பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே. ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…
“ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”
“அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே“
“ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!“
“செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.“
“அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா“
“அது வாஸ்தவம் தான்“
“சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்“
“இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா“
“என்ன மெனு கட்டிண்டு போற மா நீ“
“காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு புளியோதரையும் தயிர் சாதமும், வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு. இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன். ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.“
“அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது“
“டேய் அது தான் டா நம்ம அம்மா!!“
“மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”
“சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”
“ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ“
“டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ“
“மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”
“ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.“
“அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்“
“குட் நைட்” என எல்லாரும் கூறினர்.
“யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின்
“என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோ” என்றார் ராமானுஜம்.
அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள். கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது.
நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…
“உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”
“நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும். ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?”
“நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்“
“ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.“
“ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.“
“டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது“
“ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.“
“எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!“
“ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!“
“என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!“
“உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.“
இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….
“இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு“
“ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்“
“எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.“
“உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்“
“இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”
“கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”
“இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி“
“இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி“
“நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு“
“இதோ சாப்டுண்டே தானே பேசறேன்“
உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…
“நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.“
“ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா“
“இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா“
என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…
“என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல“
“அப்படியா சொல்லறேங்கள்“
“ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.”
“நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்
“அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா“
என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.
“சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்“
“ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”
“மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”
என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…
“அம்மா நீ என்னத சாப்பிடுவ?”
“எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.“
“மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா“
“அதுவும் சரிதான் டா வேனு“
“எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்”
“நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்” என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.
அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா ப்ரவினிடம்….
“என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா“
“ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள் இருக்கு சொல்ல“
“அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்” என்றான் நவீன்.
“என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்“
தொடரும்…..