அத்தியாயம் 86: பர்வதத்தின் பொய் பல் இளித்தது!

பர்வதம் தான் கேட்கச் சொன்னாள் என்ற உண்மையை ரமணி போட்டுடைத்ததும் ஃபோனை வைத்து விட்டு தலையை தொங்கப் போட்டப்படி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார் ஈஸ்வரன். அவரிடம் பர்வதம்

“நான் சொல்லறதை நம்பாம இவா ரெண்டு பேரும் சொல்லறதை கேட்டு ஃபோன் போட்டேளே என்ன சொன்னா என் அக்கா? நான் சொல்லலைன்னு தானே சொன்னா? அதை கேட்டுத் தானே இப்படி உட்கார்ந்திருக்கேங்கள்? ம்…அதை இவாகிட்டயும் நல்லா கேட்கறா மாதிரி சொல்லுங்கோ”

“சும்மா இரு பர்வதம்”

“நான் ஏன் சும்மா இருக்கணும். என்னை வச்சுத்தானே இவ இப்படி சொல்லறா அப்புறம் எப்படி நான் சும்மா இருப்பேன்?”

“பர்வதம்….நீ தான் கேட்கச் சொன்னேன்னு உன் அக்காக்காரி சொல்லறா!! போதுமா!! அவ நான் கேட்டதுக்கு ஆமாம்ன்னு சொல்லிட்டு… ஏன் கேட்கறேங்கள்? எதுக்கு கேட்கறேங்கள்ன்னு கேட்கறா!!! நான் என்னத்தை சொல்ல? அதுதான் ஃபோனை வச்சுட்டேன். இப்போ கொஞ்சம் சும்மா இருக்கயா!!”

“பார்த்தேங்களா அப்பா நான் சொன்னது சரி தானே!!! கேட்டுக்கோங்கோ நவீ. ஏன் நான் அவ்வளவு ஊர்ஜிதமா சொன்னேன்னா ….அம்மா போய் ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஏதோ சொன்னதும் அவா நேரா என் கிட்ட வந்து அந்த கேள்வியை கேட்டா அப்பவே எனக்கு சந்தேகம் தான். ஏன் மா உங்களுக்கு உண்மையிலேயே என் மேல அக்கறை இருந்திருந்தா நீங்க நேரா என் கிட்ட இல்லையா வந்து கேட்டிருக்கணும். ஏன் அதை செய்யாம இப்படி ஒவ்வொருத்தரையா தூது அனுப்பினேங்கள்? அப்படி நீங்க அனுப்பியவா வந்து மாறி மாறி என் கிட்ட கேட்கும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? இல்லை அப்படி நான் ஃபீல் பண்ணணும்ன்னு தான் செஞ்சேங்களா? ஏன் இப்படி ஒவ்வொரு விசேஷத்துக்கும் என் பெயரை மண்டபமே ஒலிக்கச் செய்யறேங்கள்? அதுனால உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கறது? இனியும் இதே மாதிரி பண்ணிணேங்கள்னா அப்புறம் நான் இவ்வளவு பொறுமையா எல்லாம் ஹாண்டில் பண்ண மாட்டேன். நானும் எவ்வளவு தான் பொறுத்துப்பேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. தயவுசெய்து என்னை அந்த எல்லையை மீற வச்சுடாதீங்கோ. நீங்க என்னை எவ்வளவோ அசிங்கப் படுத்திருக்கேங்கள், அவமானப்படுத்திருக்கேங்கள், பாடா படுத்திருக்கேங்கள் ஆனா ஒரு தடவை கூட நான் உங்க கிட்ட மரியாதை குறைவாகவோ இல்லை திமிராகவோ நடந்துண்டதே இல்லை இது உங்களுக்கே நல்லா தெரியும். இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும். ப்ளீஸ் இது மாதிரி வேலையெல்லாம் நிறுத்திக்கோங்கோ. அப்பா இப்படி தான் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு ஆனா எனக்கு தான் எவிடன்ஸ் கொடுக்கணும்ன்னு தெரியாம போச்சு. அப்படி ஒரு குடும்ப வழக்கம் இருப்பதை உங்க புள்ளை தான் எங்களுக்கு நல்லா புரிய வச்சான். அதுதான் இதை எவிடன்ஸோட ப்ரூவ் பண்ணணும்னு வந்தேன். பண்ணிட்டேன். இனி இது நடக்காமல் பார்த்துக்க சொல்லுங்கோ.”

“என்ன விட்டா பேசிண்டே போற? நான் மறுபடியும் சொல்லறேன் நான் யாருகிட்டேயும் அப்படி கேட்கச் சொல்லி சொல்லவேயில்லை….நான் சொல்லறதை இவ பார்த்தாளாம் …அவா வந்து இவ கிட்ட கேட்டாளாம்…எனக்கு வேற வேலையில்லை பாரு”

“ஏய் பர்வதம் சும்மா இரு. உன் அக்கா சொல்லிட்டான்னு சொல்லறேன் அதுக்கப்புறமும் என்ன பேச்சு வேண்டிருக்கு?”

“ஆமாம் அக்…கா…..அவ யாரு சொல்லறதுக்கு? அவளுக்கு என் மேலே பொறாமை அதுதான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ணறா. அதுக்கு நான் ஏன் பேசாம இருக்கணும்?”

“அம்மா கொஞ்சமாவது நியாயமா பேசுங்கோ. இங்கே என்ன நடக்கறதுன்னு பெரியம்மாவுக்கு தெரியாது. அப்பா ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்ன்னும் அவாளுக்கு தெரியாது. ஆனா கேட்டதும் பளிச்சுன்னு பதில்….உண்மையான பதிலை நச்சுன்னு சொல்லிருக்கா….அவா நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இருந்தா ஏன் எதுக்குன்னு கேட்டுட்டு தான் பதிலே சொல்லிருக்கணும் இல்லையா!!!”

“அதெல்லாம் இல்லை அவ பொறாமையில தான் அப்படி சொல்லிருக்கா”

“ம்…ம்…தூங்கறவாளை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிக்கறவாளை எழுப்பறதுங்கறது நடக்காத காரியம். அப்படி உங்களை எழுப்பணும்ன்னு எனக்கு எந்த வித அவசியமும் இல்லை. நீங்க அப்படி எல்லார்கிட்டேயும் தேவையில்லாம தேவையில்லாத ஒரு விஷயத்தை சொல்லி பரப்பி விட்டேங்கள் னு எனக்கு தெரியும், அந்த கடவுளுக்கு தெரியும், ஏன் உங்களுக்கும் நல்லாவே தெரியும் ஆனா நீங்க ஒத்துக்க தயாரா இல்லை அவ்வளவு தான். ஒண்ணு மட்டும் சொல்லறேன்…தப்பு பண்ணறதுங்கறது மனுஷாளா பொறந்த எல்லாரும் செய்யறது தான் ஆனா அதை பாதிக்கப்பட்டவா சொல்லும் போது அதுவும் எவிடன்ஸோட சொல்லும்போது ஒத்துக்காட்டாலும் பரவாயில்லை அதை மறுபடியும் செய்யாதிருங்கோ. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம். எப்பவுமே உங்க இஷ்டத்துக்கு தானே நடக்கறேங்கள். நவீ நாம கிளம்பலாமா. நாங்க போயிட்டு வர்றோம்”

“ம் … கிளம்பலாம் மிருது.”

என்று அவ்வளவு பேச்சு வார்த்தை நடந்தும் ஏதும் பேசாமல்…பேச விருப்பமில்லாமல் ….மிருதுளா கிளம்பலாமா என்று கேட்டதும் அமர்ந்திருந்த நவீன் விருட்டென்று எழுந்து வேகமாக வெளியே சென்றான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தப்படியே பின்னால் சென்றாள் மிருதுளா. வெளியே வந்து பஸ்ஸுக்காக காத்திருந்த போது

“ஏன் நவீ அங்கே அவ்வளவு நடந்தது. நான் எவிடன்ஸோட ப்ரூவ் பண்ணியும் உங்க அம்மா தன்னோட ஸ்டேட்மென்ட்டிலிருந்து கடைசி வரை மாறவேயில்லை. உண்மையை சொன்ன பெரியம்மா… அவா அக்காவையே பொறாமைப் பிடிச்சவான்னு பட்டுன்னு சொல்லிட்டா!!! ஆனா நீங்க ஏன் ஒண்ணுமே சொல்லலை?”

“என்ன சொல்லணும்ன்னு எதிர்ப்பார்த்த?”

“ஏதாவது…ஏன் மா ஃபர்ஸ்ட் சொல்லவேயில்லைனு சொன்ன இப்போ பெரியம்மா உண்மையை சொல்லிட்டா இப்பவும் அதையே ஏன் சொல்லற? இனி இது மாதிரி எல்லாம் பண்ணாதே!! ஏதாவது சொல்லிருக்கலாமே…”

“ஹா…ஹா…..ஹா… மிருது நீ இவ்வளவு பேசி, ப்ரூவ் பண்ணி ஏதாவது நடந்துதா? தான் சொன்னதையே தானே சொல்லிண்டிருந்தா?”

“ஆனாலும் பெரியம்மாவையே அப்படி சொல்லிட்டாளே அப்பவாவது ஏதாவது சொல்லிருக்கலாமே”

“வீட்டை ஏமாத்தினவா, அதை கேட்கப் போன என்னை புள்ளைன்னு கூட பார்க்காம தூக்கிப் போட்டவா, வீட்டை விட்டு வெளியே துறத்தினவா, அவாகிட்ட நியாயத்தை எதிர்ப்பார்ப்பது நம்ம தப்புன்னு நான் புரிஞ்சுண்டு பல நாள் ஆச்சு. சுயநலம் ஓங்கி இருக்கும் இடத்தில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. அவாளோட சுயநலத்துக்காக யாரை வேணும்னாலும் தூக்கிப் போடுவா…யார் மேல வேணும்னாலும் பழி போடுவா. அப்போ வீட்டு விஷயத்துல நான் இப்போ இந்த விஷயத்துல தன்னைக் காப்பாத்திக்க பெரியம்மாவை பலி ஆக்கிருக்கா!!! அவ்வளவு தான். இதில் நான் என்ன பேச? இல்லை பேசினா தான் கேட்கப்போறாளா!!! அதுனால தான் நீ எப்படா அங்கிருந்து கிளம்புவன்னு வெயிட் பண்ணிண்டிருந்தேன்.”

“என்ன கொடுமை நவீ இது. உங்க பெத்தவா ஆத்துலேந்து சீக்கிரம் கிளம்புவோம்ன்னு நினைக்கிற அளவுக்கா நீங்க மாறிட்டேங்கள்?”

“வேற வழி. அவா அடிக்கற கூத்தெல்லாத்தையும் பார்க்க பார்க்க அப்படி தான் நினைக்கத் தோனறது. தோனறது என்ன நினைக்க வச்சுட்டா. அப்பா அம்மா வா என்னோட விளையாடவோ, பேசவோ, ஏதாவது செய்யவோ, இல்லை பொறுப்பா இருக்கவோ ….எதுவுமே பண்ணினதில்லை அட்லீஸ்ட் எனக்கு துரோகம் பண்ணாம இருந்திருந்தா கூட எனக்கு இப்படி தோனிருக்காது. ஆனா அதையும் செய்துட்டாளே!!! செஞ்சது மட்டுமில்லாம என்னை ….விடு மறுபடியும் எல்லாத்தையும் ஏன் பேசணும்? எனக்கு இவாகிட்ட இருந்த பந்தம் பாசம் எல்லாமே விட்டுப் போச்சு மிருது. மரியாதை இல்லை, அக்கறை இல்லை, பொறுப்பில்லை எதுவுமே இல்லை. அவா அவாளுக்காக மட்டுமே தான் வாழ்ந்திருக்கா, வாழ்ந்துண்டுமிருக்கா. உன்னைப் படுத்தும் போதெல்லாம் நான் ஏதோ மாமியார் தனத்தைக் காட்டத் தான் அப்படி நடந்துக்கறான்னும் போக போக சரி ஆகிடும்ன்னும் நினைச்சேன் ஆனா அது அப்படி இல்லைன்னு புரிஞ்சுண்டுட்டேன். அதுதான் விலகிட்டேன். உன்னையும் அதுக்குத்தான் கேட்க வேண்டாம்ன்னும் சொன்னேன். நீ தான் ப்ரூஃபோட சொல்லறேன்னு சொல்லிண்டு வந்தே என்ன ஆச்சு ப்ரூஃப் எல்லாத்தையும் பொறாமைங்கற ஒத்த வார்த்தையால ஊதித்தள்ளிட்டா பார்த்தே இல்ல….இதுல நான் ஏதாவது சொன்னா மட்டும் என்ன ஆகிடப் போறது? அதுக்கும் ஏதாவது ஒண்ணு ரெடியா வச்சிருப்பா. விடு மிருது அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் நாம நம்ம லைஃப் மட்டும் பார்த்துண்டு போயிண்டே இருப்போம்”

“அதெல்லாமே ஓகே தான் நவீ. ஆனா அப்படி எல்லாம் எப்படி ஒதுங்கி நாம வாழறது? அதுவுமில்லாம அப்படி எல்லாம் நம்மள நிம்மதியா இவா வாழ விட மாட்டா. குடும்பம்ன்னா எல்லாருமே நல்லவாளா இருக்க மாட்டா நவீ. நாம தான் ஆளுக்கு தகுந்தா மாதிரி இருந்துக்கணும். யாருமே இல்லாம எல்லாம் எப்படி இருக்கறது?”

“என்ன பேசற மிருது. குடும்பம்னா எல்லாருமே நல்லவாளா இருப்பான்னு எதிர்ப்பார்க்கலை ஆனா பெத்தவா நல்லவாளா இருக்கணுமில்லையா!!!இவாளை வேண்டாம்ன்னு வச்சா நமக்கு யாருமே இல்லாமயா போயிடுவா?”

“உங்களுக்கு இன்னமும் உங்க பேரன்ட்ஸோட ஸ்ட்ரெங்கத் தெரியலை. அவா அப்படி எல்லாரையும் நமக்கு அகெயின்ஸ்ட்டா மாத்திடுவா.”

“ஓ!!! ப்ளீஸ் மிருது. நீ அவாளால ரொம்ப பயந்திருக்கங்கறது நீ பேசறதுலேந்தே தெரியறது. அவா யார்கிட்ட வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டுமே அதுனால நமக்கென்ன? நம்ம பக்கம் தான் நியாயமிருக்கு. அதை நாம யார்கிட்டேயும் ப்ரூவ் பண்ணணும்னு அவசியமே இல்லை. நம்ம கூட பழகி நம்மளை புரிஞ்சிண்டவா நம்மளோட இருந்தா போதும். அது நாலு பேர்னாலும் சரி நாப்பது பேர்னாலும் சரி. அப்படிப் பட்டவா நம்மக் கூட பேசினா போதும். அந்த கூட்டத்தின் பேச்சைக் கேட்டுண்டு நம்மளை எடப்போடறவா எல்லாம் நமக்குத் தேவையே இல்லை. அப்படிப் பட்டவா அவாளை மாதிரியே தான் இருப்பா. ஸோ அப்படிப் பட்டவாளைப் பத்தி எல்லாம் நாம கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. புரிஞ்சுதா. இதோ பஸ் வந்திடுத்து வா மொதல்ல இங்கேந்து கிளம்பலாம்”

இருவரும் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி மிருதுளா பெற்றவர்கள் வீட்டுக்கு வந்தனர். இரவு உணவை அருந்திவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளா அம்புஜத்திடம்

“ஏன் மா எப்போ வேனுட்ட பேசி முடிவெடுப்பேங்கள்? ஏன் கேட்கறேன்னா? நாங்க நாளைக்கு சென்னைப் போயிட்டு அந்த வீட்டை இன்னொரு தடவைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு பம்பாய் போகப் போறோம். அடுத்த ரெண்டு மூணு மாசத்துல லோன் சாங்க்ஷன் ஆகிடும் அப்புறம் வந்து ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணணும். அதுக்கப்பறம் ஒரு மூணு ஆர் நாலு மாசம் எடுப்பா வீட்டை ரெடிப் பண்ணி எங்களுக்கு கொடுக்க. ஸோ எப்படியும் இன்னும் ஒரு ஏழு எட்டு மாசம் ஆகிடும் அந்த வீடு எங்க கைக்கு வர்றதுக்கு. அதுக்கு அப்புறமா தான் கிரகப்பிரவேசம் பண்ணிட்டு …நீங்க அங்க ஷிஃப்ட் ஆகறேங்கள்ன்னா… இன்டிரியர்ஸ் பண்ணுவோம் இல்லாட்டி அப்படியே பூட்டி தான் வைக்கப் போறோம்.”

“ஆமாம் நீயும் நேத்தே இதை சொன்ன இப்பவும் சொல்லற…நானும் வேனுகிட்ட கேட்டுட்டு சொல்லறேன்னு சொன்னேனே தவிற உன் அப்பா கிட்ட கேட்கணும்ன்னு எனக்கு தோணலைப் பாரேன். நீங்க உன் மாமியார் ஆத்துக்குப் போயிருந்தப்போ அப்பாகிட்ட இதைப் பத்தி பேசினேன். அப்போ அப்பா ….என் வேலையை என்ன செய்வேன்னு கேட்டா. பாரேன் நான் கூட அதை யோசிக்கலை. அதுமில்லாம உன் மாமியார் மாமனார் என்ன சொல்லுவாளோ? அவாளால உனக்கு ஏதாவது பிரச்சினை இதுனால வந்துடப் போறது மிருது. அதுனால ….அப்பா வேண்டாம்ன்னு நினைக்கறா…இதை எப்படி உன் கிட்ட சொல்லறதுன்னு யோசிச்சிண்டிருந்தேன். இப்போ நீயே கேட்டதனால சொல்லிட்டேன் மா. என்ன சொல்லுற? பேசாம அவாளை அங்க போய் இருக்கச் சொல்லிக் கேட்டுப் பாரேன்”

“அம்மா அதெல்லாம் நீ வேணும்னா யோசிக்காம இருந்திருக்கலாம் ஆனா நான் யோசிச்சுதான் கேட்டேன். ஃபர்ஸ்ட் அப்பா அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகுறா, எங்களுக்கும் எட்டு மாசம் ஆகும் வீடு ரெடியாக. அதுனால நீங்க மூணு பேரும் விருப்பப்பட்டா ஷிஃப்ட் பண்ணலாம். நோ கம்பல்ஷன். எப்படியும் நீயும் அப்பாவும் ரிட்டயர்மென்ட்டுக்கு அப்பறம் குவார்ட்ர்ஸை காலி செய்து வாடகை வீட்டில் தானே குடியிருக்கணும்? அப்பா ரிட்டயர் ஆகறதுக்கும் எங்க வீடு ரெடி ஆகுறதுக்கும் சரியா இருக்கும். ஸோ அந்த ப்ராப்ளம் சால்வுடு. ரெண்டாவது எங்க மாமனார் மாமியார்….அவா நாங்க எது செஞ்சாலும் குற்றம் தான் சொல்லப் போறா. எதுவுமே இல்லாட்டிக் கூட ஏதாவது இட்டுக் கட்டி என்னை பத்தி பேசத்தான் போறா ஸோ அவாளைப் பத்தியும் நாம கவலைப்பட வேண்டியதில்லை. அதுவுமில்லாம இந்த ஐடியாவை தந்ததே நவீன் தான். என்னது என் மாமனார் மாமியாரை அங்க வந்து இருக்க சொல்லறதா?!!! வேற வினையே வேண்டாம்!!! நோ நோ!! அவாளை எல்லாம் நான் அங்க வந்து இருக்கச் சொல்ல மாட்டேன். நீங்கன்னா நாங்க சொல்லறதை கேட்பேங்கள். வீட்டை நல்ல படியா வச்சுப்பேங்கள். எதா இருந்தாலும் எங்க கிட்ட கேட்காம செய்ய மாட்டேங்கள். ஆனா அவா அப்படி எல்லாம் இல்லை. அவா இஷ்டத்துக்கு தான் நடப்பா. எங்க கிட்ட எதுவும் சொல்லவும் மாட்டா நாங்க எது சொன்னாலும் கேட்கவும் மாட்டா. எங்களுக்குத்தான் தலைவலியா முடியும். அதுவுமில்லாமல் அங்கேயும் எல்லார்கிட்டயும் என்னை அசிங்கப் படுத்துவா….எனக்கு தேவையா சொல்லு? உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணுங்கோ இல்லாட்டி விட்டுவிடுங்கோ”

“சரி மறுபடியும் அப்பா கிட்ட கேட்டுப் பார்க்கறேன்”

“என்னத்துக்கு நான் உன்கிட்ட சொல்லி… நீ அப்பா கிட்ட சொல்லி ….எல்லாம்!! அப்பா அப்பா கொஞ்சம் இங்க வாயேன். நவீ நீங்களும் வாங்கோளேன்”

“என்ன மிருது?”

“என்ன மா?”

என்று நவீனும், ராமானுஜமும் கேட்டுக் கொண்டே ரூமிற்குள் நுழைந்தனர். அவர்கள் பின்னாலேயே சக்தி பாப்பாவும் நுழைந்து

“அம்மா நீ ஏன் அப்பாவையும் தாத்தாவையும் மட்டும் கூப்பிட்ட?? நான் வரக்கூடாதா? நீ ஏன் என்னைக் கூப்பிடவே இல்லை?”

“வாடி கண்ணு நீ இல்லாமையா?”

“ஸீ பாட்டி தான் பெஸ்ட். என்னை எப்படி கூப்பிடறா பாரு”

“சரி அப்போ நீ உன் பாட்டிக் கூடவே இருந்துக்கறையா?”

“ம்…நோ மா…நீ தான் பெஸ்ட்”

“ஹாஹாஹா!!! அடி குட்டிமா டக்குன்னு மாறிட்டயே…”

“ஹலோ எங்களை என்னத்துக்கு கூப்பிட்டேங்கள்? பாட்டியும் அம்மாவும் பொண்ணுமா கொஞ்சிக்கறதை பார்க்கவா?”

“அச்சோ !!! பாருங்கோ அதை மறந்துட்டேன். நாம நேத்து பேசினது தான். நம்ம சென்னை வீட்டைப் பத்தி தான்.”

“அதுக்கென்ன இப்போ? அவா வேனுட்ட பேசிட்டு சொல்லறேன்னு சொல்லிருக்கான்னு சொன்னயே”

என்று நவீன் சொன்னதும் மிருதுளா தன் அப்பாவிடமும் நவீனிடமும் தன் அம்மாவோடு பேசியதை விவரித்தாள். அதைக் கேட்டதும் ராமானுஜம்

“சரி மா. உங்களுக்கு இதுனால எந்த பாதிப்பும் வராதுன்னா எனக்கு ஓகே தான். வேனுவையும் கேட்டுண்ட்டு சொல்லறோம்”

“நீங்க என் அப்பா அம்மா பத்தி எல்லாம் கவலைப் படாதீங்கோ. எங்களுக்காக உங்களால முடிஞ்சா இதை பண்ணுங்கோ”

“நிச்சயமா பண்ணறோம் மாப்ள ஆனா நீங்க வாடகை வாங்கிக்கணும்”

“ஓ!! அப்படியா!!! சரி அப்போ ஒரு இருபத்தைந்தாயிரம் தந்திடுங்கோ”

“நவீ!!!”

“இரு மிருது”

“அச்சோ அவ்வளவெல்லாம் எங்களால தரமுடியாது. எங்க புள்ளையும் அடுத்த வருஷம் தான் படிப்பை முடிச்சுட்டு வேலைக்கு போக ஆரம்பிப்பான்”

“அச்சோ அச்சோ அப்பா அவர் சும்மா நீ சொன்னதைக் கிண்டல் பண்ணறார். நீங்த அதெல்லாம் ஒண்ணும் தர வேண்டாம். எங்க வீட்டைப் பார்த்துண்டா போதும். சரியா”

“இல்லை இல்லை மிருது. சும்மா எல்லாம் நாங்க தங்க மாட்டோம். உன் அப்பா சொல்லறது தான் சரி. எங்களால முடிஞ்சதை நாங்க தர்றோம். நீங்க ரெண்டு பேரும் அதை ஏத்துண்டா தான் நாங்க உங்க ஆத்துல வந்து தங்க சம்மதிப்போம்.”

“சரி மா சரி. ஹா! ஹா! ஹ! மொதல்ல நாங்க அந்த வீட்டை வாங்குறோம் அதுக்கப்புறம் வாடகையை நிர்ணயம் பண்ணிட்டு சொல்லறோம். ஓகே வா. இப்போதைக்கு உங்களுக்கு அங்க வர இஷ்டமான்னு தான் எங்களுக்குத் தெரியணும் அவ்வளவு தான் “

“அப்படின்னா எங்களுக்கு ஓகே தான். வேனு என்ன சொல்லறான்னு கேட்டுண்டுட்டு முடிவை சொல்லறோம். அதுதான் இன்னும் நிறைய மாசம் இருக்கே”

“ஓகே. பேச்சு வார்த்தை சுபமாக முடிந்தது. அனைவரும் இப்போது உறங்கச் செல்லலாம்”

“நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வரேன் மிருது. நீங்க எல்லாரும் தூங்கிக்கோங்கோ. குட் நைட்”

“ஓகே குட் நைட். சக்தி வா பாட்டிப் பக்கத்துல தாச்சிக்கோ”

“தவுட்டுப் பொண்ணு கதை சொல்லணும் பாட்டி”

“சரிடி கண்ணு வா சொல்லறேன்”

“சக்தி நாளைக்கு ஊருக்கு போகணும். சீக்கிரம் தூங்குமா”

“அம்மா ஜஸ்ட் ஒரு கதை மட்டும் கேட்டுட்டு தூங்கிடறேன் மா”

“ஓகே !! ஒண்ணு தான். குட் கேர்ள்”

என்று நவீனைத் தவிர அனைவரும் படுத்துறங்கினர்.

மறுநாள் விடிந்ததும் மூவரும் கிளம்பி சென்னை சென்றனர். அங்கே அவர்கள் பார்த்து வைத்திருந்த வீட்டை மீண்டும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு விலையை பேசி எழுபது லட்சத்துக்கு முடிவு செய்தனர். வீட்டுக்கு டோக்கன் அட்வான்ஸாக பதினைந்து லட்சத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு சென்றனர். அவர்களின் ப்ளைட்டுக்காக காத்திருக்கும் நேரம் மிருதுளா நவீனிடம்

“நவீ எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நான் வீடெல்லாம் ஆசைப்பட்டதே இல்லை. என்னைப் பொறுத்தவரை நம்ம சக்தி நல்லா படிக்கணும் பெரிய ஆளா வரணும்ன்னு தான் இன்னைக்கும் ஆசைப் படறேன். நாம இருந்த நிலைமையை நினைச்சுப் பார்த்தா நாம எல்லாம் இவ்வளவு விலைக்கு இப்படி எல்லாம் வீடு வாங்குவோம்ன்னு சத்தியமா கனவு கூட கண்டதில்லை. எல்லாமே அந்த கடவுளோட அருள் தான் நவீ.”

“கடவுள் எப்படி அருள் தருவார்?”

“புரியலை நவீ. என்ன சொல்ல வரேங்கள்?”

“நாம நல்ல மனசோட நல்ல வாழ்க்கையை…. யாரையும் ஏமாத்தாம, யாருக்கும் எந்த வித தீங்கும் மனசால கூட நினைக்காம, அடுத்தவாளைப் பார்த்து அதே மாதிரி நாமும் வாழணும்னு நினைக்காம, நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருக்கறதால கடவுள் நமக்கு உதவரார்ன்னு சொல்ல வந்தேன். இப்போ புரியறதா? நம்ம சக்தியும் நல்லா படிச்சு பெரிய ஆளா வருவா அதையும் நாம பார்க்கத்தான் போறோம்.”

“ஓ! ஓகே!!! அப்படி!!! இப்போ புரியறது”

“சரி சரி போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டா வா வா போகலாம். சக்தி வாம்மா போதும் விளையாண்டது”

என்று தங்களின் ஆரம்ப காலகட்டத்தை மறந்திடாமல் அதை அசைப்போட்டுப் பார்த்தனர் நவீனும் மிருதுளாவும்.

ஜாயின் தி டாட்ஸ் எனப்படும் புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைதல் போல எல்லோர் வாழ்விலும் ஆரம்பப் புள்ளி என்ற ஒன்றிலிருந்து தான் அவரவர் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது பலர் தன்னிலை மாறாமல் பலவற்றை வெற்றிகரமாக கடந்து சென்று இலக்கை அடைகிறார்கள். ஆனால் சிலர் தன்னிலையை பயணத்தின் வேகத்திலும், பணத்தின் ஆதிக்கத்திலும், ஆரம்ப புள்ளையையும் மறந்து தங்களை மாற்றிக்கொண்டு சில சமயம் வெற்றியும் பல சமயங்களில் தோல்வியையும் தழுவுவது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் பயணம் என்பதை மேற்கொள்ள முடியும், பயணம் என்பதை மேற்கொண்டால் தான் சென்றடைய வேண்டிய இலக்கு என்பதை எட்ட முடியும். பர்வதீஸ்வரன் போன்ற பலர், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததும் தொடக்கம் என்ற பழையதை எல்லாம் மறந்திடுவார்கள். பயணத்தையும் அடுத்தவர் மீதி சவாரி செய்து களித்திடுவார்கள். பயணம் முடிந்ததும் கழற்றியும் விடுவார்கள். அவர்களுக்கு ஏணியாக பலரை உபயோப்படுத்திவிட்டு அதில் ஏறி உயரத்தைத் தொட்டதும் ஏறி வந்த ஏணியை ஏறிய கால்களாலேயே எட்டி உதைத்திடுவார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே அவர்கள் ஏறி வந்த ஏணியை என்றும் பத்திரப்படுத்திடுவார்கள், முடிந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு ஏணியாக இருக்க முயற்சிப்பார்கள்.

தொடக்கம் இனிதானதாக இல்லாவிட்டாலும் அதை என்றும் மறந்திடாமல் பயணத்தை இனிதாக்கிக்கொண்டு இலக்கை அடைந்திட ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது நாயகனும் நாயகியும்.

பம்பாயிக்கு ப்ளைட் டேக் ஆஃப் ஆனது.

தொடரும் ……




























Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s