அத்தியாயம் 88: வேண்டா அழைப்பு!

சக்தியின் பிறந்தநாளுக்கு மறுநாள் நவீனும் மிருதுளாவும் அவர்கள் சொன்ன அந்த ஆசிரமத்துக்கு சக்தியைக் கூட்டிக்கொண்டு சென்றனர். அங்கே இருந்த குழந்தைகளுக்கு சுவீட், கேக், பிஸ்கெட், சாக்லெட், சிப்ஸ், ஃப்ரூட்டி ஆகியவையை ஒரு கவரில் போட்டு ஒரு நூறு பாக்கெட்டுகள் எடுத்து வந்திருந்தனர். அவற்றை ஒவ்வொன்றாக அங்கிருக்கும் ஐம்பது குழந்தைகளுக்கு மூவருமாக அங்கே பணிப்புரியும் ஆட்களுடன் சேர்ந்து கொடுத்தனர். பின் சற்று நேரம் அந்த குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளை ஏற்பாடு செய்து சக்தியையும் அவர்களுடன் அதில் கலந்துக்கொள்ளச் செய்து அனைவருமாக விளையாடினர். அதன் பிறகு ஏற்பாடு செய்ப்பட்டிருந்த சாப்பாடு வந்ததும் அனைவருமாக அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். மனத்திருப்தியுடன் சக்தியை அங்கிருந்த குழந்தைகளுக்கு பை பை சொல்ல சொல்லி இன்னும் சில நாட்களில் மீண்டும் அவர்களை சந்திப்பதாகவும் அவர்களுடன் விளையாடுவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி அவர்கள் வீட்டிற்கு வந்தனர் மூவரும். வீட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆன பிறகு மிருதுளா சக்தியை மடியில் உட்கார வைத்துக் கொண்டு

“சக்தி மா பார்த்தே இல்ல அந்த குழந்தைகள் எவ்வளவு சந்தோஷப்பட்டாங்கன்னு!!”

“ஆமாம் அம்மா. நானும் ரொம்ப ஹாப்பியா இருந்தேன்”

“குட். இதையே நாம உன்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும் பண்ணலாமா? உனக்கும் உன் நண்பர்களுக்கெல்லாம் அப்பா அம்மா இருக்கோம். உங்க எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்குது இல்லையா”

“ஆமாம் மா”

“ஆனா அந்த குழந்தைகளுக்கு யாருமே இல்லை மா. அதுனால நாம உன் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் ன்னு எல்லா விசேஷ நாள்களிலும் அங்கே போய் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்து வருவோமா? உன் பிறந்த நாள் அன்னைக்கு ஒரு பாக்கெட் சாக்லெட் வாங்கித்தறோம் அதை ஸ்கூல்ல குடு. நீயும் பெரியப் பொண்ணா ஆகிண்டிருக்க ல ….இந்த மாதிரி செலிப்ரேஷஸ் எல்லாம் இனி நாம பண்ணாம …அந்த பணத்தை வைத்து இது மாதிரி மத்தவாளுக்கு ஹெல்ப் பண்ணலாமா? உனக்கு வேண்டாம்னா இப்போ பண்ணினா மாதிரியே உன் பர்த்டே மட்டும் செலிப்ரேட் பண்ணலாம் நோ இஷுஸ் அட் ஆல். நீயே டிசைட் பண்ணிச் சொல்லு சக்தி.”

“நோப் பா!!! நோ!!! எனக்கு இந்த மாதிரி செலிப்ரேஷன்ஸ் வேண்டாம். அம்மா சொன்னா மாதிரி என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் என்னைப் போலவே எல்லாமும் இருக்கு. ஆனா அந்த கிட்ஸ் பாவம்ப் பா. நாம அவங்களுக்கே ஏதாவது செய்வோம். அதை பண்ண ஐ ஆம் ஹாப்பிப் பா.”

“சமத்துக் குட்டி எங்க சக்தி. ஸோ சக்தியோட நெக்ஸ்ட் பர்த்டே அன்னைக்கு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அந்த குழந்தைகளோட போய் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வருவோம் ஓகே வா”

“அம்மா என் ஃப்ரெண்ட்ஸுக்கு சாக்லெட்?”

“அது உண்டு மா. நிச்சயமா வாங்கித் தருவோம் சரியா. இப்போ நீ போய் விளையாடிக்கோ கண்ணா”

“ஓகே மா!! பை”

“ஆனா ஒன் அவர் தான் சக்தி!!! ஒன் அவர் முடிந்ததும் ஆத்துக்கு வந்திடணும் சரியா”

“ஓகே மா. நான் கரெக்ட்டா வந்திடுவேன்.”

என்று தங்கள் குழந்தைக்கு அடுத்த பிள்ளைகளின் கஷ்டத்தையும், அவர்களுக்கு உதவியதால் இவர்களுக்கு கிடைத்த ஆத்ம திருப்தியையும், மனமகிழ்ச்சியையும் எடுத்துரைத்து, சக்தியின் மனதில் தனது சக வயது குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மையை ஆழமாக விதைத்தனர் நவீனும் மிருதுளாவும். ஏனெனில் தனது மாமனார் மாமியாரின் சுயநலமான குணம், அடுத்தவர்கள் மனதைக் காயப்படுத்தும் குணம் ஆகியவை தன் பிள்ளைக்கு வந்து விடக்கூடாதென்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டாள் மிருதுளா.

மாதங்கள் பறந்தன. ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் கால் வந்தது. அதை அடென்ட் செய்தாள் மிருதுளா.

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்.”

“ஆங் சொல்லுங்கோ பா. நான் மிருது பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

“ம்..ம்…நாங்க நல்லா இருக்கோம். சரி பவினுக்கு பொண்ணுப் பார்த்தாச்சு. வர்ற ஆகஸ்டு ஒன்னாம் தேதி நிச்சயதார்த்தம் வந்திடுங்கோ. அதை சொல்லத்தான் கால் பண்ணினேன். நவீன்ட்டயும் சொல்லிடு. சரி பவினோட கல்யாண செலவுக்காக என் பெயர்ல இருக்கும் நிலத்தை விற்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம். என்பதாயிரத்துக்கு கேட்கறா அது தான் குடுக்கலாமான்னு கேட்கவும் கால் பண்ணினேன். என்ன சொல்லறேங்கள்?”

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நிச்சயமா வந்திடறோம். அது உங்க பெயரில் இருக்கும் நிலம் அதை என்ன வேணும்னாலும் நீங்க செய்துக்கலாம். இதில் நாங்க சொல்ல என்ன இருக்கு?”

“இல்ல நவீன்ட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்ன்னு தான் இதை இப்போ சொன்னேன். நீயே சொல்லிடறயா?”

“ஸ்பீக்கர்ல தான் போட்டிருக்கேன் பா. அவரும் கேட்டுண்டு தான் இருக்கார்.”

“ஓ அப்படியா சரி சரி அப்போ சரி. நான் வச்சுடறேன். நீங்க வந்திடுங்கோ”

“ம்… சரி பா. பை”

என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனைப் பார்த்து

“என்னப்பா இது திருந்திட்டா போல தெரியறதே!!! அவா பெயரில் இருக்கும் நிலத்தை அவா புள்ளக் கல்யாண செலவுக்காக விக்கப்போறதை நம்ம கிட்ட எல்லாம் சொல்லறா….சொல்லறது என்ன பர்மிஷன் எல்லாம் கேட்கறா!!! எனக்கு ஆச்சர்யமா இருக்கு நவீ”

“இதுல நீ ஆச்சர்யப் படறதுக்கு ஒண்ணுமில்லை மிருது. மறுபடியும் கவின், ப்ரவீன் விஷயத்துல என்ன பண்ணினாலோ அதையே தான் இப்பவும் செய்திருக்கா….அது புரியலையா உனக்கு? எல்லாம் முடிவு பண்ணிட்டு ஒப்புக்கு சொல்லறா நீயும் என்னமோ இதை பெரிசா நினைச்சுண்டு …திருந்திட்டதா எல்லாம் ஏமாந்துடாதே!! என் வீட்டை ஏமாத்திட்டு ….பர்மிஷன் கேட்கிற ஆளுகளைப் பாரு!!! நானெல்லாம் என் கல்யாணத்துக்கு நானே சம்பாதிச்சதை தான் செலவு செய்தேன். அதுலேயும் நிறைய பணத்தை….பத்து ரூபாய் ஆகுற இடத்துல ஐம்பது ரூபாய் ஆச்சுன்னு சொல்லி ஏமாத்திட்டா!! இப்போ இவனுக்கு நிலத்தை வித்து கல்யாணத்துக்கு காசு குடுக்கறாளாக்கும்!!! பேஷ் பேஷ்!!! ஏன் அவனும் சம்பாதிக்கரானே அப்புறம் என்ன?”

“ஓ!! ஆமாம் நவீ. நீங்க சொல்லறதும் யோசிக்க வேண்டியது தான். இப்படி எல்லாம் அவா பண்ணறதைப் பார்க்கும் போது தான் எனக்கு நீங்க அவா புள்ளை தானான்னு சந்தேகத்தைக் கிளப்பறது. இல்லை ஒரு வேளை நீங்க அவா புள்ளையாவே இருந்தாலும்… அவாளைப் பொருத்த வரை நீங்க ஒரு சம்பாதித்து தரும் இயந்திரமாகத் தான் வச்சிருந்தாளோன்னும் நினைக்கத் தோனறது!!! அது எப்படிப்பா பத்து குழந்தைகள் பெத்திருந்தாலும் எல்லா குழந்தைகளையும் சமமாக தானே பார்க்கணும்? ஏன் இவ்வளவு வித்தியாசம் காட்டுறா? சரி அதெல்லாம் விடுங்கோ…அதை எல்லாம் யோசிக்க யோசிக்க நான் தான் குழம்பிப் போவேன்…இப்போ நாம பவின் நிச்சயத்துக்கு போகணும் இல்லையா… அதுக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்லை!!! ஸோ டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடவா?”

“உனக்கு எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதா? பண்ணு பண்ணு”

என்று நவீன் கூறியதும் மிருதுளா ஒரு நாள் முன் அங்கு ரீச் ஆவது போல மூன்று டிக்கெட்டுகளை ரெயிலில் ஜூலை முப்பதாம் தேதிக்கு புக் செய்தாள். ஜுலை முப்பதாம் தேதி வந்தது. மூவரும் பவினின் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல ரெயிலில் புறப்பட்டுச் சென்றனர். முப்பத்தி ஒன்றாம் தேதி காலையில் ஊரைச் சென்றடைந்தனர். அங்கே அந்த வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் அவர்கள் அப்பார்ட்மென்ட் காலியாக இருந்தமையால் அங்கேயே சென்று தங்கினர். குளித்து ஃப்ரெஷானப் பின் அருகே இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நடக்கும் தூரத்திலிருந்த நவீனின் ரமணிப் பெரியம்மா பெரியப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு ஈஸ்வரன் வீட்டிற்கு செல்லலாமென்று அங்கே சென்றனர். மூவரையும் பார்த்ததும் நவீனின் பெரியம்மாவும் பெரியப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்களை வீட்டினுள் அழைத்து அமரச்செய்து தண்ணீர் கொடுத்தனர். பின் நவீனின் பெரியப்பா நவீனிடம்

“எப்போ வந்தேங்கள்”

“இன்னைக்கு விடியற் காலையில தான் வந்தோம் பெரியப்பா. சரி எப்படியும் உங்க ஆத்த க்ராஸ் பண்ணித்தான் அங்கே போகணும் ஸோ முதலில் உங்களைப் பார்த்துட்டு அங்கே போகலாம்ன்னு தான் வந்திருக்கோம்”

“ரொம்ப சந்தோஷம் பா. என்ன சாயந்தரம் நிச்சயதார்த்ததை வச்சுண்டு நீங்க காலையில தான் வந்திறங்கிருக்கேங்கள்!!”

“நாளைக்கு சாயந்தரம் தானே பெரியப்பா அதுனால தான் இன்னைக்கு வந்தோம். ஒரு நாள் முன்னாடி வந்தா போறாதா என்ன? புள்ளை ஆத்துக் காரா தானே”

“நாளைக்கா!!! இல்லைடா… ஹோட்டல் அக்க்ஷயாவுல இன்னைக்கு சாயந்தரம் நடக்கப் போறது”

“என்னது இன்னைக்கா? எங்ககிட்ட ஒன்னாம் தேதின்னு சொன்னாலே”

“இல்லமா மிருது இன்னைக்கு தான். முப்பத்தி ஒன்னுன்னு சொன்னது உனக்கு ஒன்னுன்னு கேட்டுதோ!!”

“இல்லை பெரியப்பா நானும் கேட்டேனே ஒன்னாம் தேதின்னு தான் சொன்னா”

“ஏன் அப்படி சொன்னா? எங்களையும் மத்திய சாப்பாட்டுக்கு அங்க வரச்சொன்னா. நாங்க தான் சாயந்தரம் ஹோட்டலுக்கே நேரா வந்திடறோம்னு சொன்னோம். சரி நீங்க சாப்டேளா? ரமணி இவாளுக்கும் சாப்பாடு எடுத்து வை”

“இல்லப் பெரியப்பா பரவாயில்லை. நாங்க இங்க வரதுக்கு முன்னாடி தான் ஹோட்டல்ல சாப்டுட்டு வந்தோம். எங்களுக்கு பசிக்கலை.”

“ஏன் அப்படி பண்ணினேங்கள்? இங்கே வரேங்கள்ன்னா எதுக்கு ஹோட்டலுக்கு போனேங்கள்? நேரா ஆத்துக்கே வந்து சாப்பிட்டிருக்கலாமே?”

“எங்களுக்கு செம பசி பெரியப்பா அதுதான் சாப்டுட்டே வந்துட்டோம். சாரி. இல்லாட்டி இங்க வந்து தான் நிச்சயம் சாப்ட்டிருப்போம்”

“சரி அப்போ நீங்க இங்கேயே இருந்துட்டு நாம வேணும்னா சேர்ந்து ஒன்னா நிச்சயத்துக்கு போகலாமே!! என்ன சொல்லுற நவீன்?”

“இல்ல பெரியப்பா நீங்க போயிட்டு வாங்கோ. நாங்க வரலை”

“ஏன்ப்பா?”

“நாங்க வரவேண்டாம்ன்னு தானே தப்பான தேதியை சொல்லிருக்கா!! அப்புறம் எதுக்காக நாங்க வரணும். எல்லாம் அவா புள்ளகள் இருக்காளே அவா பார்த்துப்பா.”

“விடுப்பா!!! இதெல்லாம் பெரிசா எடுத்துக்காம வாப்பா”

“என்ன சொல்லறேங்கள் பெரியப்பா? இப்படி தான் கவின் கல்யாணத்துலேந்து நிறைய தடவை நாங்க மட்டுமே போகட்டும் பரவாயில்லை! போகட்டும் பரவாயில்லைன்னு நினைச்சு விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து போனதால தான் இன்னைக்கு அதே மாதிரியே நடந்துக்கறா. ஒவ்வொரு கல்யாணத்துலேயும் ஒவ்வொரு டைப்பா ப்ளான் பண்ணி எங்களை அவமானப்படுத்திண்டே தான் இருக்கா. இந்த தடவை நாங்கள் இறங்கிப் போகப் போவதில்லை. நீங்க நாங்க வந்ததைப் பத்தி சொல்லாம… வேணும்னா இருந்துப் பாருங்கோ …மண்டபத்துல எல்லார்கிட்டயும் நாங்க அழைச்சோம் அவா தான் வரலைன்னு சொல்லி அங்கேயும் எங்களை அவமதிக்கத்தான் செய்வா!! சரி உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போறது. நாங்க போயிட்டு வரோம். மிருது கிளம்பலாமா?”

“ச்சே!!! ஏன் இந்த பர்வதம் இப்படி எல்லாம் நடந்துக்கறாளோ!!! சரிப்பா நாங்களும் என்னதான் செய்யறது? உங்களுக்கு என்னத்தை சொல்லி சமாதானப்படுத்தறதுன்னு ஒண்ணும் புரியலைப்பா”

“பரவாயில்லை பெரியம்மா. நீங்க ஏன் வருத்தப்படுறேங்கள். நாங்க போயிட்டு வரோம்”

“இந்தா மிருது குங்குமம் எடுத்துக்கோ”

“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ பெரியப்பா அன்ட் பெரியம்மா”

“நன்னா இருங்கோப்பா. நாங்க போயிட்டு வந்து உங்களுக்கு சொல்லறோம்”

“வேண்டாம் பெரியம்மா. எங்களை மதிக்காதவாளைப் பத்தி எதுவும் நாங்க தெரிஞ்சுக்க விரும்பலை. வரோம்.”

என்று கூறிவிட்டு அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கே திரும்பி சென்றார்கள் நவீனும் மிருதுளாவும். வீட்டிற்குள் நுழைந்ததும் மிருதுளா மொபைலுக்கு ஒரு கால் வந்தது. அது யாரென்று கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்பாக அடென்ட் செய்தாள்

“ஹலோ”

“ஹலோ மிருது நான் அம்மா பேசறேன். என்ன உன் ஃபோன் ரெண்டு மூணு நாளா ரீச் ஆகவேயில்லை”

“நீயா!!! ஆமாம் மா …நாங்க டிராவல் பண்ணினதால டவர் இருந்திருக்காது. என்ன சொல்லு”

“நீங்களும் ஊருக்குத் தான் வந்திண்டிருப்பேங்கள்னு நினைச்சேன். நாங்க இன்னைக்கு நம்ம ஊருக்கு தான் வந்திண்டிருக்கோம். சாயந்தரம் பவின் நிச்சயதார்த்தம் அட்டென்ட் பண்ண தான் புறப்பட்டு வந்திண்டே இருக்கோம். அங்கே ஏற்பாடெல்லாம் தடபுடலா நடக்கறதா? ஹலோ!!! ஹலோ!!!! மிருது….ம்….போச்சு டவர் இல்லை. சரி டவர் வந்துட்டு பேசிப்போம்”

என்று அம்புஜம் ஃபோனை கட் செய்தாள்.

“ஹலோ !! ஹலோ!! அம்மா!! கேட்கறதா?…போச்சு கால் கட் ஆயிடுத்தே!!”

“என்ன ஆச்சு மிருது? யாரு ஃபோன் ல உன் அம்மா வா?”

“ஆமாம் நவீ! அவா பவின் நிச்சயத்துக்கு தான் வந்திண்டிருக்கான்னு சொன்னா. ஆனா அதுக்கப்புறம் சொன்னது எதுவுமே சரியா கேட்கலை. அவாளுக்காவது சரியான தேதி சொல்லிருப்பாளா இல்லை நமக்கு மாதிரி தப்பானதை சொல்லிருப்பாளா?”

“அதை உன் பேரண்ட்ஸ் வந்தாலோ இல்லை மறுபடியும் டவர் கிடைத்து பேசினாலோ தான் தெரிஞ்சுக்க முடியும். ஏன் நீ உன் அம்மா கிட்ட பேசலையா?”

“இல்லை நவீ நான் பேசியே ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடுத்து”

“அம்மா!! அப்பா !! சித்தப்பா நிச்சயத்துக்கு நான் இந்த டிரஸை போட்டுக்கட்டுமா?”

“சக்திமா நீ எந்த டிரஸ் வேணும்னாலும் போட்டுக்கலாம் கண்ணா. நாம நாளைக்கு சென்னைக்கு தாத்தா பாட்டி ஆத்துக்கு போகலாம் சரியா”

“அப்போ பவின் சித்தப்பா நிச்சயதார்த்தம்?”

“அதுக்கு நாம இப்போ போக முடியாது மா ரொம்ப தூரத்துல வச்சிருக்கா. நாம இப்போ கிளம்பினாலும் ரீச் ஆக முடியாது கண்ணா….பரவாயில்லை நாம வேற எங்காவது போயிட்டு வரலாம் சரியா”

“வேற எங்கே போகப் போறோம் மா?”

“சரி சரி ஈவ்னிங் நாம எங்கயாவது வெளியே போயிட்டு வருவோமா. அப்புறம் நைட் பஸ் பிடித்து சென்னை போயிடலாம்”

“நவீ ஆனா அப்பா அம்மா இங்கே வந்துண்டு இருக்காளே!!”

மீண்டும் மிருதுளாவுக்கு ஃபோன் கால் வந்தது. மிருதுளா எடுத்தாள்

“ஹலோ அம்மா சொல்லு”

“மிருது நாங்க ஊருக்கு வந்துட்டோம். நீங்க எங்கே இருக்கேங்கள்? நிச்சயம் நடக்குற ஹோட்டல்லயா? இல்ல ஆத்துலையா? நாங்க எங்கே வரணும்?”

“அம்மா நீ டிரெயின் ல வந்திருக்கயா?”

“இல்ல மிருது சென்னையிலிருந்து கார் வச்சுண்டு வந்திருக்கோம். இப்போ அந்த ஹோட்டலுக்கு வெளியே தான் வெயிட் பண்ணிண்டிருக்கோம்”

“அம்மா பேசாம ரெண்டு பேரும் எங்கேயும் போகாம நம்ம அப்பார்ட்மெண்ட்டுக்கு வாங்கோ”

“என்னடி மிருது சொல்லற? நிச்சயதார்த்தம் தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் தானே இருக்கு…இன்னுமா நீங்க இங்க வரலை?”

“அம்மா நான் சொல்லறதை மட்டும் கேளு ப்ளீஸ். நேரா நம்ம அப்பார்ட்மெண்ட்டுக்கு வாங்கோ எல்லாம் எக்ஸ்ப்ளேயின் பண்ணறேன்”

“சரி மா இதோ வரோம். டிரைவர் வண்டியை விஜயா அப்பார்ட்மெண்ட்டுக்கு விடுப்பா. ஏன்னா வழியை நீங்க சொல்லுங்கோ. முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்கேளே”

“ஏன் இப்போ அங்க போகச் சொல்லற? அப்போ நிச்சயதார்த்தம்?”

“என்ன விவரம்ன்னு தெரியலை. நம்ம மிருது தான் அங்கே வரச்சொன்னா. அங்க போய் விவரம் கேட்டுப்போம்”

“அப்போ அவா நிச்சயதார்த்தத்துக்கு வரலையா?”

“எனக்கும் ஒண்ணும் தெரியாது. அவாகிட்ட போய் கேட்டுப்போம். நீங்க வழியை சொல்லுங்கோ”

என்று ராமானுஜமும், அம்புஜமும் விஜயா அப்பார்ட்மெண்ட்ஸுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே மிருதுளா வீட்டுக்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தினர். மிருதுளா கதவைத் திறந்தாள். அம்புஜம் உள்ளே நுழைந்துக்கொண்டே

“ஏம்மா நீங்க இன்னும் கிளம்பாம இருக்கேங்கள்?”

“பாட்டி”

“சக்தி…வாடாக் கண்ணா”

“ஆமாம் அம்மா …உங்க கிட்ட என்னைக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொன்னா?”

“இன்னைக்குத் தான்னு ஃபோன்ல சொன்னா”

“பொண்ணு வீடு மெட்ராஸ் தானாம் ரமணி பெரியம்மா சொன்னா”

“அப்படியா!!”

“என்ன அப்படியான்னு வாயைப் பொளக்கற? அப்போ பேசறதுக்கு…பெண் பார்ப்பதற்கு எல்லாத்துக்கும் சென்னை வந்திருப்பா தானே!!! நீங்க மூத்த சம்மந்தி தானே? அவா ஊருக்கு திரும்பி போற வழிதானே நம்ம வீடு… ஏன் ஆத்துக்கு வந்து அழைக்கக்கூடாதா?”

“அதெல்லாம் நாம எதிர்ப்பார்க்கக் கூடாது மிருது. ஆரம்பத்திலிருந்தே நம்மளை அப்படி தானே நடத்தறா?”

“அப்புறம் ஏன் மா? எல்லா விசேஷத்துக்கும் செலவழிச்சுண்டு வரேங்கள்?”

“பொண்ணக் குடுத்திருக்கோம் இல்லையா மா”

“அதுனால? சரி அதெல்லாம் விட்டுவிடுவோம். உங்களுக்கு சரியான தேதியை சொன்ன அவா எங்களுக்கு ஏன் தப்பான தேதியை சொல்லணும்?”

“புரியலை மிருது!! என்ன சொல்லற?”

“எங்களுக்கு நாளைக்கு தான் நிச்சயதார்த்தம்ன்னு சொன்னா. அதுனால தான் நாங்க இன்னைக்கு காலையில வந்தோம். சரி அங்க போற வழில தானே பெரியப்பா பெரியம்மா இருக்கான்னு அவா ஆத்துக்கு போனோம் அங்க தான் விஷயமே தெரிஞ்சுது. ஏன் மா உனக்கு ப்ரவீன் கல்யாணத்துல அவா நடத்தின குழப்பத்தப்பவே எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுன்னு சொல்லிருக்கேன் ல அப்புறம் ஏன் மா இதை நீ சொல்லலை?”

“என்ன மிருது பேசற ஒரு மாசம் முன்னாடி ஃபோன் பேசினப்பவே நான் சொன்னேனே உன் மாமனார் மாமியார் பவின் நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிருக்கான்னு”

“அம்மா !!! அம்மா!!! அழைச்சிருக்கான்னு மட்டும் தானே மா சொன்ன!!! ஃபோன்லன்னு சொன்னயா? இல்ல டேட்டை சொன்னயா?”

“எனக்கு என்னடி உங்களுக்கு தப்பான டேட்டை சொல்லுவான்னு ஜோசியமா தெரியும்”

“அம்மா!!! இதுக்கு ஜோசியமெல்லாம் தெரிஞ்சிருக்க வேண்டாம். விஷயத்தை ஒழுங்கா சொன்னாலே போதும்”

“மிருது!!! மிருது!!! கம் ஆன்!! நீ ஏன் இவா கிட்ட பிரச்சினை பண்ணற? இவா என்ன பண்ணுவா? அதுதான் நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிருக்கான்னு சொன்னா ல. அப்புறம்!!! அவா விளையாடின விளையாட்டுக்கு நீ ஏன் உன் பேரண்ட்ஸ்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்குற? அவா சொல்லறா மாதிரி எங்காத்துக் காரா இப்படி எல்லாம் செய்வான்னு அவாளுக்கு எப்படி தெரியும்?? எங்காத்துக் காரா தான் புதுசு புதுசா தினுசு தினுசா இல்ல எல்லாம் செய்யறா? நாமே ஏமாந்திருக்கோம் அப்புறம் இவா என்ன பண்ணுவா?”

“சாரி மிருது நான் இனி எல்லாத்தையுமே சொல்லிடறேன் மா. இந்த தடவை மன்னிச்சுக்கோ”

“இனி என்ன இருக்கு? விடு விடு மா. நவீ சொல்லறா மாதிரி உங்ககிட்ட கோபப்பட்டு என்ன ஆகப் போறது? நானாவது உன்கிட்ட விவரமா கேட்டுண்டிருக்கணும். என் தப்பும் தான்”

“சரி மிருது நீ உன் அம்மாகிட்ட விவரமா கேட்டு…நமக்கு தப்பான தேதியை சொல்லிருக்கான்னு தெரிய வந்திருந்தா என்ன பண்ணிருப்ப?”

“இவ்வளவு தூரம் டிராவல் பண்ணாம இருந்திருக்கலாம் இல்லையா!!! டிராவல் செய்து வந்து அசிங்கப்படாம இருந்திருக்கலாமே!!”

“ம்….அது என்னவோ சரி தான். நமக்கும் செலவு மிச்சமாகிருக்கும்”

“சரி இப்போ நாங்க என்னப் பண்ணறது மாப்ள?”

“உங்களுக்கு என்ன பண்ணணும்னு தோனறதோ அதை பண்ணுங்கோ”

“அம்மா உன் மாப்பிள்ளையையும் பொண்ணையும் மதிக்காத இடத்துக்கு நீங்க மட்டும் போய் அந்த விசேஷத்தை அட்டென்ட் பண்ணப் போறேளா?”

“இல்லவே இல்லை உங்க ரெண்டு பேருக்காக தான் நாங்க அவா எங்களை அவமரியாதைப் பண்ணினாலும் விட்டுக் கொடுக்காம எல்லா விசேஷத்தையும் அட்டென்ட் பண்ணறோம். இப்போ உங்களையே வேண்டாம்ன்னு வச்சவா விசேஷத்துக்கு நாங்க ஏன் போகணும்? நாங்க போகலை. இங்கேயே இருந்துக்கறோம். ஆனா என்ன நாங்க அட்டென்ட் பண்ணிட்டு நைட் டின்னர் முடிச்சுட்டு உடனே திரும்பிடலாம்ன்னு தான் வந்திருக்கோம். டிரைவர் நைட்டுத் தங்குவாரான்னு தெரியலையே!!!”

“ஓ!! ஓ!!! இப்ப என்ன அவரை மட்டும் காரை எடுத்துண்டு திரும்பிப்போகச் சொல்லுப்பா”

“அதுக்கில்லை அவன் காலியா திரும்பினாலும் நாங்க டூ வேக்கு பணம் கொடுத்தாகணும்.”

“மிருது, மாப்ளை வந்தது வந்தாச்சு பேசாம நீங்களும் எங்களோட சென்னைக்கு வந்து ஒரு வாரம் தங்கிட்டு போங்கோளேன்”

“வரலாம்!!! ஆனா எங்களோட ரிட்டர்ன் டிக்கெட் இங்கேந்து தான் இருக்கு”

“மிருது லீவ் இட். அதை கேன்சல் பண்ணிடுவோம். பேசாம இவா கூடவே சென்னை போயிட்டு ஒரு இரண்டு நாள் இருந்துட்டு அங்கேந்தே பம்பாய் கிளம்புவோம்”

“அப்படிங்கறேங்களா? ஆனா உங்க ஆத்து மனுஷாகிட்ட இதைக் கேட்க வேண்டாமா?”

“கேட்டு?”

“அதுக்காக நாம அப்படியே விட்டுட்டு போனோம்னா அவா பழியை நம்ம மேல தான் போடுவா நவீ. ஏதோ நாம தான் வேணும்ன்னே வரலைன்னு சொல்லிடுவா”

“சொல்லிக்கட்டும் மிருது. என்னென்னவோ சொல்லிருக்கா!! செய்திருக்கா!!! அதோட இதுவும் சேரட்டும். கேட்டா ஒரு பிரயோஜனமும் இருக்கப் போறதில்லை!! பின்ன ஏன் நாம நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும் சொல்லு”

“அதுவும் கரெக்ட் தான் நவீ. ஆனா என் மனசு ஆற மாட்டேங்கறது!! ஏன் இப்படி எல்லாம் பண்ணறாளோ!! சரி அப்படி நாம வரவேண்டாம்ன்னு நினைக்கறவா ஏன் கால் பண்ணி தப்பான டேட்டைச் சொல்லணும் அதுக்கு பதிலா சொல்லாமலே இருந்திருக்கலாமே!!”

“இங்கே தான் அவா ப்ளானை நீ புரிஞ்சுக்கலை மிருது. அவாகிட்ட நமக்கு ஃபோன் பண்ணின கால் ரிஜிஸ்டர் வச்சிருப்பா…ஸோ அவா நம்மளை கூப்பிட்டா அப்படீங்கறதுக்கு எவிடன்ஸ் இருக்கு ஆனா தப்பான தேதியை சொல்லி தான் நம்மகிட்ட விசேஷத்துக்கு அழைச்சான்னு ப்ரூவ் பண்ண நம்ம கிட்ட ஏது எவிடன்ஸ்? புரியறதா?”

“அச்சோ!!! அந்த வார்த்தையை கேட்டாலே ஆத்திரம் ஆத்திரமா வருது நவீ. சரிப்பா உங்க அப்பா தான் அப்படி தப்பா சொல்லிருந்தாலும் இந்த பவின் பையனுக்கு ஒண்ணு நமக்கு ஃபோன் பண்ணிச் சொல்லணும்ன்னு தோனலைப் பாருங்கோளேன்!! அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு”

“விடு விடு எல்லாரும் வளர்ந்துட்டாமா!!! இருக்கட்டும் இருக்கட்டும். நீ ஏன் சங்கடப்படற? சரி நாம கிளம்பி சென்னை போகலாம்‌. ரொம்ப லேட் ஆக்க வேண்டாம். வா எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துப்போம்”

“எங்களால இதெல்லாம் நம்பவே முடியலை!!! எப்படி எல்லாம் திட்டம் போட்டு இப்படி ஒவ்வொரு தடவையும் உங்க ரெண்டு பேரையும் பாடாப்படுத்தறாளே அவா!! இதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”

“என்னப் பண்ண மா? என்னப் பண்ண?”

“சரி மிருது எல்லாத்தையும் எடுத்துண்டாச்சு. கிளம்பலாமா?”

“நவீ சக்திக்கு பசிக்கும் பா. அதுவுமில்லாம அப்பா அம்மாக்கும் பசிக்கும். மத்தியானம் சாப்ட்டுட்டு வந்திருப்பா இப்போ மணி ஏழாச்சு”

“நாம போற வழியில இருக்குற ஹோட்டல்ல டின்னர் சாப்டுட்டு போவோம்”

என்று வீட்டைப் பூட்டி சாவியை மிருதுளா தன் கைப் பையில் போட்டுக் கொண்டு அனைவரும் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். சென்னைக்கு போகும் வழியில் தான் பவினின் நிச்சயதார்த்தம் நடக்கும் ஹோட்டல் இருந்தது. அதன் அருகே செல்லும் போது நவீனும் மிருதுளாவும் அந்த ஹோட்டலையே பார்த்துக் கொண்டே சென்றனர். மிருதுளா கண்கள் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது. அதைப் பார்த்த நவீன் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே தன் கண்களால் இவர்களுக்காக எல்லாம் அழாதே விட்டுத் தள்ளு என்று ஜாடைக்காட்ட அதைப் புரிந்துக் கொண்ட மிருதுளா நவீனிடம்

“என் கண்ணீர் அவாளை எண்ணி வரலை நவீ. உங்களைப் பார்த்துத்தான்… உங்களுக்காக தான் …என் மனசின் வலி கண்ணீரா வெளிய வர்றது”

தொடரும்…..













Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s