அத்தியாயம் 42: தீபாவளி வந்தாச்சு

எட்டாம் தேதி காலை மிருதுளா வேக வேகமாக எல்லா வேலைகளையும் செய்து முடித்தாள். தன் பெற்றோர் வீட்டுக்கு தலைதீபாவளிக்காக செல்ல தேவையான துணிமணிகளை ஒரு பேக்கில் பேக் செய்து வைத்தாள். நவீன் குளித்து விட்டு ரூமிற்குள் வந்தான்.

“என்ன மிருது பேக்கிங் எல்லாம் ஆச்சா?”

“எஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். இதோ இதெல்லாம் நம்ம அப்பா, அம்மா, ப்ரவின், பவினுக்காக தீபாவளிக்கு வாங்கினது. இதை கீழே போய் எல்லாருக்கும் கொடுத்துட்டு தீபாவளி விஷ் பண்ணிட்டு அப்படியே சாப்டுட்டு கிளம்ப வேண்டியது தான். நாம ஒரு வாரம் தங்க வேண்டிய டிரெஸ் எடுத்து வச்சிருக்கேன். ஒரு வாரம் தங்கப் போறோமில்லையா?”

“ஆமாம் ஒன் வீக் தான் தங்கப் போறதா ப்ளான் பண்ணினோம். ஏன் உனக்கு டவுட்டு?”

“ஆமாம் ஆமாம் நாம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போறதாக் கூட தான் ப்ளான் பண்ணினோம் ஆனா அது நடக்கலையே அதுனால தான் கேட்டேன்”

“ஓ!!! கம் ஆன் மிருது. நாம ஒரு வாரம் உங்க ஆத்துல தங்கிட்டு தான் வரப்போறோம்”

என்று பேசிவிட்டு இருவருமாக பைகளுடன் கீழே வந்தார்கள். 

“அப்பா, அம்மா, ப்ரவின் அன்ட் பவின் எல்லாரும் வாங்கோ”

“என்ன அண்ணா?”

“மிருதுளா அதை எல்லாம் பேக்கிலிருந்து வெளிய எடுத்துத் தா”

“இந்தாங்கோ நவீ. அப்பா அம்மாட்ட கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிப்போம் ஃபர்ஸ்ட்”

“ரெண்டு பேரும் இப்படி வாங்கோ. இந்தாங்கோ எங்களுடைய தீபாவளி கிஃப்ட். ஹாப்பி தீபாவளி. எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ”

என பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் நவீனும், மிருதுளாவும். 

“அம்மா உங்களுக்கு புடவைப் பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லுங்கோ”

“டேய் ப்ரவின் அன்ட் பவின் இந்தாங்கோ உங்களோட தீபாவளி கிஃப்ட் ஃப்ரம் அஸ். பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கடா எல்லாமே உங்க மன்னி செலக்சன்”

“சூப்பரா இருக்கு அண்ணா” என்றான் பவின். 

“நல்லாருக்கு ஆனா எனக்கும் பவினுக்கு எடுத்த கலர்லயே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என ப்ரவின் கூற

“டேய் ரெண்டு பேரோடதும் ஒரே டிஸைன் தான் கலர் தான் வேற வேற வேணும்ன்னா நீங்க ரெண்டு பேரும் மாத்திக்கோங்கோ. ஒரே கலர் ல வாங்கிருந்தா யூனிஃபார்ம் மாதிரி இருக்குமேன்னுட்டு தான் ஒரே டிசைன்ல டிஃப்ரென்ட் கலர்ஸ் வாங்கினோம். ஈவன் ஃபார் வேனு இதே தான் வாங்கிருக்கோம்”

“எங்க காமிங்கோ மன்னி”

மிருதுளா அவள் பெற்றோருக்கும் தம்பிக்கும் எடுத்த தீபாவளி ஆடைகளை காண்பித்தாள். பர்வதம் வேகமாக அம்புஜத்திற்கு வாங்கிய புடவையைப் பார்த்தாள்…

“அம்மா ரெண்டு பேரோட புடவையும் ஒரே டிசைன் தான்”

“ஆமாம் ஆமாம் ஒரே டிசைன் தான். இந்த கலர் என்னோட புடவை கலரை விட கொஞ்சம் நல்லாருக்கு அதுதான் பார்த்தேன்.”

“சரி அப்போ இதை நீங்க வச்சுக்கோங்கோ அதை என் அம்மாக்கு கொடுத்துக்கறேன்”

“இல்ல அந்த கலர் என்கிட்ட இல்லை அதுதான் சொன்னேன்”

“பரவாயில்லை இதை வச்சுண்ட்டு அதை தாங்கோ”

ஆக பர்வதம் தன் புடவையை மிருதுளாவிடம் கொடுத்து அம்புஜத்துக்கு வாங்கிய புடவையை தனக்கென வாங்கிக்கொண்டாள். 

அனைவருமாக அமர்ந்து மத்திய உணவான ரசம் சாதம் மற்றும் பொறியலை அருந்தினர். பின் ஒரு மூன்று மணியளவில் நவீனும் மிருதுளாவும் மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டப் போது ஈஸ்வரன் அவர்களிடம்…

“நவீன் நாளைக்கு தீபாவளி முடிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் நாளன்னைக்கு சாயந்தரம் இங்க வந்துடணும் சரியா”

“ஆனா நாங்க ஒரு வாரம் தங்கிட்டுத் தான் போகணும்ன்னு மிருது அப்பா அம்மா சொன்னா அதுவுமில்லாம மிருதுக்கும் அவா ஆத்துல இருக்கணும்னு இருக்கு அதுதான்…”

“அது எல்லாம் சரி தான் ஆனா பதினொன்னாம் தேதி காலைல நம்ம லீலாவதி மாமி அன்ட் சந்திரசேகர் மாமாவோட சஷ்ட்டியப்தபூர்த்திக்கு எல்லாருமா திருக்கடையூருக்கு மூன்று வேன்ல போறோம். விஷேஷம் பண்ணண்டாம் தேதி ஆனா எல்லாரையும் பதினொன்னாம் தேதியே அங்க கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கா ஸோ நாமளும் போகணும். அதுனால தான் உங்களை பத்தாம் தேதியே திரும்பி வரச்சொல்லறேன் புரிஞ்சுதா?”

“அதுக்கு பெரியவா நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வந்தா போறாதா? நாங்களும் வரணுமா என்ன?”

“வரணும். நீங்களும் வருவேங்கள்ன்னு அவா கிட்ட சொல்லியாச்சு”

இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்தாள் மிருதுளா. இப்படியே பேசிக்கொண்டிருப்பதை விடுத்து தன் வீட்டுக்காவது சீக்கிரம் போகலாம் என்றெண்ணி…

“சரி சரி நாங்க ஒரு வாரம் தங்கலை பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடறோம். இப்போ நாங்க கிளம்பறோம் பை. கிளம்பலாமா நவீ ப்ளீஸ்”

“சரி நாங்க போயிட்டு வரோம்”

“ஞாபகம் இருக்கட்டும் பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடணும்”

“சரி சரி ஓகே”

என்று அங்கிருந்து கிளம்பினால் போதும் என நவீனும் மிருதுளாவும் பஸ்ஸை பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு நடந்தனர். அப்போது…

“என்ன நவீ நான் சந்தேகப் பட்டது சரிதானே? ஏன் இவாளுக்கு அப்படி ஒரு விஷேஷமிருக்கு.. அதுக்கு எல்லாருமா போகணும்ன்னு முன்னாடியே தெரியாதா என்ன? ஆமாம் யாரு அந்த லீலாவதி மாமி அன்ட் சந்தரசேகர் மாமா?” 

“அவா எங்க பெரியப்பாவோட பால்ய சிநேகிதர் எங்க எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானவா. மும்பய் ல செட்டில் ஆகிருக்கா.”

“அப்போ அவா நம்ம சொந்தக்காராக் கூட  கிடையாது. சரி நேத்தே இதப் பத்தி பேசிருக்கலாமில்லையா?  இப்போ நாம எங்காத்துக்கு கிளம்பும் போது தான் இதை டிஸ்கஸ் பண்ணணுமா?”

“ஓகே அதுதான் கிளம்பிட்டோமே விடு விடு. பண்ணண்டாம் தேதி விஷேஷம் முடிந்து வந்ததும் நாம் உங்க ஆத்துக்கு போய் ஒரு வாரம் இருந்துட்டு அப்புறம் நான் ஊருக்கு கிளம்பறேன் சரியா”

“பார்ப்போம்! பார்ப்போம்! என்ன எல்லாம் நாம நினைக்கறா மாதிரியா நடக்கறது. பஸ் வந்துடுத்து வாங்கோ சீக்கிரம் ஏறி எங்காத்துக்கு  போயிடலாம் இல்லாட்டி பின்னாடியே கூப்பிட வந்திடுவா” 

என முனகிக் கொண்டே பஸ்ஸில் ஏறினாள் மிருதுளா. இருவருமாக மிருதுளா வீட்டிற்கு அவர்கள் ஊர் வரை பஸ்ஸில் சென்று பின்  பஸ்ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு சென்றனர். ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது நவீன் இறங்கி காசு கொடுத்துக் கொண்டிருந்தான் வீட்டினுளிருந்து…

“வாங்கோ வாங்கோ மிருது அன்ட் மாப்ளை வாங்கோ. என்னடா டைம் ஆகிண்டே இருக்கே இன்னமும் இவாள காணலையேன்னு யோசிச்சிண்டிருந்தோம்”

என அம்புஜமும், ராமானுஜமும் மகிழ்ச்சியுடன் வாசலில் வந்து இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்றனர். 

“அம்மா இந்தா எங்க ஊரு சுவீட்ஸ் அன்ட் காரம். உனக்கு பிடிக்காது ஆனா அப்பாக்கும் வேனுக்கும் பிடிக்குமே”

இருவருக்கும் தீபாவளி பட்சணங்கள் மற்றும் பஜ்ஜி, வடை சட்னி என பல வகையான மாலைச் சிற்றுண்டி  கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். மிருதுளாவிற்கு ஒரே குஷியாக இருந்தது ஏனெனில் பல மாதங்களுக்குப் பின் அவ்வளவு வகையான ஸ்னாக்ஸ் ஒரே நேரத்தில் அவள் முன் வைக்கப்பட்டது. அதை இருவரும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சுட சுட காபியை கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம்.

“அம்மா சூப்பர் மா. எவ்வளவு நாள் கழிச்சு இதெல்லாம் சாப்படறேன் தெரியுமா!!! எல்லாமே டேஸ்டியா இருக்கு. தாங்க்ஸ் மா”

“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்க இப்போ. மாப்ளைக்கு எல்லாம் பிடிச்சிருக்கா? பஜ்ஜி தவிர எல்லாத்தையும் நான் பண்ணிணேன் பஜ்ஜி மட்டும் அவர் செய்தார்.”

“ஓ !!!எல்லாமே சூப்பர் டேஸ்டியா இருக்கு. என் வயிறு ஃபுல்லாகிடுத்து. காபி சூப்பரா இருக்கு”

“எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“அம்மா இந்தா உனக்காக நாங்க வாங்கிண்டு வந்த தீபாவளி கிஃப்ட். அப்பா இது உனக்கு. பிரிச்சுப் பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கோ”

“சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு? சொல்லுங்கோ கொழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்துருக்காளோனோ”

“எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. தாங்கஸ் மாப்ள அன்ட் மிருது”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் ….ஆமாம் வேனு எங்க காணலை”

“அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் பட்சணம் கொடுத்துட்டு அப்படியே தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வர்றதுக்காக போயிருக்கான். அவன் கிளம்பிப் போயி ரொம்ப நேரமாயாச்சு. இதோ வந்துட்டான்”

“ஹலோ மிருதுக்கா அன்ட் அத்திம்பேர் வெல்கம்”

“ஹாய் வேனு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் அத்திம்பேர்”

“என்ன மிருதுக்கா… எனக்கு நீ கல்யாணமாகி போனதுலேருந்து சரி போர் அடிக்கறது”

“அப்படியா டா. அப்போ என்னை ரொம்ப மிஸ் பண்ணிணயோ”

“ஆமாம் சண்டை போட ஆளில்லாமல் ரொம்ப மிஸ் பண்ணினேன் தான்”

“போடா”

“சரி வாங்கோ பட்டாசு வைக்கலாம். மிருதுக்கா வழக்கம் போல உனக்கு கம்பித்திரி, புஸ்வானம், சங்குசக்கரம் எல்லாம் அப்பா வாங்கி வச்சிருக்கா. வா போயி அதெல்லாம் வைக்கலாம்”

“டேய் நீயும் உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடு அப்புறம் போகலாம்” 

“இதெல்லாம் தான் நேத்தேலிருந்து சாப்பிடறேன். ஆனா பஜ்ஜி ஈஸ் நியூ ஸோ அத மட்டும் சாப்பிடறேன்”

அனைவருமாக பட்டாசு வெடித்து சந்தோஷமாக அன்றைய மாலைப் பொழுதை கழித்தனர். அன்று இரவு உணவிற்கு இட்டிலி சாம்பார் சட்டினி கேசரி செய்திருந்தாள் அம்புஜம். அனைவருமாக அமர்ந்து ரசித்து உண்டு மகிழ்ந்தனர். பின் அவர்கள் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு அறையை மிருதுளாவிற்கும் நவீனுக்கும் கொடுத்துவிட்டு அம்புஜம், ராமானுஜம் மற்றும் வேனு ஹாலில் படுத்துக் கொள்ள பாய்களை விரித்தனர் அப்போது குட் நைட் சொல்ல வந்த மிருதுளாவிடம் அம்புஜம்

“மிருது ஒரு வாரம் தங்கற மாதிரி தானே வந்திருக்கேங்கள்!!! ஏன்னா நீ ஒரு சின்ன பேக்கோட தான் வந்திருக்க அதுனால கேட்கறேன்”

“இல்ல மா நாங்க நாளன்னைக்கு சாயந்தரம் கிளம்பணும்”

“ஏன் நாங்க தான் உங்க மாமனார் மாமியார்ட்ட அன்னைக்கே சொன்னோமே”

“அதெல்லாம் அப்படித் தான் நாங்க நாளன்னைக்கு போயிட்டு பண்ணிரெண்டாம் தேதி திரும்பி வந்து ஒரு வாரம் தங்கறோம் சரியா”

“ஏன் அப்படி? என்னவோ ஏதோ எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் எங்களோட ஒரு வாரமாவது இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு மிருது” 

“எங்களுக்கும் தான் ஆசையா இருக்கு என்ன செய்ய பார்ப்போம்”

“சரி நீ போய் தூங்கு காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்”

“குட் நைட் அம்மா, அப்பா அன்ட் வேனு”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s