“சரி சரி விடு மிருதுக்கா. இனி நிம்மதியா இங்க ஹாப்பியா இரு. அவாளை எல்லாம் மறந்துடு. உனக்கு நாளையிலிருந்து பரீட்சை ஆரம்பிக்கறது இல்ல!!! படிச்சிருக்கியா?”
“அதெல்லாம் குஜராத்ல இருக்கும் போதே படிச்சாச்சு”
“சரி சரி நான் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்”
“மிருது நாளைக்கு பரீட்சைக்கு உன் கூட நானும் வரேன். நாம ஒரு கார் புக் பண்ணிண்டு போயிட்டு வந்திடலாம். நான் அப்பாக்கும் வேனுவுக்கும் வேண்டியதை சமைச்சு வச்சுட்டு உனக்கு ஜுஸ், பழங்கள் எல்லாம் எடுத்துண்டு வரேன். நீ நல்ல படியா பரீட்சையை எழுது சரியா. படிப்பு என்னென்னைக்கும் உனக்கு உதவும்.”
“சரி மா ஆனா எப்படி ஜுஸ் பழமெல்லாம் தருவ நான் எக்ஸாம் ஹாலுக்குள்ள போனா மூணு மணி நேரம் பரீட்சை முடிஞ்சதுக்கப்பறம் தான் வெளியவே வரமுடியும்!!!”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கவலை படாமல் பரீட்சை எழுதிட்டு வா.”
மத்தியம் உணவருந்தியப் பின் தன் கணவர் நவீனுக்கு ஃபோன் போட்டு நடந்தவைகளை கூறினாள் மிருதுளா. அதை கேட்டும் எந்த விதமான ரியாக்ஷனும் காட்டவில்லை நவீன். சொன்ன மிருதுளாவிற்கு ஏன்டா சொன்னோம் என்றானது.
மிருதுளாவிடம் ஒன்றும் கூறவில்லை என்றாலும் அன்றிரவு நவீன் தன் பெற்றோரை ஃபோனில் அழைத்தான். ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்..
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“ம்.ம்…சொல்லு சொல்லு”
“ஆமாம் நான் தான் மிருதுவ அவா ஆத்துல நான் ஊருக்கு கிளம்பியதும் பவின் கிட்ட சொல்லி கொண்டு போய் விடச் சொல்லிட்டு தானே வந்தேன். அதை செய்யாம என்னத்துக்கு அவளை கண்டபடி பேசி அழ வச்சு அனுப்பியிருக்கேங்கள்? ஏன் இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு?”
“ஆமா சும்மா சும்மா அம்மா அம்மா ன்னா எங்களுக்கு கோபம் வராதா?”
“இதை நான் அவளை கொண்டுப் போய் விட்டுட்டு வரச் சொல்லும் போதே சொல்லியிருக்க வேண்டியது தானே அப்போ பேசாம மண்டைய ஆட்டிட்டு அப்புறமா ஏன் அப்படி பிஹேவ் பண்ணிருக்கேங்கள்? அதுவுமில்லாம மருது என்னைக்கு அம்மா அம்மா ன்னு சொல்லிருக்கா ஏன் இப்படி எல்லாம் பொய் பேசற?”
“ஆமாம் வந்துட்டான் பேச…அங்க ஏத்திவிட்டதும் இங்க கொட்ட வந்துட்டான் பெரிய இவனாட்டம்”
“ச்சே…உங்களை எல்லாம் திருத்தவே முடியாது”
என்று கூறி ஃபோனை கட் செய்தான் நவீன். பின் தன் சித்தப்பாவிடம் நடந்ததைக் கூறி தன் கவலையை பகிர்ந்துக் கொண்டான்.
அன்றிரவு மிருதுளாவை ஃபோனில் அழைத்தான் நவீன்
“ஹலோ”
“ஹலோ சொல்லுங்கோ நவீ. ஹவ் வாஸ் தி டே? டின்னர் சாப்டேளா?”
“ஏய் நான் தான்னு எப்படி கண்டு பிடிச்ச?”
“நீங்க ஹலோ சொன்னதுமே தெரிஞ்சுண்டேன் நீங்க தான்னு”
“க்ரேட் பா. சரி நீ சாப்பிட்டயா?”
“ம்… சாப்டேன். நீங்க?”
“நம்ம டாபால தான் சாப்பிட்டுட்டு அப்படியே கால் பண்ண வந்துட்டேன். சரி நாளைக்கு உனக்கு எக்ஸாம் இல்ல. நல்ல படியா எழுது ஆல் தி பெஸ்ட் . அதை சொல்லத் தான் கூப்பிட்டேன். நீ நடந்ததை எல்லாம் மறந்துட்டு உன் படிப்பில கான்சென்ட்ரேட் பண்ணு. நம்ம குழந்தையையும் நல்லா பார்த்துக்கோ வேற யாரைப் பற்றியும் எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்… புரிஞ்சுதா?”
“ஓகே நவீன். நீங்களும் நல்லபடியா இருங்கோ”
“சரி மிருது நான் வைக்கட்டுமா?”
“சரி நவீன் குட் நைட். ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”
“ஓகே மிருது குட் நைட் டு யூ டு. பை”
என்று ஃபோனை துண்டித்து காசு கொடுத்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டு தன் பெற்றோர்களின் நடத்தையை எண்ணி மன வேதனையில் உறங்க முடியாமல் புரண்டு படுத்து அவனையும் அறியாது உறங்கிப் போனான் நவீன்.
மறுநாள் விடிந்ததும் எழுந்து சுறுசுறுப்பாக அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்தாள் அம்புஜம். மணி ஏழரை ஆனதும் மெதுவாக மிருதுளாவை எழுப்பி பரீட்சைக்கு தயாராகச் சொன்னாள். மிருதுளா எழுந்ததும் வேனு அவளிடம்…
“குட் மார்னிங் மிருதுக்கா. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எக்ஸாம். நான் காலேஜ் கிளம்பியாச்சு வரேன்”
“தாங்க்ஸ் வேனு. பத்திரமா காலேஜ் போயிட்டு வா”
“வரேன் மா பை”
என்று சொல்லி வேனு காலேஜ் சென்றான். மிருதுளாவும் நிதானமாக குளித்து கிளம்பினாள். அம்புஜம் தன் பெண்ணுக்கு வேண்டிய ஜுஸ், பழங்கள் மற்றும் சாப்பாடு கட்டிக் கொண்டு தயார் ஆனாள். எட்டரை மணிக்கு கார் வந்தது காலை டிபன் சாப்பிட்டப் பின் காரில் ஏறி அமர்ந்து பரீட்சை நடக்கும் காலேஜுக்கு பயணிக்கலானார்கள் அம்புஜமும் மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் அம்மாவிடம்
“ஏன் மா எக்ஸாம் பத்து மணிக்கு தான் நாம ஒன்பது மணிக்கு கிளம்பியிருந்தா போதும் ஏன் எட்டரைக்கெல்லாம் கிளம்பிட்டோம் எட்டம்பதுக்கு காலேஜ் ரீச் ஆகிடுவோமே”
“ஆமாம் நீ சொல்லறது சரி தான் நாளைலேந்து ஒன்பது மணிக்கு கிளம்புவோம். இன்னைக்கு நான் போய் உன்கூட எக்ஸாம் ஹால்ல உட்காரலாமா அப்பப்போ ஜுஸ் எல்லாம் குடுக்கலாமான்னு கேட்கணும், அதுக்கு பெர்மிஷன் வாங்கணும் அதுக்காக தான் சீக்கிரமே போறோம் புரிஞ்சுதா?”
“அம்மா அப்படி எல்லாம் விட மாட்டா மா”
“அதெல்லாம் விடுவா நீ வேணும்ன்னா பாரு.”
இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் வந்த கார் டிரைவர் அம்புஜத்திடம்
“அம்மா காலேஜுக்கு வந்துட்டோம் உங்களை இங்கே எறக்கி விட்டுட்டு நான் வண்டியை வெளியிலே பார்க் பண்ணிடறேன். பரீட்சை முடிஞ்சதும் நான் வண்டியை எடுத்துகிட்டு உள்ளே வந்து உங்களை கூட்டிட்டு போறேன் சரியா”
“ஏன் இங்கயே எங்கயாவது பார்க் பண்ணக் கூடாதா? உனக்கு எப்படி பரீட்சை முடிஞ்சதுன்னு தெரியும். எங்களை தேட வச்சுடாதப்பா”
“உள்ளே நிப்பாட்ட விடமாட்டாங்க அம்மா. நான் கேட்ல விசாரிச்சிட்டு கரெக்ட்டா வந்து உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் மா கவலை படாதீங்க”
“சரி பா. மிருது மொல்ல இறங்கு”
இருவரும் இறங்கியதும் நேராக காலேஜ் ஹெட்டை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி எப்படியோ ஒரு வழியாக தன் பெண்ணுக்கு பழம், ஜுஸ் எல்லாம் குடுக்க பெர்மிஷன் வாங்கி விட்டாள் அம்புஜம். அதன் பின் நேராக பரீட்சையை எழுத வேண்டிய ஹாலுக்குச் சென்றனர். அங்கே இருந்த எக்ஸாமினரிடம் ஹெட் கொடுத்தனுப்பிய ஒரு சீட்டை கொடுத்தாள் அம்புஜம். அதைப் பார்த்ததும் மிருதுளாவை ஒரு ஜன்னல் ஓரமிருக்கும் டெஸ்க் அன்ட் பென்ச்சில் பரீட்சை எழுத அமர வைத்து விட்டு அந்த ஜன்னலின் வெளிபுறம் அம்புஜத்திற்கு ஒரு சேர் போட்டு அமரச் சொன்னார். அம்புஜம் கொண்டு சென்ற அனைத்து சாமான்களையும் பரிசோதித்தப் பின்னரே அங்கு அமர அனுமதி வழங்கப் பட்டது.
பரீட்சைக் கான பெல் அடித்ததும் தன் குழந்தையை சுமந்துக் கொண்டு பரீட்சையை எழுதத் துவங்கினாள் மிருதுளா. தன் மகள் தன் பேரப்பிள்ளையை சுமந்துக் கொண்டிருப்பதால் அவளுக்காக வெளியே அமர்ந்து ஜுஸ் பிழிந்துக் கொண்டிருந்தாள் அம்புஜம். ஆக மூன்று தலைமுறையினரும் அங்கே பரீட்சை ஹாலில் அட்டென்டஸ் கொடுத்தனர். அதில் ஒருவர் மட்டும் சொகுசாக தன் தாய் வயிற்றில் இருந்துக் கொண்டு அனைத்தையும் கவனித்தது.
சரியாக பதினொரு மணிக்கு ஜன்னல் வழியாக தன் மகளுக்கு சாத்துக்குடி ஜுஸ் கொடுத்தாள் அம்புஜம். அதை வாங்கி குடித்து விட்டு மீண்டும் எழுதினாள் மிருதுளா. மீண்டும் ஒரு ஆரஞ்சு ஜுஸ் பண்ணிரெண்டரை மணிக்கு கொடுத்தாள். ஒரு மணிக்கு பரீட்சை முடிந்ததும் பேப்பரை எக்ஸாமினரிடம் கொடுத்தாள் மிருதுளா அப்போது அவளிடம் அந்த எக்ஸாமினர்…
“யூ ஆர் கிஃப்டெட் டூ ஹாவ் சச் எ வன்டர்ஃபுல் மாம். ஆல் தி பெஸ்ட் ஃபார் தி ரிமேய்னிங் எக்ஸாம்ஸ்”
“தாங்க் யூ சோ மச்”
என்று கூறிவிட்டு மெல்ல வெளியே வந்ததும் அம்புஜம் அவளிடம் ஒரு டப்பா நறுக்கிய பழங்களை கொடுத்து சாப்பிடச் சொல்லிக் கொடுத்தாள். அதற்கு மிருதுளா
“அம்மா இன்னும் இருபது நிமிஷத்துல ஆத்துக்கு போயிடுவோம் நான் சாப்பாடே டைரெட்டா சாப்பிடறேனே.”
“பரவாயில்லை இதை சாப்பிடு இன்னுட்டு கிளம்புவோம். அந்த டிரைவர் வேற வண்டியை எடுத்துண்டு வரணுமே.”
“சரி இரு நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்”
“இரு இரு நானும் உன்னுடன் வரேன்.”
என்று இருவரும் சென்று வந்ததும். மிருதுளா பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்புஜம் அவளிடம்
“பரீட்சை எப்படி எழுதி இருக்க மிருது?”
“நல்லா எழுதிருக்கேன் மா. சரி அதோ நம்ம வந்த கார் வர்றது. இந்தா எனக்கு போதும் வா போகலாம்”
“அவர் வெயிட் பண்ணுவார் இந்தா இதை நீ ஃபுல்லா சாப்பிடு மொதல்ல இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கு”
“அம்மா நீ டூ மச் பண்ணறமா…இந்த முடிச்சிட்டேன் போதுமா!! இப்போ இங்கேருந்து கிளம்பலாமா”
இருவரும் அவர்கள் வந்த காரில் ஏறி வீட்டுக்கு பயணிக்கும் போது
“ஓ எஸ். உனக்கு இதோட அருமை எல்லாம் இப்போ தெரியாது மிருது. புள்ள பொறந்ததுக் கப்புறமும் திடகாத்திரமா இருக்கணும்ன்னா இப்போ நல்லா சத்தானதா சாப்பிட்டா தான் உண்டு. இல்லாட்டி புள்ள பொறந்து ஒரு இரண்டு வருஷத்துலேயே பல பிரச்சினைகள் வந்துடும். இப்போ நீ சாப்பிடறது உன்னையும் உன் குழந்தையையும் பல வருஷங்கள் ஆரோக்கியமா வச்சுக்கும் தெரியுமா? அதுனால நான் சொல்லறதை கேட்டு அது படி எல்லாம் செய். என்ன இன்னும் ஒரு இரண்டரை இல்ல ஏறிப் போனா மூணு மாசம் தானே”
“சரி மா சரி அப்படியே பண்ணறேன்”
இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் டிரைவரிடம் காசு கொடுத்து விட்டு இறங்கி கதவைத் திறந்து உள்ளே சென்றனர். மிருதுளா உடைகளை மாற்றி முகம் கை கால் அலம்பி ஃப்ரெஷாகி வருவதற்குள் அம்புஜம் குக்கரில் சாதம் வைத்து விட்டு காலை வைத்த குழம்பு, பொறியல் எல்லாவற்றையும் சூடாக்கி வைத்து விட்டு அவளும் முகம் கை கால் அலம்பி வருவதற்குள் குக்கர் திறக்க தயாராக இருந்தது. இருவரும் அமர்ந்து மத்திய உணவை அருந்தி விட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அப்படியே உறங்கிப் போனார்கள். மாலை நான்கு மணி ஆனதும் அம்புஜம் எழுந்து மகனுக்கு வேண்டிய மாலை சிற்றுண்டியை தயார் செய்தாள். ஜந்தரை மணிக்கு வேனு வந்தான். அவன் வந்ததும் மிருதுளாவும் எழுந்துக் கொண்டாள். சற்று நேரத்தில் ராமானுஜமும் வீடு வந்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலை சிற்றுண்டி அருந்தி காபியும் குடித்தார்கள். பின் இரவு ஏழரை மணிக்கு டிபன், எட்டரை மணிக்கு நவீனுடன் ஃபோன் கால் அன்ட் நைட் ஒன்பது மணிக்கு பால் அதற்கு பிறகு தாயம், கார்ட்ஸ் என பத்து மணிவரை விளையாடியதும் தூக்கம்.
இதே போல மிருதுளா மீதமுள்ள நான்கு பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஒரு தாய் தன் பிள்ளை பரீட்சை எழுதிப் பார்த்திருப்பாள், அதே போல சில தருணங்களில் ஒரு பிள்ளை தன் தாய் பரீட்சை எழுதியும் பார்த்திருக்கக்கூடும் ஆனால் இங்கு தாயினுள் பிள்ளை இருந்து தாயும் பிள்ளையும் சேரந்து பரீட்சை எழுதியுள்ளனர்.
கடைசி பரீட்சையை எழுதி முடித்து வீட்டுக்குத் திரும்பி வரும் போது தன் அம்மாவிடம்…
“அம்மா நல்ல வேளை நான் பரீட்சைக்கு முன்னாடி நம்ம ஆத்துக்கு வந்துட்டேன். இந்த நேரத்துல அங்க இருந்திருந்தேனா எனக்கு என்ன ஆகிருக்கும்ன்னு நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு. பசி பட்டினி ஒரு பக்கம், வீட்டு வேலைகள் ஒரு பக்கம் அட அதெல்லாம் கூட நான் சமாளிச்சிருப்பேன் ஆனா என் மாமியாரோட குத்தல் பேச்சிருக்கே!!! அது என்னை நிச்சயம் பரீட்சை எழுத விட்டிருக்காது மா. தாங்க்ஸ் மா”
“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லற மிருது? இது என்னோட கடமை. அதுவுமில்லாம எனக்கு என் பேரக்குழந்தை ஆரோக்கியமா பொறக்கணும்முன்னு ஆசை இருக்காதா? எங்களுக்கு எங்க பொண்ணும் நல்லா இருக்கணும் எங்க பேர குழந்தையும் நல்ல படியா பொறக்கணும். எல்லாத்துக்கும் மேல பகவான் இருக்கான். அவனுக்கு தெரியும் நீ அங்க இருந்தா ரொம்ப கஷ்டம் படுவேனுட்டு அது தான் எங்ககிட்ட சரியான நேரத்துல கொண்டு வந்து சேர்த்துட்டான். நான் தினம் கும்பிடும் அந்த அம்மா பகவதி தாய் நம்மளை என்னைக்கும் கைவிட மாட்டா மிருது. சரி பரீட்சை எல்லாம் முடிஞ்சாச்சு அடுத்தது வளைகாப்பு பண்ணணும்.”
தொடரும்….