அத்தியாயம் – 6: கல்யாண ஏற்பாடுகள் பாகம்-2

பரிமளமும் பங்கஜமும் சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு பதினோரு மணி வாக்கில் டெலிபோன் மணி அடித்தது. மிருதுளா அம்புஜத்தைப் பார்தாள் …

அம்மா சித்திகள் சொன்னா மாதிரி அவா தானோ ?” என்றாள் மிருதுளா.

ஃபோனை எடுத்தா தானே தெரியும் மிருது. அட்டென்ட் பண்ணேன் அம்மா இந்த உளுந்த கிரைண்டரலேருந்து வழிச்சுட்டு வந்துடறேன். போ மா

மிருதுளா நினைத்தது சரிதான். அங்கிருந்து ஈஸ்வரன்ஹலோஎன்றதும் மிருதுளா…

ஹலோ அப்பா நான் மிருதுளா பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

நாங்க நல்லா இருக்கோம். சரி நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க? அத கேட்க தான் ஃபோன் பண்ணினேன்

என்று நவீன் ஏதும் சொல்லாதது போலவே விசாரித்தார் அதற்கு நம்ம மிருது…

ஆமாம் ..பா …யோசிச்சேன் ….நான் அவர் கூடவே கிளம்பிடலாம்னு இருக்கேன்

ஓ அப்படியா!! நான் ஏன் இன்ஸிஸ்ட் பண்ணினேனா …நவீனும் ஆடிட்டிங்க்கு படிச்சிண்டிருக்கான் அவனுக்கும் மே மாசம்  பரீட்சை வருதாம். ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. அதுவும் இல்லாம நீ அவன் கூட கிளம்பினாய் னா பின்ன ரெண்டு பேருமே பரீட்சையை சரியா எழுத மாட்டேங்களே. கஷ்ட்டப்பட்டு படிக்கறேங்களோனோ அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ நான் சொன்னதையும் மனசுல வச்சுண்டு ஒரு நல்ல முடிவா சொல்லு நான் அடுத்த வாரம் அகேய்ன் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கறேன். இப்போ ஃபோனை வச்சிடறேன்.

என்று கால்ஐ துண்டித்தார். திருமணத்திற்கு பின் மருமகள் தன் மகனுடன் செல்வது ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் நல்ல முடிவு இல்லை என்பது அவர் பேசிய விதத்திலே நமக்கு புரிகின்றது. ஆனால் மிருதுளாவும் அம்புஜமும் புரிந்துக்கொண்டார்களா? வாருங்கள் மேலும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

மிருதுளாவிற்கு அவள் சித்தி சொன்னதுப்போல ஏதோ சரி இல்லை என்பது புரிய ஆரம்பித்தது. அவள் நவீன் முந்தின நாள் பேசியதையும் சற்றுமுன் ஈஸ்வரன் பேசியதையும் மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தாள். 

நவீன் அவரது பரீட்சை பற்றி ஒன்றுமே கூறவில்லையே. ஏன்? எனது விருப்பத்தை தானே கேட்க ஃபோனில் அழைத்ததாக சொன்னார். அவர் அப்பா முதலில் எனது பரீட்சையை காரணமாக சொன்னார் ஆனால் இப்போது

நவீனின் பரீட்சையை காரணமாக சொல்றார்!!!! எதுக்கும் அவரிடமே கேட்டுத்தெரிந்துக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம்…அதுதான் சரி

என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் நவீனுக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

ஹாய் மிருதுளா எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!! ” 

உங்களுக்கும் மே மன்த் எக்ஸாம் இருக்கா?”

ஆமாம் ஏன் கேக்கறே?”

அதனாலதான் என்னை இங்கேயே விட்டுட்டு போகனும்னு யோசிக்கறேங்களா?”

என்ன சொல்லுற!!! எனக்கு எக்ஸாம்னா உன்னை ஏன் அங்க விட்டுட்டு வருவேன். உனக்கு எக்ஸாம் எழுதனுமேனு தான் சொன்னேன்

ஓ சரி சரி அப்போ என்ன கூட்டிண்டு போறது கன்ஃபார்ம் தானே?”

ஆமாம் இட்ஸ் கன்ஃபார்ம். சரி எனக்கு லஞ் டைம் ஆச்சு. ஐ ஹாவ் டு கெட் பேக் டு வர்க். பை மிருது. வில் கால் யூ டுமாரோ.

ஓகே பை. ஹாவ் அ நைஸ் டே

என்று பேசி முடித்தாள். 

இன்னார் சொன்னதினால் கேட்கிறேன், ஏன் அப்படி சொன்னீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டு பேசினால் பிரச்சனை தீரும்.  இவர்களுக்குள் முன் பின் அவ்வளவாக அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை. இருவருமே மனம் விட்டு பேசவுமில்லை. மனதிற்குள் அச்சம், வெட்கம், ஃபோனில் தான் பேச முடியும் திருமணத்திற்கு முன் நேரில் பேச வாய்ப்பேயில்லை, அதனால் ஏதாவது சொன்னால் அதை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருந்ததனால் இருவரையும் சரிவர பேச அனுமதிக்கவில்லை. 

இந்த இரண்டு மாதத்திற்குள் அவர்களுக்குள்  இவ்வளவு குழப்பத்தை உருவாக்கும் ஈஸ்வரனும் பர்வதமும் அவர்களை நாலு மாதம் பிரித்துவைக்க பார்ப்பது நல்லது செய்யத்தான் என்று நம்பமுடிகிறதா வாசகர்களே?

அன்று மாலை ராமானுஜத்துடன் அவரது அலுவலகத்தில் வேறு டிப்பார்ட்மென்டில் பணிப்புரியும் ஜெயேந்திரன் என்பவர் ராமானுஜம் வீட்டிற்கு

வந்தார். ராமானுஜம் அவசரமாக இரவு நேர ஷிஃப்ட்டுக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தார். ஜெயேந்திரன் வருவதைப்பார்த்து ….

வாங்கோ வாங்கோ ஜெயேந்திரன்

எங்கயோ கிளம்பறேள் போல தெரியறது. தப்பான நேரத்துல வந்துட்டேனோ?”

கடமை அழைக்கறது வேறு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட் ஷிஃப்ட் அதுவும் இல்லாம கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும் அதுதான். சொல்லுங்கோ

யாருன்னா என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள்…

நமஸ்காரம் மாமி. நான் ஜெயேந்திரன்

ஓ தெரியுமே. எப்படி இருக்கேங்கள்? ஆத்துல மாமி அப்பறம் உங்க பொன்னுகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

எல்லாரும் நல்லா இருக்கா. நான் இப்போ வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச

என்னது சொல்லுங்கோஎன்றாள் 

அம்புஜம்.

ராமானுஜம் வந்தவரிடம் என்ன ஏதுனு கேட்காமல் தனது பணியைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தார். அலுவலக வேலை என்று வந்தால் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காத இப்படியும் ஒரு மனிதர் மிருதுளாவைப்பெற்றவர். 

மாமாக்கு நாழி ஆகறதோ?”

உடனே அம்புஜம் 

இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ. அவர் அப்படித்தான் பத்து மணிக்கு ஒரு எடத்துக்கு போகனும்னா எட்டு மணிலேருந்தே பரக்கம் பாய்வார். அது அவருடை சுபாவம். நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னேளே அது என்னனு சொல்லுங்கோ

இல்ல உங்க பொன்னுக்கு பார்த்திருக்கேளே ஒரு குடும்பம்.

ஆமாம் ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஃபேமிலி. அவாளுக்கு என்ன

ஆமாம் அவாளே தான்.  அவாள பத்தி விசாரிச்சேளோ?”

ஏன் இப்போ வந்து இப்படி கேக்கறேங்கள்?”

அவா இப்ப இருக்கிற வீட்டுக்கு முன்னாடி எங்க ஆத்துப்பக்கத்தில தான் வாடகைக்கு குடி இருந்தா. அந்த மாமா மொடாக்குடிகாரர்

அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே

இப்போ கொஞ்ச வருஷமா எல்லாத்தையும் விட்டுருக்கார். அந்த பர்வதம் மாமி இருக்காளே அவ எமகாதகியாக்கும். அவ இருக்கற ஆத்துக்கு உங்க பொன்னை கொடுக்க போறேங்கள்னு இன்னைக்கு காலைல தான் கேள்விப்பட்டேன் அதுதான் என் ஷிஃப்ட் முடிஞ்சதும் நேரா இங்க வந்தேன். எனக்கும் மூனு பொன்கள் இருகாளோனோ அதுதான் மனசு கேட்கலை ஓடி வந்துட்டேன் உங்களாண்ட சொல்ல. இந்த சம்மந்தம் வேண்டாமே அந்த மாமி உங்க பொன்ன நிம்மதியா வாழ விடமாட்டா.

அம்புஜத்திற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 

அந்த மாமாவும் மாமியும் துளி கூட பொறுப்பில்லாதவா. சுயநலவாதிகள்

அவா புள்ள நவீன் எப்படி? மாமாஎன்று கேட்டாள் அம்புஜம்

தங்கமான புள்ள மாமி. புள்ள நல்ல புள்ள தான் அவனை ஒரு குற்றமும்  சொல்ல முடியாது.

அப்பாடா பின்ன என்ன மாமா. புள்ள கூடதான் வாழ்க்கை பூரா இருக்கப்போறா அவர் நல்லவரா இருந்தா போராதா. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தேங்கள்னா ஏதாவது யோசிச்சிருக்கலாம். ஆனா இத இப்போ வந்து சொல்லறேளே. நிச்சயமாயாச்சு. புடவை, தாலி, மண்டபம் எல்லாம் ஆயாச்சே” 

ஆனா உங்க பொன்னு அந்த குடும்பத்துக்குள்ள போனுமோல்யோ. அவா கூடவும் தானே வாழ்ந்தாகனும்.  எனக்கு இன்னைக்கு தானே தெரிய வந்துது மாமி.  அதுதான் உடனே ஓடி வந்தேன். அதனால என்ன இன்னும்  கல்யாணமாகலையே. அவா எப்படிப்பட்டவா னா…..

உடனே ராமானுஜம் குறிக்கிட்டு ஏதோ சொல்ல வருபவரை தடுத்து தனக்கு வேலைக்கு நேரமாச்சு என்றும் …கூட வருகிறாயா என்று கேட்டதும் ஜெயேந்திரன் வேறு வழியில்லாமல் அவருடன் புறப்பட்டுச் சென்றார். எத்தனை பொறுப்பான தந்தை என்பது புரிகிறதா. அவரைப் பொறுத்தவரை சம்பாத்தியம் தான் முக்கியம். ஜெயேந்திரனை சொல்லவிடாமல் தடுத்து அவருடன் கூட்டிச்சென்றதனால் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. தங்களது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாரோ ஒருவர் அக்கரையுடன் சொல்ல வந்தவரையும் முழுவதுமாக சொல்லவும் விடாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்ட ராமனுஜம் மேல் நமக்கே கோபம் வரும்போது பெற்றவள் அம்புஜத்துக்கு வராதா என்ன மக்களே. அவளுக்கு அடிவயிறு கலங்கியது. ஏதோ பூமி சுற்றுவது நின்றது போல் இருந்தது. உடனே ஓடினாள் பூஜை அறைக்கு. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அம்பாளுக்கு சூடியிருந்த பூக்களில் இருந்து மல்லிகையையும் கனகாம்பரத்தையும் எடுத்து இரு பேப்பரில் பொதிந்து மனதில் 

ஆண்டவா இந்த நேரத்தில் எங்களுக்கு இப்படி ஒரு மனக்குழப்பமா. பொறுப்பில்லாத புருஷனை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தையை நீயும் தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்!! எங்களுக்கு விவரங்களை விசாரித்துச்சொல்ல யாரும் இல்லை நீயா சொல்ல அனுப்பியவரையும் எங்காத்துக்காரர் சொல்ல விடாமல் செய்துட்டார். அதுவும் உன் திருவிளையாடலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன் தாயே. ஆனாலும் தாயல்லவா என் மனதிலிருக்கும் அச்சம் நீங்க … இதோ இந்த பூக்களில் கனகாம்பரம் வந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் தொடரட்டும் நல்லபடியாக உன் மகள் என் பெண் மிருது வாழ்வாள் என்றும் மல்லிகைப்பூ வந்தால் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்றும் உன் உத்திரவாக ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பேன் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீயே துணை அம்மா

என்று மனதார வேண்டிக்கொண்டு குலுக்கிப் போட்டு வேனுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்கச்சொன்னாள். வேனுவும் எடுத்துக்கொடுத்துவிட்டு….

இது என்ன மா? என்ன பண்ணறாய்என்று வினவ

எடுத்துக்கொடுத்ததுக்கு தாங்கஸ் டா கண்ணா. நீ போய் உன் வேலையைப்பார்” 

என்று சொல்லி அவன் சென்றபின் கண்களில் கண்ணீர் பெருக மனதில் அம்மனை நினைத்துக்கொண்டு திறந்துப்பார்த்தாள். அவளது கண்ணீரை ஆனந்த கண்ணீராக கனகாம்பரத்தைக்கொடுத்து மாற்றினாள் அந்த சமயபுரத்தாள். அதன் பின் மனதில் எந்த அச்சமுமின்றி கல்யாண வேலைகளில் இறங்கினாள் அம்புஜம். 

மறுநாள் விடிந்ததும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேராக பக்கத்திலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று இருவரும் அந்த அகிலாண்டேஸ்வரியை, ஆயிரம்கண்ணுடையாளை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டு அம்பாள் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பின் பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் அம்புஜம் 

ஹலோ மாமி நான் அம்புஜம் பேசரேன்

ம்..ம்… சொல்லுங்கோ என்ன விஷயம்?”

என்று விருப்பமில்லாதவள் போலவே கேட்டாள் பர்வதம்.

இன்னைக்கு சாயந்திரம் ரிசப்ஷன் புடவை மற்றும் எங்க சொந்தகாராளுக்கெல்லாம் டிரஸ் எடுக்க போரோம் அப்படியே பின் தாலி முடியற நாத்தனாருக்கும் பட்டுப்புடவை எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு இரண்டாயிரத்துல எடுக்கலாமா என்ன ஏதுனு கேட்க தான் கூப்பிட்டேன் மாமி

இதை கேட்டதும் பர்வதம் 

என்னத்துக்கு அவ்வளவு காஸ்ட்லியான புடவை அவ என்ன உங்க பொன்னோட சொந்த நாத்தனாரா? இல்லையே …அதனால ஒரு ஐநூறு ரூபாய்க்கு எடுத்தா போரும். அந்த பணத்தை சம்மந்தி சீர்க்கு சேத்துப்போட்டு எடுங்கோ என்ன கரெக்டா?”

இதை கேட்ட அம்புஜத்திற்கு ச்சே என்ன இப்படி இருக்கானு தோன்றியது.

சரி மாமி அப்படியே செய்துடறோம். பை

என்று ஃபோனை வைத்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார்கள். பர்வதம் அப்படி சொன்னாலும் அம்புஜம் நல்ல புடவையாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு எடுத்தாள். மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் நகையும் வாங்கிக்கொண்டு அனைத்து பர்சேஸிங்கும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபின் ராமானுஜம் கணக்குப் போட்டுப்பார்த்தார் பின் அவர் அனைவரையும் அழைத்து…..

நகை கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுத்து…இப்பவே இவ்வளவையும் போட்டா எப்படி இனி நிறைய சீர் செய்யனுமே என்று கூற

உடனே மிருதுளா 

எவ்வளவு அதிகமாகறது

ஆறு பவுன்

சரி அப்பா அப்போ இந்த வளையலை திருப்பிக்கொடுத்திடலாம். அது கரெக்டா ஆறு பவுன் இருக்கு

ஏய் மிருது நீ அது ஆசைப்பட்டு எடுத்ததுடி அதை ஏன் திருப்பிக்கொடுக்கனும்

வேனு….

இதெல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் பணம். பேசாம இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அதை அப்படியே அக்கா பேருல ஒரு ஃப்டி ல போட்டா அவளுக்காவது பின்னாடி யூஸ் ஆகும்.

டேய் போடா நடக்கறகார்யத்த பேசுவோமாஎன்றாள் அம்புஜம்

விடு மா எனக்கு அந்த வளையல் வேண்டாம் இதுவே போரும்

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ளது நவீன் வருவதற்கு ஏழே நாட்கள் உள்ள நிலையில் ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் இன்னும் உருத்திக்கொண்டிருந்த விஷயம் தெளிவாகாததால் பிப்ரவரி பத்தாம் தேதி ஃபோன் செய்தனர்…மிருதுளா அட்டென்ட் செய்தாள்…

ஹலோ நான் மிருது பேசறேன்.

ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன். என்ன முடிவெடுத்திருக்காய் நவீனுடன் ஊருக்கு போவதைப்பற்றி?”

என்று பழைய பல்லவியை பாடினார். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் செல்லப்போவதாக கூறியதும் ஆத்திரத்தில் ஈஸ்வரன்….

என்ன இது கிளி மாதிரி சொன்னதையே சொல்லிண்டிருக்க. பெரியவா சொல்லறதை கேட்டு நடக்க உன் அம்மா சொல்லி‌க்குடுக்கலையா. எத்தனை வாட்டி நான் சொன்னேன் போக வேண்டாம் னு மறுபடியும் மறுபடியும் நீ போவேனு அல்ச்சாட்டியம் பண்ணராய். அதுவும் நவீன்ட்டயே சொல்லிருக்காய்  என்ன திமிரு உனக்கு. நாங்க யாரு அப்போ. ஏன் எங்க பேச்செல்லாம் கேட்கமாட்டியோ. ஆனாலும் ஒரு பொன்னுக்கு  இவ்வளவு அழுத்தம் கூடாது.

என்று குரலை ஒசத்தி மிரட்டுவது போல பேச மிருதுளா பயந்து போய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடின. அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது ஏண்டி அழறாய் என்ன ஆச்சுமா? யாருமா ஃபோன்ல…ஏய் ஃபோனை என்கிட்ட தா

என்று வாங்கி ஹலோ என்றதும் ஈஸ்வரன் வழக்கம் போல் காலைத்துண்டித்தார். பின் மிருதுவிடம் விவரங்கள் கேட்டதும் அம்புஜமும் கலங்கினாள் ஆனால் அதைக்காட்டிக்கொள்ளாமல் இதுக்கெல்லாம் அழறதா என்ன மா நீ. அவா போகக்கூடாதுனு சொன்னா நீ உன் புருஷனோடு தானே போவேனு சொன்ன இதுல எந்த தப்பும் இல்லை. என்னத்துக்கு பின்ன இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணறோம். நீ நல்லா இருப்பமா… கண்ண தொடச்சுண்டு போய் நாளைக்கு சுமங்கலி பிராத்தனைக்கு வாங்கிண்டு வந்ததை எல்லாம் அடுக்குவோம் வா என்று மிருதுளாவை தேத்தினாள் அம்புஜம். அவள் மனதில் அந்த அம்மனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தான் இதை கூறினாள்.

இவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண் வீட்டார் திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுப்பெண்ணை சாமியான சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து மறுவீடு அனுப்புவதும் அதேபோல மாப்பிள்ளைவீட்டில் திருமணத்திற்கு பின் சுமங்கலி பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை சாமியான அவர்கள் வீட்டு சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்பதும்  தான் வழக்கம். அதே போல மிருதுளா வீட்டில் சிறப்பாக சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை பர்வதம் ஃபோன் செய்தாள். 

ஹலோ நான் பர்வதம் பேசரேன்

மிருதுளா தான் ஃபோனை எடுத்தாள் குரலைக்கேட்டதும் உடனே ஃபோனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்..

மாமி சொல்லுங்கோ நான் அம்புஜம் தான் பேசரேன்

சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஆச்சா

எல்லாம் நல்லப்படியா நடந்தது மாமி. எங்காத்து சுமங்கலிகளின் ஆசிர்வாதங்களோட எங்க மிருது உங்க ஆத்துக்கு வர தயார் ஆகிட்டா. மாப்ள ஊர்ல இருந்து வந்தாச்சா?”

நேத்து நைட் வந்தான். நாளைக்கு எங்காத்த சுமங்கலிப் பிரார்த்தனை அதுக்கும் மறுநாள் சமாராதனை அதனால நீங்க மிருதுளாவ அழைச்சுண்டு சமாராதனைக்கு வந்திடுங்கோ அத சொல்லத்தான் கூப்பிட்டேன்

ஆனா மாமி“… என்று அம்புஜம் ஏதோ கூற வருவதற்குள் 

சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வச்சுடரேன் நாள மறுநாள் வந்திடுங்கோ. பை

என்று ஃபோனை வைத்தாள்.

சமாராதனை நாளன்று அம்புஜமும் மிருதுளாவும் டூ வீலரில் நவீன் வீட்டுக்கு சென்றனர். நவீனும் பர்வதமும் வாங்கோ என்று வரவேர்த்தனர் அவர்கள் வீட்டில் பர்வதம், ஈஸ்வரன்நவீன்ப்ரவீன், பவின் மற்றும் பர்வதத்தின் அக்கா ரமணி அவர் மகன் ராஜூ ஆகியோர் இருந்தனர். 

உள்ளே சென்றதும் பர்வதம் ரொம்ப அக்கரை உள்ளவள் போல நவீன் ஏதோ மிருதுட்ட பேசனும்னு சொன்னயே போ மாடில போய் பேசிட்டு வா என்று சொல்லி வைத்தது போல இருந்தது அவர்களின் பரிமாற்றம். உடனே நவீன் மிருதுளாவை அழைத்துக்கொண்டு புதிதாக அவர்களுக்கென்று கட்டியிருந்த

அறைக்கு மாடியில் சென்றான். அம்புஜம் மிருதுளா வையே பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது பர்வதம்…

மாமி நீங்களும் மாமாவும் சேர்ந்து போய் இவர் அண்ணா ராசாமணிக்கும், என் அக்கா ரமணிக்கும், தம்பி பிச்சுமணிக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சு அழைச்சுடுங்கோ. அப்பறம் அவாளுக்குள்ள பேச ஏதாவது இருக்குமோள்யோ அதுதான் அனுப்பி வைத்தேன் பாவம் ரெண்டும் தயங்கறதுகள். பேசிட்டு தான் வரட்டுமே. நீங்க சொல்லுங்கோ மாமி நாங்க உங்க பொன்ன நவீன் கூட எக்ஸாம் எழுதிட்டு போனாபோரும்னு தானே சொன்னோம் ஏனா நாமளும் அந்த வயச கடந்து வந்தவா தானே நமக்கு தெரியாதா எப்படி ரெண்டு பேரும் படிப்பானுட்டு

என்று கூறி ஒரு சிரிப்பு வேற இதைக்கேட்டதும் அம்புஜத்திற்குஐயோ மறுபடியும் மொதல இருந்தாஎன்னும் வடிவேலு டயலாக் மனதிற்குள் ஒலித்தது.

அதே நேரம் மாடி ரூமில் நவீன் மிருதுளாவிடம். 

நீ எக்ஸாம் எழுதிட்டு தான் வரமுடியுமாமே.

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே உங்க கூட தான் வருவேனு அப்பறம் ஏன் மறுபடியும் மறுபடியும கேக்கறேங்கள். ஏன் வீடு பார்க்கலையா?”

வீடெல்லாம் பார்த்தாச்சு டிக்கெட் இன்னும் போடலை அதுக்கு முன்னாடி உன்னிடம் கேட்டுடலாம்னு தான்

ஓ அப்போ என்ன கூட்டிண்டு போற ஐடியாவே இல்லையா அதுதான் டிக்கெட் கூட புக் பண்ணலையா?”

அது பண்ண எவ்வளவு நேரமாக போறது. ஸோ யூ ஆர் கம்மிங் வித் மீ ரைட்டா

ஓ மை காட் நான் எத்தனை தடவ சொல்லறது. எஸ் எஸ் எஸ் போதுமா

ஏய் ஓகே ஓகே இதோ இது தான் நான் ரிசப்ஷனுக்கு எடுத்திருக்கும் கோட் சூட். நல்லாருக்கா

சூப்பரா இருக்கு அன்ட் என்னோட சாரியும் ஏகதேசம் இதே கலர் தான் வாட் எ கோயின்ஸிடன்ஸ்

கொடுத்த டைம் முடிந்துவிட்டது போல கரெக்டா பவினை அனுப்பி அவர்களை கீழே வரச்சொன்னாள் பர்வதம். அவர்களும் வந்தனர். பின் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். 

இரு வீட்டாரும் மும்மரமாக பத்திரிகைகளை அனைவருக்கும் டிஸ்ட்ரிப்யூட் செய்யத்தார்கள். வெளியூர்காரர்களுக்கு முன்னதாகவே போஸ்ட்டில் அனுப்பிவைத்துவிட்டனர். பர்வதம் சொன்னது போலவே ராமனுஜமும் அம்புஜமும் ரமணி, பிச்சுமணி வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு ராசாமணி வீட்டிற்கு சென்றனர். அங்கே ஈஸ்வரனின் அக்கா சொர்னம் அம்புஜத்திடம் 

என்ன உங்க பொன்னுக்கு நிறைய நகையும், வெள்ளியும், பாத்திங்களும் எல்லாம் செய்யறேளாமே ஈஸ்வரன் சொன்னான்

ஏதோ அந்த கடவுள் ஆசிர்வாதத்தால எங்களால செய்ய முடிஞ்சதை செய்யறோம் மாமி

அதெல்லாம் சரிதாம்மா ஆனா எல்லாத்தையும் ஒன்னா கல்யாணத்துக்கே செய்து காட்டினேங்கள்னா அவ்வளவுதான் அந்த பர்வதம் பெரிய பேராசைப்பிடிச்சவள் எப்போவும் அதையே எதிர்ப்பார்ப்பள் சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்கோ

அப்போதும் தனது சம்மந்தியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அம்புஜம்

மாமி எங்களுக்கு இருக்கறது ஒரு பொன்னு அவளுக்கு செய்யாம வேற யாருக்கு. அதெல்லாம் நல்ல படியா செய்ய அந்த அம்பாள் துணையிருப்பா

அப்பறம் உங்க விருப்பம். உங்களப் பார்த்தா நல்ல மனுஷாளா தெரியறது …அந்த பர்வததத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கோ. ஏதோ  சொல்லனும்னு தோனித்து சொல்லிட்டேன். ஆனா அவ தான் அப்படி நவீன் தங்கமானவன். உங்க பொன்ன பத்திரமா இருக்கச் சொல்லுங்கோ

சரி மாமி நாங்க போயிட்டு வரோம்

என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றனர் ராமானுஜமும் அம்புஜமும். பஸ்ஸில் வீட்டிற்கு வரும்பொழுது மனதிற்குள் யோசித்துக்கொண்டே வந்தாள் அம்புஜம்..

ஏன் எல்லாரும் அந்த பர்வதத்தை கண்டு பயப்படரா? சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் அவள்ட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்றாலே ஏன்? இதை மிருதுட்ட சொன்னா பாவம் அது பயந்துடும். சொல்ல வேண்டாம். அம்மா நீ உன் மகளுக்கு கொடுத்த வாழ்க்கை அவளை எல்லா இக்கட்டுகளிலும் நீதான் காப்பாத்தனும் தாயேஎன்று வேண்டிக்கொண்டாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன் அதாவது இருபத்தி ஆறாம் தேதி மாலை மிருதுளா குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். 

இருபத்தி ஏழாம் தேதி காலை முதல் கல்யாண சம்பிரதாயங்கள் நடக்கவிருப்பதால் அவற்றையும் மேலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் நேராக மண்டபத்திற்கு வந்து தெரிந்துக்கொள்ளும்படி பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வரும் செவ்வாய் அன்று கல்யாண மண்டபத்தில் சந்திப்போம்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s