இருக்கோம். தாங்க்ஸ். சரி சொல்லு என்ன பேசணும்னு சொன்ன?”

“நாங்க ஒரு வீடு வாங்கிருக்கோம் அதுக்கு கிரகப்பிரவேசம் வர்ற தை மாசம் பத்தாம் தேதி வச்சிருக்கோம் நீங்க அண்ணா சக்தி எல்லாரும் அவசியம் வரணும். பத்திரிகை அனுப்பிருக்கோம் வந்திடுங்கோ. அதைச் சொல்லத் தான் கால் பண்ணினோம். வச்சுடவா?”

“ம்…ம்…டிரைப் பண்ணறோம். ஓகே வச்சுடு…பை”

என்று ஃபோனை வச்சதும். மிருதுளா நவீனைப் பார்த்து

“நீங்க ஏதாவது கேட்டுடப் போறேங்களோன்னு பயந்துண்டு இருந்தேன்”

“என்னத்தை?”

“ம்…அந்த பில்டர் கால் பத்தி தான்.”

“ஆமாம் இனி கேட்டு என்ன ஆகப் போறது!!!”

“அதை நினைத்துத் தான் நீங்க எதுவும் கேட்டுடக்கூடாதேன்னு நினைச்சுண்டிருந்தேன்….அவா நமக்கு செய்றதை எல்லாம் சிறப்பா செஞ்சுடுவா ஆனா நாம கேட்டோம்ன்னா அப்புறம் எல்லா பழியும் நம்ம மேலேயே போட்டுவிடுவா. அதோட நிறுத்தாம ஊர் உலகத்துக்கெல்லாம் அது கை முளைச்சு கால் முளைச்சு பரவும் அது தான் யோசனையா இருந்தது”

“இது பாரு மிருது நான் அவா இப்படி எல்லாம் பண்ணுவாங்கற பயத்துல கேட்காம இல்ல. நியாயமா பார்த்தா அவனே என்கிட்ட சொல்லிருக்கணும் இல்லையா!! ஆனா அவன் பில்டர் கிட்ட பேசினது எதையுமே சொல்லலை அதுனால நானும் தெரியாத மாதிரியே கேட்டுண்டுட்டேன்.”

“ம்….ம்….இதுக்கு இப்படியும் ஒரு ஆங்கிள் இருக்கு இல்ல!!!”

“இருக்கு இருக்கு மிருது இருக்கு”

“சரி நாம கிரகப்பிரவேசத்துக்கு போறோமா ?”

“பார்ப்போம் பார்ப்போம். எனக்கு இன்னொரு நியூ ஜாப் ஆஃபர் கிடைக்கறா மாதிரி இருக்கு. அது கிடைச்சுதுனா ஷிஃப்டிங் அது இது எல்லாமிருக்கு. ஸோ லெட் அஸ் வெயிட் அன்ட் சீ”

“எது அந்த மைசூர் ஆஃபரா நவீ?”

“ஆமாம் மிருது அதே தான் ஆறு மாசம் கழிச்சு இப்போ தான் அந்த ஹெச் ஆர் முழிச்சிருக்கா போல நேத்து கால் பண்ணி…எல்லாம் கூடிவர்றதுனு சொன்னா…நாளைக்கு சொல்லுவா ஆர் ஆஃபர் லெட்டர் ஈமெயில் ல வரும்.”

“அப்பாடா அது கிடைக்கட்டும் நவீ. இந்த நார்த் எனக்கு பிடிக்கவேயில்லை. உங்க வேலைக்காக தான் நான் இங்கே இருக்கேன். எனக்கென்னவோ இங்கேந்து சீக்கிரம் சவுத் சைடு போனா போறும்ன்னு தோன ஆரம்பிச்சு பல மாசம் ஆச்சு….பல மாசம் ஆச்சு என்ன உங்களுக்கு அந்த கன்சல்டன்சி கால் வந்ததிலிருந்து தான்.”

“ஆனா பம்பாய் நார்த் இல்ல மிருது.”

“ரொம்ப முக்கியம். சரி இந்த வடநாட்டுக் காரா இருக்குற இடம்னு வச்சுக் கோங்கோ போதுமா!!”

“நாம ஆர்மில இருந்தப்போ நீ இப்படி நினைச்சதே இல்லையே ஏன் இப்போ மட்டும் இப்படி சொல்லற?”

“அப்போ நம்ம கேம்ப்ல இருந்த எல்லாருமே ரொம்ப நல்ல மனுஷாப்பா அதுனால தோனலை ஆனா இங்க அப்படி இல்லையே அதுதான் தோனறது”

‘ஆக்ச்சுவலி பம்பாய் எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி இந்த ஊரைப் பிடிச்சவா இங்கேந்து போக விரும்பமாட்டா தெரியுமா!!!”

“ஸோ நான் அப்போ அந்த முதல் ரகத்தை சேர்வ்தவள் என்ன பண்ண!!!”

மறுநாள் நவீன் எதிர் பாத்ததுப் போலவே ஜாப் ஆஃபர் லெட்டர் வந்தது. அதில் மாதம் ஏழு லட்சம் சம்பளம் என அச்சிடப்பட்டிருந்தது. அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு அன்று மாலை வீட்டுக்கு வந்தவன் மிருதுளாவிடம் அதைக் கொடுத்துவிட்டு முகம் கைக் கால் அலம்பி வரச் சென்றான். மிருதுளா அந்த கவரை அப்படியே சாமி அறையில் வைத்து பூஜித்து நன்றாக வேண்டிக்கொண்டு அதை எடுத்து படித்தாள். அதில் குறிப்பிட்டிருந்த சம்பளத்தைப் பார்த்ததும் அவளுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. அவள் மாமியார் “இவன் படிச்சப் படிப்புக்கு என்ன ஏழாயிரம் கிடைக்குமா?? அது கிடைக்கறதே கஷ்டம்ன்னு” சொன்னது. அவர்கள் நாலாயிரம் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியது. ஒரு சமோசா வாங்கக் கூட பத்து ரூபாய் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு மாதத்தை நகர்த்த சிரமப்பட்டது என்று அனைத்து ஞாபகங்களும் வந்து அவள் கண்களை குளமாக்கியது. அவள் மீண்டும் அந்த கவரை சாமி முன் வைத்து …அவள் கண்களை மூடினாள் கண்ணீர் இரண்டு புறமும் கட்டுக்கடங்கா அருவி போல உருண்டோடியது. தன் மனதில் ஒடும் எண்ணங்களை அப்படியே கடவுளிடம் கூறினாள்…

“அம்மா தாயே நாங்க எங்கேந்து இப்போ எங்க வந்திருக்கோம் அதை நினைத்தா பிரம்மிப்பு கலந்த சந்தோஷமா தான் இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான் மா. எங்காத்துக்காரரும் நானும் திறமைசாலிகளாக இருந்தாலும் அதை வெளிக் கொணர்ந்து எங்களை இவ்வளவு தூரம் வழி நடத்தியதும் நீ தான் தாயே…நாங்க என்னென்னைக்கும் உன் பாதம் சரணம் அம்மா. நாங்க எந்த உயரத்துக்குப் போனாலும் நாங்கள் எப்போதும் நாங்களாகவே இருக்க வேண்டும்மா. இந்த பணம் பதவி வீடு வாசல் எதுவும் எங்களை எந்த விதத்திலும் மாற்றிடாமல் காத்தருள்வாய் தாயே. வாழ்வில் இவ்வளவு நல்லவைகளை ….நல்ல உத்தியோகம், அழகான அறிவான குழந்தை, வீடு, வாசல், கார் என்று எங்களுக்கு வாரி வழங்கியுள்ளாய் இதை என்றென்றும் எங்கள் குணம் மாறாமலும் இந்த நிலை மாறாமலும் காத்தருளவேண்டும் அம்மா. தாயே அனைத்தும் உன் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். நீயே எங்களை இது வரை வழி நடத்தியுள்ளாய் இனியும் நாங்கள் உன் கரம் பிடித்தே உன்னைத் தொடர்ந்து வர அருள் புரிவாய் தாயே”

என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டிருந்ததை பொறுமையாக நின்று கேட்ட நவீன்

“கவலை வேண்டாம் மிருது. நாம எவருக்கும் மனசால கூட தீங்கோ இல்ல ஒரு கெட்டதோ செய்ததில்லை. யார் மனதும் புண்படும் படி நடந்துண்டதும் இல்லை அப்புறம் எப்படி அந்த கடவுள் நம்மளை கைவிடுவா. எல்லாம் நல்லதாகவே தான் நமக்கு நடந்திண்டிருக்கு இனியும் நடக்கும். கண்ணைத் தொடச்சுண்டு வா. நாம அடுத்த ஷிஃப்டிங் பத்தி டிஸ்கஸ் பண்ணணுமே!!”

என்று கூறிக்கொண்டே விபூதியை தன் நெற்றியில் இட்டுக்கொண்டு ஹாலுக்குச் சென்றான். மிருதுளாவும் தன் கண்களை துடைத்துக் கொண்டு சாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு அந்த கவரை அங்கேயே வைத்து விட்டு அடுப்படிச் சென்று காபி போட்டுக் கொண்டு வந்து நவீனுக்கு கொடுத்தாள்.

“என்ன மிருது ஒரு காபி தானா?”

“எப்போலேந்து ரெண்டு காபி குடிக்க ஆரம்பிச்சேங்கள்?”

“இந்த ஒரு கப் காபி குடிக்கறதையே கட் பண்ணணும்ன்னு யோசிச்சிண்டிருக்கேன் இதுல ரெண்டா!!!! உனக்கு எடுத்துண்டு வரலையேன்னு கேட்டேன்”

“நான் இன்னைக்கு நாலரை மணிக்கெல்லாம் குடிச்சிட்டேன் நவீ அது தான் எனக்குப் போட்டுக்கலை”

“ஓ!! ஓகே ஓகே”

“சரி எப்போ ஷிஃப்ட் பண்ணப் போறோம்? எப்படி பண்ணப் போறோம்?”

“மொதல்ல வீடு பார்க்கணும். அப்புறம் தான் ஷிஃப்டிங் பண்ணறதைப் பத்தி யோசிக்கணும். அந்த ஆஃபீஸே ஏரியா அன்ட் வீடு பார்க்க ஹெல்ப் பண்ணுவாளாம். அதுவுமில்லாம நமக்கு ரீலொக்கேஷன் பெனிஃபிட்ஸ்னு வேற தனியா மூன்று லட்சம் தருவா. ஸோ ஷிஃப்டிங்க்கு, வீட்டு அட்வான்ஸ்க்கு எல்லாம் நாம செலவு செய்ய வேண்டாம். நம்ம மூணு பேருக்கும் பம்பாய் டூ பெங்களூர் ஏர் டிக்கெட் அன்ட் பெங்களூர் டூ மைசூர் கார் எல்லாம் அவாளே ஏற்பாடு பண்ணித் தருவா. ஸோ அவ்வளவா டென்ஷன் இருக்காதுன்னு நினைக்கறேன். ஷிஃப்டிங்க்கு அகர்வால் மூவர்ஸ் யூஸ் பண்ணிப்போம் என்ன சொல்லற?”

“அகர்வாலா அவன் ரொம்ப கேட்பானே? நாம ஹைதராபாத்லேந்து இங்க வர்றதுக்கே எவ்வளவு கேட்டான். அது ஜாஸ்த்தினு தானே நானும் என் அப்பா அம்மாவுமா எல்லா பேக்கிங்கும் செஞ்சு வண்டி மட்டும் புக் பண்ணிக் கொண்டு வந்தோம். மறந்துட்டேங்களா?”

“இப்போ தானே சொன்னேன் அதெல்லாம் கம்பெனி ஏத்துக்கும்னு அப்புறம் அவன் எவ்வளவு கேட்டா என்ன?”

“ஓ!! மறந்துட்டேன் சாரி”

“இட்ஸ் ஓகே.”

“நம்மளோட இந்த வளர்ச்சியை நினைச்சா எனக்கு பிரம்மிப்பா இருக்கு நவீ. எப்படி இருந்தோம் இப்போ எப்படி இருக்கோம்!!! அப்பப்பா புல்லரிக்கறது”

“என்னைக்கும் நாம பழசை மறக்காம இருந்தாலே நாம மேலே மேலே போனாலும் மனுஷாலாவே இருப்போம். எதற்காகவும் மாறமாட்டோம். …..இந்த விஷயம் தெரியத்தான் நான் நேத்து உன்னை வெயிட் பண்ணச் சொன்னேன். நான் நோட்டிஸ் குடுத்தாச்சு. ஸோ நெக்ஸ்ட் மந்த் வி ஹாவ் டூ மூவ் டூ மைசூர். மொதல்ல அந்த வேலைகளைப் பார்ப்போம். அங்க ஷிஃப்ட் ஆனதுக்கப்பறமா ப்ரவீன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ணிக்கலாம் சரியா”

“ஓகே நவீ”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது ஃபோன் அடித்தது. அதை எடுத்தாள் மிருதுளா

“ஹலோ மிருதுளா ஹியர்”

“ஹலோ நான் தான் சித்தி பேசறேன் மிருதுளா”

என்று நவீனின் சித்தி கால் பண்ணினாள்.

“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்? ஆத்துல சித்தப்பா, குழந்தைகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

“எல்லாரும் நன்னா இருக்கோம் மா. இப்போ தான் பவின் பவித்ரா சீமந்தத்தை லைவ்வா கம்ப்யூட்டர் ல பார்த்து முடித்தோம். இந்த தடவை போக முடியலை அதனால அவன் வீடியோ கால்ல வர்ற் சொன்னான். அதுதான் ஆன்லைன்ல அட்டென்ட் பண்ணினேன். நீங்கள் போயிருந்தேங்களா இல்லை நீங்களும் ஆன்லைன் தானா?”

“எங்களுக்கு எப்பவும் அந்த சைடுலேந்து எரர் மெஸேஜ் தான் சித்தி.😊”

“என்ன சொல்லுற மிருது?”

“அதை விடுங்கோ. இருங்கோ நான் நவீன் கிட்ட குடுக்கறேன்”

என்று கூறி நவீனிடம் ரிசீவரை கொடுத்தாள் மிருதுளா. அப்போது சித்தி நவீனிடமும் அதையே கேட்க. நவீன் மிருதுளா சொன்னது இதுக்குத் தானா என்று எண்ணிக் கொண்டு அவன் அதற்கு பதிலளிக்காமல் டாப்பிக்கை சித்தியின் மகள் படிப்புக்கு மாற்றி சற்று நேரம் பேசிவிட்டு ஃபோனை கட் செய்தான். பின் மிருதுளாவைப் பார்த்து

“பார்த்தயா உன் மச்சினனின் அழகை!!!

“ஏன் உங்க தம்பின்னு சொல்ல வேண்டியது தானே”

“ஆமாம் ஆமாம் தம்பி நீயும் நானும் தான் சொல்லிக்கணும். இரண்டாமத்தவனும் சீமந்தத்திற்கு நம்ம கிட்ட சொல்லலை நாலாமத்தவனும் சொல்லலை. இதை வச்சுப் பார்த்தா இரண்டு பேரும் ஏதோ சொல்லி வச்சுண்டு பண்ணறா மாதிரி இல்ல!!!”

“இதுல சொல்லி வச்சுக்க என்ன இருக்கு? கவின் செஞ்சதைப் பார்த்து இப்போ பவின் செய்யறான். ஆனா இந்த ப்ரவின் மட்டும் தான் நம்ம ரெண்டு பேரையும் ஒழுங்கா எல்லாத்துக்கும் அழைக்கறான். இந்த கவினும் பவினும் ஒண்ணு அழைக்கறதில்லை இல்லாட்டி கூப்டுவா ஆனா பத்திரிகை அனுப்பமாட்டா….என்னவோ போங்கோ!!! நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி நாம நம்ம வேலையைப் பார்ப்போம். கூப்பிட்டா போவோம் இல்லாட்டி விட்டுவிடுவோம்”

“அப்படி வா என் வழிக்கு”

என்ன தான் ப்ரவீன் பில்டரிடம் தன் அண்ணன் பெயரை உபயோகித்து பேசியதை நவீனிடம் சொல்லாமலிருந்தாலும், பவின் தன் மனைவியின் சீமந்தம் வளைகாப்பை தெரியப்படுத்தாமலிருந்தாலும்…. இந்த இரண்டு விஷயங்களையுமே கடவுள் நவீனுக்கும் மிருதுளாவுக்கும் தெரியப்படுத்தினார்.

நம்மிடமிருந்து எவரேனும் எதையாது நாம் அறியாதிருக்க வேண்டுமென்று மறைத்தாலும் அந்த விஷயம் நாம் அறிந்துக் கொண்டாக வேண்டுமெனில் அதை அந்த ஆண்டவன் ஏதாவது வழியில் நமக்கு தெரியப்படுத்துவார். அதன் மூலம் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தையும் புரிய வைப்பார். அவற்றை அறிந்துக் கொள்வதோடு இருந்திடாமல் அதன் பாடத்தையும் புரிந்துக் கொண்டோமே என்றால் நாம் கடவுளின் செல்லப் பிள்ளையாக என்றென்றும் இருக்கலாம்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s