அத்தியாயம் -16: புதிய பயணம்

ஊருக்கு செல்ல விடியற்காலையில் எழுந்து தயார் ஆகி, கொண்டு செல்ல வேண்டிய பெட்டிகள் அனைத்தையும் மாடியிலிருந்து கீழே எடுத்து வந்து வைத்துவிட்டு, ஈஸ்வரன் பர்வதம் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர் நவீனும் மிருதுளாவும். ராமானுஜம்அம்புஜம் மற்றும் வேனு(காலேஜ் காக்கி யூனிஃபார்மில்) காரில் வந்திறங்கினர்.

அவர்களைப்பார்த்த மிருதுளா…

என்னடா வேனு உன் லாப் டிரஸ்லயே வந்திருக்க?”

ஆமாம் மிருதுக்கா உன்னை டிரெயின் ஏத்திட்டு அப்படியே காலேஜ் போகனும். சரி சரி நான் போய் அந்த பெட்டி எல்லாத்தையும் கார்ல ஏத்தட்டும்

வேனுவும் பவினுமாக பெட்டிகளை காரின் மேலே வைத்து கட்டினார்கள். 

அம்புஜம் காரிலிருந்து ஒரு பெரிய பை முழுவதும் மாங்காயும் ஒரு பை முழுவதும் தேங்காயும் கொண்டு வந்து பர்வதத்திடம் கொடுத்து…

இந்தாங்கோ மாமி இந்த தேங்காய், மாங்காய் எல்லாமும் எங்காத்துல காச்சது. நேத்து பறிச்சோம் சரி உங்களுக்கும் உங்க மச்சினர் பொண்ணுக்கும்னு நாலு பை ல போட்டு எடுத்துண்டு வந்தோம். இது உங்களோடது.

இவ்வளவும் மா!!! இதே மாதிரியா மீணு ஆத்துக்கும் கொண்டுவந்திருக்கேங்கள்?”

ஆமாம் மாமி இதே மாதிரி ரெண்டு பை தான் அவா ஆத்துக்கும் எடுத்துண்டு வந்திருக்கோம்

அவா ஆத்துல மீணு அவ ஆத்துக்காரர் சேகரன், பொண்ணு லீலா மட்டும் தான் இருக்கா அவாளுக்கு இவ்வளவெல்லாம் தேவையில்லை

அப்படியா சரி இருங்கோ …டேய் வேனு அந்த இரண்டு பையையும் எடுத்துண்டு வா

இந்தாங்கோ மாமி இதுதான் அவாளுக்குன்னு எடுத்துண்டு வந்தது. இதுல எவ்வளவு அவாளுக்கு குடுக்கணுமோ அதை மட்டும் எடுத்துக்கோங்கோ மீதியை நீங்களே வச்சுக்கோங்கோ

என்று இரண்டு பைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதிலிருந்து நாலே நாலு மாங்காய் நாலு தேங்காயை மட்டும் ஒரு பையில் போட்டு அம்புஜத்திடம் கொடுத்து..

இத அவாளுக்கு குடுங்கோ போதும்

இது போதுமா !!! சரி அப்படியே ஆகட்டும் மாமிஎன்று அம்புஜம் அதை வாங்கி காரில் வைக்கச்சொல்லி வேனுவிடம் கொடுத்தனுப்பினாள்.

அவ்வளவு குடுத்தும் அந்த பர்வதத்திற்கு மற்றவர்களுக்கு குடுக்க கை வராததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் அது தான் அவள் சுபாவம். எல்லாரும் எல்லாமும் தனக்கு செய்ய வேண்டும் தர வேண்டும் ஆனால் அவள் யாருக்கும் எதுவும் செய்யவும்மாட்டாள் குடுக்கவும்மாட்டாள். அப்படி ஒரு பாலிசியை கடைப்பிடித்து வரும் உத்தமி ஆச்சே.

 எல்லாரும் ரெடி ஆனதும் ஈஸ்வரன்…

சரி எல்லாம் எடுத்துண்டாச்சா நவீன்?”

எஸ் எல்லாம் எடுத்தாச்சு

அப்போ எல்லாரும் கிளம்பலாமா?”

சரி நீங்க எல்லாரும் கார்ல வாங்கோ நாங்க டிரெயின் ல வரோம். நீங்க நேரா நம்ம பெரியப்பா பொண்ணு மீணு ஆத்துக்கு போயிடுங்கோ நாங்களும் அங்கு வந்திடறோம். சரியா

ஓகே டன்

என்னதான் சாப்பாடு கட்டிக்கொள்ள வேண்டாமென்று பர்வதம் சொன்னாலும் அம்புஜம் அனைவருக்கும் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், துவயல், அப்பளம் வடாம் எல்லாம் கட்டிக்கொண்டு வந்திருந்தாள்‌. மிருதுளாவிடம்  மூன்று சாப்பாடு பார்சலை டிரெயினில் சாப்பிடுவதற்காக கொடுத்தாள். ஏனெனில் அவர்கள் சென்னை சேரும் போது மதியம் இரண்டரை மணி ஆகிவிடும். மிருதுளா தன் அம்மாவிடம்..

தாங்க்ஸ் மா

என்னத்துக்கு இப்போ தாங்க்ஸ் எல்லாம். சரி சரி நீங்க ரெண்டு பேரும் அந்த கார்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்புங்கோ. நாங்க இந்த கார்ல பின்னாடியே நம்ம வேனுவ பஸ் ஸ்டாப் ல விட்டுட்டு ஸ்டேஷன் வரோம்.

அந்த வீட்டிற்கு வெளியே வந்ததும் அப்பாடா என மிருதுளா மனதிற்குள் ஒரு வினாடி தோன்றியது ஆனால் போக இருக்கும் இடம் எப்படியோ என்னவோ!! நவீனை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவும் இல்லை. அவன் எப்படி தன்னை பார்த்துப்பானோ!!! என்ற எண்ணங்களுடன் காரில் ஏறினாள், அவள் பின்னாலேயே நவீனும் ஏறினான். கார் ஸ்டேஷனை நோக்கி பயணிக்க தொடங்கியது. எல்லா கல்யாணமான பெண்களுக்குள்ளும் இருக்கும் பரிதவிப்பு மிருதுளாவையும் தொற்றிக்கொண்டது. 

ஸ்டேஷன் வந்ததும் காரிலிருந்து இறங்கி ஒரே ஒரு கைபையுடன் அவர்கள் ரெயில் நிற்கும் பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தனர். மற்ற அனைவரும் பின்னாலேயே வந்து சேர்ந்தனர். வேனுவும் அவர்களுடன் வந்திருப்பதைப்பார்த்த மிருதுளா…

டேய் வேனு நீ காலேஜுக்கு போகலையா இங்க வந்திருக்க?”

இல்ல அக்கா எனக்கும் சென்னை வந்து உன்னை வழியனுப்பனும்முன்னு ஆசையா இருக்கு அதுதான் வந்துட்டேன்

கார்ல இடமிருக்கா நீங்க எல்லாருமா வரத்துக்கு?”

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம் இதோ டிரெயின் வந்துடுத்து நீங்க ஏறுங்கோ. சென்னையில் பார்ப்போம்

நவீனும் மிருதுளாவும் டிரெயினில் ஏறியதும் மற்ற அனைவரும் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். டிரெயினும் கிளம்பியது. சென்னைப் போய் சேர ஐந்து மணிநேரமாகும் என்று நவீன் சொல்ல …

ஐந்து மணி நேரமா. அதுவரைக்கும் என்ன செய்ய போர் அடிக்குமே

இதோ இந்த புத்தகத்தைப்படிச்சு முடிக்கவும் சென்னை வரவும் சரியா இருக்கும் தெரியுமா? நான் ஒவ்வொரு முறை வரும்போதும் இதைத்தான் செய்வேன்

ஆனா எனக்கு புக்கு படிக்கும் பழக்கம் இல்லையே” 

என்று கூறிக்கொண்டே ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தவள் உறங்கிப்போனாள். சில மணி நேரமானதும் அவளை எழுப்பினான் நவீன். அவளும் எழுந்தாள் மணியைப் பார்த்தாள் மணி ஒன்று என காட்டியது…

ஓ!! நல்லா தூங்கிட்டேன்

ஆமாம் அதனால தான் உன்னை தொந்தரவு செய்யலை. ஆனா எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுத்து. அதே மாதிரி உனக்கும் பசிக்குமேனுட்டு தான் எழுப்பினேன். உனக்கு சாப்பிட என்ன வாங்கிண்டு வரட்டும்?”

ஆமாம் எனக்கும் பசிக்கறது. என்னத்துக்கு வாங்கணும்? என் அம்மா நம்மளுக்கு சாப்பாடு கட்டிக்குடுத்திருக்காளே. அந்த பையை மேலிருந்து எடுங்கோ.

ஓ அப்படியா!!! இந்தா பையைப் பிடி. என்ன குடுத்தனுப்பிருக்கா?”

இந்தாங்கோ உங்களுக்கு இரண்டு பொட்டலம். ஒன்னு எலுமிச்சை சாதம் இன்னொன்னு தயிர் சாதம். இதோ வடாமும் தந்திருக்கா. இது எனக்கு.

உனக்கு ஏன் ஒரு பொட்டலம் தான்?”

நான் தயிர் சாதம் சாப்பிட மாட்டேன். எனக்கு தயிர், மோர் பிடிக்காது

ஓ !!! அப்போ நீ தயிர் சாதமோ மோர் சாதமோ சாப்பிட்டதே இல்லையா? அது எப்படி முடியும்” 

இல்லை நான் சாப்பிட்டதே இல்லை. அது அப்படி தான். சும்மா பேசாம சாப்பிடுங்கோ. எப்படி இருக்கு

சூப்பரா இருக்கு. லெமென் ரைஸும் தயிர் சாதமும் ரெண்டுமே சூப்பரோ சூப்பர் மிருது.

என் அம்மா நல்லா சமைப்பா. என் அப்பாவும் நல்லா சமைப்பா.

எனக்கெல்லாம் சாப்பிட மட்டும் தான் தெரியும் பா. ஹா! ஹா! ஹா!

சரி நான் கையை அலம்பிட்டு வரேன்

இருவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது மிருதுளாவிற்கு முன்தினம் இரவு நவீன் தன் அப்பாவிடம் காசு கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று தனக்குள்ளேயே மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கையில்…

மிருது மிருது ஹேய் மிருதுளாஎன்று நவீன் கூப்பிட்டது காதில் விழ

என்ன …என்ன சொன்னேங்கள் நவீன்

சரியா போச்சுப் போ அப்போ இவ்வளவு நேரமா நான் பேசினது எதுவுமே நீ கேட்காம அப்படி என்னத்த யோசிச்சுண்டிருக்க?”

அது ஒன்னுமில்லை எப்போ சென்னை வரும்ன்னுட்டு தான் நினைச்சுண்டிருந்தேன்

இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவோம். அங்கேருந்து மீணு ஆத்துக்கு எலக்ட்ரிக் டிரெயின் பிடிச்சு போகணும். சரி என் பின்னாடியே வா சரியா

சரி சரி நீங்க போங்கோ நான் வரேன்

இருவரும் இறங்கி எலக்ட்ரிக் டிரெயினில் ஏறினார்கள். மிருதுளாவிற்கு எலக்ட்ரிக் டிரெயினில்  ஏறியதும் அலைப்பாயுதே படத்தில் வரும் மாதவன் நடித்த சீன் ஞாபகம் வர உடனே சிரித்தாள். அதைப்பார்த்த நவீன் 

ஏன் சிரிச்ச என்ன ஆச்சு

ஒன்றுமில்லை ஒன்ன நினைச்சேன் சிரிப்பு வந்ததுஎன்று புன்னகைத்தாள்.

சரி நாம இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தாச்சு வா வா சீக்கிரம் வா

அதுக்குள்ளேயே வந்தாச்சா? இதோ வந்துண்டே இருக்கேன்

வெளியே வந்ததும் இருவரும் ஆட்டோவில் ஏறி மீணு வீட்டைச் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னால் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் தம்பிகள் அங்கிருந்தனர். மீணுவும், சேகரனும் …

வா வா நவீன். வாம்மா மிருதுளா. வாங்கோ வாங்கோஎன்றழைத்தனர்

பின் அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் மீணு உள்ளே ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தாள். மிருதுளா உள்ளே போய்…

அக்கா என்ன பண்ணறேங்கள்?”

உங்களுக்கு தான் சப்பாத்தியும் தக்காளித்தொக்கும் பண்ணிட்டிருக்கேன்

எங்களுக்கா எதுக்குக்கா?”

நல்லா கேட்டயே!! நீங்க ஊருக்கு போய் சேர இரண்டு நாள் ஆகுமாம் அதுவரைக்கும் சாப்பிட எதுவும் வேண்டாமா அதுக்குத்தான் செய்யறேன்

ஓ அப்படியா!! ரொம்ப தாங்க்ஸ் அக்கா

என்னத்த பேசறேங்கள் தம்பி பொண்டாட்டியும் நாத்தனாருமா?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள் பர்வதம்.

ஒன்னுமில்லை சித்தி நம்ம மிருதுளா நான் என்ன செஞ்சிண்டிருக்கேன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லிண்டே இருந்தேன் நீங்க வந்துட்டேங்கள்

ஓ சரி சரி சரி நான் பாத்ரூம் போயிட்டு வரேன்

சரி சித்தி. ஓகே மிருதுளா இதுக்கு மேலே நாம ரெண்டு பேரும் பேசிண்டிருந்தா அவ்வளவு தான் சித்தி ஏதாவது தப்பா எடுத்துப்பா அதனால நீ போய் அவா கூட உட்கார்ந்துக்கோ போ

ஏன்க்கா நான் உங்களோட பேசறதுல  என்னத்த தப்பா எடுக்க இருக்கு?” நாமளும் எதுவும் தப்பா பேசலையே!

அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது மிருதுளா. சித்தி நிச்சயம் தப்பாதான் எடுத்துப்பா. எனக்கு தெரியும். எதுக்கு வீணா அதுக்கு இடம் கொடுக்கணும். வேண்டாம்மா நீ போய் அங்க உட்கார்ந்துக்கோ. இதோ என் வேலைகளும் ஆயாச்சு பின்னாடியே நானும் வரேன். போம்மா போ.

சரி அக்காஎன்று ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா.

இரவு டிஃபன் அனைவருமாக அமர்ந்து அருந்தினார்கள். பின்பு நவீனும் மிருதுளாவும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பினார்கள். ஒரு கார் வரவழைத்தனர் பின் அனைவருமாக இரண்டு காரில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தனர். நவீன் மிருதுளா செல்ல வேண்டி டிரெயின் பிளாட்பாரத்தில் நின்றுக்கொண்டிருந்தது. வேனுவும் பவினும் அனைத்துப்பெட்டிகளையும் டிரெயினில் ஏற்றினார்கள் பின் நவீன்

 “அனைவருக்கும் பை சொல்லிட்டு வண்டில ஏறு மிருதுஎன்றான்

அதை கேட்டதும் மிருதுளாவிற்கு அழுகை வந்தது. அதுவரை ஏதோ தனது பெற்றோர் தம்பி அனைவரும் கிட்டத்தில் தானே இருக்கிறார்கள் என்றிருந்தவள்  இப்பொழுது அவர்களைப் பிரிந்து ரொம்ப தூரம் போக போகிறாள் என்பதை உணர்ந்தாள். அவளால் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் முடியாமல் அழுதாள். அதைப்பார்த்த அம்புஜமும் அழ ஆரம்பித்தாள். உடனே பர்வதம்…

என்னதிது கல்யாணமாகி அவ புருஷன் கூட தானே போறா! நாங்க எங்களோட இருக்க சொல்லியும் போகத்தான் வேணும்ன்னு அடம் பிடிச்சு கிளம்பினா!!! அப்புறம் என்னத்துக்கு இப்படி மாறி மாறி அழறேங்கள். எங்க நவீனும் தான் போறான் அதுக்கு என்ன நாங்க எல்லாரும் அழறோமா என்ன?”

அம்புஜம் சுதாரித்துக்கொண்டு மிருதுளாவை சமாதானம் செய்து நவீனிடம்…

எங்க பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்கோ. உங்களை நம்பித்தான் அத்தர தூரம் அனுப்பறோம். அவளை நல்லப்படியா பாத்துக்கோங்கோ.

நீங்க கவலைப்படாதீங்கோ. அதெல்லாம் அவா பார்த்துப்பா. மொதல்ல நீங்க அழறத நிப்பாட்டுங்கோஎன்றார் ஈஸ்வரன்

வேனு தனது அம்மாவின் தோளில் கையைப்போட்டு தட்டிக்கொடுத்தான். 

மிருதுளா டிரெயின் கிளம்பப்போறது ஏறு சீக்கிரம்என்றான் நவீன்.

அம்மா அப்பா வேனு நான் போயிட்டு வரேன்.

போயிட்டு லெட்டர் போடுமா மிருது. பொறுமையா இருமா. எதுவானாலும் அனுசரிச்சு போமா. மாப்ள மிருது வ பத்திரமா பார்த்துக்கோங்கோ”  என்று டிரெயின் மெல்ல நகர ஆரம்பித்தும் அது கூடவே நடந்தும் மெல்ல ஓடியும் கூறிக்கொண்டே சென்றனர் மிருதுளாவின் அம்மாவும் அப்பாவும், வேனுவும்.  சிறிது நேரத்தில் டிரெயின் அவர்கள் கண்களில் இருந்து மறைந்து போனது. 

மிருதுளா ஜன்னல் வழியாக அழுதுகொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள். நவீன் அவள் கண்களைத் துடைக்கச் சொன்னான். பின் அவளிடம் பேச்சுக்கொடுத்து சற்று சமாதானப்படுத்தினான்.

வேனு அவன் அம்மாவை அணைத்துப்பிடித்துக்கொண்டு சமாதானம் படுத்திக்கொண்டே அனைவருமாக காரில் ஏறி ஊருக்குப்புறப்பட்டனர். 

மிருதுளா தனது வாழ்வின் அடுத்த முக்கிய அத்தியாயத்தை நோக்கி ஒரு புதிய பயணத்திற்கு புறப்பட்டு விட்டாள். அவளுக்கு அடுத்தடுத்து என்னென்ன காத்திருக்கிறது! என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வரும் வாரங்களில் படித்து தெரிந்துக்கொள்வோம். 

நம்ம மிருதளாவையும் நவீனையும் குஜராத்துக்கு வழியனுப்ப ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்திருந்தமிருதுளா என்ன ஆனாள்?” வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் செவ்வாய் முதல் அனைவரும் குஜராத்தில் நமது பயணத்தை மேற்கொள்வோம் வாருங்கள் என அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்….. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s