அத்தியாயம் – 25: குடும்பத்தினரின் வரவு

தனது குடும்பத்தினரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா என்னனென்ன பொருட்கள் வாங்க வேண்டி வரும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள். அன்று மாலை நவீன் கிளாஸ் முடிந்து வந்து இருவரும் உணவருந்தியதும் அமர்ந்து அந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை எங்கே வாங்கலாம் எவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் போட்டனர். அப்போது மிருதுளா

சரி இந்த பொருட்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தேவை. அப்புறம் இந்த மாத மளிகை ஜாமான்கள் வாங்கனும் அதுக்கு ஒரு இரண்டாயிரம் போயிடும், காய்கறிகளுக்கு ஒரு ஆயிரம், ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவாள கூட்டிண்டு வர்றதுக்கு கார் வைக்கனும் அதுக்கு ஒரு ஐநூறு, பால் + பெட்ரோல் + ஸ்நாக்ஸ் எல்லாமுமா ஒரு ஆயிரம்….ஸோ டோட்டல் இப்பவே ஐயாயிரத்தி ஐந்நூறு மீதமிருக்கறது ஐந்நூறு இதுல எப்படி நாம அவாள எல்லா இடத்துக்கும் சுத்திக்காட்ட கூடிண்டு போக முடியும்?”

மிருது நீ சொல்லற கணக்கில் எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியா தான் சொல்லற அதனால பணம் இருக்கும். அப்படியே பத்தாட்டினா என் ஆஃபீஸில் அட்வான்ஸ் வாங்கறேன். என்ன அடுத்த மாதம் சம்பளம் குறைவா வரும். என்ன சொல்லற?”

ஆஃபிஸிலேருந்து அட்வான்ஸ் ன்னா ஓகே ஆனா யார்கிட்டேயும் கடன் வாங்க கூடாது சரியா

சரி மகாராணி. நீ இதெல்லாம் மனசுல போட்டுண்டு அவாளோட என்ஜாய் பண்ணாம இருக்காத. நான் பார்த்துக்கறேன். கவலைப் படாதே.

சரி உங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பவேண்டிய  மூவாயிரத்தை அனுப்பியாச்சா இல்லையா?”

அதெல்லாம் நீ சொன்ன மறுநாளே அனுப்பியாச்சு.

அவா எல்லாருமா என்னைக்கு எத்தர மணிக்கு வராநவீன்

அவா வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை ல எட்டு மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்வார்கள் என பத்தாவது முறையாக அறிவிக்கிறேன்

ஓகே உங்களின் பத்தாவது தடவை அறிவிப்புக்கு நன்றி நன்றி நன்றி

இந்த வெள்ளிக்கிழமையும் கிளாஸுக்கு லீவ் போடட்டுமா?”

ஏன் ஏன்னத்துக்கு வேண்டாம். நீங்க கிளாஸுக்கு போயிட்டு வாங்கோ. எல்லாத்தையும் சனிக்கிழமை காலை ல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு போய் வாங்கிண்டு வரலாம்.

அப்போ லஞ்ச் வெளிய சாப்பிடலாமா?”

ஏன் எதுக்கு நான் காலையில சீக்கிரம் எழுந்து மத்தியான சமையலையும் முடிச்சிடறேன். எல்லா பர்சேஸிங்கும் முடிச்சிட்டு ஆத்துக்கு வந்து சாப்பிடலாம் ஓகே வா?”

எனக்கு ஓகே மிருது

சனிக்கிழமை காலை மிருதுளா சீக்கிரமே எழுந்து காலை டிபன் மற்றும் மத்திய சாப்பாடு எல்லாம் செய்துவிட்டு குளித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.  அப்போது எழுந்த நவீனைப் பார்த்து…

என்ன நவீன் இன்னைக்கு வெளியே பொருளெல்லாம் வாங்க போகனும்னு தெரியாதா இப்படி தூங்கறேங்கள்!

ஏன் எழுப்பலை

நல்லா தூங்கிண்டிருந்தேங்கள் எழுப்ப மனசு வரலை

டைம் என்ன ஆச்சு?”

மணி ஒன்பதாகறது

என்ன ஒன்பது தானே ஆகறது கடைகள் பத்து மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவா ஸோ எனக்கு ஒரு மணிநேரமிருக்கே சட்டுன்னு ரெடி ஆயிடுவேன்

சரி சரி பேசிண்டே இருக்காம சீக்கிரம் கிளம்புங்கோ. டிபன் வேற சாப்பிடனும்

என் மிருது குட்டி ..சூடா ஒரு கப் காஃபி ரெடி பண்ணுவாளாம் நான் நிமிஷத்துல ப்ரஷ் பண்ணிட்டு வந்திடுவேனாம். மிருது காபி குடிச்சிட்டு, பேப்பரை ஒரு பொரட்டு பொரட்டிட்டு பின்ன குளிச்சி ரெடி ஆயிடுவேனாம்

இருவருமாக ஒருவழியாக வெளியே கிளம்பினர். மிருதுளா போட்ட லிஸ்ட் படி எல்லா பொருட்களையும் வாங்கினார்கள் ஆனால் எல்லாவற்றையும் பைக்கில் வைத்து கொண்டுவரமுடியாத காரணத்தினால் மிருதுளாவை எல்லா பொருட்களுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னாடியே பைக்கில் சென்றான் நவீன்.

வீட்டிற்கு வந்து மத்திய உணவருந்தியப்பின் சற்று ஓய்வெடுத்து விட்டு பின் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அது அது இடத்தில் அடுக்கி வைத்து விட்டு மறுநாள் சமைக்கவேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்தனர். அன்று மாலை பக்கத்திலிருக்கும் ஒரு பார்க்குக்கு சென்று சற்று நேரம் நடந்து பின் அங்குள்ள பென்ச்சில் அமர்ந்தனர். அப்பொழுதும் மிருதுளா ஏதோ யோசனையிலேயே இருந்ததைப் பார்த்த நவீன்…

என்ன யோசிக்கற மிருதுளா? நாளைக்கு உன் அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் வந்திடுவா அப்புறம் உனக்கு என்னோட பேசக் கூட நேரமிருக்காது…அத தானே யோசிச்சிண்டுருக்க

அட போ பா…நான் ஏன் அதையெல்லாம் யோசிக்கப்போறேன். தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அப்படின்னா நீங்க ஏன் அதை யோசிக்கலையாம் உங்க தம்பிகளும் தானே வர்றா….எப்புடி

அடி பாவி!!! அப்போ வேற என்னத்த பத்தி அப்படி யோசனையாம்!

நாளைக்கு காலை ல எட்டு மணிக்கு வர்றான்னா நாம ஸ்டேஷனுக்கு ஏழரை க்கு போயாகனும் இல்லையா

ஆமாம் நாம ஆத்துல இருந்து  ஒரு ஏழேகாலுக்கு பஸ் ல கிளம்பினோம்ன்னா கரெக்ட்டா ஏழரைக்கு ஸ்டேஷன் ரீச் ஆகிடுவோம்.

ஓ ஏழேகாலுக்கெல்லாம் ரெடி ஆகனுமா? அப்போ நான் நாலரை மணிக்கு எழுந்திருக்கனுமே!!

ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கனும்?”

அப்போ தானே காலை அன்ட் மத்திய  சமையல் வேலைகளை எல்லாம் முடிக்க முடியும்.

ஓ நீ அடுப்படிக்குள்ள இருக்கயா?…என் கூட பார்க்ல இருக்கேன்னு நினைச்சிண்டிருக்கேன்

என்னது!!! நாம பார்க் ல தானே இருக்கோம்

தெரியறது தானே அப்புறம் என்ன அடுப்படி சமையல்ன்னு அதையே நினைச்சிண்டிருக்க.

ஓகே மறுபடியும் பார்க்குக்கே வந்துட்டேன். சொல்லுங்கோ அவாள எங்கெல்லாம் கூட்டிண்டு போகபோறோம்.

அதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப் படாதே

உங்க ஈவ்னிங் கிளாஸ் எப்படி போகபோறேங்கள்?” 

அவா இருக்கற வரைக்கும் டொக்கடிக்க வேண்டியது தான்.

நோ நோ நோ…அது மட்டும் கூடவே கூடாது. என்னைக்கெல்லாம் ஈவ்னிங் எங்கேயும் போற ப்ளான் இல்லையோ அன்னைக்கெல்லாம் கிளாஸ் அடென்ட் பண்ணுங்கோ..சரியா

உத்தரவு டிச்சர்.

சரி நேரமாயாச்சு ஆத்துக்கு போகலாமா?”

ஓ ஆமாம் இட்ஸ் செவன் தர்ட்டி. அப்படியே ஆத்துக்கு போற வழில நம்ம டாபா ல டின்னர் சாப்ட்டுட்டே போலாமா இல்லை ஏதாவது செய்து வச்சிருக்கயா?”

ஒன்னும் செய்து வைக்கலை. சாப்பிட்டுட்டே போகலாம்.

நவீனுக்கும் மிருதுளாவும் காலை முதல் மாலை வரை பர்ச்சேஸிங், வருபவர்கள் சௌகர்யமாக தங்குவதற்கான ஏற்பாடுகள், பார்க்கில் வாக்கிங் என சனிக்கிழமை விறுவிறுவென ஓடியதில் களைத்துப் போனார்கள். அன்றிரவு இருவருமே அசந்து உறங்கிப் போனார்கள். 

மிருதுளா சட்டென்று விழித்துப்பார்த்தாள் சூரியன் உதயமாகி பல மணி நேரமானது போல தோன்ற கிடுகிடுவென குளித்து ஃப்ரெஷ் ஆகி கடிகாரத்தைப் பார்த்தாள்….மணி ஆறு என்று அவள் பார்த்ததில் கடிகாரத்தின் இரு முட்களும் வெளியே வந்து அவளை சுறுக்கென குத்தியது போல 

ஓ! ஹோ!!என்றபடியே

நவீன் ஏய் நவீன் மணி ஆறாச்சுப்பா!!! எழுந்திறீங்கோ…இவ்வளவு லேட்டா எழுந்துண்டுட்டேனே

என பொலம்பிக்கொண்டே காபி டிக்காக்ஷன் போட்டுக்கொண்டே மளமளவென வேலையில் இறங்கினாள். மிருதுளா எழுப்பிய வேகத்தில் நவீன் எழுந்து 

என்னத்துக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகற மிருது இன்னும் ஒன்னேகால் மணி நேரமிருக்கு நாம கிளம்ப. அதுவரை என்ன முடியறதோ அதை செய் மீதியை வந்துட்டு செஞ்சுக்கலாம். காபி உண்டா?”

நவீன் கையில் சுடசுட காபி டம்ளரைக் குடுத்துக்கொண்டே…

ஆமாம் உங்களுக்கென்ன வந்தவாளோட அரட்டை அடிச்சிண்டு இருப்பேங்கள்‌

உனக்கென்ன ஆச்சு நீயும் ஜாயின் பண்ணிக்கோ

அதுக்குதான் என் வேலைகளை எல்லாம் இப்பவே முடிச்சிட்டா நானும் உங்களோட உட்கார்ந்து அவாளோட பேசலாமேன்னுட்டு இப்படி அவசர அவரமா செய்துண்டிருக்கேன். காபி குடிச்சாச்சில்லையா நீங்க போய் ரெடி ஆகுங்கோ…

என்று பேச்சைக்குறைக்க நவீனை அங்கிருந்து அனுப்பிவிட்டு கிடுகிடுவென காலை டிஃபனுக்கு இரவே ஊர வைத்த பருப்பு அரிசியை போட்டு அடைக்கு மாவறைத்து வைத்து, மத்தியத்துக்கு சாம்பார், ரசம், பொறியல் செய்து விட்டு ஸ்டேஷன் செல்வதற்கு புறப்பட்டாள். 

பரவாயில்லை மிருது வித்தின் ஒன் அவர் நீ இவ்வளவு செய்துட்டேயே. யூ ஆர் கிரேட்

என்ன புகழ்ந்தது போதும் நாம கிளம்பலாமா?” 

ஓகே நீ போ நான் கதவை பூட்டிட்டு வரேன்

இருவருமாக ஸ்டேஷனில் விருந்தினர்கள் வரும் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடத்தை  சென்றடையவும்  அவர்கள் வரும் ரெயில் அதற்குரிய பிளாட்பாரம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்க்க போகும் மிருதுளாவின் மனது முழுவதும் மகிழ்ச்சி ஆக்கிரமித்திருந்தது. அதுவரை அவள் அவளின் குடும்பத்தை விட்டு இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை. 

நவீன் மிருதுளாவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அந்த கம்பார்ட்மென்ட்டிற்குள் சென்றான். மிருதுளாவின் கண்கள் அந்த ரெயில் பெட்டியினுள் ஸ்கேன் செய்துக்கொண்டிருக்கையிலே….அவள் பின்னாலிருந்து…

ஹாய் மிருதுக்காஎன்றான் வேனு

ஹேய் மிருது எப்படி மா இருக்கஎன அவள் தாய் 

அவர்களை பாத்ததும் ஓவென்று அழத்துவங்கினாள் மிருதுளா. உடனே நவீன் அவளருகில் வந்து 

இட்ஸ் ஓகே ஏன் அழற இப்போ…எல்லாரும் உன்னையே பாக்கறா பாரு …கண்ண தொடச்சுக்கோ..

என்ன மிருதுக்கா இவன் வந்துட்டானேன்னு அழறயா என்ன?”

என்று வேனு கூறியதும் அனைவரும் சிரித்தனர் பின் தன்னை நிதானித்துக் கொண்டாள் மிருதுளா ..

சாரி உங்களை எல்லாரையும் பார்த்ததும் என்னமோ தெரியலை அழுகை வந்துடுத்து. வெல்கம் டூ குஜராத் அம்மா, அப்பா, வேனு, ப்ரவீன் அன்ட் பவின்

உன் சமையலை சாப்பிடப் போற  நாங்க இல்லையா அழனும் எங்களுக்காக நீ ஏன் அழுவற?”

டேய் வேனு வேனாம்டா

ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லாதே வேனு உங்க அக்கா சூப்பரா சமைக்கறா. நீயும் சாப்பிட்டதுக்கப்புறம் சொல்லு

சாப்பிட்டதுக்கப்புறம் சொல்றதுக்கு இருக்கனுமே!!

டேய் வேனு போதும் போதும் நிறுத்திக்கோஎன்று அம்புஜம் சொன்னதும் கப்சிப் ஆனான் வேனு.

நவீனின் நண்பனின் மாருதி ஓம்னி வேனில் அனைத்து லக்கேஜ்களுடன் எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து அனைவரும் அமர்ந்து  இப்படியே பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அதனால் புதுமண தம்பதியினருக்கு ஒரு முன்னூறு ரூபாய் மிச்சமானது. 

வீட்டைத் திறந்துக் கொண்டே அனைவரையும்வாங்கோ..வாங்கோ எல்லாரும் எங்காத்துக்குள்ள வாங்கோஎன்று கூறினாள். மிருதுளாவும்அம்புஜமும், ராமானுஜமும் முதலில் உள்ளே சென்றனர். மற்றவர்கள் பெட்டிப் படுக்கைகளை வண்டியிலிருந்து இறக்கி வீட்டினுள் எடுத்து வந்துக் கொண்டிருந்தனர். மிருதுளா அவள் பெற்றோரிடம்…

அம்மா அப்பா வீட்டை சுத்திப் பாருங்கோ அதுக்குள்ள உங்க எல்லாருக்கும் காபி போடறேன்

நீ தள்ளு மிருது நான் போடறேன்

அம்மா இப்போ நீ எங்காத்துக்கு வந்திருக்க ஸோ நான் தான் போடுவேன்…நீ போய் வீட்டைப் பாரு இல்லாட்டி ஹால் ல உட்காரு

வீடு நம்ம குவார்டர்ஸ் மாதிரிதான் இருக்குஎன்றார் ராமானுஜம்

இதுவும் எங்களோட குவார்டர்ஸ் தான். ஆனா இது எனக்கு அளாட் ஆன வீடு இல்லை. இதுக்குள்ள சேஃப்ட்டியா இருக்குமேன்னு தான் உள்ளயே  இருக்கோம். இன்னும் ஒரு ஆறு  இல்லை எட்டு மாசத்தில எனக்கு வீடு அளாட் ஆகிடும்என்று பதிலளித்தான் நவீன். 

லக்கேஜ் எல்லாம் ஹாலில் வைத்துவிட்டு அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மிருதுளா ஏழு காபி டம்பளர்களுடன் வந்து அனைவருக்கும் காபிக் கொடுத்துவிட்டு…

அம்மா என் காபி எப்படின்னு குடிச்சுப்பார்த்து சொல்லேன்” 

தாயல்லவா!!! மகள் சொன்னதும் குடித்துவிட்டு

சூப்பர் காபி மிருது. ரொம்ப நல்லா இருக்கு

மிருதுக்கா அம்மா உனக்கு ஜைன் சக் அடிப்பா இரு இரு இதோ நான் குடிச்சிட்டு உண்மையான ஒப்பீனியன் சொல்லறேன்..

சரிடா நீ குடிச்சிட்டு சொல்லு

.”ம்…ம்..ஆஹா நிஜமாவே சூப்பர் தான் மிருதுக்கா

வஷிஷ்ட்டர் வாயால் ப்ரம்மரிஷி. போதுமாடா!!

ஏய் மிருது அது என்ன வஷிஷ்ட்டர் வாயால்…..

அதுவா அதை அப்புறமா சொல்லறேன். ஹேய் ப்ரவீன் அன்ட் பவின் என்ன அமைதியா இருக்கேங்கள். உங்க மன்னி காபி எப்படி

சூப்பரா இருக்கு மன்னிஎன்றான் ப்ரவின்

ஓகே எல்லாரும் ஒவ்வொருத்தரா குளிச்சிட்டு வாங்கோ நான் அடை வார்த்துத் தறேன். நவீன் அவா எல்லாம் குளிச்சிட்டு வரட்டும் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டிஃபன் தரேன் வாங்கோ

அம்புஜம் முதலில் குளித்து விட்டு அடுப்படிக்குள் சென்று..

மிருது மா தாடி நான் அடை வார்க்கறேன்

அம்மா எத்தனத் தடவ சொல்லுவேன் …இந்தா புடி நீயும் போய் உட்கார்ந்து சாப்பிடு.

அனைவரும் குளித்து டிஃபன் அருந்தியப்பின் ஹாலில் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா தன் அம்மாவிடம்…

என்ன மா வந்ததுலேருந்து என்னை அப்படிப் பார்க்கற

கல்யாணத்துக்கு முன்னாடி நீ இருந்ததையும் இப்ப நீ இப்படி பொருப்பான குடும்பஸ்த்தியா இருக்கறதையும் நினைச்சுப் பார்த்திண்டிருக்கேன்

அதெல்லாம் ஓகே நான் நல்லா இருக்கேன்னு சொல்லவரயா இல்லை…

நீ எவ்வளவு சமத்தா இருக்க…அதப் பார்த்து ரசிச்சிண்டிருக்கேன்

அப்போ சரி நீ நல்லா ரசிச்சிண்டே இரு. நான் போய் பாயசமும் வடையும் மட்டும் பாக்கி வச்சிருக்கேன் அதை செய்துட்டு வரேன்.

ராமானுஜம் …நவீனுக்கும் மிருதுளாவிற்குமாக கொண்டு வந்த டிரெஸ், பலகாரங்கள், பழங்கள், ஊறுகாய் பாட்டில்கள் என எல்லாவற்றையும் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். அதைப் பார்த்த நவீன்…

என்னது இது இவ்வளவு கொண்டு வந்திருக்கேங்கள்!!! ஏய் மிருது இதெல்லாம் எங்க வைக்க போறஎன்றான்.

அம்மா ஏதாவது வேலை செய்யனும்னா அதை எல்லாம் இங்க அடுப்படி ல கொண்டு வந்து அடுக்கேன்

ஓ பண்ணறேனே. எங்க அடுக்கனும்ன்னு சொல்லு அங்கேயே வச்சுடறேன்

இதோ இந்த ஷெல்ஃப் காலியாதான் இருக்கு இதுல அடுக்கிடூ

அம்புஜமும் மிருதுளாவும் அடுப்படியில் மும்முரமாக வேலையில் இறங்கினர். ராமானுஜம் தரையில் துண்டை விரித்து படுக்க அப்படியே அசந்துப்போனார். நவீன் பசங்களை கூட்டிக்கொண்டு வெளியே போவதாக மிருதுளாவிடம் சொல்லி விட்டு வேனு, ப்ரவின் அன்ட் பவினை அழைத்தான். அதற்கு பவின்…

இல்லண்ணா நான் வரலை. இங்கேயே இருக்கேன் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோஎன்று சொல்ல அதற்கு ப்ரவின் 

ஓகே பவின் இப்போ நீ இங்க இருந்துக்கோ அடுத்த தடவை இப்படி வெளியே போனா நீ அவா கூட போ சரியா

டேய் என்னடா பேசறேங்கள்? ஏன் ரெண்டு பேரும் வர்றத்துக்கு என்னவாம்!!!நான் என்ன உங்க ரெண்டு பேர் ல ஒருத்தரை தான் கூட்டிண்டு போவேன்னா சொல்லறேன்? அதென்ன இந்த தடவ நான் அடுத்த தடவ நீ அப்படீன்னு பேசிக்கறேங்கள். என்ன நடக்குது உங்ளுக்குள்ள?”

அது ஒன்னுமில்லண்ணா…நீ வா நாம போயிட்டு வரலாம் பவினுக்கு வரனும்ன்னு தோனலையாம்

என்ன டிஸ்கஷன் வெளியே போறோம்ன்னு சொல்லி பத்து நிமஷத்துக்கு மேல ஆச்சு ஆனா இன்னும் இங்கயே பேசிண்டிருக்கேங்கள். உங்க பேச்சு சத்தத்திலும் எங்க அப்பா எப்படி தான் இப்படி தூங்கறாரோ!!! என்ன ஆச்சு?”

அது ஒன்னுமில்லை மன்னி. பவினுக்கு வர தோனலையாம் அதைத்தான் ஏன்னு நவீன் அண்ணா கேட்டுண்டிருக்கா

ஏன் பா அவனுக்கு வரனும்ன்னு இல்லைன்னா விட வேண்டியது தானே..ஏன் இப்படி கம்ப்பல் பண்ணறேங்கள்? நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோளேன்

நவீனுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் வெளியே சென்றதும் கதவை சாத்தி விட்டு பவினிடம் சற்று படுத்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு அடுப்படிக்குள் சென்று சமையலைத் தொடர்ந்தாள். 

அன்று மத்தியம் வெளியே சென்றவர்கள் வந்ததும் அனைவருமாக அமர்ந்து மிருதுளா சமைத்த விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர். மூன்று நாட்கள் கட்டு சாதம் சாப்பிட்ட வாய்க்கு விருந்து தேவாமிருதமாக இருந்தது. விருந்துண்ட மயக்கத்தில் அனைவரும் கண்ணசந்தனர். ராமானுஜம் காலை டிஃபன் சாப்பிட்டப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டதினால் அவருக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் கதவைத் திறந்து வெளியே பூட்டிவிட்டு அந்த கேம்ப்பை சுத்தி பார்க்க புறப்பட்டுச் சென்றார். முழுவதும் சுற்றிப் பார்த்தப் பின் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்தார் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் கிடைத்த இடத்தில் துண்டை விரித்து அவரும் படுத்துக் கொண்டார். 

அன்று மாலை காபி அருந்தியப் பின் அனைவரும் கிளம்பி நடந்து  பக்கத்திலிருந்த கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நவீன் மிருதுளா தினமும் வாக்கிங் போகும் பார்க்கில் சென்று சற்று நேரம் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்களின் ஃபேமஸ் ரோஹித் டாபாவில் அம்புஜத்தைத் தவிற மற்ற அனைவரும் டின்னர் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மிருதுளா தன் அம்மா கேட்டுக்கொண்டது படி சாதமும் தயிரும் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அம்புஜமும் கொஞ்சமாக சாப்பிட்டாள். 

அனைவரும் வரிசையாக ஹாலில் படுத்தனர் அப்போது நவீன் 

டேய் பவின் ஈவ்னிங் எங்களோட வந்த இல்ல அதே மாதிரி காலை ல கூப்பிட்டப்போவும் வர்றதுக்கு என்னவாம்?”

அண்ணா ஈவ்னிங் எல்லாருமா போனோம் ல அப்போ நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ணுவேன் அதுனால வந்தேன்

ஓ சார் அப்படி வர்றீங்களா..ஓகே ஓகே

என்று நவீனுக்கு ஏதோ புரிந்ததுப் போல சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

மிருதுளா குடும்பத்தினரின் வருகையால்  மிருதுளாவும் நவீனும் சற்று பரபரப்புடன் இருந்தாலும், கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது. அம்புஜமும் ராமானுஜமும் அவர்களின் மகள் பொறுப்புடன் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்ததில்  மனமகிழ்ந்தனர். மகள் மருமகன் வீட்டில் அவர்களின் முதல் நாள் இனிதே நிறைவுற்றது. 

ப்ரவின் அன்ட் பவின் மிருதுளா குடும்பத்தினருடன் வந்ததின் நோக்கத்தை முதல் நாளே நாம் தெரிந்துக்கொண்டோம் அல்லவா! பாவம் அவர்கள் வெறும் அம்புகள் தான். அவர்களை ஏய்தவர்கள் யாரென்று நமக்கு சொல்லியா புரியவேண்டும். 

அம்பு ஏய்து மிருங்களை கொன்று புசிப்பவன் வேடன்.

தங்களுக்கு வேண்டியவர்களை அம்புகளாக ஏய்து வம்புக்கு காத்திருப்பவர்கள் நமது இதிகாசத்தில் வரும் சகுனி / கூனி ஆவர்.

வேடனுக்கு வயிற்றுப் பசி.

சகுனி / கூனி களுக்கோ பழி/வம்பு பசி.

வேடன் பசி உண்டதும் அடங்கிவிடும்.

சகுனி/கூனி பசி அவர்கள் குறி வைத்தவர்கள் அழிந்தால் தான் அடங்கும்.

ஏய்தவர் எங்கோ இருக்க அம்பை நோவானேன்!!!! என்ற எண்ணத்தில் இருக்கிறாளா நம்ம மிருதுளா?

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s