“என்னைத் தேடி நீ வந்திருந்தாலும் உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கும்”
“ஓ ஆமாம் ல…நீயும் விடியற்காலை ஃப்ளைட் பிடிச்சுப் போயிருப்ப இல்ல!!”
“சரி அதை விடு…உன் அவசரம், பதற்றம் உன்னை யோசிக்க விட்டிருக்காது. ஹாஸ்டலுக்கு வந்த ஃபோன் கால் யாருடையது? அதைக் கேட்டு ஏன் ஷாக் ஆன?”
“அது என் அம்மாகிட்டேந்து வந்த கால் வி.”
“அம்மாகிட்டேந்து தானே வந்தது அதுக்கு ஏன் ஷாக் ஆகனும்?”
“அவங்க சொன்ன விஷயம் அப்படி”
“உன் அம்மா அப்படி என்ன சொன்னாங்க தீ?”
“எனக்கு எல்லாமே என் அப்பா அம்மா தான் வி. அது உனக்கும் நல்லாவே தெரியும் ல”
“ஆங் தெரியுமே தீ”
“எனக்கு கிடைச்சிருக்குற பேரண்ட்ஸ் மாதிரி மத்தவங்களுக்கு இருக்காளானு எனக்கு தெரியாது ஆனா எனக்கு அந்த கடவுள் சூப்பரான அப்பா அன்ட் அம்மாவை கொடுத்திருக்கார். அந்த கால் ல அம்மா என்கிட்ட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னா. ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிருக்கறதா சொன்னா. எனக்கு என் அப்பாவின் முகமும் அம்மாவின் முகமும் என் முன்னாடி வந்தது. உடனே கிடைச்ச ஃப்ளைட் அது டைரெக்ட் ஃப்ளைட்டா இல்ல சிங்கள் ஹாப் ஃப்ளைட்டான்னு எல்லாம் பார்க்காம புக் பண்ணி கிளம்பினேன். எதுல சீட் இருந்ததோ அதில் புக் செஞ்சேன். நான் புக் பண்ணின ஃபளைட் லண்டன் வழியா இந்தியா போற ஃப்ளைட். ஸோ ஃபிரான்ஸ் டூ லண்டன் டிக்கெட்டை மட்டும் கையில் வச்சிண்டிருந்தேன். ரூம் சாவியை ஒப்படைக்கும் போது பதற்றத்தில் என் ஃப்ளைட் டிக்கெட்டை செக்யூரிட்டி டேபிள்லேயே வச்சுட்டு டாக்ஸிக்காக காத்திருந்தேன்.”
“அச்சச்சோ… அப்புறம்? அப்படியே டிக்கெட் இல்லாமயே ஏர்போர்ட் போயிட்டியா?”
“இல்ல வி. அந்த செக்யூரிட்டி அதைப் பார்த்துட்டு என்னோடதா தான் இருக்கும்னு என்கிட்ட வந்து டிக்கெட்டைக் காட்டிக் கேட்டார். நானும் ஆமாம்னு சொல்லி வாங்கிண்டு அவருக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு டாக்ஸி வந்ததும் அங்கேந்து கிளம்பிட்டேன்.”
“ஓ !!! ஓகே ! இப்போதான் எனக்கு புரியுது.”
“என்னது புரியறது வி?”
“அதுவா என் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகறதுக்கு முன்னாடி உன் மொபைலுக்கு கால் பண்ணினேன் அது ஸ்சுவிச்சிடு ஆஃப்ன்னு வந்தது. அதுக்கப்புறம் உன் ஹாஸ்டல் நம்பருக்கு கால் பண்ணினேன். அப்போ அந்த கால் அட்டென்ட் பண்ணினவர் நீ லண்டனுக்கு கிளம்பி போயிட்டனு சொன்னார். அவர் உன் டிக்கெட்டைப் பார்த்துட்டு நீ லண்டன் வரைக்கும் தான் போறேன்னு நினைச்சுண்டு என்கிட்ட சொல்லிருக்கார். நானும் நீ ஏன் லண்டன் போகனும் உனக்கு தான் பிரான்ஸிலேயே வேலை கிடைச்சிருக்கேனு நினைச்சுண்டேன். அப்புறம் நானா அஸ்யூம் பண்ணிடேன் உனக்கு அதைவிட பெட்டர் ஆஃபர் லண்டன்ல கிடைச்சிருக்கும் அது தான் அவசரமா போயிருப்பனு…ஐ ஆம் ஸோ சாரி ஃபார் தட் தீ! ம் சொல்லு உன் அப்பா எப்படி இருக்கார்? நீ கரெக்ட்டா ஊருக்குப் போய் சேர்ந்துட்டயா?”
“இட்ஸ் ஓகே வி. உனக்கு தெரியாததால நீ அப்படி நினைச்சி கிட்ட. அதுக்கு எதுக்கு சாரி எல்லாம். ம் நான் கரெக்ட்டா இந்தியா ரீச் ஆனேன். அங்க அம்மா ஒரே அழுகை. அப்பாவுக்கு சர்ஜரி செய்யற அளவுக்கு போயிடுத்து. மொதல்ல அம்மாவை சமாதானப்படுத்திட்டு மெதுவா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்புறம் அம்மாவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டு நடந்ததைச் சொன்னா. டாக்டர் கிட்ட பேசினேன். அவர் சர்ஜரிக்கு அப்புறம் அப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னார். அதுக்குள்ள என் மாமா, பாட்டி தாத்தா எல்லாரும் வந்துட்டா. அவா எல்லார்கிட்டயும் விவரத்தைச் சொல்லி சமாதானப் படுத்தி அவாளோடவே அம்மாவையும் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு நிமிர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. ரண்டு மூணு நாளா தூங்காதது டையர்டா இருந்தது. அதுவுமில்லாம என் அப்பாவை கிட்டப் போய் பார்க்க முடியாம அவர் கையைப் பிடித்து உனக்கு நான் இருக்கேன்ப்பானு சொல்ல முடியாம ஐசியு வாசல்ல தவிச்சிண்டிருந்தேன். அப்போ வந்தா என் அப்பாவோட அப்பாவும் அம்மாவும்.”
“அவாளும் உனக்கு பாட்டி தாத்தா தானே? அப்புறம் ஏன் உன் அப்பாவோட அம்மா அப்பான்னு சொல்லற?”
“ஆமாம் ஆமாம் என் அப்பாவை பதினாறு வயசுலேயே வேலைக்கு அனுப்பி அவரோட உழைப்பை உறிஞ்சினவா. ஒரு ஃபார்மாலிடிக்காக வந்து எட்டிப் பார்த்துட்டு…என் அம்மாவையும் என்னையுமே குற்றம் சொன்னா…எனக்கு அவா பேசின விதம் அன்ட் விஷயம் பிடிக்கலை ஸோ தலையில கைய வச்சுண்டு எதுவும் பேசாம உட்கார்ந்துட்டேன்.”
“உன்ன என்ன சொன்னா? பேத்தியப் பத்தி குற்றம் சொல்ல என்ன இருக்கு அவாளுக்கு?”
“ம்…நான் யாரையோ கல்யாணம் பண்ணிண்டுட்டேனாம் அதுனால தான் என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்…அப்படி இப்படின்னு என்னனவோ சொன்னா. நான் எதையுமே காதுல வாங்காம என் அப்பா நல்லபடியா குணமாகி வரணுமேன்னு மட்டும் வேண்டிண்டே இருந்தேன்.”
“உனக்கு இருந்த டென்ஷன்ல நீ எப்படி என்னைப் பத்தி… இல்ல வேற எதைப்பத்தியும் யோசிச்சிருப்ப…ம்…யோசிக்கனும்னு தோனிருக்காது. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.”
“அப்பாக்கு சர்ஜரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சு …ஆஃபட்டர் சர்ஜரி ரிவியூ எல்லாம் முடிஞ்சு நல்லாகி வீட்டுக்கு வரதுக்கு ஒரு மாசமாச்சு. என் மாமா, பாட்டி, தாத்தா அன்ட் அப்பாவோட பேரண்ட்ஸ் எல்லாரும் ஒரு வாரம் இருந்துட்டு ஊருக்கு கிளம்பி போயிட்டா. நான் இன்னுமொரு மாசம் அப்பா அம்மாவோடவே இருந்தேன். அப்போ அப்பா மெல்ல என் கல்யாணப் பேச்சை எடுத்தார். உண்மையை சொல்லணும்னா அப்போ தான் எனக்கு உன் ஞாபகமே வந்தது. நான் தயங்கினேன். என் தயக்கத்தைப் புரிஞ்சுண்ட அம்மா அப்பாவிடம் “விடுங்கோ பார்க்கலாம் இப்போ என்ன அவசரம்னு” சொல்லி அப்பாவை சமாதானம் செய்து எனக்கு சப்போர்ட் பண்ணினா. அப்புறமா அம்மா மெதுவா என்கிட்ட வந்து “தீ உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோனறதோ அப்போ பண்ணிக்கோ சரியா.” னு சொன்னது எனக்கு க்ரேட் ரிலீஃபா இருந்தது. ஸோ இரண்டு மாசம் ஓடிப்போச்சு. அப்பா உடம்பும் தேறியாச்சு. அடுத்து நான் என் வேலையைப் பார்க்க வேணுமேனுட்டு அங்கேந்து புறப்பட்டு மறுபடியும் பிரான்ஸ் வந்தேன். அவா என்னை ஒரு ப்ராஜெக்ட்டுக்காக யூ.கே.வுக்கு அனுப்பினா. அங்க ஒரு ஆறு மாசம் இருந்தேன் …தென் பேக் டூ பிரான்ஸ். இதுதான் நடந்தது. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போனதுல நான்… என் அப்பா அம்மா வேலையைத் தவிர வேறெதையுமே நினைச்சுப் பார்க்கக் கூட நேரமில்லாம போயிடுத்து. அதுனால தான் எந்த சோஷியல் ப்ளாட்ஃபார்ம் லயும் நான் வரவேயில்லை. அதுக்கெல்லாம் நேரமும் இருக்கலை. உண்மையை சொல்லணும்னா வரத்தோனலை. தட்ஸ் இட் இதுதான் நடந்தது. போன வாரம் தான் உன்னை எப்படியாவது கான்ட்டாக்ட் பண்ணமுடியுமானு யோசிச்சேன். அப்போ கைக் குடுத்தது தான் ஃபேஸ்புக்.”
“அப்பப்பா எவ்வளவு நடந்திருக்கு? உங்க அம்மாவும் நானும் உன் மொபைலுக்கு அன்னைக்கு நைட்லேந்து காலையில வரைக்கும் எவ்வளவு கால் பண்ணிருப்போம்…உங்க அம்மாவுக்காவது அடுத்த நாளே உன் மொபைல் தொலைந்த விஷயம் நீ சொல்லி தெரிஞ்சிருக்கும்….ஆனா நான் கிட்டத்தட்ட ஒரு வருஷமா ட்ரைப் பண்ணினேன் தெரியுமா? மூணு வருஷம் கழிச்சு வந்து நீ சொல்லறதை எல்லாம் கேட்டா ஏதோ ஒரு த்ரில்லர் கம் ஃபேமிலி ஃபில்ம் பார்த்தா மாதிரி இருக்கு தீ!!”
“ம்…இருக்கும் இருக்கும்…சொல்ல மாட்ட!!! உனக்கென்ன ஜாலியா கல்யாணமெல்லாம் ஆயிடுச்சு. குழந்தைகள் இருக்காளா? ம்…அதுதான் நடந்ததை எல்லாம் சொல்லிட்டேனே இப்போ உன் மனைவியை எனக்கு காட்டுவியா? இன்ட்ரோ பண்ணி வெப்பயா?”
“உனக்கு கல்யாணம் ஆச்சா தீ?”
“ம்…என்ன கிண்டலா? நடந்ததெல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லிருக்கேனே!! அதுல கல்யாணம் வந்ததா?”
“ம்….ஓகே ஓகே தீ!! சாரி சாரி! அதுக்கப்புறம் அந்த பீட்டரை சந்திச்சயா? உனக்கு அந்த ப்ரொபசராலயும் அந்த ரோபோவாலையும் அதுக்கப்புறம் பிராப்ளம் ஏதும் வரலையே!!”
“ம்…ஹூம்…அதுக்கப்புறம் அவங்களால எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. அன்னைக்கு நடந்தது அத்தனையும் இப்போ நினைச்சாக் கூட பயமா தான் இருக்கு. அது போல எல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன் பா…”
“ம்..சரி அந்த ப்ரொபசர் சொன்ன அந்த ரோபோவை கண்டு பிடிச்சியா? அதை என்ன பண்ணின?”
“நானும் பார்த்துண்டே இருக்கேன்… வந்ததுலேந்து என்னைப் பத்தி மட்டுமே கேட்டுண்டிருக்க!!”
“ப்ளீஸ் சொல்லேன் தீ. ப்ரொபசர் கதையை பாதியிலேயே விட்டா எப்படி? அவரோட ரோபோவை கண்டு பிடிச்சியா?”
“நோ வே!! அதை தெரிஞ்சுக்கணும்னா முதல்ல ஐ ஹாவ் டூ மீட் யுவர் வைஃப். போலாமா?”
“அவ இப்போ வீட்ல இல்ல தீ.”
“சரி அவங்க ஃபோட்டோவாவது காட்டுப்பா. எனக்கு தெரிஞ்சவங்கன்னு வேற சொல்லற. அது யாருன்னு நானும் தெரிஞ்சுக்கறேனே! என்னை மீட் பண்ண வர்றதை அவங்ககிட்ட சொன்னயா?”
“ம்..ம்…எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவளோட ஃபோட்டோ…ம்… அச்சச்சோ என் வாலட்டை மாத்தி எடுத்துண்டு வந்துட்டேனே!! சரி இரு என் மொபைல்ல அவ ஃபோட்டோஸ் இருக்கு காட்டறேன்.”
“மொபைல்ல இருக்குற ஃபோட்டோவை எடுக்க இவ்வளவு நேரம் என்ன பண்ணுற வி”
“இரு தீ. அவளோட நல்ல பிக்ச்சரை காட்டணும் ல…அது தான்…ம்…இதோ பார்.”
என்று தன் மனைவியின் படத்தை மொபைலில் காட்டிய விஷால் சக்தியிடம்
“என்ன தீ!! என் மனைவி எப்படி இருக்கா? உனக்கு அவ யாருன்னு அடையாளம் தெரியுதா?”
சக்தி விஷாலின் மொபைலை அவனிடமிர்ந்து வாங்கிப் பார்த்ததும் ஷாக் ஆனாள். விஷால் அவளை மூன்று முறை அழைத்தும் அசையாதிருந்த சக்தியின் தோள் மீது கை வைத்து உலுக்கினான். அப்போதும் எந்த வித அசைவுமின்றி அமர்ந்திருந்த சக்தியின் கண்கள் மட்டும் கலங்கின.
தொடர்வாள்…