நவீனும் மிருதுளாவும் ராமனுஜம் வீட்டில் ஒரு நாள் தங்கியப் பின் தங்கள் பெட்டிகளை ஈஸ்வரன் வீட்டில் விட்டுவிட்டு வந்ததால் மறுநாள் மீண்டும் ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே கவினும் கஜேஸ்வரியும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தனர். நவீனும் மிருதுளாவும் உள்ளே நுழைந்ததும் ஈஸ்வரன்
“வாங்கோ வாங்கோ”
“நவீன் நல்ல வேளை நீ வந்த இல்லாட்டி நாங்க திரும்பி வரதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் குஜராத்துக்கு கிளம்பியிருப்பேங்கள்.”
“அப்படியா!! நாங்க இன்னைக்கு நைட்டு கிளம்பறோமே!”
“நாங்களும் இன்னைக்கு நைட்டு எங்க ஹனிமூனுக்காக கேரளா பேக் வார்டர்ஸ் போறோம்”
“ஓ! அப்படியா!! சரி சரி எஞ்சாய்”
“நீயும் மன்னியும் ஹனிமூனுக்கெல்லாம் போகலை இல்ல”
“ஆமாம் நாங்க எங்கேயும் போகலை கவின்”
“இதெல்லாம் மிஸ் பண்ணலாமா நவீன். இனி கிடைக்குமா?”
என்று நவீனிடம் அக்கறையாக சொல்வதைப்போல குத்திப் பேசி நக்கலடித்தான் கவின். அதற்கு பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான் நவீன். அனைத்தையும் கேட்டுக் கொண்டே பெட்டிக்குள் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்த மிருதுளா கவினிடம்….
“வெளியூருக்குப் போனா தான் ஹனிமூன் போனதா அர்தமில்லை கவின் வீட்டிலேயே தனியாக தம்பதிகள் டைம் ஸ்பென்ட் செய்தாலும் …அது தான் அர்த்தம். அதுபடிப் பார்த்தா நாங்க நல்லாவே எஞ்சாய் பண்ணிருக்கோம் தெரியுமா!!”
“அது சரி தான் மன்னி. இப்போ நாங்களும் குவைத் போயிட்டா தனியா தான் இருப்போம் அது ஹனிமூன் ஆகிடுமா என்ன?”
வேண்டுமென்றே தேவையில்லாத பேச்சு வளர்வதை விரும்பாத மிருதுளா சட்டென
“சரி சரி கவின் உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது போறேங்கள். எங்களுக்கு எப்போ வாய்ப்புக் கிடைக்குதோ அப்போ நாங்க போயிப்போம் போதுமா! உடனே உங்களுக்கு கிடைத்தது கொஞ்சம் காலதாமதமாக எங்களுக்கு கிடைக்கப் போறது அவ்வளவு தானே!!! என்ன நவீன் நான் சொல்லறது சரிதானே”
“எஸ் எஸ் வெரி வெரி கரெக்ட் மிருது”
“ஹா!! ஹா !! ஹா!! என்ன கரெக்ட் நவீன்? இப்போ போகாம அறுபதாம் கல்யாணம் முடிஞ்சா போவேங்கள்?”
“ஏன் போகக்கூடாதா என்ன? அப்போ தான் வாய்ப்புக் கிடைச்சுதுன்னா அப்போ போவோம். அது வரை அன்யோன்யமா வாழ்ந்திருக்கோம் அப்படிங்கறத செலிப்ரேட் பண்ண போவோம்”
“ஓகே ஓகே நீங்க அறுபாதம் கல்யாணம் முடிஞ்சிட்டே போங்கோ நாங்க இன்னைக்கு கிளம்பறோம்”
“ஓகே கவின் அன்ட் கஜேஸ்வரி எஞ்சாய் யுவர் ஹனிமூன் ட்ரிப்”
“தாங்கஸ் மன்னி. ஷுவர் வீ வில்”
“சரி நான் ஒன்னு உன் கிட்ட கேட்கலாமா கவின்? ரொம்ப நாளா கேட்கணும்ன்னு இருந்தேன்”
“ம்…கேளுங்கோ மன்னி”
“இந்த கேரளாக்காரா ஒருத்தர் கல்ஃபுக்கு போனா அவா சொந்தங்கள் எல்லாரையும் அங்க கூட்டிண்டு போயிடறா இல்லையா!!! அது மாதிரி நீ ஏன் பண்ணலை? நீ குவைத்துக்கு போயி மூன்று வருஷம் ஆச்சே!!”
“மன்னி அங்கே வேலைப் பார்க்கணும்ன்னா டெக்னிக்ல் நாலேட்ஜ் வேணும். அது நவீன் கிட்ட சுத்தமா இல்லையே அப்புறம் எப்படி ?? அங்க அக்கௌன்டன்ட்ஸுக்கு டிமான்ட் அதிகம். உங்களுக்கு நிறைய ஆஃபர்ஸ் கிடைக்கும் ஆனா நவீனுக்கு கஷ்டம் தான்”
“நான் இப்போ நவீனை ஏன் கூட்டிண்டு போகலைன்னு கேட்கவேயில்லையே!!! நம்ம ப்ரவின், பவின் இருக்காளே அவாளைக் கூட்டிண்டு போயிருக்கலாமே அவாளுக்கு நீ சொன்ன டெக்கினிக்ல் நாலேட்ஜ் இருக்கே!!!”
“ஆங் அவா ரெண்டு பேரும் படிப்பை முடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்”
“அதுவும் சரிதான். அப்போ அடுத்த வருஷம் அவா ரெண்டு பேருக்கும் அங்கே வேலை கிடைச்சுடும்ன்னு சொல்லு”
“பார்ப்போம் மன்னி பார்ப்போம்!!!”
“சரி சரி நான் சக்திக்கு சாப்பாடு ஊட்டணும் நீங்க பேசிண்டு இருங்கோ நான் வரேன்”
என்று கவினின் கேலி நக்கல் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தப் பின் உள்ரூமில் சக்திக்கு சாப்பாடு ஊட்டிவிடச் சென்றாள் மிருதுளா. அப்போது அங்கு வந்த நவீனிடம் மெதுவாக
“உங்களுக்கு டெக்னிக்கல் நாலேட்ஜ் இல்லாமல் போனதுக்கு இந்த குடும்பம் தான் காரணம். அவன் அப்படி சொல்லும் போது கேட்டுண்டு பேசாம உட்கார்ந்திருந்தா உங்க அப்பாவும் அம்மாவும். அவாளால தானே நீங்க பதினாறு வயசுலேயே வேலைக்குப் போக வேண்டியதாச்சு அதை எடுத்து சொல்லியிருக்கலாம் இல்லையா!!! நக்கலடிக்கறான்!!! ஏன் அவன் கல்யாணம் நம்ம கல்யாணம் மாதிரி நடக்கணும்னு தானே கண்டீஷன் எல்லாம் போட்டான்….அப்படியா நடந்தது. சாப்பாடு பத்தாம, கல்யாண பட்சணம்ன்னு ஒருத்தருக்கும் ஒண்ணும் தராம, தீஞ்ச பாயசம்ன்னு அவா கல்யாணம் நடந்த விதத்தை நமக்கு கேலிச் செய்ய எவ்வளவு நேரமாகும்!! நாம செய்தோமா? வேணும்னா பாருங்கோ நம்மளையும் அதே ஊர்ல கொண்டு போயி உட்கார வைப்பா அந்த அம்மன்.
“விடு மிருது அவன் கெடக்கான். மே பி அதை கிண்டலடித்திடுவோமோன்னு தான் அவன் முந்திக்கறான் போல!!! லெட்ஸ் ஜஸ்ட் லீவ் இட். நீ எல்லாத்தையும் பேக் பண்ணிட்டயா?”
“அதுவும் சரிதான். ஆங் பேக் பண்ணிட்டேன்.”
இரவு ஏழு மணிக்கு அனைவருமாக டிபன் அருந்தினர். கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் ட்ரெயின் எட்டரை மணிக்கென்பதால் என்பதால் அவர்கள் இருவரும் முதலில் கிளம்பிச் சென்றனர். நவீன் மிருதுளாவுக்கு பத்து மணிக்கென்பதால் அவர்கள் ஒன்பது மணிக்குக் கிளம்பிச் சென்றனர்.
ஒரு வருடம் ஆனது. ஈஸ்வரன் பர்வதம் பவின் மற்றும் அவன் நண்பன் என நால்வருமாக குஜராத் சென்றனர். மிருதுளா அவர்களை வரவேற்று நன்றாக கவனித்துக் கொண்டாள். தன்னைக் கொடுமைப் படுத்திய மாமியாரிடம் கூட தன்மையாக நடந்துக் கொண்டாள். அதை எல்லாம் பார்த்த நவீன் அவளிடம்
“என்ன மிருது உன் மாமியாரை ஒரு வேலை செய்ய விடாம எல்லாத்தையும் நீயே செய்யற?”
“இது நம்ம வீடு நவீ. நம்மாத்துக்கு யார் வந்தாலும் நாம அவாளை நல்லா பார்த்துக்கணும். அது தான் என் அம்மா எனக்கு அவா செயல் மூலமா சொல்லிக்கொடுத்தது. இது தான் நான். ஆத்துக்கு வரவா எதிரியாகவே இருந்தாலும் நாம நல்லா கவனிச்சுக்கணும்ங்கறது என்னோட பாலிசி.”
“சூப்பர் போ!!! சரி இந்த மாசம் செலவுக்கு காசு பத்துமா?”
“பத்தும் பத்தும் நான் சமாளிச்சுக்கறேன்”
என்று நவீன் வாங்கும் சம்பளத்தில் சிக்கனமாக வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பனையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர் பர்வதீஸ்வரன். அன்று மாலை அனைவருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன்
“எனக்கு நாளன்னைக்கு அறுபது வயசாக போறது”
“அப்படியா சூப்பர் அப்பா. எனக்கு இது தெரியாது”
“மிருது நானே இப்போ தான் தெரிஞ்சுண்டேன்”
“கேக் வாங்கி வெட்டி செலிப்ரேட் பண்ணிடலாம் நவீ”
“இல்லை அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வையுங்கோ. ரம்யா ஃபேமிலியை இன்வைட் பண்ணுங்கோ அப்புறம் வேற யாராவது வரணும்னா அவாளையும் இன்வைட் பண்ணிக்கோங்கோ புரிஞ்சுதா.”
என்று ஒரு பெரிய செலவிற்கான குண்டைத் தூக்கிப் போட்டார் ஈஸ்வரன். அவர்கள் சும்மா வரவில்லை காரணமாகதான் வந்துள்ளனர் என்று அப்போது புரிந்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். அன்றிரவு மிருதுளா நவீனிடம்
“இது என்ன நவீ புது செலவ இழுத்து விடறா?”
“விடு சொல்லிட்டுப் போறா. இவாளுக்கு ஊரைச் சுத்திக் காமிச்சு அங்க இங்கன்னு கூட்டிண்டு போனதிலேயே பைசா காலி இதுல எங்கேந்து அறுபதாம் கல்யாணம் பண்ணுவோம்? நாம ஒரு கேக் வாங்கிண்டு வந்து ஆத்துல வெட்டி செலிப்ரேட் பண்ணுவோம் போதும்”
“புள்ளகளை பெத்து வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கி அவாளுக்காகவே வாழ்ந்து, அவா சுக துக்கங்கள்ல பங்கெடுத்து இருக்கும் பெத்தவாளுக்காக புள்ளகளே விரும்பிப் பண்ணறது தான் அறுபதாம் கல்யாணம் ஆனா இங்க என்னடான்னா புள்ளகளுக்குன்னு ஒண்ணுமே செய்யமா , மூத்த புள்ளையை எவ்வோளோ படுத்த முடியுமோ அவளோ படுத்திட்டு அவன்கிட்டயே வந்து அறுபதாம் கல்யாணம் பண்ணி வைன்னு டிமாண்ட் பண்ணறா!!! அது தான் எனக்குப் பிடிக்கலை நவீ. வாய் விட்டுக் கேட்டுட்டா !!! நாம இதுக்கு மேலேயும் பண்ணாம இருக்கக் கூடாது.”
“அதுக்குன்னு!!!! என்ன பேசற மிருது? நம்மகிட்ட எங்கே காசு? எவ்வளவு செலவாகும் தெரியுமா?”
“நாம ஏன் மண்டபம் அது இதுன்னு போகணும். பேசாம நாளைக்கு நம்ம ஊரு முருகன் கோவிலிருக்கே அங்கே போயி விசாரிப்போம். அப்புறம் டிசைட் பண்ணுவோம்”
“எப்போ சொல்லறா பாரேன். நமக்கு டைமும் இல்லை”
“விடுங்கோ நாம நாளைக்கு கேட்டு விசாரிச்சுட்டு வந்து என்ன பண்ணலாம்ன்னு முடிவெடுப்போம்”
மறுநாள் நவீனும் மிருதுளாவும் சக்தியைக் கூட்டிக் கொண்டு விடியற் காலையிலேயே கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றனர். அவர்கள் சென்றதும் பர்வதம் ஈஸ்வரனிடம்
“ஏன் நம்மளையும் கூட்டிண்டு போனா என்னவாம். அவா மட்டும் பைக்கில் போயிட்டா பாருங்கோ”
“இதோ நம்ம பவினும் அவன் ஃப்ரெண்டும் தூங்கிண்டிருக்கா!! அதுவுமில்லாம அவா ரெண்டு பேர்ன்னா பைக்குல போயிட்டு வந்திடுவா! நம்மளையும் கூட்டிண்டு போகணும்னா ஆட்டோ வரவழைக்கணும். இந்த நேரத்துல எங்கேந்து ஆட்டோ கிடைக்கும்? அதுனால அவா மட்டும் போயிருப்பா!! விடேன்”
நவீனும் மிருதுளாவும் கோவிலில் விசாரித்தனர். அங்கே அவர்கள் எழுநூற்றி ஐம்பது ரூபாய் முன்பணம் செலுத்தி அறுபதாம் கல்யாணத்தை அங்கு நடத்த ஏற்பாடு செய்துவிட்டு, அருகிலிருந்த தமிழ்காரர் துணிக் கடையிலிருந்து ஒரு புடவையும், வேஷ்டி அங்கவஸ்த்திரமும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வந்ததும் ஈஸ்வரனிடம் ஏற்பாடுகளை சொன்னார்கள். மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் கோவிலில் இருக்க வேண்டுமென்றும் அதனால் அனைவரையும் தயாராக இருக்கும் படியும் சொல்லிவிட்டு ரம்யா சித்திக்கு ஃபோன் போட்டு அவர்களையும் கோவிலுக்கு வரும்படி அழைத்தனர் நவீனும் மிருதுளாவும். பின் மிருதுளா தன் மாமனார் மாமியாரிடம் அவர்களுக்காக வாங்கி வந்த புதுப் புடவை வேஷ்டியைக் கொடுத்து
“அம்மா அப்பா நீங்க இந்த புது டிரஸைத் தான் நாளைக்குப் போட்டுக்கணும்”
“இது என்ன காட்டன் புடவையா?”
“ஆமாம் மா”
“என்ன ஒரு நூறு ரூபாயாவது இருக்குமா?”
“ஆங் நூற்றி இருபத்தைந்து ரூபாய்”
என்று கூறிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. தன் மனதில்
“இவாளுக்கு இதெல்லாம் நான் செய்யணும்னே அவசியமில்லை ஆனாலும் வயசானவா கேட்டுட்டாளேன்னு கையில பணமில்லாத நேரத்துலயும் கூட அட்ஜஸ்ட் பண்ணி எல்லாம் செய்தா….குத்தத்த பாரு!!! அம்மா தாயே நாங்க எங்களால முடிஞ்சதைப் பண்ணறோம் மா. இதுல ஏதாவது தவறிருந்தாலோ குற்றம் குறையிருந்தாலோ மன்னிச்சுடு மா”
என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே வேலையை செய்தாள். அப்போது அங்கு வந்த நவீன்
“ஏய் மிருது நாம ரம்யா சித்தி ஃபேமிலியையும் இன்வைட் பண்ணிட்டோம் அவாளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட்?”
“நான் காலையில வெண்பொங்கலும் இட்டிலியும் தேங்காய் சட்னியும் செய்துடறேன். கோவில்ல தான் சக்கரைப் பொங்கல் ஒரு பாத்திரம் தருவான்னு சொன்னாலே !! ஸோ இதெல்லாம் வச்சு மேனேஜ் பண்ணிடலாம் நவீ”
“ஏய் விளையாடறயா? மொத்தம் பத்து மெம்பர்களுக்கு செய்யணும்!! அதுக்கு நீ சீக்கிரம் எழுந்திரிக்கணுமே!!”
“ஆமாம் எழுந்திரிச்சாகணும். வேறு வழி. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நவீ”
அன்றிரவு அனைவரும் சீக்கிரம் தூங்கச் சென்றனர். மறுநாள் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அடுப்படியில் வேலையில் இறங்கினாள் மிருதுளா. அப்போது பர்வதம் அடுப்படி லைட் வெளிச்சத்தில் எழுந்து வந்து
“என்ன மணி மூணு தானே ஆகறது!! இப்போ இங்கே என்னப் பண்ணிண்டு இருக்க?”
“எல்லாருக்கும் காலை டிபன் ரெடி பண்ணிண்டிருக்கேன் மா”
“சரி சரி பண்ணு!! நான் போய் படுத்துக்கறேன். இந்ந கதவை சாத்திக்கோ வெளிச்சம் நேரா கண்ணுல படறது”
என்று அடுப்படி கதவைச் சாத்திவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள் பர்வதம். மிருதுளா அனைத்து செய்து தயாராக்கி விட்டு குளித்து கிளம்பினாள். நாலரை மணிக்கு அனைவரும் எழுந்தனர். மிருதுளா அனைவருக்கும் காபிப் போட்டுக் கொடுத்தாள். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் குளித்துக் கிளம்பினர். நவீன் பைக்கில் சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான். அதில் ஈஸ்வரன், பர்வதம், பவின் மற்றும் அவன் நண்பன் ஏறிச் சென்றனர். மிருதுளா சக்தியை குளிப்பாட்டி டிரஸ் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு கதவை தாழிட்டு நவீனுடன் பைக்கில் கோவிலுக்குச் சென்றாள்.
அங்கே அனைத்தும் தயாராக வைத்து சாஸ்திரிகள் காத்திருந்தனர். ஈஸ்வரனையும் பர்வதத்தையும் அமரச் சொல்லி அறுபதாம் கல்யாணம் சிம்பிளாக கோவிலில் நடந்தேறியது. ரம்யா சித்திக் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டர். அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும் பிரசாதமான சக்கரைப் பொங்கலை வாங்கிக்கொண்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர். அங்கே எல்லோருக்கும் நவீனும் மிருதுளாவுமாக… மிருதுளா தயார் செய்து வைத்திருந்த வெண்பொங்கல், இட்டிலி, தேங்காய் சட்னி மற்றும் பிரசாதமான சக்கரைப் பொங்கல் பரிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டதும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ஈஸ்வரன் தன் மகன் மருமகளின் நிதி நிலவரம் அறியாதது போல
“என்னத்துக்கு ஆத்துல இப்படி கஷ்டப் பட்டுண்டு பேசாம ஏதாவது ஹேட்டல்ல ஏற்பாடு பண்ணிருக்கலாமே”
“ஏன் பா நான் செஞ்ச டிபன் நல்லா இருக்கலையா என்ன?”
“ஏய் மிருது கலக்கிட்ட போ. பர்வதம் அக்கா அத்திம்பேர் உங்க புள்ளையும் மாட்டுப்பொண்ணுமா உங்க அறுபதாம் கல்யாணத்தை ஜமாய்ச்சுட்டா!!! மிருது ஐ லைக் தி வெண்பொங்கல் வெரி மச் அன்ட் எப்படி இட்டிலியை அவ்வளவு சாஃப்ட்டா செஞ்சிருக்க? இந்த ஊர்ல ஹோட்டல்ல சாப்பிட்டிருந்தா இவ்வளவு ருசியான டிபன் நிச்சயம் கிடைச்சிருக்காது அத்திம்பேர்”
“தாங்க்ஸ் சித்தி”
அவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மதியம் சாப்பாடும் தயார் செய்தாள் மிருதுளா. அனைவரும் விருந்து சாப்பாடு சாப்பிட்டனர். மாலை காபி அருந்தியப் பின் ரம்யா சித்திக் குடும்பம் கிளம்பினர். அப்போது நவீனும் மிருதுளாவும் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பிவைத்தனர்.
தனக்கும் தன் கணவருக்கும் தீங்கைத் தவிற வேறு ஏதும் செய்திடாத மாமனார் மாமியாருக்கு அவர்கள் மகனே வேண்டாமென்று சொன்ன போதும் மூத்த தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தியை எடுத்து அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடத்தி மகன் மருமகளின் கடமையிலிருந்து தவராதிருந்தனர் நவீனும் மிருதுளாவும்.
“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.”
என்ற திருக்குறளுக்கு ஏற்றார் போல வாழ்ந்திடாத பர்வதீஸ்வரனுக்கு அவர்களின் முன் ஜென்ம பலனால்
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்றார் போல நவீன் தனது பண்ணிரெண்டு வயது முதல் செய்துக் கொண்டிருப்பதும் அதை தொடர்ந்திட மிருதுளா கைக் கொடுப்பதும் பொருத்தமாக இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!!!
தொடரும்……