விஷால் அவளை உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்த சக்தி அவனை கட்டியணைத்துக் கொண்டு ஓவென்று அழுதாள். அவளைத் தட்டிக் கொடுத்து அவளின் இரு தோள்களை பிடித்து நேருக்கு நேராக அவளைப் பார்த்து
“ஹே தீ!! ஏன் என் மனைவியைப் பார்த்ததும் இப்படி தேம்பி அழற? அவ என்ன நீ அழறா மாதிரியா இருக்கா? மொதல்ல கண்ண தொடச்சுக்கோ. நல்ல வேளை இந்த காஃபி ஷாப்ல இப்போ நம்மளைத் தவிர வேற யாருமில்ல. இருந்திருந்தா நீ அழறதப் பார்த்து ஏதோ நான் தான் உன்னை ஏதோ சொல்லிட்டேன்னு ஒரு பெரிய ரகளை ஆகியிருக்கும். என்ன சொல்லற தீ?”
“போடா!!”
“என்னது போடா வா? என்னப்பா என் மனைவியைப் பார்த்ததும் மரியாதைக் குறையுது!!”
“ஏன் வி இப்படி பண்ணின?”
“நான் என்ன பண்ணினேன் தீ?”
“உனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு நீ சொன்னதும் மனசளவுல நான் ரொம்ப நொறுங்கிப் போயிட்டேன் தெரியுமா? உன் முன்னாடி உட்கார்ந்து பேசினேனே தவிர என் மனசெல்லாம் அச்சோ இவனுக்கு கல்யாணம் ஆயிடுத்தேன்னு அழுதுது. கொஞ்ச நேரத்துல நான் செத்துப் பொழச்சா மாதிரி இருக்கு!! ஏன் இப்படி செஞ்ச வி?”
“பின்ன நான் மட்டும் மூணு வருஷமா செத்து செத்துப் பொழச்சிண்டிருந்தேனே அதைக் கம்பேர் பண்ணும் போது நீ அனுபவிச்ச இந்த சில மணி நேர டென்ஷன் ஒண்ணுமே இல்ல தெரியுமா!! சரி அதெல்லாம் விடு தீ. என் மனைவி எப்படி இருக்கா?”
“ம்….அது தான் உன் முன்னாடியே உட்கார்ந்திருக்காளே நீயே பார்த்து சொல்லு!”
“எனக்கு பிடிச்சுப் போனதுனால தானே நான் அவளை மனசார மனைவி ஆக்கிண்டேன். அவ எப்படின்னு நீ சொன்னா…..நீ சொல்லி அதை நான் கேட்டா எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் இல்ல. சொல்லு தீ”
“அவளுக்கென்ன வி!! அவ தான் இப்ப ரொம்ப குடுத்து வச்சவ. அவளுக்காகவே மூணு வருஷமா காத்திருக்குற கணவன்!! பாசகாரன், அவ மேல உயிரா இருக்கறவன்னு இன்னும் சொல்லிண்டே போகலாம்… அப்படி ஒருத்தனை இந்த மூணு வருஷத்துல… அவளோ இல்ல அவ அப்பா அம்மாவோ தேடிருந்தாலும் கிடைச்சிருக்க மாட்டான். போதுமா!”
“தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ தீ. உன்கிட்ட எப்போ நான் ப்ரபோஸ் பண்ணினேனோ அன்னேலேந்து நான் உன்னை என் மனைவியா தான் மனசுல நெனச்சுண்டு வாழ்ந்துண்டிருக்கேன். சரி இப்போ கேட்கிறேன் தீ…ம்… வெயிட் வெயிட்…உன் மொபைலை முதல்ல என்கிட்ட குடு…ம்…இப்ப சொல்லு…என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”
“அதுல உனக்கு இன்னமும் சந்தேகமா?”
“ஐய்யோ டைரெக்ட் ஆன்சர் ப்ளீஸ்!”
“சம்மதம், சம்மதம் பரிபூரண சம்மதம்.”
“ஹேய்!!! மிஸ்டர் வில்யம் ப்ளீஸ் கம் ஹியர்”
“ஏய் வி…இப்போ எதுக்கு அவர கூப்பிடற?” வி..வி…வி!!
“இரு… இரு…இருமா…ஒரு நிமிஷம்… மிஸ்டர் வில்யம் இந்தாங்கோ ஒன் தௌஸன்ட் யூரோஸ். இதுல இன்னைக்கு எத்தனைப் பேருக்கு உங்களால உணவளிக்க முடியுமோ அவளோ பேருக்கும் எங்க சார்பா ஃபுட் வழங்குங்கோ.”
“சார்…மே ஐ நோ தி ரீசன் ப்ளீஸ்?”
“தீ அக்ரீட் டூ மேரி மீ. தீ என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துண்டுட்டா. அதுதான் ரீசன் ஃபார் மை ஹாப்பினஸ். ஓகே. இட்ஸ் டைம் நாம கிளம்பலாமா தீ?”
“ஓ எஸ். ஓகே மிஸ்டர் வில்யம். ஹாவ் எ நைஸ் டே. பை”
“மேடம் அன்ட் சார் ஹாவ் அ லவ்லீ வெட்டெட் லைஃப்.”
“தாங்க்யூ மிஸ்டர் வில்யம். வீ வில். பை”
என்று மிகுந்த சந்தோஷத்தில் அந்த ரெஸ்டாரன்ட்டிலிருந்து இருவரும் வெளியே வந்தனர். அப்போது விஷால் சக்தியை அவன் காருக்கு அழைத்துச் சென்று காரின் முன் கதவை அவளுக்காக திறந்து
“உனக்கு ரொம்ப பிடித்த ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ். நிறைய சம்பாதிச்சு இந்த காரைத் தான் முதல்ல வாங்கணும்னு வெயிட் பண்ணி வாங்கினது. உன்னை எப்போ சந்திச்சாலும் இதுல வந்து தான் சந்திக்கணும்னு வெயிட் பண்ணிண்டிருந்தேன் தீ. ஏறி உட்காரு ப்ளீஸ்”
“வி அப்போ என் காரை என்ன செய்ய?”
“அது இங்கேயே இருக்கட்டும் தீ. நாம என் கார்ல பக்கத்துல இருக்குற பார்க்குக்குப் போயிட்டு வருவோமா?”
“ஓ ஷுவர் வி. வாவ்!! யுவர் கார் ஈஸ் ஸோ நைஸ் வி.”
“இட்ஸ் அவர் கார் தீ.”
என்று இருவரும் விஷாலின் காரில் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்குக்குள் சென்றனர். அங்கே பார்க்கிங்கில் காரை வைத்துவிட்டு உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்து பேசலானார்கள்.
“ஹலோ சார். என் மொபைலை இப்போவாவது தர்றேங்களா?”
“ஓ ஷுவர். இந்தாமா உன் மொபைல்”
“ஆமாம் ஏன் என்னோட மொபைலை எடுத்து வச்சுண்டுட்டு என்கிட்ட அந்த கேள்வியைக் கேட்ட?”
“ம்…முன்ன மாதிரி மறுபடியும் யாராவது உனக்கு கால் பண்ணி, நீ எழுந்து போய், அப்புறம் அப்படியே என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டன்னா? அதுக்கு தான். எல்லாம் ஒரு செல்ஃப்டிக்கு தான்.”
“ம்…ஏதோ ஒரு தடவ அப்படி நடந்துதுன்னா எப்பவுமே அப்படியேவா நடக்கும்!! என்ன வி.”
“சொல்ல முடியாது தீ. ஒரு தடவ நடந்துடுத்துன்னா நாம சேஃப்பா இருக்கறது தான் புத்திசாலிதனம். புரிஞ்சுதோ?”
“ம்..நன்னா புரிஞ்சுது. சரி உன் பேரன்ட்ஸ் எப்படி இருக்கா? என் அப்பாவ மாதிரி அவா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லலையா?”
“சொல்லாம இருப்பாளா? முதல்ல என்கிட்ட சொல்லி சொல்லிப் பார்த்தா…நான் பிடிக் குடுக்காததால என் தம்பிக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொணதொணத்தா. நான் என் தம்பிட்ட எனக்காக எல்லாம் நீ வெயிட் பண்ண வேண்டாம் நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன். ஆனா அவன் கேட்கலை. இந்த வருஷத்துக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாகணும்னு பிடிவாதமா இருக்கா…நானும் சரி இத்தனை வருஷமா கிடைக்காத தீ… இனி எங்க கிடைக்கப் போறா!! அவளுக்காக ஏன் என்ன பெத்தவாளையும் கூடப் பிறந்தவனையும் கஷ்டப்படுத்தணும்னு…அவா பார்க்கற ஏதாவது ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லி லைஃப்ல செட்டில் ஆகிடணும்னு நினைச்சிண்டிருந்தேன் அப்போ தான் உன் மெஸேஜ் வந்தது.”
“அப்பாடா கரெக்ட்டான நேரத்துல தான் மெஸேஜ் பண்ணிருக்கேன். எனக்கு தெரியும் நீ இப்படி ஏதாவது செய்வன்னு அதுனால தான் மெஸேஜ் பண்ணினேன்.”
“ஆமாம் ஆமாம்…அது தான் எனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு சொன்னதுமே உன் முகம் பிரகாசிச்சுதா?”
“ம்…பிரகாசிக்கும் பிரகாசிக்கும்…”
“சரி உன் அப்பா அம்மாகிட்ட நம்மளைப் பத்தி சொல்லிட்டியா? அவா நம்ம கல்யாணத்தை அக்செப்ட் பண்ணிப்பாளா?”
“ம்…உன்கிட்ட கேட்காம நான் எப்படி அவாகிட்ட பேசுவேன் வி. நீ விளையாட்டுக்கு சொன்னது போலவே நிஜத்துல உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா!!! அப்புறம் என்னோட சேர்ந்து அவாளும் சங்கடப்படுவா. அதுனால முதல்ல உன்கிட்ட பேசிட்டு அப்புறம் அவாகிட்ட பேசலாம்னு இருந்தேன்.”
“வில் தே அக்செப்ட்?”
“அவா ரெண்டு பேரும் என்னைக்குமே என்னோட விருப்பங்களுக்குத் தடை சொன்னதில்லை. அதுனாலையோ என்னவோ நானும் என் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கறதுல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். அதுனால இந்த விஷயத்தை சொன்னா என் பேரன்ட்ஸ் நிச்சயம் சந்தோஷப்படுவா அன்ட் அக்செப்ட்டும் பண்ணுவா. ஸோ டோன்ட் வரி வி.”
“என் ஆத்துலேயும் நிச்சயம் சந்தோஷப்படுவான்னு தான் நினைக்கறேன். அப்போ நம்ம ரெண்டு பேர் ஆத்துலேயும் நம்ம கல்யாணத்துக்கு பச்சக்கொடி காட்டுவான்னு சொல்லு.”
“ஐ திங்க் ஸோ. நான் கிளம்பும் போது கூட அப்பா அம்மாட்ட சொல்லலையான்னு ப்ளூ கேட்டான்… நான் திரும்பி வந்துட்டு பேசறேன்னு சொன்னேன். ஸோ இன்னைக்கே என் பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன் வி.”
“வெயிட்…நீ இப்போ என்ன சொன்ன?”
“நான் இன்னைக்கே என் பேரன்ட்ஸ்கிட்ட…”
“அது இல்ல அதுக்கு முன்னாடி ஏதோ சொன்னயே!! ஏதோ ப்ளூன்னு…அது என்ன?”
“ஓ!! அவனைப் பத்தி நீ என் ஆத்துக்கு வரும்போது தெரிஞ்சுக்கோ.”
“என்னது அவனா?”
“ஆமாம் அவனை அவன்னு தானே சொல்ல முடியும்.”
“ஓ!!! புரிஞ்சுடுத்து”
“என்ன புரிஞ்சுது?”
“ப்ளூ உன்னோட செல்லப் பிராணி தானே!! அதுதான் இப்போ ஃபேஷனா போச்சே…”
“ம்…அப்புடியும் வச்சுக்கலாம்”
“அப்படின்னா புரியலையே”
“நான் தான் சொன்னேன் ல வி… நீ என் ஆத்துக்கு வந்து தெரிஞ்சுக்கோ. அவனை உனக்கு இன்டர்டியூஸ் பண்ணி வைக்கறேன்.”
“ஓகே. அப்படின்னா இப்பவே உன் ஆத்துக்குப் போகலாமா?”
“இப்பவா… நோ நோ. மொதல்ல நான் என் பேரன்ட்ஸ்கிட்ட பேசறேன். அவா ஓகே தான் சொல்லுவா…இருந்தாலும் அதை அவா சொல்லிக் கேட்டதுக்கப்புறமா உன்கிட்ட சொல்லறேன் நீ அப்போ வா. சரியா?”
“ம்…நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா அம்மா ஓகே சொன்னா தான் நான் உன் வீட்டுக்கே வரணுமோ!!! ஓகே. ஓகே. உன்னை உன் ஆத்துல ட்ராப்பாவது பண்ணலாமா?”
“எதுக்கு? என் கார் இருக்கே!! நீ என்னை என் கார் நிக்கற பார்க்கிங்ல இறக்கி விடு போதும். நீயும் இன்னைக்கே உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசி அவாளோட சம்மதத்தையும் வாங்கு வி.”
“நிச்சயமா. ஆத்துக்கு போனதுமே இந்தியாவுக்கு கால் போட்டு பேசிடுவேன். மூணு வருஷமா இதுக்கு தானே காத்திருந்தேன். ம்…இதோ உன் கார் நிற்கும் இடம் வந்தாச்சு. நீ அவசியம் உன் கார்ல தான் போகணுமா தீ. என் கார்ல என் கூடவே வாயேன்.”
“வி… என்னது இது சின்ன பசங்க மாதிரி பேசற? வீ போத் ஆர் மெச்சூர்டு அடல்ட்ஸ். இட்ஸ் ஓகே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அப்புறம் நீயும் நானும் எப்பவுமே ஒண்ணா தானே இருக்கப்போறோம். இப்போ பத்திரமா உன் ஆத்துக்கு கிளம்பு.”
“ம்…சரி சரி…கல்யாணத்துக்கு ஒத்துண்டதுமே மேடம் ஆர்டர் போட தொடங்கிட்டாங்க…அதைக் கேட்காம இருப்பேனா? ஓகே டேக் கேர் பை. நான் ரீச் ஆயிட்டு கால் பண்ணறேன். நீயும் பத்திரமா உன் ஆத்துக்குப் போ. பை தீ”
“ஹா! ஹா! ஹா! சரி சரி பை. ட்ரைவ் சேஃப் வி”
“யூ டூ தீ”
என்று கூறி விஷால் அவன் வீட்டிற்கும் சக்தி அவள் வீட்டிற்கும் அவரவர் கார்களில் சென்றனர்.
பல வருடங்களாக மனதில் காதல் கொண்டு
இதுவரை ஒன்று சேரா தண்டவாளம் போல் இருந்த மனங்கள் இரண்டு
இப்போது ஒன்று சேர்ந்திட மனம் விட்டுப் பேசிக் கொண்டு
மீண்டும் காணும் தவிப்போடு கண்கள் இரண்டு
பிரிந்து அவரவர் வழி சென்றன மனதில் கல்யாண கனவுகளை சுமந்துக் கொண்டு
தொடர்வாள்…