ஆயிரம் பொய்கள் சொல்ல
ஆயிரம் ஜென்மங்கள் வேண்டாம்
நமது வாழ்நாளே போதுமானது!
பொய்களில் உண்டு இருவகை
அதற்கான விதைகளோ பல வகை
தீமை இழைக்கும் பொய்
நன்மை பயக்கும் பொய்
தீமை இழைக்கும் பொய்களின் விதைகள் சுயநலம், பொறாமை, பேராசை, ஆணவம், அதிகாரம், தற்பெருமை, சோம்பல், புறம்பேசுதல், பாரபட்சம், வாக்குவாதம்…
நன்மை பயக்கும் பொய்களின் விதைகள் அன்பு, பாசம், ஒற்றுமை, பிறரை வாழ வைப்பது, சக மனிதர்களின் மகிழ்ச்சி, குடும்ப நலன்…
தீமை இழைக்கும் பொய் முடிவில்லாதது
நன்மை பயக்கும் பொய் சுபத்தில் முடிவது
தீமை இழைக்க சொன்ன பொய் நன்மையிலும்
நன்மை பயக்க சொன்ன பொய் தீமையிலும்
சிலநேரங்களில் நிலையெதிர் மாறாக மாறுவதும் உண்டு
மனம் துவண்டு போக வேண்டாம் அதை கண்டு
பொதுவான பொய் சொல்வதும் தவறு
பொதுவாக பொய் சொல்வதும் தவறு
ஆயிரம் ஆயிரம் பொய்களப்பா
அதை சற்று ஆராய்ந்து நல்லவைகளுக்காக சொன்னால் நல்லதப்பா
நன்றி🙏
நா. பார்வதி