அத்தியாயம் 85: விசேஷம் விஷயமாச்சு

“நீ சொல்லறதும் வாஸ்த்தவம் தான். எனக்கே அவா பண்ணறதை எல்லாம் பார்த்தா அப்படித் தான் தோனறது. என்ன செய்ய மிருது? அவாளை நம்பினேன் ஆனா என்னை நல்லா யூஸ் பண்ணிண்டிருக்கா!!! அது புரிய எனக்கு தான் லேட் ஆச்சு. சரி சரி இனி அந்த கூட்டத்தைப் பத்தி நாம பேசவே வேண்டாம். நாம நம்ம வேலையைப் பார்த்துண்டு சந்தோஷமா இருக்கலாம்”

“எங்க இருக்க விடறா நவீ? யார்கிட்டயாவது எதையாவது சொல்லி கிளப்பி விட்டுண்டே தானே இருக்கா! நான் என்ன பாவம் செய்தேனோ!!! என்னை ஏன் தான் இப்படி வாயில போட்டு வறுத்தெடுக்கறாளோ? உங்களுக்கென்ன உங்களையா சொல்லறா இல்லை ஒரு விசேஷத்துக்கு போனா உங்ககிட்டயா கேட்கறா? எல்லாரும் என்னை தானே தொணச்சு எடுக்கறா? அவாளுக்கெல்லாம் நான் தானே பதில் சொல்ல வேண்டிருக்கு?”

“நீ ஏன் பதில் ஆர் எக்ஸ்ப்ளேயின் பண்ணிண்டு போற? சொன்னவா கிட்டயே போய் கேட்டுக்க சொல்லிட்டு நீ பாட்டுக்கு உன் பேச்சை கண்டின்யூ பண்ணு. அப்படி செஞ்சா மறுபடியும் உன் கிட்ட கேட்டுண்டு வரமாட்டா.”

“ம்… ம்… ட்ரை பண்ணறேன்”

நவீனுக்கு மீண்டும் பன்னாட்டு வங்கி ஒன்றில் மற்றுமொரு பதவி உயர்வுடன் பம்பாயில் வேலை கிடைத்தது. அவர்கள் ஹைதராபாத்திலிருந்து பம்பாயிக்கு குடிபுகுந்தனர். அங்கு இன்னும் வசதி வாய்ப்புகள் கூடியது. சக்தியை பெரிய பள்ளியில் சேர்த்தனர். மிருதுளாவும் சும்மா இருக்க விருப்பமில்லாமல் சம்பளம் குறைவானாலும் தன் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வேலை செய்துக் கொண்டும், சக்தியை பார்த்துக் கொண்டும், வீட்டு வேலைகளை செய்துக் கொண்டும் ஆன்லைனில் வேலைப் பார்த்து வந்தாள்.

நவீனின் பெரியப்பா மகனுக்கு திருமணம் என்று நவீனையும் மிருதுளாவையும் அழைத்திருந்தனர் பர்வதத்தின் அக்கா ரமணியும் அத்திம்பேரும். அந்த ஃபோன் கால் கட் ஆனதும் மிருதுளா நவீனிடம்

“நவீ நாம போகலாமா? நம்ம ப்ரவீன் கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நடக்குற விசேஷம் இது தான். போனா எல்லாரையும் பார்க்கலாம். என்ன சொல்லறேங்கள்?”

“ம்…ஓகே. போயிட்டு வருவோம். நான் ஃப்ளைட்டுல டிக்கெட் புக் பண்ணறேன்”

“ஆனா!!”

“என்ன ஆனா?”

“இல்ல நவீ…எனக்கு உங்க அம்மாவ நினைச்சா தான்….”

“நீ ஏன் நினைக்கற? நினைக்காதே”

“இல்ல ரொம்ப வருஷமா எந்த விசேஷமும் நடக்காததால …நான் அவ்வளவாக அவமானப்படாம இருந்துண்டு இருக்கேன் ….இப்போ நாம இந்த விசேஷத்துக்கு போனா என்னத்த செய்ய போறாளோ உங்க அம்மான்னு நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு”

“என்னத்தை செய்துடுவா மிருது! நீ அனாவசியமா பயப்படற அவ்வளவு தான் சொல்லமுடியும்.”

என்று நவீன் சொன்னாலும் ஒவ்வொரு விசேஷங்களிலும் மிருதுளாவுக்கு தன் மாமியாருடன் ஏற்பட்ட முன் அனுபவங்களால் மனதில் ஏதோ ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் தன் மனதிடம்

“விடு விடு எவ்வளவோ பார்த்தாச்சு இது என்ன பேசாம தூங்கு”

என்று வாய்விட்டு சொல்ல அதைக் கேட்ட நவீன்

“மிருது யாரை தூங்க சொல்லற?”

“ம்…நான் சொன்னது கேட்டுதா?”

“ஆமாம் நல்லா கேட்டுதே!! அதுனால தானே நான் உன்கிட்ட கேட்கறேன்”

“அது ஒண்ணுமில்லை நவீ நான் என் மனதுடன் பேசறேன்னு நினைச்சுண்டு சத்தமா பேசிட்டேன்….ஈ..ஈ..ஈ”

என்று அசடுவழிந்தாள். அதை பார்த்த நவீன்

“அச்சோ அச்சோ!!! சரி சரி இதோ டிக்கெட் புக் பண்ணிட்டேன். நாம அடுத்த மாசம் கல்யாணத்துக்கு ஊருக்கு போறோம்”

“பண்ணிட்டேளா? சரி சரி”

“என்ன மிருது ஊருக்கு போறோம்ன்னு சொல்லறேன் உன் முகத்தில் சந்தோஷத்தையே காணமே!!”

“ம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை நவீ. எனக்கும் சந்தோஷமா தான் இருக்கு”

என்று சொல்லி சமாளித்து விட்டு அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. என்ன தான் மனதில் தன் மாமியாரை நினைத்து ஒரு சிரிய அச்சம் இருந்தாலும் சொந்த பந்தங்களையும் தன் அப்பா அம்மாவையும் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அந்த நினைப்பை சற்று ஓரம்கட்டியது.

மிருதுளா நன்றாக மெலிந்திருந்தாள். அவளுக்கு எப்போதும் அசதியாகவே இருந்தது. இதை நவீனிடம் சொல்லி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை வந்து தள்ளித்தள்ளி போனது. ஒரு நாள் ரொம்ப முடியாமல் போக உடனே ஹாஸ்பிடல் சென்றனர். அங்கு பல டெஸ்டுகள் எடுத்துப் பார்த்ததில் மிருதுளாவுக்கு தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதாகவும் அது ஹைபர்தைராய்டிஸம் என்றும் கண்டறிந்து அதனால் தான் அவள் உடல் மெலிந்து இருக்கிறாள் என்றும் அதற்கான மாத்திரைகள் எழுதிக்கொடுக்கப்பட்டது. மிருதுளாவும் அந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தாள்.

ஊருக்கு செல்லும் நாள் வந்தது. நவீன், மிருதுளா, சக்தி மூவரும் கிளம்பிச் சென்றனர். நேராக கல்யாண மண்டபத்துக்கே சென்றனர். அங்கு அனைத்து சொந்தங்களையும் இவர்கள் பார்த்து பேசி மகிழ்ந்தனர். அதே போல சொந்தங்களும் இவர்களுடன் பேசி மகிழ்ந்தனர் பர்வதீஸ்வரன் குடும்பத்தைத் தவிற. அவர்கள் ஆளுக்கொரு மூலையில் நின்றுக் கொண்டு நவீனையும் மிருதுளாவையும் முறைத்துப் பார்த்துக் கொண்டே தான் இருந்தனர். அதை கவனித்த மிருதுளா நவீனிடம்

“நவீன் நான் போய் உங்க அப்பா அம்மா கிட்ட மட்டும் பேசிட்டு வந்துடவா. பசங்க கிட்ட பேச மாட்டேன்”

“வேண்டாம் மிருது. சொன்னா கேளு. தப்பு பண்ணினவாளே அவ்வளவு திமிரா நம்ம கூட பேசாம இருக்கா…நாம எந்த தப்புமே பண்ணாதவா நாம ஏன் போய் பேசணும்? ஒண்ணும் வேண்டாம். நாம விசேஷத்தை அடென்ட் பண்ணுவோம் ஊருக்கு கிளம்புவோம். அதோட நிறுத்திப்போம்”

“இல்ல நவீ எல்லாரும் பார்க்கறா இல்லையா எனக்கு ஒரு மாதிரி அன்னீஸியா இருக்கு”

“அப்புறம் உன் இஷ்டம்”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நவீனின் ஒண்ணு விட்ட அத்தை இவர்கள் அருகே வந்து

“என்ன நவீன் மிருதுளா எப்படி இருக்கேங்கள்?”

“ம்…நாங்க நல்லா இருக்கோம் அத்தை. நீங்க எப்படி இருக்கேங்கள்? கேசவன் எப்படி இருக்கான்?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் நவீன். சரி மிருதுளா நீ ஏன் ஆளு இளைச்சுப்போயிருக்க? ஏதாவது விசேஷமா?”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அத்தை”

“சரி சரி நான் போய் என் சிநேகிதிட்ட பேசட்டும். வரேன்.”

என்று கூறிவிட்டு சென்றதும் மிருதுளாவுக்கு மீண்டும் மனதில் ஒரு வகையான பதற்றம் ஒட்டிக் கொண்டது. பின் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நவீனின் சித்தி மிருதுளாவிடம்

“என்ன மிருது மாசமா இருக்கயா என்ன?”

“இல்லை சித்தி. ஏன் கேட்கறேங்கள்?”

“பார்த்தா அப்படி தெரிஞ்சுது அது தான் கேட்டேன். சரி சரி நீங்க நல்லா சாப்பிடுங்கோ. நான் அக்காவைப் பார்த்துட்டு வர்றேன்”

என்று அவரும் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். சாப்பிட்டு கை கழுவுமிடத்தில் பர்வதம் வீட்டுப் பக்கத்து வீட்டு பெண்மணி மிருதுளாவிடம்

“என்ன மிருது எத்தனை மாசம் ஆகுது?”

“என்ன சொல்லறீங்க? எனக்குப் புரியலையே!!”

“அடே நீ மாசமா இருக்க இல்ல அதுதான் கேட்டேன்”

“நான் மாசமா இருக்கேன்னு உங்க கிட்ட யாரு சொன்னா?”

“எல்லாம் பர்வதம் மாமி தான்…எனக்கு வேற யாரு சொல்லப் போறா? சரி உடம்ப நல்லா பார்த்துக்கோ நான் வர்றேன்”

மிருதுளாவுக்கு அது தன் மாமியாரின் வேலை என்று நன்கு புரிந்துப் போனது. சாப்பிட்டுவிட்டு மண்டபத்தில் ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு தன் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த நவீனிடம் நேராக சென்று

“நவீ உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”

என்றதும் நவீனின் சித்தப்பா

“போடா நவீ. போ…போ… என்னன்னு கேட்டுட்டு வா அப்புறமா நாம பேச்சை கன்டின்யூ பண்ணிப்போம்”

என்று சொன்னதும் அங்கிருந்து எழுந்து மிருதுளாவுடன் சற்றுத் தள்ளிச் சென்று

“என்ன மிருது?”

“நவீ உங்க அம்மா அவா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா”

“என்ன சொல்லற நீ? என்ன ஆட்டம்?” எனக்கு புரியறா மாதிரி சொல்லறையா”

“மண்டபத்துல ஒவ்வொருத்தரையா என்கிட்ட அனுப்பி நான் மாசமா இருக்கேனான்னு கேட்க வைக்கறா!!! நானும் வரவாகிட்ட எல்லாம் அப்படி எதுவுமில்லைன்னு சொல்லி சொல்லி….எனக்கு சங்கடமா இருக்கு தெரியுமா!!”

“ஏன் அப்படி கேட்கச் சொல்லறா?”

“ம்…அதை உங்க அம்மா கிட்ட தான் கேட்கணும். அப்படியே அவாளுக்கு கேட்கணும்ன்னா நேரா என் கிட்ட வந்து கேட்க வேண்டியது தானே ஏன் ஒவ்வொருத்தரையா அனுப்பி இப்படி கேட்கச் சொல்லறாளோ!!! இந்த விசேஷத்துக்கு வேற எந்த டாப்பிக்கும் கிடைக்கலைப் போல அதுதான் இந்த டெக்னிக்”

“இவாளை என்ன பண்ண சொல்லு”

“இதுக்குத் தான் நான் பயந்தேன். ஏதாவது செஞ்சு என்னை சங்கடப்படுத்தறது தான் அவா கோல்ன்னு எனக்கு தெரியும் ஆனா இப்படி எல்லாம் ….என் தலை எழுத்து”

“சரி சரி கண்டுக்காம விடு. பெரியம்மா வர்றா. வாங்கோ பெரியம்மா. வாழ்த்துகள் மூன்றாவது முறையா மாமியாரா ப்ரமோட் ஆகிட்டேங்கள்”

“அடப் போடா நவீன். என்ன ஆத்துக்காரரும் ஆத்துக்காரியுமா தனியா நிண்ணுண்டு பேசிண்டிருக்கேங்கள்? நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ”

“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா சும்மா தான் பேசிண்டிருந்தோம்.”

“சரி தாம்பூலம் வாங்கிக்கோங்கோ. மிருது ஏதாவது விசேஷமா?”

“என்ன பெரியம்மா விசேஷத்துக்கு தானே வந்திருக்கோம் அப்புறம் இப்படி கேட்கறேங்களே”

“என்ன நக்கலாக்கும்….உனக்கு ஏதாவது விசேஷமான்னு கேட்டேன்”

“எங்கடா நீங்க மட்டும் இதை கேட்கலையேன்னு நினைச்சுண்டிருந்தேன்….நீங்களும் கேட்டுட்டேங்கள்….அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா”

“ஏன் அப்படி சொல்லற? வேற யாரு கேட்டா?”

“யாரு கேட்கலைன்னு கேளுங்கோ பெரியம்மா. என்னைப் பார்த்தா அப்படியா தெரியறது? சரி இதை நீங்களா கேட்டேங்களா இல்லை யாராவது கேட்கச் சொல்லி கேட்டேங்களா?”

“எனக்கும் அப்படி ஒண்ணும் தெரியலைன்னு தான் உன் மாமியார்ட்ட சொன்னேன் ஆனாலும் உன் கிட்ட கேட்கச் சொன்னா கேட்டுட்டேன் மா.”

அவள் மேலும் பேசுவதற்குள் சாஸ்த்திரிகள்

“மாமி பருப்புத் தேங்காயை எடுத்து உள்ள வையுங்கோ. இங்க சித்த வர்றேளா”

“இதோ வந்துட்டேன் மாமா! சரி மிருது நவீன் இருந்துட்டு தானே போவேங்கள். நான் அப்புறமா வந்து உங்க கூட பேசறேன். இப்போ நான் அங்க போகலைன்னா பெரியப்பா கத்துவார். வர்றேன்”

என்று அவள் அங்கிருந்து போனதும் மிருதுளா நவீனிடம்

“பார்த்தேளா? இது தான் நான் இங்கே வந்ததிலிருந்து நடக்கறது. எத்தனைப் பேர் வந்து கேட்டாச்சு தெரியுமா. நான் பதில் சொல்லி பதில் சொல்லி இரிட்டேட் ஆகிட்டேன்.”

“ம்…புரியறது!! புரியறது!!”

என்று நவீன் சொன்னாலும் மிருதுளா மனம் ஆறவில்லை. விசேஷம் முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். நவீனும் மிருதுளாவும் அவர்கள் வாடகைக்கு விட்டிருந்த அப்பார்ட்மெண்ட்டை பார்த்து விட்டு
அப்படியே ராமானுஜம் வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருக்கையில் மிருதுளா நவீனிடம்

“என்ன நவீ நம்ம வீட்டை இவ்வளவு அசிங்கமா வச்சிருக்கா? நாம தான் அவ்வளவு கேபினட்ஸ் வார்டுரோப்ஸ் எல்லாம் செய்துக் கொடுத்திருக்கோமே அப்புறமா எதுக்கு ஏதோ ஒரு பலகையை எல்லாம் அடிச்சு வச்சிருக்கா?”

“ஆமாம் ஆமாம் நானும் பார்த்தேன்.”

“பேசாம நம்ம சென்னையில் அந்த கேட்டெட் கம்யூனிட்டியில் வீடு வாங்கினா அதை வாடகைக்கு விடக்கூடாது நவீன்.”

“அப்புறம் பூட்டி வைக்கவா வாங்கறோம். அப்படி பூட்டி வச்சா வீணா போயிடும் மிருது. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.”

“என்ன அது நவீ?”

“பேசாம உங்க அப்பா அம்மாவை நம்ம சென்னை வீட்டுல போய் இருக்கச் சொன்னா என்ன?”

“அவாளா? அங்கேயா? இருப்பான்னு எனக்கு தோனலை. கேட்டுப் பார்க்கிறேன்.”

வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்ததும் அம்புஜத்திடம் மிருதுளா

“அம்மா என்ன மா வாடகைக்கு இருக்கறவா நம்ம வீட்டை பாழாக்கி வச்சுருக்கா? அவாளை காலி பண்ணச் சொல்லப்போறோம்.”

“ஏன்டி அவா தான் ஒழுங்கா வாடகை தர்றா இல்லையா அப்புறம் என்ன? வீட்டை சும்மா பூட்டிப் போட்டா வீணா போயிடும்மா”

“கிரகப்பிரவேசம் முடிச்ச புது வீட்டை வாடகைக்கு கொடுத்தா அவா அப்படி செய்து வச்சிருக்காளே மா…பார்க்க பார்க்க கோபமா வர்றது. அவா குடுக்கற வாடகை அவா காலி செய்ததுக்கப்புறம் அந்த வீட்டை சரி பண்ணக் கூட பத்தாது போல தெரியறது. சரி அதை விடு. நாங்க ஒரு வீடு சென்னையில பார்த்திருக்கோம். வாங்கலாம்ன்னு இருக்கோம். ஆனா அந்த வீட்டை வாடகைக்கு விடற ப்ளான் இந்த வீட்டைப் பார்த்ததுமே போச்சு. எங்களோட அந்த வீட்டில் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கேங்களா? எங்களுக்கும் சென்னையிலிருந்து மறுபடியும் ஒரு அஞ்சு மணி நேரம் டிராவல் பண்ணிண்டு வர வேண்டாம். வேனுவும் சென்னை ஏர்போர்ட் வந்தா நேரா ஆத்துக்கு வந்திடலாம் என்ன சொல்லறேங்கள்?”

“நல்ல யோசனை தான். ஆனா வேனுகிட்டயும் கேட்கணுமே. நாங்க அவன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்லறோம் சரியா.”

“சரி மா நீங்க வேனுகிட்டயும் கேட்டுட்டே சொல்லுங்கோ அதுக்குள்ள நாங்க அந்த வீட்டோட ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் முடிச்சிடறோம். நாளைக்கு மறுநாள் அதையும் முடிச்சுட்டு அப்படியே அங்கிருந்தே நாங்க பம்பாய் போறோம். சரி நாளைக்கு எங்க மாமனார் மாமியார் ஆத்துக்கு போயிட்டு வரணும்”

“ஏன் எதுக்கு மிருது? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

“என்ன நவீ அது தப்பாயிடும். இவ்வளவு வருஷம் நாம இங்க வரலை அதுனால ஓகே ஆனா இப்போ இவ்வளவு தூரம் வந்துட்டு ….அது தப்பு. அதுவுமில்லாம எனக்கு உங்க அம்மாகிட்ட ஏன் அப்படி மண்டபம் பூரா அப்படி பரப்பினான்னும் கேட்கணும்”

“எனக்கென்னவோ வேண்டாம்ன்னு ஒதுங்கினது ஒதுங்கினதாகவே இருந்திடலாம்ன்னு தோனறது”

“எங்க ஒதுங்க விட்டா அப்பவும் ஆப்பர்ச்சுனிட்டி கிடைக்கும் போதெல்லாம் என்னை ஏதாவது பண்ணறாளே”

“விசேஷமென்றால் அங்கே தன் மாட்டுப் பொண் பத்தி தான் எல்லாரும் பேசணும்ன்னு நினைக்கறாளோ என்னவோ”

என்று கூறிக் கொண்டே மிருதுளாவைப் பார்த்துக் கண் அடித்தான் நவீன்.

“ஆமாம் ஆமாம்!!! நெனப்பு தான். நாளைக்கு போறோம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசறோம் வர்றோம். அவா தான் எவிடன்ஸ் ஃபேமிலி ஆச்சே இந்த தடவை எவிடன்ஸோட போய் பேசப்போறேன்”

“பார்ப்போம் பார்ப்போம்”

மறுநாள் இருவரும் பர்வதீஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். ஈஸ்வரன் இவர்களைப் பார்த்ததும்

“ம்…ம்…வாங்கோ வாங்கோ. பர்வதம் காபி கொண்டு வா”

என்றார். இருவரும் அங்கிருந்த சேரில் அமர்ந்தனர். பர்வதமும் வந்தாள்.

“ம்.. வாங்கோ…காபி போட்டு எடுத்துண்டு வரேன்”

“அம்மா அம்மா காபி எல்லாம் வேண்டாம். இங்க வாங்கோ நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்”

“என்ன கேட்கணும்?”

நலமெல்லாம் விசாரித்தப்பின் மிருதுளா பர்வதத்திடம்

“ஏன் மா நான் மாசமா இருக்கேனா இல்லையான்னு உங்களுக்கு தெரிஞ்சுக்கணும்ன்னா நீங்க நேரா என் கிட்ட வந்து கேட்டிருக்க வேண்டியது தானே!!! ஏன் ஒவ்வொருத்தரையா அனுப்பி என்கிட்ட கேட்க வச்சேங்கள்? அது எனக்கு எவ்வளவு சங்கடத்தை தரும்ன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா?”

“எனக்கெதுக்கு நீ மாசமா இருக்கயா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்? அப்படியே தெரிஞ்சுண்டாலும் எனக்கென்ன? நான் அப்படி நினைக்கவும் இல்லை, யாரையும் உன்கிட்ட கேட்கச் சொல்லி அனுப்பவுமில்லை. என்ன பிரச்சினை பண்ண வந்திருக்கியா?”

“அம்மா உங்களை ஏதாவது கேட்டாலே பிரச்சினை பண்ணத்தான் வந்திருக்கோம்ன்னு அர்த்தமா என்ன? இல்ல அப்படி பிரச்சினை பண்ணினா எனக்கென்ன சந்தோஷமா கிடைக்கப் போறது? நீங்க தான் கேட்க சொல்லி அனுப்பியிருக்கேங்கள்ன்னு என் கிட்ட கேட்டவாளே சொன்னா அதுக்கென்ன சொல்லப் போறேங்கள்?”

“இல்லவே இல்லை நான் யார்கிட்டேயும் அப்படி ஒண்ணும் கேட்கச் சொல்லை. எங்கே யார் அப்படி சொன்னான்னு செல்லுப் பார்ப்போம்”

“மண்டபத்துல இருந்த நம்ம சொந்தங்கள் எல்லாரும் தான் கேட்டா”

“இப்படி பொதுவா சொன்னா? எப்படி?”

“சரி நேராவே சொல்லறேன் உங்க அக்கா, தங்கை, ஒண்ணு விட்ட அத்தை, அவா பொண்ணுன்னு லிஸ்ட் நீண்டுண்டே போறது ….இவ்வளவு குறிப்பிட்டுச் சொன்னது போதுமா ?”

“நான் சொல்லவே இல்லை”

“அப்பா நீங்களாவது இதுக்கு ஒரு பதில் சொல்லுங்கோ”

என்றதும் ஈஸ்வரன் பர்வதத்திடம்

“இப்போ என்ன பர்வதம் உன் அக்காகிட்ட ஃபோன் போட்டு கேட்டுட்டா நீ சொல்லலைன்னு தெரிஞ்சுடப் போறது. அது தெரிஞ்சதுக்கப்புறமா இவாகிட்ட பேசிக்கறேன்”

“இல்ல இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நம்மாத்து விஷயத்தை எதுக்கு அவாகிட்ட எல்லாம் போய் கேட்டுண்டு வேற வேலையில்லை”

என்று பதறிப் போய் ஈஸ்வரனைத் தடுத்தாள் பர்வதம். ஆனால் மிருதுளா விட்டப் பாடில்லை. தன் மாமனாரிடம்

“அப்பா நீங்க கேளுங்கோ. அவா பதில் சொல்லட்டும் நானும் அப்புறமா பேசறேன்.”

என்றதும் ஈஸ்வரன் தன் மனைவி மீதிருந்த அபார நம்பிக்கையில் ரமணி வீட்டுக்கு ஃபோன் செய்தார். ரமணியின் வீட்டுக்காரர் ஃபோனை எடுக்க அவரிடம் ஈஸ்வரன்

“ரமணி கிட்ட ஃபோனை கொஞ்சம் கொடு. நான் அவகிட்ட ஒண்ணு கேட்டு க்ளாரிஃபை பண்ணிக்கணும் அதுக்குத் தான் ஃபோன் போட்டேன்”

ரமணியிடம் ஃபோனை கொடுத்தார் அவள் கணவர்.

“ரமணி இந்தா உனக்கு தான் ஃபோன். பர்வதம் ஆத்துக்காரர் ஈஸ்வரன் ஏதோ பேசணுமாம்”

“ஆங் குடுங்கோ. ஹலோ நான் ரமணி பேசறேன்”

“ஆமாம் ரமணி மண்டபத்துல பர்வதமா உன்கிட்ட மிருதுளா மாசமா இருக்காளான்னு கேட்கச் சொன்னா?”

“ஆமாம். பர்வதம் தான் கேட்கச்சொன்னா. ஏன்? எதுக்கு இதை இப்போ ஃபோன் போட்டு கேட்கறேங்கள்?”

“ஒண்ணுமில்லை நான் அப்புறமா பேசறேன். இப்போ ஃபோனை வச்சுடறேன்”

தொடரும்…..


























Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s