அத்தியாயம் – 11: பிச்சுமணி வீட்டு விருந்து

நவீனும் மிருதுளாவும் ஒருவழியாக வெளியே சென்றனர். முதலில் இருவரும் ஜோடியாக வெளிய செல்வதால் பிள்ளையாரை தரிசித்து பின்பு செல்லலாமா என மிருதுளா நவீனை கேட்டாள். இருவரும் உச்சிப்பிள்ளையாரை தரிசித்த பின்  பிச்சுமணி மாமா வேலை பார்க்கும் பாங்கிற்கு சென்றனர். பாங்க் வாசலில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பிச்சுமணி இவர்கள் வருவதை பார்த்ததும் ..

வாங்கோ வாங்கோ நவீன் அன்ட் மிருதுளா. வெல்கம். என்ன லாக்கர் விஷயம் தானே. வாங்கோ உள்ளே போகலாம்

ஆமாம் மாமா அதற்கே தான் வந்திருக்கோம். அப்படியே உங்க ஆத்துக்கும் ஒரு எட்டு போயி மாமிக்கும் ஒரு ஹாய் சொல்லலாம்னு …மாமி ஆத்துல இருக்காளோனோ!!!!

ஓ தாராளமா போயிட்டு வாங்கோ. அம்பிகா ஆத்துல தான் இருக்கா. ஐ வில் ஜாயின் யூ ஃபார் லஞ்ச். இங்கே ஒரு ஸிக்னேச்சர் போடு. ஜாயின்ட் அக்கௌன்ட் தானே !!!

ஆமாம் மாமா ஜாயின்ட் தான் …இனி எல்லாமே ஜாயின்ட் தான்

தட்ஸ் குட் ரா. ஐ லைக் தி வே யூ செட். சரி அப்போ மிருதுளா நீயும் இங்க ஒரு சைன் பண்ணுமா

சரி மாமா

ஓகே தென் ஆல் ஃபார்மாலிடீஸ்  ஓவர். லெட் மி ஷோ யுவர் லாக்கர். இந்தாமா இது உங்களோட லாக்கர் கீ. பத்திரமா வச்சுக்கோ. எஸ் ஹியர் வி ஆர். இதுதான் உங்க லாக்கர். மிருதுளா அந்த சாவியை தா. இப்படி என்னிடமுள்ள சாவியையும் உங்கள்ட்ட இருக்குற சாவியையும் ஒன்னா போட்டாதான் திறக்க முடியும். ஸோ நீங்க ஒவ்வொரு தடவ வரும்போதும் சாவியை மறக்காம எடுத்துண்டு வரனும். ஓகே. சரி இனி என்னென்ன வைக்கனுமோ வச்சுட்டு மறக்காம லாக் பண்ணிட்டு வாங்கோ

அப்போ உங்க கீ மாமா. அத எடுத்துண்டு போரேளே

ஹா !ஹா! ஹா! லாக் பண்ண உன்னிடம் இருக்கும் கீ மட்டும் போதும் மிருதுளா.

ஓ !!! ஓகே மாமா

சரி முடிச்சுட்டு ஆத்துக்கு போங்கோ நான் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ண வெளியே போயிட்டு அப்படியே ஆத்துக்கு வந்துடரேன். ஐ வில் கோ இன் மை ஆஃபிஸ் கார். நீங்க என்னோட ஸ்கூட்டர் எடுத்துண்டு போங்கோ” 

என்று கூறி அவரது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நவீனும் மிருதுளாவும் நகைகள், வெள்ளி பாத்திரங்கள் என அனைத்தையும் லாக்கரில் வைத்துவிட்டு நவீன் மாமாவின் பஜாஜ் ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப்பார்த்த அம்பிகா உள்ளேயிருந்து ஓடி வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றாள். 

வாடா நவீன். வாம்மா மிருதுளா. உள்ள வாங்கோ. எப்படி உன் மாமா ஸ்கூட்டர் உங்ககிட்ட !!!

வந்துன்டே இருக்கோம் மாமி. ரொம்ப யோசிக்காதீங்கோ. நாங்க அவர பாங்க்ல லாக்கர் விஷயமா  பார்த்துட்டுதான் வரோம். அவர்தான் ஸ்கூட்டரை எடுத்துண்டு போகச்சொன்னார் மாமி.

ஓ !!! அப்படியா!!! அதுதானே காலைல அவர் ஸ்கூட்டர்ல தானே பாங்க் போனார் என்னடா இவா அதுல வராலேன்னுட்டு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் அவ்வளவு தான். அச்சோ விட்டா  நான் பேசிண்டே இருப்பேன். கொழந்தகள் மொதோ மொதோ தம்பதிகளா ஆத்துக்கு வந்துருக்கேங்கள் ஏதாவது குடிக்க தரண்டாமோ அத விட்டுட்டு ஸ்கூட்டர் புராணம் பாடறேன் பாரேன்…இந்தா எடுத்துக்கோமா லெமென் ஜூஸ். இந்தாடா உனக்கும் ” 

தாங்க்ஸ் மாமி

என்னதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லர மா? கையிலேயே வச்சிண்டு இருக்கேங்கள் குடிங்கோ ரெண்டு பேரும்

என்ன மிருதுளா கல்யாண வாழ்க்கை எப்படி ஆரம்பிச்சிருக்கு?”

மிருதுளா மனதிற்குள் காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் சட்டென்று வந்து போனாலும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்தாள்.

ஓ! நன்னா ஆரம்பிச்சிருக்கு மாமி.

அப்படியா!!! அப்படி போடு

ஏன் மாமி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா

நீ ஏதும் தப்பா சொல்லலமா. நல்ல மாட்டுப்பொண்ணா சொல்லற. பார்ப்போம் போக போக தெரியும். டேய் நவீன் உனக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்ல பொண்ணா கிடச்சிருக்கா நம்ம மிருது. நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும் டா.

டன் மாமி. மாமி பேச்சுக்கு நோ அப்பீல் அட் ஆல்.

போடா உனக்கு எப்பவும் விளையாட்டு தான். மிருதுளா …நவீன் அவனோட செவென்த் ஸ்டான்டர்டை இங்கே இருந்து தான் படிச்சான். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். என் மாமியார் பயங்கரி அவா என் மேல சுட சுட பாலை உத்தினதிலிருந்து எல்லாமே அவனுக்கு தெரியும் எல்லாத்தையும் அவன் நேரிலே பார்த்திருக்கான். அவா பொண்ணு தான் இப்போ உன் மாமியார் அதனாலதான் அவன்ட்ட உன்ன பத்திரமா பார்த்துக்க சொன்னேன். நான் பட்டதே போரும்மா. எனக்கு ஒரு மாமியார் இல்லை நாலு பேர்…என்ன யோசிக்கறாய் என் நாத்தனார்களையும் சேர்த்து தான் சொல்லரேன்…அதிலும் உன் மாமியார் என்னையும் என் புருஷனையும் மனதளவில் பிரிச்சுட்டானுதான் சொல்லுவேன் …ஏதோ கல்யாணம் பண்ணின்டதால கூட இருக்கார் அவ்வளவுதான்..சரி சரி என் கஷ்டம் என்னோடயே போகட்டும். சாப்பிடலாமா எல்லாத்தையும் எடுத்து வைக்கட்டுமா?”

இல்ல மாமி மாமா வந்துடட்டும் எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்

சாப்பிட வரேன்னு சொன்னாரா?”

ஆமாம் மாமி சொனார். அதோ அவரே வந்துட்டார்

சரி அப்போ இலையை போட்டு வைக்கறேன் நீங்க ரெண்டு பேரும் கை கால் அலம்பிட்டு வாங்கோ

சரி மாமி

என்று உள்ளே சென்று கை கால்களை அலம்பி விட்டு விருந்து சாப்பிட வந்து அமர்ந்தான் நவீன். பிச்சுமணியும் அமர்ந்திருந்தார். மிருதுளாவிற்கும் நவீன் பக்கத்தில் இலைப் போட்டிருந்தாள் அம்பிகா ஆனால் மிருதுளா தான் மாமிக்கு பரிமாறுவதில் உதவி செய்துவிட்டு பின் மாமியுடன் சேர்ந்து சாப்பிடுவதாக கூறினாள் அதற்கு அம்பிகா…

ஏய் மிருது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் நவீன் கிட்ட உட்காரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அடுத்த தடவை வரும்போது நீயே பரிமாறு நான் உன்ன தடுக்க மாட்டேன் இப்போ அங்க போய் உட்கார்ந்துண்டு சமத்தா சாப்பிடு போ.

மிருதுளா சென்று நவீன் பக்கத்தில் அமர்ந்து மூவருமாக உணவருந்திய பின் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு மாமிக்கு பரிமாறினாள். நவீனும் பிச்சுமணியும் ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே அம்பிகா மிருதுளாவோடு பேசினாள். 

உன் மாமியார் என்னையும் உங்க மாமாவையும் கல்யாணமான புதுசுல இப்படி தனியா எங்கயுமே விடமாட்டா எப்பப்பார்த்தாலும் தம்பி தம்பி னுட்டு கூடவே தான் வருவாள். அப்போ அவா எல்லாருமே இங்க தானே இருந்தா. உனக்கு உங்க மாமனார் எப்படி இருந்தார் ன்னுட்டு எல்லாம் தெரியுமோல்யோ…அந்த சமயத்துல இங்க தான் இருந்தா நாங்க தான் பார்த்துண்டோம். அவளுக்கு கல்யாணமாகி நாலு புள்ளகள பெத்துட்டா ஆனாலும் என்ன என் புருஷன் கூட பேச விட மாட்டா அப்படியே எங்க ரூமுக்குள்ள பேச ஆரம்பிச்சாலும் கழுகுக்கு மூக்கு வெசர்க்கறா மாதிரி எங்கிருந்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் உள்ள வந்து தம்பியை கூட்டிண்டு போயிடுவள்…இதனாலயே எனக்கும் உங்க மாமாக்கும் இடையில ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இன்னே வரைக்கும் இல்லாம போச்சு” 

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆனது அப்போ அம்பிகா பேசியதை கேட்ட பிச்சுமணி 

என்ன மிருதுளா கிட்டையும் உன் கதா காலட்சேபத்த ஆரம்பிச்சுட்டயா? உனக்கு என் அக்கா, அம்மா பத்தி குத்தம் சொல்லாட்டி நாள் முழுமையாகாதோ? மிருதுளா அவ கெடக்காமா நீ வா வந்து ஹால்ல உட்காரு  நான் விசிறி எடுத்துண்டு வரேன்

பார்த்தயாமா அவாள விட்டுக்கொடுக்காமா பேசறதை!!!! ஆனா பொண்டாட்டி னா மனுஷனுக்கு எவ்வளவு எலக்காரம் …பார்த்தயா ….இது தான் மாமியாரின் எஃபெக்ட். சரி இதுக்கு மேலே ஏதாவது சொன்னா அடி கூட கிடைக்கும். நீ போய் ஹால்ல உட்காரு நான் வரேன்

மிருதுளாவிற்கு என்ன சொல்வது எப்படி ரியாக்ட் செய்வது என்று ஒன்றும் புரியாமல் சென்று சேரில் அமர்ந்தாள். அம்பிகா சாப்பிட்டப்பின் வந்து ஹாலில் அமர்ந்தாள்..

நீங்க ரெண்டு பேரும் வேணும்னா அந்த ரூம்ல போய் செத்த நேரம் படுத்துக்கோங்கோடா

நோ மாமி நோ வே நாங்க கிளம்பறோம். நீங்க சாப்பிட்டுட்டு வரத்துக்காக வேயிட் பண்ணினோம். டைம் மூனு ஆச்சு.

ஏன்டா இருந்து சாயந்தரம் காபி குடிச்சுட்டு வெயில் தாழ கிளம்புங்கோ

இல்ல மாமா வி ஹாவ் டு கோ நவ். இப்ப கிளம்பினா தான் பஸ் பிடிச்சு ஆத்துக்கு ஒரு ஆறு மணிக்காவது போய் சேர முடியும். நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி விருந்து மாமி

என்னத்துக்கு தாங்ஸ் எல்லாம் போடா. இருங்கோ இதோ வரேன்

ஏன்னா இப்படி வந்து என்னோட சேர்ந்து இந்த புடவை வேஷ்டி யை கொழந்தைகளுக்கு குடுங்கோ

நீயே குடு டி. என்னத்துக்கு!!! சேர்ந்து தான் குடுக்கனுமாக்கும். அடி போடி..

மாமா போய் மாமி கூட சேர்ந்து நில்லுங்கோ நாங்க நமஸ்காரம் பண்ணனும்

ஏன்டா நீ வேற. சரி சரி உங்களுக்காக

நவீனும், மிருதுளாவும் மாமா மாமி கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து புடவை வேஷ்டியையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்தனர். நடந்து வருகையில் மிருதுளா நவீனைப்பார்த்து

ஏன் நவீன் உங்க மாமி சொன்னதெல்லாம் நிஜமா? உங்க பாட்டி அப்படியெல்லாம் செய்தாளா?”

ஆமாம் மிருது உண்மை தான் என் அம்மாவோட அம்மா கொஞ்சம் ரூட் அன்ட் பேராசைப் பிடிச்சவா. பிச்சுமணி மாமாவுக்கு மொதல்ல ஒரு இடத்துல பொண்ணு பார்த்து ஓகே பண்ணினா.  மாமாவும் அந்த பொண்ணை மனதார விரும்பி பழகிண்டிருந்தார் ஆனா அம்பிகா மாமி சம்மந்தம் வந்ததும் முன்னாடி பேசின சம்மந்தத்தை வேண்டாம்னுட்டா

ஏன் அப்படி செய்தா மாமாவுக்கு தான் அந்த பொண்ண பிடிச்சிருந்துதே!!

எல்லாம் பணத்தாசை னு தான் சொல்லனும். அம்பிகா மாமி அந்த மொதோ பார்த்த குடும்பத்தை விட வசதி ஆனவா அதனால அப்படியே பல்டி அடிச்சுட்டா. அதுக்கப்பறம் என்னென்னவோ நடந்தது. கடைசில அம்பிகா மாமியையும் நிம்மதியா வாழ விடலை என் பாட்டி. அப்போ நான் நினைச்சுக்குவேன் மொதோ எங்க மாமாவுக்கு பார்த்த பொண்ணு இந்த பாட்டிக்கிட்டயிருந்து  தப்பிச்சாடானு…என்ன பண்ண எல்லாம் அவா அவா  ஃபேட்

ஏன் நவீன் உங்க அம்மா செய்தது பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறேங்களே.

இதோ பஸ் வந்துடுத்து சீக்கிரம் வா. ஏறு இந்த பஸ் தான்

இருவரும் பஸ்ஸில் எறி அமர்ந்தார்கள். மிருதுளா மனதில் பல கேள்விகள் உதித்தது. 

அம்பிகா மாமி பேசியது சரியா? முதல் மதலில் அவா ஆத்துக்கு போயிருக்கோம் இப்படி அவா மாமியார் பத்தியும் என் மாமியார் பத்தியும் குத்தம் சொன்னது சரியா? பாவம் எவ்வளோ நாள் தான் மனதிலே பூட்டி வைத்திருக்க முடியும் அதுதான் கொட்டித் தீர்த்துட்டாளோ!!! நவீன் அவா பாட்டியை பத்தி கேட்டபோது அவ்வளவு டீட்டேய்லா சொன்னவர் ஏன் அவா அம்மாவ பத்தி கேட்ட போது சரியா பதில் சொல்லலை? ஏன் மழுப்பினார்? கல்யாணத்துக்கு முன்னாடியே என்னையும் நவீனையும் ஆறு மாசம் பிரிச்சு வைக்க திட்டம் போட்டவாளாச்சே!!! காலைல கூட ஒன்னுமில்லாத விஷயத்துக்கு அவ்வளவு பெரிய சண்டையை போட்டாளே!!! இதெல்லாம் வச்சுப்பார்த்தா அம்பிகா மாமி சொன்னதெல்லாம் சரின்னு தான் எனக்கு படரது. பார்ப்போம். அம்மா தாயே நீ தாம்மா துணை” 

என்று பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஒரு போராட்டமே நடத்திக்கொண்டிருக்கையிலே  சட்டென்று தன் முகத்தை உரசிக்கொண்டு ஒரு கை ஜன்னல் பக்கம் நீண்டது. சட்டென்று நெட்டினாள் மிருதுளா.  உடனே நவீன்

ஹேய் மிருது அது தான் நான் படிச்ச ஸ்கூல். ஏய் என்ன ஆச்சு எங்க இருக்க? ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போல?”

அதெல்லாம் ஒன்றுமில்லை நவீன். ஓ!! உங்க ஸ்கூலுக்கு நாங்க நிறய காம்படீஷன்ஸ்க்கு வந்துருக்கோம். நான் பேச்சுப்போட்டிக்கு வந்திருக்கேன்.

ஓ!! ஈஸ் இட்!!! அப்போ நாம அப்பவே மீட் பண்ணிருப்போமோ!!! பாரேன்!!! காட் டிசைட்ஸ் வென் வீ ஹாவ் டூ மீட் னு…இல்ல

எஸ் நவீன் எவரிதிங் ஹாப்பென்ஸ் ஆஸ் பெர் காட்ஸ் விஷ் அன்ட் ஐ பிலீவ் இட் ஈஸ் ஆல்வேஸ் ஃபார் அவர் குட் ஓன்லி. லெட்ஸ் ப்ரே டு காட் அன்ட் ஹோப் ஆல் ஈஸ் வெல்

ஹய் என்ன மிருது ஏன் சீரியஸா ஆகிட்ட? ஆல் இஸ் வெல் அன்ட் இட் வில் பி வெல் ஆல்வேஸ். நான் இருக்கேன். ஓகே

ஓகே” 

என்று புன்னகையித்தாள் மிருதுளா. 

பிச்சுமணி வீட்டு விருந்து மிருதுளாவின் மனதில் போராட்டத்தை உண்டாக்கியது. அவளுள் பல கேள்விகளை உதிக்கச்செய்தது.  வினாக்களுக்கு விடை கிடைக்குமா மிருதுளாவிற்கு? அதன் பதில்கள் அனுபவமாக கிடைக்குமா இல்லை பதிலாக மட்டும் இருக்குமா என்பதை பற்றி நாம் வரும் வெள்ளிக்கிழமை மேலும் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s