அத்தியாயம் – 7 : கல்யாண வைபோகம் – ஜானவாசம், நிச்சயதார்த்தம்.

இருபத்தி ஏழாம் தேதி காலை சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண வைபோகமே என்ற பாடலை வ்ரதம் மேற்கொண்ட கல்யாண பெண்ணான நமது மிருதுளாவிற்கு ஆரத்தி எடுத்துக்கொண்டே பாடினர் பரிமளமும், மேகலாவும். பின் மிருதுளாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக காலை டிபன் அருந்தினார்கள். 

வ்ரதம் என்பது திருமணத்தின் முன்தினம்  மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு  கைகளில் மஞ்சள் தடவிய கயிறு கட்டி பிரம்மச்சரியத்தை அன்றுடன் முடித்து கிரஹஸ்த்தர்களாக மாறுவதே இந்த சடங்கின் அர்த்தம். இந்த சடங்கு முடிந்தால் மணப்பெண் மணமகன் இருவரும் வீட்டை விட்டு திருமணம் முடியும் வரை வெளியே செல்லக்கூடாது ஆகையால்தான் பெரும்பாலும் வ்ரதம் மண்டபத்தில் திருமணத்திற்கு முன்தினம் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில நேரம் மாப்பிள்ளை திருமணத்தினத்தன்று விடியற்காலையிலும் மேற்க்கொள்வர்.

இருபத்தி ஏழாம் தேதி காலை உணவு ஆன பின் சிலர் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். ஒரு கூட்டம் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். ஒரு சிலர் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டும் பழங்கதைகளை அசைப்போட்டுக்கொண்டும் வட்டமாக அமர்ந்திருந்தனர். மிருதுளாவும் அம்புஜமும் அவர்கள் அறையில் கொண்டுவந்த பெட்டிகள் நகைகள் எல்லாவற்றையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். வேனுவும் ராமானுஜமும் சீர் ஜாமான்களை ராமனுஜம் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க அவற்றை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான் வேனு. 

அம்புஜத்திடம் அவள் தங்கையின் கணவனின் ஒன்னு விட்ட மாமா ..

ஏம்மா அம்புஜம் இப்பத்தான் கேள்விப்பட்டேன் கல்யாண புள்ளான்டான் அவா ஆத்த மூத்தப்புள்ளையாமே!!

ஆமாம் மாமா ஏன் அதுக்கென்ன இப்போ?”

நம்ம மிருதுளாவும் நம்ம ஆத்த மூத்தப்பொன்னு

ஆமாம். சரி

இல்லை மூத்த புள்ளைக்கு மூத்த பொன்னை கல்யாணம் பண்ணப்டாதுனு சொல்லுவா அதுதான் நீ எப்படி ஒத்துண்ட ?”

ஓ அப்படியா எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா அதுவும் இல்லாம இதை இது வரைக்கும் யாருமே சொல்லலையே!!! இனி ஒன்னும் செய்ய முடியாதே. எல்லாம் அந்த பகவதி பார்த்துப்பள். அவ மேல பாரத்த போட்டுதான் இவ்வளவு ஏற்பாடுகளும் பண்ணிருக்கோம் அதனால எல்லாம் அவள் செயல். சரி மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாம் வர நேரமாச்சு நான் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆயாச்சானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.

என்று கூறி அங்கிருந்து நேராக மண்டப டைனிங் ஹாலுக்குச்சென்று எல்லாம் தயாராக உள்ளதா என்று விசாரிப்புடன் ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் திருமண கான்ட்ராக்ட் தலைவர்  மாப்பிள்ளைவீட்டார் வந்ததும் சம்பந்தி கையில் கொடுக்க வேண்டிய தெரட்டிப்பாலை ஒரு அழகான டப்பாவிலிட்டு அம்புஜத்திடம் கொடுத்து …

மாமி ஏற்பாடெல்லாம் நன்னாருக்கா. உங்களுக்கு திருப்தியாருக்கா.

இதுவரைக்கும் எல்லாம் நன்னா இருக்கு. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்ததும் அவாள எல்லாரையும் நன்னா கவனிச்சுக்கோங்கோ. எந்த குற்றமும் குறையும் அவா சொல்லிடப்டாது அது உங்க கையில் தான் இருக்கு“.

கவலைய விடுங்கோ மாமி. ஒரு குறையுமில்லாம பேஷா நடத்திக்கொடுத்திடுவோம் சரி நான் பந்திக்கு எல்லாத்தையும் ரெடி பண்யுடறேன்

டைனிங் ஹால் கீழே உள்ளது. திருமண மண்டபம் டைனிங் ஹாலுக்கு மேலே உள்ளது. அம்புஜம் கீழே எல்லாம் ரெடி என்று திருப்தி ஆனபின் மேலே சென்று மிருதுளாவை புடவை மாற்றி தயாராக சொல்லி தானும் தயார் ஆனாள். 

வேனு வேகமாக மேலே வந்து 

அம்மா அம்மா அவா எல்லாரும் வந்தாச்சு. சீக்கிரம் கதவ தொறந்து வா மா. அப்பா உன்னை கூட்டிண்டு வரச்சொன்னா

என்றதும் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்புஜம். மிருதுளாவை ரூமிலேயே இருக்கச்சொல்லிவிட்டு பெண்வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க கீழே சென்றனர். மாப்பிள்ளை வீட்டு வேன்களும், கார்களும் சர் சர்ரென வந்து நின்றது. அனைவரும் இறங்கி மண்டப வாசலுக்கு சென்றதும் அம்புஜத்தின் மன்னியும், ராமானுஜத்தின் சித்தியுமாக மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர். அம்புஜம் தன் கையில் வைத்திருந்த தெரட்டிப்பால் டப்பாவை பர்வதத்திடம் கொடுத்து வரவேற்றாள். வேனு மாப்பிள்ளைக்கு மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு பன்னீர் தெளித்து உள்ளே அழைத்தான். ராமானுஜம் ஈஸ்வரனுடன் கைக்குலுக்கி வாங்கோ என்று அனைவரையும் வரவேற்றார்கள். அனைவரும் வந்ததும் மேலே சென்று அவரவர் ரூமுகளில் பெட்டிகளை வைத்துவிட்டு மிருதுளாவைப்பார்க்காத நவீன் வீட்டார் அவளை காண சென்றனர். மிருதுளா ரூம் கதைவை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றனர் பர்வதத்தின் டில்லி தங்கைகள் லட்சுமியும், லலிதாவும். மிருதுளாவைப்பார்த்ததும் லட்சுமி..

ஹேய் இவ நம்ம பர்வதம் சொன்னா மாதிரி குண்டெல்லாம் இல்லையே அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கா

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத மனிதர்கள். இத்தகைக்கு நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பெண்மணிகளாம். ஒரு பெண்ணை முதன்முதலில் பார்க்கும் போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு மக்குகள் இல்லை..பர்வதம் ஏத்திவிட்டதை அப்படியே கக்கிவிட்டு சங்கடப்படுத்த வந்தவர்கள் போலவே பேசினர். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பதை மறந்து போனார்கள் அடுத்தவர் பெற்று வளர்த்த பெண்ணை பழிக்கும் ஜோரில். பர்வத்துடன் கூட பிறந்தவர்களாயிற்றே.

சீர் சாமான்கள் அடுக்கிவைத்திருந்த ரூமில் அழகான அலங்கார விளக்குள் ஆன் செய்யப்பட்டிருந்தது. அதில் வேனுவின் கைவனம் ஜொலித்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் அனைத்தையும் அவரவர் கண்களாலேயே ஸ்கேன் செய்தனர். ஈஸ்வரனின் அக்காக்கள் சொர்னமும் வரலட்சுமியும் பேசிக்கொண்டனர்….

பர்வதத்திற்கு வந்த சம்பத்திகள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழகா பண்ணிருக்கா..இந்த பர்வதம் வம்பேதும் செய்யாமல் இருந்தால் நல்லாருக்கும்

அதச் சொல்லு சொர்னம் அக்கா. அவளால சும்மா இருக்க முடியாதே ஏதாவது செய்வள். எனக்கு அந்த மிருதுளா பொன்ன நெனைச்சா பாவம்னு தோனறது. நாம அந்த பொன்னுக்காக வேண்டிப்போம். வேறென்ன செய்யறது.

நவீன் வீட்டார் அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆனதும் ராமானுஜமும் அம்புஜமும் வேனுவும் சென்று அவர்கள் அனைவரையும் மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுத்தப் போது பர்வதம் அவர்கள் அறைக்குள் வரும்படி சொல்ல இவர்கள் உள்ளே “நாழி ஆகறது சாப்பிட கூட்டிண்டு போக வந்தோம்”  என்று கூறிக்கொண்டே சென்றனர். அப்போது ஒரு நவரத்தின ப்ரேஸ்லெட் ஒன்றை எடுத்து பர்வதம் அவர்களிடம் காண்பித்து…

இது உங்க பொன்னு மிருதுளாவிற்காக என் புள்ள கவின் குவைத்திலிருந்து வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ

அம்புஜம் பார்த்துவிட்டு 

ரொம்ப அழகா இருக்கு மாமி. ஆமாம் எங்க யாரையுமே காணம் நீங்க மட்டும் இருக்கேங்கள்என்று கேட்க அதற்கு பர்வதம்

எல்லாரும் பக்கத்து ரூம்ல இருக்கா. சரி வாங்கோ இத காட்டத்தான் கூப்பிட்டேன். அவாளையும் அழைச்சுண்டு வரேன். நீங்க முன்னாடி போங்கோ

எல்லாருமாக அமர்ந்து முதல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அடுத்த பந்தியில் மீதமிருந்த நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் உணவருந்த அமர்ந்தனர். அம்புஜம் பங்கஜத்தை அழைத்து மிருதுளாவையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னாள். இது சாப்பிட்டு கை கழுவுவதற்கு எழுந்த நவீன் காதில் விழ அவன் மெதுவாக கை கழுவச்சென்றான். பின் அங்கிருந்தவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருப்பது போல மிருதுளா வரவுக்காக காத்திருந்தான். மிருதுளாவும் பங்கஜமும் வந்தார்கள். உடனே நவீன் ஹாய் மிருதுளா என்றான் அவளும் ஹாய் என்றாள். பங்கஜம் கிண்டலாக…

சரி சரி நாளையிலிருந்து பேசத்தான் போரேள் அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்கோ ரெண்டு பேரும்

உடனே நவீன்..

ஒரு ஹாய் தானே சொல்லிண்டோம். நீங்க சொல்வதும் சரிதான். நாங்க நாளையிலிருந்தே பேசிக்கறோம். ஓகே வா.என்றதும் பங்கஜம் மீண்டும்

நாளையிலேர்ந்து நீங்களாச்சு உங்க ஆத்துக்காரியாச்சு. அதெல்லாம் சரி நான் ஒன்னு கேள்ளிப்பட்டேன் அதப்பத்தி உங்கள்ளட்ட கேக்களாமா?”

ஓ எஸ் தாராளமா. அப்படி என்ன கேள்விப்பட்டேங்கள் சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன்

என்ன எங்க மிருதுவ கூட்டிண்டு போகமாட்டேன்னு சொன்னேங்களாமே!! உங்களோட வாழரத்துக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கறோம் இங்கேயே விட்டுட்டுப் போறத்துக்கா எங்க அக்காவும் அத்திம்பேரும் இத்தர கஷ்ட்டப்பட்டு உங்களுக்கு மிருதுளாவ கல்யாணம் பண்ணி வைக்கறா?!”

அவளுக்கு தான் ஏதோ பரீட்சை இருக்குனுட்டு ஒரு கன்ஃப்யூஷன் ஆச்சு. நான் அப்படி ஒன்னுமே சொல்லலையே

ஸோ அவள உங்ககூட கூட்டிண்டு போறதுல உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லையா

அஃப்கோர்ஸ் எஸ் எனக்கு நோ இஷூஸ் அட் ஆல். நான் வீடு கூட பார்த்தாச்சு. டிகெட் மட்டும் தான் எடுக்கனும்

ஏன் இன்னும் டிக்கெட் எடுக்கலை?”

இதோ எடுக்க என் பெரியம்மா பையனிட்ட சொல்லிருக்கேன் நாளைக்கு எடுத்துண்டு வருவான்

அப்போ இப்ப வரைக்கும் கூட்டிண்டு போற ஐடியாவே இல்லை ம்ம்ம்ம்… நாளைக்கு டிக்கெட் வந்தாதான் நான் நம்புவேன்

ஓகே ஓகே அப்படியே ஆகட்டும்.

என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் நவீனை அவன் அத்தை மகன் வந்து பர்வதம் அழைத்துவரச்சொன்னதாக  அழைத்தான். பங்கஜமும்…

சாரி உங்கள ரொம்ப நேரம் பிடிச்சுண்டுட்டேன். சரி நீங்க போய் உங்க வேலைகளைப்பாருங்கோ நானும் போய் சாப்பிடட்டும் ஆல்ரெடி மணி இரண்டரை ஆயிடுத்து.

ஓகே பை ஃபார் நௌ

அனைவரும் மத்திய உணவு அருந்திய பின் ஓய்வெடுத்தனர். மிருதுளாவும் அம்புஜமும் சற்று நேரம் படுத்துக்கொண்டனர். சற்று கண் அசந்ததும் …டக் டக் டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள் அம்புஜம். அவர்கள் ரூம் வாசலில் மிருதுளாவிற்கு மேக்அப் போட இருவர் வந்திருந்தனர். 

 அப்பொழுதுதான் டைமைப்பார்த்தாள் அம்புஜம் மணி மூன்றரை ஆகியிருந்தது. மிருதுளாவை எழுப்பி குளித்துவிட்டு வரச்சொல்லி மேக்அப் போட வந்தவர்களை ரூமிற்குள் அமரவைத்துவிட்டு அவர்களுக்கு காபி கொடுக்க சொல்லி மிருதுளா மாலை கட்ட வேண்டிய புடவை நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து மிருதுளாவை தயார் படுத்தச் சொல்லிவிட்டு தான் தயாராகிக்கொண்டிருக்கையில் நவீனின் அம்பிகா மாமி ஒரு பட்டுப்புடவையை எடுத்து வந்து அம்புஜத்திடம்…

மாமி இந்தாங்கோ நிச்சயதார்த்தப்புடவை பர்வதம் அக்கா உங்களாண்ட கொடுக்கச் சொன்னா

இத ஏன் இப்ப தறேங்கள். சபேல நிச்சயதார்த்தம் சமையத்துல தானே தரனும்

அதெல்லாம் எனக்கு தெரியாது மாமி கொடுக்கச்சொன்னா குடுத்துட்டேன் நான் வரேன் மாமி“.

சரி நான் சம்பந்தி மாமிகிட்டேயே கேட்டுக்கறேன். அதை அப்படியே மிருதுளாட்ட கொடுத்திடுங்கோ. மிருது அத மாமிகிட்டேருந்து வாங்கிக்கோமா.

என்றாள். மிருதுளாவிற்கு மேக்அப் போட்டுக்கொண்டிருந்ததினால் அம்புஜத்தின் தங்கை கோமளம் அந்தப்புடவையை அம்பிகாவிடமிருந்து வாங்கி ஷெல்ஃபில் வைத்தாள். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் ஜானவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பிற்கு  தயாராகி அனைவருக்கும் மாலை டிபன் காபி எல்லாம் சரியாக பரிமாரப்பட்டதா என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

ஜானவாஸத்திற்கு அனைவரும் அருகே உள்ள கோவிலுக்கு செல்ல விறுவிறுப்பாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பர்வதம் மெல்ல பூனைப்போல மிருதுளா அறைக்குச்சென்று…

என்ற மிருதுளா மேக்அப் நடக்கறதா..டைமுக்கு ரெடி ஆயிடுவியோனோ!

ஆயிடுவேன் மா. ஜஸ்ட் புடவைதான் கட்டனும். நீங்கள் எல்லாரும் கோவில் போயிட்டு வரத்துக்குள்ள ரெடி ஆகிடுவேன்!

சரி அம்பிகா ஒரு புடவை குடுத்தாளா.

ஆமாம் மாமி நிச்சயதார்த்தப் புடவைனுட்டுத் தந்துட்டுப்போனாஎன்றாள் கோமளம்.

ஓ நீங்களும் இங்க தான் இருக்கேளா நான் கவணிக்கலை. எப்படி இருக்கேங்கள்? சரி எனக்கு நாழி ஆகறது அந்தப் புடவையை கொஞ்சம் தாங்கோ நான் நிச்சயத்தப்போ சபேல வைக்கனும்

அதத்தான் அம்புஜமும் அம்பிகா மாமிகிட்ட சொன்னா ஆனா நீங்கதான் குடுத்துட்டு வரச்சொன்னதா இல்லையா சொன்னா

ஆமாம் ஏதோ ஒரு எண்ணத்துல சொல்லிட்டேன் சரி தாங்கோ நான் போய் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்

இந்தாங்கோ மாமி அந்த புடவைஎன்று கோமளம் குடுத்ததும் ரூமைவிட்டு வெளியேறினாள் பர்வதம். அவளைப்பார்த்த அவளது அக்கா …

என்ன பர்வதம் உன் மாட்டுப்பொன் ரூமிலேருந்து கையில ஏதோ புடவ டப்பா மாதிரி எடுத்துண்டு போறாய்

அது ஒன்னுமில்லை ரமணி. சரி நம்ம ஆளுகள் எல்லாரும் கோவிலுக்கு போக ரெடி ஆகிட்டாளான்னு ஒன்னுப் பார்த்துட்டு வாயேன்” 

என ரமணியை அனுப்பிவைத்துவிட்டு அந்த புடவையை அவள் ரூமிலுள்ள பீரோவில் வைத்துப்பூட்டினாள் பர்வதம்.

அவள் புடவையை அவசரமாக வாங்கிக்கொண்டுப்போனது கோமளத்திற்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் எப்படியும் நிச்சயதார்த்தம் சமயத்தில் சபையில் வைத்து தரத்தானே போகிறார்கள் என்று விட்டுவிட்டாள் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. 

 மண்டபத்தில் மிருதுளாவும் அவளுக்கு துணையாக கோமளமும்  மட்டும் இருந்தனர். மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இருந்தனர். அங்கிருந்துதான் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும் ஜானவாசம் தொடங்கவுள்ளது. 

கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு அன்று நிச்சயதார்த்த்திற்கு நவீன் எடுத்து வந்த கோட் சூட்டை, மாலை அனைத்தயும் தாம்பாளத்தில் வைத்து ராமானுஜமும் அம்புஜமும் கொடுத்தனர் அதை வாங்கிக்கொண்டு கோவிலில் ஒரு மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொண்டு வருவதர்க்குள் அனைத்து சொந்த பந்தங்களும் வட்டமாக ஒரு பாதி பெண்வீட்டாரும் மறு பாதி மாப்பிள்ளை வீட்டார் என அமர்ந்திருந்தனர். அங்கே நவீனையும் அமரவைத்தனர். 

வேனுவும் ஜம்முனு ஒரு கோட் சூட் போட்டுக்கொண்டு தனது அக்காவிற்கு கணவராக போகும் நவீனுக்கு மாலை போட்டு பூச்செண்டை கையில் கொடுத்து தங்க சேயின் ஒன்றை போட்டுவிட்டான். வேனு சேயின் போட்டதும் பர்வதம் தனது இரண்டாவது மகனாகிய கவினைப்பார்த்து கண் அசைத்தாள்.

 என்னென்ன விளங்க வில்லை அல்லவா. வாருங்கள் அன்று காலை நவீன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை உங்கள் முன் தோன்றவிருக்கும் சுழல்களின் நடுவில் பார்த்துவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வருவோம். அன்று காலை நவீன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் அப்பொழுது குவைத் கவின் அனைவர் முன்னும் நவீனுக்கு சேயின் போட்டு விட்ட சிறுது நேரத்தில் பர்வதம் நவீனிடம் சென்று..

நவீன் அந்த செயினை கழற்றிக்கொடுத்துவிடுஎன்றாள் அதற்கு நவீன் ஏன் என்று கேட்க 

உனக்கு மண்டபத்தில் அவர்கள் செயின் போடுவார்கள் அதனால் இதை என்னிடம் கழற்றித் தந்துவிடு”  என்றதும் நவீனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் அந்த பேச்சை அதற்கு மேல் வளரவிட விருப்பமில்லாமல் கழற்றிக்கொடுத்துவிட்டான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவினும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதுதான் பர்வதத்தின் கண்ணசைவுக்கு பின் இருந்த ஃபிளாஷ் பேக். சரி சரி சுழல் நின்னுப்போய் நாம அனைவரும் மீண்டும் கோவில் வந்துவிட்டோம். அனைவரும் வேனு செயின் போட்டதுக்கு கைத்தட்டினார்கள். பின் மாப்பிள்ளையான நவீனை பூவெல்லாம் வைத்து அலங்கரித்த ஜானவாச காரில் ஏறி அமரச்சொன்னார்கள் கூடவே சித்தப்பா, மாமா, அத்தை ஆகியவர்களின் குழந்தைகளையும் காரில் ஏற்றி நவீனுடன் அமர்த்தினர். காரின் வலதுபுறம் பெண்வீட்டாரும், இடதுபுறம் மாப்பிள்ளை வீட்டாரும் என ஜானவாச கார் மெல்ல மெல்ல வானவேடிக்கைகளுடன் நாதஸ்வரம் இசைக்க மேள தாளங்களுடன் நகர்ந்து மண்டப வாசல் வந்தடைந்தது. உடனே ராமானுஜம் நண்பரான சீனிவாசன் உள்ளேச் சென்று மிருதுளாவை வெளியே அழைத்து வந்தார். அவர் பெண்ணின் திருமணத்தின் போது அவ்வாறு செய்ததால் இங்கேயும் அதையே செய்தார். 

ஜானவாச காரில் மிருதுளாவையும் ஏறி அமரச்சொன்னார் யாருமே அதை வித்தியாசமாக பார்க்கவில்லை ஆனால் பர்வதமும் அவள் தங்கைகளும் மூஞ்சியை சுளித்துக்கொண்டு இது என்ன கூத்து என்று அவர்களுக்குள் ஆனால் அம்புஜம் கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் அம்புஜம் அதைக்கண்டுக்கொள்ளாதது போல அவள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அழகைப்பார்த்து மெய் மறந்து நின்றிருந்தவளை ..

மாமி போதும் ரசிச்சது வாங்கோ இரண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கனும்என்று வாத்தியார் கூற சுயநினைவுக்கு வந்தாள் அம்புஜம். பின் நவீனையும் மிருதுளாவையும் காரிலிருந்து கீழே இறங்கச்சொனார். அப்பொழுது நவீன் முதலில் இறங்கி பின் மிருதுளா இறங்க கஷ்ட்டப்படும்போது மிருதுளாவின் தோழிகள் 

நவீன் ப்ளீஸ் ஹெல்ப் மிருதுஎன்று சொன்னதும் நவீன் திரும்பி கையை நீட்ட அதற்கு அவன் சித்தி லலிதா சட்டென்று நவீன் கையை தட்டிவிட்டு

தாலி கட்டறதுக்கு  முன்னாடி எல்லாம் தொடப்டாது” (இதே சித்திக்காரியின் மகள்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைகளோட அடிக்கப்போற லூட்டிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின் நாம பார்க்கத்தானே போறோம். அதுவரை பொறுத்திருங்கள்) என்றதும் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆக உடனே மிருதுளா தானாக பிடித்து இறங்கினாள். 

இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அனைவருமாக அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டப மேடையில் அமர்ந்தனர். நிச்சயதார்த்தம் துவங்கியது. 

நவீனுக்கு டிரஸ் கோவிலில் பெண்வீட்டாரால் கொடுக்கப்பட்டது.(என்னதான் நவீன் டில்லியிலிருந்து தானே எடுத்து வந்திருந்தாலும் அதற்கான பணத்தை பர்வதமும் ஈஸ்வரனும் வாங்கிக்கொண்டமையால் அது ராமானுஜமும் அம்புஜமும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்தததாக தான் நாமும் கருதுவோம். அதுதான் நியாயமும்.) அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் பட்டுப்புடவை மணப்பெண்ணிற்கு நிச்சயதார்த்தத்தன்று ஆசிர்வாதம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் சம்பிரதாயம். இங்கு என்ன நடக்கிறது என்பதைப்பார்ப்போம் வாருங்கள். 

நிச்சயதார்த்தப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அனைவராலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தப்புடவையை மாற்றிக்கொண்டு வருமாறு மிருதுளாவிடம் வாத்தியார் கூற அவள் புடவை எங்கே கட்டிக்கொண்டு வருவதற்கு என்று முழிக்க உடனே பர்வதம் …

சாயந்தரம் கொடுத்தேனே அதுதான் போய் கட்டிண்டு வாஎன்று சபையில் தில்லாக சொல்ல அதிர்ந்துப் போனாள் மிருதுளா. 

அம்புஜமும், பங்கஜமும், கோமளமும், மேகலாவும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு ரூமிர்க்குள் புடவை மாற்ற செல்ல முயன்ற போது…. சில சம்பிரதாயங்களை செய்வதற்காக வாத்தியார் அம்புஜத்தை மேடையிலேயே இருக்கும்படியும் சொல்ல மற்றவர்கள் மிருதுளாவுடன் சென்றனர். 

ரூமுக்குள் சென்றதும் பங்கஜம் மிருதுளாவைப் பார்த்து…

சரி மிருது உங்க மாமியார் குடுத்தப்புடவையை எடு சீக்கிரம் மாத்திக்கட்டனும். இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தியார் கூப்பிட ஆரம்பிச்சுடுவார்அதற்கு கோமளம்

எங்கேருந்து வரும் புடவை. திருட்டுத்தனமா வந்து குடுத்தப்புடவையை திருப்பி வாங்கிண்டு போனப்பவே எனக்கு  அந்த மாமி மேலே சந்தேகம் வந்தது.

என்ன சொல்றே கோமளம். எங்களுக்கு ஒன்னுமே புரியலைஎன்றாள் பங்கஜம். மிருதுளா அன்று மாலை ஜானவாசத்திற்கு முன் நடந்தவற்றை எல்லாம் கூறிமுடிக்க….பங்கஜம்…

அடகடவுளே. ஏன் அந்த மாமி அப்படி பண்ணினா?” உடனே மேகலா

இத நாம சொன்ன அந்த மாமி உடனே தான் அம்பிகாட்ட குடுத்தனுப்பிச்சத மட்டும்  சொல்லுவா திருப்பி வாங்கிண்டு போனது கோமளத்திற்கும் மிருதுளாவிற்கும் மட்டும் தான் தெரியும் ஸோ அத ஒத்துக்கமாட்டா”  கோமளம் குறுக்கிட்டு

அதனால அந்த மாமிக்கு என்ன லாபம்?”

வேறென்ன சண்ட வரனும்முனு தான் பண்ணிருக்கானு நேக்கு படரதுஎன்றாள் மேகலா.

கோமளம் ….இப்போ என்ன பண்ணறது பாவம் நம்ம மிருது முழிச்சிண்டு நின்னுண்டிருக்கா

ரூமுக்கு வெளியிலிருந்து வேனு கதவைத்தட்டிக்கொண்டே வாத்தியார் மேடைக்கு அழைப்பதாக கூப்பிட்டான். 

இதோ வந்துட்டோம்என்றாள் கோமளம்.

சரி மிருது உன்ட்ட வேற புடவை இருக்குமில்லையா அதில் ஒன்றை எடு மாத்திண்டு போவோம்என்றாள் கோமளம் அதற்கு கோபத்துடன் பங்கஜம்…

எடுத்துக்குடுக்காதது அவா தப்பு மிருது இப்ப அவளோட புடவையையே மாத்திக்கட்டிண்டு போனா அவா எடுத்துக்குடுத்ததா ஆகிடுமே” 

ஐயோ சித்தி வேனு வேற கூப்பிட்டுண்டே இருக்கான் இப்போ என்ன தான் பண்ண.. சீக்கிரம் சொல்லு பங்கு சித்தி

பங்கஜம் மிருதுளாவின் ஒட்டியானத்தை மட்டும் கழட்டிவிட்டுட்டு 

இப்போ இப்படியே இதே புடவையிலேயே மேடைக்கு போவோம் வா. அவா எடுத்துதரலைங்கறது எல்லாருக்கும் தெரியட்டும்என்று ரூமின் கதவைத்திறந்து மிருதுளாவை மேடைக்கு கூட்டிச்சென்றாள். கோமளமும், மேகலாவும் ரூமைப்பூட்டிவிட்டு பின்னாலே சென்றனர். மேடை ஏறும்போது பர்வதம் சும்மா இல்லாமல் ..

அதே புடவைல வந்திருக்க என்று மிருதுளாவிடம் எல்லார் முன்னாடியும் கேட்க” 

பிரச்சனை பண்ணுவதற்காகவே கேட்கிறாள் பர்வதம் என்பதை அறிந்துக்கொண்ட பங்கஜம் டைமில்ல மாமி அதுதான் என்று சம்மாளிக்க…

எடுத்துக்குடுத்ததை கட்டிக்காம வந்திருக்கா பாருஎன்று பர்வதம் வேண்டுமென்றே எல்லோர் காதிலும் படும்படி முனுமுனுத்தாள். அதை கேட்ட அம்புஜம் சும்மா இல்லாமல் பங்கஜத்திடம்….

ஏன்டி பங்கு ஏன் மாமி தந்த புடவையை மிருதுளாவுக்கு மாத்தாமா அழைச்சுண்டு வந்திருக்கேள்என கேட்க உடனே பங்கஜம் 

அம்பு செத்த சும்மா இருக்கயா. இதுக்குப்பின்னாடி பர்வதத்தோட பெரிய சூழ்ச்சியே இருக்கு. இப்போ எதுவும் விளக்க முடியாது ஸோ பேசாம இரு.என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நிலைமையை சுதாரித்துக்கொண்டு சட்டென்று பேச்சை மாற்றி நிச்சயதார்தத்தை எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் நடத்தி முடித்தனர். பின் ரிசப்ஷென் தொடங்கியது. எல்லோருமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் கோமளம் அம்புஜத்திடம் அன்று மாலை நடந்த பர்வதலீலையை கூறிமுடித்ததும் அம்புஜம் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வர அவளை ரூமுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கு அம்புஜத்தைப்பார்த்து

என்னத்துக்கு அழுத. அதுதான் பங்கஜம் சம்மாளிச்சிட்டாளோனோ. உனக்கு தெரியனமேனுட்டு தான் சொன்னேன்

அதுக்கில்லடி கோமளம் இப்பவே இந்த மாமி இப்படி எல்லாம் பண்ணறாளே. இவ மிருதுவ படுத்துவாளோடி. அத நெனச்சுத்தான் அழுதேன்

மாமி அம்புஜம் மாமிஎன்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் வாத்தியார். 

உடனே கண்களை வேகமாக துடைத்துக்கொண்டாள் அம்புஜம்.

காலை செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவரித்துவிட்டு சென்றார். அனைவரும் இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்து சாப்பிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று படுத்தார்கள். வழக்கம் போல ஒரு பெரிய கூட்டம் வட்டமாக அமர்ந்து சீட்டு கச்சேரியில் ஆழ்ந்தது. 

அனைவரும் உறங்கினாலும் அம்புஜத்திற்கு கவலை விட்டப்பாடாக இல்லை…கண்களை இறுக்க மூடினாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்து அவளுக்கே தெரியாமல் கண் அசந்தாள்.

இருபத்தி ஏழாம் தேதி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வந்திருந்து பார்த்த வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s