அத்தியாயம் 2  பெண் பார்க்கும் படலம்

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகைவெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s