அத்தியாயம் 84: எவிடன்ஸ்!

ஏற்கனவே அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும், வேதனையிலும் இருந்த நவீன்… பிச்சுமணி பேசியதை கேட்டதும் அனைத்தும் ரெட்டிப்பானது. ஆனாலும் நிதானமாக

“மாமா நான் உங்ககிட்ட அந்த வீடு வாங்குவதற்காக கடன் வாங்கினேன் என்பதால் தான் உங்கள்ட்ட பேச சொன்னேன் ஏன்னா உங்களுக்கு எல்லா விவரங்களும் தெரியும். ஆனால் நான் வாங்கின வீட்டை பத்தி என்னைப் பெத்தவாகிட்ட நான் ஏன் பேசினேன்னு நீங்க கேட்கறதில எந்த நியாயமும் இல்லை. ஆவா க்ளியரா எல்லாம் ப்ளான் பண்ணி தான் செய்திருக்கா ஸோ யாரு பேசினாலும் நோ யூஸ். நான் மிருதுவ பிரசவம் முடிஞ்சு ஊருக்கு கூட்டிண்டு போறதுக்கு டேட் மாத்தி சொன்னதுக்கு உங்க அக்காவும் அத்திம்பேருமா என்ன குதி குதிச்சா தெரியுமா? அதுவும் நாங்க ஊருக்கு கிளம்புற நேரத்துல….இப்போ இவா பண்ணி வச்சிருக்கற வேலைக்கு நான் என்ன வேணும்னாலும் செய்யலாம்?இதுல அந்த கவின் வேற கூட்டு…ம்!!”

“அதுக்கில்லடா இப்போ பாரு கவினும் காசு போட்டிருக்கானாம். அவனை உன் கிட்ட பேச சொன்னேன். ஆனா அவன் என்ன சொல்லறான்னா….உனக்கு தான் அந்த வீடு தேவை அதனால் நீ தான் அவனை கால் பண்ணி பேசணுமாம். அவன் கால் பண்ண மாட்டானாம். அதுவுமில்லாம அவன் பர்வதத்திற்கு குடுத்த முப்பத்தி ஆராயிரம் ரூபாய்க்கு எவிடன்ஸ் வச்சிருக்கானாம். அதே போல நீ குடுத்த பணத்துக்கு ஏதாவது எவிடன்ஸ் வச்சிருக்கியான்னு கேட்க சொன்னான்”

“நல்லா இருக்கு மாமா!! ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு தெரியாதா? நான் தான் அந்த வீட்டை வாங்கினேன்னு? உங்களை விட ஒரு எவிடன்ஸ் என்ன வேணுமாம்? அந்த வீடு வாங்கும் போது அவன் வேலையில சேரவேயில்லை அப்புறம் எப்படி எவிடன்ஸோட பணம் குடுத்தானாம்? அவன் தான் ஏதோ பெனாத்தரான்னா அதை கேட்டுட்டு என்கிட்ட அதை சொல்லறேங்களே உங்களை என்ன சொல்ல?”

“சரி டா அவன் வழிக்கே போய் தான் பாரேன். அதுல என்ன தப்பு? நீயே அவன்கிட்ட கால் பண்ணி பேசி க்ளியர் பண்ணிக்கோயேன்”

“மாமா வீடு வாங்கினது நான் மட்டும் தான் அப்போ எவனும் வேலைப் பார்க்கலை. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். அதனால நான் எவன்கிட்டயும் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஐம்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள வீட்டுக்கு அவரு முப்பத்தி ஆராயிரம் ரிஜிஸ்ட்ரேஷன் சார்ஜஸ் குடுத்திருக்கானாம்!!!! அதுக்கு ப்ரூஃப் வேற வச்சிருக்கானாம்!!!! இதை எல்லாம் கேட்கும் போதே உங்களுக்கு புரிஞ்சிருக்க வேண்டாமா மாமா எல்லாமே டிராமான்னு!!! அதுவுமில்லாம பெத்தவாளை நம்பி தான் நான் செய்தேன். அதனால் எதிர்காலத்தில் எவிடன்ஸ் தேவைப்படும்ன்னு நான் ப்ரோ நோட்ல எல்லாம் கையெழுத்து வாங்கிண்டு செய்யலை. அவ்வளவு எல்லாம் யோசிச்சு செய்திருந்தேன்னா இப்போ எவனும் நாக்கு மேல பல்ல போட்டு இவ்வளவு திமிரா எல்லாம் பேச முடிஞ்சிருக்காது. என்ன?? நீங்களும் எல்லா உண்மைகளும் தெரிஞ்சும் இப்படி பல்டி அடிச்சுட்டேங்களே மாமா!!!”

“அதுக்கு இல்லடா நவீன்…அவன் ப்ரூஃப் வச்சிருக்கேன்னு தீர்கமா சொல்லறான்டா. அதுதான் நீ பேசிட்டா க்ளியர் ஆகிடும்ன்னு நினைச்சேன்”

“இவ்வளவு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறது எனக்கு ரொம்ப சங்கடத்தை கொடுக்கறது மாமா. அவன் எதுக்கு காசு கொடுத்தானோ? அதுவும் அவனுக்கு வேலை கிடைச்ச தேதியையும், வீடு வாங்கின தேதியையும் வச்சுப் பார்த்தாலே அதில் துளி கூட உண்மை இல்லை என்பது பேங்க் அதிகாரியான உங்களுக்கு தெரியாதா என்ன? அப்போ குடுக்கும் போதே ஏதோ திட்டத்தோட தானே எவிடன்ஸ் எல்லாம் க்ரியேட் பண்ணி வச்சிண்டு குடுத்திருக்கான். இவ்வளவும் புரிஞ்சும் நீங்க அவனை கால் பண்ண சொல்லறேங்கள்ன்னா…. சாரி மாமா…இது என் வீட்டுப் பிரச்சினை இனி நானே பார்த்துக்கறேன். இதில் இனி நீங்க அனாவசியமாக தலையிட வேண்டாம். நீங்க அவாளுக்காக பேச வந்து நம்ம ரிலேஷன்ஷிப்பை கெடுத்துக்காதீங்கோ ப்ளீஸ். எங்களுக்கு அந்த வீடு வேண்டாம் அவாளே வச்சுக்கட்டும். பெத்த புள்ளையை ஏமாத்தின பெருமை உங்க அக்கா அத்திம்பேருக்கே!!! அதுக்கு துணை நின்ற உங்க மருமகன்கள் கவின், ப்ரவின் பவினுக்கே!!! அந்த பெருமிதத்தோடு அவா உலா வரட்டும். இனி இதைப் பத்தி எவரும் எங்ககிட்ட பேசிண்டு வரவேண்டிய அவசியமில்லைன்னு அவர்களின் தூதாக வந்த நீங்களே சொல்லிடுங்கோ. இனி எனக்கு அவாளோட பேச இஷ்டமில்லை. நான் ஃபோனை வைக்கிறேன் பை குட் நைட்”

என்று கூறி உண்மை அறிந்தும் தனக்காக பேசாத மாமா தன் அக்காவுக்காகவும், கவினுக்காகவும் பரிந்து பேச வந்ததை விரும்பாத நவீன் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசிவிட்டு ஃபோனை வைத்தான். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மிருதுளா நவீனிடம்….

“நீங்க சொன்னது கரெக்ட் நவீ. அந்த வீட்டை அவாளே வச்சுக்கட்டும். நமக்கு வேண்டாம். எங்க அம்மா சொன்னா மாதிரி நமக்கு அந்த அம்பாள் அதை விட பல மடங்கு வசதியான வீட்டைக் கொடுப்பாள். இனி இதைப் பத்தி நாம எவர்கிட்டேயும் பேச வேண்டாம். சரியா இப்போ நிம்மதியா தூங்குங்கோ”

“ம்…ம்….ம்…”

என்று கூறிவிட்டு தூங்கினான் நவீன். மறுநாள் இருவரும் சக்தியுடன் ஹைதராபாத் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்

“நவீ உங்க அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி ஊருக்கு கிளம்பறோம்ன்னு சொல்ல வேண்டாமா?”

“ஒண்ணும் வேண்டாம். நாம பண்ணறதுக்கெல்லாம் எவிடன்ஸ் வச்சுண்டு செய்ய நாம என்ன அந்த தந்திர நரிகளா? அந்த நரி கூட்டத்துக்கு இதுவரை குடுத்து வந்த மரியாதைப் போதும். என்னை ஏமாத்தியது கூட எனக்கு வலிக்கலை ஆனா ஆளாளுக்கு பேசறா பாரு அதை தான் என்னால் ஜீரணிச்சுக்கவே முடியலை. பேசாம வா நாம நம்ம பொழப்பை பார்க்கலாம். என்ன… என்னோட பத்து வருஷ உழைப்பை ஒரே நொடியில் ஒண்ணுமில்லாமல் வார்த்தைகளால் ஊதித் தள்ளிட்டா…ம்….சரி கிளம்பலாமா?”

என்று கூறி மூவரும் ஹைதராபாத் சென்றனர். பிச்சுமணியும் பர்வதத்திடமும், கவினிடமும் நவீன் கூறியதைக் கூறிவிட்டு இனி இந்த விஷயத்தில் தன்னை ஈடுப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை ஈஸ்வரன் நவீன் மிருதுளா வீட்டு நம்பருக்கு கால் செய்தார். இரண்டு ரீங் போனது. அடுப்படியிலிருந்து மிருதுளா நவீனிடம்

“நவீ கொஞ்சம் அந்த ஃபோனை எடுங்கோளேன். நான் மாவு அரைச்சுண்டு இருக்கேன்.”

“ம் ம்….ஓகே எடுத்துட்டேன். ஹலோ நான் நவீன் பேசறேன்”

“நான் தான் ஈஸ்வரன் பேசறேன்”

“ம்…ம்… என்ன”

“யாரு நவீ ஃபோன்ல?”

“அதுவா யாருமில்லை மிருது. நீ உன் வேலையைப் பாரு”

“இல்லை கவின்கிட்ட பேசினயா? அவன் என்ன சொன்னான்னு கேட்கத்தான்”

“ஏன் அவன் சொல்லலையோ? நீங்க எல்லாரும் ஒரு கட்சி தானே அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்குற.”

“ஆமாடா நாங்கெல்லாம் ஒண்ணுதான் இப்போ அதுக்கு என்னங்குற?”

என்று ஃபோனிலேயே எகிர ஆரம்பித்தார் அதற்கு நவீனும் பதிலுக்கு

“இப்படி ஒரு வேலையை பண்ணிட்டும் கொஞ்சம் கூட கூச்சம், மனசாட்சின்னு எதுவுமே இல்லாம எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியறது?”

“டேய் என்னடா நீ பெரிய இவனோ?”

“நான் பெரியவனே இல்லை!!! நான் ரொம்ப சாதாரணமான சின்னஞ்சிரியவன் தான்.”

என்று நவீன் பேசிக்கொண்டிருக்கும் போதே ஈஸ்வரன் ப்ரவீனிடம்…

“டேய் இதுக்கு தான் இவன்ட்ட எல்லாம் பேச மாட்டேன்னு சொன்னேன். இப்போ பாரு குதிக்கறான். அவன்ட்ட எல்லாம் நீயே பேசிக்கோ”

என்று ஃபோனை வீட்டுப் பெரிய மனுஷனான மூன்றாவது புள்ளையிடம் கொடுத்தார். ப்ரவீனும் இதுதான் சமயம் என்று தன் அண்ணன் என்ற மரியாதை துளிக் கூட இல்லாமல் ஃபோனில் நவீனிடம்

“இதோ பாரு அண்ணே இனி இங்கெல்லாம் இனிமேட்டு ஃபோன் பண்ணற வேலை எல்லாம் வச்சுக்காதே. நீ பேசினாலே அப்பா டென்ஷன் ஆகிடறா??? இனி இங்கே எப்போதும் நீ ஃபோன் பண்ண வேண்டாம்.”

என்று கூறியதும் மிருதுளா ப்ரவீனிடம்

“எப்படி எப்படி !!! யாரு யாரெல்லாம் பேசணும்ன்னு ஒரு வெவஸ்த்தை இல்லாம போச்சுப்பா. நீயெல்லாம் நவீன்ட்ட இப்படி பேசுறயே இதுக்கெல்லாம்….வேண்டாம் ஒண்ணு மட்டும் “

என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ஃபோனை கட் செய்தான் ப்ரவீன். அன்று முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் எவருடனும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்றொரு வாழ்க்கையை வாழ்ந்தனர் நவீனும் மிருதுளாவும். மூத்த தம்பதியரும் அதைப் பற்றி எந்த வித கவலையுமின்றி அதையே சிறப்பான கன்டென்ட்டாக உபயோகித்து மிருதுளாவை பற்றி அவதூராக சொந்த பந்தங்களிடம் பரப்பிவிட்டனர். அதை பலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்களுக்கு மூத்த தம்பதியரைப் பற்றியும் தெரியும், மிருதுளா, நவீன் பற்றியும் தெரியும். ஆனால் வம்புக்கென்றே தன் அக்காளுக்கு பரிந்துப் பேசிக்கொண்டு வந்தாள் பர்வதத்தின் தங்கை. அதுவும் ஃபோன் போட்டு….

“ஹலோ நவீன் நான் தான் சித்தி பேசறேன்”

“ம்… சொல்லுங்கோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”

“ம் நாங்க நல்லா இருக்கோம் இப்போ நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் அதைப் பத்தி உன்கிட்டயும் மிருதுளா கிட்டயும் பேசத்தான் ஃபோன் போட்டேன்”

“ம்…சொல்லுங்கோ சித்தி”

“நீங்க ரெண்டு பேரும் பண்ணறது சரியா? சொல்லுங்கோ!!. அதுவும் மிருதுளா பேச்சைக்கேட்டுண்டு நீ இப்படி அப்பா அம்மாவோடயும் தம்பிகளோடையும் பேசாமலிருப்பது ரொம்ப பெரிய தப்புன்னு உனக்கு தெரியலையா?”

“ஹலோ!! ஹலோ!! சித்தி நீங்க ஒன் சைட் ஸ்டோரியை மட்டும் வச்சு எங்கள்ட்ட இப்படி பேசறது சரியில்லை. அதுவுமில்லாம நாங்க எதுவுமே யார்கிட்டயுமே சொல்லலைன்னா தப்பு எங்க மேல தான்னு நீங்களா நினைச்சுண்டு பேசறேங்களே இதுவும் தப்புதான். அவாளை மாதிரி நாங்க எல்லார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லிண்டு போணோம்ன்னா அவா யாருமே அவா முகத்தை வெளில காட்ட முடியாது அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்கோ. தயவுசெய்து நீங்க அந்த கூட்டத்துக்காக பேசி நம்ம உறவை முறிச்சுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அன்று அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்கும், உங்க அக்கா அத்திம்பேர் மற்றும் அவா பசங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நல்லா தெரியும். என்னைப் பொறுத்த வரைக்கும் ஒருத்தரோட பணத்தை சுரண்டுறதை விட மாஹா பாவம் உழைப்பை சுரண்டுறது. அதை அந்த கூட்டம் செவ்வனே செய்துள்ளது. இனி நீங்க தயவுசெய்து அந்த கூட்டத்துக்காக எங்கிட்ட பேசிண்டு வராதீங்கோ ப்ளீஸ். அப்புறம் சொல்லுங்கோ சித்தப்பா குழந்தைகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

“என்னடா நவீன் இப்படி பட்டும் படாம பேசற?”

“சித்தி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கோ.”

“சரி டா. ஓகே. அப்ப நான் ஃபோனை வச்சுடறேன்”

“ஓகே சித்தி பை. தாங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் அஸ்”

இவ்வாறு நவீனும் மிருதுளாவும் ஒதுங்கினாலும் சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக கிளப்பி விட்டுக் கொண்டே இருந்தனர் மூத்த தம்பதியரும் அவர்களின் ஜெராக்ஸ் ஆனா கவினும் கஜேஸ்வரியும். ஆனால் ஒருவரிடமும் தங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பாது அனைவரிடமும் ஒரே போல் பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். இந்த தொந்தரவு தொடர்ந்ததைப் பார்த்த மிருதுளா நவீனிடம்

“ஏன் நவீன் நீங்க உங்க அப்பா அம்மா புள்ளை தானா?”

“ஹா!! ஹா குட் கொஸ்டீன் மிருது”

“இல்லை ….கவின், ப்ரவின், பவினை விட்டுக் கொடுக்காத உங்க பேரண்ட்ஸ் ஏன் உங்களை மட்டும் இப்படி எல்லாம பாடாய் படுத்தறா? அவாளோட டிஃப்ரன்ஸ் இன் பிஹேவ்யர் பிட்வீன் யூ அன்ட் யுவர் ப்ரதர்ஸ் பார்த்தா உங்க அம்மா ஏதோ உங்களோட ஸ்டெப் மதரா இருப்பாளோன்னு கூட என்னை யோசிக்க வைக்கிறது. சாரி அபௌட் தட்”

தொடரும்…….










Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s