ஃபோன் கால் பேசி முடித்ததும் நவீனின் வாடிய முகம் கண்டு
“ஏன் ரொம்ப சோகமா இருக்கேங்கள்?
என்ன ஆச்சு?”
“ம்… ஒண்ணுமில்லை!”
“உங்க வாய் தான் ஒண்ணுமில்லைனு சொல்லறது.
ஆனா உங்க முகம் ஏதோ இருக்குன்னு பளிச்சுன்னு சொல்லறதே!”
“ம்…அப்படியா?
அப்போ என் முகத்துக்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ.”
“சரி சரி எதுவாயிருந்தாலும் கவலைப் படாதீங்கோ.
நாம ரெண்டு பேருமா எவ்வளவு பார்த்தாச்சு லைஃப்ல.
ஜஸ்ட் டேக் இட் ஈஸி மை டியர் ஹஸுபண்டு.
நான் டின்னர் பண்ணபோறேன்”
“ம்…ம்ம்…என்ன நீ ஏன் என்னனு கேட்காமயே சமாதனம் பண்ணற…
டின்னர் பண்ண போறேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு அடுப்படிக்குள்ள போயிண்டேயிருக்க?”
“ஹலோ மிஸ்டர் நவீன் என்ன விளையாடறேளா?
நீங்க ஃபோன வச்சதுமே என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?
நீங்க சரியா பதில் சொல்லலை நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்க தொடங்கிட்டேன்.
இப்போ நான் டின்னர் பண்ணனுமா வேண்டாமா?”
“அது ரொம்ப முக்கியம்.
மனுஷன் இங்க டென்ஷன்ல இருக்கான்.
டின்னராம் டின்னர்.”
“ஓகே சார் ஜி.
உங்களோட இந்த டென்ஷனோட காரணம் என்னனு நானே சொல்லட்டுமா!”
“தெரியுமா?
எப்படி?
எப்போலேந்து மைன்ட் ரீடிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்ச?”
“ஆமாம்! இதுக்கு அதெல்லாம் வேற கத்துக்கணமாக்கும்.
என்னத்த?
எப்பவும் போல உங்க பொண்ணு கால் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டா.
உடனே டென்ஷன் ஆகிருப்பேங்கள்.
இதுதானே!
விடுங்கோப்பா.
அவ என்ன சின்ன குழந்தையா?
அவளுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும்.
அவளே எப்பவும் போல அப்பறமா கால் பண்ணுவா.
ஸோ வெயிட் பண்ணுங்கோ.”
“அதுக்கில்ல மிருது.
நான் மொபைலுக்கு கால் பண்ணினதும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்தது.
அவ ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்?
இது வரை அவ அப்படி பண்ணினதே இல்லையே!
அதுவுமில்லாம நான் அவ வீட்டு நம்பருக்கும் கால் பண்ணினேன் தெரியுமா!!
அங்கேயும் அவ இல்லன்னு ப்ளூ சொல்லித்து.”
“அச்சச்சோ நீங்க என்ன அபியும் நானும் பிகாஷ்ராஜ் மாதிரி ஆகிண்டிருக்கேங்கள்?
அவ எங்கயாவது ஃபிரண்ட்ஸோட போயிருப்பா!!”
“ம்…ஆமாம் ஆமாம்…
ப்ளூ சொல்லித்து அவ ஆஃபிஸுலேந்து நேரா பாரிஸ் போயிருக்காளாம்!”
“சரி போகட்டும்.
அங்க ஏதாவது வேல இருந்திருக்கும்.”
“ஆஃபிஸ் வேலை இல்ல மிருது.
அவ விஷாலோட பேரன்ட்ஸ் கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக போயிருக்காளாம்.”
“சரி பேசட்டுமே.
நமக்கு எப்படி விஷாலோட பேசணும்னு தோனறதோ அதே போல தானே அவாளுக்கும் நம்ம சக்தியோட பேச தோனிருக்கும்.
அதுதான் போயிருப்பா.”
“நாமளும் தான் அந்த பையன்ட்ட பேசணும்னு சொன்னோம்.
ஏன் நம்மளோட அவன இவ ஆத்துக்கு வரவச்சு பேசவச்சுட்டு…
அப்புறமா இவ அவாளோட பேச போயிருக்கலாமில்லையா?
அந்த பையன் எப்படி என்னனு நாம தெரிஞ்சுண்டதுக்கு அப்பறமா அவள் அங்க போயகருக்கலாம்ன்னு எனக்கு படறது.”
“ம்…ஹும்…
நீங்க பிரகாஷ் ராஜ்ஜே தான் போங்கோ.
அவ நம்ம பொண்ணு எப்போதும் தப்பான முடிவு எடுக்க மாட்டா.
கவலைப் படாதீங்கோ நவீ”
“அது சரிதான்.
போகட்டும் நான் வேண்டாங்கல.
நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்லையா.
அதுதான் எனக்கு வருத்தத்த தர்றது”
“நீங்க ஒரு வருத்தமும் படவேண்டிய அவசியமே இல்ல.
இருங்கோ நான் சூடா நாலு இட்லி எடுத்துண்டு வரேன்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி தொக்கு பண்ணிருக்கேன்.
சாப்டுட்டு மாத்திரைய போட்டுக்கோங்கோ.
சக்தி பத்தின கவலை உங்களுக்கு நேவையே இல்ல.
சரியா”
என்று நவீன் பதற்றமடையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மிருதுளா அவனை தேத்திவிட்டு அடுப்படிக்குள் டின்னர் செய்துக்கொண்டே மனதிற்குள்
“என்ன ஆச்சு?
ஏன் இந்த பொண்ணு மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா?
ஒரு வேள முன்ன நடந்தா மாதிரியே மொபைல தொலச்சிருப்பாளோ?
அப்படின்னா எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாளே!!
நவீன் சாப்டுட்டு தூங்கட்டும்.
அப்புறமா மறுபடியும் நான் அவளுக்கு கால் பண்ணிப் பாக்கறேன்.”
யோசித்துக் கொண்டே வேலையை செய்துக் கொண்டிருக்கையில் நவீன் ஹாலில் இருந்து
“என்னமோ டின்னர் பண்ணித்தரேன்னும்.
தக்காளி தொக்குன்னும் எல்லாம் சொன்ன?
ஆனா இன்னும் ஒண்ணும் வரலையே!
மிருது! மிருது!”
நவீனின் குரல் கேட்டதும் சட்டென்று தனது மகளைப் பற்றிய யோசனைகளிலிருந்து சுயநினைவுக்கு வந்த மிருதுளா கடகடவென தட்டில் இட்லியும் தயிரும் வைத்து எடுத்துச் சென்று நவீன் முன் வைத்தாள். அதைப் பார்த்த நவீன்
“உனக்கு என்ன ஆச்சு மிருது?”
“ம்..ஏன் கேட்கறேங்கள்?”
“இல்ல தக்காளி தொக்குன்னு சொல்லிட்டு இப்போ வெறும் தயிர் வச்சு கொண்டு வந்திருக்கயேன்னு கேட்டேன்.”
“ஓ! சாரி நவீ.
இருங்கோ தொக்கு கொண்டுண்டு வரேன்.”
என்று கூறி கொண்டு வந்து கொடுத்து, அவன் சாப்பிட்டதும் மாத்திரையையும் கொடுத்தாள். எப்போதும் மாத்திரையை போட்டுக்கொண்ட அரைமணிநேரத்தில் தூங்கும் நவீன் அன்று அவனது மனக்குழப்பதால் தூங்காமல் இருந்தான். அவன் தூங்கினப் பிறகு தான் சக்தியோட பேசி விஷயத்தை தெரிஞ்சுக்க முடியுமேன்னு காத்திருந்த மிருதுளா நவீனிடம்
“என்ன இன்னிக்கு தூங்காம உட்கார்ந்துண்டிருக்கேங்கள்?”
“தூக்கம் வர்றது.
ஆனா தூங்க என் மனசு விட மாட்டேங்கறது மிருது.
என்னமோ தெரியல மத்தியானத்துலேந்து எனக்கு சக்தி ஞாபகமாவே இருக்கு.”
“கவலைப் படாதீங்கோ நவீ.
அவ நேத்து நம்ம கூட நல்லா தானே பேசினா!
அப்புறமென்ன?
இன்னைக்கு அவ அவளோட வருங்கால மாமனார் மாமியாரோட பேச பேயிருக்கா.
அவ அந்த டென்ஷன்ல கூட ஃபோன எடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா”
“எடுக்காம இருந்தா ஓகே தான்.
ஆனா ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்னு தான் யோசனையா இருக்கு!”
“ம்….சுவிட்ச் ஆஃப் பண்ணலைன்னா நீங்களே அவள ரெண்டு மூணு தடவ தொந்தரவு செய்திருப்பேங்கள்.
உண்மையா இல்லையா.
சொல்லுங்கோ!”
“ம்…அப்படியும் இருக்கலாமோ!”
“இருக்கலாமோ என்ன அப்படித்தான் இருக்கும்.
அவ அவாளோட பேசிண்டிருக்கும் போது நீங்க கால் பண்ணினா அது அவ்வளவு சரியா இருக்காது நவீ.
புரிஞ்சுக்கோங்கோ.
அவ தான் அந்த பைனை நம்ம கூட வீடகயோ கால்ல பேச வைக்கறேன்னு சொல்லிருக்காளோனோ அப்புறம் ஏன் உங்களுக்கு அவசரம்.
எழுந்திரிங்கோ வாங்கோ போய் படுக்கலாம்.
இல்லாட்டி நாளைக்கு உங்களுக்கு முடியாம போயிடும்.
ம்…கிளம்புங்கோ நவீ”
“ஒரே ஒரு தடவ சக்திக்கு கால் பண்ணிப் பார்த்துடவா?”
“நவீ திஸ் ஈஸ் டூ மச்.
அவ சின்ன குழந்தைக் கிடையாது.
தயவுசெய்து வாங்கோ வந்து படுத்து தூங்குங்கோ.
காலையில அவளே கால் பண்ணி உங்க கூட பேசுவா.”
“ம்..சரி சரி… வரேன்.”
“ம்…படுங்கோ இதோ நான் வந்துடறேன்”
“நீ எங்க போற?”
“எனக்கு கிட்சன்ல கொஞ்சம் வேலையிருக்குப்பா.
அதை முடிச்சுட்டு வந்துடறேன்.
நீங்க தூங்குங்கோ.
லைட்ட ஆஃப் பண்ணறேன்.
சரியா.
குட் நைட் நவீ.
ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”
“குட் நைட் மிருது.”
என்று நவீனை தூங்குவதற்காக படுக்க வைத்துவிட்டு அவன அடுப்படியிலிருந்த வேலைகளை வேகவேகமாக முடித்து மெல்ல நவீன் உறங்கிக்கொண்டிருந்த அறையினுள் எட்டிப்பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும் வேகமாக தனது மொபைலை எடுத்து சக்திக்கு கால் செய்தாள். அப்போதும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வீட்டு நம்பருக்கு கால் செய்துப் பார்த்தாள். மீண்டும் ப்ளூவிடமிருந்து அதே பதில் தான் வந்தது.
மிருதுளாவும் நவீனைப் போலவே பதற்றமானாள். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த மிருதுளா உடனே சக்தியுடன் வேலை பார்க்கும் அவளின் சினேகிதி ருத்ராவுக்கு கால் செய்தாள்.
“ஹலோ ருத்ரா.
நான் சக்தியோட அம்மா பேசறேன் மா.
எப்படி இருக்கமா?”
“ஹாய் ஆன்டி.
நான் நல்லா இருக்கேன்.
நீங்க எப்படி இருக்கீங்க?
அங்கிள் எப்படி இருக்கார்?”
“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் மா.
தாங்க்ஸ்.
நான் வந்து உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா!!”
“எதுக்கு ஆன்டி.
ஏன் தயங்குறீங்க.
எதுவானாலும் செல்லுங்க ஆன்டி.
அங்கிளுக்கு மறுபடியும்…”
“ச்சே ச்சே…
அதெல்லாம் ஒண்ணுமில்லமா.
சாயந்தரத்துலேந்து சக்தி மொபைலுக்கு கால் பண்ணி பார்த்துண்டே இருக்கோம் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னே வர்றது மா.
அதுதான் உனக்கு அவ ஏதாவது ஃபோன் பண்ணினாளான்னு கேட்க தான் உன்னை நான் கால் பண்ணினேன் மா.”
“இல்ல ஆன்டி.
அவ எனக்கு எந்த காலும் பண்ணல.
மோரோவர் அவ அவளோட புது ஃபிரண்ட் யாரோ விஷாலாம் அவன் வீட்டுக்கு பாரிஸுக்கு போறதா சொல்லி காலையில பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பி ஆஃபீஸுக்கு ஹாஃப் டே லீவு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாளே!”
“ஆங் அத எங்ககிட்ட சொன்னாமா.
ஆனா அதுக்கப்பறமா தான் அவள கான்டாக்ட் பண்ண முடியலை.
அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு”
“ஒரு கவலையும் வேண்டாம்.
சில நேரங்கள் ல டவர் கிடைக்காது ஆன்டி.
அதுனாலையும் இருக்கலாம்.”
“ஆனா அவ இன்னேரத்துக்கு பாரிஸ் போய் சேர்ந்திருக்கணுமே மா!
ஆனா அவ ஏன் இன்னும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கா?”
“ஆன்டி அதுவும் நல்ல பாயின்ட் தான்…
ம்…”
“சரி மா.
உன்கிட்ட அவளோட அந்த பாரிஸ் ஃபிரண்ட் நம்பர் இருக்காமா?”
“சாரி ஆன்டி என்கிட்ட இல்லையே.
தீ என்கிட்ட அந்த பையனைப் பத்தி இன்னைக்கு காலையில தான் சொன்னா.
நானும் அவனை பார்த்ததில்ல.
நம்பர் எதுவும் இல்ல ஆன்டி.”
“ம்….அப்படியா!”
“ஆன்டி இப்போ உங்களுக்கு டைம் பதினொன்னு ஆகிருக்குமே!
டு நாட் வரி ஆன்டி.
அவளே கால் பண்ணுவா.
நானும் அவள கான்டாக்ட் பண்ண முயற்சிக்கறேன்.
கான்டாக்ட் பண்ணினா உடனே உங்களுக்கு ஃபோன் பண்ண சொல்லறேன்.
நீங்க போய் தூங்குங்க ஆன்டி.
ஒண்ணுமிருக்காது.”
“சரி மா.
நல்லது.
உன்னை தொந்தரவு செஞ்சதுக்கு ரொம்ப சாரிமா.”
“அய்யோ ஆன்டி.
எதுக்கு சாரி எல்லாம் சொல்லறேங்கள்.
என்னோட அப்பா அம்மாவும் என்னோட பேசமுடியலைன்னா சக்தியை தான் கால் பண்ணி கேட்பாங்க.
டோன்ட் வரி டூ மச் ஆன்டி.
அவளே உங்களுக்கு கால் பண்ணுவா பாருங்க.
ஏதாவது வேலையில ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பா…
அத மறுபடியும் சுவிட்ச் ஆன் பண்ண மறந்திருப்பா.
அவ்வளவு தான்.
இது மாதிரி நானே நிறைய தடவ பண்ணிருக்கேன் ஆன்டி.
ஸோ கவலைப் படாம போய் நிம்மதியா தூங்குங்க ஆன்டி.”
“சரி மா.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் ருத்ரா.
நான் வச்சுடறேன்.
பை”
“ம்…பல ஆன்டி.
குட் நைட் அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் ஆன்டி.
பை பை.”
என்று மொபைலை ஆஃப் செய்தும் மொபைலயே வெறித்துப் பார்த்துக்கொண்டே கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மிருதுளா.
சட்டென மேலே முகத்தை தூக்கியவள் அதிர்ந்துப் போனாள். ஏனெனில் அவள் அமர்ந்து ருத்ராவுடன் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அறையின் கதவில் சாயந்தபடி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தான் நவீன். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவளின் கண்களைத் துடைத்துக் கொண்டு
“நீங்க எப்போ வந்தேங்கள்?
தூங்கலையா?”
“நம்ம சக்திக்கு என்ன ஆச்சு மிருது? உண்மைய சொல்லு மிருது!”
“அய்யோ!
அவளுக்கு என்ன ஆகிடப் போறது நவீ.
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.
வாங்கோ நாம போய் படுத்துண்டு தூங்கலாம்.”
“இல்ல இல்ல…
சம்திங் ராங்.
நீ இப்போ அவளோட ஃபிரண்ட் ருத்ரா கிட்ட தானே பேசிண்டிருந்த?
அப்படின்னா அவளோட மொபைல் இன்னமும் சாவிட்ச் ஆஃப்ல தானே இருக்கு!
எங்க நம்ம பொண்ணு சக்தி மிருது?”
“நவீ…நவீ…நவீ!!
நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாலை ஆகவும் ஆகாது.
வாங்கோ தூங்குங்கோ ப்ளீஸ்”
“அப்புறம் ஏன் உன் கண்ணுலேந்து கண்ணீர் வந்துது?”
“பின்ன எனக்கும் கவலையிருக்காதா என்ன?
ஆனா உங்கள மாதிரி எல்லாம் நான் கற்பனை பண்ண மாட்டேன்.
அவ காலையில கட்டாயமா ஃபோன் பண்ணுவா.
இப்போ வாங்கோ”
என்று குழந்தையை சமாதானம் செய்வதுப் போல செய்து நவீனை மீண்டு அவர்கள் அறைக்கு அழைத்துப் போய் படுக்கவைத்தாள் மிருதுளா.
“ஹேய் மிருது!
இப்போ மறுபடியும் எங்க எழுந்துப் போற?”
“தண்ணி காலி ஆயிடுத்து இல்லையா.
அது தான் வேற பாட்டில் தண்ணி எடுத்துண்டு வரலாமேன்னு எழுந்துண்டேன்.
கவலைப் படாம தூங்குங்கோ.
இதோ நானும் தண்ணி எடுத்துண்டு வந்திடுவேன்.”
என்று கூறிக்கொண்டே அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைபக்க மேஜையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டே
“அம்மா சமயபுரத்தம்மா தாயே!
எங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது.
அவ நன்னா இருக்கணும்.
நாளைக்கு விடிஞ்சதும் அவ எங்களோட கால் பண்ணி பேசணும் மா.
எங்க கொழந்தைய பார்த்துக்கோமா”
என்று மனதில் வேண்டிக்கொண்டு ரொம்ப நேரம் தூக்கமின்றி புரண்டு படுத்தவள் அவளுக்கே அறியாது தூங்கிப்போனாள்.
விடிந்தால் நவீனும் மிருதுளாவும் காத்திருக்கும் கால் சக்தியிடமிருந்து வருமா?
தொடர்வாள்…