அத்தியாயம் – 20: பைக் !!பயமானது!!

மிருதுளா முதல் முறையாக புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் சென்றாள். அவள் புடவை தலைப்பை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் பிடித்துக்கொண்டதில் புடவைத் தலைப்பு  அதுவும் புது பட்டுப்புடவை வழ வழவென இருந்ததில் அவள் கையிலிருந்து நழுவியதை உணர்ந்ததும் சட்டென அதை பிடித்து வைக்க முற்பட்டு பைக்கிலிருந்து வழுக்கி கீழே விழுந்தாள். அவள் விழுந்ததும் புடவை தலைப்பின் குஞ்சம் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக்கொண்டது. தன் மனைவி பின்னாடி வண்டியில் இருக்காளா இல்லையா என்று கூட கவனிக்காமல் நவீன் வண்டியை ஓட்ட பின்னால் ரோட்டில் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக் கொண்டுள்ள புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டுஐய்யோ அம்மா!!! மா!!! மா!!! நவீ!!! நவீ!!!! என்று கத்திக்கொண்டு சறுக்கிக்கொண்டே சென்றவளை ரோட்டோரம் இருந்தவர் பக்கத்து வண்டியில் பயணித்தவர்கள் என எல்லாரும் நவீனுக்கு கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொல்ல 

ஏன் ரோட்டில் எல்லாரும் கையை காட்டி, நிறுத்தச்சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டுவண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான் மிருதுளா ரோட்டில் கிடந்தாள். ஓடிச்சென்றான் ….அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் உதவ ஓடினார்கள். மிருதுளா கட்டியிருந்த ஆஃப் வைட் பட்டுப் புடவை முன்பக்கமாக ரோட்டில் உராய்ந்து கொண்டு வந்ததில் முழுவதும் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. மிருதுளாவை ஆட்டோவில் ஒரு பெண்மணியுடன் ஏற்றிவிட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பின்னாலேயே பைக்கில் சென்றான் நவீன். அப்பொழுதும் பைக்கை விடவில்லை அவன். 

ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் உதவ வந்த பெண்மணி மிருதுளாவை தாங்கிப்பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றாள். நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டுதான் உள்ளே சென்றான். மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து டாக்டர் ரூமிற்குள் அழைத்து செல்வதைப்பார்த்து ஓடினான் வழியில் அவளுடன் வந்த பெண்மணியை நன்றி சொல்வதற்காக தேடினான் அவளை காணவில்லை. பின் டாக்டரிடம் போய் தான் யார் என்பதும் அட்மிட் ஆனவரின் பெயர் என்று சொல்ல முயன்றப்போது 

மிருதுளா உங்க மனைவியா?” என டாக்டர் கேட்க 

ஆமாம் டாக்டர்….மிருதுளா எப்படி இருக்கா டாக்டர்என்று கேட்டான் 

கொஞ்சம் வேயிட் பண்ணுங்க இப்போ தானே பேஷன்ட்டைப் பார்க்க போறேன்…நீங்க வெளியே இருங்க…நான் கூப்பிடும் போது வந்தா போதும்என டாக்டர் கூறியதும் 

ரூமுக்கு வெளியே நின்று உள்ளே என்ன செய்கிறார்கள் என தவித்துக்கொண்டிருந்தான் நவீன். சிறுது நேரத்தில் மிஸ்டர் நவீன் என்று டாக்டர் அழைக்க உள்ளே சென்று

என்ன ஆச்சு டாக்டர் அவ எப்படி இருக்கா?” 

இருங்க மிஸ்டர் நவீன். வண்டியிலிருந்து விழுந்து சுமார் ஒரு அரை கிலோமீட்டர் ரோட்டில் சறுக்கி வந்ததில் மார்பு, வயிறு, தொடை, கைகள், கால் முட்டி என எல்லா இடங்களிலும் அதிகமாக சிராய்ப்புகள் ஆகியிருக்கு மத்தபடி ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம் தான் உள்ள ஏதாவது பாதிப்பு இருக்காங்கறது தெரியும். ஒரு ஹாஃப் அன் ஆர் வேயிட் பண்ணுங்க தெரிஞ்சுடும். அவங்க காயங்களுக்கு மருந்து போட்டாச்சு, இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கோம், பேயின் கில்லரும் கொடுத்திருக்கோம் அதனால் டிரௌஸியா தான் இருப்பாங்க…. பின்னாடி வைஃப் இருக்காளா இல்லையான்னு கூட தெரியாமயா வண்டி ஓட்டு வீங்க? அது அவ்வளவு பிசியான ரோடு ….ஏதாவது வண்டி அவங்க மேல ஏறியிருந்தா என்னவாகியிருக்கும்? நல்ல வேளை இன்னிக்கு சன்டே. காட் ஈஸ் ரியலி கிரேட்.   நீங்க போய் அவங்களோட இருங்க ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடறேன்.

ஓகே டாக்டர். அவள் புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் இன்றுதான் முதல் முறையாக பயணிக்கின்றாள். பட்டுப்புடவை வழுக்கி விட்டது என்று நினைக்கிறேன். ஷுவர் டாக்டர் இனி ஜாக்கிரதையாக இருக்கிறோம்.தாங்க் யூ டாக்டர்என்று கூறி அங்கிருந்து மிருதுளா இருந்த ரூமிற்குள் சென்றான். அழகாக பட்டுப்புடவையுடுத்தி கிளம்பிய தன் மனைவி உடம்பில் காயங்களுடன் படுத்துக்கிடப்பதைப்பார்த்து அதிர்ந்துப் போனான். 

மிருதுளா அரை மயக்கத்தில் மெல்ல கண்களைத் திறந்துப் பார்த்தாள். அவள் நகைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து நவீனிடம் செய்கையில் கேட்க அவன் எல்லாம் பத்திரமாக தன்னிடம் இருப்பதாகவும் நிம்மதியாக உறங்கும்படி கூறினான். 

அன்று மிருதுளாவை ஆட்டோவில் கூட்டிவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து சென்றவர் மிருதுளா வணங்கிய அந்த சமயபுரத்து அம்மனே என்றெண்ணி மனமுருகி நன்றிச்சொன்னாள் மிருதுளா. 

டாக்டர் நவீனை உள்ளே அழைத்தார். 

சொல்லுங்க டாக்டர்” 

எஸ் நவீன் எல்லா ரிப்போர்ட்ஸும் வந்தாச்சு அதை பார்க்கவும் செய்துட்டேன். நோ அதர் இஷூஸ். எவ்ரித்திங் இஸ் ஃபைன். அவங்க வயிற்றில் அதிகமாக சிராய்ப்புகள் இருந்ததனால் எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது‌ அது தான் ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே எடுக்கச்சொன்னோம் வேற ஒன்னுமில்லை. இப்போ நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்‌. இந்த மெடிசின்ஸ் எல்லாம் மறக்காமல் கொடுங்க அப்போத்தான் காயங்கள் சீக்கிரம் ஆறும். எப்படியும் ஒரு பதினைந்து நாட்கள் எடுக்கும்.

ஓகே டாக்டர். நான் பார்த்துக்கறேன்

தனது பைக்கை ஸ்டான்டிலேயே விட்டுவிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் அதில் ஏறி நவீன் சித்தி வீடு பக்கத்திலிருந்ததால் அங்கே சென்றார்கள். சித்தி ரம்யா வீட்டு கதவைத் தட்டினான் நவீன். கதவு திறந்ததும் ரம்யா 

ஹாய் புது மண தம்பதியினரே வெல்கம்…ஹேய் மிருதுளா. என்ன!!!! உன் புடவை எல்லாம் ஒரே ரத்தக்கறையா இருக்கு? என்ன ஆச்சு? என்னடா ஆச்சு நவீன். வாங்கோ உள்ள வாங்கோ ஃபர்ஸ்ட்

நடந்தவற்றை நவீன் கூறினான். அதைக்கேட்டதும் அவன் சித்தியும் சித்தப்பாவும் அவனை திட்டினார்கள். 

ஆத்துக்காரி பின்னாடி இருக்காளா இல்லையான்னுட்டு கூட  தெரியாமலா வண்டி ஒட்டுவ!!!”  

சாரி சித்தி…சரி என் பைக் அந்த ஆஸ்பத்திரியிலேயே விட்டிருக்கேன். அதைப் நான் போய் எடுத்துண்டு வரேன். நீங்க மிருதுவை பார்த்துக்கோங்கோ இபோ வந்துடுவேன்” 

சரி சரி நீ வாம்மா நான் உனக்கு என்னோட நைட்டியை தரேன் மொதல்ல இந்த ரத்தக்கறை புடவையை மாத்திக்கோ வா

ஒரு பத்து நிமிடத்தில் பைக்குடன் வீடு திரும்பினான் நவீன். மிருதுளா புடவையை கழட்ட மிகவும் சிரமம் படுவதைப்பார்த்த ரம்யா அவளுக்கு புடவையை கழற்றி நைட்டியை மாற்ற உதவும்  போது மிருதுளாவின் காயங்களைப்பார்த்துவிட்டு வெளியே வந்து …

ஏன்டா நவீன் இப்படி காயங்களாகிருக்கு!!!! வயத்துல இப்படி சிராய்ஞ்சிருக்கு!!! உள்ள ஏதும் அடி படலையே?” 

இல்ல சித்தி…டாக்டருக்கும் அந்த சந்தேகம் வந்ததால எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் டிஸ்சார்ஜே பண்ணினா

அப்பாடா எல்லாம் அந்த தெய்வத்தின் அருள் தான்ம்பா!!! சரி நீயும் போய் உங்க சித்தப்பா வேஷ்டியை போட்டுண்டு வா. நான் ரெண்டு பேருக்கும் மொதல்ல சூடா காபி தரேன்

நவீனும், மிருதுளாவும் டிரஸ் மாத்தி கண்கொண்டு ஹாலில் வந்தமர்ந்தனர். அப்போ நவீன்

எங்க சித்தப்பா உங்க பொண்ணுகள் ராதா அன்ட் ரேவதியை காணமே!!

ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ் போயிருக்கா இப்போ வந்திடுவா

சொல்லிக்கொண்டிருக்கையிலே உள்ளே நுழைந்தனர் இரு பெண்களும்….

ஹாய் பையா!! ஹாய் மன்னி வெல்கம்” 

என்று கூறிக்கொண்டே ரேவதி நவீனின் மடியில் அமர்ந்தாள். மிருதுளாவிற்கு அது வித்யாசமாக பட்டது ஆனாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரேவதி சின்ன குழந்தை அல்ல அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் இளம்பெண். ராதா காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மிருதுளா வளர்ந்த விதம் வேறு. வயதுக்கு வந்த பெண் அவள் வீட்டில் அவளது அப்பா, அண்ணன், தம்பிகளுடன் கூட இப்படி மடியில் அமர்ந்து தடவுவது கொஞ்சுவது என்பதெல்லாம் செய்யக் கூடாது என்றுதான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். அதனாலோ என்னமோ அவளுக்கு அப்படி தோன்றியது. பின்பு அனைவருமாக அமர்ந்து இரவு உணவு அருந்தினார்கள். மிருதுளாவால் தனது கைகளைத் தூக்கி உணவருந்த முடியாமல் சிரமப்பட்டாள். அதை யாரிடமும் சொல்லி அவர்களை தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி தனக்கு உணவு வேண்டாம் என்றும் ஒரு கிலாஸ் பால் மட்டும் போதும் என்றாள். நவீனும் அவளின் கஷ்ட்டத்தை புரிந்துக்கொள்ளவில்லை. நவீன், மிருதுளா இருவருக்கும் ஒரு அறையை காட்டி அதில் படுத்துறங்கச்சொன்னாள் ரம்யா சித்தி. அப்போது நவீன் சித்தியிடம்

சித்தி இதை ஊர்ல யார்கிட்டேயும் சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாமென நான் நினைக்கிறேன் …ஸோ நீங்களும் ப்ளீஸ் நடந்ததை யாரிடமும் சொல்லிடாதீங்கோ

புரியுது நவீன் கவலைப்படாதே நான் சொல்லமாட்டேன். நீ போய் மிருதுளாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் கொடுத்து அவளை தூங்கச் சொல்லு. குட் நைட்

நவீனும் குட் நைட் சொல்லிவிட்டு அவர்கள் அறையின் கதவை தாழிட்டான். மிருதுளா அவள் காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்ததைப் பார்த்து மருந்தை அவளிடமிருந்து வாங்கி அவனே எல்லா இடங்களிலும் தடவி விட்டு அவள் இரவு எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் தண்ணீரும் கொடுத்து அவற்றை விழுங்கச் செய்து படுக்க வைத்து…

மிருது இந்த விஷயத்தை ஊர்ல உன் பேரன்ட்ஸ் அன்ட் மை பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…நீ என்ன சொல்லுற??”

நீங்க உங்க சித்திகிட்டேயும் இதை தானே பேசினேங்கள்…அதை நானும் கேட்டேன். நீங்க சொல்லறதும் சரிதான் நானும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். அப்படியே சொல்லனும்னாலும் நீங்கதான் எஸ்.டி.டி பூத்துக்கு கூட்டிட்டுப் போகணும் ஆர் லெட்டர் எழுதறதாயிருந்தாலும் நீங்க தான் எழுதித் தரணும் ….இந்த கையை வைத்துக்கொண்டு நான் எப்படி எழுத முடியும்…ஸோ கவலையை விடுங்கோ. எனக்கு தூக்கமா வருது நான் தூங்கறேன். குட் நைட்

என்று உண்ட மருந்துகளினால் கூறிய சில மணித்துளிகளில் உறங்கிப்போனாள். அவளை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே அமர்ந்தான் நவீன் பின் எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுத்தான் அன்று மாலை முழுவதும் ஆன பரபரப்பில் அவனும் அசந்து போய் உறங்கலானான். சட்டென்று ஏதோ முனகல் சத்தம் கேட்டெழுந்து பார்த்தான். அருகில் படுத்திருந்த மிருதுளா தான் தூக்கத்தில் வலியில் முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள்.  

நவீனுக்கு என்ன செய்ய வேண்டும் என அறியாது எழுந்து அமர்ந்துக்கொண்டு அவளயே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வலியில் ரொம்ப முனக ஆரம்பித்ததும் உடனே டாக்டர் சொன்ன அந்த பேயின் கில்லர் மாத்திரையை வலி வரும்போதெல்லாம் கொடுக்கச்சொன்னது நியாபகம் வர அதை எடுத்து மெல்ல மிருதுளாவை எழுப்பி கொடுத்தான். அந்த மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் முனகல் நின்றது. அவளின் முனகல் நின்று அவள் நன்றாக மீண்டும் உறங்க ஆரம்பித்த பின்னரே நவீனும் உறங்கினான்.

காலை விடிந்தது. இரவு முழுவதும் சரியாக தூங்காததால் இருவரும் அசந்து தூங்கிப்போனார்கள். வெளிச்சம் கண்ணில் பட சட்டென கைகளில் இருந்த காயங்களை மறந்து கைகளை தரையில் ஊன்றி எழ முயன்று”  “அம்மாஎன்று சொல்லிக்கொண்டே கைகளை தரையிலிருந்து எடுத்தாள் மிருதுளா. இதைக்கேட்டெழுந்தான் நவீன்…

என்ன ஆச்சு மிருது!! ஏன் கத்தின?”

ஒன்னுமில்லை அடிப்பட்டதை மறந்து கையை தரையில் ஊனிட்டேன் வலிச்சுது அதுதான் கத்தினேன். சரி டைம் ரொம்ப ஆயிடுத்துன்னு நினைக்கிறேன் எழுந்துண்டு, என்னையும் எழுப்பி விடுங்கோ

நவீன் மிருதுளாவை எழுப்பிவிட்டு இருவருமாக வெளியே வந்தனர். மிருதுளா ரம்யா சித்தியிடம்…

சாரி சித்தி ரொம்ப நேரம் தூங்கிட்டோம். டைம் என்ன ஆச்சு?”

பரவாயில்லை மா. மணி எட்டு தான் ஆச்சு. நீயே இப்படி அடிப்பட்டுண்டு படுத்திருக்க வலில எப்படி தூக்கம் வந்திருக்கும். எனக்கு அது கூட புரிஞ்சுக்க முடியாதம்மா. சரி புது டூத் பிரஷ் வச்சிருக்கேன் போய் பல் தேச்சுட்டு வாங்கோ காபி தரேன்

ஓகே சித்தி. எங்க வச்சுருக்கேங்கள்?”

அந்த வாஷ் பேஸன் ஷெல்ஃப்ல இருக்கு எடுத்துக்கோங்கோ

இருவரும் பல் துலக்கி முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி ஹாலுக்கு வந்தமர்ந்தனர். ரம்யா நான்கு கப் காபியுடன் வந்து நவீனுக்கும், மிருதுளாவுக்கும், தன் கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப் காபியுடன் அமர்ந்து…

நல்லா தூங்கினேங்களா?”

ஓ எஸ் ஆனா நடுவுல செம்மையா வலிச்சுது அப்போ நவீன் டாப்லெட் கொடுத்தார் அதை சாப்பிட்டதும் மறுபடியும் நல்லா தூங்கிட்டேன்

நிச்சயம் தூக்கத்துக்கு மாத்திரை கொடுத்திருப்பா. ஏன்னா இந்த மாதிரி அடிப்பட்டா தூக்கம் வராதுன்னுட்டு டாக்டருக்கு தெரியாதா

நவீன் அவன் சித்தப்பாவிடம் 

சித்தப்பா அந்த பணம் என்ன ஆச்சு? எனக்கு அது இப்போ கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும். அதை நம்பி தான் அடுத்த சம்பள நாள் வரை இருக்கணும்.

அது வரத்துக்கு இன்னும் இரண்டு வாரமெடுக்குமே. சரி இரு நான் பணம் தரேன் அது வந்ததும் அதை நானே வைத்துக்கொள்கிறேன் அதுக்காக இந்த ஃபார்ம் ல நீ கையெழுத்து போட்டுத் தந்திடு

நீங்க இந்த வாரத்துல வந்திடும்ன்னு சொன்னேங்களே…அதுனால தான் கேட்டேன் ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.

ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நடக்கலையே என்னச் செய்ய? சரி இந்தா பணம் அன்ட் ஃபார்ம்

என்று கொடுக்க அதை வாங்கிக்கொண்டு ஃப்ர்மில் கையெழுத்திட்டு கொடுத்தான் நவீன்.  

இவற்றைப் பார்த்த மிருதுளாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.ஏன் நவீன் எல்லோரிடமும் பணம் வாங்குகிறார் ??” அதைப் பற்றி வீட்டிற்கு சென்று நவீனிடம் கேட்டு தெரிந்துக்கொண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

இருடா டிஃபன் பண்ணிடறேன் சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ” 

ஓகே சித்தி

சித்தி நாங்க உடுத்திண்ட உங்க நைட்டீ அன்ட் சித்தப்பா வேஷ்டீ எல்லாத்தையும் நான் எடுத்துண்டு போய் தோச்சு வைக்கறேன் நீங்க எங்காத்துக்கு வரும்போதோ இல்லை நாங்க இங்க வரும்போதோ கொடுக்கறோம் சரியா

ஆமாம் சரிதான் போவியா…அதெல்லாம் அப்படியே அந்த வாஷிங் மெஷின் பக்கத்துல போடு போறும் போ…சரி நீ இந்த ரத்தக்கறை படிந்த புடவையை கட்டிண்டு போகாதே. என்னோட சல்வார் தரேன் அத போட்டுண்டு போ சரியா

சரி சித்தி

நவீனும் மிருதுளாவும் சித்தி சித்தப்பாவுடன் காலை டிஃபன் அருந்திவிட்டு கிளம்பினார்கள் அப்போது ரம்யா…

டேய் நவீன் பார்த்து பத்திரமா கூட்டிண்டு போடா. அடிக்கடி பின்னாடி மிருதுளா இருக்காளான்னு செக் பண்ணிக்கோ

ஓகே சித்தி நாங்க போயிட்டு வரோம்

மிருதுளாவிற்கு பைக்கைப் பார்த்ததும் ஒரு வித பயம் தொற்றியது. ஆனாலும் வீட்டிற்கு போக வேண்டுமே என்றெண்ணி ஏறி ஒரு புறமாக அமர்ந்தாள். அதைப்பார்த்த நவீன்…

மிருது ப்ளீஸ் இரண்டு பக்கமாக கால்களைப் போட்டு உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ அப்போ கீழே விழ மாட்ட

அவளும் தலையசைத்து அவ்வாறே செய்ய முற்பட்டபோது அவளின் காயங்கள் அதற்கு தடையாக இருக்க இரண்டு புறமாக கால்களைப்போட்டு உட்கார்ந்து இரண்டு புறமுமிருந்த கைப்பிடிகளை பிடித்துக் கொள்ள முயன்று வலியால் முடியாமல்கடவுளே பத்திரமாக எங்களை வீட்டில் சேர்த்து விடுஎன்று வேண்டிக் கொண்டே பயணிக்கலானாள்.

அன்றுமுதல் பைக் பயணம் மிருதுளாவிற்கு பயப் பயணமானது. அந்த பயம் அவளைவிட்டு நீங்க சில நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள் ஆகலாம்.

தொடரும் …..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s