நவீன் மிருதுளாவின் ஒரே செல்லப் பெண்ணான சக்தி நன்குப் படித்து யூரோப்பில் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறாள். அவளின் அப்பா அம்மாவின் அனைத்து சங்கடங்களிலும், கஷ்டங்களிலும், சந்தோஷங்களிலும் அவர்கள் கூடவே பயணித்தவள். அவளுக்காகவே வாழ்ந்து, ஒரே பெண் என்ற காரணத்தைக் காட்டி அவளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடாமல் தங்கள் பெண்ணிற்கு அவள் விருப்பப்படியே அனைத்தையும் நடத்திக் கொடுத்த நவீன் மிருதுளாவின் மனசுப் போலவே நல்ல சிறந்தப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருப்பவள். பொறுமையே பொறுமை இழந்துப் போனாலும் துளிக்கூட பொறுமையை இழந்திடாது அதையே தனது ஆயுதமாகவும் கேடையமாகவும் உபயோகித்த தன் அம்மா மிருதுளாவைப் போல் பொறுத்தாளப் போகிறாளா? இல்லை அவள் வழி தனி வழி என்றிருக்கப் போகிறாளா? இருபத்தி ஆறு வயதான சக்தியின் வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க நேரம் வந்தது!
அலசி ஆராய காலம் வந்தது!
உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிப்பதும் சக்தி தான்!
உணர்வுகள் அனைத்திலும் பிரதிபலிப்பதும் சக்தி தான்!
வியந்து வாசிக்க வாரீர்!
விமர்சனங்களை அள்ளித் தாரீர்!
சக்தியுடன் ஓர் புதிய அரிய பயணத்தை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கொள்ள உங்களை
பணிவன்புடன் அழைக்கும் உங்கள் சகோதரி
நா. பார்வதி