சுதந்திரம் வேண்டும்
தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு
சுதந்திரம் வேண்டும்
சுத்தமான குடிநீர் அருந்துவதற்கு
சுதந்திரம் வேண்டும்
நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு
சுதந்திரம் வேண்டும்
பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்கு
சுதந்திரம் வேண்டும்
கலப்படமில்லாத உணவை உண்பதற்கு
சுதந்திரம் வேண்டும்
கட்டணமில்லாது கடவுளை தரிசனம் செய்வதற்கு
சுதந்திரம் வேண்டும்
அனைத்து இடங்களுக்கும் ஈபாஸ் இன்றி சென்று வருவதற்கு
சுதந்திரம் வேண்டும்
முக கவசமின்றி பவனிவருவதற்கு
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
என்று வெள்ளையரிடமிருந்து பெற்று தந்த சுதந்திரத்தை
நம்மவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்து
பெற்ற சுதந்திரத்தை நாமே தொலைத்துவிட்டு
இன்றும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்!
நாம் தோன்றிய நாள் முதலே
அனைத்தையும் நாம் கேட்காமலே அள்ளி தந்தாள் இயற்கை அன்னை
கேட்காது கிடைத்தால் மதிப்பிருக்காது என்பதை உணர்த்தவே
கிடைத்ததை தொலைத்துவிட்டு இப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றோமோ?
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு
அவை அனைத்தும் நம் கையிலே என்பது புரியாது போனது ஏனோ!
கேட்பதை நிறுத்துவோம்
பெற்றதை போற்றுவோம்
சுத்தம், சுகாதாரம், தனி மனித ஒழுக்கத்தை ஓங்கச் செய்வோம்
நல்வாழ்வு வாழ்வோம்
நாடு நலம்பெற செய்வோம்
ஜெய்ஹிந்த்
அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
-பார்வதி நாராயணன்