அத்தியாயம் 1 : ஜாதக பரிவர்த்தனை

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s